செய்வினை என்பது உண்டா…? அது உண்மையா…!

செய்வினை என்பது உண்டா…? அது உண்மையா…!

 

கரையான் ஒரு மரக்கட்டை மீது செல்லப்படும் பொழுது
1.அதனுடைய மலங்கள் அதிலே பட்ட பின் அந்தக் கட்டை ஆவியாக மாறுகின்றது
2.ஆவியாக மாறும் பொழுது அது எந்த மண்ணில் இருந்த சத்தை எடுத்து மரமாக ஆனதோ அந்த மண்ணாகவே மாறுகின்றது.

கரையான்களாக உருவாகியதைக் கோழியோ குருவியோ அதை உணவாக உட்கொண்டிருக்கும். அதனுடைய அணுவும் இதற்குள் இருக்கும்.

அந்த அணுவின் வளர்ச்சிகள் இதற்குள் வளர்க்கப்பட்டு… கரையான் நுகர்ந்த உணர்வு போன்று “சிலதுகளைக் கரைத்து” அந்த உணர்வின் தன்மை தனது இனங்களாக மாற்றும் சக்தி “புழுவில் இருந்து மனிதனாக வளரும் வரையிலும் வளர்ந்து வந்துள்ளது…”

இது தான் கரையான் மந்திரம் என்று சொல்வது.

அதற்கென்று சில உணர்வுகள்… மந்திரத்தை ஜெபித்து இந்த உணர்வினைப் பெருக்கி விட்டால் அது ஒரு மனித உடலில் இருக்கும். மந்திரங்களை ஜெபிக்கப்படும் பொழுது அந்தக் கரையானைப் போன்று ஒன்றைக் கரைக்கும் சக்தி மனிதனுக்குக் கிடைக்கின்றது.

கரையான் மந்திரத்தைச் சொல்லி… ஒரு கட்டை மீதோ அல்லது ஒரு பாத்திரத்தின் மேலோ இதை தடவி வைத்து இந்த உணர்வின் ஒலிகளை அதிலுள்ள காந்தப் புலனில் ஓதிவிடுவார்கள்.

ஒரு டப்பியில் அது மூடிவிட்டு மந்திரத்தைச் சொல்வார்கள். பின் இன்ன பொருள் இங்கே வர வேண்டும் என்ற நிலையில் உணர்வைப் பாய்ச்சுவார்கள்.

ஊசி முனை அளவு துவாரம் இருந்தால் போதும் அந்த டப்பியிலே…! அந்த உணர்வின் தன்மை ஆவியாக எடுத்துக் கொண்ட பின் இங்கே குவிந்து அதே உருவின் தன்மையை உருவாக்கும்.

1.இப்படித்தான் பல மந்திரங்கள் செய்து பல பொருள்களை வரவழைப்பதும்
2.மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வினைப் பிரித்துக் கரையான் மந்திரம் என்றும்
3.ஒரு பொருளுக்குள் சேர்த்த பின்… ஒலியை எழுப்பி அதை மறையச் செய்வதும்… இன்னொரு இடத்தில் கொண்டு வருவதும்…!

பல கோடிச் சரீரங்கள் எடுத்து மனிதனாக ஆன பின் மனித உடலில் உருவாக்கிய நிலைகள் மிக மிக சக்தி வாய்ந்தது.
1.மற்றவருக்குள் பாய்ச்சி மனிதனுடைய எலும்புக்குள்ளேயே ஊடுருவி அங்கே தாயத்துகளை வைப்பதும்
2.மனிதனுடைய சிரசிற்குள் தாயத்துகளை ஊடுருவச் செய்வதும்…
3.ஒரு செடியிலே விளைந்த வெள்ளரிக்காயைக் கூட மனித உடலுக்குள் ஊடுருவச் செய்துவிடுவார்கள்.

நான் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யப்படும் பொழுது ஒரு இடத்திலே ஒரு மனிதன் வயிற்று வலி என்று வந்தான்.

அது எப்படி வந்தது…? என்று குருநாதர் காட்டிய வழியில் எக்ஸ்-ரே பார்ப்பது போன்று அவரை கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவர் வயிற்றிலே “ஒரு பிஞ்சு வெள்ளரிக்காய்” இருப்பது தெரிகிறது.

வயிற்று வலியால் அவதிப்படுகின்றார். மருந்தால் அந்த வலியைப் போக்க முடியாது.

ஏவல் செய்யப்பட்ட அந்த வெள்ளரிக்காயை நீக்குவதற்காக குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு
1.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீ எண்ணி ஏங்கு
2.இந்த உணர்வுகள் படரப்படும் பொழுது உனக்குள் செய்வினை செய்த வெள்ளரிக்காய் வெளி வந்து விடும் என்று சொன்னேன்.

அதே மாதிரி அவர் செய்தார் அந்தப் பிஞ்சு வெளி வந்துவிட்டது. பின் அவருடைய வயிற்று வலியும் நீங்கியது.

ஆனால் சிலர் செய்வினை என்பது உண்டா…? உண்மையா…! என்று கேட்பார்கள்.

ஆனால் கரையான் மந்திரத்தைச் சொல்லி ஒரு பொருளை இங்கே வைத்துவிட்டு… “இன்னார் உடல்களிலே அது புக வேண்டும்…” என்றால் அது உடலுக்குள் ஊடுருவிவிடும். ரண வேதனைகளை அங்கே கொடுத்துக் கொண்டிருக்கும்.

இதுகள் எல்லாம் மனிதனில் உருவாக்கப்பட்ட தீமையின் நிலைகள் தான். அதர்வண வேதம் என்ற நிலையில் மீண்டும் மீண்டும் தீமைகள் செய்யும் மந்திர ஒலிகளை எழுப்பப்படும் பொழுது… மனிதன் தனக்குள் கேட்டால்… எந்த மந்திரத்தால் ஏவல் விடப்பட்டதோ… அவன் இறந்த பின் அதே மந்திரத்தால் அவன் ஆன்மாவைக் கைவல்யப்படுத்தி… அவன் இறந்த பின் மீண்டும் இன்னொருத்தருக்குக் கெடுதல் செய்ய முடியும்.

1.வேதங்கள் கூறியதைத் தலை கீழாக மாற்றப்பட்டு
2.அதை மனிதன் எதிரிகளுக்குப் பாய்ச்சுவதும்
3.சுகபோகங்களுக்கு மற்றவர்களை அடிமையாக்கச் செய்வதும்…
4.அரசர்கள் செய்து கொண்டது என்பது இது தான்.

அன்றைய ஆயுதங்களும் இது தான்.

ஆனால் மக்கள் மத்தியிலும் இது பரவி விட்டது. அரசர்கள் அனைவரும் மடிந்து விட்டார்கள். மடிந்தாலும் பூதகணைகளாக மாறி அந்த ஆசை அலைகள் இங்கே பரவப்பட்டு இன்று சுழன்று கொண்டிருக்கின்றது… இயக்கிக் கொண்டுள்ளது.

நாம் எதுவும் செய்ய முடியாது… “அந்த ஆண்டவனால் மட்டுமே முடியும்…!” என்ற வித்தை ஊன்றியவர்களே அன்றைய அரசர்கள் தான்

நாம் எதுவும் செய்ய முடியாது… “அந்த ஆண்டவனால் மட்டுமே முடியும்…!” என்ற வித்தை ஊன்றியவர்களே அன்றைய அரசர்கள் தான்

 

“ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் தீமைகள் அகலும்…” என்ற உணர்வுடன் தான் செல்கிறோம். யாகங்கள் வேள்விகள் நடத்தும் பொழுது அதற்கு முன் அமர்கின்றோம்… உற்றுப் பார்க்கின்றோம்… நமக்குள் பதிவாகிறது.

ஆனால் இதற்குப் பெயர் “வசியம்…”

ஏனென்றால் நாம் ஏக்க உணர்வுடன் ஆலயத்திற்கு வரப்படும் பொழுது
1.அங்கே ஓதப்படும் மந்திரங்கள் நம் செவிகளில் ஈர்க்கப்பட்ட பின்
2.உயிருக்குள் மோதும் போது “ஓ…” ஓ…ம் நமச்சிவாய…! என்று அந்த உணர்வுகளை “உயிர்” நமதாக அமைத்து விடும்
3.அங்கே வாசிக்கப்படும் இசைகளை… அந்த ஒலி அலைகளை ஓ…ம் நமச்சிவாய…! என்று நம் உடலுக்குள் பாய்ச்சி விடுகிறது.
4.யாகத் தீயில் போடப்படும் பொருள்களின் வாசனைகளையும் நாம் நுகர நேர்கின்றது
5.இந்த உணர்வுகளும் ஓ…ம் நமச்சிவாய என்று பதிவாகி விடுகின்றது.

இப்படிப் பதிவாகக் காரணம் என்ன…?

இந்தத் தெய்வம் உனக்கு எல்லாவற்றையும் செய்து கொடுக்கும்…! என்று முதலிலே காவியங்களாகத் தீட்டி வைத்து விடுவார்கள் அந்தக் காவியத்தின்படி நமக்குள் ஆசைகள் உருவாகிறது. அதன்படியே அங்கே சொல்லும் மந்திரங்களை நமக்குள் பதிவாக்கி விடுகின்றோம்.

இப்படிப் பதிவாகிய பின்
1.ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அந்த மந்திர ஒலிகளைச் சேர்த்துக் கொண்டே இருப்போம்.
2.(பெரும் பகுதியானோர் மந்திரம் சொல்பவர்களாகத் தான் இருப்பார்கள்).

ஆலயங்களுக்குச் சென்று சாங்கியங்கள் செய்து இன்னென்ன அர்ச்சனை செய்தால் அந்தத் தெய்வம் உன்னைக் காக்கும்.
1.நீ செய்யும் அர்ச்சனை நேராக ஆண்டவனுக்குச் சென்று
2.அவன் மெச்சி உனக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வான் என்ற உணர்வுகளைத் தான் ஆலயத்தில் தோற்றுவிக்கின்றார்கள்.
3.ஆசைகளை ஊட்டும் ஆலயமாகத் தான் மாற்றி வைத்து விட்டார்கள்.

நேற்று வரையிலும் அந்த ஆலயத்தில் கூட்டம் இல்லை. ஆனால் யாகங்களையும் வேள்விகளையும் அங்கே செயல்படுத்திய பின் “வசியப்படுத்தப்பட்டு…” அந்த ஆலயங்களுக்கு நாம் அதிகமாகச் செல்கின்றோம்.

கடைசியில் “சரணாகதி தத்துவம்” என்று காட்டியிருப்பார்கள்.
1.ஆண்டவனிடத்தில் உன்னுடைய கஷ்ட நஷ்டங்களைச் சொல்லிவிடு.
2.சொல்லி விட்டால்… அபிஷேகம் செய்யும் உயர்ந்த பதார்த்தங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு
3.உனக்கு வேண்டியதை அவன் செய்வான்…! என்று இப்படித்தான் அரசர்கள் வழியில் நாம் வணங்கிக் கொண்டுள்ளோம்.

வேதங்கள் கூறியவற்றில் அதர்வண வேதம் என்று மனிதனுடைய நிலைகளை அரசர்கள் மாற்றி… மதம் என்ற நிலைகள் உருவாக்கப்பட்டு அதனின் மறைவிலே தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேதத்தின் தத்துவங்களை குலதெய்வம் என்ற நிலையை அன்றைய அரசர்கள் தன் மக்களுக்குள் பாய்ச்சி… அடிமைகளாக ஆக்கி விடுகின்றார்கள்.

அன்றைய அரச காலங்களின் வழி வழி தான் இன்றும் நாம் வேதங்களைச் சொல்வதும்… அதர்வண வேதங்களைக் கையாள்வதும் அபிஷேகங்களைச் செய்வதும்…
1.ஆண்டவனிடத்தில் வரம் வாங்குவது என்ற நிலைகளில்
2.இன்றும் நாம் வழிபட்டு வந்து கொண்டிருக்கின்றோம்.

அகத்தினை அழகுபடுத்துதலே முக்கியம்… அதுவே ஆரோக்கியமானது

அகத்தினை அழகுபடுத்துதலே முக்கியம்… அதுவே ஆரோக்கியமானது

 

ஒலி கொண்டு தான் ஒளி கொண்டு உருவான உணர்வு சக்தியில் இவ்வொலியின் உணர்வில் தான் உழல்கின்றது… உலகச் சுழற்சியும்… ஜீவ சக்தியும்… உயிர் அணுத் துடிப்புகள் யாவுமே…!

இவ் ஒலி ஈர்ப்பின் தாக்குதலுக்குகந்த உணர்வின் சுழற்சி ஈர்ப்புப் பிடியில் பிடிபட்டுள்ள வளர்ச்சி தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே.

1.இனிமையான இசைக்கு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பு செல்லும் பொழுது
2.இனிமையின் நாத ஒலி ஜீவ சக்தி ஒவ்வொன்றின் அலையிலும் மோதுண்டு
3.அதன் தொடர்பு கொண்ட வளர்ப்பு சக்தி ஒவ்வொன்றிலும் கூடுகின்றது.

அதிர்வு… இடி… மின்னல்… காட்டாற்று வெள்ளப் பெருக்கின் வேக ஒலி… இந்நிலை மோதும் பொழுது இவ்வுடலே அவ்வுடலின் “அச்ச உணர்வுடன்” செல்வது போன்ற உணர்வின் பயம் ஏற்படுகின்றது.

அருவியில் அமைதியாகச் சலசலப்புடன் அந்நீரின் ஒலி மோதலைக் கேட்கும் பொழுது அவ் இனிமையுடன் கூடி நம் உணர்வின் எண்ணமும் மயங்குகிறது.

மாலை நேரப் பட்சிகளின் அமைதியான ஒலி நம் உணர்வின் இனிமை உணர்வைக் கூட்டுகின்றது.

ஒலியின் ஈர்ப்பு எந்நிலை கொண்டு கால நிலையில் உணர்வின் மோதலில் மோதுகின்றதோ அதற்குகந்த வளர்ச்சி மனித உடலின் உணர்விற்கும்… ஜீவராசிகள் தாவரங்கள் கனி வளங்கள் ஒவ்வொன்றின் வளர்ச்சிக்குமே… இவ் ஒலியுடன் ஒலி கூடும் ஒலித் தன்மை கொண்டு வளர்ப்பு நிலை கூடுகின்றது.

இவ்வொலியின் செயற்கை அதிர்வில் சுற்றுப் புறத் தாவர இன வளர்ச்சிக்கும் நகர்ப்புறத்தைத் தாண்டி வரும் தாவரங்களின் வளர்ச்சிக்கும் மாறு கொண்ட வளர்ப்பு விகித நிலை இருக்கும்.

1.இவ் ஒலி உணர்வில் சேமிக்கும் அச்ச உணர்வின் ஈர்ப்பே
2.மனித உணர்வில் ஒவ்வொரு நொடிக்கும் இம்மரண பயம் என்ற பிடி ஈர்ப்பில் சிக்குண்டு வாழும் தன்மை
3.இன்றைய நாகரீக செயற்கைப் பிடி வாழ்க்கையில் உள்ளது.

இயற்கைச் சுழற்சியில் இயற்கையிலிருந்து மாறுபட்டு இப்பேராசைப் பிடியில் நாகரீகச் செயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் இந்த மரண பயம் என்ற பிடியுடன் சிக்கித்தான் இன்று வாழும் நிலை உள்ளது ஜீவ சக்தி அனைத்திற்குமே.

உருவத்தில் பெருத்த யானையும் உணர்வில் மரண பயத்தை வளர்த்துக் கொண்டு
1.தன் இரு செவிக்குள்ளும் எவ் எறும்பும் பூச்சிகளும் ஏறா வண்ணம்
2.தன்னைத்தானே செவியை விசிறிக் கொண்டே காத்து வாழுகின்றது.

இந்த எறும்பின் ஊர்தல்… அதன் செவி மட்டத்தில் உள்ள ஜவ்வில் பட்டவுடன் ஏற்படும் இரைச்சல் அவ் யானையின் உணர்விற்கு “மரண பயத்தின் அச்சத்தை ஏற்படுத்தி” அவ் எறும்பின் ஊர்தல் செவிக்குள் பாய்ந்தவுடன் தன்னை அறியாமல் வெறி கொண்டு மிகவும் பதட்டம் ஏற்பட்டு அந்த உணர்வின் பிடியிலேயே சிக்குண்டு மாய்கின்றது, இன்னும் சில யானைகள் அவ்வுணர்வின் மதம் பிடித்துக் கொள்கிறது.

இவ்வுணர்வால் எடுக்கும் அச்சத்தால் விளையும் பயம் தான் இந்த மரண பய உணர்வு.

எண்ணத்தால் இவ்வுணர்வின் பிடியை மாற்றிக் கொண்டு… உயர் ஞான வழி ஈர்ப்பு வளர்ச்சிக்கு எண்ணம் செல்லும் வாழ்க்கை இருந்தால் இப்பிம்ப உடலில் ஏற்படும் அச்ச உணர்வின் நிலை மாறும்.

எச்சக்திக்கும் சக்தி பெற இந்த உடல் பிம்பம் தேவை. ஆனால்
1.இந்த உடல் பிம்ப உணர்வில் ஏற்படும் மாற்றங்களும் நலிவுத் தன்மையும்
2.இந்த உடல் பிம்பத்தைப் பேணி வளர்க்கும் ஈர்ப்பலையும்
3.இந்த உடல் பிம்பத்தின் சுகம் காணும் ஆரோக்கிய வாழ்க்கையின் ஆவல் உணர்வும்
4.பிம்ப உடலின் அழகின் ஆசையிலும் இவ்வுணர்வின் ஈர்ப்பை எண்ணம் செலுத்தி வாழும் வாழ்க்கையைக் காட்டிலும்
5.உணர்வின் எண்ணம் உயர்ந்த குணத்தின் ஈர்ப்பில் செல்லும் உணர்வால்
6.இந்தப் பிம்ப உணர்வும் ஆரோக்கிய அழகும் தானாக வளரும்.
7.அகத்தின் அழகை முகத்தில் காணலாம் என்பதின் பொருளும் அதுவே.

மரண பயம் என்ற அச்சத்தை விட்டு… இந்த உடல் கூட்டின் அழகு ஆரோக்கியம் இவற்றைப் பேணிக் காக்கும் உணர்வு ஈர்ப்பை விட்டு…
1.நல்ல ஞான வளர்ச்சி வாழ்க்கையுடன் நாம் வாழ்ந்தால்
2.அமைதி கொண்ட வாழ்க்கையும் ஆரோக்கிய உடல் நிலையும்
3.வாழ்க்கையில் செய்யப்படும் தொழில் நேர்மையும் அதற்குகந்த வருவாயும் இன்பமும் நமக்குக் கிட்டும்.

உணர்வின் சுழற்சி இந்த நிலையில் சுழன்றால் தான்… வளர்ச்சியின் ஆத்ம சொத்தை வளர்க்க முடியும்.

நம்முடைய உண்மையான நண்பனும்…! எதிரியும்…!

நம்முடைய உண்மையான நண்பனும்…! எதிரியும்…!

 

காற்றலையில் புவி ஈர்ப்பின் பிடியில் வாழும் நாம்… நம் உணர்வில் உணர்வில் உந்தப்படும் எண்ணத்தில் உணர்வின் செயலைக் கொண்டு மட்டும் உடல் சேர்க்கை அமிலக்கூட்டு வளரவில்லை.

எறும்பு கொசு தேள் பாம்பு மூட்டை இதைப் போன்ற உயிரினங்கள் சந்தர்ப்பத்தால் நம்மை அவை கடிக்கும் பொழுது அவை சேமித்த விஷ நிலை கொண்ட அமில உணர்வானது அதன் கடி உணர்வை நாம் அறியும் பொழுது அதன் ஈர்ப்பு குண அமிலம் முழுவதையும் நம் உடல் பிம்ப உணர்வலையின் அமிலத்துடன் எடுத்துக் கொள்கின்றோம்.

வாழ்க்கையில் சில ஜீவராசிகளான இந்தப் பூச்சிகள் நம்மைக் கடிக்காமல் இருக்குமா…?

இவற்றின் ஈர்ப்பலையின் உணர்வின் அச்சம் நம் எண்ணமுடன் மோதும் பொழுது
1.அதனுடைய விஷம் நம் உடலில் ஏறிக் கடிக்கும் பொழுதும்… தாக்கும் பொழுதும்… நசுக்கும் பொழுதும்…
2.அதற்கு ஏற்படும் மரண பயம் நம் உடலிலும் ஏறிவிடுகின்றது.

எவ்வமில குண ஜெந்துவின் கடிபட்டதோ அதனுடைய உணர்வையும் நாம் பெற்று அவற்றின் விஷ உணர்வின் தீய அமிலங்களும் நம் உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது.

நம் உடல் அமிலத்துடன் அப்படிச் சேரும் பொழுது அதனுடைய வழித் தொடர் கொண்ட எண்ண குணத்தை இந்த உடலைக் கடிக்கும் சில ஜீவ ஜெந்துக்களின் நிலையை நாம் அடைகின்றோம்.

இதிலிருந்து தப்பும் முறை எப்படி..?

1.ஒவ்வொரு மனிதனுக்கும் எதிரி யார்…?
2.ஞானத்தை வளர்க்க விடாமல் இருப்பதும் எல்லா நிலைகளுக்கும் தடை ஏற்படுத்தும் எதிரி யார்,,,?
3.இந்த மனிதனுக்கு நற்குண வழிக்குச் செல்ல வழி காட்டும் நண்பன் யார்…?
4.அன்பான எதிர் அலையின் உணர்வை அடையவல்ல சக்தி நண்பன் யார்…?

எதிரியான நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்பக்கூடுதான்… நற்சக்தியின் ஞான அலையைப் பெறவல்ல தன்மையைச் செயல்படுத்தவல்ல நண்பனும் இந்த உடல் பிம்பக் கூடுதான்…!

ஆகவே தீய குணத்தின் எண்ணத்தை மேற்கொள்ளும் பொழுது தீய சக்தியின் நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்ப வீட்டினுள் வாழும் உணர்வின் எண்ணச் செயல் தான்.

நல்ல வழிக்கு வழி நடத்திச் செல்வதுவும் இந்த உணர்வின் எண்ணச் சக்தி கொண்ட நல் அலையின் சக்தியினால் தான்.

உணர்வில் எடுக்கும் எண்ணத்தின் செயல் எத்தன்மை கொண்டுள்ளதோ அத்தன்மை கொண்ட ஒவ்வொரு மனிதனையும் அந்தந்த நிலைக்கு உட்படுத்துவது இந்த உடல் என்ற பிம்பக்கூடு தான்.

விஞ்ஞானிகளும் பல மருத்துவர்களும் தற்கொலையின் செயலில் ஈடுபடுவதும் அவற்றின் வளர்ப்புத் தன்மையும் எதனால் ஏற்படுகின்றது…?

மருத்துவர்கள் சந்திக்கும் ஆத்மாக்களின் உணர்வில்…
1.பெரும்பகுதி எண்ணத்தின் வியாதியான “மரண பயம்…” கலந்தே வருவதால்
2.அத்தகையவர்களின் எண்ணத் தொடர்புடனே இவர்களின் வாழ் நாள் செல்ல நேர்கின்றது.
3.இப்படி அந்த அச்ச உணர்வின் பிடிக்கு இவர்களின் உணர்வலையும் செல்வதினால்
4.இதே சுழற்சி வட்டத்தால் இவர்கள் உணர்வுடன் இந்த மரண பயம் உந்தப்பட்டு விடுகிறது.

அதனால் இவர்களின் உணர்வின் எண்ணமே இந்த மரண பய ஈர்ப்புப் பிடியில் சிக்குண்ட நிலையில் பலரின் செயல் இதே உணர்வுடன் செயல் கொள்கிறது…. தன்னால் அதைத் தாங்க முடியாது போகின்றது.

சிரசில் இருக்கும் உயிருக்குக் “கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்…”

சிரசில் இருக்கும் உயிருக்குக் “கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்…”

 

கலசம் என்பது யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வுகள் உயிரான உணர்வுகளில் படப்பட்டு உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் பரப்பும் நிலை தான்.

“கலச நீர்…” என்பது…
1.அருள் ஞானிகளின் அருள் சக்தியை உங்கள் உயிருக்குள் ஊட்ட(ற்ற)ப்பட்டு
2.அதன் வழி உங்கள் உடலுக்குள் இருக்கும் தீமைகளை அகற்றும் நிலைகள் தான்.

ஆகவே… யாம் கொடுக்கும் உபதேசத்தை எந்த அளவிற்குக் கேட்டு உணர்ந்தீர்களோ உங்களுக்குள் இது அரும் பெரும் சக்தியாக வளர்கின்றது… தீமைகளை அகற்றிடும் சக்தியாகப் பரவுகின்றது.

அதற்குத் தான் இந்த துருவ தியான நேரத்தில் இது உபதேசித்தது. அதன் மூலம் இங்கே வைக்கப்பட்டுள்ள கலசத்திற்குள்ளும் நாம் தியானிக்கும் உணர்வின் எண்ணங்கள் பரவுகின்றது.

மனித உடலுக்குள் இந்த சிரசு (தலை) கோபுரமாக இருக்கின்றது கோபுரத்திற்குள் வீற்றிருக்கும் இந்த உயிரிலே அருள் ஞானிகளின் அருள் சக்திகளை நமக்குள் நீராட்டுவது போன்று…
1.நாம் தியானித்த ஞானிகளின் உணர்வின் சக்தியைக் கலச நீருக்குள் ஊட்டி
2.ஆலயத்தின் கோபுரத்தில் இதை ஊற்றப்படும் பொழுது (கும்பாபிஷேகம்)
3.அதில் இருக்கக்கூடிய காந்தப் புலனறிவு நாம் பாய்ச்சும் அருள் ஞான உணர்வுகளைக் கவருகின்றது.

இன்று எப்படி ரேடியோ டிவிக்களில் ஏரியல் ஆண்டனாக்களை வைத்து காற்றில் பரவி வருவதை அது இழுத்து நமக்கும் ஒலி ஒளியாகக் கொடுக்கின்றதோ அது போன்று ஞானிகளின் உணர்வை அது நமக்கு இழுத்துக் கொடுக்கும்.

ஏனென்றால்
1.அங்கே வைக்கப்படுள்ள கலசம் அது செம்பு…. அதற்குள் காந்தப் புலன் உண்டு
2.அதே சமயத்தில் ஜீவ அணுக்களாக என்றும் வற்றாத “வரகு…” அதற்குள் போடப்பட்டுள்ளது.
3.உபதேச வாயிலாகக் கொடுக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை எல்லோரும் ஏகோபித்து அங்கே பதியச் செய்யப்படும் போது
4.ஞானிகளின் உணர்வலைகளைக் கவர்ந்து அதன் கீழ் இருக்கும் சிலைகளுக்கு அது கிடைக்கச் செய்யும்
5.சிலையை உற்றுப் பார்ப்போர் அனைவரும் அந்த அருள் ஞான சக்திகளைப் பெறுவார்கள்
6.இத்தகைய நெறிகளைத் தான் அன்று தத்துவ ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டினார்கள்.

ஞானிகள் சொன்ன முறைப்படி நாம் செய்திருப்போம் என்றால் இன்று உலகில் வரும் தீங்குகளை அடக்கி இருக்கலாம்… அதிக அளவுக்கு விஷத் தன்மை பரவாது நாம் தடுத்தும் இருக்கலாம்.

மாறாக… அன்று ஆண்ட அரசர்கள் ஆலயங்களைக் கைப்பற்றி அவர்களுடைய ஆசைகளை இதற்குள் ஊட்டி… அவர்கள் ஆசையின் உணர்வைத் தான் கலச நீராக மாற்றினார்கள்.

அதே தீமையின் உணர்வுகளை அங்கே பதியச் செய்யப்படும் பொழுது ஆலயத்திற்கு வருவோர் எண்ணங்களிலும் இதே ஆசைகள் தான் தூண்டப்படுகிறது. ஞானிகள் காட்டியது நமக்குக் கிடைக்காது செய்துவிட்டனர்.

ஆக…
1.மனிதர்கள்… தம் ஆசையினால் வரும் விளைவுகளில் இருந்து மீண்டிட வேண்டும்
2.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும்
3.எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற தத்துவத்தை
4.ஆறாவது அறிவால் தனக்குள் உருவாக்கும் அந்த உயர்ந்த உணர்வின் தன்மை
5.ஞானிகளால் உணர்த்தப்பட்டது காலத்தால் மறைந்து விட்டது.

இனியாவது… இந்த விஞ்ஞான உலகில் பேரழிவாக வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.கலச நீராட்டும் உணர்வின் ஆற்றல் ஆலயத்தில் பெருகி
2.ஆலயம் வருவோர் அனைவரும் இதை நுகர்ந்து… அவருக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் அகன்று
3.மெய் ஞானிகளின் அருள் ஒளிகளைப் பெற வேண்டும் என்று
4.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உணர்வின் ஒளிகளை நாம் அனைவரும் பரப்புவோம்

ஆலயம் வருபவர் இருள்கள் நீங்கட்டும்…! அருள் ஞானிகள் உணர்வு ஆலயங்கள் முழுவதும் பரவி… வருவோர் அனைவரது குடும்பங்களும் தெளிந்த நிலைகள் கொண்டு வாழ்ந்து… எல்லோரும் நலமாக இருக்க நாம் பிரார்த்திப்போம்… தியானிப்போம்.

“சாமி சொன்னார்… சாமி சொன்ன வழியில் தியானிப்போம்…” என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்

“சாமி சொன்னார்… சாமி சொன்ன வழியில் தியானிப்போம்…” என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்

 

உங்கள் முந்தைய வாழ்க்கையில் உங்களை அறியாமல் தீமையான உணர்வுகள் பதிவாகியிருந்தால் அதை மாற்றிட… தியானப் பயிற்சியாகவும் ஆத்ம சுத்தி பயிற்சியாகவும் உங்களுக்குக் கொடுக்கின்றேன் (ஞானகுரு).

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப் பழகிக் கொண்டீர்கள். பழகாதவர்களும் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

பழகிக் கொண்ட உணர்வுகளுக்கு அதை இயக்கப் பயிற்சியாக உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

1.ஆத்ம சுத்தியை நாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…?
2.அதை வைத்து நம் உடலில் நல்ல அணுக்களை எப்படி வளர்க்க வேண்டும்…?
3.அதே சமயத்தில் தீய அணுக்கள் நம் உடலுக்குள் வராது தடுக்கும் சக்தியாக ஆறாவது அறிவின் துணை கொண்டு… உடலிலுள்ள ஜீவ அணுக்களை ஒளியாக எப்படிப் பெருக்க வேண்டும்…? என்று தான்
4.உங்களுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

இந்தப் பயிற்சியைக் கொடுத்தும்… உங்களுக்கு உடல் ஆசை வந்தால் இராவணனாக மாறி விடுகின்றது. இராவணனாக மாறி விட்டது என்றால் உங்கள் நல்ல குணங்களை எல்லாம் அது எடுத்துச் சாப்பிட்டுவிடும்.

அப்படிச் சாப்பிட்டு விட்டால் அசுர குணம் கொண்ட உடலைத்தான் இந்த உயிர் உருவாக்கிவிடும். அடுத்து மனித உரு இல்லை.

ஆகவே… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உயிரைப் போல ஜீவ அணுக்களை ஒளியாக மாற்றி இந்த உடலுக்குப் பின் ஒளி உடல் பெறலாம்.

1.இனி வரும் யுத்த நிலைகளில் கடுமையான விஷத்தன்மையாகி… இந்த உலகமே அழிந்தாலும்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நீங்கள் இணைந்து வாழலாம்.

இந்த உயிர் என்றுமே அழிவதில்லை. நெருப்பிலே பட்டாலும் இந்த உயிர் அழிவதில்லை. ஆனால் உடல்கள் கருகுகின்றது. உடலிலிருந்து வெளி வந்த கருகிய உணர்வுகள் பரவுகின்றது. எவர் உடலில் படர்கின்றதோ அங்கே அந்த உணர்வின் இயக்கமாக இயக்குகின்றது.

அடுத்து இந்த உயிர் இதே வேதனைப்படுத்தும் உடலில் ஈர்த்து அதற்குள் வந்து உடலைப் பெறுகின்றது. உடல் பெறும் சந்தர்ப்பம் பெரும் பகுதி புழுவாகவும் பாம்பாகவும் பூச்சியாகவும் தான் பிறக்க நேருகின்றது.

இந்த விஷ அணுக்களே இங்கே இப்படிப் பரவப்படும் பொழுது மனித உடலில் இது பிறந்து விட்டால் உடலுக்குப் பின் இந்தக் கிருமிகளின் நிலை அதிகமாகும். பின்… பூச்சிகளை உருவாக்கும் நிலை அதிகமாகும்.

இனிமேல் மனித உடல் பெறுவது என்பது மிகவும் கடினமாகிவிடும்.

ஆகவே இன்றைய நிலைகளில் கவலையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் துரத்துங்கள். ஏனென்றால் கவலையும் சஞ்சலமும் சோர்வும் உங்களை அது பெரும் பிசாசாக மாற்றி உங்கள் நல்ல குணங்களை அழித்து உங்களை அழிவிற்கே கொண்டு செல்கின்றது.

கவலையும் சஞ்சலமும் சோர்வும் கொண்டு வரப்படும் பொழுது
1.“தாங்க முடியவில்லை..,” என்ற கோபமும் பழி தீர்க்கும் உணர்வையும் இது இரண்டையும் கூட்டி வெறுப்பின் உணர்வாகி
2.இந்த உடலையே வெறுக்கும் நிலையாகி வெறுத்து “மற்றவர்களைத் தாக்கும் உணர்ச்சிகள்” கொண்டு வருகின்றது.
3.இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.
4.எமது குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தான்
5.திரும்பத் திரும்ப அவர் உணர்த்திய நிலைகளை ஆழமாக உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டுள்ளோம்.

நீங்கள் எல்லாம் எந்த அளவிற்குத் தெளிந்து வருகின்றீர்களோ அது உங்களுக்கு நல்ல பயனைத் தரும்.

ஆனால்… வீட்டுக் கவலைகளையோ சஞ்சலங்களையும் சலிப்பையும் எண்ணிக் கொண்டிருந்தால் யாம் சொல்லும் நிலைகள் பதிவாகாது.

சாமி (ஞானகுரு) சொன்னார்…! நாம் அவர் சொன்ன வழியில் தியானிப்போம். எல்லோருக்கும் என் மேல் அந்தப் பேரன்பு வர வேண்டும். எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் நல்லராக வரவேண்டும். எல்லோருக்கும் நல்ல உணர்வுகள் கிடைக்க வேண்டும். ஒன்றுபட்டு வாழும் தன்மை வளர வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணித் தியானியுங்கள்.

1.சாமியைப் பார்க்க வேண்டும்… சாமியைப் பார்த்தால் தான் நல்லது…! என்ற நிலை வேண்டியதில்லை
2.“சாமி சொன்ன வழியில்” நீங்கள் எண்ணித் தியானித்தாலே போதுமானது.
3.சாமி சொன்ன சக்தி இங்கே இருக்கின்றது
4.சாமி உபதேசித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவு இருக்கின்றது.
5.யாம் சுமார் 30 வருட காலமாக உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் இங்கே இருக்கின்றது… உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது.
6.அதை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எல்லோரும் அந்த அருள் வழியில் உயர்ந்தீர்கள் என்றால் அதைக் கண்டு நான் சந்தோஷப்படுவேன். அந்தச் சந்தோஷமான உணர்வை எடுத்துச் சந்தோஷமான உலகிற்குச் செல்கின்றேன்.

“அதே சந்தோஷத்தை” உங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

“நாளை என்ன செய்வோம்…?” என்ற எண்ணத்துடன் தான் இன்றைய மனிதன் வாழ்கிறான்

“நாளை என்ன செய்வோம்…?” என்ற எண்ணத்துடன் தான் இன்றைய மனிதன் வாழ்கிறான்

 

“மரண பயம்…!” என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமல்ல. ஜீவ பிம்பம் அனைத்திற்குமே உண்டு. பிறப்பில் நாம் எடுக்கும் சுவாச உணர்வின் அலைத் தொடரில் பிறந்த குழந்தைக்கும்… ஏன்… கருவில் இருக்கும் குழந்தைக்குமே… மரண பயம் என்ற அச்ச உணர்வு உண்டு.

பிறந்த குழந்தைக்கு அந்தக் குழந்தையின் உடலில் கடிக்கும் கொசுவினால் வலி ஏற்பட்டாலும்… உலுக்கும் தன்மை கொண்டு உலுக்கி விழுந்து சில குழந்தைகள் வீர்…! என்று அழவும் செய்யும். அதிர்வு நிலை ஏற்பட்டவுடன் இக்குழந்தைகள் அழுகும்.

கருவிலேயே மரண பயம் என்ற அச்ச உணர்வுடனேதான் கருவே உருவாகின்றது. அதன் வழியில் கரு வளர்ச்சியின் நிலை கூடி வருவதினால் இவ்வுணர்வின் அச்சம் மாறி “மரண பயத்தை எப்படி விட முடியும்…?”

1.மரண பயம் என்ற உணர்வின் பிடியில் வாழ்க்கை உள்ளதனால்தான்
2.மனித வாழ்க்கையில் சோர்வும் இன்னலும் கலகங்களும் கோபத் தன்மையும்
3.பொறாமை உணர்வும் போட்டி நிலைகளும் பேராசை நிலையும் புகழ் நிலையும் ஏற்படுகின்றன.

ஆனால்
1.”பிறவா வரம் வேண்டும் இறைவா…!” என்று இறை சக்தியை இறைஞ்சி
2.இன்னமுதுடன் இனிதிசை கொண்ட இல்லற இன்ப இல்வாழ்க்கை என்ற இனிய வழித் தொடரில்
3.ஈன்றெடுக்கும் இறைச் செல்வ மக்களுடன் இயற்கை வழி இனிய ஒளி இன்பம் பெற
4.பிறவா வரம் பெறும் இறை ஞானம் நிலையுடன்தான்…
5.வாழ்க்கை நிறைவு செ(ய்)ல்வது “பிறவா வரம் பெறும் நிலை…!”

பிறவா வரம் பெறும் உணர்வு கொண்டு சேமிக்கும் உணர்வின் எண்ணத்தில் கூடும் அமிலச் சாற்றில்
1.மரண பயம் என்ற உணர்வுடன் வளரும் பருவக் காலமும் வளர்ந்த வாழ்க்கைக் காலமும்
2.மனிதனின் உணர்வில் இவ் அச்ச உணர்வினால் தான் இப்பேராசை புகழ் போட்டி பொறாமை எல்லாமே வருகிறது.

ஆறிலும் சாவு… நூறிலும் சாவு…! என்ற பயத்தையும் ஊட்டி… பின் பிறவா வரம் என்ற இயற்கை உணர்வுடன் நாம் ஒன்றிச் சென்றால் இல்லறம் இன்பம் கொள்ளுமா…! இயற்கை வாழ்க்கையும் நமக்குக் கூடுமா…? நாளை… நாளை…! என்ற உணர்வே மனிதனுக்கு உழன்று கொண்டு உள்ளது.

தாவரங்களைப் போன்றும் பூமிக்கடியில் வளரும் கனி வளங்களைப் போன்றும்…
1.பூமியின் ஈர்ப்புப் பிடியுடன் வளராமல்
2.எங்கும் சென்று எதனையும் செயலாற்றக்கூடிய நிலையில் நடந்தோடும் செயலைக் கொண்ட ஜீவ பிம்ப மனிதனுக்கு
3.இன்றைய நாகரீகச் சுழற்சிப் பிடிப்பு வாழ்க்கையில்
4.தன் ஜீவனுக்குப் பிறகு சேமிக்கும் பேராசை பொருள் செல்வச் செயலினால் தான்
5.இன்றைய ஜீவ சக்திகளின் மரண பய உணர்வு ஒவ்வொரு நொடிக்கும் அதிகப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் தான் உண்ணும்… உடுக்கும்… வசிக்கும்… வாழ்க்கைப் பிடியில் சிக்கி… தேவைக்கு மேல் அடையும் பேராசை குணத்தினால் தன் வாழ்க்கையையே மரண பயத்திற்கு அடகு வைத்து விட்டான்…! இன்றைய கலி மனிதன்.

அதிலிருந்து இஜ்ஜீவ பிம்ப உடலை மீட்டத் தெரியாத அச்ச உணர்வில் இருக்கும் வரை
1.உண்ணும் உணவையும்… உணரும் காம இச்சையின் இன்பத்திலும்… செயற்கை வாழ்க்கை முறையிலும் தான் இன்பம் உள்ளது…! என்று ஏங்கியே வாழ்ந்து
2.இதன் தொடர் நிலையிலேயே நீடிக்க அதற்கு வேண்டிய பொருளை ஈட்டவும்
3.அதிலே தவறு ஏற்படும் பொழுது செய்த தவறை மறைக்கப் பிறிதொரு தவறின் நிலைக்குச் சென்று
4.பொருள் (சொத்து செல்வம்) என்ற சேர்க்கை இருந்தால் தான் எந்த இன்பத்தையும் அடையலாம்
5.எந்தச் செயலையும் செய்யக்கூடிய “வல்லுனரையும்” பணத்தால் சேவகம் (அடிமையாக்க) செய்ய வைக்க முடியும்..! என்ற குணமும்
6.முன்னேறிய இன்றைய அரசியல் ரீதியிலும் பொருள் என்ற பிடியில் புகழ் என்ற இன்பம் காணவும்… சென்று விட்டதால்
7.உயர்ந்த ஞான சக்தி கொண்ட ஞான வித்தகர்களின் ஞான போதனையே இவ்வாயிரம் ஆண்டு காலத்தில் அற்றுப்போய் விட்டது.

ஒவ்வொரு மனிதனும் தன் ஜீவ சக்திக்குத் தகுந்த தேவையின் செயல் கொண்டு வாழாமல்
1.உடல் குன்றி விட்டால்… நாளை என்ன செய்வோம்…?
2.செய்யும் தொழில் நசிந்து விட்டால்… நாளை என்ன செய்வோம்…? என்ற எண்ணத்துடனே வாழும் நிலை உள்ளது.

இன்று வாழும் சுக வாழ்க்கைக்காக வேண்டி “அன்றன்று சேமிக்கும் பொருளே பிரதானம்…!: என்ற எண்ணத்தின் பேராசைப்பிடியில் மரண பயம் என்ற அச்ச உணர்வுடனே உள்ளார்கள்.

ஆகவே…
1.பக்தி என்ற முறையில் ஆண்டவனை வணங்குவதிலிருந்தும்
2.எதிர்காலத்திற்காகச் சேமிக்க வேண்டிய பொருளின் சேர்க்கையிலிருந்தும்
3.மரண பயத்தைத் தன்னுள் ஏற்றிக் கொண்ட மனிதனுக்கு
4.எப்படியப்பா மரண பயத்தை விட்டு விட்டு
5.ஞான வளர்ச்சியையோ தெய்வ சக்தியையோ வளர்த்துக் கொள்ள முடியும்…? அல்லது பெற முடியும்…!

விஞ்ஞானத் துறையில் எடுத்துக் கொண்டாலும் அதிலே பல செயல்களை ஆராயும் மனிதர்கள் எல்லாம் தற்கொலை என்ற தன்னை மாய்த்துக் கொள்ளும் முடிவிற்கு ஏன் செல்கிறார்கள்…?

பிறவா வரம் பெறும் இனிய சக்தி கொண்ட ஞானிகள்… தன் உடலைப் பாதுகாக்க இந்த வாழ்க்கையில் உள்ள பொழுதே உடல் என்ற கூட்டின் முதுமை உணர்ந்து.. பிறவா சக்தி கொண்ட நிலையில் உடலைச் சமாதி நிலைப்படுத்திக் கொள்கின்றனர்.

அதனால் அவர்களுக்கு இந்த உணர்வின் மரண பயம் என்ற அச்ச உணர்வு இருப்பதில்லை. ஆனால் நமக்கு…?

தவறு செய்யாமலேயே… தவறுகள் வளர்ந்து கொண்டு வருவதன் காரணம் என்ன…?

தவறு செய்யாமலேயே… தவறுகள் வளர்ந்து கொண்டு வருவதன் காரணம் என்ன…?

 

உதாரணமாக… ரோட்டிலே செல்கின்றோம் அல்லது அக்கம்பக்கத்தில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

அவர்கள் படும் கோபமோ வெறுப்போ… ஒருத்தருக்கொருவர் சண்டையிடும் பகைமை உணர்வுகளையோ… அல்லது அவர்கள் வேதனைப்பட்டுத் துடித்துக் கொண்டிருப்பதையோ நாம் பார்த்து விட்டால் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது.

இத்தகைய பதிவின் நிலைகள் நமக்குள் வரும் போது
1.நம் நல்ல குணங்களை இயக்க முடியாது போய் விடுகின்றது.
2.நல்லதைச் சிந்திக்கும் நிலையும் இழந்து விடுகிறோம்.

புதிதாக மருமகள் குடும்பத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மேலே சொன்னதை எல்லாம் வேடிக்கையாகப் பார்த்து அது பதிவாகி இந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் அடுத்து அந்த மருமகள் தன் காரியங்களைச் சீராக செயல்படுத்த முடியாதபடி போய் விடுகிறது.

இதற்குக் காரணம் யார்…?

மற்றவர்கள்… அதாவது தவறு செய்வதையும் கோபப்படுவதையும் சண்டையிடுவதையும் நோயுடன் வாடுபவர்களையும் உற்று நோக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் பதிவாகி விடுகிறது. நல்லதை எண்ணும் பொழுது அதைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது… சிந்தனை குறைகிறது.

இதை எல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு வந்த பின்…
1.அந்த மருமகள் ஒரு பொருளைக் கையில் எடுத்தால் அதைப் பலமாக பிடிப்பதற்கு மாறாக…
2.ஒரு கரண்டியோ அல்லது பொருளையோ அல்லது ஒரு கண்ணாடி டம்ளரையோ எடுத்தால்
3.தன்னை அறியாமலே அது நழுவிக் கீழே விழுவதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் “இவருடைய நினைவாற்றல்… அவர்கள் சண்டையிட்ட உணர்வுகளுடன் செல்லப்படும் பொழுது…” அந்தக் கரண்டியை வலுவாகப் பிடிக்க முடியாத நிலையில் கீழே விழுந்து விடுகிறது.

இந்த உணர்வு வரப்படும் பொழுது
1.“இப்படி விழுந்து விட்டதே…” என்று எண்ணப்படும் பொழுது
2.அடுத்த பொருளையும் தவறிக் கீழே போட்டு விடுவார்கள்.

சிந்தனை இழந்து இப்படிப்பட்ட செயல்கள் நடக்கப்படும் பொழுது… அந்த வீட்டிலே தன்னை அறியாமலே ஒருவருக்கொருவர் சண்டையிடும் நிலை வந்து விடுகின்றது.

ஏன் இப்படிக் கீழே போட்டாய்…? என்று கோபமாக அதைக் கேட்டுப் பதிவாக்கி விட்டால் அடுத்து ஒரு இரண்டு முறை இவ்வாறு நடந்து விட்டால் மருமகள் மீது மாமியாருக்குக் கோபம் வருகிறது.

அந்தக் கோபத்தின் உணர்வு பதிவாகி அது வளர்ந்து விட்டால் “நம்மை இப்படிப் பேசுகின்றார்களே…” என்று மருமகளுக்கு இந்த எண்ணங்கள் வருகின்றது.

அப்படி வந்து விட்டால் அடுத்தடுத்து மற்ற காரியங்களையும் சீராகச் செயல்படுத்த முடியாதபடி ஆகிவிடுகிறது.
1.தவறு செய்யாமலேயே தவறுகள் வளர்ந்து கொண்டே வருகின்றது.
2.இதைத்தான் கீதையிலே எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

இங்கே தான் மகிழ்ச்சியான நிலையில் இருக்கப்படும் பொழுது அதைப் போல் மற்றவர்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசைகள் இருந்தாலும் அடுத்தவர் குடும்பத்தில் நடக்கும் குறைகளைப் பார்த்து இப்படி நடக்கின்றதே…! என்று உற்றுப் பார்த்த உணர்வுகள் தனக்குள் வலுவாகி… அதுவாக இங்கேயும் மாறி விடுகின்றது.

1.அந்தக் குடும்பத்தில் சந்தர்ப்பத்தால் தான் குறைகள் ஏற்பட்டத
2.அதே சந்தர்ப்பம் இங்கேயும் வந்து இயக்கி விடுகின்றது.

இப்படி இது வரிசையில்… மகிழ்ச்சியாக வாழக்கூடிய குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பகைமைகள் வந்து விடுகின்றது.

சிறிது காலம் எல்லாம் சந்தோஷமாக இருந்தோம்.. வர…வர… எங்கள் குடும்பத்திலே மகிழ்ச்சியே இல்லை…! என்ன ஆனதோ…? எந்தத் தோஷமானதோ…? யார் சாபமிட்டாரோ…? யார் செய்வினை செய்தார்களோ…? என்ற உணர்வுகள் வந்துவிடுகிறது.

இப்படி ஆன பின் அடுத்து ஒரு ஜோசியரிடம் சென்றால்… இவருடைய நினைவாற்றலை வைத்து “உங்களுக்கு ஆகாதவர்கள் செய்வினை செய்துள்ளார்கள்…! அதனால் தான் இப்படி நடக்கிறது…!” என்று நம் உணர்வைக் கவர்ந்து அவர்கள் அப்படிச் சொல்வார்கள்.

பின் நாம் அதை உறுதிப்படுத்துவதற்காக அவருக்குக் காசையும் கொடுப்போம். அதற்குப் பின் நமக்குக் கெடுதல் செய்தவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று இந்த உணர்வுகளைத் தூண்டி விடுகின்றது.

1.அவர்களைத் திருத்த வேண்டும் என்பதற்கு மாறாக
2.அந்தக் குடும்பத்திற்கு நாம் ஏதாவது தொல்லைகள் ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு அங்கே வந்து விடுகிறது.

ஆனால் நாம் அவர்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டாலும் நம் உடலுக்குள் “இங்கே ஒரு குடும்பம் இருக்கின்றதே….”

நம் உடலில் நல்ல உணர்வுகளால் உருவான அந்த நல்ல அணுக்களுக்கு நாம் தொல்லைப்படுத்த எண்ணும் உணர்வுகள் பாய்ந்து “உடலுக்குள்… இந்தக் குடும்பத்திற்குள் பெரும் போராகிவிடும்…!”

இப்படிப் பெரும் போராகி நமக்குள் வேதனை உருவாகி விடுகிறது.

இதையெல்லாம் என்றைக்கு நாம் நிவர்த்தி செய்வது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

1.துருவத்தின் ஆற்றலை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து
2.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் கவர்ந்து உங்களுக்குள் அதைப் பெருக்கிக் கொள்வதற்காகத் தான்
3.அடிக்கடி யாம் இதைப் உபதேசிப்பதும்… உங்களுக்குள் பதிவாக்குவதும்…
4.உங்களைக் கூர்ந்து கவனிக்க வைப்பதும்… உபதேசத்தில் கவனம் செலுத்தும் படி செய்து
5.உங்கள் உடலில்… முன் இருக்கும் விலா எலும்புகளில் இதைப் பதிவாக்குகின்றோம்.

இதை உங்கள் கண்களால் உற்று நோக்கிக் கவரப்படும் போது அது உங்களுக்குள் ஊனாகப் பதிவாகி விடுகின்றது. இந்தப் பதிவை மீண்டும் நீங்கள் எண்ணினால்
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை நுகர்வதும்
2.அதற்குத் தக்க உயர்ந்த சிந்தனைகள் கொண்டு… தெளிவான நிலையில் தெளிவான வாழ்க்கை நடத்தவும் இது உதவும்.

அதற்குத்தான் உபதேசங்களைக் கொடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும்படி செய்து கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

மரண பயம்

மரண பயம்

 

பாலில் சேர்க்கப்படும் பொருளைக் கொண்டு அதன் சுவையும் மணமும் நிறமும் எப்படி மாறுகின்றதோ அதைப் போன்று தான்
1.இந்த மனித பிம்ப உடலில் சேர்க்கப்படும் உணர்வின் எண்ண சுவாச அமிலத்தால்
2.பிம்பக் கூட்டின் உருவ நிலையும்… குண நிலையும்… சொல் வடிவமும்… அமைகின்றதப்பா…!

நல் உணர்வு சுவாச முறையால்… நாம் எடுக்கும் ஜெப சக்தி காந்த மின் அலைச் சுவாசத்தால்…
1.உடல் பிம்பக் கூட்டில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும்
2.சக்தி வாய்ந்த ஒளியில் வளப்படுத்த முடியும்.

இந்த உடல் பிம்ப ஜீவக் கூட்டிலிருந்து… ஜீவ சக்தியுடன் கூடிய இவ்வலை ஈர்ப்பின் குணத்தின் சக்தி கொண்டு தான்..
1.சகல சக்தியையும் அறியவல்ல ஆற்றலையும் செயல் முறையும்
2.என்றுமே அழியா வண்ணம் பல படைப்பைப் படைக்கவல்ல படைப்பின் சக்தியும்
3.இந்தப் பிம்பக் கூட்டிற்கு உண்டு

இந்தப் பிம்பக் கூட்டில் எடுக்கும் இச்சக்தியினால் எச்சக்தியையும் அடையலாம் என்று உணர்த்துகின்றீரே…! அப்படியானால் நீரிலும் நெருப்பிலும் குதிக்க முடியுமா…? என்ற வினா எழும்பலாம்.

கடும் உஷ்ண அலையைக் கக்கும் நெருப்புக் குண்டத்தில் இஜ்ஜீவ பிம்ப உடலுடன் அமர்ந்திருக்க முடியுமா..? என்றால் முடியுமப்பா…!

1.தான் எடுக்கும் உயர் சக்தி அலையின்… “ஒளியுடன் ஒளியாகும் ஒளி சக்தி பெற்றால்…”
2.தணல் விட்டு எரியும் நெருப்பில் அமர்ந்தாலும்
3.இந்த உடல் பிம்ப ஈர்ப்புச் சக்தியிலிருந்து வெளிப்படுத்தும் ஒளி அலையைப் பாய்ச்சினால்
4.அந்த நெருப்புக் கோளம் தான் அணையுமே தவிர இந்தப் பிம்ப உடலைப் பாதிக்காது.

இயற்கையின் சீற்றமுடன் விளையாடுவதற்கல்ல உயர் ஞான சக்தி. ஆனால் உள்ள சக்தியை உணர்த்துவதற்காக இதைச் சொல்கிறோம்.

ஆழ் கடலாக இருந்தாலும்… பூகம்பமோ… சூறாவளியாகவோ.. இருந்தாலும் ஒலியின் சக்தியுடன் ஒளிரும் சக்தி கொண்டு எந்த வகையான இயற்கையின் சீற்றத்திலிருந்தும் பிம்ப உடலையும் தப்ப வைக்க முடியும்.

திராவகத்தில் போடப்படும் மற்ற உலோகங்கள் கரைந்தாலும் தங்கத்தின் குணம் எப்படிக் கரைவதில்லையோ அதைப் போன்று
1.இந்த உணர்வால் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால்
2.ஒலி கொண்டு ஒளி பெற்றோமானால்
3.உயர் ஞான சக்தியை வழி கொண்ட எச்சக்தியாகவும் நாம் ஆக முடியும்.

பூமியின் ஜீவ சக்தியைக் கொண்டு வளர்த்த சக்தியின் தாதுப் பொருள்களில் பிரிந்த திரவக சக்தியிலிருந்து (பூமிக்கடியில் இருக்கும் எண்ணை – CRUDE OIL) ஒன்றைக் கொண்டு பலவாகப் பெட்ரோலியப் பொருள்களைப் பல வகையிலும் பிரித்து பல சாதனைகளைப் புரிகின்றோம் அல்லவா…!

அதைப் போன்று..
1.இந்த உணர்வின் சுவாசத்தால் எடுக்கும் இஜ்ஜீவ சக்தியைக் கொண்டு
2.இப்பேரண்டப் பெருநிலையின் வளரத் தக்க முறைதனையும்
3.ஒவ்வொரு மண்டலங்களிலிருந்தும் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றோன்று உருவாகும் முறைதனையும்
4.அணுவுக்குள் அணுவாக ஊன்றி அணுச் செயல் தொடர்பனைத்தையும்
5.ஒலியையும் ஒளிக் காட்சிகளையும் மணத்தையும் சுவை குணத்தையும் அவை மாறும் செயற்கை வடிவையும்
6.இவ்வெண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால் எடுக்கவும் உணரவும் நமக்குள் வளர்த்திடவும் முடியும்.

இந்நிலையெல்லாம் பெறுவதற்கு மனித உணர்வில் ஊன்று கோலாக நிலைத்துள்ள “மரண பயம்” என்ற இந்த வித்தை முதலில் அகற்ற வேண்டும்.

பிறவி இல்லா நிலை அடைவதற்குத் தான் இந்தத் தியானம்… சொத்துக்கும் சுகத்திற்கும் அல்ல…!

பிறவி இல்லா நிலை அடைவதற்குத் தான் இந்தத் தியானம்… சொத்துக்கும் சுகத்திற்கும் அல்ல…!

 

இன்று குடும்பத்தில் நம்முடைய பையனோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களோ நாம் எண்ணியபடி சரியாக வரவில்லை என்றால்
1.நம்மை அறியாமல் ஆவேசமான உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது.
2.அப்பொழுது நமக்குள் பேய் மணமாக மாறுகிறது.

நல்லவர்களாக வளர்க்க முதலிலே நாம் ஆசைப்பட்டோம். ஆனால் “தவறு செய்கின்றார்கள்…” என்ற உணர்ச்சிகளை ஊட்டியபின் பேயைப் போல அவர்களைத் தாக்கவும் அறிவை இழக்கச் செய்யும் நிலைகள் வந்து விடுகிறது.

நாமும் நமக்குள் வளர்ந்த அறிவினை வளர்க்க முடியாதபடி தடைப்படுத்திவிடுகிறது.

உதாரணமாக… சந்திரன் பூரண நிலவாக இருப்பது… அடுத்து சிறுகச் சிறுகத் தேய்ந்து கடைசியில் அது எப்படி மறைந்து விடுகின்றதோ அது போன்று நமது வாழ்க்கையில் ஒவ்வொரு குணங்களையும் செயலற்றதாகவே மாற்றும் சந்தர்ப்பங்கள் ஆகி விடுகிறது.
1.அப்படிச் செயலற்றதாக மாறி விட்டால்
2.மீண்டும் நாம் பிறவிக்குத் தான் வருகின்றோம்.

ஆகவே இந்த முழுமையான உடலை… முழுமையான ஒளியாக மாற்றும் மனிதனின் ஆறாவது அறிவைச் சீராக பயன்படுத்தத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தத் தியான பயிற்சியை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

உண்மையின் உணர்வுகளை நாம் தெரிந்து… பூரண நிலவு போன்று நமது உயிர் என்றும் பூரண நிலை அடைந்திட வேண்டும். அதுவே கடைசி நிலை.

இதை இப்போது இழந்து விட்டால்…
1.இந்த உடலில் நாம் அனுபவிக்கும் துன்பத்தைக் காட்டிலும்
2.எத்தனையோ கோடித் துன்பங்களை அனுபவிக்க வேண்டி வந்து விடும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் ஆழமாகப் பதிவாக்கி… அதை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து நமக்குள் வளர்த்து… நமது நல்ல உணர்வுகளை உயர்வாக்கி… இந்த உடலுக்குப் பின் “பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்…”
1.அதற்குத்தான் யாம் சொல்லும் இந்தத் தியானமே தவிர…
2.சொத்து வேண்டும்… சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல…!