துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராக உங்களை எல்லாம் இணைக்கின்றோம்

 

Polaris - star.jpg

துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராக உங்களை எல்லாம் இணைக்கின்றோம் 

பிறருக்குத் தர்மம் செய்கின்றேன் என்று சொல்வார்கள். அவர்கள் வேதனைகளில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து அவர்களைக் காப்பாற்றப் போகின்றேன் என்று சொல்வார்கள்.

அந்த வேதனைகளில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து அந்த வேதனைகள் எல்லாம் இவருக்குள் விளைந்து யார் மேல் பற்று கொண்டாரோ அவரின் உடலுக்குள் செல்வார். அந்த உடலுக்குள் சென்று அந்த ஆயுள் மெம்பராகிவிடுவார்.

“தர்மம் செய்வது தப்பா…?” என்று கேள்வி கேட்காதீர்கள். தர்மம் செய்யவேண்டும். அதே சமயத்தில்
1.தீமை நமக்குள் வராதபடி
2.துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பர்களின் கூட்டத்துடன் இருக்க வேண்டும்.

நீங்கள் காசு கொடுத்து தர்மம் செய்தாலும் அவனுக்கு நல்ல ஒழுக்கம் இல்லையென்றால் அவன் சாப்பிட்டுவிட்டுக் குறும்புத்தனம் செய்வான்.

பார்த்தால் நமக்கு வேதனை வரும்.

நல்லது செய்தாலும்… அதில் ஒருவர் தவறு செய்யும் பொழுது “இப்படிச் செய்கின்றார்களே…” என்று இரண்டு மடங்கு நாம் வேதனைப்படுவோம்.

அப்பொழுது வேதனையின் உணர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஆயுள் மெம்பராகச் சேர்கின்றார்கள். ஆகவே எந்தத் தர்மத்தைச் செய்தாலும் “வேதனை என்ற உணர்வுகளைச் சுத்தப்படுத்தும் உணர்வுகள்” நமக்குள் வரவேண்டும்.

1.நாம் பரிவும் பண்பும் கொண்டு
2.பிறரைக் காக்கும் நிலை இருந்தாலும்
3.வெறுப்படையும் வேதனைப்படும் உணர்வுகளை எடுத்து
4.நம்மைப் படுபாதாளத்திற்குத் தள்ளும் நிலையிலிருந்து விடுபடவேண்டும்.

அதற்காகத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். பதிவு செய்ததை நீங்கள் மீண்டும் எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் நினைவைச் செலுத்திப் பழக வேண்டும்.

இவ்வாறு செய்தோம் என்றால் யாரால் நமக்குக் கோபம் வந்ததோ அவர்களுக்குச் சிந்திக்கும் தன்மை வரும்.

நாங்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறவேண்டும், எங்கள் பார்வை எல்லோருக்கும் நன்மை பயக்க வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் எடுத்துக் கொண்டோம் என்றால்
1.நமக்குள் வரும் வேதனை கோபம், ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளைத் தடைப்படுத்தி
2.நோய் வராது நம்மைக் காக்கும்.

விஞ்ஞான அறிவு கொண்டு T.V. ரேடியோ அலைகளை ஒளிபரப்பு செய்கின்றார்கள். எந்த அலைவரிசையில் ஒளிபரப்பு செய்கின்றார்களோ அதே அலைவரிசையை வைத்து நம் வீட்டில் பார்க்கின்றோம்.

அதே மாதிரி நீங்கள் கோபமாக இருக்கக்கூடிய நிலையை எடுத்துக் கொண்டால் நாம் அமைதியாக அமர்ந்திருந்தாலும்,
1.நாம் சோர்வுடன் இருக்கும்பொழுது
2,இந்தக் கார உணர்ச்சிகள் முன் வந்தவுடன்
3.”நமக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் செய்தார்கள்…” என்ற எண்ணம் வரும்.

நமக்கு இடைஞ்சல் செய்தவன் எங்கோ இருப்பான். அதை எண்ணும்பொழுது நமது பல் கடு கடுப்பாகிவிடும். இது மாதிரி நேரங்களில் நாம் தியானத்தில் அமர்ந்தால் அந்த எண்ணம் தான் வரும். தியானம் வராது.

1.நான் தியானமிருந்தேன்
2.”எனக்கு வரவே மாட்டேன் என்கிறது…” என்பீர்கள்.
3.காரணம் அந்த உணர்வுகள்தான் நம்மை இயக்குகின்றது.

நமக்கு இடைஞ்சல் செய்தவன் எங்கிருந்தாலும், அவன் உணர்வு வந்தவுடன் அவன் உருவம் நமக்கு நிழற் படமாகத் தெரியும். T.V ஐ எந்த அலைவரிசையில் வைக்கின்றோமோ அந்தப் படம் தெரியும். அந்த உணர்ச்சியின் தன்மை நமக்குள் எண்ணமாக வரும்.

இதே மாதிரி அருள்சக்தி உங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
1.நீங்கள் நினைத்தவுடன் அதை எடுத்து இந்த உணர்வுகளை மாற்றமுடியும்.
2.அந்த மாதிரி மாற்றுவதற்குண்டான சக்தி நீங்கள் பெறுவதற்குத்தான்
3.துருவ நட்சத்திரத்தை உங்களுக்குள் பதிவு செய்வது.

நம் குருநாதர் துருவ நட்சத்திரத்தை எடுத்தார். அவரை எண்ணி எடுக்கும்பொழுது அந்த அருளை நான் பெற முடிகின்றது.

அதே சமயத்தில் அவர் குரு வழியில் ஒளியின் சரீரமாக இருக்கின்றார். அதன் உணர்வை எடுத்து ஆயுள் மெம்பராகச் சேருகின்றீர்கள்.

1.தீமைகளை நீக்கக்கூடிய ஆயுள் மெம்பராகச் சேருகின்றீர்களேயொழிய
2.தீமைகளை வளர்த்துக் கொள்ளும் ஆயுள் மெம்பராக அல்ல.

ஆகவே நாம் எந்த ஆயுள் மெம்பராக இருக்க வேண்டும்? துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராகச் சேர்ந்தால் தீமையை நீக்கிவிடும்.

ஞானகுருவின் பொன்மொழிகள்

Image

5ddd0-eswaraya2bgurudevar

  1. பொருளைத் தேடித்தான் வருகின்றார்கள் அருளைத் தேடினால் “பைத்தியம்” என்கிறார்கள்
  2. சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல் விண்ணிலிருக்கும் மெய்ஞானிகளுடன் “நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்”
  3. பேட்டரியில் சார்ஜ் குறைந்தால் மீண்டும் ஏற்றவில்லை என்றால் “அது இயக்காது” அதைப்போல் நம் வளர்ச்சிக்கு “குருவிடம் என்றுமே தொடர்பு கொண்ட நிலையில் இருத்தல்” மிக மிக அவசியம்
  4. அன்று நாற்றத்தை நாற்றம் என்று எண்ணி நீ விலகி இருந்தால் இன்று “கெட்டதைப் பிரித்து நல்லதைச் சமைக்கும் சக்தி உனக்குக் கிடைக்காதப்பா…!” என்றார் குருநாதர்
  5. உலகில் தற்பொழுது பரவி வரும் நஞ்சினை அகற்றிட “அகஸ்தியனின் உணர்வைப் பரவச் செய்யுங்கள்”
  6. இந்த உலகம் மறையும் முன் “மக்களைக் காக்க வேண்டும்” என்றார் குருநாதர்
  7. உலகிலேயே “ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக” தமிழ்நாடு உயர்ந்த நிலை பெறும்
  8. தாய் தந்தையரை நேசித்து வளர்ந்தால் “ஞானக் கனியைப் பருகி அருள் ஞானியாக ஆக முடியும்” என்பதே ஞானிகள் நமக்குக் காட்டியது
  9. ஊசி மருந்தைச் செலுத்திச் செலுத்தி மனிதனை “1500 வருடம்” வாழ வைக்கலாம் என்கிறது விஞ்ஞானம் – “காலத்தால் என்றுமே அழியாது” வாழ உயிராத்மாவை ஒளியாக்க வேண்டும் என்கிறது மெய்ஞானம்
  10. உங்கள் அனைவருடைய எண்ணங்களும் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்று நான் தியானிப்பதால் உங்கள் ஈர்ப்புக்குள் (உடலுக்குள்) நான் வர முடியாது
  11. உடல் “ஆசை” என்கிற ஸ்டேசனை வைத்துக் கொண்டிருந்தால் “சாமி செய்வார்…” என்றால் சாமி எப்படிச் செய்வார்…! எதிலுமே அந்த விண்ணுலகப் பற்றுதல் வந்து கொண்டேயிருக்க வேண்டும்
  12. மகரிஷிகளின் உணர்வை எடுத்துக் கொண்டால் மீடியம் (ஆவிகள்) பவர் உள்ள இடத்திற்கு நீங்கள் சென்றாலும் அது வேலை செய்யாது பார்க்கலாம்.
  13. “ஈசன் நமக்குள் இருக்கும்போது… அவனை மதித்துப் பழகுங்கள்” அவனை மதிக்காமல் உடலே பிரதானம் என்றால் வேதனை தான் வரும்
  14. “உன்னைத் தொலைத்துக் கட்டுகிறேன்” என்று எண்ணும் பொழுது அந்தத் தொலைத்துக் கட்டும் உணர்வுகள் நம் நல்ல குணத்தைத் தொலைத்துக் கட்டிவிடும்
  15. எல்லா மெய்ஞானிகளைப் பற்றியும் ”தெரிந்து கொள்ள வேண்டும்…” என்று நினைத்துவிட்டோம் என்றால் இந்தக் காலத்திலேயே (இப்பொழுதே) தெரிந்து கொள்ளலாம்
  16. ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால் ஞானிகள் செய்வதை நாமும் செய்வோம்.
  17. பல ஆயிரம் கோடிப் பணம் வைத்திருக்கின்றவர்கள் மன நோய்க்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் – “நிம்மதி இல்லை”
  18. கோடிப் பணம் நம்மை ஒரு பொழுதும் காக்காது உடலையே நம்மால் காக்க முடியவில்லை சேர்த்து வைத்த செல்வம் நம்மைக் காக்குமா…?
  19. புறத்தீயில் பொருளைப் போடுவதைப் பற்றித்தான் அறிந்திருக்கின்றோமே தவிர அகத்திற்குள் இருக்கும் உயிரான நெருப்புக்குள் போட வேண்டிய அருள் உணர்வுகளை நாம் அறியவில்லை.
  20. “அருள் ஞானப் பொக்கிஷத்தை” அனைவரும் பெறுவதைக் கண்டு பேரானந்தப்பட வேண்டும் என்றார் குருநாதர்
  21. “இந்தப் பிள்ளை யார்…?” நீ யார்..? இந்த மனித உடலில் எந்தக் குணத்தை முன்னனியில் வைக்க வேண்டும் என்று நீ கேட்டுப் பார் என்பதற்கே கேள்விக் குறியைப் போட்டு வைத்தனர் ஞானியர்
  22. உடலை வீழ்த்த வேண்டும் என்ற அந்த உடலுக்குள் நின்று தீமையான உணர்வை இயக்கிய அந்த ஆற்றல்களை அங்கே நிறுத்தி “அவனை நல்லவனாக்க வேண்டும்” என்றார் குருநாதர்
  23. பாத்திரத்தில் ஓட்டை உடைசலை அடைப்பது போல் இல்லாமல் வாழ்க்கையில் வரும் “இருள் சூழ்ந்த நிலைகளைத் தட்டியெறிந்துவிட்டு” மெய் ஒளியினைப் பெறுங்கள்
  24. இந்த உடலை விட்டு இறந்தால் “எங்கே செல்கிறோம்…!” என்பதை இப்பொழுதே நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்
  25. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி அந்தக் கரண்டின் தொடர் வரிசையில் செல்லும் பொழுது தான் அதை நாம் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.
  26. இந்த உடலை விட்டு “நான் செல்கின்றேன்” ஒளியின் சுடராக எவருக்கும் சிக்காது உயிரான்மா எப்படிச் செல்கிறது என்று “பார்…” என்றார் குருநாதர்
  27. ஒருவர் இறந்துவிட்டால் உடலைப் புதைக்கலாமா…! எரிக்கலாமா…! சமாதி கட்டலாமா…! என்று அழுகும் சரீரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் “அந்த உயிரான்மா விண் செல்ல வேண்டும்” என்று உந்திச் செலுத்துங்கள்
  28. இந்த நாய் (நம் உடல்) எப்படியோ போகின்றது பூராம் குப்பை என்று இதைத் தூக்கி எறிந்து விட்டு உயிரான்மா நாம் அங்கே விண்ணுக்குச் செல்ல வேண்டும்

 

வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ வேண்டும்…! என்று வாழ்த்திவிட்டு கணவனை இழந்தவர் என்பதற்காக மாங்கல்யத்தைப் பறிக்கலாமா…?

Sivaparvathi

வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ வேண்டும்…! என்று வாழ்த்திவிட்டு கணவனை இழந்தவர் என்பதற்காக மாங்கல்யத்தைப் பறிக்கலாமா…?

குடும்பத்தில் உடலை விட்டுக் கணவன் ஆன்மா பிரிந்திருந்தால் அந்த ஆன்மா விண் செல்ல வேண்டும் என்று எண்ணி சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

1.கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து,
2.இரு உயிரும் ஒன்றானபின் ஒளியின் சரீரம் பெறும் தன்மை வரும்.

ஆனால் அவர் இட்ட மாங்கல்யம் மனைவியின் உடலிலே தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் இட்ட மாங்கல்யமும் அவருடைய எண்ணங்களும் இங்கே தான் இருக்கின்றது.

என்னுடன் வாழ்ந்தார் வளர்ந்தார்… “ஒன்றி வாழ்ந்தோம்” என்ற உணர்வினை வளர்த்து அவர் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இதன் உணர்வின்படி தியானித்தால் இந்த உடலைவிட்டுச் சென்றபின் இந்த ஆன்மா அதனுடன் ஐக்கியமாகும்.

இதே போன்று மனைவியை இழந்த கணவனும் என்னுடன் வாழ்ந்தது வளர்ந்த உடலை விட்டுச் சென்ற மனைவியின் ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று எண்ணி அந்த ஆன்மாவை ஒளிச்சரீரம் பெறச் செய்தால் “இரு உயிரும் அங்கே ஒன்றாகின்றது”.

ஒன்றிய உணர்வுகள் ஒன்றி வாழ்ந்த பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்தால் உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை பெற்ற பின் தனக்குள் வரும் உணர்வை ஒளியாக மாற்றி வளரும் பருவம் வருகின்றது.

இதே போன்று கணவனைப் பிரிந்தவர்கள் மனைவியைப் பிரிந்தவர்கள் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்றும் அவர் இட்ட மாங்கல்யம் உங்களிலே (மனைவி) இருக்கிறதென்று உறுதி கொண்டு இதைச் செயல்படுத்துங்கள்.

1.அவர் உணர்வு உங்கள் உடல்களிலே உண்டு.
2.இதன் வலுகொண்டு அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இப்பொழுது சாங்கிய சாஸ்திரம் கொண்டு எதைச் செய்கின்றனர்?

கணவன் இறந்துவிட்டால் கணவனை மறந்து விட வேண்டும் என்பதை ஆதாரமாகக் காட்டி
1.கணவனை இழந்தவள் என்று மற்றவர்களை அறியச் செய்வதற்கு
2.”மாங்கல்யத்தைப் பறிக்கின்றனர்”.

அங்கே தான் தவறு செய்கின்றனர்.

தன் கணவன் தன்னுடன் உண்டு என்ற உணர்வினை நினைவு கொண்டு அந்தக் கணவன் பால் நினைவு கொண்டால் அந்த உணர்வின் சக்தி “தவறு செய்யவிடாது”

இந்த மத இனங்களில் இப்படித் தவறான நிலைகளில் செயல்படுத்தப்பட்டுக் “கணவனை இழந்தவர்… கணவனை இழந்தவர்…” என்று இந்த உணர்வின் தன்மை துக்கமும் துயரமும் கொண்டு வேதனையின் உணர்வு கொண்டு அந்த வேதனையால் “பேய் மனமாக” மாற்றி விடுகின்றனர்.

பேய் மனமாக மாறித் தன் குடும்பத்தின் நிலை கொண்டு அது செயல்படும் பொழுது அது இறந்தபின் யார் மேல் பற்று கொண்டதோ அந்த உடலுக்குள் கொண்டு “பேய் உணர்வுகளைத் தான் ஊட்டும்”.

அந்தப் பாசத்தால்
1.குடும்பத்திற்குத் தீங்கு தான் செய்ய முடியுமே தவிர
2.ஒளியின் சரீரம் பெற முடியாது.
3.அதன்வழி செல்லவும் முடியாது.

இதையெல்லாம் ஞானிகள் காட்டிய நிலைகளில் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று… “கவர்ந்து கொண்ட உணர்வுகள் ஒன்றி” மனிதனுக்குள் வாழ்ந்திடல் வேண்டும்.

1.அருள் ஒளி கணவனுக்குக் கிடைக்க வேண்டும்
2.அருள் ஒளி மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
3.என்ற உணர்வு கொண்டு ஒன்றி வாழ்ந்தவர்கள் தான் பிறவியில்லா நிலைகள் அடைகின்றனர்.

இந்த உடலில் சிறிது காலமே இருப்பினும் அதனை மனைவியின் உணர்வின் துணை கொண்டு வலுக் கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று எண்ணி
1.அந்த வலுவினைச் சேர்த்து விட்டால்
2.”விண்ணை நோக்கிச் செல்கின்றது” மனைவியின் எண்ணம்.

அந்த உணர்வு கணவன்/மனைவி தன்னுடன் வாழ்ந்த காலத்தில் எப்படி மகிழ்ந்திருந்தார்களோ இதைக் “கனவுகளில் வந்து” மகிழ்ச்சியின் உணர்வாகத் தோற்றுவிக்கும்.

அருள் ஒளி பெற வேண்டும் என்று அண்டத்தின் நிலைகளில் மிதந்து ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்துவிட்டால் அந்த ஆன்மா அருள் ஒளியின் சுடராகப் பெறும்.

ஒளியின் சுடராக பெற்று இந்தப் புவியின் பற்றினை நீக்கிடும் அருள் உணர்வுகள் நமக்குள் தோன்றியபின் நம்மை அந்த எண்ணத்துடன் வாழச் செய்யும்.

நம் நினைவு இந்த மக்களை அடுத்து வாழ்த்தச் செய்யும்.

இல்லையென்றால் அந்த மாங்கல்யத்தைப் பறித்து விட்டால்
1.“இழந்துவிட்டோம்.., இழந்துவிட்டோம்.., இழந்துவிட்டோம்..,” என்று
2.சர்வத்தையும் இழந்திடும் நிலை கொண்டு
3.வேதனை கொண்டு தான் வாழும் நிலை வரும்.

கடந்த காலத்தில் தவறு செய்திருந்தாலும் இனி தவறு செய்யாது இனியாவது “உங்களுடன் வாழுகின்றார்…” அந்த ஆன்மா ஒளியின் சரீரமான உணர்வுடன் உங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது என்று எண்ணுங்கள்.

என்று அவர் உங்களுடன் ஒன்றினாரோ இந்த நினைவுகள் வந்து கொண்டிருக்கும், அந்த அணுக்கள் இருந்து கொண்டிருக்கும்.

ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று விண்ணில் சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்களை இணைத்துவிட்டால் நம் நினைவு அங்கே செல்லும்.
1.நம் உணர்வு இங்கே வளரும்
2.அடுத்து இன்னொரு உடலுக்குள் செல்லாது தடுக்கும்
3.அருள் ஒளி சுடராக மாற்றச் செய்யும்
4.அந்த மெய்ஞானிகள் காட்டிய வழிகளில் நாம் செல்ல முடியும்.

கணவனை/மனைவியை இழந்துள்ளோம் என்று யாரும் எண்ண வேண்டாம். அவர் உணர்வு உங்களுக்குள்ளே உண்டு.

அந்த ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும், அல்லது இங்கே சுழன்று கொண்டிருந்தாலும் நீங்கள் தொடர்ந்து அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று காலை துருவ தியானங்களில் சொல்லி இருந்தீர்களென்றால் அந்த உணர்வுகள் ஒளியாகப் பெறுகின்றது.

அந்த உணர்வுகளுடன் மீண்டும் உங்களுக்குத் தொடர்பு ஏற்படுகின்றது. அவர் அருள் ஒளி பெறுகின்றார் ஒளியின் சரீரம் பெறுகின்றார்.

அந்த உணர்வு உங்களுக்குள் இருளை அகற்றும். ஒன்றி வாழும் உணர்வினை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் இதைத் தலையாயக் கடமையாக வைத்து உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

“மனிதனுடைய எல்லை எது…?” என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும். நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய பேருண்மை இது.

 

“கண்ணான கண்ணன் காட்டும் மெய் வழி”

Image

Hare Krishna hare krishna

“கண்ணான கண்ணன் காட்டும் மெய் வழி”

 

ஒரு பொருளைக் காணாமல் போட்டால் என்ன செய்கிறோம்? எங்கே வைத்தேனோ..,? என்று தலையைச் சொறிகின்றோம்.

 

“எங்கே தான் வைத்தனோ…?” என்று எண்ணினால் சங்கடம் தான் வரும்.

 

கீழே பார்த்தீர்கள் என்றால் இந்த உணர்வு ஆன்மாவில் இருக்கும். அதை நுகரப்படும்போது நமக்கு என்ன செய்கிறது? அப்பொழுது சங்கடம்தான் வருகிறது.

 

ஆனால் அதே சமயம், எங்கே வைத்தோம் என்று சிறிது நேரம் நம் சிந்தனையைச் செலுத்தினோம் என்றால்

1.இந்த ஆன்மாவை விட்டு அகன்று

2.புற நிலைகளில் நுகரும் தன்மை வரும்

 

 

இந்தச் சிந்தனையின் தன்மை வரப்படும்போது

1.நாம் பொருளை வைத்த உணர்வின் தன்மை அங்கே படர்ந்திருக்கும்

2.அந்த உணர்வை நாம் நுகர்வோம்

3.அதை நுகரப்படும்போது “பொருளை நாம் இந்த இடத்தில் வைத்தோம்…” என்ற உணர்ச்சி கொண்டு அதை அறியலாம்.

 

ஆனால் பொருளை எங்கே வைத்தோம் என்று “தெரியவில்லையே…!” என்று சங்கடமாக எண்ணிணீர்கள் என்றால்

1.உங்களுக்குள் அந்த உணர்ச்சியே வராது.

2.உணர்வை அறியவே முடியாது.

3.தலையைச் சொறிந்து கொண்டே இருப்போம்.

 

அடுத்தவர்கள் நம்மைப் பார்த்துக் கேட்டால் “என்ன…, எதைத் தேடுகிறீர்கள்” என்பார்கள்.

 

ஒரு பொருளை வைத்தேன். அதை எங்கே வைத்தேன் என்றே இப்பொழுது தெரியவில்லை என்போம்.

 

அவரும் நம்மிடம் “எங்கே வைத்தீர்கள்… என்பார்?”

 

“இங்கே தான்… வைத்தேன்” என்று வெறுப்பாகத் தான் சொல்ல முடியுமே தவிர தேடும் நிலையை ஞாபகப்படுத்தினாலும் காணோம் என்ற உணர்வே இயக்கும், சிந்திக்கும் திறன் இருக்காது.

 

1.பொருளை எங்கே வைத்தீர்கள்?

2.வைத்துவிட்டு எங்கிருந்து (எந்த வழியாக) வந்தீர்கள் என்று

3.சிறிது யோசனை செய்து பாருங்கள்… என்று சொன்னவுடன் அந்தச் சிந்தனை வரும்.

 

1.அங்கே படர்ந்த உணர்வலைகளும்

2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வும்

3.கையிலிருந்து போன அந்த இரண்டு உணர்வும் கலந்து

4.சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.

 

அப்பொழுது அந்த உணர்வு வரப்படும்போது அந்த எண்ணங்கள் வரும். “ஆஹா… இந்த இடத்தில் தான் வைத்தேன்…” என்ற நினைவு வரும். “பொருளை எடுத்து விட்டேன்” என்று சொல்ல முடியும்.

 

இதைத்தான் வியாசர் கண்ணனைக் காட்டினார். கண்ணன் சொல்கிறான் “அதோ வருகிறான்.. நாரதன்.. ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன்”.

1.அவனிடம் கேட்டால் தீமைகளிலிருந்து விடுபடும் உபாயத்தை

2.அவன் காட்டுவான் என்று கண்ணன் சொல்வதாகக் காவியப் படைப்புகளாக

3.சாதாரண படிக்காத மக்களுக்கும் புரியும் விதமாக காட்டியுள்ளார்.

 

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் உணர்வலைகளைச் சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி பரவச் செய்கிறது.

 

அதைத்தான் ரிஷியின் மகனாக, நாராயணனின் (நாராயணன் என்றால் சூரியன்) அபிமான புத்திரனாக வியாசகர் காட்டியுள்ளார்.

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி கணவன் மனைவி இணைந்து துருவ நட்சத்திரமாகி அகண்ட அண்டத்தில் வரும் எத்தகையை நஞ்சினையும் உணவாக எடுத்து ஒளியின் சுடராக பேரொளியாக மாற்றி என்றும் அழிவில்லாத நிலைகள் கொண்டு என்றும் பதினாறு என்று வாழ்ந்து கொண்டுள்ளார்.

 

வாழ்க்கையில் தீமைகள் வரும்போது நம் கண்ணின் நினைவுகள்

1.எங்கே செல்ல வேண்டும்?

2.எதை எண்ண வேண்டும்?

3.எதை நுகர வேண்டும்?

4.தீமையை நீக்கிடும் ஆற்றலை எப்படிப் பெறவேண்டும்? என்று

5.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்க்கும் மார்க்கத்தைக் காட்டினார் வியாசர்.

 

ஒவ்வொரு கால கட்டத்திலும் நம் பூமியில் தோன்றிய ஞானிகள் அனைவருமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைத் தனக்குள் சேர்த்து உடலில் விளைய வைத்துக் கொண்டார்கள்.

 

உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி துருவ நட்சத்த்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

 

அவர்கள் அடைந்த நிலையை அகஸ்தியனைப் போன்ற அருள் ஞானியாக நாம் ஆகும் மார்க்கத்தைத்தான் வியாசர் இவ்வாறு காட்டியுள்ளார்.

மார்க்கண்டேயன் உடலைப் பற்றவில்லை… “உயிரைப் பற்றிக் கொண்டான்…!” அதனால்தான் எமன் அவனைக் கவர முடியவில்லை

Image

Lord Markandeya

மார்க்கண்டேயன் உடலைப் பற்றவில்லை… “உயிரைப் பற்றிக் கொண்டான்…!” அதனால்தான் எமன் அவனைக் கவர முடியவில்லை

 

குடும்பத்தில் நாம் பாசமாக இருக்கின்றோம்.

 

நம் பிள்ளை மீது பாசமாக எண்ணி அவர்கள் தவறான வழியில் சென்றுவிட்டாலோ படிக்கவில்லை என்றாலோ

1.இப்படிச் செய்கின்றானே எதிர்காலம் என்ன ஆகுமோ…! என்று எண்ணி எண்ணி வேதனையை எடுத்துக் கொண்டால்

2.நமக்குள் அதுவே பாசக் கயிறாக மாறுகின்றது.

 

வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது நமக்குள் அது சித்திர புத்திரன். நாம் எதைக் கண்ணுற்றுப் பார்க்கின்றோமோ அது “சித்திரமாகி” (படமாகி) அந்த உணர்வின் சத்து நம் உடலுக்குள் “புத்திரனாக” (அணுக்களாக) இணைந்துவிடுகின்றது.

 

அதையே திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது பாசக் கயிறாக மாறி வழித் தொடராகின்றது. எருமை எவ்வாறு சிந்தனையற்று ஆகின்றதோ அதைப் போல

1.பையன் சொன்னபடி கேட்கவில்லை என்ற வேதனை வரப்படும் பொழுது

2.அந்த உணர்வின் சத்தே நமக்குள் புத்திரனாகின்றது.

 

நாம் எண்ணியபடி ஒருவன் நடக்கவில்லை என்றால் அந்த வேதனையான உணர்வு எனக்குள் வரும் பொழுது சித்திரபுத்திரன்.

 

ஆகவே அவன் எனக்குத் “தீங்கு விளைவித்தான்… தீங்கு விளைவித்தான்…” என்ற எண்ணத்தை எடுத்துக் கொண்டால் அந்த உணர்வுகள் நமக்குள் பிள்ளையாக வந்து சித்திரபுத்திரன் கணக்குப் பிரகாரம் அடுத்து எமன் தண்டனை கொடுக்கின்றான்.

 

இங்கே எமன் என்பது நம்முடைய அந்த எண்ணம் தான்.

 

வேதனையான எண்ணங்களை நமக்குள் எடுக்கும் பொழுது…, கண்ணிலே பார்ப்பது “சித்திரம்” ஒரு உடலிலே விளைந்த உணர்வுகள் எனக்குள் அது “புத்திரனாகி” அந்த வேதனையாக வளர்கின்றது. அடிக்கடி நாம் எண்ணப்படும் பொழுது அது “பாசக்கயிறாக” மாறுகின்றது.

 

எருமை ரோட்டில் வரும் போது பஸ் வந்தாலும் அதைத் திரும்பிப் பார்ப்பதில்லை. “அடிபட்ட பின் தான்…” அதற்குத் தெரியும்.

 

இதே போல் நாம் சிந்தனையற்ற நிலைகள் வரும் பொழுது அதன் மீது தான் வருகின்றான் எமன். மனிதனான பின் சிந்தனையற்ற செயல்களைச் செய்யும் பொழுது

1.எதன் மேல் சிந்தனையற்று நம் பாசத்தை உந்துகின்றோமோ

2.அதனின் உணர்வு கொண்டு நம் சிந்தனை மந்தமாகி

3.நம் உடலை நம் எண்ணமே அழித்துவிடுகின்றது.

 

மார்க்கண்டேயன் எதைப் பற்றுகின்றான்?

 

1.கீழே இருக்கக்கூடியது ஆவடை உடல். அதைப் பற்றவில்லை.

2.அந்த உயிரின் தன்மை இயக்கிய நிலைகள் கொண்டு  தாவி அந்த லிங்கத்தைத்தான் ஆலிங்கனம் செய்கின்றான்.

3.அது ஜீவனுள்ளது.

 

உயிரின் தன்மை நமக்குள் வளர்ச்சி கொண்டிருப்பதை உயிரைப் பற்றுடன் பற்றி அதனுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உணர்வின் தன்மையை “ஒளியாக மாற்றினான்” என்ற நிலையை அதிலே நிலைப்படுத்திக் காட்டினார்கள்.

 

எருமை என்ற வாகனம் மீது எமன் வருவதைக் காட்டுகின்றார்கள். அந்த மார்க்கண்டேயன் உயிரை எடுக்க வருகின்றான்.

 

ஆனால் உயிருடன் ஒன்றிய நிலைகள் வரப்படும் பொழுது இவனால் அவனைக் கவர முடியவில்லை என்று “சாதாரண மனிதனுக்கும் புரியும் வண்ணம்…” மிக மிகத் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளார்கள்.

 

நம்முடைய எண்ணம் உயிருடன் ஒன்றிய நிலைகளில் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.

1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இருந்தால்

2.தீமைகளை அகற்றிடும் சக்தியாக வரும் என்று

3.விளக்க உரையாகக் காவியமாகத் தீட்டி உருவத்தை அமைத்து

4.சாதாரண மக்களும் புரிந்திடும் வண்ணம் கொடுத்துள்ளார்கள் தத்துவ ஞானிகள்.

 

அவ்வாறு வகுக்கப்பட்டிருந்தாலும் “நாம் புரிந்திருக்கின்றோமா…!” என்றால் இல்லை.

 

தெய்வத்திற்கு ஆராதனையும் அர்ச்சனையும் செய்தால் அந்தத் தெய்வம் செய்யும் மந்திரவாதியிடம் காசைக் கொடுத்தால் அவன் செய்வான். ஜோதிடக்காரனுக்குக் காசைக் கொடுத்துவிட்டு யாகம் செய்து பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று இந்த எண்ணத்திலேயே தான் இன்றும் வாழ்கின்றோம்.

 

துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் வேகா நிலை பெற்றது. துருவ நட்சத்திரமும் அதனின் ஈர்ப்பு வட்டத்திலிருக்கும் சப்தரிஷி மண்டலமும் என்றுமே அழியாதது. எந்த நஞ்சு கொண்ட உணர்வுகளும் அதை மாய்த்திட முடியாது.

 

நாம் காணும் கோள்களோ சூரியன்களோ கடுமையான கதிரியக்கங்களை உமிழ்த்தும் நட்சத்திரங்களோ எல்லாமே ஒரு கால கட்டத்தில் அழியக்கூடியதுதான்.

 

நட்சத்திரங்கள் சூரியனாக மாறலாம். சூரியனாக மாறிப் படைக்கும் தன்மை வந்தாலும் மிருக நிலைகளிலிருந்து மாறி நாம் மனிதனான பின் முதுமை அடைவது போல் சூரியனும் முதுமை அடைந்துவிடும்.

 

இந்தப் பிரபஞ்சத்திற்குள் உயிரணுவின் தோற்றமாகி மற்ற ஏனைய உடல்களைப் பெற்று மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருக்கின்றோம்.

 

1.மனிதனான பின் நாம் அந்த மகரிஷிகளுடன் ஒன்றிக் கொண்டால்

2.வேகா நிலையாக என்றுமே நிலைத்து இருக்கும் வாழ்க்கையாக

3.”என்றும் பதினாறு” என்று நாம் வளர்ந்து கொண்டேயிருப்போம்.

 

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக வேண்டித்தான் “என்றும் பதினாறு…  என்று மார்க்கண்டேயன்” கதையைக் காட்டினார்கள் ஞானிகள்.

“வேதனை” என்ற நஞ்சை நீக்கக்கூடிய ஒரே சக்தி துருவ நட்சத்திரம்

Gnanaguru - Venugopalswami

“வேதனை” என்ற நஞ்சை நீக்கக்கூடிய ஒரே சக்தி துருவ நட்சத்திரம்

விஞ்ஞானிகள் மனித உடலுக்குள் இயங்காத பழுதான உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மாற்று உறுப்புகளைப் பொருத்துகின்றார்கள். நம்மைக் காக்கின்றார்கள்.

மாற்று உறுப்புகளைப் பொருத்தினாலும் அவைகள் தொடர்ந்து சீராக இயங்க வேண்டுமென்றால் பல உணவுக் கட்டுப்பாடுகளையும். மற்ற மருந்துகளையும் கொடுப்பார்கள்.

தண்ணீர் இவ்வள்வுதான் குடிக்க வேண்டும், அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக்கூடாது. எங்கே சென்றாலும் இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் சொல்வார்கள்.

அந்தக் கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றவில்லை என்றால் அந்த உறுப்பு கழன்று விடும், இயக்கம் மாறிவிடும். பின் வேதனையைத்தான் அனுபவிக்க வேண்டும்.

“எவ்வளவு நாள்…” இதைப் போன்ற நிலையில் வாழ முடியும்? சந்தோஷம் நீடித்து இருக்கின்றதா…! காசையும் செலவழித்துச் சிறிது நாள் வாழ்வதற்குள் எவ்வளவோ வேதனைகளைச் சந்திக்க நேர்கின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் உள்ள உறுப்புகளுக்குள் செலுத்தி உறுப்புகளிலுள்ள தீமைகளை நீக்க முடியும்.

அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைத் துருவ நட்சத்திரத்தின் பேரொளியைப் பெறச் செய்து அதை உற்சாகப்படுத்தி நல்ல உறுப்பாக மாற்றிக் கொள்ள முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து
2.சுவாசித்த அந்த உணர்வலைகளை
3.கண்ணின் நினைவு கொண்டு உள் முகமாக உடலுக்குள் செலுத்தி
4.நேரடியாக எந்த உறுப்போ அங்கேயே செலுத்த முடியும்.

அந்த உறுப்பை உருவாகிய அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இணைத்தால் உடலை உருவாக்கிய அந்த நல்ல அணுக்கள் அனைத்தும் வலு பெற்று உறுப்பைச் சீராக இயங்கச் செய்யும்.

அந்த ஆற்றலைப் பெற துருவ தியானத்தைப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.நம் பூமியின் வட துருவப் பகுதி வழியாக வந்து கொண்டிருக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியான
3.“அருள் ஞானப் பொக்கிஷத்தை” நமக்குள் கவரும் அந்த அதிகாலை நேரமே “துருவ தியானம்”.

துருவ தியானத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் உயிர் நேராக அந்தத் துருவ நட்சத்திரத்திலேயே “உங்களைக் கொண்டு போய் நிறுத்தும்”.

ஒரு சிலரிடம் பேசிவிட்டு வந்தாலே நம் உடலில் பல விதமான வலியும் வேதனையும் ஏற்படுவது ஏன்…!

Salaivary glands

ஒரு சிலரிடம் பேசிவிட்டு வந்தாலே நம் உடலில் பல விதமான வலியும் வேதனையும் ஏற்படுவது ஏன்…!

சாதாரணமாக மற்றவர்களுடன் பேசும் பொழுது வாழ்க்கையின் முறைகளில் விருப்பு வெறுப்பு நமக்குள் தோன்றி அதனாலே அந்த மாதிரியான எண்ணங்கள் உமிழ்நீராக மாறி நம் உடலுக்குள் வித்தாக மாறி நோயாக மாறுகிறது.

ஒரு தடவை சஞ்சலப்படுகின்றோம் என்று சொன்னால் அந்தச் சஞ்சலப்படும் எண்ணங்கள் நமக்குள் பதிவாகி இப்படிப் பலவும் சேர்ந்து விடுகின்றது.

உதாரணமாக சில இடங்களில் பார்த்தோம் என்றால் பக்கத்து வீட்டுக்காரருக்கும் அவர்களுக்கும் ஆகாது.

பக்கத்து வீட்டுக்காரர் எனக்குப் பல வகைகளிலும் இடைஞ்சல் செய்கிறார். அதைப் பற்றிக் கேட்டால் தகராறு செய்கிறார் என்பார்கள்.

ஆக அவர்கள் செய்யும் தகராறுகளைப் பற்றி எண்ணும்பொழுது அந்த உணர்வுகள் இவருக்குள் வந்துவிடுகின்றது. அவர்களைப் பற்றி எண்ணினாலே அல்லது அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் இனம் புரியாத வெறுப்பு வரும்.

வெறுப்பான உணர்வுடன் அவர்களிடம் பேசும் பொழுது அவர்களுக்கு இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் இவர் மீது வெறுப்பு வரும். இதைத் தீர்க்கவே முடிவதில்லை.

ஆனால் இரண்டு பேரும் சண்டையிடுவதனால் என்ன இலாபம் அடைகிறார்கள்…!

இவர்கள் சங்கடமாகவும் ஆத்திரமாகவும் பேசி அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகள் இங்கே உமிழ்நீராகி இவர்கள் உடலில் வியாதியாக மாற்றிக் கொள்கிறார்கள்.

எதிர்நிலைகளில் பேசுகின்றவர்களும் அதே போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உமிழ்நீராக மாறும் போது அவர்கள் உடலிலும் நோயாக மாற்றிக் கொள்கிறார்கள்.

இரண்டு பேருமே நல்லதைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். ஆனால் இரண்டு பேரும் அவர்கள் உடலில் வியாதியைத்தான் சேர்த்துக் கொள்கின்றார்கள்.

நிலத்தில் ஒரு விஷச் செடியைப் பதியச் செய்தால் காற்றிலிருந்து அது தன் இனமான விஷத்தின் சத்தைக் கவர்ந்து வளர்கின்றது.

இதைப் போன்று தான் வெறுப்பான எண்ணங்களைப் பதிவு செய்யும் பொழுது அதே எண்ணங்களை எடுத்து இரண்டு பேரும் வளர்த்துக் கொண்டேயிருப்பார்கள்.

இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

ஒருவருடைய சொல் நம்மைக் கடுமையாகப் பாதிக்கின்றது என்றால் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து

1.அதைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.
2.பின் நம் சொல் அவர்களுக்கு நல்லதாகப் படவேண்டும்.
3.எல்லோருக்கும் நல்லது செய்யக் கூடிய மனது வரவேண்டும் என்று எண்ணி
4.இந்த உணர்வலைகளைப் பாய்ச்ச வேண்டும்.

அவர்கள் நம் மேலே கோபமாகத் திட்டிக் கொண்டேயிருந்தாலும் கூட இந்த உணர்வுகள் அவர்களிடம் போய்ச் சேர்ந்து நாம் பாய்ச்சிய நல் உணர்வுகள் அதை நல்லதாக்கச் செய்யும்.

நமக்குள் அந்தச் சங்கடமான எண்ணங்கள் வந்து நம் உடலில் நோயாக மாற்றாது.

ஏனென்றால் நாம் சங்கடமாகப் பேசிக் கொண்டிருந்தால் நம் வியாபாரமோ தொழிலிலோ மந்தமாகிவிடுகின்றது. நம் குழந்தைகளிடமும் பக்குவமாக இருக்க முடியாது.

சமையல் செய்யும் பொழுது சங்கடமான எண்ணத்தைக் கொண்டிருந்தால் சுவையாகச் செய்யும் நிலைகளை மாற்றிவிடும்.

அதே சமயத்தில் ருசியாகச் சமைத்து வைத்திருந்தாலும் சங்கடமான எண்ணத்துடன் இருக்கும் பொழுது சாப்பிட்டால் ருசி இருக்காது. ஆகாரத்திலுள்ள சத்தைப் பிரிக்காது.

அப்பொழுது அது நம் உடலில் வியாதியாகவும் மாறிவிடுகின்றது. அதை மாற்றுவதற்காகத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் “ஈஸ்வரா…” என்று ஏங்கித் தியானியுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள். எங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும் “ஈஸ்வரா…” என்று எண்ணுதல் வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லும் செயலும் பிறருக்கு நல்லதாக இருக்க வேண்டும். பிறர் என்னைப் பார்க்கும் பொழுது நல்லதாக இருக்க வேண்டும்.

வியாபாரம் செய்யும் பொழுது என்னிடம் சரக்கு வாங்கிச் செல்பவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் வளமாக இருக்க வேண்டும் “ஈஸ்வரா…” என்று எண்ண வேண்டும்.

இவ்வாறு எண்ணித் தியானம் செய்தீர்கள் என்றால் உங்கள் வாயில் சுரக்கும் உமிழ் நீர் சுவையுள்ளதாகச் சுரக்கும். நீங்கள் சாப்பிட்ட ஆகாரத்திலுள்ள சத்தினைச் சீராகப் பிரிக்கும். உடல் நலம் பெறுவீர்கள்.

இப்படி உங்கள் உயிரான ஈசனிடம் நல்ல உணர்வுகளைப் பதிவு செய்யும் பொழுது அந்த குணத்தின் அடிப்படையிலேயே உங்கள் இயக்கம் அமைகின்றது.

இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

[su_button url=”https://eswarabattar.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D” target=”blank” style=”soft” background=”#ffffff” color=”#5d23f5″ size=”4″ radius=”20″ icon_color=”#141bf3″ text_shadow=”1px 1px 1px #89c8f2″ rel=”lightbox” title=”மாமகரிஷி ஈஸ்வரபட்டர்”]முக்கியமான குறிப்பு:- பிரதோஷத்தை நீக்கும் முறை[/su_button]

மற்றவர்களுக்காக நாம் ஏன் தியானிக்க வேண்டும்? அதனுடைய முக்கியத்துவம் என்ன?

Image

Group and Combined Meditation

மற்றவர்களுக்காக நாம் ஏன் தியானிக்க வேண்டும்? அதனுடைய முக்கியத்துவம் என்ன?

 

சில பேர் சொல்வார்கள். எனக்காக வேண்டி நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். “எனக்கு நன்றாக வேண்டும்…” என்று நீங்கள் செய்யுங்கள் என்று அடுத்தவர்களிடம் சொல்வார்கள்.

 

1.நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று

2.பிரார்த்தனையோ தியானமோ நான் செய்தால்

3.உங்கள் தீமைகளோ வேதனைகளோ “எனக்குள் வராது”.

 

அது தான் உண்மை.

 

ஆனால்

1.அந்தச் சக்தியைப் பெறவேண்டும் என்று

2.நீங்கள் எண்ணினால்தான்

3.நீங்கள் மகரிஷிகளின் அருளை நுகர்ந்தால்தான்

4.நீங்கள் அதைக் கவர்ந்தால்தான்

4.உங்கள் உயிர் உங்களுக்குள் அந்த ஆற்றலைப் பெறச் செய்யும்.

 

நீங்கள் நுகர்ந்த உணர்வை “உயிர்” உங்கள் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக்கி பின் அணுவாக்கி அது தன் இனத்தைப் பெருக்கும் நிலையில் அந்த ஆற்றல் உங்களுக்குள் பெருகும்.

 

ஏனென்றால் உங்கள் பசிக்கு நீங்கள்தான் சாப்பிட வேண்டுமே தவிர உங்களை எண்ணி நான் உணவை உட்கொண்டால் எனக்குத்தான் சத்து சேரும்.

 

நீங்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

ஆகவே நான் எண்ணியது போன்று

1.மகரிஷிகளின் அருள் சக்தி மற்றவர்கள் பெறவேண்டும் என்று நீங்களும் எண்ணினால்

2.பிறரின் தீமைகளோ துயரங்களோ உங்களுக்குள் வராது.

 

மற்றவர்கள் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணும்போதெல்லாம் உங்களுக்குள் அந்த ஆற்றல் கூடிக் கொண்டே வரும்.

 

மற்றவர்களும் அதை எண்ணினால் அவர்களும் அந்த ஆற்றலைப் பெறுவார்கள். ஏனென்றால்,

1.உங்கள் உயிரும் தவறு செய்யவில்லை,

2.உங்கள் உடலும் தவறு செய்யவில்லை

3.நீங்கள் “நுகரும் உணர்வுதான்” தவறுக்குக் காரணம்.

 

அருள் சக்திகளை அனைவரும் நுகர வேண்டும்.

அருள் உணர்வுகள் அங்கே இயக்கமாக வேண்டும்.

அருள் ஞானம் பெருக வேண்டும்.

அருள் ஞானிகள் உருவாக வேண்டும்

அருள் உலகமாக மாற வேண்டும்

 

நீங்கள் அனைவரும் அவ்வாறு வளர வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

என்னைத் தாழ்த்தி… “உங்களை உயர்த்துகின்றேன்”

Image

a64c3-e0ae88e0aeb8e0af8de0aeb5e0aeb0e0aebee0aeafe0ae95e0af81e0aeb0e0af81e0aea4e0af87e0aeb5e0aeb0e0af8d-e0aeaee0ae95e0aeb0e0aebfe0aeb7

ஒவ்வொருவரும் பெருமைப்படும்படி “அவர்களை உயர்த்து”

நீ இதைப் பெறச் செய்தால் “நீ உயர்கின்றாய்”

அவர்களை “உயர்த்துகின்றாய்”

அந்த “உயர்ந்த நிலைகளை” நீ நுகர்கின்றாய்.

அவர்களும் “உயர்கின்றனர்” அப்பொழுது நீயும் “உயர்கின்றாய்”

“இதைத்தான்” நான் உன்னைச் செய்யச் சொல்கின்றேன்

 

–மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

 

என்னைத் தாழ்த்தி… “உங்களை உயர்த்துகின்றேன்”

இயந்திரத்தின் மூலம் கண்டுணரும் விஞ்ஞான அறிவை மெச்சுகிறோம் – அகண்ட அண்டத்தையும் காணும் சக்தி சாதாரண மனிதனுக்கு உண்டு என்பதை நம்புகின்றோமா…!

Image

 

Trust your will

இயந்திரத்தின் மூலம் கண்டுணரும் விஞ்ஞான அறிவை மெச்சுகிறோம் – அகண்ட அண்டத்தையும் காணும் சக்தி சாதாரண மனிதனுக்கு உண்டு என்பதை நம்புகின்றோமா…!

 

இன்று விஞ்ஞானிகள் விண்ணுலகில் நடக்கும் நிலைகளை அறிவதற்காக இராக்கெட்டுகள் மூலம் பல செயற்கைக் கோள்களை அனுப்புகின்றார்கள்.

 

ஒரு கம்ப்யூட்டரில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்காக மாற்றி அதன் உணர்வின் அழுத்தத்தைக் கொடுத்தால் அந்தக் காலம் வரையில் அதனுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்களை இயக்கிக் காட்டுகின்றது.

 

செயற்கைக் கோளை வான் வீதியில் அனுப்பினாலும் தன் உணர்வின் தன்மை மற்றதை ஒதுக்கிவிட்டு அதில் பதிவு செய்த நிலைகளுக்கொப்ப எந்தக் கோளின் உணர்வு வலுவோ அங்கே அழைத்துச் செல்கின்றது.

 

அது கோளுக்குப் போகும் பாதையில் அதை இடைமறித்து அதனின் இடைவெளியில் என்ன வட்டங்கள் இருக்கிறது என்று அதை அறிந்து கொண்டு அதே உணர்ச்சியை ஊட்டியபின் இதில் என்னென்ன பிறக்கிறது என்ற நிலையை அங்கே இயந்திரத்தில் பதிவாக்கிக் கொள்கின்றார்கள்.

 

அங்கே பதிவாக்கிய உணர்வின் தன்மையை அதன் ஒளிக்கற்றைகளை நம் பூமியில் இருக்கக்கூடிய இயந்திரங்களில் பதிவாக்கி அதனின் நிலைகளை அறிந்து கொள்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

இதைப் போல் தான் ஞானிகள் – தான் உலக நிலைகள் அறியும் பொழுது

1.அகண்ட அண்டத்தின் நிலைகள்

2.இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இந்த உணர்வுகள் இணைந்திருக்கின்றது என்பதை உணர்ந்து

3.பிரபஞ்சத்தின் இயக்கத்தை அறிந்தனர்.

 

ஒவ்வொரு கோளும் உமிழ்த்தும் நிலைகளும் அது வெளி வரப்படும் பொழுது மற்றொன்றுடன் மோதி சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது உணர்வின் அணுக்கள் எப்படி மாற்றமடைகின்றது என்று பார்க்கின்றனர்.

 

இதையெல்லாம் இன்று விஞ்ஞானிகள் பல நிலைகள் கண்டுணர்ந்தாலும்

1.இவர்கள் பதிவாக்கிய நிலைகள் அது பாதுகாப்பாக நம் பூமியில் வந்து சேராது.

2.காரணம் ஒளிக்கற்றைகளின் அழுத்தம் அதிகமாக இருக்கும் பொழுது

3.மற்றொரு நட்சத்திரத்தின் உணர்வு அதிக வீரியமானால் இதன் உணர்வுகள் ஊடுருவி

4.இந்த உணர்வின் தன்மை மாற்றிவிடும்.

 

இதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஒவ்வொரு இடத்திலும் தெளிவாகக் காட்டுகின்றார்.

 

ஏனென்றால் இந்த இயற்கையின் உண்மையின் நிலைகளை அறிவதற்குத் தன் உடலுக்குள் இதைப் பதிவாக்கி அந்த உணர்வின் அறிவால் ஒன்றுடன் இணைத்து அந்த உணர்வின் அறிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

மாறாக இயந்திரத்தின் துணை கொண்டு இவர்கள் செய்யும் நிலைகள் அந்த அளவுகோல்களுக்குள் மாறத்தான் செய்யும். அந்த உண்மையின் இயக்கத்தில் சிறிதளவாவது மாற்றம் இருக்கத்தான் செய்யும்.

 

அதை மீண்டும் இவர்கள் தெளிவாக்கிக் கொண்டு வருவதற்கு முன்னால் இந்த உலகமே ஒரு பெரிய மாற்றத்திற்குப் போய்விடும்.

 

இயந்திரத்தின் துணை கொண்டு தான் இவர்களால் பார்க்க முடியுமே தவிர மனிதனின் உணர்வின் தன்மையை இவர்களால் அறிவதற்கு முடியாது.

 

இயந்திரத்தை நம் பிரபஞ்சத்தின் கடைசி எல்லையையும் தாண்டி அடுத்த மண்டலங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று விஞ்ஞான அறிவு விரும்புகின்றது. ஆனால்

1.கண்ணின் நினைவினை வெகு தூரத்தில் பாய்ச்சி

2.மற்ற மண்டலத்தில் இருக்கும் உணர்வுகளைக் கவரும் ஆற்றல் பெற்று

3.அவ்வாறு இந்த உடலுக்குள் புகுந்த அந்த உணர்வின் வலு சேர்த்து

4.அகண்ட அண்டத்தின் உண்மைகளை அறியும் தன்மை பெற்றார்கள் “மகரிஷிகள்”.

 

இயந்திரத்தின் துணையால் இதைக் கண்டுணர வேண்டும் என்றால் வருடக் கணக்கில் வெளியே சுற்ற வேண்டும். பின் கண்டறிந்த உணர்வின் தன்மையை அவன் பதிவாக்குவதற்கு ஆயுள் பத்தாது.

 

ஒரு இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி மற்ற கோள்களை அது சுழன்று வருவதற்கே பல வருடங்கள் ஆகின்றது. செவ்வாய்க் கோளோ வியாழன் கோளோ சனிக் கோளோ செல்லப்படும் பொழுது பல வருடங்கள் ஆகின்றது. ஆனால்

1.மனிதன் தன் எண்ணத்தால் உணர்வின் நிலைகளை விண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது

2,அது ஊடுருவி

3,அடுத்த கணமே அதனுடன் இணைத்துக் கொள்ளும் தன்மை வரும்.

 

நாம் ஒரு விளக்கைப் போட்டால் அடுத்த கணமே துரித கதியில் அந்த விளக்கு எப்படி எரிகின்றதோ இதைப் போல நமக்குள் பதிவான உணர்வின் துணை கொண்டு அடுத்தவர்களுடன் தொடர்பு கொள்ளும் சக்தி மனிதனுக்கு உண்டு.

 

“சுவிட்சைப் போட்டவுடன்… விளக்கு எரிவது போல்…” வெகு தொலைவில் இருக்கும் பிற மண்டலங்களில் அதனின் உணர்வுகள் இணைந்து அறியும் தன்மை (நமக்கு) வரும்.

 

டெலிஃபோனை எடுத்துக் கொண்டால் இயந்திரத்தின் (சேடிலைட்) துணை கொண்டு அந்த உணர்வினை வெளியில் பரவி இருப்பதை இந்த உணர்வால் கவரப்படும் பொழுது “சிறிது நேரமாவது… தாமதமாகும்”.

 

ஆனால் இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் நீங்கள் இங்கிருந்து மற்றொரு இடத்திலுள்ளவர் உடல் நலமாக வேண்டும் என்று ஃபோனில் தொடர்பு கொண்டாலும் சரி அது வேலை செய்யும்.

 

நீங்கள் இதே மாதிரிப் பிரார்த்தனை செய்துவிட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவருக்குள் படர்ந்து உடலிலுள்ள பிணிகள் நீங்கி உங்கள் உறுப்புகள் சீராக இயங்கும். உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று சொல்லிப் பாருங்கள்.

 

அதை ஏற்றுக் கொண்ட உணர்வுடன் அவர்கள் வந்தால்

1.அந்த உடலிலுள்ள சர்வ பிணிகளையும் போக்கிடும் சக்தி உண்டு.

2,இதைப் போன்று தான் சர்வ நிலைகளும் மனிதர்களான நமக்கு  உண்டு.

3.அதி சக்தி வாய்ந்த ஆற்றல்களைக் கவரக்கூடிய சக்தி நமக்கு உண்டு என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

நம் குருநாதர் கொடுத்த சக்தியை நீங்கள் ஒவ்வொருவரும் இத்தகைய தன்மைகள் பெறவேண்டும்.

 

அருள் உணர்வை உங்களுக்குள் சேர்த்து உங்கள் சொல்லால் பேச்சால் மூச்சால் இந்தக் காற்று மண்டலத்தின் நச்சுத் தன்மையைப் பிளந்து இந்த உடலிலே பிறவியில்லா நிலை அடைவதற்கே இதை உபதேசிக்கின்றோம்.

 

பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்த விஞ்ஞான உலகில் மெய்ஞான உணர்வின் அறிவு கொண்டு பேரழிவிலிருந்து உங்களை மீட்டி உங்கள் பேச்சும் மூச்சும் மனிதனுடைய நிலைகளை உயர்வாக்கும் தன்மையாக வளர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

 

இந்த உண்மைகளை நீங்களும் அறியலாம்.

 

2000 சூரியக் குடும்பம் என்பது ஒரு அண்டம். அது ஒவ்வொன்றும் பிற அண்டத்திலிருந்து கவர்ந்து கொள்ளும். அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தான் இன்று வாழ்கின்றது.

 

ஒன்றில்லாது ஒன்றில்லை. இதைப் போல இந்த உணர்வின் தன்மையை நாம் அறிந்துணரும் சக்தி எல்லோரும் பெறவேண்டும்.

 

ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நம்மைப் போன்று மனிதர்கள் ஏராளம் உண்டு. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உணர்வுக்கொப்ப உருவங்களில் மாற்றம் உண்டு. மனித இனம் ஒன்று தான்.

 

நம் பிரபஞ்சத்தில் இன்று எப்படி விஞ்ஞான அறிவில் பெருகி இருக்கின்றதோ இதைப் போல “மெய் ஞான அறிவில்” வளர்ச்சி பெற்றவர்களும் உண்டு.

 

என்னை (ஞானகுரு) எப்படி அகண்ட அண்டத்தையும் குருநாதர் அறியச் செய்தாரோ அதைப் போல நீங்களும் அறிந்துணர்ந்து உங்கள் உடலுக்குள் 2000 சூரியக் குடும்பத்தின் (பிரபஞ்சத்தின்) உணர்வுகள் எப்படி இருக்கின்றது என்பதைக் காணலாம்.

 

இதையெல்லாம் நீங்கள் நுகரலாம். அறியலாம். என்னால் காண முடிகின்றது.