இளம் வயதில் அனாதையாக இருந்த போகர் மெய் ஞானத்தைப் பெற்று போகமாமகரிஷியாக எப்படி மாறினார்…!

Bhogar

இளம் வயதில் அனாதையாக இருந்த போகர் மெய் ஞானத்தைப் பெற்று போகமாமகரிஷியாக எப்படி மாறினார்…!

5300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த போகன் அவன் அனாதையான நிலைகளாக இருக்கப்படும் போதுதான் மெய் ஒளியின் தன்மையைப் பெறும் சந்தர்ப்பமே அவனுக்கு ஏற்படுகிறது.

ஏனென்றால் தாய் தான் இருக்கின்றது. தந்தை இல்லை. ஆனால் தாயும் விஷமான பாம்பால் தீண்டபட்டு அதுவும் மரணமடைகின்றது.

தாய் மரணமடையப் போகும் போதுதான்
1.அந்த விஷத்தின் நிலைகள் கொண்டு… “தன் எண்ணத்தை ஓங்கி வலுவாகச் செலுத்தி…”
3.அவன் எண்ணிய ஏக்கத்தின் நிலைகள் கொண்டு
3.அவன் சுவாசத்திற்குள் சிக்கப்பட்டது தான் பல ஆற்றல்மிக்க சக்திகள்.

தாயின் பாசமும் இவனுடைய எண்ணமும் கூடித் தன் தாய் மேலே இருக்கக்கூடிய பாசத்தின் ஆற்றலால் அன்று ஞானிகள் காட்டிய அருள் வழி கொண்டு அவன் எண்ணத்தைச் செலுத்தும் போது
1.அதன் வழி அவனுக்குள் ஈர்க்கப்பட்டது தான்
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு ஆற்றலான அணு.

பாம்பு தீண்டியதும் தாயின் உடலிலே இருக்கக்கூடிய அந்த நஞ்சை நீக்க
1.அவன் எடுத்துக் கொண்ட வேகமும்
2.விஷத்தின் தன்மையை நீக்குவதற்கு எடுத்துக் கொண்ட சுவாசமும்
3.அவன் சுவாசித்த உணர்வுகள் ஆற்றல்மிக்கதாகப் பெருகி
4.அவனுடைய சந்தர்ப்பம் அதை அறிவதற்காகச் செல்கின்றான்.

அந்த உணர்வின் வேகத்திற்குள் எடுத்துக் கொண்ட நிலையில் பல பல தாவர இனச் சத்தை நுகர்ந்தறிந்து விஷத்தின் தன்மையை நீக்குவதற்குண்டான முயற்சிகள் எடுத்தான்.

அன்று காட்டிய நிலைகள் கொண்டு தன் ஏக்கத்தை விண்ணை நோக்கிச் சூரியனுக்குள் செலுத்தும் போது இவனை அறியாமலே சூரியனின் காந்த அலைகள் இவனுக்குள் கூடி இவன் எண்ணத்திற்கும் வலு கூட்டி இவன் எந்தெந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்டானோ அதன் வழி கொண்டே விஷத்தின் தன்மைகள் ஒவ்வொன்றையும் தனக்குள் அறிந்துணர்ந்தான்.

நன்றாகக் கவனமாக கேட்டுக் கொள்ள வேண்டும்.

ஆனால் போகனைப் பற்றிய சரித்திரத்தைப் பார்த்தோம் என்றால் அவர் சட்டி பானை செய்து கொண்டிருந்தார். குயவர் குலத்தில் பிறந்தவர் என்று ஒன்று சொல்வார்கள்.
1.குயவர் என்றால் “பிரம்மம்…!” ஒரு பொருளை உருவாக்குவது.
2.பிரம்மத்தின் தன்மை அடைந்தவன் போகன் என்று அவர்கள் சுட்டிக் காட்டுவதற்கு அந்தப் பெயரை வைத்தார்கள்.
3.பிற்காலத்தில் அதை எல்லாம் அழித்து விட்டார்கள்.

தான் நுகர்ந்த உணர்வின் தன்மைகளைச் சுவாசிக்கும் போது தன் உயிரான நிலைகள் கொண்டு அந்தச் சக்தியைப் பிரம்மமாக்குகின்றான். அந்தப் பிரம்மத்தின் தன்மை தனக்குள் ஞானமாக்கி அந்தச் சக்தியைத் தனக்குள் வளர்த்துக் கொண்டான்.

ஒரு குணத்தின் தன்மை எடுத்துக் கொண்டானேயானால் அது பெற வேண்டும் என்று
1.தன் எண்ணத்தை ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும்
2.அதே ஒரு குணத்தின் சக்தியை தான் உணர்கிற வரையிலும் அதையே தியானித்தான்.

அந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு சூரியனின் காந்த சக்தி கொண்டு விண்ணை நோக்கி ஏகி ஒவ்வொரு நிலையும் தனக்குள் உணர்ந்தறிந்து அந்த உணர்வின் நுண்ணிய நிலைகளைத் தனக்குள் கண்டறிந்து விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றினான்.

தாயைத் தீண்டிய விஷத்தின் தன்மையை நீக்க போகர் சிறு வயதில் எடுத்த அந்த வலிமையான உணர்வே அவர் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறக் காரணமாக அமைந்தது.

அதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் ஏற்படும் சில கடினமான சந்தர்ப்பங்களாக இருந்தாலும் அதிலிருந்து விடுபடும் வேகத்தை நாம் கூட்டி அந்த மெய் ஞானிகளின் அருளாற்றலைப் பெறவேண்டும் என்று முயற்சி செய்தால் அதுவே நமக்கு மெய் ஞானம் பெறச் செய்யும் நல் சந்தர்ப்பமாக அமையும்.

எந்த ஞானியை எடுத்துக் கொண்டாலும் தன் வாழ்க்கையில் வந்த கடுமையான நிலைகளிலிருந்து விடுபடும் எண்ணத்தின் வலுவைக் கூட்டும் பொழுது தான் அந்த விஷத்தை வென்றிடும் நுண்ணிய அறிவின் ஞானமும் பேராற்றலையும் அவர்களால் பெற முடிந்தது.

அந்த ஞானிகள் சென்ற வழியில் நாமும் செல்வோம்…! போகமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் பெற்று நம்மை அறியாது ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு மகிழ்ந்து வாழ்வோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வழி

Light atoms -divine

மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வழி 

அன்று வாழ்ந்த மெய் ஞானிகள்
1.தாவர இனத்தினுடைய சத்துக்களைத் தன் சுவாசத்தில் எவ்வாறு ஈர்த்துக் கொண்டார்கள்…?
2.அதனின் துணை கொண்டு விண்ணின் ஆற்றல்களைத் தங்கள் புலனறிவால் எவ்வாறு நுகர்ந்தார்கள்…?
3.விண்ணின் ஆற்றலைப் பெருக்கி ஒளியாக மாறி எவ்வாறு விண்ணுலகம் சென்றார்கள்..? என்ற இந்தப் பேருண்மைகளை உணர்வதற்காக வேண்டி
4.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைக் (ஞானகுரு) காட்டிலே சுற்றச் சொன்னார்.

உன் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உன்னை அறியாது வரும் இன்னல்களிலிருந்து விடுபட விண்ணுலகம் சென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வை நீ எவ்வாறு எடுக்க வேண்டும்…? என்ற அந்தப் பழக்கத்தையும் ஏற்படுத்தினார்.

5300 ஆண்டுகளுக்கு முன் போகன் புவனேஸ்வரி என்ற நிலையில் இந்தப் பூமி தனக்குள் உருவாக்கும் சக்திகள் அனைத்தையும் (கல் மண் உலோகங்கள் தாவர இனங்கள்)
1.அதாவது இந்தப் புவனத்தின் சக்தியைத் தனக்குள் எப்படி மோகித்தானோ
2.அந்த உணர்வின் ஆற்றலை அவனுக்குள் எப்படிப் பெருக்கிக் கொண்டானோ
3.அவனைப் போன்றே அந்த மோகத்தின் தன்மைகள் உங்களுக்குள்ளும் ஊடுருவி
4.மெய் ஒளியின் தன்மையாக அது ஓங்கி வளர வேண்டும்.

இவைகளையெல்லாம் உங்களுக்குள் ஏன் இவ்வளவு தூரம் சொல்கிறோம் என்றால் நீங்கள் தெரிந்து எடுப்பதற்கல்ல…!
1.இந்த உபதேசத்தின் உணர்வுகளை நீங்கள் எந்த அளவுக்குக் கூர்ந்து கேட்டு ரசித்து
2.அந்த மெய் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஆவலில் வருகின்றீர்களோ
3.உங்களுக்குள் அந்த மெய் ஞானிகளின் வித்து பதிந்துவிடும்.
4.இரண்டு தரம் மூன்று தரம் கேட்டுக் கொண்டே இருந்தீர்கள் என்றால் அந்த உணர்வு ஆழமாகப் பதிவாகிவிடும்.

அடுத்து நீங்கள் ஓ…ம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரான ஈசனை எண்ணினீர்கள் என்றால் மகரிஷிகளின் அருள் ஒளி கலந்த உணர்வுகள் உங்களுக்குள் தூண்டப்படும்.

அவ்வாறு தூண்டப்பட்டு மகரிஷிகளின் ஒளியான உணர்வுகளை நீங்கள் சுவாசிக்கும் போது எவ்வளவு கவலையாக இருந்தாலும் சரி “டக்…” என்று அதை மாற்றிக் கொடுக்கும். அப்பொழுது உங்கள் எண்ணத்தின் வலுவை அனுபவத்தில் பார்க்கலாம்.

ஏனென்றால் பிறர் மேல் பிரியம் கொண்டு வாழும் நிலையில் சந்தர்ப்ப வசத்தால் வேதனையும் சங்கடத்தையும் சந்திக்கும்போது அந்த உணர்வுகள் நம்மைச் சோர்வடையச் செய்து விடுகின்றது.

அதைப் போன்று வரும் தீமைகளை ஒவ்வொரு நிமிடத்திலும் தடுத்துக் கொள்ளும் பழக்கத்தை உங்கள் அனுபவத்திற்குக் கொண்டு வருவதற்குத் தான்
1.இந்த உபதேச வாயிலாக மகரிஷிகளின் உணர்வுகளை இரத்த ஓட்டமாகக் கொடுத்து
2.அதை ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாக… வாக்காகக் கொடுக்கின்றோம்.

இந்த வாக்கின் வன்மையின் நிலைகளைக் கொடுக்கப்படும் பொழுது மகரிஷியின் எண்ண ஓட்டத்தை உங்களுக்குள் செருகச் செய்து உங்கள் முந்தைய அழுக்குகளையும் போக்கச் செய்து விஞ்ஞானத்தால் வரக்கூடிய எத்தகைய விஷத்தின் தன்மையையும் மாய்க்கச் செய்யப் பழக்கிக் கொடுக்கின்றோம்.

பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

“தவறு செய்கின்றான்…” என்ற உணர்வை நுகர்ந்தால் அது நம்மை எங்கே அழைத்துச் செல்லும்…! – மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்தால் அதனின் இயக்கம் நமக்குள் எப்படி இருக்கும்…?

Image

murugan, Bogar

“தவறு செய்கின்றான்…” என்ற உணர்வை நுகர்ந்தால் அது நம்மை எங்கே அழைத்துச் செல்லும்…! – மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்தால் அதனின் இயக்கம் நமக்குள் எப்படி இருக்கும்…?

 

“தவறு செய்கிறான்…!” என்று ஒருவனைப் பார்க்கின்றீர்கள். “தவறு செய்பவன்” என்று அந்த உணர்வின் நினைவை நீங்கள் கூட்டிக் கொண்டு அதே உணர்வுடன் அவனைப் பார்க்கப்படும் போது
1.அவன் எப்போது தீமை செய்வான்…! என்ற எண்ணத்திலேயே தான்
2.நீங்கள் குறிக்கோளாக இருக்க முடியும்.

அவர்கள் செய்யும் நோக்கத்தின் நிலைகள் உங்களுக்குள் ஊடுருவி அவர்களை நீங்கள் கவனித்து வந்தால் நீங்கள் எடுத்துக் கொண்ட அந்த எண்ணத்தின் உணர்வுகள்
1.அவருடன் தொடர்பு கொண்டு பேசும் போது அதே உணர்வுகளை அங்கே தோன்றச் செய்து
2.அவனைக் குற்றவாளியாக நிற்க வைக்கும்… அவனைத் தவறு செய்ய வைக்கும்.

அந்த உணர்வின் எண்ணக் கலவையில் பேசி நாம் இதையே அடுத்தவருக்குச் சொல்லும் போதும் இந்தக் குறையான உணர்வுகளையே உணர்த்தச் செய்வோம்.

ஆக அவரவர்கள் எடுத்து கொண்ட அந்தந்த உணர்வின் தன்மை கொண்டுதான் அது அவரவர்களுடைய சொல்லாகப் பேச்சாக வெளி வருகின்றது.

எதையுமே மகிழச் செய்யும் உணர்வின் எண்ணங்கள் கொண்ட மனித உடலை நாம் பெற்றிருந்தாலும் நாம் எதிர்பார்க்காதபடி விஷத்தின் தன்மையான உணர்வுகளைக் கவர நேர்கின்றது.

அது நமக்குள் வளர்ச்சி அடையும் பொழுது அதனால் நோயாகி நம்முடைய சிந்தனையைக் குறைக்கச் செய்துவிடுகின்றது.

இதைப் போன்ற நிலையில் ஏற்படும் தீமையான விளைவுகளிலிருந்து மக்களை மீட்கச் செய்வதற்காக மெய் ஞானியான அந்தப் போகமாமகரிஷி விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கிக் கொண்டார்.

இந்தப் புவனம் (நம் பூமி) முழுவதற்கும் தன் உணர்வின் எண்ண அலைகளைப் பாய்ச்சி ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கக் கூடிய எண்ணங்களை மகிழச் செய்தார்.

அவர்கள் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் வெளியிட்ட மூச்சலைகளைப் பூமியில் படரச் செய்துவிட்டு தன் எண்ணத்தாலேயே அந்த மகிழ்ந்த உணர்வுகளைத் தனக்குள் ஈர்த்துத் தன் உடலுக்குள் மற்ற அணுக்களின் தன்மையை ஒளியாக மாற்றி ஒளிச் சரீரமாக மாற்றி விண் சென்றார்.

1.போகர் எந்த விண்ணின் ஆற்றலை எடுத்து
2.அதை எவ்வாறு தனக்குள் வளர்த்துக் கொண்டாரோ
3.அப்படி வளர்த்துக் கொண்ட முறையைத்தான் வெளிப்படுத்தினார்.
4.அதற்காக அவரால் உருவாக்கப்பட்டது தான் பழனியில் உள்ள முருகன் சிலை.
5.முருகன் சிலையை உற்றுப் பார்த்து அந்த விண்ணின் ஆற்றலை மக்கள் பெற்று
6.மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அழியா ஒளி சரீரம் பெறவேண்டும் என்பதற்காகத்தான் முருகன் சிலையை ஸ்தாபித்தார்.
7.சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணமாகத்தான் போகர் வெளிப்படுத்தினார்.

இப்போது நான் (ஞானகுரு) பேசுகிறேன் என்றால் அந்தப் போகமாமகரிஷியின் உணர்வின் அலைகளே எனக்குள் தொடர்ந்து அந்த உணர்வின் ஆற்றலாக என்னை இயக்கி அவர் உணர்ந்த உண்மையின் நிலைகள் உபதேசமாக வெளி வருகின்றது.

ஆகவே
1,பிறிதொரு தவறு செய்பவனின் உணர்வு நம்மை இயக்கி
2.நம்மைத் தவறின் வழிகளுக்கு அழைத்துச் செல்லாமல்
3.நாம் அந்த மாமமகரிஷிகளின் ஒளித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு
4.அவர்கள் உணர்வின் இயக்கமாக அவர்கள் சென்ற மெய் வழியில் செல்வோம்.

சிறிதளவு மரியாதை குறைந்தாலும்… பழி தீர்க்கும் உணர்வுகளாக இன்று ஒவ்வொருவரையும் இயக்குவதற்குக் காரணம் என்ன…?

divine-chracter-of-sages

சிறிதளவு மரியாதை குறைந்தாலும் பழி தீர்க்கும் உணர்வுகளாக இன்று ஒவ்வொருவரையும் இயக்குவதற்குக் காரணம் என்ன…?

அரசர்கள் மக்களுக்கு நல்லது செய்தாலும் தனக்கு மரியாதை வேண்டும் என்று எண்ணும் போது அதிலே சிறிதளவு மரியாதை குறைந்தாலும் பழி தீர்க்கும் உணர்வுடன் அழிக்கும் எண்ணம் கொண்டு அவர்களை அழித்து விடுகின்றார்கள் அரசர்கள். இது அரசனுடைய நியதிகள்.

அரசர்கள் அவர்கள் எதைச் செய்தாலும் மற்றவர்கள் அவர்களை ஒத்துச் செல்ல வேண்டும். மற்றவர்கள் அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் மற்றவர்கள் ஓங்கி வளர்ந்து விட்டால் தன்னை அழித்து விடுவார்கள் என்று இந்தப் பய உணர்வு கொண்டு தான் ஒவ்வொரு அரசரும் செயல்பட்டார்கள்.

இன்று அத்தகைய அரசாட்சி இல்லை என்றாலும் அன்றைய அரசர்கள் தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட அதே நிலைகள் தான் கௌரவப் பிரச்னையாக நம்முடைய மனித வாழ்கையினுடைய நிலைகளிலும் வந்துவிட்டது.

தன் சொல் மற்றவர்களுக்குக் கீழ் அடிபணிந்துவிடக் கூடாது என்ற இந்த உணர்வின் அடிப்படையில் ஒவ்வொருவரும் இயங்கப்படும் போது
1.எதைக் காக்க வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ
2.அதைக் காக்க முடியாமல் அதையே அழிக்கும் நிலைகளுக்கு வந்துவிட்டோம்.

எந்த அரசனும் அவன் இட்ட நிலைகளில் இருந்து நீடித்த நாள் வாழ்ந்ததில்லை. வாழ்ந்து விடுவோம் என்று எண்ணிய உணர்வுகள் கொண்டு அதே விஷத்தின் துடிப்பு கொண்டு கடைசியில் தன்னையே அழித்துக் கொண்டான்.
1.அவன் சென்ற வழிகளில் மக்களை அழித்து விட்டான்
2.அழிக்கும் எண்ணத்தை மக்கள் மத்தியிலும் ஊட்டி விட்டான்.

ஆக மொத்தம் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தாலும் “தான்…!” என்ற நிலைகள் வரும் போது தன்னையும் அழித்து தன்னைச் சார்ந்தோரையும் அழித்து மனித வர்க்கத்தையே இழிவான நிலைகளுக்கு இட்டுச் சென்று விட்டார்கள் அன்றைய அரசரகள்.

ஆனால் மனிதனாகத் தோன்றிய நிலையில் மகரிஷிகள் ஒவ்வொருவரும் தான் மெய்யை உணர வேண்டும் என்ற நிலையில் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்று பெரு வீடான பெரு நிலைகள் பெற்றுச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உணர்வலைகள் இன்று விண்ணிலேயும் நம் பூமிக்குள்ளும் படர்ந்து கொண்டுள்ளது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி அந்த மாமகரிஷிகள் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க சக்திகளை யாம் (ஞானகுரு) சுவாசித்து அந்த உணர்வின் ஆற்றல்களை உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று வாழ்க்கையில் உங்களை அறியாது வரக்கூடிய துன்பங்களிலிருந்து நீங்கள் எல்லோரும் மீள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
1.எனக்குள் இந்த ஆசை தோற்றுவித்ததற்குக் காரணமே அந்த மகரிஷிகளின் உணர்வுகள் தான்.
2.அந்த மகரிஷிகளின் உணர்வின் அலைகள் தான் இங்கே பேசுகின்றது. நான் பேசவில்லை…!

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருப்பதால் தான் அதை நான் பெறுகின்றேன்.

அதைப் போன்று நீங்கள் எதைப் பெற வேண்டும் என்று எந்த ஆசையுடன் வருகிறீர்களோ அந்த ஆசை உங்களுக்குள் இந்த நிலைகளுடன் அதற்கு வழி வகுத்து உங்களை அறியாது வந்த தீமைகளை நீக்கி ஒளியின் சரீரம் பெறுவோம் என்று உறுதி கொள்ளுங்கள்.

அன்று போகமாமகரிஷி எப்படிப் பிரபஞ்சத்தின் நிலையைத் தனக்குள் அடக்கி புவனேஸ்வரி என்ற சக்தியைத் தனக்குள் உணர்த்தினாரோ அதே போல இந்த புவனத்துக்குள் இருக்கக்கூடிய சக்தியும் உங்களுக்குள் ஐக்கியமாகி உங்கள் மூச்சும் பேச்சும் பிறரை மகிழச் செய்யும் உணர்வாகத் தோன்ற வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்திகள் உங்கள் உடலுக்குள் விளைந்து உங்கள் உயிரில் ஒன்றும் உணர்வின் தன்மையை நீங்கள் ஒளியாக மாற்றி
1.உலகத்துக்கு வழி காட்டும் உணர்வின் ஒளி அலைகளாக…
2.”அது பரவ வேண்டும்…!” என்று பிரார்த்திக்கின்றேன்.

ஓ…ம் ஈஸ்வரா…! என்று நமக்குள் இயக்கச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி (BOOSTING SPIRITUAL ENERGY)

om

ஓ…ம் ஈஸ்வரா…! என்று நமக்குள் இயக்கச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி (BOOSTING SPIRITUAL ENERGY)

உதாரணமாக நம் குழந்தை அது அறியாதபடி தவறிக் கீழே விழுந்து விட்டது. அதனால் அது அவஸ்தைப்படுகிறது. மருத்துவரிடம் சென்று மருந்தைக் கொடுத்துவிட்டோம்.

ஆனாலும்ல் நாம் குழந்தையை நினைத்து அடிக்கடி வேதனைப்படுகின்றோம் அல்லவா…? இதை யார் சுத்தப்படுத்துவது…?

இப்படிக் கஷ்டம் வந்துவிட்டது என்றால் உடனே கோவிலுக்குச் செல்கிறோம். சென்று நம் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று நினைக்கின்றோம்.

இருபது ரூபாயோ ஐம்பது ரூபாயோ கொடுத்து ஆண்டவனுக்கு அர்ச்சனை செய்வதைப் பார்த்து நாம் சந்தோஷப்படுகின்றோம்.
1.ரூபாயைப் பூசாரிக்குக் கொடுத்தவுடன் நம்மை முதலில் கூப்பிட்டு விபூதி பிரசாதம் சாமிக்குப் போட்ட மலர் மற்ற எல்லாம் கொடுத்துவிடுவார்.
2.ஆனால் காசைக் கொடுக்கவில்லை என்றாலோ குறைவாகக் கொடுத்தாலோ தட்டே இந்தப் பக்கம் திரும்பாது.
3.இப்படித் தான் நாம் இருந்து கொண்டு இருக்கின்றோம்.
4.ஆண்டவனுக்குக் காசு கொடுத்தால் தான் அவன் வாக்கே இங்கு வரும்.

ஆனால் அந்த நிமிடத்தில் உங்களை ஆளுகிறவன் யார்…? சற்று சிந்தித்துப் பாருங்கள். நம் உயிர் தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றது.

ஆனால் குழந்தையை எண்ணி “இப்படி ஆகி விட்டதே…!” என்று பாசத்தில் எண்ணும் பொழுது வேதனையை உணரச் செய்கிறது. வேதனையை உணரக்கூடிய நிலை இருந்தாலும் நம் உயிரான ஈசனுக்கு வேதனையாகின்றது.

இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டவுடனே உடலுக்குள் இருக்கக்கூடிய சக்திகள் எல்லாம் நெளிய ஆரம்பித்துவிடும். உடலான சிவம் என்ன செய்கின்றது…?

ஆஹ்ஹஹ்ஹா…! என்று அப்புறம் தன்னாலே பயத்தால் நடுங்க ஆரம்பித்துவிடும். நீங்கள் ஆடவில்லை என்றாலும் கூட சிவன் என்ன செய்கிறான்.
1.நர்த்தனம் ஆட ஆரம்பித்துவிடும். கை கால் எல்லாம் நடுங்கும்.
2.ஏனென்றால் நம் உடல் சிவம். இதைத்தான் சிவ நடனமாகக் காட்டியிருப்பார்கள் ஞானிகள்.
3.வாசுகி…! நீ சுவாசிக்கக்கூடிய இந்த உணர்வு
4.அது உனக்குள் அந்தச் சக்தியாக இருந்து இந்த உடலை ஆட்டிப் படைக்கின்றது என்ற தத்துவத்தைத் தெளிவாகக் கொடுத்து இருக்கின்றார்கள்…
6.நாம் யார் படித்திருக்கிறோம்…? அதை யாரும் படித்துக் கொள்வதும் இல்லை… தெரிந்து கொள்வதும் இல்லை…!

ஞானிகள் காட்டிய உண்மைகளைச் சொன்னால் என்ன இவர் கோவிலுக்குச் சென்று தேங்காய் பழம் வைத்துக் கும்பிடக் கூடாது என்று சொல்கிறார்…! இதற்கு முன்னாடி செய்ததெல்லாம் தப்பா…? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

குழந்தை கீழே விழுந்து விட்டது என்றால் பதறிப் போய் வேதனைப்படுகின்றோம். உடல் நடுக்கமாகின்றது. இதை மாற்ற அடுத்த நிமிடம் நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.ஓ…ம் ஈஸ்வரா…! புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரை நீங்கள் நினையுங்கள்.
2.உங்களை ஆள்கிற ஆண்டவன் அவன் தான்.
3.ஓ…ம்…! என்று சுவாசிக்கும் பொழுது கரண்ட் (ஆற்றல்) அதிகமாகின்றது.
4.அப்போது உயிரின் துடிப்பு அதிகமாகின்றது.
5.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அந்தச் சுவாசத்தைக் கொண்டு வாருங்கள்.
6.அந்த மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

அந்த மகரிஷியின் அருள் சக்தியை நீங்கள் எடுக்கின்றீர்கள். ஈஸ்வரா என்று சுவாசிக்கின்றீர்கள். உங்கள் உயிரான ஈசனுக்கு அப்பொழுது என்ன நடக்கின்றது…?

அந்த மகரிஷிகள் எப்படி மகிழ்ந்து உறவாடி அந்த உணர்வை எடுத்தார்களோ அந்த மணம் புருவ மத்தியில் பட்டவுடனே ஈசனுக்கு அப்படியே மகிழ்ச்சி வரும்.
1.முதலில் குழந்தையைக் காத்து விடுகின்றோம்.
2.அதே சமயத்தில் நாம் பட்ட வேதனைகளையும் தூய்மைப்படுத்துகின்றோம்.
3.குழந்தைக்கு அடுத்து நீ இப்படிச் செய்யப்பா… நீ பார்த்து நடந்து கொள்…! என்று நல்ல உணர்வுகளையும் ஊட்ட முடியும்..!

இப்படிப்பட்ட நல்ல உணர்வை எடுக்கத்தான்… அதை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்வதற்காகத்தான்… மற்றவர்களுக்கும் அந்த நல்லதைக் கொடுக்கத்தான்… கோவில்களையே ஞானிகள் உருவாக்கினார்கள்.

ஞானிகள் சொன்ன முறைப்படி நாம் வழி நடந்தால் அந்த மெய்யான நிலைகளை அடையலாம்.

என்னுடைய ஆசை…!

Trust yourself

என்னுடைய ஒரே ஆசை…!

நம் பூமியிலே மனிதராக வாழ்ந்தவர்கள் விண்ணின் ஆற்றலைப் பெற்று தங்கள் உடலிலே அதை விளைய வைத்துக் கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறி விண்ணிலே நட்சத்திரமாகச் சென்று விட்டார்கள்.

அவருக்குள் விளைய வைத்த சக்திகள் நம் பூமிக்குள்ளும் உண்டு. அங்கே விண்ணிலேயும் உண்டு. அதை எல்லாம் பெறக்கூடிய தகுதியை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) ஏற்படுத்தினார்.

போகமாமகரிஷி எப்படி விண்ணின் ஆற்றலைச் சுவாசித்துச் செயல்படுத்தினாரோ அதை எடுப்பதற்காக வேண்டி
1.அவனுடைய வாசனையை நீ சுவாசிடா…! என்று இம்சை கொடுத்தார்.
2.எனக்கு அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது.

குருநாதர் சில நேரம் பைத்தியக்காரத்தனமாகப் பேசுவார். அவர் எந்த நேரத்தில் எப்படிப் பேசுவார்…! என்ன செய்வார்…? என்று ஒன்றுமே புரியாது. பல பாஷைகளில் பேசுவார். பல விஷயங்கள் சொல்வார். அர்த்தம் புரியாது.

அர்த்தம் புரியாதபடி கஷ்டமான நிலையில் சிக்கலாகிப் போய் நான் உட்கார்ந்து இருக்கும் போது சுரீர்…..!” என்று எனக்கு இரண்டு உதை கொடுப்பார்.
1.சுரீர்…. என்று அடி விழுந்தவுடன்
2.என்னுடைய இந்த மனித உணர்வுகள் மாறி
3.அவருடைய உணர்வுகளைச் சொல்லக் கூடிய நிலைகள் வந்து
4.அந்த எண்ணத்துடன் நான் கலக்கும் நிலைகள் வரும் போது அவர் சொன்னதை என்னால் உணர முடிந்தது… அர்த்தம் காண முடிந்தது….!
5.நான் இப்படி உதை வாங்கி உதை வாங்கித்தான் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு வந்தேன்.

இப்பொழுது சுருக்கமாக உங்களுக்கு நல்லதாக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் எடுத்துச் சுவாசித்தால் உங்களுக்கு நன்றாகிப் போகும் என்று சொல்கிறேன்.

எங்கே சாமி…? அதற்கெல்லாம் நேரமில்லை…! என்கிறார்கள்.

நமக்கு வேண்டியவர்கள் துன்பப்படுவதைப் பார்த்து அதைக் கேட்ட பின் நாமும் வேதனைப்படுகிறோம். அந்த வேதனை நமக்குள் விளைந்து நம்முடைய நல்ல குணத்தில் எல்லாம் கலந்து விடுகின்றது.

அப்புறம் நம்முடைய சொந்தக் காரியத்திலும் கூட வேதனைப்பட ஆரம்பித்து விடுகிறோம். நம் தொழிலிலும் வேதனைப்படுகின்றோம். நம் உடலுக்குள்ளும் வேதனைப்படுகிறோம்.

இதை போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் மீள்வதற்கு எத்தனையோ வழிகளைச் சொல்கிறோம். உங்களைக் காத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துப் பழகிக் கொள்ளுங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம்.

சமையல் செய்தால் நம் கையில் அழுக்குப் பட்டு விடுகிறது. அதைத் துடைக்கிறோம் அல்லது கழுவுகிறோம். தண்ணீர் எடுக்கப் போனாலும் நம் துணி மேலேயெல்லாம் தண்ணீர் பட்டு விடுகிறது. அதனால் அழுக்குப்பட்டு விடுகிறது. இரண்டாவது முறையும் துவைக்கிறோம்.

தண்ணீர் தான் எடுத்துக் கொண்டு வருகிறோம், மேலே தண்ணீர் பட்டு விட்டால் தூசியும் அழுக்கும் சீக்கிரம் ஒட்டிக் கொள்கிறது.
1.தண்ணீரில் தானே துணிகளைத் துவைத்துத் தூய்மையாக்குகிறோம் என்று சொன்னாலும்
2.ஈரம் பட்டு விட்டால் காற்றில் உள்ள அழுக்கு சீக்கிரம் ஒட்டிக் கொள்கிறது.
3.அப்புறம் சீக்கிரம் நம் உடலில் நோய் வந்து விடும்.

ஆக… நாம் தவறு செய்யாமலேயே நமக்குள் எத்தனையோ நிலைகள் வருகிறது. சாமி என்ன இப்படிச் சொல்கிறாரே…! என்று நினைக்க வேண்டாம்.

நமது குருநாதர் எத்தனையோ சிரமப்பட்டு மெய் ஞானிகளின் மெய் ஒளியைப் பெறுவதற்குக் கற்றுக் கொடுத்தார். அவர் எனக்குக் கற்றுக் கொடுத்த அதே அருள் வழியில் தான் உங்களிடமும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

நீங்கள் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பெற்று ஒவ்வொருவரும் ஞானிகளாக வளர வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே ஆசை.

நரி தந்திரமாகச் செயல்படுவது போல் தான் பெரும் பகுதி மனிதர்களின் செயல் இருக்கின்றது

Wolf and cattle

நரி தந்திரமாகச் செயல்படுவது போல் தான் பெரும் பகுதி மனிதர்களின் செயல் இருக்கின்றது 

இன்று உலகம் முழுவதற்கும் விஷத்தினுடைய தன்மை பரவி விட்டது. அதனால் மனிதன் சிந்தனை இழக்கச் செய்யும் தன்மையாகி
1.தன்னைக் காத்திடும் உணர்வின் தன்மை தான் இருக்குமே தவிர
2.நண்பனைக் காக்கும் நிலை இல்லை.

நண்பனைக் காப்பது போல நமக்குள் இருக்கும். ஆனால் தன்னைக் காத்துக் கொள்ள நரித் தந்திரம் போன்ற நிலையிலே தான் செயலாக்கங்கள் இருக்கும்.

உதாரணமாக ஒரு நரி நம் கையிலே சிக்கிவிட்டால் அது அப்படியே பேசாமல் இருக்கும். “எப்பொழுது… இவன் ஏமாறுவான்…!” என்ற நிலையிலேயே தான் அதனுடைய எண்ணம் எல்லாம் இருக்கும்.

ஒரு சமயம் காட்டுக்குள் சென்று எம்மை நரியைப் போல் கூவும்படி (ஊளையிட) சொன்னார் குருநாதர். நரியின் தோலையும் போர்த்திக் கொள்ளச் சொன்னார். நரியைப் போல் கூவிய பின் நரி அருகிலே வருகின்றது.

அருகிலே வந்தபின் “நீ அதனின் காலைப் பிடித்துக் கொள்…!” என்று சொன்னார். காலைப் பிடித்துக் கொண்டேன். காலைப் பிடித்துக் கொண்டவுடனே ஒன்றுமே என்னைக் கடிக்கவில்லை. பேசாமல் இருக்கின்றது.

ஏமாற்றுகின்ற நிலையில் தான் அது இருக்கின்றதே தவிர கடிக்கின்ற நிலையில் இல்லை. எப்படா… நான் விடுவேன்… என்று பார்த்துக் கொண்டிருக்கின்றது.

நீ லேசாக உன் கையைத் தளரவிடு…! என்றார் குருநாதர். தளர்ச்சியின் தன்மை கொடுத்த பின் அது எப்படி “சடக்…” ஓடுகின்றது என்று பார்…! உன்னைக் கடிக்கவில்லை. ஆனால் தப்பிக்கும் நிலை வருகின்றது.

ஏனென்றால் உன்னைக் கடிக்கும் நிலை வந்தால் நீ அதை அடிக்கும் நிலை வரும் என்று அதற்குத் தெரிகின்றது. ஆனால் அதற்குள் இந்த உணர்வின் தன்மையை அது எப்படிச் செயலாக்குகின்றது…? என்பதனைத் தெளிவாக்கினார் குருநாதர்.

இதே போலத்தான் மனித வாழ்க்கையில் ஒன்றுக்கொன்று மாற்றியமைக்கும் உணர்வுகளாக “ஏமாற்றுதல்…” என்ற நிலை பெரும் பகுதி மக்கள் மத்தியில் பரவி விட்டது.

இன்று உங்களிடம் ஒரு உதவி பெற வேண்டும் என்றால் மிகவும் வேண்டிக் கேட்பார்கள். உதவியும் பெற்றுக் கொள்வார்கள்,
1.ஆனால் உதவி பெற்ற பின்… உங்களால் அவர்கள் வலு பெற்ற பின்
2.என்ன செய்துவிட்டான் பெரிதாக…! என்று
3.அடுத்தாற்போல் உங்களையே எதிர்க்கும் நிலை வருகின்றது.
(நடைமுறையில் இன்று எல்லா இடங்களிலும் இதை நீங்கள் பார்க்கலாம்)

அமெரிக்காவினுடைய நிலையோ “தான் ஒரு போலிஸ்காரன்…!” என்ற நிலைகள் கொண்டு ஒவ்வொரு நாட்டுக்கும் அவன் பொருளாதாரத்தைக் கொடுத்து அதன் வழி உள்ளே ஊடுருவுகின்றான்.

நரி எப்படித் தந்திரம் செய்கின்றதோ இதைப் போல மக்கள் மத்தியில் தந்திரத்தைச் செய்து மதம் இனம் மொழி என்ற நிலையில் ஒருவருக்கொருவர் போர் முறையைத் தூண்டி இவர்களை வலுவிழக்கச் செய்து அதன் வழியே செயல்படுத்திக் கொண்டிருக்கின்றான்.

விஞ்ஞானத்தைத் தனக்குள் வெளியிலே வைத்துக் கொண்டு லேசர் இயக்கம் என்ற நிலையில் ஒவ்வொரு நாட்டிலே நடக்கும் நிலைகளை இன்று கண்டறியும் தன்மைக்கு வந்துவிட்டான்.

அப்படி வந்து வான் வீதியிலே லேசர் இயக்கத்துடன் கலந்து கதிரியக்கப் பொறிகளைத் தூவி பயிரினங்களையும் அழித்திடும் சக்தியாகச் செயல்படுத்துகின்றான்.

இவ்வாறு விஷத் தன்மை கொண்டு அவன் நம்மை அழிக்க நேர்ந்தாலும்
1.எந்த விஷத்தைப் பரப்பினானோ
2.அவைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
3.அவன் நாட்டுக்கே மீண்டும் அதை அழைத்துச் செல்லும் என்ற நிலைகளை அறிய மறந்து விட்டான்.

ஆகவே விஷத் தன்மைகள் சூழ்ந்து இன்று மனித இனமே இழந்திடும் நிலை உருவாகி விட்டது. இத்தகைய விஞ்ஞான உலகில் தான் நாம் வாழ்கின்றோம். நம்முடைய ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும்.

இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது வந்து கொண்டிருக்கும் இதைப் போன்ற தீமைகளிலிருந்து மீளும் சக்தியாக அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் பெற்றாலொழிய இதிலிருந்து தப்பும் வழி இல்லை.

எதிர்பாராத நிலைகளில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்

Image

meditations

எதிர்பாராத நிலைகளில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்

 

இந்த வாழ்க்கையில் வரும் கடும் தீமைகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்மைத் தாக்குகின்றது. நாம் தவறே செய்ய வேண்டாம். ரோட்டிலே செல்கின்றோம்.

ஒரு பக்கம் ஒரு விஷத்தின் தன்மைகளைக் காய்ச்சப்படும் போது ஆவிகள் அதிலிருந்து வெளிவருகின்றது. சூரியனின் காந்தப்புலன் அதைக் கவர்கின்றது. அலைகளாகப் பரவச் செய்கிறது.

அந்த அலைகளைக் கண்டு சாந்த குணம் கொண்ட அணுக்கள் எல்லாம் நகர்ந்து ஓடுகிறது. அப்போது காற்று வேகமாக வீசும்.

காற்று வேகமாகச் செல்லப்படும் போது இந்த உணர்வின் தன்மை இடைமறித்து மனிதன் ஊடே சென்றால் இந்த விஷத்தின் தன்மையை நுகர்ந்து மனிதன் மயக்கப்பட்டுக் கீழே விழுகின்றான்.

அதற்கு முன்னாடி சென்ற மனிதனோ நல்ல அலைகளை நுகர்ந்து நல்ல வாசனை கண்டு அவன் தப்புகின்றான். அவன் சென்றபின் அதே பாதையில் அடுத்த மனிதன் செல்லும் பொழுது சந்தர்ப்பம் விஷத்தின் தன்மையைச் சுவாசித்ததும் மயங்கிக் கீழே விழுகின்றான்.

திடீரென்று போனான்… மயக்கப்பட்டான்… இறந்துவிட்டான்…! என்றால் இது எல்லாம் இன்னொரு பக்கம் விளையும் விஷத்தின் தன்மைகளை நுகரப்படும் போது யாரும் அறியாமலேயே ஏற்படக்கூடிய செயல்கள்.

அந்த விஷத்தின் தன்மை பட்ட பின் விஷ அணுக்களாக மாறி நோயாகி சிந்தனை குலைந்து மடிந்த பின் மனிதனுடைய உடலையே மாற்றி பாம்பினமாகப் பிறக்கின்றான்.

ஆகவே
1.பரிணாம வளர்ச்சியில் இந்த உயிர் எதை நுகர்கின்றதோ
2.அந்த உணர்வுக்கொப்ப உடலை அமைப்பதையும்
3.அந்த உணர்வுக்கொப்ப அழைத்துச் சென்று அடுத்த உடலுக்குள் புகச்செய்வதும்
4.அந்த உணர்வை உடலாக்குவதும் தான் உயிருடைய வேலை.

ஆனால் மனிதனின் ஆறாவது அறிவு இதை மாற்றிடும் சக்தி பெற்றது. இதை மாற்றத் தவறினால் நாம் அடுத்த நிலைகள் இப்படித்தான் இருக்கும்.

காசை கொடுத்து விட்டு மந்திரத்தைச் செய்தால் எல்லாம் சரியாப் போகும் என்பார்கள். அந்த மந்திரங்களைச் சொல்லிக் சிறிது காலம் வாழ்ந்தாலும் மீண்டும் நாம் செத்த பின் இதே மந்திரத்தைச் சொன்னால் அடுத்தனுக்கு அடிமையாகி நம் ஆன்மா இன்னொருவனைக் காக்கப் போகும்.

அந்த உடலுக்குள் சென்று மீண்டும் விஷத் தன்மைகள் கூடி இந்த உணர்வின் தன்மை மனிதன் அல்லாத நிலையாகத் தான் பிறக்க முடியுமே தவிர மனிதனாக மீண்டும் வருவதற்குப் பல கோடி ஆண்டுகளாகும்.

அதைப் போன்ற நிலைகள் ஆகாதபடி நாம் அனைவரும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறுவோம்.
1.மகரிஷிகளின் உணர்வை நம் ஆன்மாவில் பெருக்கி அதை வலிமையாக்கி
2.பாதுகாப்புக் கவசமாக அரணாக நாம் அமைத்துக் கொள்வோம்.
3.எதிர்பாராத நிலைகள் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபடுவோம்.

மேல் நோக்கிய சுவாசம் எடுப்பதற்கே குன்றின் மீது கடவுளை வைத்தார்கள் ஞானிகள் – வாசியோகம்

Image

palani hill muruga

“மேல் நோக்கிய சுவாசம் எடுப்பதற்கே… குன்றின் மீது கடவுளை வைத்தார்கள்…!” ஞானிகள் – வாசியோகம்

 

இராக்கெட்டில் கதிரியக்கச் சக்தியைக் கூட்டி அதனுடைய ஆற்றல் மிக்க நிலைகளை ஒன்றச் செய்து அதன் நுனியில் பொருத்தப்பட்டிருக்கும் நுகர்ந்தறியும் சக்தியைக் கொண்டு விண்ணிலே இருக்கக்கூடிய பல ஆற்றலை விஞ்ஞானிகள் அறிகின்றார்கள். படங்களாகவும் எடுக்கின்றார்கள்.

நம் வாழ்க்கையில்
1.எதிர்பாராது கடும் விஷமோ மற்ற எண்ணங்களோ நமக்குள் தோன்றும் நேரங்களிலும்
2.அதீதமான துன்பங்கள் ஏற்பட்டு அதனால் ஆத்திரத்தை ஊட்டும் நேரங்களிலும்
3.ஈஸ்வரா……! என்று உயிருடன் தொடர்பு கொண்டு
4.நம் எண்ணங்கள் அனைத்தையும் வலுவாகக் கூட்டி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் என்று எண்ணும் போது
5.உங்கள் எண்ணம் விண்ணை எட்ட இது உதவும்.

நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஏற்படும் இதைப் போன்ற நிலைகளில் இயற்கையாகவே உதவி செய்வதற்கு தான்
1.மலைக் குன்றின் மீது முருகனை வைத்து
2.நாம் கீழ் நின்று மேலே நோக்கிப் பார்க்கும்படி செய்தார்கள் ஞானிகள்.

அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் விண்ணை நோக்கி நாம் பார்க்கப்படும் போது நம் உடலுக்குள் துன்பத்தை ஊட்டிய அந்த உணர்வின் தன்மைகள் வலுவான நிலைகள் கொண்டு நாம் படி மீது ஏற உதவுகிறது.

களைப்போ சோர்வோ மற்ற நோயால் வேதனைகள் இருந்தாலும் இதை எண்ணாது விண்ணை நோக்கி எண்ணும் போது அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளி நமக்குள் சேர்ந்து அந்த பலவீனமான நிலைகளைக் குறைந்து மெய் ஒளியைப் பெறச் செய்கின்றது.

சாதாரண மக்களும் தனக்குள் அந்த மெய் ஒளியைப் பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் குன்றின் மீதெல்லாம் தெய்வ நிலைகளை வைத்தார்கள் ஞானிகள்.

இயல்பாகவே நம்மை மேல் நோக்கி பார்க்கச் செய்து அந்த மெய் உணர்வை நமக்குள் சுவாசித்து எடுக்கும்படி வழிகாட்டினார்கள் ஞானிகள்.

ஆலயங்களில் தெய்வ நிலைகளைக் கீழ் நோக்கிப் பார்க்கின்றோம். இதை மாற்றி
1.உணர்வை விண்ணை நோக்கிச் செலுத்தி அந்த விண்ணின் ஆற்றலைப் பெறுவோம்.
2.மெய் ஞானிகளின் அருள் ஒளியைக் கொண்டு நாம் மேல் நோக்கிப் பார்த்து மகரிஷியின் அருள் ஒளியைப் பெறுவோம்.
3.அவர்கள் சென்ற பாதையிலே நம் உயிராத்மாவை ஒளி நிலை பெறச் செய்வோம்.

அனைவரும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம் என்று உறுதிப்படுத்தி
1.நீங்கள் ஒவ்வொருவரும் அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளியுடன் சுழன்று
2.உங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்கள் நீங்கி
3.உங்கள் பேச்சும் மூச்சும் நீங்கள் சுவாசிப்பது அனைத்தும் உங்கள் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாகச் சேர்ந்து
4.நீங்கள் பேசும் பேச்சும் மூச்சும் பிறருடைய துன்பத்தைப் போக்கி மகிழ்ச்சியினுடைய நிலைகளைப் பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

நீங்கள் எங்கே சென்றாலும் அந்த மகிழ்ச்சிக் கடலிலே அந்த மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவிக்கும் நிலைகள் பெறவேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

நம் தொழிலும் வேலையும் குறைபாடு இல்லாமல் நடக்க என்ன செய்ய வேண்டும்…?

Power of Soul

நம் தொழிலும் வேலையும் குறைபாடு இல்லாமல் நடக்க என்ன செய்ய வேண்டும்…? 

ஞானிகளைப் பற்றி எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். படிக்கின்றோம். ஆனால் அடுத்து மற்ற குறையான உணர்வைத்தான் அதிகமாகப் பேசுகின்றோம்.

உதாரணமாக ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அங்கே வரக்கூடிய குறைகளை நிவர்த்திப்பதற்கும் உற்பத்தியோ மற்ற வேலைகள் எல்லாவற்றையும் சீராக்குவதற்காகத்தான் தொழில்களில் நாம் அமர்த்துகின்றோம்.

ஆனால் தொழிலில் குறை வந்துவிட்டதென்றால் குறை வந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லி அப்படியே விட்டு விட்டால் குறை அப்படியே தான் இருக்குமே தவிர அதைத் தெளிவாக்கி மறுபடியும் சீர்படுத்த முடியாது.

ஒரு நெசவுத் தொழிலை செய்கிறோம் என்றால் சந்தர்ப்பத்தில் நூல் அறுந்து போகும். அப்பொழுது நூல் இல்லாமல் வரும். அதை மீண்டும் இணைத்துச் சரிபடுத்த வேண்டும் அல்லவா. ஆனால்
1.நூல் அறுந்து கொண்டே தான் இருக்கிறது…
2.சரி…! அப்படியே இந்தத் துணியை நெய்வோம் என்று விட்டு விட்டால்
3.அது தரமான துணியாக அது வருமா…?
4.இந்தத் தரத்தைப் பார்ப்போர் நம்மிடம் துணியை வாங்குவார்களா…?

அதை போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் குறை வந்து கொண்டே இருக்கிறது என்ற நிலைகளில் அதை அப்படியே விட்டு விட்டால் நம் எண்ணத்தின் நிலைகள் எங்கேயும் செல்லுபடி ஆகாது.

நாம் எங்கு சென்றாலும் நம் மீது வெறுப்பின் தன்மையும் மற்ற நிலைகளும் வந்துவிடுகிறது. ஆகவே யார் எந்தத் தீமை செய்தாலும் அந்த தீமையிலிருந்து அவர்கள் அகல வேண்டுமென்று எண்ண வேண்டும். அந்தத் தீமையை நமக்குள் பதிவாக்கிக் கொள்ளக் கூடாது.

தீமை செய்கிறான்… தீமை செய்கிறான்… என்று எண்ணிக் கொண்டு அல்லது சொல்லிக் கொண்டே இருந்தால் அது நம்மையும் தீமை செய்ய வைக்கும்.
1.அவன் அதிலிருந்து விடுபட வேண்டுமென்று நாம் அதற்காகத் தியானமிருக்க வேண்டும்.
2.குறைகளைக் கூறுவதற்குப் பதில் நமக்குள் அந்தக் குறைகளை நீக்கும் நிலைகளுக்குப் பழக்கம் வர வேண்டும்
3.இதை வழிப்படுத்தி நாம் எல்லோரும் ஒரு குடும்பமான நிலைகளில் இயங்கிப்
4.பிறருக்கு வழிகாட்டியான நிலைகளில் வர வேண்டும்.

அது அல்லாதபடி நாம் மற்றவர்களைப் பற்றியும்… நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பற்றியும்… உலகில் நடக்கும் நிகழ்வுகளையும் பற்றியும்… மீண்டும் மீண்டும் குறைகளையே பேசிக் கொண்டு இருந்தோமேயானால் விஷமான உணர்வுகள் நம் உடலுக்குள் பெருகி விஷமான சரீரத்தைத்தான் பெறுவோமே தவிர ஒளிச் சரீரத்தைப் பெறும் தகுதி இல்லை.

இவ்வளவு பெரிய சக்தியைப் பரப்பியும் அதைப் பயனற்ற நிலைகள் ஆக்காதபடி குறைகளை நிவர்த்திப்பதற்குண்டான முயற்சியை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். அதற்குகந்த வார்த்தைகளையும் சொல்களையும் பயன்படுத்திப் பழக வேண்டும்.

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்கள் நீங்கள் எங்கே சென்றாலும் எந்த நிமிடம் ஆனாலும்
1.“எனக்கு இவ்வாறு துன்பம் செய்தார்…” என்று அவர்களைக் குறையாக எண்ணாதபடி
2.“எனக்குத் துன்பம் வந்து கொண்டே இருக்கிறது…!” என்று குறையாக எண்ணாதபடி இந்த எண்ணத்தை மாற்றவேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
4.மெய் ஞானியின் உணர்வலைகளை எடுத்து ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். (இது முக்கியம்)