ஈசனுக்கு அபிஷேகம் எப்படிச் செய்ய வேண்டும்…? என்று குருநாதர் உணர்த்தினார்

ஈசனுக்கு அபிஷேகம் எப்படிச் செய்ய வேண்டும்…? என்று குருநாதர் உணர்த்தினார்

 

பள்ளியிலே ஆசிரியராகப் போவோர் அனைவருமே பாட நிலையை எப்படிப் பிறருக்கு போதிப்பது…? என்றும் அவர்கள் குணங்களை எப்படிச் சீர்படுத்துவது…? என்றும் செயலாக்குவார்கள்.

அதைப் போல நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண்ணின் ஆற்றலைத் தான் பருகினாலும் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் வழியினை எமக்கு (ஞானகுரு) உபதேசித்து அருளினார்.

1.அந்தப் பண்படுத்தும் பருவம் வரும்போது உயர்ந்த ஞானத்தின் வித்தை அவர்களுக்குள் எப்படி ஊன்றச் செய்வது…?
2.ஞானத்தை வளர்க்கும் நிலைக்கு அவர்கள் நினைவலைகளை எப்படிக் கூட்டச் செய்வது…?
3.ஞானிகளின் அருள் உணர்வுகளை ஊழ் வினையாக அவர்களுக்குள் எப்படிப் பதிவு செய்ய வேண்டும்…? என்று எனக்கு உணர்த்தினார்.

ஆகவே மக்களை இயக்கும் உயிரான ஈசனை நீ வணங்கு…!
1.அவர்களைப் படைப்பதும்…
2.அவர்கள் எண்ணியதை இயக்குவதும்… எண்ணியதை உடலாக்குவதும்
3.உடலில் விளைந்ததை எடுத்துச் செல்வதும்
4.விளைந்த உணர்வுகளுக்கொப்ப அடுத்த உடலை உருவாக்குவதும் உயிரே.

பிறர் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்… அந்த மெய் ஞானியின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று நீ எண்ணும் போது “அதை நீ பெறக் கூடிய தகுதி பெறுகின்றாய்…!”

ஆகவே அந்த ஞானிகளின் உணர்வை நீ பெற்று அதன் பின் அவர்கள் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வு கொண்டு உபதேசத்தின் வாயிலாக ஊழ்வினையாகப் பதிவு செய்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் ஆற்றலை அவர்களுக்குள் ஆழமாக ஊன்றி நினைவலைகளை அங்கே அந்த ஞானிகளுடன் அவர்களை ஒன்றச் செய்யும் பொழுது தான் அவர்களும் அதைப் பெறும் தகுதி பெறுகின்றனர்
அவ்வாறு பெறும் தகுதியை நீ ஏற்படுத்தி
1.அவர்கள் பெற வேண்டும் பெற வேண்டும் என்று அவர்களை நீ பிரார்த்திக்கும் போது
2.அவரை வளர்த்த அந்த உயிருக்குள் உயர்ந்த உணர்வுகள் அபிஷேகமாகிறது.

அந்த ஒவ்வொரு உயிரும்… உடலை அமைத்துக் கொண்ட நிலைகளில் தனது அவாவினாலும் ஆசையாலும் எந்த உணர்வின் தன்மை அந்த உடலுக்குள் ஆசை பாசம் என்ற நிலையில் பிறரைக் காக்க வேண்டும் என்ற நல்ல உணர்வை எடுத்தனரோ…
1.அப்படி இரக்க உணர்வு கொண்டோருக்குள் பிறிதொரு தீய உணர்வுகள் சென்று
2.அதே உணர்வுகள் அவர்களுக்குள் மீண்டும் ஆன்மாவாக மாறி
3.அந்த ஆன்மாவிலிருந்து அவர்கள் சதா சுவாசிக்கும் பொழுது
4.அந்த உயிரான ஈசனுக்கு அவர்களை அறியாமலேயே தீய உணர்வுகளை அபிஷேகிக்கின்றனர்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தச் சுடு தண்ணீரை மேலே ஊற்றினால் எப்படியோ… மிளகாயைப் போட்டு நீரைக் காய்ச்சி அதை நம் மேல் ஊற்றினால் எப்படி எரிகின்றதோ… அதைப் போல எந்தெந்தப் பொருள் இருந்தாலும் அதை அரைத்து நீருடன் கலந்து நாம் மேலே ஊற்றும் போது நம் உடல் எப்படி எரிகின்றதோ… எப்படி வேதனைப்படுகின்றோமோ… இதைப் போலத்தான்
1.இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வின் அணுக்களுக்கு எதிர் நிலையாகும் போது உடலில் எரிவது போல
2.இந்த உடலை இயக்கும் உயிருக்கும் அந்த உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது அங்கே எரிச்சல் ஏற்பட்டு
3.உடல் முழுவதும் எரிச்சலும் நல்ல எண்ணங்களை எண்ண முடியாத நிலையும்
4.அந்த எரிச்சலான உணர்வுகள் உடலான சிவனுக்குள் அந்த எரிச்சலை ஊட்டும் தன்மையாக அந்தச் சக்திகள் மாறுகின்றது.

அவ்வாறு ஆகாதபடி உங்கள் உயிரான ஈசனை மகிழச் செய்ய உடலான சிவனுக்கு அமுதை ஊட்ட… குரு காட்டிய அருள் வழிப்படி நீங்கள் எல்லோரும் அந்த மாமகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும். அதை நீங்கள் பெற்று வாழ்க்கையில் அறியாது வந்த அந்த்த் தீமைகள் அனைத்தையும் உங்களுக்குள் வளராது நிறுத்த வேண்டும் என்பதற்குத் தான் இந்த உபதேசம்.

ரிஷிபத்தினியின் சக்தி – ஈஸ்வரபட்டர்

ரிஷிபத்தினியின் சக்தி – ஈஸ்வரபட்டர்

 

நீர் சக்தி இல்லை என்றால்… நெருப்பு எரிய சக்தி இல்லை. நெருப்பாக ஆவி கொண்டு (உஷ்ண அலை) நீர் நிலை பெறாவிட்டால்… நீருக்கும் வளர்ச்சி இல்லை.

தனித்த சக்தி.. தனி அணு… தனித்த ஒன்றுக்கு… எப்படிச் செயல் இல்லையோ அதைப் போன்று ஆத்ம சக்தியின் சித்து வளர்ப்பிற்கு ஆண் பெண் இயக்கத் தொடர்பு ஆத்மக் கூட்டு நிலை செயல் கொள்ளும் வளர்ப்பு நிலை அவசியம் வேண்டும்.

ரிஷிபத்தினி… ரிஷி சக்தி… என்ற கூட்டு ஐக்கிய ஆத்ம தொடர் சித்து பெறும் தம்பதியின் வழித் தொடரினால் தான்
1.உணர்வின் எண்ணத்தால் செயல் கொள்ளும் படைப்புத் தொடர் ஆத்ம அணு வளர்ப்பின் தொடர் அலையை
2.இன்று நம் பூமியில் உள்ள மனித சக்தியைப் போன்ற தொடர் அலையை வழிப்படுத்தும் வளர் நிலைக்கு
3.பிறிதொரு மண்டலத்தில் இதைப் போன்று வளர வேண்டிய நிலை ஏற்பட வேண்டிய தொடருக்கே
4.இத்தொடர் நிலை கொண்ட சக்தி நிலை ரிஷித் தன்மை செயல்பட வேண்டும்.

படர்ந்து கொண்டேயுள்ள ஆவி அமிலம் திடம் கொண்டு அண்டசராசர அனைத்துக் கோடி சுழற்சியிலும் மாறிக் கொண்டே வழித் தொடர் கொள்ளும் ஒவ்வொன்றின் நிலை அனைத்திற்குமே வளர்நிலை தொடர் வளர்ச்சிக்கு “ரிஷித் தன்மை கொண்ட அலைத் தொடர் வளர்ப்பு தேவை…!”

அந்த வளர்ப்பைக் கொண்டு எச்சக்தி நிலையையும் உயர்வுபடுத்திச் செயலாக்கும் வளர் சக்தியின் சக்தியே ஆண் பெண் என்ற எண்ண சக்தியில் மனித வளர்ப்பு வார்ப்பில் உருவாக்கும் தொடர் அலையில் தான்

நாம் வாழும் இந்தப் பூமியே “சிவ சக்தி” என்ற இரண்டு ஆத்மாக்களின் தொடர்பில் உருவாகிப் பல கோடி ஆண்டுகளாகத் தன் உருவின் உருக்களை வளர்த்துக் கொண்டுள்ளது.

அப்படிப்பட்ட உருவின் உருவைக் கொள்ளும்
1.உயர் ஆத்ம தொடர்பு – ஆண் பெண் ரிஷித் தன்மையின்
2.வழித் தொடர் ஆத்மாக்களை வளர் கொள்ளும் செயல் தன்மை
3.அரிதிலும் அரிதாகத்தான் இன்று வரை செயல்பட்டுள்ளது.

இதைப் படிப்போர் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் பெண் தொடர்பு ஆத்ம தியான சித்தைப் பெற்று… வாழ்க்கையுடன் ஒன்றிய கூட்டு ஐக்கிய தியான வளர்ச்சியால்…. இந்தப் பூமியின் சக்தியைப் போன்று.. நம் சூரியக் குடும்பத்தின் சுழல் கொண்டு மிதந்து ஓடும் மண்டல சுழற்சி ஒவ்வொன்றிலுமே… அதன் சக்தி நிலைக்கொப்ப “அதன் வளர் சக்தியின் வளர்ப்பிற்கு வழி செய்யலாம்…!”

நம் பூமியைத் தவிர சூரியக் குடும்பத்தில் வளர்ந்த மற்ற மண்டலங்கள் விஷத் தன்மை கொண்டதாகத்தான் இன்றைய நிலையில் உள்ளது.

இதே சுழற்சி நீடித்து நம் பூமியும் இன்றுள்ள விஷத் தன்மையில் (செயற்கை என்ற காந்த மின் சக்தியைப் பிரித்தெடுத்ததன் விஷத்தால்) சுழன்றது என்றால்
1.இக்கலி மாற்றத்தில் வரப் போகும் கல்கியில்
2.தன் ஞானம் மிஞ்சாது… விஞ்ஞானம் எஞ்சி நிற்கும்.

ஆகவே ஒவ்வொரு ஆத்மாவுமே தன்னுள் உயர் சக்தியை உருவாக்குங்கள் “ரிஷிபத்தினி என்ற ரிஷிச் சக்தியை…!”

உயிராத்மாவுக்குத் தேவையான உணவைக் கொடுப்பது எப்படி…? ஈஸ்வரபட்டர்

உயிராத்மாவுக்குத் தேவையான உணவைக் கொடுப்பது எப்படி…? ஈஸ்வரபட்டர்

 

ஜீவன் கொண்ட ஒவ்வொரு செயலுமே தன் ஜீவித உணவை எடுத்து எப்படி வளர்கின்றதோ அதைப் போன்றே இவ் ஆத்ம வலுத் தன்மைக்கு வலுக்கூடிய பிறகு… அதுவே ஒளிரும் தன்மையில் தனித்து இயங்கக்கூடிய வழித் தொடருக்கு “உணவு நிலை தேவை…!”

அதைப் பெறும் வழி முறை எப்படி…?

கல் மண் தாவரங்கள் உலோகங்கள் திரவகங்கள் ஜீவராசிகள் ஒவ்வொன்றுக்கும் ஜீவ சக்தியுடன் வாழும் காலத்தில் அது அதற்குகந்த உணவு நிலையை உட்கொண்டு ஜீவத் துடிப்புடன் வாழ்கின்றது.

கல்லும் மண்ணும் உலோகமும் திரவகமும் தாவர இன வர்க்கங்கள் எல்லாமே வளரும் பிடிப்பிலிருந்து எடுத்தவுடன் அதனுடைய வளர்ச்சி நிலை நின்று விடுகின்றது.

இப்படி அதனை உருமாற்றிச் செயல்படுத்தும் ஜீவனற்ற மாற்று நிலைக்கு உட்படுத்தியவுடன் அதன் வளர்ப்பு நின்று ஜட பிம்பப் பொருளாக கரையும் ஆவி நிலைக்கு உட்படும் வழித் தொடருக்குச் சென்று விடுகின்றது.
1.இதே போல் தான் ஜீவராசிகளின் உயிர்ச் சக்தியும்
2.உயிர் ஆத்மா பிரிந்தவுடன் திடப் பொருளாகி உணவு உட்கொள்ளும் நிலை மாறி ஆத்மா பிரிந்து செல்கிறது.

ஜீவ சக்தி கொண்ட ஒவ்வொன்றுமே தன் வளர்ப்பின் வளர்ப்பிற்கு உணவை உட்கொண்டு வாழ்வதைப் போன்று அழியாத நிலை என்னும் பிறவி இல்லா நிலை பெறும் சக்திக்கும் அதன் வளர்ச்சி வளர் கொள்ள உட்கொள்ளும் (உணவு) வழித் தொடர் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

வளர் தன்மைக்கு ஆண் பெண் அமிலச் சேர்க்கை ஜீவத் துடிப்பு எப்படி அவசியமோ அதைப் போன்றே
1.ஆத்மாவைச் சரீரத்திலிருந்து பிரித்துச் செயல்படுத்தும் வழி முறைக்கு
2.உடலுக்கு வேண்டிய உணவை உட்கொள்வது போன்றே
3.ஆத்மாவிற்கான உணவைச் செயல்படுத்தும் வழி முறை செயல் தான் “அஷ்டமா சித்து” கொண்ட வளர் நிலை.

பலவற்றில் இருந்து விளைந்து உயர்வின் முற்றிய தன்மையான மனித சக்தியின் எண்ண உணர்வு சொல் செயல் ஆற்றல் கொண்ட ஆத்ம சரீர சக்தியில் இருந்து தான் மனிதச் சக்திக்கு அடுத்த வளர்ப்பு சக்தியான தன் ஆத்மாவைப் பிரித்துச் செயல்படுத்தும் வழி முறை வளர்ச்சி நிலைக்குச் செல்ல முடியும்.

அதற்குரிய ஆரம்பத் தொடர் உணவு நிலையாக… ஆத்மா பெறும் நிலை எண்ணத்தைச் செலுத்திக் காற்றலையின் தொடர்பிலிருந்து தன் சுவாச ஈர்ப்பிற்கு நறுமண அலைத் தொடர்பையும் கனிகளின் சுவை அலையையும் பெற்று அச்சுவைகளை உணவாக எடுக்கும் வழித் தொடரை ஆத்மா பெறுகின்றது.

1.காந்த மின் அலையின் வார்ப்பு சக்தியை ஜெபத்தால் எடுக்கும் ஞான சக்தியில்
2.தன் ஆத்மாவைத் தானே காணக்கூடிய வழி முறை பெற்றவுடன்
3.சரீர இயக்கத்திலிருந்தே உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி உணவு எடுக்கும் வழி முறை பெற்று
4.அவ்வழி முறைத் தொடர்பில் இருந்து ஆத்மா தனித்து இயங்க
5.ஆத்மாவுக்கந்த ஆத்ம அலைத் தொடரில் தொடர்பு கொண்டு
6.ஆத்மாவிற்கும் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பலையின் ஈர்ப்பலையின் ஈர்ப்பிலிருந்தே தன் ஆத்மாவிற்கு உணவெடுத்துக் கொள்கின்றது.

வலுக் கொண்ட நிலையில் தனித்து இயங்கும் ஆத்மாவின் செயல் ஒன்றை அறிய… அணுவுக்குள் அணுவாக… இச்சரீர பிம்ப இயக்கத் தொடர்புடன்…
1.சரீரத்தில் இருந்து எண்ணத்தை வெளிப்படுத்திய ஆத்மா செயல் கொள்ளும் வழித் தொடரில் மோதும் பொழுது…
2.இச்சரீர சுவாச ஈர்ப்பிற்கு அவ் அணு அலை வளர்ச்சி கொண்ட
3.சேமித காந்த நுண் அலை சுவாசத்தின் உணர்வில் சமைத்து
4.எலும்புகளின் உராய்வு கொண்டு – ஆத்மாவின் செயலுடன் ஒன்றுகின்றது… “உணவாக…!”

இத்தகைய நிலை பெற்றால் ரிஷிகளின் தொடர்பலையுடன் ஒன்றிட முடியும். அவர்கள் பெற்ற வளர்ச்சியையும் பெற முடியும்.

நாம் அடிபணியச் செய்ய வேண்டியது எதை…? தலை நிமிர்ந்து பார்த்துப் பெற வேண்டியது எதை…?

நாம் அடிபணியச் செய்ய வேண்டியது எதை…? தலை நிமிர்ந்து பார்த்துப் பெற வேண்டியது எதை…?

 

யாம் (ஞானகுரு) உங்களுக்கு ஆசீர்வாதம் கொடுக்கும் பொழுது
1.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.உங்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
3.அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நீங்கள் செல்ல வேண்டும்
4.இந்த மெய் வழி உங்களுக்குள் வளர வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறேன்

அந்த நேரத்தில் அந்த உணர்வின் சக்தியைப் பெற வேண்டும் என்று அதையே நீங்களும் ஏங்கிப் பெற வேண்டும்.

உதாரணமாக மைக்குக்கு முன்னாடி வந்து நேராகப் பேசினால் தான் அந்த ஒலி அதன் மூலம் பதிவாகின்றது. மைக்கைத் திருப்பி வைத்து விட்டால் எந்தச் சப்தமும் வராது.

அதைப் போலத் தான்
1.உங்களுடைய ஏக்க உணர்வுகள்
2.நான் கொடுக்கும் ஆசியுடன் அதே எண்ணத்துடன் ஏங்கி இருந்தால்தான் அது பதிவாகும்.
3.ஆகவே மகரிஷிகளின் ஆற்றலைப் பதிவு செய்வதற்குத் தான் உங்களுக்கு அந்த ஆசிர்வாதமாகக் கொடுப்பது.

ஆனால் உங்கள் தாய் தந்தையரிடம் மட்டும் நீங்கள் பாதம் பணிந்து ஆசிர்வாதம் பெற வேண்டும்.

பள்ளிக்குச் சென்றாலும் இங்கே குருவிடம் வரும் பொழுதும் அது எல்லாம் குருவின் தன்மை தான். நல்வழி செல்வதற்கும் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெறுவதற்கும் வழி காட்டுகின்றோம்.

1.ஞானிகளைப் பற்றி யாம் உங்களுக்கு ஆசி கொடுக்கும் போது
2.ஏக்க உணர்வுடன் நேர்முகமாகப் பார்த்து நீங்கள் பதிவு செய்து கொள்வதுதான் முறை.

ஆனால் பெரியவர் என்று ஒருவரை நாம் வணங்குகிறோம் என்று சொன்னால் அந்தப் பெரியவரின் உணர்வுகளை நமக்குள் பதிந்து கொண்டால் தான்… அது பெரிதாக நமக்குள் வேலை செய்யும். பெரியவருக்கு வணக்கம் செய்கிறேன் என்று நாம் தலை குனிந்து செயல்படுத்துவது அல்ல.

1.தலை நிமிர்ந்து நேராகப் பார்த்து…
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நுகர்ந்து அதை உடலுக்குள் செலுத்தி
3.தீமை பயக்கும் உணர்வுகளை அடிபணியச் செய்வதற்குத்தான் யாம் ஆசி கொடுக்கின்றோம்
4.இதை நீங்கள் பழகிக் கொண்டால் அந்த அருள் சக்திகள் உங்களுக்குள் சுலபமாக வரும்.
5.குருவின் ஆசி என்றுமே உறுதுணையாக இருக்கும்.

நல்வழி பெறும் மார்க்கத்தை உங்களுக்குள் பதிவு செய்வதற்குத் தான் இதைப் பதிவாக்குகின்றேன். பதிவானதை நீங்கள் திரும்ப எண்ணி அதை ஏங்கிப் பெற்றால் அது நல்வழி காட்டுகின்றது.

ரேடியோ பேட்டியில் எந்த அலை வரிசையைப் பதிவு செய்கிறோமோ அதைத்தான் அது இயக்கும்.

அதைப்போல உங்களுக்குள் உயர்ந்த கருத்துக்களை பதிவு செய்யும்போது அதை நீங்கள் திருப்பி எண்ணினால்
1.அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் வழிகாட்டியாக வரும்… உங்கள் செயலின் தன்மையும் நல்லதாகும்.
2.உங்கள் உடலுக்குள் அது மகிழ்ச்சி பெற செய்யும் சக்தியாக வளரும்.

அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று சதா தியானிப்பது தான் என்னுடைய வேலை. மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று யாம் தியானிக்கும் பொழுது… எந்தெந்த உயர்ந்த எண்ணங்களை எந்தெந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களோ அது எல்லாம் எனக்குள் விளைகின்றது.

நீங்களும் அதைப் போல எண்ணி
1.உங்கள் குழந்தைகள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
2.என் அம்மா அப்பா ஆரோக்கிய நிலை பெற வேண்டும்
3.என் மூதாதையர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும்
4.எங்களை பார்க்கும் பொழுது மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று எண்ணுங்கள்.

எந்தக் குறைகளையும் காணாதபடி இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்… குறை என்பதே நம்மை விட்டு அகன்றுவிடும். குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்திலாவது இதைப் பழகிக் கொள்ளுங்கள்.

நான் எதை எல்லாம் எண்ணுகின்றோமோ நம் உயிர் அதைத் தான் படைக்கின்றது எதை எண்ணுகின்றோமோ அதை உடலாக மாற்றுகின்றது. அது போல்
1.இங்கே கொடுக்கும் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்கினால்
2.மீண்டும் நினைக்கும் பொழுதெல்லாம் அதுவே நம்மை இயக்கத் தொடங்கும்.

“உயர்ந்த எண்ணத்தை எடுக்க வேண்டிய முறை…” – ஈஸ்வரபட்டர்

“உயர்ந்த எண்ணத்தை எடுக்க வேண்டிய முறை…” – ஈஸ்வரபட்டர்

 

நம் எண்ணத்தின் உயர்வினால் பெற்ற ஆத்ம பலம் கொண்டு நாம் செலுத்துவது எல்லாமே… நாம் எடுத்த ஜெப உணர்வின் நற்குண எண்ண அலை வெளிப்படும் பொழுது…
1.எவ்வளவு கொடிய எண்ணம் கொண்ட குரோதம் கொண்டவனாக ஒருவன் நம்மைச் சந்தித்து எதிர்பட்டாலும்
2.அந்தக் கொடிய எண்ணத்தைக் கொண்டவனின் குரோத நிலை
3.நாம் வெளிப்படுத்தும் சாந்தத் தன்மையினால் அண்ட முடியாது.

பதட்டம் சோர்வு சங்கடம் சலிப்பு போன்ற உணர்வு நிலைக்கே இடம் தரா ஆத்மாவாக நம் ஆத்மா வலுப் பெற்ற தன்மையாக இருந்தால் எதிர் நிலை கொண்ட எந்த உணர்வு எண்ணமும் நம்மைப் பாதிக்காது.

குரோதத்தாலும் வஞ்சனையினாலும் பதட்டம் கொண்ட சோம்பல் கொண்ட எச்சுழற்சி வட்ட ஈர்ப்பில் உள்ளவராக இருப்பினும் அவைகளும் நம்மைப் பாதிக்காது.

நாம் பெற்ற அந்த நற்குண வலுத் தன்மையினால்
1.எந்த ஆத்மாவின் மேல் எண்ணத்தின் பார்வையின் ஒளியை
2.எதை எண்ணிச் செலுத்துகின்றோமோ அந்நிலை அங்கே நடக்கும்.

ஆனால் அதே சமயத்தில் கொடிய குரோத எண்ணம் கொண்டவனாக இருந்தாலும்… தெய்வ சக்தியின் உயர்வு ஆத்ம சித்துவை நாம் பெற்றிருந்தாலும்… நாம் செலுத்தும் சக்தி அங்கு நடக்கும்…! என்ற உண்மை தெரிந்தாலும்…
1.தீய சக்தியை… அந்தத் தீயதை அழிக்க வேண்டும்…! என்று நம்மை உயர்த்தி எண்ணத்தைச் செலுத்தினோம் என்றால்
2.அவன் பெற்ற தீய அலைத் தொடர்பின் ஈர்ப்பில் நாமும் மீண்டும் சிக்கி
3.அவன் பால் செலுத்தும் எண்ணத்திலேயே மனிதனுக்கு மனிதன் விடும் சுவாசத்தின் மோதலினால்
3.காந்த நுண் அலையின் தொடர்பு ஈர்ப்பு அணு வளர்ப்பின் செயலுக்கு நம் உடலும் உட்படுகின்றது.

ஆகவே எண்ணத்தை உயர்த்தி நாம் சந்திக்கும் ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ சக்தி கொண்டதாக எண்ணத்தில் கொண்ட ஆத்மத் தொடர்பினால் தான் நம் ஆத்மா வலுக் கொள்ள முடியும்.

அதாவது நாம் செலுத்தும் எதிர் அலையின் உணர்வலையைத் தான் நாமும் திரும்பப் பெற முடியும்.

எந்நிலை எக்குண வழித் தொடரில் இருந்தாலும் அவ் ஈர்ப்புப் பிடியில் நாம் சிக்காமல் எண்ணத்தின் உயர்வைக் கொண்டு உயர்ந்த ஒலி அலைகளையே பிறர்பால் செலுத்தி எண்ணத்தில் ஒவ்வொரு ஆத்மாவையும் நாம் உயர்த்தி நமக்கு வேண்டிய நல் சத்தை நாம் பெறலாம்.

1.தீயது… நல்லது…! என்ற பாகுபாட்டுடன் நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்தாமல்
2.நம் உயர்வின் உயர்விற்கு உயர்ந்த எண்ணத்தால் சக்தி பெறலாம்.