
“ஜெகஜ்ஜோதியான” வாழ்க்கை வாழ்ந்திடுங்கள் என்றே நல்வாழ்த்து அருளுகின்றேன் – ஈஸ்வரபட்டர்
அன்புருவம் கொண்ட அன்னை தந்தையின் அருளில் அருள் பெற்ற சக்தியின் “சத்தியச் செல்வங்களே…!”
1.இப்பாடத்தைப் படித்திடும் நீங்கள் எல்லோருமே
2.அன்பே தெய்வமான அந்த இராம நாமத்தை ஒத்த அன்புடன் கூடிய குணவானாகவும்
3.ஸ்ரீமுருகனின் அழகென்னும் அருள் செல்வச் சொல்லாற்றல் உடைய சிங்கார வடிவனின் வடிவழகுக் குமாரர்களைப் போலவும்
4.கலைமகளின் கல்வி அருள் பெற்று மகாலட்சுமியின் செல்வத்திறன் பெற்று வீர குணமுடைய ஆஞ்சநேயரைப் போலவும்
5.விளையாட்டின் வடிவத்திலே மன நிலையைக் களிப்புடன் களித்தாட்டும் கிருஷ்ணனின் குணநிலையைப் போலவும்
6.இப்படி ஒவ்வொரு சித்தர்களுக்கும் தகுந்த நிலையில் நமக்குக் குண நிலைகளைப் போதித்த “நம்மை ஆண்டவனாக எண்ணி வணங்குவதற்கு”
7.நாம் எந்தெந்த குணநிலைகளைப் பெற்று நல்வாழ்க்கை வாழ்ந்திடலாம் என்பதற்குகந்த குண நிலைகளைப் போதித்து
8.நமக்கு வழிகாட்டிய சகல ரிஷிகளுக்கும் பல நிலை பெற்ற அன்பே தெய்வமான பல பெரியோர்களுக்கும் ஞானிகளுக்கும்
9.நம்முடனே கலந்துள்ள நமக்காக வாழ்ந்திடும் பல சித்தர்களுக்கும்
10.நாம் இன்று இந்நூலின் வடிவத்தில் சொல்லி வரும் பல உண்மைகளுக்கு நம்முடைய அன்பைக் காட்டி
11.”நமக்கு நல்ல ஆசி வழங்கிட வேண்டிக் கொண்டே” இந்த நூலைப் படிப்போமாக.
சக்தியின் நிலை இவ்வுலகில் உதித்த இவ்வுலகில் பிறந்த எல்லா உயிரணுக்களுக்கும் “ஒவ்வொரு திறமையில் திறமை பெற்றுத் தான்” இப்பூவுலகில் வந்து பிறக்கின்றன.
மனிதன் மிருகங்கள் பட்சிகள் செடி, கொடி, புழு பூச்சி எல்லாவற்றிற்குமே இச்சக்தியின் அருளில் “ஒவ்வொரு திறன் கொண்டு தான்” சக்தி பெற்றே இப்பூமண்டலத்தில் வந்து பிறக்கின்றன.
இந்நிலையில் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்ற நாம் நம் சக்தியை நம் திறனை நம் எண்ணத்தைப் பல வழிகளில் சிதற விட்டு நாம் பெற்ற பாக்கியத்தை இழந்து வாழும் நிலையில் தான் இன்று இவ்வுலகினிலே வாழ்கின்றோம்.
இச்சக்தியின் அருளில் ஒவ்வொருவருக்கும் செயலாற்றும் தன்மையிலே ஒவ்வொரு திறனும் உண்டு. மனிதனாகப் பிறவி எடுத்த நமக்கு அச்சக்தியின் அருளில் மற்ற மிருக ஜந்துகளுக்கு இல்லாத நிலையான செயலாற்றும் தன்மையில்…
1.நமக்கு இரண்டு கைகளையும் சொல்லாற்றல் உடைய சொற்களைப் பேசும் திறன் உள்ள நாம்
2.நமக்கு அளித்த அத்திறனை ஒரே நிலை கொண்டு நம் எண்ணங்களைச் சிதறவிடாமல்
3.அவ்வெண்ணத்தை ஒரே நிலைப்படுத்தி செயலாற்றல் உடையவனாக இருந்திடல் வேண்டும்.
பெரும் உன்னத நிலை அடையும் பொக்கிஷத்தை மறந்து வாழும் வாழ்க்கையை “நாம் இனி மாற்றி வாழ வேண்டும் என்ற ஆவலினால்…” நமக்குள் இருக்கும் ஈசனின் சக்தியைக் கண்டு வாழ்வதற்காக ஒவ்வொருவரும் ஜெபம் பெற்று… இப்புண்ணிய பூமியையே புனிதமாக்கும் தன்மையில் அன்பு கொண்டே நல்வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்… ஜெப நிலையில் இருந்திடுங்கள்.
1.இப்பாடங்கள் படித்து வரும் ஒவ்வொருவரும் அச்சக்தியின் அருள் பெற்று
2.சகல சித்தர்களும் நமக்குள் வந்து அருள் புரியும் தன்மையில் அருள் பெற்றே அன்பு கொண்டே வாழ்ந்திடுங்கள்.
3.நல்வாழ்த்து அருளுகின்றேன்… அஜ்ஜெகஜ்ஜோதி வாழ்க்கை வாழ்ந்திடுங்கள் என்றே…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
எத்தனையோ கொடிய நிலைகளிலிருந்து மீண்டு “எல்லாவற்றிலிருந்தும் மீள வேண்டும் என்ற சக்தி பெற்றவன் தான் மனிதன்…!”
மற்ற உயிரினங்கள்… உதாரணமாக தவளையோ பாம்போ பதுங்கியிருந்து தான் தனக்கு வேண்டிய உணவைப் பிடிக்கிறது. தவளை தப்பித்துக் கொள்ள எண்ணுகிறது. பாம்போ அதைக் குறி வைத்து அப்படியே பார்க்கிறது… பாய்ந்து அதைப் பிடிக்கிறது.
1.தவளையின் தசைகள் பாம்பிற்கு இரையாகிறது
2.ஆனால் தவளையின் உயிரோ பாம்பின் உணர்வைக் கவர்ந்து
3.பாம்பின் கருவிற்குள் சென்று பாம்பாக அடுத்து உருவம் பெறுகிறது.
இதைப் போன்று தான் பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று தாக்கித் தன்னை வளர்ச்சி பெறச் செய்கிறது.
இப்படி ஒவ்வொரு உடலிலேயும் தன்னைப் பாதுகாக்கும் உணர்வுகளை வளர்த்து… வளர்த்து… வளர்த்து… எல்லாவற்றையும் நாம் பாதுகாக்கும் நிலையாக மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.
ஆனால் மனிதனாக ஆன பின் நாம் என்ன செய்கிறோம்…? எதிரியை வீழ்த்தி விட்டு நாம் நன்றாக வாழ வேண்டும் என்று தான் எண்ணி வாழ்கிறோம்.
கடையை வைத்து வியாபாரம் செய்கிறோம். அது நன்றாக இருக்க வேண்டும் என்றால் அடுத்த கடையை அதை எப்படி எப்படி எல்லாம் “சரியில்லை…” என்று சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் செய்வோம்.
1.நம்மை அறியாமலே அவர்கள் சரக்கை மோசம் என்று சொல்வோம். ஆனால் சரக்கு நன்றாக இருக்கும்.
2.அவர் மீது நமக்கு வெறுப்பு இருக்கும்… அதனால் சரக்கை மோசம் என்று தான் சொல்வோம்.
இங்கே இவ்வளவு உயர்ந்ததாகப் பேசினாலும்…
1.மனம் ஒத்திருந்தால் அவர் சரக்கு மட்டமாக இருந்தாலும் கூட…
2.பரவாயில்லை… அவர் சரக்கு நன்றாக இருக்கிறது…! என்று தான் சொல்வோம்.
இந்த உண்மையை எல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடும் கூட இந்த உணர்வு வரும்.
காரணம்…
1.அவர் மீது பற்று இருக்கும் போது அவர் கொண்டு வந்த சரக்கையும் நல்லதாகக் காட்டிவிடும்.
2.ஆனால் அவர் மீது பற்று இல்லை என்றால் அவர் எடுத்துக் கொண்டு வந்த சரக்கையும் மட்டமாகக் காண்பிக்கும்.
இதே உணர்வை அங்கே அடுத்தவரிடமும் பதிவு செய்து விட்டோம் என்றால் அதே நோக்கத்தில் பார்த்தால் “நீங்கள் சொன்னது சரியாகப் போய்விட்டது…!” இந்த உணர்வுகள் தான் அங்கே வந்து பாயும்.
எதிரிக்கு இந்த உணர்வின் அலைகளை மாற்றப்படும் போது இந்த உணர்ச்சிகளை அது மாற்றும். இதன் மேல் பற்று கொண்ட உணர்வு கொண்டு “நம் வார்த்தையைக் கேட்டார்கள்” என்றால் அவர்களுக்கும் அது தான்.
உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வை நீங்கள் பாய்ச்சும் போது அதை மற்றவர்கள் பதிவு செய்து கொண்டார்கள் என்றால் அந்த உயர்ந்த நிலைக்கு அவர்களும் வருகிறார்கள்.
ஆனால் நாம் சொல்வதை…
1.சரியான நிலைகளில் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா… ஏற்றுக் கொள்ள மாட்டார்களா…? என்று இதைக் கலந்து விட்டு
2.அடுத்து நீங்கள் சொன்னீர்கள் என்றால் அங்கே அதை ஏற்றுக் கொள்ளாத உணர்வே வரும்.

Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.