இரயிலில் செல்லும் பொழுது இரக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நடந்த நிகழ்ச்சி

divine-strength

இரயிலில் செல்லும் பொழுது இரக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நடந்த நிகழ்ச்சி 

ஒரு முறை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடன் யாம் (ஞானகுரு) சென்னையிலிருந்து மும்பைக்கு இரயிலில் சென்று கொண்டிருந்தோம்.

அப்பொழுது இரயிலில் ஒரு நோய்வாய்ப்பட்ட பெண்மணியை அவர்களுடைய உறவினர்கள் வேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து மும்பைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

நோய்வாய்ப்பட்ட பெண்மணி வேதனை தாளாமல், உறவினர்களிடம் “தண்ணீர் கொடு… அது கொடு… இது கொடு…” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஆனால் உறவினர்களோ மருத்துவர் சொன்னபடி “உணவோ… தண்ணீரோ.. ஒரு அளவிற்கு மேல் கொடுக்கக் கூடாது…!” என்பதைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நோய்வாய்ப்பட்ட பெண்மணியோ “அடப்பாவிகளா…! எனக்கு நாக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றது உண்ணுவதற்கு எதுவும் கொடுக்கமாட்டீர்களா…?” என்று சாபமிட்டுக் கொண்டிருந்தார்.

உறவினர்கள் நோயாளியைப் பார்த்து… “நீ… சும்மா இருக்க மாட்டாயா…!” என்று மிரட்டுகிறார்கள்.

ஆனால் அருகிலிருக்கும் மற்றவர்கள் நோயான பெண்மணியைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும் அம்மா…!” என்று இரக்கமாகக் கேட்டார்கள்.

அதைக் கேட்ட உறவினர்கள் “ஏனய்யா… அவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா…? நீ ஏன் கேட்கிறாய்…?” என்று சொல்கிறார்கள்.

நோயான பெண்மணி…, “பார்…! உதவி செய்ய வருபவர்களைக் கூட இப்படித் திட்டுகிறார்களே…” என்று எண்ணுகின்றார்.

1.”சந்தர்ப்பம்” – இது போன்ற உணர்வுகளை நுகரும் பொழுது
2.உயிர் அதை ஜீவ அணுவாக அவர்களுக்குள் உருவாக்குகின்றது என்று
3.குருநாதர் இதை எனக்குக் காண்பித்தார்.

ஆனால் அங்கு உள்ள யாரும் தவறு செய்யவில்லை.

மருத்துவர்கள் கூறிய அறிவுரையை உறவினர்கள் கடைப்பிடிக்கிறார்கள். எதற்காக…? நோயான பெண்மணியைக் காப்பாற்ற வேண்டும் என்று…!

ஆனால் நோயான பெண்மணியோ “இப்படி அவஸ்தைப்படுகிறேனே… கேட்டதைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே… கொஞ்சம் கூட இரக்கம் இல்லையே…!” என்று சொல்கிறார்.

இதைக் கேட்டவுடனே உறவினர்கள் வேகம் கொண்டு “நீ பேசாமல் இரு…!” என்கிறார்கள்.

அப்பொழுது “நாம் இவர்களுக்கு எத்தனை உதவிகள் செய்திருப்போம்…? என்னுடைய நோயின் தன்மை தெரியாமல் இப்படி சீறிப் பாய்கிறார்களே… வேதனைப்படுத்துகிறார்களே…!” பாவிகள்…! என்று நோயாளியின் உணர்வுகள் மாறுகின்றது.

இதெல்லாம் சந்தர்ப்பங்கள்.

இரயிலை விட்டு இறங்கியவுடன் நோயான பெண்மணியின் வீடு வரை எம்மைச் சென்று வரச் சொல்லிவிட்டு குருநாதர் ஒரு இடத்தில் இருந்துவிட்டார்.

யாம் அவர்களைப் பின் தொடர்ந்து அவர்கள் வீடு வரை சென்றோம். இரண்டு நாள் அங்கே இருந்தோம். மூன்றாம் நாள் நோயான அந்தப் பெண்மணியின் உயிராத்மா பிரிந்தது.

இரயிலில் வரும் பொழுது
1.நோயான பெண்மணிக்காக “யார் பரிந்து பேசினார்களோ…”
2.அவர்களுடைய நினைவு நோயான பெண்மணிக்கு சாகும் தருவாயில் வந்தது
3.“மகராசி எனக்காகப் பரிந்து உதவி செய்தாளே…” என்ற எண்ணம் வந்தது.

உறவினர்களை நினைத்து “என்னுடைய எல்லா சொத்துக்களையும் வைத்துக் கொண்டு துரோகம் செய்தார்களே…” என்று சாபமிட்டது.

இத்தகைய சாப அலைகளை நுகர்ந்த உறவினர் குடும்பத்தில் சாப உணர்வுகள் விளைந்து பெருகி அவர்கள் தொழில் நசுங்கியது. குடும்பத்தில் பல குழப்பங்கள் விளைந்தது.

எம்மை 48 நாட்கள் அந்த வீட்டிற்கு அருகாமையில் இருந்து இதையெல்லாம் பார்க்கும்படி செய்தார் குருநாதர். ஒரு பக்கத்தில் அமர்ந்து இங்கே என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதே சமயத்தில் நோயான பெண்மணிக்காகப் பரிந்து பேசினார்களே அவர்கள் நோயான பெண்மணியின் வீட்டுப் பக்கம் வந்து பார்த்தவுடனே
1.நோயான பெண்மணியின் உயிராத்மா இவருடைய உடலுக்குள் வந்து
2.தான் எப்படியெல்லாம் நோயால் அவஸ்தைப்பட்டதோ
3.அதே வேதனையின் உணர்ச்சிகளை, இவருடைய உடலுக்குள் ஊட்டுகின்றது.

ஆன்மா இன்னொரு உடலுக்குள் செல்கின்றது. இவரை எப்படிச் சிரமப்படுத்துகின்றது என்று குருநாதர் இதையும் பார்க்கச் சொன்னார்.

தொடர்ந்து இவருடைய வீட்டிலும் ஒருவருக்கொருவர் குழப்பமாகி வியாபார மந்தம் தங்களை அறியாமலே குழந்தைகளைச் சீறிப் பேசுவது, தவறான நிலையில் பேசுவது சங்கடங்கள் போன்ற பல இயக்கங்களை அங்கே இருந்து எம்மைக் கண்டுணரும்படி செய்தார்.

இயற்கையின் இயக்கத்தில்
1.சந்தர்ப்பம் மனிதர்களை எப்படிக் குற்றவாளியாக ஆக்குகின்றது?
2.சந்தர்ப்பத்தால் நோய் எப்படி விளைகின்றது? என்பதையெல்லாம்
3.குருநாதர் தெளிவாகக் காண்பித்தார்.

இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்…!

ஆகவே மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றினால் நாம் இன்னொரு உடலுக்குள் செல்ல மாட்டோம். பிறவியில்லா நிலை அடைவோம்.

துன்பத்தைப் போக்கும் முறை

Image

மகரிஷிகளின் அருள் ஒளி

துன்பத்தைப் போக்கும் முறை

ஒரு தேள் கொட்டினால் நாம் என்ன செய்வோம்…! நினைவை இழந்து விடுவோம். அப்பொழுது யார் எதைச் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறோம்.

அதைப் போல ஒருவர் “சுருக்…”கென்று சொல்லி விட்டால் அந்த உணர்ச்சிகள் தூண்டி நம்மை வேதனைப்படச் செய்கின்றது.
1.அந்த வேதனையான உணர்வுகளுடன் நாம் இருக்கும் போது
2.மற்றவர்கள் என்னதான் நல்லதைச் சொன்னாலும்
3.அந்த நல்ல சொல்லை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இதைப் போல சாதாரணமான மனிதர்களுடன் நாம் பேசும் போது வாழ்க்கையின் முறைகளில் விருப்பு வெறுப்பு நமக்குள் தோன்றி அதனாலே நாம் எண்ணிய எண்ணங்களுக்குத் தகுந்த மாதிரி உமிழ் நீராகி நம் இரத்தத்தில் (கருவாகி) வித்தாக மாறி உடலில் வியாதியாக மாறுகிறது.

நாம் ஒரு தடவை சஞ்சலப்படுகிறோம் என்று சொன்னால் அந்தச் சஞ்சலப்படும் எண்ணங்கள் நமக்குள் பதிவாகி இப்படிப் பலவும் சேர்த்து வந்துவிடுகின்றது.

குழம்பை ருசியாகச் செய்ய வேண்டுமென்றால் காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு இவைகளை எல்லாம் கலந்துதான் வைக்கிறோம். அப்பொழுது எல்லாம் சமமாக இருந்தால் குழம்பு ருசியாக இருக்கின்றது.

காரமோ மிளகோ சீரகமோ உப்போ கசப்போ நாம் சேர்க்கும் பொருள்களில் எது அதிகமானாலும் அது தான் முன்னணியில் நிற்கும். அப்பொழுது அது சுவையைக் கெடுத்து விடுகிறது.

வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் அவசரம் ஆத்திரம் பயம் வேதனை இதைப் போன்ற உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்டிருக்கும் போது அதிலே நீங்கள் நினைவைச் செலுத்தியவுடன் வேதனையான எண்ணங்கள் வந்துவிடுகின்றது.

குடும்பத்தில் கஷ்டப்படுகிறோம் என்றால் அந்தக் கஷ்டமான எண்ணத்தை எண்ணி எம்முடைய உபதேசங்களைப் படிக்க நினைத்தாலும், அந்த வேதனையான எண்ணங்கள் நீங்கள் எண்ணியவுடன் உங்கள் உடலைச் சுற்றி அந்த வாசனை இருக்கும்.

உங்கள் கஷ்டத்தைப் போக்குவதற்கு யாம் அந்த நல்ல வாக்குகளை அந்தச் சக்தியை உங்களைக் கேட்கச் செய்து அந்த உணர்ச்சிகளை உங்கள் உடலிலே படரச் செய்து அந்த ஞானிகளின் சக்தி உங்கள் உடலுக்குள்ளும் உமிழ் நீராகச் சேர்க்கச் செய்வதற்கு யாம் முயற்சி எடுக்கின்றோம்.

அப்படி எடுத்தாலும் கூட நீங்கள் வேதனையாக இருக்கக்கூடிய எண்ணம் யாம் சொல்லக்கூடிய வாக்கை உங்களால் ஈர்க்க முடிவதில்லை.

நீங்கள் நல்லதைப் பெற வேண்டும் என்று வந்தாலும் கூட முடிவதில்லை. சிலபேர் அந்த வேதனை கலந்து இப்படியெல்லாம் இருக்கிறதே என்று வேதனையைத்தான் முன்னாடி கொண்டு வருகிறார்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.
2.இனி நமக்குக் கஷ்டமில்லை.
3.என் துன்பத்தைப் போக்கி நான் நன்றாக இருப்பேன் என்ற நினைவுடன் நீங்கள் இருந்தீர்களானால்
யாம் கொடுக்கக்கூடிய வாக்கு உங்கள் உடலிலே நல்ல முறையில் பதிவாகி உங்கள் துன்பத்தைப் போக்க உதவும்.

இது பழக்கத்திற்கு வர வேண்டும். பெரும் பகுதியானவர்கள் அவர்கள் கஷ்ட நஷ்டங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள்.
1.இதையெல்லாம் செய்தேன் இந்த மாதிரி நஷ்டமாகிவிட்டது
2.நான் எதைச் செய்தாலும் எனக்கு நஷ்டமாகவே ஆகிக் கொண்டிருக்கிறது.
3.எங்கே பார்த்தாலும் தொல்லை தீரவே மாட்டேன் என்கிறது என்று
4.இந்த முடிவிலேயே நின்று கொண்டு
5.அதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

அந்த மாதிரிச் சொல்லாதபடி கஷ்ட நஷ்டங்கள் எது வந்தாலும் அதை நீங்கள் அனுபவித்து வந்தாலும் கூட இங்கே வந்தவுடன்…
1.இந்த மாதிரி ஆகிவிட்டது…!
2.இனிமேல் இதிலிருந்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளாலே மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் செயல் எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும்
4.எங்கள் உடலில் இருக்கக்கூடிய பிணி நீங்க வேண்டும்.
5.நாங்கள் வியாபாரம் செய்யும் போது என்னிடம் சரக்கு வாங்கிச் செல்பவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.
6.அவர்கள் அனைவரும் வளமாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இந்த முறைப்படி செய்தால் உங்கள் துன்பங்கள் அகலும் என்று உறுதியாகச் சொல்கிறோம்…!

அன்றைய சித்தர்கள் மற்றவர்கள் துன்பங்களையோ நோய்களையோ நீக்கக் காசோ பணமோ வாங்கவில்லை…! ஏன்…?

murugan, Bogar

அன்றைய சித்தர்கள் மற்றவர்கள் துன்பங்களையோ நோய்களையோ நீக்கக் காசோ பணமோ வாங்கவில்லை…! ஏன்…?

ஆரம்பத்தில் ஒன்றுமே தெரியாத குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு போனோம் என்றால் அந்தக் குழந்தைக்கு தமிழ் பாஷையைத் தவிர வேற எதுவும் தெரியாது.

ஆனா ஆங்கிலத்தைச் சொல்லிக் கொடுக்க வைத்துப் படிக்க வைத்தால் அதைக் “கட…கட…” வென பதிய வைக்கிறது. அடுத்துத் தன் வளர்ச்சியில் ஆங்கிலத்தில் எழுதவோ பேசவோ செய்கிறது.

பள்ளிகளில் குழந்தைகளை நாம் இப்படி உற்பத்தி செய்கிறோம்.., சிருஷ்டித்துக் கொள்கிறோம். ஆனால் மற்ற உயிரினங்கள் இதைச் செய்ய முடிவதில்லை.

பள்ளிப் படிப்பில் பாட நூல்களைக் கற்கின்றோம். கற்ற வழியில் ஒவ்வொரு பொருள்களையும் பற்றிய அறிவு வருகின்றது.

வந்த பின் அவைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தால் அது எந்த நிலை வரும் என்று கண்டறிகின்றோம். அந்தச் சந்தர்ப்பத்தை நாம் தான் உருவாக்குகிறோம்.

அந்த உணர்வின் (அறிவாக) வினையை நமக்குள் சேர்க்கின்றோம். சேர்த்துக் கொண்ட உணர்வுகளைக் கொண்டு நாம் எத்தனையோ பொருள்களையும் கண்டுபிடிப்புகளையும் உற்பத்தி செய்கின்றோம்.

சாதாரணமாக சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய ஒரு வெப்ப காந்தம் எந்தச் சத்தினைக் கவர்ந்ததோ அதனின் அடிப்படையிலே பூமியிலே அது படர்ந்து விடுகின்றது. மண்ணுடன் மண்ணாக விளைகின்றது.

மண்ணுடன் கலந்திருந்தாலும் அதற்குள் விளைந்த அந்த உலோகத்தை விஞ்ஞானி பிரித்தெடுக்கின்றான். தனி உலோகமாகவே அதை உருக்கித் தூய்மைப்படுத்தி எடுக்கின்றான்.

அதனை மற்ற உலோகத்துடன் இணைத்துத் தனக்கு வேண்டிய நிலைக்குப் பக்குவபடுத்துகின்றான் மனிதன்.

புற நிலைகளில் இதைச் செய்யும் ஆற்றலை நாம் பெற்றுள்ளோம். இது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஒன்றும் புதிதில்லை.
1.ஆனால் ஞானிகளும் மகரிஷிகளும் தாவர இனத்தை நுகர்ந்தனர்.
2.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பருகினர்.
3.தாவர இனத்தின் உணர்வின் ஆற்றலை அறிந்தனர்.

ஒரு தாவர இனத்தின் தன்மையை முதலில் உட்கொண்டு அடுத்து மற்ற தாவர இனத்தை நுகர்ந்து அதற்குள் எதிர் நிலையான மறைகளாகி மிருகங்கள் எப்படி உருவானது…? உயிரினங்களுக்குள் எப்படி எதனால் மாற்றங்கள் வருகிறது…? என்று கண்டறிந்தார்கள்.

அதே சமயத்தில் அந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்து மனித உடலுக்குள் இருக்கக்கூடிய நஞ்சின் தன்மையை நீக்குவது எப்படி என்று அந்த உணர்வின் ஆற்றலை அன்றைய சித்தர்கள் தனக்குள் வளர்த்துக் கொண்டார்கள்.

சித்தர்கள் அவ்வாறு (நஞ்சை நீக்க வேண்டும்) வளர்த்துக் கொண்ட எண்ணங்கள் அங்கே உருவாகின்றது.
1.எண்ணத்தால் வளர்த்துக் கொண்ட அந்த நினைவலைகளை
2.மற்ற பொருளுடன் சேர்த்து இணைக்கச் செய்து,
3.மருந்தாக உற்பத்தி செய்கின்றார்கள்… சித்தர்கள்

மனிதனின் வாழ்க்கையில் அறியாத நிலைகளில் எதிர் நிலையாக வந்த எண்ணங்களால் நோயின் தன்மை அடையப்படும் பொழுது அந்த மருந்தினைக் கொடுத்து மனிதனின் நோயை நிவர்த்தி செய்தார்கள்.

இவன் உருவாக்கிய மருந்து அந்த நோயை நீக்குகின்றது. நோய் நீங்கிய பின் மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியின் தன்மையை அடைகின்றார்கள்

1.மக்களுக்குள் அப்படி மகிழ்ச்சியை உருவாக்கிய அன்றைய சித்தன்
2.இதற்காக வேண்டி யாரிடமும் காசு வாங்கவில்லை.

மக்கள் அவர்கள் துன்பத்திலிருந்து விடுபடவேண்டும் என்று அவன் துன்பப்பட்டுப் பல நிலைகளைச் செய்தான்.

துன்பம் நீங்கி அவர்கள் இடும் இன்பத்தின் மூச்சின் அலைகளைத்தான் ஒவ்வொரு சித்தனும் அவன் எதிர்பார்த்தான்.
1.நீ மகிழ்ந்திரு…!
2.மகிழ்ச்சி பெறு…!
3.மகரிஷிகளின் அருள் ஒளி பெறு…!
4.அந்த அருள் ஒளி பெறும் தகுதியை நீ பெறு என்றான்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்ற நிலைக்கொப்ப அந்தத் தகுதியை அந்தச் சித்தன் அவன் தனக்குள் பெற்றான்… உருவாக்கினான்.

அந்தச் சித்தன் தன் உணர்வுக்குள் துன்பத்தை மாற்றும் சக்தியாக வளர்த்து விளைய வைத்துக் கொண்டான். அவன் உடலில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட அத்தகைய உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து வைத்துள்ளாது.

அந்தச் சித்தனின் நினைவு கொண்டு அதனின் உணர்வை நாம் நுகர்ந்து எடுத்துக் கொண்டால்
1.அவன் எப்படித் துன்பத்தை நீக்கும் உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்டானோ
2.அதனின் உணர்வின் தன்மை நமக்குள் சென்று
3.தீமையை நீக்கும் உணர்வின் ஆற்றல் நமக்குள் பெறப்பட்டு
4.அதிலிருந்து நம் நல் உணர்வைக் காக்கும் நிலைகள் வரும்.

ஆற்றலைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று தான் கோவில்களில் “ஓ…ம்” போட்டுள்ளார்கள் – ஆற்றலைப் பெருக்குகின்றோமா…!

 

Ommஆற்றலைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று தான் கோவில்களில் “ஓ…ம்” போட்டுள்ளார்கள் – ஆற்றலைப் பெருக்குகின்றோமா…!

“ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” – ஒவ்வொருவரும் அவரவர்கள் உயிரைப் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அதைத் திரும்பத் திரும்பச் சொல்வது.

“ஓ…” என்பது பிரணவம் என்று என்று சாஸ்திர விதிகள் கூறுகின்றன. “ஓ…ம் “என்பது பிரணவம் என்று தான் எல்லாரும் சொல்லி இருக்கின்றார்களே தவிர
1.பிரணவம் என்பது எது?
2.பிரணவத்தை எதற்காகக் குறித்தார்கள்?

சாஸ்திர விதிகளைக் கரைத்துக் குடித்தவரும் சாஸ்திரத்தை உணர்ந்து கொண்டவரும் “ஓ…ம் “என்ற பிரணவத்தைப் பற்றி விளக்கங்கள் பல முறைகள் கொண்டாலும் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள் இது வரையிலும் வெளிப்படுத்தவில்லை.

இயற்கையின் தன்மையில்
1.தான் யார்…?
2.தன் உயிரின் இயக்கத்தின் தன்மை என்ன? என்ற நிலையையும்
3.”ஓ…ம்” என்ற பிரணவத்தின் தன்மையை நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும்?
4.அது மக்களுக்கு எப்படித் தெரியப்படுத்த வேண்டும்? என்று நம் குருநாதர் உணர்த்தியுள்ளார்.

பிரணவம் என்றால் “ஜீவன்.. இயக்கம்” என்று பொருள்.

நம் உயிர் உடலுக்குள் நின்று இயக்கமாக இருக்கின்றது. “ஓ…” என்பது பிரணவம்… ஜீவனாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு “காந்த ஊசியினை” வைத்து மற்ற காந்தப் புலன் அறிவுகள் கொண்ட நாடாக்களில் பதிவு செய்கின்றோம்.

1.காந்த ஊசியினை மீண்டும்
2.அந்தப் பதிவு செய்த அலை மீது வைத்த பின்
3.”அது உராய்ந்து…”
4.அதற்குள் பதிவான ஒலி அலைகளை எழுப்புகின்றது.

நாம் எதைப் பேசுகின்றோமோ அதை இயக்குகின்றது.

இதைப் போன்று தான் நம் உயிர் நம் உடலுக்குள் காந்த ஊசியாக இயங்கிக் கரண்ட்டை (மின் ஆற்றலை) உற்பத்தி செய்து நம்மை இயக்கிக் கொண்டு இருக்கின்றது.

எத்தகைய குணம் கொண்டு நாம் எண்ணுகின்றமோ அதைச் சுவாசிக்க நேர்கின்றது.
1.எந்தக் குணத்தை நாம் சுவாசித்தமோ
2.உயிரிலே அது உராய்ந்த பின்
3.அந்தக் குணத்தின் உணர்வின் செயல்களை உணர முடிகின்றது.

கோப குணம் என்பது காரத்தின் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது அது. உதாரணமாக ஒருவர் மேல் நான் கோபமாக எண்ணுகின்றேன் என்றால் காரமான உணர்வைச் சுவாசிக்கின்றேன்.

சுவாசித்த உணர்வு உயிரிலே உராயப்படப் போகும் போது அந்தக் கோபமான உணர்ச்சியைத் தூண்டக்கூடிய அந்த உணர்வுகள் நமக்குள் செயல்படுகின்றது.
1.உடல் கோபத்தால் துடிக்கின்றது.
2.கோபமான சொல்லாக அது வெளிப்படுகின்றது.
3.அப்போது நாம் எண்ணக்கூடிய அந்தக் கோபம் என்ற குணம் ஜீவன் பெறுகின்றது
4.உயிர் அதை நமக்குள் ஜீவனாக்குகின்றது (உருவாக்குகிறது) என்று அர்த்தம்

இதைத்தான் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று சொல்கிறோம். “ஈஸ்வரா…” என்றால் இயக்கமாக (இயக்கும் சக்தியாக) இருந்து நீ என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றாய் என்று பொருள்.

“ஓ…ம்” என்பது பிரணவம். நாம் எண்ணியது பிரணவமாகின்றது. அதாவது ஜீவன் ஆக்கக்கூடிய அந்தத் திறன் பெற்றது. உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றது என்று பொருள்.

1.”ம்…” என்றால்
2.நாம் எதை எல்லாம் எண்ணுகின்றமோ அந்த உணர்வின் சத்தை இயக்கி விட்டு
3.நம் உடலுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது – அதனால் தான் “ஓ… … …ம்”.
4.”ம்…” என்பது பிரம்மம். சிருஷ்டி என்று பொருள்.

சாதாரண மனிதனுக்கும் புரியும்படியாகத்தான் எல்லாக் கோவில்களிலும் அந்தந்தத் தெய்வத்திற்கு முன்னாடி “ஓம்” போட்டு ஞானிகள் காண்பித்துள்ளார்கள்.

ஆனால் “ஓம்” என்பதை மந்திரமாக எண்ணி அந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றார்களே தவிர
1.உயிரின் இயக்க நிலையும்
2.உயிரின் துணை கொண்டு நாம் சுவாசிக்க வேண்டிய
3.மெய் ஞானிகளின் அருள் சக்திகளையும் எண்ணுவதில்லை.

வேதனை தாங்க முடியவில்லை… “என்னைக் கொண்டு போய்ச் சீக்கிரம் சேர்த்துவிடு…!” என்று சொல்கிறோம் – எங்கே போவோம்…?

Image

Immortal bliss

வேதனை தாங்க முடியவில்லை… “என்னைக் கொண்டு போய்ச் சீக்கிரம் சேர்த்துவிடு…!” என்று சொல்கிறோம் – எங்கே போவோம்…?

 

1.ஒரு செடியில் விளைந்த சத்தினை சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து
2.நமது பரமான பூமியில் பரமாத்மாவாக (உணர்வலைகளாக) மாற்றியுள்ளது.
3.அதே செடியின் வித்தை எடுத்து நிலத்தில் ஊன்றினால்
4.அந்த வித்து புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு
5.பரமான பூமியில் பரமாத்மாவாக மாறியுள்ள தன் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து நுகர்ந்து
6.அதே உணர்வு கொண்டு அதே செடியாக வளர்ந்து தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றது.

இதே போன்று தான் நோய்வாய்ப்படும் ஒரு மனிதன் தன் மகன் மேல் பற்று வைத்து அந்த மகனும் தன் தந்தையின் மீது பற்று வைத்தால் அந்த வேதனையின் உணர்வுகள் மகனிடத்தில் விளைந்து அதிகமாகும்.

தந்தையின் உணர்வுகள் மகனிடத்தில் விளைந்தபின் தந்தையின் உயிரான்மா தன் உடலை விட்டு வெளியே சென்றபின் தனது மகனின் உடலுக்குள் வந்து விடுகின்றது.

இதன் தொடர் கொண்டு மகனுடைய உடலில் புகுந்து கொண்ட தந்தையின் உயிரான்மா மகனின் உடலில் வேதனையின் விஷத் தன்மையை அதிகமாக உருவாக்கி மகனின் நல்ல சிந்தனையை மாற்றி விடுகின்றது.

தந்தை தான் உயிரோடு வாழும் காலத்தில் தனக்குப் பின்னாடி தன் மகன் சொத்துகளைக் காப்பாற்றுவானா…! ஏமாற்றும் உலகத்தில் வாழ்கிறானே…! என்ன செய்யப்போகிறானோ…? என்ற குழப்பத்தின் உணர்வுகளை தன்னுள் வளர்த்துக் கொண்டிருப்பார்.

இந்த எண்ணத்துடன் செல்லும் அந்த ஆன்மா மகன் உடலுக்குள் சென்ற பின் அவனுக்குள்ளும் இதே குழப்ப உணர்வுகளைத் தூண்டி சொத்துக்களைக் காப்பாற்ற முடியாத நிலையினை மகனிடம் உருவாக்குகின்றது.

அதனால் மகனும் சிந்தனையை இழந்து சொத்துக்களை எல்லாம் இழந்து நோய்வாய்ப்பட்டுத் தன் உடலைக் காக்கும் திறனையும் இழந்து செயலாக்கங்கள் குன்றிய நிலையில் வாழ்கின்றான்.

பின் இதே உணர்வை வளர்த்து உடலை விட்டுப் பிரிந்து செல்லும் அவனின் உயிரான்மா பரமாத்மாவில் கலந்து ஐக்கியமாகி விடுகின்றது.

வயதானவர்களில் பலர் நோயால் வாடிக் கொண்டிருந்தாலோ அல்லது பல சிக்கல்களில் தவித்துக் கொண்டிருந்தாலோ வேதனை தாங்காதபடி
1.என்னைச் சீக்கிரம் கொண்டு போய் விடு
2.பரமாத்மாவில் ஐக்கியமாக்கி விடு என்று சொல்வோம்.

பரம் எனறால் ஒரு எல்லை – நமது பூமி. ஆக இந்தப் பரமான பூமியின் ஆத்மாவில் சேர்ந்து ஐக்கியமாகிவிடுகின்றோம்.

பரமாத்மாவில் ஐக்கியமான பின் நமது ஆன்மாவில் எதனின் உணர்வுகளை அதிகமாகச் சேர்த்திருந்தோமோ அதைப் போன்று இன்னொரு ஜீவ ஆன்மா (உடலுடன்) இருந்தால் அதனின் ஈர்ப்பிற்குள் சென்று விடுவோம்.

பின் அந்த உடலின் உணர்வைக் கவர்ந்து “அந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடல் பெறுகின்றோம்…!” என்பதை ஞானிகள் கொடுத்துள்ள நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஆகவே நமது இந்த மனித வாழ்க்கைக் காலத்திலேயே இந்த இயற்கையின் இயக்க உண்மைகளை அறிந்து கொள்தல் வேண்டும்.

இனம் இனத்தை வளர்க்கும் என்பது போல் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் விளைய வைத்து ஞானிகளுடன் ஐக்கியமாவோம்.
1.நம் பயணத்தின் பாதையை
2.அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்துவோம்…!

தீமையானவைகளுடன் நாம் என்றைக்கும் நேரடியாகச் சண்டை செய்யவே கூடாது – “சுக்ரீவனைத்தான் (துருவ நட்சத்திரத்தை) அனுப்ப வேண்டும்…!” – விளக்கம்

Image

dhanush

தீமையானவைகளுடன் நாம் என்றைக்கும் நேரடியாகச் சண்டை செய்யவே கூடாது – “சுக்ரீவனைத்தான் (துருவ நட்சத்திரத்தை) அனுப்ப வேண்டும்…!” – விளக்கம்

 

உதாரணமாக ஒருவர் நமக்கு இடைஞ்சல் செய்தால் அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது. அவர் செய்யும் இடைஞ்சல்களிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ளும் நிலையாகப் பதிலுக்கு அவருக்கு நாம் தொல்லைகள் செய்ய ஆரம்பிக்கிறோம்.

அவருக்குத் தொல்லைகள் செய்யும் போது அவ்வளவு தான்…! “அவர் இனி நமது வழியில் வரமாட்டார்… நமக்கு இடைஞ்சல் தரமாட்டார்” என்று எண்ணித்தான் செய்கின்றோம்.

இப்படி மற்றவருக்குத் தீமைகள் செய்து அவரைக் கெடுக்க வேண்டும் என்ற உணர்வுகளை எடுக்கும் பொழுது அதனின் உணர்ச்சிகள் நம்மையும் கெடுக்கும் நிலைக்கு போகின்றது.

பிறரைக் கெடுக்கும் நிலைக்குப் போகும் பொழுது நம்மை நாம் கெடுத்துக் கொள்ளும் நிலைதான் வருகின்றதே தவிர நம்மை நாம் காக்கும் நிலை இல்லை.

இது தான் சிவ தனுசு.

நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை தாக்கும் நிலை வருகின்றது. நம்முள் இருள் சூழும் நிலையே வருகின்றது. இதிலிருந்து நாம் மீள வேண்டுமல்லவா?

“ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் எடுத்து நம் உடலுக்குள் செலுத்தி அதனின் உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது இது விஷ்ணு தனுசு.

உயிர் வழியாக விஷ்ணு தனுசு என்ற உணர்வுகள் ஊட்டப்படும் பொழுது இது விஷத்தின் தன்மையை முறிக்கின்றது.

இதைத்தான் இராமாயணத்தில் “இராமன் வாலியை மறைந்திருந்து தாக்கினார்…!” என்று உரைக்கப்பட்டிருக்கும்.

வாலி யார் என்றால் சூரியனின் பிள்ளை,

உதாரணமாக நம் வியாபாரம் சரியாக நடைபெறவில்லை என்றால் வேதனையாகின்றது. வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வந்தபின் வாலியாகின்றது.

ஏனென்றால் வேதனை வந்துவிட்டால் நம்மிடத்திலுள்ள நல்ல குணங்களைச் செயலாக்க முடிகின்றதா? இல்லை.

ஒருவர் வேதனையான உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அதனைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்கின்றன. ஆகவேதான் வாலியை சூரியனின் பிள்ளை என்கிறோம்.

அவருடைய வேதனைப்படும் உணர்வுகளை நாம் உற்றுப் பார்த்து நுகரப்படும் பொழுது அந்த வேதனையின் உணர்வுகள் நமக்குள் வரும் போது வாலியாகின்றது.

வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் சென்று விட்டால் இரண்யன் ஆகின்றது. அது நம்மிடத்திலுள்ள நல்ல குணங்களைக் கொல்கின்றது என்று தெளிவாகக் காண்பிக்கின்றனர்.

இராமாயணத்தில் குகைக்குள் இருக்கும் வாலி வெளியே வராதபடி மேலே இருக்கும் பாறையைக் கீழே தள்ளி மூடிவிடுகின்றனர். அதனால் வாலி வெளியில் வரமுடியவில்லை என்று எடுத்துரைக்கின்றனர்.

வேதனையின் உணர்வைப் பார்க்கும் பொழுது “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணிக் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தும்போது
3.தீமை என்ற வாலியை இங்கே அடைத்துவிடுகின்றோம்
4.உள்ளே புகாது அதாவது புருவ மத்தியைத் தாண்டி உள்ளே செல்லாது தடுத்து விடுகிறோம் என்ற நிலையைத்தான்
5.இராமாயணக் காவியத்தில் தெளிவுப்படுத்தினார்கள்.

அதே சமயம் வாலி எவரைப் பார்த்தாலும் சம வலுவைப் பெறுவார் என்றும் ஆனால் சுக்ரீவன் எல்லோருக்கும் உதவி செய்யும் பண்பு கொண்டவர் என்றும் காவியம் தெளிவாகக் கூறுகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து இப்புவியில் படரச் செய்கின்றது. இது யார்…? சுக்ரீவன். சுக்ரீவனும் சூரியனின் பிள்ளை தான்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வரப்படும் பொழுது இதை நாம் நுகர்ந்தால்
1.நம்மிடம் உள்ள பிடிவாதமான நிலைகள்
2.தவறான நிலைகள் நம்மிடம் செயல்படுவதை நமக்கு உணர்த்தி
3.இது தப்பு… இது குற்றம்…! இதிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்ச்சிகளை ஊட்டி நம்மை நல்வழியில் அழைத்துச் செல்லும்.

சூரியனின் புத்திரன் சுக்ரீவன் என்பது எல்லாவற்றையும் கவர்ந்து யார் எதை எண்ணுகின்றனரோ அவர்களுக்கெல்லாம் அதன் நிலையில் உதவும் பண்பு கொண்டது.

ஆகவே நாம் நம்முள் துருவ நட்சத்திரத்தின் அருளுணர்வை இணைத்துத் தீமைகளை அகற்றி உயிர் என்ற ஒளியின் தன்மையை என்றுமே ஒளியாக வைத்திருக்கும் “விஷ்ணு தனுசு” எனும் நிலையை பெறுவோம்.

ஈஸ்வரபட்டரைக் குருவாகப் பெற்றது உங்களுடைய அதிர்ஷ்டம்… அவர் மனிதரல்ல…! என்றார் வேத பாட ஆசிரியர்

eswaraya-gurudevar

ஈஸ்வரபட்டரைக் குருவாகப் பெற்றது உங்களுடைய அதிர்ஷ்டம்… அவர் மனிதரல்ல…! என்றார் வேத பாட ஆசிரியர்

ஒரு முறை குருநாதர் ரிக் வேதத்தைத் தெளிவாகப் பாடிக் காண்பித்தார். பின் அதை அப்படியே திருப்பித் தலை கீழாகப் பாடிக் காண்பித்தார்.

வேதங்கள் என்றால் என்ன என்று தெளிவாக விளக்கிக் கூறினார். குருநாதரும் (ஈஸ்வரபட்டர்) ஒரு பிராமணர்தான்.

நானும் (ஞானகுரு) குருநாதர் எங்கள் வீட்டுக்கு எதிரில் தெருவில் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது ரிக் வேதத்தைப் பாடமாக சொல்லித்தரும் ஆசிரியர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்.

சாலையில் சென்று கொண்டிருந்த ஆசிரியரை “இங்கே வாடா…!” என்று தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார் குருநாதர்.

எமக்கு முன்னாலேயே ஆசிரியருக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தார் குருநாதர். “ஏன்டா அங்கே தவறு செய்தாய்…?” என்று கேட்டார்.

ரிக் வேத ஆசிரியர் முழித்தார்…!

“அந்த இடத்தில் இந்த மந்திரத்தைச் சொன்னாயே…, அது எப்படி என்று எனக்குச் சொல்…” என்று கேட்டார் குருநாதர்.

பிறகு குருநாதரே அந்த மந்திரங்களைத் தலை கீழாகச் சுருதி மாறாதபடி பாடிக் காண்பித்தார்.

ரிக் வேத ஆசிரியரோ… “திரு…திரு…”வென்று முழித்தார்.

எமக்கு இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்… பாடிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் பேசுவது அவர்களுக்கு மட்டுமே புரிகின்றது.

“இனி இது மாதிரித் தவறு செய்யாதே…!” என்று ரிக் வேத ஆசிரியரை அடித்து “போ…” என்று கூறி விட்டார். ரிக் வேத ஆசிரியர் அங்கிருந்து போனால் போதும் என்று வேகமாகப் போய்விட்டார்.

பிறகு குருநாதர் எம்மிடம்… இவன் திருடன்… காசு வாங்குவதற்காக மந்திரத்தையே தவறாகச் சொல்கிறான்…! என்று சொன்னார்.

மறு நாள் குருநாதரிடம் அடி வாங்கின ரிக் வேத ஆசிரியர் எம்மைத் தேடி வந்தார். குருநாதரைப் பற்றி எம்மிடம் சொல்லத் தொடங்கினார்.
1.இவர் மனிதரே இல்லை… ஒரு “ரிஷி பிண்டம்…!”
2.இந்த வேதத்தை யாரும் இப்படிச் சொல்லவே முடியாது
3.ஆனால் சொல் பிழையில்லாதபடி சரியான சுருதியுடன் சொல்கிறார்.

அவர் என்னை அடித்த அடியில் நான் செய்த தவறுகள் எல்லாம் ஓடியே போய்விட்டது. இனி பாடம் சொல்லித் தரும் வேலைக்கே செல்ல மாட்டேன்.

என்னுடைய ஊர் உடுப்பி. நான் என் ஊருக்குச் சென்று அங்கு வேறு ஏதாவது வேலை பார்த்துப் பிழைத்துக் கொள்கிறேன்.
1.உங்களுடைய அதிர்ஷ்டம்… நீங்கள் அவரை குருவாக பெற்றிருக்கிறீர்கள்.
2.நீங்கள் எனக்கு “ஆசீர்வாதம் செய்யுங்கள்…!” என்று கேட்டார்.

எனக்குச் சமையல் தொழில் தெரியும். என்னுடைய சமையல் ருசியாக அமைய வேண்டும் என்று ஆசீர்வாதம் கொடுங்கள் என்று கேட்டார்.

யாம் ஒரு ரூபாயைக் கையில் கொடுத்து, ஆசீர்வாதம் கொடுத்து போய் வரச்சொன்னோம். இது நடந்த நிகழ்ச்சி.

1.உலகில் எத்தனை நிலைகள் இருக்கின்றதோ – அத்தனையையும்
2.எந்தெந்த வழியில் எமக்கு உணர்த்த வேண்டுமோ அத்தனை வழிகளிலும் எமக்கு உணர்த்தினார் குருநாதர்.

அதே சமயத்தில் மின் கம்பத்தை அடிப்பார். தொலைபேசிக் கம்பத்தை அடிப்பார். மின் கம்பத்தை அடித்துக் கொண்டே
1.இந்த லைன் (LINE) அந்த லைன் என்பார்.
2.டேய்…! மிளகாய் ஒரு லட்சம்… காரம் கோடி…கோடி… என்பார்.

எமக்கு ஒன்றுமே புரியாது. பைத்தியம் பிடித்தது போன்று பேசிக் கொண்டே வருவார். குருநாதர் எல்லா பாஷையிலும் பேசுவார். “கோடி கோடி” என்பார்.

சாமி கோடி இங்கே இருக்கிறது என்போம்.

அந்தக் கோடி இல்லைடா…! என்பார். “ஈகோடி…!” மிளகாய் கோடி… காரம் கோடி…” என்பார். இன்னும் என்னென்னவோ கோடி என்பார். அர்த்தம் ஒன்றுமே புரியாது.

பிறகு சொல்வார்…! ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றோடொன்று கலந்து கலந்து “கோடி கோடி” உணர்வுகளாக மாறுகின்றது என்பதை விளக்குவார்.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் மின்னலாகப் பாயும் பொழுது அதனின் உணர்வுகள் எப்படிச் சேர்கின்றது…? எப்படி மாறுகின்றது…? என்பதைச் சொல்லாகவும் உள்ளுணர்வாக உணர்த்தவும் செய்தார்.
1.முதலில் சொல்லிவிடுவார் (நான் புரியவில்லையே…! என்று எண்ணுவேன்)
2.பின்னர் அதை அப்படியே அனுபவபூர்வமாகப் புரிய வைப்பார்.

குருநாதர் எமக்குக் கொடுத்த அருளுணர்வுகளை யாம் உங்களிடத்தில் அப்படியே பதிய வைக்கின்றோம்.
1.சந்தர்ப்பம் வரும் போது இதன் நினைவு உங்களிடம் வரும்.
2.அப்பொழுது இதன் உணர்வுகள் உங்களிடத்தில் தீமைகளை அகற்றக்கூடிய சக்தியாக இயங்கும்
3.குருநாதரை எண்ணித் துருவ நட்சத்திரத்தை எண்ணினால் யாம் பதிவு செய்த நிலைகள் அத்தனையும் உங்கள் நினைவுக்கு வரும்.

வேட்டைக்குச் சென்ற என்னைக் “கறி சாப்பிடும் பழக்கத்தையே” விடச் செய்தார் குருநாதர் – எப்படி…!

Image

Great sage Agastya Rishi

வேட்டைக்குச் சென்ற என்னைக் “கறி சாப்பிடும் பழக்கத்தையே” விடச் செய்தார் குருநாதர் – எப்படி…!

 

ஆரம்பத்தில் நான் (ஞானகுரு) என்ன செய்வேன் தெரியுமா..? வேட்டைக்குப் போவேன். வேட்டைக்குப் போனால் இரண்டு மூன்று நாட்கள் அங்கே தங்கி இருப்போம்.

போகும் பொழுது கோழி புறா எல்லாம் கொண்டு போவோம். ஏனென்றால் வேட்டை ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் கொண்டு சென்ற கோழியை வேக வைத்துச் சாப்பிடுவது.

பச்சைப் புறாவில் சத்து நிறைய இருக்கிறது என்று சொல்லி அங்கேயே அடித்துச் சாப்பிடுவது. வீட்டிற்குக் கூட கொண்டு வருவது இல்லை.

எல்லோரும் எனக்கு உனக்கு என்று கேட்பார்கள்…! இந்த மாதிரி நன்றாகச் சாப்பிடுவது தான் என்னுடைய பழக்கமாக இருந்தது.

பின்னாட்களில் குருநாதர் சொன்னார். ஏண்டா..! இத்தனை பறவைகளையும் கொன்று சாப்பிட்டு இருக்கிறாய். அதெல்லாம் மனிதனாகப் பிறக்கப் போகிறது.

ஆனால் நீ எங்கே போய் அடுத்துப் பிறப்பாய் தெரியுமாடா…? என்று கேட்டார்.

மானைச் சுட்டுச் சாப்பிட்டாய். அது எத்தனை இம்சைப்பட்டு இது உனக்குள் வந்திருக்கிறது தெரியுமா…! அது இம்சைப் பட்டதனால் அந்த உயிர் உன்னிடம் வந்தது.

அது அணுக்களாகி நீ செத்த பிற்பாடு உன் சிநேகிதனின் ஈர்ப்புக்குள் அடுத்து அதன் வழியில் மனிதனாகப் பிறக்கப் போகிறது. நீ மானாகவோ புறாவாகவோ கோழியாகவோ தான் பிறப்பாய் என்றார்.

இப்படிச் சொல்கிறார் குருநாதர். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்புறம் நிறையச் சாப்பிடுடா…! என்றார்.

நிறையச் சாப்பிட்டால் அந்த உடலாகப் போவேன் என்று சொன்னீர்களே என்றேன் நான்.

அப்படியா உனக்குப் பிடிக்க வில்லை என்றால் விட்டு விடு. விட்டுவிட வேண்டும் என்று நீ நினைத்தாய் என்றாலும் உன் உடலில் விளைந்த அணுக்கள் அதற்கு அந்த ருசி வேண்டும். அது ஆசையைத் தூண்டும்.

நீ சாப்பிடாமல் இருந்தாலும் கறி சாப்பிட முடியவில்லையே என்ற அந்த (எண்ணம்) ஏக்கம் வந்தால் போதும்…! ஒரு கிலோ சாப்பிடுவதற்குப் பதில் பத்து கிலோ சாப்பிட்ட மாதிரி ஆகும். காற்றிலிருந்து அந்த சக்தி உனக்குள் வரும் என்றார் குருநாதர்.

இப்படிக் குருநாதர் சொல்வது எல்லாவற்றையும் பார்த்தவுடனே “ஏன்டா இவரிடம் சிக்கினோம்…!” என்று எனக்குப் பயம் ஜாஸ்தியாகி விட்டது.

இவ்வளவு விஷயங்கள் சொல்கிறார். கடைசியில் நாம் ஆடாகவோ மாடாகவோ கோழியாகவோ மீனாகவோ பிறந்தால் என்ன செய்வது?

ஆகவே நீ கறி சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும் என்று நினைத்தாலும் கூட பார்த்தாலோ அல்லது அந்த வாசனையை நுகர்ந்தாலோ சாப்பிட வேண்டும் என்ற ஆசை உனக்கு வருகிறதல்லவா…!
1.டேய்…! நீ பத்து கிலோ கறி சாப்பிடுகிறாயடா…! என்பார்.
2.எனக்கு இப்படி அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.
3.அதைத் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்று வினா எழுப்புகின்றார் குருநாதர்.

நம் உடலில் ஒரு நோய் வந்துவிட்டால் அதைத் தடுக்க அதற்கு மாறான நிலைகள் கொண்ட ஒரு மருந்தைத் தயார் செய்து அதை உட்கொள்கின்றோம்.

அதற்குச் சக்தி கொடுத்து உடலுக்குள் போனவுடனே உடலில் நோயின் அணுக்களை மறித்து அதை வளரவிடாது செய்து நல்ல அணுக்களைப் பெருக்குகின்றது. அப்போது அது “தனி…”

இதைப் போல அனைத்து விஷங்களையும் வென்றவன் அகஸ்தியன். உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அந்த உணர்வை நீ எடுத்தால் கறியை உட்கொள்ளும் அந்த விஷமான உணர்வுகள் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறும். விஷத்தை வென்ற அகஸ்தியனின் உணர்வு வரும் போது உன் உடலிலுள்ள விஷத்தை அடக்கி விடும் என்கிறார் குருநாதர்.

அகஸ்தியன் உணர்வை உனக்குள் எடுத்து வளர்த்துக் கொண்ட பின் கறி சாப்பிட வேண்டும் என்று நீ நினைத்தாலும் கூட அது உனக்கு ஒத்துக் கொள்ளாது.

நோய்க்கு மருந்து சாப்பிட்டவுடன் நோயின் அணுக்களின் செயலாக்கங்கள் ஒடுங்கி நோய் விலகுகின்றதோ அது போல அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி உனக்குள் அதிகமாகும் பொழுது மாமிசம் சாப்பிடும் உணர்வின் விஷங்கள் ஒடுங்கிவிடும்.
1.அந்தப் பழக்கம் தன்னாலே அகலும்…
2.அந்த ஆசையே வராது…!

அதற்கப்புறம் அதைப் பார்த்தாலோ மாமிசத்தின் மணத்தை நுகர்ந்தாலோ “ஒதுக்கித் தள்ளும் உணர்வு தான் (வாந்தி) வரும்…” என்று தெளிவாக்கினார்.

மதங்களைப் பற்றிய உண்மை நிலைகள் – மெய் ஞானிகள் அன்று சொன்னது

Image

நாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்

மதங்களைப் பற்றிய உண்மை நிலைகள் – மெய் ஞானிகள் அன்று சொன்னது

 

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் உள்ள உண்மைகள் காலத்தால் மறைந்துவிட்டது. எல்லாம் சாங்கிய சாஸ்திரமாகிப் போய்விட்டது.

விநாயகருக்கு அருகம்புல்லை மட்டும் இரண்டு வைத்தால் போதும்…! ஏற்றுக் கொள்வார். அதுவும் முடியாவிட்டால் பக்தியோடு பக்கத்தில் இருக்கும் தழைகளைப் போட்டு “இந்தாப்பா உனக்குச் சாப்பாடு…!” என்று சொன்னால் அதையும் ஏற்றுக் கொள்வார் என்று இப்படி மாற்றி அமைத்துவிட்டார்கள்.

அரசன் தான் வாழ உருவாக்கிய நிலைகளில் “சரணாகதி தத்துவமாகத்தான்…” இன்று இயக்கப்பட்டு அதைக் காக்கும் நிலைகளில் தான் எல்லா மதங்களுமே செயல்பட்டுக் கொண்டுள்ளது.

அதைப் பாதுகாக்கும் குருமார்களாகத் தான் இருக்கிறார்களே தவிர மெய் ஞானிகள் காட்டிய நிலைகளில் இந்து என்றோ முஸ்லீம் என்றோ கிறிஸ்துவன் என்றோ அல்லது மற்ற நிலைகளிலோ எதுவுமே கிடையாது.
1.உணர்வுக்கொப்ப உணர்ச்சியும்
2.உணர்ச்சிக்கொப்ப இயக்கமும் (சொல் செயல்) என்ற நிலைகள் தான் ஞானிகளால் உணர்த்தப்பட்டது.

ஆண்டவன் இப்படிச் சொல்லி இருக்கிறார் என்று ஒரு சாரார் உணர்வைப் பதிவு செய்கிறார்கள். அடுத்து கடவுள் எங்களுக்கு இப்படிச் சொல்கிறார் என்று இன்னொரு சாரார் சொல்கிறார்கள்.

இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் இந்த இருவருக்கும் ஒத்துக் கொள்வதில்லை.

கர்த்தர் வான் வெளியில் இருந்து எடுத்துக் கொண்டு வந்தார் என்று சொல்கிறார்கள். அந்த மெய் ஞானிகளின் உண்மை வழிப்படி நமது உயிரே கர்த்தராகிறது.

“ஆண்டவா…” என்று சொல்கிறார்கள். எதனின் உணர்வை எடுத்தோமோ அது நம் உடலாகிறது.
1.இந்த உடலை ஆள்வது யார்?
2.நமது உயிர் தான் – “ஆண்டவா…!”

கட + உள் = கடவுள் – ஆகவே உள் நின்று நம்மை இயக்கி உணர்வை உடலாக உருவாக்குவது “கடவுள்…” உருவாக்குவதால் ”ஈஸ்வரா…” என்று உயிரைச் சொல்கிறார்கள்.

உருவாக்கிய உணர்வுக்குள் நம்மை ஆளும் ஆண்டவனாக இருக்கிறான். நம்மை ஆள்வது அவன் தான்.

நாம் எண்ணிய உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை இரையாக்குகிறார்.
1.இரையின் உணர்வு உடலாகிறது.
2.உணர்வின் இயக்கம் செயலாகிறது… “தெய்வமாகிறது…!” என்று
3.ஆதியிலே தோன்றிய “அகஸ்தியன்” தெளிவாகக் கூறியுள்ளார்.

இதைச் சீராகப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த மெய் ஞானிகள் சொன்ன உணர்வுகளை இணைத்து இணைத்து நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எல்லாம் ஒன்று போல் வரும்.

கார்… ரேடியோ… போன்ற உபகரணங்களில் அதற்குள் இருக்கும் உறுப்புகளைத் தனித் தனியே செய்கின்றார்கள். அதில் இந்தெந்த உறுப்புகள் (பாகங்கள்) இந்தெந்த வேலைகள் செய்யும் என்று உருவாக்கி வைத்து விடுகிறார்கள்.

அதைச் சேர்த்து இணைத்து முழுமையாக ஆன பிறகு அது அது அதனதன் வேலைகளைச் செய்யும். அந்த உபகரணம் சீராக இயங்கும்.

உதாரணமாக ஒரு மைக் (MIC) வைத்துப் பேசினால் அங்கே சப்தம் வெளி வருகிறது. ஒலியைப் பெருக்கும் ஆம்ப்ளிபையர் (AMPLIFIER) ஒன்றோடொன்று சேர்த்து ட்ரான்சாக்சன் (TRANSACTION) செய்யும். ஆனால்
1.அதிலே கொஞ்சம் (அழுத்தமாகி எதிர் நிலையானால்) ரிப்பேர் ஆனால்
2.“கரா… புரா… உஸ்ஸ்ஸ்… உய்ய்ய்…” என்று சப்தம் எழுப்பிவிடும்
3.மைக்கில் யார் பெசினாலும் கேட்க முடியாது அர்த்தமும் ஆகாது
4.மீறிக் கேட்டாலும் எரிச்சலாகிவிடும்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உணர்த்திய அருள் வழிப்படி அந்த ஞானிகளும் மகரிஷிகளும் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மையின் நிலைகளை உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நாம் சாமியை இப்படிக் கும்பிட்டோம்…! “இவர் என்ன இப்படிச் சொல்கிறாரே…?” என்று நினைத்தால் “கரா…புரா…” ஆகிப் போய் விடுகிறது.

நாம் விநாயகரைக் களிமண்ணால் செய்து (விநாயகர் சதுர்த்தி அன்று) எப்படியெல்லாம் கும்பிட்டோமே…, “இவர் இப்படிச் சொல்கிறாரே” என்று
1.இரண்டையும் கிராஸ் (CROSS) பண்ணி நினைத்தீர்களானால்
2.நான் சொல்வதை நீங்கள் CROSS பண்ணிக் கொண்டே..
3.”கரா..புரா…” என்று பண்ணிக் கொண்டே இருப்பீர்கள்.
4.அர்த்தமே உங்களுக்கு ஆகாது.

அகவே இயற்கையின் உண்மையின் நிலைகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். மெய் ஞானிகளின் உணர்வுகளை முதலில் பதிவு செய்துக் கொள்ளுங்கள்.

அதைப் பதிவு செய்த பின் உங்கள் வாழ்க்கையில் எது… எப்படி…? என்ற நிலைகள் தெளிவாகத் தெரியும். நான் இப்போது சொல்வதை அப்படியே கிரகித்து (RECORD) செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு உங்கள் உடலில் இருக்கக்கூடிய நிலைகள்
1.உங்கள் வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் எந்தெந்தக் குணங்கள்
2.ஏன் அப்படி வந்தது என்று சிந்தித்துப் பார்த்தால்
3.இது கெட்டது… இது நல்லது…! என்று உங்களால் அறிய முடியும்.

உங்களை நீங்கள் அறிந்து கொள்ளத் தான் இதையெல்லாம் கூறுகிறேன். ஏனென்றால் இயற்கை எப்படி நம்மை வளர்க்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானிகளும் மகரிஷிகளும் சொன்ன சாஸ்திரப்படி நாம் வாழ்ந்தால் என்றுமே அழியா நிலையாக மரணமில்லாப் பெரு வாழ்வாக ஒளியின் சரீரமாக வாழ முடியும்.

“அமாவாசை அன்று.. முன்னோர்களை வணங்குவதன் உண்மை நிலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!”

Image

New moon day

“அமாவாசை அன்று.. முன்னோர்களை வணங்குவதன் உண்மை நிலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!”

 

அமாவாசை என்றால் இருள் சூழ்ந்த நாள். அதாவது சூரியனுடைய ஒளிக்கதிர் கிடைப்பது இல்லை.

முன்னோர்களை வணங்குகின்றோம் என்ற நிலையில் சாமி கும்பிடுவதற்காக மந்திரம் சொல்லி யாகங்கள் செய்வோம். அதிலே புஷ்பங்கள் நெய் சோமபானம் எல்லாம் போடுவார்கள்.

அமாவாசை அன்று இந்த உணர்வுகள் எல்லாம் பூமியில் அதிகமாகச் சுற்றி கொண்டிருக்கும்.

நம் மூதாதையர்கள் என்னென்ன சாப்பிட்டார்களோ அதை எல்லாம் வைத்துக் கும்பிடுவோம். அவர்கள் நினைவு மறக்காமல் இருப்பதற்காக எங்களை இப்படி வளர்த்தீர்கள் அப்படிச் செய்தீர்கள் என்று எண்ணி அவர்களை அழைத்துச் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று கும்பிடுவோம்.

அவர்கள் உடலை விட்டுப் பிரிந்த பிற்பாடு நாம் என்ன செய்கிறோம்.

சுட்ட சாம்பலை எடுத்துக் கங்கையிலோ ஆற்றங்கரையிலோ கொண்டு போய்க் கரைக்கின்றோம். கரைத்தால் அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் விலகிவிடும் என்று நினைத்துக் கொள்கிறோம்.

வீட்டிற்கு வந்த பிற்பாடு சொந்த பந்தம் எல்லாம் ஒன்று கூடி எண்ணையை தேய்த்துக் குளிக்க வைத்து நல்ல புதுத் துணி எல்லாம் கொடுக்கின்றார்கள்.

புதுத் துணியைக் கட்டிக்கொண்டு தலை மகனை மாவிளக்குத் தீபம் ஏற்றச் செய்கின்றார்கள். பின் முக்காடு போட்டுக் கொண்டு அந்தத் தீபம் அணையாதபடி விநாயகர் கோயிலில் போய் அர்ச்சனை செய்து விட்டால் இறந்தவர்கள் மோட்ச லோகம் போவதாகச் சொல்கிறார்கள்

நாம் தீபாவளி அன்று. புத்தாடைகளை அணிகிறோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி விட்டு அருள் உணர்வுகளைப் புத்தாடையாகப் போடுகின்றோம்.

ஆனால் இங்கே ஒருவர் இறந்துவிட்டால் பாவத்தைப் போக்கிவிட்டு சொந்த பந்தங்களைக் கூப்பிட்டுச் சொந்த பந்தத்திற்காக வேண்டிப் புத்தாடைகள் அனியச் சொல்கிறார்கள்…!

நெய் தீபம் ஏற்றிக் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்துவிட்டால் மோட்ச தீபம் என்கிறார்கள்,

இந்த மஹாளய அமாவாசை மிகவும் முக்கியமா முன்னோர்களுக்காக வணங்குவார்கள். ஆனால் அந்த மந்திரவாதிகள் (குடுகுடுப்புக்காரர்கள்) என்ன செய்வார்கள் தெரியுமா…?

நம் வீட்டு வாசற்படியில் இருக்கும் கொஞ்சம் மண்ணை எடுத்துக் கொண்டு செல்வார்கள். வீட்டில் உங்களுக்குத் தெரியாமல் சிநேகிதமாக வந்து தலைமுடியை எடுத்துக் கொள்வார்கள்.

குடுகுடுப்புக்காரன் வந்தால் நம்மிடம் பழைய துணியைத்தான் கேட்பான். கொடுத்துவிடுவோம்

இந்த மூன்றையும் எடுத்துச் சென்று என்னா செய்கிறார்கள்…!

முன்னோர்களின் உணர்வு தான் உடலாக நாம் உருவாகியுள்ளோம். அமாவாசை அன்று சாப்பாடு கொடுத்து அவர்களை நாம் கூப்பிடுவோம். அப்பொழுது அந்த உணர்வு எல்லாம் அங்கே குவிந்து வரும்.

நம் பாதம் பட்ட மண் தலை முடி எல்லாவற்றையும் வைத்து எங்கே அந்த உடலைச் சுட்டார்களோ அல்லது எங்கே புதைத்தார்களோ அங்கே சென்று அதற்கென்ற மந்திரத்தைச் சொல்வார்கள். மதுபானம் மாமிசம் எல்லாம் வைத்து ஜெபிப்பார்கள்.

மந்திரத்தை ஜெபித்தவுடன் இங்கே அம்மா அப்பாவைச் சாப்பாடு வைத்துக் கூப்பிடுவோம்… அவன் மந்திர சக்தியால் இழுக்கும் பொழுது அந்த ஆன்மா அங்கே சென்றுவிடும்.

யாகம் என்றால் என்ன? யாக வேள்வி என்றால் அன்றைய காலங்களில் அதிலே மனிதனைப் பொசுக்கினது உண்டு. ஆடு கோழிகளை குதிரைகளைப் பொசுக்கினது உண்டு.

இராமாயணத்தில் சொல்லியிருப்பார்கள். அசுவமேத யாகம் என்பது, நம் உயிரணு தோன்றியதிலிருந்து புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் மனிதனின் மாற்றங்கள் ஏற்பட்டதற்குத் தகுந்த மாதிரி
1.ஒவ்வொரு மாற்றத்திற்குத் தக்க
2.1008 குணங்கள் உருவான நிலையைத்தான் யாகத்தீயில் போட்டு
3.அந்த ரிக்கியர்கள் மந்திரங்களைச் சொல்லி
4.அதற்கு வேண்டிய சாப்பாடு மற்றும் மயக்கமாக்கும் பல உணர்வுகளைக் கொடுத்து,
5.சோமபானம் என்ற மதுவைக் கொடுத்து நினைவை மாற்றச்செய்து,
6.மந்திரங்களைச் சொல்லிக் கடைசியில் யாகத் தீயில் போட்டுப் பொசுக்குவார்கள்.

மந்திரத்தைச் சொன்னவுடன் அந்த உடலில் (பொசுக்கிய உடலில்) மந்திரவாதி பதிவாக்கிய உணர்வெல்லாம் வெளிவரும்.

உதாரணமாக ஒரு மனித உடலில் நோயாகி விட்டதென்றால் பாசத்தால் அந்த நோயின் உணர்வை நாமும் எடுத்தால் அந்த மனிதன் இறந்தவுடன் அந்த உணர்வு நமக்குள் வந்து அதே நோய் நமக்கு வரும்.

இதைப் போன்ற் மந்திரத்தை ஜெபித்த பிற்பாடு இறந்த பின் அதே மந்திரத்தைச் சொன்னால் அந்த ஆன்மாக்களைக் கைவல்யம் செய்து கொள்வார்கள்.

கைவல்யம் ஆன பின் சில பக்குவங்களைச் செய்து மற்றவர்கள் மீது ஏவல் செய்வார்கள்.
1.நோய் நீங்க வேண்டும் என்றால் ஏவல் செய்வார்கள்
2.நோயை உருவாக்க வேண்டும் என்றால் ஏவல் செய்வார்கள்
3.ஒரு குடும்பத்திற்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்றால் ஏவல் செய்வார்கள்.

இறந்தவர்களின் உயிரான்மாக்களை இதற்குத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விஞ்ஞான காலத்தில் வாழ்ந்தாலும் இதையெல்லாம் விஞ்ஞானத்தையும் ஏமாற்றிச் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு வித்திட்டவர்கள் அன்றைய அரசர்கள் தான்.

சரியான முரடனை உண்டாக்கி நாட்டுப் பற்றை ஏற்றி
1.“நீ தான் இந்த நாட்டைக் காப்பாற்றுகின்றாய் என்று சொல்லிக் கொடுத்து
2.அவனுக்குத் தெரியாமலே தீயில் போட்ட பிற்பாடு
3.மந்திரத்தைச் சொல்லி அந்த உயிரான்மாவை எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
4.தன் நாட்டைக் காக்கும் காவல் தெய்வம் என்று தன் எல்லையின் முகப்பில் வைத்திருப்பார்கள்.

தான் சுகமாக வாழ்வதற்காக அரசர்கள் உருவக்கியது தான் இந்த நிலைகள். குலதெய்வங்கள் யார் என்று கேட்டுப் பாருங்கள். பெரும்பகுதியானவர்கள் எங்கள் குலதெய்வம் தீயிலே மாண்டது என்று தான் சொல்வார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஞானிகள் காட்டிய வழிக்கு மாறாக மனிதன் விண் செல்லும் நிலைகளைத் தடைப்படுத்திவிட்டார்கள். இன்று இந்த உண்மைகளைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள ஆள் கிடையாது.

இதற்கு முன்னாடிச் செய்ததெல்லாம் தப்பா என்று வாதத்திற்கு வருவார்கள்.

1.உலகில் உடலுடன் வாழும் உயிரான்மாக்களைக் காட்டிலும்
2.பல மடங்கு உயிராத்மாக்கள் காற்று மண்டலத்தில் அதிகமானதால்
3.நல்லதை எண்ணினாலும் அந்த ஆன்மாக்களின் அழுத்தத்தால் நல்லதைச் செய்யும் வலு இல்லாத நிலை உருவாகிவிட்டது.
4.யாரும் விண் செல்லாததால் தான் இந்த நிலை ஆகிவிட்டது.

குருநாதர் காட்டிய வழியில் உடலை விட்டு எந்த உயிரான்மா பிரிந்தாலும் அது அடைய வேண்டிய எல்லை சப்தரிஷி மண்டலமே.

“பௌர்ணமி அன்று முழு நிலவாகப் பிரகாசிப்பது போல்…” மனிதன் அழியா ஒளியின் சரீரம் அடைய வேண்டும்.