நோய்வாய்ப்பட்டவரை நோயிலிருந்து விடுபடச் செய்யும் பயிற்சி

ANGUSAM

நோய்வாய்ப்பட்டவரை நோயிலிருந்து விடுபடச் செய்யும் பயிற்சி

 

ஒருவர் கடுமையான வியாதியுடன் இருந்தால்… கடைசியில் அந்த ஆன்மா வெளி வந்த பின் அவர் மீது பற்று கொண்ட உணர்வு நமக்குள் அதிகமாக இருந்தால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.

பின் அந்த உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் பெருகத் தொடங்கிவிடுகின்றது. நம் நல்ல குணங்களை எல்லாம் மறையச் செய்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும்..?

உடலுடன் இருக்கும் பொழுதே அவருக்குள் இருக்கும் தீமையான குணங்களை மறையச் செய்ய 1.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் ஓங்கி வளரச் செய்து 2.நம் உடலுக்குள் அது வராது முதலில் தடுத்துக் கொள்ள வேண்டும். 3.பின் அருள் ஒளியின் உணர்வைச் சொல்லாக வெளிப்படுத்தி 4.செவி வழி பாய்ச்சி அவர்களை உற்று நோக்கும்படி செய்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நுகரச் செய்தல் வேண்டும்.

நுகர்ந்த உணர்வுகள் அங்கே நோயை நீக்கும் அணுவின் தன்மை வளர்ச்சி அடையத் தொடங்கும். அந்த நினைவை அவர்கள் கூட்டக் கூட்ட அவர்கள் நோயிலிருந்து விடுபடுகின்றனர். இதை நாம் செய்தல் வேண்டும்.

தியானம் இருப்போர்கள் இப்படி நாம் வழி நடத்தி… மற்றோருக்கு இந்த உண்மையின் நிலைகளை உணரச் செய்தல் வேண்டும்.

உதாரணமாக ஒருவன் ரோட்டில் அனாதையாகக் கிடக்கின்றான் அவன் துடிப்பதை உற்றுப் பார்க்கின்றோம். ஆனால் உதவி செய்யவில்லை.

யார் பெற்ற பிள்ளையோ..! இப்படிக் கிடைக்கின்றானே…! என்று இரக்க உணர்வு கொண்டு நுகர்கின்றோம். அவன் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின் அதே உணர்ச்சிகள் தூண்டுகின்றது. ஆனால் அறியச் செய்கின்றது.

ரோட்டில் கிடப்பவனுக்கு நாம் எப்படி உதவி செய்வது…? என்று சிலர் கூச்சப்பட்டுச் சென்றுவிடுவார்கள்.

ஒரு சிலர் அவரை எடுத்து எப்படியும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். இருந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் அவர்கள் உடலில் ஜீவ அணுக்களாக மாறும் கருக்களாக உருவாகின்றது.

மீண்டும் அந்த நினைவை அடிக்கடி எண்ணப்படும் பொழுது அது அணுவாக மாறி அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நுகர்ந்து அவன் எப்படிச் சிரமப்பட்டானோ அந்தச் சிரமத்தை உருவாக்கும் அணுக்கள் வந்து விடுகின்றது.

அப்படிப்பட்ட அணுக்கள் பெருகி விட்டால்… 1.அதற்கு உணவாக உட்கொள்ளும் உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது அதை நுகர்ந்தால் 2.அவனைப் போன்ற நமக்குள் சிரமப்படும் உணர்வுகளும் 3.அவன் செய்த அந்த உணர்வின் தன்மையை நமக்குள்ளும் வளர்க்கத் தொடங்கிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை நாம் உற்றுப் பார்த்தாலும் உடனடியாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தி கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் பரவி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… என்ற அந்த உயர்ந்த சக்தியினைக் கொண்டு அவன் கண்டுண்ந்த வேதனை உணர்வு நமக்குள் வராதபடி அதை அடக்கும் நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

அந்த அருள் ஞானிகளின் அருள் சக்திகளை நமக்குள் கொண்டு வரும் பொழுது 1.இது தான் விநாயக தத்துவத்தில் கூறியபடி அங்குசபாசவா.. 2.அதாவது… அங்குசத்தைக் கொண்டு அடக்கத் தெரிகின்றது. 3.ஆறாவது ஆறிவால் நோய்… என்று தெரிகின்றது 3.அந்த மகரிஷிகள்… “நோயை வென்றவர்கள்” என்றும் தெரிகின்றது. 4.நோயை வென்ற அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது 5.ஆறாவது அறிவைக் கொண்டு முருகு…! நமக்குள் உருவாகும் சக்தி பெறுகின்றது.

அப்படி உருவாகும் சக்தி பெறும் பொழுது பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன். அருள் ஞானியின் உணர்வை நமக்குள் உருவாக்கி வளர்க்கப்படும் பொழுது நஞ்சை அடக்கிடும் உணர்வுகளாக விளைகின்றது.

நமது ஆறாவது அறிவால் தீமைகளை ஒடுக்கும் வல்லமை பெறுகின்றோம் என்பதைத் தெளிவாக்க சாஸ்திரங்கள் எத்தனையோ கூறியுள்ளது.

ஏனென்றால்… ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். 1.எதை எப்படி நுகர வேண்டும்..? 2.எதை அடக்க வேண்டும்…? 3.எதன் வழி நினைவுபடுத்த வேண்டும்…? என்று..!

மீண்டும் மீண்டும் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நினைவாக்கப்படும் பொழுது உங்களுக்குள் அந்தக் கருவின் தன்மை வலுப் பெறுகின்றது. அப்பொழுது அந்த அணுவின் தன்மையாக உடலுக்குள் வலுப் பெற இது உதவும்.

அணுவின் தன்மை வலுப் பெற்றால் அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து உணவாக எடுத்து வளரப்படும் பொழுது 1.நாம் மெய் உணர்வுகளை நுகரும் அறிவும் 2.அது வழிக் கொண்டு நமக்குள் அந்த உயர்ந்த குணங்களை வளர்க்கும் நிலை வருகின்றது.

உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானத்தின் பயனை ஒவ்வொருவரும் இப்படிச் செயல்படுத்த வேண்டும்.

கூட்டுத் தியானத்தின் சக்தி – ஒரு கல்லில் இரண்டு மாங்காய்…!


1. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்

குடும்பத்தில் உறவினர்களோ அல்லது நண்பர்களோ உடலை விட்டுப் பிரிந்து சென்றால்
என்ன செய்யவேண்டும்?

 

அந்த மாதிரி நேரங்களில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

 

நேற்றெல்லாம் நன்றாக இருந்தார்,

எல்லோருக்கும் நல்லது செய்தார்.

ஆனால், “இன்று இப்படிப் போய்விட்டாரே..,” 
என்று

பாசத்துடன் அவர்களை எண்ணினால் அந்த ஆன்மாக்கள் உங்கள் உடலுக்குள் வந்துவிடும்.

 

நம் உடலுக்குள் வந்த பின், அவர்கள் உடலில் என்னென்ன நோய் இருந்ததோ, என்னென்ன
தீமைகள் இருந்ததோ அதுவெல்லாம் நமக்குள் வரும். அது நமக்குள் விளையத் தொடங்கும்.
இதைத்தான் பரம்பரை நோய் என்பார்கள்.

 

இதைத் தடுக்க வேண்டுமல்லவா.

 

 ஆகவே, இந்த மாதிரி செய்திகளைக்
கேட்டவுடன் துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

 

அந்தச் சக்தியை வலு ஏற்றிக் கொண்டு, உடலை விட்டுப் பிரிந்த அந்த
உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்  என்று உந்திச் செலுத்த வேண்டும்.

 

இவ்வாறு செய்யும்போது அவர்களும் விண் செல்கிறார்கள். அவர்களுடைய உணர்வுகள்
நமக்குள் வந்து நோயாக மாற முடியாது. அவர்கள் பட்ட துயரங்களோ துன்பங்களோ நம்மை சாப
அலைகளாக இயக்காது.

 

ஆகவே, நாமும் தீமையை நீக்கிடும் நிலை பெறுகிறோம்.

 

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.

 

தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் விண்ணிலிருந்து வரும் ஆற்றல் மிக்க சக்திகளை
நாம் பெற்று இந்த வாழ்க்கையில் வரும் சர்வ தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

 

இந்த உடலுக்குப்பின் நாமும் அவர்கள் சென்ற அதே வழியில், எளிதில் விண் சென்று
சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

2.  கூட்டுத் தியானத்தின் மூலம் நீங்கள் பெறும்
சக்தி சாதாரணமானதல்ல

கூட்டுத் தியானத்தில் நாம் என்ன செய்கிறோம்?

 

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
அனைவரும் தீமையை நீக்கிடும் அருள் சக்தி பெற்று வாழ்க்கையில் நலமும் வளமும்
பெறவேண்டும் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து உணர்வின் ஒலிகளை எழுப்புகிறோம்.

 

இப்படி, எல்லோரும் நலம் பெறவேண்டும் என்று வெளிப்படுத்தும் இந்த உணர்வின்
ஒலிகள்

உங்கள் செவிக்குள் மோதி

வலிமையான சக்தியாக மாறுகிறது.

 

நீங்கள் இதை நுகரும்போது

உங்கள் உயிர் அது எல்லாவற்றையும் சேர்த்து

ஒரு வலிமையான அணுவாக மாற்றுகிறது.

அப்பொழுது தீமைகளை நீக்கும் வலிமை உங்களுக்குள் பெருகுகிறது.

 

உங்கள் வாழ்க்கையிலோ அல்லது குடும்பத்திலோ அங்கே குறைகளோ தீமைகளோ பகைமைகளோ வந்தாலும் கூட்டுத் தியானத்தில் பெறுகின்ற சக்தியை நீங்கள் எண்ணினால் அந்தச் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

 

“தீமைகளை நீக்கும்” – “தீமைகளிலிருந்து மற்றவரையும் மீட்டிடச் செய்யும்”

ஆற்றல் மிக்கவராக நீங்கள் வளர முடியும்.

ஆகவே, கூட்டுத் தியானத்தில் கலந்து கொள்ளுங்கள்.

அந்தச் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

 

கூட்டுத் தியானத்தில் தொடர்ந்து கலந்து கொண்டு சீராகத் தியானித்தால் பின் உங்கள் அனுபவம் பேசும். 

 

தெரிந்து கொள்ளலாம் நீங்கள்.


தனக்குள் உள்ள இறை சக்தியை உணர வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

i9nner atma power

னக்குள் உள்ள இறை சக்தியை உணர வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.ஜீவ பிம்ப சரீரத்திலிருந்து தான் ஆத்ம உயிர் வலுப் பெறவேண்டும்.
2.ஆத்ம உயிர் வலுப் பெற ஜீவ சக்தி வேண்டும்.

“நீரின் சக்தியைக் கொண்டு” ஆவியாகும் காற்றும்… நெருப்பும்… கொண்ட தொடர் வளர்ச்சி இப்பூமியைச் சுழல வைப்பதைப் போல் எச்சக்தி வளரவும்… “இஜ்ஜீவ சக்தி தேவை…”

இஜ்ஜீவ சக்தி ஆவியாகிச் சமைக்கப்படும் சத்து நிலை தான் சரீரக் கூறின் எலும்புகளின் வளர்ச்சியைக் கொண்டு பிம்பத்தின் வார்ப்பு ஆரோக்கிய நிலை பெறுகின்றது. அதன் வலுச் சக்தியைச் சரீரத்தைச் சுற்றியுள்ள ஆத்ம வலுவேற்றிக் கொள்கின்றது.

இந்தச் சரீரக் கூடு சமைக்கும் சத்தெடுத்து வளரும் ஆத்மாவிற்கு இந்த உலகப் பந்தத்தில் சுழலில் விஷமாகக் கலந்துள்ள இன்றைய எண்ண குரோத நிலையிலிருந்து நம் ஆத்மா வலுப் பெறும் மார்ர்க்கம் என்ன…?

எப்படி விஷமான நாக சர்ப்பத்தின் உடலில் மாணிக்கக்கல் வளர்கிறதோ… அதைப் போன்று
1.இவ்விஷ உலகப் பிடியிலிருந்து உயர் ஞான அலைத் தொடருக்கு நாம் சென்று
2.அந்த அலைச் சக்தியையே நம் உணர்வின் எண்ணச் சுவாசம் வளர்க்கும் நிலை கொண்டு
3.அவ்வளர்ப்பின் சக்தி வலுவை இவ்வுயிர் ஆத்மா பெறப் பெற
4.ஆத்மா வலுப் பெற்ற ஞான வளர்ச்சி நிலைக்குப் பிறகு
5.தன் வலுவைத் தானே வளர்க்கக்கூடிய :ஆத்ம சித்து” நிலையின் செயல் முறையும் அடையலாம்.

எண்ணத்தின் வீரியத்தில் ஜெப முறையின் பக்தி மார்க்க ஆவேச அலைத் தொடரில் அதே அலைத் தொடர் கொண்ட ஆத்ம குடியிருப்புக்கு இந்தச் சரீரத்தில் குடியிருக்க இடம் தந்து அவ்வலை ஞானத்தை இச்சரீரத்தின் உதவி கொண்டு அவற்றின் ஞானத்தால் பெயரும் புகழும் அடைந்தாலும் இந்த உலகச் சுழற்சிக்குள் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்.

1.எக்கவி பாடினாலும்…
2.எவ்விஞ்ஞானத்தை அறிந்தாலும்…
3.தன்னைத் தான் உணர்ந்து
4.தனக்குள் உள்ள இறை சக்தியைத் தான் வளர்த்து
5.ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயர் ஞான ஈர்ப்பலையின் தொடர் அமிலத்தை வளர்க்கவல்ல
6.சுவாச ஈர்ப்பு மின் காந்த வளர்ச்சி ஓட்ட வளர்ப்பினால் மட்டும் தான் உயிர் ஆத்மா வலுக்கூடும்
7.எவ் ஈர்ப்பலைக்கும் சென்று இந்த உடலை விட்டு எந்த நிமிடத்திலும் உடலிலிருந்து இயக்கவும்
8.உடல் அற்ற நிலையிலும் வலுக் கொண்ட ஆத்மா எவற்றிலும் சிக்காவண்ணம்
9.செயல்படுத்தும் சித்து நிலையும்… இதன் வளர்ச்சித் தொடர் யாவையுமே பெற முடியும்.

ஆனால் சில அலைத் தொடர்பின் பக்தி முறை ஜெப வழியில்… கூடு விட்டுக் கூடு பாயும்… உடலை அடக்கி ஆத்மாவைப் பிற உடலுக்குச் செலுத்தி செயல்படுத்திய பல மாந்திரீகத் தொடர்பு கொண்டவர்கள்… அதன் தொடர்பால் வேறு ஒரு ஈர்ப்பலையில் சிக்குண்டு… “தான் பெற்ற சித்துகளின் சக்தியையே அழித்துக் கொண்டனர்…”

உயர் ஞானத் தொடர்பின் அலைத் தொடரில்…
1.“தன்னைத் தான் நம்பி… தனக்குள் உள்ள இறை சக்திக்குப் பூஜிப்பு நடத்தி வளர்த்தால் அன்றி
2.வளர் சக்தி பெறுவது… மற்றெந்த நிலையிலும் கடினம்.

“தன் ஆத்ம உயிரைக் கொண்டு…” ஆத்மாவின் சக்தி தான் இந்த உடல். இந்த உடலை இயக்குவதே இவ்வாத்மா தான் என்பதை முதலில் உணர வேண்டும்.

1.தன் உயிராத்மா வளர… வலுப் பெற…
2.ஜீவ சக்தி தரவல்ல இச்சரீர கோளத்தின் உண்மை உணர்ந்து
3.உயிர்த் துடிப்பின் செயலுக்கு வலுத் தந்த
4.தாய்மைச் சக்தியின் தொடர்பைப் பூஜித்தே
5.ஒவ்வொரு ஆத்மாவும் இதன் உண்மையின் வழித் தொடரைப் பெறுங்கள்.

ஒரு தெய்வத்தை வணங்குவோர்… அடுத்த தெய்வத்தை வணங்க மாட்டேன் என்று சொல்வதில் என்ன உண்மை உள்ளது…?

Ganesamoorthy

ஒரு தெய்வத்தை வணங்குவோர்… அடுத்த தெய்வத்தை வணங்க  மாட்டேன் என்று சொல்வதில் என்ன உண்மை உள்ளது…?

 

அரசர்கள் காட்டிய நெறி கொண்டு மதங்களாகவும் இனங்களாகவும் பிரிக்கப்பட்டு ஒரே மதத்திற்குள் பல இனங்களாகப் பிரிக்கப்பட்டு போர் முறை கொண்டு தான் இன்று வாழ்கின்றோம்.

ஒருவரை ஒருவர் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு தான் வருகின்றது.

ஒரு தெய்வத்தை வணங்குவோர்…
1.நான் மற்ற தெய்வத்தை வணங்க மாட்டேன் என்று
2.காலையில் பள்ளி எழும் பொழுதிலேயே
3.உன்னை அல்லாது நான் யாரையும் வணங்க மாட்டேன்…! என்று அங்கேயே விஷத்தை ஊட்டுகிறார்கள்.

முருகன் கோவிலுக்குச் சென்றால் உன்னை அல்லாது நான் யாரையும் வாயைத் திறந்து பாட மாட்டேன் என்று முருகனை வணங்குவோர் சொல்வார்கள்.

அதே மாதிரி சிவனைப் பாடுவோரும் அதன் நிலை. காளியைப் பாடுவோரும் இதே மாதிரி. பெருமாளைப் பாடுவோரும் இதே மாதிரி. உன்னைப் பற்றிப் பேசிய வாயில் நான் வேறு எந்தத் தெய்வத்தையும் பேச மாட்டேன்.

இப்படி இங்கேயே ஒவ்வொரு குணத்தின் சிறப்பை ஓங்கி வளர்த்து
1.அடுத்த குணத்தைப் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு
2.வெறுக்கும் உணர்வுகளை வளர்க்கும் பண்புகளைத்தான் ஆலயங்களிலும் தோற்றுவிக்கின்றார்கள்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு நாம் உண்மையின் உணர்வுகளை எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்காக வேண்டித்தான் நமது குருநாதர் காட்டிய அருள் நெறி கொண்டு அருள் ஞானத்தின் உணர்வுகளைத் தொடர்ந்து பதிவாக்குகின்றோம். பதிவான பின் அது கருவின் தன்மை அடையும் தன்மையை உங்களுக்குள் உருவாக்குகின்றோம்.

உருவாக்கிய உணர்வு கொண்டு நீங்கள் அதை மீண்டும் நினைவாக்கினால் அதுவே குருவாக நின்று அருள் ஒளிச் சுடராக உருவாக்கும் அருள் ஞானமமாக உங்கள் எண்ணங்களில் தோற்றுவிக்கும்.

அருள் உணர்வின் தன்மை சுவாசிக்கும் பொழுது உங்கள் உடலில் ஞானத்தை வளர்க்கும் அருள் ஞானக் கருக்களாகி அணுக்களின் தன்மையாக உருவாகு.

அந்த உணர்ச்சியின் தன்மை வரும் பொழுது இந்த மனித வாழ்க்கையில் மகிழச் செய்யும் தன்மை வரும். அந்த மகிழும் தன்மையை வளர்க்க வேண்டும் என்றால் இந்த உண்மைகளை.. ஆலயங்களின் பண்புகளை பிறருக்கு எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆலயத்தின் சிறப்புகளையும்…
1.அங்கே வைத்திருக்கக்க்கூடிய தெய்வங்கள் யார்…?
2.அந்தத் தெய்வம் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலைகளையும்
3.ஆலயம் என்பது நம் உடல் என்றும்
4.அதிலே உள்ள நம் நல்ல குணங்கள் காக்கப்பட வேண்டும் என்றும்
5.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உறையப்படும் பொழுது சிவம் என்றும்
6.நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் அனைத்தும் வினை என்றும்
7.நாம் தெளிவாக எடுத்துச் சொல்லி மக்களை அறியாமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும்

இதன் வழியில் மகரிஷிளின் அருள் ஒளியின் சுடரை உங்களிலே வளர்த்துக் கொண்டால் இந்த உணர்வுகள் விளைந்து சொல்லாக உங்களிடமிருந்து வரும் பொழுது கேட்போர் உணர்வுகளில் ஊழ்வினை என்ற வித்தாக மாறும்.

அதை அவர்களும் நினைவுபடுத்தினால் அவர்கள் குடும்பத்தில் வரும் சிக்கல்களையும் அவர்கள் உடலில் வரும் நோய்களையும் மாற்றும் வல்லமை நீங்கள் பெறுகின்றீர்கள்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் அகஸ்தியன் அவன் வாழ்வில் கண்டுணர்ந்த அருள் வழியில் தியானிக்க வேண்டும்.

அகஸ்தியனாகி துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான பின் அதன் வழியில் சென்றவர்கள் அனைவருமே ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக பிறவியில்லா நிலைகள் அடைந்துள்ளனர்.

1.அவர்கள் வழியில் நாம் சென்றோம் என்றால்
2.அனைவரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வை நாம் ஊட்டினோம் என்றால்
3.அதன் வழியில் நம்மையும் இந்த மனித நிலையிலிருந்து விடுபட்டு
4.அருள் ஞானியின் அருள் வட்டத்தில் இணைத்துவிடும்.

நம் உயிர் ஈசனாக இருந்து இயக்கிக் கொண்டேயுள்ளது. நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தும் நமக்குள் கடவுளாக நின்று இயங்கி… உள் உணர்வையும் ஊட்டி… உயிருடன் ஒன்றச் செய்து… அதுவே அருள் ஒளியின் சரீரமாக உருவாக்கும்.

1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை எதை எடுத்தோமோ அதுவே மின் அணுவாக மாற்றும்.
2.என்றும் பிறவியில்லா நிலை அடையச் செய்யும் தன்மை பெறுகின்றது.
3.இது எளிதான நிலைகள்…!

அகஸ்தியன் கண்ட பேருண்மைப்படி அதனை ஒவ்வொரு நாளும் நாம் நுகர்தல் வேண்டும். அப்படி நுகரும் பருவம் பெறுவதற்குத் தான் அதிகாலையில் துருவ தியானத்தில் அரும் பெரும் சக்தியைக் கூட்டச் சொல்கிறோம்.

குப்பையிலிருந்து சத்தெடுக்கும் வித்தைப் போல் உலக வாழ்க்கையிலிருந்து நல் மணிகளை ஆத்மாவுக்கு உரமாக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

sparkling souls power

குப்பையிலிருந்து சத்தெடுக்கும் வித்தைப் போல் உலக வாழ்க்கையிலிருந்து நல் மணிகளை ஆத்மாவுக்கு உரமாக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கை வண்டியில் பல மூட்டைகளைப் போட்டு வண்டியை இழுத்துச் செல்வதைப் போல் ஒரு காட்சி தெரிகின்றது.

அந்த மூட்டையில் உள்ள பொருள் எது..? என்று அறியாமல் அந்த மூட்டையைப் பார்த்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் உதயமாகின்றது.
1.அரிசியாக இருக்கும்… பருப்பாக இருக்கும்…! என்று சில எண்ணங்களும்
2.சிலருக்கு அதே தொடர்புத் தொழிலில் ஊறிய நிலை பெற்றவர்கள்
3.அந்த மூட்டையின் கோணத்தைக் கொண்டே பருப்பு மூட்டை சர்க்கரை மூட்டை அரிசி மூட்டை என்று யூகிப்பவர்களும் உண்டு.

ஆனால் அந்த மூட்டையைக் கட்டியவனுக்கும் இழுத்துச் செல்பவனுக்கும் “அதில் என்ன உள்ளது…?” என்று தெரியும்.

இதைப் போன்றே இந்த உடல் மூட்டையில் எந்த எண்ணத்தைப் போட்டு வளர்த்திருந்தாலும்… அந்த மனிதனின் புற உருவத்தைக் கொண்டு… செய்யும் தொழில் உற்ற பந்தங்களின் தொடர் பொருளாதார நிலை இதனைக் கொண்டு… ஒரு மனிதனின் நிலையை யூகிக்கும் தன்மை தான் புற உலக எண்ணங்களில் பருப்பாக இருக்குமோ… அரிசியாக இருக்குமோ… என்ற நிலைப்படி….!

கலந்துறவாடித் தொடர்பு கொண்டவர்கள் தொடர்பு நிலையால் மூட்டையின் வடிவ நிலையைக் கொண்டு அதனதன் பொருள் தான்… என்று எப்படி உணர்த்துகின்றோமோ இதைப் போன்று தான் கலந்து வாழ்பவர்கள் “ஒரு மனிதனின் குணத்தை இந்தக் குணமுடையவன் தான்…” என்று உணர்கின்றார்கள்.

1.ஆனால் இந்த உடல் என்ற மூட்டையில்..
2.எதை எண்ணத்தால் ஒரு மனிதன் போடுகின்றானோ
3.அதன் நிலை போடுபவனுக்கு எப்பொருள் என்று தெரிகின்றதோ அதைப் போன்றே
4.ஒரு மனிதனின் எண்ண குணம் அவ\னுக்குத் தான் தெரியும்.

அவன் எண்ணத்தால் போட்டதன் பொருள் நிலை அறிந்து… அவனை இயக்கிச் செல்லக்கூடிய அவன் எண்ணத் தொடர்பு கொண்ட உயர் சக்திகளுக்கும்… அவ்வண்டியோட்டியின் நிலையை ஒத்த நிலையில் அறிய வாய்ப்பு உண்டு.

இந்தச் சரீர பிம்ப மூட்டையே பல எண்ணத்தில் சுழல்கின்ற உருவ மூட்டை தான்…!

இச்சரீர பிம்பத்தில் ஓடக்கூடிய எண்ண ஒலியின் உணர்வலைகள் இப்பொழுது வாழும் வாழ்க்கையும்… முந்தைய காலச் சேமிப்புத் தொடர்பையும்… சுழன்று ஓடும் இந்த எண்ண ஓட்டத்தின் செயலில் வாழ்ந்தது… உண்டது… கழித்தது… ஆகிய
1.எல்லா நிலைப்பட்ட குப்பையின் மத்தியில் தான்
2.உயர் ஞானத்தை வளர்க்கவல்ல உயிர் ஆத்மா உள்ளது.
3.இந்த உயிராத்மாவிற்கு நாம் வலுக் கூட்டிக் கொள்ள…
4.இந்தக் குப்பையான சரீர எண்ணத்தில் உள்ள சத்து நிலையை உரமாக இவ்வாத்மா எடுத்து
5.உயர் ஞான வித்தாக பிறிதொரு ஈர்ப்புச் சுழற்சியில் சிக்காவண்ணம் உயர் ஞானம் பெறல் வேண்டும்.

குப்பையின் மத்தியில் வளரும் மணியான வித்து தன் வளர்ப்பில் அக்குப்பையின் சத்தை எடுத்து பல வித்துக்களைத் தரவல்ல சக்தியைப் போன்று நாம் பிரிக்கும் சக்தி பெற வேண்டும்.

இச்சரீர பிம்ப மூட்டையில் சேமித்துள்ள குப்பையான பல வாழ்க்கைத் தொடர்புகளையும் இவ்வுலகப் பந்தச் செயல் எண்ண உருவத்தில் எல்லாம் இந்த எண்ண ஓட்டத்தை எப்படியும் செலுத்தி வாழலாம் என்று இருக்கக் கூடாது.

ஏனென்றால் வாழ்க்கையில் எந்தெந்த நிகழ்ச்சி ஓட்டத்தில் எல்லாம் நம் எண்ணங்கள் மோதுகின்றதோ அதன் வழித் தொடர் பெற்ற [இன் அதன் அலை ஈர்ப்பு வார்ப்பாகத்தான் இச்சரீர பிம்பம் வளர்க்கும் ஆத்ம நிலையும் செல்லும்.

அவ்வாறு ஆகாதபடி… நமக்குத் தொடர்பு கொண்ட இச்சரீர எண்ண மோதலின் வாழ்க்கை தொடர்பு நிலையிலுள்ள செயலில்
1.குப்பையான உணர்வை எடுத்து இந்தச் சரீரத்தை மேலும் குப்பையாக்காமல்
2.நம்மைச் சுற்றியுள்ள நாம் செல்லும் செயல் வழியிலும் இவ்வெண்ணத்தை நாம் செலுத்தும் முறையே
3.குப்பையில் உள்ள சத்தை எப்படி அவ்வித்து தனக்கு உரமாக எடுத்து வளர்கின்றதோ
4.அதைப் போன்ற எண்ணமுடன் நம் ஞானம் செல்லுமானால்
5.நம் உயிராத்மாவின் வலு வலுவாகும் சக்தி நிலையை நாம் பெற முடியும்.

மின்சாரத்தை எடுத்து அதன் சக்தியைப் பல சாதனையாக ஒளி பெறவும் நாம் இயக்கக்கூடிய இயந்திர ஓட்டங்களுக்கும் அதன் உபயோகத்தைக் கொண்டு குளிர்ச்சியையும் வெப்பத்தையும் சாதனைக்குகந்த செயலாக உபயோகப்படுத்திக் கொள்கின்றோம்.

சக்தி கொண்ட அந்த மின்சாரம் ஒரு நொடிப்பொழுது இந்த மனித ஜீவனுடன் மோதினால் மனிதனையே அழிக்கக்கூடியது. அப்படிப்பட்ட வலுக் கொண்ட மின்சாரத்தைத் தனக்குச் சாதகப் பக்குவத்தைக் கையாண்டு பல செயல்களை அதன் உதவி நிலையில் பெறுகிறோம்,.

அதைப் போல் இந்த வாழ்க்கைச் சுழற்சியில் ஓடக்கூடிய மின் அலையின் வீரிய சக்தியே விஷமான உணர்வுடன் சுழல்வதால்… இவ்வெண்ணத்தின் ஈர்ப்பை ஒரு நொடி அவ்வலையில் செலுத்தினாலும்… மின்சாரத்தின் தாக்குதலைப் போன்று அழிவு நிலைக்குத் தான் செல்ல முடியும்.

1.அதனையே நாம் அந்த மின்சாரத்தின் செயலை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் வழி முறை போன்று
2.நம் ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்… நம்மால் முடியும்…!

தானும் வலுவான தெய்வ சக்தியின் சக்தியாகலாம்…! என்பதை மறந்து வாழும் மனிதர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

self trust and confidance

தானும் வலுவான தெய்வ சக்தியின் சக்தியாகலாம்…! என்பதை மறந்து வாழும் மனிதர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.தன்னைத்தான் நம்பாமல்…
2.தனக்கு மேல் வலுவான பூஜிப்பு முறையால்…
3.பல அலைத் தொடர்புகளின் சக்தி அலையை நம்பி…
4.அதன் தொடர்புடன் தான் இன்றளவும் “பக்தி பூஜிப்பு வழி முறை…“ இருக்கின்றது.

நமக்கு மேல் சக்தி கொண்ட தெய்வங்களை அடிபணிந்து… அருள் வேண்டி… அவ்வலையின் வசத்தில் நாம் வளரும் பக்குவத்திலேயே இன்றளவும் காலம் சென்று விட்டது.

தன் வலுவைத் தான் கூட்டி தன்னையே தான் நம்பி தானும் வலுவான தெய்வ சக்தியின் சக்தியாகலாம்…! என்பதையே மறந்து வாழ்கின்றனர்.

மற்றொன்றிடம் யாசித்து… பக்தி உணர்வு கொண்டு வேண்டிப் பெறும் குண வழிச் செயலாகத் தான் இன்றளவும் செயல்கள் உள்ளது.. ஞானத்தை எட்டிப் பார்க்கும் தன்மை இல்லை…!

ஒவ்வொரு ஜீவ சக்தியிலுமே தன் வலுவை வளர்க்கக்கூடிய வலுத் தன்மை உண்டு.
1.உடல் வேறு… ஆத்மா வேறு…!
2.ஆத்மா பிரிந்து விட்டால் உடல் செயல் இழந்துவிடும் என்ற உண்மையை உணர்ந்த மனிதன்
3.தன் ஆத்ம இயக்கத்தின் உண்மையை உணரவில்லை.

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கும் ஆத்ம உயிர் உண்டு. சரீர பிம்ப உடலை இயக்குவதும் அவ்வாத்ம பிம்பம் தான். உடலைச் சுற்றி இவ்வாத்மாவின் இயக்கம் செயலாற்றும் தன்மைக்கு… “ஜீவத் துடிப்பு கொண்ட” இயக்க இயந்திரம் தான் இவ்வுடல் கோளம்.

எண்ணம் எப்படி உதயமாகின்றது…?

மூளையின் பதிவு நிலையிலோ… மற்ற சரீர பிம்ப உடல் உறுப்பின் நெஞ்சிலிருந்தோ… எண்ணம் உதயம் பெறவில்லை…!

இவ்வாத்மாவின் உந்தலின் எண்ணம் கொண்டுதான்… இவ்வுடல் இயந்திரத் துடிப்புக் கோளத்தின் ஆத்ம உயிரின் மோதலினால்.. இச்சுவாசம் எடுத்த உயிர்த் துடிப்பின் மோதல் இருந்தால்தான் சுவாசம் எடுக்க முடியும்.

1.ஆத்மாவின் செயலாக இந்த உயிர்த் துடிப்பு ஏற்பட்டு
2.உயிர்த் துடிப்பின் உந்தலுக்கு இச்சுவாசத்தின் மூலமாக
3.ஆத்மாவின் எண்ண செயல் கவன நரம்பில் மோதி
4.சிறு மூளையின் இயக்கத்தால் செவி ஒலி ஈர்த்து எண்ணச் செயல் நடக்கின்றது.
5.ஆத்மாவின் உந்தலுக்குகந்த எண்ணச் செயலை
6.உடல் கோளத்தைக் கொண்டு செயலாக்கிக் கொள்கின்றனர்.

காற்றலையில் கலந்துள்ள ஒலி அலையை வானொலிப் பெட்டி மின் தொடர்பு ஏற்படுத்தியவுடன் எவ்வலைத் தொடரில் அம்முள்ளை வைக்கின்றோமோ அவ்வலையின் ஒலி கேட்பதைப் போல்
1.இவ்வாத்மா அலையின் உந்தல் இவ்வுயிர் சிரசில் பட்டு
2.உயிர்த் துடிப்பைக் கொண்டு… சுவாசத்தின் எண்ணச் செயல் நடக்கின்றது.

இவ்வெண்ணத்தின் செயலை மாற்றியமைக்கும் நிலை… வளர்க்கும் நிலை… குறைக்கும் நிலை… எதுவாக இருந்தாலும்
1.இஜ்ஜீவத் துடிப்பு கொண்ட சரீர இயக்க அணு வளர்ப்பின் வளர்ப்பில் இருந்து தான்
2.இவ்வாத்மாவின் வலுவையே வலுவாக்கக்கூடிய வழித் தொடர் பெற முடியும்.

ஆத்மாவின் செயலான எண்ணத்தை உயர் அலையின்பால் செலுத்தி அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

உயர் அலை என்பது இந்தப் பூமியின் பிடிப்பலையில் இந்தப் பூமியின் சுழற்சியுடன் சுழலும் அலைத் தொடர்பின் வட்ட ஈர்ப்பில் வாழும் நிலையிலிருந்து மகரிஷிகளின் அலைத் தொடர்பு ஞானத்தை மேல் நோக்கிய சுவாசத்தால் எடுக்கப் பழகுதல் வேண்டும்.

எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் முறை வழியால் அந்த உயர் காந்த மின் அலையின் தொடர்பை நாம் எடுக்க எடுக்க இந்த உடலில் இருந்தே சரீர அணுக்களின் ஈர்ப்பு வளர்ப்பலையால் ஆத்மாவின் வலுவைக் கூட்டி இவ்வாத்மாவை எந்த நிலைக்கும் செலுத்திச் செயலாக்ககூடிய வலுவை இந்த மனிதச் சரீரம் பெற முடியும்.

தன்னைத் தான் நம்பி…! தனக்குள் உள்ள இறை சக்தியின் உயர் அலையைப் பிற அலைகள் தங்க இடம் தராமல் நல்லதாக மாற்றிட முடியும்.

ஏற்கனவே நம் உடலில் குடிவந்துள்ள எந்த வகையான குண வலு கொண்ட ஆத்மா இருந்தாலும்… நம் ஆன்மா வலு கூடக் கூட… நம் வசப்பிடி வலுவாக… அதனையும் செயலாக்கும் வலுவாக்கி… நம் ஆத்ம சக்தியை நாம் வளர்த்து… “ஒவ்வொருவருமே இறைவனாகலாம்…!”

எங்கோ இல்லை இறைவன்…! இங்குள்ள இறைவனை நாம் தூசிக்காமல் ஒவ்வொருவருமே நாம் இறைவனாகலாம்.

மனிதனும் தெய்வமாகலாம் என்பது… போற்றலில் பிறர் போற்றி வணங்கும் தெய்வமல்ல…!
1.மனிதன்தான் தெய்வ சக்தியைப் படைக்கவல்லவன்.
2.தெய்வ குண வழி முறை செயல்பாடு உருவக குண செயலையே உருவாக்க வல்ல சக்தி… “மனித சக்தி தான்…”

ஒவ்வொரு ஆத்மாவும் அந்த நிலை பெறலாம்.

செல்வத்தைச் சேர்த்துப் புகழைச் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இன்றைய மனிதனுக்கு உள்ளது

CRICKET

செல்வத்தைச் சேர்த்துப் புகழைச் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இன்றைய மனிதனுக்கு உள்ளது

பித்த சுரப்பிகள் ஒரு சிலருக்கு அதிகமாக உமிழ்த்தப்படும் பொழுது மாமிசங்களை அதிகமாக உட்கொள்வார்கள். அதை உணர்வாக்கப்படும் பொழுது அவர்களுடைய தசைகள் வலுக் கொண்டதாக மாறுகின்றது.

அதே சமயத்தில் அதனுடைய வளர்ச்சியில் பித்த சுரப்பிகளின் சுரப்பும் அதிகமாகின்றது. அதனால் விஷத் தன்மை கொண்ட அரக்கத்தனமும் வருகின்றது… சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகின்றது.

புலியோ யானையோ மற்ற மிருகங்கள் முரட்டுத்தனமாகத் தாக்குவது போன்று அசுர குணம் கொண்ட வளர்ச்சி அடைகின்றது. இதை எதற்காகச் சொல்கிறோம்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

விஞ்ஞான அறிவு வளர்ந்த இந்தக் காலத்திலேயும் தன் நாட்டிற்குப் புகழ் தேட அசுர உணர்வு கொண்ட மனிதனை உருவாக்குகின்றார்கள். அவன் புகழ் பெறுகின்றான்… கோடிக்கணக்கில் பணம் பெறுகின்றான்…! ஆகையினால் அந்த ஆசையில் அங்கே செல்கின்றார்கள்.

1.தன் நாட்டிற்குப் புகழ் பெறவேண்டும் என்று அசுரத்தனமான செயல்களைச் செய்து சிந்திக்கும் செயல் இழந்து
2.கிரிக்கெட் போன்ற விளையாட்டுத் தன்மைகளும் கொண்டு வருகின்றார்கள்.

அசுரத்தனமான நிலைகளில் தாக்கப்பட்டு அதிலே பொருளை ஈட்டிப் புகழ் பெறும் நிலைகளை உருவாக்குகின்றார்கள்.
1.அவர்கள் விளையாடும் கிரிக்கெட்டை உற்றுப் பார்த்த பின்
2.அந்த ஆசையை நமக்குள் ஏற்று நம் வாழ்க்கையையும் கெடுத்துவிடுகின்றோம்.

இந்த விளையாட்டை விளையாண்டால் அதன் உணர்வுகள் முன்னணியில் வந்தால் எனக்குச் செல்வம் வரும்… செருக்கு வரும்…! என்று தான் வருகின்றோம்.
1.இதைப் போன்று தன் வாழ்க்கையில் புகழ் தேடி பொருள் தேடும் நிலைகளே
2.இன்றைய விஞ்ஞான அறிவால் உருவாகின்றது.

நம் நாட்டில் மட்டுமல்ல… இந்த உலகம் முழுவதும் நடக்கும் இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இந்த உலகம் குறுகிக் கொண்டு வருகின்றது. இந்த மனித வாழ்க்கையே நமக்குச் சதமானது அல்ல. சதமாக்கப்பட வேண்டியது எது என்றால் இந்த உடலிலிருந்தே நாம் உயர்ந்த சக்திகளைப் பெறவேண்டும்.

உயர்ந்த சக்திகளை நாம் பெறவேண்டும் என்றால்… “அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும்…!” என்ற எண்ணத்தை உயர்த்த வேண்டும்.

ஒவ்வொரு நொடியிலும்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று
2.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
3.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
4.எங்கள் இரத்தநாளங்கள் முழுவதும் அந்தச் சக்திகள் பெருக வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதே சமயத்தில் நம் அருகிலே இருப்போருக்கும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்றும் அவர்களும் உயர வேண்டும் என்று எண்ணினால்
1.நமக்குள்ளும் உயரும் சக்தி வருகின்றது.
2.எதிரியல்லாத நிலைகள் நமக்குள் வளர்க்கப்படுகின்றது,

இப்படி நாம் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பாதுகாக்கும் நிலைகள் வருகின்றது. நமக்குள் விளையும் உயர்ந்த உணர்வுகள் ஒளியின் சரீரமாக மாற்ற உதவுகின்றது.

பக்தியை வளர்த்து ஞானத்தை மறந்த காலம் எப்பொழுது வந்தது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Lord Agasthesswaran

பக்தியை வளர்த்து ஞானத்தை மறந்த காலம் எப்பொழுது வந்தது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆதிசங்கரர் காலங்களிலும் அதற்கு முந்தைய காலங்களிலும் இப்பூமியில் பல மகான்கள் வளர்ந்தார்கள். தன் ஞானத்தால் தெய்வசக்தி பெற்று சப்தரிஷியின் தன்மைக்குத் தன் வலுவையும் வலுவாக்கிக் கொண்ட மகான்களை வளர்த்த பூமி தான் “நம் தாய் பூமி…”

1.அதன் தன்மையின் தொடர் வளர்ப்பு நிலையற்று
2.அந்த ஞானச் செயலே விஞ்ஞானச் செயலாக
3.ஞானத்தின் தொடர் அலையின் செயல் “செயற்கை ரூபத்தில்…”
4.ஏட்டுப் படிப்பு வழி முறையிலும் இவ்வொலி அலை மின் சாதனத் தொடர்பலையிலும் சென்றுவிட்டது.

இதுவல்லாமல் தன் ஞானத்தால் வளர்ந்த சக்தியைச் செயல்படுத்த வந்தவர்கள் எல்லாம் தன் வலுத் தன்மையின் வலுவை எடுக்கவல்ல ஆத்ம வளர்ச்சி ஞானம் குன்றிய தன்மையில்
1. கல்லில் சிலை செய்து ரூப வழிபாட்டு முறைப்படுத்திக் கொண்டு
2.தன் பக்தியைக் காட்ட “வணங்கும் தொடரை” ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அதுவுமல்லாமல் இந்தப் பூமியின் வளர்ப்பில் சுழற்சி ஓட்ட கதியில் மண்டல ஈர்ப்பு சந்திப்பு நிலைகளிலெல்லாம் இப்பூமியின் வளர்ப்புத் தன்மையினால் பல மாற்ற “பிரளய காலங்கள்” ஏற்பட்டது.

ஒவ்வொரு பிரளய மாற்றத்திலும் இப்பூமியின் ஈர்ப்பு வளர்ப்பு செயல் ஓட்டமானது வளர்ப்பின் நிலைக்குகந்த மாற்றச் செயலினால் அந்தந்த மாற்றத்திற்குப் பிறகு வளரக்கூடிய அணு வளர்தன்மையும் மாறியே வந்தது.

1.குண ஈர்ப்பின் அமிலமே பிரளய மாற்றத்திற்கு முன் இருந்த நிலை வேறு…
2.மாறிய பிறகு வளரும் நிலை வேறாக
3.இப்பூமியில் படியும் அமில வலு மாறிவிடுகின்றது.

தங்கத்திலோ மற்ற உலோகத்திலோ செய்யப்படும் பொருள்களை மாறி மாறி அதை அழித்து நாம் மற்றொன்றாக உருவாக்கும் பொழுது அதனுடைய தரத்தில் மாற்றம் ஏற்படுகின்றதல்லவா.

அதைப் போன்ற நிலை தான் இத்தொடரில் வந்துள்ள ஞான வளர்ப்பு நிலை வளர்ச்சி தொடர் அலையே இப்பூமி வெளிக்கக்கும் அமில வளர்ப்பின் நிலைக்கொப்பத்தான் ஞானமும் வளர்கின்றது இன்றளவும்.

இந்த ஞானத்தின் செயல் முறை வழித் தன்மையே ஆதிசங்கரரின் காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்து அவரின் காலம் வரைக்கும் ஞான சக்தி வளர்ச்சியின் பாதையில் இருந்தது.

அவருக்குப் பிந்தைய காலத்தில்…
1.அரசர்களின் போற்றலின் பேராசை உணர்வு நிலை அதிகப்பட்டு விட்டதாலும்
2.மனித இன (மக்கள் தொகை) வளர்ச்சிப் பெருக்க நிலையினாலும்
3.மனிதனின் எண்ண ஈர்ப்பே இப்பேராசை உணர்வில் சிக்கி
4.அரசர்கள் ஆண்ட கால உணர்வில் அவர்களின் ஆதிக்க ஈர்ப்புப் பிடிப்பில் சிக்கிய தொடர்பலை வளர்ப்பாக
5.ஒன்றின் தொடர் கொண்ட தொடர் வட்டச் சுழற்சியில் சுழன்று வருகின்றது இன்றளவும்.

அரசர்களின் காலத்தில் தான் இப்பக்தி வழி முறை அதிகமாக வளர்ந்தது.

அதுவுமல்லாமல் இவ்வரசர்களினால் சில அலைத் தொடர்களைச் சில சக்தி வாய்ந்த பக்தி கொண்ட தெய்வ குண சித்து நிலை கொண்ட அலைத் தொடர்புடைய தெய்வ ஆவி அலைகளைத் தன் வசப்படுத்திக் கொண்டார்கள்.

தன் ஆதிக்க அரசு வாழ பிற அரசர்களின் போர்த் தொடர்புகளுக்கு இவ்வாவி அலை தெய்வ குணச் சக்திகளை இவர்களின் பூஜாபலனால் உருவேற்றிக் கொண்டார்கள்,

விக்கிரமாதித்தன் காலத்திலும் அசோக சக்கரவர்த்தி காலத்திலும் அதைப் போன்றே வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்திலும் பல அரசர்களும் இப்பூஜை வழிபாட்டுச் சித்து முறை பெற்று ஆவிகளின் தெய்வ குண தேவதைகளின் தாய் சக்தியை வணங்கி வந்தார்கள்.
1.அவர்கள் நாட்டை அரசாண்ட காலத்தில்
2.அரசர்களின் வலுவுக்கு வலுவாக இச்சக்திகள் தான் ஆண்டன.

புராண இதிகாச நூல்களில் சித்தர்கள் பால் தொடர் கொண்ட காவியங்களில் எல்லாம் ஆண் பெண் குண சக்தியின் தொடர்பில் உணர்த்தித்தான் உண்மை நிலைகளை எல்லாம் காட்டினார்கள்.

சிவ சக்தி… விநாயகன்… முருகன்… விஷ்ணு… என்றும் நாரதர் என்றும் ஆணின் தொடர்பு முறையை வலியுறுத்திய தெய்வ குணங்களாக இராமரையும் கிருஷ்ணரையும் ஒவ்வொரு பிரளய மாற்றத்திலும் இராமரின் குண சக்தியையே பல ரூப அலை ஞான செயல் குண இராமனாக உணர்த்தினார்கள்.

சீதாராமன்… பலராமன்… பரசுராமன்… இப்படிக் கால மாற்றத்தின் குண நிலை வளர்ப்பு அமில எண்ணத்திற்குகந்த செயல் உருவ வளர்ப்பிற்கு அந்தந்தக் காலங்களின் வீரியத் தன்மைக்குகந்த நாமகரணங்களைச் சூட்டி ஆண் குண அமிலத் தன்மைக்குகந்த தெய்வச் செயலைத்தான் “சப்தரிஷிகளின் சித்தர்களின் காலங்கள்” உணர்த்தின.

“அரசர்கள் காலத்தில்” வணங்கிய தெய்வங்கள் யாவையுமே பெண் சக்தியான காளி மாதா… என்றும் அதன் தொடர்புடைய ரூபத்தில் பராசக்தி… என்றும் ஜக்கம்மா… என்ற தாய் சக்தியும் உஜ்ஜயினி காளி சக்தியும்… சௌண்டம்மனின்.. தொடர்பும் இத்தொடரால் வந்தவை தாம்.

1.மனித சக்தியின் தெய்வ சக்தி பெற்ற
2.சித்து நிலை கொண்ட தாய் குணத்தின் பூஜிப்பின் அலைத் தொடர் வசச் செயலினால் தான்
3.அரசர்கள் பலர் அத்தொடர்பினால் தன் வலுவுக்கு வலு கூட்டிக் கொண்டு அரசர்களின் காலம் நடந்தது.

அந்தத் தொடர்பின் வழி முறையில் தான் “இக்கலியே நடக்கின்றது…!”

மற்றவரை உயர்த்த வேண்டும் என்று எண்ணினால் நாம் உயர்வாகின்றோம்… உயர்ந்த நிலையை எய்துகின்றோம்

uplifting hands

மற்றவரை உயர்த்த வேண்டும் என்று எண்ணினால் நாம் உயர்வாகின்றோம்… உயர்ந்த நிலையை எய்துகின்றோம்

பதார்த்தங்கள் அனைத்தையும் நாம் சுவையாகச் செய்து வைத்து கடைசியில் ஒரு விஷம் கொண்ட பொருளை அதிலே இணைத்து விட்டால் உட்கொள்வோரை நிச்சயம் மடியச் செய்துவிடும்.

அது போல் உலகில் தோன்றிய மகான்கள் எல்லோருமே உயர்ந்த தத்துவங்களைக் கூறியிருந்தாலும்
1.அங்கே அந்த மகான் காட்டிய உணர்வுக்கு மேல் இன்னொன்றாக
2.தீமை செய்வோர்களை அழித்திடும் கடுமையான உணர்வைத்தான் கடைசியில் சேர்க்கின்றோம்.

இது எல்லாம் காலத்தால் அரசர்களால் உருவாக்கப்பட்டது…!

ஏனென்றால் மகான்களால் உருவாக்கப்பட்ட உயர்ந்த நிலைகள் அனைத்தும் அரசு காலங்களில் அந்தப் பேருண்மைகள் மறைந்து விட்டது… இன்று நமக்கு அதைக் கிடைக்கவிடாதபடியே செய்து விட்டார்கள்.

அந்த மகான் காட்டிய வழிகள் வரப்படும் பொழுது அன்றைய அரசர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள்…?

1.தீமை என்ற நிலை வந்தால் அதை உடனே அழித்துவிட வேண்டும் வேட்கைகள் தூண்டுகின்றது.
2.தனக்கு அல்லது தன் மதத்திற்கு விரோதமானவர்கள் எல்லாம் “நம் கடவுளுக்கு விரோதமானவர்கள்…!”

ஞானிகள் காட்டிய வழி தவறி… கடைசி நிமிடத்தில் நீ எதிரிகளை (கடவுளுக்கு விரோதமானவர்களை) வீழ்த்திட வேண்டும்… தவறு செய்பவர்களை அழித்திட வேண்டும்… என்ற உணர்வு கொண்டு இந்தத் தாக்குதல் வரப்படும் பொழுது அந்தத் தாக்கிடும் உணர்வே கடைசியில் விளைகின்றது.

“கடவுளுக்கு விரோதமானவர்கள்…” என்று சொல்லிக் கொண்டு அந்தக் கடவுளின் தன்மையில் தான் பல மதங்களை உருவாக்கி விட்டார்கள். உலகிலுள்ள அனைத்து மதங்களும் இப்படித்தான்…!

இந்து மதமானாலும் சரி முஸ்லிம் மதமானாலும் சரி புத்த மதமானாலும் சரி கிறிஸ்தவ மதமானாலும் சரி இதைப் போல “தனது கடவுளுக்கு எதிரியானவர்கள்…” என்று எதிரிகளை உருவாக்கி
1.நல்லவைகளைப் பேசினாலும்
2.மற்ற மதங்களைச் சாடும் பொழுது எதிரி என்ற நிலையும்
3.பிசாசு என்ற நிலைகளில் உருவாக்கி விடுகின்றனர்.

இப்படி உலக நிலைகளில்… மற்றவர்கள் பிசாசை வணங்குபவர்கள் என்று சாரார் சொல்லப்படும் பொழுது மற்ற மதங்களும் இதைப் போல “அவர்களும் பிசாசை வணங்குபவர்கள்…” என்று சொல்வதும்
1.உயர்ந்த குணங்களை எல்லாம்
2.அந்த ஆவேச உணர்வு கொண்டு தான் வளர்த்துக் கொள்கின்றோம்.

அன்று நபிகள் சொன்னது:-
1.மனிதனை மனிதன் நீ மதித்து நட
2.மனிதனை உயர்த்த வேண்டும் என்று நீ எண்ணினால் நீ உயர்வாகின்றாய்.
3.மனிதன் பேரன்பைப் பெற்று அனைவரின் தன்மையும் உயர வேண்டும்

ஒரு மனிதன் பசியால் வாடப்படும் பொழுது… அந்தப் பசியைத் தீர்க்கும் எண்ணங்கள் உனக்குள் வந்தால்… அந்தப் பசி தீர்க்கும் உணர்வே உனக்குள் விளையும்… பசி தீர்க்கும் உபாயம் உனக்குள் கிடைக்கும் என்று கூறினார்.

மேலும் உண்மையின் சொரூபம் கொண்டு
1.பொய் பேசாதே
2.பொய்யான செயல்களைச் செய்து பிறரை ஏமாற்றாதே
3.தவறான உணர்வுகளை உனக்குள் சேர்க்காதே
4.தவறின் உணர்ச்சிகளை உனக்குள் இயக்கி விடாதே என்று நபிகள் தெளிவாகக் கூறியுள்ளார்.

அவர் வெளிப்படுத்திய பேருண்மையை யாரும் அதைத் தெளிவாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் வந்த அரசர்கள் அவர்கள் நியாத்தை முன் வைத்து அதன் வழிகளில் தான் இவர்கள் ஆட்சி புரிந்தனர்

நபிகள் காட்டிய அந்தக் கடவுளைக் காணும் நெறியை இவர்கள் முன் வைத்துக் கொள்வார்கள். அதே சமயத்தில் இவர்கள் இயற்றும் சட்டத்தைக் கொண்டு இதற்கு மாறாக நடந்தால்
1.அவர்களை ஆண்டவனின் எதிரி என்று மக்கள் மத்தியில் பலியிடுவார்கள்.
2.ஆண்டவனுக்கு விரோதமாக இருந்ததனால்… நீ தவறு செய்ததனால்.. நீ பொய் பேசியதனால்…
3.உன் கைகள் துண்டிக்கப்படும்.. உன் அங்கங்கள் அவமதிக்கப்படும்… உன் சிரசு துண்டிக்கப்படும்…! என்று
4.இப்படி அரசு சட்டங்களை நீதியாக்கி அதை “ஆண்டவன் கட்டளை…” என்று செய்தார்கள்.

அதே உணர்வுகள் தான் இன்றும் உள்ளது.

ஆனால் அந்த அருள் ஞானிகள் தீமைகளைப் பற்றிக் கூறியது என்ன…?

தவறான உணர்வுகள் உனககுள் இருந்தால் அந்த உணர்வின் தன்மை அரக்க உணர்வுகளாக உனக்குள் விளைந்துவிடும். அதனால் உன் அங்கங்கள் சீர்கெடுகின்றன… உன் குணங்கள் மாறுபடுகின்றது… நீ எண்ணிய உணர்வுகள் உனக்குள் மாறுபடச் செய்கின்றது..!

1.உனக்குள் இருக்கும் அந்தத் தவறின் நிலைகளை எல்லாம் அகற்றிவிடு… அருள் ஒளியைக் கூட்டி விடு…
2.ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ வேண்டும் என்று நீ எண்ணு.
3.அவன் பசியைத் தீர்க்கும் உணர்வை ஏங்கு
4.அந்த உணர்வு உனக்குள் இருந்து பேரன்பாக வளர்கின்றது என்று தான் மகான்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

ஞானிகள் கூறியதை யாரும் பின்பற்றவில்லை…! இன்றைய உலக நிலை இது தான்.

தீமைகள் வராது தடுக்கும் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று தான் ஞானிகள் சொல்லியுள்ளார்கள்… தீமை செய்பவர்களைத் தாக்குவதற்கு அல்ல…!

healing rays

தீமைகள் வராது தடுக்கும் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று தான் ஞானிகள் சொல்லியுள்ளார்கள்… தீமை செய்பவர்களைத் தாக்குவதற்கு அல்ல…!

கொடூரத் தெய்வங்களை வணங்கித் தன் பாவத்தைப் போக்கவும் தன் எதிரிகளை வீழ்த்தவும் ஆடு கோழிகளைப் பலியிட்டு அந்தத் தெய்வங்களை வழிபட்டு அதே சிந்தனையிலிருந்து விட்டால் அந்த உணர்வின் அலைகள் வெளிப்படுவதை நுகர்ந்த பின் எப்படிக் கொடூரத் தன்மை பெற்றதோ இந்த உணர்வின் தன்மை வழிபட்டோர் உடல்களுக்குள் சென்றுவிடும்.

அந்த உணர்வுகளைப் பெற்ற பின் அவர் இறந்துவிட்டால் பயத்தால் இத்தகைய ஆவியின் தன்மைகள் ஒரு உடலுக்குள் புகுந்து விட்டால் அவர்களுக்குக் காட்சி தரும்.

எப்படி…?
1.அந்தக் கொடூரப் பற்கள் கொண்ட அந்தத் தேவி வந்துவிட்டாள்…!
2.இந்த அச்சத்தால் வரும் பொழுது நரம்புகள் இயங்காது. பேசவும் வராது.
3.என்ன…? என்ற நிலைகள் வரப்படும் பொழுது..
4.கொடூரப் பற்கள் கொண்டு என்னைத் தாக்க வருகின்றது…! என்று அவர் ஒரு வார்த்தை சொன்னாலும்
5.அடுத்த கணம் இந்த உணர்வின் தன்மை வாய் அடைத்துவிடும்.

தெய்வத்திற்குப் பலி கொடுத்துப் பல உணர்வுகளை வளர்த்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் இப்படித்தான் வரும்.

இதைப் போன்று எந்த மதத்திலும் சரி…! அவர்கள் வழிப்படுத்திய நிலைகள் கொண்டு அது ஏங்கிப் பெறும் உணர்வுகள் இவ்வழியில் அங்கே சென்றுவிட்டால் இதே நிலை வரும்.

இதைச் சைத்தான் என்பார்கள் பல நிலைகளில். நாம் பேய் என்போம். இப்படிப் பல உணர்வுகள் நமக்குள் திரண்டு அதன் வலுவாக நமக்குள் இயக்குகின்றது.

1.நாம் எண்ணியது எந்த உணர்வோ அதன் உணர்வு கடவுளாக நின்று
2.அந்தச் சக்தியாக நம் உடலில் இயக்கி
3.நாம் மடிந்த பின் இந்த நிலைகளை உருவாக்குகின்றது.

நாம் பார்க்கும் ரூபங்களில் எந்தத் தெய்வமும் அப்படி இல்லை…!

நாம் உணர்வதற்காகத்தான் அவரவர்களின் மதத்தின் அடிப்படையில் இன்னென்னது என்ற நிலைகளை உருவாக்குகின்றார்கள்.

மெக்காவில் எடுத்துக் கொண்டாலும் கடைசியில் மெக்காவிற்குச் சென்ற பின் சைத்தானை ஓட்ட வேண்டும் என்று கற்களை எடுத்து வீசுவார்கள்.

தாக்கும் உணர்வு கொண்டு வரும் பொழுது போர் முறை கொண்டு இதிலே போட்டி கொண்டு தாக்குவார்கள்.
1.அந்தச் சைத்தானை விரட்டும் நிலைகள் கொண்டு கற்களைக் கொண்டு எறியப்படும் பொழுது
2.அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரப்படும் பொழுது அதிலே சிலர் மடிவார்கள்.

வருடா வருடம் மெக்காவிற்குச் செல்லப்படும் பொழுது அந்த ஞானிகள் காட்டிய உணர்வை மறந்து விட்டு
1.வெறியின் ஆசை கொண்டு நான் தீமைகளை வெல்லப் போகிறேன் என்று
2.இத்தகைய தீமையின் வெறி கொண்ட உணர்வுகளை இவர்கள் சுவாசிக்கும் பொழுது
3.அறியாமலே வெறி கொண்ட உணர்வுகள் வந்து அது இயக்கும் தன்மை வருகின்றது.

பாவத்தைப் போக்கவும்.. அருள் ஞானத்தைப் பெறவும்… அங்கே சென்றாலும் கடைசியில்…
1.வெறி கொண்டு தாக்கும் பிசாசுகளை ஒட்டும் உணர்வு கொண்டு
2.அந்தக் கற்களை எடுத்து வீசப்படும் பொழுது
3.இந்த உணர்வின் “வேகத் துடிப்பு…” வருகின்றது.

நம் நாட்டிற்குள் எடுத்துக் கொண்டாலும் இது போல சில நிலைகள் உண்டு. ஒருவனின் நிலைகளில்…
1.இவன் ஆண்டவனுக்கு விரோதமானவன்.. இவனைத் தாக்கிவிடவேண்டும்… அழித்துவிட வேண்டும்.
2.இல்லை என்றால் ஆண்டவனைப் பறைசாற்றுபவனை இவன் அழித்துவிடுவான்… என்ற
3.வெறி கொண்ட உணர்வுகளிலும் சில நிலைகள் உருவாகின்றது.

ஆகவே இவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ அது உள் நின்று அதன் வழியே செயல்படுத்துகின்றது.

அருள் ஞானியான அந்த நபிகளோ…
1.“தீமைகள் தனக்குள் வராதபடி…”
2.தன் எண்ணத்தின் தன்மை கொண்டு
3.தன் அருகிலே வராதபடி தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

 

தன் பாவங்களைப் போக்கி அந்த அருள் ஒளிகளைத் தமக்குள் கூட்டி அந்த உணர்வு கொண்டு “இந்த உலகமே உய்ய வேண்டும்…” என்று விரும்பினார். அந்த அருள் ஞானி ஊட்டியபடி மெக்காவிற்குச் சென்றால் அது நலமாக இருக்கும்.

ஆனாலும் பின் வந்தோர்கள் அவருக்குப் பின் அதை உருவங்களாக வடிவமைத்துப் பிசாசு என்ற எண்ணங்களை ஓங்கி கற்களால் அதை நீ எறிய வேண்டும் என்று மாற்றி விட்டார்கள்.

மெக்காவிற்குச் சென்று திரும்பும் பொழுது இதே உணர்வுகள் தான் கடைசியில் தாங்கி வருகின்றார்கள்.