மெய் ஞானிகளின் பேராற்றல்களைப் பெறக் கூடிய வாய்ப்புகளைக் கொடுத்தாலும் அதை வளர்ப்போர் குறைவாகவே உள்ளனர்

light meditators

மெய் ஞானிகளின் பேராற்றல்களைப் பெறக் கூடிய வாய்ப்புகளைக் கொடுத்தாலும் அதை வளர்ப்போர் குறைவாகவே உள்ளனர்

 

ஒரு மனிதனுக்குள் உருவாகும் உறுப்பின் தன்மையை நேரடியாக நீ பார்…! என்றார் குருநாதர்.

ஒரு சமயம் திருச்சியில் ஒரு பையன் கையில் போட்டிருந்த மோததிரத்தை விழுங்கி விட்டான். டாக்டரிடம் சென்று மோதிரத்தை வெளியில் எடுக்க முயற்சித்திருக்கின்றார்கள். ஒன்றும் வெளியில் வரவில்லை.

பேதிக்கு மருந்து கொடுத்தார்கள் அது ஒன்றும் ஆகவில்லை. குடலில் சிக்கிவிட்டது.. அதனால் குடலை ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆனால் ஆபரேஷன் செய்தால் அவன் செத்து விடுவான்… என்ன செய்வது…? என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்தப் பையனுக்கு ஏழு வயது. அப்புறம் நான் அங்கே செல்லும்போது அந்தப் பையனின் தாயாரைக் கூப்பிட்டு வந்து பையன் உடலில் உள்ள மோதிரத்தைப் பாரம்மா…! என்று சொன்னேன்.

ஆமாங்க… இந்த இடத்தில் இருக்கின்றது என்று அந்த அம்மாள் சொல்கிறது.

இரண்டு மூன்று வாழைப்பழத்தைச் சாப்பிடச் சொல்லி சில இதுகளைச் செய்யும் போது அந்த மோதிரம் கீழே இறங்கி வருகின்றது. அவர்கள் கண்ணில் பார்க்கின்றார்கள். வயிறு வலிக்கின்றது… இந்த இடத்தில் வலிக்கின்றது என்று சொல்கிறான். அப்புறம் இது வெளியில் வருகின்றது.

இது எல்லாம் யாம் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யும் போது பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

ஏனென்றால் குருநாதர் ஒவ்வொரு உறுப்புகளையும் பார்க்கச் சொன்னார். சூட்சும நிலைகள் இயக்குவதின் நிலைகள் எவ்வாறு என்று அறியச் சொன்னார். அதைத் தெளிவாக அறிய முடிந்தது.

முன்பு எம்மிடம் பழகியவர்கள்… உதாரணமாக கந்தசாமி அவர்களை எடுத்துக் கொண்டால் முருகன் வருகிறார்… அவர் வருகிறார்.. இவர் வருகிறார்… என்று எத்தனையோ நிலைகளை அவர்களுக்குக் காண்பித்தேன்.

ஏனென்றால் ஒரு மனித உடலில் எடுத்துக் கொண்ட பக்தியின் உணர்வின் அலைகள் அது எவ்வாறு வருகின்றது…? என்று தெளிவுப்படுத்தி உள்ளேன்.

இயற்கையின் நிலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சாட்சியாக எடுத்து ஒவ்வொருவருக்கும் யாம் எடுத்துக் காட்டினாலும் அவரவர்கள் பெரிய சித்தராக ஆகி விடுகின்றனர்.

சாமிக்குத் (ஞானகுரு) தெரியாது…! நம்மிடம் கேட்டுத் தான் தெரிந்து கொள்கின்றார் என்று இப்படிப் பிரித்து சென்றவர் பல பேர்.

ஒரு நூற்றியெட்டுப் பேரை யாம் வடிவமைத்து ஒரு உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குவது…? என்ற அந்த உண்மைகளை எல்லாம் அறியச் செய்ய யாம் பல நிலைகளைச் செய்தாலும் அதைப் பெற முடியாத நிலைகளில் அவர்கள் இடைவெளிகளிலேயே பிரித்துக் கொண்டனர்.

சத்திய சாய்பாபா தன் வாயிலிருந்து லிங்கத்தை எப்படிக் கக்குகின்றார்…? என்று அதே மாதிரி ஒரு பையனுக்கு எடுத்துக் காட்டச் சொல்லிச் செய்யச் சொன்னேன்.

பல முறைகளை பலருக்கும் பலவிதமான நிலைகளைக் காட்டிச் செய்யச் சொன்னேன்.

அம்பாசமுத்திரத்தில் ஒரு பையனுக்கு அகஸ்தியருடைய உணர்வின் தன்மையை ஏற்றிக் கொடுத்த பின் அவன் தியானத்தில் இருக்கும்போது பச்சிலைகள் வரும்.

அங்கே ஒரு டாக்டருடைய அப்பாவிற்குக் கடுமையான தலை வலி. வலி குறைய 12 ரூபாய் மாத்திரை மூன்று வேலைக்குச் சாப்பிட வேண்டும். ஆனால் முழுவதும் தலை வலி நிற்கவில்லை.

ஆனால் அந்த டாக்டர் இந்தத் தியானம் செய்து கொண்டிருந்தார். அந்த மாதிரி இருக்கப்படும்போது அவர் தந்தை என்னுடைய தலை வலியைப் போக்க முடியவில்லை… என்னடா தியானம்…? என்று சொல்லிச் சத்தம் போட்டு அவர்களுக்குள் பெரிய கலாட்டா வந்துவிட்டது.

அந்தச் சமயத்தில் தான் முதலில் சொன்ன அம்பாசமுத்திரத்தில் இருந்த அந்தப் பையன் தியானத்தின் மூலம் எண்ணி எடுக்கும் போது ஒரு பச்சிலை வேர் வந்தது.

அந்த வேரை குருநாதர் டாக்டருடைய தந்தையின் தலை மாட்டில் வைக்கச் சொன்னார் என்று அங்கே போய் வைத்தான். அதை வைத்தவுடனே தலை வலியே போய்விட்டது.

அந்த விஷத் தன்மைகளை எல்லாம் எடுத்துவிட்டது. 12 ரூபாய் மாத்திரைக்கு வேலை இல்லாது போய்விட்டது.

1.அகஸ்தியன அன்று கண்டுணர்ந்த உணர்வின் தன்மைகள்
2.அவர் அலைகள் இங்கே புகுத்தப்பட்டு
3.அதே உணர்வின் தன்மை எடுக்கப்பட்டு
4.21 பச்சிலைகள் (முக்கியமானது) அதை உறையும் தன்மையாக அந்த வேராகக் கொண்டு வரும்படி செய்தேன்.

கடைசியில் என்ன ஆகிவிட்டது…? அந்தப் பையன் வரவே இல்லை. வேறு வேறு விதத்தில் தவறான நிலைகளுக்கு அவன் நடக்க ஆரம்பித்தான்.

ஞானத்தின் வழியில் வளர்ச்சி ஆவதற்குத் தயார் செய்தேன். ஆனால் அவன் வேறு நிலைகளுக்குப் போய்விட்டான். நான் கூப்பிட்டவுடன் கிராக்கி செய்கிறான்.

அந்தப் பையனின் அப்பா பையனிடம்… சாமி உனக்கு எவ்வளவோ சக்தி எல்லாம் கொடுத்தார். ஏன் இப்படி இருக்கின்றாய்…? என்கிறார்.

“இது உனக்கெல்லாம் தெரியாது…” என்று அவன் கூறிவிட்டான். இப்படியெல்லாம் சில நிலைகள் ஆரம்பத்தில் நடந்தது.

ஏனென்றால் ஞானிகள் பெற்ற சக்திகளை நிரூபணம் செய்வதற்காக நான் சில முயற்சிகளை எடுத்தேன். அது எல்லாம் பலனற்றுப் போய்விட்டது.

இன்றைய உலகம் சுருங்கிக் கொண்டிருக்கின்றது. விஞ்ஞான அறிவால் பேரழிவின் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.

மனிதனின் எண்ணங்கள் குறைந்து வரும் இந்த நேரத்தில் மெய் ஞானியின் உணர்வுகள் உங்களுக்குள் பரவ வேண்டும். உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். வேறு எதுவும் இல்லை.

தற்கொலை செய்யும் உணர்ச்சிகள் எப்படி மனிதனுக்குள் வருகின்றது…?

suicide

தற்கொலை செய்யும் உணர்ச்சிகள் எப்படி மனிதனுக்குள் வருகின்றது…?

ஒரு சமயம் ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவி நீரிலே மூழ்கி இறந்துவிட்டது. இது இறந்தபின் அதனுடன் நட்பாகப் பழகிய இன்னொரு மாணவி அதை உற்றுப் பார்க்கின்றது. நம்முடன் நன்றாகப் பழகிய தோழி இறந்துவிட்டதே…! என்ற நிலைகளில் ஏங்குகிறது.

இறந்த மாணவியோ “படிப்பில் தான் தேறவில்லையே..” என்ற நிலைகள் ஏக்கம் கொண்டு அன்னை தந்தையர் ஏசுவார்கள்…! என்ற அச்சத்தால் கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

ஆனால் அதனுடன் பழகிய இந்த மாணவி பற்று கொண்டு எண்ணியபின் இறந்த மாணவியின் ஆன்மா இந்த உடலுக்குள் வந்து விடுகின்றது.

ஏனென்றால் வீட்டில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் இந்த மாணவியிடம் இறந்த மாணவி ஏற்கனவே சொல்லியிருந்தது. “சரியாகப் படிக்கவில்லை” என்ற நிலையில் தன் வீட்டில் தாய் தந்தை எப்படி எல்லாம் இம்சித்தார்கள்…! எப்படியெல்லாம் பேசினார்கள்…! என்றெல்லாம் அந்த மாணவி சொல்லியிருந்தது.

இதெல்லாம் அந்தச் சக மாணவியிடத்தில் பதிவாகி இருந்தது. பதிவான நிலைகள் கொண்டு ஏங்கிய பின் அந்த உணர்வின் தொடர்பு கொண்டு அந்த ஆன்மா இந்த உடலுக்குள் வருகின்றது.

ஆன்மா இந்த உடலுக்குள் வந்த பின் இந்த மாணவி வெளியிலே செல்லும் போதெல்லாம் “என்னைக் கிணற்றில் விழுகச் சொல்லுகின்றது… கிணற்றில் விழுகச் சொல்லுகின்றது…!” என்ற அதே நிலைகள் அது எண்ணுகின்றது.

முதலில் ஒரு குழந்தை இதே மாதிரி எண்ணி இறந்தது. அந்த உணர்வுகள் இந்த உடலில் பதிவானது. பதிவான பின் இதைப் போல அது அவ்வாறு சொல்கின்றது.

இந்த உணர்வுகள் தனக்குள் பெருகி…
1.யாரோ என்னைத் தள்ளுகின்றார்கள்…
2.ஏதோ ஒரு பூதம் என்னை அப்படியே அமுக்குகின்றது என்று சொல்கிறது.

அது எப்படி விகாரக் கோரத்தில் இருந்ததோ அது எல்லாம் இந்த உடலுக்குள் தெரிகின்றது அந்தக் கற்பனை உணர்வுகள் இதற்குள் விளைந்து
1.முதலில் இறந்த மாணவி போன்று துர் மரணத்திற்குண்டான நிலை கொண்டு
2.மன உளைச்சலுக்கு ஆகின்றது… பின் இதுவும் அதே போல் ஆகிவிடுகின்றது.

இதிலே விளைந்த உணர்வுகள் எதை எதையெல்லாம் சொன்னதோ மற்றொரு குழந்தை மேல் சாடும்போது அது அதிலிருந்து வளர்ச்சியாகி வளர்ச்சியாகி வருகின்றது.

வெகு காலம் கழித்து என்னிடம் (ஞானகுரு) அந்தப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு வருகின்றார்கள்.

“திடீரென்று யாரோ வருகின்றார்கள்… என்னை உதைப்பதைப் போல் இருக்கின்றது… என்றும் யாரோ என்னைத் தள்ளுகின்றார்கள்… என்றும் கிணற்றில் விழுந்துவிட வேண்டும் என்றும்…” சொல்கிறது.

எனக்குப் பிறந்த குழந்தை… அவனும் கிணற்றுக்குள் விழுந்து விடுவானோ.. விழுந்து விடுவானோ..! என்ற எண்ணங்களையும் தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றது. இரவில் கனவுகளும் இதே போல் தான் வருகின்றது.

பூதங்கள் வந்து என்னை நசுக்க வருகின்றதென்று அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

பின் இது எதன் வழிகளில் வந்தது…? என்பதைப் பார்க்கப்படும்போது
1.முதலில் ஒரு குழந்தை பாடத்தில் சரியாக இல்லை என்று கிணற்றில் விழுந்து இறந்தது
2.அதன் பின் இன்னொரு குழந்தை உடலில் இறந்தது
3.அதற்குப் பின் அதைச் சரி செய்ய இவர்கள் பல மந்திரங்கள் செய்து ஏவல் செய்திருக்கிறார்கள்.

ஆனால் ஒன்றும் முடியவில்லை.

கடைசியில் இத்தனையும் சேர்ந்து ஒரு பூத கணமாக மாறி இதற்கும் அதற்கும் அஞ்சும் உணர்வாகிப் போராட்ட நிலைகள் ஆகின்றது. முதல் ஆன்மாவை அடக்க இன்னொரு ஆவியின் நிலைகள் அதற்குள் விளைந்த செல்கள் இணைக்கப்படும்போது இது இரண்டுக்கும் போராட்டம்.

படிக்கவில்லை என்று தாங்காது அது இறந்தது. அதற்கடுத்து இது நுகர்ந்தது. மூன்றாவது ஆத்மா வரப்படும்போது “பூதம் வருகின்றது… என்னைக் கொல்லப் போகின்றது… என் கழுத்தை நசுக்குகின்றது… உள்ளுக்குள் தள்ளுகின்றது…” என்று இதனுடைய உணர்வுகள் இப்படி விளைந்து வருகின்றது.

அவர்களைப் பார்த்து… குருநாதர் காட்டிய அருள் வழிகளைச் சொல்லி இந்தெந்த நிலைகள் இருக்க வேண்டும் என்று அருள் உணர்வை வலுப்படுத்திய பின் ஒவ்வொன்றாக வடிகட்டிக் கொண்டு வந்தது.

ஆரம்ப நிலையிலிருந்து அது எப்படி ஆனதோ அதிலிருந்து பெருகி இதிலே எவ்வாறு விளைகின்றது என்ற நிலையை அறியும் தன்மையாக வந்தது.

இது எல்லாம் மனித வாழ்க்கையில் அறியாது ஏற்படக்கூடிய தீமைகள். பாசமாகப் பழகினாலும் பற்று கொண்ட நிலையில் இறந்தவரை எண்ணும் போது இந்த மாதிரி ஆன்மாக்கள் உடலுக்குள் வந்து விடுகின்றது.

மகானாகும் மகத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Super natural man - mahaan

மகானாகும் மகத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதன் தான் மகானாக முடியும்… மாமகரிஷியாக முடியும்… மண்டலமாக முடியும்… மனித குணங்களை உருவாக்க முடியும்…! மதி கொண்ட உயர் ஞானத்தால் மனித உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்திக் கொண்ட மனித உணர்வில்… மனிதன் முதலில் வாழ்க்கையில் “எளிமையைக் கடைப்பிடித்தல் வேண்டும்…”

வாழ்க்கையில் எளிமையும்… ஆத்மாவில் சுகத்தையும்… அனுபவிக்கும் எண்ணத்தின் குணத்தைப் பெறும் மார்க்கமே மனிதன் மனிதனாக்கும் முதல் நிலை.

இம்முதல் நிலையில் மனிதனால் எடுக்கப்படும் அறிவின் பகுத்தறிவு… உயர் ஞானத்தின் மெய் ஞானத்தில் கண்டறியும் உண்மையின் சக்தியை… மனிதருக்குள் மனிதராய் விதைக்கப்படும் ஒலி அலைகள் ஒளி பெறும்.

1.ஆகவே மனிதனைப் பக்குவப்படுத்தும் நிலைதான் மகானாகக்கூடிய நிலை என்பது.
2.“உயர்ந்து விட்டோம்…” என்பதை விட்டு
3.“உயர்ந்திடுவோம்…” என்ற எண்ணம் வர வேண்டும்.

பிற ஆத்மாக்கள் மனிதனின் (தன்) உயர்வைக் கண்டு… நாடி வந்து வணங்க வேண்டும்… என்ற எண்ணத்தில் இருளைக் கூட்டிக் கொள்ளும் பொழுது “எம்மனிதனும் மகானாக முடியாது…”

தன் உயர்வை உயர்த்திக் காண வேண்டும் என்றால்…
1.பிறரை உயர்த்தும் பொழுதுதான் தான் உயர முடியும்
2.தன் உயர்வை நாடி எல்லாம் வர வேண்டும் என்று எண்ணுவதல்ல உயரும் நிலை…!

சூரியன் எப்படி மற்றக் கோள்களின் அலையைத் தான் பெற்று… தன்னில் அதைச் சமைத்து மீண்டும் ஒளியைத் தந்து உருளுகின்ற உண்மையில்… சூரியத் தொடர்பில் சுழலக் கூடிய கோள்கள் தானும் ஓர் நாள் வளர்ந்து… தன்னுடைய ஈர்ப்பின் சுழற்சியில் குடும்பம் அமைத்து… அதுவும் சூரியனாக வளர்ச்சி அடையக்கூடிய நிலையை அது அது பெறுகிறது.

அண்ட கோள்களில் உருள்பவை யாவும்… மண்டலக் கோள்களின் ஈர்ப்பில் மோதப் பெறும் சமைப்பு நிலையால்தான் “மறு நிலை… உரு நிலை…” பெறுகின்றது.

இத்தொடரின் சூட்சுமமே ஜீவகாந்த ஒளித் தன்மை உயிர்ப்பு நிலை வந்த பிறகு தான். ஜீவ ஆதி நிலை கொண்டு
1.ஆரம்ப நிலை – புழு நிலை
2.முதிர்வு நிலை ஜீவனின் தொடர் – மனித நிலை
3.மனித நிலையில் மகானாகி – ஒளி பெறும் நிலை
4.என்றென்றும் வளரும் நிலை – வளர்ச்சியின் ஒளி நிலை.
5.மனிதனின் நிலை தான் – தெய்வமாகும் நிலை.

இதை அறிந்து… மனிதனிடம் இருக்கும் “எண்ணத்தின் பகுத்தறிவு தான் உண்மையான சொத்து…” என்பதை உணர்ந்து
1.ஒவ்வொரு மனிதனுக்கும் நல்லுணர்வைத் தந்து
2.நல்லொழுக்கத்தை ஆத்ம பலத்தில் வளர்க்கும் உரமிடுபவன் நிச்சயம் மகானாக முடியும்.

“மனிதருக்குள் தெய்வம்” என்று மகான்களைக் சொல்வதைப் போல்… தன் உணர்வின் எண்ணத்தில் சுகத்தைக் காணும் “ஆத்ம பலத்தின் ஒளித் தன்மை பெற” சரீர வாழ்க்கையில் எளிமையைக் காணுங்கள்.

ஏழு…! ஆறைக் கடந்தால்… நிலை ஏழு…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

self realization - divinity

ஏழு…! ஆறைக் கடந்தால்… நிலை ஏழு…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.அறுசுவையின் முதிர்வு உணரும் நிலை ஏழு…
2.வண்ணத்தில் ஏழும்… இப்பூமியின் சுழற்சியில் இப்பூமிக்கு ஏழு நாட்களின் வாரத் தொடர்பும்…
3.“சப்தரிஷிகளின் ஏழு நிலையின் உண்மைத் தத்துவ நிலையும் தான்…!”
4.இப்பூமியின் உண்மை நிலை.

ஐம்புலனைப் பகுத்தறியக் கூடிய நிலை கொண்டது தான் “ஆறறிவு பெற்ற மனித நிலை…” மிருகங்கள் ஐந்து நிலையைப் பெற்றிருந்தாலும் இயற்கையின் தொடர்புடன் புல்லையும் பூண்டையும் நீரையும் இயற்கையுடன் ஒட்டித்தான் அதனுடைய ஜீவ வாழ்க்கை வளருகின்றது… வாழுகின்றது.

உண்ணவும் உடுக்கவும் இருக்கவும்… தன் ஆறாம் அறிவை மனித ஞானம் பயன்படுத்திக் கொண்டது.

ஏழாம் நிலையான உயர் ஞானத்தால் இச்சரீர உணர்வின் அறுகுணத்தின் அறியும் நிலை கொண்டு அடையும் நிலையை மாற்றி… ஞானத்தால் உணரும் மெய் ஞானம் கொள்ளும்… “ஏழான நிலையை” மனிதன் பெற வேண்டும்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான்… இப்பூமியின் சுழற்சியின் மூல அமில ஒலியின் சப்தரிஷி ஒளி செயலினால்… ஏழு தன்மையின் வளர்ப்பின் செயல் சக்தி ரிஷித் தொடர்பினால்… இப்பூமியில் வளரக் கூடிய மூலத்தின் கருவின் வித்தில் வளர்ந்த பலன்கள் தான் அறு குணம் பெற்ற நிலை.

இந்தப் பூமியின் முதிர்வு நிலை மனித நிலை ஆறறிவு நிலை…!
1.அதற்கு அடுத்த நிலை மெய் ஞான நிலை
2.மெய் ஞானம் பெற்ற மனித நிலையும் இந்தப் பூமியின் சுழற்சியில் முதிர்வு நிலை
3.இவ் ஏழைக் கடக்கும் மெய் ஞானி தன் சித்தத்தை உணர்ந்த சித்தனாகி விட்டால்
4.அது எட்டாம் நிலையான அஷ்டமா சித்து நிலையை அடையும் நிலை.

இயற்கையின் மெய் உணர்ந்து மெய் ஞானத்தால் ஒளி பெற்று தன் சித்தத்தின் வலுவாகும் சித்து நிலையே ரிஷியாகும் வழி நிலை.

இப்பூமியின் உணர்வுடன் இப்பூமியின் சுழற்சியில் எடுக்கக்கூடிய ஒலி அலைகள் யாவையும்… தன் ஒளியாய் எடுத்து இவ்வாத்மாவின் ஒளி ஒளிரக் கூடிய தன்மை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அந்தத் தகுதி உண்டு.

வளர்ச்சியின் தொடர் வளர… மனித உணர்வில் தன் சரீர உணர்வால் மனிதன் பெறக்கூடிய கண்டு… கேட்டு… நுகர்ந்து… சுவைத்து… உணரும்.. இந்த ஐந்து நிலையும் அடையும் நிலை மனிதனுக்கே உண்டு.

இந்த ஐந்து நிலையில் இனிமை நிலை கூட்டுவது… மனித நிலையில் இரு நிலையான ஒவ்வொரு இயற்கை நிலையிலும் தன்னுடன் மோதக்கூடிய
1.ஜீவ நிலையான பெண்மை நிலை… வளர்ச்சி நிலை…
2.அறுநிலை கொண்ட முதிர்வு நிலை… சிவசக்தி நிலை…
3.பெண் சக்தியின் வளர்ச்சியின் தொடர் கொண்டு வளரக்கூடிய நிலைக்குத்தான்
சப்தரிஷியின் சக்தித் தொடர்பை உணர்ந்த ரிஷிகள்… சக்தியைப் பெண்ணாகக் காட்டினார்கள்.

மனித உணர்வில் அடையக் கூடிய இவ் அறு நிலைக்கும் முதிர்வு நிலையான… மெய் ஞானத்தை உணரும் ஜீவ நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டும்.

ஏழான ஜீவ நிலையுடன் எட்டாகும். சித்தனால் ஒவ்வொரு கோள்களாய் உருவாகும் தன்மை எடுக்கும் இவ்வுணர்வின் எண்ணம் கொண்டு தான் உயர முடியும்.

பிற ஒலி அலைகளை இச்சரீர உணர்வுடன் எடுக்கும் சித்து என்பது..
1.இப்பூமியின் சுழற்சியுடனே…
2.இவ்வுடலை விட்டு ஆத்மா பிரிந்தவுடன் (ஆவிகள்)
3.எந்தெந்த ஒலியெல்லாம் எடுத்து இச்சரீரத்தைச் சித்தாக்கி வளர்த்துக் கொள்கின்றோமோ
4.அதன் ஈர்ப்புப் பிடிப்பினால் ஆத்மாவைச் சிதற அடிக்கும் நிலைதான் சித்து விளையாட்டு நிலை. (இதிலே நாம் சிக்கக் கூடாது)

மனிதன் எத்தாய் தந்தை தந்த இஜ்ஜீவ உடலை பெற்றானோ அதைப் போன்றே தாய் தந்தையென்ற ஆத்மாவில் மனித ஜீவனை மனிதன் பெற்ற தொடரைப் போன்று இரண்டு ஆத்மாவின் ஒரு நிலையான எண்ணத்தின் ஒற்றுமையால்
1.உணர்வின் இன்பம் (உடலின் இன்பமல்ல) உணர்வின் இனிமையை… ஆத்மாவின் இனிமையாய்…
2.ஆத்மாவின் ஜீவ இனிமை நிலையை மனித உணர்வுடன் உள்ள பொழுதே
3.குணத்தின் அன்பால் உணரக்கூடிய சம குணமுடன்
4.விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒலியை இருபாலரும் எடுத்து ஒளியாக மாற்றிட வேண்டும்.

ஆகவே இச்சரீர வாழ்க்கையில்… மனிதனென்ற வித்தின் மூலத்தைத் திருமூலமாக்கும் மந்திரம் தான் இது..! இரு குணத்தை ஒரு குணமாக்கி அன்பென்னும் ஆலயத்தைச் சிவசக்தியாக்கச் செய்யும் ஒவ்வொருவரையும்.

கோப குணத்தின் உணர்ச்சிகள் சிறுகச் சிறுகக் கூடி நம் உடல் உறுப்புகளை எப்படிப் பாதிக்கிறது என்று தெரிந்து கொள்வதே நலம்

Curse and scolding

கோப குணத்தின் உணர்ச்சிகள் சிறுகச் சிறுகக் கூடி நம் உடல் உறுப்புகளை எப்படிப் பாதிக்கிறது என்று தெரிந்து கொள்வதே நலம்

ஒரு வித்தினை நிலத்தில் ஊன்றி விட்டால் அது செடியாகி அது வளர்ச்சி பெறும்போது அதனின் வித்துக்களை அதிகமாக உருவாக்குகின்றது.

இதைப் போல நம் உடலும் ஒரு நிலம் போன்றது தான். கோபமாகப் பேசும் மனிதன் உணர்வை நுகர்ந்து நாம் வித்தாக நமக்குள் ஊன்றி விட்டால் அந்த உணர்வு நமக்குள் கோபத்தை உருவாக்கும் அணுக்களைப் பெருக்கி விடுகின்றது.

கோபத்தின் உணர்வின் அணுக்கள் நம் உடலிலே பெருகி விட்டால் நம் உடலுக்குள் இருக்கும் சாந்த குணமாக இயக்கும் அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

உதாரணமாக பார்க்கலாம்… ஒரு கோபக்காரர் நம் பக்கத்தில் இருந்தால் அவர் யாரை எடுத்தாலும் கோபமாகப் பேசிக் கொண்டிருப்பார். இரு நான் உன்னைப் பார்க்கின்றேன்.. என்ன செய்கின்றேன் பார்…! என்ற வகையில் உணர்ச்சிவசப்பட்டு கோப உணர்வாக வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்.

இதைப் போன்று நாம் நுகர்ந்த கோப உணர்வுகள் அது அணுக்களாக உடலுக்குள் வளரப்படும் பொழுது…
1.புலி எப்படி மற்றொன்றை இரக்கமற்றுக் கொன்று புசிக்கின்றதோ
2.இதைப்போல நம் உடலுக்குள் அந்த அசுர அணுக்கள்
3.தன் அருகில் இருக்கும் நல்ல அணுக்களை இது கொன்று புசிக்கத் தொடங்கிவிடும்.

பின் நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் இந்த நல்ல உடலுக்குள் இயக்கச் சக்தியாக மாற்றும் “திரவகப் பொருட்கள்” கிடைக்காது போகும்

1.நம் உடலில் உள்ள நரம்புகளில் ஒரு விதமான அமிலம் உண்டு
2.அந்த திரவகம் நமக்குள் இல்லை என்றால் கைகளை மடக்குவதோ நீட்டுவதோ கடினம்.
3.அதே மாதிரி மூட்டுகளிலும் இந்தத் திரவகம் இணைக்கப்பட்டுள்ளது
4.மடக்கவும் நீட்டவும் அந்த வலுக் கொண்டு நம்மை இயக்க உதவுகின்றது.

இன்று நாம் பார்க்கலாம்.. இயந்திரங்களுக்கும் வண்டிகளுக்கும் விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு வித திரவகப் பொருளை (மசகு எண்ணை – LUBE OIL) கலக்குகின்றனர். அதன் மூலம் இயந்திரங்கள் தேய்வில்லாதபடி சில காலம் ஓடுகின்றது.

பெரிய பெரிய இன்ஜின்களிலும் இதே போல் திரவகத்தைக் கலக்கின்றனர். அதற்குள் இருக்கும் பேரிங்குகளோ பிஸ்டனோ இந்தத் திரவகத்தை கலக்கப்படும்போது தேயும் தன்மையும் குறைகின்றது… ஒரே சீராக இயங்குகின்றது.

இதைப் போலத்தான்… நம் உடலில் உயர்ந்த அணுக்களால் உருவாக்கப்பட்ட அதனுடைய மலம் திரவகமாக மாற்றப்பட்டு எல்லா உறுப்புகளுக்குள்ளும் அது இணைந்த நிலையில் சீராக இயங்க உதவுகின்றது.

நம் உடல் உறுப்பு நுரையீரல் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த நுரையீரலில் நுண்ணிய அலைகளாக இயக்கி…
2,அதை இயக்கச் செய்யும் அந்த நரம்புகளுக்கும் வாயு நரம்புகளுக்கும்
3.நாம் சுவாசிக்கும் அந்த வாயுவினுடைய (காற்று) தன்மைகள் சென்றபின் அது விரிவடைகின்றது.
4.மீண்டும் சுருங்கச் செய்வதற்கு அதிலுள்ள திரவக அணுக்கள் அதைச் சுருங்கி இழுக்கும்…. மீண்டும் அந்தக் காற்று புகும்போது விரிவாகும்.

ஒரு காற்றினை அழுத்தப்படும்போது அதனால் விரிவாவதும் பின் காற்றினைக் குறைக்கப்படும்போது அதனுடைய நிலைகள் குறைக்கின்றதோ இதைப் போல் தான் நம் சுவாசப்பைகள் இயக்குகின்றது.

இவ்வாறு தொடர்ந்து இந்த நுரையீரலை இயக்கச் செய்யும் நிலைகளில்… மற்ற அனைத்திற்கும் இந்த உணர்வின் தன்மையை ஒருக்கிணைந்து இயக்கச் செய்யும் ஈரல் மையங்களுக்கு அனுப்பும் செயல்களில்
1.இந்த ஆசிட் பவர் (திரவகம்) குறைந்து விட்டால்
2.அது இழுத்து விரிவடையச் செய்யும் காற்றின் நிலைகள் விரிவடைந்து விட்டால் “அதிகமாக விரிவடைந்துவிடும்…”
3.அதே போல் சுருங்கச் செய்யும் சக்தியும் நரம்பு மண்டலங்களில் அந்தத் திரவகப் பொருள் இல்லையென்றால்
4.நுரையீரலைச் சுருங்கச் செய்யும் சக்தியும் குறைந்துவிடுகின்றது.

இப்படி அந்தச் சுருங்கச் செய்யும் சக்தி குறைவடையப் போகும்போது நமது நினைவாற்றலையும் குறைக்கச் செய்யும்.

அதாவது…
1.இந்தத் திரவகம் நம் சிறு மூளை பாகம் வரை சென்று
2.அதனுடன் ஒன்றுடன் ஒன்று இயக்கப்படும் பொழுது
3.அதனுடைய அழுத்தக் குறைவு ஆகிவிட்டால் அந்த உறுப்புகளை இயங்க விடாமல் தடைப்படுத்துகின்றது
4.மிகவும் நுண்ணிய நிலைகளாக ஆக்கி விடுகின்றது (சிறுத்து விடுகின்றது)

இத்தகையை நிலைகள் நமக்குள் ஏற்பட்டு விட்டால் நமக்குள் தீய அணுக்கள் உள்ளே புகாது அவைகளைத் தடைப்படுத்தும் அந்த சக்தி இழக்கப்படுகின்றது.

நாம் எடுக்கும் கோப உணர்வின் அமிலங்கள் இத்தனை வேலைகளுக்கும் காரணமாகின்றது. இதை எல்லாம் தெரிந்து கொண்ட நிலையில் தீமையான உணர்வின் அமிலங்கள் நமக்குள் உருவாகாதபடி நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் தடைப்படுத்திப் பழக வேண்டும்.
https://app.box.com/s/3hwldooo34mf6ua5wh4viw09715z12c6

காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு விளையச் செய்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளை ஊட்டுகின்றோம்… பயன்படுத்துங்கள்

Agathiyam final

காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு விளையச் செய்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளை ஊட்டுகின்றோம்… பயன்படுத்துங்கள்

நீங்கள் எல்லாம் காட்டிற்குச் சென்று தவமிருந்து மெய் ஞானிகளின் சக்தியைப் பெறுவது என்றால் முடியாது.

ஈஸ்வரபட்டர் என்னை (ஞானகுரு) வீட்டிலிருந்து அழைத்துச் சென்று காடு மேடெல்லாம் அழையச் செய்தார். என் குடும்பத்தாரையும் கஷ்டப்படுத்தினார். இயற்கையின் உண்மைகளை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்காக அத்தனையும் செய்தார்.

என்னுடைய மூத்த பையன் அவன் நல்ல பையன் தான். ஆனால் வீட்டிலிருக்கும் சொத்தை எல்லாம் செலவழிக்கச் செய்துவிட்டார் குருநாதர். சொத்தெல்லாம் போய் அநாதையாக ஆக்கி விட்டார்.
என் பையன் செய்த அந்தக் குறும்புத்தனத்தால் பணம் எல்லாமே போய்விட்டது. அந்தச் சமயத்தில் குடும்பத்தை வழிநடத்த என் மனைவி மிகவும் அவஸ்தைப்பட்டது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு விஞ்ஞானி அவன் பல சங்கடங்கள் படலாம். தன்னுடைய விடா முயற்சியினால் ஒன்றைக் கண்டுபிடிக்கின்றான். அதை இயந்திரமாகச் செய்து அதை இயக்கிக் காண்பிக்கின்றான். அதனின் செயலை நாம் அறிகின்றோம்.

அவன் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்ததை சரியான முறையில் நாம் ஏற்றுக் கொண்டோமென்றால் அந்த விஞ்ஞான அறிவு நமக்குப் பயன்படும்.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரைச் செய்து கொடுக்கின்றான் என்றால்… முதலில் எவ்வளவு சிரமப்பட்டு அதை அவன் செய்திருப்பான்..! ஆனால் இன்று நாம் அதை விளையாட்டுக்குத் தட்டிக் கொண்டிருந்தால் அந்தக் கம்ப்யூட்டர் ஒன்றும் வேலை செய்யாது.

அதைப் போன்று தான் எவ்வளவோ சிரமப்பட்டு விளைய வைத்த ஞானிகளின் உணர்வை உங்களுக்கு இங்கே உபதேசமாக வித்தாகப் பதிவாக்குகின்றேன். அதை நீங்கள் எண்ணி எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனிதனின் வாழ்க்கையில் நாம் எண்ணக்கூடிய உணர்வை எல்லாம் நம் உயிர் பதிவாக்கிக் கொள்கின்றது. எதன் வழி…? நம் கண்கள் வழி தான்…!

ரேடியோவிற்கும் டி.வி.க்கும் ஆன்டென்னா எப்படி இருக்கின்றதோ அதைப் போல
1.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்திற்கும் இந்தக் கண்ணே ஆன்டென்னாவாக இருக்கின்றது… பதிவாக்குகின்றது.
2.பதிவான பின் அதே நினைவைச் செலுத்தப்படும்போது
3.வெளியில் காற்றிலிருப்பதை இழுத்துக் கொடுப்பதும் நமது கண் தான்.

கண் வழியாகக் கவரப்படும் உணர்வுகள் உயிரிலே படும்போது எண்ணமாக வருகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மைதான் இந்த உடலை இயக்குகின்றது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரைப் பற்றிக் கோபமான எண்ணங்களைப் பதிவாக்கி விட்டீர்கள் என்றால் அந்தப் பதிவு… அவரை நினைத்தவுடனே இங்கே ஆத்திரம் வரும்.

அப்படிப்பட்ட ஆத்திர உணர்ச்சிகள் வரும்போது அடுப்பில் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தால் போதும். தன் நினைவை இழந்து அடுப்பிலே எதாவது பொங்கி வந்தால்…
1.துணியையோ மற்ற உபகரணத்தையோ எடுக்காமல்
2.உடனே அப்படியே கையில் தூக்குவார்கள்… கை சுட்டுப் போகும்… பார்க்கலாம்…!

அதே மாதிரி ஒரு கணக்கை எழுதிக் கொண்டிருந்தோம் என்று சொன்னால் அந்த வெறுப்பான எண்ணங்கள் வரும்போது இங்கே தப்பான கணக்காகப் போட்டு விடுவோம்.

பணத்தையே எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட அந்த வெறுப்பான சமயங்களில் எண்ணிக்கை கணக்கில் வித்தியாசம் ஆகிவிடும்.
1.ஏனென்றால் அந்த உணர்வுகள் பதிவான நிலைகள்தான் நம்மை அவ்வாறு இயக்குகின்றது.
2.அந்த மாதிரி இயக்காமல் தடுக்க வேண்டுமல்லவா…!

இதையெல்லாம் மாற்றி அமைக்கக் கூடிய சக்தி இந்த ஆறாவது அறிவுக்கு உண்டு.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்… அந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெறும் வழி முறைகளைத்தான் உங்களுக்குக் காட்டிக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

 

நாம் பெறும் உயர் ஞானம் “மற்றவருக்குப் பயன்படும்படியாக இருக்க வேண்டும்” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Eswara sakthi power

நாம் பெறும் உயர் ஞானம் “மற்றவருக்குப் பயன்படும்படியாக இருக்க வேண்டும்” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பசு மடியில் சுரக்கும் பால்… தன் கன்று குடித்து அதன் பின் மீண்டும் பலரும் பருக அது பயன்படுகின்றது.
1.அந்தப் பசு மடி சுரக்கும் பால் போல்
2.நாமெடுக்கும் உயர் ஞானத்தின் தன்மை
3.பலருக்கும் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

நாமெடுக்கும் உயர் ஞானம் நம் உயிரானது… நம் உயிராத்மா கன்று போல் பருகி… பலரும் பருகக்கூடிய பலனாய் ஞானியின் சக்தியாகச் செயல்படல் வேண்டும்.

ஒவ்வொருவருக்குமே… தன் உணர்வில்… தன் எண்ணத்தால்… தன் ஆத்மாவில் பதியப்பட்டது தான் நியாயமாகவும் உண்மை என்றும் புலப்படும். ஆகவே
1.தன் உண்மைக்கு ஒத்த கருத்துக்கள் கொண்டு உறவாடுவதை தனக்கு உகந்ததாயும்
2.மாறுபட்ட எண்ணங்கள் யாவையுமே எதிர்ப்பு உணர்வைத் தோற்றுவிக்கும் எதிர் நிலைகளைத்தான் உண்டுபண்ணும்.

இந்த உண்மைகளை எல்லாம் அறியக்கூடிய உயர் தன்மைக்காகத்தான் அன்றைய மாமகரிஷிகள் மனிதனுக்குள் இறைத் தன்மையை வளர்க்கும் நிலையை நெறிப்படுத்தினார்கள்.

மனிதனுக்கு மேல்… மேல் நிலையாக தெய்வ குணங்களையும்… தெய்வச் சிலைகளையும்… ஆலயங்களையும்… நல்லொழுக்க நடைமுறைக்குக் கொண்டு வந்து… உண்மையின் சித்தத்தை மனிதன் அறியச் சீரிய வழிகளையும் வழிப்படுத்திச் சென்றனர்.

இதை உணர்ந்து…
1.நாம் ஒவ்வொருவருமே தெய்வ குணங்களைப் பெற்று
2.தெய்வ சக்தியை வளர்த்துத் தெய்வங்களாகும் தன்மை பெறல் வேண்டும்.

 

நேரடியாகவோ டி.வி.யிலோ ஒரு விபத்தைக் காண நேர்ந்தால் சிதைந்தவரின் அந்த உடலின் உணர்வுகள் நம் உடலை எப்படிச் சிதையச் செய்கிறது…?

blood and cells formation

நேரடியாகவோ டி.வி.யிலோ ஒரு விபத்தைக் காண நேர்ந்தால் சிதைந்தவரின் அந்த உடலின் உணர்வுகள் நம் உடலை எப்படிச் சிதையச் செய்கிறது…?

நாம் மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இருந்தாலும் சந்தர்ப்பத்தில் ஒரு ஆக்சிடெண்ட்டை நாம் பார்க்க நேர்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதிலே அடிபட்டவர்கள் உடல் நசுங்கி இறந்து விடுகின்றார்கள்.

அடிபட்டு இறந்தவர்கள் வெளிப்படுத்திய உணர்வின் ஒலி ஒளிகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

டி.வி.யில் ஒரு மனிதனை இயந்திரத்தின் துணை கொண்டு படமாக்குகின்றனர். அதை ஒலிப்பேழைகளில் பதிவு செய்து மீண்டும் காந்தப் புலனறிவால் இயக்கப்பட்டு ஒலி/ஒளி பரப்புகின்றனர். அதை இன்னொரு இயந்திரத்தின் துணை கொண்டு நம் வீட்டில் அமர்ந்த இடத்திலிருந்து பார்க்கின்றோம்.
1.இதை வீடியோ என்று சொல்கிறோம்.
2.ஆனால் அதிலே படச் சுருள்களையோ உருவங்களையோ பார்க்க முடிவதில்லை.

ஏனென்றால் அது ஒலி… ஒளிப் பேழைகளை அதிலிருந்து அலைவரிசைகளாகத் தான் வெளிப்படுத்துகின்றது. காந்த புலனறிவால் கவரப்பட்டு எந்த மனிதனைப் படமாக்கி உருவாக்கப்பட்டதோ… அவன் எந்த நிலைகளில் இருந்தானோ அதனை அப்படியே நாம் டி.விக்களில் நாம் காணுகின்றோம்.

ஆகவே இதே காந்தப் புலனறிவால்தான் அது கவருகின்றது. அதன் உணர்வின் தன்மை ஒலி ஒளி என்ற நிலைகளில் அது பரப்புகின்றது… இது விஞ்ஞானம்…!

அதே போல் தான் ஒரு விபத்துக்குள்ளான மனிதனின் உடலிலிருந்து வேதனைப்பட்ட உணர்வுகள் அது வெளிப்படும்போது ஒலி ஒளி என்ற நிலைகள் அலைவரிசையில் வெளி வருகின்றது. அதைச் சூரியன் காந்த சக்தி கவருகின்றது.

1.எந்த மனிதனை நாம் உற்றுப் பார்த்தோமோ அதே ஒலி ஒளி என்ற நிலைகளில்
2.நமக்குள் அந்த உடலின் உருவத்தையும் அதில் எழும் சோக நாதத்தையும் நாம் பார்க்கின்றோம்.
3.அதை நமக்குள் உணர முடிகின்றது.

இதைத்தான்… நம் உயிரிலே இருக்கும் கவரும் சக்தியான காந்தப் புலனை லட்சுமி என்று ஞானிகள் சொன்னார்கள்.

ஒவ்வொன்றையும் தனக்குள் அந்த லட்சுமி கவர்ந்து… விஷ்ணுவாக (வெப்பம்) இருக்கும் தன் கணவனுடன் இணைந்து கவர்ந்த உணர்வின் சக்தியை அதே வேதனைப்படும் அணுவாக மாற்றுகின்றது பிரம்மமாக….! இதெல்லாம் நம் உயிருக்குள் நடக்கும் சம்பவங்கள்.

1.ஆக்சிடென்டைக் கண்ணுற்றுப் பார்த்தோம்
2.நம் உயிர் அதனை இப்படி ஜீவ அணுவாக மாற்றுகின்றது.

அந்த ஆக்சிடென்ட்டில் சிதைந்து போன உணர்வின் தன்மை உடலிலே உருப்பெறப்படும் போது அவன் எத்தகைய வேதனைப்பட்டானோ அதே உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் வரும் போது இரவிலே சிதைந்த உடல் எல்லாம் கனவாக உருவங்களாக வரும். ஆனால் நாம் இங்கே பார்த்த இந்தச் சிதைந்தவனின் உருவு வராது

இவ்வாறு உடல்கள் சிதைவதையும்… சிதைந்து கொண்டு இருக்கும் உணர்வுகள் அச்சுறுத்தும் உணர்வாக நம் ஆன்மாவில் இருந்து கொண்டு… நம்முடைய ஒவ்வொரு குணத்திலும் இந்தச் சிதைந்திடும் உணர்வுகள் பரவிப் பரவி… மனிதனாக உருப்பெற்ற தன்மைகளையே மறைக்கச் செய்யும்.

அதற்குப் பின் நமக்குள் எதனைக் கண்டாலும் அச்சுறும் தன்மையும் அஞ்சிடும் உணர்வாகவும் வலுவாக இயக்கத் தொடங்கும். நம்மை உருமாற்றத் தொடங்கும்.

சந்தர்ப்பத்தில் ஒரு மனிதன் ஆக்சிடென்டில் சிதைந்தான். ஆனால் நமக்குள் நுகர்ந்த உணர்வு உடலாக உருவான அந்த அணுவின் தன்மை அதனின் மலத்தை உமிழ்த்தும் பொழுது நமது உடல்கள் சிதைந்து விடுகின்றது.

அதே உணர்ச்சி நம் எலும்புகளில் பட்டுவிட்டால்…
1.அடிபட்டவனின் எலும்புகள் எப்படி நொறுங்கியதோ
2.அதிலிருந்து வந்த உணர்வின் தன்மையை நம் காந்தப் புலன் அறிவுகள் கவர்ந்து
3.இதனின் மலத்தொடர்கள் நம் உடலில் எலும்பை உருவாக்கும்
4.நல்ல அணுக்களின் மலங்களைக் குறைக்கச் செய்கின்றது… நம் எலும்புகள் பலவீனம் அடைகின்றது.

பின் எலும்பின் தன்மை சிதைந்து எதையாவது தொட்டவுடனே அல்லது ஏதாவது பட்டு இடித்து விட்டால் சடக்கென்று நொறுங்கிவிடும்… மாவு போல ஆகின்ரது. அங்கே எலும்புகள் நொறுங்கியது. நொறுங்கிய உணர்வின் தன்மை அலைகளாகச் சென்றது. அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் இத்தகைய நிலை ஆகின்றது.

அந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகளை அங்கே கவர்ந்தது நமது கண்கள் தான். இந்த உணர்வின் தன்மை “ஓ…” என்று ஜீவனாகின்றது. ஜீவ அணுவாக சிவமாகின்றது.

சிவத்திற்குள் அணுவின் தன்மை தனக்குள் அது தன் உணர்வை ஏங்கிப் பெற்று அதே உணர்வின் மலத்தை இடும்போது நம் உடலில் உள்ள எலும்பைத் தேய்மானாமாக்குகின்றது.

சில பேர் எனக்கு மூட்டு வலிக்கின்றது…! என்று சொல்வார்கள். நாம் கேட்டுக் கொண்டே இருப்போம். இந்த உணர்வின் தன்மை எதனுடன் தொடர்பு கொள்கின்றதோ இந்த உணர்வின் தன்மை ஓ…ம் நமச்சிவாய… என்று உடலாகின்றது.

சிதைந்த தன்மை வரும்போது அதே இடத்தில் உணர்வு சோர்ந்து வரும்போது சொன்னாலும் தான் அந்த பாகத்திற்குள் அதே அணு வளரும். இது எல்லாம் இயற்கையின் நிலைகள்.

அதாவது நாம் நுகரும் அந்த அணுக்கள் இங்கே வந்துவிட்டால் அந்தப் பாகத்தில் இருந்து சர்க்குலேசன் – ஓடி வரப்படும்போது நம் நினைவாற்றல் எதுவோ அந்தக் குறித்த இடம் வந்தவுடன் அந்த இடத்தில் தேங்கிவிடும்.

பின் அதனின் உணர்வின் தன்மை மலமாகும்போது எலும்பு தேய்வடையும். டாக்டரிடம் போனால் உங்கள் எலும்பு தேய்ந்து விட்டது என்பார்கள்.

இவர்கள் என்னால் நடக்க முடியவில்லை…! என்பார்கள். உடல் எடையின் தன்மை கூடும்பொழுது
1.முதலில் நேராக இருந்த கால்
2.தாங்காமல் நடந்து வந்தவுடன் இப்படிப் போகின்றது.

இவைகளையெல்லாம் அந்த இயற்கையின் நிலைகள் நமக்குள் எவ்வாறு மாற்றுகின்றது…? என்பதை நாம் பார்க்கலாம்.

இதைத்தான் கீதையிலே…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று
2.கண்ணின் இயக்கத்தையும் உயிரின் இயக்கத்தையும் தெளிவுற உணர்த்தினார்கள் ஞானிகள்.

கோவில்களிலே சொர்க்கவாசல் திறப்பு என்று வடக்கு வாசலைக் காட்டுகிறார்கள்… ஏன்…?

both-dippers north

கோவில்களிலே சொர்க்கவாசல் திறப்பு என்று வடக்கு வாசலைக் காட்டுகிறார்கள்… ஏன்…?

வருடம் முழுவதும் நேராகக் கோவிலுக்குள் போவோம். ஆனால் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசலைத் திறப்பார்கள். அதாவது வடக்கு வாசலைத் திறப்பார்கள்.

அன்றைய தினம் எல்லாக் கோவிலிலும் வடக்கு வாசல் வழியாகப் போகும் படி அந்தச் சொர்க்க வாசலைத் திறந்து வைத்திருப்பார்கள்.

நாம் வழக்கமாகத் தெற்கு வாசலில் இருந்தும் போகலாம். கிழக்கு வாசலில் இருந்தும் போகலாம். வடக்கு வாசலை மட்டும் என்றைக்கும் அடைத்து வைத்திருப்பார்கள். “அது தான் துருவ நட்சத்திரம் என்பது…!” (நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே இருப்பது துருவ நட்சத்திரம்)

ஆனால் இன்று சாங்கிய சாஸ்திரப்படி என்ன செய்கிறார்கள்…? வடக்கு வாசல் வழியாகக் கோவிலுக்குள் போய் சாமியைத் தரிசனம் செய்தோமென்றால் அன்றைக்கு “நமக்கு மோட்சம் பெறும் நாள்” என்று செய்து வைத்திருக்கின்றார்கள்.

அதே சமயத்தில் சொர்க்கத்தை அடைவதற்காக வேண்டி இராத்திரி எல்லாம் பட்டினியாக இருந்து விடிய விடிய முழித்துக் கொண்டு இருப்பதைக் காட்டி “நமக்கு நினைவும் படுத்துகின்றார்கள்…”

பரமபதம் என்று ஒரு அட்டையை வைத்திருப்பார்கள் அதிலே கீழே இருக்கும் கட்டங்களில் பல விதமான உயிரினங்களைப் போட்டிருப்பார்கள். முதலில் தாயம் போட்டவுடனே நகற்றிக் கொண்டே இருப்போம்.

ஒன்று இரண்டு மூன்று போட்டவுடன் ஒரு ஏணி இருக்கும் மேலே டக்… என்று மேலே போய்விடும்

மனிதனாக இருக்கின்றோம்…! பாம்பு வருகிறது என்று அந்தப் பாம்பை நாம் அடித்து விட்டால் அந்தப் பாம்பு மனிதனாகப் பிறக்கின்றது. அதே மாதிரி இந்த வால்பாகம் இந்த உணர்வின் தன்மை வந்தபின் டக்… என்று வந்தால் நேராக மேலே போகின்றது (பெரிய ஏணி).

பெரிய ஏணியை வைத்து மேலே போனாலும் பின்பு அதைக் கடந்து வந்தபின் பரமபதம் போவதற்கு முன் அங்கே விஷம் கொண்ட பெரிய பாம்பு இருக்கிறது.

தாயக் கட்டையை வைத்து உருட்டும்போது பாம்புத் தலை இருக்கும் அந்தக் கட்டத்தில் போனால் ஜர்.. என்று கீழே போய்விடும் எங்கே…? பாம்பிடம் பட்ட பிற்பாடு அந்த விஷத்தைக் கொண்டு நேராக பன்றியிடம் கொண்டு வந்து விட்டுவிடும்.

பன்றியிடம் வந்தபின்… மீண்டும்..
1.பன்றி எப்படித் தீமையை நீக்கி அந்த உணர்வின் தன்மை படிப்படியாக வலுப் பெற்றதோ
2.அதைப் போல தீமையை நீக்கும் ஆற்றலை நீ பெற வேண்டும்
3.மீண்டும் மனிதனாகி அதன் வழியில் வளர வேண்டும் என்று வரிசைப்படுத்தி இருப்பார்கள்.

இப்படி அந்தச் சொர்க்கவாசலை அடையும் வழியை… அந்தப் பரமபதம் என்ற ஒரு விளையாட்டின் மூலமாகக் கூடக் காட்டி
1.நமது வாழ்க்கையில் எப்படி எல்லாம் உயருகின்றோம்…?
2.எப்படித் தாழுகின்றோம்..? எப்படி நாம் மாறுகின்றோம்…? என்று காட்டுகின்றார்கள்.

பின் அந்தப் பெரிய பாம்பைக் கடந்து சென்றபின்தான் ஒவ்வொரு குணங்களுக்கும் நகர்ந்து சென்று அபாயம் இல்லாத நிலைகளை அடைகின்றோம். அப்படி அபாயம் இல்லாத நிலைகள் வரப்படும்போது “பூரண நிலைகள்” அடையும் தன்மை அங்கே வருகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் விஷத் தன்மைகளைக் கடந்த பின் அங்கே சொர்க்க வாசல் என்று (பரமபதம்) நமக்குக் காட்டுகின்றார்கள். சொர்க்கவாசல் என்பது… இந்த “உயிரின் வழி (வாசல்)” கொண்டு தான் அதை அடைய முடியும்.

ஏனென்றால் இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் நுகர்வது உயிரிலே பட்டுத் தான் அந்தந்த உணர்வுகள் நமக்குள் தெரிகின்றது.

ஆனால் அதே சமயத்தில் கண்ணிலே பார்த்த உணர்வின் தன்மை நம் உடலிலே பதிவாக்குகின்றது. பதிவானபின்.. அந்த எண்ணம் கொண்டு மீண்டும் கண்ணிலே பார்த்துத்தான் அந்த எண்ணங்களை எல்லாம் நாம் நுகர நேர்கின்றது.

அதைப் போன்று தான்…

1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன்.
2.உங்கள் நினைவைக் கூர்மையாக்கி இதைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
3.அந்தப் பதிவின் தன்மையை மீண்டும் கண்ணுக்குக் கொண்டு வந்து
4.“உங்கள் சொர்க்க பாதையான உயிரில் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்…!”

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டுமென்று இந்த உணர்வினை உள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து அதனின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றால் தீமைகளை அகற்றிவிட்டு என்றும் ஒளியின் சரீரமாகத் திகழ முடியும்.

இது நம்முடைய சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

மெய் உணரும் தியான முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Courageous meditation

மெய் உணரும் தியான முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பஞ்சு மிட்டாய் செய்யும் பொழுது… வேகக்கூடிய உஷ்ணமும்… அவ் இயந்திரம் ஓடக்கூடிய ஓட்டத்திலும்… “ஒரே பக்குவ நிலையில் ஓடும் பொழுது தான்…” ஒன்று போல அம்மிட்டாய்களைச் செய்ய முடிகின்றது. சிறிது பக்குவம் மாறினாலும் அமைப்பின் தன்மை மாறி விடுகின்றது.

அதைப் போன்றே… இயந்திரங்களில் நூற்பாலைகளில் பஞ்சின் தரத்தில் நூற்கப்படும் நூல்கள் ஓட்டத்தின் சமத்தைக் கொண்டு ஒரே போல் தரமுடன் நூல் நூற்கப்படுகின்றது. இயந்திர விசையின் வேகமோ… செயலாக்கும் திறமையில் மாற்றமோ ஏற்படும் பொழுது… நூலின் தரம் மாறுபடுகிறது இது செயற்கை.

ஓர் மரத்தில் காய்க்கும் காய்கள் அனைத்தும் ஒன்று போல் உருவத்தில் இருப்பதில்லை. பெரிதாகவும் சிறிதாகவும் கரடு தட்டியும் பூச்சி புழுக்கள் அரித்தும்… பூக்களானாலும் சரி… காய் கனிகளானாலும் சரி… ஒரே மரத்தின் கனியிலேயே மாறுபாடுகள் அந்தந்தக் கிளைகளில் எடுக்கப்படும் சத்தின் ஈர்ப்பைக் கொண்டு கனியின் வளர்ச்சி பிரிக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.

அதைப் போன்று ஒரு தாயின் குழந்தைகள் உணர்வின் தன்மைக்கொப்ப குணங்கள் மாறுபடுகின்றது. ஆனால் ஒரே சூலில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்து… தன் எண்ணத்தின் உணர்வு கொண்டு தானாய் வளரும் தருணம் வரை… இரண்டு குழந்தைகளின் உணர்வுகள் ஏறக்குறைய ஒன்று போல் இருக்கின்றன.

சூரியனின் ஒளி ஈர்ப்பில் பூமியின் எந்த நட்சத்திர ஒளிகளின் அலைத் தன்மை அதிகப்படுகின்றதோ அத்தருணத்தில் உருவாகக்கூடிய குணத்திற்கொப்ப… பிறப்பின் நிலை… ஜீவ அணுக்களின் வளர்ச்சி வலுக் கொள்கின்றது.

அந்தந்தத் தருணத்திற்கொப்ப நொடிக்கு நொடி மாறிக் கொண்டுள்ள சுழற்சி ஓட்டத்தில்… உணர்வின் எண்ணத்தில் மெய் அறியக்கூடிய பக்குவத்தை வளர்க்கும் மெய் ஞானியின் தன்மையும்… ஒன்றை ஒத்து ஒன்று இருக்காமல்.. மாறு கொண்ட நிலை இயற்கையின் உணர்வில் வளர்கின்றது.

செயற்கையின் தன்மையில் இயந்திர விசையின் ஓட்டத்தில் ஒன்றைப் போன்ற செயலைத் தரத்தில் செயலாக்க முடிகின்றது.

எப்படி மனிதனின் எண்ண உணர்வு செயற்கையின் விஞ்ஞானத்தில் பல செயல் திறமைகளை வளர்க்க முடிகின்றதோ… அதைப் போன்று இயற்கையில் மெய் உணரும் பக்குவ வழிமுறையை…
1.உணர்வின் எண்ணத்தில் எடுக்கக்கூடிய ஞானத்தை
2.நாம் ஒன்றை எண்ணும் பொழுது… மீண்டும் மீண்டும் அதையே எண்ணிக் கொண்டுள்ள தருணத்தில்
3.அவ் எண்ணத்திற்கு ஜீவித வலுவை ஆத்மாவின் பதிவாகச் செயல்படுத்தி விடுகின்றோம்.

எப்படி தோசையை சுட்டுப் போடும் பொழுது முதலில் சுட்ட தோசைக்கும் மேல் மேலும் அதற்கு மேலேயே சுட்டுப் போடும் பொழுது மேலிருக்கக்கூடிய உஷ்ணத்தை எடுத்து கீழிருக்கக்கூடிய தோசையும் சூடாகவே இருக்கின்றது அல்லவா…!

அதைப் போன்று…
1.நல்ல வழியோ தீயவையோ ஒன்றின் தொடரை எண்ணி எண்ணி
2.அதே தொடரில் எண்ணத்தை ஓட்டும்பொழுது
3.அதன் வலுவின் தன்மைதான் ஆத்மாவின் பதிவு.

ஜீவ ஆத்மாவின் உயிர் காந்தத்திற்கு… உண்மையான நல் உணர்வின் ஒளித் தன்மையை நம்மில் பெறுவதற்கு…
1.உயர் ஞானிகளின் எண்ணத்தை
2.சரீர ஓட்டத்தின் வாழ்க்கைத் தொடர் “கனவில்” அதிகமாக எண்ணத்தைச் செலுத்தாமல்
3.ரிஷிகளின் எண்ணத்தில் நம் எண்ணம் செல்லும் பொழுது
4.அவர்கள் பெற்ற ஒளித் தன்மையின் வலுவின் வட்டத்தில் நம் உயிர் ஜீவ அலைகள் பதிவாகி
5.நம் ஒளி வட்டமே உண்மைத் தன்மையை அறியக்கூடிய மெய் ஞானத் தன்மை பெற்று விடுகின்றது.

உணர்வில் மோதப்படும் வாழ்க்கையின் விருப்பு வெறுப்பற்ற வழித் தொடர் அடைய… நம் ஒளியின் தன்மை வளர்ச்சியின் வலுவினால்…
1.சலிப்பு சோர்வு என்ற வேண்டாத நிலைகள்… தீயவை எதுவாகிலும்…
2.அதை எல்லாம் சுட்டுப் பொசுக்கக்கூடிய ஒளித் தன்மையாக
3.ஆத்மாவில் மோதப்படும் எதுவாகிலும் அதை நம் இச்சைக்கு கட்டுப்படக் கூடிய செயலுக்கு
4.உணர்வின் எண்ணத்தை நாம் செலுத்தி எடுக்கக்கூடிய ஞானத்தின் தன்மை தான் “மெய் உணரும் தியான முறை…!”