“துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் கொண்டு” தீமைகளை மாற்றியமைத்து விடலாம்

“துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் கொண்டு” தீமைகளை மாற்றியமைத்து விடலாம்

 

நம்முடைய மனித வாழ்க்கையில் பிறர்படும் கோப குணத்தினால் வரும் கார உணர்ச்சிகளையும்… வேதனை உணர்ச்சிகளையும் சுவாசிக்கப்படும் பொழுது எதிர் நிலையாகி…
1.நம்முடைய மன நிலைகள் அதனால் மாறுகின்றது.
2.அப்போது உடலிலும்… நாம் உணவாக உட்கொண்டதை ஜீரணிக்கும் சக்தி இழக்கப்படுகின்றது.
3.நம் உடலில் எது அதிகமோ அதற்கும் இதற்கும் இந்தப் போராட்டங்கள் வருகின்றது.

இதைப் போன்று இயற்கை நியதிகள் வருவதனால் இதனால் ஏற்படும் விளைவுகளில் இருந்து நாம் தப்ப வேண்டும் என்றால் வேதனைப்படும் சொல்களையோ வேதனைப்படும் உணர்ச்சிகளையோ சுவாசிக்க நேரும் போதெல்லாம் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்… அந்த உணர்வுகள் என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.

என் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று எண்ணுங்கள்… என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

கண்ணின் நினைவு எவரை உற்றுப் பார்த்து அது பதிவானதோ அந்த உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் அதிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று இணைத்து விட்டு அடுத்து
1.அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி இந்த உணர்வின் தன்மையானால்
2.அவன் செய்த வேதனை உணர்வை அடக்கி அந்த வேதனையைத் தனக்குள் வளர்க்காதபடி
3.பகைமை நமக்குள் வளர்க்காதபடி அந்த வீரிய உணர்வு தடுக்கப்பட்டு நல்ல உணர்வுகளாக நமக்குள் மாற்றிவிடலாம்.

ஆக இது எல்லாம் ஞானிகள் காட்டியது. சிறிது காலம் சிரமமாக இருக்கும்.. பழகிக் கொண்டால் எளிதில் கிடைக்கும்.

உதாரணமாக… ஒரு தையல் மிஷினில் தைப்பவர் போன்று நாமும் இலேசாகத் தைத்து விடலாம் என்று எண்ணினால்… உடனே முடியுமா…?

அவர் நம்மிடம் பேசிக் கொண்டே நேராக அழகாகத் தைத்து விடுவார் இந்த உணர்வின் இயக்கம் சீராக இருக்கும். நாம் கூர்மையாகப் பார்த்து செயல் செய்தாலும் அது எங்கே கோணல் மணலாக நெளிந்து போகும்.

ஆகவே தியானத்தைச் சிறிது காலம் சீராகப் பழகிக் கொண்டால் வாழ்க்கையில் எதிர் நிலை வந்தால் டக்… என்று அதை மாற்றிவிடும்.

இன்று கம்ப்யூட்டர் மூலமாகப் பல நிலைகளை இயக்குகின்றார்கள். அதிலே தவறு வந்துவிட்டால்
1.அது ஏன் வந்தது…? என்று உடனே அதை சரி செய்வதற்காக “மாற்று அழுத்தங்களை” அங்கே கொடுத்து வைத்திருக்கின்றார்கள்.
2.இந்த மாற்று அழுத்தம் வந்தவுடன் அந்தத் தவறை மாற்றி விட்டு மறுபடியும் அதைச் சீராக்குகின்றது.
3.அதாவது… அதைக் காட்டிலும் அழுத்தமான உணர்வு கொண்டு அழித்துவிட்டு அந்தத் தவறை மாற்றி நல்லதைப் பதிவு செய்கின்றார்கள்,

நாம் பேப்பரிலே எழுதும் போது தவறானால் அதை அழிக்கின்றோம். ஆனால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் எனும் முறைப்படி கம்ப்யூட்டர் இயங்குகின்றது ஒரு பொருளின் ரூபம் வரும்பொழுது அழுத்தத்தின் தன்மை கொண்டு சீராக வரவில்லை என்றால் உடனே அழுத்தத்தை மாற்றி… வேண்டிய உணர்வுக்கொப்பச் சீராகக் கொண்டு வருகின்றார்கள்.

கெமிக்கல் கலந்த உணர்வுகளில் அந்த உணர்வின் தன்மை அழுத்தம் எதுவோ மாற்றுகின்றது. விளக்குகள் எப்படிச் சிறிதாகவும் பெரிதாகவும் எரிகின்றதோ அதைப் போல் அந்த எலக்ட்ரானிக்காக மாற்றி இந்த ஒளியின் நிலைகளை உருவாக்குகின்றார். அப்போது எழுத்தின் வடிவம் வருகின்றது விஞ்ஞானி இப்படிச் செய்கின்றான்.

இதைப் போன்று தான் நாம் கண் கொண்டு பார்த்த வேதனை உணர்வுகள் நல்ல உணர்வுகளுடன் அது கலந்து எலக்ட்ரானிக்காக மாற்றி இதை அழித்து அதன் உணர்வைக் கொண்டு வருகிறது.
1.ஆனால் நம்முடைய நினைவைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி அந்த அழுத்தத்தைக் கொண்டு வந்தால்
2.அவன் செய்த வேதனையை மாற்றி தெளிந்த உணர்வு கொண்டு நம்மைத் தெளிவாக்கும்.

நம் உயிரும் எலக்ட்ரிக் தான்… நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக் விஞ்ஞானிகள் இதை நிரூபித்துக் காட்டுகின்றார்கள்.

அன்று அகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை அண்டத்திலே பாய்ச்சினன் தன் உடலின் உணர்வுகளை அறிந்தான். அந்த உணர்வுக்கொப்ப எண்ணத்தை வளர்த்தான். அதன் உனர்வின் ஆக்கங்கள் கோள்களின் நிலையும் அகண்ட அண்டத்தையும் அறிந்தான் அகஸ்தியன்.

அந்த உணர்வின் தன்மை அவனுக்குள் விளைந்தது நமக்கு முன் அந்தச் சக்திகள் காற்றிலே பரவி உள்ளது.
1.நமது குருநாதர் அதைக் கண்டார்… தனக்குள் பெற்றார்.
2.அதை எனக்குள் பதிவாக்கினார் இதை நினைவு கொள் என்றார் அதன் வழி நீ கடைப்பிடி என்று சொன்னார்
3.அதன் வழி அறிந்து தான் உங்களிடம் இப்பொழுது பேசுகின்றேன்.
4.கல்வியால் கற்றுணரவில்லை எழுத்து வடிவில் நான் பார்க்கவில்லை
5.குரு காட்டிய உணர்வைப் பதிவாக்கினேன் நினைவு கொண்டேன் அறிய முடிகின்றது அதைத்தான் இப்பொழுது உங்களிடம் சொல்கிறேன்.

இந்த உணர்வினை நீங்கள் பதிவாக்கி விட்டால் நினைவு கொண்டால் அருள் ஞானிகள் பெற்ற உணர்வை நீங்களும் பெறலாம்… உங்களுக்குள் வரும் இருளை மாற்றி அமைக்கும் சக்தி பெறுவீர்கள்.

இவ்வாறு எதை நீங்கள் மாற்றி அமைக்கின்றீர்களோ
1.அந்த உயர்ந்த சக்தி உள் நின்று கடவுளாக
2.தீமைகளை நீக்கிடும் உணர்ச்சிகளை அது ஊட்டுகின்றது.

ஒரு நிலை கொண்ட ஜெபத்தினால் ஒன்றினால் மட்டும்தான் நல்வழி கொண்டிட முடியுமப்பா

ஒரு நிலை கொண்ட ஜெபத்தினால் ஒன்றினால் மட்டும்தான் நல்வழி கொண்டிட முடியுமப்பா

 

எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி எடுக்கும் சுவாசத்தினால் இவ்வுடல் என்ற பிம்பத்தை எச்செயலுக்கும் உகந்ததென உட்படுத்தலாம். எண்ணத்தை ஒரு நிலைகொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால் இவ்வுடல் என்ற பிம்பமும் இக்காற்றுடன் காற்றாய் படர்ந்திடும் சக்தியைப் பெறலாம்.

உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒரு நிலைப்பட வேண்டும்.
1.அந்நிலையில் இவ்வுடலை எந்நிலையில் வருத்தினாலும் அவ்வுடலுக்கு உணர்வு இராது
2.எல்லா உயிரணுக்களும் ஒருநிலைப்பட்டுத் “தியானத்தில் உள்ள நிலையில்” இவ்வுடல் என்ற பிம்பம் ஜீவனற்ற பிம்ப நிலை கொள்கின்றது.

அந்நிலையில் அவ்வுடலுக்கு உணரும் சக்தி தடைப்பட்டுவிடுகின்றது. ஒரு நிலைகொண்ட ஜெப நிலையுடன் உள்ள உடலை, அவ் உடலிலுள்ள உறுப்புக்களில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எவ் அறுவை சிகிச்சைகளையும் போதை நிலைப்படுத்திச் செயலாக்காமல் செய்திடலாம்.

அவ்வுடலில் இருந்தே நீரிலும் நடக்கலாம்.. அமரலாம்.. உறங்கலாம், நாம் கனவில் காணும் நிலை போன்று பறக்கவும் செய்யலாம். அவ்வுடலில் பின்னப்படாவண்ணம் எச்செயலையும் அவ்வுடல் தாங்கிடும்.

இவ்வுடல் என்ற பிம்பம் அவ்வுயிராத்மாவிற்குச் சொந்தம்.
1.அவ்வுயிராத்மாவின் ஆணைப்படித்தான் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் செயல் கொள்கின்றன.
2.அவ்வுயிராத்மாவின் ஜீவனே இவ்வெண்ணத்தில்தான் செயல் கொள்கின்றது.
3.இவ்வெண்ணமே நாம் எடுக்கும் சுவாசத்தினால்தான்… நம் உயிராத்மாவை நிலைக்கச் செய்கின்றது என்பதனை உணர்ந்து
4.நம் எண்ணத்தினால் ஒரு நிலை கொண்டு ஜெபம் பெறும் நிலையில் நாம் எடுக்கும் சுவாசம் இருந்திடல் வேண்டும்.

எம் மோதலின் நிலையையும் நம் எண்ணத்தில் பற்றாமல் எண்ணத்தைப் பற்றற்றதாக்கி ஒரு நிலை கொண்ட ஜெபம் எடுத்திடல் வேண்டும். நம்மை எதிர்நோக்கி வரும் எவ்வெண்ணத்தின் பற்றுதலையும் நம் எண்ணமுடன் ஒரு நிலை கொண்டிடல் வேண்டும்.

தியானத்தில் ஒரு நிலை கொண்டவரின் இல்லத்தையும்… அவர்களின் உடலையும்… அவர்கள் சார்ந்து செய்யும் எத்தொழிலையும்… எத்தடங்கலும் இன்றி நல் நிலையாய்ச் செயல் கொண்டிடும்.

எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்ந்திடுங்கால் நமக்கு நடக்கும் எந்நிலையும் சிதறுண்ட நிலையில்தான் நம்மைத் தாக்கும்.

அன்பு தியானத்தை ஒரு நிலையுடன் வழி பெற்று இன்றைய காலநிலையில் தெரிந்தோ தெரியாமலோ இவ் உலகம் முழுவதுமே ஆத்மீக நெறி உணர்த்தவும் ஆண்டவனை இவர்களின் செயலுக்கு உகந்த பொருளாக்கி இன்றைய அரசியலும் சரி ஆலயங்களும் சரி… பல ஆவிகளின் வசியத் தொடர்பு கொண்டு இவ்வுலகமே ஆடிக்கொண்டுள்ளது.

இவ்வுலகினில் மேலை நாட்டில் ஆயிரம் உடல் ஆத்மாக்களை ஒரு மனித ஆத்மா வசியப்படுத்திச் செயல்படுத்தி வந்த நிலையில்… இதன் நிலை வெளியுலகிற்கு அறியப்பட்டவுடன் அனைத்து ஆத்மாக்களையும் உடலுடன் வசியப்படுத்திட எண்ணியவன்… அவ்வாத்மாவுடன் தன் ஆத்மாவைச் செயல்படுத்திட அனைத்து உடல்களையும் தன் உடலுடன் அழித்து இன்று அவ் ஓர் ஆத்மாவே அதன் வசியத்தில் அது அழித்த அனைத்து ஆத்மாக்களையும் வசியப்படுத்தி… இவ்வுலகத்திலே அதன் நிலையைச் செயல்படுத்திக் கொண்டுள்ளது அவ்வாத்மா.

தலைவனாய் வசியப்படுத்திய அவ்வாத்மா உடலுடன் இருந்திருந்தால் அவன் அழித்த‌ மற்ற உடல் ஆத்மாக்கள் இவன் வசியத்திற்கு வந்திருக்காது.

இன்னும் நமது நாட்டிலேயே உண்மை நிலை வழி நாமம் கொண்ட சில நிலைகள் நடக்கின்றன. ஆவிகளை வசியப்படுத்தி…
1.அதிகார வர்க்கமுள்ளவர்களையும் பொருட்செல்வம் கொண்டவர்களையும் தன் வசியத்திற்கு ஈர்த்து
2.“உண்மை வழி” என்ற போர்வையில் வாழுகின்றனர்.

இந்நிலையெல்லாம் இக்கலியில் வந்தது மட்டுமல்ல. அரசர்கள் ஆண்ட கால நிலை தொட்டே இவ் ஆவி ஆத்மாவின் வசிய நிலை கொண்டுதான் பல ஊடுருவல் வேலையெல்லாம் செய்வித்து… ஒரு நாட்டுடன் பிற நாடு சண்டையிட்டுப் போர்க்களம் கொண்டு அவ்வாவிகளுக்கு மற்ற ஆத்மாவின் குருதிகளை உணவாக்கிப் பல தேசங்களைப் பிடித்தார்கள்.

அவ்வாவிகளின் எண்ணமும் வெறி உணர்வு கொண்ட ஆக்ரோஷ நிலைப்பட்டு… வழி வழியாய் எத்தீய செயலுக்கும் எண்ணத்தில் பயமில்லாமல் இன்றைய பல ஆத்மாக்கள் செயல் கொள்கின்றன.

எவ்வுயிரணுவும் தான் அழிவதில்லையே..! இன்றைய உலகமும் இவ்வுலகினில் உள்ள அரசியல் நிலைகளும் ஆவியின் பிடியில் சிக்குண்ட நிலையில்
1.நமது ஆத்மாவை நாம் ஒரு நிலை கொண்ட ஜெப சக்தியில் சலிப்பு, கோபம், குரோதம் இப்படி எண்ணத்தை வளர்க்காமல்
2.நமது ஆத்மாவை ஒருநிலை கொண்ட ஜெபத்தினால் ஒன்றினால் மட்டும்தான் நல்வழி கொண்டிட முடியுமப்பா.

மனிதனின் வாழ்க்கையில் இனி எங்கே செல்வது…?

மனிதனின் வாழ்க்கையில் இனி எங்கே செல்வது…?

 

அகஸ்தியன் அவன் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடல் உறுப்புகள் மாறியது… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்றான்… துருவ நட்சத்திரமாக உள்ளான்.

மின்னல்கள் வருகிறது என்றால்
1.வெள்ளிக்கோள் அதை எப்படி எடுத்துக் கொள்கின்றதோ அதைப் போல்
2.மின் கதிர்களானால் அந்த ஒளியின் தன்மையை அகஸ்தியன் கவரும் போது
3.அவன்ன் உடலில் உள்ள அணுக்களை உயிரைப் போல பரிமணம் ஆகின்றது.
4.அணுக்கள் பரிமாணமாகப்படும் பொழுது விஷத்தின் தன்மை உமிழ்த்தி விஷத்தையே ஒளியாக மாற்றம் திறன் வருகின்றது.

பாம்பு தனக்குள் விஷத்தின் தன்மை எடுத்துக் கொள்கின்றது. அந்த விஷம் சேமிப்பாகும் போது நாளடைவில் வைரமாக மாறுகின்றது… நாகரத்தினமாக மாறுகின்றது.

ஆக… விஷத்தின் ஆற்றலானாலும் அந்த வைரத்தைத் தட்டிச் சாப்பிட்டால் ஆளை உடனே கொன்றுவிடும். ஆனால் வெளிச்சம் தருகின்றது.

இதைப்போல தான் விஷத்தை ஒடுக்கும் உணர்வு பெற்ற ஒளியின் தன்மை ஆன பின்
1.துருவ நட்சத்திரம் எத்தகைய விஷத்தின் தன்மை வந்தாலும் தனக்குள் அதை ஒளியாக மாற்றுகின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தில் “ஒரு துளி அளவு நாம் நுகரும் தன்மை வந்தால்” விஷத்தினைக் கொல்கிறது.
3.அந்த விஷத்தின் தன்மையைக் கொல்லும் நிலை வரும் போது தீமையை அடக்கித் தனக்குள் ஒளியின் உணர்வாக மாற்றுகின்றது.

இந்தக் காற்றிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகாலை நீங்கள் கவர்ந்தால் உங்களுக்குள் வரும் விஷத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்… அதை ஒளியாக மாற்றிக் கொண்டேயிருக்கும்.

விஷத்தைப் பாய்ச்சி உணவாக உட்கொள்ளும் பாம்பினம் அந்த விஷம் அதிகரித்து உறையப்படும் பொழுது நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப்போல தான் அகஸ்தியன் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் ஆனது. அந்த நிலையை நாமும் பெறச் செய்தல் வேண்டும்.

உங்களுக்கு யாம் இதை உபதேசித்தது வீண் அல்ல…!

எனக்குத் துரோகம் செய்தான்… அவன் உருப்படுவானா பாவி…! என்று அமெரிக்காவில் இருந்து நினைத்தாலும்… இங்கே கார் ஓட்டிக் கொண்டிருந்தால் சிந்தனை இழந்து… விபத்து ஆகின்றது.

உணவு உட்கொண்டு கொண்டிருந்தால் துரோகம் செய்தான் பாவி என்று எண்ணினால் புரை ஓடுகின்றது. ஒரு பருக்கை சுவாசிக்கும் சுவாசப் பையிற்குள் சென்றால் மரணமே ஏற்பட்டு விடும்.

இதைப்போல நாமும் துரோகம் செய்தான் என்று எண்ணினால் நமக்கும் நல்லது செய்யவிடாதபடி தடையாகிறது. அங்கேயும் இடைஞ்சலாகிறது. ஒருவருக்கொருவர் இப்படி இரண்டு பேருமே பாழாகும் நிலை வருகின்றது.

அதைப் போன்று தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
1.நான் பதிவு செய்ததை நீங்கள் எண்ணி ஏங்கி .எடுத்தால்
2.உங்களுக்குள் அந்தச் சக்தி… இயக்கச் சக்தியாக மாறி
3.உங்களையும் ஒளியின் சிலராக மாற்றும்.

“அழுக்குப்படிகிறதே” என்று அஞ்சி ஒதுங்கிடலாகாது… அழுக்கை அகற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும்

“அழுக்குப்படிகிறதே” என்று அஞ்சி ஒதுங்கிடலாகாது… அழுக்கை அகற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும்

 

நம் உடலைத் தினமும் நீர் விட்டுக் குளித்துத் தூய்மைப்படுத்துகின்றோம். நம் உடல் தூய்மையாய் உள்ளதென்று நாம் வெளியில் செல்லாமல் இருக்க முடியுமா…?
1.வெளி உலகில் கலந்துள்ள காற்றும் மண்ணும் நம் மேல் படத்தான் செய்யும்
2.மீண்டும் மீண்டும் இவ்வுடலைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

புற உலகின் அழுக்கு நம் மீது வேண்டும் என்றே படிகிறதென்று நாம் வெளியில் செல்லாமலே இருக்க முடியுமா…?

அதைப்போல் நம் எண்ணம் ஒரு நேர்கோடான சத்தியச் செயலைச் சார்ந்துள்ள நிலையில்… நம்மைச் சுற்றியுள்ள மற்ற ஆத்மாக்களின் நிலையும் நம்மை ஒத்திருந்தால்தான் நாம் அதனுடன் கலந்து வாழ்ந்திட முடியும்.

1.தீய பழக்க வழக்கம் கொண்டவனை விட்டு நாம் விலகித்தான் வாழ வேண்டும் என்று நம் எண்ணத்தில் எண்ணினோமானால்
2.நம் எண்ணத்தில் உள்ள அச் சத்திய நேர்கோட்டின் பிடிக்கு நாம் அடிமைப்பட்டு
3.”நான்” (நான் ஒழுக்கமானவன்) என்ற வைராக்கிய ஆத்மாவாகத்தான் நாம் இருந்திட முடியும்.

நாம் பெற்ற சக்தியை நமக்கே சொந்தமாக்கி நம் ஆத்மாவிற்கு எத்தனை செல்வங்கள் சேமித்தாலும் அதுவும் “நான்” என்ற சக்தியாகத்தான் இருந்திடுமப்பா.

1.நான்… எனது… என்ற அணுவளவு எண்ணத்தில் பிற பேராசை பற்று இருந்தாலும்
2.ஆண்டவனைப் பூஜிக்கும் பற்றானாலும் சரி
3.தான் கற்ற வித்தையின் பலனை எண்ணினாலும் சரி… அந்த நிலை “அந்த நானாகிவிடுகின்றது…”

பல ஆத்மாக்கள் இயற்கையிலேயே பல உன்னத சக்தியைப் பெற்று வாழ்கின்றனர்… மருத்துவம், விஞ்ஞானம், இயல், இசை, நாடகம், ஓவியம், விவசாயம் எல்லாவற்றிற்கும் மேன்மையான சமையல் திறன்.

இப்படி ஒவ்வோர் ஆத்மாவும் இயற்கையிலேயே உன்னத சக்தி பெற்றிருந்தாலும் அச் சக்தியைத் தன் நலம் நாடாமல் பொருள் ஆசையின் நிலையில் அத் திறனை வளரவிட்டால் “நான் என்ற நிலையில்தான்… அவர்கள் பெற்ற பயன் சிக்குண்டு விடுகின்றது…!”

பொருள் இல்லாவிட்டால் எப்படி ஜீவிதம் கொள்ள முடியும்…? என்ற வினா எழும்பலாம்.

பொதுவான நிலைப்படுத்தி அவரவர்கள் பெற்ற பயனைச் செயலாக்கித் தேவை என்ற அடிப்படையில் ஜீவிதத்திற்குகந்த பொருள் நிலை பெற்றுத்தான் அஜ்ஜீவன் நடக்கும்… உண்மைதான்…!

ஆனால்… அதற்காக ஆண்டவன் அருளில் பெற்ற அதி பொக்கிஷ செயல் திறமையை நாம் பேராசைக்கு அடிமைப்பட்டு உழலும் காலமாய் இன்றைய கால நிலை உள்ளது.

தேவை என்ற அடிப்படையில் பொருள் சேமிக்கலாம்.
1.அதி தேவையாக்கி நம்மையே நாம் அதற்கு அடிமைப்பட்டு சேமிக்கும் பொருளினால்தான்
2.இன்றைய இவ்வுலகமே இப்பேராசைப் பிடிக்கு அடிமை கொண்டு வாழ்கின்றது.

ஆத்மீக நெறிக்கு வருபவர்களும் இச் சந்நியாசிக் கோலத்தை மனிதர்களுக்கு உணர்த்திக் குடும்பப் பற்றையும் மற்ற எல்லா ஆசை நிலையையும் துறந்துதான் ஆத்மீக நெறிக்கு வர வேண்டும் என்பதனை ஒரு சாரார் உணர்த்திவிட்டனர்.

இன்னும் ஒரு சாரார் அப்பக்தியை பொருளாக்கி வளரவிட்டு விட்டனர்.

இன்னும் ஒரு சாரார் தனக்கு அனைத்து நிலைகளும் தெரிந்துள்ளதாகவும் அவ் ஆண்டவனே இவர்களின் மூலமாய்த்தான் பிறருக்கு அச்சக்தியை அளிப்பதாகவும் எண்ணத்தில் கொண்டு மடாலயம் கட்டி மதகுருக்களாய் அனைவரையும் வணங்கச் செய்கின்றனர்.

எல்லா மதத்திலும் இந்நிலை தான்.

உலகுடன் பல காலமாய் எண்ணத்துடனே வளர்ச்சியின் பல நிலைகள் வந்துவிட்டன. இதிலிருந்து எல்லாம் நமது ஆத்மாவை…
1.எல்லாமில் எல்லாமாய் அவன் அருள் எப்படிக் கலந்துள்ளதோ அதைப் போன்றே
2.எல்லாவற்றுடனும் எல்லாமாய்த் தான் நாம் நம் ஆத்மாவைத் தூய்மைப்படுத்திடல் வேண்டும்.
3.அழுக்குப்படிகிறதே என்று அஞ்சி ஒதுங்கிடலாகாது. அழுக்கை அகற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

மண்ணில் இருந்து கரும்பை எடுத்து அதனைச் சாறாக்கும் நிலையில் அதன் நிறமும் அதன் மணமும் கண்ணுற்றால் “இதையா” நாம் உண்ணுகின்றோம் என்று எண்ணுகின்றோம்.

அச்சாறே அதனுடன் சில கலவையை ஏற்றிய பிறகு தூய கற்கண்டாய் உள்ள நிலையில் அதன் வெண்மையும் சுவையும் கண்டு நாம் அருவருப்பதில்லை.

அதைப்போல் உலகத்துடன் ஒன்றியுள்ள நாம் பிற ஆத்மாக்களின் தீய எண்ணத்தைக் கண்டு ஒதுங்கிடலாகாது. கரும்புச்சாறு பார்க்க அருவருப்பாய் உள்ளது என்று ஒதுக்கிவிட்டால் கற்கண்டு கிடைக்குமா…?

மற்ற ஆத்மாக்களையும் நம் நிலையினால் தூய்மைப்படுத்த வேண்டுமேயன்றி எதையுமே வெறுத்து ஒதுக்குதலாகாது.

ஆதவனுடன் ஆதவனாய் ஜோதி நிலை பெற்றுக் கலந்திட
1.அவ்வாதவன் எப்படி நன்மை தீமை கொண்டு அவ்வொளியைப் பாய்ச்சவில்லையோ அதைப்போல்
2.உலகுடன் கலந்துள்ள பல நிலை கொண்ட எல்லாமில் எல்லாமாய்த்தான் நம் ஒளியையும் நாம் பெறல் வேண்டும்.

வாழ்க்கையுடன் இருந்திட்ட பெரியோர்கள் தான் இன்று அவ்வொளியுடன் ஒளியாய்க் கலந்து ஆண்டவனாய் உள்ளார்கள் என்பதனை யார் வினா எழுப்பினாலும் அவர்களுக்கு விடையளிக்கப்படும்.

குடும்பப் பற்றிலிருந்தும் உலகப் பற்றிலிருந்தும் விலகி இமயமலைச் சாரலுக்குச் சென்று ஜெபம் இருக்கும் ஆத்மாவானாலும் சரி…
1.அவ் ஆத்மாவும் உடலைவிட்டுப் பிரிந்த பிறகு மறுபடியும் இவ்வுலகில் பிறந்து வாழத்தான் வேண்டும்.
2.சித்தனாகவும் முனிவனாகவும் சப்தரிஷியாகவும் எந்நிலையும் பெற முடிந்திடாது என்பதனை இங்கே வெளிப்படுத்துகிறேன்.

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும்… நம் எண்ணமுடன் கூடிய சுவாசத்தை எடுக்கும் முறையில் இருந்து தான்… நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் அமில சக்தி கூடுகின்றது.

ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட எண்ணத்தின் மோதலில் இருந்தும் நாம் தப்பி நல் உணர்வையே நம் ஆத்மா சேமிக்கும் அமிலமாக நம்மை நாம் பக்குவப்படுத்திப் பல ஆத்மாக்களை அப்பக்குவ ஜெபத்திற்கு ஈர்த்துச் செயல்படுத்திட வேண்டும்.

இதை உணர்ந்து…
1.நான் என்ற தனித்த நிலையை விட்டு
2.எல்லாமுடனும் எல்லாமாய் நம் ஆத்மாவும் ஒளிரும் வழிமுறை பெற்று எல்லாமே ஒளிரச் செய்ய வேண்டும்.

மெய் ஞானத்தின் வழிப்படித் தான் எதையுமே நல்லதாக்க முடியும்

மெய் ஞானத்தின் வழிப்படித் தான் எதையுமே நல்லதாக்க முடியும்

 

சிலர் கடுமையான மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அதன் வழியில் “சுவாசிக்கின்றேன்…” என்று உயர் அழுத்தத்தைக் கொடுத்தால் என்ன ஆகும்…?
1.சுவாசப் பையில் காற்று நிரப்பப்படுகிறது.
2.அங்கே வடிகட்டத் தவறும் உணர்வுகள் சுவாசப் பையில் சேர்ந்தால் என்ன நடக்கும்…?
3.ஆதிலே அழுக்குகள் சேரும். நாளடைவில்… இருமல் வரும்.

அதே அழுத்தத்தின் உணர்வு கொண்டு அடுத்து நரம்பு மண்டலங்களில் சரம் என்று சொல்வார்கள். உணர்வை அடக்கி நரம்புகளில் பாய்ச்சுவார்கள் சரத்தைப் போட்டு உடலிலே பழகியவர்களிடம் பார்த்தோம் என்றால் தம் கட்டி நரம்புகளில் ஏற்றுவார்கள்… பார்த்தால் வீரியமாக இருக்கும்.

சரம் என்ற நிலையில் மற்றதை அறியப் பயன்படுத்துவார்கள் அதே சமயத்தில் என்ன செய்யும்…?
1.நரம்புகளில் எடுத்துப் பழகிய பின் கடைசியில்
2.நரம்பெல்லாம் வலிக்கின்றது… கை கால் வலிக்கின்றது குடைகின்றது என்று சொல்வார்கள்.

இது எல்லாம் சரத்தைப் போட்டுத் தனக்குள் கற்றுக் கொண்டேன் என்று பெருமை பேசுவார்கள். சில அசுர உணர்வின் தன்மை வரப்படும் பொழுது அழுத்தத்தின் தன்மை ஆகி “வாய்வு” என்ற நிலைகள் உருவாகும்.

வாய்வு என்ற நிலைகள் உருவாக்கப்படும் பொழுது தன் எண்ணத்தின் அழுத்தம் வரும்பொழுது ஏரோபிளேன் எப்படி உணர்வின் அழுத்தம் கொண்டு மற்றதுடன் மோதி அதை எப்படி மேலே மிதக்கச் செய்கின்றதோ மிதப்பார்கள். இந்த உணர்வின் தன்மைக்குச் சில ஆவியின் உணர்வுகள் அதற்கு உண்டு.

அந்த உணர்வின் தன்மை அழுத்தமாகி அதைப் பெருக்கப்படும் பொழுது
1.சம்மணம் கட்டி இருப்பார்கள்… அப்படியே மிதக்க ஆரம்பிப்பார்கள்… இதை ஒரு பெரிய வித்தையாகக் காட்டுவார்கள்.
2.சில வேலைகளைச் செய்து பெரிய அற்புதத்தைக் கண்டேன் என்றும் அவர்கள் சொல்வார்கள். மேலே வரையும் மிதந்து காட்டுவார்கள்.

இத்தகைய ஆவியின் தன்மை பெறுவதற்கு ஒரு மந்திரம் உண்டு அந்த மந்திரத்தை நுகர்ந்தால் உணர்வின் தன்மை அழுத்தமாகும் பொழுது தன் உடலில் இருந்து வரக்கூடியதற்கும் இதற்கும் மாற்றமாகித் “தூக்கி நிறுத்தும்…”

ஆஹா… மிதக்கின்றார்… பறக்கின்றார்… என்ற நிலை வரும். இது போன்ற பல அற்புதங்களையும் செய்யலாம்

இந்த உடலிலே இப்படிப் பல நிலைகள் செய்தாலும் நாம் எந்த உணர்வின் தன்மை சேர்த்துக் கொண்டோமோ இதையெல்லாம் விளைய வைத்து வந்தபின் என்ன செய்யும்…?

ஆவியின் தன்மைய அடையச் செய்து மற்றொன்றுக்குள் ஊடுருவி இதே தீமைகளைச் செய்யச் செய்யும். அதே போன்று வரிசைப்படுத்திச் செல்லும்.

மனிதனாகப் பிறந்த பின் உடலில் உள்ள உறுப்புகள் வைத்திய ரீதியிலும் சரி மற்ற எந்த நிலைகளிலும் இதைக் கண்டு கொண்டு பல நிலைகளை விஞ்ஞான அறிவால் செயல்படுத்துகின்றனர்.

மெய்ஞான அறிவால்… ஓர் தாவர இனம் விஷத்தை முறிக்கின்றது நல்ல உணர்வை ஊட்டுகின்றது என்று காண்கின்றனர்.

அதைக் கண்டுணர்ந்து கலவைகளாக மருந்தாகக் கொடுக்கப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய சில அணுக்களை மாற்றி இரத்தத்தில் கலந்த பின் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு நல்ல வீரியம் ஊட்டுகின்றது… நல்ம் பெறச் செய்கிறது.

அதனுடைய உணர்வுகள் மீண்டும் அதற்குள் சேர்த்து மாற்றிக் கொண்டே இருக்கலாம்.

உதாரணமாக ஒரு வேதனைப்படுபவரைக் கண் கொண்டு உற்றுப் பார்த்தால் அந்த உணர்வு எலும்புக்குள் ஊழ் வினை என்ற வித்தாகி விடுகின்றது.

வயலிலே களைகள் முளைத்தால்… நீக்கினால் மீண்டும் அந்தக் களைகள் வருகின்றது. இதைப் போன்று நமது வாழ்க்கையில் தீமை என்று உணர்வை உற்றுப் பார்க்கும் பொழுது ஊழ்வினையாக வித்தாகி விடுகிறது.

வித்தாக ஆன பின் அதன் உணர்ச்சியைத் தூண்டிச் சுவாசிக்க நேரும். அந்த உணர்ச்சிக்கொப்ப எண்ணங்கள் வருகின்றது.
1.இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கப்படுகிறது.
2.கலந்த பின் மீண்டும் அந்த அணுக்களுக்குள் சேர்க்கப்பட்டு தீய விளைவுகள் விளைகின்றது.

இதை மாற்றுவதற்காக வைத்திய ரீதியிலே ஆங்கில மருத்துவத்தில் இதற்கு இரண்டையும் கலவை ஆக்கி உணவு வழி மாத்திரைகளாகச் செலுத்துகின்றனர். இன்ஜெக்ஷன் செய்து இரத்தத்திலும் கலக்கச் செய்கின்றனர். நல்ல சத்துக்களை அணுக்களுக்குக் கிடைக்கச் செய்து மாற்றியமைக்கின்றனர்

அந்த மருந்து ஊசி மூலமாகச் செலுத்தப்பட்டு இரத்தத்திலே கலந்த அளவிற்குத் தான் சிறிது நேரம் சரியாக இருக்கிறது. அது இல்லை என்றால் மீண்டும் அதனுடைய வேலை அதிகமாகிவிடும்.
1.நோய் தீர்ந்துவிட்டது என்று எண்ணலாம்… சில காலமான பின் அந்த விஷத் தன்மை வேறு ஒரு நோயாக வருகின்றது.
2.பின் அந்த நோய்க்கு மீண்டும் மாற்றுக் கொடுத்து இந்த உடல் இருக்கும் மாற்றிக் கொண்டே வர வேண்டியது தான்…!

முழுமையாகத் தப்ப முடியாது.

தியானமும் ஞானமும் நாம் பெறுவது “நமது ஆத்மாவிற்குத்தான்…”

தியானமும் ஞானமும் நாம் பெறுவது “நமது ஆத்மாவிற்குத்தான்…”

 

இவ்வுலகமே வேடிக்கையான உலகம்தான். உலகம் என்பது இவ்வுலகின் ஜீவ ஆத்மாக்கள் தான். இக்காற்றைச் சுவாசமாய் ஈர்க்கும் ஒவ்வோர் ஆத்மாவுக்குமே இக்காற்று எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் சுவாசத்தினாலேயே அங்குள்ள நிலையினை உணர்த்திட முடியும்.

சுழலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அம் மண்டலத்தின் உருவ அளவைக் கொண்டு அம்மண்டலம் ஈர்த்து வெளிப்படுத்தும் காற்று மண்டலம் (அடர்ந்த காற்று மண்டலம்) அம் மண்டலத்தின் அளவைப் பொறுத்து உள்ளது.

நட்சத்திர மண்டலங்களுக்கும் அதன் சுழற்சியைக் கொண்டுள்ள அதனைச் சுற்றியுள்ள அதன் சுவாச நிலை கொண்ட காலம் உண்டு. ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் அதன் அமிலக் காற்று மண்டலமுண்டு.

நம் பூமியிலிருந்து பத்து மைல் சுற்றளவில் கொண்டுள்ள கூடவும் குறையவும் நம் பூமிக்குகந்த காற்று மண்டலமும் உண்டு. அனைத்திற்கும் பொதுவான சூனிய மண்டலம் என்று உணர்த்துகிறார்களே அங்கும் உண்டு காற்று… அதன் தன்மை வேறு.

மண்டலங்கள் வெளிப்படுத்தும் காற்று மண்டலத்தின் தன்மை வேறு. இப்பூமியில் பல இயற்கைத் தாதுப் பொருட்கள் தானாகவே வளர்கின்றன. இத்தாதுப்பொருள் வளர அதற்கு மூலப்பொருளாய் இரசமணி ஒன்று வளர்ந்தால்தான் பல தாதுப்பொருள்கள் வளர முடியும்.

இவ் இரசமணியின் சக்தி நிலை மனித ஜீவ ஆத்மாக்களுக்கும் சிங்கத்திற்கும், நாய், நரி, பூனை இவற்றிற்கும் வாழை மரத்திற்கும் இந்நிலை அதிகம்.

இம் மனித ஆத்மாவினால் இயற்கையில் வளரும் தாதுப் பொருளையே செயற்கையில் இவ் இரசமணியின் சேர்க்கையில் சில குறிப்பிட்ட தாவரங்களின் இலையின் சாறு எடுத்து இவ் இரசமணியின் கலவையுடன் இவ் எண்ணத்தை அவ்வமில சக்தியுடன் ஜெபப்படுத்தினால் எவ்வுலோகத்தையும் பூமியிலிருந்து எடுக்காமலும் பணம் தந்து வாங்காமலும் செய்விக்க முடியும்.

தாவரங்களின் நாமம் மறைக்கப்பட்டதின் நிலை மனித ஆத்மாக்கள் இப்பேராசையில் சிக்கிடாமல் தன் ஆத்மாவையே தன் ஆத்மாவுடன் உடலுடன் கலந்துள்ள இரசமணியின் ஈர்ப்பினால் நம் எண்ணம் தங்கமாகவும் நம் செயல் வைரமாகவும் ஆக்கிடலாம்.
1.நம்முள்ளையே அனைத்துப் புதையலும் உள்ளன.
2.அழியாச் செல்வ புதையல் இச்சக்தியை உணர்ந்து நம் சக்தியை வளர விடும் சத்தியமாக வாழ்ந்திடுங்களப்பா.

தியான முறையும் ஞான முறையும் பெற்றிட நம்மை நாம் பல பக்குவ நிலைப்படுத்தி செயல் கொண்டு “தியானமும், ஞானமும் நாம் பெறுவது நமது ஆத்மாவிற்குத்தான்…”

1.நம் எண்ணம் செயல் எல்லாமே நமக்குச் சாதகமாக
2.மற்றைய நிலையிலிருந்து தப்பி ஒதுங்கிப் பெறுவதல்ல தியானமும் ஞானமும்.
3.நம் எண்ணம் செயல் உடல் அனைத்துமே சத்தியம் கொண்டு தூய்மையுடன் நாம் உள்ளோம்
4.மற்றவர்களுக்கு அந்நிலை தெரியவில்லை என்று எண்ணினாலும் நமக்கு அந் ‘நான்’ என்ற நிலை வந்து விடுகிறது.

நம்முள் பல நற்சக்திகளையே ஈர்த்துச் செயலாக்கி வருகின்றோம் என்ற நிலையில் நாம் இருந்தாலும்
1.நம்மைச் சுற்றியுள்ள ஆத்மாக்களின் நிலையுடன்
2.நம்மை நாம் ஒன்றித்தான் செயல் கொண்டிடல் முடியும்.

பூமியைக் கல்கியில் செழிக்கச் செய்யத்தான் இன்றைய சித்தர்களின் நிலையும் சப்தரிஷியின் நிலையும் உள்ளன

பூமியைக் கல்கியில் செழிக்கச் செய்யத்தான் இன்றைய சித்தர்களின் நிலையும் சப்தரிஷியின் நிலையும் உள்ளன

 

ஒரு நொடியில் ஜீவிதம் பெற்றுச் சில நிமிடங்கள் வாழ்ந்து மறையும் விட்டில் பூச்சிகளும் உயிராத்மாதான். பல கோடி ஆண்டுகளாய் வாழும் மண்டலமும் (சூரியனும்) ஜீவன் பெற்ற ஜீவ ஆத்மாதான்.

அதனதன் வளர்ச்சியில் அது அது எடுக்கும் சுவாச நிலை கொண்டுதான் நீடித்து வாழும் பக்குவம் கொள்கின்றது.

பல நாட்களாய் நம் உலகம் கலியின் பிடியில் சிக்குண்டிருக்க சத்தியத்தின் சக்தியை உணர்த்தி இன்றைய நிலையில் மீளச்சொல்வதின் பொருளென்ன…? என்ற வினாவும் எழும்பலாம்.

இவ்வுலகிற்காக இப்பூமி நிலைத்துச் செயல் கொண்டிட நல் ஆத்மாக்களின் சக்தி நிலை இருந்தால்தான் இப்பூமி வாழ முடியும்.

இப்பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாய் நற்சக்தியை ஈர்த்து ஞானம் பெற்று
1.இன்று சூட்சுமத்தில் உள்ள அனைத்துச் சித்தர்களுமே
2.இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் அவர்களின் சக்தி நிலையை உயிராத்மாக்களின் நிலையில் உணர்த்தி…
3.நம் பூமியைக் கல்கியில் செழிக்கச் செய்யத்தான் இன்றைய சித்தர்களின் நிலையும் சப்தரிஷியின் நிலையும் உள்ளன.

இக்கலி முடிவதற்குள் இங்குள்ள உயிராத்மாக்களைப் பக்தி என்னும் ஞானப்படுத்தத்தான் இன்று உலகெங்கும் எழுப்பப்படும் கோயில்கள் எல்லாம்.

எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி
1.ஓ…ம் என்ற நாதத்தை உயிரணுவில் கலக்கவிடும் சத்திய நிலையை
2.பக்தி நெறியில் உயிராத்மாக்களுக்கு உணர்த்திடல் வேண்டும்.

தன் ஆத்மாவுக்கு நற்பயன் தேட எவ்வாத்மாவும் செயல் கொண்டிடவில்லை. கொண்டிடவில்லை என்பதன் பொருள் புரியாமல் உள்ளதின் நிலை… பக்தியையே ஜாதகத்தின் வழியில் காணுகின்றனர்.

எதிர்காலம் என்பதனையே இவ்வுலகில் வாழும் இக்குறுகிய கால நிலைக்காகத் தாமடைந்த இவ்வுடல் கொண்ட ஜீவ நிலையைச் சிதறவிட்டு பொருளுக்கும் பதவிக்கும் போற்றலுக்கும் சிக்கித் தனக்குக் கிடைத்த இவ்வாய்ப்பினை நழுவ விட்டே வாழ்கின்றனர்.

நமக்குக் கிடைத்துள்ள இக்கால சந்தர்ப்பம் நம் ஆத்மாவை நற்கதியுடன் கலக்கவிடும் பக்குவ நிலைக்காகத்தான். இன்று நம் உலகினில் பல அரசியலின் தலைவர்கள் தோன்றித் தோன்றிப் பெரும் புகழும் அழிவும் கொண்டெல்லாம் வளர்ந்து வாழ்ந்தனர்.

உலகையே அடிமைப்படுத்தும் அதிகாரப் பதவியில் இருந்து வாழ்ந்தாலும் அவ்வாத்மாவிற்குப் பேராசை நிலையின் அதி பற்றிருந்ததினால்… உடலை விட்டு அவா் அவ்வாத்மா பிரிந்தும் மீண்டும் மீண்டும் பல பிறவிக்குத் தன் ஆசையைப் பூர்த்தி செய்யப் பிறந்து கொண்டே உள்ளது.

திருவள்ளுவர் அரசனாகவும் வாழவில்லை. தன் ஆத்மாவையே கவியாக்கி ஞானசக்திச் சொற்களை உலகிற்கு உணர்த்த ஆசைப்பட்டுச் செயல் கொண்டார்.
1.அவர் ஆத்மா இன்றளவும் அவரின் மனையாளின் ஆத்மாவுடன் ஒன்றியே சூட்சுமம் கொண்டு
2.இன்றும் உலகமே போற்றும் அத் திருக்குறளில் உள்ளார்.
3.அவரின் குறட்பாக்களைப் படிக்கும் ஆத்மாக்களின் எண்ணமுடனே அவரின் எண்ண நிலையும் செயல் கொள்கின்றது.

காற்றேதான் கடவுள். காற்றையே தெய்வமாக்கி நாம் எடுக்கும் சுவாசத்தில் கலக்கவிடுங்கள் என்றெல்லாம் இப்பாடநிலை உணர்த்திய நாள் தொட்டே செப்பி வருகின்றோம்.
1.ஆனால் மனித ஆத்மாக்களுக்கு மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதையும்
2.சர்க்கஸில் ஆடும் கோமாளியின் லீலையில் மகிழவும் தான் பேராவல் உள்ளது.

மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதை மந்திரக்காரன் செய்கிறானே, அதில் உள்ள உண்மை என்ன…? என்று அறியும் நிலை கொண்ட எண்ணமுடையோர் மிகச் சிலர் தான்.

சக்தி கொடுத்தாலும்… ஞானம் கொண்டு அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?

சக்தி கொடுத்தாலும்… ஞானம் கொண்டு அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?

 

குருநாதர் எம்மைப் பல இன்னல்களைப் படச் செய்தார்… எப்படி எல்லாம் சந்தர்ப்பங்கள் உருவாகிறது…? என்று.

சில இடங்களில் மிருகங்கள் வருகிறது என்றால் நான் கையை நீட்டினால் போதும்… அவைகள் கீழே விழுந்து விடும். எனக்குச் சக்தி இருக்கிறது என்று நான் நினைக்க முடியுமா…?

ஒரு பாதையில் என்னைப் போகச் சொல்கின்றார் குருநாதர். யானை வருகின்றது… பார்த்தவுடன் பயம் வருகின்றது… யானை என்னைத் தாக்கிவிடும் என்று நினைக்கின்றேன்.

யானையை நீ தோஸ்து (நண்பன்) பண்ணுடா என்று குருநாதர் சொல்கின்றார். தோஸ்த் பண்ணுவது என்றால் எப்படி…? என்று குருநாதர் சொல்லிக் கொடுத்திருக்கின்றார்.

ஆனால் யானையை பார்த்ததும் பயம் தான் வருகின்றது. எங்கே நான் தோஸ்த் செய்வது…? காதை விடைத்துவிட்டது என்றால் நிச்சயம் அடிக்கும்

ஏனென்றால் நான் வேட்டைக்குப் போய்ப் பழக்கப்பட்டவன். காதை மட்டும் யானை விடைத்து விட்டால் எவ்வளவு தூரத்தில் எப்படி இருந்தாலும் யானை விடாது.

பார்த்துக் கொண்டே இருக்கும்… நாம் நகர்ந்தோம் என்றால் ஓடி வந்து லபக்கு என்று நம்மைப் பிடித்துவிடும்.

இந்த மாதிரி நிலை இருந்ததால்… “யானை என்னை அடித்து விடும்” என்ற பயம் தான் அப்பொழுது எனக்கு வந்தது. குருநாதரை நினைக்கின்றேன்… சாமி…! என்று சொல்கின்றேன்.

முன்னே வைத்த காலைப் பின்னே வைக்காதே…! என்று சொல்கின்றார்.

எங்கே சாமி என்றேன்…! சத்தம் போட்டால் அடித்து விடும். மனதில் தான் நான் நினைக்கின்றேன்.

தோஸ்து செய்டா… சரியாகப் போய்விடும் என்று சொல்லுகின்றார். நான் கொடுத்த சக்தியை வைத்து யானை உடலிலிருந்து வரக்கூடிய வாசனையை உன் உடலிலே ஏற்றுடா என்று சொல்கிறார்.

1.ஒருவன் நம்மைப் பயமுறுத்துகிறான் என்ற உணர்வு வந்தால் அந்த வாசனை நமக்குள் வரும்.
2.எதிரி என்ற நிலையில் நம்மைத் தாக்க வருகிறார் என்றால் பார்த்தவுடன் அந்தப் பயமுறுத்தக் கூடிய உணர்வு வரும்.
3.யார் பார்த்தாலும் அந்த பயம் நடுக்கம் வரும். அதைப் பற்றிக் கேட்டவரும் ஏன் பயப்படுகிறாய்…? என்று கேட்பார்கள்.
4.இதே மாதிரி யானையின் உணர்வை நீ நுகரு என்று சொல்கிறார் குருநாதர்.

அவர் சொன்ன முறைப்படி அதை எடுத்து எனக்குள் கொஞ்சம் ஏற்றிக்கொண்ட பின் காதை விடைப்பதை யானை விட்டு விட்டது.

ஏனென்றால் அந்த இடம் கொப்பங்கள் கட்டி யானைகளைப் பிடிக்கக்கூடிய இடம். முன்னாடி ஆண் யானை குச்சியை வைத்துத் தரையில் ஊன்றி அதைப் பார்த்துக் கொண்டே வருகின்றது பின்னாடி மற்ற யானைகள் வரிசையாக வருகின்றது. அந்த நேரத்தில் மனிதனைக் கண்டால் எப்படி இருக்கும்…?

ஆனால் குருநாதர் சொன்ன முறைப்படி யானையின் மணத்தை நான் ஏற்றுக் கொண்டதால் அவைகள் பேசாமல் நகர்ந்து செல்லுகின்றது எல்லா யானைகளும்.

ஆனால் அதிலே ஒரு குட்டி யானை என்ன செய்கின்றது…?

அது சும்மா செல்லாதபடி என்னை வந்து உடலில் தட்டுகின்றது. உடனே திரும்பி மற்ற யானைகள் முறைத்துப் பார்க்கின்றன.

பயத்தால் நான் ஏதாவது கையையோ காலையோ நீட்டினேன் என்றால் போச்சு…! ஆனால் யானை அது என்னிடம் விளையாடுகின்றது… முட்டிப் பார்க்கின்றது. மற்ற யானைகள் கொஞ்ச நேரம் நின்று பார்க்கின்றது.

குருநாதர் அனுபவத்திற்கு இப்படிக் காட்டுகின்றார்.

1.ஈஸ்வரா என்று குருநாதரை நினைத்து அந்தக் குட்டி யானை விலகிச் செல்ல வேண்டும்
2.அதற்குண்டான புத்தி வர வேண்டும் என்று நான் நினைத்தேன்.

ஆனால் பயந்திருந்தேன் என்றால் நிச்சயம் யானை என்னை விரட்டிவிடும்.

இப்படித்தான் சந்தர்ப்பத்தில் என்னை அங்கே சிக்க வைத்தார். சக்தி கொடுத்தாலும் ஞானம் கொண்டு எப்படிப் பயன்படுத்த வேண்டும்…? என்று காட்டுகின்றார்.

ஆனால் அடுத்தாற்போல் குருநாதர் “கெக்கெக்கே…” என்று சிரிக்கின்றார். ஒன்றுமே தெரியாதவன் என்று சொல்லுகின்றாய். என்னடா…? யானையெல்லாம் மடக்குகின்றாய்..! பயந்தேன்…! என்று சொன்னாய் ஆனால் இப்பொழுது யானையை மடக்குகின்றாயே…! என்றார்.

இந்த மாதிரி இதையும் செய்யச் சொல்வார் எல்லா அனுபவத்தையும் கொடுக்கின்றார்.

ஆகவே குருநாதர் காட்டிய வழியில் நாம் தெளிந்த மனம் கொண்டு
1.ஒளியின் சரீரமாகப் பெற்ற அருள் ஞானிகள் உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் நுகர்ந்து
2.இருள் சூழா நிலைகளாக எப்பொழுது கொண்டு வருகின்றமோ அப்போது நாம் முழுமை அடைகின்றோம்.
3.நீங்கள் முழுமை அடைய அந்த அருளைப் பெற வேண்டும் என்பதுதான் எம்முடைய உபதேசம்.

சிரமமான நேரத்தில் குருநாதர் எனக்குக் கொடுத்த உபதேசங்கள்

சிரமமான நேரத்தில் குருநாதர் எனக்குக் கொடுத்த உபதேசங்கள்

 

குருநாதர் எம்மை இமயமலை… சைனா பார்டர் வரையிலும் போகச் சொன்னார்…!

அன்று சக்தி கொடுத்தார்.
1.அதை வைத்து அந்த நேரத்தில் எதைப் பயன்படுத்த வேண்டுமோ பயன்படுத்த வேண்டும்.
2.ஒருத்தரைக் கொல்லவோ துன்புறுத்தவோ அதைப் பயன்படுத்தக்கூடாது
3.உன்னைக் காத்துக் கொள்வதற்கு எந்த நிலையோ அதை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லித் தான் கொடுத்தார்.

வெறும் கோவணத் துணியுடன் அங்கே இமயமலைக்குச் சென்றேன். ஒரு பாதையைக் கடந்து செல்லும் பொழுது பனிபாறைகள் திடு… திடு… என்று இடிந்து விழுகின்றது. பார்த்தவுடனே… நாம் எப்படித் திரும்பப் போகப் போகின்றோம்…? என்று சிந்தனை வருகிறது.

அப்போது என் வீட்டின் நிலைகள் காட்சியாகத் தெரிகின்றது. என் கடைசிப் பையன் தண்டபாணி “நானா… நானா…” என்று சொல்லிக் கொண்டு தெரு வாசல்படியில் அமர்ந்திருக்கின்றான்.

என் மீது அவனுக்கு ஏக்கம் அதிகமாகி இரத்த இரத்தமாக வெளியே சென்று கொண்டிருக்கிறது. இந்த எண்ணம் அங்கே சென்றவுடன் நாம் எப்படித் திரும்பச் செல்லப் போகின்றோம்…? பிள்ளைகள் எல்லாம் என்ன ஆவார்கள்…? என்று இங்கிருந்து இது எல்லாம் சிந்தனை ஓடுகின்றது.

எல்லாம் காட்சியாகத் தெரிகின்றது என்னுடைய மனைவியோ விறகுக் கடையில் “விறகே இல்லை” என்று தவித்துக் கொண்டிருக்கிறது.

என் பையனுக்கு இரத்த இரத்தமாகப் போகிறது என்று தெரிந்த உடனே… ஐயோ…! அவனை எப்படிக் காப்பாற்றுவது…? என்ற இந்த நினைப்பு எனக்குள் வருகின்றது.

உடனே என் உடலுக்குள் “அடித்தது பாருங்கள்…!” கிர்…ர்ர்ர்… என்று இருதயமே துடிக்க ஆரம்பிக்கின்றது. சிறிது நேரத்தில் உயிர் பிரிந்து விடும் போல் தெரிகின்றது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் அடிக்கடி குருநாதர் ஒரு பாடலைப் பாடுவார்

மனமே இனி ஆகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் சுகமா
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

மின்னலைப் போல் இப்பொழுது நீ உடலை விட்டுப் போய் விட்டாய் என்றால் எதை நீ பார்க்கப் போகின்றாய்…? என்று கேட்கின்றார்.

நேற்றிருந்தார் இன்று இருப்பது நிஜமோ…? இந்த நிலையில்லா உலகம் உனக்குச் சதமா…? நீ சிந்தித்துப் பார்…! என்று சொல்கின்றார். நீ சென்று விட்டால் உன் பிள்ளையை எப்படிக் காக்கப் போகின்றாய்…?
1.நான் உனக்குச் சக்தி கொடுத்தேன்
2.இங்கிருந்து அவன் காக்கப்பட வேண்டும் என்று எண்ணினால் காக்கலாம்.

தூரத்தில் இருக்கும் ஒருவனை இங்கிருந்து நீ திட்டினால் அவனுக்குப் புரை ஓடுகின்றது. பிள்ளை மீது பாசமாக இருந்து அவனை எண்ணி வேதனைப்பட்டால் அவனுக்கு நோய் தான் அதிகமாகும்.

அந்த நோயிலிருந்து அவனைக் காக்க வேண்டும் என்றால் நீ என்ன செய்ய வேண்டும்…? என்ற உபதேசத்தை தான் அந்த மாதிரி நேரங்களில் எனக்கு குருநாதர் கொடுக்கின்றார்.

சக்தி வைத்திருந்தாலும்…
1.இவ்வளவு சிரமமான நேரத்தில் அவர் கொடுக்கும் உபதேசங்கள் நமக்குப் பயனுள்ளதாக
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உருவாக்கப்பட்டு… குருநாதர் கொடுத்து உதவுகின்றார்.

இப்படித்தான் அனுபவப்பட்டு நான் வந்தேன். நீங்கள் அமர்ந்து ஆசுவாசமாக இதைக் கேட்கின்றீர்கள். உங்களுக்கு இது போன்ற சோதனைகளைக் கொடுத்தால் என்ன சொல்வீர்கள்…?

ஆசைப்பட்டது நடக்கவில்லை என்றால் “சாமி என்னைச் சோதிக்கின்றார்” என்று தான் சொல்வீர்கள். ஒரு சிலர் என்ன செய்கிறார்கள்…?

வாழ்க்கையின் ஆசை நிமித்தம் செல்லும் பொழுது… ஒரு பொருளை எண்ணுகிறார்கள்… அது கிடைக்கவில்லை என்றால் என்றால் “சாமி நிறைய என்னைச் சோதிக்கின்றார்” என்று இப்படிச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றார்கள்.

ஏனென்றால் நான் இயற்கையின் உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்குக் குருநாதர் எத்தனையோ சோதனைகளை வைத்தார். அதன் வழி தான் ஒவ்வொன்றையும் அறிந்து கொண்டேன்.

சரியான உணவு இல்லை… வீடு வயல்கள் எல்லாம் சென்று விட்டது குழந்தைகள் அனைவரும் அனாதையாக இருக்கின்றார்கள். எல்லா நிலங்களும் விற்று விட்டாயிற்று. சரியான காரணம் இல்லாமலே சொத்துக்கள் அழிந்தது.

இவ்வளவு நிலை வந்த பிற்பாடு இப்படி எல்லாம் செய்யப்பட்ட பிற்பாடு இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்டு வருகின்றேன். ஒவ்வொரு குடும்பத்திலும் இத்தகைய நிலைகள் உண்டு.

1.ஆக அந்த குடும்பத்தில் எப்படி அறியாது இயக்குகின்றது…?
2.அவர்களை மீட்டுவதற்கு என்ன வழி…? என்ற நிலையில் தான் அனுபவமே கொடுத்தார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக நீ மதி அவர்கள் உடலைக் கோவிலாக மதி சந்தர்ப்பத்தால் அவருக்குள் வரும் நிலையை…
1.ஈசனால் கட்டப்பட்ட அந்த ஆலயம் இடிந்திடாது இந்தக் கட்டிடத்திற்குள் இருந்து உணர்வின் தன்மை ஒளியாகப் பெருக்கும் மார்க்கம் என்ன…?
2.அவர்களைக் காக்க வேண்டும் என்றால் நீ எப்படிக் காக்கப்படுகின்றாய்…?
3.இந்த உடலுக்குப் பின் நீ எப்படி ஒளியாகின்றாய்…?
4.அவர்களை ஒளியாக்கும் உணர்வை அந்த உபாயத்தைச் சொன்னால் அது உனக்குள் வளர்கின்றது
5.அந்த உணர்வே உனக்குள் தெளிவாகின்றது
6.அதை வைத்து நீ அவர்களையும் காக்க முடியும்.

இப்படித்தான் குருநாதர் எனக்கு அனுபவங்களைக் கொடுத்தார்.

சகலத்திலும் சகலமாய் உள்ள “ஆதி சக்தியுடனே நாம் ஒன்றிவிடலாம்”

சகலத்திலும் சகலமாய் உள்ள “ஆதி சக்தியுடனே நாம் ஒன்றிவிடலாம்”

 

உலக சக்தி என்பதே… தனித்து எதனைச் செப்புவது…?

இன்றைய உலகமே பிம்பத்தைத்தான் உலகமாகக் காண்கின்றது. எப்பிம்பமும் நிலைத்த பிம்பமல்ல; இன்றைய பிம்பம் மாறிவிட்டால் காற்றுத்தான். அன்றைய காற்று இன்றைய காற்றில் தான்‌ அனைத்தும் உள்ளன. நீரும் காற்றுத் தான் நெருப்பும் காற்றுத் தான்.

நீரும் ஆவியாகிக் காற்றுடன் கலக்கின்றது. நெருப்புக் கோளங்களும் எரிந்து ஆவியாகிக் காற்றுடன்தான் கலக்கின்றன. அனைத்து பிம்பமும் காற்றுத்தான்.
1.காற்றேதான் கடவுள்…
2.அக்காற்றிலிருந்து ஜீவன் கொண்ட அனைத்துமே கடவுள்தான்.

பால்வெளி மண்டலத்தைக் காற்றாய்க் காண்கின்றோம். அப்பால்வெளி மண்டலத்தில் இருந்து தான் ஆதவனாய் உள்ள சூரியனும் பிறந்தான். பூமித்தாயும் வளர்ந்தாள். மற்ற அனைத்துக் கோளங்களும்மே பிறந்து வளர்ந்து வாழ்கின்றன.

இப்பால்வெளி மண்டலத்தில் உள்ள காற்றில் கலந்துள்ள அமிலமே நீராயும் நெருப்பாயும் ஒன்றை ஒன்று பற்றியே சுழன்று கொண்டு உள்ளது.
1.இவ்வமிலமே திடமாகி அத்திடத்தில் இக்காற்றுப்பட்டு அதை ஈர்த்து அது வெளிப்படுத்தி அந்நிலையிலேயே வளர்ந்து
2.ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஒன்றின் அமிலம் மற்றொன்றில் கலந்து அது ஈர்த்து சமைத்து வெளிக் கக்கும் அமிலம்
3.மற்றொரு கலவையுடன் சேர்ந்து அவை எடுத்து அவை வெளிப்படுத்தி இப்படியே மோதுண்டு மோதுண்டு
4.ஒன்று உண்டு அதன் கழிவு வெளிப்பட்டு அக்கழிவு அதன் இனமுடன் சேர்ந்து அவை உண்டு அவை சமைத்து வெளிப்படுத்தும் அமிலம் படர்ந்தே
5.ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஜீவன் கொண்டு ஒன்றிலிருந்து ஒன்று வெளிப்பட்டு மண்டலமாய் உருப்பெற்று
6.அம்மண்டலம் எடுக்கும் உணவு (சுவாசத்தை) கொண்டு அதன் சக்தி நிலை வளர்ந்து அது வெளிப்படுத்தும் அமிலத்திலிருந்து பல நிலை பெற்று,
7.பால்வெளி மண்டலத்தை இக்காற்று மண்டலத்தை மையமாய்க் கொண்டு சுழலுவதுதான் அனைத்து மண்டலங்களும் நாமும் எல்லாமுமே.
ஆவிதானப்பா அனைத்துமே…!

ஆவியான இக்காற்றில் நிறைந்துள்ள அமில சக்தியைக் கொண்டு
1.“நம் ஆத்மாவிற்கு உகந்த அமில சக்தியை நாம் பிரித்தெடுத்து…”
2.உயர்ந்த ஞான நிலைபெறும் பக்குவ அமிலத்தை உணரும் சக்தி பெறல் வேண்டும்.

இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்களெல்லாம் தனக்குகந்த அமிலத்தையே ஈர்த்து வளரும் பக்குவ நிலை உள்ள பொழுது நாமும் அனைத்துமே ஆவிதான்.

நாமும் ஆவிதான் நம் உடலில் உள்ள அனைத்துமே ஆவிதான் என்பதனை உணர்ந்து நமக்குகந்த ஆவி அமிலத்தை எண்ணத்திலேயே ஒரு நிலை கொண்டிடும் பக்குவ நிலைப்படுத்தி ஞானத்தின் வழித்தொடர் பெற்றிட வேண்டும்.

ஆவியாய்ப் பிரியப் போகும் பிம்பத்தைப் பேராசைப் பொருளாய் எண்ணிடாமல் அனைத்தும் ஆவிதான் என்பதனை உணர்ந்து ஒவ்வோர் உடல் கொண்டு வாழ்ந்து பல எண்ணத்தை ஈர்த்து பல கோடி ஆண்டுகளுக்கு ஜீவன் கொண்ட பல பிம்ப உடல்களை ஏற்று ஏற்று வந்த நம் ஆத்மாவைப் பெரும் இன்னல் படுத்திடலாகாது.

1.உயர்ஞானம் பெறும் நல் உபதேசம் பெற்று
2.இக்காற்றில் தான் கலந்துள்ளார்கள் சித்தாதி சித்தர்களும் சத்திய ஞானம் பெற்ற சப்தரிஷிகளும் என்ற எண்ணம் கொண்டு இவ்வுண்மையை உணர்ந்து
3.ஆண்டவனுக்கு மத வேறுபாடு இல்லை… “எவ்வாண்டவனை வணங்கினாலும் ஒன்றே” என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு
4.உம்மின் அன்பை ஆண்டவனாய் ஒருநிலைப்படுத்தி
5.உம் எண்ணத்தில் ஆண்டவனாய் வரித்து உள்ளவரையே ஆண்டவனாக்கி
6.உம் எண்ணத்தில் செயல்படுத்தி நீர் எடுக்கும் சுவாசம் எல்லாம்
7.உம் உயிர் ஆத்மாவின் அமில வட்டத்தில் ஞானத்தின் சக்தித் தொடரை ஈர்க்கும் பக்குவ நிலை பெறல் வேண்டும்.

ஞானத்தின் வழித்தொடர் பெற்று விட்டால் நம் எண்ணமும் செயலும் ஞானமாகி அதன் தொடர்பிலேயே பல நிலைகளை நாமும் உணர்த்திடலாம். இத்தொடரின் வழியினால் நம் ஆத்மா நம் நிலையில் அக்காற்றுடன் காற்றாய்ச் செயல் கொள்ளும் பக்குவத்தை நம் எண்ணத்தினால்தான் செயல்படுத்திட முடியும்.

உயிரணுவாய்த் தோன்றிய நிலையிலே ஈர்க்கும் நிலைப்படுத்தி அவ்வுயிரணு தோன்றிச் சேமித்துச் சேமித்துப் பழக்கப்படுத்திப் பல நிலைகளை ஈர்த்த பின்னும்… மனித ஆத்மாவாய்ப் பல நாள் சேமிப்பின் அமிலத்தை வளர்த்துக் கொண்டுள்ள மனித ஆத்மாக்களை…
1.தன் ஆத்மாவைக் காற்றுடன் கலக்கவிடும் பக்குவத்தை உணர்ந்து செயல்படுத்தினால்
2.ஞானம் என்ன…? சித்தென்ன…? சப்தரிஷிதான் என்ன…? சகலத்திலும் சகலமாய் உள்ள ஆதி சக்தியுடனே ஒன்றிவிடலாம்.

பேரானந்த நிலை… தெய்வீக நிலை… என்பதெல்லாம் இன்று வாழ்க்கையில் நாம் காணும் “இம் மாயக் கனவு வாழ்க்கையில் இல்லை” என்பதனை நாம் உணரல் வேண்டும்.