ஆயிரம் நன்மைகள் செய்திருந்தாலும்… ஒருவன் நம்மை அவமதிக்கின்றான் என்றால் அதிலிருந்து விலகத் தெரிய வேண்டும்

ஆயிரம் நன்மைகள் செய்திருந்தாலும்… ஒருவன் நம்மை அவமதிக்கின்றான் என்றால் அதிலிருந்து விலகத் தெரிய வேண்டும்

 

விண்ணிலே உருவான உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வருகிறது. வந்த பின்… ஆரம்பத்திலே (உதாரணமாக) அந்த உயிர் ஒரு பருத்திச் செடியின் மீது விழுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த உணர்வை நுகரும் பொழுது அது ஊழ்… ஆகி அது வினைக்கு நாயகனாக இயக்கத் தொடங்கி விடுகின்றது… புழுவாக உருப்பெறுகிறது
2.உயிருடன் அது முதலிலே ஒன்றுகின்றது… அந்த உணர்வின் சத்தை நுகர்கின்றது
3.நகர்ந்து சென்று மீண்டும் அது தன் இரையைத் தேடுகின்றது.

முதலில் பரிணாம வளர்ச்சியில் வரும் பொழுது இந்த நிலை…!

பல கோடிச் சரீரங்களில் பரிணாம வளர்ச்சி ஆகி இன்று மனிதனாக வளர்ந்தபின் ஒருவர் நம்மைக் கோபிக்கின்றார்… தன் வாழ்க்கைக்காக பல தவறுகளைச் செய்து நாம் தவறு செய்யாமலேயே நம் மீது அபாண்டமான நிலைகளில் பொய்யைச் சொல்கிறார்… வேதனைப்படும் செயலைச் செயல்படுத்துகின்றார்.

1.நமது கண் அந்த மனிதனைப் படம் எடுக்கின்றது…
2.எலும்புக்குள் ஊனாகப் பதிவாக்கி விடுகின்றது. அதுதான் ஊழ்வினை என்பது.

பின் அவன் எத்தகைய தீமைகளை நமக்குச் செய்தானோ அந்த மனித உடலில் இருந்து வந்த உணர்வின் அலையை நம் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு கவர்ந்து நம் ஆன்மாவாக முதலில் மாற்றுகின்றது.

உயிர் அவ்வாறு தன் ஆன்மாவாக மாறியதை இழுத்து நம் உயிருடன் ஒன்றி நமக்குள் உணரச் செய்கின்றது. உணர்ந்தாலும் அது ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றி விடுகின்றது.

1.முதலில் நாம் எதை எண்ணுகின்றோமோ… அது ஊழ்வினை என்ற வித்தாக ஆன பின்
2.அந்த உணர்வின் சத்து கருவாகி உடலுக்குள் உருவாகத் தொடங்கி விடுகின்றது.

அவன் எத்தகைய வேதனையை உருவாக்கினானோ அந்த உணர்வின் தன்மையை நமக்குள் அணுவாக உருவாக்கி விட்டால் அது தான் அதற்கு உணவு.

காரணம்… அணுவாக உருவாகிய பின் அது மீண்டும் தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டும். இதை உருவாக்கியது யார்…?

உயிர்.

அந்த உயிரின் தன்மை கொண்டு நாம் நுகர்ந்தபின்… அது தாயல்லவா…!
1.எந்த மனிதன் நம்மை வேதனைப்படும்படி சொன்னானோ அந்த உணர்வினை நுகரப்படும் பொழுது
2.அவனின் நினைவாற்றல் நமக்குள் மீண்டும் மீண்டும் வருகிறது.
3.நம்மை கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணிய அந்த உணர்வலைகளை அனுப்புகின்றான்.
4.அதே உணர்வின் சத்தை நம் உடலில் உருவான அணுக்கள் உணவாக எடுத்துக் கொள்கிறது.

இதை நன்றாகக் கவனமாகத் தெரிந்து கொள்ளுங்கள்…!

நாம் ஆயிரம் நன்மைகள் செய்தாலும் ஒருவன் நம்மை கெட்டுப் போக வேண்டும் என்று உறுதியாகச் சொன்னான் என்றால் ஆழமாக அதை பதிவு செய்து விட்டால் அந்த எண்ணம் அந்த எண்ணம் உங்களைக் கெட்டுப் போகவே வைக்கும்.

அதிலிருந்து தப்புவதற்கு வழி வேண்டும் அல்லவா… அதுதான் விழித்திரு…!

1.“விழித்திரு…” என்றால் ஒருவர் நமக்குத் தீமை செய்கிறார் என்று உற்று நோக்கினால்
2.அந்த உணர்வுகள் தனக்குள் வராதபடித் தடுத்து நிறுத்த… அப்பொழுதே நாம் விழித்திருத்தல் வேண்டும்.

தாய் தந்தையரை எண்ணி ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த உணர்வுகளை ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

அடுத்து… நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும். யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் குடும்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.மெய் ஞானிகளால் நமக்குக் காட்டப் பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை எடுத்து…
2.நம்மைக் காத்திடும் உணர்வாக என்றும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உணர்வை நம் நல்ல குணங்களுடனும்… சோர்வடைந்த மற்ற உணர்வுகளுடனும் இணைத்து அதை நாம் தியானித்து வருவோம் என்றால் நம்மிடமிருக்கும் இருள்கள் அகல்கின்றது.
1.பொருளறிந்து செயல்படும் உணர்வாக
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் நம்மிடத்தில் இயக்கம் பெறுகின்றன.

நாம் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுகிறோம்.

நாம் பெறும் உயர் ஞானம் மற்றவருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

நாம் பெறும் உயர் ஞானம் மற்றவருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

பசு மடியில் சுரக்கும் பால்… தன் கன்று குடித்து அதன் பின் மீண்டும் பலரும் பருக அது பயன்படுகின்றது.
1.அந்தப் பசு மடி சுரக்கும் பால் போல்
2.நாமெடுக்கும் உயர் ஞானத்தின் தன்மை
3.பலருக்கும் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

நாமெடுக்கும் உயர் ஞானம் நம் உயிரானது… நம் உயிராத்மா கன்று போல் பருகி… பலரும் பருகக்கூடிய பலனாய் ஞானியின் சக்தியாகச் செயல்படல் வேண்டும்.

ஒவ்வொருவருக்குமே… தன் உணர்வில்… தன் எண்ணத்தால்… தன் ஆத்மாவில் பதியப்பட்டது தான் நியாயமாகவும்… உண்மை என்றும்… புலப்படும். ஆகவே
1.தன் உண்மைக்கு ஒத்த கருத்துக்கள் கொண்டு உறவாடுவதை தனக்கு உகந்ததாயும்
2.மாறுபட்ட எண்ணங்கள் யாவையுமே எதிர்ப்பு உணர்வைத் தோற்றுவிக்கும் எதிர் நிலைகளைத்தான் உண்டு பண்ணும்.

இந்த உண்மைகளை எல்லாம் அறியக்கூடிய உயர் தன்மைக்காகத்தான் அன்றைய மாமகரிஷிகள் மனிதனுக்குள் இறைத் தன்மையை வளர்க்கும் நிலையை நெறிப்படுத்தினார்கள்.

மனிதனுக்கு மேல்… மேல் நிலையாக தெய்வ குணங்களையும்… தெய்வச் சிலைகளையும்… ஆலயங்களையும்… நல்லொழுக்க நடைமுறைக்குக் கொண்டு வந்து… உண்மையின் சித்தத்தை மனிதன் அறியச் சீரிய வழிகளையும் வழிப்படுத்திச் சென்றனர்.

இதை உணர்ந்து…
1.நாம் ஒவ்வொருவருமே தெய்வ குணங்களைப் பெற்று
2.தெய்வ சக்தியை வளர்த்துத் தெய்வங்களாகும் தன்மை பெறல் வேண்டும்.

உத்தராயணம் என்பதன் முக்கியத்துவம்

உத்தராயணம் என்பதன் முக்கியத்துவம்

 

மகா சிவன் ராத்திரி என்ற நிலைகளில் விநாயகர் தத்துவத்தைப் பார்க்கப்படும் போது… விண்ணுலகில் விளைந்த அனைத்தும் மண்ணுலகில் விளைந்துள்ளது. அந்த உணர்வின் தன்மை ஒவ்வொரு தாவர இனங்களில் மணமும் குணமும் அறிவும் ஞானமுமாக இணைந்துள்ளது.

அதிலிருந்து வந்த அந்த உணர்வுகளைத் தான்
1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு ஒப்ப உடல்களுக்குள் அதை வினையாகச் சேர்த்து
2.மகா என்ற நிலைகள் அடைந்து.. மகா சிவன்… மகா சிவமாக… இந்த மனித உடலை உருவாக்கியுள்ளது… மகா சிவன் இராத்திரி.

அன்றைய தினம் இதை எல்லாம் முழுமையாக அறிந்துணர்ந்த மகரிஷிகளின் உணர்வை உற்று நோக்கி… விண்ணை நோக்கி ஏக வேண்டும். காரணம்… “இருளான இந்தச் சரீரத்தைக் கடந்து… வெளியே சென்று…” உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள் அந்த மகரிஷிகள்.

“முருகு…” மாற்றியமைக்கும் ஆறாவது அறிவின் துணை கொண்டு இன்றும் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்களுக்குள் படர வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று விழித்திருக்க வேண்டும்…!

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்
1.உணர்வுக்குள் இருக்கும் உயிரை உடல் மறைத்தது…
2.அதே சமயத்தில் உணர்வின் நல்ல எண்ணங்களை வேதனை என்ற நஞ்சின் தன்மை மறைக்கின்றது.
3.கோபம் என்ற கார உணர்ச்சிகள் நல்ல உணர்வுகளை அது மறைக்கின்றது

இதைப் போன்று
1.இருளுக்குள் இருளாக மறையச் செய்யும் இந்த உணர்வின் தன்மையை
2.இருளுக்குள் ஒளியாக மாற்றிய அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் இணைத்து
3.நல்ல உணர்வின் ஞானத்தை மறைத்திடும் அந்த இருளைப் போக்கி அந்த ஞானிகளின் உணர்வுடன் ஒன்றி
4.வாழ்க்கையில் தெளிந்திடும் நிலைகள் கொண்டு அந்த ஞானியின் உணர்வுகளை நமக்குள் பொங்கச் செய்து
5.நம்மையும் மகிழச் செய்து.. நம்மைப் பார்ப்போர் நிலைகளையும் மகிழச் செய்ய வேண்டும்… மகிழ்வாகனா…!

ஆகவே வாழ்க்கையில் இது வரையிலும் வந்த தீமைகளை நீக்கிவிட்டு மெய் ஞானியின் உணர்வை நமக்குள் பொங்கச் செய்து
1.ஆறாவது அறிவால் “உத்தராயணம்” என்று ஞானிகள் பால் திசை மாற்றி
2.மெய் ஞானியுடன் நம் வாழ்க்கையை இணைத்து
3.எத்தகைய இருள் ஆனாலும் அதைப் பிளந்திடும் நிலை பெற வேண்டும் கார்த்திகேயா…!
4.ஒளி பட்டபின் அங்கிருக்கும் பொருள்களை எல்லாம் காணுவது போல நாம் ஒளியாக மாற வேண்டும்.

வாழ்க்கையில் கண்டுணர்ந்த தீமைகள் உங்களை இயக்கினாலும் அந்தத் தீமையை இயக்கும் தன்மையைப் பிளந்து… மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து… மெய்யுணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்து… ஒளியின் சரீரமாக ஆன அந்த மகரிஷிகளின் உணர்வின் சக்தியாக நீங்கள் மலர வேண்டும் என்பதற்குத் தான் மகா சிவன் இராத்திரி என்று இதை உபதேசிப்பது (ஞானகுரு).

காரணம் நாம் பல கோடிச் சரீரங்களிலும் எடுத்துக் கொண்ட உணர்வெல்லாம் நமக்குள் மகா சிவனாக நம் உடலின் தன்மை அமைந்துள்ளது.

அந்த இருளுக்குள்… (நம் உடலுக்குள்)
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் செயலாக நமக்குள் உணர்த்திக் கொண்டு
2.உணர்வின் இயக்கமாக அறிந்து கொண்டு அதனின் அறிவாக நமக்குள் தெளிந்திடும் நிலையாக
3.புற நிலையைக் கண்டுணரச் செய்யும் ஆறாவது அறிவாக நமக்கு முன் இருப்பதை
4.தீமைகளை விலக்கி மெய்ப்பொருளைக் காணும் உணர்வின் ஆற்றலாகப் பெற்றால் “அது தான் கார்த்திகேயா…!”

ஆறாவது அறிவால் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்பது போல மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் கவர்ந்து நமக்குள் இருள் சூழ்ந்திருக்கும் உணர்வின் குணங்களைப் பிளந்து மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் இணைத்து மெய்ப்பொருள் கண்டுணர்ந்த உயிருடன் ஒன்றுவோம்.
1.மெய்ப்பொருள் என்பது உயிரே மெய்ப்பொருள்
2.உயிரின் இயக்கமாக உணர்வின் தன்மைதான் அதனுடன் இணைந்த பொருள். (உயிர் என்பது மெய்… நுகரும் போது உணர்வு… பொருள்)

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் உணர்ந்திடும் உணர்வை ஒளியின் சரீரமாக மெய்ப்பொருளாக… மெய்யுடன் மெய்யாக… என்றும் ஒளியின் சிகரமாக அடைந்திட முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கையில் இதை உபதேசிக்கின்றேன்.

உத்தராயணம்…! நாம் திசை மாற்றி மெய் ஞானியின் உணர்வை நாம் பெற்றிடுவோம்.
1.உடல் பெறும் உணர்வை மாற்றிவிட்டு
2.மீண்டும் மீண்டும் உடல் பெறும் அந்தத் திசையை மாற்றிவிட்டு
3.உயிருடன் ஒன்றிய அழியா ஒளியின் சரீரமாக மாற்றுவோம்.

கனவு வாழ்க்கை வாழாமல் நிலையாக வாழும் மகரிஷிகளுடன் சங்கமமாக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

கனவு வாழ்க்கை வாழாமல் நிலையாக வாழும் மகரிஷிகளுடன் சங்கமமாக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

பஞ்சு மிட்டாய் செய்யும் பொழுது… வேகக்கூடிய உஷ்ணமும்… அவ் இயந்திரம் ஓடக்கூடிய ஓட்டத்திலும்… “ஒரே பக்குவ நிலையில் ஓடும் பொழுது தான்…” ஒன்று போல அம்மிட்டாய்களைச் செய்ய முடிகின்றது. சிறிது பக்குவம் மாறினாலும் அமைப்பின் தன்மை மாறி விடுகின்றது.

அதைப் போன்றே… இயந்திரங்களில் நூற்பாலைகளில் பஞ்சின் தரத்தில் நூற்கப்படும் நூல்கள் ஓட்டத்தின் சமத்தைக் கொண்டு ஒரே போல் தரமுடன் நூல் நூற்கப்படுகின்றது. இயந்திர விசையின் வேகமோ… செயலாக்கும் திறமையில் மாற்றமோ ஏற்படும் பொழுது… நூலின் தரம் மாறுபடுகிறது இது செயற்கை.

ஓர் மரத்தில் காய்க்கும் காய்கள் அனைத்தும் ஒன்று போல் உருவத்தில் இருப்பதில்லை. பெரிதாகவும் சிறிதாகவும் கரடு தட்டியும் பூச்சி புழுக்கள் அரித்தும்… பூக்களானாலும் சரி… காய் கனிகளானாலும் சரி… ஒரே மரத்தின் கனியிலேயே மாறுபாடுகள் அந்தந்தக் கிளைகளில் எடுக்கப்படும் சத்தின் ஈர்ப்பைக் கொண்டு கனியின் வளர்ச்சி பிரிக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.

அதைப் போன்று ஒரு தாயின் குழந்தைகள் உணர்வின் தன்மைக்கொப்ப குணங்கள் மாறுபடுகின்றது. ஆனால் ஒரே சூலில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்து… தன் எண்ணத்தின் உணர்வு கொண்டு தானாய் வளரும் தருணம் வரை… இரண்டு குழந்தைகளின் உணர்வுகள் ஏறக்குறைய ஒன்று போல் இருக்கின்றன.

சூரியனின் ஒளி ஈர்ப்பில் பூமியின் எந்த நட்சத்திர ஒளிகளின் அலைத் தன்மை அதிகப்படுகின்றதோ அத்தருணத்தில் உருவாகக்கூடிய குணத்திற்கொப்ப… பிறப்பின் நிலை… ஜீவ அணுக்களின் வளர்ச்சி வலுக் கொள்கின்றது.

அந்தந்தத் தருணத்திற்கொப்ப நொடிக்கு நொடி மாறிக் கொண்டுள்ள சுழற்சி ஓட்டத்தில்… உணர்வின் எண்ணத்தில் மெய் அறியக்கூடிய பக்குவத்தை வளர்க்கும் மெய் ஞானியின் தன்மையும்… ஒன்றை ஒத்து ஒன்று இருக்காமல்.. மாறு கொண்ட நிலை இயற்கையின் உணர்வில் வளர்கின்றது.

செயற்கையின் தன்மையில் இயந்திர விசையின் ஓட்டத்தில் ஒன்றைப் போன்ற செயலைத் தரத்தில் செயலாக்க முடிகின்றது.

எப்படி மனிதனின் எண்ண உணர்வு செயற்கையின் விஞ்ஞானத்தில் பல செயல் திறமைகளை வளர்க்க முடிகின்றதோ… அதைப் போன்று இயற்கையில் மெய் உணரும் பக்குவ வழிமுறையை…
1.உணர்வின் எண்ணத்தில் எடுக்கக்கூடிய ஞானத்தை
2.நாம் ஒன்றை எண்ணும் பொழுது… மீண்டும் மீண்டும் அதையே எண்ணிக் கொண்டுள்ள தருணத்தில்
3.அவ்எண்ணத்திற்கு ஜீவித வலுவை ஆத்மாவின் பதிவாகச் செயல்படுத்தி விடுகின்றோம்.

எப்படி தோசையை சுட்டுப் போடும் பொழுது முதலில் சுட்ட தோசைக்கும் மேல் மேலும் அதற்கு மேலேயே சுட்டுப் போடும் பொழுது மேலிருக்கக்கூடிய உஷ்ணத்தை எடுத்து கீழிருக்கக்கூடிய தோசையும் சூடாகவே இருக்கின்றது அல்லவா…!

அதைப் போன்று…
1.நல்ல வழியோ தீயவையோ ஒன்றின் தொடரை எண்ணி எண்ணி
2.அதே தொடரில் எண்ணத்தை ஓட்டும்பொழுது
3.அதன் வலுவின் தன்மைதான் ஆத்மாவின் பதிவு.

ஜீவ ஆத்மாவின் உயிர் காந்தத்திற்கு… உண்மையான நல் உணர்வின் ஒளித் தன்மையை நம்மில் பெறுவதற்கு…
1.உயர் ஞானிகளின் எண்ணத்தை
2.சரீர ஓட்டத்தின் வாழ்க்கைத் தொடர் “கனவில்” அதிகமாக எண்ணத்தைச் செலுத்தாமல்
3.ரிஷிகளின் எண்ணத்தில் நம் எண்ணம் செல்லும் பொழுது
4.அவர்கள் பெற்ற ஒளித் தன்மையின் வலுவின் வட்டத்தில் நம் உயிர் ஜீவ அலைகள் பதிவாகி
5.நம் ஒளி வட்டமே உண்மைத் தன்மையை அறியக்கூடிய மெய் ஞானத் தன்மை பெற்று விடுகின்றது.

உணர்வில் மோதப்படும் வாழ்க்கையின் விருப்பு வெறுப்பற்ற வழித் தொடர் அடைய… நம் ஒளியின் தன்மை வளர்ச்சியின் வலுவினால்…
1.சலிப்பு சோர்வு என்ற வேண்டாத நிலைகள்… தீயவை எதுவாகிலும்…
2.அதை எல்லாம் சுட்டுப் பொசுக்கக்கூடிய ஒளித் தன்மையாக
3.ஆத்மாவில் மோதப்படும் எதுவாகிலும் அதை நம் இச்சைக்கு கட்டுப்படக் கூடிய செயலுக்கு
4.உணர்வின் எண்ணத்தை நாம் செலுத்தி எடுக்கக்கூடிய ஞானத்தின் தன்மை தான் “மெய் உணரும் தியான முறை…!”

பெருமாள்… பெருமான்… முருகப் பெருமான்…!

பெருமாள்… பெருமான்… முருகப் பெருமான்…!

 

நம் உயிரின் தன்மை இயக்கும்…
1.அந்த உயிரான குணத்தை நமக்குள் சேர்க்கும் போது
2.தீமையை விளைவிக்கும் உணர்வின் தன்மையை அது அடக்கி
3.அதிபதியாக நின்று செயல்படுகிறது “பெருமாள்…!”

அதனின் (உயிரின்) உணர்வின் தன்மை கொண்டு பல கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனாக உருவாக்கி… அறிந்திடும் ஆற்றல் கொண்ட அதிபதியாக… ஆறாவது அறிவின் தன்மையை வினையாகச் சேர்த்துக் கொண்டது.

ஆக.. தீமையை அகற்றிடும் மகிழ்வாகனா…! தீமைகளை அகற்றி மகிழ்ந்திடும் வாகனமாக நமக்குள் அதிபதியாக வீற்றிருப்பது அந்த ஆறாவது ஆறறிவு – முருகப் பெருமானே..!

1.நமக்குள் ஆண்டிடும் உயிர் பெருமாளாக இருப்பினும்
2.எல்லாவற்றிற்கும் “ஆறாவது அறிவின் தன்மை – முருகப் பெருமான்…”
3.மாற்றியமைத்திடும் பெருமானாக அமைகின்றான்.

பெருமாள் கோவிலுக்குப் போகிறோம் என்று சொல்கிறோம்
1.அந்தப் பெருமாள் யார்…? நம் உயிர் தான்
2.முருகப் பெருமான் யார்…? நம் ஆறாவது அறிவு.

நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் பெருமாளாக இருப்பது உயிரே. ஆனால் இந்த ஆறாவது அறிவின் தன்மை வரப்படும் பொழுது
1.முருகு…! மாற்றி அமைக்கும் அந்தச் சக்தி கொண்டு
2.எல்லாவற்றையும் சீர்படுத்தும் நிலைகளாக முருகப் பெருமான்…!
3.மாற்றிடும் பெருமாளாக நமக்குள் ஆன்மாவாக அமைந்துள்ளது.

மகா சிவன்ராத்திரி என்றாலும்…
1.உடலுக்குள் அடைபட்டுக் கிடக்கும் இந்த உணர்வின் குணங்களை…
2.சீர்படுத்தும் அந்த உணர்வின் தன்மைகளை எல்லாம் சிலையாக வடித்து..
3.நற்குணத்தின் செயல்களை எல்லாம் காவியமாகத் தீட்டி
4.ஞானிகள் வெளிப்படுத்திக் காட்டினார்கள் ஆலயங்களிலே…!

நம் வாழ்க்கையில் தீமையான உணர்வுகள் வந்தாலும் முருகப் பெருமான்… ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்தத் தீமைகளைப் பிளந்து நீக்கிவிட்டு நம்மை ஆளும் ஆண்டவனான பெருமாளுக்கு அது எவ்வாறு…? என்று ஞாபகப்படுத்துவது.

இதைப் பிரித்து அவன் ஆளும் ஆட்சியாக சீரான உணர்வின் தன்மை நமக்குள் வரும் பொழுது ஆட்சிபுரியும் நல்ல குணங்களை…
1அது தடையின்றி நமக்குள் நல்லொழுக்கத்தையும்
2.நல் செயலையும் நமக்குள் நயம்படும் உணர்வின் உறுப்புகளையும் அது உருவாக்கும் தன்மையாக
3.உடலிலே நல்ல நிலைகள் வருவது அது தான் மகிழ்வாகனா…!

மகிழச் செய்யும் வாகனமாக இருந்து… முருகு…! மாற்றியமைக்கும் பெருமானாக அது நமக்குள் அமைந்து அவனின் உணர்வை நினைவு கொண்டு மகிழச் செய்யும் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இணைத்திடல் வேண்டும்.

மாற்றி அமைத்திடும் அந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை ஆண்டிடும் பெருமானாக அந்த உயிருடன் ஒன்றி நமக்குள் மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை நாம் காத்திடல் வேண்டும்.

ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ குணத்தைப் பெற வேண்டும்… மலரின் மணம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்.. மகரிஷிகளின் அருள் வட்டத்திலே இணைந்து வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் அருள் சக்திகளை எடுத்துப் பழக வேண்டும்.

வேண்டாத எண்ணங்களை வளர்க்காமல் ஒளியாகும் எண்ணங்களை வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும் – ஈஸ்வரபட்டர்

வேண்டாத எண்ணங்களை வளர்க்காமல் ஒளியாகும் எண்ணங்களை வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
பெரிய குரங்கு ஒன்று மரத்தில் அமர்ந்து எதையோ ஒரு பொருளை விடாப்பிடியாகப் பிடித்து ஆட்டுவது தெரிகின்றது.

மற்றொரு காட்சியில் ஒருவருக்குக் காலில் முள் குத்துவதைப் போன்றும்… முள்ளைக் காலிலிருந்து எடுத்துத் தூர எறிவதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:
குரங்கு ஒன்றைப் பிடித்ததென்றால் ”குரங்குப்பிடி…” என்பதைப் போன்று
1.மதியைக் கொண்டு மெய்யுணரும் பக்குவமற்ற ஜீவனால்
2.எத்தொடரில் எதைப் பிடித்ததோ… அதன் தொடரில் தான் அதனுடைய எண்ணமிருக்கும்.

ஆனால் மெய் என்ற மதியைக் கொண்டு பகுத்தறியக் கூடிய மனிதன் “தான்…” என்ற அகந்தையின் பிடியில் வலுப்படுத்தினால் தன் வளர்ச்சியின் வலுவை இழக்கும் நிலைதான் மனித உணர்வின் ஒளிக்குச் செயல்படும்.

இச்சரீரத்தில் உணர்வுகளினால் வளரும் உயிரணுக்கள் யாவையுமே ஜீவகாந்த மின் அலைச் சக்தியை வளர்க்கவல்லவை.

அவ்வளர்ப்பின் தொடருக்குத் தன்னில் உயர்ந்த ஒளி சக்தி பெற்றிருந்தாலும்…
1.மனித உணர்வின் தொடர்பில் பாசப் பிணைப்புடன்
2.அன்பு பரிவு என்ற அறுகுணத்தின் நற்குணத்தைச் செலுத்தி மெய் உணர்வின் அறத்தை
3.இச்சரீரத்தையே மெய்யுணர்வின் தொடர்பில் செலுத்தும் பொழுது
4.இச்சரீரம் ஆண் பெண் என்ற நிலை மாறித் தாயான ஜீவ சரீரமாக
5.பலவற்றையும் வளர்க்கும் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் வித்துக்களாய்
6.ஒவ்வொரு ஒளித் தன்மை கொண்ட ஜீவாத்ம உயிரும் வளர்ச்சி பெறும்.

இன்றெப்படி சூரியன் பல கோள்களின் ஜீவனை வளர்க்கின்றது…? பூமி எப்படி பல ஜீவன்களை வளர்க்கின்றது…?

அதைப் போன்று ஒளி சக்தி பெற்ற ஒவ்வொன்றும் ஒளியின் உருவப் படைப்பாய்… உருவில் பலவற்றையும் படைத்துப் படைக்கவல்ல தன்மைக்கு… இச்சரீர உணர்வில் எடுக்கும் மெய் உணர்வின் ஒளித் தன்மையைக் கொண்டுதான் அந்த “ஆதிசக்தியின் சூட்சுமமே அடங்கி உள்ளது…”

மனித உணர்வில் வேண்டாத எண்ணங்கள் நம்மைத் தாக்குபவையாக சந்தர்ப்பத்தில் வந்து மோதினாலும்
1.காலிலே முள் ஏறியவுடன் அதைப் பிடுங்கி எறிவதைப் போன்று
2.எண்ணத்திலிருந்து அதை எல்லாம் அப்புறப்படுத்திடும் செயலுக்கு வரவேண்டும்.

முள்ளின் வேதனையை… எடுக்க முடியாமல் காலில் தைத்து விட்டால் அந்த முள் புரையேறி… காலையே எடுக்கவும் ஏன்… சரீர ஜீவனுக்கே கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது…!

அதைப் போன்று… நம் உணர்வில் மோதும் எதிர் நிலை எண்ணத்தை ஒளி கொண்ட தெய்வ குணங்களில் எண்ணத்தைச் செலுத்தி… வேண்டாத எண்ணங்களை வளர்க்காமல்..
1.மெய் உணர்வின்… மெய் ஞானியாகக் கூடிய வழியறியும் பக்குவத்தால்
2.வான மண்டலத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் கோள்கள் வளர்ந்து ஓடுவது போன்று
3.மனித உணர்வின் எண்ணம் கொண்ட ஒவ்வொருவருமே
4.ஒளி சக்தி கொண்ட உயர் தன்மை பெற முடியும்.

விண்ணுலகம் அடையச் செய்யும் இரகசியம்

விண்ணுலகம் அடையச் செய்யும் இரகசியம்

 

உயிரின் (கதிரியக்கம்) துடிப்பு ஒலிகள் விண்ணிலே தோன்றியது தான். இதை முதலில் உணர்தல் வேண்டும்.

அதே சமயத்தில் மற்ற அணுக்களும் விண்ணிலே தோன்றியதுதான். ஆனாலும் பூமிக்குள் வந்தபின் பூமிக்குள் மண்ணாக மறைந்து மற்றதுடன் கலந்து விடுகிறது.

இதிலே உருவாகும் உணர்வின் ஆவியின் நிலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதனின் நிலைகளுக்கொப்ப அணுக்களாக மாறுகிறது.

அத்தகைய அணுக்களின் துணை கொண்டு தாவர இனங்களாக உருவாக்கினாலும்
1.அதிலே தோன்றிய உயிரினமும் அதை உணவாக உட்கொண்டால் இந்த புவியின் ஈர்ப்பிலேயே நிலைத்திருக்கும்.
2.இதனின்று கடந்து செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஆதியிலே
1.பேராற்றல் மிக்க பேரண்டங்களிலிருந்து அவை உமிழ்த்தும் துகள்களை
2.பிரபஞ்சத்தில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்கள் வீழ்த்தி இந்தப் பிரபஞ்சத்திற்கு ஏற்றவாறு சக்திகளாக மாற்றி.. கோள்களாக உருவாக்கி
3.கோள்களில் இருந்து வருவதை வடித்து அந்த நஞ்சினைப் பிரித்து உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சிகரமாகத் திகழ்ந்ததோ
4.அதைப் போன்று விண்ணின் நிலைகளைக் கொண்டு
5.ஒரு நட்சத்திரத்தின் மின் கதிரியக்கப் பொறி மற்றொரு கதிரியக்கப் பொறியுடன் மோதும் பொழுது
6.அதனால் துடிப்பின் நிலைகள் ஏற்பட்டு தன் அருகில் இருக்கக்கூடிய கோளின் சக்தியைக் கவர்ந்து
7.அப்படிக் கவர்ந்த நிலைகள் கொண்டு தான் ஒரு உயிரணுவின் தோற்றம் (மின்னிக் கொண்டிருக்கும் நிலை) உருவாகிறது.

உயிரின் முன்னணி எதுவோ அதனின் நிலைகள் கொண்டு மற்ற நட்சத்திரங்களின் பொறிகளால் உருவாக்கப்பட்ட அணுவின் தன்மை எதிர் நிலையாகும் போதுதான் ஒரு இயக்கச் சக்தியாக மாறுகிறது.

அதன் வழியில் உடலின் உறுப்புகள் உருமாறி… உணர்வின் சத்து தசைகளாக மாறி… உணர்வுக்கொப்ப ரூபங்கள் மாறி மாறி வந்தது தான் இயக்கச் சக்தி. பல சரீரங்களைக் கடந்து இதன் வழியில் தான் மனிதனாக இன்று நாம் வந்திருக்கின்றோம்.

இதை எல்லாம் தெளிந்து தெரிந்து முழுமையாக உணர்ந்தவர்கள் மாமகரிஷிகள்.
1.தனது உயிரணு எந்த நட்சத்திரத்தின நிலைகள் கொண்டதோ
2.அந்த நட்சத்திரத்தின் உணர்வின் மின் அணுவின் சக்தியைத் தனக்குள் இணைத்து இணைத்துப் பேரொளியாக மாற்றிக் கொண்டார்கள்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் இத்தனையும் பேசுகின்றேன். காரணம்… குருநாதர் இதையெல்லாம் எனக்குள் பதிவு செய்து இயக்கச் சக்தியாகக் கொண்டு வந்திருக்கின்றார்.

சாமி சொல்வது அர்த்தம் புரியவில்லையே… ஏதோ ஒரு உலகத்தில் பெரிதாகச் சொல்கிறார்…! என்று விட்டுவிட்டால் அதைத் தள்ளி விட்டுவிடும்.

உதாரணமாக… திட்டுபவர்களையோ கேலி செய்பவர்களையோ உற்றுப் பார்த்து என்னை மோசம் பண்ணினார்… கேவலமாகப் பேசினார்…! என்று பதிவு செய்தால் அந்த உணர்வுகள் நமக்குள் வேகமாக விளையத் தொடங்குகிறது அல்லவா…! அதைப் போல்
1.சாமி சொல்லும் சக்தியை நான் பெற வேண்டும் என்று
2.இறுக்கிப் பிடித்துக் கொண்டால் இதை வளர்க்க முடியும்.

ஆதியிலே உருவான அகஸ்தியனுக்கு அவன் தன் தாய் கருவிலிருக்கும் போது பெற்ற விண்ணின் ஆற்றல் கொண்ட நஞ்சின் இயக்கமான உணர்வுகள் “பூர்வ புண்ணியமாக” அமைந்தது.

இந்த உணர்வின் சத்து கொண்டு அவன் விண்ணை நோக்கி ஏகும் போது…
1.அவனின் உயிரின் ஆற்றல் எதனின் தன்மை கொண்டு அந்த நட்சத்திரத்தின் இயக்கங்கள் இயக்கியதோ
2.அதையே நுகர்ந்து… நுகர்ந்து… நுகர்ந்து… அதனின் உணர்வின் தன்மையை அந்த விண்ணின் ஆற்றலை ஒளியாக மாற்றி
3.தன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் தனக்கென்ற நிலைகளைப் பிரித்துப் பிரித்து
4.உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளான்.

துருவப் பகுதியிலிருந்து நம் பூமி கவரும் உணர்வின் சத்தை…
1.அங்கே துருவத்திலே நிலைகொண்டு அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து
2.நஞ்சினைப் பிரித்து விட்டு தன் உயிரான ஒளியின் சிகரத்தை அடைந்து
3.எந்த நட்சத்திரத்தில் பிறந்தானோ அதனின் இனத்தின் தன்மையை உணவாக எடுத்துக் கொண்டு
4.இன்றும் மின்னிக் கொண்டு உள்ளான்… துருவ நட்சத்திரமாக…!

அதைப் போன்றே நம் உயிரணுவின் தோற்றம் அது எந்த நட்சத்திரத்தின் கதிரியக்கத்தால் உருவானதோ அந்த உணர்வின் சத்து கொண்டு
1.சிவன் இராத்திரி… உடலான இருளுக்குள் இருப்பதை அந்த மறைந்த நிலையை
2.தன் உணர்வின் நிலையால் (உயிரின் நட்சத்திர ஆற்றல்)… ஒலி அலைகளாக எண்ணங்களாக எப்படி மாற்றியதோ
3.அகஸ்தியனின் உணர்வினை நம் உயிரான இயக்கத்திற்குள் இணைத்து இணைத்து
4.இந்த வாழ்க்கையில் வரும் எத்தனையோ எதிர் நிலையான இயக்கங்கள் இருப்பினும்
5. ஒருக்கிணைந்த இயக்கமாக நாமும் அகஸ்தியனைப் போன்று ஒளியாக மாற்ற முடியும்.

ஆக… உடலான இருளுக்குள் இருந்து தான் அந்த இருளைப் பிளந்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலை பெற வேண்டும்.

அறம் எது…? பொருள் எது..? இன்பம் எது…? – ஈஸ்வரபட்டர்

அறம் எது…? பொருள் எது..? இன்பம் எது…? – ஈஸ்வரபட்டர்

 

பருத்தி என்றால் அதிலிருந்து பஞ்சை எடுத்து ஆடைகளை நெய்வதும் பருப்பைப் பதப்படுத்தி உண்ணவும் அதனதன் வளர்ச்சிக்கொப்ப… “இன்னதை இன்னதிற்குப் பயன்படுத்தலாம்…” என்பது மனித ஞானம் அறிந்த உண்மை.

மேலும்… இன்று மனிதன் இயற்கையில் வளரும் தாவரங்களுக்குச் செயற்கையில் உரமிட்டு இயற்கைத் தன்மையின் வளர்ச்சியை மாறுபடச் செய்து அதை வளரச் செய்யக்கூடிய பக்குவத்தை வளர்ப்பவனும் இதே மனிதன் தான்.

ஆனால் அதே மனிதன் தான்…
1.தன் உயிராத்மாவின் ஜீவித வாழ்க்கையை
2.தன் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
3.தன்னைத் தானே தான் உணர்ந்து உயர் நிலை பெறுவோம் என்ற வழியறியாது
4.தன் வாழ்க்கையில் நடப்பவை யாவும் ஊழ்வினை – “விதி” என்ற
5.வினைப் பயனை விதைத்துக் கொள்கின்றான் தன் எண்ணத்தில்.

இயற்கையையும் செயற்கையாக்கி விஞ்ஞானத்தில் பல உண்மைகளை மனிதச் செயல்தான் வளர்த்தது. அதே மனிதன் ஜீவாத்மாவின் உண்மையின் உண்மையை உணர்ந்து தன்னைத்தான் ஆள வேண்டும்.

அறம்… பொருள்… இன்பம்…
1.அறம் – நல்லொழுக்கத்தைச் சத்தியம் என்ற நேர் கோட்டில் உணரவும்
2.பொருள் – அறத்தைச் செயலாக்கி சத்தியத்தை வளர்த்து
3.இன்பம் – என்ற பிறவா ஒளி நிலை ஆனந்த உணர்வை இவ்வாத்மா அடைவதற்காக
4.முந்தைய பல ஆண்டுகளாக ஞானிகள் மகரிஷிகள் உயர் தத்துவத்தை உணர்த்தியுள்ளனர்.

இக்கலியிலும் புறநானூறு அகநானூறு திருக்குறள் நல்லொழுக்கம் ஆத்திச்சூடி போன்ற பல நூல்களில் வந்துள்ள தத்துவங்கள் யாவும்… மனித உணர்வின் எண்ணம் “நல்லொழுக்கம் பெற்று… அகத்தின் பொருளறிந்து… அகிலத்தின் பொருளாகும் உண்மையைத் தான் வழிகாட்டின…”

ஆகவே நம் உயிராத்மாவின் உயர் நிலை பெற ஊழ் வினை என்ற வினைப்பயனை எண்ணத்தில் எண்ணாமல்… எண்ணத்தில் நற்குணத்தை ஒவ்வொருவரும் பெற்று… விதியை மதி கொண்டு… ஞானம் கொண்டு செயல்பட வேண்டும்.

1.முதலில்… தன் சரீர உணர்வில் வெளிப்படக்கூடிய இச்சைகளை
2.தன் எண்ணத்தின் சிந்தனை கொண்டு
3.இச்சரீர ஏக்கத்தின் இச்சைகளை அடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

சரீர ஏக்கத்தின் இச்சை என்பது விருப்பு வெறுப்பு பசி தூக்கம் கோபம் ஆசை இன்பம் துன்பம் காமம் இவை யாவையுமே தன்னில்தான் தன் உணர்வில் தோன்றக்கூடிய உந்தல்கள் தான்.

அதன் இச்சையின் செயலுக்கு நம் உணர்வின் எண்ணம் செல்லும் பொழுது உடல் உபாதையினால் உணர்வின் எண்ணம் பாதிக்கப்பட்டுத் தன்னைத் தானே வலுவிழக்கச் செய்து வினைப் பயன் என்ற முத்திரையை… “தானே குத்திக் கொள்ளும் நிலைதான்…”

உடல் உபாதையையும்… உடல் உணர்வுகளினால் எண்ணத்தின் வலுவைக் கொண்டு… இச்சரீரத்தின் எச்செயலையும் தன்னுள் உள்ள “இறை உயிரைக் கொண்டு” நல்லதாக மாற்றிட முடியும்.

இச்சரீரம் எத்தனை கோடி ஆண்டுத் தொடரில் புழுவாய் பூச்சியாய் மனிதனாய் பல உணர்வுகளில் பல உருவில் உருப்பெற்று உயிர் ஜீவனில் இன்றுள்ள நிலைக்கு வினைப்பயனின் வித்தாய் வளர்ந்து வந்துள்ளது.

எவ்விதை ஊன்றப் பெற்றதோ… அச்செடியாக அது வளர்ந்தாலும்…
1.அதை மாற்றி அமைக்கக்கூடிய மெய் ஞானம் என்ற மதி கொண்டு
2.மனித எண்ணத்தின் உயர் ஞானத்தால்
3.அறம் பொருள் இன்பம் என்ற இனிய நிலையை ஒவ்வொருவரும் பெற முடியும்.

அதைப் பெறக்கூடிய பக்குவத்தைத்தான் இங்கே தொடர்ந்து போதனையாக வழங்குகின்றோம்.

இச்சரீரம் உறங்கும் பொழுது “உறக்கம்” என்றும்… செயல்படும் பொழுது “விழிப்பு” என்றும் சொல்கின்றோம். ஆனால்..
1.ஆத்மாவின் செயலில் இச்சரீரத்தை இயக்கக்கூடிய தன்மை பெற்றல்
2.உண்மைத் தன்மை விழிப்பு நிலை பெறுகின்றது.

வாழ்க்கை நடைமுறையில் இச்சரீர உணர்வுக்கொப்ப எண்ணுபவை யாவும் ஆத்மாவில் பதிவு பெறுகின்றது. அதே தொடரின் வாசனைதான் உணர்வு பெற்று இஜ்ஜீவித இயக்கத்தில் காந்த மின் அலையான இச்சரீர இயக்க ஓட்ட ஆத்மாவில் பதிவாகி விடுகின்றது.

எப்பதிவை எண்ணத்தின் உணர்வு கொண்டு நாம் பேசி மகிழ்ந்து வாழ்கின்றோமோ அவ்வலையைத்தான் ஆத்மா பெறுகின்றது.

அவ்வலையைத்தான் நம் உணர்வின் எண்ணமும் பெற்று நம்மையறியாமல் பேசவும் செயல்படுத்தவும் செய்கின்றது. நம்மைச் செயலாக்கும் நிலையும் அதுவேதான். ஆக.. அந்நிலை இச்சரீர ஆத்மாவை இப்பூமியின் பிடிப்பில் உறங்க வைத்த நிலை.

இப்பூமியின் பிடிப்பிலிருந்து விழிக்கும் நிலை என்பது…
1.தன்னைத்தானே தான் உணர்ந்து…
2.இச்சரீர உணர்வின் வாசனையை… இவ்வாத்மாவில் பதிய வைத்து வளர்த்துக் கொண்ட நிலையை…
3.உயர்ஞானத்தைக் கொண்டு தன்னை இயக்கும் ஆத்மாவின் உண்மையை உணர்ந்து
4.ஆத்மாவிற்கு நல் ஒலிகளை… நற்குணமுடன் கொண்ட உயர் தன்மையை…
5.அறம் பொருள் இன்பம் என்று பெரியவர்கள் நமக்குக் காட்டிய உயர் குணத்தின் சத்தியத்தை வளர்க்க
6.மாறிப்போகக் கூடிய இச்சரீரத்தில் உயர் குண சத்தியத்தைக் கொண்டு
7.இஜ்ஜீவ உயிராத்மா – உயர் காந்த மின் சக்தியினால்
8.இச்சரீரத்தில் வாழக்கூடிய வாழ்நாளில் – விழிப்பு நிலை நாம் முதலில் பெற வேண்டும்.

ஈஸ்வரபட்டர் கொடுக்கும் “ரிமோட் கண்ட்ரோல் சக்தி”

ஈஸ்வரபட்டர் கொடுக்கும் “ரிமோட் கண்ட்ரோல் சக்தி”

 

குருநாதர் எம்மைச் (ஞானகுரு) சாக்கடை அருகே அமர வைத்து உபதேசமாகக் கொடுத்தார். பன்றி சாக்கடையின் நாற்றத்தை நுகராது அதற்குள் இருக்கும் நல்ல உணர்வினைத் தனக்குள் நுகர்ந்து அதனின் உணர்வின் வளர்ச்சியில் பரிணாம வளர்ச்சியாகி மனிதனாக வளர்ந்து வந்தது.

நாற்றமான உணர்வுகளை நீக்கப்பட்டு நாற்றத்தை நீக்கிடும் உணர்வின் எண்ணங்களாக மனிதனாக எப்படி வளர்ந்து வந்துள்ளோம்…? என்பதை உணர்த்தவே அங்கே உபதேசித்தார் குருநாதர்.

சாக்கடையில் இருக்கும் நாற்றத்தை நீ நுகராதே. சாக்கடையற்ற நிலையாக
1.நாற்றத்தை நீக்கிய அந்த அருள் ஞானியின் உணர்வை நீ இங்கிருந்து பெறு.
2.அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நீ பெற்றால் அந்த நாற்றத்தை நுகரவிடாது
3.அதை அறியத் தான் உதவும்… அந்தத் தீமை உனக்குள் விளையாது.

அதைப் போன்று இந்தச் சாக்கடையான வாழ்க்கையில் இருக்கும் அந்த உணர்வினை நீக்கி மெய்ப்பொருளைக் கண்டுணரும் அந்த சக்தியைப் பெறச் செய்வதற்குத் தான் உன்னை இங்கே அழைத்தேன்.

காரணம் இன்று இந்தக் காற்று மண்டலமே சாக்கடையாக இருக்கின்றது. இதை நுகர்ந்து நுகர்ந்து உடலுக்குள் அந்தச் சாக்கடையான சத்தையே நுகரும் தன்மையைத் தான் அடைந்துள்ளோம்.

விருப்பு வெறுப்பு வேதனை என்று
1.பிறரைக் குறை கூறும் உணர்வுகளைத் தான் நாம் அதிகமாக வளர்த்திருக்கின்றோமே தவிர
2.குறைகளை நீக்கும் உணர்வுகளை நமக்குள் வளர்க்கவில்லை.

ஆகவே நாற்றத்தைப் பிளந்த பன்றியைப் போன்று குறைகளை நீக்கி நல்லதை நுகரும் ஆற்றல் பெற வேண்டும்.

பிறருடைய குறைகளைக் கண்டுணர்ந்தாலும் அவர்கள் குறைகள் அகல வேண்டும்… தெளிந்துணர்ந்து செயல்படும் தன்மை நமக்குள் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும்.

அவ்வாறு எண்ணி எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து நம் சொல்லின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது குறைகளை நீக்கும் சக்திகளாக அங்கே தோன்றுகின்றது.

தீமைகளை அகற்றிடும் நிலையையும் தீமைகள் உனக்குள் புகாத நிலையையும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இங்கே சாக்கடை அருகே உன்னை அமரச் செய்து உனக்கு உணர்த்தியது.

ஆனால் சாக்கடையை நுகர்ந்து அய்யய்யே… என்று எண்ணினால் அதை நினைக்கும் பொழுதெல்லாம் உனக்குள் சாக்கடையை நுகரும் உணர்வே அதிகமாக வருகின்றது.

அந்தச் சாக்கடை நீக்க வேண்டும்… அதைத் தடுக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்தச் சாக்கடையை நீக்கும் எண்ணங்களாக உனக்குள் வருகின்றது.

அதைப் போன்று தான்…
1.நீ யாரைக் கண்டாலும்… எவரைக் கண்டாலும்… அங்கே காணும் குறைகள் எதுவாக இருப்பினும்
2.அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வினை உனக்குள் ஏற்றுக் கொண்டு
3.அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் அவர்களை அறியாத இருள் நீங்க வேண்டும்
4.மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று நீ இதை எண்ணுவாய் என்றால்
5.உனக்குள் அறிவித்த இந்த உணர்வுகள் மெய்ப்பொருள் காணும் நிலையாக உனக்குள் வள்ரும்.

இந்த மனித வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இருந்தாலும் குறை என்று அது அறிவிக்கச் செய்கின்றது.
1.அறிவிக்க மட்டும் தான் அதைப் பயன்படுத்த வேண்டும்
2.அதற்கடுத்து அதைப் பயன்படுத்தக்கூடாது.

ஆனால் அறிவிக்கச் செய்யும் நிலையையே திரும்பத் திரும்ப எண்ணி
1.இப்படிச் செய்தான்… அப்படிச் செய்தான்… இப்படியே செய்தால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா…?
2.அவனை விடக்கூடாது…! என்று எண்ணும் பொழுது
3.நமக்குள் அறிவித்த அந்த நிலை… நமக்குள் எது தவறு…? என்று காட்டியதோ
4.அந்தத் தவறை நமக்குள் விளைய வைத்து நம்மையும் தவறு செய்பவனாகவே வளர்த்துவிடும்.

ஆக தவறை நீக்கும் நிலைகளைத் தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனித வாழ்க்கையில் குறை இல்லாது நடந்தவர் யாருமில்லை. ஒரு மனிதனுடைய சந்தர்ப்பம் குறையான உணர்வு வரும் பொழுது குறையான உணர்வாக அதை ஈர்க்கப்படும் பொழுது…
1.அதிலிருந்து நாம் எவ்வாறு விலகிச் செல்ல வேண்டும்…?
2.,குறைகளை எப்படி நீக்க வேண்டும்…? என்று நாம் எண்ண வேண்டும்.

அது தான் முக்கியம்.

அந்தக் குறைகளை நீக்க அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வலுவாக ஏற்றுக் கொண்டால்… நாம் எடுத்துக் கொண்ட அந்த ரிமோட் கண்ட்ரோல் சக்தி யாருடன் பழகினாலும்… பேசினாலும்… அவர்களை அறியாது இயக்கும் தீமைகளை நீக்கிடும் சக்தியாகவும்… அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாகவும் அங்கே இயக்கச் செய்யும்.

இதை நாம் செய்து பழக வேண்டும்.

இன்று நாம் உபயோகப்படுத்தும் டி.வி. மற்ற எலெக்ட்ரானிக் சாதனகளில் மூடி மறைத்து இருப்பதை “ரிமோட் கண்ட்ரோல்…” என்ற அந்த பட்டனைப் போடும் பொழுது சீராக இயக்குகிறது.. படமோ பாடலோ அல்லது எந்த இயக்கமாக இருந்தாலும் இருந்த இடத்திலிருந்தே அதைக் கவர்ந்து இயக்க முடிகின்றது

இதைப் போன்றுதான் மெய் ஞானிகளின் ஆற்றலை நாம் எடுத்து
1.அந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளரும் பொழுது
2.மெய்ப் பொருளைக் கண்டுணரும் நிலையாக ரிமோட் கண்ட்ரோல் (REMOTE CONTROL) ஆக
3.நம்மை அந்த ஞானிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்.

நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளில் அங்கிருக்கக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்க இது உதவும். நமக்குள்ளும் அது வராதபடி நல்ல உணர்வுகளைத் தெளிந்து கொள்ளும் நிலையாக வரும்.

இதைத்தான் மகா சிவராத்திரி என்று இருளுக்குள் மறைந்த பொருளைக் கண்டுணர்ந்த அருள் ஞானிகள் காட்டிய வழிகளை நாம் பெறும் நிலையாக மகா…! அனைத்தும் நமக்குள் உண்டு என்று காட்டியுள்ளார்கள்.

ஆகவே அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் தெரிந்திடும் நிலையாக சிவன்ராத்திரி என்று விழித்திருப்போம்.
1.இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையாக
2.விழித்திருக்கும் அந்த உணர்வின் சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்.

மந்திர ஒலியில் நாம் சிக்கிவிடக்கூடாது – ஈஸ்வரபட்டர்

மந்திர ஒலியில் நாம் சிக்கிவிடக்கூடாது – ஈஸ்வரபட்டர்

 

விஞ்ஞானத்தால் இன்றைய மனிதன் தன் ஞானத்தால் வெகு வேகமாகச் செயல்படுத்தும் இத்தருணத்தில்…
1.மந்திர ஒலியின் யாகத்தால் தன் ஆத்மாவை
2.இப்பூமியின் பிடிப்பலையிலுள்ள ஆவி ஆத்மாக்களின் ஈர்ப்பு சுழற்சியில் சிக்க விட்டுவிடக் கூடாது.

ஆலயத்தில் ஆண்டவனை வணங்கும் வழிமுறையறிந்து வணங்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வமுண்டு…!

1.யாகத்தின் தொடர்பில் மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆலய வழிபாட்டின் உண்மை நிலை என்ன…?
2.தெய்வத்திற்கு ஓதப்படும் மந்திர ஒலியினால் மனிதன் வணங்கும் தெய்வத்திற்கு என்ன பலன்…?
3.மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆத்மாக்கள் அதனுடைய உண்மைத் தொடர்பை அறிந்து ஒலிக்கின்றார்களா…?

ஒலியின் நாதம் கொண்டு தான் தன்னுடைய இயக்கத்தின் தொடர்புக்கு ஜீவன் பெற வருகின்றது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முதலில்..
1.மனிதன் தான் வணங்கும் தெய்வ நிலைக்கு ஜீவன் ஏற்படுத்தக்கூடிய தருணத்தில்
2.மனிதனின் முதல் நிலையான “புகழ்…” என்ற
3.பேராசைக் குணம் ஏற்பட்ட காலத்தில் வளர்ந்ததுதான் மந்திரமும் யாகமும்.

இயற்கையின் தொடர்பில் ஜீவ சரீரத்திற்கு வலு ஏற்படுத்திக் கொள்ள இம்மனிதனின் உடலிலுள்ள மின் காந்த ஒலி அலைக்கு மீண்டும் வலுத் தன்மை கூட்டிக் கொள்ளக் கூடிய வளர்ச்சிக்காக மந்திர தந்திரங்களை வடித்துக் கொண்டார்கள் அரசர்கள்.

மாய உருக்களைக் கொண்டு… தன் ஈர்ப்பு வட்டத்திற்கு இவ் ஒலியையும் ஒளியையும்… ஜீவனற்ற ஆத்ம உயிர் அலைகளைத் தன் சரீர ஆத்ம அலையுடன் ஈர்ப்புப்படுத்தி… மந்திரத்தால் அரசர்கள் மாய வித்தைகள் நடத்தினர்.

அத்தகைய சூட்சுமத்தின் முதல் வித்து தான்… யாகங்களை நடத்தி யாகங்களில் பலியிடும் நிலைகள்…!

யாகத் தீயிலே பலியிடக் கூடிய உயிர் ஜீவனின் ஆத்ம ஒலியைத் தன் சரீரத்தின் ஈர்ப்பு வட்டத்துடன் வளர்த்துக் கொண்ட வழித் தொடரில்தான் யாகங்களும் மந்திர ஜெபங்களும் அரசர்கள் ஆண்ட காலம் தொட்டு வளர்ந்து வந்தது.

அரசன் அதற்கென்று குருமார்களை நியமித்த பின்…
1.குருவிற்கு அரசன் அடிமையா…?
2.அரசனுக்குக் குரு அடிமையா..! என்ற தொடரில்
3.இயற்கையின் உண்மைத் தத்துவத்தை ஆரம்பத்தில் சித்தர்கள் காட்டிய இயற்கைத் தொடரில் வளர்க்காமல்
4.இறைவன் என்ற உருவத்தைக் காட்டி…!
5.மனிதன் தன்னைத் தானே அடகு வைத்திடும் நிலைதான்
6.மந்திரமும் தந்திரமும் யாகங்களும் வேள்விகளும் ஆசார அனுஷ்டானங்களும்.

எவ்வொலியின் ஈர்ப்பில் உணர்வின் எண்ணம் செல்கின்றதோ அதற்கொத்துத் தான் ஆத்ம உயிர் ஜீவன் பெறுகின்றது. அவ்வொலியின் தொடர்பு கொண்டுதான் ஈர்ப்பின் தொடர் வலுக் கொள்கின்றது.

இறைத் தன்மை என்பது எங்குள்ளது..? இறைவன் யார்…? மனிதன் யார்…?

1.மனிதனுக்குள் உள்ள உயிர்த் தெய்வம் பிரிந்ததென்றால் இவ்வுடல் அழியக் கூடியதுதான்…!
2.இந்தத் தத்துவத்தைத் தன்னுள் அறிந்த மனிதன் “தான் யார்…?” என்பதை உணராமல்…
3.கலியின் செயலில் தெய்வமென்ற உணர்வில் ஆத்மாவை அடகு வைக்கும் வழித்தொடரிலேயே
4.மனிதனின் அறியக் கூடிய உயர் ஞானத்தை வளர்க்கவிடாது இன்று உலகம் செல்கின்றதப்பா…!

ஆனால்…
1.மெய் ஞானத்தின் உண்மையின் தத்துவத்தை உணரக்கூடிய பக்குவம்
2.இஜ்ஜீவ சரீரத்தில் இவ் உயிராத்மா இயங்கக்கூடிய காலம்தான் என்பதை உணர்ந்து
3.ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே உணர்ந்திடல் வேண்டும்.