ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் எதையெல்லாம் சுவாசிக்கின்றோம் என்று கணக்குப் பார்க்கின்றோமா…! “சிவனுக்கு நந்தீஸ்வரன் கணக்குப்பிள்ளை” என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்

Image

lord-shiva-and-nandi

ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் எதையெல்லாம் சுவாசிக்கின்றோம் என்று கணக்குப் பார்க்கின்றோமா…! “சிவனுக்கு நந்தீஸ்வரன் கணக்குப்பிள்ளை” என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்

 

 

நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறு செய்பவரைப் பார்த்தால் அந்த உணர்வுகளை  நாம் நுகர நேருகின்றது. “தவறு செய்கின்றான்” என்று அறிகின்றோம்.

 

நம் உயிர் அதை அணுவாக மாற்றிவிடும். அந்த அணுவின் தன்மை வரும் போது அது பிரம்மம் ஆகின்றது.

 

பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. எக் குணத்தின் தன்மையோ அந்த ஞானத்தின் தன்மை கொண்டு அந்த அணுவை இயக்கும்.

 

இதைப் போன்று இயற்கையில் நாம் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் எதனை எவ்வாறு எவ்வழியில் பெற வேண்டும் என்பதற்குத் தான் இப்பொழுது உங்களுக்குள் நினைவுபடுத்துவது.

 

நமது காற்று மண்டலத்தில் TV Radio Computer போன்ற கெமிக்கல் கலந்த காந்தப் புலனறிவில் வீரியம் கொண்ட விஷத் தன்மை இணைத்து ஒரு நாடாவைப் பதிவு செய்து அதில் பதிவாக்குகின்றனர்.

 

இப்பொழுது நாம் பேசுவதையோ மனிதனையோ படமாக்குகின்றனர். படமாக்கி மீண்டும் இயந்திரத்தின் தன்மை கொண்டு ஒலி/ஒளி அலைகளாகப் பரப்புகின்றனர்.

 

அவ்வாறு பரப்பப்படும் போது அதையெல்லாம் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி விடுகின்றது.

 

விஞ்ஞான அறிவுப்படி எந்த அலை வரிசையில் (FREQUENCY) வைத்தால் இது வரும் என்று நினைவுபடுத்துகின்றனர்.

 

டெல்லியில் ஒரு ஒலிபரப்பு செய்கின்றனர். மெட்ராஸில் ஒரு ஒலிபரப்பு செய்கின்றனர். உலகம் முழுவதிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஒலிபரப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.

 

எதை எங்கிருந்து ஒலிபரப்பு செய்கின்றனரோ அது இன்ன அலை வரிசை (frequency) என்று வைக்கின்றார்கள். அலை வரிசை என்றால்

1.காந்தத்தின் ஈர்ப்பு அழுத்தம் அதிகம்

2.ஈர்ப்பு அழுத்தம் குறைவாக இருப்பது – உணர்வுகளில் மாற்றம்.

 

காரம் ஒரு உணர்ச்சியை ஊட்டுகின்றது. புளிப்பு ஒரு உணர்ச்சியை ஊட்டுகின்றது. துவர்ப்பு ஒரு உணர்ச்சியை ஊட்டுகின்றது.

 

அதைப் போல காந்தப் புலனறிவில் எதன் உணர்வு கொண்டு  அலை வரிசையில் எடுத்து ஒலி அலைகளைப் பாய்ச்சுகின்றானோ அதன் அலைவரிசையில் காரம் என்ற அலை வரிசையில் வைத்தால் அந்தக் காரத்தின் உணர்வின் தன்மை பெற்ற அந்த ஸ்டேசனிலிருந்து ஒலிபரப்பு செய்தால் அதை மட்டும் காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளும்.

 

இதே போல,

1.ஒருவன் கோபப்படும் உணர்வை நாம் கண்களால் உற்று நோக்கி

2.நம் உடலிலே பதிவாக்கி

3.மீண்டும் அதை நுகர்ந்து நம் உயிரிலே பட்டால்

4.அந்தக் கோபத்தை உருவாக்கும் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.

 

நமக்குள் பதிவான உணர்வை மீண்டும் “இப்படி அவன் கோபித்தான்” என்ற உணர்வை நுகர்ந்தால் அந்த உணர்வுகள் அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

 

நுகர்ந்த உணர்வோ நம் இரத்த நாளங்களில் பெருகத் தொடங்கி விடுகின்றது.

 

(ஒரு நெல்லை நாம் சமைத்துச் சாப்பிட முடியாது. பல நெல் மணிகளை இணைத்தால் தான் சாதமாகிறது.)

 

அது போல கோப உணர்வை நுகர்ந்தாலும் அது

1.பல அணுக்களின் தன்மை அடையப்படும் போது தான்

2.இரத்தக் கொதிப்பு என்ற உணர்ச்சியைத் தூண்டுகிறது.

3.ஒரு அணு மற்ற உணர்வுகளோடு கலக்கப்படும் போது இரத்தக் கொதிப்பு வராது.

4.அது உணர்ச்சி ஊட்டும் உணர்வு என்று தான் பெயர் வரும்.

5.மற்ற குணங்களுடன் சேர்த்து இந்த உணர்வின் தன்மை இயக்கம் குறைவாக இருக்கும்.

 

நாம் அடிக்கடி அடிக்கடி வேதனைப்படுபவரைப் பார்த்து வேதனைப்படுகிறார் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த எண்ணத்தின் கணக்கு நமக்குள் அதிகரித்து விடுகின்றது.

 

இதைத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக்  கணக்குப் பிள்ளை என்று காட்டினார்கள் ஞானிகள்.

1.நாம் எந்தக் குணத்தைச் சுவாசிக்கின்றோமோ (நந்தி)

2.அது நமக்குள் உள் சென்று

3.அந்தக் குணம் உடலுக்குள் உருவாகும் என்பதைக் காட்டுவதற்கு

4.நந்தீஸ்வரன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

 

உருவான குணமோ அது தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

 

ஒரு அணுவின் தன்மையாக உருப் பெற்ற பின்

1.அந்த உணர்ச்சியைத் தூண்டி

2.நம் உயிரின் நிலைகளுக்கு நினைவுபடுத்தி

3.அதை மீண்டும் சுவாசிக்கச் செய்து

4.நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து

5.அந்த உணர்வின் தன்மையைத் தனக்கு உணவாக எடுத்து விளைகிறது.

 

ஒரு நெல்லை ஊன்றியபின் எப்படிப் பல நெல்லாக விளைந்து வருகின்றதோ அது போல ஒரு வித்தின் தன்மை அதற்குத் தக்கவாறு பல எண்ணங்கள் உணர்வுகள் வருகின்றது. அந்த வித்தின் தன்மையே விளைகின்றது.

 

சிவன் ஆலயத்தில் சிவனின் கணக்குப் பிள்ளை யார்…?

 

நாம் சுவாசித்த உணர்வுகளே – நந்தீஸ்வரன். அதாவது நாம் நுகரும் உணர்வுகளைத்தான் நந்தீஸ்வரன் என்று காட்டுகின்றார்கள்.

 

நம் உடலுக்குள் (சிவம்) எந்தக் குணத்தின் தன்மை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதனின் கணக்குகளுக்கொப்பத் தான் நம் எண்ணம் சொல் செயல் இயக்கம் இருக்கும்.

 

எதனின் கணக்கை உடலுக்குள் கூட்ட வேண்டும் என்று நம்மைச் சிந்திக்கும்படி செய்தார்கள் ஞானிகள்.

 

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டி அந்தக் கணக்கின் பிரகாரம் நாம் அருள் ஞானியாக ஆக வேண்டும் என்பதற்காக

1.ஆலயங்களில் தெய்வ குணமாகப் படைத்துக்

2.காவியங்களைத் தீட்டித் தான் கண்ட கருத்தினை

3.மக்களுக்குத் தெரியப்படுத்தினார்கள் ஞானிகள்.

பெரிய பெரிய கோவில்களுக்கு அருகில் சிலர் “ஆண்டவன் எனக்கு நேரடியாகச் சொல்கிறான்…” என்று ஜோதிடம் மந்திரம் யந்திரம் செய்கின்றார்கள் – அதனின் உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

Image

mantra

பெரிய பெரிய கோவில்களுக்கு அருகில் சிலர் “ஆண்டவன் எனக்கு நேரடியாகச் சொல்கிறான்…” என்று ஜோதிடம் மந்திரம் யந்திரம் செய்கின்றார்கள் – அதனின் உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

 

 

பக்தி நிலைகளில் நாம் போகும் போது கோயில்களுக்குப் போகிற இடத்திலே சிலர் ஆண்டவன் எனக்கு நேரிடையாகச் சொல்கிறான் என்று சொல்வார்கள்.

 

இந்த மாதிரிச் சொல்லிக் கொண்டு பழனியில் ஒருவர் இருந்தார். நான் மிலிட்டரிக்குப் போய் விட்டு வந்தேன். அது… இது… என்று சொல்கிறார்.

 

ஜோசியங்களை சொல்லிக் கொண்டு அது இப்படி நடக்கிறது. அப்படி நடக்கிறது என்றெல்லாம் சொல்வார்.

 

உங்கள் வீட்டில் இந்தச் சக்கரத்தை வைத்திருந்தால் மிகவும் நல்லது என்று சொல்வார். அதைக் கொடுத்துக் காசுகளை வாங்குவார்.

 

கோயில்களுக்கு வருபவர்களைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டு அவர்களை எப்படி மடக்குவது என்று சில வேலைகளைச் செய்வார்.

 

நான் (ஞானகுரு) சித்து ஆகியிருக்கும் நிலையில் அவரைச் சந்திக்கும் போது சொன்னேன்.

 

உன்னுடைய மந்திர வித்தை சிறிது காலம் செல்லும். ஆனால் இது உன்னையே வீழ்த்தும். நீ முழுமையாகக் கற்றுக் கொள்ளவில்லை.

 

காசைக் கொடுத்து நீ வாடகைக்கு வாங்கி இந்த வேலையைச் செய்கிறாய்.

1.அற்பக் காசுக்காக இதைச் செய்கிறாய்.

2.அந்த வினைகளை எப்படி நீ தெரிந்து கொள்ளப் போகின்றாய் பார்…! என்றேன்.

 

அதெல்லாம்… என்னால் எதை வேண்டும் என்றாலும்… செய்ய முடியும்…! என்றார். கடைசியில என்ன செய்தார்…?

 

ஒருவரைக் கொல்வதற்காக வேறொருவரிடம் சக்தியை வாங்கி வைத்துப் பழனி வையாபுரி குளத்தில் வைத்துச் செய்தார். அவர் அங்கேயே செத்து மடிந்தார்.

 

இதே மாதிரி பழநி பஸ் ஸ்டாண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி. இதே மாதிரி கோவிலுக்குப் போவோரை ஒருவர் மடக்கிக் காசுக்காகச் செய்து கொண்டிருந்தார்.

 

ஒருவர் அவர் இரண்டு சம்சாரத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

 

சார்…! இங்கே வாருங்கள்…! என்றார். நீங்கள் உங்கள் பாக்கெட்டில் வைத்திருந்த காசெல்லாம் காணாமல் போய்விட்டது…! என்றார்.

 

அதெல்லாம்… “ஒன்றும் இல்லை…!” என்றார்கள் அவர்கள்.

 

“இல்லை இல்லை… நீங்கள் பாருங்கள்…!” என்றார்.

 

உங்கள் பாக்கெட்டில் இன்னென்ன நம்பர் உள்ள காசு இருக்கிறது… பாருங்கள்…! என்றார்.

 

“பணம் காணாமல் போய்விட்டது…!” என்று சொல்லிவிட்டு இன்னென்ன நம்பர் உள்ள காசு இருக்கிறது என்று சொல்லி அதை அவர்கள் பார்த்தவுடனே இவர் மீது முழு நம்பிக்கை வந்துவிடுகிறது.

 

அப்புறம் “போனது வந்தது… சண்டை போட்டது… அவர் வாழ்க்கையில் நடந்தது…” எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினார்.

 

எல்லாம் அவர்கள் கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

 

ஏனென்றால் முருகன் உங்களுக்கு நிறைய இந்த மாதிரி அருள் கொடுத்திருக்கின்றார். சரி…! நீங்கள் மலைக்குப் போய் முருகனைத் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

 

முதலில் “வெறும் ஒரு ரூபாய் தான்… அதற்கு மேல் ஒன்றும் வேண்டாம்…!” என்று சொல்லிக் கவர்ச்சி செய்து கொள்கிறார்கள்.

 

அடுத்தாற்போல் என்ன சொல்கிறார்?

 

உங்களை மடக்குவதற்காக எதிரிகள் இருக்கின்றார்கள். அதைச் சரி செய்ய வேண்டும்…! எதற்கும் ஒரு ஐநூறு ரூபாய் கொடுங்கள். அப்புறம் நல்லதான பிற்பாடு மிச்சத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கேட்கிறார்.

 

“அதற்காக உங்களுக்குச் சக்தி தருகிறேன்…! என்று சொல்லிக் கோவிலுக்கு வருபவர்களிடம் சொல்லி ஒவ்வொரு நாளும் இப்படித் தட்டிப் பறிக்கின்றார்கள்.

 

இந்த மாதிரி ஜோதிடங்கள் நிறைய உண்டு. ஏனென்றால்  கரு வித்தைகளை வைத்து அந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி இப்படிச் செய்வார்கள்.

 

சமுதாயத்தின் மத்தியில் “இப்படி எத்தனையோ பேர்…” மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளார்கள்.

 

கோவில்கள் இருக்கும் பக்கம் போனால் ஜோசியம் ஜாதகம் மந்திரம், தந்திரம் ஏவல் பில்லி சூனியம் என்று ஏகப்பட்டது இருக்கின்றது. ஏனென்றால் அங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள் அல்லவா…!

 

இதை வைத்து ஏமாற்றி “இது தான் கடவுள்” என்ற நிலைகளில் முருகனே சொல்வதாகச் சொல்கிறார்கள்.

 

அப்புறம் இன்னொரு இடத்தில் என்ன செய்கிறார்கள்?

 

எல்லாம் உட்கார்ந்திருக்கின்றார்கள்.

 

முருகா…! வாடா…! என்று அங்கிருப்பவம் சொல்கிறான். தீபத்தைப் பொருத்துடா…! என்கிறான். “டக்…” என்று அந்தக் கற்பூரம் எரிகிறது.

 

ஆகா..! உனக்கு முருகன் ஆசி கொடுத்திருக்கின்றார். உனக்கு எல்லாம் நன்றாக இருக்கிறது.. அது இது…! என்று இந்த மாதிரி இரண்டு பேரிடம் சொல்லிக் காசை வாங்குகிறான்.

 

நல்ல பண்பு உள்ள ஆலயங்களில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

 

பக்தி கொண்ட மக்களும் அதில் ஏமாற்றம் அடைந்து உண்மையின் உணர்வை அறிய முடியாதபடி

1.இந்த உடலின் ஆசைக்கு இதற்குள் சிக்கப்பட்டுத்

2.தனது பண்புகளை இழந்த நிலையில் இருக்கிறார்கள்.

 

பெரும் பகுதி பாருங்கள்…! திருவண்ணாமலை ஆனாலும் சரி பழனி ஆனாலும் சரி திருப்பதி ஆனாலும் சரி இப்படிப் பல பேர் அங்கிருந்து இந்த வேலைகளைச் செய்கிறார்கள்.

 

நாடி சாஸ்திரம் என்று எடுத்துக் கொண்டால் யட்சினி நாடி- அரசர்கள் தனக்குள் அனுபவித்த இப்படி நாடி சாஸ்திரங்கள் உண்டு.

 

எதன் வழிகளில் அரசர்கள் செய்தார்களோ விஸ்வாமித்திரர் நாடி கௌசிகர் நாடி என்று அன்று வைத்த சிலதுகளை வைத்து நாடிகளைப் பார்த்து நடந்தவைகளைச் சொல்லும். நடக்கப் போவதைச் சொல்லாது.

 

இதைப் போன்று சில தவறான நிலைகளை செயல்படுத்தப்பட்டுத் தவறின் பாதைக்கே அழைத்துச் செல்கின்றனர். எல்லா மதத்திலும் சரி இதே தான்.

 

உடலிலிருந்து பிரிக்கப்பட்ட ஆன்மாக்களை வைத்து சில மந்திர ஜாலங்களைச் செய்து இது தான் ஆண்டவன் செயல் என்ற நிலையில் செய்கின்றார்கள்.

 

உண்மையின் இயக்கத்தைப் பெறுவதற்கு மாறாக உடலின் இச்சைகள் கொண்டு பல தவறுகள் நடக்கின்றது. இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

 

நாம் ஞானிகள் காட்டிய மெய் வழியில் அந்த அருள் ஞானத்தைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுதல் வேண்டும்.

 

1.உண்மையின் உணர்வின் தன்மையை உணர்ந்து

2.அந்த ஆலயத்தின் பண்புகளைத் தெளிவாகத் தெரிந்து

3.ஆலயத்தை நாம் மதித்து நடத்தல் வேண்டும்.

 

நாம் எந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று அந்த ஆலயத்தில் ஞானிகள் சிலையை வைத்தார்களோ அந்தக் குணத்தை நாம் பெறுவதற்குண்டான முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.

 

நமது பக்தி எதுவாக இருக்க வேண்டும்?

 

1.இந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்.

2.தெய்வீகப் பண்புகளையும் தெய்வீக அருளையும் நாங்கள் பெற வேண்டும்.

3.இங்கே வருவோர் அனைவரும் நலம் பெற வேண்டும்

4.ஆலயம் வரும் குடும்பங்கள் அனைத்தும் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்ற

5.இந்த எண்ணத்தில் தான் நாம் இருத்தல் வேண்டும்.

தன்னை அறிந்து பத்தாவது நிலையாக கல்கி –  ஒளியாக மாற்றி  கொள்ளும் நிலை தான் விஜய தசமி

Image

kalki - lights

தன்னை அறிந்து பத்தாவது நிலையாக கல்கி –  “ஒளியாக மாற்றி  கொள்ளும் நிலை தான் விஜய தசமி”

 

 

விஜய தசமி என்பது உங்களை நீங்கள் அறிந்து கொள்ளும் நிலை தான். என்னை நான் (ஞானகுரு) அறிந்து கொள்ளும் நிலை தான்.

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அந்த நிலைகள் கொண்டு என்னை நான் அறிந்து கொண்டேன். என்னை நான் அறிந்து கொண்ட நிலைகளை உங்களுக்கும் சொல்லுகின்றோம்.

 

அதே மாதிரி நீங்களும் அறிந்து கொண்டு வளர வேண்டும்.

 

அறியாது சேர்ந்த தீமைகளை நீக்கும் மெய் ஒளியான அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்கெல்லாம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற குருவின் ஆணைப்படி இதை உபதேசிக்கின்றோம்.

 

அதை நீங்கள் பெறவேண்டும் என்று எண்ணினால் உங்களுக்குக் கிடைக்கின்றது. எனக்குள்ளும் வளர்கின்றது.

 

உதாரணமாக இங்கு ரோட்டில் இருக்கக்கூடிய குப்பைகளை அப்புறப்படுத்திச் சுத்தப்படுத்த வேண்டும் என்று எண்ணினால் தான் அங்கு சுத்தப்படுத்தும் நிலைகள் வருகின்றது.

 

குப்பையாக இருக்கின்றது…! சுத்தப்படுத்த வேண்டும்… சுத்தப்படுத்த வேண்டும்… என்று “வெறும் வார்த்தையால்…” சொல்லிக் கொண்டே இருந்தால் அது சுத்தமாகாது.

 

1.எப்பொருளானாலும் செயல் படுத்தும் எண்ணம் முதலில் உருவானாலும்

2.அந்தச் செயல் படுத்தும் உணர்வின் தன்மை நமக்குள் செயல்படும் பொழுது

3.அந்த உணர்வுகள் விளைந்தே அந்த உணர்வின் தன்மை செயலாக

4.நம்மைச் செயல்படுத்துகின்றது.

 

மெய் ஞானிகள் பெற்ற அருள் உணர்வுகளை எல்லோருக்கும் பெறச் செய் என்று குருநாதர் எனக்குச் சொன்னார். அதைக் கூர்ந்து கவனித்தேன்.

1.இந்த உணர்வு எனக்குள் “வித்தாகப் பதிந்தது…”

2.குருநாதர் சொன்னதை மீண்டும் மீண்டும் நினைக்கின்றேன்.

3.இந்த உணர்வின் அலைகள் எனக்குள் பெருகுகின்றது.

4.பெருகிய நிலைகள் கொண்டு “அந்த வித்து” எனக்குள் விளைகின்றது.

 

ஞானமாக எனக்குள் விளைந்த வழியைத்தான் நான் உங்களுக்குள் சொல்லுகின்றேன்.

 

ஏனென்றால் இந்த ஞான வித்து குருநாதர் கொடுத்தது. அந்த வித்து பலவாறு பல நிலைகள் விளைந்தது. அதிலே அருள் ஞான வித்தின் நிலையைத் தான் உங்களுக்குள் ஆழமாக பதியச் செய்கின்றோம்.

 

பதிந்த வித்தின் நிலைகளை வளர்க்கத் தீமைகள் வரும் பொழுதெல்லாம் யாம் சொன்ன பக்குவப்படி (நீர் ஊற்றுவதும்)

1.”மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்ற

2.இந்த எண்ணங்களை நீங்கள் நினைவு படுத்திக் கொண்டு வந்தீர்கள் என்றால்

3.ஞானிகளின் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் விளைந்து

4.உங்களை அறியாது சேர்த்த விஷத்தின் தன்மையை முறிக்க இது உதவியாக இருக்கும்.

 

என்னைப் போல் நீங்களும் ஞானியாக முடியும்.

“நம் உடல்” என்று எண்ண வேண்டியதில்லை… “உயிரால் உருவாக்கப்பட்டது” – நுகரும் உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றுவோம் என்று சபதம் எடுப்போம்

Image

soul lights dasami

“நம் உடல்” என்று எண்ண வேண்டியதில்லை… “உயிரால் உருவாக்கப்பட்டது” – நுகரும் உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றுவோம் என்று சபதம் எடுப்போம்

 

 

உயிரைக் கடவுளாக மதியுங்கள். உடலைச் சிவமாக மதியுங்கள் கண்ணைக் கண்ணணாக மதியுங்கள்.

 

நம் கண்கள் நல்லது கெட்டதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றது. கெட்டது என்று பார்க்கும் பொழுது அந்தக் கெட்டதை நீக்குகின்றோம்.

 

கண்களால் பார்த்துத்தான் புறப்பொருள்களில் உள்ள கெட்டதை அறிந்து பின் அதை அகற்றுகின்றோம்.

1.புறப்பொருளில் கெட்டதை அகற்றுவது போல

2.நம் ஆன்மாவிலும் உடலிலும் சேர்ந்த தீமையான உணர்வுகளை

3.மகரிஷிகளின் அருள் ஒளியால் துடைத்துப் பழகுங்கள்.

 

உடலான சிவத்திற்குள் தீமையான உணர்வுகள் சேர்ந்ததும் நோயாக வளருகின்றது. உடலான சிவத்திற்குள் கெட்ட சக்திகள் வராதபடி அதைத் தடுத்துப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுங்கள்.

 

1.யாருடைய உடலோ…! என்று எண்ண வேண்டாம்.

2.உங்களுடைய உடல்…! என்று எண்ண வேண்டாம்.

3.உயிரான நிலைகள் இத்தனையும் உடலாகப் படைத்து

4.நமக்குள் செயலாக்கும் நிலைகள் கொண்டு இயக்குகின்ற அந்தச் சக்தியே “உயிர் தான்…” என்று உணர்ந்து

5..இந்தப் பொறுப்பினை எடுத்துக் கொண்டால் நாம் புனிதத் தன்மை பெறலாம்.

 

அதைத் தெரிந்து கொள்ளும் நிலைக்காகத்தான் நான் யார்? தான் யார்? இந்தப் பிள்ளை யார்? என்று பிள்ளையார் சுழி போட்டுக் காட்டுகின்றார்கள்.

 

முன் சேர்த்துக் கொண்ட வினைக்களுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலைக் கொடுத்தது உயிர். நமக்குள் இருக்கக்கூடிய கணங்களுக்கு எல்லாம் ஈசனாக இயக்குவது உயிர்.

 

மூஷிகவாகனா… நாம் எந்தெந்த குணங்களைச் சுவாசித்தோமோ அந்த உணர்வுகலே வாகனமாக நேற்றைய செயல் இன்றைய சரீரமாக உருவாக்கி வைத்திருக்கின்றது. ஈசன்.

 

கணங்களுக்கு அதிபதியாக கணபதியாக இருப்பதும் உயிர் தான். எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதை அதிபதியாக்கி மற்ற உணர்வுகளை ஒடுக்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றான் உயிர்.

 

இவை எல்லாம் யார்…? இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…!

 

நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு உடலானது. உடலின் நிலைகளிலிருந்து நமக்குள் உள் நின்று அவன் இயக்குகின்றான்.

 

நுகர்ந்த உணர்வுகள் உடலாக ஆனாலும் அது அது தன் தன் உணர்வைக் காக்கும் நிலையாக (உடலைக் காக்கும் உணர்வுகள்) அதனின் வழிக்குச் செல்லாது

1.உயிரான ஈசனின் அருளைப் பெறுவோம்

2.உயிருடன் ஒன்றி நாம் என்றும் நிலையான சரீரம் பெறுவோம்

3.இருளை வென்று பேரொளியாக ஆன மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவோம்

4.நுகரும் உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியாக நாம் பெறுவோம் என்று சபதம் எடுப்போம்.

 

ஆகவே நமக்குள் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் நோய்கள் வந்தாலும் நம்மை அணுகாது தடுக்க மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

 

இதை உங்களுக்கு வெறும் சொல்லாகச் சொல்லவில்லை. அருள் மருந்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

 

இதை எண்ணி எடுக்கும் பொழுது உங்கள் துன்பத்தைப் போக்க இது உதவும். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு இப்படித்தான் அருளினார். அதைத்தான் உங்களுக்குள் பதியச் செய்கின்றேன்.

 

நம் எண்ணத்துக்குள் தான் அனைத்தும் உள்ளது. எந்த நிலையைப் பெறவேண்டும் என்று நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதுவாக ஆகின்றீர்கள்.

 

வாழ்க்கையில் துன்பத்தைத் துடைக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவீர்கள். தன்னுள் அறியாது வந்த இருளை நீக்குவீர்கள்; மெய் ஒளி காண்பீர்கள்; மெய் வழி செல்வீர்கள்; மெய் ஒளி பெறுவீர்கள்

 

அந்த மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் என்றும் நிலையான பெரு வீடு பெரு நிலையாக அனைவரும் பெறவேண்டும் என்று பிரார்த்தித்திக்கின்றேன்.

வியாபாரம் தொழில் செய்வோர் ஆத்ம சுத்தியைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை – “உங்கள் வியாபாரமும் தொழிலும் பெருகி மகிழ்ச்சி உண்டாகும்”

Image

Flower Meditation

வியாபாரம் தொழில் செய்வோர் ஆத்ம சுத்தியைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை – “உங்கள் வியாபாரமும் தொழிலும் பெருகி மகிழ்ச்சி உண்டாகும்”

 

 

இப்போது நாம் வீட்டை விட்டு வெளியிலே எந்தக் காரியத்திற்குப் போனாலும் இப்படி

1.ஓம் ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ண வேண்டும்.

2.அடுத்து அம்மா அப்பாவை எண்ண வேண்டும்.

3.அவர்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.

என்று வானத்தை நோக்கி ஏங்கி எண்ண வேண்டும்.

 

அடுத்துக் கண்ணை மூடி உங்கள் உடலுக்குள் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று உங்கள் நினைவு முழுவதையும் உங்கள் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

 

அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் இந்த நினைவை உங்கள் உடலில் சேர்த்துச் சேர்த்துப் பழக வேண்டும். இது தான்
“ஆத்ம சுத்தி” என்பது.

 

இப்போது நீங்கள் வெளியில் போகும்போது இந்த மாதிரி “ஓ…ம் ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி விட்டு அம்மா அப்பாவை நினைத்துக் கொண்டு

1.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.

2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

3.எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும்.

என்று உங்கள் உடலுக்குள் நினைவைச் செலுத்தி ஒரு ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் எண்ணி இருக்கலாம்.

 

அவ்வாறு இருந்தவுடனே கண்ணைத் திறக்கின்றீர்கள் பின்னர்

1.நாங்கள் பார்க்கின்றவர்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்.

2.நாங்கள் பார்ப்பவர்களுக்கு அந்த நல்ல மனம் வர வேண்டும்.

3.எங்கள் சொல் இனிமை பெற வேண்டும்.

4.எங்கள் செயல் எல்லாம் நல்லதாக இருக்கவேண்டும் என்று

5.வீட்டை விட்டு வெளியில் போகும் போது இதைப்போல எண்ணிக் கொள்ளலாம்.

 

நான் கடை வைத்திருக்கின்றேன். கடையைத் திறக்கப் போகின்றேன் என்று சொன்னால் வீட்டில் இந்த மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டுக் கடையை நினைக்க வேண்டும்.

 

மகரிஷிகள் அருள் சக்தி கடையில் படர வேண்டும்.  நம் கடையில் இருக்கும் சரக்குகளை வாங்குபவர்கள் வாடிக்கையாளர்கள் அனைவருமே

1.மகரிஷிகள் அருள் சக்தியால் உடல் நலம் மனபலம் பெற வேண்டும்.

2.எங்கள் பார்வை சொல் அவர்களுக்கு நல்லதாக்க வேண்டும்.

3.எங்களப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நல்ல மனம் வர
வேண்டும் என்று

கடைக்குப் போகும் போது இப்படிச் செய்து விட்டுச் செல்லுங்கள். ஆனால் கடைக்குப் போனவுடனே இதே மாதிரி இரண்டாவது தரம் செய்ய வேண்டும்.

 

1.எங்களிடம் சரக்குகளை வாங்கிப் பயன்படுத்துகின்றவர்கள்  குடும்பத்தில் அனைவரும் மகரிஷிகள் அருள் சக்தியால் நலமாக இருக்க வேண்டும்.

2..அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்

3.எங்களைப் பார்ப்பவர்கள் மலரைப் போல மணம் பெற வேண்டும் என்று

கடையில் உட்கார்ந்து அதை எண்ணுதல் வேண்டும்.

 

இது தான் “செய்யும் தொழிலே தெய்வம்” என்பது. இதை எண்ணி நம் உயிரிலே சேர்க்கப்படும் போது நம் உடலில் அந்த வாசனை வரும்.

 

ஒவ்வொருவருக்கும் இந்தச் சரக்கு எடுத்துக் கொடுக்கும்
போதெல்லாம்

1.மகரிஷிகள் அருள் சக்தி வாடிக்கையாளர்கள் பெற வேண்டும்.

2.சாமான்கள் வாங்கிக் கொண்டு போனவர்கள் நன்றாக இருக்க வேண்டும் “ஈஸ்வரா…” என்று

3.உயிரை நினைத்து… நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று மனதில் நினைத்துக் கொடுங்கள்…!

4.”செய்யும் தொழிலே தெய்வம்” – அந்த இடத்தில் நம் எண்ணம் செயல் எல்லாமே தெய்வமாக மாறுகின்றது.

5.உங்கள் வியாபாரம் நன்றாகப் பெருகும். அதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

 

அவர்கள் சாமான் வாங்க வரும்போது இடைவெளியில் எத்தனையோ இடையூறுகளைப் பார்த்து விட்டு வருகின்றனர். அல்லது அவகள் குடும்பத்தில் கஷ்டமாக இருக்கும் நேரத்தில் நம்மிடம் சரக்கு வாங்குகிறார்கள் என்றால் அந்தக் “கஷ்டமான உணர்வு” அவர்கள் உடலில் இருக்கும்.

 

சரக்கு வாங்கப்போகும் போது “கஷ்டமான உணர்வுடன்… அந்தச் சொல்…” வெளியே வருகின்றது. அவர்கள் சொல்வதைக் காதில் கேட்கின்றோம். சரக்கு எடுத்துக் கொடுக்கின்றோம்.

 

அவர்கள் உடலில் விளைந்து அந்த உணர்வான சத்து அந்த சொல்லுக்குள் கலந்து வரும் போது அந்த உணர்ச்சியைத் தூண்டி அவர்கள் உடலிலிருந்து வரும் “சங்கடமான மணத்தை…” நாம் சுவாசிக்கின்றோம்.

 

நாம் தவறு செய்யவில்லை. நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் இப்படி வந்து சேர்ந்து விடுகின்றது. அப்போது இதை நிவர்த்திக்க வேண்டும்.

 

அந்த மாதிரிச் சமயங்களில் உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு நம் உடலில் நல்லதை நுகர்ந்து அந்த வாசனையை இங்கே பெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

 

வாடிக்கையாளர்கள் நம்மைப் பார்த்து எண்ணும் போது இந்த உணர்வு என்ன செய்யும்? அவர்களிடம் கொஞ்சம் போய்ச் சேர்கின்றது.
அவர்கள் அழுக்கைப் போக்குகின்றது.

 

நம் உடலில் இந்த மணம்/மனம் என்ன செய்யும்? அவர்கள் தீமை நமக்குள் வரவிடாமல் தடுக்கும். இது தான் நரசிம்ம அவதாரம் என்பது.

 

மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்ற நினைவினை வானை நோக்கிச் செலுத்தித் தியானித்து அதை உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது நம் உடலில் இருந்து அந்த வாசனை வரும்.

 

சண்டை போடுகின்றவர்களை நீங்கள் வேடிக்கை பார்த்து விட்டு வந்தால் உங்கள் உடலில் ஒரு விதமான எரிச்சல் வரும்.

 

அதைப்போல அந்த ஞானியினுடைய அருள் சக்தி உங்கள் உடலுக்குள் செலுத்திக் கொண்டால் அந்த ஞானியர் உணர்வு நறுமணம்
உங்கள் உடலிலிருந்து வரும்.

 

வாடிக்கையாளர்கள் சரக்கை உங்களிடம் வாங்க வரும்போது

1.உங்களைப் பார்த்துக் கேட்கும் பொழுது உங்கள் வாசனை அவர்கள் நுகருகின்றனர்.

2.அப்போது அவர்களுக்கு நன்மை கிடைக்கின்றது.

3.உடலில் இருந்து வரும் ஞானியரின் நறுமணம் தெய்வமாக இருந்து அவர்களுக்கு நன்மை செய்கின்றது.

4.அதே சமயத்தில் அவர்களுடைய உணர்வு நமக்குள் வராமல் தடுக்கின்றது.

 

இடைப்பட்ட நேரத்தில் ஆத்மசுத்தி செய்து கொண்டு மறுபடியும் நம் வாடிக்கையாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று சுத்தம் செய்து கொண்டு வர வேண்டும்.

 

ஒரு வேலை செய்து முடித்த பின் அடுத்துத் தண்ணீர் விட்டுக் கையைக் கழுவி விட்டுச் சாப்பிடுகின்றோம். அதற்குப் பின் அடுத்த வேலையைத் தொடுகின்றோம்.

 

இதே மாதிரி வாழ்க்கையில் நம்மிடம் கெடுதல் வராதபடி தடுத்து நிறுத்திப் பழக வேண்டும்.

 

அப்படி இல்லாமல் இந்தச் சாமியார் செய்வார் அந்தச் சாமியார் செய்வார் அந்த ஜோசியம் செய்யும் இந்த யாகம் செய்யும். இந்த வேள்வி செய்யும் அந்தக் கடவுள் காக்கும் என்றால் எந்தக் கடவுளும் காப்பாற்ற மாட்டார்கள்.

1.உங்கள் உயிர் தான் கடவுளாக இருக்கும்.

2.உங்களை ஆள்வதும் உங்கள் உயிர் தான் எண்ணிக் கொடுப்பதைப் படைக்கின்றான்.

3.நீங்கள் எண்ணிக் கொடுப்பதைச் செயலாக்குகின்றான்.

4.நீங்கள் எண்ணியதை விளைய வைக்கின்றான்.

5.நீங்கள் எண்ணியதைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றான்.

 

இந்த உடலை விட்டுப்போன பிற்பாடு நாம் எதெல்லாம் இந்த உடலில் சேர்த்தோமோ அதற்குத் தகுந்த மாதிரி இந்த உடலை உருவாக்கிக் கொடுத்து விடுகின்றான். உயிரினுடைய வேலை அது தான்.

 

நம் கண் என்ன செய்கின்றது?

1.எண்ணியதெல்லாம் நமக்குக் காட்டுகின்றது.

2.நல்லது கெட்டதைக் காட்டுகின்றது

 

நம் உடல் என்ன செய்கின்றது?

1.எதை எடுத்துக் கொடுத்தாலும்

2.நம் உடல் அது ஐக்கியம் ஆக்கிக் கொள்கின்றது.

 

நம் உயிர் என்ன செய்கின்றது?

1.நாம் எண்ணியதெல்லாம் படைத்து அதை இயக்கிக் காட்டுகின்றது.

2.உடலுடன் சேர்த்து வைத்துக் கொள்கின்றது.

 

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இப்போது மனித உடலைக் கொடுத்திருக்கின்றது.

 

இப்பொழுது நாம் சேர்த்துக் கொண்ட உணர்வெல்லாம் வினையாகச் சேர்த்துக் கொண்டே இருக்கின்றது. இந்த வினைக்கு நாயகனாக அடுத்த உடலை உண்டாக்கி விடுகின்றது.

 

இன்று மனித உடலில் இருக்கும் நாம் எந்த வினையைச் சேர்க்க வேண்டும்? எதைச் செய்ய வேண்டும்?

 

இந்த ஆறாவது அறிவை வைத்துச் சுத்தப்படுத்துகின்ற நிலை இருக்கின்றது. இதை வைத்து நாம் சுத்தப்படுத்தத் தவறினோம் என்றால் மனிதனல்லாத உருவுக்குள் தான் போவோம்.

 

உடைகளைக் கட்டுகிறோம். அழுக்காகிவிட்டால் சும்மா துவைத்தாலே அழுக்குப் போகின்றது என்று விட்டு விட்டோம் என்றால் அழுக்குப் போவதில்லை.

 

இரண்டாவது தரம் துவைக்கும் போது துணியில் நூல்
எல்லாம் அப்படியே பிய்த்துக் கொண்டு போய்விடும். அழுக்குப் போகாது.

 

தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியவுடனே அதில் கலந்துள்ள பித்தளை வெள்ளி செம்பு ஆவியாகப் போய்விடுகின்றதோ அதைப் போல் தீமைகளைப் பிரித்துப் பழகியவர்கள் மகரிஷிகள்.

 

மகரிஷிகளின் உணர்வை நாம் எடுத்து நம் உடலில் அடிக்கடி சேர்த்தவுடனே நம்மை அறியாது வரும் தீமைகளை இது பிரித்து நீக்கிடும். ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக சிருஷ்டிக்கக்கூடிய ஒளியாக மாற்றிக் கொண்டே வருகின்றோம்.

1.நம் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும்.

2.பிறருடைய துன்பமான உணர்வு நம்மை வந்து பாதிக்காது.

3.”செய்யும் தொழிலே தெய்வம்” என்றால் கடையில் இப்படி இருக்க வேண்டும்.

 

எந்தத் தொழிலுக்குப் போனாலும் அல்லது வேலை பார்த்தாலும் இதே போல் செய்ய வேண்டும். இது ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

அதிகாலையில்… “உங்களைத் தட்டியெழுப்பும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்”

Agastya Lobamuthra

அதிகாலையில்… “உங்களைத் தட்டியெழுப்பும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்” 

எவ்வளவு தான் இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் ஒரு நொடிக்கு நொடி ஒவ்வொன்றையும் பார்க்கின்றோம்.
1.நல்லதை நினைத்துப் பார்க்கின்றோம்.
2.கொஞ்சம் குறை ஏற்பட்டு விட்டது என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.

வேதனை என்கின்ற அத்தனையும் விஷம். நம் உடலில் வேதனை கொஞ்சம் கொஞ்சமாக விஷம் அதிகமாகிப் போனதென்றால் உடல் முழுவதும் நஞ்சாக மாறி நோயாகி விடுகின்றது.

வேதனைப்படக்கூடிய சமாச்சாரங்களைக் கேட்கும் போது எல்லாம் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இரவில் படுக்கப்போகும் போது ஆத்ம சுத்தி செய்து விட்டுப் படுங்கள். காலையில் எழும்போது ஆத்ம சுத்தி செய்து விட்டு உங்களால் உயர்ந்த எண்ணங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

நாம் எண்ண வேண்டியது மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
1.எங்கள் பார்வையால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்
2.எங்கள் மூச்சு உலகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சக்தியாகப் படரவேண்டும் என்று எண்ணுங்கள்.

அனு தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் உங்கள் எல்லாருக்கும் இந்தச் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று துருவ மகரிஷியை எண்ணித் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தத் தியானம் (ஞானகுரு) செய்கின்றேன்.

அப்போது அந்த உணர்வலைகள் வரப்போகும் போது அதிகாலை நான்கு மணி மேலே போனதென்றால் இந்த உபதேசத்தைப் பதிவாக்கிக் கொண்டவர்களைத் தன்னாலயே எழுப்பிக் கொண்டே இருக்கும். கொஞ்சம் அந்த விழிப்பு நிலை வரும்.

சில நேரங்களில் அந்த உணர்ச்சிகள் தென்படும். சில நேரங்களில் நல்ல வாசனைகள் வரும்.
அந்த நேரத்தில் “ஒரு ஐந்து நிமிடமாவது…”
1.துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
3.எங்கள் உடலில் பெற வேண்டும் என்று நினைத்து விட்டுப் படுத்துக் கொள்ளுங்கள்.

நேரடியாக துருவ நட்சத்திரத்தையோ துருவ மகரிஷியையோ எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அது தாங்கக் கூடிய சக்தி கிடையாது.
1.அது மிகவும் வீரியமான உணர்வுகள் கொண்டது.
2.அது எடுத்தீர்கள் என்றால் உங்கள் உடலில் சூடாகும்.
3.உங்களுக்கு அந்தத் தாங்கும் சக்தியைக் கொடுத்துத் தான் இப்படி எண்ணச் சொல்கிறோம்.

எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணும்போது உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் போது
1.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்.
3.நாங்கள் பார்ப்பவர் எல்லாம் நலம் பெற வேண்டும்.
4.எங்களைப் பார்க்கின்றவர்களுக்கெல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று
5.ஒரு ஐந்து நிமிடத்தில் அது எண்ணி முடித்துக் கொள்ள வேண்டும்.

அதிகாலையில் 4.30மணிக்கு இது போல எண்ண வேண்டும். அதற்கப்புறம் அந்தச் சப்தரிஷி மண்டலங்களை எண்ணி எண்ணுங்கள். இப்படிச் செய்யும் பொழுது 4.30மணிக்கு ஒரு வழி காட்டியாக உங்களுக்கு அமையும்.

இதைக் கேட்டவர்கள் அத்தனை பேருமே எந்தக் கஷ்டமான வார்த்தைகளைக் கேட்டாலும் பார்த்தாலும் உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு எங்கள் பார்வை நல்லதாக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

பத்தாவது நிலையான ஒளி நிலை பெறுவதற்கு இது தான் வழி…!

கடலில் எது கலந்தாலும் அதை உப்பு நீராக மாற்றுவது போல் “ஞானிகளின் ஒளிக்கடலில் நாம் கலந்து…” எல்லாவற்றையும் ஒளியாக்க வேண்டும்

Image

Bliss ocean - world

கடலில் எது கலந்தாலும் அதை உப்பு நீராக மாற்றுவது போல் “ஞானிகளின் ஒளிக்கடலில் நாம் கலந்து…” எல்லாவற்றையும் ஒளியாக்க வேண்டும்

 

 

நெற் பயிரை வயலில் விளைய வைத்து அதைக் குவியலாக்கும்போது எல்லோரும் உணவாக உட்கொள்ள முடிகின்றது.

 

அதே போலத் தான் ஞானிகளின் உணர்வுகளைக் குவியலாகக் குவித்தால் தான் எல்லோரும் நாம் அவரவர்களுக்குத் தேவையான பங்கை எடுத்துக் கொள்ள முடியும்.

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஞானிகளின் ஞான வித்தை எனக்கு (ஞானகுரு) ஒரு நெல்லாகக் கொடுத்தார் குருநாதர்.

 

அதைப் பல நெல்லாக விளையச் செய்து கொண்டிருக்கின்றோம்.

 

யாம் கொடுக்கும் உபதேசங்களைக் கேட்டுணர்ந்தவர்கள் எல்லாருடைய உணர்வுகளிலும் அந்த வித்தைப் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றோம்.

 

பதிய வைத்தை ஞானிகளின் உணர்வுகளை நாம் எல்லாம் சேர்த்து விளைய வைத்தால் தான் ஒரு குவியலாக வரும்.

 

ஏனென்றால் ஒரு நெல் யாருக்கும் பசியை தீர்க்காது. என் ஒருவனால் அது செய்ய முடியாது.

 

எல்லோரும் சேர்த்து ஞானிகளின் அருளாற்றல்களை விளைய வைத்துப் பெரிய குவியலாக வரப்படும் பொழுது தான் அதை மொத்தமாகப் போட்டுச் சமைத்து எல்லாருடைய பசியையும் தீர்க்க முடியும்.

 

இதைக் கேட்டுணர்ந்தவர்கள் அனைவரும் தீமையை நீக்கும் “கல்கி…” என்ற நிலையில் பத்தாவது நிலையான ஒளியின் சரீரம் பெறும் அந்த நிலையை அடைவீர்கள்.

 

1.மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து

2.உங்கள் வாழ்க்கையில் வந்த ஒவ்வொரு துன்ப நிலைகளிலிருந்தும்

3.உங்களை மீட்கச் செய்வதற்கே இந்த உபதேசம்.

4.மெய் ஒளியை வளர்த்து தீமைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளுங்கள்.

 

இந்த மெய் உணர்வுகளைக் கேட்டு வளர்த்துக் கொண்டவர்கள் உங்கள் ஊர்களில் உள்ள மற்றவர்களுக்கும் இதைத் தெரியப்படுத்தி அவர்களையும் மீட்கச் செய்ய வேண்டும்.

 

ஞானிகளின் ஆற்றலைப் பெறும் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அவர்கள் அறியாது வந்த இருளை நீக்கும் நிலைகளை நாம் பெறச் செய்ய வேண்டும்.

 

நாம் வாழும் ஒவ்வொரு இடங்களிலும் ஞானிகளின் உணர்வுகளை நம் மூச்சலைகள் மூலமாக அதைப் படரச் செய்ய வேண்டும்.

 

அப்படிப் படர்ந்தால் தான் நச்சுத் தன்மைகளிலிருந்து மனிதன் ஒவ்வொரு மனிதரும் விடுபடும் நிலைகளைப் பெருகச் செய்ய முடியும்.

 

கடல் பெரிதாக இருக்கின்றது.

1.அதில் எது கலந்தாலும் கடைசியில் “உப்பு நீராக” மாற்றிவிடுகின்றது.

2.அதாவது நல்ல தண்ணீரோ அசுத்த நீரோ சாக்கடைத் தண்ணீரோ எதுவாக இருந்தாலும்

3.அந்தக் கடலுக்குள் சேர்ந்த பின் உப்பின் நிலைக்கே அதை மாற்றி விடுகின்றது.

 

இதை போல தான் நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வுகளும் அந்த மெய் உணர்வின் கடலிலே ஒளிக்கடலான அந்த ஞானிகளின் உணர்வுடன் தான் சங்கமமாக வேண்டும்.

 

1.வாழ்க்கையில் வரக்கூடிய அசுத்தங்களோ

2.தவறான நிலைகளைக் கேட்டுணரந்தாலோ

3.உலகில் எங்கெங்கோ நடக்கும் தவறுகளைக் கேட்டு நுகர்ந்தாலோ

4.அதைப் பார்த்தாலோ அதைப் பற்றிப் பேசுவதைக் கேட்டாலோ

5.இந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் போய்

6.நம் உடல் என்ற பெரும் கடலுக்குள் உப்பாக மாற்றி

7.அதனின் (தீமையின்) செயலுக்கே நம்மை மாற்றிவிடுகிறது.

 

ஆனால் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நாம் அனைவரும் சேர்ந்து

1.மீண்டும் மீண்டும் குவியலாகக் கவரப்படும் பொழுது

2.நமக்குள் அது பெருகி நம்மை ஞானியாக மாற்றி

3.மெய் ஒளிக்குள் – மகரிஷிகளின் அருள் வட்டமான அந்த எல்லைக்குள் நம்மை அழைத்துச் சென்று விடும்.

4.அந்தப் பெரும் கடலான ஒளிக் கடலில் கலக்கும் நிலையை

5.நாம் இன்றிலிருந்தே இப்பொழுதிலிருந்தே செய்ய வேண்டும்.

 

இதைக் கேட்டுணர்ந்தவர்கள் உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருளை நீக்கி சொல்லுக்குள் இனிமை பெற்று மெய் ஒளி காணுங்கள்.

 

அதே போன்று உங்கள் சொல்லைக் கேட்டுணர்ந்தவர்கள் அவர்கள் இருள்கள் நீங்கி மெய் ஒளி காணும் சக்தியாக அவர்களுக்குள்ளும் விளையச் செய்ய வேண்டும்.

 

ஞானிகளின் உணர்வுகளை எல்லோருக்குள்ளும் விளைவிக்கும் திறன் நீங்கள் பெறவேண்டும் என்ற நிலைகளுக்குத்தான் இதைச் சொல்கிறோம்.

 

உங்கள் அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தியானம் எதற்காகச் செய்ய வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் ஆற்றல்

இன்றைய உலக நிலை

இன்றைய விஞ்ஞான உலகில், உலக மக்கள் நலம் பெற, மகிழச் செய்ய, விஞ்ஞான அறிவால் பற்பல நன்மைகள் செய்து வந்தாலும், விஞ்ஞான அறிவால், வான மண்டலத்தில், “ராக்கெட்டுகளை” ஏவி வெடிக்கச் செய்து, வான மண்டலத்தில் நச்சுத் தன்மை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பூமியில் அணுகுண்டுகளை வெடிக்கச் செய்தும், அணுக்கதிரியக்கங்களைப் பரவச் செய்தும், இயந்திரங்களை இயக்கச் செய்ய அணுக்கதிரியக்கங்களைப் பயன்படுத்தி, காற்று மண்டலத்தில், நச்சுத் தன்மைகளைப் பரவச் செய்தும், பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தூவி, பூச்சிகளைக் கொல்ல எண்ணி, காற்றையே நச்சாக்குகின்றனர், விஞ்ஞானிகள்.

ஞானியர்கள் உபதேசித்த வழியில், நல்லதையே செய்து, நல்வழியில் நடந்து, நல்ல நிலைகளைப் பெற எண்ணி, வாழ்ந்து வந்தாலும், விஞ்ஞானிகளால் பரவச் செய்த, நச்சுத் தன்மைகளை உலக மக்கள் அனைவரும் சுவாசிக்க நேருவதால், மனிதர்களின் உடல்களில் பதிந்துள்ள, நல்ல குணங்களைத் தூண்டச் செய்யும் நல் உணர்வுகளின் அணுக்களில், சுவாசித்த நச்சுத் தன்மைகள் கலந்துவிடுகின்றன.

அதாவது, விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால், எவ்வாறு கடுகடுப்பாகின்றதோ, அதைப் போன்று நற்குணங்களின் உணர்வுடன் பேசினாலும், சொல்லில் கடுகடுப்பாக வார்த்தைகள் வெளிப்படுகின்றன. இதைப் போன்று, தன்னையறியாது கோபம், குரோதம், வெறுப்பு, வேதனை போன்ற எண்ணங்கள் தோன்றுகின்றன. அது மட்டுமல்லாமல், சாதாரண மனிதர் முதல் விஞ்ஞானி வரை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டிவிடுகின்றன.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாவையும், காற்றிலுள்ள நச்சுத் தன்மைகள் உருக்குலையச் செய்து, மறு ஜென்மம் மனிதனாகப் பிறக்க தகுதியிழந்து, விஷப் பூச்சிகளாகப் பிறக்கச் செய்து விடுகின்றன.

இன்று, நாம் மனிதன் என்ற நிலை பெற்று இருந்தாலும், மீண்டும் மீண்டும்,இப்பூமியில் சுழன்று கொண்டிருக்கும் இருளான உணர்வுகளையே நுகர்ந்து, அதற்குரிய உடல்களைப் பெற்றும், இப்பூமிக்குள்ளேயே, செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

நமது அன்றாட வாழ்க்கை

காலை செய்திதாள்களைப் படிக்கின்றோம். செய்தித் தாள்களில் உள்ள விபத்து மற்றும் தீமையான செய்திகளைப் படிக்கின்றோம். அதை நுகர்கின்றோம். எதிர்மறையான உணர்வுகளுடன் நம்மிடம் பேசுபவர்களாலும், வேதனையான உணர்வுகளையும், மற்றும் வெறுப்பு, சலிப்பு, சங்கடமான உணர்வுகளையும், நாம் விரும்பாவிட்டாலும், சந்தர்ப்பங்களால் நாம் நுகர வேண்டியிருக்கின்றது.

நம்மை ஒருவன் திட்டுகிறான். நடைமுறை வாழ்க்கையில் நாம் வலிமை கொண்டவராக இருந்தால், “இரு உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்கிறோம். வலிமை குறைந்தவர்களானால், வெறுப்பையும், வேதனையையும், நுகர்கின்றோம்.

விபத்துக்களைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது, வேதனை அடைகின்றோம். பய உணர்வுகளை நுகர்கின்றோம். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. எதிர்மறையான உணர்வுகளால், குழந்தைகள் நன்றாகப் படிக்காவிட்டால் வேதனைப் படுகிறோம். குடும்பத்தில் ஒற்றுமை இல்லாவிட்டால், வேதனைப்படுகின்றோம்.

பிறிதொருவர் சாபமிடுவதை, அந்த வேதனையான உணர்வுகளை நுகர்கின்றோம். பார்க்கவும் கேட்கவும் ஏற்படும் நிலையில், உணர்ச்சிவசப்படுகிறோம். உடல் நடுக்கமாகிறது.

இப்படி, காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ விதமான உணர்வுகளையும் எண்ணங்களையும் சந்திக்கின்றோம், பார்க்கின்றோம், நுகர்கின்றோம், சுவாசிக்கின்றோம். ஆனால், இதையெல்லாம் நாம் சந்தர்ப்பத்தில் சந்தித்தாலும், விரும்பி எடுத்தாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி அது அனைத்தும் நமக்குள் இணைந்து விடுகின்றது.

இதை நாம் அறிந்திருக்கின்றோமா?, உணர்ந்திருக்கின்றோமா? இவ்வாறு நாம் சுவாசிக்கும் இந்த உணர்வுகள், நம்மை என்ன செய்யும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்கின்றோமா?

நம் உயிரின் இயக்கம்

நாம் எண்ணியவற்றை, நாம் நுகர்ந்ததை நமது உயிர் நம் உடலுக்குள் இணைக்கின்றது,  நமது உயிர் எலெக்ட்ரிக், நாம் நுகரும் உணர்வுகள் நமது உயிரில் மோதி,எலெக்ட்ரானிக்காக இயங்குகின்றது. அதாவது, நாம் நுகர்ந்த உணர்வுகள், நம்முள் எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் என்ற நிலையில், நம் உடலை இயக்குகின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட நம் உயிர், உடலில் புருவ மத்தியில் இருந்து, இயங்கிக் கொண்டுள்ளது. நமது உயிர் ஒன்றுதான், நமக்குச் சொந்தமானது. இந்த உடல் உயிரால் உருவாக்கப்பட்டதுதான். நமது உயிர், நாம் நுகரும் உணர்வுகளை (நாம் சுவாசிக்கும் உணர்வுகள்) அணுவாக உருவாக்கிக் கொண்டே உள்ளது, அந்த அணுவின் மலம்தான் உடலாகின்றது.

உயிர் சந்தர்ப்பவசத்தால்,  உடலை விட்டுப் பிரியும் நேரம்,  உடல் தான் இறக்கின்றது. உயிர் பரமாத்மாவில் (பூமியின் காற்று மண்டலத்தில்) கலந்து, சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப, மறு உடல் பெறுகின்றது. உணர்வுகள் அழிவதில்லை,உணர்வுகள் மாறிக்கொண்டேதான் உள்ளது. ஆனால், உயிர் என்றுமே அழிவில்லாத இயக்கம். அதை அறிந்து, புரிந்து, உணர்ந்து, முதல் பாடமாக நமக்குள் பதிய வைத்துக் கொண்டால்தான், மற்ற பாட நிலைகள் தெளிவாகும்.

மகரிஷிகள், ஞானிகள் பெற்ற நிலை

உயிரின் இயக்கத்தை அறிந்தவர்கள், அணுவின் இயக்கத்தை அறிந்தவர்கள், அணுவின் ஆற்றலைப் பெற்றவர்கள், உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரம் பெற்றவர்கள்தான், நமது மெய்ஞானிகள். அவர்கள் அனைவரும், நம்மைப் போன்று, இந்த பூமியில் மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தான்.

அவர்கள், தம் உணர்வுகள் அனைத்தையும் உயிரோடு ஒன்றச் செய்து, ஒளியாக மாற்றி, அழியாத நிலையாக, வேகா நிலை என்னும் நிலை அடைந்து, என்றும் பதினாறு என்று, கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றி, ரிஷி, ரிஷிபத்தினி என்று குடும்பங்களாக, ஒளி உடல் பெற்று, இன்றும், நம் பூமியின் வடக்குப் பகுதியில், விண்ணிலே துருவ நட்சத்திரமாகவும், அதைப் பின்பற்றியவர்கள் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்ற நிலையில், சப்தரிஷி மண்டலங்களாகவும், ஏகாந்த நிலைகள் கொண்டு, மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

நாம் அடைய வேண்டிய நிலை

மனிதனாகப் பிறந்தவர்கள் நாம் அனைவரும், அடைய வேண்டிய எல்லை சப்தரிஷி மண்டலம்தான். இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. நம் உயிர்தான், நமக்குச் சொந்தமானது. இந்த உடலுக்காக வாழாமல், நம் உயிருக்காக, நாம் வாழ்ந்தோமென்றால், நம் பூமியில் வாழ்ந்த நம் முன்னோர்களான, மெய்ஞானிகளும், மகரிஷிகளும், தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளையும், இன்னல்களையும் எப்படி நீக்கினார்களோ, அந்த இயற்கையின் வழியில், நாமும் வாழலாம்.

இன்றைய விஞ்ஞானத்தின் பேரழிவிலிருந்து, நம்மைக் காக்கலாம், நம் குடும்பத்தைக் காக்கலாம், நம் ஊரைக் காக்கலாம், நம் நாட்டைக் காக்கலாம், உலக மக்கள் அனைவரையும் காக்கலாம், நம் தாய் பூமியைக் காக்கலாம், இந்த பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்கலாம். இதுதான் மனிதனின் வீரியத்தின் உண்மை,

அகண்ட அண்டத்திலே உருவான படைப்புகளிலேயே, உயரிய படைப்பான, மனிதன் ஒருவனுக்குத் தான், இத்தகைய நிலை பெறக் கூடிய தகுதி உண்டு. இதுவெல்லாம், நம் மகரிஷிகள் கண்ட பேருண்மைகள்.

அகஸ்திய மாமகரிஷி, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

நம் பூமியில், பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன், துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான அவன் தான், நம் பூமியிலிருந்து முதன் முதலில் ஒளிச்சரீரம் பெற்று, விண்ணுக்குச் சென்றது.

நாம் இன்றும் “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று யாரைப் போற்றி வணங்கிக் கொண்டிருக்கின்றோமோ, அந்த அகஸ்தியன் தான், நமது பூமியை ஒரு காலம் சமப்படுத்தினான். இன்றும், இந்த உலகில் அருள்ஞானம் அனைத்தையும், நமக்கு வழி காட்டிக் கொண்டிருப்பது, அந்த துருவ நட்சத்திரம் தான்.

அந்த துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்றவர், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அவர் தமக்குள் பெற்ற இந்த பேருண்மைகளை ஞானகுரு வேணுகோபால் சாமிகள் அவர்களுக்கு உபதேசித்து, அவரையும் அந்த ஆற்றல்களைப் பெறச் செய்தார். ஞானகுரு அவர்கள், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் ஒன்றை அமைத்து, அதன் மூலமாக இந்த உலக மக்களுக்கு, மகிழ்ந்து வாழும் வழி முறைகளையும், இந்த உடலுக்குப் பின், ஒளிச்சரீரம் பெற்று, விண் செல்லும் முறைகளையும் உபதேசித்துள்ளார்கள்.

நமது ஞானகுரு காட்டிய அருள் வழி

நாம் அனைவரும் அவர் காட்டிய வழியில், ஒவ்வொரு நொடிப்பொழுதும், தியானத்தையும், ஆத்ம சுத்தியையும் கடைப்பிடித்து, தபோவனத்தில் வெளியிடப்பட்டுள்ள உபதேச ஒளி, ஒலி நாடாக்கள் (VCD, CD)  மற்றும் அருள் ஞானப் புத்தகங்களை அடிக்கடி படித்து, கேட்டு நமக்குள் பதிவு செய்தோமென்றால், இந்த வாழ்க்கையில் எத்தகைய கடுமையான இன்னல்கள் வந்தாலும், அதை மாற்றியமைக்கக் கூடிய ஆற்றல்களை நாம் பெற முடியும், நம்மைச் சார்ந்தவர்களையும், நாம் அதைப் பெறச் செய்ய முடியும்.

இது, நம்மை உருவாக்கிய நமது உயிரான ஈஸ்வரனுக்கும், ஒவ்வொரு மனிதனின் உயிரான ஈஸ்வரனுக்கும், செய்யக் கூடிய சேவையாகும். அதன் பணியாக, நாம் அனைவரும் ஒளிச்சரீரம் பெற முடியும். இந்த மனித வாழ்க்கையில், நாம் எப்பொழுதும் மகிழ்ந்து வாழமுடியும். நம் பார்வையால், சொல்லால், செயலால், அனைவரையும் அருள் வழியில் மகிழ்ந்து வாழச் செய்ய முடியும். இதுதான், ஞானிகள் காட்டிய மனித நேயம்.

தியானம்

இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், ஞானிகள், மகரிஷிகள் தங்கள் உடலில் விளைய வைத்த, ஆற்றல் மிக்க அருள் சக்திகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு, இன்றும், நமக்கு முன்னால், இந்த பூமியில் சுழன்று கொண்டுள்ளது. அந்த அருள் சக்திகளை, நாம் பெறும், நமக்குள் சேர்க்கும் சந்தர்ப்பமே தியானம்.

மேலும் அந்த மகரிஷிகள் தங்கள் புலன்களாலே பல நறுமணமான மணங்களை தங்களுக்குள் சேர்த்து, அதை சமைத்து, விளைய வைத்து, வெளிப்படுத்தியுள்ளார்கள். அந்த அருள் மகரிஷிகளின் மணங்களை, நமக்குள் நுகரும் சந்தர்ப்பமும், இந்த தியானம்தான்.

நம்மிலே பலர், தியானம் என்றாலே, மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை (concentration), என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காகவும், அதன் மூலமாக தீமைகளை நீக்கிடும் ஆற்றல் மிக்க சக்திகளை நமக்குள் வளர்ப்பதற்காகவும் தான், நாம் தியானமே செய்கின்றோம் என்பதுதான் உண்மை.

மேலும், இந்த தியானத்தையும் ஆத்ம சுத்தியையும், நமது வாழ்க்கையில் நாம் எப்பொழுதெல்லாம் தீமையான உணர்வுகளை சந்திக்கின்றோமோ, பார்க்கின்றோமோ, கேட்கின்றோமோ, அப்பொழுது கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து, அவ்வப் பொழுது நமக்குள் சேரும் தீமைகளைத் துடைக்கும் நிலைதான், இந்த தியானம்.

இவ்வாறு, தொடர்ந்து நாம் தியானித்து வரும் பொழுது, அந்த மகரிஷிகள் பெற்ற ஆற்றல் மிக்க சக்திகள், நமக்குள் சிறுகச் சிறுகச் சேரும். நம் வாழ்க்கையையே தியானமாக்கும் பொழுது, அகண்ட அண்டத்தில் வரும், எத்தகைய தீமைகளிலிருந்தும் நாம் விடுபட முடியும். பிறவியில்லா நிலை அடைய முடியும்.

தியானம் செய்யும் முறை

புருவ மத்தியில் உள்ள, நம் உயிரான ஈசனை வணங்கி, தாய் தந்தையரை வணங்கி,ஞானகுரு, சற்குரு, சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி, ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள, அருள் ஞானிகளின் அருள் உணர்வை, எண்ணி ஏங்கி,கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி, நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்கி, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவிச்செலுத்தி,  நமது கண்களின் காந்தப் புலனறிவால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து, ஈர்த்து, உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து, உயிர் வழி நுகர வேண்டும்.

இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி, ஏக்கமான நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து, என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா, ஜீவ அணுக்கள், என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என எண்ணி, நம் உடலுக்குள் அலை அலையாகப் படரச் செய்யவேண்டும்.

மனிதராகிய நாம், நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நன்கு ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும். இதனை, துருவ தியானத்தின் மூலமே பெற முடியும். அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை, நாம் நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து, நம் உடலுக்குள் உள்ள அனைத்து அணுக்களுக்கும், உணவாகக் கொடுக்கும் பொழுது, எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும், அதை அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், ஒளியின் சுடராக மாற்றிவிடும்.

துருவ தியானம்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும் என்று, நாம் ஏங்கி ஆசைப்பட்டு, காலை பிரம்ம முகூர்த்த வேளையில், நாம் அறிவின் ஞானம் கொண்டு, தியானிக்க வேண்டும். பிரம்மம் என்றால் உருவாக்குதல். முகூர்த்தம் என்றால் இணைத்தல்.

பிரம்ம முகூர்த்த வேளை என்பது, அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை. அந்த நேரத்தில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் பூமியில் நேரடியாகப் பரவும். அந்த நேரத்தில் தியானித்து,  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வினை, நமக்குள் பிரவணமாக்க (இயக்கமாக்க) வேண்டும்.

கூட்டுத் தியானத்தின் பலன்

மழைக் காலங்களில், சிறு துளிகளாக மழை பெய்து, பெரும் வெள்ளமாகத் திரண்டு ஓடுகின்றது. அப்பொழுது, குப்பை கூளங்களையும், அசுத்தங்களையும் அடித்துச் செல்லுகின்றது. அதைப் போன்று, அதிகம் பேர் ஒன்று சேர்ந்து, ஓர் இடத்தில் அமர்ந்து, “துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியைப் பெறவேண்டும்” என்ற ஒரே உணர்வின் எண்ணம் கொண்டு, அனைவரும் தியானத்தில் ஈர்ப்பதினால், கூட்டுத் தியானத்தில் அமர்ந்துள்ள அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் அதிக அளவில் பெறுகின்றனர்.

அதனால், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும், தன்னையறியாமல் சேர்ந்துள்ள தீய சக்திகளும், தீய உணர்வுகளும் மாய்ந்துவிடுகின்றன. ஆகையால், சஞ்சலம் நீங்குகின்றது. மனம் அமைதியாகின்றது. நல்ல எண்ணங்களின் உணர்வுகள், வலுப் பெறுகின்றன. உயிராத்மாவும், ஒளி நிலை பெறும் ஆற்றலைப் பெறுகின்றது.

ஆகவே, வாரத்தில் ஒரு நாள் கூட்டுத் தியானமிருப்பது அவசியம். தனித்து தியானத்தில் இருந்து, சஞ்சலத்தைப் போக்க முடியாதவர்கள், கூட்டுத் தியானத்தில் கலந்துகொள்வதால், சஞ்சலத்தைப் போக்கிவிட முடியும். மன அமைதியும் கிடைக்கும்.

நாம் பிறரைப் பார்க்கும் பொழுது, அவர்களும் மன அமைதி பெறுகின்றனர். நாம் தொட்டுக் கொடுக்கும் பொருள்களில், நல்ல மணம் இருப்பதனால், வியாபாரம் நல்லவிதமாக அமைய, நம் மனமே உதவுகின்றது. மன அமைதி பெறுவதால், தொழில் செய்யும் பொழுது, சிந்தித்துச் செயல்பட முடிகின்றது. உயிராத்மாவும், ஒளி நிலை பெறும் ஆற்றல் பெறுகின்றது.

பௌர்ணமி தியானத்தின் பலன்

நமது குருநாதர் காட்டிய முறைப்படி, பௌர்ணமி தியானமிருக்கும், அனைத்து ஆத்ம ஐக்கிய அன்பர்களின் எண்ணங்களையெல்லாம், ஒன்று சேர்த்துக் குவித்து, ஒரு இலட்சம் பேர் தியானிக்கின்றோம் என்றால், தியானித்த ஒவ்வொருவருக்கும், அந்த ஒரு இலட்சம் பேருடைய சக்தி கிடைக்கின்றது. அச்சமயம், நமக்கு சக்தி, அதீத நிலைகளில் கூடுகிறது.

நமது குருநாதர் காட்டிய முறைப்படி, நீங்கள் அனைவரும் தியானமிருக்கும் பொழுது, யாம் (ஞானகுரு) அச்சமயம் தியானமிருக்கிறோம். அந்த நேரத்தில் உங்களுக்கு சக்தி கூட, நமது குருநாதர் காட்டிய நெறிப்படி, உங்கள் உயிராத்மாவைப் பிரார்த்தித்து, அந்த சக்தியை நீங்கள் பெற, எம்மால் உதவ முடிகின்றது.

ஆகவே, பௌர்ணமி தியானத்திலே உங்களுக்கு இந்த சக்தி கூட, யாம் உதவுவதால், அந்த நேரத்தை விரயம் செய்யாது, நீங்கள் தியானமிருந்து பயனடையுங்கள். இந்த பௌர்ணமி தியானத்திலே, உங்களுக்கு வாழ்க்கையில், வழியறிந்து செயல்பட ஞானம் கிடைக்கின்றது. துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவதால், நமது உயிராத்மாவில், ஒளி பெறும் அணுக்களும் வளர்கின்றன.

நம் முன்னோர்கள், மூதாதையர்களின், உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்கள், ஒளி சரீரம் பெற உதவுகின்றோம். அதே சமயம், சப்தரிஷி மண்டலங்களின் பேரருளையும் பேரொளியையும், நாம் பெறும் தகுதி பெறுகின்றோம்.

நலம் பெறுக ! வளம் பெறுக !

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உலக மக்கள் அனைவரும் பெற தவமிருப்போம். !

தியானப் பயிற்சிகள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட லிங்கை உபயோகிக்கவும் https://wp.me/P3UBkg-1rP

தியானப் பயிற்சியும் பலன்களும்

om shanti brahma

ஞானகுரு:-

நான் சக்தி கொடுக்கிறேன், நீங்கள் பயிற்சி கொண்டு அதை எடுக்க வேண்டும். உங்கள் எண்ணம் எப்படியோ.…, என்னுடைய குறை அல்ல. நான் எப்படிச் செய்ய முடியும்,
1.உங்களுக்காக நான் சாப்பிட்டால், என் பசிதான் தீரும்…
2.நீங்கள் மீண்டு கரை ஏற வேண்டியது “உங்கள் தன் பலம் கொண்டு”.

பயிற்சி எது:-
1.நமக்குள் என்ன நடக்கிறது…? என்பதையும்
2.எது நம்மை மாற்றுகிறது…? என்பதையும்
3.இவ்விதம் நம்மை நாமே அறிந்து எப்படி வாழ வேண்டும்…? என்பதையும்
4.அறிந்து உணர்ந்து அருள்வழியில் குரு காட்டிய வழியில் நடப்பதுதான் பயிற்சி

உயிரணு பூமிக்கு வந்து சேர்ந்ததும் தாவர இனச் சத்தைக் கவர்ந்து கருவாகிப் பல கோடிச் சரீரங்கள் எடுத்தபின் மனிதனாகப் பிறப்பதற்குரிய அனைத்து உணர்வுகளின் தன்மைகளும் உயிரான்மாவில் இணைந்ததும், அவ்வுயிரணு அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும் பொழுது மனித உடலைப் பெறக்கூடிய தன்மை பெறுகின்றது. அப்பொழுது பூமியில் நாம் மனிதனாகப் பிறக்கின்றோம்.

உயிருடன் ஒன்றி இந்த மனித உடலை அல்லது உயிருடன் கூடிய இம்மனித உடலை இந்த உயிர், தான் முன்னதாகவே நுகர்ந்தெடுத்து, இணைத்துக் கொண்ட உணர்வுகளின் தன்மைக்கொப்ப உடலை அமைத்துக் கொள்கின்றது.

இம்மனிதப் பிறவியில் இந்த உடலை எடுத்து வந்த உயிரணு சூரியனிலிருந்து வந்து அதன் ஒரு பகுதியாக அதன் ஓர் அங்கமாக இந்த பூமியில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் உடல் இந்த பூமியில் பரமாத்மாவில் படர்ந்துள்ள உணர்வுகளின் உறைவிடமாக அங்கமாக அதன் உணர்வுகளுக்கொப்ப இந்த உடல் உயிர் உருவாக்கும் தன்மையில் உருவாகிப் பூமியில் உலா வருகின்றது.

உயிர் சந்தர்ப்பவசத்தால் உடலை விட்டுப் பிரியும் நேரம் உடல் தான் இறக்கின்றது. உயிர் பரமாத்மாவில் கலந்து உணர்வுக்கு ஒப்ப மறு உடல் பெறுகின்றது.
1.உணர்வுகள் அழிவதில்லை. உணர்வுகள் மாறிக் கொண்டேதான் உள்ளது
2.ஆனால் உயிர் என்றுமே அழிவில்லாத இயக்கம்.
3.அதை அறிந்து.. புரிந்து… உணர்ந்து… முதல் பாடமாக நமக்குள் பதிய வைத்துக் கொண்டால்தான்
4.மற்ற பாட நிலைகள் தெளிவாகும்.

பரிணாம வளர்ச்சியில் உணர்வுகளின் நுகர்வால் உடல்கள் மாறி மாறி மனித உடல் பெறும் இந்த உணர்வுகள் இம்மனித உடல் அழியும் பொழுது ஜீவன் பெற்று ஜீவ அணுக்களாக இருக்கின்றது.

அப்படி இருந்தாலும் ஜீவன் பெறமுடியாத ஆனால் ஜீவன் பெற்று உடலாகும் தகுதியான அத்தனை உணர்வுகளும் உயிரணுக்களாகவோ அல்லது மாறுபட்ட நிலைகளிலோ இப்பூமியின் தன்மையில் பரமாத்மாவாகவும் சூரியனின் காந்தப் புலனில் கவரப்பட்டால் அது எடுத்துச் செல்லும் நிலைக்கும சுழன்று கொண்டுதான் உள்ளது.

அருள் ஞானிகளின் உணர்வுகள் மற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் தவிர ஏனைய உணர்வுகள் அனைத்தும் இருளானவைகள். அதன் செயலாக்கங்களும் இருளானவைகள்.

1.இவையனைத்தும் சிவன் இராத்திரி நிகழ்வுக்கும் மகா சிவன் இராத்திரி என்ற நிலைகளுக்கு மட்டுமே பயன்பட்டும்,
2.மற்றும் இம்மண்ணுலகில் உயிரணுக்கள் உடல் பெறவும்
3.ஜீவராசிகளாகி மனிதனாகி வரும் நிலைக்குத்தான் இதுவரை பயன்பட்டு வந்துள்ளன.

இன்று நாம் மனிதன் என்ற நிலை பெற்று இருந்தாலும் (பரிணாம வளர்ச்சி என்ற நிலையில்) மீண்டும் மீண்டும் இப்பூமியில் சுழன்று கொண்டே இருக்க வேண்டுமா…?

அப்படிச் சுழன்று கொண்டு இங்கே இருக்கும் இருளான உணர்வுகளையே நுகர்ந்து அதற்குரிய உடல்களைப் பெற்றும் இந்தப் பூமிக்குள்ளேயே நாம் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா…? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நாம் எண்ணியவற்றை நாம் நுகர்ந்ததை நமது உயிர் நம் உடலுக்குள் இணைக்கின்றது, நமது உயிர் எலெக்ட்ரிக் நாம் நுகரும் உணர்வுகள் நமது உயிரில் மோதி எலெக்ட்ரானிக்காக இயங்குகின்றது.

அதாவது நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்முள் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் நம் உடலை இயக்குகின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதைக் கேட்டுணரும் அன்பர்கள் தங்களது வாழ்க்கையில் தமக்குள் அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட துருவ தியானம் ஆத்ம சுத்தி இரவு தியானம் ஆகியவற்றைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆத்ம சுத்தி:-

1.“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று புருவ மத்தியில் உள்ள நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும்.
2.பின் தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்க வேண்டும்.
3.அடுத்து இந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஞானகுரு சற்குரு சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும்.
4.பின் ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள அருள் ஞானிகளின் உணர்வுகளை எண்ணி ஏங்கிக் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்த வேண்டும்,
5.அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்.

இவ்வாறு, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவிச் செலுத்தி நமது கண்களின் காந்தப் புலனறிவால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து,
1.உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து
2.“உயிர் வழி நுகர வேண்டும்”.

இப்பதிவின் துணை கொண்டு மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி ஏக்கமான நிலையில் அது என் உடல் முழுவதும் படர்ந்து என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா ஜீவ அணுக்கள் என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி
1.நம் உடலுக்குள்
2.அலை அலையாகப் படரச் செய்யவேண்டும்…!

இதுவே ஆத்ம சுத்தி.

மனிதராகிய நாம், நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நன்கு “ஆழமாக” பதிவாக்கிக் கொள்ள வேண்டும். இதனைத் துருவ தியானத்தின் மூலமே பெற முடியும்.

அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் ஆழமாகப் பதிவு செய்து நம் உடலுக்குள் படரவிடும் பொழுது நம் உடலுக்குள் எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும் அதைத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் ஒளிச் சுடராக மாற்றிடும் திறன் பெற்றது.

பிரம்ம முகூர்த்தம்:-

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெற வேண்டும் என்று நாம் ஏங்கி ஆசைப்பட்டு காலை பிரம்ம முகூர்த்த வேளையில் நாம் அறிவின் ஞானம் கொண்டு தியானிக்க வேண்டும்.
1.பிரம்மம் என்றால் உருவாக்குதல்.
2.முகூர்த்தம் என்றால், இணைத்தல்.
3.பிரம்ம முகூர்த்த வேளை என்பது அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை.

அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் பூமியில் நேரடியாகப் பரவும் நேரம். அந்த நேரத்தில் தியானித்து, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம்முள் பிரம்மமாக்க வேண்டும்.

ஆறாவது அறிவு என்ற நம் உடலில் விளைந்த உணர்வினை எண்ணி, அதன் துணை கொண்டு,உடலுக்குள் அந்த அருள் உணர்வுகளை இயக்கச் செய்யவேண்டும்.

இதைத்தான் “ஓ…ம்” என்ற பிரணவத்தைச் “சிவனுக்கே ஓதினான் முருகன்” என்றார்கள் ஞானிகள்.

நட்சத்திரத் துகள்கள் மின்னலாகிப் பூமியில் படர்ந்து விட்டால் காற்றில் இருப்பதை புவியின் ஈர்ப்பால் கவர்ந்து, வைரங்கள் விளைகின்றது. அது போல்
1.இந்த உடலை உருவாக்கிய அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைக் கவர்ந்து
2.உயிருடன் இணைத்து தியானிக்கும் பொழுது
3.அவை அனைத்தும் இந்த உயிரைப் போலவே சிறுகச் சிறுக மாறி ஒளியாக மாறிவிடும்.

இனியாகிலும் உடல் பற்று கொள்ளாமல் உயிர் மீது பற்று கொண்டு உயிருடன் ஒன்றுதல் தான் உண்மையில் செயல்படவேண்டிய இயக்கம் என்று அறிதல் வேண்டும்.

தியானத்தின் பலன்கள்:-

உயிரைக் கடவுளாக மதித்து, உடலை கோவிலாக மதித்து, உணர்வுகளை தெய்வமாக மதித்துத் துருவ தியானம் ஆத்ம சுத்தி செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

  1. சிந்திக்கும் தன்மைகளும் தெளிவான நிலைகளும் நமக்குள் வருகின்றன.
  2. நமது ஆன்மா (உணர்வுகள்) தூய்மை அடைகிறது.
  3. கண் கவர்ந்து பதிய வைத்த தீமைகளை, அதே கண் கொண்டு அகற்றும் திறன் நாம் பெறுகின்றோம்.
  4. தீமைகள் உட்புகாது தடுக்க முடிகின்றது.
  5. மன வலிமை உடல் நலம் தொழில் வளம் பெருகுகின்றது.
  6. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் நமக்குள் புயலென பெருகி ஜீவ அணுக்களாகி மற்ற தீய உணர்வுகளை வெளியேற்றுகிறது
  7. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் நமது எலும்புகளுக்குள் (ஊழ்வினையில்) அருள் வித்துகளாகி நமது உயிராத்மாவின் செயலாக்கமாகி நம்மை மாற்றிக் கொண்டே இருக்கும்.
  8. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் காந்தப் பாதுகாப்பு வட்டத்திற்குள் செயல்படும் நிலை பெறுவோம்.
    கணவன் மனைவி இணைந்து எடுக்கும் துருவ தியானம் நம் ஆத்மாவை வைரமாக ஜொலிக்க வைத்திடும்.
  9. பரிணாம வளர்சியான ரிஷி நிலை பெறும் தகுதியை அடைகின்றோம்.
  10. நமக்குத் தீமை புரிபவர்களது உயிரையும் கடவுளாக மதித்து அந்த உயிரில் தீமை புகாது தடுத்திடும் நிலையை உருவாக்குகின்றோம்.
  11. அதனால் அவர்களையும் காக்க முடியும்; அவர்கள் படும் துயரம் நம்முள் புகாமலும் தடுக்க முடியும்.
  12. அறியாது சேர்ந்த சாப பாப தீய பூர்வ ஜென்ம வினைகள் வலு இழந்து விடுகின்றன.
  13. மெய் பொருள் காணும் திறனும், மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெறுகின்றோம்.

ஒளியின் சரீரம்:-

  1. அருள் ஞானிகளைப் பற்றிய உணர்வுகள் நம் சிந்தனைக்குள் இருக்க வேண்டும்.
  2. ஞான குருவின் உபதேசங்களை நூல்கள் கேசட் மூலம் அறிந்து உணர்ந்து அதை நம் நினைவிற்குள் கொண்டு வர வேண்டும்.
  3. மகிழ்வான உணர்வுகளை குருவிற்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
  4. நம் எண்ணம் சொல் செயல் வெளிப்படும் பொழுது இவற்றில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் கண்டிப்பாக நுகர்ந்து ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் முன்னிலைப்படுத்த வேண்டும்.
  5. மற்றவர்களின் எண்ணங்கள் சொல் செயல்களால் நாம் நுகரும் எத்தகைய உணர்வுகளுக்கும் முன்பாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை உடனுக்குடன் நுகர்ந்து, அவற்றை உணர்ந்து முன்னிலைப்படுத்த வேண்டும்.
  6. சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொழுதெல்லாம் இதைச் செய்து கொள்ள வேண்டும். இதை ஒரு பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.
  7. நாம் ஒவ்வொருவரும் இரவு தூங்கச் செல்லும் முன் அரை மணி நேரமாவது துருவ நட்சத்திரத்தை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள், பேரொளி என் உடல் முழுவதும் படர்ந்து என் உடலில் உள்ள ஜீவ அணுக்கள், ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வை நமக்குள் தியானித்து இணைக்க வேண்டும்.
  8. உயிருடன் இணைந்த உணர்வுகளை குரு காட்டிய வழியில் குருவின் துணை கொண்டு ஒளியின் சரீரமாக மாற்றும் சந்தர்ப்பங்களை உணர்ந்து அதை கூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
  9. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை சதா முன்னிலைப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.
  10. மருத்துவர் கொடுக்கும் மருந்தினை நாம் கட்டாயமாக்கி உட்கொள்வது போன்று விஞ்ஞானிகள் உயிரினத்தின் செல்களை இணைக்கும் நிலையில் (இரு உயிரணுக்களை) கட்டாயப்படுத்தி ஓர் புது ரூபத்தை மாற்றி உற்பத்தி செய்வதுபோல் கட்டாயப்படுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை இணைக்க வேண்டும்.
  11. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நாம் கவர்ந்து நமக்குள் ஒளி சுடராக மாற்றும் நிலையைத்தான் நமது இன்றைய செயல்களாக அமைத்து நாளைய சரீரமாக நமது உயிராத்மாவை ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

நம் ஆன்மாவில் சேரும் அழுக்கைப் பற்றி தெரிந்திருக்கின்றோமா?

Image

Dhuruva star - Polaris

  1. உடல் அழுக்கைப் போக்குகின்றோம்,ஆன்மாவில் வரும் அழுக்கைப் போக்குகின்றோமா?

நம் வாழ்க்கையில் கையில் அழுக்குப்படுகிறது, கழுவிவிடுகிறோம். துணியில் அழுக்குப்படுகிறது, துவைத்துவிடுகிறோம். உடலில் அழுக்குப்படுகிறது,குளித்துவிடுகிறோம்.

இதே மாதிரி நம் ஆன்மாவிலும் அழுக்குப்படுகின்றது.

தினசரி காலையிலிருந்து இரவு படுக்கப் போகும் வரை பிறர் படும் வேதனைகளையும், எத்தனையோ கஷ்டப்படுவோர் நிலைகளையும் தீமை செய்வோரின் நிலைகளையும் நாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, நாம் பார்த்து, கேட்டு உணர வேண்டியது இருக்கின்றது.

இந்த உணர்வுகள் அனைத்தும் நம் ஆன்மாவில் படர்கின்றது. இதைத்துடைக்கவில்லை என்றால், உள்ளே போனவுடனே இந்த உணர்வுகள் மாறி நம் உறுப்புளை எப்படி எப்படியோ மாற்றிவிடுகிறது.

அப்பொழுது இந்த ஆன்மாவை முதலில் துடைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்,

இந்த ஆன்மாவில் எதைச் சேர்க்க வேண்டும்,

எதை நீக்க வேண்டும்?

இப்பொழுது சூரியன் என்ன செய்கின்றது? இருபத்தேழு நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து வரும் அனைத்து விஷங்களையும் எடுத்து பால்வெளி மண்டலமாக மாற்றுகின்றது. சூரியன் அதைத் தனக்கு உணவாக எடுத்துக் கொள்கின்றது.

பக்கத்தில் வந்தபின், தன் உடலில் உள்ள பாதரசத்தால் மோதி விஷத்தைப் பிரித்துவிட்டு நலல உணவைத் தன் ஆகாரமாக எடுக்கின்றது. அதை மீண்டும் பாதரசமாக மாற்றிக் கொள்கின்றது.

இந்த சூரியனைப் போன்றுதான் நமது உயிர் ஆறாவது அறிவு. இதை வைத்துத்தான் நாம் அதைச் சுத்தப்படுத்த வேண்டும். இந்த வாழ்க்கையில் நாம் எப்படி நடக்கின்றோம்? எப்படி நடக்க வேண்டும்? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், கையில் அழுக்குப்பட்டால் துடைத்துவிடுகின்றோம். எப்படி குளிக்கின்றோமோ, துவைக்கின்றோமோ அதைப் போன்று நம் ஆன்மாவில் படும் அழுக்கை அவ்வப்பொழுது துடைத்துப் பழக வேண்டும். இதைத்தான் வாழ்க்கையே தியானம் என்பது.

ஆக, மற்றவர்கள் வேதனைப்படும் நிலையைப் பார்த்து, “பாவம் இப்படி இருக்கின்றார்கள்” என்று எண்ணினோம் என்றால் நமக்குள் வேதனையை வளர்த்துக் கொள்கின்றோம். ஆனால், அந்த நேரத்தில் அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

அதை எப்படிச் சொல்ல வேண்டும்?

  1. துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் சேர்த்து, பின் மற்றவர்களுக்கும் பாய்ச்ச வேண்டும்

அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி

எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்,

உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்று

இதை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, வேதனைப்படுபவர்கள் யாரை நாம் பார்த்தோமோ, அவர்கள் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். அவர்கள் உடல் முழுவதும் அந்த சக்தி படரவேண்டும்.

அவர்கள் வேதனையிலிருந்து விடுபடவேண்டும் என்று எண்ணி

அவர்களுக்கு அந்த உணர்வின் ஆற்றலைப் பாய்ச்ச வேண்டும்.

அப்படிப் பாய்ச்சினால், அவர்களின் வேதனையான உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

அதை அவர்கள் நுகர்ந்தால்

வேதனையிலிருந்து விடுபடும் சக்தி அவர்களுக்கும் கிடைக்கும்.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரம் எப்படி சர்வ தீமைகளையும், நஞ்சுகளையும் ஒளியாக மாற்றுகின்றதோ அந்தத் திறன் நாமும் பெறுகின்றோம்.

உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது.

அழியா ஒளி சரீரம் பெறமுடியும்.

ஆன்மா நலம் ஆனால், எண்ணம் நலமாகும்

ஆன்மா நலம் ஆனால், சொல் நலமாகும்

ஆன்மா நலம் ஆனால், செயல் நலமாகும்

ஆன்மா நலம் ஆனால், உடல் நலமாகும்

ஆன்மா நலம் ஆனால், உயிரான்மா நலமாகும்

ஆத்மசுத்தி செய்வோமானால், ஆன்மா நலமாகும்.