உலகின் சத்திய நியதியை எடுத்துச் சொன்னால்… ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்று இல்லை

உலகின் சத்திய நியதியை எடுத்துச் சொன்னால்… ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்று இல்லை

 

இப்படி இப்பூமியில் பல காலமாய் ஏற்பட்டதின் தொடர்ச்சியில் பல பல நிலைகள் நடக்கின்றன. ஒன்றைப் போல் ஒன்றில்லாமல் தான்… ஒன்றை அழித்து ஒன்று சக்தி கொண்டு இவ்வண்டமும் பேரண்டமும் சுழலுகின்றன.

ஆனால் நம் மனித ஆத்மாக்கள் மட்டும் ஒருவரைப் பார்த்து ஒருவர்
1.அவரைப் போல் நாம் வாழ வேண்டும்
2.மற்றவர்களைப் பார்த்து ஆண்டவன் அவர்களுக்கு அபரிமிதமான சக்தியை அளிக்கின்றார் என்ற குறைவான எண்ணம் வேறு.
3.ஒன்றைப் போல் ஒன்றில்லை… ஒன்றில்லாமல் ஒன்றில்லை என்ற நிலை இப்பூமிக்கே உள்ள பொழுது (அனைத்திற்குமே)
4.நாம் ஏன் ஒன்றின் எதிரொலியாய் எதிர்ப்பார்க்க வேண்டும்.

ஆதி காலம் தொட்டே ஞானங்கள் உணர்த்தி வந்த நிலையிலும் ஒவ்வொருவரும் அவர்களின் உண்மை நிலையைத்தான் உணர்த்தினார்கள்.

இன்று நம் ஞானத்தின் சக்தி பொதுவானது தான். ஒவ்வொருவருக்கும் அந்த ஞானத்தைப் பெறும் ஆற்றல் உள்ளது என்று உணராமல் “செக்குமாடுகளாய்ப் போல்” சுழன்று கொண்டே உள்ளோம்.

ஞானிகள் வெளிப்படுத்தியதை இப்பூமியில் (இந்தியா) உள்ள பல பாகத்தில் இதன் நிலையை எடுத்து அதில் ஆராயும் நிலையைப் (ஞானோதய நிலை) பெற்று பல விஞ்ஞானத்தைத் தன் ஞானத்துடன் சேர்த்துச் செயலாக்குகின்றார்கள்.

ஆனால் ஞானத்தை வளர்த்த பூமியிலுள்ள ஆத்மாக்கள் இன்று மற்றைய மேலை நாடுகளின் செயற்கையின் வளர்ச்சியில் மயங்கி இங்கிருந்து அங்கு சென்று வந்தால் இவ்வுலக அனுபவம் பெறலாம் என்று அற்ப ஆசையில் ஓடுகின்றார்கள்.

ஞானிகளையே அள்ளி வழங்கிய ஞானச் சுரங்கத்தை எடுக்கும் பக்குவம் இன்றைய காலத்தின் ஜாதியின் அடிப்படையில் சொந்தமாக்கி பக்திக்குப் பொருளைக் கொண்டு ஸ்தானங்கள் அமைக்கப்படும் கோயில்களில் ஏற்படும் இம்மதிப்பு விகிதத்தைக் கொண்டு மங்கச் செய்து விட்டார்கள்.

இராமாயணத்தையும் கீதையையும் இவர்கள் ஜாதியின் அடிப்படையில் சொந்தமாக்கி அதில் உள்ள கருத்துக்களையும் மாற்றிவிட்டனர்.

ஆனால் விக்ரமாதித்த ராஜாவின் கதையில் உள்ள வேதாள முனிவர் செப்புவதாக உணர்த்திய அதன் கருத்துக்களை மக்களினால் விளையாட்டாகவும் விரும்பத் தகாத முறையில் பேய் என்ற ஒதுக்கப்பட்ட நிலையிலும் ஒதுக்கிவிட்டவர்கள்…
1.விக்ரமாதித்தன் கதையில் உள்ள கருத்துக்களை ஊன்றி அறிந்தால்
2.இவ்வுலக நடப்பின் உண்மைகளை அன்றே கதையுருவில் ஆவி பேய் என்ற ரூபத்தில் உணர்த்தியுள்ளார்.
3.விக்ரமாதித்த ராஜாவின் கதையில் உள்ள நிலைகள் உண்மை நிலைகள்.

ஒவ்வொரு மனிதனின் எண்ணத்திலும் இன்று பல பேயான குணங்களுக்கு இடமளித்துவிட்டு பேய் என்று உருவமில்லாத நம்பப்படாத நிலைக்கு மட்டும்தான் இன்றைய மனிதன் பயப்படுகின்றான்.

உலக நிலை எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா…?

அனைத்துமே ஆவி தான். பக்தி என்று சக்தி மாதா என்று மற்றவர்கள் எழுதி வைத்த மந்திரங்களைப் புரியாமல் உருப்போட்டுப் பல பொருட்களை அச்சக்தி மாதாவுக்குப் படைத்துப் பூஜித்து வணங்கச் சொன்னால் இன்றைய நம் மனிதர்கள் நம்புவார்கள்.

1.“உலகின் சத்திய நியதியை எடுத்துச் சொன்னால்… ஆவி என்றும் பேய் என்றும் சொல்பவர்களை ஒதுக்கித் தள்ளுவார்கள்…”
2.இன்று இங்குள்ள ஆத்மாக்கள் ஒன்றையே சுற்றிச் செக்கு மாடுகளைப் போல் உழன்று உள்ள நிலையில் மறு சொல் ஏற்படுவது கடினம்தான்.

நம் பூமியின் நிலையே அந்தந்த இடத்திற்குத் தகுந்த அமிலத்தை ஈர்க்கும் குணத்தைக் கொண்டு இப்பூமியின் பல பாகங்களில் அதனதன் இயற்கை வளத்தின் செழிப்புத் தன்மையும் கால நிலைகளும் உருவாகின்றன.

இயற்கைத் தன்மைக்கு மட்டும்தான் அம்மாற்றமா…? இயற்கையின் வளர்ச்சி பெற்ற மனித ஆத்மாவுக்கும் அதுவேதான். அந்தந்தப் பூமியின் காந்த சக்தியைக் கொண்டுதான் மனிதனின் எண்ண ஓட்டம் உருவ வளர்ச்சி உணவு நிலை உறங்கும் நிலை அனைத்துமே இருந்திடும்.

இங்குள்ள மனிதனின் சுறுசுறுப்பிற்கும் மற்ற நாட்டின் சுறுசுறுப்பின் தன்மைக்கும் மாறுபடும். இங்கு காய்க்கும் காய்கறி கனி வளங்களைப் போல் மற்ற நாடுகளில் இருப்பதில்லை.
1.இங்குள்ளவை அங்கு வளர்வதில்லை… அங்குள்ளவை இங்கு வளர்வதில்லை.
2.இதே விதையை அங்கு போட்டாலும் அப்படி அது வளர்ச்சி எய்தினாலும் சுவையில் மாறுபடுகின்றது.

அங்குள்ள மனிதன் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளான். பல நவீன செயற்கையகங்களை உருவாக்கி உள்ளான் என்றால் அது அவன் செயல் மட்டுமல்ல… அவன் பிறந்த பூமியின் அமில குணத்தில் அவன் உருவாக்குகின்றான். அவன் செயல் திறனும் அதன் நிலைக்கொப்பத் தொடருகின்றது.

நம் பூமியில் கலந்துள்ள இந்த ஞான ஒளியை அன்று உணர்ந்த சித்தர்களின் தொடர்பிருந்தும், இன்று நாம் தவற விட்டு சாமான்யர்களாய்ப் பெற முடியாத ஒன்றாக அதனைக் கருத்தில் கொண்டு வாழ்கின்றோம்.

1.இன்னும் சிலர் சித்தும் ஞானமும் எதற்காக…? வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா…? என்ற உணர்விலேயே ஞானத்தைத் தவற விட்டு
2.இன்று பக்தி என்ற மமதைப் பிடியிலும் அரசியல் என்ற கோமாளி விளையாட்டிலும் நம் செயலையெல்லாம் விரயமாக்கி வாழ்ந்து வருகின்றோம்.

உடல் நலம் பெறுவதற்குத் தான் இந்தத் தியானம் செய்கின்றோமா…? என்றால் இல்லை…!

உடல் நலம் பெறுவதற்குத் தான் இந்தத் தியானம் செய்கின்றோமா…? என்றால் இல்லை…!

 

அன்றாட வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரமாக ஆனான்… ஒளியின் சரீரமாக இருக்கின்றான் உடலை ஒளியாக மாற்றிச் சென்றான். அப்படி ஒளியாக மாறியது தான் துருவ நட்சத்திரம்.

அதிலிருந்து வருவதைத் தான் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டு வருகின்றது… நம் பூமியிலேயே பரவச் செய்து கொண்டிருக்கின்றது.
1.காலையில் நான்கிலிருந்து ஆறரை மணிக்குள் மொத்தமாகக் குவித்து கொண்டு வருகின்றது.
2.வெயில் வருவதற்கு முன் நாம் அதை எடுத்துப் பழகுதல் வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை நீங்கள் செவிகளில் கேட்கப்படும் பொழுது ஏங்குகிறீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்கு எளிதில் கிடைக்கின்றது.

ஒரு இடத்திற்குச் செல்லும் பொழுது திடீரென்று விபத்து ஆகிவிட்டது என்று கேள்விப்பட்டால் அல்லது பேப்பரிலே அதைப் படித்தால் நம் மனது எப்படி ஆகின்றது…? கொஞ்ச நேரமாவது நம் மனது சோர்வடைகிறது.

இதைப் போல உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் சொல்லப்படும் பொழுது
1.என்னைக் கண்களால் பார்க்கின்றீர்கள். கரு விழி உங்களுக்குள் பதிவாக்குகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றது.
3.இப்படிப் பதிவாக்கி துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் உணர்வை நுகரச் செய்தால்
4.தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் அதற்குள் மறைந்துள்ள செம்பை பித்தளையும் ஆவியாக மாற்றுவது போல் தீமைகளைக் கரைத்துவிடும்.

ஏனென்றால் தீமைகளை வென்றது துருவ நட்சத்திரம். அதிலிருந்து வரக்கூடியதைத் தான் காலை துருவ தியானத்தில் நீங்கள் பெற்றால் உங்களுக்குள் வலுவாக்கி வளர்த்துக் கொள்ள ஏதுவாகும்.

எப்படி வேதனை என்ற விஷமான உணர்வுகள் உங்களுக்குள் ஊடுருவி நல்ல குணங்களை அது கெடுக்கின்றதோ… நல்ல அணுக்களை மாற்றுகின்றதோ இதைப்போல
1.தீமைகளை வென்றிடும் உணர்வுகள் உங்களுக்குள் வளர்க்க அதை நீங்கள் விடாப்பிடியாகச் செய்து வர வேண்டும்,.
2.ஒரு நாளைக்கு செய்துவிட்டு என் கஷ்டம் எல்லாம் போகவில்லையே என் உடலில் உள்ள நோய் போகவில்லையே என்று
3.அப்படி எண்ண வேண்டியதில்லை… நோய்க்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

நாம் அந்த அருள் உணர்வைப் பெருக்கிக் கொண்டே வந்தால் இந்த உணர்வின் வளர்ச்சி பெருகும் பொழுது… இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.

இல்லாமல் போனால் கீழே தான் மீண்டும் பிறவிக்கு வருகின்றோம்.
1.பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்றால்
2.நான் மேலே சொன்ன முறைப்படி செய்யுங்கள்.

நீங்கள் தேடிய சொத்தும் செல்வமும் கையில் வைத்திருக்கிறீர்களா…? வருகின்றது… வளர்கின்றது… பின் தேய்கின்றது… தேய்ந்த பின் வேதனைப்படுகின்றோம்.

சரி சொத்து தான் போகட்டும் இந்த உடலை நல்ல முறையில் அழகாக வளர்த்து வைத்திருக்கிறீர்கள் ஆனால் கடைசியில் இந்த உடல் எவ்வளவு சுருங்குகின்றது… எவ்வளவு வேதனைப்படுகிறது…?
1.உடலைக் கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக அழகாக வைத்திருக்க முடிகின்றதா…?
2.அல்லது இந்த உடல் நிரந்தரமாக நம்முடன் இருக்கின்றதா…?

யோசிக்கின்றோம் சொத்துக்காக எத்தனையோ சண்டைகளையும் போடுகின்றோம்… ஆசையும்படுகின்றோம்.

ஆனால் ஒருவன் வந்து பணத்தை எல்லாம் கொள்ளையடிக்கும் பொழுது “பாவிப் பயல்…! இப்படி எடுத்துச் செல்கின்றானே…” என்று அவன் சாபம் இடுகின்றான்.

இவன் சொத்தை அவன் அபகரித்துச் செல்லும் பொழுது இவன் அவன் உடலுக்குள் சென்று சிறிது நாள் அதை அவன் அனுபவித்தாலும்
1.இவனுடைய சாப அலைகள் அவனுக்குள் ஊடுருவி அவனை நாஸ்தியாக்குகின்றது.
2.இப்படித்தான் தொடர்ந்து நடக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபடுவதற்குத் தான் காலையில் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கின்றோம்.
தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் வலுவைக் கூட்டி “நம் எல்லையை அதுவாக்கி… நாம் அனைவரும் பிறவியில்லா நிலை அடைவோம்…”

முற்பிறவி என்று சொல்லும் “சிலருடைய அமானுஷ்ய செயல்கள்”

முற்பிறவி என்று சொல்லும் “சிலருடைய அமானுஷ்ய செயல்கள்”

 

இன்று இவ்வுலகில்… சில இடங்களில் சில ஆத்மாக்கள் குழந்தைப் பிராயத்திலேயே அதன் வயதுக்கு ஒவ்வாத நிலையில் சில நிலைகளை ஞானோதயம் பெற்று… வயதுக்கு மீறிய சித்தர்களாலும் சப்தரிஷிகளாலும் மட்டுமே உணர்த்தக்கூடிய நிலையில் உணர்த்துகின்றனர் என்றால் அது எந்த நிலையில்…?

அவ்வாத்மாவின் ஒளி அலைகள் அதனுடைய முன் ஜென்மத்தில் சில மகான்களின் தொடர்புடன் வாழ்ந்திருந்து அவர்களின் எண்ணத்திலேயே ஆத்மா பிரிந்து மறு ஜென்மத்திற்கு வரும் பொழுதும் இன்னும் ஒவ்வோர் உடலுக்குள்ளும் பல அணுக்கள் உள்ளன என்று உணர்த்தியுள்ளோம்.

அதைப்போல் பல ஆவிகளும் அவ்வுடலில் ஏறிக் கொண்டுள்ளன.
1.அந்த நிலையில் அம்மகானானவர் அவர் வாழ்ந்து, ஞானம் பெற்றுச் சக்தியின் நிலையில் ஒளியுடன் கலக்கப் பெறும் பொழுது
2.அவர் உடலுடன் உள்ள நிலையிலேயே அவர் எடுத்த ஜெபத்தினால்
3.அவ்வுடலில் இருந்த மற்ற ஆவிகளும் அணுக்களும் (பல கோடி எண்ண அணுக்கள்) அவரின் ஞானத்தினால் இவைகளும் நல்ல நிலை எய்துகிறது.

இம்மகான் உடலை விட்டுச் செயல்படும் நிலையிலேயே இவ்வுடலில் தங்கிய இவ்வாவிகளுக்கும் அவற்றின் எண்ணமெல்லாம் நீங்கி இம்மகானுடன் அவர் உடலில் சாடியதின் பயனால்
1.அவர் பெற்று ஏற்றிய ஞானத்தின் ஒளியில் பங்கு பெற்று மறு ஜென்மத்திற்கு வந்து வாழும் நிலையில்
2.மகானுடன் ஒன்றியதினால் அவ்வொளி அலையை ஈர்க்கும் அமில குணமுடன்
3.இச் சிசு பிறப்பில் வாழும் பொழுது அம் மகானின் சக்தி அலையை இச்சிசுவின் மேல் பாய்ச்சி
4.பல அபூர்வ நிலையெல்லாம் வயதிற்கு மீறிய செயலாக இன்றளவும் நடந்து வருகிறது.

திருஞானசம்பந்தரின் மொழி அமுதை ஒரு குழந்தை வெளிப்படுத்துகிறது என்றால் அது இந்த நிலையில் தான்.

இன்று மட்டுமல்ல பல கால கட்டங்களாய் சில சில இடங்களில் இப்படி வியக்கத்தகும் அதிசய நிலைகள் நடந்து வருகின்றன. இதன் வட்ட ஒளியிலேயே ஞானம் பெற்றுச் செயல்பட்டால் “மீண்டும் மீண்டும் சக்தி நிலை பெருகிப் பல நிலைகளைச் செயலாக்கிடலாம்…”

பெற்ற பயனைப் பொருளுக்கும் புகழுக்கும் விரயப்படுத்தி விட்டால் ஞான சக்தியின் வலு குன்றி விடுகின்றது.

திருவையாறு தியாகராஜரின் நிலையும் இந்நிலையில் வந்ததுதான். அவர் தன் உடலை விட்டுப் பிரியும் நாள் வரை அச்சங்கீத ஞானத்துடனே ஐக்கியப்பட்டுத் தான் அடைந்த ஞானத்தின் பொக்கிஷத்தை இம்மியளவும் சிதற விடாமல் செயல் கொண்டதினால் நல் ஒளி பெற்றார்.

இந்த நிலை தெய்வீக நிலையில் மட்டும் ஏற்படுகின்றதா…? மற்ற நிலைகளில் இல்லையா…? என்ற வினா எழும்பலாம்.

இன்று உலகத்தில் பல பாகங்களில் தன் பூர்வ ஜென்மத்தில் இந்த இந்த இடத்தில் வாழ்ந்ததாகவும், இவர் தான் என் தாய், இவர் தான் என் தந்தை என்று சொந்த பந்தங்களை உணர்த்தியும், தன் முந்தைய நாமகரணத்தையும் சொந்த பந்தங்களின் நாமகரணத்தையும் மற்ற எல்லாக் குறிப்புகளையும் மறு ஜென்மம் எய்திய பிறகும் முன் ஜென்மத்தில் நடந்த இடத்தை உணர்த்துகின்றார்களே இவை எந்த நிலையில்…?

ஓர் ஆத்மா வாழுகின்றது. அது வாழும் நிலையில் இன்று பேய் பிடித்து விட்டது, பிசாசு பிடித்து விட்டது என்றெல்லாம் சிலரைச் செப்புகின்றனர்.

எப்பேயும் யாரையும் பிடிப்பதில்லை. ஆனால் இம்மனித ஆத்மாவின் எண்ணச் சிதறலினால்
1.அந்த அந்த எண்ண நிலைக்கொப்ப ஆவி உலக ஆத்மாக்கள் அதன் எண்ணத்தை ஈடேற்றச் சில உடல்களில் ஏறுகின்றன.
2.உடலில் ஏறிய எவ்வாத்மாவுமே அவ்வுடலுக்குச் சொந்தமான ஆத்மா பிரிந்த பிறகுதான் இவ்வாவி ஆத்மாவும் வெளியேற முடிகின்றது.

ஓர் உடலில் இப்படி ஏறிய ஆவி ஆத்மாவானது அவ்வுடலுக்குச் சொந்தமான ஆத்மாவைக் காட்டிலும் சக்தியுடையதாய் ஏறிச் சில செயல்களைப் புரிவதினால் தான்
1.சிலர் (சில உடல் ஆத்மாக்கள்) தன் நிலை பெற முடிந்து தன் எண்ணத்தைக் கொண்டு வாழ்ந்திட முடியாமல்
2.ஆவி ஆத்மாவின் செயலில் வாழ்வதினால்தான் “பேய் பிடித்து விட்டது… பிசாசு பிடித்து விட்டது…” என்கின்றனர்.

இப்படி வீரிய சக்தி கொண்ட ஆவி ஆத்மாக்கள் ஏறிய உடல் ஆத்மாக்கள் நீண்ட நாளும் வாழ்வதில்லை அகால மரணம் எய்துகின்றனர்… தன் நிலை மறந்து.

அந்த நிலையில் அவ்வுடலில் இருந்து உடலுக்குச் சொந்தமான ஆத்மாவும் உடலில் ஏறிய ஆவி ஆத்மாவும் பிரிந்து செல்கின்றது.

இவ்வுடலில் ஏறிய ஆவி ஆத்மாவிற்கு தன் செயலைச் செயல்படுத்த மற்றோர் உடலில் ஏறியதினால், தன் முந்தைய நிலை மறந்து
1.எவ்வுடலில் ஏறிச் செயல் கொண்டதோ அவ்வுடலின் சொந்த பந்தங்களுடன் தன் எண்ணமும் செயல்பட்டதினால்
2.இவ்வுடலுக்குச் சொந்தமான சொந்த பந்தங்களும் வாழ்ந்த இடங்களையும் தனதாக ஒன்றி விடுகின்றது.

உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா எவ்வாத்மாவானாலும் சரி… உடனே பிறப்பிற்கு வருவதில்லை. தன் உதிரத் தொடர்புடைய தாய் தந்தையார் மக்கள் இவர்கள் உள்ளவரை பிறப்பிற்கு வருவதில்லை.

அப்படி இருக்க… இக் குறுகிய காலத்தில் பிறப்பெய்தி இவர்கள் தான் என் தாய் தந்தையார் சுற்றத்தார் என்றெல்லாம் முன் ஜென்மத்தின் நிலையை உணர்த்துவது எப்படி…?

அதாவது இவ்வுடலில் ஏறிய ஆவி ஆத்மாவானது, தாயின் கரு நிலைக்கு வந்தவுடன் அதன் இரண்டு நிலை கொண்டு…
1.இரண்டு நிலை என்பது அதன் முந்தைய ஜென்ம நிலையும் ஆவி ஆத்மாவாய் மற்ற உடலில் சாடியதின் நிலையும் கொண்டு
2.கர்ப்பத்திற்கு வந்தவுடன் இவ்வாத்மாக்களுக்கு பன்னிரண்டு வகையான அமிலத்தை ஈர்க்கும் குணமுடைய சக்தியைக் காட்டிலும்
3.மற்றொரு உடலில் ஏறி வெளிப்பட்டதின் நிலையினால் தாயின் கருவில் அதன் நிலையும் மறக்கப் பெற்று
4.பிறப்பிற்கு வந்த பிறகு அது எடுக்கும் சுவாசத்தினால் மற்றோர் உடலில் ஏறி வெளிப்பட்ட ஆவி ஜென்மத்திற்கு வந்து
5.வாழும் வளர்ச்சி பெற்ற எண்ண நினைவுகள் எல்லாம் நினைவில் சாடும் பருவத்திலேயே அதன் பேசி உறவாடும் காலகட்டத்தில்
6.அவை ஏறிய உடல் ஆத்மாவின் சொந்த பந்தங்கள் வாழ்ந்த நினைவலைகள் எல்லாம் இவ்வாத்மா செப்புகின்றது.

மற்றோர் உடலில் குடியேறி… தன் முந்தைய ஆவி நிலையை மறந்து அவ்வுடலின் எண்ணத்தில் வாழ்ந்து செயல்பட்ட ஆவிகளினால்தான்… இப்படி முந்தைய ஜென்மத்தைச் செப்ப முடியும். ஆனால் இவற்றிலேயே எல்லா ஆவிகளும் இப்படி மற்ற உடலில் ஏறிய பிறகு ஜென்மத்திற்கு வர முடியாது.

1.நல்ல ஆத்மாவின் எண்ணமுடன் ஏறிச் செயல்பட்ட ஆத்மாக்களுக்குத்தான் இப்படிப் பிறப்பு எடுக்கும் நிலை பாக்கியமும் வருகின்றது.
2.ஆனால் முந்தைய ஜென்ம வாழ்க்கையை உணர்த்தி வாழும் ஆத்மாக்களும் நீண்ட நாட்கள் வாழ்ந்திடாது.