இரண்யன் “மூன்று லோகத்தையும் கைப்பற்றுகின்றான்” என்றால் அதனின் பொருள் என்ன…?

இரண்யன் “மூன்று லோகத்தையும் கைப்பற்றுகின்றான்” என்றால் அதனின் பொருள் என்ன…?

 

உதாரணமாக… ஒருவரைப் பழி தீர்க்கும் உணர்வுகளையோ… அல்லது அவனைக் கொன்றிடும் நிலையோ… துன்பப்படுத்தும் உணர்வோ… நமக்குள் அதிகமாகி விட்டால் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களை அது துன்புறுத்தி அதை மடியச் செய்துவிடும்.

பின் அதனால் உருவான உறுப்புகள் அனைத்தையும் சுருங்கச் செய்வதும் உடலின் தன்மை நலியச் செய்வதும் எண்ணத்தின் செயலும் அசுர உணர்வு கொண்டு சாபங்கள் இடுவதும்… “உன் குடும்பம் தொலைந்தது… உன் குடும்பத்தை அழித்தே தீருவேன்…!” என்ற சாப அலைகள் இங்கே வருகின்றது.

இப்படி விளைந்த இந்த உணர்வுகள் கொண்டு உடலை விட்டு அகன்றால் அடுத்து புலியாகத் தான் பிறக்க நேரும்.

தன் பசியைத் தீர்க்கும் உணர்வு கொண்ட ஒரு புலி மற்றதை அடித்து இரக்கமற்றுக் கொன்று புசித்துத் துன்புறுத்தும் நிலைகள் கொண்டு அச்சுறுத்தும் உணர்வு கொண்டு தான் அதன் உணர்வுகள் செயல்படும்.

அதைப் போன்றே
1.மற்றவரை ஈவு இரக்கமற்றுப் பழி தீர்க்கும் உணர்வாகச் செயல்படும் போது…
2.இவன் கேட்ட வரப்படி மனிதனான இந்திரலோகத்தை மாற்றி அமைத்து இவன் உயிர் புலியாக மாற்றும்.

அப்போது புலியின் உயிரும் விஷ்ணுவே…! அது எடுக்கும் அசுர உணர்வுகள் இந்திரலோகமாகி… அதன் உணர்வு கொண்டு அடுத்ததைக் கொன்று புசிக்க வேண்டும் என்று “பிரம்மனின் நிலைகளும்” அதை உருவாக்குகின்றது.

புலி அசுர குணங்கள் கொண்டு தாக்கும் போது மகிழ்ச்சி பெறும் சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது. எப்போதும் கொடூர உணர்வு கொண்டே வாழுகின்றது.

அதே சமயத்தில்
1.புலியான உடலும் சிவமே… அந்தச் சிவத்திற்குள் அசுர உணர்வின் சக்திகள் கூடி
2.இந்திரலோகத்தில் மகிழ்ச்சி என்ற நிலையே இல்லாதபடி ஆகிவிடுகிறது.
3.தன் இனத்தின் நிலைகளில் கூடப் போர் செய்ய செய்யும் முறையே வருகின்றது
4.”தன் குட்டிகளின் அரவணைப்பு” ஒன்றே அதற்குள் மிஞ்சும்.

ஆதாவது “தன் இனம்” என்ற நிலைகள் இருந்தாலும் சிறிது நேரமே ஒன்றி வாழுகின்றது அடுத்து… பகைமை உணர்வு கொண்டு தாக்கிடும் உணர்வுகளே அதற்குள் பெருகுகின்றது.

ஆகவே மனிதனான பின் இத்தகைய அசுர உணர்வுகளை எடுத்தால் நம்முடைய அந்த எண்ணப்படி இந்திரலோகத்தை மாற்றி அமைத்து அதை ஆட்சி புரியும் தன்மை வருகின்றது.

அதைத்தான் மூன்று லோகத்தையும் இரண்யன் தனக்குள் அடிமைப்படுத்தினான்… இந்திரலோகத்தில் உள்ள அனைவரையும் அடிமைப்படுத்தினான் என்று சொல்வது. காற்றுப் பகுதியில் உள்ள உணர்வுகளையும்… உடலான இந்திரலோகத்தையும் அடக்கி ஆளுகின்றான்.

அதாவது காற்று மண்டலத்தையும் அதுவாக (தன் உணர்வாக) மாற்றுகின்றான். அதே சமயத்தில் சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வினை அதிலேயும் (தன் உணர்வின் தன்மை கொண்டு) மற்றொரு நிலைகளில் அது அடக்கிடும் உணர்வின் சக்தியை எவ்வாறு பரப்புகின்றது…? என்ற நிலையைத் தான் “மூன்று லோகம்” என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றார்கள்.
1.உடலான ஒரு லோகமும்…
2.புறத்தால் வரும் தன் சுற்றுப்புறச் சூழ்நிலையில் உள்ள நிலையும்
3.சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷத்திலும் இவன் இடும் உணர்வே அதனின் செயலாகவும் செயல்படுகிறது என்று காட்டுகின்றார்கள்.

அசுர குணங்கள் கொண்டு பேசினால் சுற்றுப்புறச் சூழ்நிலையான (காற்று மண்டலம்) அந்த லோகத்தையும் கவர்ந்து விடுகின்றது. அதற்குள் வாழும் மக்களும் சிறிதளவு அதை நுகர்ந்த பின் அந்த உடலையும் அடக்குகின்றது… அச்சுறுத்தி வாழும் நிலைகள் வருகின்றது.

உதாரணமாக ஒரு இடத்திலே போக்கிரி கடுமையாகப் பேசினால் அவன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தை அடக்குகின்றான்.

நல்ல உணர்வின் தன்மை அடங்கிடும் உணர்வுகள் வெளிப்படுத்தும் போது கேட்போர் உணர்வுகளில் அவர்களுக்குள் புகுந்து அங்கே அச்சுறுத்தும் உணர்வு வருகின்றது.

அதே சமயத்தில் சூரியனால் வெளிப்படும் உணர்வின் தன்மையை அது மற்றதுடன் இணைந்து உணர்வின் அலைகளாக படரப்படும் பொழுது சூரியனின் சக்தியையும் இவனுக்குள் ஆட்சி புரிந்து கொள்கின்றான்.

இப்படி ஆக்கிரமிப்புத் தன்மையே அனைத்திலும் வரப்படும் பொழுது அவனின்று விளையும் தன்மை
1.உடலையும்
2.காற்று மண்டலத்தையும்
3.சூரியனுடைய உணர்வுகளையும்
4.இந்த மூன்று மண்டலங்களையும் அவனுடைய வீரியத் தன்மை கொண்டு ஆட்சி புரியத் தொடங்கி விடுகின்றது.
5.இதை நுகந்தோர் அனைவரும் மடியும் உணர்வும் அசுர உணர்வு கொள்ளும் நிலையை வருகின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்காகத் தான் சாஸ்திரங்களில் இப்படிக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

சூரியனின் இயக்கம்

சூரியனின் இயக்கம்

 

இன்று இப்பூமியில் நாம் உயிர் வாழ்ந்திட… நாம் மட்டுமல்ல இப்புவியில் உள்ள எல்லா உயிரணுக்களும் உயிர் வாழ்ந்திட… “காற்றும் நீரும் அவ்வொளியும்…” ஒளி என்பது சூரியனின் சக்தியிலிருந்து ஒளிக்கதிர்கள் இவ் பூமியில் வந்து தாக்கும் நிலையைக் குறிப்பிடுகின்றேன்.
1.இந்நிலை எல்லாம் இல்லாவிட்டால்
2.இப்புவிதனிலே உயிர் அணுக்கள் இல்லை.

அச்சூரியனுக்கு இந்நிலைகளைப் பூமிக்கு அளிக்க அச்சூரியனின் சக்தி எந்நிலையில் உள்ளது…?

இப்பூமி ஒரு முறை சுற்றிவர தன்னைத்தானே 24 மணி நேரம் ஆகின்றது என்று இந்தக் குறிப்பிட்ட கால நிலைகளை வைத்து ஒரு நாளைக் குறிப்பிடுகின்றோம்.

இங்கு எப்படி நாம் ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்று சொல்கின்றோமோ அதைப்போல் இல்லாமல்… அச்சூரியனின் சுற்று அதி விரைவாக உள்ளது. அதாவது 12 மணி நேரம் என்னும் நிலையில் நாம் இங்கு ஒரு நாள் என்று குறிப்பிடும் நிலை அச்சூரியனின் சுற்றில் இரண்டு நாளாக உள்ளது.

அச்சூரியனிலிருந்து எப்படி நமக்கு ஒளி கிடைக்கின்றது…? அச்சூரியனின் தன்மை என்ன…?

சூரியனில் சரி பாதி நிலமும் சரி பாதி நீரும் உள்ள நிலையில் பல உயிரினங்களும் உள்ளன.
1.சூரியனைப் போல் உள்ள பல சூரியன்களின் ஒளியின் கதிர்கள் நம் சூரியனில் அவ்வொளிக்கதிர்கள் படும் நிலை கொண்டு
2.மற்ற மண்டலங்களில் உள்ள ஈர்ப்பு தன்மையைத் தன்னில் ஈர்த்து அச்சூரிய மண்டலம் வெகு விரைவில் சுற்றுகிறது.

சூரியன் சுருங்கி விட்டது என்று இன்றைய நிலையில் சொல்கின்றார்கள். அச்சூரியனின் சக்தியும் எடையும் சுருங்கவில்லை. முதலில்… என்பது நாளும் வருடமும் குறிப்பிடாத நிலையில் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.

பூமி எப்படி மற்ற மண்டலங்களின் நிலையை ஈர்த்துச் சுழல்கின்றதோ அதைப் போல் அச்சூரியன் மற்ற மண்டலங்களில் இருந்து வரும் ஒளிக் கதிர்களை ஈர்த்துச் சுழன்று கொண்டே உள்ள நிலையில் அதன் எடை எப்படிக் குறையும்…? ஈர்ப்பு நிலை பெறப் பெற அதன் சக்தி நிலை தான் அதிகம் பெற்றுச் சுழல்கின்றது.

1.சூரிய மண்டலத்திற்குச் செல்ல முடியாது. பெரும் நெருப்புக் கோள் போல் உள்ளது என்று நினைக்கின்றோம்.
2.அச்சூரியமண்டலமும் நாம் வாழ்ந்திடும் நாம் வாழும் பூமியின் நிலை போல் தான் நீருடனும் நிலத்துடனும் காற்றுடன் சுற்றிக் கொண்டுள்ளது.

சூரியனிலிருந்து நாம் பார்க்கும் ஒளி அது தன்னைத்தானே சுற்றும் வேகத்தில் அக்காற்றும் அக்காற்றுடன் கூடிய அணுக்கதிர்களும் அதிவேகத்தில் சுற்றும் பொழுது இவ்வொளியின் தன்மை நாம் பெறக்கூடிய பாக்கியத்தைப் பெற்றுப் இப்பூமியில் வந்து தாக்கி இப் பூமியையே சுழல வைக்கின்றது.

ஒவ்வொரு மண்டலத்தின் நிலையும் ஒன்றிலிருந்து ஒன்று அவ்வொளியின் சக்தியைப் பெற்றுச் சுழன்று கொண்டே தான் உள்ளது. நம் பூமிக்குச் சூரியனின் ஒளி மட்டுமல்ல… சந்திரனின் ஒளி மட்டுமல்ல… மற்ற எல்லா மண்டலங்களில் உள்ள அணுக்களின் தன்மையும் பெறுகின்றோம்.

சூரிய மண்டலத்திற்கு மேல் உள்ள மண்டலங்களின் நிலை கொண்டே அச்சூரியன் ஈர்த்து நமக்கு அளிக்கின்றது. அதைப்போல இப்பூமியின் சுழற்சியின் நிலை கொண்டு சந்திரனுக்கும் ஏன் சூரியனுக்கே கூட பூமியின் அணுக்கதிர்கள் செல்கின்றன.

இப்பூமி தனியாக இயங்கவில்லை 48 மண்டலங்கள் என்று உரைத்தேன். ஒவ்வொரு மண்டலமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு சுற்றிக்கொண்டே உள்ளன.

நெருப்புக் கோளங்கள் என்ற நிலை எங்குமே இல்லை. ஒவ்வொரு மண்டலமும் சுழலும் வேகம் கொண்டு தான் ஒளியும் ஒலியும் நாம் பெறுகின்றோம்.

1.எல்லா மண்டலங்களிலுமே நீரும் நிலமும் உண்டு… உயிரணுக்கள் உண்டு
2.ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு நிலை கொண்ட உயிரணுக்கள் உயிர் வாழ்கின்றன.

எல்லா மண்டலங்களும் ஒன்று போல் உருண்டை வடிவத்தில் இல்லை… என் நம் பூமியே இல்லை…! உருளும் தன்மையை வைத்துப் பந்து போல் உருண்டையாக உள்ளது என்கின்றார்கள்.

இமயமலையும் பனிமலையிலும் உள்ள நிலைகளில் எப்படியப்பா உள்ளது பந்து போன்ற நிலை…? ஒவ்வொரு இடத்திலும் இந்நிலையே ஒவ்வொரு நிலை கொண்ட ஏற்றத்தாழ்வுடன் உள்ள பொழுது உலகம் பந்து போல் உருண்டையாக இருக்கிறது என்கின்றார்கள்.

பந்து போல் இருந்திட்டால் அச்சூரியனிலிருந்து விழும் ஒளிக் கதிர்கள் காலை மாலை என்ற நிலை இவ்வுலகனைத்திலும் ஒன்று போல் அல்லவா இருக்க வேண்டும்.

சில நிலைகளில் அச்சூரியனின் ஒளியே படாத நிலையான இடம் இருக்கின்றதல்லவா. உலகத்தை உருண்டையாகவும் தட்டையாகவும் கால நிலைக்கு ஏற்ப மனிதர்கள் யூகம் கொண்டு பல விஞ்ஞான நிலையில் பார்க்கும் பொழுது உருண்டை வடிவம் என்றும் தட்டையான நிலை என்றும் இன்றளவும் ஆராய்ந்து கொண்டே உள்ளனர்.

எந்த ஒரு பொருளும் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது உருண்டை வடிவமாகவோ நீண்ட வடிவமாகவோ தான் தெரியும். இந்நிலை வைத்து நம் யூகத்தில் தெரிந்ததாக நாம் எண்ணிக் கொண்டே வாழ்கின்றோம்.

சந்திர மண்டலத்தின் நிலை முக்கோண வடிவினிலே குமிழ் வடிவினிலே மேலும் பள்ளம் கொண்ட நிலையாகத் தான் உள்ளது.

1.ஒவ்வொரு மண்டலமும் ஒன்றைப் போல் ஒன்று இல்லை.
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே சுற்றிக் கொண்டு நிலையான நிலையில் தான் உள்ளது.
3.இப்பூமி தனி பூமியும் அல்ல. இவ் பூமியில் உள்ள உயிரணுக்கள் எதுவுமே தனி அல்ல
4.ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்திடும் “நாம் இணையில்லா வாழ்வு பெற்று” என்றும் நிலைத்து வாழ்ந்திடவே இப்பாட நிலை.

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகுங்கள்

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகுங்கள்

 

ஒரு செடியில் விளைந்த வித்தை நிலத்திலே ஊன்றினால் நிலத்தின் துணை கொண்டு தன் தாய்ச் செடியின் சத்தினைக் கவர்ந்து செடியாக அது வளர்கின்றது.

இதைப் போன்று தான் ஒரு மனிதன் வேதனைப்படுவதை நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை உடலில் பதிவாகும் பொழுது வேதனை உருவாக்கும் அணுக்கள் நமக்குள் உருவாகிவிடுகிறது.

எந்த மனிதன் அந்த வேதனையை நமக்குள் உருவாக்கினானோ அவன் மடிந்தால் அவன் உயிரான்மா நமக்குள் வந்து வேதனைப்படும் அணுக்களாக நமக்குள் நோயாக மாற்றிவிடும்.

பின் வேதனைப்படும் புழுக்களாக பூச்சிகளாக பாம்பாக உயிர் உருவாக்கி விடும்.
1.இதைப் போன்ற நிலையில் இருந்து ஒவ்வொருவரும் விடுபடுதல் வேண்டும்.
2.காரணம் கடும் தீமைகளை எல்லாம் வென்றவன் துருவ மகரிஷி… அந்த உணர்வை நாம் பருக வேண்டும்,

ஆகவே வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை வேண்டுங்கள்.

அவன் தான் எண்ணியைதை உருவாக்குகின்றான் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். அதைப் பெறுவதற்கு
1.எம்முடைய உபதேசங்களை இப்போது கூர்மையாகப் பதிவாக்குவதும்…
2.செவிப்புலனிலே இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டதும்… அந்த உணர்ச்சிகளை நீங்கள் நுகர்ந்ததும்
3.அது அனைத்தையுமே உயிர் அணுவாக உங்களுக்குள் மாற்றியதும்
4,மெய்ஞானிகளின் உணர்வினை உங்களுக்குள் அணுக்களாக அதிகமாகப் பெருக்குவதற்கும் தான்
5.இந்த உபதேசத்தைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

இதை நீங்கள் பெற்ற பின் நினைவு கொண்டு வந்து மீண்டும் எண்ணத்தால் எடுக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் அருளாற்றலைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

அந்த தகுதியைப் பெறும் சந்தர்ப்பத்தைத் தான் இப்பொழுது ஏற்படுத்துகின்றோம்… உபதேச வாயிலாகப் போதித்தது.

நீங்கள் இதை நுகர நுகர உங்களுக்குள் அணுத் தன்மையாக அது விளைகின்றது. விஞ்ஞான உலகில் வாழ்ந்தாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற அருள் உணர்வை நீங்கள் சேர்த்துக் கொண்டே வந்தால்
2.அதைப் பற்றுடன் பற்றும் நிலை உங்களுக்குள் வருகின்றது.
3.இந்த உடலை விட்டுச் சென்றால் “நம் பற்று அங்கே இருப்பதால்” உயிர் நம்மை அங்கே அழைத்துச் சென்று விடுகிறது.

ஆனால் அதற்கு மாறாக “நான் நன்மை செய்தேனே… எனக்கு இவன் தீமை செய்கிறானே…” என்று இங்கே பற்றிக் கொண்டால் இங்கே தான் மீண்டும் சுழல வேண்டி வரும்.

பழி தீர்க்கும் உணர்வுடன் அவன் உடலுக்குள் தான் செல்ல வேண்டும் அல்லது அந்த உணர்வு நம்மை அழித்துப் பரிணாம வளர்ச்சியில் தேய்பிறையாக கீழான நிலைகளுக்குச் சென்று விடுவோம்.

இது போன்ற நிலைகளில் இருந்து மீள்தல் வேண்டும்
1.அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும்
2.எமது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக எப்பொழுதும் இருக்க வேண்டும்.
3.அவர் கற்றுணர்ந்த உணர்வின் அலைகள் இங்கே பரவிப் படர்ந்துள்ளது.
4.குருநாதர் மெய் ஒளி பெற்ற அந்த அருள் உணர்வுகளும் இங்கே படர்ந்துள்ளது…!
5.அதை நீங்கள் பெற வேண்டும்… பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடல் வேண்டும். இருவரும் ஒன்றாக அருள் ஒளியைத் தனக்குள் அணுக்களாகப் பெருக்குதல் வேண்டும். அந்த எண்ணத்தைக் கொண்டு நல்வினைகளாக மாற்ற வேண்டும்

ஒவ்வொருவரும் நீங்கள் அதை பெற வேண்டும்

இதன் வழிகொண்டு உங்கள் வாழ்க்கையில் வந்த இருளை மாய்த்துக் கொள்ளுங்கள்… மெய்ப் பொருள் காணுங்கள்… “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகுங்கள்…! என்று எல்லா மகரிஷிகளையும் நான் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு)”

“ஜெகஜ்ஜோதியான” வாழ்க்கை வாழ்ந்திடுங்கள் என்றே நல்வாழ்த்து அருளுகின்றேன் – ஈஸ்வரபட்டர்

“ஜெகஜ்ஜோதியான” வாழ்க்கை வாழ்ந்திடுங்கள் என்றே நல்வாழ்த்து அருளுகின்றேன் – ஈஸ்வரபட்டர்

 

அன்புருவம் கொண்ட அன்னை தந்தையின் அருளில் அருள் பெற்ற சக்தியின் “சத்தியச் செல்வங்களே…!”
1.இப்பாடத்தைப் படித்திடும் நீங்கள் எல்லோருமே
2.அன்பே தெய்வமான அந்த இராம நாமத்தை ஒத்த அன்புடன் கூடிய குணவானாகவும்
3.ஸ்ரீமுருகனின் அழகென்னும் அருள் செல்வச் சொல்லாற்றல் உடைய சிங்கார வடிவனின் வடிவழகுக் குமாரர்களைப் போலவும்
4.கலைமகளின் கல்வி அருள் பெற்று மகாலட்சுமியின் செல்வத்திறன் பெற்று வீர குணமுடைய ஆஞ்சநேயரைப் போலவும்
5.விளையாட்டின் வடிவத்திலே மன நிலையைக் களிப்புடன் களித்தாட்டும் கிருஷ்ணனின் குணநிலையைப் போலவும்
6.இப்படி ஒவ்வொரு சித்தர்களுக்கும் தகுந்த நிலையில் நமக்குக் குண நிலைகளைப் போதித்த “நம்மை ஆண்டவனாக எண்ணி வணங்குவதற்கு”
7.நாம் எந்தெந்த குணநிலைகளைப் பெற்று நல்வாழ்க்கை வாழ்ந்திடலாம் என்பதற்குகந்த குண நிலைகளைப் போதித்து
8.நமக்கு வழிகாட்டிய சகல ரிஷிகளுக்கும் பல நிலை பெற்ற அன்பே தெய்வமான பல பெரியோர்களுக்கும் ஞானிகளுக்கும்
9.நம்முடனே கலந்துள்ள நமக்காக வாழ்ந்திடும் பல சித்தர்களுக்கும்
10.நாம் இன்று இந்நூலின் வடிவத்தில் சொல்லி வரும் பல உண்மைகளுக்கு நம்முடைய அன்பைக் காட்டி
11.”நமக்கு நல்ல ஆசி வழங்கிட வேண்டிக் கொண்டே” இந்த நூலைப் படிப்போமாக.

சக்தியின் நிலை இவ்வுலகில் உதித்த இவ்வுலகில் பிறந்த எல்லா உயிரணுக்களுக்கும் “ஒவ்வொரு திறமையில் திறமை பெற்றுத் தான்” இப்பூவுலகில் வந்து பிறக்கின்றன.

மனிதன் மிருகங்கள் பட்சிகள் செடி, கொடி, புழு பூச்சி எல்லாவற்றிற்குமே இச்சக்தியின் அருளில் “ஒவ்வொரு திறன் கொண்டு தான்” சக்தி பெற்றே இப்பூமண்டலத்தில் வந்து பிறக்கின்றன.

இந்நிலையில் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்ற நாம் நம் சக்தியை நம் திறனை நம் எண்ணத்தைப் பல வழிகளில் சிதற விட்டு நாம் பெற்ற பாக்கியத்தை இழந்து வாழும் நிலையில் தான் இன்று இவ்வுலகினிலே வாழ்கின்றோம்.

இச்சக்தியின் அருளில் ஒவ்வொருவருக்கும் செயலாற்றும் தன்மையிலே ஒவ்வொரு திறனும் உண்டு. மனிதனாகப் பிறவி எடுத்த நமக்கு அச்சக்தியின் அருளில் மற்ற மிருக ஜந்துகளுக்கு இல்லாத நிலையான செயலாற்றும் தன்மையில்…
1.நமக்கு இரண்டு கைகளையும் சொல்லாற்றல் உடைய சொற்களைப் பேசும் திறன் உள்ள நாம்
2.நமக்கு அளித்த அத்திறனை ஒரே நிலை கொண்டு நம் எண்ணங்களைச் சிதறவிடாமல்
3.அவ்வெண்ணத்தை ஒரே நிலைப்படுத்தி செயலாற்றல் உடையவனாக இருந்திடல் வேண்டும்.

பெரும் உன்னத நிலை அடையும் பொக்கிஷத்தை மறந்து வாழும் வாழ்க்கையை “நாம் இனி மாற்றி வாழ வேண்டும் என்ற ஆவலினால்…” நமக்குள் இருக்கும் ஈசனின் சக்தியைக் கண்டு வாழ்வதற்காக ஒவ்வொருவரும் ஜெபம் பெற்று… இப்புண்ணிய பூமியையே புனிதமாக்கும் தன்மையில் அன்பு கொண்டே நல்வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்… ஜெப நிலையில் இருந்திடுங்கள்.

1.இப்பாடங்கள் படித்து வரும் ஒவ்வொருவரும் அச்சக்தியின் அருள் பெற்று
2.சகல சித்தர்களும் நமக்குள் வந்து அருள் புரியும் தன்மையில் அருள் பெற்றே அன்பு கொண்டே வாழ்ந்திடுங்கள்.
3.நல்வாழ்த்து அருளுகின்றேன்… அஜ்ஜெகஜ்ஜோதி வாழ்க்கை வாழ்ந்திடுங்கள் என்றே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தனையோ கொடிய நிலைகளிலிருந்து மீண்டு “எல்லாவற்றிலிருந்தும் மீள வேண்டும் என்ற சக்தி பெற்றவன் தான் மனிதன்…!”

மற்ற உயிரினங்கள்… உதாரணமாக தவளையோ பாம்போ பதுங்கியிருந்து தான் தனக்கு வேண்டிய உணவைப் பிடிக்கிறது. தவளை தப்பித்துக் கொள்ள எண்ணுகிறது. பாம்போ அதைக் குறி வைத்து அப்படியே பார்க்கிறது… பாய்ந்து அதைப் பிடிக்கிறது.
1.தவளையின் தசைகள் பாம்பிற்கு இரையாகிறது
2.ஆனால் தவளையின் உயிரோ பாம்பின் உணர்வைக் கவர்ந்து
3.பாம்பின் கருவிற்குள் சென்று பாம்பாக அடுத்து உருவம் பெறுகிறது.

இதைப் போன்று தான் பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று தாக்கித் தன்னை வளர்ச்சி பெறச் செய்கிறது.

இப்படி ஒவ்வொரு உடலிலேயும் தன்னைப் பாதுகாக்கும் உணர்வுகளை வளர்த்து… வளர்த்து… வளர்த்து… எல்லாவற்றையும் நாம் பாதுகாக்கும் நிலையாக மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனாக ஆன பின் நாம் என்ன செய்கிறோம்…? எதிரியை வீழ்த்தி விட்டு நாம் நன்றாக வாழ வேண்டும் என்று தான் எண்ணி வாழ்கிறோம்.

கடையை வைத்து வியாபாரம் செய்கிறோம். அது நன்றாக இருக்க வேண்டும் என்றால் அடுத்த கடையை அதை எப்படி எப்படி எல்லாம் “சரியில்லை…” என்று சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் செய்வோம்.

1.நம்மை அறியாமலே அவர்கள் சரக்கை மோசம் என்று சொல்வோம். ஆனால் சரக்கு நன்றாக இருக்கும்.
2.அவர் மீது நமக்கு வெறுப்பு இருக்கும்… அதனால் சரக்கை மோசம் என்று தான் சொல்வோம்.

இங்கே இவ்வளவு உயர்ந்ததாகப் பேசினாலும்…
1.மனம் ஒத்திருந்தால் அவர் சரக்கு மட்டமாக இருந்தாலும் கூட…
2.பரவாயில்லை… அவர் சரக்கு நன்றாக இருக்கிறது…! என்று தான் சொல்வோம்.

இந்த உண்மையை எல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடும் கூட இந்த உணர்வு வரும்.

காரணம்…
1.அவர் மீது பற்று இருக்கும் போது அவர் கொண்டு வந்த சரக்கையும் நல்லதாகக் காட்டிவிடும்.
2.ஆனால் அவர் மீது பற்று இல்லை என்றால் அவர் எடுத்துக் கொண்டு வந்த சரக்கையும் மட்டமாகக் காண்பிக்கும்.

இதே உணர்வை அங்கே அடுத்தவரிடமும் பதிவு செய்து விட்டோம் என்றால் அதே நோக்கத்தில் பார்த்தால் “நீங்கள் சொன்னது சரியாகப் போய்விட்டது…!” இந்த உணர்வுகள் தான் அங்கே வந்து பாயும்.

எதிரிக்கு இந்த உணர்வின் அலைகளை மாற்றப்படும் போது இந்த உணர்ச்சிகளை அது மாற்றும். இதன் மேல் பற்று கொண்ட உணர்வு கொண்டு “நம் வார்த்தையைக் கேட்டார்கள்” என்றால் அவர்களுக்கும் அது தான்.

உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வை நீங்கள் பாய்ச்சும் போது அதை மற்றவர்கள் பதிவு செய்து கொண்டார்கள் என்றால் அந்த உயர்ந்த நிலைக்கு அவர்களும் வருகிறார்கள்.

ஆனால் நாம் சொல்வதை…
1.சரியான நிலைகளில் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா… ஏற்றுக் கொள்ள மாட்டார்களா…? என்று இதைக் கலந்து விட்டு
2.அடுத்து நீங்கள் சொன்னீர்கள் என்றால் அங்கே அதை ஏற்றுக் கொள்ளாத உணர்வே வரும்.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் நோய் நீக்கும் அரும் பெரும் சக்தி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் நோய் நீக்கும் அரும் பெரும் சக்தி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

 

மகரிஷிகளின் அருள் ஒளி பெற எனக்கருள்வாய் ஈஸ்வரா… என் உடலில் அறியாது சேர்ந்த “தீய வினைகள் அகன்றிட” அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து கடும் நோய்கள் நீங்கி மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மலரைப் போல மணம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது குடும்பங்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது குடும்பங்களில் அறியாது சேர்ந்த சாப வினைகள் அகன்று அவர்களது குடும்பங்களில் அருள் ஒளி படர்ந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மலரைப் போல மணம் பெற்று அவர்களது குடும்பங்கள் மகிழ்ந்து வாழ அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது உடலில் அறியாது சேர்ந்த வாத நோய்கள் நீங்கி அருள் ஒளியால் அருள் ஞானம் பெற்று அவர்களின் உடல் நலம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது உடல்களில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த சர்க்கரைச் சத்து நீங்கி அருள் சுரபிகள் உருவாகி அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் அணுக்கள் உருவாகி அவர்களது உடல் நலம் பெற்று உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலை பெற்று அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா

இவ்வாறு எண்ணும்போதெல்லாம் உடலில் உள்ள நோய்கள் அது அகன்று செல்வதை உங்களால் உணர முடியும். கடும் நோய்களை நீக்க அனைவரது ஒலிகளும் கேட்ணர்ந்தோர் உணர்வுகளில் படர்ந்து அவர்கள் உடலில் உள்ள கடும் நோய்களும் சர்க்கரைச் சத்தும் இரத்தக் கொதிப்பும் வாத நோயால் உருவான நிலைகளும் விஷத்தால் தாக்கப்பட்டு விஷ உணர்வுகளால் உருவான அணுக்களும் இப்போது அகலும்.

அனைவரும் சேர்ந்து ஓதும் இந்த உணர்வுகள் அனைத்தும் அனைவரது உடல்களிலும் படர்ந்து கடும் நோய்களை நீக்க இது உதவும்.

ஓம் ஈஸ்வரா.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த இரத்தக் கொதிப்பு அகன்று மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்களது உடல்களில் சாந்த உணர்வும் மலரைப் போன்ற மணம் பெற்றிடும் அணுக்கள் வளர்ந்து அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த இருதயங்களில் உள்ள அடைப்புகள் நீங்கி இருதயங்கள் சீராக இயங்கி அருள் ஞான ஒளி படர்ந்து தெளிந்திடும் தெரிந்திடும் மனம் பெற்று மகிழ்ந்திடும் உணர்வு பெற்று அவர்களது வாழ்க்கையில் மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நச்சுத்தன்மைகள் அனைத்தும் அகன்று துருவ மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் விளைந்து மகிழ்ச்சி பெறும் அணுக்கள் அவர்கள் உடலில் விளைந்து மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் உடல் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்து வாத பித்த நோய்கள் அகன்று அருள் ஒளி அவர்கள் உடலிலே படர்ந்து அருள் ஞான அணுக்கள் விளைந்து மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்களது வாழ்க்கையில் மலரைப் போன்ற மணம் பெற்று அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த முடக்கு வாதம் முழங்கால் வாதம் செவி வாதம் மன வாதம் அனைத்தும் அகன்று மகரிஷிகளின் அருள் சக்தி உடல்களில் படர்ந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ்ந்து தெளிந்த மனதுடன் மகிழ்ந்திடும் உணர்வுடன் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய அணுக்கள் மறைந்து அருள் ஞான அணுக்கள் வளர்ந்து அருள் வழியில் அருள் ஞானம் பெற்று வளர்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது உடல்களில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் வந்த வயிற்று வலி நீங்கி மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் ஆற்றல் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது குடும்பங்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது குடும்பங்களில் அறியாது சேர்ந்த சாப வினைகள் நீங்கி தீயவினைகள் நீங்கி அவர்களது குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்து கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும் உலக ஞானமும் உலகைக் காத்திடும் உலக ஞானம் பெற்று உலகில் தீமைகளை மாற்றிடும் அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

இந்நேரம் வரை உபதேசித்த உணர்வை
1.உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.
2.உங்களுக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படர்ந்து
3.இங்கே வந்தோர் உடல்களில் உள்ள கடும் நோய்கள் நீங்கி அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறும் சக்தியாக உங்களில் விளையும்.

நீங்கள் எத்தகைய வேதனையுடன் வந்திருந்தாலும் இப்போது நாம் பாடிய
1.இந்த அருள் உணர்வுகள் அனைவரது உடல்களிலும் கருவுற்று தீய வினைகள் அகன்று
2.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அந்த சக்தி படர்ந்து
3.உங்கள் உடலிலே மகிழ்ச்சி பெறும் நிலையாக நோய்கள் அகன்று
4.உங்களில் அந்த அருள் ஞான சக்தி இப்பொழுது பெருகும்.
5.நோயற்ற வாழ்வு வாழும் அருள் ஞான சக்தி உங்களில் விளையும்.
6.நோயுடன் வந்தோர் நோய்கள் நீங்குவதை இப்பொழுது நீங்கள் உணரலாம்.

கை கால் குடைச்சலோ சர்க்கரை சத்தோ ரத்தக் கொதிப்போ வாத நீரோ மன நோயோ இவை அனைத்தும் அகலும். அருள் ஒளி உங்களில் பெருகும்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர்ந்து உங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் வளர்ந்து உங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் வளர்ந்து உங்கள் பேச்சால் மூச்சால் பிறரை மகிழச் செய்யும் உணர்வு உங்களில் விளையும்.

மகிழச் செய்யும் அணுக்கள் உங்களுக்குள் விளையும்… அருள் ஒளி வளரும்… மெய்ப் பொருளைக் காணும் திறன் பெறுவீர்கள். உங்களுடைய பார்வையால் உங்களுடைய நினைவால் உங்கள் சொல்லால் பிறருடைய துன்பங்களைப் போக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.
1.பிறருடைய துன்பங்களைப் போக்கும் அந்த அருள் சக்தி வலுப் பெற்றால்
2.பிறருடைய துன்பங்கள் உங்களை அணுகாது தடுத்துக் கொள்ள முடியும் “உங்கள் உணர்வால்…”

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து சர்வ ரோகங்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் பெருகி மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று உங்கள் மூச்சும் பேச்சும் உலக மக்களை மகிழச் செய்யும் உணர்வாக வளர சகோதர உணர்வை வளர்த்திட மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி வாழ்ந்திட அருள் சக்திகள் உங்கள் மூச்சலைகளாகப் படர்ந்து உலக மக்களைக் காத்திடும் அருள் சக்தி உங்களிலே விளைந்திட எமது குரு அருளைப் பிரார்த்திக்கின்றேன்.

1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்களில் படர்ந்திட
2.மகிழ்ச்சி பெறும் உணர்வினை வளர்த்திட
3.இந்த உணர்வுகளை உங்கள் உயிரான ஈசன் கவர்ந்து
4.இந்த உயர்ந்த உணர்வுகளை உங்கள் உடலான சிவமாக்கி
5.மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் கண்ணின் பார்வையிலே வெளிப்பட்டு
6.மகிழ்ச்சி பெறும் சொல்லாக அந்த சீதா ராமனாக எண்ணங்கள் தோற்றுவிக்கவும்
7.அருள் ஒளி படர்ந்து உங்களுக்குள் நல்வினையாக விளைந்து
8.நல்ல அரண் உங்களுக்கு உடலாக அமைந்து
9.இந்தப் பிறவியிலேயே அருள் ஞான வழியில் என்றும் பேரின்பப் பெரு வாழ்வு பெறும் நிலையாக
10.நீங்கள் எண்ணியதை உங்கள் உயிரான ஈசன் உருவாக்கி அதையே பிரம்மமாக்கி உங்கள் உடலைச் சொர்க்கலோகமாக்கி
11.உங்கள் உயிரே சொர்க்கவாசலாக அமைத்திட
12.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களில் படர்ந்திட
13.எமது அருளாசி உறுதுணையாக இருந்திட பேரின்ப பெருவாழ்வு வாழ்ந்திட
14.எமது அருளாசியும் குரு அருளும் உங்களுக்குள் உறுதுணையாக விளைந்திட
15.உங்கள் பார்வை தீமைகளை அகற்றிட
16.மெய் வழியைப் பரப்பிடும் ஆற்றல் மிக்கவர்களாக வளர்ந்திட
17.பேரின்ப வாழ்க்கை வாழ்ந்திட
18.இந்த வாழ்க்கையில் என்றும் அழிவில்லா வாழ்க்கை வாழ்ந்திட மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்திட அருள் ஒளி உங்களிலே படர்ந்து
19.உங்கள் மூச்சும் பேச்சும் உலகைக் காத்திடும் உத்தம உணர்வுகளாக விளைந்திட
20.அருள் மகரிஷிகள் உணர்வுகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து அதை வளர்த்திட வளர்ந்திட குரு அருள் உறுதுணையாக என்றுமே இருக்கும்

அருள் வழியில் அருள் ஞான குருவாக… அருள் வழியில் உங்கள் எண்ணங்கள் அருள் ஞானத்தை வளர்த்திடும் அருள் சக்தி உங்களில் வளர்ந்திடப் பிரார்த்திக்கிறேன்… தியானிக்கின்றேன்.

இதைப் படித்துணர்ந்தோர் உடல்களில் கடும் நோய்கள் இப்போது குறைந்திருப்பதைக் காணலாம்… சர்க்கரைச் சத்து நீங்கி உடல் நலம் பெறுவீர்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் நல்ல ரத்தங்கள் உருவாக வேண்டும் அருள் ஞானம் வளர வேண்டும் என்னை அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று இதை அதிகாலையில் துருவ தியானத்தில் ஏங்கிப் பெறுங்கள்

“இப்பொழுது உருவாக்கிய அருள் ஞான வித்தை…” நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் நினைவால் எண்ணும் பொழுது
1.”உங்கள் உயிரே” அதை அணுக்களாக வளர்த்து
2.உங்களை நலம் பெறும் சக்தியாக உங்களுக்குள் வளர்ந்து மன பலம் பெறச் செய்து
3.அருள் ஒளி பெறும்… அருள் ஞான வழியில் என்றும் பேரின்பப் பெரு வாழ்வு வாழும் உணர்வின் உடலாக மாற்றியமைக்கும் “உங்கள் உயிர்”

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது
1.எண்ணியதை உருவாக்குவது உயிரே (ஈசன்)
2.எண்ணியதை உடலாக்குவதும் உயிரே
3.எண்ணியதைக் காத்தருள்வதும் உயிரே
4.ஆண்டவனாக இருப்பதும் உயிரே
5.நம்மை அரண் போல் காத்து நம்மைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும் உயிரே.

மனிதன் ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது நிலைக்குத் தான் செல்ல வேண்டும்… ஐந்து அறிவுக்கல்ல…!

மனிதன் ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது நிலைக்குத் தான் செல்ல வேண்டும்… ஐந்து அறிவுக்கல்ல…!

ரிஷிகளுடன் இணைந்த நிலையில் சூட்சும உலகத்திற்குச் செல்லும் தன்மைக்கு வருவதற்குத் தான் இந்தப் போதனைகள் எல்லாம் இங்கே கொடுக்கப்படுகிறது.

மனிதச் சரீரத்தில் உள்ள பொழுது கோபம் குரோதம் கடும் விஷம் கலந்த சூட்சுமத்தன்மை இந்நிலை எல்லாம் மனதினைச் செலுத்திய மனிதர்கள் அவர்கள் உடலை விட்டு ஆவி பிரிந்த நிலையில்
1.அவர்கள் உடலுடன் உள்ள பொழுது எந்த நிலையில் சுவாசம் பெற்று சப்த அலைகளை வெளியிட்டார்களோ
2.அந்த நிலையிலேயே அவர்களின் ஆவியைச் சுற்றி அவர்கள் வெளியிட்ட சப்த அலைகளும் சுற்றிக் கொண்டே உள்ள தன்மையில்
3.அந்நிலையில் உள்ள மிருகத்தின் நிலையும் அம்மிருகம் எடுக்கும் சுவாச அலையும்
4.அம்மிருகத்தைச் சுற்றிக் கொண்டே உள்ள மிருகத்தின் சப்த அலையும் ஒரே தன்மையில் உள்ள பொழுது
5.ஒன்றை ஒன்று எதிர்ப்படும் தன்மையில் இரு சப்த அலைகளும் ஒன்றுபட்டு இம்மனிதனின் உயிரணு அந்த மிருகத்தின் உடலுடன் செல்கின்றது.

இந்நிலையில் அம்மிருகத்தின் ரத்த நாளங்களில் கலந்து மிருகத்தின் ஜனனத்திற்கும் இம்மனிதன் வருகின்றான். மிருகமாகப் பிறக்கும் தன்மைக்கு வந்து… மனிதன் மிருக நிலைக்கும் வருகின்றான் என்பதின் பொருள் இதுவே.

சில ஆவிகளின் நிலை மிருக உடலுக்கு வந்த பிறகு அம்மிருகத்தின் ஆயுட்காலம் முடிந்து அந்த மிருகம் இறக்கும் வரை அவ்வுடலில் இருந்து வெளிப்படும் நிலையில் பிற ஒரு ஜென்மத்திற்கு மனிதச் சரீரம் எடுக்கும் தன்மை அற்று மிருக ஜனனத்திற்குத் தான் வரமுடிகிறது அவ்வாவியினால்.

ஆனால் மிருக உடலுக்குச் சென்ற உயிரணு ஏன் அந்த உடலில் இருந்து வெளிப்பட முடிந்திடாதா…? என்று எண்ணிடலாம்.

மிருக உடலுக்குச் சென்ற பிறகு மிருகத்தின் சுவாச நிலை மாறுபட்டால் தான் அவ்வாறு வெளிவர முடிந்திடும்.
1.மிருகத்தின் எண்ணம் ஒரே நிலையில் இருக்கும் போது
2.இந்த மனித உயிரணு எப்படி மீண்டும் வெளிவர முடிந்திடும்…?

ஆக்ரோஷம் கொண்ட இம்மனித ஆவிகள் எல்லாம் மிருகமாகவே தான் மிருகத்தின் சப்த அலையுடன் கலந்து மிருகமாகவே செல்கிறது என்பதல்ல.

மிருக சரீரத்திற்குள் சென்ற உயிரணுக்கள் அதே சரீரத்தில் அம்மிருகம் எடுத்த சுவாச நிலையையே தானும் பெறுவதால் அம்மிருகத்தின் உடல் பழுதுபட்டவுடன் இவ் உயிரணுக்களின் நிலை எல்லாம் புழுவாகின்றன.

சில உயிரணுக்கள் வெளிப்பட்டு அம்மிருகத்தின் உடலுடன் உள்ள நிலையில் எந்த நிலை கொண்ட சுவாச அலைகளைப் பெற்றதோ அதே நிலையில் தான் மிருக ஜனனத்திற்கு வருகிறது.

மனிதனின் உயிரணுக்கள் மட்டும் மிருகத்தின் சுவாச நிலைக்குச் செல்கிறது என்பதல்ல. மிருகத்தின் உயிரணுவும் மனிதனின் சரீரத்தில் வந்து தாக்கும் தன்மை உள்ளது.

இம்மனிதன் எடுக்கும் சுவாச நிலையில் மிருகத்தின் குணங்கள் பெற்று கோபம் வெறி குரோதம் இந்நிலை கொண்ட உணர்வுகளைப் பெற்ற மனிதர்களின் உடலில்
1.இவன் எடுக்கும் சுவாச நிலைக்கும் அம்மிருகத்தின் சுவாச நிலைக்கும் ஒன்று படும்பொழுது
2.மிருகத்தின் உயிரணு மனிதனின் உடலில் செல்லும் நிலையில் அம்மனிதனையே அவ்வுயிரணு மிருகமாக்கும் தன்மையில்
3.மனித உடலில் மிருக உயிரணுக்களின் தாக்குதலைப் பெற்று… மிருகத்தின் குணநிலைக்கு அம்மனிதனின் நிலையும் செல்வதனால்
4.அம்மனிதனின் நிலை மிருகத்தின் குணத்திலிருந்து மாறுபட முடியாமல்
5.மென்மேலும் விரோதத்தையும் வெறியையும் அதிகமாக்கி வாழும் நிலைக்குத்தான் மனிதனின் தன்மையும் வருகிறது.

அந்நிலையில் இருந்து மீண்டு… மனிதன் மனிதனாகவே வாழும் தன்மைக்கு வர அன்பு பாசம் என்ற சாந்தமான நிலையில்…
1.கோபம் துவேஷம் வஞ்சம் இப்படிப் பல கெட்ட குண நிலைகளைத் தன்னை விட்டகற்றி…
2.தனக்குள் அவ்வன்பே தெய்வமான… அன்பென்னும் தெய்வ சக்தியைப் பெற்று வாழ்ந்திடும் நிலையில்தான் மீண்டு வந்திட முடியும்.

ஒரு பாதுகாப்புக் கவசத்தை நாம் உருவாக்க வேண்டும்

ஒரு பாதுகாப்புக் கவசத்தை நாம் உருவாக்க வேண்டும்

 

உபதேசங்களை நான் (ஞானகுரு)
1.“வேகமாகச் சொல்கிறேன்…” என்றால்
2.யார் அதைக் கூர்மையாக்க் கவனித்துப் பின்பற்றி வருகின்றார்களோ அவர்களுக்கு இது கிடைக்கும்.

“என்னமோ” சாமி சொல்கின்றார். அவரிடம் தலைவலிக்கும் மேல் வலிக்கும் ஆசீர்வாதம் வாங்கினால் போதும் என்று ஒரு சிலர் இருக்கலாம். சரி அதுவெல்லாம் நீங்கிவிடும் என்று சொன்னால் இப்பொழுது நீங்கி விடுகின்றது ஆனால் இரவு படுக்கப் போகும் பொழுது எனக்குத் தூக்கமே வரவில்லை என்று கேட்பார்கள்.

வேதனை இருக்கும் பொழுது தான் தூக்கம் வரவில்லை நன்றாகிப் போகும் தூக்கம் வந்துவிடும் என்று சொன்னால்
1.இப்பொழுது சரிங்க…! இராத்திரிக்குத் தூங்கப் போகும் பொழுது தூக்கம் வராது என்று
2.மறுபடியும் இழுத்துக் கொள்வார்கள்… இப்படியும் உள்ளார்கள்.

உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் இங்கே தபோவன மண்டபத்திலே படரப்பட்டுள்ளது. தியானித்த பின் வீட்டுக்குப் போக வேண்டும் என்ற நிலையைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு “இங்கேயே படுத்திருந்து” அந்த அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

அருள் உணர்வை உங்களுக்குள் வளர்த்திட ஏதுவாக இருக்க வேண்டும் என்று தான் நேரத்தையும் காலத்தையும் கடத்திச் சென்று எப்படியும் இங்கே முடங்கிப் படுத்துவிட்டு… “காலையில் செல்லலாம்” என்ற எண்ணத்தை தோற்றுவிக்கத் தான் இவ்வாறு செயல்படுத்துவது.

இங்கே இருக்கப்படும் பொழுது
1.அருள் உணர்வுகளை “ஓ” என்று ஜீவ அணுவாக மாற்றி “ம்” என்று உடலாக ஆக்கி
2.அருள் உணர்வின் சக்திகளை உங்களுக்குள் கூட்டிக் கொள்வதற்கே இதைச் செய்கின்றேன்.

மணிக்கணக்கில் பேசி அந்த உணர்வின் அணுக் கருக்களாக மாற்றுவதற்குத் தான் இதைச் செய்வது. உங்களிடம் பேசிச் சொல்லும் போது
1.எனக்குள்ளும் அணு கருக்களாக விளைகின்றது… நுகர்ந்தவர் உணர்வுக்குள்ளும் அந்த அணுக்கள் விளைகின்றது.
2.தீமை அகற்றும் சக்திகளாக நமக்குள் பெருகுகின்றது
3.நாம் விடும் மூச்சலைகள் அனைத்தும் தீமைகளை அகற்றிடும் சக்தியாகப் பரவுகின்றது.

விஞ்ஞான உலகில் எத்தனையோ விஷமான கதிரியக்கப் பொறிகளை விண்ணிலே செலுத்தி விட்டதால்… அவ்வாறு பரவப்பட்ட அந்தக் கதிரியக்கங்களினால்… விஷத்தைத் தடுத்து நிறுத்தும்… நம் பூமிக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன் திரையும் கிழிந்து விட்டது…”

ஆகையினால் விண்ணிலிருந்து வரும் விஷங்கள் அதிலே வடிக்காதபடி நேரடியாக இங்கே வந்து கொண்டிருக்கின்றது… நம்முடைய காற்று மண்டலத்தில் படர்கின்றது.

எங்கெங்கெல்லாம் இது படர்கின்றதோ விஷத்தன்மை கொண்ட எண்ணங்கள் கொண்டோர் உணர்வுகளிலும் துரித கதியில் பரவுகின்றது… அவர் உடல்கள் பாதிக்கப்படுகின்றது.

ஓசோன் திரை கிழிந்திருந்தாலும்
1.நாம் கூட்டு தியானங்கள் இருந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பரப்பி விட்டால்
2.நம் உணர்வுகள் வலுப்பெறும் போது ஒதுக்கித் தள்ளி தீமைகள் வராது தடுக்கும் தன்மை வரும்.

தனி ஒரு மனிதனால் முடியாது…! நாம் பலரும் சேர்த்து ஆங்காங்கு கூட்டு தியானங்கள் நடத்தி மகரிஷிகளின் அருள் உணர்வுகளை பரப்பிக் கொண்டால் “நமக்கு ஒரு பெரிய பாதுகாப்புக் கவசமாக மாறுகின்றது…”

நஞ்சின் தன்மை வந்தாலும் அந்த அருள் ஒளியைப் பெறும் தகுதி பெறுகின்றோம். அதை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உங்களுக்குள் சொல்வது.

விஞ்ஞான அறிவு கொண்டு பல நிலைகள் செயல்பட்டு இருந்தாலும் மெய் ஞான அறிவு கொண்டு அதை வெல்ல முடியும் அந்த மெய்ஞான அறிவை உங்களுக்குள் வளர்க்கலாம்.
1.நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குள் விளைந்து
2.அதை எல்லாம் நீங்கள் பெறும் தகுதியாக இப்போது உருவாக்குகின்றோம்.

ஆகவே எண்ணிய உணர்வை “ஓ” என்று ஜீவனாகி “ம்” என்று அணுவாக உருவாக்கும் ஈசனை மதிப்போம். அவனே நமக்குள் இருந்து இயக்குகின்றான் என்ற நிலையில் அவன் நாமத்தைச் சொல்வோம்.

நாம் எண்ணிய உணர்வுகள் கடவுளாக இயக்குகின்றது. ஆகவே
1.அருள் ஒளியை எண்ணும் பொழுது “ஓ – ம்” என்று ஜீவ அணுவாக மாற்றி
2.அதுவே கடவுளாக இருந்து தீமையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.

மனிதனாகப் பிறந்ததைப் பெரும் பாக்கியமாக எண்ணி இதற்கடுத்த நிலை அடைய முயற்சிக்க வேண்டும்

மனிதனாகப் பிறந்ததைப் பெரும் பாக்கியமாக எண்ணி இதற்கடுத்த நிலை அடைய முயற்சிக்க வேண்டும்

 

பல நிலைகளில் பல உயிரணுக்கள் காற்றிலும் பூமியிலும் பூமி மட்டத்திற்குக் கீழ் நிலையிலும் உள்ளன. ஜீவன் பெற்றும் உள்ளன.

பல உயிரணுக்கள் அச்சூரியனின் சக்தி பெற்று இவ்வுலகைச் சுற்றிப் பறந்த நிலையிலும் பறந்து கொண்டே தன் எண்ணத்தையும் செயலையும் ஈடுபடுத்தும் நிலை பெற ஆவல் கொண்டு சுற்றிக் கொண்டுள்ளன.

இவ்வுலகில் இப்புண்ணிய பூமியில் மனிதர்களாக வாழும் நாம்… நாம் பெற்ற பாக்கியமாக இதைக் கருதி நல்லுணர்வு பெற்று நாம் பெற்ற பாக்கியத்தைப் போற்றி வாழ்ந்திட வேண்டும்.

இம்மனித சக்திக்கு…
1.இவ்வுலகம் இவ்வுலகைப் போல் உள்ள மற்ற உலகங்கள் மற்ற மண்டலங்கள்
2.எல்லாவற்றையுமே அறிந்து கொள்ளும் பாக்கியம் பெற்றுள்ளார்கள்.

தான் பெற்ற பாக்கியத்தை அறிந்து வாழ்ந்திடாமல் ஆண்டவன் என்பவனையே பல வழிகளில் எண்ணி ஏற்கின்றார்கள். எவ்வழி எண்ணி ஏற்றாலும் நல்வழியில் நம் வழியைத் தவறுக்கு அடிபணிய வைத்திடாமல் ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் பெற வேண்டும்.

மந்திரம் மாயம் பில்லி சூனியம் ஏவல் வித்தைகள் ஜாதகம் ஜோதிடம் ஆருடம் இப்படிப் பல வழிகளை நம்பி தன்னையே அதற்கு அடிமையாக்கி தன்னுள் பல ஆசை நிலைகளை வளர்த்துக் கொண்டு பல அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்ந்து என்ன பயன்…?

1.பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலை ஏன் நமக்கு…?
2.அச்சக்தி நம்முள் இல்லையா…? என்ற எண்ணம் கொண்டு நம்மை நாமே பிறருக்கு அடிமைப்படுத்திடாமல்
3.பயம் கொண்ட வாழ்க்கை வாழ்ந்திடாமல் நம் எண்ணத்தை நாம் சுத்தமாக்கிக் கொண்டு
4.மகரிஷிகளின் சக்தியை நாம் பெற்று வாழும் வாழ்க்கையை விட்டு
5.ஏன் பல நிலைகளை எண்ணி நம்மை நாமே அடிமைப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்…?

மனித சக்திக்கு எல்லா உயிரினங்களையும் அறிந்து வாழும் நிலை உள்ளது. அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு நன்மையும் தீமையும்… நன்மை தீமை என்பன நல்ல அணுக்களையும் தீய அணுக்களையும் நம்முள் ஈர்த்து எடுக்க முடியும்…. பல ஆவிகளின் தொடர்பையும் நாம் பெற முடியும்.

நல்ல ஆவிகளும் துர் ஆவிகளும் சுற்றிக்கொண்டே உள்ள இந்த உலகில் நாம் எடுக்கும் நினைவைக் கொண்டு… எந்த ஆவியினுடைய தொடர்பையும் நம்மில் ஈர்த்து அவ்வாவியின் நிலை அறிந்து அவ்வாவிக்கு உகந்த மணங்களை அதற்கு நாம் அளித்து… அவைகளை நம் ஏவலுக்கு நாம் கட்டுப்படுத்திப் பல நிலைகளை அறிந்து கொள்ள அதனுடைய தொடர்பை நாம் வைத்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் நாம் வைத்துக் கொண்டால் அதனுடைய செயல் திறன் நாம் அதை ஏற்கும் நிலை கொண்டு… அவை நமக்கு எல்லா நிலைகளையும் உணர்த்திக் கொண்டே வரும்.

அதன் நிலைக்கும் நம் நிலைக்கும் சிறு மாற்றம் கண்டால் அதன் நிலை மாறுபட்டு அது நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்ததோ அந்த நிலை கொண்டே தீங்கும் செய்து விடும்.

பில்லி சூனியம் ஏவல் இப்படிப் பல நிலைகள் எல்லாம் பல ஆவிகளின் வசியத்தால் வருபவைகள் தாம்.
1.இந்த நிலையில் அடிமைப்பட்டு வாழ்பவர்களுக்குத் தன் ஆத்மாவிற்கு உகந்த நிலையைச் சேமிக்கும் தன்மை அற்றுப் போகின்றது.
2.தான் செய்யும் வினையே தன்னை வந்து தாக்கும் என்று அறியாமல் செய்யும் நிலை தான் இவைகள் எல்லாம்.

ஒவ்வொரு மனிதரும் இவ்வுலகில் வந்து பிறக்கவே பெரும் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்.

காரணம்… ஆவி உலகில் பல நாட்கள் பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டே தன் எண்ணத்தையும் செயலையும் ஈடேற்ற எத்தனையோ காலங்கள் தவம் பெற்று இவ்வுலகில் பிறக்க ஆவல் கொண்டு விட்ட குறையை முடிக்க வந்து பிறக்கும் தாம்… தாம் பிறந்த பயனையே எண்ணிப் பார்க்காமல் பிறகும் பல இன்னல்களுடன் பல ஆசை நிலையில் இப்பிறவியில் தான் பெற்ற பாக்கியத்தை எண்ணி…
1.இப்புவியில் தான் பிறக்க இப்புவியாளும் ஈசனின் சக்தியைப் பெற்றுப் பிறந்துள்ளோம் என்று உணர்ந்து
2.தாம் எடுத்த பிறவியை எந்த நிலை கொண்டு நாம் போற்றி வணங்கிட வேண்டும் என்று உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்.

நரசிம்மா

நரசிம்மா

 

உதாரணமாக நாம் ஒரு ஆசையில் வலிமையாகச் சிக்கி விட்டால் அதை அடக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. அப்போது நாம் நுகரும் உணர்வுகள் அசுத்த அணுக்களாகப் பெருகி மீண்டும் இழிநிலையான சரீரத்திற்கு அழைத்துச் சென்றுவிடும்.

சீதாராம் பரசுராம் என்றால் இந்த எண்ணங்கள் தான். ஆக எந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ சூரியன் அதைச் சீதாலட்சுமியாக மாற்றுகின்றது. அதை நுகர்ந்தால் திரேதா யுகத்தில் நாராயணன் சீதாராமனாகத் தோன்றுகின்றான்… “எண்ணம்…”

இப்படி மனிதனான பின்
1.பல உணர்வுகளைச் சேமித்து அந்த உணர்வின் அறிவாக இயக்கக்கூடிய நிலைகள் கொண்டு
2.மனித உடலில் பல எண்ணங்களை வைத்து இயக்கும் சக்தி வருகின்றது.

பல பல சரீரங்களைச் சேர்த்துக் கொண்டு மனிதன் முழுமையாகும் உணர்வும் நஞ்சினை வென்றிடும் உணர்வும் நமக்குள் சேமித்து மனிதனாக உருவாக்கும் ஆற்றல் பெறுகின்றது.

இது தான் பலராம் பல எண்ணங்கள் வைத்து நாம் இயக்கும் தன்மை வருகின்றது. ஆனால்
1.இவை அனைத்தும் தீமைகளை அகற்றிடும் நரசிம்மனாக மாற வேண்டும்.
2.அதாவது பலவற்றையும் நாம் உணர்ந்தாலும் தீமையை அககற்றும் நரசிம்மனாக மாறினால் தான்
3.நாம் அழியாத நிலைகள் பெற முடியும்.

நமது உயிர் பலவற்றை உருவாக்கினாலும் தீமைகளை வென்றிடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்… நம் உயிரிலே அந்த உணர்வுகள் மோதப்பட்டு… இந்த உணர்வுகள் உடலுக்குள் பரப்பப்படும் பொழுது தீமைகள் அடைபடுகிறது… “அத்தகைய நஞ்சு அடக்கப்பட வேண்டும்…”

நாம் நுகர்ந்த உணர்வுகள் முதலில் நம் ஆன்மாவாக மாறுகின்றது பிறருடைய தீமைகள் ஆன்மாவாக அவ்வாறு மாறுவதை…
1.நரநாராயணன் – நம் உயிர் நரசிம்மனாக மடி மீது இரண்யனை வைத்து
2.வாசல்படி மீது உயிர் இங்கே அமர்ந்து தீமைகளைப் பிளந்தான்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் மகரிஷிகள் உணர்வை நுகர்ந்து அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி விட்டால் விஷம் கொண்ட நிலையை அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அடக்குகின்றது.
1.அடக்கப்படும் பொழுது அந்த அணுக்கள் உணவு கிடைக்காது தவிக்கின்றது
2.அதற்கு ஈர்க்கும் சக்தி அப்பொழுது குறைகின்றது.
3.அப்போது தீமையைப் பிளக்கும் நிலையாக அது அமைந்து அந்த்த் தீமைகள் பிரிக்கப்படுகிறது.
4.தீமைகள் பிரிக்கப்பட்டு அகன்று செல்கின்றது… ஒளியான உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது.

இதைத்தான் மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன் பிளந்தான் என்று காட்டுகின்றார்கள். அதாவது…
1.நாம் கை கால் அங்கங்கள் கொண்டு மற்ற வேலைகளைச் செய்வது போன்று
2.ஞானிகளின் நினைவு கொண்டு அருள் உணர்வுகளை நுகர்ந்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.அதனுடைய வலிமை கொண்டு அடக்கப்படும் பொழுது தீமைகளை ஈர்க்கும் தன்மை இழக்கப்படுகிறது.

ஆகவே வேதனைப் படுவோரைப் பார்த்தால் அடுத்த கணம் ஆத்ம சுத்தி செய்து மாற்றிடல் வேண்டும்.

காரணம் வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்தால் கருவிழி ஊழ்வினை என்று வித்தாகப் பதிவாக்குகின்றது. ஊழ்வினையாகப் பதிவானால் மீண்டும் அதைத்தான் நுகர வேண்டி வரும். உயிரிலே பட்டு அதன் உணர்வின் அறிவாக இயக்கி விடுகின்றது அதுவே உடலுக்குள் வேதனைப்படச் செய்யும் அணுவாக மாறி விடுகின்றது.

நாம் இதை மாற்றி அமைக்க முடியும்… மாற்றி அமைக்க வேண்டும். அகஸ்தியன் இதையெல்லாம் மாற்றி அமைத்தவன். அதை நீங்கள் எல்லோரும் பெற முடியும்… பெற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

இனி வரக்கூடிய காலங்கள் மோசமாக இருக்கும் நேரத்தில் உங்களைக் காத்திடும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே இதை மீண்டும் மீண்டும் பல கோணங்களில் உபதேசிப்பது.

இந்த உணர்வின் வலிமையை நீங்கள் சேர்ப்பித்து தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்/ இந்த உடலை விட்டு அகன்றால் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்பதற்கே இதைத் தெளிவாக்குகின்றேன்.

ஆறாவது அறிவால் தீமைகளை அகற்றிடும் எண்ணங்களை எண்ணினால் கண்ணின் நினைவுக்கே வருகின்றது
1.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி விண்ணை நோக்கி ஏகும் பொழுது
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகள் நம் ஈர்ப்புக்குள் வருகிறது
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அவ்வாறு உடலுக்குள் பெருக்கி தீமைகளைப் பிளப்பது தான் நரசிம்மா…!

பல ரிஷிகளும் ஞானிகளும் இன்றும் இந்தப் பூமிக்குள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்

பல ரிஷிகளும் ஞானிகளும் இன்றும் இந்தப் பூமிக்குள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்

 

ஒரு இயேசுநாதரும் வால்மீகி முனிவரும் திருவள்ளுவரும் திருஞானசம்பந்தரும் நயம்பட உரைத்த ஔவையாரும் இப்படி மக்களுக்கு உபதேசிக்க நல்வழி புகட்ட ஒவ்வொருவர் தோன்றியதாகத் தான் நாம் அறிகின்றோம்.

அவர்கள் பிறவி எடுத்து பல உன்னத நூல்களை நமக்கு உணர்த்திவிட்டுத் தன் நிலையில் ஜெபம் பெற்று… மறு உடலை எடுக்காமல் சூட்சும உலகில் சுழன்று கொண்டே உள்ளனர் என்பது மட்டும் உண்மையல்ல.
1.அவர்கள் எடுத்த பிறவிப் பயனால் இன்றும் பல உடல்களை ஏற்று
2.மக்களுக்காகப் பல நல்ல உபதேசங்களையும் பல அருளாசிகளையும் வழங்குகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து
3.நமக்கு முன் தோன்றிய பல ரிஷிகளும் ஞானிகளும் எப்படி நமக்கு நல் அருளை அளிக்கின்றார்கள் என்பதனை உணர்ந்து
4.நாமும் அந்த ஜெப அருள் பெற்று நம் ஜென்மத்தில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் நம் எண்ணத்திற்கும் உகந்தபடி நல் எண்ணம் கொண்டு
5.அச்சூட்சும உலகில் கலந்துள்ள பெரியோர்கள் நம்முள் வந்து நமக்குப் பல வழிகளைப் புகட்டும் பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நம் உயிராத்மாவிற்கு நாம் சேர்க்கும் நல் சொத்தாக அதை நாம் ஏற்று நாமும் இவ்வுடலை விட்டுப் பிரிந்து சூட்சும உலகிற்குச் செல்ல நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்வது இப்பெரியோர்களின் அருளைப் பெற்று வாழ்வதுவே.

பிறரின் எண்ணமும் பிறரின் தூண்டுதலும் நம்மை வந்து அண்டாமல் நம் அறிவில் நம் உணர்வில் நாம் பல உண்மைகளைப் பெற்று அறிந்திட வேண்டுவது தான் நம்மை நாமே எண்ணி வாழ்வதுதான் என்ற நிலை கொண்ட நிலைக்கு ஒன்றுடன் ஒன்று கலந்துள்ள இவ்வுலகினிலே ஒன்றி
1/நாம் நல்லோரின் ஆசி பெறுவது என்பது
2.சூட்சும நிலை பெற்ற பெரியோர்களின் ஆசி பெறுவதே.

பால் புகட்டத் தாய் பாடம் புகட்ட குரு வாழ்ந்திட மனைவி வளர்த்திட மக்கள் என்று… ஒன்றுடன் ஒன்று நம்மை நாம் பிணைத்து வாழும் நிலையில்… நான் என்ற தனி நிலையில் இல்லாத நாம்… “அப்பெரியோர்களின் அருளாசி பெற்று வாழ்வதே” நம் உயிரணுவிற்கு நாம் பெறும் பெரும் சொத்து தான்.
1.நம்மை இயக்கிச் செல்வதுவே அப்பெரியோர்களின் ஆசி தான் என்று உணர்ந்து
2.நான் என்று நிலைப்படுத்தி வாழ்ந்திடாமல் நல் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.