எத்தனை காலங்கள் இவ்வுடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டோமா…

எத்தனை காலங்கள் இவ்வுடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டோமா…

 

பல கோடி உயிரணுக்கள் வந்து நம் உடலிலும் எண்ணத்திலும் கலந்திடும் நிலையில் உள்ளதப்பா மனித உடல்.

1.பல கோடி அணுக்களின் ஈர்ப்பு நிலையில் இருந்து தப்பி
2.அழியாத செல்வமான நம் ஆத்ம ஜோதி நிலை கண்டிடத்தான்
3.இந்தத் தியான நிலை… சுவாச நிலை எல்லாமே…!

தியான நிலையில் உண்மை நிலையைப் புரிந்து ஒவ்வொருவரும் செயல்பட்டுப் பல கோடித் தீய உயிரணுக்களின் செயல்களுக்கு நாம் அடிமையாகாமல் இந்நிலையிலிருந்தெல்லாம் நாம் தப்பி நம் சுவாச நிலையில் நம் எண்ணத்தில் அவ்வீசனின் சக்தியை ஊன்றச் செய்ய வேண்டுமப்பா…!

பல மகரிஷிகள் ஞானிகள் சித்தர்கள் எல்லாம் பெரும் ஞானப் பேராற்றல் நிலையை எய்தியது எப்படியப்பா..?
1.மற்ற அணுக்களின் சக்திகள்… உந்தல்கள்…!
2.தன் நிலைக்கு வந்து செயல்படாமல் மாற்றிக் கொண்டார்கள்.

அவரவர் நிலையை அவரவர்கள் உணர்ந்து பல கோடி உண்மை இரகசியங்களை அறிந்து அன்றைய காலத்தில் அதை ஜாதக வடிவிலும்… கோவில்களிலும்… மருத்துவத்திலும்… பல உண்மை நிலைகளை எல்லாம் கண்டறிந்து பெரும் சூட்சமத்தில் இரகசியமாக வெளியிட்டார்கள். பல உண்மைகளை மறைத்தும் விட்டார்கள் அன்றையச் சித்தர்கள்…!

இந்நிலையில் பல உண்மைகளை அறிந்து தன் உயிராத்மாவை அழியாச் செல்வமாக்கி “நான் என்றால் என்ன…?” என்பதை அன்றே உணர்ந்து இந்த மக்களுக்காக எவ்வளவோ பெரும் நிலைகளை எல்லாம் கண்டுணர்ந்து
1.இன்றும் சூட்சம நிலையில் இருந்து கொண்டே
2.ஆண்டவன் ரூபத்தில் வந்து பல வழிகளில் உணர்த்துகிறார்கள்.
3.அழியாச் செல்வமான இந்த உயிராத்மாவை மனிதர்கள் எல்லோருமே என்ன…? என்று புரிந்து கொண்டு வாழ்ந்திட வேண்டுமப்பா…!

ஜெப நிலையில் அமர்வதையும்… தெய்வத்தை வணங்குவதையும்… பலர் பல நிலையில் பொருளுக்காக என்று செயல்படுத்தி உண்மை நிலையையே புரிந்து கொள்ளாமல் சிதறடித்து விட்டார்கள்.

நம் உயிராத்மாவை… உடலை விட்டுப் பிரிந்த பல ஆத்மா என்னும் அணுக்களின் நிலையில் இருந்து தப்பி… ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட முடியும்…!

இந்த உடலில் இருந்தால்..
1.இனி எத்தனை காலங்கள் இவ்வுடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டு
2.தன் ஆத்மாவிற்குத்தான் அழியாச் செல்வத்தைச் சேமித்திடல் வேண்டும்.

இந்தச் சூரியனிலிருந்து நாம் பல கோடி நன்மைகளைப் பெற்று வருகின்றோம். அந்தச் சூரியன் எப்படிப் பல மண்டலங்களின் நிலை கொண்டு அச்சக்திகளைத் தன்னுள் ஈர்த்து நமக்குப் பல நன்மைகளை அளிக்கின்றதோ அந்நிலை கொண்டு தான் அச்சக்தியின் அருள் பெற்ற நாம் எல்லோரும் சத்திய நிலையில் வாழ்ந்து சமுதாயத்தில் நல் நிலையில் வாழ்ந்திட வேண்டும்.

1.இந்தப் பிரபஞ்சத்தில் நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்
2.பிறரின் நன்மைக்காகப் பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்.

நம் ஆயுளைத் துருவ நட்சத்திரத்தோடு ஒப்படைத்து விட வேண்டும்

நம் ஆயுளைத் துருவ நட்சத்திரத்தோடு ஒப்படைத்து விட வேண்டும்

 

ஒரு வேதனை என்ற உணர்வு வந்த பிற்பாடு அது நோயாக மாறிவிட்டால் என்ன ஆகிறது…?

குழந்தைக்கு ஒரு நல்ல துணிமணியை எடுத்துக் கொடுக்கட்டும். நோயாளியாகக் கட்டிலிலே தந்தை படுத்திருக்கும் பொழுது எடுத்துக் கொடுத்த பட்டுச் சேலையைக் கொண்டு நீங்கள் வந்து காண்பியுங்கள்.

அதைக் காண்பிக்கும் பொழுது “எவ்வளவு கோபம் வருகிறது…?” என்று பாருங்கள்.

தன் பிள்ளைக்கு அதைக் கொடுக்க வேண்டும்.. இதைக் கொடுக்க வேண்டும்… நல்ல துணிகளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

ஆனால் தந்தை மிகவும் நோயாக இருக்கும் போது இந்தச் சேலை எப்படி இருக்கிறது…? என்று கேட்டால் என்ன ஆகும்…?

நான் இருக்கிற நிலைமையில் இதைக் கொண்டு வந்து காண்பிக்கின்றாயே…! வந்ததா வினை…!

பிள்ளைக்கு நல்ல துணி வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார். வாங்கிச் சென்று போய் விட்டால் பரவாயில்லை.

அப்பாவிடம் காட்டி விட்டு அதன் பின் கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்தால்…
1.இங்கே அவர் படும் வேதனையில் இந்த நல்ல துணியைப் பார்க்கும் போது எதிர்ப்பு உணர்வு வரும்… நெகட்டிவ்… பாசிட்டிவ்…!
2.மனதில் என்ன செய்யும்…? துணியைக் கொடுத்த பின் வாங்கிச் செல்ல வேண்டியது தானே.
3.நான் உடம்புச் சரியில்லாத போது என்னிடம் இதை காட்டி வேதனைப்படுத்துகின்றீர்களே…!

தன்னாலே இத்தகைய உணர்வு வரும்.

பாசத்தால் சொல்கிறார். ஆனால் உடலில் உள்ள உணர்வுகள் எதிர்க்கிறது. நம் மீது சிறிதளவு கூட அக்கறை இல்லையே என்று குழந்தை மீது வெறுப்பு வந்து விடுகிறது.

துணி வாங்கிக் கொடுத்தால் துணியை எண்ணி அந்த ஆசை தான் வருகின்றதே தவிர என்னைக் கவனிக்கவில்லையே.

சந்தர்ப்பம் எப்படி எண்ண வைக்கின்றது என்று பாருங்கள்…! ஆனால் தவறு நாம் செய்யவில்லை.

அப்பா தான் வாங்கி கொடுத்தார். அப்பாவிடம் காண்பிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றேன். அவர் உடலில் நோயினால் வேதனைப்படும்பொழுது அது எதிர்மறை ஆகிறது. நான் இருக்கும் நிலையில் சிறிதளவு கூட இந்தப் பெண்ணுக்கு வருத்தமில்லையே…!

சரிப்பா… சேலையை நான் எடுத்துக் கொண்டேன் என்று சொன்னால் நன்றாக இரு அம்மா…! என்ற வாக்கு தந்தையிடமிருந்து வரும்.

ஆனால் காண்பித்தால் என்ன செய்யும்…? கூடக் கொஞ்சம் எரிச்சல் வரும். இந்த உணர்வுகளின் இயக்கங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
1.அது மாறாகப் (தவறாக) போய் விடுகிறது.
2.குழந்தைக்கு அவர் தான் வாங்கிக் கொடுத்திருந்தாலும் அந்தச் சந்தோஷம் இழக்கப்படுகிறது… வெறுப்பும் வந்து விடுகிறது.

தியானத்தைக் கடைபிடிப்பவர்கள் இதையெல்லாம் மாற்ற வேண்டும்.

சந்தர்ப்பங்கள் இது போன்று வந்தாலும் ”அப்பா சொல்லிவிட்டார்… நான் எடுத்துக் கொண்டேன். பரவாயில்லை… நல்ல சேலையாகத் தான் இருக்கின்றது அப்பா என்று சொல்லலாம். இல்லை என்றால் “நீங்கள் நன்றாக ஆன பிற்பாடு எடுத்துக் கொள்கிறேன் அப்பா…” என்றும் சொல்லலாம்.

இந்த உணர்ச்சிகள் அங்கே தந்தைக்கு ஒரு சந்தோசத்தை ஊட்டும். ஏனென்றால் ஒரு உணர்வின் உணர்ச்சிகள் மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகின்றது…? என்று உங்களுக்குச் சொல்கின்றேன்.

மனிதனின் வாழ்க்கையில் எந்த மாதிரி நிலைகள் வந்தாலும் நாம் விழித்திருக்க வேண்டும்.

விழித்திருக்க வேண்டும் என்றால் எப்படி…?
1.புதுச் சேலையைக் காட்டி அந்த மகிழ்ச்சியைச் சொன்னால் அவர் மனம் புண்படும்
2.அந்த உனர்வை எடுத்தால் நாமும் சங்கடப்படுவோம் என்று விழித்திருத்தல் வேண்டும்.

அப்போது என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்ட வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எந்தக் காரணத்தினால் இது நிகழ்ந்ததோ… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர் வாழ வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு என் தந்தை உடல் முழுவதும் படர வேண்டும் மகிழ்ந்த நிலை வர வேண்டும் என்று இதைப் போன்ற உணர்வுகளை எடுத்தோம் என்றால் வேதனை யாருக்கும் வராது.

சில பேர் என்ன செய்வார்கள்…?

அப்பா உடல் நோயாக இருக்கும் போது இந்தத் துணியை எடுத்துக் கொள் என்று பிள்ளையிடம் சொல்வார்கள்.

ஆனால் பெண்ணோ… அப்பாவுக்கு இப்படி நோயாக இருக்கின்றதே… வேதனைப்படுகின்றாரே… துணியை எடுத்துக் கொள்ளச் சொல்கிறாரே…! என்று எண்ணி அழுகத் தொடங்கும்.

தகப்பனுக்கு முன்னாடி அழுதால் எப்படி இருக்கும்…? சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறது அல்லவா.

ரியாக்ஷன் ஆகி… “வேண்டாம்…” என்று சொன்னாலும் அப்பாவுக்கு வேதனையாக இருக்கின்றது. அந்த வேதனை எடுத்துச் சமைக்கும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றோம்… கண்களிலே நீர் வருகின்றது.

தகப்பனார் இதைப் பார்த்தால் “நான் இருக்கும் நிலையில் இப்படி அழுகின்றார்களே…!” என்று அவருக்கு அந்த வேதனை அதிகமாகும். ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஒவ்வொரு நிலைக்கொப்ப அந்த வேலையைச் செய்யும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்துப் பல பொருள்களைப் போட்டுச் சமைத்தாலும்… அதிலே பக்குவம் தவறி விட்டால் சுவை கெட்டு விடுகின்றது.

ஆகவே ஆயுள் கால மெம்பர்கள் எப்படி இருக்க வேண்டும்…?
1.நம் ஆயுளைத் துருவ நட்சத்திரத்தோடு ஒப்படைத்து விட வேண்டும்.
2.நம் பற்று அதன் மீது வரவேண்டும்.
3.அதை வைத்து இந்த வாழ்க்கையில் வரக்கூடிய சிக்கல்களை நிவர்த்தி செய்ய முடியும்.

குடும்பத்தில் ஒருவர் மட்டும் செய்தால் பத்தாது. கணவன் மனைவி குழந்தைகள் எல்லோரும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழக வேண்டும்.

தியானம் செய்ய வேண்டும் என்று சொல்வதன் முக்கியத்துவம்

தியானம் செய்ய வேண்டும் என்று சொல்வதன் முக்கியத்துவம்

 

மனிதர்கள் பிறந்து வளர்ந்து இந்த உலக வாழ்க்கையை விட்டு அந்தந்த உடலிலிருந்து ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
1.அந்த ஆத்மாக்கள் எந்த நிலையில் இருக்கின்றன…?
2.அவ்வாத்மாக்களின் நிலை என்ன..? என்ற உண்மை நிலையை
3.ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதன் பொருளில் தான்
4.ஆத்மாவிற்கு முதலிடம் தந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இந்த உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றவுடன் பரலோகத்திற்குச் செல்கிறது…! என்கிறார்கள். இப்பரந்த உலகிலே அந்த ஆத்மாக்கள் அபிலாஷையுடன் (ஆசாபாசத்துடன்) சென்றிருந்தால் பரந்த உலகில் சுற்றிக் கொண்டிருப்பதில்லை.

தன் ஆத்ம நிலை கொண்டு எந்த இடத்தில் அதன் ஆன்மா பிரிந்ததோ அந்த நிலையிலேயே
1.அந்த ஆத்மா பிரிந்து செல்வதற்கு முதலில் இருந்த உடல்…
2.எந்த இடத்தில்… எந்த நிலையில் வாழ்ந்ததோ… அங்கேயே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

அதனுடைய ஆசைகளும் அதனுடைய எண்ணங்களும் செயல்படும் வரை அதற்குக் கால நிலைகள் இல்லை. எவ்வளவு காலம் வேண்டுமாகிலும்
1.அதன் ஆசை முடியும் வரை
2.அங்கே தான் சுற்றிக் கொண்டு தான் இருக்கும்.

அந்த ஆத்மாவின் உருவம் என்பது அவ்வாத்ம ஜோதியின் நிலை அதாவது உருவமில்லாத அந்த உயிராத்மா எப்படி இருக்கும்…? என்றால் சிறிய அணுவாகத்தான் உள்ளது.

அவ்வாத்மாவைச் சுற்றி அது வாழ்ந்த நாட்களில் அதன் சுவாச நிலையைக் கொண்டு அவை பேசிய பேச்சுக்களும் விட்ட சுவாச நிலையும் அதே நிலையில் தான் சுற்றிக் கொண்டேயுள்ளது.

இந்த உலகினிலே “பல கோடி ஆத்மாக்கள்” பரந்து பரவியுள்ளன. ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு நிலை கொண்டு சுற்றிக் கொண்டுள்ளது.

இன்றைய உலகில் வாழ்ந்திடும் மக்களில் நம் (உடலுடன் உள்ளவர்கள்) ஒவ்வொருவரின் சுவாச நிலை எப்படி உள்ளதோ அந்நிலைக்கு ஏற்ப
1.நாம் விட்டிடும் சுவாச நிலை கொண்டு
2.நாம் விட்டிடும் சுவாச நிலை என்றிடும் பொழுது கோபம் மகிழ்ச்சி சாந்தம் இப்படிப் பல உணர்ச்சிகள் நமக்கு வரும் பொழுது
3.அத்தகைய உணர்ச்சிகளுக்கும் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாவின் ஆசைக்கும் ஒத்த நிலை வரும் பொழுது
4.மனிதர்கள் (நம்) உடலில் அந்த உயிராத்மாக்கள் புகுந்து தன் எண்ணத்தையும் தன் ஆசைகளையும் செயல்படுத்திக் கொள்கிறது.

ஆனால் அதே சமயம் உள்ளே புகும் உயிரான்மாக்கள் வெளியேறும் வழி இல்லை. புகுந்த உடலை விட்டு எப்பொழுது அந்த உடலுக்குச் சொந்தமான உயிரான்மா பிரிகிறதோ அன்று தான் அந்த உடலில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் வெளியே வர முடியும்.

ஆகவே அந்த உயிரான்மாக்களின் செயல்களிலிருந்து தப்ப வேண்டும் என்றால் தியான நிலை மிகவும் முக்கியமான ஒன்றப்பா…! அதைத் தவிர வேறு வழி இல்லை.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சாதாரணமாகவே நாம் பெற முடியும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சாதாரணமாகவே நாம் பெற முடியும்

 

காலையிலிருந்து இரவு வரையிலும் நல்லவர்களையும் பார்க்கின்றோம் அதே சமயத்தில் கெட்டவர்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

நல்லது கெட்டது என்று இந்த உணர்வுகள் அனைத்தும் நம் இரத்தங்களிலே கலந்து கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் இரத்தத்தில் உள்ள சில அணுக்கள் கெட்டதை ஏற்க முடியாமல் மறுக்கின்றது.
1.அந்த அணுக்கள் மறுக்கும் பொழுது நம் உடலில் சோர்வு வருகின்றது.
2.சோர்வு அதிகமாகும் பொழுது வேதனைப்படுகின்றோம்.
3.இந்த வேதனையின் உணர்வுகள் அடுத்து விஷமான அணுக்களாக உடலுக்குள் மாறுகின்றது.

சலிப்புப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ நாம் பார்த்து அவர்களுடைய உணர்வுகளை நுகர்ந்தால் நம் இரத்தங்களில் அத்தகைய அணுக்கள் நிச்சயம் வளரத்தான் செய்யும். அது வெளியே செல்வதில்லை.

நாளுக்கு நாள் இதிலே எது பெருகுகின்றதோ உடலில் அணுக்களாக மாற ஆரம்பித்து விடும்… நாளடைவில் நோயாக மாறிவிடும். இது எல்லாம் நம்மை அறியாமலே உடலுக்குள் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.

இதையெல்லாம் நாம் தூய்மைப்படுத்த வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அந்த சக்தி படர வேண்டும் என்று ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலுக்குள் பெருகப் பெருக தீமை செய்யும் அணுக்களின் வலுவை அது குறைத்துவிடும்.

உதாரணமாக நாம் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது சந்தோசமான செய்தியை யாராவது நம்மிடம் வந்து சொன்னால் ஏற்க முடிகின்றதா…? வேதனை அதை ஏற்க விடுகின்றதா…! இல்லை.

அதே போன்று தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் அதிகமாக பெருக்கிக் கொண்ட பின்
1.தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி
2.தீமையான அணுக்கள் விளையாதபடி அதைத் தள்ளி விட்டு விடுகின்றது
3.தீமைகளை நுகர்வதற்கும் வழியில்லை… தீமை உள்ளே புகுவதற்கும் வழியில்லை.

அதற்கடுத்து நாம் யாரையெல்லாம் பார்த்தோமோ அவர்களுக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்… தெளிவான மனிதர்களாக அவர்கள் வரவேண்டும்… குடும்பத்தில் அனைவரும் பற்றுடன் பரிவுடன் அருள் ஞான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இதைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

இத்தகைய அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க…
1.சிந்தித்துச் செயல்படும் உணர்வுகளாக மற்றவர்கள் வெளிப்படுத்தவில்லை என்றாலும்
2.நமக்குள் சிந்தித்துச் செயல்படும் தன்மையாக மாற்றிக் கொள்கிறோம்… தீமைகள் சிறுத்து விடுகின்றது.

சந்தர்ப்பத்தில் பிறருடைய தீமைகள் நம் மீது மோதினாலும் அதை மாற்றித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
1.அந்தந்தக் குணங்களில் எல்லாம்
2.அதாவது வேதனை வெறுப்பு சலிப்பு கோபம் ஆத்திரம் சங்கடம் போன்ற குணங்களில் எல்லாம்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கலந்து கொண்டே வருகின்றது.

இப்படி நாம் சாதாரண வாழ்க்கையின் நிலைகள் கொண்டே சக்தி வாய்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்க முடியும்.

அதற்குண்டான பக்குவ முறைகளைத் தான் உணர்த்திக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

கடந்த காலத் தவறுகளை மறந்து… இனி தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்

கடந்த காலத் தவறுகளை மறந்து… இனி தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்

 

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை
1.“பல உண்மைகளை அறிந்திட…” நாம் எல்லோருமே ஆர்வம் கொண்டுள்ளோம்.
2.பிற்கால வாழ்க்கையை எண்ணி இனி நடக்கப் போகும் நிலை என்ன…? என்பதை அறிந்திட எல்லோரும் விரும்புகின்றோம்.

இருந்தாலும் நம்முள் உள்ள பரமாத்மாவை மறந்து விட்டு “பரலோகத்திலுள்ள பரமாத்மா…!” என்று வேண்டி ஜாதகங்கள்… ஏட்டுச் சுவடிகள்… என்று இப்படிப் பல வழிகளில் ஆரூடம் பார்த்து “அறிதல்” என்றெல்லாம் நம் காலத்தைச் சிதறவிட்டு விடுகின்றோம்.

சூரியனின் சக்தியிலிருந்து அந்தச் சூரியனைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் நிலையை வைத்து அம்மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியனில் பட்டு அச்சூரியனிலிருந்து நம் பூமிக்கு வந்திடும் ஒளியின் தன்மையை வைத்துப் பல நிலைகள் நடக்கின்றன.

அந்தச் சூரிய சக்தியின் பிம்பத்தில் பல மண்டலங்களின் ஒளி பட்டு “அந்நிலை பூமிக்குக் கிடைக்கும் நேரத்தைத்தான்” அன்றைய சித்தர்கள் ஜாதகங்கள் என்ற நிலையில் கண்டனர்.

1.சந்திரனின் பார்வை… சூரியனின் பார்வை என்றும்
2.கேது.. இராகு… என்ற ஒவ்வொரு மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியன் மேல் படும் பொழுதும்
3.அந்த ஒளிக் கதிரின் தன்மை பூமியின் மேல் படும் காலத்தை வைத்துத்தான் சித்தர்கள் ஜாதகம் கணித்தார்கள்.

ஜென்ம நட்சத்திரம் என்கிறார்கள். எந்தக் குழந்தைக்கும் ஜென்ம நட்சத்திரத்தை இன்றைய ஜாதகக்காரர்களால் அறிந்திட முடியாது. குழந்தை பிறந்திடும் நேரத்தை வைத்து ஜென்ம நட்சத்திரம் குறிக்கின்றார்கள்.

அதுவல்ல ஜென்ம நட்சத்திரம்…!

1.அது தன் தாயின் வயிற்றில் “என்று உதயம் பெற்றதோ…” அந்த நேரம் தான் அதற்கு ஜென்ம நட்சத்திரம்.
2.அந்த நிலையைக் கணித்திட இன்றைய ஜாதகக்காரர்களால் முடியாது.

இராமர் இராம நவமி அன்று பிறந்தார்… என்றும் முருகன் பிறந்த நாளை வைகாசி விசாகம்…! என்றும் கணிக்கின்றார்கள் “பாட நிலைப்படித்தான்…!”

இராமர்… கிருஷ்ணர்… முருகன்… எல்லாம் பிறவி எடுக்கவில்லை. அவர்களின் குணாதிசயங்களை வைத்துத்தான் நம் சித்தர்கள் அவர்களுக்கு நாமங்கள் இட்டார்கள்.

அப்படி இருக்கும் பொழுது இராமர் பிறந்த நேரத்தையும் முருகன் பிறந்த நேரத்தையும் எப்படிக் கொண்டாடுகின்றார்கள்…? என்று நீங்கள் நினைத்திடலாம்.

அன்றையச் சித்தர்கள் மற்ற மண்டலங்களின் ஒளிக்கதிர்கள் சூரியனில் பட்டு பூமியைத் தாக்கும் பொழுது…
1.என்றென்று அந்த நல்ல நிலை பெறும் நாளோ அந்த நாட்களின் “குணா அம்சங்களை வைத்து”
2.அந்த நாட்களை அந்த ஒளியிலிருந்து வரும் சக்தியின் நிலை கொண்டு
3.முருகருக்கும் இராமருக்கும் பிறந்த நாட்கள் என்று கணித்தார்கள்.

கணித்தார்கள் என்றால்… அந்நிலை பெறும் நேரத்தை நல்ல நேரமாக ஏற்று அந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் உகந்த நாள்…! என்று மக்களுக்கு ஏற்றுக் கொள்ளப் பல வழிகளைச் சொல்லிச் சென்றார்கள்.

ஆனால் அந்த உண்மைகளை எல்லாம் காலப்போக்கிலே சிதறடித்து விட்டார்கள்.

மற்ற மண்டலங்களில் உள்ள சக்தி சூரியன் மேல் பட்டு அதன் பின் அச்சூரியன் நமக்கு அளிக்கின்றது. சந்திரனில் ஒளிக் கதிர்கள் இல்லாவிட்டால் “இன்றைய வண்ணங்கள்… சுவைகள்…” இவை எவையுமே நாம் பெற்றிருக்க முடிந்திடாது.

அதைப் போல் தான் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் நமக்குப் பலவித இயற்கைத் தன்மை வாய்ந்த சக்தியெல்லாம் கிடைக்கின்றது.

பெரும் பேறு வாய்ந்த சக்தியுள்ள பூமியப்பா…! இன்று நாம் வாழ்ந்திடும் பூமி. இந்தப் பூமித் தாயின் உயிரோட்ட உண்மைகளை உணர்ந்து கொண்டு உலகினிலே உதித்த நாம் எல்லோருமே உண்மையுடன்… “உன்னதமாக வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

ஒவ்வொருவரும் அவரவர்கள் கடந்த காலத்தை எண்ணிக் கலங்கிடாமல் நம்முள் உள்ள பரமாத்மாவின் நிலையை அறிந்து வாழ்ந்திடுங்கள்.

1.தவறின் நிலையை எல்லாம் மறந்துவிட்டு
2.இனி… தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்து
3.பிறந்த பயனை இக்கலியின் கடைசியில் கல்கியில் ஒவ்வொருவரும் பிறந்திடத்தான் இதை உணர்த்துகின்றேன்.
4.என்னுடைய (ஈஸ்வரபட்டன்) ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆயுள் மெம்பர்கள் நடந்து கொள்ள வேண்டிய வழி முறை

ஆயுள் மெம்பர்கள் நடந்து கொள்ள வேண்டிய வழி முறை

 

பேரருளை நமது குருநாதர் பெற்றார். அந்தப் பேரருள் பெறும் முறையை எனக்குக் (ஞானகுரு) கற்றுக் கொடுத்தார். “துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக எப்பொழுதுமே இருக்க வேண்டும்…” என்று என்னிடம் சொன்னார்.

அதைப் போன்றே உங்கள் அனைவரையும் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர்த்து அதன் வழியில் நாம் கிளைகளாக இருக்கின்றோம்.

ஆனாலும்… உண்மைகளை எல்லாம் தெரியப்படுத்தி ஆயுள் மெம்பராகச் சேர்ப்பதற்கு வெகு காலம் ஆகிவிட்டது.

காரணம்
1.அதிலே பற்றும் பாசமும் வளரப்படும் பொழுது… உங்களுக்கு உபதேசிப்பதும்… ஏற்றுக் கொள்ளும்படி செய்வதும்…
2.ஏற்றுக் கொள்பவர்களுக்கு அந்தச் சக்திகளைக் கொடுப்பதும்… எல்லாமே செயல்படுத்தியது.

ஆனால் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்குப் பேருக்கு ஆயுள் மெம்பர் என்று சொல்லிக்கொண்டு போவதில் பிரயோஜனம் இல்லை.

1.ஆயுள் மெம்பராக இருப்பவர்கள் ஒவ்வொருவருமே வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும்
2.குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழும் நிலையைச் செயல்படுத்திப் பழகுதல் வேண்டும்.

குடும்பத்திலோ அல்லது தொழில் செய்யும் இடங்களிலோ நாம் எதிர்பாராத நிலைகளில் சில சிக்கல்கள் வரும். நம்மை வேதனைப்படும்படியாக ஒருவன் செயல்படுவான். உற்றுப் பார்த்து அவன் உணர்வுகளை நுகர்ந்தறிவோம்.

“இப்படிச் செய்கின்றானே…” என்ற நிலை வந்துவிடும். வந்தபின் அதைச் சுத்தப்படுத்தாது விட்டு விட்டால் தீமையின் விளைவுகளுகே நம்மை இட்டுச் சென்றுவிடும்.

அது போன்று ஆகாதபடி ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி… நமது குருநாதர் காட்டிய முறைப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்…” என்று எண்ணி உடனடியாக நாம் தூய்மைப்படுத்தவேண்டும்.

உயிரிலே பட்ட பின் தான் அவர் செய்யும் தவறான உணர்வு அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகின்றது. நம் இரத்தங்கள் முழுவதிலும் அது கவரப்படுகின்றது.

இரத்தங்களிலே கலந்து கொண்ட பின்
1.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் நல்ல உணர்வை ஈர்க்க விடாதபடி தடைப்படுத்தி விடுகின்றது.
2.அந்த வெறுப்பான காரமான உணர்வுகளை நல்ல உணர்வுகள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.
3.வெறுப்பான உணர்வுகள் வரப்படும் பொழுது கொதிப்பு என்று வருகிறது.
4.அந்தச் சந்தர்ப்பங்களிலே உடலிலே ஒரு விதமான நடுக்கம் வரும்.

ஏனென்றால் நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்குச் சரியான ஆகாரம் இல்லை என்றால் பதட்டமான நிலைகள் வரும். அந்த நடுக்கம் சிறிதளவு உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சேர்ந்து விட்டால் அடுத்து… தவறு செய்யும் உணர்வை எடுத்து அதுவும் வளர ஆரம்பித்து விடும்.
1.நல்ல அணுக்களுடைய செயல்கள் மறைந்து விடும்
2.நல்லதை நுகர விடாதபடி அதனுடைய இனப்பெருக்கமாக ஆகிவிடும்
3.அந்த அணுக்கள் அது இடக்கூடிய மலம் உறுப்புகளில் படும் பொழுது அதனுடைய வளர்ச்சி குன்றிவிடுகிறது
4.அங்கே ஒன்றுக்கொன்று போர் முறையாகி வலியும் வேதனையும் வருகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஒருவர் செய்த தவறான உணர்வை நுகர்ந்த்தால் இந்த நிலை ஆனது. அதே சமயத்தில் இந்த உணர்வுகள் நம் ஆன்மாவிலே முன்னணியில் இருக்கும்.

வீட்டிற்குள் நுழைந்த பின் குழந்தை ஏதாவது ஒரு பாத்திரத்தைக் கீழே போட்டால் போதும். அல்லது சத்தம் போட்டுப் பேசினால் போதும்…!

மனைவியைக் கூப்பிட்டுப் பிள்ளையை வளர்த்திருப்பதைப் பார்…! என்று அங்கு வெறுப்பாகப் பேசும்படி வந்துவிடும்… நம்மை அறியாமலே இப்படி இயக்குகின்றது அல்லவா…!

காரணம் நாம் பிறரின் உணர்வுகளை நுகர்ந்தது இவ்வாறு இயக்குகின்றது. அப்படி இயக்கும் அந்த உணர்வை…
1.உங்களுக்குக் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு
2.ஆயுள் மெம்பராக இருக்கும் நீங்கள் அந்த நிமிடமே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இரத்தங்களில் கலக்கச் செய்து தூய்மைப்படுத்தவேண்டும்.

சமையல் செய்யும் போது குழம்பை ருசியாக மாற்றுவது போல் மாற்ற வேண்டும்.

தவறு செய்பவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்றுப் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… தெளிந்த மனம் பெற வேண்டும்… ஒன்று சேர்ந்து வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… என்று நல்லதாக இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்.

இத்தகைய உணர்வுகள் நம் இரத்தங்களில் கலக்கப்படும் போது தீமையின் உணர்வை இங்கே தணிக்கிறது. அருள் உணர்வுகளை உயிர் கருவாக்கி… உடலில் அணுவாக மாற்றி நமக்குகந்ததாக மாற்றுகிறது.

“ஆயுள் மெம்பர்கள் இவ்வாறு மாற்றிப் பழக வேண்டும்…”

அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான்… ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது

அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான்… ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது

 

இன்றைய உலகில் உள்ள பெரும்பகுதியானோர் தன் உயிரின் உண்மை நிலையையும்… கடவுளின் நிலையையும்… தான் வாழும் வாழ்க்கை நிலையையும்… புரியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஈஸ்வர சக்தி பெற்ற… பிறப்பிலிருந்து நல்லவர்… கெட்டவர்… என்ற பாகுபாடு இல்லாமல் அச்சக்தியில் இருந்து அவர்களுக்கு அளித்த மாபெரும் சந்தர்ப்பத்தை “நலமாக வாழ்ந்திடத்தான்” ஒவ்வொருவரும் பிறக்கின்றார்கள்.

பிறவி எடுத்த நிலையில் அவரவர்கள் வளர்ந்த நிலை… மண் வாக்கு… மன நிலை… சுவாச நிலையைக் கொண்டு வாழும் பொழுது “தன் சுவாச நிலையிலே தான்” அவர்களுடைய நிலை எல்லாமே நடக்கின்றன.

1.இன்றைய காலத்தில் மக்கள் ஆண்டவனை வணங்குவது என்பதே
2.தன் கஷ்டங்களுக்கு மீட்கும் வழியை வகுத்துத் தரத்தான் பல கோவில்களுக்குச் சென்று வணங்குகிறார்கள்.
3.பல காணிக்கைகளைக் கட்டி பல வேண்டுதல்களையும் செய்து
4.ஆண்டவனையும் இவர்கள் செய்யும் வியாபாரத்தில் பாகஸ்தனாக்கி
5.இவர்கள் செய்யும் பாவத்திற்கும் ஆண்டவனின் பெயரை உபயோகித்துக் கொள்கிறார்கள்.

நான் அள்ளி அள்ளி ஆண்டவனுக்கு அளித்தேன்… எல்லா ஆண்டவனுக்கும் பல நிலையில் பூஜை செய்கிறேன்… அந்த ஆண்டவனுக்குக் கண்ணில்லையா…? என்றெல்லாம்
1.இவர்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது
2.அந்த ஆண்டவனையே எதிரியாகவும் ஆக்கிவிடுகின்றார்கள்.

இவர்கள் எண்ணி ஏங்கும் பொருள் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் எந்தக் கோவிலுக்காவது சென்று வந்தால் அந்த நிலையிலிருந்து பொருள் வந்தவுடன் ஆண்டவனை… “எல்லாம் அவன் தான்…!” என்கிறார்கள்.

(ஆனால்) இவர்கள் மன நிலையில் இருந்து தான் அவ்வாண்டவனின் சக்தியே செயல்படுகிறது.

அந்தச் சூரிய சக்தியிலிருந்து இவர்கள் ஈர்க்கும் நிலையிலிருந்து தான் அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை இதைப் படிக்கும் அனைவரும் உணர்ந்து
1.அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான்…
2.அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை உணருங்கள்.

நம் சித்தர்கள் பல வழிகளில் பல உண்மைகளைச் செய்யுள்களின் (பாடல்கள்) வடிவில் மனிதர்களின் எண்ணத்திற்குப் பதியும்படி முதலிலேயே வெளியிட்டுள்ளார்கள்.

ஆட்டை வெட்டுபவனுக்கு… ஒவ்வொரு நாளும் பல ஆடுகளை அடித்து வியாபார நிலைக்கு அவன் அதை விற்கிறான். ஆட்டை வெட்டுபவனுக்குத் தான் பாவம்… உண்ணுபவனுக்கு அல்ல…! என்று எண்ணுகின்றோம்.

அவன் எதற்காக ஆட்டை அடிக்கின்றான்…?

அவன் எண்ணமெல்லாம் அவனுக்கு வேண்டிய பொருள் கிடைத்திடத்தான்…! அதைச் செய்கிறான். பாவ புண்ணியத்தை அவன் எண்ணத்தில் கொண்டு வருவதில்லை.

பாவ புண்ணியத்தை அவன் எண்ணி விட்டால் அவன் எண்ணத்திலேயே அது ஊன்றி.. அவன் அந்தத் தொழிலை ஒரு நாளும் செய்திட முடியாது.

பல தண்டனைகள் பெற்ற கைதிகளை ஒருவன் தூக்கிலிடுகின்றான். ஒரே நாளில் அவன் பலரைத் தூக்கிலிட்டாலும்.. அவனுக்கு அந்தப் பாவம் அண்டுவதில்லை.

அவன் பொருள் வாங்க அந்தப் பணியைச் செய்கிறான். தன் மேல் தவறை எண்ணும் பொழுது தான் அவனுக்கு அந்நிலை தோன்றிடும். அவன் தொழில் அது தான்; அவன் ஊதியத்தைப் பெறுகின்றான்; அவன் எண்ணமெல்லாம் அந்த ஊதியத்தின் மேல் தான் உள்ளது.

அவன் ஆத்மாவில் அவன் நல்ல நிலைகள் பெற்றிருந்தால் அவனை எந்தப் பாவ புண்ணியங்களும் அண்டுவதில்லை. அவன் நிலையும் உயர்ந்து நிற்கிறது.

1.பல பாவங்கள் செய்துவிட்டு
2.செய்த பாவங்களைத் தன் எண்ணத்திலேயே கலக்கவிட்டு
3.தன் சுவாச நிலையை மேலும் கடினமாக்கிக் கொண்டு
4.பல இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் இன்றைய மனிதர்கள்.

இந்நிலையிலிருந்தெல்லாம் விடுபட்டு நம் உயிரணுவிற்கு ஊட்டம் தந்து அவ்வுயிரணுவிற்கு அழியாச் செல்வத்தைத் தேடிடத்தான் இந்தப் பாட நிலையை எடுத்து இயம்புகிறோம்.

1.உயிரணுவின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்
2.இனி வாழும் நாட்களை நல்ல நிலையில் வாழ்ந்திடுங்கள் என்பதற்கே இதை வெளியிடுகின்றோம்,

குடும்பத்தில் நிம்மதியே இல்லை என்று சொல்வார்கள்…!

குடும்பத்தில் நிம்மதியே இல்லை என்று சொல்வார்கள்…!

 

நம்முடைய பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் என்ன நினைக்கின்றோம்…? இப்படியே செய்து கொண்டிருக்கின்றான்… எதிர்காலத்தில் என்ன ஆகப் போகின்றானோ…! என்று வேதனைப்படுவோம்.

வேதனையாக எண்ண… எண்ண… கை கால் குடைச்சல் ஆகின்றது. சிந்திக்கும் தன்மை இழந்து பையனை உதைக்கும் நிலைக்கு வருகின்றது. கடைசியில் நாசமாகப் போடா…! என்று சொல்கின்றோம்.

பையனால் இப்படி வேதனை ஆகிவிட்டது என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் இறந்தால் எங்கே போகிறோம்…?
1.பையன் உடலுக்குள் தான் செல்ல வேண்டி இருக்கும்.
2.பையன் உடலுக்குள் சென்ற பின் வேதனையை அங்கே கூட்டி அவனைக் கெடுத்து அவனையும் வாழ விடாது செய்யும்.

சம்பாதித்த சொத்தைக் காக்க ஞானம் வேண்டுமா இல்லையா…! ஞானம் இல்லை என்றால் சொத்தைக் காக்க முடியுமா…?

ஆதே போன்று வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருப்போம். சில சந்தர்ப்பங்களில் ஆண்கள் வெளியிலே போய்விட்டு வந்தபின் வெறுப்பாக இருப்பார்கள்.

அப்போது வீட்டிர்குள் வந்த பின் பெண்கள் எதாவது கேட்டால் பதில் வெறுப்பாக வரும்.

எப்பொழுது பார்த்தாலும் என் வீட்டுக்காரர் எரிந்து எரிந்து விழுகின்றார். கொஞ்சம் சாந்தமாகத் தான் சொன்னால் என்ன…! என்று கேட்பார்கள்.

நானா கோபமாகப் பேசுகின்றேன்…! நீ தான் என்னைக் கோபமாகப் பேசத் தூண்டுகிறாய்…! என்று மீண்டும் அங்கே சண்டை உருவாகும்.

சண்டை போட்ட பின் என்ன செய்வார்கள்…? சரி… கணவர் கோபமாக இருக்கின்றார்… “கொஞ்சம் பார்த்து ஏதாவது செய்யலாம்…” என்று செய்யப் போனால்…
1.கணவர் எண்ணிய வேகத்திற்குச் செய்யவில்லை என்றால்
2.ஏறுக்கு மாறாகச் செய்கின்றாய்…! என்று மீண்டும் சண்டை வரும்

இது எல்லாம் உணர்வுகளின் இயக்கம்.

இப்படிச் சண்டையிட்ட உணர்வுகள் கலவை ஆன பின் அடுத்து சம்பாதிக்க வெளியிலே சென்றாலும்… எடுத்துக் கொண்ட உணர்வுகள் அங்கே வியாபாரத்தைத் தடைப்படுத்தும்… குழந்தைகளிடம் வெறுப்பாகப் பேசச் சொல்லும்… நண்பர்களாக இருந்தாலும் பகைமையாக்கிவிடும்…!

ஆக… சம்பாதிக்கக்கூடிய நிலையை நாம் தெளிவாக வைத்திருக்கிறோமா…?

இதெல்லாம் சந்தர்ப்பம்…
1.மோதலின் உராய்வினால் வரக்கூடிய உணர்வுகள்
2.நம்மை இப்படி எல்லாம் மாற்றி அமைக்கின்றது.

நான் ஏன் கஷ்டப்பட வேண்டும்..! எல்லா நல்லதும் செய்து இப்படி ஆகிவிட்டது.. “எனக்குக் குடும்பத்தில் நிம்மதியே இல்லை…!” என்று தொழிலை விட்டுவிடுவார்கள். சிந்தித்துச் செயல்படும் நிலை இல்லாது போய் வெளியிலேயும் வெறுப்பு… வீட்டிலும் வெறுப்பு…!

இது எதனால் வருகின்றது…?

1.கோபத்தையும் வெறுப்பையும் எனக்குள் விளைவை வைக்கின்றோம்…
2.பொறுமை இல்லாது பொறுப்பை இழந்து இங்கே பேசப்படும் பொழுது தொழிலும் மட்டமாகின்றது
3.வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரியிடம் கெட்ட பேர் வருகின்றது.

குடும்பப் பற்றுடன் வாழ்ந்து வந்தாலும் ஒருவர் இப்படி உணர்ச்சி வசப்பட்டுச் செய்தார் என்றால் அந்தக் குடும்பம் முழுவதும் வெறுப்பு வளர்கின்றது.

அதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

நாம் வேகமாகச் சமையல் செய்ய வேண்டும் என்று அடுப்பிலே நெருப்பைக் கூட்டினால் என்ன ஆகும்…?

அடியில் இருப்பது கருகிவிடும் நடுப்பகுதியில் இருப்பது ஒரு மாதிரி வேகும்… குழைந்து போகும். மேலே இருப்பது சுத்தமாகவே வேகாது போய்விடும். இந்த மூன்று நிலையில் வரும்.

ஆகவே கோபம் வருகிறது என்றால்…
1.அது எதனால் வருகின்றது என்று தியானத்தைச் சீராக கடைப்பிடிப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும்
2.அதை மடக்கித் திருப்பி ஆத்ம சுத்தி செய்யச் சொல்லும்
3.இது உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் முழுமையாகத் தெரியாதபடி “நானும் தியானம் தான் செய்கிறேன்…” என்று சொல்லிக் கொண்டு
1.எதைச் செய்தாலும் வீட்டிலே தொல்லைகள் வருகின்றது
2.எப்பொழுது பார்த்தாலும் சண்டை வருகின்றது
3.யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்று இப்படிச் சொல்பவர்களும் உண்டு.

காரணம் இது எல்லாம் பூர்வ புண்ணியத்தில் வருவது. பூர்வ புண்ணியத்தின் வழியில் வந்தாலும் அதை மாற்றுவதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வைக் கூட்டினால் அதை மாற்றிக் கொள்ள முடியும்.

அறியாது இயக்கும் இது போன்ற தொல்லைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்குத் “துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறக்கூடிய சக்தியை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஆனால் செய்து பார்த்தேன்… முடியவில்லை என்று விட்டு விட்டால் என்ன ஆகும்…! ஆகவே நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

உடலுக்கு ஊட்டம் கொடுப்பதை விடுத்து விட்டு உயிருக்கு ஊட்டம் கொடுத்தால் அழியா வாழ்க்கை வாழலாம்

உடலுக்கு ஊட்டம் கொடுப்பதை விடுத்து விட்டு உயிருக்கு ஊட்டம் கொடுத்தால் அழியா வாழ்க்கை வாழலாம்

 

எண்ணத்திலும் செயலிலும் வார்த்தையிலும் உயர்வு தாழ்வு என்ற எண்ணம் தான் மனிதர்களின் மனதிலே ஊன்றியுள்ளது.

உயர்வு எனும் பொழுது நம் உடலுக்கு… நம் உயிருக்கு.. அவ்வழியாக அருள் செல்வம் என்ற உயர்ந்த நிலை நாம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!

1.உடல் வாழ்க்கையில் இந்த உலகிலே சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம்.
2.அழியாச் செல்வத்தை நாம் எண்ணுவதில்லை.
3.தூல சரீரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்… சூட்சம சரீரத்தை எண்ணுவதில்லை.

மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்திடுகிறார்கள்.

1.வாழும் நாள் எல்லாம்…
2.மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்துவிட்டால்
3.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
4.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.

தீய எண்ணத்தை வளரவிட்டு அந்நிலையையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது.

அந்நிலையில் நம் உயிர் அணுவிற்குப் பெரும் சோர்வைத்தான் நாம் அளிக்கின்றோம். இந்நிலையையே வளர விட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு இன்னும் பல தீய அணுக்களைத்தான் நாம் மேலும் மேலும் பெறுகின்றோம்.

இந்நிலை எல்லாம் அறிந்து நம் உயிரணுவிற்கு நாம் பெறும் அழியாச் செல்வமான “ஆத்ம ஜோதி” என்ற நிலையைப் பெறத்தான் இந்த ஜெப நிலையிலிருந்து ஈஸ்வர தியானங்கள் பெற்று அந்நிலையில் நமக்குக் கிடைக்கும் பல அரிய பொக்கிஷங்களை நம் உயிரணுவிற்குச் சேமித்து வைத்திடல் வேண்டும்.

இந்த உடலில் உள்ள பொழுதே மனிதனாகப் பிறந்த இந்தப் பாக்கியத்தை
1.ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற…
2.நம் ஆத்மாவிற்கு அழியா நிலை பெற…
3.நம் எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே என்றும் நாம் சுவாச நிலையில் எடுத்துக் கொண்டால்
5.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது,

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது… அனுபவம் இல்லை என்றால் அருள் ஞானத்தைப் பெற முடியாது

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது… அனுபவம் இல்லை என்றால் அருள் ஞானத்தைப் பெற முடியாது

 

இன்ஜினியரிங் படித்து எல்லாவற்றிலும் மள மள என்று தேர்ச்சி பெற்று பட்டம் வாங்கி வந்திருப்பார்கள். ஆனால் தொழிலுக்குச் சென்று வேலை பார்க்கும் இடத்தில் என்ன செய்கின்றார்கள்…?
1.படித்ததைத்தான் சொல்லிச் செயல்படுத்த முடிகிறதே தவிர
2.இடைவெளியில் தவறுகள் வந்தால் என்ன செய்வது…? என்று தெரியாது.

ஆனால் இங்கே ஃபிட்டராக வேலை செய்பவருக்கு இன்னது ஆனது. அதனால் தான் அந்த இயந்திரம் தேய்மானம் ஆனது என்று அனுபவத்தில் சொல்லி விடுவார்கள்.

அவர் அந்த இன்ஜினியரிடம் சென்று சார்…! இந்த மாதிரி இருக்கின்றது இப்படிச் செய்தால் சரியாகிவிடும்…! என்பார்.

ஆனால் அவரோ “நான் படித்துக் கொண்டு வந்து விட்டேன் எனக்கு எல்லாம் தெரியும்… நீ எனக்குச் சொல்வதா…!” என்று சொன்னால் என்ன ஆகும். அந்த அனுபவ அறிவைப் பெற முடியாது.

படித்ததைத் தான் சொல்ல முடியுமே தவிர அங்கே இயந்திரத்தில் உள்ள தேய்மானத்தைச் சரி செய்து கொண்டு வர முடியாது.

ஏனென்றால் கீழே வேலை செய்பவர்கள் தன் அனுபவத்தின் நிலைகள் கொண்டு சொல்கின்றார்கள். இப்படி வாழ்க்கையில் நாம் சிந்தித்துச் செயல்படுத்தினோம் என்றால் தான் சரியாக இருக்கும்.

இன்ஜினியரிங்கில்… படித்ததை வைத்துத் திருப்பிக் கொண்டு வந்தால் சரியாக வராது. அவசியம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதே போன்று தான்
1.யாம் (ஞானகுரு) சொன்னதை எல்லாம் பாடமாக வைத்துக்கொண்டு அதையே எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
2.ஆனால் சந்தர்ப்பத்தில் வரக்கூடிய தீமைகளை நான் சொல்லிக் கொடுத்த முறைகள் கொண்டு
3.அதை மாற்றி அமைத்த அனுபவம் மிகவும் முக்கியமாகத் தேவை.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று அதை எடுத்துத் தூய்மைப்படுத்த வேண்டும். “அந்த அனுபவத்தின் நிலைகள் கொண்டு” செயல்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைகளில் அனுபவம் இல்லாதபடி அந்த இன்ஜினியருடைய செயல்கள் சீராக வராது. இதே போல் டாக்டராக வருபவர்களும் எல்லாம் படித்து விட்டுத் தான் வருகின்றார்கள்.

ஆனாலும் மருந்து கொடுக்கப்படும் பொழுது அனுபவம் அவசியமாகிறது. காரணம்… ஒரே நோயாகத் தெரிந்தாலும் கூட அந்த உடலில் இன்னொரு நோய் இருப்பது அது தெரியாதபடி செயல்படுத்தினால் என்ன ஆகும்…?

ஆஸ்த்மா நோய் இருக்கும். ஆனால் இரத்த கொதிப்புக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்று அதை அடக்கினால் ஆஸ்த்மாவிற்கு ஒத்துக் கொள்ளாது.

இந்த மருந்தைக் கொடுத்தால் அவருக்கு நோய் அதிகமாகிவிடும்…!

ஆனால் இதற்கு மருந்து கொடுத்தோம்… இப்படி ஆனது…! அதற்கு மருந்து கொடுத்தோம்… அப்படி ஆனது…! என்று அனுபவத்தில் தெரிந்து கொண்ட நிலைகள் கொண்டு ஆஸ்த்மா நோயைப் பற்றிச் சிந்தித்து இரண்டையும் சமப்படுத்தக்கூடிய மருந்தாகக் கொடுத்தால் அவருடைய நோயைக் குணப்படுத்த முடியும்.

1.ஆக இன்ன நோய்க்கு இன்ன மருந்து தான் கொடுக்க வேண்டும் என்று டாக்டருக்குப் படித்திருந்தாலும்
2.இந்த அனுபவம் இல்லை என்றால் பலன் இல்லை.

இரத்தக் கொதிப்பை அடக்கக் குளிர்ச்சியானதைக் கொடுத்தால் ஆஸ்த்மாவிற்கு ஒத்துக் கொள்ளாது. கர்… புர்… என்று மூச்சு இரைச்சலாகும். அப்போது எந்த நோயை நீக்க முடியும்…?

ஆனால் அனுபவரீதியில் கண்டவர்கள் என்ன செய்கிறார்கள்..?

இரத்தக் கொதிப்பினை இத்தனை நொடிகளில் நிறுத்தினோம் என்றால் இதனுடைய வலு குறையும். அந்த நொடிக்குள் அதைச் சரி செய்துவிட்டு அடுத்து அந்த உஷ்ணத்தை மேலே ஏற்றிக் கொடுத்தால் அது ரெண்டு நோயையுமே அது கட்டுப்படுத்தும்.

இப்படிச் சமப்படுத்திக் கொடுக்காதபடி ஆஸ்மா நோய் உள்ளவர்களுக்கு இரத்தக் கொதிப்பிற்குண்டான மருந்தைக் கொடுத்தால் அது வேலையாகாது.

இந்த மாதிரி ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு விதமாகச் செயல்படுத்த வேண்டும். இது எல்லாம் அனுபவ ரீதியிலே அறிந்து செயல்படுத்த வேண்டிய முறைகள்.

இதே போன்றுதான்
1.உங்களுக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்கின்றோம்
2.என்னுடைய அனுபவத்தை உங்களிடம் சொல்கின்றேன்.

அனுபவங்களைச் சொல்லி எந்த நிமிடத்தில் அந்தக் குறைகள் வந்தாலும் உடனுக்குடன் அதைச் சீர்படுத்த ஈஸ்வரா… என்று உயிரை எண்ணுங்கள்…! (ஏற்கனவே பல முறை பதிவு செய்துள்ளேன். அதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்)

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை எடுத்துச் சுத்தப்படுத்துங்கள்…! உங்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்

அனுபவத்திலே ஒவ்வொன்றாகத் தெரிந்து கொண்டு அதிலே வளர்ச்சி பெற்று வருபவர்கள் தான் தொழிற்சாலையில் வேலை செய்யக்கூடிய ஃபிட்டர்கள்.

படித்து வந்தததைக் காட்டிலும் இவர்கள் தன் அனுபவத்தால் சொல்கிறார்கள். ஆனால் இன்ஜினியர் இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார். அவர் சொன்னபடி இயந்திரத்தை ஓட்டும் போது தேய்மானமாகிறது.

ஆனாலும் அந்த ஃபிட்டருக்கு அனுபவம் இருக்கிறது. இயந்திரம் இப்படிச் சாய்வாக இருக்கின்றது. அதை நேராக்கினால் சரியாகிவிடும் என்று அவர் சொல்கிறார்.

ஆனால் இன்ஜினியரோ நான் படித்து வந்திருக்கின்றேன் நீ சொல்வதைச் செய்தால் எப்படிச் சரியாகும்…? என்றால் அது எப்படி இருக்கும்…!

சில பேருக்கு இந்த உபதேசங்களை கொடுக்கப்படும் பொழுது “நான் எல்லாத் தியானமும் படித்திருக்கின்றேன்… எனக்கு எல்லாம் தெரியும்… குண்டலினி யோகா செய்திருக்கின்றேன்… இந்த யோகம் செய்து இருக்கிறேன்…!” என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆனால் அந்த நுணுக்கம் எதிலிருந்து வருகின்றது என்றால் அது தெரியாது…! சொன்ன பாடத்தை அவர்களால் ஒப்படைக்க முடியவில்லை.

படித்தவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். ஆனால் படிக்காதவர்கள் யாம் சொன்ன தியானத்தைப் பற்றி அவர்களிடம் சொல்லும் பொழுது
1.நான் எத்தனையோ படித்திருக்கிறேன் என்னிடமே வந்து நீ சொல்லுகின்றாயா…? என்றால்
2.இவர் கண்டுபிடித்த உணர்வை அறிய முடியாது போய்விடுகிறது.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…!

இது எல்லாம் இயற்கையின் நியதிகள். ஆக அந்த உணர்வின் தன்மை கொண்டு உணர்ச்சி கொண்டு செய்தோம் என்றால் நமக்குச் சரியான பக்குவம் வரும்.

அந்த அனுபவம் இல்லை என்றால் எதையுமே சீராக்க முடியாது.

குருநாதர் காட்டிய வழியில் மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து அதிலே பெற்ற அனுபவங்களை வைத்துத் தான் உங்களுக்கு உண்மையின் உணர்வுகளை எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).