பேய்.. பிசாசு… இரத்தக் காட்டேரிகள் உண்டா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

soul and body

பேய்.. பிசாசு… இரத்தக் காட்டேரிகள் உண்டா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பெரியோர்களின் வாக்குப்படி மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற சொல் கூற்று உள்ளது… அதன் தொடர் யாவை…?
1.பேயைப் பார்க்க முடியுமா…?
2.பிசாசு உண்டா…?
3.இரத்தக் காட்டேரிகள் வாழ்கின்றனவா..? என்பது யாவையும் உண்மைதான்.

தற்கொலை செய்து கொண்ட ஆவேச அலை உணர்வுடன் ஜீவன் பிரிந்த ஆவி உலக உயிர் ஆத்மாக்கள் சில இல்லங்களிலும் அவை வாழ்ந்த பழக்கப்பட்ட இடங்களிலும் அதன் எண்ண ஆசையைச் செயல்படுத்த வேண்டியவர்களின் தொடர் வட்டமுடன் இந்தக் காற்றலையின் சுழற்சியில் சுழன்று கொண்டே இருக்கும்.

அத்தகைய ஆவி உலக ஆத்ம உயிரின் அமிலக்கூறானது உள்ள இடங்களுக்கு சரீர ஜீவ பிம்ப உடல் கொண்ட எண்ண உணர்வுடைய மனிதன் பயம் கலந்த அச்ச நிலையுடன் பல உணர்வுகளில் செல்லும் பொழுது
1.ஆவி உலக ஆத்மாவின் அலைத் தொடரும்
2.சரீர பிம்ப உடலின் அலைத் தொடரும்
3.இவ் ஈர்ப்பலையில் மோதும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில்
4.ஜீவ சக்தி கொண்ட துடிப்பு நிலை பெற்ற எண்ண உணர்வுடன் அவ்வெண்ணம் மோதியவுடன்
5.இக்காந்த ஈர்ப்புக் குண மின் அலைத் தொடர்பு கொண்ட இச் சரீர கோள நிலையுடன் மோதியவுடனே
6.எந்தப் பயமுடன் இந்த ஆத்மா சென்றதோ
7.அந்தத் தொடர் அலைக்குகந்த எண்ண குண ஆவி ஆத்மாவின் அமிலக் கூற்றை
8.நிழல் படம் போல் இவ்வொலி நாத் சக்தி கொண்ட சரீர சுவாச மோதல் அதன் அலை மேல் பாய்ந்தவுடன்
9.அது பேசிய நாதத்தையும் (வாழ்ந்த காலத்தில்) அதன் நிழல் உருவை மனிதனால் பார்க்க முடியும். (இன்று காணும் ஒளிக்காட்சி ஒலி அலையைப் போல்)

இதைப் போன்ற தொடர் அலையில் இருந்தெல்லாம் மனித உணர்வுப் பிடி சிக்காவண்ணம் தன் ஆத்ம வலுவை… ஞான ஈர்ப்பு வழித் தொடர்பு கொண்ட “மகரிஷிகளின் தொடர் அலையுடன்…” வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அத்தகைய வலுக் கொண்ட ஜீவத் துடிப்பு ஆத்ம நிலை பெற்றுவிட்டால் நம் எண்ணமே நம்மைக் காக்கும் சக்தியாக வரும்.

எண்ணத் தொடர் அலையின் செயல் இல்லா நிலை (மனிதனுக்குள்) ஒரு நொடிப் பொழுதும் இல்லை.

நித்திரை உணர்வுகளிலும்… இச்சரீரச் செயல் நடைபெறும் வழித் தொடரில்… சுவாசமுடன் கூடிய உணர்வு எண்ண அலை ஈர்ப்பில் தொடர் கொண்ட நிலையுடன் தான் எண்ணச் சுழற்சி கொண்ட இயந்திரக் கோளமாக இந்த உடல் உள்ளது.

பிரபஞ்சத்தில் மற்ற கோளங்கள் எல்லாம் எப்படி நிற்காமல் ஓடிக் கொண்டே உள்ளனவோ அதைப் போன்றே
1.ஓடிக் கொண்டே உள்ள இவ்வெண்ண உணர்வு வளர்ப்பு நிலை
2.ஜீவ சக்தி கொண்ட மனித உடலுக்குத்தான் உண்டு.

ஆவி உலக ஆத்மாக்களின் எண்ண ஓட்டத்தின் வலு எப்படி உள்ளது…?

இன்று நாம் எப்படி சில ஒலிப் பதிவுகளை நாடாக்களில் பதிய வைத்து ஒலி பரப்புகின்றோமோ… அதைப் போன்று அவை சரீரக் கூறுடன் வாழ்ந்த காலத்தில்… தன் ஆத்மாவில் பதிய வைத்த அலைத் தொடர் நாதச் சேர்க்கையுடன் தான்… அதே தொடர்பு சுழற்சியுடன் அதே சுற்றலில் சுற்றிக் கொண்டுள்ளது.

அந்த நிலையில்… வளர் நிலை கொண்ட எண்ண சரீர உணர்வு இயந்திர மின் அலைத் தொடர்பு அவ்வலைத் தொடர்புடன் பொருந்தும் பொழுது தான் இவ் இயந்திரக் கோளப் பெட்டியின் (மனித உடல்) செயலைக் கொண்டு அதன் நிலை பெறுகின்றது.

இவ்வாவிகளின் சுழற்சி வலுக் கூடி அதன் தொடர்பு விட்ட செயலாகச் செயல் கொண்டுள்ள வழித் தொடர் ஜீவ ஆத்மாக்கள் தான் “இன்று பிறப்பில் வரும் ஆத்மாக்களின் தொடர் அலையே உள்ளது…!”

1.தன் ஞானத்தை வளர்த்து சித்து நிலை கொண்ட ஆத்மாக்களின் நற்சக்தியின் தொடர் அலையை அறியாவண்ணம்
2.பல வலுக் கொண்ட வெறி கொண்ட பக்தி இயக்க ஆத்மாக்களின் தொடர்பு தான் இன்று வலுவாகியுள்ளது.

விளக்கு பூஜையின் தத்துவம் என்ன…?

பொதுவாக நமது பெண்கள் மாலை ஆனதும் தீபம் ஏற்றி விளக்கு பூஜை செய்கிறார்கள். இதை தவிர, மாதந்தோறும் கோயில்களிலே 108 விளக்கு பூஜை 1008 விளக்கு பூஜை என்று கூட்டு தியானம் செய்கிறார்கள். இந்த விளக்கு பூஜையின் தத்துவம் என்ன?.

விளக்கைப் பொருத்தியபின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரிகின்றது.

விளக்கை வைத்தால் எப்படிப் பொருள் தெரிகின்றதோ அந்தச் சுடரைப் போல எல்லாவற்றையும் அறிந்திடும் அருள் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் எங்களை அறியாது வரும் இருள்களை நீக்கிடும் அருள்சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்பொழுது கோவிலில் போய் விளக்கை ஏற்றி வைத்து இதை வணங்குகின்றார்கள் ஆனாலும், அதே சமயத்தில் இவர்கள் வீட்டில் என்னென்ன கஷ்டங்கள் இருக்கின்றதோ இதை எல்லாம் போக்க வேண்டும் என்ற உணர்வை வைத்து,

1.விளக்கை வைத்து

2.அந்த ஆண்டவனுக்கு இப்படி ஜெபித்து வந்தால்

3.நன்றாக இருக்கும் என்று செய்கிறார்கள்.

நாம் பாலில் பாதாமைப் போட்டு அதிலே ஒரு துளி விஷத்தைக் கலந்து அந்த உணவைச் சாப்பிட்டால் நம்மை இறக்கச் செய்கின்றது.

இதைப்போலத் தான் விஷத்தன்மை கொண்ட உணர்வுகளில் இருந்து நாம் இதை விடுபடவேண்டும் என்றால்

1.விஷத்தன்மையை வென்ற

2.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும்.

வழக்கமாக விளக்கு பூஜை செய்யும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? புஷ்பத்தை எடுத்து அங்கே போட்டுக்கொண்டே இருப்பீர்கள்.

அந்த நேரத்தில் இதற்காக சில பேர் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு போடுவார்கள். இதனால் பலன் ஏதுமில்லை.

இதெல்லாம் பக்தி மார்க்கங்களில் ஒன்று சேர்த்து வாழ்வதற்கு ஒர் இணைப்புப் பாலமாகத்தான் அமைகின்றனரே தவிர அவர்கள் இந்த விளக்கு பூஜையினால் பலன் இல்லை. ஒன்று சேர்த்து வாழ முடியும்.

இந்த விளக்கு பூஜை நடந்து முடிந்த பிற்பாடு பாருங்கள் ஒருத்தருக்கொருத்தர் இந்த குறைபாடுகள் தான் வரும்.

ஆக குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா?இல்லை. நாம் புற நிலைக்காக விளக்கை வைத்துச் சென்றால் சரியில்லை. 

 

சாதாரணமாக கோயில்களில் விளக்கைக் காட்டுகிறார்கள் என்றால் எதற்காகக் காட்டுகிறார்கள்?

அங்கே இருட்டறைக்குள் மறைக்கப்பட்டு சிலைக்கு பல அலங்காரம் செய்து கனிகளும் பொருள்களும் வைத்துள்ளார்கள். அப்பொழுது அங்கே விளக்கைக் காட்டும்போது என்ன தெரிகின்றது? மறைந்த நிலைகள் அனைத்தும் அந்த வெளிச்சத்தில் தெரிகின்றது.

 அப்பொழுது என்ன எண்ண வேண்டும்? பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும்.

நாங்கள் பார்ப்போர் குடும்பங்களில் உள்ள அனைவரும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும். இந்த ஆலயம் வருவோருக்க்கெல்லாம் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெறவேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

இப்படி எண்ணும்போது இந்த விளக்கு பூஜை எப்படி இருக்கும்? கோவிலில் இப்படிக் காட்டப்படுகின்றது.

ஆகவே, அந்த விளக்கு என்பது என்ன…?

நாம் வேதனைப்படும்போது நமக்குள் மனம் இருண்டுவிடுகின்றது. அப்பொழுது, 

1.நம் மனம் இருளாது அருள் ஜோதியாக இருக்க வேண்டும், 

2.தெளிந்த மனம் பெறவேண்டும் என்ற உணர்வை எண்ணி,

3.அந்த உணர்வை நாம் நுகர்ந்தோமென்றால்

4.அது உண்மையான விளக்கு பூஜை ஆகும்.

முருகன் காட்சி கொடுப்பானா…? எந்த வழியில் கொடுப்பான்…?

LORD MURUGAN VISION

முருகன் காட்சி கொடுப்பானா…? எந்த வழியில் கொடுப்பான்…?

 

முருகன் சிலையை அழகாக வடித்து அலங்காரமாகச் சித்தரித்துக் காட்டுகின்றார்கள். முருகனை வழிபட்டு வந்தால் “அவன் நமக்கு வேண்டிய வரங்களைத் தருவான்… நம்மைக் காப்பான்…!” என்ற ஆசையையும் ஊட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் முருகன் அருளைப் பெற வேண்டும்…! என்றால் என் மனைவி மக்களுடன் நான் சாராது அவர்களை ஒதுக்கிவிட்டுக் கடும் ஜெபங்கள் இருந்து அந்த ஜெபத்தின் வழி கொண்டு செயல்பட வேண்டும் என்று முயற்சிக்கின்றார்கள்.

அங்கே சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்த முருகனின் படத்தை உற்று நோக்கி அதற்கு மலர்களும் ஆடைகளும் உணவுகளும் பதார்த்தங்களும் இடப்பட்டு மந்திரங்களைச் சொல்லி அவன் அருள் பெறவேண்டும் என்று செயல்படுத்துகின்றனர்.

முருகனைக் கண் கொண்டு உற்றுப் பார்க்கும் பொழுது இந்த உணர்வுகள்…
1.அந்தப் படத்திலிருந்து வரக்கூடிய அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வருகிறது.
2.அந்தப் படத்தை எனக்குள் ரூபமாகக் காட்டுவதும் என் கண்களே.
3.படத்தில் என்னென்ன கலர்கள் இருக்கின்றதோ அதை நுகர்ந்து “படம் இருக்கின்றது…” என்ற ரூபத்தைக் காட்டுவது என் கண்கள்.
4.சூரியன் கவர்ந்து வைத்துள்ள அந்த ரூபத்தின அலைகளை என் உடலுக்குள் பரவச் செய்து ரூபமாக எனக்குள் காட்டுகின்றது.

அந்த உணர்வுகளை எனக்குள் அலைகளாக மாற்றப்படும் பொழுது அதையே பல காலம் ஜெபித்தால் உடலிலே வலுவாகின்றது.

“இன்னென்னெ மந்திரங்களைச் சொன்னால் அந்த முருகனையே கைவல்யப்படுத்தலாம்…!” என்று சிறு சிறு புத்தகங்களைக் காட்டி அதிலே விளக்க உரைகளைக் கொடுத்திருப்பார்கள்.

கைவல்யம் செய்வதற்குண்டான பொருள்களை இட்டு நூற்றியெட்டு ஆயிரெத்தெட்டு இலட்சத்தியெட்டு என்ற நிலைகளில் இந்த மந்திரங்களை “நீ ஜெபித்தாய் என்றால்… முருகன் வசப்பட்டு உன்னிடம் அருகில் வருவான்…!” என்று புத்தகத்தில் காட்டப்பட்டிருக்கும்.

அதில் சொன்னபடி அந்த எண்ணம் கொண்டு நான் செய்யும் பொழுது
1.முருகன் படத்தை உற்றுப் பார்த்து அதில் என்னென்ன பொருள்களைப் போட்டேனோ… மந்திரம் சொன்னேனோ…
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு கவர்ந்தது அனைத்தும் எனக்குள் அலைகளாகப் பெருகிவிடுகிறது
3.என் கடைசிக் காலத்தில் நான் இறந்துவிட்டால் இந்த உடல் அழிந்த பின்
4.இந்த உடலுக்குள் எடுத்துக் கொண்ட ரூபங்கள் அந்த முருகனைப் போல் உணர்வுகள் எனக்குள் நிற்கும்.

இதே மந்திரத்தை மற்றவர் ஜெபிப்பார்கள் என்றால் படர்ந்திருக்கும் அலைகள் கொண்டு அவன் ஈர்ப்புக்குள் குவிந்து முருகனாகவே தெரியும்.

டி.வி. நிலையத்திலிருந்து எந்தெந்த அலைகளைப் பரப்பி வைத்திருக்கின்றனரோ அதே அலை வரிசையில் வரப்படும் பொழுது ஒலி பரப்பாகும் படங்கள் அலைகளாக மாறி வருவதை டி.வி மூலம் ரூபங்களாகப் பார்க்கின்றோம். இதைப் போல்
1.நான் ஜெபித்த உணர்வுகளை நீங்களும் ஜெபிக்கத் தொடங்கினால்
2.அதே உணர்வலைகளாகப் படரப்பட்டுக் குவிக்கப்படும் பொழுது
3.நான் முருகனாகவே (காட்சியாக) வருவேன்.

ஒரு கேமரா மூலம் எடுக்கப்பட்ட பட அலைகளின் தொகுப்பை மீண்டும் அதற்குண்டான சாதனைத்தை (PLAYER) வைத்து இயக்கப்படும் பொழுது அதிலே பதிவான உருவங்களின் அசைவுகளும் செயல்களும் நிஜமாக நடப்பது போல் தெரிகின்றது. ஆனால் நிறுத்தி விட்டால் பொம்மையாகத் தெரிகின்றது.

இதைப் போல்…
1.நம் உணர்வின் ஓட்டங்களில் நுகரப்படும் பொழுது அந்த உணர்வுகள்
2.அந்த முருகனே நடந்து வருவதாகவும் செயலாக்கங்களைச் செயல்படுத்துபவனாகவும்
3.அந்த உணர்வின் ஒலிகள் எனக்குள் பட்ட பின் எனக்குள் நேரடியாக வந்து உணர்த்துகின்றான் என்ற நிலைகளும்
4.கவிகள் பாடுகின்றான்..! என்ற நிலையும் எனக்குள் தெரியும்.

ஆனால் என் அருகிலே மற்றவர்கள் இருந்தாலும் இதைப் போல் நான் கவர்ந்து கொண்டது அருகில் இருப்போருக்கு இது தெரியாது.

1.என்னிடம் முருகன் பேசுகின்றான் என்றாலும்
2.எங்கே பேசுகின்றான்…? என்று உற்றுப் பார்த்தாலும் தெரியாது.
3.ஜெபித்த மந்திரத்தின் உணர்வு கொண்டு ஆழமாகப் பதிவாக்கி விட்டால்
4.அதே உணர்வைக் கவர்ந்து அதே எண்ணம் தான் வளரத் தொடங்கும்.

எந்த ஆசைகளை வைத்து மனைவி மக்களைத் துறந்து விட்டு முருகனை அடையப் போகின்றேன் என்ற உணர்வை வளர்த்துக் கொள்கின்றனரோ இதே மந்திரத்தை ஜெபித்த பின் அவன் பெண்டு பிள்ளைகளைத் துறந்து விடுகின்றான்… சொத்து சுகத்தையும் துறந்து விடுகின்றான்…!
1.சாட்சாத் முருகனே என்னிடம் வந்துவிட்டான்… அவனே கொடுப்பான் என்று
2.துறவறம் பூண்டு அவன் ஊர் ஊராகச் சுற்றி அலையத் தொடங்குகின்றான்.

இருந்தாலும் “பிச்சாந்தேஹி…!” (உணவு) என்ற நிலைகள் கொண்டு இந்த உடலை வளர்க்க இன்னொருவரிடம் யாசகம் கேட்டுத் தான் ஆகவேண்டும்.

முருகனைப் பற்றி எண்ணி வளர்ந்த உணர்வின் தன்மை… வலிமை மிக்கதாக இருக்கும் பொழுது அடுத்தவருக்கு அருள் வாக்காகச் சொல்லப்படும் போது அவருடைய துயரங்களோ அல்லது சில ஆவியின் நிலைகள் இருந்தால் அது எல்லாம் அகன்று விடும்… நல்லதாக மாறும்.

இப்படி மற்றவர்களுக்கு நல்லதாகும் பொழுது “இவனைக் கடவுளின் தூதுவன்…!” என்று நாம் புகழ் பாட ஆரம்பித்துவிடுகின்றோம்.

எந்த மந்திரத்தால் அவன் மந்திரத்தை ஜெபித்து அந்த உணர்வின் தன்மையைக் கொண்டானோ அதே உடலில் வளர்ந்த அந்த உணர்வுகள் வரப்படும் பொழுது மற்றவர்களும் இவனை அணுகி வருவார்கள்.

1.எங்கள் குறைகளை எல்லாம் நீக்க வேண்டும்
2.நீங்கள் தான் கடவுள்…
3.முருகன் அருளைப் பெற்றவர் நீங்கள் தான்…! என்ற உணர்வின் ஒலிகளை
4.அவன் செவிகளில் ஓதப்படும் பொழுது அவன் உயிரிலே பட்ட பின் அது உடலுக்குள் அணுவாக மாற்றிவிடுகின்றது.

இவ்வாறு சில காலம் அவரின் சக்திகள் செயல்படும்.

அந்தச் சில காலத்திற்குள் அவன் கேட்டுணர்ந்த பிறர் கஷ்டங்களை எல்லாம் இவன் உடலுக்குள் உருவாக்கும். உடலிலே தீய அணுக்கள் வளரும்.

முருகன் அவனுக்குச் சக்தி கொடுத்தான்…! என்று எண்ணுவார்கள். ஆனாலும் அதை வைத்துப் பிறருடைய தீமைகளை நுகரப்படும் பொழுது கடைசியில் இவனுக்குள் நோய்கள் வரும்.

நோய் வந்ததும் இவர் சொல்வார்..
1.எனக்குள் முருகன் வந்தான்…
2.அருளைக் கொடுத்தான்…
3.எத்தனையோ காட்சிகளையும் கொடுத்தான்…
4.ஏனோ என்னைச் சோதிக்க… என் உடலுக்குள் நோய்கள் வருகின்றது…!
5.முருகன் என் மீது இப்பொழுது இரக்கப்படவில்லை…! என்று இவன் துடிப்பான்.

ஏனென்றால் முருகன் இவ்வாறு வரவில்லை…! சாதாரண மனித உணர்வுக்குள் சுழன்றிடும் உணர்வின் அலைகள் தான் இது. கடைசி முடிவு இப்படித் தான் இருக்கும்.

வலுக்கொண்ட ஆத்மாக்களைப் பற்றியும் வலு குறைந்த ஆன்மாக்களைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

POWER MAN MEDITATION

வலுக்கொண்ட ஆத்மாக்களைப் பற்றியும் வலு குறைந்த ஆன்மாக்களைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உயிரணுவாகத் தோன்றிய பின் அவ்வுயிரணுவின் வளர்ப்பு முலாம் ஒவ்வொரு செயலிலும் வளர்ப்பு செயல் மோதுண்டு மோதுண்டு… அவ்வுயிரணுவின் மோதலின் வளர்ப்பு வலுக் கொண்டு… ஆத்ம நிலை பெறும் நிலையை முந்தைய பாடத்தில் உணர்த்தினேன்.

உயிரின் ஆத்ம நிலைக்கு எப்படி அதன் உராய்வுத் தன்மையால் வலுக் கூடுகின்றது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு தென்னை மரத்தின் பலனாக அதன் உச்சியிலே பல காய்கள் வருகின்றது.
1.அந்தக் காய்களில் இளநீர் வளர்ந்து
2.அந்த நீரானது அதன் உஷ்ண அலையில் அம்மட்டையில் உள் பாகத்தில் உராய்ந்து
3.வேடு கட்டி… வேடு கட்டி… நீரின் நிலை சுண்டி… பருப்பு வளர்ந்து… பின் முற்றி…
4.அதன் பலனான எண்ணை வித்தை வளர்க்கின்றது

தென்னை மரத்தின் வேர் நிலையிலிருந்து அது சத்து எடுப்பதில்லை.

மேல் நோக்கிய சுவாசம் கொண்டு தாவர இனத்தின் ஈர்ப்பு நிலையில் மோதலில் ஒளி பட்டு அது ஈர்த்துக் கீழிருந்து மேல் வளரும் வளர்ப்பின் பலனின் தன்மையில் பல வித்துக்களைத் தென்னை மரம் வளர்த்துக் கொள்கிறது.

இதைப் போன்று தான் ஒவ்வொரு வளர்ப்பின் வித்தின் தொடர் வளர்ப்பும். அதாவது ஒரு அணு வளர்ச்சியின் முலாம் ஒன்றில் மோதி வலுக்கொண்ட தன்மை பெறுவது போன்றே
1.இந்த மனித ஆத்ம உயிரின் வளர்ப்பு நிலையின் வலுவை
2.இவ்வாத்மா சேமித்துக் கொள்கின்றது.

சேமித்த வலுவின் தன்மை எத்தகையது…?

1.நீரில் மிதக்கும் மரங்களைப் போன்ற வலுக் கொண்ட நிலையை
2.இந்த ஆத்ம உயிர் பெற்றதென்றால்
3.எவ்வீர்ப்பின் பிடிக்கும் சிக்காமல்
4.இச்சரீர பிம்பமே காந்த மின அலை ஒளி சக்தி பூண்ட உயர்வு நிலை கொண்ட ஆத்மாவாகலாம்.

அன்றைய சித்தர்களும் சப்தரிஷிகளும் தன் சரீர பிம்பத்தையே இந்நிலைக்குகந்த வளர் நிலைக்கு உட்படுத்தித்தான் தன் வளர்ப்பின் வளர் நிலையைப் பெற்றார்கள்.

நல் வழியின் ஒளி நிலை கொண்ட உயர் ஆத்ம வழித் தொடர் பெறாத நிலையில் பல எண்ண நிலையுடன் வாழக்கூடிய தன்மையில் பிரிந்து சென்ற ஆன்மக்கள் அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள இக்காற்றலையில் படர்ந்தே உள்ளது.

அத்தகைய பல எண்ணங்கள் கொண்ட ஆத்மாக்கள் அதற்குகந்த அதன் செயலைச் செய்விக்க அதற்குச் சொல்லாற்றலும் செயல் திறமையும் இல்லாத தன்மையில் அதன் எண்ண ஆசையை நிறைவேற்றிக் கொள்ள உடலுடன் வாழும் மனித உடலில் சாடுகிறது.

1.அப்படிச் சாடும் பொழுது தான் சிலருக்கு வாதத் தன்மையும் இதன் தொடர்பு கொண்ட சில வியாதிகளும்
2.அந்த அலைகள் உடல் மேல் பாய்ந்தவுடன் அதன் தன்மையை உடல் ஏற்காத பட்சத்தில்
3.எந்த இடத்தில் எவ்வலை சாடியதோ அவ்விடத்தில் வளரும் அணு வளர்ச்சி குன்றி
4.பாய்ந்த பிற ஆன்மாவின் குணத் தன்மைக்குகந்த அணுவை வளர்ப்பதனால்
5.அந்த வளர்ப்பின் வலுவை உடலுக்குகந்த ஆத்மா ஏற்காத பொழுது
6.உடலைச் சுற்றியுள்ள ஆத்மாவானது அவ்விடங்களுக்குத் தன் அலையை அனுப்ப முடியாதததனால்
7.அந்த இடங்களில் உள்ள உறுப்புகள் செயலிழந்த நிலை ஆகின்றது

இளம்பிள்ளை வாதங்களில் செயலற்ற தன்மையிருந்தாலும் அங்கங்களின் நரம்பு மண்டலத்தில் உதிர ஓட்டங்களும்… துடிப்பு நிலையும் உள்ளது.

உதிர ஓட்டம் இல்லாவிட்டால் உடல் அழுகிய தன்மையல்லவா பெற்றிருக்கும். உடல் முழுமைக்கும் தொடர்பு கொண்டல்லவா அச்செயல் இருக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் பாய்ந்த மாறு கொண்ட அணு வளர்ப்பின் நிலையினால் இவ்வாதத் தன்மை கொண்ட வியாதியின் வளர்ப்புகள் வளர்ந்துள்ளன.

சமமான வாழ்க்கையற்றவர்களின் வாழ்க்கையில் எல்லாம்… அவரவர்களின் குண நிலைக்குகந்த சுவாசத்தால்… அதற்குகந்த பலனான தொடர் அலை செயலைத்தான்… இந்தக் காற்று மண்டல ஈர்ப்பிலிருந்தும் பெற முடியும்.

அதாவது காற்றில் கலந்துள்ள ஆத்மாக்களுக்கு நாம் தரும் இடத்திற்குகந்த வலுவாகத்தான் நம் சரீர பிம்பத்தின் ஆரோக்கிய நிலையே வளர்கின்றது.

1.எதனையும் செயலாக்கக்கூடிய எண்ண சக்தியின் வலுவைக் கொண்ட மனித ஆத்மாக்கள்
2.ஆவி உலக ஆத்மப் பிடியில் தான் இன்றைய காலத்தில் சிக்கியுள்ளது (இது தான் உண்மை)
3.அதிலிருந்து மீளும் நிலையில்லாத செயலாகத் தான் தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்த ஆவி உலக ஆத்மாக்களின் பிடியிலிருந்து விடுபடத்தான் ஆத்ம சுத்தி பயிற்சியே கொடுக்கின்றோம்.. இந்தப் பாட நிலைகள் அனைத்துமே அதற்குத்தான்…!

ஞானிகளை அணுகுவோர் உடலுக்கும் செல்வத்திற்கும் தான் கேட்கின்றார்களே தவிர “ஞானத்தைக் கேட்க முற்படவே இல்லை…!”

BLESSINGS OF GNANIS

ஞானிகளை அணுகுவோர் உடலுக்கும் செல்வத்திற்கும் தான் கேட்கின்றார்களே தவிர “ஞானத்தைக் கேட்க முற்படவே இல்லை…!”

 

இராமனைக் கண்ணிலே கண்டார்… ஆஞ்சநேயரைக் கண்டார்… அதன் உணர்வின் நிலைகளை ஆட்டிப் படைத்தார்… கண்ணனைப் போன்று அவன் செயலாக்கங்களைச் செய்தார்… “அத்தகைய அருள் சக்தி பெற்றவர் தான் இராமகிருஷ்ணர்…!” என்று அவரின் புகழ் பாடி அதன் வழி கொண்டு பின் வந்தோர் இதை மக்களின் மத்தியில் பறைசாற்றி இந்த உணர்வின் தன்மையை இவருக்குள் சாகாக்கலையாக வளர்த்துக் கொண்டார்கள்.

1.அதன் வழியில் தான் பெரும் பகுதியானோர் வருகின்றனரே தவிர
2.அந்த ஞானி காட்டிய உண்மைகளைக் கூட இன்று வளர்க்க முடியவில்லை.

இந்த நூற்றாண்டில் இராமகிருஷ்ணர் கீதையைப் பற்றிச் சொல்லி வெளிப்படுத்தியதை எல்லாம் அதன் சார்புடையோர் கீதை நூல்களைப் படித்து “அவரவர்கள் விளக்க உரைகளைக் காட்டி…” அதன் வழி தான் மக்களுக்கு உபதேசித்துள்ளார்கள்.

பேரண்டத்தின் உண்மையின் உணர்வுகளை இராமகிருஷ்ணர் அறிந்தாலும் அந்த உணர்வின் துணை கொண்டு விவேகானந்தரும் அறிந்தாலும் அவர்கள் வழிப்படுத்திய நெறி… செயல்படச் சொன்ன முறை..
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்துப் பழகு
2.நீ எண்ணும் எண்ணத்தை உனககுள் அது உள் நின்று இயக்குவதை
3.அந்த உன் எண்ணமே கடவுளாகின்றது என்று தெளிவாக்கியுள்ளார்கள்.

இதை எல்லாம் நமக்கு யாரும் எடுத்துச் சொல்லவும் இல்லை.. அதன் வழி நாம் செல்லவும் இல்லை.

காலத்தால் நாம் ஆசையில் சிக்கப்பட்டு இன்று
1.இதன் வழிகளிலே சென்றால் நம் வியாபாரத்தைப் பெருக்கலாம் ஆண்டவன் அருளைப் பெறலாம் என்று சிலர் செல்கின்றனர்.
2.இன்னொரு சாரார் நாம் இந்த வழிகளில் சென்றால் சாது என்ற நிலைகளை அடையலாம்
3.ஆசை என்ற நிலைகளில் விடுபடலாம் என்றும் தனக்குள் விடுபடும் உணர்வுகளை வளர்த்து
4.கடைசியின் விரக்தியின் தன்மையை வளர்த்து அடங்கிடும் நிலை வருகின்றது.

செல்வம் இருந்தாலும் அடங்கி வாழலாம்…. செல்வம் இல்லை என்றால் உணவுக்காகத் தன் உணர்வின் தன்மையை மற்றவருக்குப் பறைசாற்றி அதன் வழியில் பொருளை ஈட்டி இந்த உடலை வளர்க்கலாம்.

இப்படித்தான் வாழ முடிகிறது…!

மடாதிபதிகள் தான் எடுத்துக் கொண்ட கொள்கையிலே
1.அவர்கள் உருவாக்கிய மடாலயங்கள் கொண்டு செல்வங்களை ஈட்டுவதும்
2.அதன் துணை கொண்டு பெரும் செல்வத்தை அடைய
3.அதிலே முன்னணியிலே இருப்பவரைக் குற்றவாளியாக்குவதும்
4.பின் அந்தச் செல்வத்தைக் கைப்பற்றிச் சுகபோகங்களை அனுபவிக்கும் நிலைகள் தான் மடாலயங்களில் வருகின்றது.

இப்படி… அன்றைய ஞானிகள் வெளிப்படுத்திய அருள் ஞானங்களை எல்லாம் பக்தி கொண்ட சிலர் அதற்குள் புகுந்து… பக்தியும் பற்றும் கொண்டு நடந்தால்… “தெய்வம் உனக்குச் செய்யும்..” என்ற இந்த நம்பிக்கையைத் தான் பெரும்பகுதி மடங்களிலிருந்து வெளிவரும் நிலைகள் ஊட்டுகின்றார்கள்.

இது தான் இன்றைய நிலை…!

பிம்ப உடலைப் பற்றியும்… ஆத்மாவின் இயக்கத்தைப் பற்றியும்… ஈஸ்வரபட்டர் சொன்னது

value of human soul

பிம்ப உடலைப் பற்றியும்… ஆத்மாவின் இயக்கத்தைப் பற்றியும்… ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனிதன் எடுக்கும் குண நிலையில்…. அவன் எண்ண உணர்வில் சமைக்கப்பட்ட ஆவியின் வலு தான்
1.ஆத்மாவின் உராய்வுக் கவசமாக உராய்ந்து உராய்ந்து
2.அதன் வலுத் தன்மையைக் காந்த ஈர்ப்பு வளர்ப்பாக
3.இந்தப் பிம்ப உடலின் அச்சான எலும்புகளின் வளர்ப்பின் உராய்வு வலுக்கூடி ஆத்மாவின் வலுவும் வளருகின்றது.

இந்தப் பிம்ப உடலின் நிலை கொண்டு பல செயல்களைச் செயல்படுத்த முடியும். பல கோடி ரூபத்தில் வளர்ப்பின் வளர்ப்பாக… பல கோடி மண்டலங்களை வளர்க்கக்கூடிய… “வளர் நிலைக்குகந்த வலுவான வித்துத்தான் இந்தப் பிம்ப உடல்….!”

சப்தரிஷிகளின் செயலை வளர்க்கவும் இவ்வொளி நாதச் செயல் கொண்ட… “ஜீவத் துடிப்பு உள்ள எண்ணத்தின் சரீரத்தினால் தான்” முடிகின்றது.
1.பல கோடிச் சக்திகளை உருவாக்கும் சப்தரிஷிகளே…
2.இப்பிம்ப உடலின் தொடர்பு கொண்டு தன் வலுவை வளர்க்கின்றார்கள்.

அதனின் உண்மைப் பொருள் தான் நாம் இன்றளவு காணும் இயேசு கிறிஸ்து ஐயப்பன் முகமது நபி ஆதிசங்கரர் போன்ற தெய்வீக வளர் நிலையின் உண்மைத் தன்மை கொண்டவர்கள்.

ஆகவே…
1.ஜீவ சக்தி கொண்ட துடிப்பு ஆத்மாவினால் தான்
2.இச்சரீரம் சமைக்கும் உணர்வின் வலுவைக் கொண்டு
3.பல வலுவான வளர்ப்பின் வளர்ப்பாக இச்சரீரக் கூட்டின் தொடருடன் வளர்க்கலாம் என்ற
4.இச்சரீர பிம்பத்தின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.

ஜீவன் பிரிந்த ஆத்ம உயிருக்குத் துடிப்பு நிலையும் நாத ஒலி வெளிப்படுத்தும் ஜீவத் தொடர்பும் இல்லாததனால் அதன் எண்ணத்தின் ஈர்ப்பைத் தன் எண்ண அலைக்குகந்த ஆத்ம உடலில் ஈர்க்கப்பட்டு தன் ஆத்மாவின் உயிரையே தன் குண நிலைக்கொத்த உணர்வு நிலை கொண்ட ஜீவ சரீர ஈர்ப்பிற்கு (தாய் உடலில்) வந்து பிறப்பெடுக்கும் ஆத்மாவும் உண்டு.
ஆனால் இப்படி
1.இயல்பாகப் பிறப்பிற்கு வரும் ஆத்மாவிற்கு மேல்
2.வலுவான எண்ண வேட்கை கொண்ட ஆத்ம உயிர் பிற உடலுடன் உள்ள ஆத்மாவின் மேல் படரும் பொழுது
3.அதனின் வலுவுக்கு மேல் வலுவான ஆத்மாக இது செயல்பட்டு
4.அதனால் சிலருக்குப் புத்தி பேதலித்த நிலையும்
5.சிலருக்குக் கொடூர எண்ணங்களின் வெறி நிலை கொண்ட குண நிலையும் அமைகின்றது.

இந்தக் குண நலத்தின் எண்ண மாற்ற உணர்வினால் சில அலைத் தொடர்புகளின் ஆத்ம உணர்வின் ஈர்ப்பினால் மனிதன் தன் நிலையையே மறக்கின்றான்.

பேய் பிடித்து விட்டது… பிசாசு பிடித்தது…! என்றெல்லாம் இதைத்தான் சொல்வது…!

உயிர் நெருப்பு… உடல் அடுப்பு… அதிலே சமைக்கப்படும் எண்ணங்களுக்கு ஒப்பத்தான் வாழ்க்கை…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Divine light Bliss

உயிர் நெருப்பு… உடல் அடுப்பு… அதிலே சமைக்கப்படும் எண்ணங்களுக்கு ஒப்பத்தான் வாழ்க்கை…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.இந்தப் பிம்ப உடலையே அடுப்பாக்கி
2.இச்சரீர உடல் எதைச் சமைத்து அனுப்புகின்றதோ இதன் சத்தை ஆத்மா எடுத்து
3.அவ்வாத்மாவின் செயலுக்குகந்த நிலையைத்தான் உயிர் செயல்படுத்துகிறது.

சரீரத்தில்… சரீரத்தையே வளர்க்க… வலுவாக்கி.. ஆத்மாவின் அமில வளர்ச்சிக்குகந்த… சுவை கொண்ட உணர்வாகத்தான் இந்தச் சரீரக் கூடு உள்ளது.

ஆத்மா பெற்ற வலுவைக் கொண்டு அவ்வாத்மாவின் உயிரானது
1.எந்த நிலத்தில் (தாய் கருவில்) ஆத்ம உயிரின் அமிலக் கலவைக் கூடு உராய்ந்து
2.இவ்வாத்மாவின் ஆவி நிலை சுழற்சியில்… பிம்பமற்ற முறையில்…
3.தன் அமிலச் சுவைக்கு உணர்வு சொல் நாத சக்தியும் இல்லா நிலையில்…
4.நிலமான தாய்க் கருவில் வளர்ப்பு நிலைக்கு வந்தவுடன்
5.தாயின் உணர்வு சுவாச நாத நிலையினால் இவ்வாத்ம உயிருக்கு உணர்வு எண்ண மோதல் உருவாகும் தருணத்தில்
6.இந்நாதத்தின் துடிப்பு இயக்கத்தால்
7.ஆத்ம உயிரின் உராய்வு சேர்க்கை கொண்ட சரீர அவயங்களின் உருவக வளர்ப்பு நிலை கொண்டு பிறப்பெடுத்து வளரும் தருவாயில்
8.இதில் எடுக்கும் உணர்வுத் துடிப்பு சுவாசத்தில் உண்ணும் உணவை மட்டுமல்லாமல்
9.எந்தெந்த எண்ணக் கலவைகளை எண்ணி எண்ணி இச்சரீரச் சுவாசத் துடிப்பு உள்ளதுவோ
10.அதற்குகந்த அமில இனத்தை இச்சரீரம் சமைத்து வெளிப்படுத்தும் அலை உணர்வைத் தான்
11.ஒவ்வொரு ஆத்மாவும் வலு கூட்டிக் கொள்கின்றது.

இப்பிம்ப உடலின் மோதலினால்… அதாவது “மோதல்…” என்பது இந்தப் பூமியின் பிடிப்பிலும் சூரியனின் அலை வீச்சிலும்… இச்சுழற்சியின் சுழலுடன் இவ்வலை மோதலின் பிடிப்புடன் வாழும் இச்சரீரத்தின் மேல்… இந்தப் பூமியைச் சுழல வைக்கும் இக்காற்றலையின் ஆகர்ஷண சக்தியானது இந்தப் பிம்பத்தின் மேல் மோதுகிறது.

மோதி… அந்தப் பிம்பத்தின் துடிப்பு நிலை செயல்பட்டால் தான் சுவாச நிலை வரும். சுவாசமெடுத்த பின் நெற்றியில் கவன நரம்பிற்குள் மோதும். அடுத்து அதன் தொடர் கொண்ட ஈர்ப்பு சிறு மூளைக்குச் செல்கிறது.

அங்கே சென்ற பின் இந்தச் சரீர பிம்பக் கோளமே இயங்கவல்ல அடுப்பைப் போன்று அதில் போடப்படும் எண்ண உணர்வையும் உண்ணும் உணவும் சரீர அவயங்கள் அதைச் சமைத்து “ஆவியாக்குகின்றது…” அந்த ஆவியின் சக்தியை இவ்வாத்மா ஈர்த்துத் தான் இந்தப் பிம்ப உடல் வாழுகின்றது.

அப்படி வாழ்ந்தாலும்.. உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் குண நிலைக்குகந்த சம நிலை கொண்ட வாழ்க்கை நிலை அமைத்துக் கொண்ட மனிதனால் தான்… ஆரோக்கிய நிலையுடனும் நீண்ட நாள் வாழ்க்கை வாழ முடிகின்றது.

தான் பெற்ற வலுத் தன்மையின் சக்திக்கு உகந்த செயலை அந்த உடலுக்குத் தரும் பொழுது உடல் என்ற இயந்திரக் கோளமானது சீராகச் செயல் கொள்ளும்.

அதை விட்டு மனிதன் தன் எண்ண உணர்வையே இன்று பல ஈர்ப்பின் பிடியில் சிக்கிப் பேராசைப் பிடி அலைக்காகத் தன் எண்ணத்தைப் பல நிலைகளில் மோதவிட்டுத் தனக்கு எண்ணத்தின் சாதகமற்ற நிலை ஏற்படும் தருவாயிலெல்லாம்
1.சலிப்பு… கோபம்… ஆத்திரம்… வேதனை… என்ற இப்படிக் கனமான சுவாச அலையை எடுத்து எடுத்து
2.அக்குணமுடன் உள்ள நிலையில் எண்ணக்கூடிய உணவும்
3.அதே அமிலத்தைத்தான் இந்த உடலுக்குள் வளர்க்க முடிகின்றது.

இச்சரீரத்தில் சமைக்கப்படும் நிலையையே இந்த எண்ணத்தால் கனமாக்கி அதன் வலுவை அவ்வாத்ம உயிருக்குத் தரும் பொழுது ஏற்கனவே பழக்கப்பட்ட வலுவாகி வாழ்ந்திருக்கும் ஜீவத் துடிப்புடன் இது கலந்து… சிறுகச் சிறுக மாறு கொண்டு விடுகின்றது.

1.மாறு கொண்ட எண்ண உணர்வுகளை இந்தச் சரீர பிம்பம் எடுக்கும் பொழுது
2.அதை ஏற்காத நிலை கொண்டு இச்சரீர அமைப்பில் சுகவீனம் காணுகின்றது.

இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

இருள் சூழ்ந்த உலகம் வேண்டாம்..! என்று சொன்னவர்கள் தான் இராமகிருஷ்ணரும் விவேகானந்தரும்

eternal light destinations - vivekanandar

இருள் சூழ்ந்த உலகம் வேண்டாம்..! என்று சொன்னவர்கள் தான் இராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் 

ஒரு மந்திரவாதியிடம் சீடனாக இருந்தவன் “ஒரு பெரிய மகான் இங்கே வருகின்றார்…” என்ற நிலையில் கேள்விப்பட்டு விவேகானந்தரைக் காலில் விழுந்து பாத நமஸ்காரம் செய்கின்றான். உங்கள் அருள் வேண்டும்…! என்று அவரிடம் கேட்கின்றான்.

“நீ ஏங்கி வந்த நல்வழி நடக்கட்டும்… என்றும் அதன் வழி நீ உயர்வாய்…!” என்றும் விவேகானந்தர் அவனை ஆசீர்வதிக்கின்றார்.

இந்த ஆசியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட பின் தன்னுடைய மந்திரவாதியான குருவிடம் சொல்கிறான். நான் அந்த மகானிடம் சென்றேன்… அவர் எனக்கு நல்வாழ்த்து கூறினார்..! என்கிறான்.

அப்படியா..! அவர் நாளை மடியப் போகின்றார். இரத்த இரத்தமாகக் கக்கப் போகின்றார்…! அதன் வழியில் அவர் சொன்னதை நீ செய்தாய் என்றால் நீயும் இரத்த இரத்தமாக வாந்தி எடுத்து மடியப் போகின்றாயா…? என்று சிஷ்யனிடம் கேட்கின்றான்.

அதைக் கேட்டதும் இவனும் நடுங்குகின்றான்.

அந்த மந்திரவாதி சொன்னபடி விவேகானந்தர் சுற்றுப் பயணம் செய்யும் பொழுது பேச முடியாதபடி இரத்த வாந்தி எடுக்கின்றார். முச்சுத் திணறல் ஆகிப் பேச முடியாது தடுக்கின்றது.

அப்பொழுது தன் குருவை நினைக்கின்றார். ஒவ்வொரு நிமிடமும் தடைப்படும் உணர்வை உணர்கின்றார்.
1.மற்ற மந்திரவாதிகள் என்ன செய்கின்றனர்..?
2.நல்ல செயல் செய்வதை ஏன் தடைப்படுத்துகின்றனர்…? என்று சிந்திகின்றார்.

இருந்தாலும் தான் சாந்த உணர்வு கொண்டாலும் கொடூர உணர்வின் செயலுலிருந்து “தான் மீளவில்லையே…” என்று உணர்கின்றார். அப்படி உணரப்படும் பொழுதுதான் தன்னுடைய சிந்தனை மேலிட
1.இனி வாழ்க்கை என்ன…? என்ற நிலையில்
2.தன் உணர்வின் தன்மை வெளியாக்கி உயிரான்மாவை வெளியேற்றிக் கொள்கின்றார்.

எத்தனை காலம் நாம் போரிடுவது..? நன்மையின் தன்மைகளைச் செய்தாலும் விஷத்தின் தன்மை தனக்குள் கலக்கப்படும் பொழுது குரு காட்டிய வழியிலிருந்து நாம் பின் தங்கிவிடுவோமோ…!

இந்த உடல் நமக்கு எதற்கு..? என்ற உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு கொதிகலனாக மாற்றித் தன் உடலை விட்டுப் பிரிந்து சென்றார் விவேகானந்தர்.

ஒரு சமயம் இராமகிருஷ்ண பரமகம்சரும்.. அவருடைய சீடர்களும்.. ஞானத்தை அறிய வேண்டும் என்ற ஆவல் கொண்ட மற்ற பக்தர்களும்.. மாலை நேரத்தில் நடந்து வருகின்றார்கள்.

அதே சமயத்தில் இராமகிருஷ்ணரின் செயலாக்கங்களை அறிவதற்காக மந்திரத்தால் ஜெபித்துப் பொருளை வரவழைத்தும் சில ஆவி நிலைகளை இயக்கும் மந்திரவாதி ஒருவனும் இந்தக் கூட்டத்துடன் கூட வருகின்றான்.

அப்பொழுது இருண்டு விடுகின்றது. இராமகிருஷ்ண பரமகம்சருடன் வந்த ஒருவருக்குக் கல் தடுக்கியது.

அப்படி இடறிக் காயம் அடைந்த பின் “ஐயோ… இருட்டாகிவிட்டதே…, விளக்கு எடுத்து வர மறந்து விட்டோமே…” என்ற ஏக்க உணர்வுடன் கூட்டத்தில் ஒருவர் சொல்கிறார்.

அப்பொழுது அங்கே அந்த இடத்தில் இராமகிருஷ்ணரால் வெளிச்சத்தைக் கொடுக்க முடியவில்லை…! என்ற இறுமாப்பு கொண்டு இவர்களுடன் வந்த அந்த மந்திரவாதி “ஜெய் பவானி…!” என்று தொடையைத் தட்டினார். “சலோ…!” என்று சொன்னவுடன் “ஒரு வெளிச்சம்” முன்னால் சென்றது.

மந்திரவாதி தன் மந்திரத்தின் தன்மை கொண்டு ஆவியை ஏவல் செய்து அந்த விளக்கை முன் அனுப்பினார்.

அப்பொழுது அதைப் பார்த்ததும் இராமகிருஷ்ண பரமகம்சர் சிரித்து விடுகின்றார்.

மந்திரவாதி… தனக்குள் சகலமும் கற்றுள்ளேன் என்ற உணர்வுடன்… பிறிதொரு ஆவியின் வலிமை கொண்டு செயலாக்கும் வலிமை எனக்கு உண்டு…! என்ற எண்ணத்தில் இதைச் செய்து காட்டுகின்றான்.

நான் “இந்த வெளிச்சத்தை” விரும்பவில்லை என்கிறார் இராமகிருஷ்ணர். ஏனென்றால்
1.என் உடலில் அக வெளிச்சமான… அறிவின் தெளிவு வரவில்லை
2.இருளை அகற்றிச் செயல்படும் “முன் சிந்தனை…” என்ற இந்த உணர்வு இல்லாது போய்விட்டது
3.இங்கே வந்தோருக்கும் வரவில்லை.

ஆகவே சிந்தித்துச் செயல்பட்டால் இத்தகைய குறையிலிருந்து விடுபடலாம் அல்லவா…! அந்த அறிவின் ஒளி எனக்குள் வளர வேண்டும் இந்த ஒளி தான் எனக்குப் பெறவேண்டும்…!

சலோ… சல்…ஜாவ்…! என்று நீ சொல்லும் உணர்வுகள்… நீ ஏவல் செய்து குட்டிச் சாத்தான் மூலம் எனக்கு வழி கொடுப்பதை… இன்னொரு ஆவியைக் கொண்டு அடக்கி இதன் உணர்வு கொண்டு மாயாஜாலம் செய்தாலும்… இந்த ஒளி கறிக்கு உதவாது… இந்த உடலுக்கும் உதவாது.

அறிவின் ஒளியாகத் தெரிந்து நடந்தால்.. இந்த உணர்வுகளையே ஒளியின் சரீரமாக மாற்ற முடியும்… “அது தான் எனக்குத் தேவை…!” என்று அங்கே தெளிவாக உபதேசிக்கின்றார்.

இராமகிருஷ்ண பரமகம்சர் சிரித்ததைக் கண்டு பல பேருக்கு மத்தியில் தன்னை அவமதித்து விட்டாரே…! என்று அந்த மந்திரவாதி ஏவல் செய்தார்.

எந்த வாயினால் கூறினாரோ அந்த உணர்வை அடக்க ஏவல் செய்து… பேச முடியாதபடி.. உணவு உட்கொள்ள முடியாதபடி… பல துன்பங்களை இராமகிருஷ்ண பரமகம்சருக்கு உருவாக்கினார் அந்த மந்திரவாதி.

ஆனால் மற்றவர்கள் எல்லோரும் இராமகிருஷ்ணருகுக் கேன்சர் நோய் என்ற நிலையில் முடிவுக்கு வருகின்றார்கள். அதற்கு மருந்து கொடுக்கவும் துணிகின்றார்கள்.

ஆனால் இராமகிருஷ்ண பரமகம்சருக்கு மந்திரமும் தெரியும். உடலில் உள்ள உணர்வுகளும் தெரிகின்றது. இது வந்த நிலை வேறு…!

இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்டபின் மந்திரவாதி செய்யும் போராட்டத்திற்குத் தான் செல்லாமல் உடலைக் காக்க மற்ற எதையும் முயற்சிக்காது

1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல…
2.இந்த உடலைச் சொந்தம் கொண்டாட வேண்டாம்…
3.அருள் ஒளியைச் சொந்தம் கொண்டாட வேண்டும்.
4.எனக்குள் நடந்த இந்த நிகழ்ச்சி இந்த உடலுடன் போகட்டும்…
5.எனக்குள் எடுத்துக் கொண்ட அறிவு என்னுடன் என்றுமே வளரட்டும்…
6.இருள் சூழ்ந்த இந்த உடலான உலகம் எனக்கு வேண்டாம்….
7.அருள் ஒளி பெற்ற அருள் ஒளியின் உடல் எனக்குத் தேவை…
8.ஒளியின் சரீரம் தான் எனக்கு தேவை…! என்று
9.அவரை வைத்தியம் பார்க்க வந்தோருக்கெல்லாம் உபதேசித்துள்ளார்.

 

 

இதை எல்லாம் குருநாதர் எனக்கு (ஞானகுரு) நேரடியாகக் காட்டிய உண்மைகள். அன்று நடந்த சம்பாஷணைகளை அப்படியே காதில் கேட்கும்படிச் செய்தார்.

ஆனால் இராமகிருஷ்ணர் உபதேசித்த இந்தப் பேருண்மைகள் எதுவும் வெளியிடப்பட்ட நூல்களில் வரவில்லை என்பதையும் குருநாதர் உணர்த்தினார்.

“உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம்…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Artificial intelligence

“உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம்…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம்மைச் சுற்றியுள்ள பல ஒலிகளிலும்… நம்முடன் எதிர் கொண்டு கலந்துறவாடிப் பேசுபவர்களின் ஒலி அலையிலும்… நம் எண்ண ஈர்ப்பைச் செலுத்தும் நிலையில்… அதற்குகந்த சுவாச… அணு… வளர்ப்பு… உணர்வு சக்திகளைத்தான்… இவ்வாத்ம உயிர் சேமிக்கின்றது. நம் வளர்ச்சித் தன்மையின் குணப்பிடியே இதில் தான் உள்ளது.

அது மட்டுமல்லாமல்
1.நாம் வாழக்கூடிய இல்லங்களிலும் நாம் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களிலும்
2.ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ண ஒலி நாதம் வெளிப்படுத்தும் அலைத் தன்மையின் ஈர்ப்புத் தன்மை
3.எவ் ஒலி கொண்ட எண்ணத்தின் செயலாக குண நிலை சுவாசம் பதியப்பட்டதோ
4.அந்தந்த குணங்களின் அலைகளை இல்லங்களின் சுவர்களும் தரையும் ஈர்த்து
5.அவ்வொலி அலையின் எதிர் அலை சுழற்சி அவ் இல்லத்தில் சுழன்று கொண்டே தான் இருக்கும்.

அதை எல்லாம் சீர்படுத்தத்தான் பழங்கால மனையியல் சாஸ்திரங்களில் தெரிந்தோ தெரியாமலோ சில “நிலைக்கற்களை…” இல்லங்களில் பதிய வைப்பதிலிருந்து.. சுவருக்குப் பூசும் “கலவை…” முதல் கொண்டு சில விதிமுறை வழி நிலை ஏற்படுத்தினர்.

பூமியின் தன்மை எப்படி அதன் குண ஈர்ப்புக்குகந்த அமில வெக்கையை வெளிப்படுத்துகின்றதோ அதைப் போன்றே
1.எண்ணத்தில் வெளிப்படுத்தும் உணர்வு குண நாத அலைகள்
2.இல்லங்களில் வாழ்பவர்களின் குண அலையின் எதிர் ஒலி ஒளி
3.அங்கே பரப்பிக் கொண்டே தான் இருக்கும்.

தன் வளர்ப்பின் ஞானச் செயலை வளர்க்க இந்த மனித ஆத்மாவானது தான் வளர்ந்து வெளிப்படுத்திய அலைத் தொடர்பிலிருந்தும் தன்னுடன் வாழும் சுற்றத்தின் உணர்வுத் தன்மையின் ஈர்ப்புப் பிடி குண நிலையிலிருந்தும் மீட்டுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சமம் கொண்ட ஈர்ப்பலை எண்ண உணர்வுடன்
1.உயர் ஞானிகளிடம் தொடர்பு கொண்ட நிலையில்
2.தன் ஜெப ஞானம் அவசியம் இருக்க வேண்டும்.

இதை எதற்காகப் பகர்கின்றேன் என்று அறிந்து கொள்ளுங்களப்பா…!

இன்றைய விஞ்ஞான செயற்கை யுகத்தாரால் இக்காற்று மண்டல முழுமைக்குமே இக்காந்த மின் அலையைப் பிரித்தெடுத்து ஒலி அலையாகச் செயற்கை முறையில் பல செயலுக்காக எடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஒளிக் காட்சி… வானொலி… மற்றும் பல ஒலி அலைகளின் அரசியல் ஒலித் தன்மை தொடர்பு நிலைக்கும்… அரசாங்க வழி நிலைக்கு உகந்த சில அலைத் தொடர்பு சாதன நிலையினாலும்… இக்காற்று மண்டலத்தில் பலவிதமான அலைகளைப் படரவிட்டுள்ளார்கள். இன்று… இது இல்லாத இடமே இல்லை…! என்று கூடச் சொல்லலாம்.

ஆகையினால் ஜீவ சக்தி கொண்ட மனித உணர்வின் எண்ணமே இவ்வலைத் தொடர்பைக் கேட்பதினால் சுயமாகச் சிந்திக்கும் ஞான நிலையற்று விட்டது.

1.இத்தகைய செயற்கை அலையையே இன்று அனைவரும் சுவாசிப்பதால்
2.தன் உணர்வின் ஞான எண்ண ஈர்ப்பே… தன் ஞானத்தைத் தான் வளர்க்கும் செயலற்ற தன்மையினால்
3.மின் அலைத் தொடர்பு கொண்ட செயற்கை நாத மோதலினால்
4.ஜீவத் துடிப்பு நாதமே தன் நிலை மழுங்கிய உணர்வு செயலாகச் செயற்கையுடன் சிக்குண்ட மனித ஞானம் தான் பேசுகின்றது இன்று,..!

தன் வளர்ப்பின் உண்மை ஆத்ம ஞானத்தை உணர்ந்து இப்பிடி உணர்வின் இறுக்கத்திலிருந்து தன் வளர்ப்பை வளர்க்கும் உண்மை நிலை உணர்ந்து உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்…!

 

 

நர மாமிசத்தை உணவாக உட்கொள்ளும் அகோரிகள்

AGHORI

நர மாமிசத்தை உணவாக உட்கொள்ளும் அகோரிகள்

 

வட இந்தியாவில் ஏராளமான அகோரிகளைப் பார்க்கலாம். சுடுகாட்டில் வேகும் பிணத்தை அவர்கள் கைப்பற்றி அதை உணவாக உட்கொள்வார்கள்.

அதாவது அவர்கள் அபப்டி உட்கொள்வதன் மூலம் அந்த ஆண்டவனுக்கு இந்தத் தசையை அனுப்பி அவனுக்கு அர்ப்பணிப்பதாகச் சொல்வார்கள்.

பிணங்களை இவன் உணவாக உட்கொண்டு அதை ஆண்டவனுக்கு அர்ப்பணிப்பதால் ஆண்டவன் இரக்கப்பட்டுத் தனக்குள் செயல்படுகின்றான் என்று இப்படிச் செய்கிறார்கள்.

இத்தகைய தீய செயலே உருவான பின் அகோர உணர்வுகள் அவனுக்குள் வளர்ந்த பின் யாரிடமாவது வந்து நின்றால் பணம் கேட்டால் கொடுக்க வேண்டும்.

அதாவது அகோரிகள் வீடு வந்து கேட்டால் பணத்தைக் கொடுக்க வேண்டும். அப்படிப் பணம் கொடுக்கவில்லை என்றால் சுட்டெரிக்கும் பார்வையைக் காட்டுவான்.

அவன் இப்படிப் பார்க்கிறானே… நம் குடும்பம் கெட்டுவிடுமோ… நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ…! என்று பயந்து அந்த அகோரி விரும்பிய பொருளைக் கொடுத்துவிடுவார்கள்.

ஆண்டவனை நான் நேசிக்கின்றேன்… ஆண்டவன் அருளை எல்லோருக்கும் பெறச் செய்ய அவனை நான் தியானிக்கின்றேன். அதற்காக வேண்டி நீங்கள் எனக்குப் பொருளைக் கொடுக்க வேண்டும் என்பார்கள் அந்த அகோரிகள்…!

ஆகவே அவர்கள் பணம் கேட்டால் கொடுத்தே தீர வேண்டும். பெரும் பெரும் செல்வந்தர்களும் அவன் முன்னாடி வந்தாலே பணத்தைக் கொடுத்து விடுவார்கள். கோடிக்கணக்கில் பணத்தைக் வாங்கிச் சென்று விடுவான்.

ஆனால் அவர்கள் பிணத்தைத் தின்பவர்கள் தான்…!

இதைப் போன்ற அகோரத் தன்மையான செயல்களை ஆரம்பத்தில் நான் (ஞானகுரு) வெளியிலே சொல்லும் பொழுது (நாற்பது வருடம் முன்) யாரும் நம்பவில்லை. உலகில் இப்படி நடக்கிறது.. மறைமுகமாக நடந்து கொண்டிருகின்றது என்று தான் சொன்னேன்.

பின் பத்திரிக்கையில் வெளி வந்த பின் தான் ஓகோ…! இப்படியும் இருக்கின்றதா…? என்று அதற்குப் பின்னாடி நம்புகிறார்கள்.

ஏனென்றால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய வழிகளில் பல பல உண்மைகளை அப்பொழுது வெளிப்படுத்திக் காட்டினோம். அதையே குருநாதர் என்னைப் பரிசோதிக்கும் விதமாக கங்கையில் மையத்தில் உள்ள மணல் திட்டுக்குப் போகச் சொன்னார்.

அங்கே சில காலங்களில் அந்த அகோரிகள் வருவார்கள். “நீ தவத்திற்காகப் போனால்.. உன்னை அறிந்து கொன்று புசிக்க வருவார்கள்…!” என்று இப்படிச் சொல்லி அங்கே போகச் சொன்னார் குருநாதர்.

குருநாதர் சொன்ன முறைப்படி அங்கே தியானமிருக்கப்படும் பொழுது பல அகோரிகள் வருகின்றனர். உடல்களில் கம்பிகளால் வளையம் இடப்பட்டு பாடல்களைப் பாடிக் கொண்டு வருகின்றனர்.

“ஓ.. ஓ… ஓ.. ஹோ… ஹோ…! என்ற சுருதிகளை வைத்துப் பாடுகின்றனர். கைகளில் கத்தியையும் வைத்துக் கொண்டு என்னைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடுகின்றார்கள்.

அந்த நேரத்தில் குருநாதர் கொடுத்த அலைகளின் துணை கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். இவர்கள் அந்த ஒலிகளை எழுப்ப… எழுப்ப… “ஓங்காரக் காளி…!” என்ற நிலையில் அவர்களுக்கு முன் ரூபமாகக் காட்சி தெரிந்தது.

அதைப் பார்த்த பின் மாதாஜி…! மாப் கரோஜி..! என்று அந்தத் தாளச் சப்தங்களைப் போட்டு அப்படியே பின்வாங்கினார்கள்.

அவன் (அகோரி) காளியைப் பார்த்திருக்க மாட்டான்… என்றார் குருநாதர். அந்த உணர்வுகளைக் கண்ட பின் நடுக்கமாகி என்னை விட்டு ஓடிவிட்டார்கள்.

குருநாதர் அவர் ரூபமாகச் (காளி) சில இதுகளைக் காட்டி என்னை விடுவித்தார். நடந்த நிகழ்ச்சி இது..!

முதலில் நான் இங்கே மணல் திட்டிற்குப் போவதற்கு முன் நாதுராம் என்ற அங்கே இருக்கும் காவாலாளி.. நீங்கள் அங்கே சென்றால் உங்களைக் கொன்று தின்று விடுவார்கள்…! என்று ஏற்கனவே சொல்லியிருந்தான்.

இல்லை… இதைப் பரிசோதிக்கத்தான் என் குரு அனுப்பினார்…! என்று அவனிடம் சொல்லி விட்டுச் சென்றேன். குரு வழியில் செல்லப்படும் பொழுது தான் அகோரிகளைப் பற்றிய உண்மைகளையும் அறியக்கூடிய தன்மை வந்தது.