பித்துப் பிள்ளையான (பித்துக்குளி) ஈஸ்வரபட்டர்

பித்துப் பிள்ளையான (பித்துக்குளி) ஈஸ்வரபட்டர்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பித்தனைப் போன்று தான் இருந்தார். புற உலகிற்கு அவரைப் பார்க்கும் பொழுது ஒன்றுமறியாத பித்தன் என்றே எண்ணினோம். ஆனால்
1.பித்தான உடலுக்குள் நின்று
2.ஒளியான சத்தை தனக்குள் வளர்த்து உலகின் தன்மை அறிந்துணர்ந்து
3.அறிந்திட்ட உணர்வின் சத்தைத் தனக்குள் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றார்.

மாமரத்தில் உருவாகும் காய் முதலில் புளிப்பின் தன்மை அடைந்தாலும் முதிர்வில் கனியாகி மற்றவர்கள் ரசித்து உணவாக உட்கொள்ளும் நிலை வருகிறது.

அதைப் போன்று நம் குருநாதர் இந்த மனித வாழ்க்கையில் வந்த
1.நஞ்சினை நுகராது இனித்த வாழ்க்கை என்ற நிலையைத் தனக்குள் எடுத்து
2.நஞ்சினை வெறுத்து மெய் உணர்வினைத் தனக்குள் வளர்த்து
3.”தன்னிச்சையாக…” மகிழ்ந்திடும் உணர்வுடன் செயல்பட்டார்.
4.அப்படி இருக்கும் நிலையை… அவரைப் பார்ப்போருக்கு பித்தனைப் போன்று காணப்பட்டார்.

பிற்காலங்களில் அவர் உணர்த்திய உணர்வின் ஒலிகள் கொண்டு தான் அதை அறிய முடிந்தது.

இந்தப் பூமியில் வாழ்ந்த உடல் பற்றை அவர் அகற்றிவிட்டு அந்த மெய் ஞானிகள் மீது பற்று கொண்டு அந்த அருள் உணர்வுகளை அவர் வளர்த்துக் கொண்டு ஒளியின் தன்மை பெற்றார்.

நமக்குள் எதைப் பற்ற வேண்டும் எதைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் என்று எமக்குத் (ஞானகுரு) தெளிவாக உணர்த்தினார்.

வெறுப்பு வேதனை கோபம் குரோதம் என்ற நிலையும் பிறரை வெறுத்திடும் நிலையும் பிறரை அழித்திடும் உணர்வுகளையும் நமக்குள் இணையவிடாது அதை வெறுத்து அந்தத் தீமைகளைப் பற்றிடாது அருள் ஞானியுடன் பற்று கொண்ட உணர்வுகளை வளர்த்து அதைக் காத்திடும் நிலையாக நீ எவ்வாறு இருக்க வேண்டும்…? என்றும் உணர்த்தினார்.

என்னைப் பிறர் காணும் பொழுது நான் பித்தனாக இருக்கின்றேன். காரணம்
1.இந்தப் புவியின் ஆசை கொண்ட நிலையில் அவர்கள் என்னைப் பார்க்கும் பொழுது
2.என்னைப் பித்தன் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள்
3.ஆனால் ஆசையின் நிலைகள் கொண்டு அவர்கள் தான் பித்தராக இருக்கிறார்கள் என்று அவர்கள் உணரவில்லை.

பித்தனாகி… இந்த உடலின் தன்மைக்கோ பித்தைப் போன்ற உடலின் உணர்ச்சிகளுக்கோ… நான் அடிமையாவதில்லை. உணர்ச்சிகளை அடக்கி
1.அந்த மெய் ஞானிகளின் உணர்வை நான் பெற வேண்டும் என்று
2.அந்தப் பித்துப் பிள்ளையாகத்தான் (பித்துக்குளி) நான் இருக்கிறேனே தவிர
3.இவர்களைப் போன்று உடலின் பித்துப் பிள்ளையாக நான் இல்லை…! என்று எம்மைத் தெளிவாக்கினார் குருதேவர்.

மனித வித்தின் பலன் உயர் ஞானம் தான் – ஈஸ்வரபட்டர்

மனித வித்தின் பலன் உயர் ஞானம் தான் – ஈஸ்வரபட்டர்

 

இயற்கையில் அமிலத்தின் ஒளி பெற்று மண்டலக் கோள்களின் ஈர்ப்பு வட்டத்தில் பூமியின் நட்சத்திரக் கோள்களின் அமில வளர்ச்சியால் உருவானது தான் இவ்வுயிர் ஆத்மாக்கள்.

அவை வளர்க்கக்கூடிய வளர்ச்சியும்… உருவான அந்தத் தொடர் நிலையின் வழித் தொடரில்தான் வளர்த்துக் கொள்ள முடியுமேயன்றி
1.வளர்ச்சித் தொடருக்கு எதிர்ப்பு நிலை ஏற்படும் பொழுது
2.வளர்ச்சியின் உருமாறக்கூடிய தன்மை தான் வளர்ப்பில் காண முடியும்.

நம் பூமியின் இயற்கைத் தன்மையின் ஜீவ வித்தின் பலன் நிலையே… மனிதனின் உயர் ஞான ஒளி சக்தி பெறக்கூடிய… “தெய்வ நிலை தான்…”

எந்த வித்தின் தொடரிலும்…
1.ஒரு பயிர் வளர்ந்து அதனின் பலன் தந்தாலும்…
2.அந்தத் தொடரின் மகசூல் பலவாகப் பெருகும் பக்குவத்தில்தான் பலவும் நடைபெறுகின்றன.

அத்தொடரின் தொடரில் தான்… ஆதி மனிதனின் உணர்வில் மனித உரு எண்ண வளர்ச்சி ஞானம் கொள்ளும் உயர்வு நிலை…. மனித வித்தின் உணர்வின் உயர் மண்டலமாம் பூமி மண்டலத்தில் உருவான மனிதச் செயல்.

இருந்தாலும் இதிலே மனிதன் வளர்ச்சி கொண்டு வாழும் காலம் மிகக் குறுகியதுதான்.

ஓர் விதையை நாம் விதைத்து… அந்த விதை வளர்ந்து செடியாகி.. மரமாகி… பக்குவம் பெற்றுப் பலனாய் அதனுடைய மகசூல் திரும்பிப் பெறக்கூடிய காலம் நீண்ட நாட்களாகி விடுகின்றது.

அதைப் போன்று தான் இப்பூமியும் வளர்ந்து வந்தது.

அதனுடைய வளர்ச்சியின் பக்குவ முதிர்வு நிலைக்குப் பிறகு… வளர்ச்சியின் பயனாய் மனித உணர்வின் உயர் ஞானம் கொண்டு செயல்பட்ட காலம்தான்… பூமி வித்தின் பலன் கண்ட காலம்…!

கண்ட பலனை… மீண்டும் பயிராக்கினால்தான் பலனின் தொடர் வளர்ந்து கொண்டே இருக்கும்.

ஓர் மரம் பலன் தரும் காலங்கள் முடிந்து… அம்மரத்தின் வளர்ச்சியை ஒத்து… மரத்தின் முதிர்வைக் கொண்டு பட்டுப் போன பிறகு… அம்மரத்தின் விதைகள் பல கோடியாய் வளர வைக்கக் கூடிய பயனை அம்மரம் தருகின்றது.

அப்படித் தந்ததை விரயமாக்காமல் வளர்க்கும் வளர்த் தொடர்ச்சியைப் போன்று தான்
1.இப்பூமியின் வித்தின் தொடரில் விதையான நம் ஆத்மாவும்
2.மீண்டும் பல வித்துக்களை வளர்க்கக்கூடிய விதையாகும் பக்குவத் தொடரில் வளர வேண்டும்.

மனிதனுடைய எண்ணத் தொடர் தன்னைத் தானே தான் உணர்ந்து… இயற்கையின் ஒலி ஒளித் தொடர் கொண்டு உயர் ஞானத்தை அறியும் உண்மைத் தத்துவ ஞானியாய் உயர்ந்திட வேண்டும்.

தன் ஆத்ம உயிரின் ஜீவ காந்த மின் தொடருக்கு…
1.இக்காற்றலையில் கலந்துள்ள மகரிஷிகளின் ஒளி அலைகளை
2.தன் உயர்வின் எண்ணத்தால் நுகர்ந்தெடுக்கும் தியான வழி கொண்டு
3.இஜ்ஜீவ ஒளியின் ஒளி நாதத்தால் மனிதன் தெய்வ நிலை பெற வேண்டும்.

ஜீவன்களை ஜீவிக்கச் செய்யும் சக்திகள் பூமியில் எப்படி வருகிறது…?

ஜீவன்களை ஜீவிக்கச் செய்யும் சக்திகள் பூமியில் எப்படி வருகிறது…?

 

பாறைக்குள் இருந்து மலை மீது சில இடங்களில் உச்சியில் நீர் வடிவதைப் பார்க்கலாம். காரணம்…
1.அங்கே அந்தப் பாறை ஆவதற்கு முன் மேகங்களைக் கவர்ந்து அது தன்னிச்சையாக நீரைப் பருகி
2.அதன் அடியில் எந்த மலை இருக்கின்றதோ அதற்குள் ஊடுருவிச் செல்லும் திறன் பெற்றது.

இப்படிப்பட்ட சில பகுதிகள் மலைகளில் உண்டு…!

மேகங்கள் மேலே பறந்து சென்றாலும் உச்சிமலையாக இருப்பது தனது காந்தப் புலனால் மேகங்களைக் கவர்ந்து நீராகச் சுரக்கச் செய்கின்றது. மலை உச்சிகளில் நாம் பார்க்கும் நீர்கள் எல்லாம் இப்படித்தான்.

இவைகள் எல்லாம் அந்தப் பாறைக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனும் அதனுள் கவர்ந்து கொண்ட அந்த உணர்வின் சத்தின் துணை கொண்டுதான் அந்தப் பாறையே அதை வளர்க்கின்றது.

1.இந்தப் பாறைகளிலிருந்து வெளிப்படும் ஆவியின் தன்மையும்
2.அந்தப் பாறைக்குள் நீராகக் கலந்து அதனின் தன்மை ஆவியாகப் படர்ந்து வரப்படும் பொழுது
3.அதிலே உருப் பெற்ற பல செடிகளின் சத்துக்களும் இது எல்லாம் ஒருக்கிணைந்து
4.அதனின் தன்மை ஒரு செடியாக ஒரு வித்தாக… கருவாக உருவானால்
5.அத்தகைய செடியையோ அல்லது மரத்தையோ வேறு எங்காவது நாம் ஊன்றினோம் என்றால்
6.அந்த மரத்திலிருந்து வரக்கூடிய காந்தப்புலன்
7.விண்ணிலிருந்து நுண் அணுக்களாகத் துருவப் பகுதியில் கலந்து கொண்டிருப்பதையோ
8.அல்லது கடல் நீரிலிருந்து வெளிப்படும் ஆவியின் சக்தியைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்திருந்தால் அதனின் சக்தியையோ
9.அந்தத் தாவர இனம் தனக்குள் குவித்து… மேகங்களாகக் கூடச் செய்து நீராக வடியச் செய்கிறது
10.அந்த நீரின் சத்தை அது வளர்த்துக் கொள்கின்றது.

இப்படியும் பல நிலைகள் உண்டு…! இது எல்லாம் இயற்கையில் உள்ள சில நிலைகள்.

பல பல செடிகள் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் இயல்பால் புதுப் புது தாவர இனங்களாகப் பூமியிலே விரிவடைந்து வளர்ந்திருந்தாலும் அவை அனைத்தும் வெளிப்படுத்தும் உணர்வுகள் காற்றிலே கலந்துள்ளது.

அவ்வாறு கலந்தவைகளில் உதாரணமாக ஒரு கடலைச் செடியிலே ஒரு உயிரணு விழுந்தால் அந்தச் சத்தினை அது கவர்ந்து உடல் பெற்று சிவமாக மாறுகின்றது.

சிவமாகும் பொழுது அந்தக் கடலைச் செடியின் சத்தை இந்த உயிரணு சுவாசித்து அதிலிருந்து வெளியிடும் நிலைகள் புழுக்களாகத் தோன்றுகிறது. இப்படி எண்ணிலடங்காத செடிகளிலிருந்து வெளி வருகிறது.
1.அவை இடும் மூச்சலைகளிலிருந்து வருவதுதான்
2.மனிதனாக உருப் பெறுவதற்குத் தேவையான ஜீவனுள்ள “பிராணவாயு…” என்று சொல்வார்கள்.
3.தனக்குள் மற்ற நஞ்சின் தன்மையை (கரியமில வாயுவை) மாற்றி இயற்கையின் ஜீவித சக்தியை வளர்க்கும் சக்தி அங்கே பெறுகின்றது.

ஏனென்றால் ஆரம்ப நிலையில் தோன்றிய செடிகள் வேறு. இப்பொழுது உருவாகும் செடிகளின் இனங்கள் வேறு.

அத்தகைய செடியின் சத்தைத் தான் நுகர்ந்து இந்த உணர்வின் துணை கொண்டு அது விளைந்த இது இடும் மூச்சலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவர்ந்து அலைகளாகப் படர்கிறது.

ஆகவே ஜீவணுக்கள் உயிரணுக்களில் இருந்து வரக்கூடிய உணர்வினைச் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை ஒரு உடலுக்குள் ஜீவிக்கும் தன்மையாக… பிராணவாயுவாகக் கிடைக்கின்றது.

இது எல்லாம் மெய்ஞானப் பாடம்…!

ஆத்ம உயிரை ஆண்டவனாக்கத் தான் உபதேசிக்கின்றேன் – ஈஸ்வரபட்டர்

ஆத்ம உயிரை ஆண்டவனாக்கத் தான் உபதேசிக்கின்றேன் – ஈஸ்வரபட்டர்

 

மனித உணர்வின் சூட்சுமத்தை… “மனிதனே அறியக்கூடிய ஒளி சக்தி வளரும் சுயநலச் செயலினால்தான்…” பொதுநலனின் பரிமாணத்தை விரிவுபடுத்த முடியும்.

மனிதனுக்குகந்த வீரிய மின் காந்த ஒளி சக்தி மிருகத் தன்மையின் சரீர இயக்கத்தில் அதிகப்பட்டிருந்தாலும் உணர்வின் செயலைப் பக்குவப்படுத்தக்கூடிய தன்மை அவைகளுக்குக் குறைவு.

ஆகவே “மனித எண்ணத்திற்குத்தான்” பகுத்தறிவின் சூட்சும ஒளியை வளர்க்கும் தன்மை… இப்பூமியின் சூட்சுமமுடன் வளர்ந்த “ரிஷிகளின் செயலினால் செயல்படுகின்றது…!” ஒன்றின் வளர்ச்சியில் ஒன்றின் பக்குவத்தால்.

மிருகங்களுக்குப் பிரித்துப் பார்க்கும் தன்மை மனிதனை ஒத்து இருப்பதில்லை. ஆனால் மிருகங்களும் இப்பூமியின் ரிஷிகளின் சூட்சுமத்தில் வளர்க்கப்பட்ட இறை சக்தி தான்.

அவைகளுக்குக் கழிவும் உணவும்… ஒரே இடத்தில் ஒன்றாக இருந்தாலும் மனிதனை ஒத்து அருவருப்பு… நாணம்… முதலியன மிருகங்களுக்கு இருப்பதில்லை.

மனிதனின் பகுத்தறிவால் தனக்குகந்ததை உயர்ந்ததாய்ப் பெற்று மகிழக் கூடிய பக்குவம் கொண்ட செயல் வளர்ச்சி வீரியம் பெற்ற ஜீவ இறையருளின் உன்னதத் தன்மை கொண்டவன்.

தாவரங்களும் மிருகங்களும் மனிதனும் இப்பூமியின் இறை சக்திகள் தான்.
1.இறை சக்தியே இறையுணர்வு பெற்று
2.இறைத் தன்மையில் பக்குவப்படுத்தக்கூடிய குணம் தான் தெய்வ குணம்.

இப்பூமியில் ஆரம்ப மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இன்றைய மனித வாழ்க்கைக்கும் நிறைய மாற்றங்கள் உண்டு. மனிதத் தேவைக்குகந்த உணவு… உடை… இருப்பிடம்… ஒவ்வொன்றிலும் தன் ஞானத்தால் மனித வாழ்க்கையின் வசதிக்குகந்த பக்குவத்தை மனிதன் இன்று பல வகையிலும் வளர்த்துக் கொண்டுள்ளான்.

அதைப் போன்று… இச்சரீர சுகத்தின் தேவையில் வளர்ச்சியுற்ற மனிதன் ஆத்ம தேவையின் பக்குவத்தை… இறை குணத்தின் வளர்ச்சியை வலுக்கூட்டும் தெய்வத் தன்மையால்… இக்கலியின் மாற்றத்தில் கல்கியில்…
1.இன்றைய மனிதனைக் காட்டிலும்
2.மனித எண்ணத்தின் வீரியத்தின் தெய்வத் தன்மையால்
3.மனிதன் “பறக்கும் நிலை” கொண்ட உயர்ந்த செயல் நிலைக்கு வர முடியும்.

ஒன்றைப் பக்குவப்படுத்தி அப்பக்குவத்தின் பொருளை எப்படி நமக்குகந்ததாக ஏற்படுத்தி சரீர வாழ்க்கையில் இன்பத்தைக் காண்கின்றோமோ அதைப் போன்று… ஆத்மாவின் பக்குவத்தில் அகிலத்திலும் கலந்துள்ள ஆதி சக்தியின் செயல் சக்தியில் “உயர்ந்த தன்மையான சூட்சும ஒளியால் ரிஷி சக்தியை மனிதன் பெற முடியும்…”

மனிதனின் ரிஷி சக்தியைக் கொண்டுதான்…
1.மூவுலக சக்தியான “ஆக்கல்… காத்தல்… மாற்றல்…” என்ற வழித் தன்மையில்…
2.வளர்ச்சியில் வளரும் அண்டக் கோள்களில்… பால்வெளி மண்டலத்தில்
3.எண்ணிலடங்கா இறை சக்தியில் இறையுணர்வாகும் தெய்வ சக்தியில்…
4.ஆண்டவன் என்ற படைப்பின் தன்மைக்குச் செயல் கொள்ளும் ரிஷித்தன்மையால்…
5.அந்தந்த அமிலத்தின் உருத்தன்மையில் உருவாகும் உயிர்த் தன்மையில் பக்குவம் கொள்ளும் படைப்பின் ஒளித் தன்மையை…
6.ரிஷித்தன்மையின் ஒளித் தன்மையால் தனக்கொத்த செயலுக்கு மண்டலங்களை உருவாக்கி…
7.உருவின் உருக்களை உணரும் வளர்ச்சியைத் தன் வலுவாக்கி…
8.அண்டக் கோள்களையும் படைக்கும் ரிஷிகளால்…
9.படைப்பின் பலனாய்ப் பக்குவப்படுத்தப்பட்ட உணர்வின் தெய்வ குணத்தின் “ஆண்டவனாக்கும்” வழிச் செயல்தான்…
10.“அண்டத்தின் சூட்சுமத்தில் ஆதி சக்தியின் உண்மைச் சக்தி – உருப்பெறும் நிலை…!”

இச்சரீரத்தின் உணர்வை… “மின் காந்த ஒளி சக்தியை” இப்பூமியின் பிடிப்பில் இச்சரீர வாழ்க்கையில் அடையும் சுகத்தால் உணர்வின் எண்ணம் ஆத்மாவை வளர்க்க உதவாது.

இச்சரீரத்தை இப்பூமியின் பிடிப்பிற்கு அடகு வைக்கும் மனித உணர்வினால் அடையப் போகும் நன்மை எதுவுமில்லை…!

ரிஷிகளின் சக்தியால் பல கோடி ஆண்டுகளாய் பலவற்றில் வளர்ந்து வலுவாகி உள்ள இவ்வுயிராத்மாவை… ஆத்ம உயிரின் வீரியத்தின் உண்மையை உணரும் எண்ணத்தில்.. மனிதன் தன்னைத் தானே உணரும் பக்குவத்தால்… ஆத்ம உயிரின் சுயநலத்தைக் கொண்டு பொது நலத்தை வளர்க்கும் சூட்சுமத்தை உணர முடியும்.

தான் உண்ணும் உணவிற்கு…
1.நெல்லை எடுத்து அதிலுள்ள உமியை ஊதிப் பிரித்து விட்டு
2.மணியை (அரிசி) எடுத்துப் பக்குவப்படுத்தி உண்ணும் மனிதன்
3.தான் எடுக்கும் எண்ணத்தின் உணர்வைப் பக்குவமாக்கி
4.ஆத்மாவின் ஒளியை வளர்க்கும் தன்மை ஏன் பெற முடியாது…?

தன்னில் உள்ள இறைத் தன்மையை… தெய்வமாக்கும் நற்குணம் கொண்ட பக்குவத்தால்
1.ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறைதான்
2.இங்கே உணர்த்தப்படுவதன் சக்தி நிலையின் உண்மை நிலை.

உங்கள் வாழ்க்கையில் எதிர்படும் சந்தேகங்களைப் போக்குவதற்குத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்

உங்கள் வாழ்க்கையில் எதிர்படும் சந்தேகங்களைப் போக்குவதற்குத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்

 

எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தை நீங்கள் கேட்டு அதைக் கடைப்பிடித்து வழி நடந்து கொண்டிருந்தாலும் உங்கள் உடலுக்குள் எத்தனையோ குணங்கள் எதிர்ப்பு உணர்வுகளைக் காட்டும்.

1.உங்களுக்குள் அவ்வாறு எழும் நிலைகளை மாற்றி
2.அந்தச் சந்தேக உணர்வுகளை நீக்கும் நிலைக்காகத்தான்
3.திரும்பத் திரும்ப யாம் உபதேசிப்பது.

அந்தக் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அந்த மெய் ஞானிகள் பெற்ற உணர்வுகளை மீண்டும் மீண்டும் ஆழமாகப் பதிவு செய்யும் பொழுது
1.இதுவே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
2.உங்களுக்குள் இருக்கக்கூடிய உள் பொருளைக் காண முடியும்.
3.உங்களுக்குள் நல்லதைப் பெற முடியும்.

அந்த நம்பிக்கையில்தான் இதை உபதேசிக்கின்றேன்.

குருநாதர் எமக்குக் காட்டிய அருள் வழிப்படி “என்னை விழித்திருக்கச் செய்த அந்த நிலையை…” நீங்களும் என்றும் விழித்திருந்து… தீமைகள் உங்களுக்குள் புகாது தடுத்துப் பழக வேண்டும்.

காரணம்… உங்களுக்குள் தீமைகளை அறிவிக்கச் செய்யும் நிலையில் “தீமை இது தான்…” என்று அது காட்டினாலும் அந்தத் தீமைகள் உங்களுக்குள் விளையாது நல்ல உணர்வின் தன்மையை வளர்த்து தீமைகளை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குள் விளைய வேண்டும்.

ஆகவே… தீமையை அகற்றிட்ட இருளைப் போக்கிட்ட அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் பொருள் கண்டுணர்ந்திடும் அந்த ஆற்றல் மிகுந்த சக்தியாக உங்களுக்குள் வளர வேண்டும் என்றுதான் எமது குரு அருளாசிப்படி
1.நீங்கள் அனைவரும் அதை அவசியம் பெற வேண்டும்…
2.நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள் என்ற தன்னம்பிக்கையில்
3.காலமானாலும்… கால நேரம் பார்க்காது உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
4.உங்கள் நல்ல உணர்வுடன் அருள் ஞானிகளின் உணர்வை இணைத்து இணைத்து
5.ஈஸ்வரப்பட்டர் அருள் ஆசைப்படி உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.

உடலைச் சக்கையாக்கி… “உயிரை மணியாக்கும்” பக்குவத்திற்கு நாம் வளர வேண்டும்

உடலைச் சக்கையாக்கி… “உயிரை மணியாக்கும்” பக்குவத்திற்கு நாம் வளர வேண்டும்

 

1.என்னுள்ளே நான்… என்ற நிலைக்கொப்ப
2.தன்னுள் உள்ள தன் உயிராத்மாவை
3.தன்னை இயக்கும் எல்லாமில் எல்லாமாய்ப் படர்ந்துள்ள இறை உயிரை
4.தன்னுள்ளுள்ள உயிர்த் தெய்வத்தைத் தான் வளர்க்க
5.இச்சரீரத்தைப் பதராக்கி… உயிரை மணியாக்க…
6.ஜீவ வளர்ச்சி ஓட்டத்தில் வளரும் காலத்தில்
7.வளர்ச்சியின் முதிர்வு நிலை முற்றிய பிறகு மணியைப் பிரித்து
8.”என்னுள்ளே நான்…” என்ற இறை தெய்வமான உயிர்த் தெய்வத்தை ஒளிர வைக்க முடியும்.

ஜீவ உணர்வின் எண்ண சரீரம் ஆத்ம உயிருக்கு உயர்வு நிலையின் எல்லாவற்றையும் கடந்து ஒளி சக்தியின் தெய்வநிலை பெறத்தக்க வழிக்கு வளர்க்கும் செயல் சரீர உருநிலை.

நெற் பயிர் வளர்ந்து முதிர்ந்து மணியை வெளிப்படுத்துவதைப் போன்று இவ்வுயிராத்மா உடலில் இயங்கும் பொழுதே… “இவ்வுடலைச் சக்கையாக்கி உயிரை மணியாக்கி வளரும் பக்குவத்திற்கு” நாம் வருதல் வேண்டும்.

மனிதனுக்குக் கிடைத்துள்ள எண்ணத்தின் ஞானத்தை ஒன்றை அறியக் கூடிய வளர்ச்சியை உயர்ந்த எண்ணத்தில்

இப்பூமி பிற கோள்களின் துணை கொண்டு சுழன்று கொண்டே ஓடிக் கொண்டே உள்ள ஓட்டத்தில் பிற கோள்களின் தொடர்பு கொண்டு தான் வளர்ந்து வளரக்கூடிய நிலை பெற்றது.

இந்தப் பூமியின் மண்டல ஓட்டத்திற்கொப்ப…
1.இப்பூமியில் வளரக்கூடிய நம் உயிராத்மாவையும் ஓர் மண்டலமாக உருவாக்கக் கூடிய தன்மைக்கு
2.எதையும் வளர்க்கவல்ல எண்ணத்தின் சைவ சித்தம் மனிதனின் உணர்வில் இருக்க வேண்டும்.

“மனிதனின் எண்ணம் தான்” வீரியம் கொண்டு இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் ஒன்றை வளர்க்கவும் அழிக்கவும் செயல் கொள்கின்றது. எதையும் சாதிக்கவல்ல சக்தி மனித ஆற்றல் திறமைக்கு உண்டு.

மனிதன் தெய்வமாகக் கூடிய வழி முறைக்கு எண்ணத்தைச் செலுத்தி இப்பூமிப் பிடிப்பின் இறுக்கத்திலிருந்து இப்பூமியின் சுழற்சியிலிருந்து விடுபடலாம்.

விஞ்ஞானிகள் இன்று தன் ஞானத்தால் கண்டுபிடிக்கும் விஞ்ஞானக் கருவிகளினால் வான மண்டலத்தில் உள்ள இரகசியங்களையும் ஒவ்வொரு கோள்களில் உள்ள உண்மைகளையும் அறிந்து பூமியில் மனித ஆத்மாக்களுக்கு வேண்டிய வளர்ச்சிக்கு மனித அறிவின் ஆற்றலை விஞ்ஞானத்தில் பெருக்க முயற்சிக்கின்றார்கள் அல்லவா..!

அந்தத் திறனைப் போன்று மனிதனும் தன் உயிராத்மாவைப் பிற கோள்களில் எண்ணத்தைச் செலுத்தி
1.அவ் எண்ணத்தின் தொடர்பை இச்சரீர உணர்வுடன் எடுக்க எடுக்க
2.இச்சரீரத்திலுள்ள உயிரணுக்கள் யாவையுமே எவ் அமிலத்தை இச்சரீர உணர்வுடன் அதிகமாக எடுக்கப் பழகிக் கொள்கின்றதோ
3.அத்தொடரின் வலுத் தன்மையால் இச்சரீரம் சக்கையாகி
4.ஆத்ம உயிர் தனித்துச் செயல்படக் கூடிய வளர்ச்சியால் இச்சரீரம் ஒளிச் சரீரமாகி
5.மற்ற ஈர்ப்பின் பிடிப்பில் இவ்வுயிராத்மா சிக்காமல் ஒளி நிலை பெறுகின்றது.

எவ்வித்து வளர்ந்தாலும் அவ்வித்தின் தொடர் அதனதன் ஜீவ வளர்ச்சியில் பலவாகப் பலன் தருகின்றது. மனித சரீரத்தின் வித்தின் உண்மைப் பலன் தன் பிறப்பில் பிறக்கக்கூடிய ஜீவ குழந்தைகள் மட்டுமல்ல… மனித சரீரத்தில் இம்மனிதனாய் ஆத்ம உயிர் ஜீவன் கொண்டு வளர… “பல கோடி கோடி ஜீவ அணுக்கள்” இச்சரீரத்தில் வளர்கின்றன.

ஓர் நெல் செடியாகி அதனின் பலனில் பல நெல்களைத் தருகின்றது. அதைப் போன்று
1.இச்சரீரத்தை இயக்கும்… “உயிராத்மாவை வித்தாக்கி”
2.உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வித்தின் பலன்களாக
3.உயிரின் பருமனை ஒளியாக்கக் கூடிய உயர் காந்த வளர்ச்சிக்குப் பக்குவப்படுத்துவதுதான்…!

தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய உயர் ஞானத்தின் மனோ வேகத்தை
1.மகரிஷிகள் காட்டிய சைவத்தின் சித்த குணமான நற்குணத்தைச் சம உணர்வுடன் கூடிய எண்ணத்தில் பக்குவப்படுத்தி
2.மின் காந்த சக்தியை இச்சரீரம் எடுக்கும் வழிமுறையில்
3.இவ்வுயிராத்மா இவ்வுடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களையும் பலனாக எடுத்து
4.தன் வளர்ச்சியின் வீரியம் பெற முடியும்.

தனக்குள் உள்ள உணர்வின் எண்ணத்தில் இருந்துதான் மனிதன் சக்தியைக் கூட்டி உயர்வு நிலைக்குச் செல்ல முடியும். இதனை உணர்ந்து பக்குவ முறையில் ஒவ்வொருவரும் பலன் பெறலாம்.

ஒளியைத் தான் நாம் உருவாக்க வேண்டுமே தவிர இருளை அல்ல…!

ஒளியைத் தான் நாம் உருவாக்க வேண்டுமே தவிர இருளை அல்ல…!

 

விஷம் எதிலுமே ஊடுருவி இயக்கும் சக்தி பெற்றது. எதனையுமே இயக்கக் கூடியது. விஷத்திற்குள் அடங்கி விட்டால் இருள் சூழ்ந்த நிலையே கடைசியில் வருகின்றது.

விஷத்தை நீக்கிடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் சேர்த்தால் ஒளியின் தன்மை அடைகின்றோம்.

ஆனால் மனித உடலில் விஷம் அதிகரித்தால் கலி… மீண்டும் பாம்பினங்களுக்குச் செல்லும் நிலையாகின்றது.

சூரியன் பாதரசத்தால் இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை எப்படிப் பெற்றதோ அது போல் ஆறாவது அறிவின் தன்மை கொண்ட மனிதன் ஏழாவது நிலையாக உருவாக்கப்படும் போது
1.உயிருடன் ஒன்றி உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது
2.அதன் வழி நாம் கல்கி ஆகின்றோம்… பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

சூரியன் ஒரு காலம் மடியலாம். ஆனால் அதே சமயத்தில் உயிரணுவாகத் தோன்றி மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் என்றும் ஒளியின் சுடராகப் பொங்கச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
1.எல்லோரையும் மகிழச் செய்யும் அந்த உயர்ந்த நிலையை மனித உடலில் இருந்து தான் பெற முடியும்
2.ஆறாவது அறிவால் தான் அதை உருவாக்க முடியும்.
3.அதைச் சீராகப் பயன்படுத்தினால் நாம் இந்த உடலுக்குப்பின் ஏகாதசி…!
4.எதிர்ப்பே இல்லாத நிலையாக பத்தாவது நிலையான ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.

அதை அடையத் தான் ஒவ்வொரு ஞானிகளும் முயற்சித்தனர்.

இப்பொழுது இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கும் இந்த உணர்வினை நீங்கள் நுகரும்போது
1.ஞானத்தை உங்களுக்குள் உருவாக்கி… அருள் உணர்வைக் கருவாக்கி
2.கலி என்ற நிலையை மாற்றி… கல்கியைப் பொங்கச் செய்ய வேண்டும்.

குரு காட்டிய அருள் வழியில் உங்கள் வாழ்க்கையை அமைத்து இருளை மாற்றி இந்த உடலுக்குப்பின் கல்கி என்ற நிலைக்கு வர வேண்டும். ஒளி உடலாக உருவாக்க வேண்டும் ஒளி உடலாக மாற்ற வேண்டும்.

இன்று மனிதனாக இருக்கின்றோம் வேதனை என்ற உணர்வானால் மனிதனல்லாத உருவாகின்றது… கலி. கலியுகத்தில் தான் வாழ்கின்றோம். நாம் கல்கியுகத்திற்குச் செல்ல வேண்டும்.

கலியில் தான்…
1.ஒன்றை நல்லதாகவும் உருவாக்க முடியும்
2.தீமையையும் உருவாக்க முடிகின்றது.
3.கலி கெட்டதும் அல்ல…!

நாம் பல வகைகளில் உருவாக்கினாலும் இந்தக் கலியில் நல்லதை உருவாக்கப்படும் போது கல்கி ஆகின்றோம். ஆகவே உருவாக்குவது என்ற நிலையானால் கல்கியைத் தான் உருவாக்க வேண்டுமே தவிர கலியை அல்ல…!

ஒன்பதாவது நிலையில் இருக்கும் நாம் தீமை புக விடாது தடுப்பது தான் கடவுளின் அவதாரம் “நரசிம்ம அவதாரம்…” அந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் பெறுவோம்.

உடலைப் பயன்படுத்தி உயிராத்மாவின் தரத்தை உயர்த்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

உடலைப் பயன்படுத்தி உயிராத்மாவின் தரத்தை உயர்த்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
நெல் குவியல் தெரிவதைப் போன்றும் அக்குவியலில் உள்ள நெல்லை ஒருவர் எடுத்துக் கையில் வைத்துத் தேய்த்துப் பதரை நீக்கி அரிசியான மணியை வாயில் போடுவதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்
நெல்லைப் பதம் பார்த்து நெல் காய்ந்து விட்டதா… அதை அரைத்துச் செயலுக்குக் கொண்டு வரலாமா…? என்பதற்காகவும் பதம் பார்த்திருக்கலாம். அல்லது நெல்லிலுள்ள பதரை நீக்கி அரிசியைச் சுவைக்கவும் பார்த்திருக்கலாம்.

முதலில் சொன்னது போல் நெல்லில் உள்ள மணியைப் பிரிக்க வேண்டும் என்றால் அந்த நெல் காய்ந்து பக்குவப்பட்டிருந்தால் தான் அதைச் செயலுக்குக் கொண்டுவர முடியும்.

அதைப் போன்று இவ்வுடலான நெல் பக்குவப்பட்டிருந்தால் தான் இவ்வுடலின் உயிராத்மா செயலுக்குக் கொண்டு வர முடியும்.

காய்ந்த நெல்லில் உள்ள உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகின்றோம்.
1.மணியான அரிசி உள்ளே இருக்கும் வரை நெல் என்று சொல்கிறோம்
2.நெல்லிலிருந்து அரிசி விடுபட்டவுடன் பதர் என்று அந்த உமியை ஒதுக்கி விடுகின்றோம்

அதே போல் தான்
1.உயிராத்மாவானது (உயிர்) இச்சரீரத்தில் இயங்கும் வரை மனிதன் என்ற நாமகரணத்துடன் செயல் கொள்கிறது.
2.உடலை விட்டு உயிராத்மா பிரிந்தவுடன் பதரைப் போன்று உடல் கழிக்கப்படுகின்றது.

உடலில் இருக்கும் உயிராத்மாவின் உண்மையின் ஒளி சக்தியின் செயலை… ஆத்ம உணர்வை அறியாமல்… எண்ணத்தின் ஓட்டம் ஒவ்வொருவருக்கும் தன் தேவையின் செயலுக்காகத்தான் தெய்வங்களை வணங்குவது என்ற நிலையில் இன்று உள்ளார்கள்.

தனக்கு மேல் உயர்ந்த ஞானிகளையும் ரிஷிகளையும் சந்தித்தால் கூடத் தன் உணர்வின் தேவைக்காக மட்டும் தான் அந்தச் சந்திக்கும் நிலையையும் பயன்படுத்த எண்ணுகின்றார்கள்.

அதே சமயத்தில் தனக்கு மேல் உயர்ந்தவர்களுக்கு ஓர் இன்னல் ஏற்பட்டால்…
1.இவர்களுக்கே இந்த நிலை…
2.நாம் எல்லாம் சாதாரணமானவர்கள்… நாம் என்ன செய்ய முடியும்…! என்ற எண்ணத்தில்
3.தன்னையே ஒதுக்கிக் கொண்டு… மீண்டும் பிறிதொரு ஈர்ப்புக்கே தன் எண்ணத்தைச் செலுத்தி
4.உடலே பிரதானம் என்று “தான்… தனது…” என்ற செயலுக்குத்தான்
5.மனித உணர்வின் தத்துவம் செயல் கொள்கின்றது இந்தக் கலியில்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் மற்ற கோள்களின் தொடர்பு கொண்டு… பல விதமான குண அமிலத்தைத் தனக்குள் எடுத்து… அதைத் தன் சக்திக்குகந்தாக்கி… மீண்டும் வெளிக்கக்கித் தன் வளர்ச்சியை வளர்த்து ஓடிக் கொண்டே உள்ளது.

அதைப் போன்று மனிதனின் உணர்வின் எண்ணம் சூரியனைப் போன்று…
1.தன் உணர்வுடன் மோதக்கூடிய எந்த எண்ணத்திற்கும் தான் அடிமையாகாமல் தனக்குள் அதைச் சேர்க்கும் பொழுது
2.தன்னிலிருந்து வெளிப்படும் அலையானது மாற்று எண்ணங்களைத் தனக்குள் பஸ்பமாக்கி
3.தன்னிலிருந்து வெளியாகும் உணர்வின் எண்ணம் சாந்தம் என்ற ஒளியுடன் சமைக்கப்படும் பொழுது
4.மனிதன் தெய்வ நிலை கொண்ட செயலுக்கு வந்துவிடுகின்றான்.

நெல்லில் மணி இருக்கும் வரை தான் நெல்லிற்குத் தரமுண்டு. அதைப் போன்று இவ்வுடலில் உயிராத்மா இருக்கும் வரைதான் உடலுக்குத் தரமுண்டு. ஆகவே
1.இவ்வுடலில் இருந்து உயிராத்மாவை ஒளி கொண்ட முத்தாகப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையை
2.நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல் கொள்ள வேண்டும்.

புது வைரஸ்கள் (MUTATED) உருவாகிறதா…? அல்லது உருவாக்கப்படுகிறதா…! என்று தெரிந்து கொள்ளுங்கள்

புது வைரஸ்கள் (MUTATED) உருவாகிறதா…? அல்லது உருவாக்கப்படுகிறதா…! என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

இயற்கையின் உண்மையின் உணர்வின் தன்மையை அகஸ்தியன் தனக்குள் வளர்த்துக் கொண்டவன். நஞ்சைத் தனக்குள் ஒளியாக மாற்றிக் கொண்டவன்.

அவன் கண்ட உண்மையின் உணர்வை நமக்குள் பெற்று “கல்கி…” என்ற நிலையில் ஒரு தெளிவான உணர்வை உருவாக்கத் தான் மீண்டும் மீண்டும் உபதேசிப்பது (ஞானகுரு).

ஒருவன் நமக்குச் செய்யக்கூடிய தவறை நாம் கூர்ந்து கவனிக்கின்றோம். பார்த்துப் பதிவான பின் “அவனை விடுவேனா பார்…!” என்ற அசுர உணர்வு வருகிறது.

ஆனால் அவன் நம்மைத் தாக்கவில்லை.. இருந்தாலும் தாக்கும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றான்… என்று வைத்துக் கொள்வோம்.
1.செவி வழி கேட்கின்றோம்
2.மூக்கு வழியாக நுகர்கின்றோம்
3.உயிரிலே பட்டதும் உணர்ச்சிகள் தூண்டுகின்றது
4.அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் படருகின்றது.

அப்பொழுது தீமையை உருவாக்கக் கூடியதாக மாறி விடுகின்றது. அதாவது நம் உடலில் உள்ள நல்ல குணங்களைக் கொல்லக்கூடிய சக்தியாக மாறுகின்றது. அதுவே “கலி…” என்ற நிலையாக வந்துவிடுகின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்கப்படும் போது
1.அது அந்த நஞ்சினை அடக்குகின்றது
2.உணர்வின் அறிவாக மாற்றுகின்றது… உணர்வின் தன்மை ஒளியாக மாறிக் கல்கி ஆகின்றது.

ஆகவே…
1.உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒளியாகி நாம் கல்கி ஆக மாறுவதா…?
2.அல்லது கலி என்ற நிலைகளில் தீமைகளை உருவாக்கி தீமையாக மாற்றுவதா…? என்று சற்று சிந்தியுங்கள்.

விஞ்ஞான உலகில் இன்று எத்தனையோ வகையான புது மிருக இனங்களை (கண்டுபிடிப்பு) உருவாக்குகின்றார்கள். ஆனாலும் அந்த மிருகங்களை உருவாக்க
1.எத்தனையோ உயிரணுக்களைக் கொல்கின்றார்கள்
2.பல விஷத்தின் தன்மைகளைக் கலக்கின்றார்கள்
3.புது உணர்வின் அணுக்களாக உருவாக்குகின்றார்கள்.

அத்தகைய அணுக்களின் சத்தை எல்லாம் சூரியன் கவர்கின்றது. விஞ்ஞான அறிவால் செயற்கை முறையில் மாற்றப்பட்ட உணர்வின் அணுக்கள் சூரியனால் கவரப்படும் பொழுது காற்றுடன் காற்றாக அவை கலந்து
1.மனித உடலில் பட்டால் கடும் நோயாக மாறிவிடுகிறது
2.மனிதன் உணவாக உட்கொள்ளும் தாவர இனங்களில் புது விதமான விஷக் கிருமிகளாக (VIRUS) உருவாகின்றது

தாவர இனங்களை உட்கொண்டு மடிந்தால் மீண்டும் மனிதனுக்குள்ளே வருகின்றது. மனித உடலிலே புதிய வியாதிகளாகத் தோன்றுகிறது.

தீமைகளை நீக்க… பூச்சியைக் கொல்ல மனிதன் கலியாகவே மாறி விடுகின்றான். அதைக் கொன்ற பின் அந்த விஷத்தின் தன்மை (MUTATION) உணவு வகைகளில் நமக்குள் வருகின்றது… கலி…!

தீமைகளை வளர்க்கும் தன்மையே வருகின்றது. நாளுக்கு நாள் கலி என்ற நிலையையே உருவாக்கும் நிலைக்கு மனிதன் வருகின்றான். மனிதனை மனிதன் அழித்திடும் உணர்வு வருகின்றது.

விஷத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது சிந்தனை இழக்கப்படுகின்றது.
1.மனிதனை உருக்குலைக்கும் உணர்வுகள் வருகின்றது
2.மனிதனை உருக்குலைத்தாலும்… உணர்வை உருக்குலையச் செய்யும் கலி என்ற தன்மைகள் வருகின்றது.

இதிலிருந்து மீள்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் இங்கே ஞாபகப்படுத்துகின்றோம். சூரியன் விஷத்தை நீக்கி இந்தப் பிரபஞ்சத்தை ஒளிமயமாக ஆக்குவது போல
1.அதிலே உயிரணு தோன்றி இத்தனையும் வடிகட்டியதோ
2.வடிகட்டிய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமானதோ
3.அதனின்று வரும் உணர்வினை நாம் நுகர்ந்தால் கல்கி ஆகலாம்

ஆனால் அதை மறுத்தால் நாம் கலி ஆகலாம்…!

ஆகவே இதில் எதைப் பெற வேண்டும்…? என்ற நிலையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுங்கள். அருளைப் பெருக்கினால் இருளைப் போக்கலாம்.

உயர் ஞான ஜோதிகளாக நாம் ஆக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

உயர் ஞான ஜோதிகளாக நாம் ஆக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு மனிதனுக்கும்…
1.தன் தன் உடல் தேவைக்குகந்த எண்ண ஓட்டம் தான் ஓடிக் கொண்டே உள்ளதேயன்றி
2.தன் ஆத்மாவின் உயர்வை… உண்மையான சேவையில் உணரும் பக்குவம் இக்கலியில் வளரவில்லை.

இந்தப் பூமியின் சக்திக்கு வலு கூட்டக்கூடிய வலுத் தன்மைக்கு… இன்றைய இக்கலியின் உணர்வில் மனித ஆத்மாவின் சேவை உணர்வு செயல்படல் வேண்டும்.

சேவை என்பது… தான் பெற்ற உயர் ஞானத்தில் அறியும் உண்மை ஒளி சக்தியைக் கொண்டு ஒன்றை உருவாக்கி வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் சேவையை மனிதன் பெற வேண்டும்.

உடலின் சுகத்திற்குச் சேவையும்… புகழின் பேராசைக்குச் செல்லக்கூடிய சேவையும் உண்மையின் வளர்ச்சியின் சேவையல்ல…!

மனிதனின் உணர்வின் எண்ணத்தை ஒளியாக்கக் கூடிய ஆத்ம பலம் பெற வேண்டும்.
1.எந்த மனிதனின் உணர்வையும்… பாதிக்கக்கூடிய எண்ணத்தையும்
2.அழிவின் குரோதத்தையும் எடுக்காமல்
3.தன் சரீரத்தையே சம குணம் கொண்ட நற்குணத்தின் சாந்தத்தைப் பெறவல்ல தன்மை பெற வேண்டும்.

இப்படிப்பட்ட செயல் வழியில் இவ்வாத்மாவை வளர்த்திடும் பக்குவத்தில் எந்த ஒரு ஈர்ப்பலைக்கும் ஆத்மா சிக்காமல் “ஒளி சரீரமாகக் கூடிய முதிர்வு நிலையை…” ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

இப்பூமியில் வளரக் கூடிய தாவரங்களிலும் மற்ற கனி வளம் ஒவ்வொன்றிலுமே முதிர்வு நிலைக்குச் சேருவது மீண்டும் ஆவியாகக் கூடிய திரவக எண்ணை வித்து நிலை.

1.இப்பூமியையே சத்தாக்கி
2.அச்சத்தின் வளர்ச்சியின் முதிர்வு நிலைதான்
3.இப்பூமியில் இருந்து நாம் எடுக்கும் எண்ணை வித்துக்கள் யாவையும்.
4.இப்பூமியின் உலோகங்களான உலோகச் சத்தையும் வளர்ச்சியின் முதிர்வில் எடுத்து வளர்ந்தது தான் அந்த எண்ணை வித்து.

ஆவியாகி… குளிர்ந்து நீராகி… நீரின் தொடர்பு கொண்டு… தான் எடுக்கும் அமிலத்தில் ஓர் செடி வளர்ந்ததென்றால் அந்தச் சத்தை வித்தாக்குகின்றது.

சாதாரணமாக நீரை எடுத்து உறிஞ்சித்தான் கடலைச் செடியே வளர்கின்றது. அதன் வித்தான நிலக்கடலையிலிருந்து எண்ணைச் சத்தைப் பிரித்தெடுத்த பிறகு அந்த எண்ணை நீருடன் ஒட்டுவதில்லை.

மேலும் அந்த எண்ணையில் ஊன்றிக் கவனித்தோமென்றால்
1.நீரின் மேல் சிறிது அந்த எண்ணெயை விட்டால்
2.வானவில்லில் காணக்கூடிய ஏழு நிறங்களையும் இவ் எண்ணையிலும் காணுகின்றோம்.

அதாவது… நீரிலிருந்து உருவான தாவரங்களின் முதிர்வு வளர்ச்சியே
1.மீண்டும் நீருடன் ஒட்டாமல் எண்ணையாகி
2.எரி நிலையில் ஆவியாகக் கூடிய வலுப் பெற்று விடுகின்றது.

அதைப் போன்று தான் மனிதனின் உணர்வின் எண்ணத்தால்
1.விண்ணிலிருந்து வரும் மின் காந்த சக்தியைச் சம குணமுடன் எடுத்து ஆத்ம பலத்தை வளர்த்து
2.இவ்வாத்மாவையே ஒளியாக்கக்கூடிய உயர் ஞானத்தின் ஒளி ஆத்மாக்களாக ஆக முடியும்
3.ஒளியாகும் பருவம் பெற்றது தான் (மனிதர்கள்) இப்பூமியின் வித்துக்களப்பா…!

இதை அறிந்து நீங்கள் ஒவ்வொருவரும் உயர் ஞான ஜோதிகளாக உருவாகுங்கள்…!