புது வைரஸ்கள் (MUTATED) உருவாகிறதா…? அல்லது உருவாக்கப்படுகிறதா…! என்று தெரிந்து கொள்ளுங்கள்

புது வைரஸ்கள் (MUTATED) உருவாகிறதா…? அல்லது உருவாக்கப்படுகிறதா…! என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

இயற்கையின் உண்மையின் உணர்வின் தன்மையை அகஸ்தியன் தனக்குள் வளர்த்துக் கொண்டவன். நஞ்சைத் தனக்குள் ஒளியாக மாற்றிக் கொண்டவன்.

அவன் கண்ட உண்மையின் உணர்வை நமக்குள் பெற்று “கல்கி…” என்ற நிலையில் ஒரு தெளிவான உணர்வை உருவாக்கத் தான் மீண்டும் மீண்டும் உபதேசிப்பது (ஞானகுரு).

ஒருவன் நமக்குச் செய்யக்கூடிய தவறை நாம் கூர்ந்து கவனிக்கின்றோம். பார்த்துப் பதிவான பின் “அவனை விடுவேனா பார்…!” என்ற அசுர உணர்வு வருகிறது.

ஆனால் அவன் நம்மைத் தாக்கவில்லை.. இருந்தாலும் தாக்கும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றான்… என்று வைத்துக் கொள்வோம்.
1.செவி வழி கேட்கின்றோம்
2.மூக்கு வழியாக நுகர்கின்றோம்
3.உயிரிலே பட்டதும் உணர்ச்சிகள் தூண்டுகின்றது
4.அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் படருகின்றது.

அப்பொழுது தீமையை உருவாக்கக் கூடியதாக மாறி விடுகின்றது. அதாவது நம் உடலில் உள்ள நல்ல குணங்களைக் கொல்லக்கூடிய சக்தியாக மாறுகின்றது. அதுவே “கலி…” என்ற நிலையாக வந்துவிடுகின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்கப்படும் போது
1.அது அந்த நஞ்சினை அடக்குகின்றது
2.உணர்வின் அறிவாக மாற்றுகின்றது… உணர்வின் தன்மை ஒளியாக மாறிக் கல்கி ஆகின்றது.

ஆகவே…
1.உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒளியாகி நாம் கல்கி ஆக மாறுவதா…?
2.அல்லது கலி என்ற நிலைகளில் தீமைகளை உருவாக்கி தீமையாக மாற்றுவதா…? என்று சற்று சிந்தியுங்கள்.

விஞ்ஞான உலகில் இன்று எத்தனையோ வகையான புது மிருக இனங்களை (கண்டுபிடிப்பு) உருவாக்குகின்றார்கள். ஆனாலும் அந்த மிருகங்களை உருவாக்க
1.எத்தனையோ உயிரணுக்களைக் கொல்கின்றார்கள்
2.பல விஷத்தின் தன்மைகளைக் கலக்கின்றார்கள்
3.புது உணர்வின் அணுக்களாக உருவாக்குகின்றார்கள்.

அத்தகைய அணுக்களின் சத்தை எல்லாம் சூரியன் கவர்கின்றது. விஞ்ஞான அறிவால் செயற்கை முறையில் மாற்றப்பட்ட உணர்வின் அணுக்கள் சூரியனால் கவரப்படும் பொழுது காற்றுடன் காற்றாக அவை கலந்து
1.மனித உடலில் பட்டால் கடும் நோயாக மாறிவிடுகிறது
2.மனிதன் உணவாக உட்கொள்ளும் தாவர இனங்களில் புது விதமான விஷக் கிருமிகளாக (VIRUS) உருவாகின்றது

தாவர இனங்களை உட்கொண்டு மடிந்தால் மீண்டும் மனிதனுக்குள்ளே வருகின்றது. மனித உடலிலே புதிய வியாதிகளாகத் தோன்றுகிறது.

தீமைகளை நீக்க… பூச்சியைக் கொல்ல மனிதன் கலியாகவே மாறி விடுகின்றான். அதைக் கொன்ற பின் அந்த விஷத்தின் தன்மை (MUTATION) உணவு வகைகளில் நமக்குள் வருகின்றது… கலி…!

தீமைகளை வளர்க்கும் தன்மையே வருகின்றது. நாளுக்கு நாள் கலி என்ற நிலையையே உருவாக்கும் நிலைக்கு மனிதன் வருகின்றான். மனிதனை மனிதன் அழித்திடும் உணர்வு வருகின்றது.

விஷத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது சிந்தனை இழக்கப்படுகின்றது.
1.மனிதனை உருக்குலைக்கும் உணர்வுகள் வருகின்றது
2.மனிதனை உருக்குலைத்தாலும்… உணர்வை உருக்குலையச் செய்யும் கலி என்ற தன்மைகள் வருகின்றது.

இதிலிருந்து மீள்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் இங்கே ஞாபகப்படுத்துகின்றோம். சூரியன் விஷத்தை நீக்கி இந்தப் பிரபஞ்சத்தை ஒளிமயமாக ஆக்குவது போல
1.அதிலே உயிரணு தோன்றி இத்தனையும் வடிகட்டியதோ
2.வடிகட்டிய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமானதோ
3.அதனின்று வரும் உணர்வினை நாம் நுகர்ந்தால் கல்கி ஆகலாம்

ஆனால் அதை மறுத்தால் நாம் கலி ஆகலாம்…!

ஆகவே இதில் எதைப் பெற வேண்டும்…? என்ற நிலையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுங்கள். அருளைப் பெருக்கினால் இருளைப் போக்கலாம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply