என்னைப் “பித்தன்” என்று சொல்பவர்கள் இந்த உலக ஆசைகளில் பித்துப் பிடித்துப் பித்தனாக இருக்கின்றார்கள் – ஈஸ்வரபட்டர்…!

Magic

என்னைப் “பித்தன்” என்று சொல்பவர்கள் இந்த உலக ஆசைகளில் பித்துப் பிடித்துப் பித்தனாக இருக்கின்றார்கள் – ஈஸ்வரபட்டர்…!

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அவர் ஒரு பித்தனைப் போன்று தான் வாழ்ந்தார். புற உலகிற்கு அவரைப் பார்க்கும் போது “ஒன்றும் அறியாத பித்தன்…!” என்று தான் தெரியும்.

ஒரு மாமரத்தில் பிஞ்சாகிக் காயாகும் பொழுது புளிப்பின் தன்மை அடைந்தாலும் அது கனியாகும் பொழுது மற்றவர்கள் அதை ரசித்து உணவாக உட்கொள்ளும் நிலை வருகின்றது.

அதைப் போன்று தான் குருநாதர் இந்த மனித வாழ்க்கையில் நிலையில் எத்தகைய நஞ்சினையும் அவர் நுகராது அவர் இனித்த வாழ்க்கையின் நிலையைத் தனக்குள் எடுத்துக் கொண்டார். அதாவது
1.நஞ்சினை வெறுத்து
2.மெய் உணர்வினைத் தனக்குள் வளர்த்து
3.தன்னிச்சையாக அவர் மகிழ்ந்த உணர்வுடன் இருக்கும் போது
4.பார்ப்போருக்கு அவர் “பித்தனாகவே…” காணப்பட்டார்.

பித்தான உடலுக்குள் நின்று ஒளியான சத்தின் தன்மைகளைத் தனக்குள் வளர்த்தார். அகண்ட அண்டத்தினையும் அறிந்துணர்ந்து அறிந்திட்ட உணர்வின் சத்தைத் தனக்குள் ஒளியாக மாற்றினார்.

இந்தப் பூமியில் பற்றற்ற நிலைகள் கொண்டு மெய் ஞானிகளின் உணர்வின் மீது பற்று கொண்டு அதனை அவர் வளர்த்துக் கொண்டு விண்ணுலகம் செல்லும் நிலை பெற்றார்.

ஆகவே அவர் காட்டிய நிலைகள் கொண்டு நமக்குள் எதைப் பற்ற வேண்டும்…? எதைப் பற்றற்றதாக இருக்க வேண்டும்…?

வெறுப்பு வேதனை கோபம் குரோதம் என்ற நிலையில் பிறரை அழித்திடும் உணர்வுகளை நமக்குள் இணைய விடாது அதை விடுத்துப் பழக வேண்டும். அதைப் பற்றற்றதாக்க வேண்டும்.

அந்த மெய் ஞானியின் உணர்வுடன் பற்று கொண்டு தீமைகள் நம்மைப் பற்றிடாது நம்மைக் காத்திடும் நிலையாக வருதல் வேண்டும். இப்படிச் சொல்லும் பொழுது “என்னைப் பித்தன்…!” என்று மற்றவர்கள் சொல்கின்றனர் என்றார் குருநாதர்.

ஆக மற்றவர்கள் என்னைப் பார்த்துப் பித்தன் என்று எண்ணுகின்றார்கள். ஆனால் இந்தப் புவியின் ஆசை கொண்டு உடல் பற்று கொண்டு செயல்படும் போது அந்த ஆசையின் நிலைகளில் “அவர்கள் பித்தனாக இருக்கிறார்கள்…!” என்று உணரவில்லை.

நான் பித்தனாகத் தெரிந்தாலும்…
1.இந்த உடலின் தன்மைக்கோ
2.பித்து கொண்ட உடலின் உணர்ச்சிகளுக்கோ அடிமையாகவில்லை.

அதை எல்லாவற்றையும் அடக்கி அந்த மகா ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்ற
1.அந்தப் பித்துப் பிடியாகத்தான் நான் இங்கே இருக்கின்றேனே தவிர
2.மற்றவர்கள் காட்டும் உடலின் பித்துப் பிடியாக நான் இல்லை என்றார்.

உயிரை நாம் காண முடியவில்லை…! உணரத்தான் முடிகின்றது…!

Image

lord-shiva-amarnath

உயிரை நாம் காண முடியவில்லை…! உணரத்தான் முடிகின்றது…!

 

பூமியில் உருவான ஓர் கடலைச் செடியின் மீது சூரியனின் வெப்ப காந்தங்கள் (வெயில்) தாக்குகின்றது. அப்படித் தாக்கப்படும் போது அது கொதிப்பாகி செடி தனக்குள் உறைந்தது போக மீதத்தை ஆவியாக கடலைச் செடியின் மணங்களாக வெளிப்படுகின்றது.

அத்தகைய மணங்களை இந்த வெப்ப காந்தங்கள் கவர்ந்து அணுக்களாக மாறுகிறது. அந்த அணு கடலைச் செடியின் மணத்தைத் தாங்கிய இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

அத்தகைய கடலைச் செடியின் மீது சந்தர்ப்பத்தில் ஒரு உயிரணு படுமேயானால்
1.கடலைச் செடியிலிருந்து வெளிவரும் மணத்தை
2.உயிரணுவில் இணைந்த காந்தம் தனக்குள் கவர்ந்து
3.உயிரணுவுடன் இணைக்கப்படும் போது அது ஜீவனாகின்றது.

அந்தக் கடலைச் செடியின் மணம் உயிரணுவிற்குள் மோதும் பொழுது ஜீவனாகி ஆவியாகி மீண்டும் அதனுடன் உறையும் தன்மை வருகின்றது.

பாலைக் காய்ச்சிய பின் எப்படி அதன் மீது எப்படி ஆடை விழுகின்றதோ அது போல கடலைச் செடியின் மணம் (சத்து) உயிரணுவிற்கு மேல் ஆடை போன்று உறைந்து விடுகிறது.
1.ஆகவே அதற்குள் இந்த உயிரின் அறிவு அடைபட்டுவிடுகின்றது.
2.அதனால் தான் சூட்சமமாக இருக்கும் உயிரணுவை (உயிரை) நாம் பார்க்க முடியவில்லை.
3.மின் அணுவாகத்தான் பார்க்க முடியும்.
4.அதனின் நுண்ணிய நிலைகள் வரப்படும் போது அந்த உயிரின் நுண்ணணுக்களையும் நாம் காண முடியாது.
5.ஏனென்றால் அதுவும் சூட்சமத்தின் இயக்கத் துடிப்பு கொண்டது.

அதே மாதிரி ஒரு தாவர இனச் சத்தின் மணத்தைச் சூரியனின் வெப்ப காந்தம் கவர்ந்து கொண்டால் அந்த மணத்தைக் கவர்ந்து கொண்ட அணுக்களின் தன்மை படர்ந்து வரப்படும் போது அதிலே எதிர்பட்டு நாம் சென்றால் அதைச் சுவாசிக்கும் பொழுது
1.ஏதோ ஒரு மணம் வருகிறது என்று நாம் அறிய முடிகின்றது.
2.அப்படி அறிந்தாலும் ஒரு விஷத் தன்மை கொண்ட செடியிலிருந்து வந்த மணமாக அது இருந்தால்
3.அதை நாம் சுவாசிக்கும் பொழுது அது நமக்குள் ஜீவன் பெற்று நம் நல்ல அணுக்களைச் செயல் இழக்கச் செய்கின்றது.
5.நாம் மயங்கி விழுந்து விடுகின்றோம்.

ஏதோ கெட்ட வாசனை வருகின்றது என்று அறிந்த நிலையில் மயங்கி விழுந்து விடுகின்றோம். அதாவது அதனுடைய இயக்கச் சக்தி அதிகமாகி நம் நல்ல அணுக்களைக் கொன்று விடுகின்றது. இதை நாம் அறிந்து கொள்கின்றோம்.

அதே போல ஒரு நறுமணமான மணத்தை நாம் நுகரப்படும் போது அந்த நிமிடம் நாம் சுவாசிக்கப்படும் பொழுது ஏதோ நல்ல வாசனையாக வருகிறது…! என்று அறிந்து கொள்கின்றோம்.

இப்படி இத்தனை மணங்களைச் சுவாசித்துத் தனித் தனியாக நாம் உணர்ந்தாலும் அது எவ்வாறு… எங்கிருந்து வந்தது…? என்று நம்மால் அறிய முடிவதில்லை.

இதைப் போலத் தான் ஒரு உயிரணு தாவர இனச் சத்தின் மணத்தை நுகரப்படும் போது அது உறைந்து புழுவின் உடலாக உருவாகின்றது. அப்பொழுது உயிர் அந்த உடலுக்குள் மறைந்து விடுகின்றது.

1.அதாவது சூட்சம நிலைகளில் நாம் காண முடியாத அந்த மணத்தை நுகர்ந்து
2.இந்த உயிரணு தன்னுடன் உறையச் செய்து
3.அதற்குள் உயிர் உள்ளடங்கி விடுகின்றது.

உயிரின் இயக்கம் ஈசன். ஆகவே ஈசன் என்ற இயக்கம் அது உள்ளடங்கி தான் இழுத்துக் கொண்ட சக்தியை உடலாகப் போர்த்திக் கொள்ளும் போது சிவமாக… உருவமாக நமக்குத் தெரிகின்றது.

அப்பொழுது உயிரின் இயக்கமான ஒளியின் சக்தி உடலுக்குள் மறைந்து விடுகின்றது.
1.ஒளியான உயிர் இருளான உடலுக்குள் மறைக்கப்பட்டு
2.உடலாகச் சிவமாகத் தோன்றுவதைத் தான் சிவன் இராத்திரி என்று
3.ஞானிகள் காரணப் பெயராக வைக்கின்றார்கள்.

உயிரின் தன்மை உடலான சிவத்திற்குள் ஆகும் போது அந்த உயிரின் தன்மை அதற்குள் நின்று மறைந்து விடுகின்றது. இது தான் சிவன்ராத்திரி.

ஆதி மூலம் – நம் உயிரின் இயக்கத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

Image

ஆதிமூலம் - உயிர்

ஆதி மூலம் – நம் உயிரின் இயக்கத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

 

ஒரு தீபத்தை ஏற்றினால் அது எரியும் போது அது தனக்குள் ஈர்ப்பு சக்தியை எடுத்துத் தான் எரியும். அந்த ஈர்ப்பு சக்தி இல்லை என்றால் தீபம் அணைந்துவிடும்.

இதைப்போன்று தான்
1.ஒரு உயிரணுவிற்குள் துடிப்பு ஏற்படும் போது அதனால் ஏற்படும் வெப்பத்தால்
2.அது மீண்டும் ஜீவன் பெற்று இருக்க வேண்டும் என்பதற்காக
3.அதற்குள் இருக்கக்கூடிய காந்தபுலன் அந்த இயக்கச் சக்திக்கு உறுதுணையாக இருந்து எடுத்து அதை இயக்க வைக்கும்.
4.அதாவது ஒரு எண்ணைய் விளக்கைப் பொருத்தும் போது
5.அந்தத் தீபச் சுடரின் அருகிலே துவாரங்கள் இல்லை என்றால் ஈர்க்கும் சக்தி அடைபட்டு விடுகின்றது
6.நெருப்பு (தீபம்) எரிவதில்லை.

ஆகவே உயிரணுவின் சக்தி துடிக்கும் போது அதனுடன் இணைந்த காந்த சக்தி இது இயக்கப்பட்டு அந்தத் துடிப்புக்குள் ஈர்ப்பாகி
1.தன் அருகிலே இருக்கக்கூடிய பொருளை அது இழுத்து
2.உயிரணுவிற்குள் வளரும் சக்தியாக அது எந்தச் சக்தியை எடுத்ததோ
3.அந்த உணர்வின் மணமாக எண்ணமாகத் தெரிந்து கொள்ளும் நிலையாகின்றது.

இதைத்தான் ஞானிகள் இயக்கத்தை “ஈசன்” என்றும் அந்த இயக்கத்திற்குள் உருவாகும் வெப்பத்தை “விஷ்ணு” என்றும் அதில் இணைந்த காந்தத்தை “லட்சுமி” என்றும் காரணப் பெயரை வைத்துக் காட்டுகின்றார்கள். (நாம் புரிந்து கொள்ள)

அதே சமயத்தில் அந்தக் காந்தம் இழுத்து இந்த உயிருடன் இயக்கப்படும் போது அதை ஜீவன் பெறச் செய்கின்றது.

நாம் ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து அதற்குக் கீழ் நெருப்பின் தன்மை அதிகமாகும் போது பாத்திரத்திலுள்ள நீர் கொதிக்கும் தன்மையாக – இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

அதிகமாகக் கொதிக்கும் பொழுது அந்த நீரே ஆவியாகின்றது. நீரைக் கொதிக்கச் செய்து அதன் மூலம் வரும் ஆவியின் தன்மையை வைத்து அன்றைக்கு இரயில் இன்ஜினையே இயக்கினார்கள். அதுமட்டுமல்லாதபடி அதிகமான பாரங்களையும் வைத்து இழுத்துச் செல்லும்படிச் செய்தார்கள்.

அந்த நெருப்பின் தன்மையை இயக்கச் சக்தியாக வைத்து நீரைக் கொதிக்கச் செய்து அந்தக் கொதிப்பிலிருந்து ஆவியாக வரும் நிலையை “நீராவி இயந்திரம்…!” என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இயக்கச் செய்தனர்.

இதைப் போன்றது தான் நமது உயிரின் இயக்கமும்.

உயிர் தனக்குள் உருவாக்கும் துடிப்பால் வெப்பமாகி ஈர்க்கும் காந்தமாகி அந்தக் காந்தத்தால் அது ஈர்த்து எடுத்துக் கொண்ட உணர்வின் சத்தை உணர்வின் சத்தாக தனக்குள் உறையச் செய்கின்றது.

அவ்வாறு உறையச் செய்தாலும் தொடர்ந்து அந்தத் துடிப்பின் இயல்பாக இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.
1.நமது உயிர் “ஓ……“ என்று பிரணவமாகி (ஜீவன் பெறச் செய்து)
2.கவர்ந்த சக்திகள் அதனுடன் ஐக்கியமாகும் பொழுது “ம்……” என்று உறைந்து
3.அது உடலாக மாறுகிறது. ஒரு உயிர் உடலை இப்படித்தான் உருவாக்குகின்றது.

நீரை வைத்து அதனுடன் ஒரு பொருளை இணைத்து வேகச் செய்யும் போது அது கொதிகலனாலும் நாம் போட்ட பொருளின் சத்து கரைந்து நீருடன் ஒன்றி இரண்டும் ஒன்றாக இணைந்து விடுகின்றது.

1.நம் உயிர் நெருப்பாக இருந்து துடிப்பின் நிலைகள் கொண்டு வெப்பமானாலும்
2.ஈர்ப்பின் காந்தத் துடிப்பால் தனக்குள் கவரப்பட்டு
3.எந்தக் குணத்தின் சத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்கின்றதோ
4.அந்த இணைப்பின் சக்தியால் அதனுடைய ஆவியாக மாறி
5.அதனுடைய ஈர்ப்பின் துணையில் தனக்குள் உறையும் தன்மையாக மாற்றிக் கொள்கிறது.
6.நீருடன் மற்ற பொருள்களை இணைத்துக் கொதிக்கச் செய்யும் பொழுது அது எப்படி இரணடறக் கலந்து ஒன்றாகின்றதோ
7.அதைப் போல உயிரணு தனக்குள் கவரும் சத்தினை ஒன்றுடன் ஒன்றாக இணைத்து உடலாக உருவாக்கிக் கொண்டேயுள்ளது.

உயிர் என்று சொல்கின்றோம். உடல் என்று சொல்கின்றோம். நான் யார்…? தான் யார்…? இந்தப் பிள்ளை யார்…! என்ற நிலையில் நம்மை நாம் அறிந்து நமக்குள் இயக்கும் சக்தியையும் அறிந்து இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை உணர்த்திக் கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வாழ வேண்டும் என்பதற்கே இதை எல்லாம் உணர்த்துகின்றோம்.

இன்றைய அவசர உலகில் பொறுமை வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

sages patience

இன்றைய அவசர உலகில் பொறுமை வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அன்றாட வாழ்க்கையில் நமக்குத் தேவையான ஒரு பொருளை வரிசையில் நின்று தான் வாங்க வேண்டும் என்றால் அவசர உணர்வுகள் தலை தூக்கி நம் சிந்தனைகளைக் குறைத்து விடுகிறது.

வரிசையில் நமக்கு முன்னாடி நிற்பவர்களை முந்திக் கொண்டு பொருளை வாங்க நாம் ஆசைப்படுகின்றோம். அத்தகைய சந்தர்ப்பங்களில் மற்றவர்கள் மீது பொறுமையிழந்து நம்மை அறியாது கோபித்துப் பேசும் நிலையோ வெறுப்பின் நிலையோ அல்லது ஆத்திரப்படும் நிலைகளோ வந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைத் தடைப்படுத்தவில்லை என்றால் நம்முடைய நல்ல குணங்களைச் சீராகச் செயல்படுத்த முடியாதபடி எதிலேயும் இந்த அவசர உணர்வே முன்னாடி வரும்.

ஏனென்றால் இன்று இருக்கக்கூடிய உலக நிலைகளில் நச்சுத் தன்மைகள் அதிகமாகப் படர்ந்திருப்பதால் சிறிதளவு நாம் இடம் கொடுத்தாலே போதும்.
1.சங்கடமோ சலிப்போ வெறுப்போ போன்ற உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
2.அவைகள் எல்லாம் உடனடியாக நமக்குள் புகுந்து
3.நம் நல்ல குணங்கள் அனைத்தையும் அழித்துவிடும்.

அந்த விஷத்தின் தன்மை நமக்குள் பெருகி நல்லதைச் செயல்பட விடாத நிலையில் நோயாக உருவாக்கி இந்த உடலை விஷத் தன்மையாக மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற தீமைகளிலிருந்து மீட்டுவதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

ஆகவே எந்தக் கூட்டமைப்பிலும் நாம் பொருளை வாங்காது வரிசையில் நிற்கும் அந்த நேரத்தில் பொறுத்திருந்து…..
1.நமக்கு முன்னாடி இருப்போருக்குப் பொருள்கள் சீக்கிரம் கிடைக்க வேண்டும்.
2.அவர்கள் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்ற எண்ணங்களை நாம் எண்ண வேண்டியது அவசியம்.

அத்தகைய பக்குவ நிலைகளைப் பெறுவதற்காகத்தான் அகஸ்திய மாமகரிஷி வெளிப்படுத்திய அருள் உணர்வை குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்கு உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் வளர்த்துக் கொண்டால் ஒவ்வொருவரிடத்திலும் வரும் வெறுப்பை நாம் நீக்க முடியும். பொது நலத்துடன் கூடிய இத்தகைய உணர்வுகள் நமக்குள் ஓங்கி வளரப்படும் பொழுது
1.வெறுப்பை ஊட்டும் உணர்ச்சிகள் நீங்கி
2.மெய் ஞானியின் அருள் ஒளிகள் ஒவ்வொரு சமயத்திலும் நமக்குள் அது ஓங்கி வளர்கின்றது.
3.ஏனென்றால் இதை அடிக்கடி பதிவு செய்து கொண்டால்தான் அந்த எண்ணங்கள் வரும்.

புதிதாக ஒரு தையல் வேலை செய்யும் பொழுதோ அல்லது புதிதாகக் கோலங்கள் போடும் பொழுதோ முதலிலே போட்டவுடனே எதுவும் சரியாக வருவதில்லை.

கோலம் சரியாக வரவில்லை எனும் பொழுது மீண்டும் மீண்டும் அதைச் சீர்படுத்துவதற்கு இந்த உணர்வைச் செலுத்தும் போது பின்னாடி நேராக வருகின்றது.

ஆகவே அந்தப் பொறுமை நமக்குள் வருவதற்குத்தான் கோலங்களை இடச் செய்தனர். கோலங்களின் கட்டங்களை நாம் சரிவரப் போட்டிருக்கின்றோம் என்று அதைக் கண்டுணர்ந்து நல்ல நிலைகளைப் பெறுவதற்காக அன்றைய மெய் ஞானிகள் கொடுத்தது தான் இவை எல்லாம்.

அதே போல் தையல் மிஷினில் தைத்துப் பழகிய பின் தன்னிச்சையாகவே நேராகத் தைக்கும் நிலை வருவது போல அருள் உணர்வுகளை நமக்குள் செருகேற்றிக் கொண்டால் எந்த ஒரு துன்பமும் நம்மை அணுகாது தடுக்க முடியும்.

1.பேரின்பத்தைப் பெற்ற அந்த மகரிஷிகளின் நினைவுகள் ஒவ்வொரு நிமிடமும் வரும் போது
2.அந்த உணர்வுகள் தன்னிச்சையாக நமக்குள் (நேராக) இயங்கி
3.நம்மைச் சீராக்கும் நிலையை உருபெறச் செய்யும்.

ஆக நாம் சுவாசிக்கும் அந்த உணர்வை நம் உயிர் அதைச் செயல்படுத்தவும் அந்த உணர்வுகள் நம்மை இயக்கச் செய்வதற்கும் இது உதவும்.

பொது வாழ்வில் பொறுமை என்ற உணர்வுகளை எடுத்து வளர்க்க வளர்க்க
1.வரக்கூடிய எதிர்ப்புகளை எல்லாம் மறந்து
2.நமக்குள் மெய் ஒளியைப் பெறும் நிலையும்
3.மற்றவர்களின் எதிர்ப்பான உணர்வும் வெறுப்பான உணர்வுகளும் நமக்குள் புகாதபடி தடுக்க இது உதவும்.

இதை எல்லாம் அனுதினமும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அருள் நெறிகள்…!

வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரங்கள்

Big dipper - vashista

வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரங்கள் 

அருந்ததியும் வசிஷ்டரும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த உடலில் இருக்கப்படும் போது இரு மனமும் ஒன்றாகி ஒரு மனதுடன் உணர்வின் ஒளியாகி என்றும் நிலையான சரீரத்தைப் பெற்றுள்ளார்கள்.

நாம் தியானம் இருப்பது போன்றே தான் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளியை அவர்கள் இருவருமே பெற்று ஒருவருக்கொருவர் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வை வளர்த்து அதன் வழிகளிலே இரு சரீரமும் ஒரு சரீரமாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
1.அருந்ததி வசிஷ்டர் என்ற இந்த இரு நட்சத்திரங்கள்
2.ஒன்றின் பிணைப்புடன் ஒன்று சுழன்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

கணவன் மனைவி என்ற இரு சரீரங்களாக இருந்தாலும் இந்த உணர்வை ஒத்த அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளை நாம் எண்ணி ஏங்கும்போது இரு உடலும் ஒரே உணர்வாகக் கலந்து என்றும் நிலையான நிலைகளைப் பெறும்.

கணவனும் மனைவியும் இருவரும் சேரும் பொழுது குழந்தை எப்படிப் பிறக்கின்றதோ அதைப்போல
1.இரு மனமும் ஒன்றாகும் போது ஒரு சரீரமாகி
2.விண்ணிலிருந்து வரக்கூடிய சக்தியை சிவ சக்தியாகக் கவர்ந்து
3.தீய வினைகளை நீக்கி விஷத்தை ஒடுக்கி ஒளியின் சரீரமாக அந்த உருவின் தன்மையை கருவாக உருப் பெற செய்து
4.மெய் வழியில் என்றுமே ஒளி சுடராகத் திகழ்ந்திருக்கும்.

இந்த மனித வாழ்க்கையில் எவ்வளவு மகிழ்ந்து இருந்தோமோ அந்த மகிழ்ச்சி என்றும் அழியாத நிலைகளில் என்றும் பதினாறு என்ற நிலைகள் கொண்டு
1.இனி ஒரு சரீரம் எடுக்காது
2.ஒளி சரீரத்தையே நிலையான சரீரமாக பெற்றுச் செல்லும் நிலை வருகின்றது.

இந்த மனித உடலில் இருக்கும் போதே கணவன் மனைவி இருவரும் இந்தத் தியானத்தின் மூலமாக அந்த இணை பிரியாத நிலைகளைக் கொண்டு வர வேண்டும்.

கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும். மனைவிக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.

ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் நூறு முறையாவது இது போன்று கணவனும் மனைவியும் எண்ணினால் அந்த உணர்வுகள் ஓங்கி வளர இது ஏதுவாகும்.

1.எந்த உண்மைகளைக் காண வேண்டும் என்றாலும்
2.எந்த வழிகளில் நன்மை பெற வேண்டும் என்றாலும்
3.எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்றாலும்
4.கணவன் மனைவி இருவரும் ஒருமித்த நிலைகள் கொண்டு எண்ணிச் செயல்படுத்திடல் வேண்டும்.

எங்கள் (கணவன் மனைவி) பார்வை அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். எங்களைப் பார்போருக்கு நல்ல மனம் வர வேண்டும்… நல்ல எண்ணங்கள் வர வேண்டும்… என்று எண்ணி வலு ஏற்றிக் கொண்டால்
1.நமக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எத்தகைய நிலைகள் இருந்தாலும்
2.அந்த உணர்வுகள் நமக்குள் புகுந்து நம்மைச் சோர்வடையச் செய்யாத வண்ணம் தடுக்கும்.

இப்படி அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்த்து நமக்குள் அந்த மெய் ஒளியை வளர்க்கும் நிலை வரப்படும் பொழுது நம்மைப் பார்போர் நம் மீது கொண்ட வெறுப்பு சிறுகச் சிறுகத் தணிந்து நம்முடன் அணுகும் நிலையும்… அவர்களை அறியாத இருள்களை நீக்கும் நிலையும் பெறும்….!

ஆகவே உங்களை நீங்கள் நம்ப வேண்டும். ஏனென்றால் நீங்கள் எண்ணிய உணர்வுகளை
1.இந்த உடலிலே உயிர் தான் அணைக்கின்றது… இயக்குகின்றது… வளர்க்கின்றது…!
2.வளர்ந்த நிலையைத் தன்னுடன் அணைத்துக் கொள்கின்றது.
3.உடலை விட்டுச் சென்ற பின் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மைக்கொப்ப அடுத்த உடலாக மாற்றுகின்றது.

ஆகையினால் இந்த உண்மையை அறிந்த நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். உடலைக் கோவிலாக மதித்துப் பழகுங்கள்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர்ந்து அறியாது சேர்ந்த இருளைப் போக்கி மெய் வழி செல்ல வேண்டும்… மெய் ஒளியை அடைய வேண்டும் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றேன்.

பைத்தியம் போன்று பல கலர்களில் துணிகளைக் கட்டிக் கொண்டு புரியாத பாஷையில் பேசிய குருநாதர்…!

Eaganthanilais

பைத்தியம் போன்று பல கலர்களில் துணிகளைக் கட்டிக் கொண்டு புரியாத பாஷையில் பேசிய குருநாதர்…! 

எமது குருநாதர் பித்தனைப் போன்று இருந்தாலும் உடலுக்கு அந்த உணர்வைக் கொடுக்காது தன் உடலுக்குள் மெய் ஒளியின் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டவர்.

எத்தகைய நல்ல துணியைக் கொடுத்தாலும் அதைக் கிழித்துவிட்டு பைத்தியக்காரனைப் போன்று காலிலே கட்டிப் போட்டுக் கொள்வார். புதுத் துணிகளை எல்லாம் கிழித்துக் கட்டுக் கட்டாகக் கட்டிக் கொள்வார்.

என்ன சாமி… இந்த மாதிரிச் செய்கிறீர்கள்…! என்று கேட்டேன்.

கடும் விஷம் ஏறுகிறதப்பா…! அதைத் தடைபடுத்த இந்தப் புதுத் துணியைக் கிழித்து நான் கட்டிக் கொள்கின்றேன். கட்டாமல் போனால் ஏறி விடுகிறது விஷம்…! என்று இப்படி எல்லாம் உணர்த்தினார்.

அவர் ஒவ்வொரு விஷத்தின் தன்மையான எண்ணங்களுக்கும் ஒவ்வொரு கலரான துணிகளைக் காட்டினார். அதைப் போல அந்த விஷத் தன்மைகளை முறியடிக்கக் கூடிய ஒவ்வொரு தாவர இனச் சத்தின் திறனின் சக்தியையும் என்னை அறியச் செய்தார்.

தாவர இனச் சத்துக்கள் விஷத் தன்மைகளை எப்படி முறியடிக்கிறதென்ற நிலையும் அந்த ஆற்றலைத் தாவர இனங்கள் தனக்குள் எப்படி எல்லாம் கவர்ந்து கொள்கின்றதென்ற நிலையும் அவர் காட்டினார். ஆனால்
1.இதை எல்லாம் நேரடியாகக் காட்டவில்லை
2.பைத்தியம் போன்று அவர் செய்வதைத்தான் என்னால் நேரடியாகப் பார்க்க முடிந்தது.
3.அவர் உடலை விட்டுப் பிரிந்த பிற்பாடு தான் என்னால் அறிய முடிந்தது.

காலிலே கட்டைப் போட்டு இருக்கும் போது அதை அவரிடம் கேட்டு அறிய முடியாத நிலை இருந்தாலும் அவர் உடலை விட்டுச் சென்ற பின் அவரை நினைவில் கொண்டு ஏன் இதைக் கிழித்துக் கட்டினார்…? என்ற நிலையை மலைக் காடுகள் பக்கம் செல்லப்படும் போது என்னால் (ஞானகுரு) உணர முடிந்தது.

அவர் உடலிலே கட்டிய அந்தக் கிழிந்த ஆடையும் கிழித்துக் கிழித்துக் கட்டிய பல கலரான துணிகளும் அவருடைய நினைவலைகளைச் சுவாசிக்கும் போது அந்த உண்மையின் நிலையை நுகர முடிந்தது.

ஏனென்றால் அவர் எந்தெந்த கலர் துணிகளைக் கட்டியிருந்தாரோ அங்கே மலைப் பகுதிகளுக்குச் செல்லப்படும் பொழுது அங்கே அதே துணிகள் சில சில பச்சிலை மூலிகைச் செடிகளிலும் மரங்களிலும் கட்டப்பட்டிருந்தது.

அதைப் பார்த்ததும் அவருடைய உருவம் அங்கே தெரிகின்றது. அவர் உடலுடன் இருக்கும் பொழுது எனக்குப் புரியாத பாஷையில் அன்று சொன்னதெல்லாம் என் நினைவுக்கு வந்து அதைப் புரியும் நிலையாக வந்தது.

அப்பொழுது தீயவினையில் இருந்து விடுபடும் நிலையாக மெய் ஞானி அகஸ்தியனைப் பற்றிக் குருநாதர் எனக்குள் உணர்த்திய உண்மைகளை உணர முடிந்தது

1.அகஸ்தியன் தன் ஐந்தாவது வயதில் தாய் தந்தையரைப் பிரிந்த ஏக்கத்தில் காட்டிற்குள் அவன் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் அன்னை தந்தையினுடைய உணர்வுகள் அவனுக்குள் எப்படிச் சென்றது…?
2.தன் தாய் தந்தையரின் உணர்வுகளின் துணை கொண்டு தீய வினைகளில் இருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் பய உணர்வுகளிடமிருந்தும் எப்படி அவன் மீண்டான்…?
3.அவ்வாறு அவனின் வளர்ச்சியில் விண்ணின் ஆற்றலைச் சுவாசித்து எவ்வாறு உணர்வின் தன்மையை ஒளியாக எடுத்தான்…?
4.அவன் அமர்ந்த இடங்களில் இந்த உணர்வின் அலைகள் எப்படிப் படர்ந்துள்ளது…?
5.அங்கே செல்லப்படும் போது அதை நுகரும் போது நுகர்வோர் உள்ளங்களில் அது எப்படிச் செயல்படுகிறது…? என்ற
6.இத்தனை நிலைகளையும் உணர்த்துவதற்காகத் தான் குருநாதர் அவர் காலிலே பல கட்டுகளைக் கட்டி இருந்தார்.

குருநாதர் இட்ட கட்டளைப்படி சுமார் பன்னிரண்டு வருடம் காடு மேடெல்லாம் நான் அலைந்தேன். தனித்த நிலையில் செல்லப்படும் பொழுது நான் இன்ன நிலையைத் தான் செய்வது என்று அறியாது திகைத்துக் கொண்டு உணவிற்காகவும் தவித்துக் கொண்டு இருந்தேன்.

சரியான உணவே இல்லாமல் காட்டிற்குள் சுற்றிக் கொண்டு இருப்பேன். எதை எதையோ சாப்பிட்டுக் கொண்டிருப்பேன். இருந்தாலும் உணவு சாப்பிட்டுப் பழகியவனுக்கு அந்த நினைவுகள் வரும் போதெல்லாம் துயரங்களையே ஏற்படுத்தும்.

இதைப் போன்ற நிலைகள் வரும் போது குருவை எண்ணுவேன். அவரை எண்ணும் போது அவர் உணர்வின் தன்மைகளை நான் நுகர நேருகின்றது.
1.நுகரும் போது அந்த மெய் ஞானியான அகஸ்தியன் சென்ற பாதையும்
2.அவன் எடுத்துக் கொண்ட விஷத்தை முறிக்கும் உணர்வுகளையும்
3.அவனால் வெளியிட்ட இந்த உணர்வுகள் காற்றிலே படர்ந்திருப்பதையும்
4.அந்த அலைகள் பூமிக்குள் (அந்தந்த இடங்களில்) இறுகித் தனக்குள் வளர்ந்திருப்பதும்
5.அந்த அலைகள் பதிந்திருக்கும் இடங்களில் நான் நின்றபின் அகஸ்தியனின் உணர்வலைகள் எப்படி வருகின்றதென்ற நிலையையும்
6.குருவை எண்ணும் போதெல்லாம் உணர முடிந்தது… அறிய முடிந்தது.. காண முடிந்தது….!

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உபதேசித்த அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் சென்ற பாதையையும் அவன் உணர்வின் ஆற்றலையும் உங்களுக்கு இப்பொழுது சொல்கிறேன் என்றால் அது குரு காட்டிய நிலைகள் தான்.

குருநாதர் உடலை விட்டுச் சென்ற பின்
1.அவர் உணர்த்திய நிலைகளை நுகர்ந்தறிந்து
2.நான் அறியக்கூடிய நிலையில் அதைப் பெற்று
3,என்னை அறியாமல் வந்த தீய வினைகளை அடக்கி
4.மெய் உணர்வைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள் ஓங்கி வளர்த்துக் கொண்ட
5.அந்த உணர்வின் எண்ண அலைகளே இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது. நானல்ல…!

குருநாதரை நினைக்கும் போதெல்லாம் அந்த உணர்வின் தன்மைகளைப் போதிக்கும் தன்மை வருகின்றது. இதைப் படித்துணரும் உங்களுக்குள்ளும் இப்பொழுது பதிவாகின்றது.

இது உங்களுக்குள் வளர்ந்து அந்த மெய் ஞானியான அகஸ்தியன் பெற்ற பேராற்றல்களை நீங்கள் அனைவரும் பெறும் தகுதி பெறுகின்றீர்கள். அவனுடன் ஐக்கியமாகும் நிலையும் உருவாகின்றது…!

“முனி…!” என்பது வலுக் கொண்டது – எதற்கும் அடங்காத அந்த நாரதனின் சக்தியை எடுத்து எத்தகைய தீமைகளையும் நாம் அடக்க முடியும்

Image

narada muni - sage

“முனி…!” என்பது வலுக் கொண்டது – எதற்கும் அடங்காத அந்த நாரதனின் சக்தியை எடுத்து எத்தகைய தீமைகளையும் நாம் அடக்க முடியும்

 

அகஸ்தியன் துருவனாகித் துருவ் மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்றோர் அனைவரும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வெளிப்படும் ஒளியான அணுவைத்தான் நாரதன் என்று காட்டினார்கள். அதாவது ரிஷியின் மகன் நாரதன்… அவன் ஒரு முனிவன்.
1.முனி என்பது வலு கொண்டது… எதற்கும் அடங்காதது…!
2.விஷத்தின் தன்மை தன்னை அணுகாத நிலைகள் கொண்டு
3.விஷத்தையை ஒடுக்கும் நிலைகளைத்தான் முனி என்றும்
4.வீரிய நிலைகள் பெற்றவன்…! என்றும் அன்று ஞானிகள் பெயரை வைத்தார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து அத்தகைய நிலைகளில் வெளிவரும் அந்த உணர்வை ஒருவன் நுகர்ந்தான் என்றால் மனித வாழ்க்கையில் அவன் ஆசையினுடைய நிலைகளைக் கலைத்து கலகப்பிரியனாக ஆக்கிவிடும்.

இந்த மனித வாழ்க்கையில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளையும் தன்னை அறியாமல் ஆட்டிப்படைக்கும் செயல்களையும் நீக்கிவிட்டு அது தான் கலகப்பிரியன்…!” அந்தக் கலகமோ நன்மையிலே முடியும்.

உதாரணமாகத் தன் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதிலே அறியாது சிறு தடை ஏற்படும் போது குழந்தை தவறு செய்து விட்டாலோ நாம் எண்ணியபடி அவன் வரவில்லை என்றாலோ அவனை எண்ணி எண்ணி வேதனைப்படுகின்றோம்.

வேதனை என்பது விஷம். அந்த விஷம் நமக்குள் வந்து கலக்கத்தை ஏற்படுத்தி நம் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்கின்றது. அவன் இப்படிச் செய்கிறானே… இப்படிச் செய்கிறானே…! என்று கோபமும் ஆத்திரமும் வேதனையும் படுவோம்.

அதே போல பிறருக்குத் தக்க நேரத்தில் எல்லா உதவியும் நான் செய்தேன். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பிச் சரியான நேரத்திற்குக் கொடுக்கவில்லை என்றால் அவர்களை எண்ணி வேதனைப்படுகின்றோம். உதவி செய்தேன்… ஆனால் எனக்கு இப்படிச் செய்கிறார்களே…! என்று ஏசிப் பேசுவதும் அடுத்து வேதனையும் படுவோம்.

இதைப்போன்று நாம் மனித வாழ்க்கையில் பற்றுடன் வாழும் பொழுது அந்தப் பாசத்திற்கு எதிர்நிலையாக வரும் போது அதுவே நமக்குள் அதிகக் கோபத்தையும் எல்லை கடந்த ஆத்திரத்தையும் ஊட்டிவிடுகின்றது.

நீங்கள் நன்மை செய்ய வேண்டும் என்று பரிவுடன் பண்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்கள் படும் துயரத்தைக் கேட்டு விபரத்தை அறிந்து கொள்ளும் பொழுது அதை உங்களை அறியாது நுகர்ந்து விடுகின்றீர்கள்.

அதைத் துடைக்க வேண்டும் அல்லவா…!

1.இந்த நாரதன் என்ற உணர்வின் தன்மையை நாம் நுகரும் போது
2.நமக்குள் வரும் அத்தகைய தீமையான உணர்வுகளை எல்லாம் பிரித்து விட்டு
3.நமக்குள் ஓங்கி நிற்கும் ஒளியாக
4.எல்லாவற்றையும் நன்மை பயக்கும் சக்தியாக மாற்றிடும் திறன் கொண்டது.

அதற்காக வேண்டித் தான் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அணுவின் தன்மைக்கு “ரிஷியின் மகன் நாரதன்” என்று பெயரிட்டு நாம் சாதாரணமாகப் புரிந்து கொள்வதற்காக அவ்வாறு வைத்தார்கள்.

உங்கள் நல்ல குணத்தை அழிக்கும் திறன் கொண்ட அத்தகைய வேதனையான உணர்வை அழித்திட்ட தனக்குள் அடக்கிய அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்துப் பழக வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியை நுகரும் திறனை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளவும்
2.உங்களுக்குள் அந்த நினைவின் உணர்வுகளை உந்தச் செய்து
3.மகரிஷிகளை எண்ணும் போதெல்லாம் அந்தச் சக்திகளைப் பெறச் செய்வதற்காகவும்
4.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி இதை உபதேசிக்கின்றோம்.

அந்த மகரிஷிகள் உணர்வுகளை நுகர்ந்தால் தீமைகளை மாற்றி நம் நல்ல பண்பினைக் காத்து பிறரைக் காத்திடும் நிலை கொண்ட உணர்வாக ஓங்கி வளர்த்துக் கொள்ள முடியும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் விளைய வைத்துக் கொண்டால் என்றும் நிலையாக நம் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றும் பதினாறு என்ற நிலையை அடைய முடியும்.

குள்ளமாகக் காட்டப்பட்ட அகஸ்தியரின் ஆற்றல்களை நாம் அறிந்திருக்கின்றோமா…?

Image

 

agathiar

குள்ளமாகக் காட்டப்பட்ட அகஸ்தியரின் ஆற்றல்களை நாம் அறிந்திருக்கின்றோமா…?

 

இன்றும்… உடல் நலம் சரியில்லை என்றால் அதை நீக்க “மந்திரிக்க வேண்டும்…!” என்ற நிலையில் சிலர் மந்திரவாதியிடம் செல்வார்கள்.

அதாவது தன் குழந்தைக்கு மந்திரிக்க வேண்டும் என்று செல்லப்படும் போது அந்த மந்திர சக்தியினுடைய நிலைகளை அவர்கள் யாரும் அறிய மாட்டார்கள்..

குழந்தையின் வியாதியைப் போக்க அவர்கள் மந்திரித்து தாயத்துக்களையோ மற்றதுகளையோ கொடுப்பார்கள். அதை அந்தக் குழந்தை கட்டிக் கொள்ள நேருகின்றது.

ஆனால் ஒரு சமயம் இல்லாவிட்டாலும் ஒரு சமயம் கட்டியிருக்கும் அந்தத் தாயத்தைப் பார்த்துக் குழந்தைக்குள் பயமான உணர்வுகள் வருமானால் என்ன நடக்கின்றது…?

இதற்கு முன்னாடி ஒரு மந்திரவாதி தெய்வத்தின் நிலைகளை வைத்து அவன் பல மந்திர தந்திரங்களைச் செய்து “இது தான் தெய்வம்…!” என்று சில நிலைகளை எடுத்துக் கொண்டு அவன் உடலை விட்டுப் பிரிந்து சென்றிருந்தால் அந்த மந்திரவாதியினுடைய உயிராத்மா இந்தக் குழந்தையின் பால் ஈர்க்கப்பட்டு விடுகின்றது.

இறந்த மந்திரவாதி அவன் வாழும் காலத்தில் என்னென்ன வேலைகளைச் செய்தானோ அதை இந்தக் குழந்தை உடலிலேயும் அந்த உணர்வுகள் செயல்படுவதைப் பார்க்கலாம்.

சில கிராமப்புறங்களில் நீங்கள் பார்க்கலாம். ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட “திடும்…” என்று முருகன் இங்கே வந்து குழந்தை வடிவில் அருள் பாலிக்கின்றான்… பல சொற்களையும் பல நிலைகளையும் வெளிப்படுத்துகின்றான்…! என்று பார்க்கலாம்.

இதெல்லாம் ஒரு மனிதன் உடலில் விளைய வைத்த அந்த மந்திர சக்திகள் தான் அவ்வாறு இயக்குகின்றது.

ஆனால் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் காலத்தில் அவனுக்கு மந்திரமும் தெரியாது. மாயமும் தெரியாது.

அவன் சிறு பாலகனாக இருக்கும் பொழுது பயமற்ற நிலைகள் கொண்டு விண்ணை நோக்கிப் பார்த்து அந்தப் பேரண்டத்தின் உண்மையினுடைய நிலைகளை தனக்குள் எடுத்து ஒவ்வொன்றையும் நுகர்ந்தறிந்து கொண்டான். எப்படி…?

தாய் கருவிலே சிசுவாக இருக்கும் பொழுது அவர்கள் பெற்ற விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டு அந்த விஷத்தின் தன்மையை நீக்கும் உணர்வுகள் சந்தர்ப்பவசத்தால் அவனுக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்தது.

பேரண்டத்திலிருந்து பிரபஞ்சம் எப்படி வளர்கின்றது என்பதையும் பிரபஞ்சத்திற்குள் உயிராத்மாக்கள் எப்படி வளர்கின்றது என்பதையும் ஒன்றும் அறியாத அந்தக் குழந்தைப் பருவத்தில் அகஸ்தியன் அறிகின்றான்.

முதலிலே அகஸ்தியனின் தாய் தந்தையர் பிற மிருகங்களிலிருந்தும் விஷமான பாம்புனங்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொள்வதற்காக பல பல தாவர இனச் சத்தை நுகர்ந்தறிந்து உடல்களிலே அரைத்துப் பூசி தங்களைப் பக்குவப்படுத்திப் பழகிக் கொண்டார்கள். அவர்கள் கருவிலே உருவானவன் தான் அகஸ்தியன்.

இருந்தாலும் அவர்கள் சுவாசித்த கடும் விஷம் கொண்ட தாவர இனச் சத்தால் உடலிலே நோயாகி அகஸ்தியனின் ஐந்தாவது இறந்து விடுகின்றார்கள்.

தன்னை விட்டுப் பிரிந்து விட்டனரே…! என்று அகஸ்தியர் தன் தாய் தந்தையரை எண்ணி ஏங்கும் பொழுது குழந்தையின் மீது பற்று கொண்ட அந்த இரு ஆத்மாக்களும் அவன் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

வந்த பின் அகஸ்தியன் சூரியனை நோக்கி எண்ணும் போது அவர்கள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகள் எல்லாம் வீரியமடைந்து
1.ஒன்றும் அறியாத அந்தக் குழந்தைக்குச்
2.சர்வத்தையும் அறியும் ஆற்றல் அங்கே பெருகுகின்றது.

இந்தப் பிரபஞ்சத்திற்குள் மற்ற கோள்களின் சத்தைச் சூரியன் எப்படிக் கவருகின்றது…? சூரியனிலிருந்து வெளி வரும் வெப்ப காந்த சக்தி பூமிக்குள் தாவர இனச் சத்தை எப்படிக் கவருகிறது…? இயற்கை எப்படி இயங்குகின்றது…? என்ற இந்தப் பேரண்டத்தின் பேருண்மைகளை ஒன்றும் அறியாத அந்தப் பாலகன் அறிகின்றான்.

அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல் தன் உடலை வளர்க்கச் செய்யாது உணர்வின் ஆற்றல் மிக்க சக்தியின் திறமையாக வளர்ந்தது…!
1.அவன் மிகவும் குள்ளமாக இருந்தான்
2.ஆனாலும் அவன் உணர்வின் ஆற்றல் மிகவும் பரிமாணமான (MULTI DEIMENSIONAL) நிலையில் வளர்ந்தான்
3.துருவத்தின் நிலையை அறிந்து அதன் வழியாய வரும் உணர்வுகளில் உள்ள விஷத்தை ஒடுக்கினான்
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றான்.
5.அந்த அகஸ்தியன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்.
6.அவன் அருளைப் பெற்று அவனைப் போன்று நாம் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரமாக வேண்டும்.

எங்களுக்காக ஆண்டவன் படைத்த உயிரினங்களை (குரங்கின் மூளை கரப்பான் பூச்சி) நாங்கள் சாப்பிடுகிறோம் – அதில் தவறு இல்லை என்பார்கள்…!

Image

Spiritual target

எங்களுக்காக ஆண்டவன் படைத்த உயிரினங்களை (குரங்கின் மூளை கரப்பான் பூச்சி) நாங்கள் சாப்பிடுகிறோம் – அதில் தவறு இல்லை என்பார்கள்…!

 

மலேசியா போன்ற சில நாடுகளில் போதைப் பொருள்களை உபயோகித்தாலும் இன்னும் அதிகப் போதை வேண்டும் என்பதற்காக நல்ல பாம்பை வைத்து நாக்கை நீட்டச் சொல்லி அந்த நாக்கிலே கொத்தச் செய்து இதைப் போன்ற விஷத்தை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய மனிதர்களும் உண்டு.

குரங்கினை நாம் இங்கே கடவுளாக வணங்கும் நிலை இருக்கிறது. ஆனால் மேலை நாடுகளிலே உயிருடன் இருக்கும் குரங்குகளை அப்படியே அதன் மேல் இருக்கக்கூடிய மூட்டைத் (TOP) தட்டி விடுகின்றார்கள்.

உள்ளே இருக்கக்கூடிய மூளையைக் குழப்பி அதில் சிறு பொடியைப் போட்டு நாம் எப்படி ஸ்ட்ரா மூலம் சர்பத் சாப்பிடுகின்றமோ அதேபோல குரங்கின் மூளையை உறிஞ்சிச் சாப்பிடுகின்ற நாடுகளும் உண்டு.

ஆக மனிதனாகப் பிறந்தும் மிருக நிலை போல உணவாக உட்கொண்டிருக்கும் இப்படிப்பட்ட நிலைகளும் உண்டு.

நாம் கரப்பான் பூச்சி என்று சொல்கின்றோம். ஜப்பான் போன்ற நாடுகளில் விஞ்ஞான அறிவு பெருகி வந்தாலும் அந்தக் கரப்பான் பூச்சிகளைப் பிடித்து அதை எண்ணெயிலே வறுத்து ரசித்துச் சாப்பிடுவோரும் உண்டு.

ஆனால் இதையெல்லாம் உணவாக உட்கொள்ளும் தன்மை பெற்றவர்கள் எங்கே செல்வார்கள்…?

நாங்கள் வணங்கும் ஆண்டவன் நாங்கள் உணவாக உட்கொள்வதற்காகவே இதை எல்லாம் படைத்தான் என்று சொல்வார்கள். இன்று எல்லா மதத்திலும் உயிர்களைப் பலி கொடுத்து அதை ஆண்டவனுக்காக என்று படைக்கும் பழக்கம் உண்டு.

உனக்காகப் பலி கொடுத்து விட்டு உன் பெயரைச் சொல்லி நான் அந்த உயிரினங்களை எல்லாம் புசிக்கிறேன் என்று சாப்பிட்டாலும் சாப்பிட்ட உணர்வு என்ன செய்யும்…?

மிருக இனங்கள் மற்ற உயிரினங்கள் அனைத்துமே விஷத்தின் தன்மைகளைத் தன் உடலாக ஏற்றுக் கொண்டது. நாம் அதை உட்கொள்ளும் பொழுது அந்த விஷத்தின் தன்மை நமக்குள் ஊடுருவிவிடும்.

அந்த மிருகங்களும் உயிரினங்களும் அது தன்னை அறியாமலே கொடூரமான செயல்களைச் (மனிதனைப் போன்ற சிந்தனை இல்லாது) செய்து பிறிதொன்றைத் தாக்கி விஷத்தை உட்கொள்கின்றது.

இதைப் போன்ற உணர்வின் சத்து நம் உடலுக்குள் சேரும் போது நமக்குள்ளும் அந்த உணர்ச்சியைத் தூண்டும்.
1.நம்மைக் கேட்காமலேயே காற்றிலிருந்து அத்தகைய மிருகங்களின் உணர்வை நுகர்ந்து
2.அது மனித (நம்) உடலுக்குள் வளர்ச்சியாகி விஷத் தன்மையான செயலாக உருவாக்கி
3.அதையே ரசித்து மற்றவைகளை உணவாக உட்கொள்ளும் நிலை வரும்.

இரக்கமற்ற நிலைகள் கொண்டு கடவுளின் அடிப்படையிலோ அல்லது மதத்தின் அடிப்படையிலோ நாம் வளர்த்தாலும் விஷத் தன்மையை உணவாக உட்கொண்டவர்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் அந்த உணர்வினை வளர்த்து வெளியிலே செல்லும் போது விஷப் பூச்சிகளாகத் தான் போக முடியும்.

அதாவது இன்று மனிதன். நாளை விஷமான பூச்சி. ஏனென்றால் விஷப் பூச்சிகள் தன் விஷத்தால் மற்றதைக் கொத்தித் தன் உணவாக எடுத்துத்தான் அந்த மகிழ்ச்சியை அடைகின்றது.

பிறிதொருவர் வேதனைப்படுவதைக் கண்டு நாம் ரசித்துச் சுவாசிப்போமேயென்றால் நம் உடல் விஷத்தின் தன்மை அடைந்து நல் உணர்வுகள் அனைத்தும் மறந்துவிடும்.

1.ஏனென்றால் அந்த விஷத்தின் ஈர்ப்பு (வேதனைப்படுவதைப் பார்த்து ரசித்தது) ஆற்றல் அதிகமாக இருக்கும் நிலையில்
2.நமக்குள் விளைய வைத்த அந்த உணர்வின் தன்மை
3.மணமாக மாறி நம் உயிருடன் ஒன்றி இருக்கும்.

உடலை விட்டுப் பிரியும் நிலையில் உயிராத்மாவில் சேர்த்துக் கொண்ட மணத்தின் நிலைகள் கொண்டு பூமியிலே நாம் மிதப்போம். மிதந்தாலும் இதை ஒத்த ஒரு விஷ ஜெந்தினுடைய உயிர் உடல் பெற்று விஷத்தை ஓங்கி வளர்க்கப்படும் போது அதனின் ஈர்ப்பிற்குள் சென்று விடுவோம்.

அந்த உடலின் சத்தை நாம் கவர்ந்து கருவாகி முட்டையாகி முட்டைக்குள் அதனின் சத்தை எடுத்து இந்த உயிர் அதனின் உடலாகப் பாம்பாக உருவாக்கிவிடும் நமது உயிர்.

1.ஆகவே நாம் எத்தகைய நிலையைச் செய்தாலும் பிறரிடமிருந்து மறைக்கலாம்.
2.ஆனால் நமக்குள் இருக்கும் உயிரிடம் எதையும் மறைக்க முடியாது.
3.ஏனென்றால் நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ
4.அது நம் சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று அந்த உணர்வுகள் விளைந்து
5.சுவாசித்த உணர்வின் மணமாக நம் உயிராத்மாவில் சேர்க்கப்படும் பொழுது
6.அதற்குத் தக்க அடுத்த உடலாக அவன் உருவாக்கி விடுகின்றான்.
7.இதிலிருந்து யாருமே தப்ப முடியாது…!

பெரும்பகுதியானவர்கள் வாழ்க்கையில் நிம்மதி இழந்து வேதனையுடனே வாழ்கிறார்கள்…! அதற்கு என்ன காரணம்…?

Image

Peaceful heartful meditation

பெரும்பகுதியானவர்கள் வாழ்க்கையில் நிம்மதி இழந்து வேதனையுடனே வாழ்கிறார்கள்…! அதற்கு என்ன காரணம்…?

 

இந்த வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலேயும் நாம் நலமாக இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம்.

உதாரணமாக நமக்குத் தேவையான பொருள்கள் வாங்க வேண்டும் என்று கடைக்குப் போகிறோம். கடைக்காரருக்குத் தெரிந்தவர்கள் அங்கே வந்தார்கள் என்றால் அவர் அவர்களுக்குத்தான் முதலில் சரக்குகளை எடுத்து கொடுப்பார்.

நான் கேட்ட சரக்கைக் கொடுங்கள்…! என்று சொல்லிக் கொண்டிருப்போம். சொல்லச்…சொல்ல… நேரம் ஆக…ஆக… அந்தக் கடைக்காரர் மேல் நமக்குக் கோபம் வந்து கொண்டே இருக்கும்.

நாம் கோபமாகப் பார்த்தவுடன் கடைக்காரர் என்ன செய்வார்…? நான் கொடுப்பதற்கு முன்னாடி “இவருக்கென்ன ஆத்திரம்…!” என்று இன்னும் சிறிது நேரம் நம்மை நிறுத்தி வைப்பார்.

நாம் பொறுமை இழந்து என்ன செய்கின்றோம்…? ஏய்யா…! அவ்வளவு நேரமாக நின்று கொண்டிருக்கின்றேன். எனக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறாயே…? என்ற நிலை தான் வரும்.

இதைப்போல வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே ஒவ்வொரு செயல்களிலும் இதைப் போன்ற உணர்வுகள் பதிவாகி விடுகின்றது. நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணினாலும்
1.நல்ல குணங்களுக்குள் இது எல்லாம் கலந்த பின்
2.நாம் எதை எண்ணினாலும் கலக்கமுடன் தான் நாம் இருக்க முடிகின்றதே தவிர
3.எந்தச் செயலையும் நல்லதென்று (நிம்மதியாக) நாம் வலு கொண்டு நிலைத்திருக்க முடியவில்லை.

எதை எடுத்தாலும் கவலையும் சஞ்சலமும் பட்டு எல்லா குணங்களிலேயும் இது கலக்கப்பட்டு அதை நுகரப்படும் போது எதனெதன் அளவைக் கூட்டிக் குறைத்து நாம் சுவாசித்துள்ளோமோ அதற்குத் தக்கவாறு உடல் உறுப்புகளிலே நோய்கள் உருபெறுகின்றது.

ஒரு விதை அது வேகமாக வளர்ந்து வரப்போகும் போது
1.தன் அருகிலே சத்தின் தன்மை குறையப்படும் போது
2.அதற்குத் தக்கவாறு தாங்கும் நிலை அற்று விட்டதென்றால்
3.தன்னுடைய முதிர்வின் பலனைத் தரப்போகும் போது சீராக இல்லாதபடி “கருகி விடுகின்றது…”

இதைப்போலத் தான் மற்ற உணர்வுகள் கலக்கும் பொழுது மனிதனுக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு வேண்டிய வலு இல்லாதபடி அந்த நல்ல குணங்களை வளர்க்காத வண்ணம் இது தடைப்படுத்தி ஓரளவுக்கு அது நம்மைச் சிந்தனையற்ற நிலையாக்கி விடுகின்றது.

சிந்தனைகள் கிளர்ந்தாலும் நல்லதை செயல்படுத்த முடியாத நிலைகளுக்கு அது உள்ளாக்கி விடுகின்றது. நல்ல குணங்களை வளர்ச்சியடையாது குன்றும் பொழுது உடல்கள் குன்றி… உணர்வுகள் குன்றி… அது வேதனை என்ற நிலைகளை உருவாக்கி விடுகின்றது.

இப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு நாம் இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்றால் நாம் எந்த மணத்தை அதிகமாகச் சேர்த்திருக்கின்றோமோ அந்த மணத்திற்கொப்ப இன்னொரு உடல் இருந்தால் அதனின் ஈர்ப்பிற்குள் சென்று அந்த உணர்வின் சத்தை எடுத்து அந்த உடலாகப் பெற்று விடுவோம்.

நம் வாழ்க்கையில் கலக்க உணர்வுகள் இப்படிச் சேர்க்கப்பட்டுச் சிந்திக்கும் செயல் இழந்து மனிதனல்லாத உடலாக மாற்றிவிடுகின்றது.
1.இதையெல்லாம் செய்வது யார்…?
2.நம் உயிரின் தன்மையே…!

ஆனால் மனிதனுடைய ஆறாவது அறிவு தீமையை நீக்கும் திறன் கொண்டது. “தீமையானது…” என்று இருந்தாலும் அதைப் பக்குவப்படுத்திப் நல்லதாகப் படைக்கும் நிலைகள் பெற்றவர்கள் நாம்.

இயற்கையில் வந்த ஒவ்வொரு பொருளையும் இன்று செயற்கையில் இணைக்கச் செய்து எத்தனையோ தாவர இனங்களையும் மற்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் உருவாக்கியுள்ளார்கள் மனிதர்கள். உயிரினங்களயும் கூட அது எத்தனையோ புதுப் புது ரூபங்களாக மாற்றி அமைத்துள்ளார்கள்.

இந்தச் சக்தியை புற நிலைக்குத்தான் நாம் பயன்படுத்துகின்றோம். ஆனால் தங்கள் ஆறாவது அறிவை அக நிலைக்குப் பயன்படுத்தி ஏழாவது அறிவாக உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றியவர்கள் மெய் ஞானிகள்.

மெய் ஞானிகள் தன் வாழ்க்கையில் வென்று சென்ற அந்த உணர்வினை ஒவ்வொரு நிமிடமும் நாம் எடுத்து
1.நம்மை அறியாது நம் நல்ல குணங்களுக்குள் கலக்கச் செய்யும்
2.தீமை செய்யும் உணர்வுகளையும் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளையும் நீக்கி
3.அந்த எண்ணங்களை அடங்கச் செய்வது தான் மனிதனின் கடைசி நிலை.