
அருள் ஞான ஒலிபரப்பு
கல்வியில் தகுதி பெற கல்விச்சாலைக்குச் சென்று விஞ்ஞான அறிவை வளர்த்துக் கொள்ள எண்ணும் பொழுது அதைச் செயல்படுத்துகிறோம். அதே போல் இஞ்சினியர் நிலைகளுக்குச் செல்ல விரும்பும் போது அதைப் படிக்கின்றோம். அதனை அறிய எண்ணத்தைச் செயல்படுத்தும் போது அதனின் கூர்மை நிலை வரப்படும் போது அதை வளர்த்துக் கொள்கிறோம்.
மருத்துவ நிலைகளுக்குச் செல்லப்படும் பொழுது அதனின் எண்ணங்கள் ஓங்கி வளரப்படும் பொழுது அதை வளர்த்துக் கொள்கின்றோம். விவசாயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அதை வளர்த்துக் கொள்கின்றோம். கணக்குகளைச் சரி பார்க்க வேண்டும் என்றால் அதற்குண்டான நிலைகளை வளர்த்துக் கொள்கின்றோம்.
இவையெல்லாம் மனித வாழ்க்கைக்கு உதவும்.
மனிதனை ஒழுங்குபடுத்தும் நிலைகளில் படித்த நிலைகள் கொண்டு செயல்படும் போது அதிலே சிறிதளவு குறைகள் ஏற்பட்டால் அதனால் ஒரு சமயம் வேதனை ஆகிவிட்டால் நாம் கண்டுணர்ந்த விஞ்ஞானத்தின் நிலைகளும் வீழ்ச்சி அடைகின்றது.
அதிலிருந்து மீள முடியாதபடி நம்மைச் சோர்வடையச் செய்து பல காலம் படித்திருந்தாலும் செயலிழந்த நிலைகளுக்குச் சென்று விடுகின்றது.
ஆனால் நான் படிப்பறிவற்றவன் தான். மெய் ஞானிகள் கண்ட உணர்வின் தன்மையை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் இதையெல்லாம் பேசுகிறேன் என்றால்
1.குரு கொடுத்த உணர்வின் ஆற்றல் எனக்குள் அதைப் பதிவு செய்ததும்
2.அதை நினைவு கொள்ளும் பொழுது அந்த ஆற்றல் காற்றிலிருப்பதை நுகர்ந்து
3.அதை நுகரச் செய்யும் போது உயிரான இயற்கை அந்த உணர்வலைகளை ஒலி பரப்பும் நிலையாக
4.எண்ணங்களாக என்னை அதைப் பேச வைக்கின்றது.
உதாரணமாக.. படித்துணர்ந்தோர் ஒரு பாட்டைப் பாடுகின்றார்கள் என்றால் முதலில் அந்தத் தலைப்பு (ஆரம்பம்) வந்தால் கடைசி வரையும் சரியாக வரும். பாடலைப் பாடி வரும் பொழுது இடைப்பட்ட நிலைகள் மறந்து விட்டால் பாடலின் முழுமையும் வராது.
அப்படி இல்லாதபடி மெய் ஞானியின் உணர்வலைகளை குருநாதர் எமக்குப் பதிய வைத்தது போன்று உங்களுக்குள்ளும் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
அந்த பதிவினை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது உங்களை அறியாது வந்த இருளை நீக்கி மெய்ப் பொருள் காணும் திறன் உங்களுக்குள் வளர வேண்டும் என்ற இச்சையில் இந்த உணர்வை நான் சுவாசிக்கும் பொழுது
1.நீங்கள் இருளில் இருந்து மீள வேண்டும் மெய்ப்பொருள் காண வேண்டும் என்று என் குருவின் ஆணைப்படி
2.நான் சுவாசித்த உணர்வுகள் ஒலியாகப் பரப்புகின்றது என் உயிர்.
3.உடலில் தன்மையை அந்த அங்கங்களைக் கிரியையாகச் செயல்படுத்துகின்றது..
இந்தக் கிரியை அது வெளிப்படும் பொழுது கேட்டுணர்ந்தோர் நிலைகளிலும் நான் நுகர்ந்த நிலைகளைப் பெறச் செய்து… அருள் ஞானனத்தின் செயலாக இந்த உடலைப் பக்குவப்படுத்தும் நிலையும் பக்குவமாகப் பேசும் நிலையையும் உருவாக்குகின்றது.
இந்த ஞானத்தின் நிலைகள் இப்போது உங்களுக்குள் பதிவாகும் பொழுது அந்தப் பதிவின் நிலைகள் உங்களைச் சீர்படுத்தும் நிலையாக வரும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.