துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்த நாளங்களில் சேமித்துக் கொண்டே வந்தால் நம் சிந்தனை எப்போதும் தெளிவாக இருக்கும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்த நாளங்களில் சேமித்துக் கொண்டே வந்தால் நம் சிந்தனை எப்போதும் தெளிவாக இருக்கும்

 

நஞ்சினை நீக்கிடும் சக்தி பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் வந்த இந்த மனித உடலில்… இப்போது அன்றாட வாழ்க்கையில் வரும் விஷத்தன்மைகளை நீக்கத் தவறினால்… மீண்டும் அந்த விஷத்தினையே சிறுகச் சிறுகச் சேர்த்து விஷம் கொண்ட உயிரணுக்களாக நம்மை அது மாற்றிவிடும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆகவே அந்த விஷத்தை அவ்வப்போது நீக்க வேண்டும் என்றால்
1.விஷத்தை அகற்றி இன்றும் ஒளியின் சுடராக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும்
2.அதை நீங்கள் பெறுவதற்குத்தான் அடிக்கடி “துருவ நட்சத்திரத்தைப் பற்றி” உங்களுக்கு யாம் (ஞானகுரு) உபதேசிப்பது.

துருவ நட்சத்திரமாக ஆவதற்கு முன் அகஸ்தியன் தன் வாழ்க்கையில் தீமைகளை அகற்றிய உணர்வுகளும் இந்தப் பூமியில் படர்ந்துள்ளது

அகஸ்தியன் துருவனான பின் வளர்ச்சியில் திருமணமாகி… திருமணமான பின் கணவனும் மனைவியும் இருவரும் ஒன்றாகி… நஞ்சினை அகற்றிடும் அணுக்களைத் தனக்குள் உருவாக்கி… இரு உயிரும் ஒன்றாகித் துருவ நட்சத்திரமாக அமைந்துள்ளார்கள்.

நம் பூமிக்குள் வரும் அல்லது இந்த பிரபஞ்சத்திற்குள் படர்ந்து கொண்டிருக்கும் உணர்வலைகளை ஒளியாக மாற்றிக் கொண்டு இன்றும் ஏகாந்தமாக நிலை கொண்டு இருக்கின்றார்கள்.
1.எந்த விஷத் தன்மையும் அவர்களைத் தாக்குவதில்லை…
2.விஷத்தையே ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்…
3.அதை நாம் அனைவரும் பெற வேண்டும்.

வைரம்… அதில் விஷத்தன்மை அதிகரிக்கப்படும் பொழுது அந்த விஷத்தின் உணர்வுகள் கொண்டு தான் அதனின் (வைரத்தின்) வீரிய சக்தியை வெளிப்படுத்துகின்றது.

வைரத்தைப் போல் விஷத்தை அடக்கி உணர்வை ஒளியாக மாற்றிடும் அணுக்களை உருவாக்குவது தான் நாம் செய்யும் காலை துருவ தியானத்தின் முக்கிய நோக்கம்.

ஏனென்றால் இந்த மனிதனுக்குப் பின் அடுத்த நிலை… பிறவி இல்லா நிலை தான்…!

இந்த மனித வாழ்க்கையில் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம்…! என்றால் வாழலாம். ஆனாலும் நாம் நுகர்ந்தறிந்த விஷத்தின் தன்மை நம் உடல் அணுக்களில் சேர்க்கச் சேர்க்க… இந்த உடலுக்குப் பின் மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டி இருக்கும்.

நாம் எடுத்துக் கொண்ட குணங்களின் தன்மை எதுவோ அதுவாக உயிர் மாற்றிவிடும். இதிலிருந்து நாம் மீள வேண்டும்.

இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களைப் பெறச் செய்யும் பொழுது
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றிக் கொண்டே இருப்பதும்
2.உங்களுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு வீரிய உணர்வை ஊட்டுவதும்
3.பகைமை உணர்வுகள் வராது தடுப்பதும்
4.தீமை தனக்குள் வராதபடி தடுக்கும் சக்தியையும் நீங்கள் பெறுவீர்கள்
5.அதன் உணர்வு கொண்டு சிந்தித்துச் செயல்படும் திறனும் நீங்கள் பெறுவீர்கள்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி உங்கள் இரத்த நாளங்களில் பெருக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

எத்தகைய துயரமோ கஷ்டமோ மற்ற நிலைகளைக் கேட்டு உணர்ந்து வாழ்க்கையை வழிப்படுத்தி நடத்த அவைகளை நாம் உபயோகப்படுத்தினாலும்… அப்படி நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் விஷம் கொண்டதாக மாறிவிடுகிறது.

அத்தகைய விஷத்தினை மாற்றி அமைக்கும் சக்தி நமக்கு வேண்டும். அதற்கு நாம் நுகரும் உணர்வுகள் விஷத்தை முறித்திடும் சக்தியாக வர வேண்டும்.

நமது உடல் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினைப் பிரிக்கின்றது. ஆனால் நஞ்சின் தன்மை நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்து விட்டால்… நஞ்சையே நுகரும் நிலையாகி அதனால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

ஆகவே அதைத் தடுக்க
1.நஞ்சினை வென்று ஒளியாக நிலை கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் நிலையும்
2.அதன் தொடர் கொண்ட நஞ்சினை வென்ற உணர்வுகளையும் நாம் நுகர்ந்து
3.நம் இரத்த நாளங்களில்… நம் உடலில்… சேமித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அதே சமயத்தில் இன்றைய காற்று மண்டலமே நஞ்சின் தன்மையாக இருக்கப்படும் போது நம் உடுத்தியிருக்கும் ஆடைகளிலும் நஞ்சினை ஈர்க்கும் சக்தி வருகின்றது.
1.ஏனென்றால் ஆடைகளில் விஷம் கலந்த கலர்களைத்தான் இணைத்துள்ளார்கள்.
2.அது நம் உடல் வெப்பத்தினால் அதில் இருக்கும் விஷம் எத்தன்மையோ அதன் உணர்வைக் காற்றிலிருந்து கவர்ந்து
3.நமது ஆன்மாவிற்குள் கொண்டு வருகிறது… அந்த விஷத்தன்மையையே நாம் நுகர்கின்றோம்.
4.நம் உடலில் உள்ள அணுக்களுக்கும் சிறுகச் சிறுக விஷத்தின் தன்மையே சேர்கின்றது.

விஷத்தை வென்றிடும் சக்தியைச் சேர்ப்பதகு மாறாக விஷத்தின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது… விஷத்தையே உணவாக உட்கொள்ளும்… விஷத்தின் துணை கொண்டு வாழ்ந்திடும் நிலையே… இன்றைய காலங்களில் வளர்ந்து கொண்டுள்ளது.

விஷத்தை அடக்கி வைரம் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப் போன்று நாம் ஆக வேண்டும் என்றால் காலை துருவ தியானத்தில் கணவன் மனைவி இருவருமே… அந்த சக்தி கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் எண்ணுதல் வேண்டும்.

சர்வ நஞ்சுகளிலிருந்தும் நாங்கள் விடுபட வேண்டும் என்று இருவருமே சேர்ந்து
1.குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.எங்கள் குழந்தைகளுக்கு அந்த சக்தி கிடைக்க வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் கருத்தறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
4.அமைதி கொண்டு வாழும் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்

இதை வளர்த்துக் கொண்டே வந்தால் நமக்குள் விஷத்தின் தன்மை சேராது தடுத்துக் கொள்ள முடியும்.

ஆகவே ஒவ்வொரு நாளும் காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் இரத்த நாளங்களிலே அதிகமாகச் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.

வெளியில் எங்கே சென்றாலும் இது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து எந்த விதமான அசம்பாவிதங்களும் நடக்காதபடி நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.

எந்த நிலை கொண்டு எப்படிப் புகட்டினாலும் உபதேசத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அரிதாக உள்ளார்களப்பா..!

எந்த நிலை கொண்டு எப்படிப் புகட்டினாலும் உபதேசத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அரிதாக உள்ளார்களப்பா..!

 

இந்த உலகினிலே ஜீவன் பெற்ற ஜீவாத்மாக்கள் எல்லாம்
1.தான் ஜீவன் பெற்ற நிலையை அறிந்து
2.ஜீவாதார உண்மையுடன் ஜீவித்து – இந்த ஜீவனை
3.நம் உடலில் ஜீவன் உள்ள பொழுதே நாம் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்
4.பல வழிகளையும் வழி முறைகளையும் மகரிஷிகள் நமக்களித்தார்கள்.
5.அந்த வழிகளை எல்லாம்… முறைகளை எல்லாம்… பல வழிகளில் மாற்றி விட்டார்கள்.
6.அவரவர்களுக்கு ஒரு மதம் என்ற நிலயில் ஒவ்வொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள்.

தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தன் சுற்றத்தார்களுக்கும் ஒவ்வொரு நிலையையும் ஏற்படுத்திக் கொண்டு பல சடங்குகள்… பல சாஸ்திரங்கள்… என்று பார்த்து நம் மூதாதையர்கள் காலத்திலிருந்தே நம் குடும்பத்தில் இந்நிலையில் தான் எல்லா நிலைகளும் நடந்து வருகின்றன…! என்று உண்டாக்கி விட்டார்கள்.

ஒவ்வொரு உண்மை நிலைகளையும் தன் தன் நிலைக்கேற்பத் தன் மதத்தின் வாயிலாக அதையே ஒரு வழக்கமாக்கிக் கொண்டு அதனால் வரும் எண்ணச் சிதறல்களைப் பற்றி எண்ணாமல்
1.ஒவ்வொருவரும் மதம் என்ற ரூபத்தையே கொண்டு வந்து
2.அதனுள் சிக்கிக் கொண்டு மதத்தையே “மதமாக்கி” வாழ்கிறார்கள்.

மதத்தினால் வந்திடும் நன்மைகள் என்னப்பா…? பல மதங்களை ஏற்படுத்திக் கொண்டு அம்மதங்களின் வாயிலாக ஆண்டவனின் சக்தியையே பிரித்துக் கொண்டார்கள்.
1.இவர்கள் பிரித்த நிலைக்கு வருவதல்ல அந்த ஆண்டவனின் சக்தி.
2.அச்சக்தியின் நிலை எல்லோருக்கும் பொதுவானதே.

அன்று ஆண்ட அரசர்கள் தன் நிலைக்கு அடிபணியப் பல மந்திரிகளையும்… அந்த மந்திரிகளுக்கு ஊழியம் செய்ய அதற்கொத்த சேவகர்களையும்.. இப்படியெல்லாம் ஏற்படுத்தித் தன் ஆட்சி நிலை நிலைத்திருக்கத் தன் நிலைக்கு உகந்தபடி அவரகள் செய்த நிலையில் இருந்து தான் “ஜாதி மதங்களே” இன்றைய உலகில் பெருகி உலவி வருகின்றன.

1.அவ்ஈசனின் சக்தியில் இஜ்ஜீவ ஆத்மாக்களை ஜாதி மதங்களாகப் பிரித்து அனுப்பவில்லையப்பா…!
2.எல்லா உயிரணுக்களும் அந்த ஆண்டவனின் சக்தி பெற்று ஒரே நிலையில் தான் உதிக்கின்றன.

இந்நிலை இருக்கும் பொழுது ஜாதி மத வேறுபாடுகளை இவர்கள் உண்டு பண்ணி தன் தன் நிலைக்கேற்ப தான் வாழ… தன் சுற்றத்தார் வாழ… என்ற நிலையை எல்லாம் ஏற்படுத்தி மனித எண்ணத்தையே பெரும் கேள்விக்குறியாக ஆக்கிவிட்டார்களப்பா…!

1.எல்லோரும் ஓர் மதம்…
2.எல்லோரும் ஓர் குலம்…! என்ற
3.உண்மை நிலையை உணர்ந்து வாழ்பவர்கள் அரிதிலும் அரிது.

எந்த நிலை கொண்டு எப்படிப் புகட்டினாலும் உபதேசத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அரிதாக உள்ளார்களப்பா..!

1.அடுத்தவன் நிலையைக் கண்டு ஏங்குபவனும்
2.அடுத்தவனின் புகழுக்காக வாழ்பவனும் தான் இன்றைய நாட்டில் மிகுந்து உள்ளனரப்பா…!

தன் எண்ணத்தையும் சுவாசத்தையும் தான் பெற்ற ஜீவ சக்தியின் நிலையையும் பற்றி இனியும் புரிந்திடாமல்… அந்த நிலையிலேயே வாழ்ந்திடாமல்…
1.நம் எண்ணத்தைக் கொண்டு தான்..
2.நாம் விடும் சுவாச நிலையிலிருந்து தான்..
3.நம் நிலைகள் எல்லாமே நடக்கின்றன…! என்று உணர வேண்டுமப்பா…!

எண்ணத்தையும் சுவாசத்தையும் புரிந்து கொண்டு வாழ்பவர்கள் “அப்புருஷோத்தம ஜெபத்தை” ஏற்ற புனித ஆத்மாவாக என்றுமே இருந்திடலாம்.

நாம் ஈர்க்கும் ஒவ்வொரு சுவாச அலையும் நம் உடலுக்கும்.. நம் உணர்விற்கும்… நம் உயிர் நிலைக்கும்.. எப்படியெல்லாம் எந்தெந்த நிலை ஏற்படுத்தி நம் உடலும்.. உணர்வும்… உயிரும்… எந்த நிலையில் உள்ளன..? என்று நாம் ஜெபத்திலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

இன்றிருக்கும் ஜாதி மதத்திற்கு அடிமையாகாமல்… வழி முறையில் உள்ள பல சடங்குகளுக்கும் சாங்கியங்களுக்கும் நாம் அடிமையாகாமல்…
1.நம் எண்ணத்தையும் சுவாசத்தையும்
2.அவ்வீசனின் சக்திக்கே அடிபணியச் செய்தல் வேண்டுமப்பா…!

எண்ணத்தால் உருவாக்கப்பட்ட… “உடலுக்குள் நடக்கும் இராமாயணம்”

எண்ணத்தால் உருவாக்கப்பட்ட… “உடலுக்குள் நடக்கும் இராமாயணம்”

 

ஒவ்வொரு நாளும் எந்தெந்த குணங்களை நாம் நுகர்கின்றோமோ உயிருடன் ஒன்றிய சக்தியாக அது மாற்றுகின்றது
1.நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் அதற்குண்டான சக்தியாக மாற்றுகின்றது.
2.அப்படி இணைந்த நிலைகளில் அது அது… தன் தன் இனத்தைப் பெருக்கத்தான் முயற்சிக்கும்.

இராமனுடைய தாயோ சாந்தமானது. அவளுக்குப் பிறந்தது சாந்தமான குணம் கொண்ட இராமன். அவன் தான் இந்த சாம்ராஜ்யத்தை ஆளக்கூடியவன்… இந்த உடலை… அனைவரையும் அரவணைத்து தனக்குள் வாழும் நிலை பெற்றவன் என்ற உணர்வைத் தாய் எண்ணுகின்றது.

இராமனின் தாய் அப்படி எண்ணினாலும்
1.ஆசையால் நுகர்ந்த உணர்வு… அதே ஆசையின் நிலை கொண்டு…
2.அதாவது பரதனுடைய தாயோ தன் மகனுக்குத் தான் பட்டம் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறது.

நல்லவனுக்கு… தலைமகனுக்கு… இந்த பட்டத்தைச் சூட்டினால் இந்த சாம்ராஜ்யத்திற்கு நன்றாக இருக்கும் என்ற ஆசை கொண்டு வளர்த்தாலும்
1.சகோதர ஒற்றுமை கொண்ட இவன் அண்ணனே சிறந்தவன் என்று பரதன் சொல்கின்றான்.
2.இதை மக்களுக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்.
3.(அண்ணன் என்று செயலாற்றினாலும்… அவன் வரும் வரையிலும் அவன் காத்திருந்தான் என்று உணர்த்துகின்றார்கள்).

ஆகவே இராமனுடன் சேர்ந்தால் அவருடன் இணைந்து அவன் போக்குக்குச் சென்று விடுவான் என்று பரதனுடைய தாய் எண்ணுகின்றது. அப்போதுதான் இராமனைக் காட்டுக்கு அனுப்புகின்றது.

காட்டிற்குள் 12 வருடம் வனவாசம் சென்றால் “அந்த ஒரு மண்டலத்திற்குள்” பரதன் சிறப்பான நிலைகள் அடைந்து விடுவான். இவனின் ஆட்சி வந்தால் இராமன் வெறுத்து விடுவான் என்று சூழ்ச்சி செய்கின்றது.

இதற்கென்று சூதின் நிலைகளை உபதேசிக்கக் கூடியவர்களின் (கூனி) உணர்வுகளை அந்தத் தாய் செவிகளில் கேட்கின்றது.
1.ஒவ்வொரு உணர்ச்சியும் ஆசை என்ற நிலையில் வரும் போது அந்த உணர்வின் தன்மை எப்படி மாற்றுகின்றது…? என்பதை…
2.ஒருவர் வாழ்வதைப் பார்த்தபின் “அந்த வாழ்க்கை வாழ வேண்டும்…” என்று தன் மகனையே காக்கின்றது.

நமக்குள் எடுத்துக் கொண்ட குணம் எந்தச் சக்தியோ அந்தந்த இனத்தைப் பெருக்கத்தான் நம்முடைய குணங்கள் அது வரும் என்பதனைத் தெளிவாக்குகின்றனர்.

உயிர்… தான் நுகர்ந்ததை எல்லாம் தன் சக்தியாக ஆக்கினாலும் அது மீண்டும் தன் இனத்தையே பெருக்கும் என்ற நிலையை அங்கே தெளிவாகக் கூறுகின்றார் வான்மீகி.

நுகர்ந்த உணர்வின் சத்து உடலுக்குள் இயக்கும் சக்தியாக இருப்பினும் நுகர்ந்த உணர்வுகள் உடலாகிறது… அதன் வழி கொண்டு உருப்புகளாகின்றது அந்த உறுப்புகளின் வளர்ச்சியைக் கொண்டுதான் இராவணன்…! அதாவது
1.அவன் சகலகலா வல்லமை பெற்றவன் எல்லா இசைகளிலும் அவன் வல்லவன் சர்வ வல்லமை கொண்டவன் என்று
2.புழுவிலிருந்து மனிதன் வரையிலும் அதனுடைய உணர்வுக்கொப்ப இசைகள் வளர்ந்தது.
3.அதன் இசைகளுக்கொப்ப மனித உருவைக் கொடுத்தது
4.இசைகளிலே வல்லவன்… இவன் சிவனை வணங்குகின்றான்… “உடல் மீது பற்று கொள்கின்றான்” என்று காட்டுகின்றார்கள்.

ஆதே சமயத்தில்… தசரதன் என்றால் பத்தாவது நிலையை அடையக்கூடிய உயிர்… தான் பல உணர்வுகளை எடுத்தாலும் “சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது…” தன்னுடன் இணைத்துக் கொண்ட சக்தி (கைகேயி) தன் மகனுக்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று
1.நல்லவன் ஆட்சி புரிய வேண்டுமென்று ஆசை வளரப்படும் பொழுது
2.அப்பொழுது எந்த நிலை…? என்று காட்டுகின்றார்கள்.

சிவன் என்ற உடல் வரப்படும் பொழுது இராவணன் தன்னுடன் இணைந்து செயல்படும் சகோதரி சூர்ப்பணகை “மற்றொன்றின்” அழகைக் கண்டு இராமனை அவள் விரும்புகின்றார்.

இராமனைத் தனக்குள் கவர வேண்டும் என்று விரும்பினாலும்… அவன் மனைவி அழகாக இருக்கின்றாள்… அவளை ஒதுக்கினால் தானே இங்கே வருவான். ஆகவே அவனுடைய மனைவியை மற்றவருடன்கு சேர்த்து விட்டால் அதற்குண்டான நிலையில் தனக்குக் கிடைக்கும் என்று அவளுடைய அழகைப் பற்றி இராவணனிடம் வர்ணிக்கின்றாள்.

அவள் அழகாக இருந்ததால் “என்னை இராமன் அவமதித்தான்…” என்று குறை கூறி இந்த உணர்வை இராவணனிடம் ஊட்டுகின்றாள். இதை உற்றுப் பார்க்கும் போது இராவணன் சீதாவை அடைய ஆசைப்படுகின்றான்.

இந்த உணர்வு அவனுக்குள் வரும் பொழுது
1.அவன் சகல வல்லமை பெற்றிருந்தாலும் பத்தாவது நிலையை அடையும் இந்த உணர்வுகள்
2.அதனால் பகைமை உணர்வுகள் உடலுக்குள் எப்படித் தோற்றுவிக்கின்றது…? என்பதை அப்படிக் காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் அவனுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் எல்லாம் தூங்குகின்றது… கும்பகர்ணன்…! என்றுமே அந்த நல்ல குணங்கள் தூங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அவன் மிக மிக நல்லவன்…! (தீமையின் நிலை அதிகரிக்கும் போது நல்ல குணங்கள் செயலிழந்திருப்பதை அப்படிக் காட்டுகின்றார்கள்).

தான் நுகரும் உணர்வுகளால் எது உருவாகின்றதோ…
1.வெறுக்கும் உணர்வுகளும் ஆசையின் உணர்வுகளும் வரப்படும் பொழுது
2.இவனுள் விளையும் உணர்வே இவனுக்கு எதிரியாகின்றது.
3.இராவணனை அவன் மகனே எதிர்க்கும் நிலை வருகின்றது.

இயற்கையின் சக்தி நல்லவன் என்று வரப்படும் பொழுது… தீமை என்ற உணர்வு வந்தால் அதை வெறுக்கும் தன்மை வருகின்றது.

இவனுக்குள் விஷத்தின் தன்மை கலந்தபின் இவனுடைய செயலாக்கங்கள் அனைத்தும் எந்த இசைகளைக் கண்டானோ… அனைத்தும் “சோக இசைகளாக மாறுகிறது…!”

தன் உணர்வின் தன்மை… இராமனுக்கு யார் காவலனாக தூதுவனாக இருக்கின்றார்…? ஆஞ்சநேயர்.
1.சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம் காந்தம் விஷம்… “இராமா லட்சுமணா” என்றாலும்
2.ஒரு சுவையின் சத்தை… தனக்குள் எதை எடுத்துக் கொள்கின்றதோ (சீதாலட்சுமி) அந்த குணத்தைக் காக்க
3.அந்த உணர்வின் தன்மை ஊடுருவி அதைக் காக்கும் செயலாகச் செயல்படும்.
4.இராமன் இட்ட கட்டளையை ஆஞ்சநேயன் செயல்படுத்துவான்.

அதாவது வேதனை என்ற உணர்வை நாம் எடுத்துக் கொண்டால்… அந்த உணர்வின் தன்மை தன்னைப் பாதுகாக்கும் நிலையாக… மற்றதை (நல்லதை) அது அடக்கும்.

எந்த உணர்வின் தன்மை…? அந்த எண்ணங்கள் தான்…!

ஆக எதைக் கவர்ந்ததோ அதன் உணர்வின் தன்மை “சீதா…” என்ற சுவையைக் காக்கும் உணர்ச்சிகளையே அங்கே தூண்டுகிறது. இதைக் காட்டுவதற்கு ஆஞ்சநேயர்… தாவிச் செல்லும் உணர்வுகள்…! என்று காட்டுகின்றார்கள்.
1.ஒரு உணர்வின் உணர்ச்சி எவ்வாறு செயல்படுகிறது…?
2.மற்றவர்களை அது எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையும்
3.எண்ணங்கள் எப்படி உணர்வுகள் ஆகின்றது…?
4.உணர்வுகள் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது…?
5.உணர்வுகள் எப்படி உடலாகின்றது…?
6.உணர்வுகள் எப்படி அதனதன் உணர்ச்சியின் தன்மையைத் தூண்டுகிறது…? என்ற நிலையை
7.அன்று வான்மீகி மூடனாக இருந்தாலும் தெளிவாக உணர்த்துகின்றார்.

“நேரடியாக” நாம் எடுக்க வேண்டிய சக்தி

“நேரடியாக” நாம் எடுக்க வேண்டிய சக்தி

சக்தியின் நிலை கொண்டு உயிர் பெற்ற உயிர் அணுக்கள் எல்லாமே தன் தன் உயிர் நிலை நிலைத்து நிற்க உணவை உட்கொள்கின்றன. மனிதர்களுக்கு அவரவர்கள் உண்ணும் உணவிலிருந்து சில உணர்வுகளும் உண்டாகின்றன.

நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலை வளர்க்கத்தான் என்ற நிலையில் உண்ணுகின்றோம். நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் தான் நம் உடலை நாம் காத்திட முடிகிறது என்றால்…
1.பல கோடிச் சித்தர்களும் பல தவசு முனிவர்களும் பல ரிஷிகளும்
2.பல நாள்கள் ஆகாரம் புசிக்காமலே ஜெப நிலையிலிருந்து இன்றும் இருந்து கொண்டுள்ளார்கள்.
3.அது எந்நிலையப்பா…?

நாம் உண்ணும் உணவு நமக்குச் சக்தியளித்து சக்தி எல்லாம் நமது உடலில் ஈர்த்துப் பாக்கி நிலையில் உள்ளது கழிவாகிறது என்னும் நிலை தான் மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ளது.

நம் உடல் ஒரு இயந்திரம் போல் உள்ளது என்று எண்ணுகின்றோம்.

நாம் உண்ணும் உணவின் நிலை என்ன என்றால் நாம் எந்த ஆகாரத்தைப் புசிக்கின்றோமோ அந்நிலையிலிருந்து அவ்வாகரத்தின் தன்மை “நம் சுவாச நிலைக்கு வந்துதான்” நாம் பிறகு சுவாசம் எடுக்கும் பொழுது நம் உடல் அந்த ஆகாரத்தை ஏற்கிறது.

சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலை எல்லாம்
1.”அச்சுவாச நிலையிலிருந்தே” தன் உடலுக்கு வேண்டிய ஆகாரத்தை ஏற்று எடுக்கும் நிலையை
2.அச்சூரியனிலிருந்தே பூமிக்குக் கிடைத்திடும் அணுவின் சக்தி நிலை கொண்டு தன் சுவாச நிலைக்கு ஏற்றுக் கொள்கிறார்கள்.

மரம் செடி கொடிகளின் நிலை எல்லாம் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளின் நிலைக்கும் உயர்ந்த நிலை பெற்ற நிலையப்பா…!

அச்சூரிய சக்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் நம் பூமியைத் தாக்கி அந்நிலையிலிருந்து தான் நாம் சுவாசிக்கின்றோம். மற்ற மிருகங்களின் நிலையும் மற்ற ஜீவனின் நிலையும் சூரியச் சக்தியின் ஒளிப் பிளம்பு பூமியில் பட்ட பிறகு தான் தன் சுவாச நிலைக்கு எடுத்துக் கொள்கிறது.
1.கீழ் நோக்கிய சுவாச நிலை கொண்டு தான்
2.இயற்கையில் எல்லோருமே ஜீவன் பெற்றுள்ளோம்.
3.அப்பூமி ஈர்த்து அந்நிலையில் தான் நம் சுவாச நிலைக்கு எடுக்கின்றோம் சுவாசத்தை.

மரம் செடி கொடிகளின் இலைகள் எல்லாம் அவ்ஈசனின் சக்தியைப் பெற்று அவ்ஈசனின் சக்தி என்பது சூரியனிலிருந்து வெளி வரும் ஒளிக் கதிர்களை நேராகவே தன் சுவாச நிலைக்கு ஈர்க்கின்றது.

அந்நிலையிலிருந்து நாம் பெறும் புஷ்பங்களும் காய் கனிகளும் நாம் உண்ணும் பொழுது நம் உயிரணுவிற்கும் நம் உடலுக்கும் பெரும் ஆரோக்கிய நிலை தருகின்றன. மற்ற அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்குவதில்லை.

1.மற்ற ஜீவராசிகளைச் சமைத்து உண்ணும் பொழுது
2.எந்நிலை கொண்டு எப்படி உஷ்ணத்தை ஏற்றிச் சமைத்தாலும்
3.அந்த அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

அந்த அணுக்களின் நிலையிலிருந்தெல்லாம் தப்பி… நாம் உண்ணும் உணவில் நல்ல நிலையை எடுத்துக் கொள்ள… அன்று வாழ்ந்த சித்தர்கள் நமக்குச் சொல்லிய பல வழிகள் மறைந்து விட்டன.

நாம் ஜெப நிலையிலிருந்து நல்ல உணர்வுடன் நாம் விட்டிடும் சுவாச நிலையிலிருந்து
1.அந்த ஈஸ்வர சக்தியை எடுத்துக் கொண்டால்
2.நம் நிலைக்கும் அச்சூரியனிலிருந்து வரும் சக்தி நிலைகள் பூமிக்கு வந்து தாக்கிடாமல்
3.பெரும் உன்னதமான நிலையில் நம் சுவாச நிலைக்கே அது வந்து
4.அழியாச் செல்வமான நம் உயிரணுவிற்கு… நம் ஆத்மாவிற்கு… சகல நிலையையும் பெற்றிடலாம்.

சித்தர்களும் ஞானிகளும் பல காலங்கள் ஆகாரம் புசித்திடாமல் இருந்த நிலைகள் எல்லாம் எப்படி…? என்று இப்பொழுது புரிந்ததா…!

தியான நிலையில் இருந்து கொண்டிருந்தால் இந்நிலையில் தியானம் பெற்றவர்கள் நிலை ஆயிரம் அணுகுண்டுகளை வெடித்தாலும் நம் சுவாச நிலைக்கு அவ்வணுகுண்டின் அழிக்கும் தன்மை என்றுமே வந்து தாக்கிடாது.

நம் கண்ணிற்குத் தெரியாமல் வாழும் பல கோடி ரிஷிகளின் நிலை எல்லாம் இது தானப்பா…!

எமது உபதேசக் கருத்துக்களைப் பதிவாக்கிக் கொண்டால் “அன்று வாழ்ந்த மெய் ஞானிகளை” நீங்கள் காண முடியும்

எமது உபதேசக் கருத்துக்களைப் பதிவாக்கிக் கொண்டால் “அன்று வாழ்ந்த மெய் ஞானிகளை” நீங்கள் காண முடியும்

 

நட்சத்திரங்களின் எதிர் மோதலால் ஏற்படும் மின்னல்கள் (மின் அணுக்களின் கதிர்கள்) கடலிலே பாய்ந்தால் மணலாக மாறுகின்றது அதில் உள்ள… “ஹைட்ரஜன் அந்த உப்பின் சத்து” அந்த மின்னலின் வீரியத்தைத் தணிக்கிறது.

கடலிலே பாயும் மின்னல்…
1.அந்த மின் அணுக்களுடன் தொகுப்புகள் மணலாக வரப்படும் பொழுது உயர்ந்த ஆற்றல்களைப் பெறுகின்றது.
2.இதைத்தான் யுரேனியமாகப் பிரித்து எடுக்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

எந்தெந்த நட்சத்திரத்தின் நிலைகள் இது கலவைகளாக… எது எதிர் நிலையில் வருகிறது…? என்ற நிலைக்கொப்ப மணல்களாக உருவாக்கப்படுகின்றது.

அந்த மணலினை எடுத்து அதிலிருந்து பிரித்து எடுத்து அணுவைப் பிளக்கின்றார்கள்… அந்த அணுவின் தன்மை பிளந்து பல விதமான நிலையாக எடுக்கின்றார்கள் விஞ்ஞான அறிவு கொண்டு.

1.அதிலே சிதைவடைந்த உணர்வின் தன்மையைத் தான் கம்ப்யூட்டரில் பாய்ச்சி (பல விதமான தனிமங்கள்)
2.உணர்வின் அதிர்வுகளைக் கொண்டு… உணர்வின் செயலாக்கங்களுக்கு…
3.நுண்ணிய கதிரியக்கப் பொறிகளை மாற்றும் போது “கம்ப்யூட்டராக” அது வேலை செய்கிறது,

அதாவது…
1.மின் அணுவின் கதிரியக்கங்களின் நிலைகள் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு
2.அந்தக் காந்தத்தைக் கவரும் உணர்வின் தன்மையை அதற்குள் பதிவு செய்து உணர்வின் அறிவான பின்
3.எதிர் ஒளியின் தன்மைகள் மின் அணுவைப் போன்ற உணர்வின் தன்மை கம்ப்யூட்டரில் தோன்றும்.

அப்படித் தோன்றும் உணர்வின் தன்மை எதுவாகின்றதோ… ஒவ்வொரு உணர்வுக்கொப்ப (எதிலே செலுத்துகின்றோமோ) உருவங்களையும் காட்ட முடியும்.
1.ஒரு மனிதன் 100 ஆண்டுகளுக்கு முன் அவன் வாழ்ந்தான் என்றால்…
2.இவன் அவன் வம்ச வழியில் வந்தவன் என்றால்
3.அவர்கள் ரூபம் எப்படி இருக்கிறது…? என்று அக்கால உருவத்தைக் காணலாம்.

இந்த உணர்வின் தன்மை பதிவாக்கி இந்தக் கம்ப்யூட்டரின் மூலம் எதிர் அலைகளை எடுத்துக் கொண்டால் ஒளியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. ஆயிரம் மடங்கு அதைக் கூட்டுகின்றான்.
1.மீண்டும் அந்த உணர்வின் எதிரொலிகள் வரப்படும் பொழுது
2.இங்கே வாழ்ந்த உணர்வுகள் “பதிவானதை எடுத்து”
3.அந்த மனிதனுடைய உருவத்தையே கம்ப்யூட்டர் கொடுக்கின்றது.

விஞ்ஞானிகள் அதைக் காட்டுகின்றார்கள்.

இதே போன்று அன்று “வாழ்ந்த மெய் ஞானிகளையும்” நாம் காண முடியும் அவனில் விளைந்த உணர்வுகளை உங்களுக்குள் இப்போது பதிவாக்கப்படும் பொழுது
1.இந்த உணர்வினைத் தொடர்ந்து எடுத்து அதைப் பெருக்கிக் கொண்டே வந்தால்
2.அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வந்து
3.அவன் எப்படி ஒளியாக ஆனான் என்ற உணர்வை எடுத்து நீங்களும் ஒளியாக ஆக முடியும்.

சில பேர் நினைக்கலாம் விஞ்ஞானம் அறிவு எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றது இவர் என்ன படிக்காதவர் சொல்கிறார்…? (ஞானகுரு) என்று.

ஏனென்றால் விஞ்ஞானிகளுடைய செயல்கள் எப்படி இருக்கின்றது மெய் ஞானிகள் அறிவு எப்படி இருக்கின்றது…? மெய்ஞானிகளுடைய செயல் எப்படி இருக்கிறது…? என்பதை குருநாதர் அந்த இயற்கை நிலைகளை அதனுடைய இயக்கங்கள் எப்படி…? என்பதை அவர் காட்டிய நிலைகளைக் கற்றுணர்ந்த பின் தான் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.

இதைப் பதிவு செய்து கொண்டால் கால பருவம் வரும் போதெல்லாம்
1.அந்தந்த உணர்வுக்கொப்ப அந்தந்தக் காலங்களுக்கொப்ப
2.உணர்ச்சிகள் அது கலந்து அறிவின் ஞானமாக உங்களுக்குள் ஊட்டும்.

முந்தி சொன்னதெல்லாம் வேறு விதமாக இருக்கும் அதனின் வளர்ச்சி உங்களில் வரப்படும் பொழுது… இயற்கையின் நிலையாக “உங்களை நீங்கள் அறியும் உணர்வுக்கு வளர வேண்டும்…” என்பதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றேன்.

எத்தனை காலம் இந்த உடலில் நாம் வாழப் போகிறோம்…?
1.இந்த உடல் சதமற்றது… என்றைக்கும் நிலையானது உயிர்.
2.அந்த உயிருடன் ஒன்றி ஒளியாக ஆக்கப்பட வேண்டும்.

ஆகவே… உடலுக்குப் பின் பிறவி இல்லை…! பிறவி இல்லா நிலை அடைந்த அருள் ஒளியின் உணர்வை உங்களுக்குள் சேர்ப்பிப்பது தான் இந்த உபதேசத்தின் நோக்கம்.

நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்… பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்

நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்… பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்

 

பல கோடி உயிரணுக்கள் வந்து நம் உடலிலும் எண்ணத்திலும் கலந்திடும் நிலையில் உள்ளதப்பா மனித உடல்.

1.பல கோடி அணுக்களின் ஈர்ப்பு நிலையில் இருந்து தப்பி
2.அழியாத செல்வமான நம் ஆத்ம ஜோதி நிலை கண்டிடத்தான்
3.இந்தத் தியான நிலை… சுவாச நிலை எல்லாமே…!

தியான நிலையில் உண்மை நிலையைப் புரிந்து ஒவ்வொருவரும் செயல்பட்டுப் பல கோடித் தீய உயிரணுக்களின் செயல்களுக்கு நாம் அடிமையாகாமல் இந்நிலையிலிருந்தெல்லாம் நாம் தப்பி நம் சுவாச நிலையில் நம் எண்ணத்தில் அவ்வீசனின் சக்தியை ஊன்றச் செய்ய வேண்டுமப்பா…!

பல மகரிஷிகள் ஞானிகள் சித்தர்கள் எல்லாம் பெரும் ஞானப் பேராற்றல் நிலையை எய்தியது எப்படியப்பா..?
1.மற்ற அணுக்களின் சக்திகள்…
2.உந்தல்கள்…! தன் நிலைக்கு வந்து செயல்படாமல் மாற்றிக் கொண்டார்கள்.

அவரவர் நிலையை அவரவர்கள் உணர்ந்து பல கோடி உண்மை இரகசியங்களை அறிந்து அன்றைய காலத்தில் அதை ஜாதக வடிவிலும்… கோவில்களிலும்… மருத்துவத்திலும்… பல உண்மை நிலைகளை எல்லாம் கண்டறிந்து பெரும் சூட்சமத்தில் இரகசியமாக வெளியிட்டார்கள்.

பல உண்மைகளை மறைத்தும் விட்டார்கள் அன்றையச் சித்தர்கள்…!

இந்நிலையில் பல உண்மைகளை அறிந்து தன் உயிராத்மாவை அழியாச் செல்வமாக்கி நான் என்றால் என்ன…? என்பதை அன்றே உணர்ந்து இந்த மக்களுக்காக எவ்வளவோ பெரும் நிலைகளை எல்லாம் கண்டுணர்ந்து
1.இன்றும் சூட்சம நிலையில் இருந்து கொண்டே
2.ஆண்டவன் ரூபத்தில் வந்து பல வழிகளில் உணர்த்துகிறார்கள்.
3.அழியாச் செல்வமான இந்த உயிராத்மாவை மனிதர்கள் எல்லோருமே என்ன…? என்று புரிந்து கொண்டு வாழ்ந்திட வேண்டுமப்பா…!

ஜெப நிலையில் அமர்வதையும்… தெய்வத்தை வணங்குவதையும்… பலர் பல நிலையில் பொருளுக்காக என்று செயல்படுத்தி உண்மை நிலையையே புரிந்து கொள்ளாமல் சிதறடித்து விட்டார்கள்.

நம் உயிராத்மாவை… உடலை விட்டுப் பிரிந்த பல ஆத்மா என்னும் அணுக்களின் நிலையில் இருந்து தப்பி ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட முடியும்…!

இந்த உடலில் இருந்தால்..
1.இனி எத்தனை காலங்கள் இவ்வுடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டு
2.தன் ஆத்மாவிற்குத்தான் அழியாச் செல்வத்தைச் சேமித்திடல் வேண்டும்.

இந்தச் சூரியனிலிருந்து நாம் பல கோடி நன்மைகளைப் பெற்று வருகின்றோம். அந்தச் சூரியன் எப்படிப் பல மண்டலங்களின் நிலை கொண்டு அச்சக்திகளைத் தன்னுள் ஈர்த்து நமக்குப் பல நன்மைகளை அளிக்கின்றதோ அந்நிலை கொண்டு தான் அச்சக்தியின் அருள் பெற்ற நாம் எல்லோரும் சத்திய நிலையில் வாழ்ந்து சமுதாயத்தில் நல் நிலையில் வாழ்ந்திட வேண்டும்.

1.இந்தப் பிரபஞ்சத்தில் நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்
2.பிறரின் நன்மைக்காகப் பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்.

எதிர்மறையான மோதல் இல்லை என்றால் வளர்ச்சியே (இயக்கச் சக்தி) இல்லை

எதிர்மறையான மோதல் இல்லை என்றால் வளர்ச்சியே (இயக்கச் சக்தி) இல்லை

 

நம் பிரபஞ்சத்திற்கு சனிக்கோள் மிகவும் முக்கியமானது. தனக்குள் வரும் ஆவியின் தன்மைகளை எல்லாம் நீராக மாற்றும் திறன் பெற்றது.

சனிக்கோளின் உணர்வு எது எதில் எல்லாம் கலக்கின்றதோ
1.அந்த அணுவின் தன்மை ஜீவன் பெறுவதற்கு அதுவே மூலமாகும்.
2.சனிக்கோளின் உணர்வுகளை எது பெறவில்லையோ அந்த அணுக்கள் ஜீவன் இழந்துவிடும்.

சனிக்கோளின் சக்தி பெறவில்லை என்றால் வான் வீதியில் உருவாகும் நிலைகள் அது வெறும் பாறை ஆகிவிடும்… கரைந்து விடும். வளர்ச்சி பெறுவதற்குண்டான நிலைகள் அதிலே இருக்காது.

ஆகவே தான் ஜீவன் பெறச் செய்வதற்கு சனிக்கோள் மிகவும் முக்கியமானது. நம் உடல் உறுப்புகளில் எதை எதை எல்லாம் எவ்வாறு மாற்றுகிறதோ அதைப் போல இந்த பிரபஞ்சத்திற்கு… சனிக்கோள் மிகவும் முக்கியமானது.

சனிக்கோள் செயல் இழந்து விட்டால் இந்தப் பிரபஞ்சம் இருக்காது…!

உதாரணமாக 27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று “எதிரியானது…” அந்த மின் அணுக்களின் தன்மை… கதிரியக்கச் சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விட்டால் “மின்னலாகப் பாய்கின்றது…” அப்போது அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து அது கருகி… துகள்களாக மாறுகின்றது.

ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொரு நட்சத்திரத்திற்கும் எதிர்நிலை. ஆக
1.அந்த அணுக்கள் மோதும் பொழுது தான் பொறிகளாகி
2.மின்னணுவாக அது ஓடும் பாதையில் ஊடுருவி இதனுடைய செயலாக்கங்கள் மாற்றிவிட்டு மற்ற உணர்வின் நிலைகள் மாறுகின்றது.

இந்த 27 நட்சத்திரங்களின் மாற்றங்கள்
1.ஒன்று மற்றொன்றுடன்… ஒன்று மற்றொன்றுடன் என்ற நிலையில்
2.இப்படி மாறி மாறி மாறி வருவதைத்தான் உலகில் கல் மண் எல்லாம் உருவாகிறது.

அதாவது வான் வீதியில் உருப் பெறும் மின்னணுக்களை மற்ற கோள்கள் தூசிகளாக மாற்றி விடுகின்றது அது நுகர்ந்த உணர்வு மற்ற கோள்கள் உமிழ்த்தும் உணர்வுடன் கலந்த பின் உணர்வின் மாற்றங்கள் ஆகி பாறைகளாகவும் கல்லாகவும் மற்ற நிலையாகவும் ஆகிறது.

பூமியின் தன்மை நீருடன் கலந்து உணர்வின் சத்தை எடுக்கப்படும் பொழுது
1.தாவர இன வித்தாக உருவாகும் தன்மை வருகின்றது.
2.தாவர இன சத்தை உருவாக்கும் இந்த நிலை பெற்ற பின் “உயிரணு தோன்றி” நுகரும் தன்மை வருகின்றது.

ஆனால் உயிரணு தோன்றி மனிதனாக உருவான பின் சர்வத்தையும் உணரும் நிலையாக இயக்கச்சக்கியாக மாற்றுகின்றான் மனிதன்.

ஆக
1.அறிவின் ஞானம் கொண்டு இந்த உலகையே அடக்கிடும் தன்மை பெற்றவன் என்று
2.விநாயகர் தத்துவத்தில் ஆதிமூலம் என்ற உயிர்… பல கோடிச் சரீரத்தில் சேர்த்துக் கொண்ட நிலைகள் மனித உடலாக ஆனாலும்
3.அங்குச பாசவா…! இந்த பிரபஞ்சத்தை அடக்கி ஆட்சி செய்யும் சக்தி பெற்றவன் என்று காட்டுகின்றார்கள்.

அப்படிப்பட்ட ஆற்றலை முதன் முதலிலே பெற்றவன் அகஸ்தியன் இந்தப் பிரபஞ்சத்தில் வருவதை எல்லாம் ஒளியின் உணர்வாக மாற்றி… எதற்கும் அடிமையாகாது ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்.

அகஸ்தியன் பெற்ற அந்த ஆற்றலை நாமும் பெற வேண்டும்.

ஜென்ம நட்சத்திரமும்… கிரகங்களின் பார்வையும்…!

ஜென்ம நட்சத்திரமும்… கிரகங்களின் பார்வையும்…!

 

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை பல உண்மைகளை அறிந்திட நாம் எல்லோருமே ஆர்வம் கொண்டுள்ளோம்.

1.பிற்கால வாழ்க்கையை எண்ணி
2.இனி நடக்கப் போகும் நிலை என்ன…? என்பதை அறிந்திட எல்லோரும் விரும்புகின்றோம்.

இருந்தாலும் நம்முள் உள்ள பரமாத்மாவை மறந்து விட்டு “பரலோகத்திலுள்ள பரமாத்மா…!” என்று வேண்டி ஜாதகங்கள்… ஏட்டுச் சுவடிகள்.. என்று இப்படிப் பல வழிகளில் ஆரூடம் பார்த்து “அறிதல்” என்றெல்லாம் நம் காலத்தைச் சிதறவிட்டு விடுகின்றோம்.

சூரியனின் சக்தியிலிருந்து அந்தச் சூரியனைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் நிலையை வைத்து அம்மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியனில் பட்டு… அச்சூரியனிலிருந்து நம் பூமிக்கு வந்திடும் ஒளியின் தன்மையை வைத்துப் பல நிலைகள் நடக்கின்றன.

அந்தச் சூரிய சக்தியின் பிம்பத்தில் பல மண்டலங்களின் ஒளி பட்டு “அந்நிலை பூமிக்குக் கிடைக்கும் நேரத்தைத்தான்” அன்றைய சித்தர்கள் ஜாதகங்கள் என்ற நிலையில் கண்டனர்.

1.சந்திரனின் பார்வை… சூரியனின் பார்வை என்றும்
2.கேது இராகு என்ற ஒவ்வொரு மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியன் மேல் படும் பொழுதும்
3.அந்த ஒளிக் கதிரின் தன்மை பூமியின் மேல் படும் காலத்தை வைத்துத்தான் சித்தர்கள் ஜாதகம் கணித்தார்கள்.

ஜென்ம நட்சத்திரம் என்கிறார்கள்…! எந்தக் குழந்தைக்கும் ஜென்ம நட்சத்திரத்தை இன்றைய ஜாதகக்காரர்களால் அறிந்திட முடியாது. குழந்தை பிறந்திடும் நேரத்தை வைத்து ஜென்ம நட்சத்திரம் குறிக்கின்றார்கள்.

அதுவல்ல ஜென்ம நட்சத்திரம்…!

1.அது தன் தாயின் வயிற்றில் “என்று உதயம் பெற்றதோ…” அந்த நேரம் தான் அதற்கு ஜென்ம நட்சத்திரம்.
2.அந்த நிலையைக் கணித்திட இன்றைய ஜாதகக்காரர்களால் முடியாது.

இராமர் இராம நவமி அன்று பிறந்தார்… என்றும் முருகன் பிறந்த நாளை வைகாசி விசாகம்…! என்றும் கணிக்கின்றார்கள் பாட நிலைப்படித்தான்…!

இராமர்… கிருஷ்ணர்… முருகன்… எல்லாம் பிறவி எடுக்கவில்லை. அவர்களின் குணாதிசயங்களை வைத்துத்தான் நம் சித்தர்கள் அவர்களுக்கு நாமங்கள் இட்டார்கள்.

அப்படி இருக்கும் பொழுது இராமர் பிறந்த நேரத்தையும் முருகன் பிறந்த நேரத்தையும் எப்படிக் கொண்டாடுகின்றார்கள்…? என்று நீங்கள் நினைத்திடலாம்.

அன்றையச் சித்தர்கள் மற்ற மண்டலங்களின் ஒளிக்கதிர்கள் சூரியனில் பட்டு பூமியைத் தாக்கும் பொழுது…
1.என்றென்று அந்த நல்ல நிலை பெறும் நாளோ அந்த நாட்களின் குணா அம்சங்களை வைத்து
2.அந்த நாட்களை அந்த ஒளியிலிருந்து வரும் சக்தியின் நிலை கொண்டு
3.முருகருக்கும் இராமருக்கும் பிறந்த நாட்கள் என்று கணித்தார்கள்.

கணித்தார்கள் என்றால் அந்நிலை பெறும் நேரத்தை நல்ல நேரமாக ஏற்று அந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் உகந்த நாள்…! என்று மக்களுக்கு ஏற்றுக் கொள்ளப் பல வழிகளைச் சொல்லிச் சென்றார்கள். ஆனால் அந்த உண்மைகளை எல்லாம் காலப்போக்கிலே சிதறடித்து விட்டார்கள்.

மற்ற மண்டலங்களின் ஒளி சூரியனில் எப்பொழுது கிடைக்கப் பெறுகிறது…? மற்ற மண்டலங்களில் உள்ள சக்தி சூரியன் மேல் பட்டு அதன் பின் அச்சூரியன் நமக்கு அளிக்கின்றது.

சந்திரனில் ஒளிக் கதிர்கள் இல்லாவிட்டால் “இன்றைய வண்ணங்கள்… சுவைகள்…” இவை எவையுமே நாம் பெற்றிருக்க முடிந்திடாது.

அதைப் போல் தான் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் நமக்குப் பலவித இயற்கைத் தன்மை வாய்ந்த சக்தியெல்லாம் கிடைக்கின்றது.

பெரும் பேறு வாய்ந்த சக்தியுள்ள பூமியப்பா…! இன்று நாம் வாழ்ந்திடும் பூமி. இந்தப் பூமித் தாயின் உயிரோட்ட உண்மைகளை உணர்ந்து கொண்டு உலகினிலே உதித்த நாம் எல்லோருமே உண்மையுடன்… “உன்னதமாக வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

ஒவ்வொருவரும் அவரவர்கள் கடந்த காலத்தை எண்ணிக் கலங்கிடாமல் நம்முள் உள்ள பரமாத்மாவின் நிலையை அறிந்து வாழ்ந்திடுங்கள்.

1.தவறின் நிலையை எல்லாம் மறந்துவிட்டு
2.இனி தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்து
3.பிறந்த பயனை இக்கலியின் கடைசியில் கல்கியில் ஒவ்வொருவரும் பிறந்திடத்தான் இதை உணர்த்துகின்றேன்.
4.என்னுடைய (ஈஸ்வரபட்டன்) ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

பிறரை வேதனைப்படுத்தி வாழ்ந்தால் அவர்கள் இடும் சாபம்… “நம்மையும் சந்ததியினரையும் தாக்கத் தான் செய்யும்”

பிறரை வேதனைப்படுத்தி வாழ்ந்தால் அவர்கள் இடும் சாபம்… “நம்மையும் சந்ததியினரையும் தாக்கத் தான் செய்யும்”

 

தீமை என்ற நிலையில் ஒருவன் பேசி விட்டால் அது வாலி என்ற நிலையை அடைகின்றது.
1.அந்தத் தீமையான சொல்லை ஒருவன் கேட்டால் அது அவன் நல்ல குணங்களை வீழ்த்தி விடுகின்றது.
2.திருப்பி அவருடைய எண்ணங்களும் வாலியாகின்றது.

இத்தகைய போர் முறை வரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் சுவைமிக்க உணர்வுகளைச் செயல்படுத்தும் அந்த நல்ல உணர்வுகள் மடிந்து விடுகின்றது.

அதனால் தான் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான்…! என்று காவியத்திலே காட்டினார்கள்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் இன்று உலகில் வரும் தீமைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும். ஏனென்றால் குறுகிய காலமே வாழும் நாம் உடலின் இச்சைக்கு அடிமையானால்… கடும் நஞ்சு கொண்ட உணர்வின் தன்மையாக நமக்குள் விளைந்து விடுகின்றது.

உடலின் இச்சைக்கு வாழப்படும் பொழுது வேதனைப்படுத்தி மற்றொன்றைத் துன்புறுத்தி அதில் மகிழ்ந்து இந்த உடலில் வாழலாம்.
1.அடுத்த கணம் இந்த நஞ்சின் தன்மையை கொண்டு பிறருடன் தொடர்பு கொள்ளப்படும் பொழுது
2.அவன் இடும் சாப அலைகளிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம்…!

இன்று இவர்கள் இவ்வாறு செய்யலாம் ஆனால் அவன் குடும்பத்தில் கருவில் விளையும் சிசுவிற்கு
1.சாபமிட்ட அலைகளைக் கர்ப்பிணியாக இருக்கும் அந்த தாய் நுகர நேர்ந்தால்
2.அந்தச் சிசுவிற்குள் இந்த உணர்வுகள் விளைந்து
3.இவனால் பட்ட வேதனைகள் அந்த ஒன்றுமறியாத குழந்தையும் நரக வேதனைப்படும் தன்மை வருகின்றது.

இவன் செல்வத்தைச் சம்பாதித்தாலும் அந்த குழந்தை அதை பெறுவதற்கு இல்லை. ஆனால் தட்டிப் பறித்துச் சென்றுவிடும் இவன் அதை அனுபவிக்கப் போவதில்லை.

குழந்தைக்காகத் தான் பணத்தைச் சேமிக்கிறேன் என்று சொன்னாலும்
1.அவனிட்ட சாப அலைகளால் இவனும் வாழ முடிவதில்லை
2.அவன் குழந்தையையும் வாழ முடியாத நிலைகள் செய்து விடுகின்றது.

இப்படி ஒவ்வொரு மனிதனும் ஆசையின் எல்லை கொண்டு தன் நிலைகளிலே விஷம் கொண்ட உணர்வுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலை தான் இன்று உள்ளது.

அன்று ஆண்ட ஒவ்வொரு அரசனும் தான் வாழ… மதம் இனம் என்ற நிலைகளைத் தூண்டிவிட்டு அதிலே நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் மதத்திற்குள் மதம் மதத்திற்குள் இனம் இனத்திற்குள் இனம் என்ற நிலையில் நஞ்சின் தன்மையாகப் பாயச் செய்து விட்டார்கள்.

வழி வழியாக வந்த நிலைகளில் இன்று எது உண்மை…? எது பொய்…? நாம் எப்படி வாழ வேண்டும்…? என்ற சிந்தனையற்ற நிலையாக… சிதைந்த நிலையில் தான் இன்று அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இதிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

இந்த மனித உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்றால் அருள்
1.யாம் உபதேசிக்கும் மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்.
2.அடிக்கடி அதை நினைவுக்குக் கொண்டு வந்து உங்கள் உடலுக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

கஷ்டம் வரும்போது… ஆண்டவனையே எதிரியாகவும் ஆக்கிவிடுகின்றார்கள்

கஷ்டம் வரும்போது… ஆண்டவனையே எதிரியாகவும் ஆக்கிவிடுகின்றார்கள்

 

இன்றைய உலகில் உள்ள பெரும்பகுதியானோர் தன் உயிரின் உண்மை நிலையையும்… கடவுளின் நிலையையும்… தான் வாழும் வாழ்க்கை நிலையையும்… புரியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஈஸ்வர சக்தி பெற்ற… பிறப்பிலிருந்து நல்லவர்… கெட்டவர்… என்ற பாகுபாடு இல்லாமல் அச்சக்தியில் இருந்து அவர்களுக்கு அளித்த மாபெரும் சந்தர்ப்பத்தை “நலமாக வாழ்ந்திடத்தான்” ஒவ்வொருவரும் பிறக்கின்றார்கள்.

பிறவி எடுத்த நிலையில் அவரவர்கள் வளர்ந்த நிலை… மண் வாக்கு… மன நிலை… சுவாச நிலையைக் கொண்டு வாழும் பொழுது “தன் சுவாச நிலையிலே தான்” அவர்களுடைய நிலை எல்லாமே நடக்கின்றன.

1.இன்றைய காலத்தில் மக்கள் ஆண்டவனை வணங்குவது என்பதே
2.தன் கஷ்டங்களுக்கு மீட்கும் வழியை வகுத்துத் தரத்தான் பல கோவில்களுக்குச் சென்று வணங்குகிறார்கள்.
3.பல காணிக்கைகளைக் கட்டி பல வேண்டுதல்களையும் செய்து
4.ஆண்டவனையும் இவர்கள் செய்யும் வியாபாரத்தில் பாகஸ்தனாக்கி
5.இவர்கள் செய்யும் பாவத்திற்கும் ஆண்டவனின் பெயரை உபயோகித்துக் கொள்கிறார்கள்.

நான் அள்ளி அள்ளி ஆண்டவனுக்கு அளித்தேன்… எல்லா ஆண்டவனுக்கும் பல நிலையில் பூஜை செய்கிறேன்… அந்த ஆண்டவனுக்குக் கண்ணில்லையா…? என்றெல்லாம்
1.இவர்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது
2.அந்த ஆண்டவனையே எதிரியாகவும் ஆக்கிவிடுகின்றார்கள்.

இவர்கள் எண்ணி ஏங்கும் பொருள் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் எந்தக் கோவிலுக்காவது சென்று வந்தால் அந்த நிலையிலிருந்து பொருள் வந்தவுடன் ஆண்டவனை… “எல்லாம் அவன் தான்…!” என்கிறார்கள்.

(ஆனால்) இவர்கள் மன நிலையில் இருந்து தான் அவ்வாண்டவனின் சக்தியே செயல்படுகிறது.

1.அந்தச் சூரிய சக்தியிலிருந்து…
2.இவர்கள் ஈர்க்கும் நிலையிலிருந்து தான் அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை இதைப் படிக்கும் அனைவரும் உணர்ந்து
3.அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான்…
4.அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது…! என்ற உண்மையை உணருங்கள்.

நம் சித்தர்கள் பல வழிகளில் பல உண்மைகளைச் செய்யுள்களின் (பாடல்கள்) வடிவில் மனிதர்களின் எண்ணத்திற்குப் பதியும்படி முதலிலேயே வெளியிட்டுள்ளார்கள்.

ஆட்டை வெட்டுபவனுக்கு… ஒவ்வொரு நாளும் பல ஆடுகளை அடித்து வியாபார நிலைக்கு அவன் அதை விற்கிறான். ஆட்டை வெட்டுபவனுக்குத் தான் பாவம்… உண்ணுபவனுக்கு அல்ல…! என்று எண்ணுகின்றோம்.

அவன் எதற்காக ஆட்டை அடிக்கின்றான்…?

அவன் எண்ணமெல்லாம் அவனுக்கு வேண்டிய பொருள் கிடைத்திடத்தான்…! அதைச் செய்கிறான். பாவ புண்ணியத்தை அவன் எண்ணத்தில் கொண்டு வருவதில்லை.

பாவ புண்ணியத்தை அவன் எண்ணி விட்டால் அவன் எண்ணத்திலேயே அது ஊன்றி.. அவன் அந்தத் தொழிலை ஒரு நாளும் செய்திட முடியாது.

பல தண்டனைகள் பெற்ற கைதிகளை ஒருவன் தூக்கிலிடுகின்றான். ஒரே நாளில் அவன் பலரைத் தூக்கிலிட்டாலும்.. அவனுக்கு அந்தப் பாவம் அண்டுவதில்லை.

அவன் பொருள் வாங்க அந்தப் பணியைச் செய்கிறான். தன் மேல் தவறை எண்ணும் பொழுது தான் அவனுக்கு அந்நிலை தோன்றிடும். அவன் தொழில் அது தான்; அவன் ஊதியத்தைப் பெறுகின்றான்; அவன் எண்ணமெல்லாம் அந்த ஊதியத்தின் மேல் தான் உள்ளது.

அவன் ஆத்மாவில் அவன் நல்ல நிலைகள் பெற்றிருந்தால் அவனை எந்தப் பாவ புண்ணியங்களும் அண்டுவதில்லை. அவன் நிலையும் உயர்ந்து நிற்கிறது.

1.பல பாவங்கள் செய்துவிட்டு
2.செய்த பாவங்களைத் தன் எண்ணத்திலேயே கலக்கவிட்டு
3.தன் சுவாச நிலையை மேலும் கடினமாக்கிக் கொண்டு
4.பல இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் இன்றைய மனிதர்கள்.

இந்நிலையிலிருந்தெல்லாம் விடுபட்டு நம் உயிரணுவிற்கு ஊட்டம் தந்து அவ்வுயிரணுவிற்கு அழியாச் செல்வத்தைத் தேடிடத்தான் இந்தப் பாட நிலையை எடுத்து இயம்புகிறோம்.

1.உயிரணுவின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்
2.இனி வாழும் நாட்களை நல்ல நிலையில் வாழ்ந்திடுங்கள் என்பதற்கே இதை வெளியிடுகின்றோம்,