குருநாதனே சரணம்…! என்று சரீரத்தையே ஒப்படைத்து விட்டேன்…!

Guru Eswarapattar

குருநாதனே சரணம்…! என்று சரீரத்தையே ஒப்படைத்து விட்டேன்…! 

குருநாதர் எம்மைக் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் விட்டு விட்டு யானையைத் தனியாகச் சந்திக்க விட்டால் எப்படி இருக்கும்…? யானை தலையை ஆட்டிக் கொண்டே வருகின்றது.

முன்னெ வைத்த காலைப் பின்னே வைக்காதே… என்று குருநாதர் எம்மிடம் (ஞானகுரு) சப்தம் இடுகின்றார்.

அப்பொழுதே எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. ஏதோ சம்பவம் நடக்கிறது…! புலி வருகிறதோ வேறு என்ன வருகிறதோ தெரியவில்லையே…! என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன்.

புலி வரவில்லை. யானை தான் வருகிறது. இந்த யானைகள் மனித வாசனையைக் கண்டது என்றால் ஓரத்தில் போய் ஒதுங்கி அசையாமல் நிற்கும்.

இந்த யானை அப்படித்தான் அசையாமல் தான் நின்று இருந்திருக்கும் போல் இருக்கின்றது. நான் போனேன் அல்லவா…! அவ்வளவு தூரத்திற்குப் போய் பக்கத்திலே யானையைப் பார்த்தவுடனே வேஷ்டியெல்லாம் முதலில் கழிந்து விட்டேன்.

ஏனென்றால் குருநாதர் சொன்னபடி அவர் சக்தியை யாம் செய்ய முடியவில்லை. அரட்டி ஜாஸ்தியாகிப் போய்விட்டது. அப்புறம் எதையும் செய்ய முடியவில்லை. பயம் வந்து விட்டது. எனக்கு உடல் எல்லாம் அப்படியே உதறுகின்றது.
1.பயம் வந்தது என்றால் எல்லாமே மறந்து போகின்றதல்லவா…!
2.என்ன சக்தி இருந்து தான் என்ன செய்வது…?
3.முதலில் உடலைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தானே சொல்கிறது.

ஆனால் அதே சமயத்தில் மந்திர சக்தியைப் பயன்படுத்தினால் நீ எங்கே போவாய் என்று அதையும் சொல்லி இருக்கின்றார். அதனால் அதைச் செய்ய முடியாது. கொஞ்ச நேரம் அப்படியே நின்று கொண்டு இருந்தேன்.

கடைசியில்…
1.என்னமோ ஆகட்டும்…!
2.நீங்கள் (குரு_!”) சொன்னீர்கள். நான் கேட்டேன்.
3.என்னுடைய சரீரத்தை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்.
4.எப்படியோ போகட்டும்…! கடைசி முடிவு குருவிடம் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரிடம்) இப்படி விட்டு விட்டேன்.

ஏனென்றால் வேற வழி இல்லை. இந்த எண்ணத்தில் நன்றாகக் கண்ணை இறுக்கி மூடிக் கொண்டேன். போகிற யானைகள் எல்லாம் என் மீது உடலுடன் வந்து இப்படி உரசிக் கொண்டு போகிறது.

நான் மரக்கட்டை மாதிர் நின்று கொண்டேன். அதற்கு எப்படித் தெரிந்ததோ… மரம் என்று தெரிந்ததோ…! கல் என்று தெரிந்ததோ…! எனக்குத் தெரியாது.

நான் தான் பாரத்தை அவர் மேல் போட்டு விட்டுக் கண்ணை இறுக்கி மூடிக் கொண்டேன் அல்லவா…! கண்ணைத் திறந்தாலும் வம்பு. ஏதாவது பார்த்து விட்டால் என்ன ஆகும் என்ற அந்தப் பயம் தாங்க முடியவில்லை.

உடலில் யானைகள் உராய்ந்து கொண்டு செல்வதை உணர முடிந்தது. இந்தப் பக்கமும் உரசிக் கொண்டு செல்கிறது. பின்னாடியும் உரசிக் கொண்டு செல்கிறது. இரண்டு பக்கமும் யானைகள் கூட்டம் போகிறது. மொத்தம் பதிமூன்று யானைகள். அதிலே குட்டி யானை வேறு.

அது என்னை முட்டித் தள்ளுகின்றது. வந்து உராய்கிறது. என்னென்னவோ வேலைகள் எல்லாம் செய்கிறது. அப்புறம் எப்படி இருக்கும்…? நான் கண்ணைத் திறக்கவேயில்லை.

என்னமோ ஆகட்டும் விடு… “குருநாதனே சரணம்…!” என்று சொல்லி விட்டேன். காட்டுக்குள் போகச் சொன்னீர்கள்.. வந்துவிட்டேன்…
1.நீ என்னமோ பண்ணு…!
2.சரீரத்தை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன்…! என்று சொல்லி
3.அவர் மேல் நினைவைச் செலுத்தி விட்டு விட்டுவிட்டேன்.

அப்புறம் எல்லாம் போய்விட்டது. போன பிற்பாடு தான் ஏனென்றால் அவர் ஏற்கனவே ஒரு இடத்தைச் சொல்லி அங்கே ஒரு அடையாளம் இருக்கும் அதை எடுத்துக் கொண்டு வா என்று சொல்லியிருந்தார்.

அவர் சொன்ன இடத்திற்குப் போவதற்கு முன்னாடி கிஸ்ஸூ… புஸ்ஸூ… என்று பயம் வருகிறது. “சருக்…!” என்று சப்தம் கேட்டாலே போதும்… அதிர்ச்சி ஆகின்றது. “சடா…சடா…! என்றால் யானை வந்து விட்டது போல என்று இப்படித் தான் எனக்கு நினைப்பு வருகிறது.

ஏனென்றால் இவர் சொன்ன அடையாளத்தை மேலே கீழே தான் பார்த்துக் கொண்டு போக வேண்டும். அப்புறம் எப்படியோ போய் அவர் சொன்ன அடையாளத்தைப் பிடித்து எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

அபிஷேகம் எங்கே யாருக்கு எப்படி ஏன் செய்ய வேண்டும்…?

Image

Abishekam

அபிஷேகம் எங்கே யாருக்கு எப்படி ஏன் செய்ய வேண்டும்…?

 

யாகம் செய்யும் பொழுது ரோஜாப் பூவை எடுத்து அந்தத் தீயில் போட்டு ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்கிறோம் என்று சொன்னால் அது எங்கே போகிறது…?

ஆண்டவன் எங்கேயோ இருக்கிறார் என்று நினைக்கின்றோம். ஆனால் நமக்குள் இருக்கின்றார் என்பதை மறந்துவிட்டோம். நம்மை ஆள்பவன் யார்…? நம் உயிர். அப்போது அந்த ஆண்டவனுக்கு எதைக் கொடுக்க வேண்டும்…?

ரோஜாப் பூவினுடைய மணத்தைப் பெற வேண்டும் என்று சுவாசித்தால் நல்ல வாசனை நமக்குள் வரும். அதை எண்ணி உயிருக்குக் கொடுக்க வேண்டும். அப்பொழுது மகிழ்ச்சி வரும்.

நான் எல்லாச் சாமிகளையும் கும்பிடுகின்றேன் என்று சொல்லிக் கொண்டு
1.தவறு செய்பவனைப் பார்த்து
2.இவன் படு அயோக்கியத்தனம் செய்கிறான் என்று நினைத்தால்
3.இந்தக் காரமான உணர்வுகள் என்ன செய்யும்…?
4.உயிரிலே பட்டு எரிச்சலும் கொதிப்பும் தான் வரும்.

பாலிற்குள் பாதாம் இனிப்பு எல்லாம் போட்டு வைத்து விட்டு அதிலே காரத்தைப் போட்டோம் என்றால் என்ன செய்யும்…? நல்ல சுவைக்குக்குள் இந்தக் காரம் போய்ச் சேர்ந்து கொள்கின்றது. அப்போது இரண்டும் கலந்தவுடனே என்ன செய்கின்றது,

காரம் காரம் என்று தான் சொல்வோம். நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல சக்திகள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

இதே மாதிரி தான் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் எடுக்கக்கூடிய உணர்வுகள் (கோபம் ஆத்திரம் வெறுப்பு சங்கடம் வேதனை பயம்) அழுத்தி அழுத்தி எல்லா அணுக்களிலேயும் போய்ச் சேர்ந்து கொள்கின்றது.

அப்படிச் சேர்ந்த நிலைகளுக்கொப்பத்தான் நம்முடைய மன நிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறுகின்றது. மனது சரியில்லை என்று தான் சொல்வோமே தவிர அது எதனால்…? ஏன்…? எப்படி வந்தது…? என்று சிந்திப்பதில்லை.

இதைப் பிரித்துப் பிரித்துப் பிரித்துப் பிரித்து அவ்வளவு துல்லிதமாக நமக்குள் நடக்கும் நிலைகளை ஆலயங்களில் சிலைகளை அமைத்துக் காட்டியிருக்கின்றார்கள் ஞானிகள்.

அதாவது அங்கிருக்கும் கல் சிலைக்கு அபிஷேகம் தேவை இல்லை. ஒவ்வொருவர் உயிரிலும் படும் அசுத்தங்களை நீக்க நல்ல உணர்வுகளை நீ உன் உயிருக்குள் அபிஷேகிக்க வேண்டும் என்று அங்கே செய்து காட்டுகின்றார்கள்.

1.பாலாபிஷேகம் சாமி மேல் ஊற்றிக் காட்டுகிறார்கள் என்றால் பாலைப் போன்ற எண்ணத்தை எடுத்து இங்கே ஊற்று (புருவ மத்தியில் இருக்கும் உயிரிலே)
2.சந்தனாபிஷேகம் ஊற்றுகிறார்கள் என்றால் அதனின் மணத்தைச் சுவாசித்து உயிரிலே ஊற்று.
3.தேனை ஊற்றுகின்றார்கள் என்றால் அந்த இனிப்பான சுவையைச் சுவாசித்து உயிரிலே ஊற்று
4.பன்னீரை சாமிக்கு ஊற்றுகின்றார்கள் என்றால் அந்த நறுமணத்தை எடுத்து உயிரிலே ஊற்று
5.பூக்களை அபிஷேகம் செய்கின்றார்கள் என்றால் மலர்களின் மணத்தைச் சுவாசித்து உயிரிலே ஊற்று
6.கடைசியில் நல்ல நீரைச் சாமிக்கு ஊற்றுகின்றார்கள் என்றால் அந்தத் தூய்மைப்படுத்தும் உணர்வைச் சுவாசித்து உயிரிலே ஊற்று என்று
7.இப்படித்தான் ஞானிகள் நம்மைச் செய்யச் சொன்னார்கள்.

சாமிக்குப் பொங்கலை வைத்துப் படைத்திருக்கிறார்கள் என்றால் அதில் பல சரக்குகளைப் போட்டுச் சுவையாக்கியது போல
1.சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும்
2.நாங்கள் பேசுவது செய்வது ஒருமித்த நிலையில் எல்லாமே அப்படிக் கூட்டமைப்பாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்படிச் செய்தால் நமக்குள் பேரானந்தமும் பெரு மகிழ்ச்சியும் தேடி வரும். கோவிலுக்குச் சென்று இப்படி நாம் யாரும் நினைக்கிறோமா…?

நான் சாமிக்குக் கொடுத்திருக்கின்றேன் என்று தானே நீங்கள் நினைக்கின்றீர்கள். உங்கள் உயிரான ஈசனுக்கு எதைக் கொடுக்கின்றீர்கள்…! சற்று சிந்தியுங்கள்.

உயிரான ஈசனுக்குக் கொதிப்பையும் எரிச்சலையும் அசுத்தமான உணர்வுகளையும் கொடுக்கக் கூடாது என்பதைத்தான் ஆதிசங்கரர் தெளிவாகச் சொன்னார்.
1.மனிதனான நீ யாருக்கோ கொடுக்கின்றதாக நீ இப்படிச் செய்கிறாய்.
2.பல பொருள்களையும் நெருப்புக்குள் போடுகின்றாய்…!
3.ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் இந்த நல்ல வாசனைகளைக் கொடுக்க வேண்டும்
4.உயிரான அந்த நெருப்புக்குள் அதைப் போட்டு அந்த வாசனையை உடலுக்குள் சமைக்க வேண்டும் அல்லவா…!
5.அகத்திற்குள் செய்யச் சொன்னதை நாம் புறத்திலே செய்து கொண்டிருக்கின்றோமே…! என்று ஆதிசங்கரர் சாடினார்…!

ஞானிகள் காட்டிய வழிகளை நாம் கடைப்பிடித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்கே இதையெல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

உடலைக் காயகல்பம் செய்யாதபடி யாரும் மோட்சம் அடைய முடியாது என்பார்கள் – காயகல்பம் என்றால் என்ன…?

Image

Bhogar Risi

உடலைக் காயகல்பம் செய்யாதபடி யாரும் மோட்சம் அடைய முடியாது என்பார்கள் – “காயகல்பம் என்றால் என்ன…?”

 

துருவ மகரிஷியால் (அகஸ்தியர்) வெளிப்படுத்தப்பட்ட உணர்வின் ஆற்றல் போகரின் ஈர்ப்புக்குள் சிக்கிய பின் அந்த அணுவின் தன்மை அவருக்குள் விளைந்து அதன் வழி கொண்டு விண்ணுலகின் தன்மையை அறிந்துணரும் ஆற்றல் அதிகமாகப் பெற்றார்.

ஒவ்வொரு தாவர இனத்தின் சத்தினுடைய தன்மையைத் தான் நுகர்ந்தெடுத்து அது ஒவ்வொன்றையும் தனக்குள் சேர்த்து உண்மையின் நிலையை அறிந்துணர்ந்து வந்தார்.

மகரிஷிகள் அன்று கொடுத்த சில மெய்யினுடைய நிலைகள் பிற்காலத்தில் அரசர்களிடையே சிக்கப்பட்டு அது மாந்திரீகமாகச் சென்று விட்டது.

அதே போலத்தான் போகர் கொடுத்த ஆற்றலின் தன்மைகளையும் அவர் சொன்ன உண்மைகளையும் வாதங்கள்
1.அதாவது தங்கம் செய்வதற்கும்
2.விஷத்தின் தன்மை கொண்ட போதை மருந்துகளைக் கொடுத்து மயக்க நிலை ஏற்படுத்தினார் என்றும் திரித்து விட்டார்கள்.
3.(போகர் கஞ்சா குடித்தார் என்று சொல்வோரும் உண்டு)

போகர் கொடுத்த தத்துவத்தையே தலை கீழாக மாற்றி அவருடைய உண்மையினுடைய நிலைகளை மக்கள் அறியா வண்ணம் தடுத்து விட்டார்கள்.

போகர் பல ஆற்றல்களைத் தனக்குள் பெற்ற பின்
1.மனித உடல் பெற்ற நிலையில் உடலை விட்டுப் பிரியும் ஒரு உயிராத்மா
2.ஒளிச் சரீரம் பெறுவது எவ்வாறு…? என்று உணர்த்தி இருந்தார்.
3.ஆனாலும் அவர் சொன்னதைத் தன்னுடைய வயிற்றுப் பிழைப்புக்காக வேண்டி வைத்திய ரீதியாக எடுத்துக் கொண்டவர்கள்
4.காயகல்ப சித்தி செய்யாதபடி எவரும் மோட்சம் போக முடியாது என்று விவாதிப்பார்கள்.

தான் கண்டு கொண்ட மருத்துவ நிலையை வெளிப்படுத்திய பின் அதில் ஏதாவது கொஞ்சம் வந்துவிட்டது என்று சொன்னால் இந்த மருந்து அதைச் செய்யும்… இதைச் செய்யும்…! என்றெல்லாம் சொல்வார்கள்.

ஏனென்றால் யாரோ அன்று எழுதி வைத்ததைச் சூட்சமமாகச் செய்த அந்த நிலைகளை கற்பனையைக் கூட்டி அதை இன்றும் வைத்து வாதாடிக் கொண்டு வைத்திய ரீதிகளுக்குப் (உடலுக்குத் தான்) பயன்படுத்துகிறார்கள்.

அன்று போகன் ஒவ்வொரு தாவர சத்தின் தன்மையையும் அதற்குள் இருக்கக் கூடிய சக்தியையும் நுகர்ந்து எடுத்தான். அதைத் தனக்குள் போகித்துக் கொண்டான். அதாவது அந்த ஆற்றலைத் தன் உயிராத்மாவில் சேர்த்துக் கொண்டான்.

1.ஒரு சக்தியை எடுத்தான் என்றால்
2.அந்த ஒரு நாள் முழுவதற்குமே அதைத் தனக்குள் கிரகித்து
3.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் முழுமையாக விளையச் செய்து
4.இப்படித்தான் ஒவ்வொன்றையும் போகன் அறிந்துணர்ந்தான்.

அவன் போகம் செய்தான் என்ற நிலையைப் பிற்காலத்தில் வந்தவர்கள் என்ன சொல்லிவிட்டார்கள்…?

ஒவ்வொரு பெண்ணையும் அவன் காதலித்தான். ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெண்ணைக் காதலித்தான் என்று எழுதி விட்டார்கள். போகன் அறிந்துணர்ந்ததைப் பின்னாடி வந்தவர்கள் அவரை இழி நிலைப்படுத்தி விட்டார்கள்.

அத்தகைய நிலையிலிருந்து போகரைப் புலிப் பாணியார் காப்பாற்றினார் என்றும் சொல்வார்கள்.

புலிப் பாணியாருக்குப் பின் மடாதிபதிகளாக வந்தவர்கள் அவருடைய தத்துவத்தை எடுத்துக் கொண்டவர்கள் அவர் எழுதியதைத் திருத்தி இவர்களுக்குச் சாதகமாக எழுதிக் கொண்டார்கள்.

இன்றும் அதன் வழி கொண்டு
1.உடலைக் காயகல்பமாக்க வேண்டும்
2.அந்தச் சித்து பெறவேண்டும் இந்தச் சித்து பெறவேண்டும் என்று
3.உடலைக் காப்பது பற்றித்தான் அதிகமாகச் சொல்கிறார்களே தவிர
4.விண்ணின் ஆற்றலை எடுத்துத் தன் உயிராத்மாவை ஒளியாக்க வேண்டும் என்று
5.அந்தப் போகமாமகரிஷி சொன்ன நிலையை விட்டு விட்டார்கள்

யாருமே உடலைக் காக்க முடியாது. ஆனால் இந்த உடலில் வாழும் காலத்தில் உடலை ஒரு கருவியாக வைத்து விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களைச் சேர்த்து உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் சென்று
1.என்றும் ஒளியின் சுடராக அழியாத நிலைகள் கொண்டு வாழ்வதே
2.காயகல்ப சித்தி என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நம்மைக் கேலியாகக் கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தால் தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

Protecting scolding and curse

நம்மைக் கேலியாகக் கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தால் தடுக்க என்ன செய்ய வேண்டும்…? 

எமக்கு (ஞானகுரு) வேண்டியது என்ன…? உங்கள் சந்தோஷம் தான் எமக்குத் தேவை. அதை விட்டு விட்டு என்னைப் புகழ வேண்டும் என்று என்னை நினைத்துக் கொண்டு வந்தீர்கள் என்றால் எல்லாம் போய்விட்டது.

தொழில் செய்தேன். நல்லதாக இருந்தது. சந்தோஷமாக இருக்கின்றேன். அந்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்குச் சொன்னேன். அவர்களுக்கும் நல்லதாக ஆனது என்ற இந்தச் சந்தோஷத்தைத் தான் யாம் விரும்புகின்றோம்.

சாமி…! உங்களை அப்படிப் பேசிக் கொள்கிறார்கள்… இப்படிப் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள்… ஒரு நான்கு ஐந்து பேர் உங்களைக் குறையாகப் பேசுகிறார்கள். அதில் ஒருவன் அயோக்கியத்தனம் செய்து கொண்டே இருக்கின்றான்… நீங்களும் பாருங்களேன்…! என்பார்கள்.

அதாவது என்னைப் போற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு எம்மைப் பற்றி (ஞானகுரு) “சுருக்…!” என்று யாராவது குறையாகச் சொன்னால் போதும்.

உடனே இவர்கள் சண்டைக்குப் போய்விடுவார்கள். அவர்கள் சொல்வதற்கு ஏற்ற மாதிரி இவர்கள் திருப்பிப் பேசுவார்கள். அடுத்து பார்த்தால் அங்கிருந்து நான்கு பதில் இங்கே வரும்.

ஏனென்றால் அவன் தவறு செய்கின்றான் என்றால் அவனைத் திருத்துவதற்கு அதை அடக்கத் தெரியாது. என்னை இங்கே போற்றும் பொழுது மற்றவர் குறை சொன்னால் உடனே ஆத்திரம் தான் வரும். “என்னய்யா சொன்னாய்…? இரு நான் உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்…!” என்பார்.

என்னத்தை நீ பேத்துக்கிறாய்…? உங்கள் சாமி என்ன பெரிய ஆளா…? அவரால் என்ன செய்ய முடியும்…? என்று அவர் சொல்வார்.

கடைசியில் சாமி…! உங்களை இப்படியெல்லாம் அவர் திட்டியதால் என் மனது தாங்க முடியவில்லை. அதனால் நான் அவரை “உதைத்தேன்” என்று சொல்லிக் கொண்டு வருவார்கள்.

யாம் விரும்புவது அதுவல்ல…! தெரிந்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் மற்றவர்கள் அறியாமல் அதைப் பேசுகிறார்கள். அந்த உணர்வு இங்கே வந்து அறியாமலே நம்மை அவர்கள் வழிக்கு இட்டுச் சென்று விடக்கூடாது. அவர்கள் வழிக்கு நாம் போகக்கூடாது. (இது முக்கியம்)

யார் எத்தகைய குறைகளைச் சொன்னாலும் யாம் உபதேச வாயிலாகச் சொன்னபடி ஓ…ம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

மற்றவர்கள் சொல்லும் குறையான உணர்வு உங்களை ஆட்டிப் படைக்காத நிலைக்காக இதைச் செய்யுங்கள்.

ரொம்ப மோசமான ஆளாக இருந்தால் “அவன் செய்வது அவனுக்கே போகட்டும்…! நல்லது செய்யக்கூடிய எண்ணம் அவனுக்குள் வளர்ந்து நிச்சயம் நல்லதைப் பேசக் கூடிய நிலை உனககு வரும்…!” என்று சொல்லிவிடுங்கள்.

உங்களை யாராவது சதா திட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்… இடக்காகப் பேசுகிறார்கள்… உங்களால் தாங்க முடியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். சுருக்கமாக ஒரு வேலையைச் செய்யுங்கள்.

அவர்கள் திட்டுவதை எல்லாம் கேட்டு கொண்டே இருங்கள். சிரித்துக் கொண்டே இருங்கள்.
1.எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
2.எனக்கு ஒன்றும் வேண்டாம். மொத்தமாக நீயே வைத்துக் கொள்.
3.எதை எதையெல்லாம் சொன்னீர்களோ அதையெல்லாம் நீங்களே வைத்து அனுபவித்துக் கொள்ளுங்கள்.
4.அது தான் உங்களுக்கு ரொம்ப நல்லது. அதை நீங்களை வைத்துக் கொண்டு போங்கள்…! என்று சொல்லுங்கள்.

அத்தனையும் என்ன ஆகிப் போகும் தெரியுமா…? அவர்கள் உணர்வு அவர்களிடம் திருப்பினவுடனே எப்படி இருக்கும்…! உங்களுக்கு ஆத்திரம் வருமோ…? இந்த மருந்தை மட்டும் சுத்தமாக வைததுக் கொள்ளுங்கள்.

அதாவது நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றால் அவர்கள் சொல்லை அவர்கள் பக்கமே திருப்பியவுடனே அவர்களைப் பார்த்தவுடனே எக்கச்சக்கமாக வரும்.

ஆனால் அவர்கள் நம்மை இப்படிச் சொல்லி விட்டார்களே என்று இந்த எண்ணத்திற்கு வந்தால் நம்மை அது விட்டு வாங்கு வாங்கு என்று வாங்கிவிடும். இரு நான் பார்க்கிறேன் உன்னைச் சும்மா விடமாட்டேன் என்ற ஆத்திரம் தான் வரும்.

ஏனென்றால் நமக்கு எதுவுமே சொந்தமில்லை. நமக்குச் சொந்தமாக்க வேண்டியது என்ன…?
1.இது வரையிலும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதற்காகச் பல நிலைகளைச் சொந்தமாக்கி
2.அதாவது தெரியாமலேயே அவைகளைச் சொந்தமாக்கி நாம் மனிதனாக வந்து விட்டோம்.
3.ஆனால் எல்லாவற்றையுமே தெரிந்து கொள்ள வந்த பிற்பாடு
4.எல்லாவற்றையும் தெரியாமல் ஆக்கிக் கொண்டு போவதற்கு என்ற நிலைக்கு வந்து விட்டோம் என்றால் என்ன ஆவது…?

கோபம் ஆத்திரம் வேதனை வெறுப்பு பயம் இதுகளெல்லாம் அதிகமாக நமக்குள் வந்து விட்டால் அந்த விஷம் பூராத்தையும் நம்மைத் தெரியாமலே ஆக்கிவிடுகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகள் உங்களுக்குள் வராதபடிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆத்ம சுத்தியைப் பயிற்சி செய்து கொள்ளுங்கள்.
1.நீங்களும் உயர்ந்த நிலைகள் பெறுவீர்கள்.
2.உங்கள் சொல் பார்வை மற்றவரையும் உயர்த்தச் செய்யும்.

அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

நம் கடந்த காலத்தையும் இப்போது துன்பப்படுவதையும் ஒருவர் ஜோசியம் சொன்னால் அவர் பெரிய கடவுளாகி விடுகின்றார் – “காசைக் கொடுத்துப் பாவத்தைப் போக்கலாம்…! என்று அவரிடம் சிக்கிக் கொள்கின்றோம்

Image

kovil-temple

நம் கடந்த காலத்தையும் இப்போது துன்பப்படுவதையும் ஒருவர் ஜோசியம் சொன்னால் அவர் பெரிய கடவுளாகி விடுகின்றார் – “காசைக் கொடுத்துப் பாவத்தைப் போக்கலாம்…! என்று அவரிடம் சிக்கிக் கொள்கின்றோம்
ஆலயத்தில் தெய்வக் குணங்களைச் சிலையாக்கி வைரக் கிரீடங்களை வைத்துத் தங்க ஆபரணங்களை அணிந்து மலர் மாலைகளைச் சூடி அதற்கு முன் அமுதுகளை வைக்கின்றார்கள்.

திரையிட்டு மறைக்கின்றார்கள். ஏன்…?

1.நமக்குள் மறைந்துள்ள உணர்வை நாம் அறிந்துணர்ந்து
2.எதனை நாம் கவர வேண்டும்…?
3.எதை நமக்குள் வளர வேண்டும்…? என்ற பொருள் படும்படியாகத்தான்
4.ஞானிகள் ஆலயங்களை அமைத்துள்ளார்கள். ஞானிகள் செய்ததில் தவறில்லை.

ஆனால் ஞானிகள் செய்ததை அஞ்ஞான வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றவர்கள் அதாவது “பொருள் ஆசை கொண்டவர்கள்” தவறான வழியில் நம்மை அழைத்துச் சென்று விட்டனர்.

ஆசையைக் கூட்டி “பொருள் கிடைக்கும்…!” என்ற நிலையில் மாற்றிவிட்டார்கள். இந்தச் சாமியாரிடம் சென்றால் ஆயிரம் ரூபாய் உனக்குக் கிடைக்கும்… ஆண்டவன் அவருக்கு நிறையச் சக்தி கொடுத்துள்ளார்…! என்று கேள்விப்பட்டால் போதும்.

ஆலயத்தில் காட்டிய பண்பினை மறந்து விடுகிறார்கள்.

அந்தத் தெய்வத்தை இவன் கைவல்யப்படுத்தியிருக்கிறான் என்ற நிலையில் (தெய்வ வழிபாடு பெற்று இறந்தவனை மந்திரத்தால் கவர்ந்து வைத்திருப்பதால்) அவன் பெரிய கடவுளாகி விடுகின்றான்.

அவனிடம் சென்றபின்
1.நமக்கு முன்னாடியே பல அதிசயங்களைச் செய்வான்.
2.நாம் நினைத்து வந்ததையும் சொல்வான்.
3.உங்களுக்குத் துன்பம் இருக்கிறது… அந்தத் துன்பத்தை நீக்க வேண்டும் என்றும் சொல்வான். (ஆஹா… அற்புதம்…! அப்படியே சொல்லிவிட்டாரே என்று எண்ணுவீர்கள்)

ஆனால் நம் துன்பத்தை நுகர்ந்தறிந்து அவன் சொன்னாலும் கடைசியில் அவனைத் துன்பத்திலேயே ஆழ்த்தி விடுகின்றது அவன் உயிர். எவன் ஜோசியம் சொல்லி அருளாடுகின்றானோ அவன் குடும்பமே சின்னா பின்னமாகும்.

ஆனால் அது எதனால் என்று அவனுக்குத் தெரியாது. ஏனென்றால் நுகர்ந்தறிந்த மற்றவர்களின் துன்ப உணர்வுகளே அங்கே வளரும். மற்றவர்கள் அவர்களை நாடிச் சென்றால் ஆசையின் உணர்வுகள் தான் அவர்களுக்குள் அதிகமாக விளைகின்றது.

அந்த ஆசையின் உணர்வுகள் கொண்டு செல்லும் பொழுது அதற்குத்தக்க நம்மிடம் அவர்கள்
1.நான் இந்தத் தெய்வத்தைக் கைவல்யம் செய்துள்ளேன்.
2.மந்திரங்கள் ஓதி யாகங்களைச் செய்தால் உங்கள் பாவத்தை எல்லாம் போக்கி விடலாம் என்பார்கள்.
3.வேண்டிய காசை அவர்கள் நம்மிடம் வாங்கிக் கொள்வார்கள்.

இப்படிக் காசைக் கொடுத்துப் பாவத்தைப் போக்கிவிடலாம் என்ற அஞ்ஞான வாழ்க்கையில் தான் நாம் இருக்கின்றோமே தவிர மெய் ஞான வாழ்க்கைக்கு நாம் செல்லவில்லை.

அவன் சொன்ன நிலைகள் கொண்டு அர்ச்சனை அபிஷேகம் செய்தால் ஆண்டவன் காப்பான் என்ற நிலையில் அந்த மந்திரத்தைச் சொல்லி நம் நட்சத்திரத்திற்காக அந்த உணர்வின் ஒலிகளை எழுப்பினால் ஆண்டவனையே நீங்கள் அடையலாம் என்று அஞ்ஞான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்கின்றார்கள்.

காசைக் கொடுத்த பின் அவன் சொல்லும் மந்திரத்தைச் செவி கொண்டு கேட்டோம் என்றால் அதனால் ஆண்டவன் நமக்குச் செய்வான் என்ற எண்ணங்கள் தான் வருகின்றது. ஆனால்
1.அங்கே நாம் நற்குணங்களைப் பெறும் தன்மை தடைப்படுகின்றது.
2.நல் உணர்வுகளை நமக்குள் உருவாக்கும் நிலையும் மறந்து விடுகின்றது.
3.ஆசையைத் தான் வளர்த்துக் கொள்கின்றோம்.

ஆகவே ஆலயப் பண்புகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

விநாயகரை வணங்கும் போது அதை உணர்த்திய அந்தத் துருவ மகரிஷியின் அருள் உணர்வு நாங்கள் பெற வேண்டும் என்று வானை நோக்கி எண்ண வேண்டும்.

நாங்கள் அருள் ஞானம் பெற வேண்டும். இருளை அகற்றும் சக்தி பெற வேண்டும். எங்கள் பார்வையில் தீமைகளை அகற்றும் சக்தி பெற வேண்டும். மலரைப் போல மணம் பெற வேண்டும். மகரிஷியின் அருள் வட்டத்தில் நான் வாழ வேண்டும் என்ற உணர்வை நமக்குள் அணுக்களாக உருவாக்க வேண்டும்.

இப்படி நாம் எண்ணும் பொழுது
1.நாம் எண்ணிய உணர்வுகள் “ஓ…!” பிரணவம். “ம்…!” பிரம்மம்.
2.அதாவது எண்ணியது அனைத்தும் ஜீவன் பெற்று நமக்குள் சிருஷ்டியாகின்றது. உடலுக்குள் உருவாகின்றது.
3.இதைத் தான் ஓ…ம் நமச்சிவாய…! என்று சொல்வது.
4.வெறுமனே ஓ…ம் நமச்சிவாய… என்று சொல்வதால் பலன் இல்லை.

ஆகவே எந்த ஆலயத்திற்குள் சென்றாலும் அங்கே தீப ஆராதனை காட்டும் போது அங்கிருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரிகின்றது. அப்போது நீங்கள் எண்ண வேண்டியது எது…?

பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெற வேண்டும். இந்த ஆலயம் வருவோர் எல்லோரும் பொருளறிந்து செயல்பட வேண்டும் என்று இதை எண்ணினால் ஓ… பிரணவம் ம்… பிரம்மம் ஓ…ம் நமச்சிவாய…!

பொருளறியும் உணர்வை நமக்குள் எடுக்கும் போது பொருளறியச் செய்யும் அந்த உணர்வின் நினைவை ஊட்டும் அணுவின் தன்மை உங்களுக்குள் உருவாகின்றது.

ஏனென்றால் எந்தக் குணத்தின் தன்மை நுகர்கின்றமோ நமது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று நம் உடலாக மாற்றுகிறது. நாம் எண்ணியதைச் சிவமாக்குகின்றது (நம் உடலாக ஆக்குகின்றது)
1.நமது வாழ்க்கையில் எதனின் உணர்வு அதிகமாக எண்ணுகின்றோமோ
2.அது நம் உடலாகச் சதாசிவமாக ஆக்கிக் கொண்டேயுள்ளது.

இப்படி நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் ஓ…! என்று ஜீவ அணுவாக நம் உயிர் மாற்றிக் கொண்டு உள்ளது என்பதைத் தெளிவாக கூறுகிறது நமது சாஸ்திரங்கள்.

சாஸ்திரங்களைக் கொடுத்த அந்த மெய் ஞானிகளின் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

அவர் பித்தனைப் போன்று இருந்தாலும் பல காலம் காடு மேடெல்லாம் என்னை (ஞானகுரு) அலையச் செய்தார். மெய்யை அறியச் செய்தார். அதை அனுபவபூர்வமாக உணரச் செய்தார். மெய் உணர்வுகளை உருவாக்கினார். அந்த மெய் உணர்வின் வழிகளில் தீமையை அகற்றும் வழியையும் எனக்குள் உருவாக்கினார்.

அவர் காட்டிய வழியில் தீமைகளை அகற்றினேன். தீமையை அகற்றும் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட நிலையில் அதை உங்களிடம் இப்பொழுது உபதேசிக்கப்படும் பொழுது உங்கள் செவிப் புலன் வழி இந்த உணர்வை ஊட்டி உங்களை நுகரச் செய்கின்றோம்.

நீங்கள் அதை நுகரும் பொழுது ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று உங்கள் உடலாக மாற்றும் நிலை வருகின்றது. இதனை மீண்டும் நீங்கள் நினைவு கொண்டால் அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளியைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

ஆலயப் பண்புகளை நாம் தெரிந்து கொண்டால் மெய் ஞான வழியில் செல்லலாம். அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மெய் ஞான உணர்வின் தன்மையை நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும்.

பல சக்திகளை யாம் பெற்றிருந்தாலும் நாயின் உணர்வு பயத்தை எப்படி ஊட்டுகின்றது…? நடந்த நிகழ்ச்சி

Image

agathiyam-final

பல சக்திகளை யாம் பெற்றிருந்தாலும் நாயின் உணர்வு பயத்தை எப்படி ஊட்டுகின்றது…? நடந்த நிகழ்ச்சி

 

முந்தி யாம் நாயைப் பார்த்தோம் (ஞானகுரு உபதேசித்த வருடம் 1989) என்றால் என்னை “விரட்டு… விரட்டு…!” என்று விரட்டும். நாயைக் கண்டால் இப்பொழுதும் அந்தப் பயம் எனக்கு இருக்கின்றது.

நாயைக் கண்டவுடனே அந்த அதிர்வான எண்ணங்கள்… “நம்மைக் கடிக்குமோ…?”
1.எவ்வளவு தான் சக்தி எடுத்தாலும் கூட
2.அந்தப் பழைய உணர்வு… எனக்குள் பதிவு செய்தது அப்படி வருகிறது.

ஒரு தடவை மடிச்சேரி என்ற ஊருக்குப் போனோம். அங்கே நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் “எங்கள் வீட்டுக்குச் சாமி நீங்கள் வர வேண்டும்…” என்றார்.

சரி என்று சொல்லிவிட்டு இங்கிருந்து காரில் போனோம். இறங்கும் பொழுது பார்த்தால் ஒரு அல்சேஷன் நாய் அங்கிருந்து வருகிறது. நல்ல உயரமான பெரிய நாயாக இருக்கிறது. மாடு உயரத்தில் முக்கால்வாசி இருக்கும். அவ்வளவு பெரியது.

நன்றாகச் சாப்பாடு போட்டு வளர்த்திருக்கின்றார்கள், இறங்கியவுடனே என்ன செய்து விட்டது…? அங்கிருந்து அப்படியே “ஆ…ஆ…!” என்று வாயைத் திறந்து கொண்டே வந்தது.

ஆக யாரும் இறங்கவில்லை. ஏனென்றால் ஏற்கனவே அங்கே சொல்லி இருக்கிறார்கள்.

இங்கே பக்கத்து வீட்டில் ஒருவன் திருட வந்திருக்கின்றான். இந்தப் பக்கம் வந்து அவன் ஓடியிருக்கிறான். இந்த நாய் எப்பொழுதுமே வெளியில் (PUBLIC) அப்படியே இருப்பதால் ஓடி வந்து அவனைக் கந்து கந்தாகப் பிய்த்து எறிந்துவிட்டது.

இந்த விஷயத்தை ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள் அல்லவா…! நாயைப் பார்த்ததும் அப்புறம் எந்த நினைவு வரும்…? நாய் மோப்பம் பிடித்துக் கொண்டு காரைச் சுற்றிச் சுற்றி வருகின்றது.

டிரைவர் இறங்க மாட்டேன் என்கிறார். நான் இறங்குகிறேன் என்று சொன்னேன். இது வேறு வம்பு சாமி… “நீங்கள் இறங்க வேண்டாம்…!” என்று அவர் இரண்டு தடவை அழுத்திச் சொன்னவுடனே எமக்குப் பயம் வந்து விட்டது. சரி பார்த்துக் கொள்ளலாம் என்று.

உள்ளே இருந்து ஒரு சிட்டான் (சிறு பையன்) வருகின்றான். ஏ…! பேசாமல் இரு…! என்று அந்த நாயிடம் சொல்கிறான்.

நீங்கள் சும்மா கதவைத் திறந்து வாருங்கள்… என்று சொன்ன பின்னாடி அங்கிருந்து இறங்கிப் போனோம்.

அவன் சொல்லி விட்டு போய்விட்டான் அல்லவா. நாங்கள் முன்னாடி போனோம். நாய் பின்னால் வந்து கொண்டே இருக்கின்றது. ஒன்றும் செய்யவில்லை.

உள்ளே போய் அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றோம். எங்களுக்கு முன்னாடி உட்கார்ந்து கொண்டது. பேசாமல் படுத்துக் கிடக்கிறது. ரொம்ப அமைதியாக இருக்கிறது. வீட்டிலுள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கேட்கின்றது.

அவர்கள் முதலில் அந்த நாயைப் பற்றிச் சொன்ன நிலையில் அந்த இடத்திற்கு நான் போனதும் அந்தப் பயம் வந்து விட்டது என்று சொல்ல வருகிறேன். வேறு ஒன்றும் இல்லை.

சாமி எவ்வளவு தான் சக்தி பெற்றிருந்தாலும் கூட இந்த நிலை.

ஏனென்றால் குருநாதர் ஏற்கனவே மந்திர வித்தைகளைப் பற்றி எல்லாம் அனுபவம் கொடுத்திருக்கின்றார். அதை உபயோகப்படுத்தினால் நீ எந்த நிலை அடைவாய்… தெரியுமா…! என்று சொல்லியிருக்கின்றார்.

அதனால் இப்படிச் செய்தாலும் தவறு. இப்படி வந்தாலும் தப்பு. எதிலே போய் தப்புவது…? இப்படித் தான் பல நிலைகளில் இருந்து
1.ஒவ்வொன்றையும் அணு அணுவாகக் கொண்டு வந்து
2.பல அனுபவங்களைப் பெறச் செய்து
3.அந்த மெய் ஞானத்தின் ஆற்றலை எம்மைப் பெறச் செய்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

ஒளிச் சரீரம் பெற்ற பின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்…?

Image

Astral souls life

ஒளிச் சரீரம் பெற்ற பின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்…?

 

மனிதன் ஆன பின் உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்று ஒளியின் சரீரமாக நாம் வாழலாம்.

1.இப்பொழுது எப்படி மூச்சலைகள் விடும் பொழுது உயிரணுக்களைத் தோற்றுவிக்கின்றதோ
2.மனித உடலுக்குள் இருந்து நாம் எதையெல்லாம் எண்ணி மகிழ்கின்றோமோ
3.அதைப் போல விண்ணில் ஒளிச் சரீரம் ஆனபின் அந்த ஒளிச் சரீரத்திற்குள் நின்று சிவசக்தியின் சொரூபம் பெறலாம்.

இன்று கணவன் மனைவி இரு சரீரமாக இருந்தாலும் அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி ஒளி சக்தியினுடைய நிலைகளைத் தனக்குள் அது சிவசக்தியாகக் கூட்டப்படும் பொழுது
1.இரு சரீரம் ஒன்றாகச் சேர்த்து ஒரு கூடான நிலைகள் கொண்டு
2.ஒரே ஒளியின் சரீரமாக ஆக முடியும்.

அத்தகைய நிலை பெற்று விட்டால் விண்ணிலே வரக்கூடிய ஆற்றலின் தன்மையை அணுக்களாக மாற்றி அதனின் சத்தைத் தனக்குள் வடித்து அந்த மகிழ்ச்சியான உணர்வுகளை நாம் மூச்சலைகளாக விடும் பொழுது மற்ற மண்டலங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுடன் கலந்து விண்ணிலே பல மாற்றங்கள் ஏற்படுவதற்கும் அது காரணமாகின்றது.

மனித நிலையிலிருந்து கணவன் மனைவியாக ஒளிச் சரீரம் ஆகிவிட்டால் அது என்றுமே அழிவதில்லை. அது பெரு வீடு பெரு நிலை. மரணமில்லாப் பெரு வாழ்வு என்பதும் அது தான்…!

அந்த ஒளிச் சரீரத்திற்குள் நின்று அதிலேயும் வடித்துக் கட்டிப் பல ஆயிரம் ஆண்டுகள் ஆன பின் ஒளியாக மின்னும் வைரக் கற்களாக மாற்றுகின்றது.

பெரு வீடான நிலையான நிலை கொண்டு அதிலேயும் சிறுத்து அந்த உணர்வின் தன்மை அவ்வாறு வளர்ச்சி அடைந்து கொண்டே போகின்றது. வளர்ச்சி என்ற நிலையில் அடையக் கூடிய அந்தத் தன்மைகளை மேலும் மேலும் விவரித்துக் கொண்டே போக வேண்டியதில்லை.

ஆகவே இந்த விஞ்ஞான உலகத்தில் வாழும் நீங்கள் அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் இந்த மனித உடலைப் பெற்ற நிலையில் அழியா ஒளிச் சரீரம் பெற்று விண்ணுலகம் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுங்கள்.

ஆதிசங்கரர் யாகங்களையும் வேள்விகளையும் பற்றித் தெளிவாக உணர்த்தியது என்ன…?

sri-adi-shankarar

ஆதிசங்கரர் யாகங்களையும் வேள்விகளையும் பற்றித் தெளிவாக உணர்த்தியது என்ன…?

மசூதிகளுக்கு ஒரு நல்லவருடைய பேரை வைத்து இன்னார் இன்ன மசூதி என்று வைக்கின்றார்கள். சர்ச்சுகளை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு சர்ச்சிற்கும் ஒவ்வொரு பேரை வைக்கின்றார்கள்.

ஒவ்வொரு கோயிலுக்கு நாம் ஒரு பெயரை வைப்பது போன்று ஒவ்வொரு குணத்திற்குத் தக்கவாறு சர்ச்சுகளிலேயும் மசூதிகளிலும் பெயரை வைக்கின்றார்கள்.

அன்று ஞானிகள் வகுத்துக் கொடுத்த நிலைகள் வேறு. ஆனால் ஞானிகள் காட்டிய நிலைகளை அவர்களுக்கு மாறான நிலைகளில் அரசர்கள் தனக்குச் சாதகப்படுத்திக் கொண்டார்கள். அரசர்கள் எதைச் சாங்கிய சாஸ்திரங்களாக உருவாக்கினார்களோ அதைத்தான் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றோம்.

எந்தக் கோயிலை எடுத்துக் கொண்டாலும் கண ஹோமம் செய்ய வேண்டும் என்ற நிலைகளில் பல பொருள்களை நெருப்பிலிட்டுப் அதை ஆவியாக மாற்றப்பட்டு மந்திரங்களைச் சொல்வார்கள்.

யாகங்கள் செய்தால் நோய்கள் போகும்… என்றும் ஆயுள் ஹோமம் செய்தால் உனக்கு ஆயுள் கூடும்… என்றும் இப்படித் தவறான நிலைகள் கொண்டு செயல்படுத்தி விட்டார்கள்.

யாருக்குமே… ஆயுள்…
1.இந்த உடலுக்கு ஆயுளா…?
2.இந்த உணர்வுக்கு ஆயுளா…?
3.நம் உயிரின் தன்மையே நீடித்த ஆயுள்…!
4.ஆனால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அதற்குத்தக்க உடலின் உறுப்பின் செயல்கள் ஆகின்றன.

காசைக் கொடுத்து அடுத்தவர்களை வைத்து யாகத்தை வளர்க்கின்றோம். எல்லாம் செய்த பின் நான் யாகத்தைச் செய்து விட்டேன் இதனால் எனக்கு நல்லதாகும் என்றால் ஒன்றும் கிடைக்காது. ஏனென்றால் அப்படி ஒரு எண்ணத்தை நமக்குள் ஆசையாக ஊட்டி விட்டார்கள்.

துன்பத்தைப் போக்குவதற்காக வேண்டிச் செல்வத்தைச் செலவழித்து யாகத் தீயிலே பல பொருளைப் போட்டு எரிப்பதால் எந்தச் சக்தியும் வருவதில்லை என்ற இந்த நிலையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதிசங்கரர் தெளிவாகக் காட்டினார்.

ஆண்டவன் தனித்து இயங்குகின்றான். ஒவ்வொரு தெய்வமும் தனித்து இயங்குகின்றது. வேள்விகள் செய்து அதை நிறைவேற்றினால் தான் உனக்கு நல்லது நடக்கும் என்று காசி கங்கைக் கரையில் அன்று துவைதவாதிகளுக்கும் ஆதிசங்கரருக்கும் சர்ச்சையாகி வாதிட்டுக் கொள்கிறார்கள்.

கடைசியில் அந்தத் துவைதவாதிகள் ஆதிசங்கரருக்கு ஏவல் செய்து வயிற்று வலியை வர வைத்து விட்டார்கள். வயிற்று வலியை நிவர்த்திக்க வேண்டும் என்றால் இந்த யாகத்தை நீ செய்து தான் ஆக வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள்.

அப்போது ஆதிசங்கரர்
1.ஒவ்வொரு நிமிடமும் தனக்குள் இருக்கக்கூடிய ஈசனை எண்ணி
2.அந்தச் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளி வரக்கூடிய மெய் ஒளியைச் சுவாசித்து
3.இவர்கள் செய்த தீய வினையின் நிலையே அந்த ஏவலை மாய்த்துத் தன் வயிற்று வலியை நீக்கிக் காட்டினார்.
4.இப்படித் தெளிவுபடுத்திக் காட்டியபின் தான் அங்கே போர்க்களமாக மாறுகின்றது.

ஏனென்றால் அன்றைய அரசர்கள் தன் அரசை நிலை நாட்டுவதற்காகப் பக்தியின் மார்க்கங்களிலே மதத்தை அடிப்படையாக வைத்து அவர்கள் யாகங்களையும் வேள்விகளையும் செய்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் அப்படி இல்லாமல் உயிரான ஈசனை எண்ணி மெய் ஒளியை ஒவ்வொருவரும் ஏங்கிப் பெறும் நிலை வந்துவிட்டால் அரசனை யாரும் மதிக்க மாட்டார்கள்.

மனிதன் அவன் ஞானியானாலும் அரசர் காலங்களில் இத்தகைய பேருண்மைகளைச் சொன்னால் அவன் தலை நிற்காது. ஏற்கும் நிலை இருக்காது. அதை வெளிப்படுத்தாத வண்ணம் தடுத்து விடுவார்கள்.

அதைப் போன்ற நிலையில் தான் எதிர்ப்பு நிலையாகி காசியில் கங்கைக் கரைக்குப் பின் ஆதிசங்கரர் என்ன ஆனார்…? என்றே தெரியாது. இங்கே கேரளாவில் காலடியிலே இருக்கிறார்.

ஆதிசங்கரர் சிலையை வைத்து அதன் வழிகளிலே இன்று வந்த பீடாதிபதிகள் பலர். அன்று ஆதிசங்கரர் சொன்னது…
1.உன் எண்ணத்திலே சூட்சம நிலைகள் அனைத்தும் இருக்கின்றது
2.அந்தச் சக்தியின் சொரூபத்தை நீ சுவாசித்து உன் உடலுக்குள் நல்லதை உருவாக்கு…! என்று தான் சொன்னார்.

ஐகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்திதே…!
மனித உடலுக்குள் ஆயிரத்தெட்டு குணங்கள் உண்டு. அதில் எந்தக் குணத்தின் தன்மை நாம் ஒலிபரப்பு செய்கின்றோமோ அதே குணத்தை எடுக்கப்படும் போது அந்த உணர்வுகள் இங்கே வருகின்றது.

எந்தக் குணத்தின் அடிப்படையில் நாம் ஒலிபரப்பு செய்து பேசியிருக்கின்றோமோ அதே குணத்தை எடுத்துப் பேசும் போது அந்த உணர்வுகள் தான் நமக்குள் வருகின்றது.

ஆக நாம் எந்தக் குணத்தை எடுக்க வேண்டும்…? எந்தக் குணத்தின் அடிப்படையில் பேச வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நிலையாகத்தான் கோவிலில் தெய்வச் சிலையை உருவமாக்கி வைத்துள்ளார்கள் ஞானிகள்.

அந்தத் தெய்வத்தைக் கண் கொண்டு பார்த்த பின்
1.இந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்
2.இதை அருளிய அந்த மகரிஷியின் அருள்சக்தி் நாங்கள் பெற வேண்டும் என்ற
3.அந்த உணர்வின் தன்மை சுவாசிப்பதற்கு அன்று மெய் ஞானிகள் கொடுத்தனர்.

மகரிஷிகள் தங்கள் உடலிலே வந்த தீமைகள் அனைத்தையும் மாய்த்துத் தங்கள் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி விண் சென்றவர்கள். துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் இருக்கின்றார்கள்.

ஆகவே தியானம் எடுத்துக் கொண்டவர்கள் நீங்கள் தியானிக்க வேண்டியது எது…? எந்தக் கோயிலுக்குச் சென்றாலும்
1.அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்
2.அந்தத் தெய்வ குணத்தை நமக்கு உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்.
3.இது எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் ஈஸ்வரா என்று கண்களை மூடி உடலுக்குள் செலுத்த வேண்டும்

வாழ்க்கையில் சந்திக்கும் எத்தகைய சம்பவங்களாக இருந்தாலும் அதைப் பார்த்த அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உடலுக்குள் செலுத்தும் போது பயமோ ஆத்திரமோ கோபமோ வேதனையோ போன்ற உணர்வுகள் இயங்காத வண்ணம் தடைப்படுத்தி உடலுக்குள் தீமைகள் உருவாகாதபடி அதைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றோம்.

ஆலயத்தின் பண்புகளே அது தான்…!

இன்று பல அதிசயக்கத்தக்க எலெக்ட்ரானிக் (ELECTRONIC) சாதனங்களை உருவாக்குகின்றார்கள்… அது எப்படி…? கம்ப்யூட்டருக்குள் இயங்கும் அந்த சிலிகன் (SILICON – மனித மூளை) என்பது என்ன…?

Image

Silicon valley

இன்று பல அதிசயக்கத்தக்க எலெக்ட்ரானிக் (ELECTRONIC) சாதனங்களை உருவாக்குகின்றார்கள்… அது எப்படி…? கம்ப்யூட்டருக்குள் இயங்கும் அந்த சிலிகன் (SILICON – மனித மூளை) என்பது என்ன…?

 

இன்று விஞ்ஞானிகள் விஞ்ஞான அறிவின் தன்மை கொண்டு உலகம் முழுவதற்கும் பரப்புகிறார்கள். நீங்கள் அனைவரும் மந்திரம் என்றால் என்ன,,,? விஞ்ஞானம் என்றால் என்ன…? என்பதை அவசியம் தெரிந்து கொள்வது நல்லது.

விஞ்ஞானத்தில் எத்தனையோ நிலைகள் இருந்தாலும் ரேடியோ TV, போன்ற சில அலை வரிசைகளில்
1.அவர்கள் வெளியிட்ட கெமிக்கல் கலந்த உணர்வை நமக்குள் கவரும்படி செய்து
2.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய காந்த செல்களில் இந்த உணர்வுடன் கலந்து விடுகின்றார்கள்.

நாம் பாடக்கூடிய பாடல்களை டேப் எடுத்து (பதிவு செய்து) அதை மீண்டும் இயந்திரத்திலே புகுத்தி பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் வெப்ப காந்த அலைகளுடன் இந்த அலைகளை (ELECTROMAGNETIC WAVES) அதனுடன் பரப்புகின்றார்கள்.

நம் மனித உடல் – கெமிக்கல் கலந்த இந்த உணர்வின் ஆற்றலை மீண்டும் இயந்திரத்திலே புகுத்தி அதை அலைகளாகக் காற்றிலே படரச் செய்யும் பொழுது நாம் மீண்டும் TV, ரேடியோ மூலம் அதைப் பார்த்துக் கேட்டுணருகின்றோம்.

அந்த உணர்வின் ஒலிகள்
1.நம் செவிப் புலனறிவாலே ஈர்க்கப்பட்டு நம் உடலிலே சேர்க்கப்படுகின்றது
2.அடுத்து அந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது
3.கெமிக்கல் கலந்த உணர்வின் தன்மை உமிழ் நீராகச் சுரக்கின்றது.

இதைப் போன்று நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உணர்வின் தன்மையும் எதிலே எண்ணங்களைச் செலுத்தினோமோ இதிலே சேர்த்து விடுகின்றது.
1.அப்படிச் சேர்த்துக் கொண்டு நாம் விடும் மூச்சலைகள்
2.இன்று கம்ப்யூட்டர் என்ற நிலைகளுக்குப் பயன்படுத்துவதற்கு முடிகின்றது.

சிலிகனுடைய (SILICON) நிலைகளை விஞ்ஞானிகள் செயல்படுத்தினார்கள் என்றால் இன்ன அலை வரிசையில் வைத்து இன்னதுதான் என்று செய்யப்படும் பொழுது அதற்குண்டான இயந்திரத்திலே புகுத்திவிடுகின்றனர்.

நாம் எப்படி டேப்பில் பதிவு செய்கின்றோமோ அதைப் போன்று இந்த உணர்வைச் செயல்படுத்தி இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது
1.மனித உடல்களில் விளைய வைத்து வெளிப்படுத்தும் மூச்சலைகள்தான்
2.சிலிகன்களாக வந்து கம்ப்யூட்டர் அலை வரிசைகளுக்குக் கிடைக்கின்றது.
3.இதைத்தான் “மனித மூளை” என்று இவர்கள் சொல்வார்கள்.

இயந்திரத்தால் கலக்கப்பட்ட உணர்வுகள் மனித உடலின் உணர்வுக்குள் கலக்கப்பட்டு அது வெளிப்படும் பொழுது இதே முறைப்படி விஞ்ஞானத்திலே காணும் பொழுது இதைப் போன்ற நிலைகள் அவனுக்குள் சிக்குகின்றது.

அவனுடைய சந்தர்ப்பத்தில் சிக்கப்படும் பொழுது அந்த உணர்வின் நிலைகள் வருகின்றது. ஆனால் இது அவனுக்குள் எப்படிச் சிக்குகின்றது…?

ஒரு விஞ்ஞானி விஞ்ஞானத்தின் அறிவு கொண்டு தன் எண்ணங்களைச் செலுத்திக் கொண்டேயிருக்கின்றான். இந்த விஞ்ஞான அறிவைத் தனக்குள் செலுத்தி இந்த உணர்வின் தன்மை இவனுக்குள் வரும் பொழுது இதே உணர்வாலே ஒரு நாள் விஞ்ஞானி இறந்து விடுகின்றான்.

அப்படி இறந்துவிட்டால் அதே விஞ்ஞான நிலைகள் கொண்டு ஒருவன் செயல்படும் பொழுது
1.இந்த உணர்வின் ஆற்றல் இவனுக்குள் செருகப்பட்டு
2.எந்த விஞ்ஞானியின் உடலிலே சேர்ந்ததோ அதே உணர்வின் அலைகள் இவனுக்குள் வருகின்றது.
3.அவன் எந்த விஞ்ஞான அறிவின் செயலிலே வந்தானோ அந்த உணர்வின் தன்மை இவனுக்குள் வரப்படும் பொழுது
4.முதல் விஞ்ஞானி கண்டதைக் காட்டிலும் ஒரு நுண்ணிய அறிவின் தன்மை
5.இவனிடத்தில் இவனையறியாமல் ஒரு அதிசய நிலைகள் வரும்.

சாதாரணமாக ஒரு மனிதன் ஆற்றல்மிக்க ஒரு செயலை எண்ணி விட்டால் அந்த உணர்வின் தன்மை இவன் உடலுக்குள் ஏவிய உடன் பல அற்புத நிலைகள் செய்வதைப் பார்க்கலாம். பல மந்திர எந்திர ஜாலங்கள் செய்வதைப் பார்க்கலாம்.

ஒரு சந்தர்ப்பத்தில் பயத்திலே ஒரு உடலுக்குள் ஏவிவிட்டால் இவனையறியாமல் பல அதிசயங்களைச் செய்யும் சில உணர்வுகள் வருவதைப் பார்க்கலாம். (அதை நாம் அமானுஷ்ய சக்தி என்போம்)

இதைப் போன்றுதான் விஞ்ஞான அறிவு கொண்டு உணர்வின் தன்மை செயல்படுத்தும் பொழுது ஏற்கனவே இறந்த விஞ்ஞானியின் தன்மை இவன் உடலுக்குள் வந்துவிடுகின்றது.
1.அவ்வாறு வந்த உணர்வின் தன்மை இவனுக்குள் செயல்படும் பொழுது
2.இவனை அறியாமலேயே நுண்ணிய அலைகள் இவனுக்குள் தெரியும்.
3.ஆஹா…! நான் கண்டுபிடித்து விட்டேன்…! என்பான்.

அப்பொழுது இந்த இயந்திரத்தின் துணை கொண்டு சிக்கப்படும் பொழுது இவனுடைய உணர்வும் அவனுக்குள் கலக்கின்றது. இந்தக் காந்த அலைகளுக்குள் ஓரு கெமிக்கல் கலந்த உணர்வின் தன்மையை இவன் இயந்திரத்திலே உருவாக்கப்படும் பொழுது அதை எடுத்துப் பதிவாக்கி இவனின் உணர்வின் அலையைக் காற்றிலிருந்து எடுக்கும் நிலை வருகின்றது.

1.எப்பொருளின் தன்மை கொண்டு இவன் கலவை செய்கின்றானோ
2அந்தக் கலவைக்குள் மற்றொன்றின் நிலைகளை அதன் நுண்ணிய அலைகளை அறிய முடிகின்றது.
3.அவ்வாறு அறிந்த நிலைகளைக் கொண்டுதான் புதிது புதிதாகக் காணுகின்றான் இன்றைய விஞ்ஞானி.

ஆனாலும் இந்தக் கெமிக்கல் கலந்த உணர்வுகளைச் சுவாசித்து நம் உடலுக்குள் விளைய வைத்துக் கொண்டால் மனிதனுடைய இயற்கையான உணர்வின் இயக்கங்கள் மாறி இயந்திர மனிதனாகத்தான் இருப்பான்.

அத்தகைய இயந்திர மனிதனாக வாழ்வதால் நம் உயிராத்மாவிற்கு எந்தப் பலனும் இல்லை. விண்ணுலகம் செல்ல முடியாது. மறுபடியும் விஷமான உயிரினங்களாகத் தான் பிறக்க நேரும்.

ஏனென்றால் நம் பூமியில் இருக்கும் விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டிலும் பல மடங்கு வளர்ச்சி அடைந்த இருந்த மனிதர்கள் வியாழன் கோளில் வாழ்ந்து அங்கே கடைசியில் மனிதர்கள் வாழ முடியாத விஷத் தன்மைகளாகி இன்று அது முழுவதுமே பனிப் பாறைகளாக ஆகி விட்டது.

இப்பொழுது நாம் விஞ்ஞான வளர்ச்சி என்று பெருமைப்படும் நிலைகளின் கடைசி முடிவு அது தான். இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாதத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்றவன்… நாதத்தைத் தன்னுள் அடக்கியவன்… சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவன் “சப்தரிஷி…!”

Image

Ursa-Major-Sapdharishi Mandalam

நாதத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்றவன்… நாதத்தைத் தன்னுள் அடக்கியவன்… சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவன் “சப்தரிஷி…!”

 

சூரியனிலிருந்து வரக்கூடிய கலர்கள் ஆறு. ஒளி ஏழு. அதைப்போல் மனிதனுடைய அறிவு ஆறு ஏழாவது ஒளி அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை.

1.நாதத்தை உருவாக்கி…
2.நாதத்தை உள்ளடக்கி…
3.உணர்வின் தன்மைகள் அனைத்தையும் அடக்கி…
4.உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாகச் சென்றவன் “சப்தரிஷி…!”
5.எந்த உணர்வின் தன்மை இதிலே பட்டாலும் அதைத் தன் நாதத்தின் சுருதி கொண்டு அது இயக்கவல்ல சக்தி பெற்றது.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தன் உணர்வின் தன்மையை ஏழாவது ஒளியாக மாற்றி அவ்வாறு விண் சென்றவர்களைத்தான் “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்…!” என்று புராணங்களிலேயும் காவியங்களிலேயும் காட்டியுள்ளார்கள்.

நம் பூமியிலே தோன்றிய மனிதர்கள் உயிராத்மாவை ஒளியாக மாற்றி எண்ணிலடங்காத நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலத்துடன் ஒரு பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வரக்கூடிய ஒரு அணுவின் தன்மையை ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமானப் புத்திரன் என்று காட்டுகின்றார்கள்.

சூரியன் தன் ஒளிக்கதிர் கொண்டு வெப்பத்தால் அது மற்ற நிலைகள் உருவாக்குகின்றது. ஆனால் சப்தரிஷி மண்டலங்கள் தனக்குள் வெப்பம் இல்லாத நிலையில் அது குளிர்ச்சியான நிலைகள் கொண்டு இயங்குவது.

சப்தரிஷி மண்டலம் விண்ணிலே தோன்றும் உணர்வின் தன்மையைத் தனக்குள் வெப்பமற்ற நிலைகள் கொண்டு உணர்வால் அது சிருஷ்டிக்கப்பட்டு ஒளிப் பிளம்புகளாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

விண்ணின் ஆற்றலைத் தனக்குள் உணவாக எடுத்துப் பேரொளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அந்த அணுவின் நிலைகளை நாரதன் என்று காட்டுகிறார்கள்.

1.நாரதன் வீணையின் சுருதி ஏழு.
2.அவன் வாசிக்கும் நிலைகள் கொண்டு
3.அந்த அணுவின் இயக்கமாக மற்றதுக்குள் இயக்கப்பட்டு
4.அதனின் செயலாக நாரதன் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள்.

சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு வெளிவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்களை நாம் சுவாசிக்கும் போது இந்த மனித வாழ்க்கையிலே நம்மை அறியாமல் இயக்கும் பிறிதொரு கோபமோ வெறுப்போ வேதனையோ இதைப் போன்ற உணர்வுகள் அதனுடைய வழிக்கு நம்மை இட்டுச் செல்லாதபடி மெய் ஒளியின் தன்மையை நாம் பெறுகின்றோம்.

ஒளியின் தன்மை பெற்று அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைவது தான் நமது எல்லை.