உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களுக்கு மந்திரத்தைச் சொல்லிச் சாங்கியங்கள் செய்தால் மீண்டும் ஒரு உடலுக்குள் வந்து இயக்கத்தான் செய்யும் – விண்ணுலகம் செல்வதில்லை

ஓளி சரீரம்

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களுக்கு மந்திரத்தைச் சொல்லிச் சாங்கியங்கள் செய்தால் மீண்டும் ஒரு உடலுக்குள் வந்து இயக்கத்தான் செய்யும் – விண்ணுலகம் செல்வதில்லை

மந்திரங்களைச் சொல்லி அதனின் துணை கொண்டு உடலை விட்டுப் பிரிந்தவர்களை மோட்சத்திற்கு அனுப்புகிறோம் என்பார்கள். எந்த மந்திரத்தைக் கேட்டுப் பதிவு செய்து கொண்டமோ இறந்த பின் இதே மந்திரத்தைச் சொன்னால் அவர்கள் நம் ஆன்மாவைக் கைவல்யம் செய்வதற்குத்தான் உதவியாக இருக்கும்.

கைவல்யம் செய்த பின் ஏவலின் தன்மையாக அடுத்தடுத்த உடல்களிலே பாய்ச்சச் செய்து அங்கேயும் நஞ்சின் தன்மை கவரச் செய்து நம்மை விஷப் பூச்சியாக மாற்றும் நிலை தான் வருமே தவிர விண்ணுக்குச் செல்ல முடியாது.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நாம் அனைவரும் சேர்ந்து நஞ்சினை வென்ற அந்த அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்தில் இணைத்தால் தான் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய முடியும்.

எந்த நஞ்சின் உணர்வு கொண்டு இன்று எந்த ஒலிகளை நாம் கேட்டோமோ உடலை விட்டுச் சென்ற பின் அதே ஒலியை எழுப்பினால் போதும். இன்று பார்க்கலாம் நீங்கள்…
1.மாடசாமி அந்தச்சாமி இந்தச் சாமி என்று அருளாடும் போது
2.டுவிங்.. டுவிங்… என்று வாத்தியத்தை வாசிப்பார்கள்.
3.கொல…கொல… என்று குழவை இட்டு ஆட்டை வெட்டிப் பலி இடுவார்கள்.

இப்படிச் செய்து இந்தத் தெய்வம் காக்கும் என்று உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்ட பின் இதனின் உணர்வின் தன்மை கொண்டு அடுத்து இறந்து விட்டால்
1.இதே குழவை இட்டதும்
2.இதே வாத்தியத்தை இசைத்த பின் பற்றுள்ளோர் உடல்களில் இருந்து
3.“நான் வந்துவிட்டேன்டா…! எனக்கு ஏன்டா… போன வாரம் ஆட்டைக் கொடுக்கவில்லை…?
4.ஆடு கொடுக்கவில்லை என்றால் “உன் குடும்பம் என்னாகும்…?” என்று சொல்வார்கள்.
5.மடிந்த மனிதனின் ஆன்மா உடலுக்குள் வந்த பின் இப்படிச் செய்கின்றார்.

எதை இரக்கமற்றுக் கொன்றமோ அதே உணர்வின் தன்மை அருளாடப்படும் போது அவனுக்குள் வந்தால் அவன் உடலையும் இம்சிக்கும் தன்மையே வருகின்றது.

அப்படி ஆடுவோரைப் பாருங்கள். கட்டி உருளும் நிலையும் கடுமையான வேதனையும் படுவார்கள். மற்ற உயிர்களைக் கொல்லும் நிலைகள் வருகின்றது.

என் குடும்பத்தில் கஷ்டம் வந்து விட்டது… உன்னையே நான் அடைகிறேன் என்று பக்தியும் நல்ல ஒழுக்கங்களையும் கொண்ட இந்த ஆன்மாக்கள் உடலை விட்டுச் சென்ற பின் சாந்தம் கொண்ட உணர்வு கொண்ட ஒருவர் உடலுக்குள் வந்து விட்டால் அது ஆடத் தொடங்குகிறது.

முனியப்பன் கோயிலிலே சென்று ஆட்டை வெட்டினால் இதை ஓட்டி விடலாம் என்று அந்த அசுர உணர்வுகள் கொண்ட உணர்வின் தன்மையை அங்கே ஊட்டியபின் அதை அடக்குகின்றது ஒடுக்குகின்றது.

ஆனால் சாந்த நிலையிலிருந்த ஆன்மாவோ அடுத்து ஆட்டையும் மற்றதையும் பலி கேட்கும். இப்படி அந்த வலுவான நிலை கொண்டு இயக்கும் தன்மையாகத்தான் மாறுகின்றது.

கொலைகாரனாக மாற்றி மிருக நிலைகளாக மாற்றும் உணர்வின் தன்மையைத் தான் வளர்த்துக் கொள்ள முடியுமே தவிர ஏனென்றால் இன்னொரு ஆன்மா நமக்குள் இயக்குகின்றது என்ற நிலையை மறந்து விட்டோம்.

குல வழியில் எதை எதைச் செய்தோமோ அதன் உணர்வின் தன்மை கொண்டு இன்னொரு உடலுக்குள் சென்று அருளாடுகின்றது. மீண்டும் அங்கே தேய்பிறையாகின்றது. மீண்டும் மனிதனல்லாத நிலைகள் உருபெறுகின்றது. இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் விடுபட வேண்டுமா இல்லையா…?

இன்றைய விஞ்ஞான உலகில் ஒவ்வொரு அணு செல்கள் எதனுடன் இணைகின்றது. எதன் நிலைகள் உருமாறுகின்றது என்று தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு மெய்ப்பிக்கின்றார்கள்… உணர்த்துகின்றார்கள். ஆனாலும்
1.விஞ்ஞான அறிவு கொண்டு மனித உடலில் உள்ள அங்கங்களைத் தான் மாற்ற மடிகிறது.
2.மனித உணர்வின் தன்மையைப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும் நிலை விஞ்ஞானத்தில் இல்லை.
3.ஆனால் மெய் ஞானத்தில் உண்டு.

மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்த்து உணர்வின் ஒளிக்கதிராக மாற்றிப் பிறவியில்லா நிலையை நாம் ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை நாம் அனைவரும் சேர்ந்து நஞ்சினை வென்ற அந்த அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்தில் இணைத்து அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

காட்டுக்குள் வாழும் மிருகங்களின் விசுவாசம் எப்படி இருக்கிறது என்று யானை கொக்கு ஓநாய் மூலம் குருநாதர் கொடுத்த அனுபவங்கள்

Image

 

gnanaguru-saamigal

யானையோ மிகவும் உடலில் வலிமை கொண்டது தான். இருந்தாலும் அது காட்டுக்குள் பல நரக வேதனைப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது.

 

தன் உணவுக்காக தேடிச் செல்லும் பொழுது காதிற்குள் ஒரு எறும்பு போய்விட்டால் கடுமையான வேதனைப்படுகிறது. காட்டிற்குள் இருக்கப்படும் போது எத்தனையோ விதமான விஷமான கொசுக்கள் அதைத் தாக்குகின்றது. விஷ வண்டுகள் தாக்குகின்றது.

கொசுக்களிடமிருந்து தப்பிக்கத் தண்ணீரில் குளிக்கின்றது. மேலே மண்ணை வாரிப் பூசுகின்றது, இருப்பினும் சில வண்டுகள் முரடான யானையின் தோலிலும் தன் விஷத்தைப் பாய்ச்சி ரத்தத்தை உறிஞ்சுகின்றது.

அதே சமயம் அதன் காதுக்குள்ளும் சென்று உடலுக்குள் குடைச்சலையும் தருகின்றது. இப்படி யானை உடலின் வலு பெற்றாலும் அது நரகலோகத்தில் தான் வாழுகின்றது.

ஒரு சமயம் நான் (ஞானகுரு) காட்டுக்குள் செல்லப்படும் போது ஒரு யானை நொண்டி நொண்டி வந்தது. “அதை உற்றுப் பார்…!” என்றார் குருநாதர். உற்றுப் பார்க்கப்படும் போது காலிலே வீக்கம்.

நடக்க முடியாத நிலையில் மிகுந்த வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நீர் நிலைகள் இருக்கும் பக்கம் இருந்து பார்க்கின்றது. வறட்சியில் வேதனைக்காக அந்தத் தண்ணீரைத் தான் குடிக்கின்றது.

குருநாதர் போகச் சொல்கிறார். அதை உற்றுப் பார்க்கும் பொழுது இரண்டு குச்சி யானை காலில் குத்தி வெளியில் நீட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் குச்சி ஒடிந்து போயிருக்கிறது. அதற்குள் சீழ் பிடித்திருக்கிறது.

என்னிடம் அந்த யானை காலைத் தூக்கிக் காட்டுகிறது. காட்டு யானை தான். வாயில் கடித்து அந்தக் குச்சியை எடுத்தேன். அப்படியே சலம் பொல… பொல… என்று வந்தது. இது நடந்த நிகழ்ச்சி.

மிருகங்கள் தாக்கும் உணர்ச்சிகள் பெற்றது தான். யானை மனிதனை அச்சத்தால் தான் அடிக்குமே தவிர மனிதனை அது நேசிக்கத் தான் செய்கின்றது. நாம் பேசாமல் போனால் ஒன்றும் செய்யாது.

ஆனால் சிலருடைய பயந்த நிலைகளைப் பார்த்தவுடன் அடிப்பான் என்று உணர்வுகள் கொண்டு நம்மை அடித்தேவிடும்.

யானையின் காலிலிருந்து வெளியில் வந்த சலம் ஒரு இரண்டு அல்லது மூன்று வாளி இருக்கும். பின் அதை நான் அழுத்தித் துடைத்து விட்டேன். அங்கிருக்கும் ஒரு பச்சிலையை எடுத்து வந்து நசுக்கிக் கொண்டு போனால் மறுபடியும் காலைத் தூக்கிக் கொடுக்கிறது. அந்தச் சாறை ஊற்றினேன்.

அங்கே ஒரு ஐந்தாறு நாள் இருந்தேன். “அங்கே இரு…!” என்று குருநாதர் சொன்னார். அப்போது அந்த யானையின் கால் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிக் கொண்டு வந்தது.

நான் இந்த யானையிடம் வரப் போகும் போது வேறு யானைகள் விரட்ட வருகிறது. ஆனால் இதன் அருகிலே வரும் பொழுது அடிபட்ட யானை “என்ன சைகை செய்கிறது…!” என்று எனக்குத் தெரியவில்லை. அந்த உணர்வு கொண்டு மற்ற யானைகள் என்னை ஒன்றும் செய்யவில்லை.

அந்த ஊர் எல்லையை விட்டு வெளியே வந்தேன். அந்த யானையைக் கழட்டி விடும் வரையிலும் என் கூடவே வந்தது. என்னைத் தனியே விட மாட்டேன் என்கிறது.

தும்பிக்கையில் என்னைத் தூக்குகிறது. என்னைத் தூக்கிக் கொண்டு வந்து நல்ல பாதையில் விட்டு விட்டுப் போகிறது. அதனுடைய அறிவு எப்படி இருக்கிறது…? என்று பாருங்கள். யானைக்குத் “இவன் தன்னைக் காத்தவன்” என்ற அறிவின் ஞானம் இருக்கின்றது.

ஒரு சமயம் திருப்பதியிலிருந்து கால்நடையாகத் திருத்தணிக்கு வந்தேன். திருத்தணிக்கு வரும் பாதையில் தண்ணீர் தாகமாக உள்ளதே என்று வயல் பக்கம் போனேன்.

அருகிலிருந்த ஒரு பம்புசெட்டில் தண்ணீர் குடித்தேன். உப்பாக இருந்ததால் குடிக்க முடியவில்லை. அதனால் திரும்பி அப்படியே வந்தேன்.

அப்போது ஒரு கொக்கு அந்த வயலுக்குள் உள்ளிருந்து என்னைக் கண்டவுடன் வெளியிலே வருகின்றது. அது வரை அஞ்சி வாழ்ந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் காக்கும் உணர்வு கொண்டவன் என்று நிலைகள் அதற்குத் தெரிகின்றது.

அதனிடம் நான் பழக்கமெல்லாம் செய்யவில்லை. அங்கிருந்து தூக்கிக் கொண்டு வந்து விட்டேன்.

திருத்தணிக்கு வந்தவுடன் ஒருவரிடம் கொடுத்து கொக்கைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி உட்கார வைத்தேன். குருநாதர் அதற்கு ஆசி கொடுக்கச் சொல்கிறார். அதற்கு ஆசீர்வாதம் கொடுத்தவுடன் நன்றாகி விட்டது.

பின் பறந்து போய் விட்டது. பறக்க முடியாமல் இருந்த கொக்கைத் திருத்தணியில் பறக்க வைத்தேன்.

மனிதனுக்குண்டான நிலையும் மனிதனை அணுகி சில உயிரினங்கள் எந்தெந்த நிலைகளுக்கு வருகிறது என்ற நிலையும் குருநாதர் தெளிவாக்குகின்றார்.

இன்னொரு சமயம் காட்டிற்குள் நான் செல்லப்படும் பொழுது ஒரு செந்நாய் பன்றியினால் அடிபட்டுக் கால் நொண்டி வருகிறது.

செந்நாய்கள் பன்றிகளைப் பார்த்தால் ரொம்பத் தந்திரமாகப் பிடிக்கும். மாட்டையோ ஆட்டையோ அடித்துத் தின்றுவிடும். அது ரொம்ப தந்திரமாக வந்து பிடிக்கும்.

ஆனால் பன்றி முன்னாடி இருக்கும் தன் கொம்பைக் கொண்டு செந்நாயை அடித்தால் ஒரே அடியில் எலும்பெல்லாம் உடைந்து விடும். சதையைக் கிழித்துவிடும்.

அப்படிப் பன்றியிடம் அடிப்பட்ட ஒரு செந்நாயிற்கு என் வேஷ்டியைக் கிழித்துக் காலிலே சுற்றி அங்கிருக்கும் பச்சிலையை மருந்தாகப் போட்டேன். போடும் வரை பொறுமையாக இருந்தது.

அதற்கு வைத்தியம் செய்து பச்சிலையைப் போடும் வரை நான் என்ன என்ன செய்கிறேன் என்று பார்த்துக் கொண்டே இருந்தது. முடித்த பிறகு அது பாட்டுக்கு விலகிப் போகிறது.

மனிதனுக்குண்டான விசுவாசமும், மற்ற உயிரினங்களுக்குண்டான விசுவாசத்தையும் அங்கே அனுபவபூர்வமாகப் பார்த்தேன்.

இன்று நாட்டுக்குள் மனிதனுக்கு மனிதன் நல்ல குணத்தில் உதவி செய்கிறோம். ஆனால் சந்தர்ப்பங்கள் என்ன ஆகிவிடுகிறது…?

அன்றைக்கு உதவி செய்தேன். இன்றைக்கு எனக்கே இடைஞ்சல் செய்கிறான். நான் எப்படிப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்…? என்று சொல்லக் கூடிய நிலைமை வந்துவிடுகிறது.

நண்பன் என்ற முறையில் அவன் சிரமப்படும் பொழுது உதவி செய்தாலும் கூட அவர் முன்னுக்கு வந்தவுடன் உதவி செய்தவரை முதலில் பள்ளத்தில் தள்ளி விடுவார். அப்பொழுது தான் நாம் பிழைக்க முடியும் என்ற இந்த அளவிற்கு மனிதர்களின் உணர்வு வளர்ந்து விட்டது.

ஆனால் காட்டு விலங்குகளுக்கு ஒரு விசுவாசத்தில் உதவி செய்ததை அது மறக்கவில்லை. அதன் உணர்வு அதில் பதிந்து அதன் நிலைகளில் இயக்குகிறது.

இதெல்லாம் காட்டுக்குள் சென்ற பொழுது இயற்கையின் உண்மை நிலைகளை யாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்காகக் குருநாதர் கொடுத்த அனுபவங்கள்.

யூதர்கள் வாழும் இடத்தில் போகர் உருவாக்கிய சிவலிங்கம்

Image

Bogar samadhi

யூதர்கள் வாழும் இடத்தில் போகர் உருவாக்கிய சிவலிங்கம்

 

அன்று ஐயாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் போகர் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு பூமிக்குள் இருக்கக்கூடிய உணர்வின் ஆற்றலை ஊடுருவி அதனின் செயலின் ஆக்கத்தை அவன் கண்டுணர்ந்தான்.

அதாவது மனோசீலை என்ற வெடிபொருளை மனித உடலுக்குள் சேர்த்து அறியாது சேர்ந்த விஷத்தின் தன்மைகளை நீக்குவதற்கு அன்று செய்தான். மனோசீலையை மருந்தாக உபயோகப்படுத்தினான்.

மெக்கா மதினா இஸ்ரேல் நாடுகளுக்கெல்லாம் போகர் சூட்சமமாகச் சென்று வந்தார்.
1.அதாவது தன்னுடைய சரீரத்தை இருந்த இடத்திலே வைத்துவிட்டு
2.இங்கிருந்து இன்னொரு சரீரத்திற்குள் நின்று
3.அங்கே உணர்வுகளைப் பாய்ச்சும் நிலை
4.இங்கு பழனி மலையிலே தான் இவருடைய சரீரம் உண்டு.

இன்று ரேடியோ டி.வி. அலைகளை எப்படி இயக்குகின்றோமோ இதைப் போன்று போகர் தான் எடுத்துக் கொண்ட அலை வரிசைகளிலே ஒரு மனித உடலுக்குள் நின்று முதன் முதலிலே இஸ்ரேலில் போய்ச் செயல்பட்டார்.

இஸ்ரேலில் அவர் செய்து கொண்ட நிலைகள் தான் யூத வம்சத்தினுடைய நிலைகளில் அங்கே சிவலிங்கம் ஒன்று குகைக்குள் உண்டு. அந்த குகைக்குள் நின்று அந்த சில நிலைகளைச் செயல்படுத்தினார்.

அங்கே ஐயாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் அவர் வெளியிட்ட அந்த உணர்வின் தன்மைகளை யூதர்கள் எடுத்துத்தான் மந்திர ஒலிகளாக மாற்றி விட்டார்கள்.

அப்பகுதிகளிலே பூராவும் இந்த யூதர்களுடைய நிலைகள் ஆட்சி புரிந்து உலகம் முழுவதற்கும் மந்திர சக்திகளாகப் பரவியது.

அவர் அங்கிருந்து சீனாவிற்குச் சென்று பல நிலைகளில் செயல்பட்டார். ஒவ்வொரு மனித உலகத்தின் நிலைகளையும் சுவாசித்து விட்டு மீண்டும் இந்தப் பழனியிலே அவருடைய உடலுக்குள் மீண்டும் வந்து சுழன்று கொண்டிருந்தார். மற்ற உடலிற்குள் புகுந்து ஆங்காங்கு செய்து வைத்த நிலைகள் தான் அது.

1.தன் உடலையே காயகல்பமாக ஆக்கிக் கொண்டு
2.தான் வெளியிலே சென்றாலும் அது அழுகிவிடாத நிலைகள் கொண்டு
3.வெகு தூரத்தில் இருந்தாலும் இந்தச் சரீரத்தை மீண்டும் இயக்கிக் கொண்டு அந்த நிலையை அன்று செய்தான் போகன்.

மனித வாழ்க்கையில் வந்த நஞ்சினை அடக்கினான். நஞ்சினை அடக்கிடும் உணர்வை மனித உடலிலே பெற்றான் அந்தப் போகமாமகரிஷி.
1.மெய் உணர்வின் தன்மையை அறிந்தான்
2.தன் இன மக்கள் மகிழ்ந்திட வேண்டும் என்று எண்ணினான்
3.மகிழ்ந்த உணர்வின் அலைகளாகப் பரப்பும் நிலையைச் செய்தான்
4.மனிதர் அனைவரின் உயிரைக் கடவுளாக மதித்தான்.
5.அனைவரும் தெளிந்த நிலைகள் கவர வேண்டும் என்று ஏங்கினான்.

மனிதனின் ஆறாவது அறிவைக் காத்திடும் நிலையாக அவன் தெளிந்த உணர்வு கொண்டு விண்ணுலகம் சென்றான் போகன். ஒளியின் சுடராகச் சப்தரிஷி மண்டலத்தில் இன்றும் இருக்கின்றான்.

அந்தப் போகமாமகரிஷியை நாம் யாரும் நினைக்கின்றோமா…!

மூச்சலைகளை வைத்து அன்று குகைகளை உருவாக்கினார்கள் – அழுத்தத்தை வைத்துக் கடினமான பொருளையும் ஆவியாக மாற்றுகின்றார்கள் விஞ்ஞானிகள் – தீமைகளை ஆவியாக மாற்றுவது எப்படி…?

third-eye-

மூச்சலைகளை வைத்து அன்று குகைகளை உருவாக்கினார்கள் – அழுத்தத்தை வைத்துக் கடினமான பொருளையும் ஆவியாக மாற்றுகின்றார்கள் விஞ்ஞானிகள் – தீமைகளை ஆவியாக மாற்றுவது எப்படி…?

இரும்பு எவ்வளவு கடினமானது. இந்த இரும்பு உருவாவதற்குக் கதிரியக்கச் சக்தியே முக்கிய காரணம், நட்சத்திரங்களிலிருந்து வருவது தான் கதிரியக்கச் சக்திகள்.

சாதாரண நெருப்பிலே இரும்பை எவ்வளவு நேரம் வைத்திருந்தாலும் அது உருகாது. அந்தக் கதிரியக்கச் சக்தியினுடைய வெப்பம் (அழுத்தத்தால்) அதிகமாகும் போது தான் இரும்பு உருகத் தொடங்குகிறது. ஆனாலும் அந்தக் கதிரியக்கச் சக்தியிலிருந்து அது தான் மாறுவதில்லை.

அதே சமயம் இந்த அணுக் கதிரியக்கங்களைக் குவித்து அதை இரும்பிலே மோதச் செய்தால் இரும்பு அப்படியே ஆவியாக மாறிவிடும்.

அணு ஆயுதங்களை (ATOM BOMB) வெடிக்கச் செய்தால் பெரும் புயலாக மாறி இங்கே இருக்கக்கூடிய இடமே தெரியாத நிலைகளில் ஒவ்வொரு பொருளையும் மாய்த்துவிடும். ஏனென்றால் அணு சக்தியின் வீரியமடைந்த நிலைகள் அது.

இதைப் போன்று தான் எவ்வளவு கடினமான பொருளாக இருந்தாலும் பெரும் மலையாக இருந்தாலும் அதீதமான அழுத்தம் கொண்டு அதை அழுத்தப்படும் போது அப்படியே ஆவியாக மாற்ற முடியும்.

1.அன்று மெய் ஞானிகள் சாதாரண மனிதராக வாழும் காலத்தில்
2.தன் உடலில் எடுத்து கொண்ட விண்ணின் ஆற்றல்கள் கொண்டு
3.அழுத்தத்தின் தன்மை கொண்டு தன் மூச்சலைகளைப் பாய்ச்சி
4.பெரும் குகைகளை உருவாக்கித் தவம் இருந்தார்கள்.
5.அன்று அப்படிச் செய்தார்கள்.

ஆனால் அதற்குப் பின்னாடி வந்த பெரும் பகுதியானவர்கள் மனித இனத்திலிருந்து தான் தப்பித்துக் கொள்வதற்காக இதே அழுத்த நிலைகளை எடுத்துக் கொண்டு தனக்குச் சாதகமான நிலைகளைச் செயல்படுத்திச் சென்றார்கள்.

ஆனால் அவ்வாறு சாதகப்படுத்தினாலும்
1.பல மனிதர்களின் உடலிலிருந்து கதிரியக்கப் பொறியின் சக்திகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டதனால்
2.சில காலம் கழித்து மனித ஈர்ப்புக்குள்ளேயே வந்து சிக்கிக் கொண்டான்.
3.அழுத்தத்தின் தன்மை கொண்டு பல அதிசயங்களைச் செய்த நிலைகள் எல்லாம் அரசர்கள் செய்த நிலைகள்.

நாம் சொல்லும் சித்தன் முனிவன் இவர்கள் எல்லாம் மாற்று அரசர்கள் போர் செய்து வரும் போது தான் தப்பிப்பதற்காகத் தன்னுடைய மூச்சலைகள் கொண்டு சில குகைகளை ஏற்படுத்தினார்கள். அது உண்மைதான்.

இப்படி இந்தப் புற நிலைகள் கொண்டு மனித உணர்விற்குள் வருவதுபோல
1.புறப் பொருளில் இருந்து எடுக்கப்பட்ட கதிரியக்கச் சக்திகள் (RADIOACTIVE MATERIALS) கொண்டு
2.எந்த ஒரு பொருளையும் அழுத்தி ஆவியாக மாற்ற முடியும் என்பதை
3.இன்று விஞ்ஞானிகள் கண்டுணர்நதிருக்கிறார்கள்.

அன்று மெய் ஞானிகள் கண்டுணர்ந்த சில நிலைகளை விஞ்ஞானிகள் இன்று இருக்கக்கூடிய எலக்ட்ரானிக் கம்ப்யூட்டர் என்ற சாதனங்களை உருவாக்கி அலைவரிசைகளில் வைத்து அளந்து அளந்து ஆராய்ந்து அறிந்து கொண்டார்கள்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்க பேரருள் உணர்வுகளைக் கவர்ந்து
1.ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரில் அழுத்தமாக எண்ணினால் அது உடலுக்குள் சென்று
2.நம்மை அறியாது ஆட்டிப் படைக்கும் தீமையான உணர்வுகளை ஆவியாக மாற்றி
3.நம்மையும் நம் உடலையும் நம் உயிரான்மாவையும் ஒளியாக மாற்றச் செய்யும்.

எந்தத் துறையாக இருந்தாலும் அதற்கு வழிகாட்டக் கூடியவன் அகஸ்தியன் தான்…!

Sage Agastiyar

எந்தத் துறையாக இருந்தாலும் அதற்கு வழிகாட்டக் கூடியவன்  அகஸ்தியன் தான்…!

“என்றும் பதினாறு ” என்ற நான்கு மணி நான்கரை மணிக்கு எல்லாம் நமக்கு இதெல்லாம் உணர்த்தி

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் மனிதனாகத் தோன்றிய நிலையில் முதன் முதலில் விண்ணின் ஆற்றலைப் பெற்று என்றும் பதினாறாகத் துருவ நட்சத்திரமாக ஆனது அகஸ்தியன்.

“அகம்…!” என்பது அணுவிற்குள் இருக்கக்கூடிய ஆற்றலை அறிந்து ஒளியின் தன்மையாகத் தனக்குள் பெருக்கிக் கொண்டதைத்தான் “அகஸ்தியன்…” என்று காரணப் பெயர் வைத்தார்கள் பின் வந்த ஞானிகள்.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்தார்கள் என்று சொல்கின்றோமே அதே மாதிரி மனித உடலுக்குள் இருக்கக்கூடிய அணுவின் இயக்கத்தை உணர்ந்து மெய் ஒளியின் தன்மையைத் தனக்குள் சேர்த்து பூமி ஆகாரமாக எடுக்கும் அந்தத் துருவத்தின் வாசலை எல்லையாக வைத்துத் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் அந்த அகஸ்தியன்.

1.கடலில் போகும் மனிதர்களுக்கு வழி காட்டி அவன்தான்
2.மனிதனுடைய சிந்தனை அழியாமல் பாதுகாத்துக் கொண்டு வருகின்றவனும் அவன் தான்
3.மனிதன் மெய் ஞானத்தின் தன்மை பெறுவதற்கு வழி காட்டிக் கொண்டிருப்பதும் அவன் தான்.
4.விஞ்ஞானத்திற்குப் போனாலும் அவன்தான். ஆனால் விஞ்ஞானம் அழிந்தாலும் அந்த அகஸ்தியன் கொடுக்கும் ஞானத்தின் நிலைகள் என்றுமே அழியாது.

விஞ்ஞானத்தின் விளைவுகளால் இனி வரும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் அந்த அகஸ்தியரின் அருளாற்றல்களை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

இந்தப் பூமியும் சூரியனும் மற்ற நிலைகளும் அழியும் தன்மைக்கு வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவர் என்ன சொல்கிறார்…! மெய் ஞானத்தினால் என்ன செய்ய முடியும்…? என்று எண்ணாதீர்கள்.

விஞ்ஞானத்தில் வரக்கூடிய எல்லாவற்றையும் நீங்கள் மடக்க முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

நாமெல்லாம் இன்று இப்படி இருக்கிறோம். தியானம் செய்து சக்தியைப் பெற்று நாம் என்ன செய்யப் போகிறோம்…? என்று நினைக்க வேண்டாம். சிறு குழந்தையிலிருந்து அனைவருமே அதைப் பெற முடியும். தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

1.உங்கள் தாய் தந்தையைக் கடவுளாக எண்ணுங்கள்.
2.உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணுங்கள்
3.உங்கள் உடலைக் கோவிலாக மதியுங்கள்.
4.நாம் முன் சேர்த்து கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உரு பெற்றோம் என்று பெருமிதப்படுங்கள்.

மிருக நிலையில் இருந்து நாம் மனித உடலைப் பெற்றிருக்கின்றோம்.
1.இனி நாம் ஒளி நிலை பெறுவோம்.
2.அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைவோம்
3.அந்த அகஸ்தியன் காட்டிய அருள் வழியிலே செல்வோம் என்ற இந்த உணர்வை நீங்கள் பூஜித்துப் பாருங்கள்.

இந்த வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்ததன் பலனை நீங்கள் அடையலாம்.

பெரும் பகுதியானவர்கள் தெய்வத்தை வேண்டும் பொழுது கடைசியில் என்னை உன்னிடம் அழைத்துக் கொள் என்பார்கள்…! ஆனால் எங்கே செல்கிறார்கள்…?

ritual

பெரும் பகுதியானவர்கள் தெய்வத்தை வேண்டும் பொழுது கடைசியில் என்னை உன்னிடம் அழைத்துக் கொள் என்பார்கள்…! ஆனால் எங்கே செல்கிறார்கள்…? 

நாம் தெய்வத்தின் மேல் பற்று கொண்டு அந்தச் சாங்கியப்படி யாகங்கள் செய்து வேள்விகள் செய்து வந்தாலும் தன் வாழ்க்கையில் கஷ்டம் அதிகரிக்க அதிகரிக்க “என்னை உன்னிடமே அழைத்துக்கொள்…!” என்ற அந்த ஏக்கத்தையே வெளியிடுகின்றோம்.

தெய்வச் சிலையை மையமாக வைத்து அபிஷேகம் ஆராதனைகள் செய்து அதற்கு வேண்டிய அலங்காரங்கள் செய்த பின் நாம் சிலையைக் கண்ணிலே உற்றுப் பார்க்கின்றோம்.

தெய்வத்தின் மேல் போடப்பட்டுள்ள பட்டாடைகள் ஆபரணங்கள் அதில் எந்தெந்த நிறங்களைப் பார்க்கின்றமோ… எந்தெந்த உணர்வின் குணங்களை நாம் பார்க்கின்றோமோ… இவை அனைத்தும் நம் கண்களில் உள்ள கருவிழி நமக்குள் படமாகப் பதிவாக்குகின்றது.

பார்த்த உணர்வின் அலைகளைச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே படுகின்றது. எந்த எண்ணத்தில் தெய்வத்தை உற்று நோக்குகின்றோமோ அந்த உணர்வினை உயிர் நமக்கு அறிவித்தாலும் அது உடலுக்குள் சென்று ஜீவ அணுவாகி விடுகின்றது.

தெய்வத்தை ஆராதனை செய்யும் பொழுது இன்னென்ன மந்திரங்களைச் சொன்னால் “அந்தத் தெய்வம் உன்னைக் காக்கும்…!” என்று சொல்வார்கள். அதன் வழிகளிலே சொல்லி ஏங்கித் தவித்தாலும் அதே உணர்வுகளை உடலில் விளையச் செய்து கொள்கிறோம்.

அதே சமயத்தில் தெய்வத்தின் மேல் உள்ள பற்றால் அந்தத் தெய்வத்தின் பேரைச் சொல்லி மற்ற எல்லோருக்கும் இரக்க உணர்வுடன் பாசத்துடன் அணுகி அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வோம்.

அப்படி உதவிகள் செய்தாலும் பலருடைய கஷ்டங்களைக் கேட்டு நுகர்ந்த பின் அந்தத் துன்பமான உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலே துன்பத்தை உருவாக்கும் அணுக்களாகச் சேர்ந்து விடுகின்றது.

இதனின் இயக்கத் தொடரில் கஷ்டமான உணர்வுகள் உடலிலே விளைந்து கொண்ட பின் செல்வங்கள் குறைந்து உடலிலும் நோயாகி விடுகின்றது.

இந்த நிலையில் நாம் தெய்வத்தை எண்ணும் பொழுது
1.உன்னை நான் கும்பிடாத நாளே இல்லை… உன்னையே வேண்டினேன்… வருந்தினேன்…
2.எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்தாய்… எல்லா சுகத்தையும் கொடுத்தாய்.
3.எல்லாருக்கும் நான் நல்லதைச் செய்தேன். கடைசியில் எனக்கு ஏன் இத்தனை சோதனை…? என்ற இந்த உணர்வின் ஏக்கத்தில்
4.”என்னை உன்னிடமே அழைத்துக் கொள்…! என்ற இந்த உணர்வின் வேகம் அங்கே வருகின்றது.

இத்தகைய சூழ்நிலையில் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆன்மா எந்த ஆலயத்தில் எந்தத் தெய்வத்தை உற்றுப் பார்த்து ஆழமாகப் பதிவு செய்து கொண்டதோ அந்த ஆலயத்திலேயே பதிந்து விடுகின்றது.

அந்த ஆன்மா இந்த உடலை விட்டுச் சென்றபின் தன் வீட்டிலேயும் அந்த உணர்வுகள் அதிகமாகப் படர்ந்து விடுகின்றது. இருப்பினும் தன்னுடைய எண்ணங்கள் எந்த ஆலயத்தின் நிலைகளில் இது அதிகமாகச் செலுத்தியதோ அந்த உணர்வின் வேகம் கொண்டு அந்த நினைவலைகள் அங்கே செல்கின்றது.

இவர் எப்படி (உடலை விட்டுச் சென்ற ஆன்மா) ஆலயத்தில் ஏங்கினாரோ அதைப் போல மற்றொருவர்கள் அதே ஏக்கத்தின் நிலைகள் கொண்டு தெய்வத்திடம் “எனக்கு ஏன் இத்தனை சோதனைகளைக் கொடுக்கின்றாய்…?” என்று ஏங்கினால் போதும். அந்த ஆன்மா அவர் உடலுக்குள் புகுந்து அருளாடத் தொடங்கிவிடும்.

இப்பொழுது அவர் தன் கஷ்டத்தில் ஏங்கினார் அல்லவா…!
1.இரு… உன்னை நான் காக்கின்றேன்…! என்று அந்தத் தெய்வமாக அங்கே இயக்கப்பட்டு
2.நான் வந்துவிட்டேன் அல்லவா…!
3.உன் குடும்பத்தைச் சார்ந்த எல்லாக் கஷ்டங்களையும் நானே பார்த்துக் கொள்கின்றேன் என்று
4.அந்த உடலுக்குள் வந்த அந்த ஆன்மா வேலை செய்யும்.

டி.வி ஸ்டேசனிலிருந்து ஒலி/ஒளி பரப்பப்படும் பொழுது காற்றின் மூலமாக வரும் அந்த அலைகளை நம் வீட்டிலுள்ள டி.வி.பெட்டி கவர்ந்து அந்த அலைகளைக் குவித்து உருவத்தையும் சப்தத்தையும் காட்டுகின்றது.

அதைப் போன்று தான் ஆலயத்தில் அலங்கரிக்கப்பட்ட தெய்வச் சிலையை உற்றுப் பார்த்து உடலில் பதிவான உணர்வலைகளை
1.அந்த ஆன்மா வெளிவந்த பின்
2.அதே ஏக்கத்துடன் அதே உணர்வின் வலுவுடன் இன்னொருவர் எண்ணி ஏங்கும் பொழுது
3.அவர் கண்ட தெய்வத்தின் உருவை அப்படியே காண முடியும்.

நாம் டி.வி.க்களில் காணுவது போலத்தான் நம் கண் புலனறிவுகளில் வெளிப்படுத்துக் ஏக்கத்தால் பரவிக் கிடக்கும் அலைகளைக் குவித்து
1.முருகன் வந்துவிட்டான்
2.அந்தப் பராசக்தி வந்துவிட்டது
3.இந்தக் காளி வந்துவிட்டது
4.எந்த தெய்வத்தின் நிலைகளை அந்த ஆன்மா பதிவு செய்ததோ அந்தந்தத் தெய்வமாக வந்து
5.எனக்குத் தெய்வம் காட்சி கொடுத்தது…! என்று இப்படி எல்லோரும் சொல்லலாம்.

அத்தகைய உணர்வுகளைச் சுவாசித்தபின் தன்னை அறியாமலே நடுக்கம் வரும். எனக்குக் காட்சி கிடைத்தது. கிடு..கிடு… என்று என்னால் நிற்க முடியவில்லையே…! என்று பெரும் பகுதியானவர்கள் சொல்வார்கள்.

நான் காளியைப் பார்த்தேன். முருகனைப் பார்த்தேன். விநாயகரைப் பார்த்தேன் என்று எல்லோரும் சொல்லலாம்.

சாங்கிய சாஸ்திரங்களின்படி அந்தந்தத் தெய்வத்திற்கு வேண்டிய பல பொருள்களைப் படைத்து வைத்து
1.உனக்கு வேண்டியதை நான் செய்திருக்கின்றேன்…
2.நீ எனக்கு இன்னென்னதைக் கொடு என்று எதை இச்சைப்படுகின்றோமோ
3.உடலை விட்டுப் பிரிந்து இன்னொரு உடலுக்குள் போனால்
4.அதே தெய்வமாக நாம் இயங்கத் தொடங்கி விடுகின்றோம்.

இயங்கினாலும் இந்த உடலில் எத்தனை வேதனைகள்… எத்தனை கஷ்டங்கள்.. எத்தனை இன்னல்கள்… குடும்பத்தில் எத்தனை வெறுப்பு கொண்ட உணர்வுகள் வந்ததோ… அடுத்த உடலுக்குள் புகுந்தாலும் அதே உணர்வை இயக்கி அந்தக் குடும்பத்திலும் அத்தனை சிக்கல்களும் வரும்.

அருளாடுவார்கள் மற்றவர்களுக்குச் சொல்லும் பொழுது சில நன்மைகளும் அவர்கள் கொடுக்கும் பிரசாதத்தினால் சில நன்மைகளும் உருவாகும்.

ஆனால் அந்த அருளாடுபவர்கள் குடும்பத்தில் வேண்டாத இன்னல்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். குடும்பத்தையும் சின்னாபின்னமாக்கும். இதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் மனித உடலில் விளைந்த அந்த ஆன்மா உடலுக்குள் இருப்பதால் அது பட்ட அத்தனை அவஸ்தைகளையும் இந்த உடலில் இயக்கும்.

இதை எல்லாம் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நடந்ததை எல்லாம் சொல்லும் சக்தி பெற்றவர்… முக்காலமும் அறிந்தவர்…! என்று சிலரைச் சொல்கிறோம் – விளக்கம்

Image

nadi-astrology

நடந்ததை எல்லாம் சொல்லும் சக்தி பெற்றவர்… முக்காலமும் அறிந்தவர்…! என்று சிலரைச் சொல்கிறோம் – விளக்கம்

 

“முக்காலமும் அறிந்தவர்கள்…!’ என்று சொல்பவர்கள் எல்லாம் மந்திர சக்தியை வைத்து ஒரு மனிதனுக்கு மனிதன் விளைய வைத்த அந்த உணர்வின் ஆற்றலை எடுத்துத் தன் எண்ணத்திற்குள் வலுவாக்கி அந்த நுண்ணிய அலைகள் கொண்டு மற்ற மனிதர்கள் வெளிப்படுத்தும் சிற்றலைகளை எடுத்துச் சொல்வது தான்.

உதாரணமாக ஒரு வேப்ப மரம் அதனின் கசப்பின் வலிமை எந்தளவுக்கு இருக்கின்றதோ அதை வைத்துச் சிற்றலைகளாகப் பூமியிலே காற்றில் படர்ந்து வரும் தன் இனமான கசப்பின் அலையை எடுத்துத்தான் அது வளர்கின்றது.

அதைப் போல ஒரு மனிதனுக்குள் விளைய வைத்த மந்திர சக்தியினுடைய நிலைகளை அதிகமாகக் கூட்டப்படும் போது அதன் வரிசையைக் கொண்டு சிறிய அலைகள் வந்தால் ஏம்ப்பா…! நீ இதை நினைத்தாய் அல்லவா…! என்று அப்படியே சொல்ல முடியும்.

அப்போது சிறுகச் சிறுக அந்த உணர்வின் அலைகளை எடுக்கப்படும் போது நம் எடுத்துக் கொண்டது என்ன…? துன்ப அலைகளைத் தான் நமக்குள் சேர்த்துக் கொள்வோம்.

ஜோதிடம் பார்க்க வேண்டும் என்ற நிலையில் உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் இங்கே வரப்போகும் போது “எதை நினைத்துக் கொண்டு என்னிடம் நீங்கள் வருகின்றீர்கள்…?” என்று நான் (ஞானகுரு) சொல்ல முடியும்.

உங்கள் சொல்லலாம். அதைப் போல வரக்கூடிய ஒவ்வொருவரின் கஷ்டத்தையும் சொல்லி நான் என்ன செய்வது…? உங்கள் கஷ்டத்தை எல்லாம் நான் எடுத்துக் கொள்கிறேன்.

நீங்கள் கஷ்டப்படுவது சிரமப்படுவது எல்லாம் நான் சொன்னால்
1.என்னை நீங்கள் “முக்காலமும் அறிந்த ஞானி…!” என்று சொல்வீர்கள்.
2.இந்த ஞானி கடைசியில் என்ன ஆவார்…?
3.அத்தனை பேருடைய துன்பத்தையும் எடுத்து எடுத்துக் கடைசியில்
4.உடலில் பல போராட்டமாகி நோயாகி முடிவில் இறந்தே போய்விடுவார்.
5.ஐய்யய்யோ…! இவ்வளவு தூரத்திற்குப் போய்விட்டாரே…! என்பீர்கள்.

ஆக மொத்தம் – எல்லோருக்கும் நான் நல்லது செய்தேன்… ஆண்டவன் என்னைச் சோதித்துக் கொண்டே இருக்கின்றானே…! எனக்கு இப்படித் துன்பங்களுக்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருக்கிறதே…! என்று எண்ணுவீர்கள்.
1.என்னை (ஞானகுரு) நினைத்து எங்களுக்கெல்லாம் அவர் நல்லது செய்தார்.
2.எல்லா விஷயத்தையும் சொன்னார். கடைசியில் அவரும் போய்விட்டார்.

நீங்கள் எந்தெந்த சுகத்தை அனுபவித்தீர்களோ அந்த சுகமான நிலைகள் கொண்டு “என்னை நினைத்து…!” இன்னும் கொஞ்சம் வேதனையைத்தான் எண்ணுவீர்கள்.

கொஞ்ச நாள் சுகப்பட்டீர்கள். நான் போன பிற்பாடு வேதனையைத்தான் எடுத்துக் கொள்வீர்கள். சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதல்லவா…!

இவைகள் எல்லாம் நாம் நுகரும் உணர்வின் இயக்க நிலைகள். ஆகையினால் யாரும் போற்றலுக்காக ஏங்க வேண்டாம். நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்றால்
1.ஒவ்வொரு நிமிடமும் “மனிதன் மகிழ்ந்து இருக்க வேண்டும்” என்ற எண்ணத்தை மட்டும் நீங்கள் செலுத்துங்கள்.
2.நீங்கள் உங்களுக்குள் அந்த மகிழ்ச்சியைக் காண முடியும்.

உங்களுக்கு யார் இம்சை கொடுத்தாலும் சரி… அல்லது கடும் சொற்களைச் சொல்லிவிட்டாலும் சரி
1.அடுத்து அந்தச் சுடு சொல்லினுடைய நிலைகள் அவர்கள் சொல்லிலே வராதபடி
2.அவர்கள் திருந்த வேண்டும் என்று மட்டும் எண்ணுங்கள்
3.உன்னை அறியாமல் பேசும் நிகழ்ச்சியிலிருந்து “நீ தப்புவாய்…!” என்று இதைச் சொல்லுங்கள்.

அப்போது “இதுவும் கடும் சொல்தான்…!” ஆனால் இந்தச் சொல்லின் தன்மை அவரைத் தப்புவிக்க உதவுகின்றது. நம் மனதைத் தூய்மைப்படுத்துகின்றது.

அதற்குப் பதில் இரு நான் பார்க்கிறேன்… நீ என்னை இப்படிப் பேசினாய் அல்லவா… அதற்காக வேண்டி நீ அனுபவித்தே தீருவாய்.. நீ எப்படி எல்லாம் கஷ்டப்படப் போகின்றாய் தெரியுமா…? என்று நாம் சொன்னால்
1.முதலில் நாம் தான் அந்தக் கஷ்டத்தை அனுபவிப்போம்
2.நாம் சொன்ன உணர்வின் தன்மை அங்கேயும் விளையும்.
3.அந்த உணர்வின் தன்மை எதிர்ப்பு நிலை ஆகும்
4.இரண்டு பேருக்கும் இது கெட்டதாகத் தான் முடியும்.
5.மனிதருடைய உணர்வுகளுக்குள் இத்தனை நிலைகள் உண்டு.

ஆகையினால் இதை எல்லாம் நீங்கள் மாற்றப் பழகிக் கொள்ளுங்கள். குருநாதர் காட்டிய அருள் வழியில் சக்தி வாய்ந்த அந்த மெய் ஞானிகளின் அருள் வித்தை உங்களுக்குள் சமைத்துக் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றோம்.

இது பல வருட காலம் கஷ்டப்பட்டு அனுபவித்துக் கொண்டு வந்தது. உங்களிடம் லேசாகச் சொல்றேன் என்றால் “வாக்காலே…!” சொல்கிறேன்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்…! உங்களுக்கு நல்லதாகிப் போகும் என்று யாம் சொல்லும் போது அது உங்களுக்கு நல்லதாகின்றது.
2.நான் சொன்ன மாதிரி நீங்களும் நல்லதாகிப் போகும் என்று மற்றவர்களுக்குச் சொன்னவுடனே அங்கேயும் நல்லதாகின்றது
3.மற்றவர்களுக்கும் நல்லாதாகிறது என்கிற போது உங்களுக்குப் பின்னணியில் யாம் எடுத்துக் கொடுக்க கூடிய அந்த ஞானிகளின் அலைகள்தான்.

ஆகவே அருள் ஞானிகளை ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் எண்ணும்போது உங்களுக்கு நல்லதாகின்றது. அதை நீங்கள் எடுத்து அடுத்தவருக்குச் சொல்லும் பொழுது நீங்கள் சொல்வது அவர்களுக்கும் நல்லதாகும். ஆனால் ஞானிகளின் ஆற்றலை நீங்கள் நினைத்து எடுக்க வேண்டும். (இது முக்கியம்)

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நேரடியாக இருந்து ஞானிகளின் உணர்வை எப்படிப் பெற வேண்டும்…? என்று அதை எடுக்கும் முறைகளைக் காட்டி அதை வைத்துத் துன்பங்களையும் வேதனைகளையும் எப்படிப் போக்கிக் கொள்ள வேண்டும் என்பதை எமக்குத் தெளிவாக்கினார்.

ஏனென்றால் இதெல்லாம் குரு வழியில் வருவதுதான். அதன் வழியில் தான் உங்களுக்குள்ளும் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

எங்கும் எதிலும் மகிழ்ச்சி பெறச் செய்யும் “ஆடிப் பெருக்கு”

Image

blissful- ADI PERUKKU

எங்கும் எதிலும் மகிழ்ச்சி பெறச் செய்யும் “ஆடிப் பெருக்கு”

 

ஒருவர் நரக வேதனைப்படுகின்றார் என்றால் நாம் அந்த வேதனை உணர்வை நுகர்ந்தால் நம் நல்ல உணர்வையும் அது மடியச் செய்கின்றது. ஆகவே அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி மகரிஷிகளினுடைய அருள் சக்தியைத் தனக்குள் கவர்ந்து உடல் முழுவதும் பரவச் செய்து முதலில் நம் நல்ல உணர்வைக் காத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை வேதனைப்படுவோர் உணர்வுகளிலே பாய்ச்சி அவர் உடல்களிலும் அதை விளையச் செய்ய வேண்டும்.
1.அவர் பேரின்பப் பெரு வாழ்க்கை வாழ வேண்டும்
2.மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் அவருக்குள் வளர வேண்டும் என்ற அந்த எண்ணத்தை
3.நமக்குள் வலுவாக எண்ணி அதை அவருக்கு பாய்ச்சுதல் வேண்டும்.

அவர்கள் நாம் சொல்வதைக் கேட்டு அதைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால்
1.மகரிஷிகளின் அருள் சக்தியால் மெய் ஞானம் பெறுவீர்கள்…
2.உயர்ந்த வாழ்க்கை வாழ்வீர்கள்…! என்று மீண்டும் இதை நாம் வாக்காகக் கொடுக்க வேண்டும்.

அப்பொழுது அவருக்குள் அந்த அருள் ஞானத்தின் நிலைகள் பெருகி வேதனைகளிலிருந்து மீண்டு மகிழ்ச்சியான நிலைகளை அவர் வெளிப்படுத்துவார்.

அப்பொழுது அவரிடமிருந்து வெளிப்படும் மகிழ்ச்சியான உணர்வை நாம் கவர்ந்து நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு உணவாகக் கொடுத்து மகிழ்ச்சி பெறும் அணுக்களாக ஒளியின் சுடராக நாம் பெருக்க வேண்டும்.

வாடிய பயிர்களைக் காப்பதற்காக அதற்குத் தேவையான சக்தி வாய்ந்த உரங்களையும் பலவிதமான சத்துக்களையும் கொடுத்த பின் தாவர இனங்கள் வளர்ச்சியாகி அது நல்ல மணி முத்துக்களைப் பெருக்கிக் கொடுக்கின்றது.

அதைப் போன்று தான் வாழ்க்கையில் வேதனைப்படும் நிலைகள் வந்தால் அல்லது வேதனைப்படுவோரைப் பார்த்தால் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நல்ல குணங்களுக்கு உரமாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

ஆகவே யார் வேதனைப்பட்டாலும் துன்பப்பட்டாலும் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும்
1.அவர் உடல்களில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு படர வேண்டும்
2.அங்கிருக்கும் நஞ்சான உணர்வுகள் குறைய வேண்டும்
3.அவர்கள் உடலில் மகிழ்ச்சி பெறும் சக்திகள் பெற வேண்டும் என்ற
4.இந்த உணர்வின் எண்ண ஒலிகளை (சொல்லை) அங்கே பாய்ச்ச வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை ஏங்கிப் பெறுங்கள்… உங்கள் துன்பம் போகும்… இருள் சூழ்ந்த நிலைகள் குறையும்… அருள் ஞானத்தை நீங்கள் பெறுவீர்கள்…! என்று இந்த உணர்வினை நாம் போதித்தல் வேண்டும்.

இப்படி இதைச் சொல்லிச் சொல்லித்தான் அந்த நல்லதைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இவ்வாறு சொன்னால்தான் நமக்குள் வரும் அவர்கள் பட்ட துன்பமோ துயரமோ நோயோ நமக்குள் வராது தடுக்க முடியும்.

இல்லை என்றால் அவருடைய வாழ்க்கையில் எப்படி விஷத்தின் தன்மை கொண்ட உணர்வுகள் உடலில் அவருடைய நல்ல உணர்வுகளைக் குறையச் செய்ததோ அதை நாம் எண்ணிவிட்டால் அந்த விஷத்தின் தன்மைகள் நமக்குள் வளர்ந்து பெருகிவிடும். நம் நல்ல குணங்களைக் குறைக்கச் செய்யும்.

அதற்காக வேண்டித்தான் அருள் ஞானிகளின் உணர்வைப் பெருக்கி அந்த உணர்வின் தன்மையைக் கலவையாக்கித் துன்பப்படுவோர் மனதில் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும் என்று சொல்வது.

அப்படிப் பதித்தோம் என்றால் அந்த உணர்வின் ஆற்றல் அங்கே பெருகி அவருடைய வாழ்க்கையில் இருளை வென்று ஒளி பெறும் உணர்வாக மகிழ்ச்சி பெறும் சக்தியாகப் பெருகுகின்றது.

அதைக் கண்டு நாம் பேரானந்தப்பட்டு அதில் விளைந்த அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வை நாம் நுகர்தல் வேண்டும். அது நம் உடலுக்குள் இருக்கும் அனைத்தையும் ஒளி பெறும் சரீரமாகப் பெருக்கும்.

1.பகைமையோ தீமைகளையோ மற்ற தீமை கொண்ட உணர்வுகளையோ நமக்குள் வளர்த்திடாதபடி
2.நிறைவு பெற்ற உணர்வுகளை இணைத்து நம் எண்ணங்களை மகிழ்ச்சி பெறச் செய்து
3.நம் சொல் பிறரை மகிழ்ச்சி பெறச் செய்வதும்
4.நமது பார்வை பிறரை மகிழச் செய்வதும்
5.நம்முடைய செயல்கள் அனைத்தும் மகிழச் செய்யும் நிலையாகப் பெருக்குவதே ஆடிப் பெருக்கு.

உதாரணமாக ஒருவர் தன் வாழ்க்கையில் சோர்வடைந்து இருந்தால் அப்போது அவரை அந்த இருண்ட நிலைகளிலிருந்து மீளச் செய்து அவர் மகிழும் நிலையைப் பார்த்து நமக்குள் அந்த மகிழ்ச்சியைப் பெருக்குவதே ஆடிப் பெருக்கு.

ஆகவே
1.யாருடைய தீமையைக் கண்டாலும் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் பெருகாது
2.அந்தத் தீமையை நீக்கிடும் அருள் சக்தியாக அருள் ஞானிகளின் உணர்வைப் பெருக்கி
3.எங்கும் எதிலும் மகிழ்ச்சியைப் பெருக்குவதே ஆடிப் பெருக்கு…!

குடும்பத்திற்குள் பாசத்தினாலும் பந்தத்தினாலும் அறியாது இயக்கக்கூடிய தீமைகளிலிருந்து விடுபடப் பழகிக் கொள்ளுங்கள்

Image

Spiritual Family

குடும்பத்திற்குள் பாசத்தினாலும் பந்தத்தினாலும் அறியாது இயக்கக்கூடிய தீமைகளிலிருந்து விடுபடப் பழகிக் கொள்ளுங்கள்

 

ஒருவன் நம்மைத் திட்டுகிறான்…! அதைக் காதில் கேட்டவுடனே என்னைத் திட்டினான்… திட்டினான்… திட்டினான்… என்று சொல்லி ஆத்திரத்தில் நாமும் பேசிவிட்டோம் என்றால் அடுத்தாற்போல நம் உடலுக்குள் என்ன நடக்கின்றது…?

ஒரு நாளைக்குத் திட்டிவிட்டு அவன் போய்விடுகிறான். ஆனால் நமக்கு கை கால் குடைச்சல் வருகிறது. ஏன் வந்தது…? எதற்கு வந்தது…? என்று தெரியாது.

பெரும் பகுதி பெண்களுக்குப் பாருங்கள். தன்னைப் பற்றி மற்றவர்கள் குறையாக அப்படிப் பேசினார்கள்… இப்படிப் பேசினார்கள்…! என்று தெரிந்து விட்டது என்றாலே போதும். அவர்களுக்கு கை கால் குடைச்சல் வந்து கொண்டே இருக்கும்.

அதே சமயத்தில் தன் பிள்ளையைக் கல்யாணம் கட்டிக் கொடுத்து இருப்பார்கள். அவர்கள் வீட்டில் மாமியார் வீட்டில் ஏதாவது செய்து விட்டால் போதும்.

“இப்படிச் செய்கிறார்களே பாவிகள்…! இப்படி எல்லாம் செய்கிறார்களே…! என் பிள்ளை இப்படிக் கஷ்டப்படுகின்றதே…! என்று மிகவும் வேதனைப்படுவார்கள்.

நாத்தனாரோ மற்ற யாராவது தன் பிள்ளையை ஏதாவது ஒன்றைச் சொல்லி விட்டார்கள் என்றால் அதையே திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குக் கை கால் குடைச்சல் நிச்சயம் இருக்கும்.

அடுத்து இவர்கள் யாரிடம் பேசுவதற்குப் பார்த்தாலும் இதே நிலை வந்து கொண்டே இருக்கும். ஏனென்றால்
1.சுவாசித்த அந்த வேதனை உணர்வுகள் அனைத்தும் வீட்டுக்குள்ளேயே அலைகளாகப் படர்ந்து விடுகின்றது.
2.வேதனை என்றாலே கடும் விஷம்.
3.வீட்டில் படர்ந்த அந்த அலைகளைச் சுவாசிக்கச் சுவாசிக்க எங்கிருந்தும் தப்ப முடிவது இல்லை.

வீட்டிற்குள் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் வெறுப்பானலும் இதே நிலைகள் தான். அந்த அலைகள் வீட்டுக்குள் சுழலும் பொழுது நம்மை அறியாமேலே அது உணர்ச்சியைத் தூண்டி இயக்கிக் கொண்டே தான் இருக்கும்.

அதே சமயத்தில் வீட்டுக்குள் ரொம்பப் பாசமாக இருக்கும் போது திடீரென்று பகைமையாகி வெறுப்பாகிவிடும். பாவி…! கடைசியில் இப்படிச் செய்து விட்டானே…! என்று அதையே எண்ணிக் கொண்டு செத்தால் போதும்.

யார் மீது வெறுப்பானதோ செத்த பிற்பாடு அவர் உடலில் வந்து பாய்ந்து கொள்கிறது. அந்தப் பழி தீர்க்கும் உணர்வுடன் வந்து இன்னும் கொஞ்சம் இம்சை செய்யத் தொடங்கும். (ஆனால் இதனால் தான் இப்படி நடக்கிறது என்று தெரியாது).

வெறுக்கும் உணர்ச்சிகள் உந்தி உந்தி இந்த உடலையும் நஞ்சாக்கி உடலை விட்டுப் பிரிந்த பின் அந்த இரண்டு ஆன்மாக்களுமே அடுத்து மனித உடல் பெற முடியாதபடிப் போய்விடுகின்றது.

ரொம்பக் குடும்பங்களில் இந்த மாதிரி எத்தனையோ அவஸ்தைகள் பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இதைப் போன்ற நிலைகள எல்லாம் மாற்றுவதற்கு எத்தனையோ வகையில் ஞானிகள் உணர்வை நீங்கள் எடுக்கும் வழியைச் சொல்கின்றோம்.

ஏனென்றால் இந்த உண்மைகளை நான் (ஞானகுரு) உணர்வதற்காக வேண்டி குருநாதர் என் உடலுக்குள் அணு அணுவாக இம்சைகள் கொடுத்தார்.
1.தீமைகள் எப்படி நமக்குள் வருகிறது..?
2.அது எப்படி நம்மை இயக்குகிறது…?
3.வேதனைகள் எப்படி உருவாகிறது..?
4.மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறச் செய்து
5.அந்தத் தீமைகளையும் வேதனைகளையும் எப்படி அகற்றிப் பழக வேண்டும் என்ற முழு அனுபவத்தையும் எமக்குக் கொடுத்தார்.

குருநாதர் காட்டிய அதே அருள் வழியில் இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கக் கூடிய ஆற்றல் எல்லாமே “அந்த மகரிஷிகளின் ஒளியான உணர்வுகளைத்தான்…” இந்த உபதேசத்தின் மூலமாக ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

பதிவு செய்ததை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுதெல்லாம் அதைப் போக்குவதற்கு ஈஸ்வரா… என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும்.
1.மகரிஷிகளின் ஒளியான உணர்வுகள் உங்கள் உடலுக்குள் சேரச் சேர
2.மற்ற தீமையான உணர்வின் இயக்கங்களின் வலிமை குறையும்.

விண்ணிலிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொருவரையும் பெறச் செய்வதற்காகத்தான் எல்லா ஆலயங்களிலும் “தூப ஸ்தூபியை” வைத்துள்ளார்கள் ஞானிகள்.

அதற்கு நேராக நின்று வானை நோக்கிப் பார்த்து அந்த மகரிஷியின் அருளைச் சுவாசிக்கச் செய்து நம்மை அறியாது நம் உடலில் சேர்ந்த நோய்களைப் போக்கும் படி செய்தார்கள் ஞானிகள்.

ஞானிகள் சாஸ்திரங்களாக நமக்குக் காட்டிய வழிகளைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

நரபலி கொடுக்கும் இடத்தில் யாம் பெற்ற முழுமையான அனுபவம் – மந்திரக்காரர்களின் கையில் யாரும் சிக்காதீர்கள்…!

Kali mantra magic

நரபலி கொடுக்கும் இடத்தில் யாம் பெற்ற முழுமையான அனுபவம் – மந்திரக்காரர்களின் கையில் யாரும் சிக்காதீர்கள்…!

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் வாழ்நாளில் பல சக்திகளைப் பெற்றார். பல அனுபவங்களையும் பெற்றார். அகண்ட அண்டத்தின் நிலை இந்தப் பிண்டத்திற்குள் (உடலுக்குள்) எவ்வாறு வந்ததென்ற உண்மையை உணர்ந்தார்.

அவ்வாறு அவர் பெற்ற உண்மையை உணர்த்துவதற்காகப் பல மலைப் பகுதிகளுக்கு எம்மை (ஞானகுரு) அழைத்துச் சென்றார்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்…? அவர்கள் உடல்களிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் அந்த மலைப் பகுதியில் எவ்வாறு பதிந்தும் பரவியும் இருக்கிறது என்ற உண்மையை உணரச் செய்வதற்காக அங்கே போகச் சொன்னார்.

ஒரு பக்கம் ஒரு மலைப் பகுதியில் வாழும் மக்கள் இன்னொரு மலைப் பகுதிக்குச் சென்றால் அங்கு வாழும் மக்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

ஏனென்றால் நம் பகுதிக்கு அவர்கள் வந்து விட்டால் தனக்கு உணவு கிடைக்காது என்று அவர்களைத் தாக்கித் துரத்தி விடுவார்கள். இப்போது எப்படி எல்லைப் பகுதியில் நாட்டுக்கு நாடு போர் முறைகள் உள்ளதோ இதே போலத் தான் ஆரம்ப நிலைகளிலும் இருந்தது.

இதே போல மிருக இனங்களிலும் ஒரு பகுதியில் வாழும் மிருகங்கள் இன்னொரு பகுதிக்குச் சென்றால் அந்தப் பகுதியில் வாழும் மிருகங்கள் இதை விடுவதில்லை. அவ்வாறு தான் மனிதனும் வாழ்ந்தான் வளர்ந்தான்.

மிருகங்கள் வலு இழந்ததைத் தாக்கிக் கொல்கிறது. உதாரணமாக ஒரு ஆட்டை ஒரு நரி கொன்றது என்றால் ஆட்டின் உயிரான்மா நரியின் உடலுக்குள் புகுந்து அது நரியாக உருப்பெறுகின்றது.

அதே சமயத்தில் மலைப் பகுதியில் வாழும் இந்த மனிதர்கள் அடுத்த பகுதி மக்கள் தன் பகுதிக்குள் வந்த பின் அவர்களைத் துரத்துகின்றனர். போகவில்லை என்றால் அடித்துக் கொல்கின்றனர்.

கொன்ற பின் கொன்றவன் உடலுக்குள் இறந்தவனின் ஆன்மா புகுந்து அவன் உடல்களிலே பல தீமைகளை உருவாக்கி அவனுக்குள் வெறி கொண்டு தாக்கும் உணர்வுகள் பரவுகின்றது. அந்த உணர்வலைகள் அங்கே அவர்கள் வாழும் இடங்களிலும் படருகின்றது. அப்படி விளைந்த பின்
1,இன்னொரு உடலுக்குள் சென்று இவனை எப்படிப் பழி தீர்த்தானோ
2.இதைப் போல பழி தீர்க்கும் உணர்வுகள் கொண்டு அவனை ஆட்டிப் படைப்பதும்
3.பல உயிரினங்களைப் பலி கொடுப்பதும் பல மனிதர்களைப் பலி கொடுப்பதும் போன்ற நிலைகள் வருகின்றது.

இந்த உண்மையை உணர்த்துவதற்காகத்தான் எம்மை அஸ்ஸாம் பகுதிக்கு அழைத்துச் சென்றார் குருநாதர். அங்கிருக்கும் மலைவாசிகள் கையில் நான் சிக்கிக் கொண்டேன். எனக்கு மரியாதை செலுத்தி அங்கே அழைத்துச் சென்று உணவும் கொடுத்தார்கள்.

முதலில் மரியாதை கொடுத்து அழைத்துச் சென்றவர்கள் பின் என்னை ஒரு மரத்தில் இறுகக் கட்டிவிட்டார்கள். படுக்கவும் முடியாது, உறங்கவும் முடியாது.

உணவைக் கொடுத்து அவர்கள் பாஷையில் என்னென்னமோ சொல்லுகின்றனர்… கத்துகின்றனர்… கூத்தாடுகின்றனர். இன்னும் என்னென்னமோ செய்கின்றனர். “தெய்வத்தை இவன் எப்படி வணங்குகிறான்…? பார்…!” என்று குருநாதர் காட்டுகின்றார்.

தெய்வத்திற்கு நிம்மதி பெறச் செய்ய ஒரு மனிதனைப் பலி கொடுத்து அவன் வாழும் பகுதிகளில் இந்தத் தசைகளைத் தூவிக் கடும் பூதங்களுக்கு இதை உணவாகக் கொடுத்து விட்டால் தீய வினைகள் வராதபடி “நம் ஊரைக் காக்கும்…!” என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்கின்றனர்.

மனிதனாகப் பிறந்த பின் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இன்னொரு மனிதனையே கொன்று அங்கே எவ்வாறு செயல்படுத்துகின்றனர் என்று உணர்த்துகின்றார்.

அப்போது அவர்கள் செய்வதையெல்லாம் உற்று நோக்கி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதனை நான் உணரும் பொழுது அச்சுறுத்தும் நிலையாகி அஞ்சி வாழும் உணர்வுகளே எனக்குள் வளருகிறது.

எம்மைக் கொன்று விடுவார் என்ற உணர்வு ஓங்குகின்றது. ஆனால் அதே சமயம் காட்டுப் பகுதிக்குள் செல்லும் போது தன்னைக் காத்துக் கொள்ளும் சக்தியைக் குருநாதர் கொடுத்திருந்தார். ஆனால் பயத்தின் காரணமாக என்னால் அதைப் பயன்படுத்த முடியவில்லை.

கடும் தொல்லைகளுக்கு எம்மை அவர்கள் ஆளாக்கவில்லை. ஆனால் கட்டி வைத்து உணவு கொடுத்து என்னமோ கூத்தாடுகின்றார்கள். நாளாக நாளாக இவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றியது.

ஆனாலும் பயத்தின் காரணமாக அதிலிருந்து மீள்வதற்குண்டான உபாயங்களை என்னால் நுகர முடியாதபடி வாடுகின்றேன்… வேதனைப்படுகிறேன்…!

அப்போது தான் குருநாதர் மீண்டும் காட்சி கொடுத்தார். மனிதனானபின் மனிதனையே எப்படிப் பலியிட்டு அந்த ஊரைக் காக்க முயற்சிக்கிறான் என்பதனை இங்கே பார்த்தாய் அல்லவா…!

விஞ்ஞான அறிவு கொண்ட நகர்ப்புற வாழ்க்கையிலும்…. காளிக்குத் தன் மக்களையே பலியிட்டு அவன் செல்வம் தேடுவதற்கு எவ்வாறு செய்கின்றான் என்பதைப் பார்… என்று அதையும் காட்டுகிறார்.

தெய்வத்தின் மீது கொண்ட பக்தியால் தனக்குச் செல்வமும் செல்வாக்கும் பெற வேண்டும் என்பதற்காகத் தன் குழந்தையையே பலியிடத் துணிகின்றான்.

புதிதாக வீடு கட்டும் பொழுது அங்கே சுகமாகச் செல்வச் செழிப்பாக வாழ வேண்டும்… மகிழ்ச்சியாக இருக்கவேண்டு…ம் என்பதற்காக வேண்டி மந்திரவாதிகள் கூறியபடி ஒன்றுமறியாதை குழந்தைகளைப் பலி கொடுக்கின்றார்கள்.

அதாவது தன் வீட்டிற்கு அறியாத இடத்திலிருந்து குழந்தைகளை அழைத்து வந்து
1.“வீடு கட்ட வானம் (குழி) தோண்டும் போது…
2.அங்கே குழந்தையை எப்படிப் பலியிடுகின்றனர்…! என்பதனை உணர்த்துகின்றார்.

ஏனென்றால் வீடு கட்டுபவரோ மந்திரவாதி சொல்லும் இந்த நிலைகளை நம்புகின்றார். மந்திரவாதி சொன்னதை வைத்து மற்றொரு குழந்தையைப் பலியிட்டு இவர் வீட்டை எழுப்புகிறார்.

ஆனால் மந்திரவாதி குழந்தையை எதற்காகக் குழந்தையைப் பலியிடுகிறான்…? எலிகளுக்கு மையைத் தடவி மந்திர ஒலிகளைக் கூட்டிய பின் அது ஒரு சீட்டை எடுத்துக் கொடுக்கின்றது (ஜோதிடம் சொல்பவர்கள்).

இதை போல தான் கற்றுக் கொண்ட மந்திரத்தின் தன்மை கொண்டு அந்தக் குழந்தையைக் கொல்லப்படும் பொழுது அதன் உடலில் பாய்ச்சி இவன் (மந்திரவாதியின்) நினைவு வரும் போது அதை அடக்கிக் கவர்ந்து கொள்கிறான்.

பல மந்திர வேலைகளைச் செய்வதற்கு இவர்களைக் கருவியாக வைத்து மற்றவர்களையும் கொன்று குவிக்கின்றான்.

வீடு கட்டுபவரோ தன்னுடைய ஆசை கொண்டு மற்ற குழந்தைகளை பலியிட்டுத் தன் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றான். மந்திரவாதி அவன் ஆசைப்படி குழந்தைகளைப் பலி கொடுத்துக் கொல்கிறான். இன்று உலகில் பெரும்பகுதியான இடங்களில் இது தான் நடக்கின்றது.

நம் நாடு மட்டுமல்ல…! நாகரீக வாழ்க்கை வாழ்ந்து விஞ்ஞான அறிவு கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நகரப் புறங்களிலும் இதை விட மோசமாக நடக்கிறது என்பதனை அங்கே காட்டுவாசிகளிடம் சிக்குண்டு இருக்கும் போது உலகில் எந்தெந்தப் பகுதிகளில் எவ்வாறெல்லாம் நடக்கின்றது என்று அதை எல்லாம் நுகரும்படி செய்கின்றார். காட்சியாகவும் கொடுக்கின்றார்.

இன்றும் நீங்கள் பத்திரிகை வாயிலாகவோ டி.வி மூலமாக இதைப் போன்ற நிலைகள் உலகில் நடப்பதைப் பார்த்திருப்பீர்கள் படித்திருப்பீர்கள்…!

எனக்கு வேண்டாதவர்கள் செய்வினை செய்திருக்கிறார்கள்…! எனக்குப் பல தொல்லைகள் கொடுக்கின்றார்கள் என்று மந்திரவாதிகளை அழைத்து வந்து அவர் கூறும் மந்திரத்தை ஜெபித்தால் நமக்குப் பாதுகாப்பு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் மந்திரத்தால் பிணிகளைப் போக்குவோம் என்றும் மந்திரத்தை ஜெபித்தால் உடல் சுகமாகும் நீ வீட்டில் வைத்து இதை ஜெபி உனக்கு நன்மை வரும் என்று சொல்வார்கள்.

அதன் மீது நம்பிக்கை கொண்டு அவன் கூறும் மந்திரத்தைக் கேட்டுணர்ந்து அதை ஜெபிப்பார்கள். அந்த மந்திர ஒலிகள் உடலில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. ஆனால் இந்த உணர்வுகள் இங்கே பதிவானபின் துயரங்கள் அதிகரித்த பின் துரிதமாக மடியத்தான் நேருகிறது.

அவர்கள் மடிந்ததும் எந்த மந்திரத்தை அவர்கள் ஜெபித்தார்களோ அந்த உயிரான்மா வெளி வரும்போது அதைத் தனக்குள் கைவல்யப்படுத்தித் தன் மந்திரத்தை ஊக்குவித்து மற்றவர்களை மதி மயக்கச் செய்து “தான் பெரும் சக்தி வாய்ந்தவன்…!” என்று வெளியிலே காட்டிக் கொண்டு செல்வத்தைப் பெருக்கும் நிலையாகத் தன் உடல் இச்சைக்காக அவனும் இந்தக் காரியத்தைச் செய்கின்றான்.

ஒரு ஆன்மாவை அவன் கைவல்யப்படுத்தினால் அதை வைத்துக் கடும் பூதங்களாகப் பிறரைக் கொல்லும் ஏவல் தன்மைக்கும் இதைப் பயன்படுத்துகிறான்.

1.இதை அறியாமல் இன்று வாழும் மக்கள்
2.தன் உடலைக் காத்துக் கொள்ள வேண்டும் செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
3.பிறர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஆசை நிலைகளில் பிறிதொரு மந்திரத்தில் சிக்கி
4.அதனால் அந்தக் குடும்பமே கடும் வேதனைகளைச் சந்திக்கும் நிலை வருகின்றது.

இப்படி வளர்ச்சி பெற்ற நிலையில் இவர்கள் இறந்தாலும் மீண்டும் இதே போல மந்திரங்களை ஜபித்தால் இன்னொருவன் கைக்குத்தான் செல்ல முடிகிறதே தவிர அவர்களால் தன் உடலைக் காக்க முடிவதில்லை சுகத்தையும் காண முடிவதில்லை.

இப்படி மந்திரங்கள் நிலையில் சிக்குண்டு அடுத்த உடலுக்குள் ஏவல் செய்யப்பட்ட பின் இன்னொரு உடலுக்குள் புகுந்து அதையும் படாத பாடு படுத்தி அந்த உடலை வீழ்த்தி விட்டுக் கடும் விஷம் கொண்ட உணர்வுகளாக வெளி வந்து “மனிதல்லாத உருவைத்தான் பெறுகிறது…!” என்று காட்டுகிறார் குருநாதர்.

ஆப்பிரிக்க நாடுகளில் விஞ்ஞான அறிவு கொண்டு இருப்பினும் மற்ற உயிரினங்களின் இரத்தத்தைக் கையிலே தோய்த்து அதற்குண்டான மந்திரத்தைச் சொல்லி விட்டால் “இவர்கள் செய்த பாவமெல்லாம் போய்விடும்…!” என்று இப்படியும் வழிபடுகின்றனர் என்று காட்டுகின்றார்.

காட்டு விலங்குகள் போல மனிதனுக்கு மனிதன் மற்றொரு பகுதிகளில் இருப்போரை விலங்குகளைப் போன்று கொன்று புசிக்கும் நிலைகள் இன்றும் உண்டு.

கொல்லும் போது இன்னொரு உடலுக்குள் அவன் சென்று விடுகின்றான். பின் அவனும் இதே நிலையை அவன் உருவாக்குகிறான் என்பதனை அந்தக் காட்டுவாசிகளுடன் சிக்குண்ட நிலையில் 48 நாட்களில் ஒவ்வொன்றையும் உணர்த்துகின்றார் குருநாதர்.
1.உனக்கு மட்டும் இங்கே நிகழவில்லை.
2.உலகம் முழுவதற்கும் நடந்து கொண்டே உள்ளது.

இன்று எந்த ஆண்டவனை வணங்குகின்றனரோ அவர்கள் இதே போல மந்திரத்தை மனிதன் உடலில் செருகச் செய்து மதி மயங்கச் செய்து அந்த ஆன்மாவைக் கைவல்யப்படுத்துகின்றனர் என்பதனைத் தெளிவாக உணர்த்துகின்றார்.

அதிலிருந்து தப்பிக்கும் உபாயங்களை…
1.எவ்வழியில்… எதைச் செய்து… எப்படி வரலாம்…! என்று குருநாதர் கொடுத்த நிலை
2.அப்போது தான் மீண்டும் என் நினைவுக்கு வருகிறது.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெற வேண்டும் என்று இந்த உணர்வின் நினைவுகள் வருகின்றது.

அந்த உணர்வின் தன்மை நான் பெற்ற பின் அவர்களின் நஞ்சு கொண்ட உணர்வுகள் எல்லாம் மறைகின்றது. என்னை அவர்களால் பார்க்க முடியவில்லை. என்னைக் கட்டியிருந்து கட்டுகள் அனைத்தும் கழன்று விடுகின்றது.
1.அவர்களுக்கு முன்னாடி நான் நடந்து சென்றாலும்
2.அவர்களால் அதை அறிய முடியவில்லை.

அனுபவபூர்வமாக யாம் கண்டுணர்ந்த உண்மைகள் இது. நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். மந்திரக்காரர்கள் கையில் யாரும் சிக்காதீர்கள்.