“அன்னை தந்தையரின் அரவணைப்புடன் விண் சென்றவர்கள்” எண்ணிலடங்காதோர் சப்தரிஷி மண்டலத்தில் உண்டு

“அன்னை தந்தையரின் அரவணைப்புடன் விண் சென்றவர்கள்” எண்ணிலடங்காதோர் சப்தரிஷி மண்டலத்தில் உண்டு

 

அகஸ்தியன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது பெற்ற ஆற்றல்களை எல்லாம்… அவனைச் சுற்றி இருந்த வட்டாரங்கள் அனைத்தும் இந்த அதிசயங்களைப் பார்க்கின்றது… பார்த்து ஆச்சரியப்படுகின்றார்கள்.
1.இவன் நுகர்ந்த உணர்வுகள் வெளிவரும் பொழுது “உற்றுப் பார்த்தபின்”
2.இந்த உணர்வின் தன்மை அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் இதைத் தெரிந்திடும் அறிவாக வருகின்றது.

இவனுக்குள் விளைந்த அலைகளைக் கூர்மையாக அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது இவன் காணும் அதிசயங்களை மற்றவர்களுக்கும் அறியும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகிறது. அவைகள் இன்றும் உண்டு.

அகஸ்தியன் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் பெரும்பகுதி நான் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது… 10 வருட காலம் காடு ,மேடெல்லாம் அலைந்தது.
1.அகஸ்தியர் எந்தப் பகுதிகளுக்கு எல்லாம் சென்றாரோ அந்தப் பகுதிகளுக்கு எல்லாம் என்னை அலையச் சொன்னார் குருநாதர்.
2.குருநாதர் பதித்த உணர்வினை ஆங்காங்கு சென்று அதைப் பதிவாக்கிய பின் எது உண்மை எது பொய் என்பதை அறியும் பருவத்தைக் கொடுத்தார்..
3.இன்றும் எல்லோரும் அதை நுகர முடியும்.
4.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் நிச்சயம் அதை நுகர முடியும்.
5.நுகர்வதற்குத் தான் இந்த உபதேசமே கொடுக்கின்றேன்.

வானை நோக்கி அகத்தியன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அவனுக்குள் சிறுகச் சிறுக அந்த ஆற்றல்கள் வளர்கின்றது.

மிருக இனங்களோ விஷ ஜந்துகளோ பூச்சிகளோ எல்லாமே இவனைக் கண்டு விலகி ஓடுகின்றது. கொசுக்களும் எரி பூச்சிகளும் ஓடுகின்றது… இவன் மேல் பட்டால் மடிந்து விடுகின்றது. குரு அருளால் இதையெல்லாம் என்னால் காண முடிந்தது… அறிந்து கொள்ள முடிந்தது.

நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்டால் ஓம் நமச்சிவாய…!
1.திருப்பி இந்த உணர்வின் தன்மையை அதிகமாக நீங்கள் வளர்த்துக் கொண்டால் இந்த உண்மையின் உணர்வுகளை நீங்களும் அறியலாம்.
2.பிறருடைய தீமைகளைப் போக்கவும் உங்களால் முடியும்.

சாமி மட்டும் கெட்டிக்காரர் அல்ல. குரு கொடுத்தார்… அதை வளர்த்துக் கொண்டேன். குரு காட்டிய வழியில் உங்களுக்குள்ளும் இதை வளர்க்கச் சொல்கின்றோம்.

வளர்த்துக் கொண்டால் நீங்களும் அதைச் செயல்படுத்த முடியும் பிறருடைய தீமைகள் விடுபட வேண்டும் என்று நீங்கள் உங்களுக்குள் அந்தச் சக்திகளை வளர்த்தால் உங்களுக்குள் தீமையை நீக்கும் சக்தி வளர்கின்றது.

அகஸ்தியரும் அவர் மனைவியும் அவர்கள் இரு உணர்வும் ஒன்றாக இணைந்து… எந்தத் துருவத்தைக் கூர்மையாக உற்றுப் பார்த்து நுகந்தார்களோ… அந்த உணர்வின் வலிமை கொண்டு உடலை விட்டுச் சென்ற பின் அதே எல்லையை அடைகின்றார்கள்.. பூமிக்கு வரும் உணர்வினை ஒளிக்கதிராக மாற்றுகின்றார்கள். “இது ஓர் குடும்பம்…”

அகஸ்தியன் தாய் தந்தையர் அவன் உடலிலே இருந்தார்கள். அந்தச் சக்தி கொண்டு அதே ஒளியின் சரீரமாக இருக்கின்றார்.
1.இதைப் போன்று சென்றவர்கள் இவருடைய ஈர்ப்பு வட்டத்தில் சென்றவர்கள் இணைந்து
2.அன்னை தந்தையின் அரவணைப்பில் இருக்கும் இவனைப் போன்று சப்தரிஷி மண்டலங்களில் இருப்போர் பலரும் உண்டு.

அன்னை தந்தையை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்… உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று சொன்னவர்கள்… அவர்கள் தனித்துச் சென்றாலும் அந்தக் கூட்டமைப்பில் அவருடைய ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள் அழியா ஒளிச்சரீரமாக.

சப்தரிஷி மண்டலங்களிலே பார்க்கலாம் எண்ணிலடங்காத நிலைகள்…!
1.நம் கண்ணுக்கு புலப்படாதது ஏராளம் உண்டு… டெலஸ்கோப்பை வைத்துப் பார்த்தாலும் ஒரு சில தான் தெரியும்.
2.அதைக் காட்டிலும் நுண்ணிய நிலைகள் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் சென்றவர்களும் அதன்பின் சென்றவர்களும் பலர் உண்டு.
3.அந்த எல்லையை அடைவதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply