உறுப்புகள் தியானம்

உறுப்புகள் தியானம்

 

சிறுகுடல் பெருங்குடல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுகுடல் பெருங்குடல் முழுவதும் படர்ந்து… சிறுகுடலையும் பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஆசைப்படுங்கள். இப்பொழுது சிறுகுடலும் பெருங்குடலும் வீரியமடைகின்றது.

குடல்களில் வரக்கூடிய உபாதைகளோ ஆகாரத்தை ஜீரணிக்க முடியாத நிலையோ இது போன்ற குறைபாடுகள் இருந்தால் இவ்வாறு நாம் தியானித்தால்
1.நமது குடலில் வளர்ச்சி அடைந்த அணுக்களை வீரியமடையச் செய்து
2.சாப்பிடும் ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

இப்பொழுது சிறுகுடல் பெருங்குடல் உற்சாகமடைவதை உணரலாம்.

கணையங்கள்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கணையங்கள் முழுவதும் படர்ந்து கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

சாப்பிடும் ஆகாரத்தை ஆவியாக மாற்றி அமிலமாக மாற்றும் அந்தக் கணயங்கள் ஒவ்வொரு விதமான நிலைகளாகப் பிரித்துச் சீராக்குகின்றது.

சர்க்கரை ஆலைகளில் “கெமிக்கலைப் போட்டு” அழுக்குகளைப் பிரித்து நல்லதாக மாற்றிக் கொண்டு வருவது போன்று நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளைப் பிரித்து மூன்று விதமான நிலையில் அது மாற்றுகின்றது.
1.கணையங்களை உருவாக்கிய அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் வலுவை ஏற்றப்படும் பொழுது…
2.சத்துகளைச் சமமாகப் பிரித்து நல்ல உணர்வை ஊட்டும் நற் சக்தியாக மாற்றுகின்றது.

கல்லீரல் மண்ணீரல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரல் மண்ணீரல் முழுவதும் படர்ந்து கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

பெரிய கல்களையும் அடுத்து சிறு கல்களையும் அடுத்து மணல்களையும் போட்டு அதன் மூலம் அழுக்குத் தண்ணீரை வடிகட்டினோம் என்றால் அழுக்குகள் அங்கே பிரிக்கப்பட்டு நல்ல நீராக அது மாறுகிறது.

அதைப் போன்று கல்லீரலை மண்ணீரலும் அமிலமாக மாற்றுவதைப் பரிசுத்தப்படுத்தி “நல்ல இரத்தமாக” மாற்றும் சக்தி பெறுகின்றது.

நுரையீரல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரல் முழுவதும் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஒரு இன்ஜினுக்குள் பெட்ரோல் சென்ற பின் அதை ஆவியாக மாற்றி இன்ஜினை அது எப்படி இயக்குகின்றதோ அதைப் போல்
1.அமிலமாக மாற்றியதை நுரையீரலுக்குள் சென்ற பின் வாய்வாக மாறி அதன் உணர்வு கொண்டு
2.நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் இதன் துணை கொண்டு இயக்கும் சக்தி பெறுகின்றது நமது நுரையீரல்.

வெளியிலிருந்து காற்றை இழுப்பதும் நம் உடலுக்குள் தீமைகளைக் கழிப்பதும்
1.அருள் உணர்வைப் பெறச் செய்வதும் அனைத்துமே இந்த நுரையீரல் தான்.
2.ஆகவே தீமையை நீக்கும் அந்த வலிமையான சக்தியை நுரையீரலை உருவாக்கிய அணுக்களை நாம் பெறச் செய்தல் வேண்டும்.

ஆனால் வேதனை என்ற உணர்வின் நுகர நேர்ந்தால் சளி போன்ற நிலைகளும் ஆஸ்துமா போன்ற நிலைகளும் டிபி போன்ற நிலைகளும் கேன்சர் போன்ற நோய்களும் உருவாகக் காரணமாகி விடுகின்றது.

இதைப் போன்ற தீமைகளை நீக்க நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கினால்
1.உடல் முழுவதுக்கும் நல்ல சுவாசத்தை அனுப்பி
2.நல்ல அணுக்களை இயக்கி நமக்குள் நல்ல உணர்வை உருவாக்கும்.

வேதனையான உணர்வை உடலில் சேர்த்தால் இந்த உடல் முழுவதும் படர்ந்து எல்லாமே சோர்வடைந்துவிடும்… உறுப்புகளும் சோர்வடைந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீட்ட அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியினை உங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறச் செய்யுங்கள்… வலிமை பெறச் செய்யுங்கள்.

கிட்னி:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கிட்னி முழுவதும் படர்ந்து கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே வீரியமடையச் செய்தால்
2.சர்க்கரைச் சத்து உப்புச் சத்து வாத நீர் போன்ற நிலைகளைப் பிரித்து நமது இரத்தத்தைச் சுத்தமாக்கும்.

அவ்வாறு சுத்தமாக்கும் அந்தக் கிட்னிக்கும் சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை அங்கே செலுத்தி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களை வீரியமடையச் செய்யுங்கள்.

அது வலிமை பெற்றால் சர்க்கரைச் சத்து உப்புச் சத்து வாத நீர் போன்ற நிலைகள் வராதபடி தடுக்க இது உதவும்.

இருதயம்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படர்ந்து இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.இவ்வாறு செய்தால் சிந்திக்கும் வலிமையும்… வரக்கூடிய தீமைகளை அகற்றிடும் வலிமையும் பெறக்கூடிய தகுதி நாம் பெறுகின்றோம்.
2.உடல் முழுவதற்கும் அந்த வலிமையான உணர்வுகளைச் செலுத்தி நம் உடல் உறுப்புகளைச் சீராக இயக்கும் அந்த அருள் சக்தி பெறுகின்றது.

சிந்திக்கும் ஆற்றலும்… தீமைகளை அகற்றும் வலிமையும்… பொருளறிந்து செயல்படும் திறனும் பெறக்கூடிய சக்தி நம் இருதயம் பெறுகின்றது.

முடிவு நிலையில் உள்ள நாம்… “முதல் நிலைக்குச் செல்லும்” பக்குவப் பாடநிலை தான் இங்கு உணர்த்தப்படுகிறது

முடிவு நிலையில் உள்ள நாம்… “முதல் நிலைக்குச் செல்லும்” பக்குவப் பாடநிலை தான் இங்கு உணர்த்தப்படுகிறது

 

நம் நிலை சமநிலை பட்டவுடன்… நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் எண்ணத்தை ஒரு நிலையில் குவித்து “எவ்வாண்டவனை வணங்குகின்றோமோ”
1.அந்நிலை கொண்ட அருள் ரிஷியின் ஒளிக் கதிர்கள் நம் உயிராத்மாவுடன் நாம் எடுக்கும் சுவாசமுடன் மோதுண்டு
2.நாம் எடுக்கும் இச்சக்தியின் அருளைக் கூட்டச் செய்கின்றது.

முந்தைய கால புராணங்களிலும் நடைமுறை வாழ்க்கையிலும், ஆண்டவனே வந்து சில நிலைகளைக் கவியாக உணர்த்தியதாக உணர்ந்திருப்பீர்.

பல ஆயிரம் காலங்களாக இம்மனித எண்ண அறிவு வளர்ச்சி கொண்ட நாள் தொட்டே பல ரிஷிகளின் சக்தி நிலை நம் பூமியில் செயல்பட்டு வருகிறது. அந்தந்தக் கால நிலைகளுக்கொப்ப இச்செயல் நிலை கலந்து வந்தது.

இன்றைய மனித ஆத்மாக்களின் எண்ணத்தில் இச்செயற்கை நிலையிலும் ஏட்டு அறிவின் உறவிலும் செயல்படும் நிலையில் பக்தி கொண்டு தன் எண்ணத்தைக் குவித்து… சப்தரிஷிகளின் நிலையுடன் தொடர்பு கொள்ளும் பக்குவ நிலை இக்கலிக்கு வரவில்லை.

இன்றைய நிலையில் கலியின் நிலையில் உணரும் பக்குவமும் இல்லை.

சப்த ரிஷிகளின் நிலையுமே இன்று இக்கலிக்குகந்ததாகத் தான் எவ்வண்ணத்தில் மனித ஆத்மாக்கள் செல்லுகின்றனரோ… அதே வழித்தொடர் கொண்ட சக்தியைத்தான் அவர்களும் நமக்கு உணர்த்துகின்றனர்.

கவியிலும் காவியத்திலும் இன்றைய சக்தி நிலையை உணர்த்தி அதை ஏற்கும் பக்குவ ஆத்மாக்கள் சில தான் உள்ளன என்பதனைப் புரிந்தே “கால நிலைக்கேற்ப அருள் ஒளி தான்” அவ்வாண்டவனின் ஜெபம் கொண்டவர்களின் நிலையிலும் செயல்படுகின்றது.

இன்றைய நிலையில் நம் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி
1.இவ்வுலக வாழ்க்கையுடன் நம் வாழ்க்கையை ஜெயித்துக் காட்டிட வேண்டிய பக்குவ நிலை பெறவும்
2.நமக்கேற்படும் அனைத்து நிலைகளில் இருந்து நம் நிலையை உயர்ந்ததாக்கும் செயல் நிலைதான் நமக்கு இன்று தேவைப்படுகின்றது.

அந்நிலை பெறவும்… இயற்கையின் உண்மை நிலையை அறியவும்… நம் எண்ணத்தை அவனிடம் செலுத்தும் பக்குவத்தைத் தான் இன்றைய நம் நிலை இருந்திடல் வேண்டும்.

எண்ணத்தை ஒருநிலைப்படுத்திக் குவிக்கக் குவிக்க
1.நம் சக்தி அவ் ஆண்டவனிடம் ஐக்கியப்பட்டு
2.உரமாய் அவன் சக்தியை நம்முள் ஊன்றச் செய்து
3.அவனும் நாமும் ஒன்றான நிலையில் நம் உயிராத்மாவும் நம் உடலும் இருந்திடும். இந்நிலையில்
4.நமக்கு ஏற்படும் நம்மைச் சுற்றியுள்ள எந்நிலையும் நம் அருகில் நெருங்காது.

இவ்வுலக மாற்ற நிலை கூடிய விரைவில் ஏற்படப் போவதினால் நம்மை அதி பக்குவப்படுத்தி நாம் செயல் கொண்டிடல் வேண்டும்.

மனித ஆத்மாக்களுக்குத் தான் இந்நிலையில் புகட்டுகின்றீர்; மற்ற ஜீவன்களுக்கு அதன் ஆத்மாவைக் காத்திடும் பக்குவம் எப்படி ஏற்படும்…? என்ற வினாவும் எழலாம்.

இன்றைய நிலையில் எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்பவன் இம்மனிதன் தான். மிருகங்களில் சிலவற்றின் நிலையும் பறவைகளில் சிலவற்றின் நிலையும் சில உயர்ந்த நிலையில் வாழுகின்றன.

இம்மாற்றத்தினால் பறவைகளில் சிலவற்றின் நிலை சிதறுண்ட நிலையில் செயல்படப் போகின்றது. பூமிக்கு மாற்றம் வரும் நிலையில் பறக்கும் பட்சிகளுக்குத் தப்ப முடியாதா…? என்று எண்ணலாம்.

காற்று மண்டலமே மாற்றம் கொண்டுள்ள இந்நிலையில் இப்பொழுதே பறவைகளின் எண்ணச் சிதறலின் வளர்நிலை தொடர்பட்டுவிட்டது. இவ்வுலக மாற்றத்திற்குள்ளேயே பறவைகளின் நிலை மிகவும் குறைந்துவிடும்.

நம் பூமியிலேயே பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பறவைகளின் நிலை இருந்ததைக் காட்டிலும் படிப்படியாய் இன்று குறைந்துவிட்டது.

மற்ற ஜீவராசிகளின் நிலையும் ஒரு சில இன வர்க்கங்கள் மிகவும் குறைந்து விட்டதற்குக் காரணமே தாவரங்களை அழித்ததினால் இக்காற்று மண்டலமே விஷத்தன்மை அதிகப்பட்டதிலிருந்து இம்மாற்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

1.முந்தைய காலங்களில் வயல்களில் விளையும் கதிர்களைப் பட்சிகளிலிருந்து காக்கத் தக்க நடவடிக்கை இருந்திட்டது.
2.இன்றைய நிலையில் தாவரங்களை புழு பூச்சி இவற்றிலிருந்து காக்கும் நிலைதான் அதிகப்பட்டு விட்டது.

காலங்கள் மாற மாற இன வளர்ச்சியின் நிலையும் மாறிக் கொண்டே வருகின்றது. இப்பூமியில் கல்கியில் தொடர்ந்து இக்கலி வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் முடிவு நிலைதான் இன்று நாமுள்ள நிலை.
1.முடிவு நிலையில் உள்ள நாம்
2.முதல் நிலைக்குச் செல்லும் பக்குவப் பாடநிலை தான் இங்கு உணர்த்தும் நிலை.

பிறவி இல்லாத நிலை அடையும் தருணத்தைத் தான் “இராமேஸ்வரத்தில்” காட்டப்பட்டுள்ளது

பிறவி இல்லாத நிலை அடையும் தருணத்தைத் தான் “இராமேஸ்வரத்தில்” காட்டப்பட்டுள்ளது

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை நாம் பெற வேண்டும்…!
1.அதைப் பெற வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் இராமேஸ்வரத்தில் பார்க்கலாம்… பார்த்து அந்தச் சக்திகளை எடுக்க முடியும்.
2.27 நட்சத்திரங்களின் உணர்வுகள் ஒன்றுக்கொன்று எதிர் நிலை இல்லாதபடி ஒளியின் உடல் பெற்றது துருவ நட்சத்திரம்.

27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிர்நிலையானால் அதைத் தன் பாதரசத்தால் மாற்றி அந்த எதிர்நிலை வரும் பொழுது மோதி… வெப்பம் காந்தம் என்ற உணர்வாக்கி… பிரிந்து செல்லும் உணர்வை எது நுகர்கின்றதோ அதை “இயக்க அணுவாக மாற்றும் சக்தி பெறுகின்றது சூரியன்…”

ஆனால் அகஸ்தியனோ
1.இதை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஒளியாக மாற்றி
2.உயிரைப் போல உணர்வை ஒளியாக மாற்றி இருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

சூரியனோ அழியும் தன்மை பெற்றது… இந்த உயிரோ அழிவதில்லை. ஒரு மனிதன் தீயிலே குதித்தால் உயிர் வேகுவதில்லை… உணர்வுகளும் உடலும் தான் கருகுகின்றது.

கருகிய உணர்வு இணைந்த பின் உயிருடன் இணைந்து செல்லப்படும் பொழுது வேதனை என்று உணர்வே வருகின்றது. வேதனைப்படும் உணர்வுகள் உடலிலே இல்லை என்றாலும்… வேதனை உணர்ச்சிகளைத் தூண்டிக்கொண்டு நரக வேதனைப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

இன்னொரு உடலுக்குள் சென்றாலும் இந்த உணர்ச்சியைத் தூண்டி வேதனைப்படுத்தும் அந்த வேதனை உணர்வைத்தான் அங்கே வளர்த்துக் கொண்டிருக்கும்.

இதை நாம் தெரிந்து கொள்ள… ஞானிகள் காட்டிய அருள் வழியில் இராமேஸ்வரம் என்று வரப்படும் பொழுது “நேரம் ஆகிவிட்டது…!” ஏனென்றால்
1.இந்த மனிதனுடைய வாழ்க்கையில் சிறிது காலமே வாழுகின்றோம்.
2.அந்த நேரத்திற்குள் நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும் பகைமைகளை மறத்தல் வேண்டும்.

அதற்காக… “எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம்” என்ற இந்த உடலில் ஒளியின் உடல் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து… இருள் நீக்கி பொருளறிந்து செயல்படும் சக்தி பெறும் திறனைப் பெற வேண்டும்.

நாம் வாழும் ஊரிலே விநாயகரைப் பார்த்தாலும்… அருகில் உள்ள மரங்கள் துருவ நட்சத்திரத்தைக் காண முடியாதபடி மறைத்து விடுகின்றது. ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தை இராமேஸ்வரத்தில் மறைப்பில்லாதபடி நாம் காண முடிகின்றது.

பார்த்து அந்தச் சக்தியைப் பெறுவதற்காகக் கடலோரப் பகுதியாக இப்படித் தேர்ந்தெடுத்து அந்த நட்சத்திரத்தின் இயக்கங்களை காணுவதற்காகத் தேர்ந்தெடுத்தார்கள்.
1.எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இந்த உடலும்
2.எண்ணத்தால் ஒளியின் உடல் பெற்ற நிலையும்
3.அந்த ஒளியின் உணர்வை நமக்குள் பெற்று
4.இருளை நீக்கி அருள் சக்தி பெறும் இடமாக அங்கே மாற்றினார்கள்.

அந்த இடத்திலே ஆலயத்தை அமைத்து குறுகிய காலமே மனிதன் வாழுகின்றான் என்ற நிலையைக் காட்டி எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம் என்ற உணர்வைக் காட்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும்படி செய்தார்கள் ஞானிகள்.

சிறிது காலமே நாம் வாழுகின்றோம்… அதற்குள் மனிதனாகி நாம் வளர்ச்சி அடைந்து எதைப் பெற வேண்டும்…? என்பதற்காக இப்படிக் காட்டினார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் எண்ணப்படும் பொழுது இந்தக் குறுகிய காலத்திற்குள் நம் உடலுக்குள் பகைமைகளை நீக்கி மனதை ஒன்றாக்கும் நிலையை அது உருவாக்குகின்றது.

உடலுக்குள் பகைமைகள் அனைத்தையும் நீக்கி எல்லா மனங்களும் ஒன்றாக்கப்படும் போது…
1.இருளை நீக்கி ஒளி என்ற உணர்வாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று…
2.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடையும் தருணத்தைத் தான் இராமேஸ்வரத்தில் காட்டப்பட்டது.

நம் எண்ணத்தில் மோதும் அனைத்தையும் நாம் சமமாக்கி “உயிரான ஈசனிடம் அதை விட்டு விடுவோம்”

நம் எண்ணத்தில் மோதும் அனைத்தையும் நாம் சமமாக்கி “உயிரான ஈசனிடம் அதை விட்டு விடுவோம்”

 

இன்றுள்ள நம் பூமியின் தன்மையிலும் நம் பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தின் தன்மையிலும் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி அலைகளிலும் ஒரு நொடியைப் போல் ஒரு நொடி இல்லாமல் மாறிக் கொண்டே உள்ள நிலையில்
1.நம் பூமியின் தன்மையில் சமீபத்தில் நடந்த இச் சூரிய கிரகண நிலையிலிருந்து
2.நம் பூமிக்குக் கிடைக்கப் பெறும் சூரியனின் ஒளி அலையில் சிறுகச் சிறுக மாற்றத் தன்மையின் நிலையினால்
3.நம் பூமி ஈர்த்தெடுத்த அமிலத்தன்மையில் மாற்றம் கொண்டு
4.பூமிக்கு மட்டுமல்ல ஒவ்வொரு ஜீவ ஆத்மாவிற்கும் இம் மாறுகொண்ட நிலையினால் சில மாற்ற நிலைகள் சிறுகச் சிறுக ஏற்படும்.

நம் உடலிலுள்ள காந்த அமில சக்தி நாமெடுக்கும் சுவாசத்தின் ஈர்ப்பில் நம் செவி வழியில் மோதுண்டு அமிலமாய் அக்காந்த ஈர்ப்பு நிலை உடல் முழுவதற்கும் பரவிய நிலையில்… சிறுகச் சிறுக உடல் தன்மையும் அனைத்து ஜீவ ஆத்மாக்களுக்கும் மாற்றம் கொள்ளும் நாள் இக் குறுகிய கால வட்டத்திற்குள்ளே “மிகச் சமீப எதிர்காலத்தில்” இந்நிலையின் தொடரெல்லாம் நடந்திடும்.

எண்ணத்தைப் பரிசுத்தப்படுத்தி… ஒரு நிலை கொண்ட ஜெப நிலையில் நம் எண்ணம் முழுவதும் படரும் நிலை நாம் ஏற்படுத்திக் கொண்டால்
1.அவ்வொளியுடன் ஐக்கியப்பட்டுள்ள சப்தரிஷிகளின் ஒளியின் ஈர்ப்பு சக்தியில் நம் ஒரு நிலைகொண்ட எண்ண நிலையும் மோதுண்டு
2.அவர்கள் ஈர்ப்பில் அவர்களின் வட்டத்திற்குள் நம் எண்ணச் சக்தி ஐக்கியப்பட்டு நாம் இருக்குங்கால்
3.அவர்களே நம்மைப் பார்த்துக் கொள்வார்கள்.

காற்றிலுள்ள விஷத்தன்மையும் நம்மைச் சார்ந்தவர்களின் மாறு கொண்ட எண்ண நிலையும் நம் ஆத்மாவை வந்து மோதி விலகித்தான் செல்லுமே ஒழிய
1.நாம் ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ள அம்மகான்களின் வட்ட சக்தியில் (ஒளி சக்தி)
2.நம்மை அவர்களே ஐக்கியப்படுத்திக் கொண்டு வழி நடத்திடுவர்.

இப்பாட நிலையை உணர்ந்து கொண்டு “எண்ணத்தை ஜெபப்படுத்திய ஆத்மாக்களுக்கு” இதன் தொடர் நிலையின் வழி நிலை புரிந்திடும்.

ஒவ்வொரு மகானும் தான் பெற்ற அந் நல் அமுதை ஆசைப்பட்டுத்
1.தன் வட்டத்திற்குள் பல ஆத்மாக்களை நல்லுணர்வாக்கிட இன்றளவும் அவர்களின் செயல்நிலை செயல்பட்டுக் கொண்டேதான் உள்ளது.
2.அவ்வட்டத்தின் ஈர்ப்பில் நம் நிலை செல்லும் வழி முறையை நாமேதான் பெறல் வேண்டும் என்பதனை உணர்ந்தீரா…?

இன்று வாழும் இவ்வாழ்க்கை தான் நம் காலம் என்பதை மறந்துவிடுங்கள். நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும்… நல் சொத்தை அடையும் பக்குவத்திற்காக நாம் பெற்ற சந்தர்ப்பக் காலம் தான் இது.

இக்குறுகிய காலத்தை தர்க்கவாதத்திலும் பிடிவாத நெறியிலும் “ஆண்டவன் உண்டு… இல்லை…” என்ற ஆராய்ச்சி நிலையெல்லாம் அறிந்திடாமல் நம் முன்னோர்கள் உணர்த்திய நெறியில் உள்ள உன்னத சக்தியை ஈர்த்து நம் சக்தியை நாம் உணரல் வேண்டும்.

ஒவ்வொரு மனித ஆத்மாவுக்குள்ளும் அவரவர் சேமித்து வைத்தது இவ்வுடலில் உயிரணுவாய் உதித்த காலத்திலேயே சேமித்தது. அதன் தொடரில் வழி வந்த சக்தி நிலையெல்லாம் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் உண்டு.

ஒன்றைப்போல் ஒன்றில்லை… ஆனால் அனைவருக்கும் சக்தியுண்டு. அதை வெளிப்படுத்திட
1.நம்மிடம் உள்ள பல தீய சக்திகளை நமக்கே அடிமைப்படும் நிலைப்படுத்தி
2.நம் உடலிலுள்ள அனைத்து உயிரணுக்களும் நம் நிலையில் செயல்படும் நிலையில்
3.நாம் எடுக்கும் எண்ண சுவாசம் இருந்திடல் வேண்டும்.

நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொண்டால் பிறரின் நிலையைக் கண்டு நம் எண்ணத்தில் கலக்கம் தோன்றாது. பிற எதிர்ப்பிற்கும் புகழுக்கும் சமமான நிலை கொள்ளும் பக்குவம் கொண்டு அவ்வாண்டவனின் மந்திரமுடன் ஐக்கியபட்டு அவ்வட்டத்தில் நாம் உள்ள பொழுது… “நம்மைச் சுற்றியுள்ள நிலையையும்… நம்மைக் காக்கும் அவ்வாண்டவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்…”

அதற்காக நம் எண்ணத்தை நாம் மாற்றலாகாது. அனைத்தையும் சமமாக்கி… அனைத்தையும் என்பது
1.நம் எண்ணத்தில் மோதும் அனைத்தையும் நாம் சமமாக்கி அவனிடம் விட்டு விடுவோம்
2.”அவ்வாண்டவனே பார்த்துக் கொள்வான்” என்ற ஒரு நிலை கொண்ட சம நிலை நாம் பெறல் வேண்டும்.

நம் புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தினை நிலைநிறுத்த வேண்டும்

நம் புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தினை நிலைநிறுத்த வேண்டும்

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஆசைப்படுங்கள்.
2.இப்பொழுது கண்ணில் அந்த ஈர்க்கும் சக்தி அதிகரிக்கின்றது.

கண்ணின் நினைவினைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள். புருவ மத்தியில் வீற்றிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி “உயிர் வழி” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஆசையுடன் ஏங்கி இருங்கள்

இப்பொழுது புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் பொழுது
1.உயிரைத் தாண்டி உங்கள் உடலுக்குள் தீமையை இயக்கும் உணர்வுகள் உள் புகாது தடுக்கப்படுகின்றது.
2.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நிலை நிறுத்தப்படும் பொழுது அதை ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்
3.உங்கள் உடலில் உள்ள தீமையான அணுக்களுக்கு ஆகாரம் செல்லாதபடி தடைப்படுத்தப்படுகிறது.
4.தீமையான அணுக்கள் உடலில் வளராது தடுக்கப்படுகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று “திரும்பத் திரும்ப” எண்ணி ஏங்கித் தியாநியுங்கள்.

உங்கள் புருவ மத்தியில் ஈர்க்கும் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உயிரிலே மோதும் பொழுது “ஒரு வெளிச்சம்” உருவாகும்.

உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் இருக்கும் இரத்த நாளங்களில் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இரத்த நாளங்களில் கலந்து இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.உங்கள் உடலுக்குள் தீய வினைகளை விளைய வைக்கும் அந்த அணுக்களுக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்தப்படும் பொழுது
அந்தத் தீய அணுக்களும் அடிபணிந்து நல்ல அணுக்களாக மாறும் திறன் பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர்ந்து அதில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஆசைப்படுங்கள். இப்பொழுது இரத்த நாளங்களில் உள்ள அந்த அணுக்கள் உற்சாகமடையும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளி எங்கள் இரத்தங்களில் கலந்து உடல் முழுவதும் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் செலுத்துங்கள்.

அந்த சக்தி அங்கே பெற வேண்டும் என்று ஆசையுடன் ஏங்கித் தியானியுங்கள். உங்கள் உடல் உறுப்புகள் அனைத்தும் இப்போது உற்சாகமடையும்.

1.இத்தகைய வலுவை நாம் அடிக்கடி ஏற்படுத்தி இது ஒரு பழக்கத்திற்கு கொண்டு வந்தால்
2.தீமைகள் வரும்பொழுது எல்லாம் உடனுக்குடன் அதை மாற்றிக் கொள்ள முடியும்
3.தீமையிலிருந்து விடுபட முடியும்… உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக்க முடியும்.

ஆத்மா என்பது என்ன…? அது எங்குள்ளது…?

ஆத்மா என்பது என்ன…? அது எங்குள்ளது…?

 

எண்ணத்தை ஒருநிலைப்படுத்தும் பக்குவ நிலைக்கு நம் ஆத்மாவை நாம் செயல்படுத்திட வேண்டும்.

ஆத்மா என்பது எங்குள்ளது…?

நாம் இறந்துவிட்டால் ஆத்மா பிரிந்து விட்டது என்கின்றோம். ஒரு ஜீவ உடல் இறக்கும் பொழுது அவ்வுடலில் இருந்து அவ்வுடலின் உயிரணுதான் முதலில் பிரிகின்றது.

அவ் உயிரணுவிற்கும் அவ்வுடலில் உள்ள ஜீவனற்ற ஆத்மாவிற்கும் தொடர்பு கொண்டுதான்
1.அவ்வுடலில் இருந்து ஓர் அங்குல வட்டத்திற்குள் தான்
2.அவ்வுயிரணு அவ்வுடலின் மேல் பகுதியிலேயே அவ்வாத்மாவுடன் இருக்கும்.

ஆத்மா என்பது என்ன…?

அவ்வுயிரணு சேமித்த அமில சக்திதான் ஆத்மா. அவ்வுடலை எந்நிலைப்படுத்துகின்றோமோ “அதன் பிறகுதான்”
1.அவ்வுடலைச் சுற்றிக் கொண்டே உள்ள அவ்வுடலின் ஆத்மா
2.இவ்வுயிரணுவுடன் கலந்து ஆவி உலகிற்கு வருகின்றது.

எவ்வுடலும் அதன் ஜீவன் பிரிந்த உடனே அதனுடைய செயல்நிலை ஏற்படுத்துவதில்லை. அவ்வுடலை எரிக்கும் நிலையில் அதனுடைய உயிருடன் அவ்வாத்மா சுற்றிக்கொண்டு ஆவி உலகில் கலக்கின்றது.

மற்ற நிலையில் அடக்கம் செய்யும் உடலாத்மா அதன் உயிரணுவுடன் சேர்ந்து உடலில்லாமல் செயல் கொள்ளப் “பல நாட்களாகின்றன…”

1.ஆத்மா என்பது உடலின் அனைத்து உறுப்புகளிலுமே ஆவித் தன்மையில்
2.உடலில் மட்டுமல்லாமல் உடலைச் சுற்றியுள்ள நிலையிலும் படர்ந்துள்ளது.
3.உயிரணுவிற்கும் ஆவி ஆத்மாவிற்கும் ஜீவனுடன் கூடிய ஆத்மாவிற்கும் பொருள் புரிந்ததா…?

ஆவி உலக ஆத்மாவிற்கும் ஜீவ உடல் ஆத்மாவிற்கும் மாறுபட்ட நிலை இது தான்.

ஜீவ உடலை விட்ட ஆத்மாவிற்கு எண்ணத்தின் நிலையைச் செயலாக்கிட பிற எண்ணமுடன் (உடலுடன் கொண்டவருடன்) மோதித்தான் அதன் செயல் நிலை இருந்திடும்.

நம் எண்ணத்தை ஒரு நிலை கொண்டு ஒவ்வோர் ஆத்மாவும் ஆசையுடன் வாழும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

அனைத்திற்குமே ஆசை வேண்டும்…
1.அன்பு கொள்ளவும் ஆசை வேண்டும்
2.கோபத்தை விடவும் ஆசை வேண்டும்.
3.எந்நிலை செயல் கொள்ளவும் அவ் ஆசை வேண்டும்.
4.நமக்குகந்த ஆசையை நாம் ஆசைப்பட்டால்தான் எச்செயலும் நடக்கும்.

பேராசைக்குத்தான் நாம் இடந்தரலாகாது.

அமுதான உணவானாலும் நாம் நம் உடலுக்கு வேண்டிய அளவுதான் உண்ணுகின்றோம். எப்படி உண்டாலும் அதிகமாய் நம் உடம்பு ஏற்றுக் கொள்கின்றதா…?

உடலே தனக்குகந்த அளவு உணவைத்தான் செரிக்கும் பொழுது…
1.நம் எண்ணத்தையும் அளவுடன் கூடிய ஆசையை எண்ணியே
2.செரிக்கும் பக்குவத்தை நாம் பழக்கப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

நல்லவர்கள் அனைவரையும் காக்க வேண்டும் என்றார் குருநாதர்

நல்லவர்கள் அனைவரையும் காக்க வேண்டும் என்றார் குருநாதர்

 

உங்களுக்கு இப்பொழுது உபதேசிக்கின்றேன் என்றால்…
1.உணர்வின் இயக்கங்கள் மனிதனை எப்படி ஆட்டிப் படைக்கின்றது…?
2.நல்லவன் எப்படிக் கெட்டவனாகினான்…?
3.நல்லது செய்தே பிறருக்குக் கெட்டவனாகின்றான்… நல்லதைச் செய்தே தன் உடல் நலிந்து போகின்றது
4.நல்லவர்கள் குடும்பத்தில் எத்தனை தொல்லைகள் படுகின்றார்கள்…?
5.தவறு செய்யவில்லை… நன்மை செய்தவர்களே பெரும்பகுதி இந்த நிலைக்கு ஆளாகின்றார்கள்.
6.நன்மை செய்தவனுடைய நன்மைகள் வளர வேண்டுமல்லவா..? அதற்கு வேண்டிய உபாயம் தேவையா இல்லையா…?
7.அதன் உணர்வுகளை நீ உணர்த்து… நல்லவரை நல்லவராக்கு
8.தீமைகள் வளரப்படும் பொழுது தீமைகளை அகற்றிடும் வல்லமையால் அவர்களை நல்லவராக்கும் உணர்வினை நீ செயல்படுத்த வேண்டும்
9.இதுவே நீ ஆண்டவனுக்குச் செய்யக்கூடிய சேவை என்றார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரும் அந்தந்த உடலை ஆளுகின்றது அப்படி ஆளும் அந்த ஆண்டவனுக்கு அந்த உடலில் சிந்தனையுடன் செயல்பட்டு அந்த உயர்ந்த குணங்களை பரப்பும் நிலைகள் பெற வேண்டும்.

அந்த உடலில் உள்ள நல்ல உணர்வுகள் வளர வேண்டும் என்று நீ எண்ணினால் ஒவ்வொரு உயிரான ஆண்டவனுக்கு நீ சேவை செய்கின்றாய்.

ஒவ்வொரு ஈசனுக்கும் உருவாக்கும் தன்மை கொண்டு உயர்ந்த உணர்வுகள் பெற வேண்டும் என்றால் உன் உயிரான ஈசன் உனக்குள் அந்த உணர்வினை வளர்க்கின்றது.

இந்த உணர்வினைச் சொல்லும் பொழுது அவர்கள் செவிகளில் விழுந்து இருளை அகற்றும் உணவுர்கள் அங்கே பெருகுகின்றது. ஆகவே உன்னுடைய சேவை எதுவாக இருக்க வேண்டும்…? என்று வினா எழுப்பினார் குருநாதர்.

ஒவ்வொரு மனிதனின் உயிரையும் ஈசனாக மதி…! அவனால் அமைக்கப்பட்ட உடல் என்பதை ஆலயமாக மதி…! இந்த உணர்வால் நுகரப்பட்ட சிவமென்று அந்த உடலை மதி…!

அந்த உணர்வின் தன்மை கண்கள் வழிகாட்டி மனிதனை உருவாக்கிய கண்களே கண்ணனாகின்றது. வேதனை என்ற உணர்வை அடிக்கடி நுகர்ந்தால் கண்களிலே அது படரப்பட்டுக் கண் நாளடைவில் தெரியாது போகின்றது. கரு விழியில் விஷம் தோயப்படும் போது நல்ல உணர்வை அறியாது போகின்றான்.

கண்கள் பிறக்க எத்தனை உபாயங்களைக் கையாண்டது…? தான் பார்க்க வேண்டும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை எண்ணத்தால் எண்ணி… எண்ணித் தான் முதலிலே கண்கள் உருவானது.

கண்கள் உருவான பின் தீமையிலிருந்து விடுபடச் செய்யும் உணர்வினை வேகமாகக் கூட்டுகின்றது. தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினை வலுவாக்கி மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது.

கண்களால் தீமை என்று தெரிந்து கொண்ட பின் அதைத் துடைக்கத் தவறினால் வேதனை என்ற உணர்வுகள் அடிக்கடி கண்ணின் கருவிழிகளிலே பட்டால் அதைக் கவரும் தன்மை ஆகி விடுகின்றது.

அப்போது கருவிழிக்கு இழுத்துச் செல்லும் நரம்பு மண்டலங்கள் விஷத் தன்மையாகி அது பலவீனமானால் கண்கள் தெரியாது போய் விடுகிறது. ஆகவே கண்ணனுக்கே நாம் தீங்கு செய்கின்றோம்.

எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து உயிரான ஈசன் மனித உடலை உருவாக்கியது
1.நாம் எடுக்கும் உணர்வுகள் சீராகச் செயல்படவில்லை என்றால் இந்த உடலுக்குள் உடலான சிவனுக்கே துன்பம் செய்கின்றோம்.
2.உயிரான ஈசனுக்கும் உடலான சிவனுக்கும் அடிக்கடி வேதனைப்பட்டால் உயிரான ஈசன் வெளியே சென்று விடுகின்றது.

இந்த உடலின் ஆசைக்கு வளர்த்துக் கொண்ட உணர்வுகள்… எதை எதை எல்லாம் எண்ணி வேதனைப்பட்டோமோ விஷத்தின் அணுக்கள் விளைந்து உயிர் வெளியே சென்ற பின் இந்த உடல் சவமாகி விடுகிறது… நீசமாகி விடுகின்றது.

உடல் நீசம் ஆகிவிட்டால் நாற்றமாகிறது… அருகிலே நாம் செல்ல முடிகின்றதா…? செல்வந்தராக இருந்தாலும் பாசத்துடன் வாழ்ந்து இருந்தாலும் உடல் நீசமான பின் அருகிலே நிற்க முடிவதில்லை.

இயற்கையின் உண்மை நிலைகள் இவ்வாறாகும் பொழுது நாம் அணுக வேண்டியது யாரை…?
1.அருள் உணர்வுகள் பெற வேண்டும்
2.இருளை அகற்றும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை “உயிருடன் ஒன்றச் செய்தால்” இருளை அகற்றும்.
3.இருளை அகற்றினால் மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டும்.
4.மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்தால்
5.நமது வாழ்நாளில் இருளை அகற்றும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறும்.
6.அழியா ஒளிச் சரீரம் பெறலாம்

ஆகவே… மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்…! மனிதனான பின் தீமைகளை நீக்கி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைவதே கடைசி நிலை.

பகலிற்கு மேல் “இரவிலும் நம் எண்ணம் செயல்படுகிறது” என்பதனை உணர்ந்திருக்கின்றோமா…?

பகலிற்கு மேல் “இரவிலும் நம் எண்ணம் செயல்படுகிறது” என்பதனை உணர்ந்திருக்கின்றோமா…?

 

நம் எண்ண நிலையைத் திசை திருப்பிடவும் இவ்வுலகில் பல நிலைகள் பல வழியில் நம்மை வந்து மோதத்தான் செய்யும். நாம்தான் இந்நிலையில் இருந்து நம் எண்ணத்தை அவ் ஓ…ம் என்ற ஜெபத்துடனே சுழல விட்டு நம் ஆத்மாவையே அவ் ஓ…ம் என்ற ஜெபத்துடன் சுழல விட வேண்டும்.

காலையில் துயிலெழுந்து இரவு உறங்கும் காலம் வரை நம் எண்ணத்துடன் பல செயல்கள் மோதுண்டு நம்மைப் பல நிலைகளுக்கு ஆளாக்குவது என்பது மட்டுமல்ல…
1.பகலில் ஏற்படும் செயல்களின் நினைவுடனே நாம் உறக்கம் கொள்வோமானால்
2.அந்நினைவின் தொடரில் அதே நினைவுடன் கூடிய இக்காற்று மண்டலத்தில் கலந்துள்ள பல ஆத்மாக்களின் நினைவலைகளும்
3.நாம் நம் செயலின் நினைவலைகளும் உள்ள நிலையில் அதுவும் இதுவும் மோதுண்டு அதன் எண்ணச் சுழற்சியில் நம் எண்ணம் சிக்குண்டு
4.உறக்கத்தில் உள்ள நிலையில் நம் செயல் எண்ணத்தின் தொடர் எண்ணத்தில் நம்மைச் செல்லவிடாமல்
5.நம் எண்ணத்துடன் மோதுண்ட பிற ஆத்மாவின் எண்ணச் செயல் நிலையின் எண்ண ஓட்டத்திற்கே நம்மை அவ்வாவி ஆத்மா தூண்டி
6.அதன் எண்ணக் கலவையின் ஓட்டமுடனே நாம் செல்லும் நிலையில்தான் நமக்கு ஏற்படும் கனவுகளில்
7.நம் வாழ்க்கைக்கும் எண்ணத்திற்கும் ஒட்டாத செயல் நிலைகள் எல்லாம் நாம் நம் கனவில் காணுகின்றோம்.

உடலை விட்ட ஆத்மாக்களுக்குத் தான் உணவுமில்லை… உறக்கமும் இல்லை. மனித ஆத்மாக்கள் உறங்கிடும் வேளையில் அதனுடைய எண்ண நிலைக்கேற்ப ஆத்மாக்களை இவ்வாவி உலக ஆத்மாக்கள் தன் எண்ணத்தைச் செயல்படுத்த நம் வட்டத்திற்குள் வந்து தன் எண்ணத்தைச் செயல்படுத்த நம் வட்டத்திற்குள் வந்து நம் எண்ணத்தைத் தூண்டுகிறது.

இரவில் நாம் காணும் துர்க்கனவானாலும் ஆனந்த நிலை கொண்ட கனவாய் இருந்தாலும் நாம் உறங்கி எழுந்த பிறகு நம் நினைவில் வருவதை வைத்து அதே எண்ண ஓட்டத்தில்
1.இப்படிக் கனவு கண்டு விட்டோமே… கனவு பலித்திடும்…! என்று செப்புகின்றனரே என்ற எண்ணத்தில் மோதவிட்டு
2.அதே நினைவுத் தொடரில் நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் சப்த அலையுடன் இந்நிலையும் கலந்து
3.அதன் தொடர்ச்சியில் நம் செயல்நிலை இழுக்கப்படுகின்றது.

நல்ல ஆனந்த நிலை கொண்ட கனவும் இந்நிலையே. கனவில் ஏற்படும் நிலையினாலும் நம் வாழ்க்கையில் சில நிலைகள் தொடர்பு கொள்கின்றன.
1.பகலில் மட்டும் நம் செயலின் எண்ணம் கொண்டு நம் நிலை ஏற்படுவதில்லை
2.பகலிற்கு மேல் இரவிலும் நம் எண்ணம் செயல்படுகிறது என்பதனை உணர்ந்தீரா…?

நாம் உறங்குவதற்கு முன் ஒரு நிமிடம் நம்மையே அஜ்ஜெபமுடன் கலக்கும் நிலைப்படுத்தி
1.நம் தாய் தந்தையரை வணங்கி நம் இஷ்ட தெய்வமான எத்தெய்வமாய் இருந்தாலும் சரி
2.அவ் ஓம் என்ற நாதத்துடன் ஓம் ஈஸ்வரா ஓம் இயேசுவே ஓம் முகமது நபியே என்று ஒரே எண்ணத்தில்
3.அவரவர்கள் பக்தி கொண்டு பூஜிக்கும் அவ்வாண்டவனின் ஜெபத்தையே உறங்கும் முன் ஜெபித்துக் கொண்டே உறங்கிடல் வேண்டும்.

அப்படிப்பட்ட உறக்கத்தில் உள்ள நிலையில் நம் உயிரைச் சுற்றியுள்ள நம் ஆத்மாவுடன் நாம் எடுக்கும் சுவாசத்தினால் இவ் ஓ…ம் என்ற ஆண்டவனின் ஜெபமே சுழன்று கொண்டே இருக்கும்.
1.அந்நிலையில் நம் எண்ணமும்… நாம் விழித்துள்ள நிலையில் செய்த செயல் எண்ணமும்… அதன் தொடரில் நாம் காணும் கற்பனை எண்ணங்களும்…
2.இஜ் ஜெப நிலையில் உள்ள ஆத்மாவுடன் வந்து மோதுவதும் இல்லை… பல கனவுகள் சிதறுண்டு நாம் காணவும் முடிந்திடாது.

நம் உயிராத்மாவும் நாம் உறங்கும் நிலையிலும் அமைதி கொண்டு “நம்மைக் காக்கும் இவ்வெண்ணத்தினால்தான்” ஒவ்வோர் உயிராத்மாவின் செயல் நிலை செயல்படுகின்றது.

ஆடைகள் மூலமாக நமக்குத் தெரியாமலே நோய்கள் உருவாகிறது என்பதை அறிந்திருக்கின்றோமா…?

ஆடைகள் மூலமாக நமக்குத் தெரியாமலே நோய்கள் உருவாகிறது என்பதை அறிந்திருக்கின்றோமா…?

 

அக்ரிகல்ச்சரில் விவசாய நிலங்களில் களைகள் முளைத்தால் களைக் கொல்லிகளைப் போடுவார்கள். முதலிலே உழுகும் பொழுது களைக்கொல்லிகளை மண்ணிலே தெளித்து விட்டால்… அந்தக் களைகளுக்குக் கிடைக்கும் சக்திகளைக் குறைத்து விடுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் களைக்கு வரும் விஷம் வேறு பயிரினங்களுக்கு வரும் விஷம் வேறு. இதை மாற்றி அமைத்துத் தடுக்கும் சக்தி கொடுக்கப்படும் பொழுது விஷத்தின் ஆற்றலை அதிகமாகக் கொடுத்துப் பயிரினங்களை வளர்க்கச் செய்கின்றனர்.

பயிரினங்களில் விஷத்தன்மைகளைப் போட்டு வித்துக்களை வளர்க்கப்படும் பொழுது
1.களைகளை அடக்குகின்றது… பயிரைக் காக்கின்றது… ஆனால் அதிலே விளைந்த வித்துக்களில் என்ன செய்கிறது…?
2.விஷம் கலந்த வித்துக்களாக உருவாகின்றது
3.மனிதன் இதைச் சுவாசித்து உணவாக உட்கொள்ளும் பொழுது விஷத்தின் தன்மை இரத்தத்திலே கலந்து
4.உடலில் உள்ள நல்ல அணுக்கள் விஷத்தன்மை அடைந்து விடுகின்றது.

பயிரைக் காக்க விஞ்ஞானத்தின் மூலம் மருந்துகளை உபயோகப்படுத்துகின்றான். ஆனால் அதே சமயத்தில் மனிதனுக்குள் இந்த நிலை ஆகிவிடுகின்றது.

இதே போல பருத்திச் செடிகளில் தண்டுப்புழு என்று உருவாகும். அதைக் கொல்வதற்காகப் பல விஷங்களை இடுகின்றனர் ஆனால் இப்படிப் போடும் பொழுது அந்த விஷத்தின் தன்மை பருத்திகளிலே கலந்து விடுகின்றது.

அப்படி விஷத்தின் தன்மை தோய்ந்தபின் அதை ஆடையாக உருவாக்கும் நிலைகளில்
1.அந்த ஆடைகளை நாம் அணிந்தால் அந்த விஷத்தினைக் கவரும் நிலையாகின்றது
2.நம்மை அறியாதபடி உடலிலே பல நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.

ஆடைகளிலே விஷத்தன்மை கொண்ட பல கலர்களை இடுகின்றனர். அப்படிச் சேர்த்துக் கொண்ட பின் அது எத்தகைய விஷமோ காற்றிலே அந்த விஷத்தின் தன்மை ஆவியாகப் பரவிச் செல்வதை இழுத்து நம் சுவாசத்திற்கு கொண்டாருகின்றது.

நம் சுவாசத்தின் வழி உடலுக்குள் சென்று இரத்தங்களிலே கலக்கப்பட்டு உடலில் விஷத்தன்மையாக பரவுகின்றது.

சிலர் கருப்பு நீலம் இதைப் போன்ற நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிந்து சுவாசித்தார்கள் என்றால்
1.அவர்களுக்குக் கை கால் குடைச்சல் நிச்சயம் இருக்கும்…
2.மனநோய் பிடித்த மாதிரி அடிக்கடி சஞ்சலமாகக் கவலை தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.

அந்த ஆடைகளில் இருக்கக்கூடிய நிலைகள் இவ்வாறு செய்து விடுகின்றன. ஆனால் அவர்களுக்கு அந்த ஆடை தான் பிடிக்கும். வெண்மையான ஆடையாக இருந்தால் அது அவர்களுக்குப் பிடிக்காது.

விஷம் கொண்ட நிறங்களாகச் சேர்க்கப்படும் பொழுது அந்த நிறத்தை உருவாக்கும் ஆவியின் தன்மை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது

நம் உடலில் ஆடையாக அணிந்த நிலையில் காந்த்த்தால் ஈர்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவாக மாற்றி விடுகின்றது. சுவாசித்து உயிரிலே பட்டபின் அந்த உணர்வலைகள் இரத்தத்தில் கலந்து உடலிலே பெருகத் தொடங்குகின்றது.

அத்தகைய நிலை ஏற்பட்டால் அந்த சேலையைத்தான் அவர்கள் எடுப்பார்கள் நல்ல சேலைகளை ஒதுக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த உணர்வு பெற்றபின் அதே உடைகளைத் தான் எடுப்போம் அந்த உணர்வுக்கொப்பதான் அது செயல்படுகின்றது.

கடந்த காலங்களில் அன்றைய ஞானிகள் இயற்கையின் உணர்வின் தன்மையை தாவர இனங்களில் இருந்து
1.விஷத்தை நீக்கும் தாவர இனங்களாக
2.ஒன்றுடன் ஒன்று இணைந்தால் விஷத்தினை நீக்கும் தன்மை பெற்று ஆடைகளுக்கு நிறத்தைக் கொடுத்தார்கள்.

தாவர இனங்களின் விஷத்தின் தன்மை
1.அந்த மணத்தைக் கண்ட பின் யானையோ, புலியோ நரியோ கொசுவோ அவைகள் விலகிச் செல்கின்றனவோ
2.அதைப் போன்ற நிலைகளை ஆடைகளிலே கலந்துவிட்டால் “விஷத் தன்மை கொண்ட கொசுக்கள் நம் அருகில் வருவதில்லை…”

ஏனென்றால் அனுபவரீதியிலே அந்தப் பச்சிலைகளைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வினைக் கலக்கச் செய்து சாயத்தை உடையிலே ஏற்றுவார்கள்.

இதே போன்று பண்டைய கால ஆலயங்களிலே பார்த்தோம் என்றால் பச்சிலைகளைக் கொண்டுதான் அங்கே வர்ணங்களைத் தீட்டியிருப்பார்கள். அதிலே கெமிக்கல் கலந்த சாயங்கள் கிடையாது.

கடந்த கால கோவில்களில் இதைப் போல வர்ணங்களைத் தீட்டப்படும் பொழுது அதை நாம் கண்ணுற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை பதிவாகின்றது.

1.அந்தப் பச்சிலை விஷத்தின் தன்மைகளை எப்படி நீக்கியதோ அதைப் போல அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆன பின்
2.நம் உடலில் உள்ள விஷத்தின் தன்மைகளை நீக்கிடும் உணர்வைச் சுவாசித்து அதைக் கவரும் சக்தியாக நம் உடலில் உருவாகின்றது.

இது எல்லாம் மெய் ஞானிகள் செய்த நிலைகள்.

பண்டைய கால கோவில்களுக்கும் இன்றைய ஆலயங்களுக்கும் இந்த வித்தியாசங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.

இது எல்லாம் எதைக் குறிக்கின்றது…? விஞ்ஞானம் வளர வளர அஞ்ஞானமாக வாழ்கின்றோம்.
1.ஆனால் மெய்ஞானத்தால் அஞ்ஞானம் அகற்றப்படுகின்றது.
2.இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

“நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை” நாம் பிரித்தெடுத்து வாழ வேண்டும்

“நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை” நாம் பிரித்தெடுத்து வாழ வேண்டும்

 

காட்சி: பாட்டிலில் புனல் வைத்து திரவத்தை ஊற்றும் நிலை காட்டல்.

1.முந்தைய காலங்களில் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி ஜெப அருளினால் மட்டும்தான் ஞான நிலை பெற முடிந்தது.
2.“எழுதி வைத்துப் படிக்கும் நிலை அன்றில்லை…”

குப்பியில் புனல் வைத்துத் திரவத்தை ஊற்றுவதைக் கண்டாய். அக்குப்பிக்குப் புனல் உள்ளதினால் அதில் ஊற்றும் திரவம் சிந்தாமல் ஊற்ற முடிந்தது. புனல் இல்லாவிட்டால் எண்ணத்தைச் சிறிது மாற்றினாலும் அத்திரவம் சிந்தி விடுகின்றது.

இன்றைய ஏட்டு நிலை கொண்டு ஆரம்ப நிலையிலேயே அறியும் பக்குவத்தை நாம் உணரப் பல நிலைகள் எழுத்து வடிவினில் தரப்படுகின்றன.
1.புனலைப்போல். நம் ஆத்மாவுக்குகந்த ஈர்ப்பு நிலையை நாம் உணராமல் வாழுகின்றோம்
2.இம்மனித ஆத்மாவுக்கு மட்டும்தான் காந்த அமில சக்தியுடைய ஈர்ப்பு சக்தி அதிகம்.

இவ்வுலகின் ஈர்ப்பு நிலைக்குகந்த அமில சக்தியில் தாவர வர்க்கங்களும் மற்ற உலோகங்களும் அதற்குகந்த அமிலத்தைத் தான் ஈர்க்கும்.

மற்ற ஜீவ ஜெந்துக்கள் அதன் எண்ண வளர்ச்சியில் எச்சத்தியில் ஜீவன் பெற்றதோ அதன் வளர்ச்சித் தொடரில் தான் அனைத்து நிலைகளையும் உணரும் சக்தி சில ஜீவராசிகளுக்கு இருந்திட்டாலும்… செயல்படத்தக்க இயற்கை நிலை இல்லாததினால் மனித ஆத்மாவை ஒத்த செயல் நிலை அவற்றிற்கும் இல்லை.

இம் மனித ஆத்மா ஒன்றுக்கு மட்டும் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல கோடி அமில நிலையினில் தனக்கு வேண்டியதைப் பிரித்தெடுக்கும் ஆற்றல் உண்டு.

இம்மனித ஆத்மா ஒரு நிலை கொண்ட ஜெப அருள் பெற்று விட்டால்
1.அவ்வெண்ண சக்தியை ஒரு நிலையில் எண்ணி எடுக்கும் சுவாசத்திலிருந்து
2.அவ்வெண்ண சக்தியின் தொடர்நிலை கொண்ட அமிலத்தின் ஈர்ப்பினால்
3.எதை எண்ணி நம் ஜெபக் குறி உள்ளதோ அந்நிலையை நாம் எடுக்கும் சுவாசத்தின் அலையுடன்
4.நம் உயிராத்மா அவ் ஈர்ப்பு காந்த அமிலத்தை நமக்கு ஈர்த்தெடுத்து அளிக்கின்றது.

நம் விழியை மூடிக்கொண்டே நாம் எடுக்கும் சுவாசத்திலிருந்து நமக்கு எவ்வெண்ணத்தைப் பாய்ச்சி நம் தியானம் உள்ளதோ அதன் தொடர்நிலை அனைத்தும் விழியுடன் காண்பதைப் போலவே நாம் காணலாம்.

இக்காற்றில் உள்ள ஜீவ அணுக்களை நமக்குகந்த அமிலத்தை நம் சுவாசம் எடுக்கும் நிலை பெறல் வேண்டும்.
1.காற்று மண்டலமே இன்றைய நிலையில் விஷத்தன்மை கூடி வருகிறது என்றாலும்
2.நம் சுவாசத்திற்கு வேண்டிய நல் அணுக்களை நாம் சுவாசிக்கும் ஈர்ப்பு நிலை பெற வேண்டும்.

இத்தொடர் நிலை ஜெபத்தினால் நம் ஜெப சக்தியில் எவ் அமிலத்தையும் நாம் நமதாக எடுத்திடாமல் எம் மண்டலத்தில் இருந்தாலும்… “நம் உயிர் ஆத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை” நாம் பிரித்தெடுத்து வாழும் பக்குவத்தை அறியலாம்.

இன்றைய விஞ்ஞானத்தில் செயற்கைக் கோளைக் கொண்டு நம் மண்டலத்திலிருந்து பிற மண்டலம் செல்ல நம் பூமியின் அமிலக்காற்றை அதில் செல்லும் ஜீவ ஆத்மாவிற்கு எடுத்துச் சென்றும்… பல பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்தியும்… பிற கருவியின் உதவி கொண்டு அங்குள்ள நிலைகளைப் புகைப்படமாக்கி இப்பூமிக்கு அறியும் நிலையை ஏற்படுத்தி வர ஏவுகின்றனர்.

ஜெப நிலை கொண்டு தன் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை இக்காற்று மண்டலத்தில் எக் கோளத்தில் இருந்தாலும் ஈர்க்கும் பக்குவம் பெற்று விட்டால் இவர்கள் அனுப்பும் செயற்கைக் கோளில் எப்பாதுகாப்புச் சாதனமும் இன்றி ஆகாரம் எடுத்துச் செல்லாமல் இவ்வுடலுடனே குறிப்பிட்ட காலங்களுக்குச் சென்று வர முடிந்திடும்.

1.எண்ணத்தில் ஜெப நிலை பெறல் வேண்டும்… அச் சாதனை நிலைபெற்ற ஆத்மாவினால் இச்செயல் நிலை கொள்ள முடியும்
2.பயமும் திகிலும் கொள்ளும் சிறு எண்ணப் பிசிறு உள்ள நிலையிலும் இச்செயல் நிலை சாத்தியமல்ல.

இவ்வுடலுடன் வாழ்ந்திடும் நிலையிலேயே சப்தரிஷியின் நிலை பெறும் ஆத்மாவினால் தான் அந்நிலை பெறல் முடியும்.

சூட்சுமத்தில் உள்ளோரின் நிலை வேறு. இவ்வுடலுடன் கொண்ட சூட்சும நிலை கொள்ளும் ஆத்மாவினால் இச்செயல் நிலை செயல்படுத்திட முடிந்திடும்.

இம் மனித ஆத்மா ஒவ்வொன்றிற்கும் “இச்சக்தி நிலையுண்டு” என்பதனை உணர்த்தத்தான் இந்நிலை விளக்கப்பட்டதேயன்றி நம் வாழ்க்கையின் நம் ஆத்மாவின் குறிக்கோளுக்காகச் செப்பவில்லை.

இவ்வாத்மாவிற்கு உகந்த சக்தியை உணர்த்திடத் தான் இந்நிலை உணர்த்தப்பட்டது.

இக்கால நிலையுடன் கலந்து வரும் பூகம்பத்தையும் இடி மின்னலையும் எரிமலை கக்கும் நிலையையும் பனிமலை உறையும் காலத்தையும் கடல் கொந்தளிக்கும் நிலையையும் இவ்வுடல் மண்டலத்தில் ஈர்க்கும் நிலைப்படுத்தி உணர்ந்திடலாம்.

1.பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முதலிலேயே உடலுடன் இருந்த பல ஆத்மாக்கள்
2.பல நூறாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் நிலைகளை எல்லாம் அறியும் பக்குவம் பெற்று இப்பூமியிலேயே தான் வாழ்ந்தார்கள்.

இன்று நாம் நமக்குகந்த உண்மை நிலையை உணராமல் செயற்கையில் மகிழ்ந்து வாழ்கின்றோம்.
1.நம் ஆத்மாவையே செயற்கையுடன் ஒன்றி
2.நமக்குகந்த செல்வ நிலையைப் பெறாமல் வாழ்ந்தென்ன பயன்..?