ஐவர் மலையில் வைத்து குருநாதர் எமக்குக் கொடுத்த முழுமையான சக்தி

ஐவர் மலையில் வைத்து குருநாதர் எமக்குக் கொடுத்த முழுமையான சக்தி

என்னை வேலையை விட்டு நிற்கச் சொன்னார் குருநாதர்:-
என்னை மில்லில் இருந்து வேலையை விட்டுப் (நிற்க) போகச் சொன்னார் குருநாதர். இங்கு வீட்டில் சாமி அம்மாவுக்கு (ஞானகுருவின் மனைவி) இது தெரியாது.

அப்பொழுதுதான் அவர் நோயில் இருந்து எழுந்திருக்கின்றார். “சாமி வேலையை விட்டு நின்று விட்டார்…” என்று இங்கு வீட்டில் வந்து சொல்லி இருக்கின்றார்கள்.

அங்கு யாம் வேலைக்குச் சென்றாலும் குருநாதர் என்ன செய்தார்…? அவனை உடனே ரிசைன் (ராஜினாமா) பண்ணச் சொல் என்று ஆபீசில் ஃபோன் அடிக்கின்றது.

ஆனால் இங்கே மில்லில் மேனேஜர் என்னை ரிசைன் செய்ய விட மாட்டேன் என்கிறார். உனக்கு என்னப்பா வேண்டும்…? செலவுக்குப் பணம் வேண்டுமென்றாலும் தருகிறேன்… நீ வேலையைப் பார் என்கிறார்கள்.

அதற்குள் ஃபோனில் குருநாதர்… “அவனை உடனே நீ வெளியே அனுப்புகிறாயா இல்லையா…!” என்று அங்கே கேட்கிறார்.

1.அந்த மேனேஜருக்கு அதைக் கேட்டவுடனே
2.ஒரு அதிர்ச்சி மாதிரி ஆகிக் “கிடு… கிடு… கிடு…” என்று மயக்கமாக வந்து விட்டது.

என்னப்பா இது…? யாரோ உன்னை ரிசைன் பண்ணச் சொல்லி அவனுக்குப் பணத்தைக் கொடுத்து வேலையை விட்டுப் போகச் சொல்… என்று சொல்கிறார்கள். என்னைப் போட்டு வெளுக்கின்றார்கள்…! என்கிறார்.

இப்படி இதைக் கேட்ட பின் அவரும் பயந்து கொண்டு நீ எப்பொழுது வேண்டுமானாலும் வேலைக்கு வரலாம் என்று சொல்லி எம்மிடம் அந்த மேனேஜர் 700 ரூபாய் கொடுத்தார்.

யாம் அதைக் கொண்டு போகவும் உடனே குருநாதர் நடு ரோட்டில் எம்மை மடக்கி “இங்கே பார்…! எத்தனை பேர் பட்டினியாக இருக்கிறர்கள்…? அவர்களுக்கு எல்லாம் வாங்கிக் கொடு…! என்றார்.

அந்தப் பணத்தை நான் வீட்டிலே கூடக் கொடுக்க முடியவில்லை

1.நீ வீட்டில் கொடுத்தால் வேலையை ராஜினாமா பண்ணியது தெரிந்துவிடும். நிச்சயம் அழுகத்தான் போகிறார்கள்.
2.ஆகையால் அந்தப் பணத்தை இங்கே அழுகிறவர்களுக்கெல்லாம் கொடுக்கலாம் என்று சொல்லி வாங்கிக் கொண்டார் குருநாதர்.

இந்த மாதிரியெல்லாம் சில சிரமங்களை ஏற்படுத்தித்தான் அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர். பின் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் பேசாமல் உட்கார்ந்து விட்டேன்.

பிறகு குருநாதர் என் பொண்ணு மீராவுக்குக் காட்சி கொடுக்கிறார். ஆனால் என் பையன் தண்டபானி சிறிய பையன். சாமி அம்மாவுக்கும் குருநாதர் காட்சி கொடுக்கவில்லை.

என் பொண்ணுகள் இருவருக்கும் காட்சி கொடுக்கவும் எனக்குச் சாப்பாடு எடுத்து வைத்தார்கள். அந்தச் சாப்பாட்டுத் தட்டு அங்கு போய் நிற்கிறது, போட்டுவிட்டு இங்கே வைத்தால் நான் கையை வைக்கப் போனால் தட்டு நகர்ந்து அங்கே போகிறது.

இப்படியே மாற்றி மாற்றி வந்தவுடன் என் பிள்ளைக்குச் சந்தேகம் வருகின்றது. என்னமோ ஏதோ நடக்கிறது என்று அழுகின்றார்கள்.

அப்பொழுது சாமி படத்தின் மூலம் குருநாதர் காட்சி கொடுத்து உங்கள் அப்பாவுக்கு ஒன்றும் தெரியாது. நான் தான் வேலையை விட்டு நிற்கச் சொன்னேன், அவர் வேலையை விட்டார் இதை யாரிடமும் சொல்லக் கூடாது. சொன்னால்… உனக்குத் தலைவலி வரும் என்று சொன்னவுடன் அந்தப் பொண்ணும் எதுவும் சொல்லவில்லை.

பிறகு இப்படியெல்லாம் ஆகிவிட்டதே…! சாமி அம்மாவும் இப்பொழுதுதான் நோயில் இருந்து எழுந்தார்கள் அவரிடமும் சொல்லவில்லையே என்று எண்ணி எனக்கு மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

மலைக்குச் சென்று, முருகனிடம் என்ன கேட்க வேண்டும்? என்று சொன்னார் குருநாதர்:-
அப்பொழுது இந்த உணர்வை எடுத்து… “நீ நேராகப் பழனி மலைக்குப் போ…!” என்று சொல்கிறார்.

அப்படி அந்த மலைக்குப் போவதற்கு முன்னாடி “முருகன் உனக்குக் காட்சி கொடுக்கும் பொழுது… நீ என்ன கேட்க வேண்டும்…?” என்றும் சொல்கிறார் குருநாதர்.

செல்வம் வேண்டும்… செல்வாக்கு வேண்டும்… சொல்வாக்கு வேண்டும்…! என்று முருகனிடம் நீ கேட்க வேண்டும் என்று சொல்லி இதற்கு விளக்கமும் கொடுத்தார் குருநாதர்.

1.செல்வம் இருந்தாலும் செல்வாக்கு வேண்டும், அது இல்லாமல் போனால் அந்தச் செல்வத்திற்குள் எதிரிகள் வரும். ஆகவே செல்வாக்கு வேண்டும்,
2.இரண்டாவது சொல்வாக்கு வேண்டும். இதைச் சொன்னால் அந்த உணர்வை அவன் கிரகிக்கும் தன்மை.
3.இந்த மூன்று நிலையும் ஒரு மனிதனுக்குத் தேவை என்று குருநாதர் சொல்கின்றார்.

முருகன் உனக்குக் காட்சி கொடுப்பான்… நீ இதைக் கேட்க வேண்டும் என்று சொன்னார். இதே மாதிரிப் பல உணர்வின் உண்மையின் நிலைகளை இயக்கிக் காட்டினார்.

முருகன் என்றால் சாதாரணமாக இப்படித்தான் இருப்பார் என்று நமக்குத் தெரியும். வேறு ஒன்றும் தெரியாது. நானும் படி ஏறிப் போனேன்… சாப்பிடவும் முடியவில்லை கிரக்கமும் அதிகமாகின்றது. என்னுடைய சிந்தனை எங்கெங்கேயோ போகிறது.

சாமி அம்மா உடல் நிலை இப்பொழுது தான் சரியாகி உள்ளது. பிள்ளைகள் எல்லாம் இந்த மாதிரி இருக்கின்றது. மாமனார் இறந்து விட்டார் பார்ப்பதற்கும் வழி இல்லை என்ற வகையில் திகைத்துப் போய் மிகவும் கவலையில் இருந்தேன்.

இப்படி ரொம்பக் கவலையாக இருக்கும் பொழுதுதான் திடீரென்று மலைக்கு போ…! என்ற இந்த உணர்வு வந்து மலைக்குப் போய்க் கொண்டிருந்தேன்

முருகனின் காட்சி:-
அங்கு போனவுடன் நான் போன நேரத்தில் கூட்டம் குறைவாக இருந்தது. ஒரு ஏழெட்டுப் பேர் தான் இருந்தார்கள். அப்பொழுது என் உடலில் “கம..கம…” என்று வாசனை வருகிறது.

அந்த மலையில் உள்ளவர்களில் இதற்கு முன் என்னுடன் பழகிய வாட்ச்மேன் வந்து “நைனா…நைனா… வாங்க..!” என்று அங்கு தாம்பாளத்தில் யாரோ அர்ச்சனை செய்த மாலையை எடுத்து என் கழுத்தில் போட்டார்.

அய்ய..! என் கழுத்தில் ஏன் மாலையைப் போடுகிறீர்கள்…? என்று நான் அவரிடம் கேட்டேன்.

அவர்… “இல்லை நைனா… உனக்குப் போட வேண்டும்… என்று தோன்றியது, போடுகிறேன்…!” என்றார்.

அட… எனக்குப் போட வேண்டும் என்று என்னப்பா வந்தது…? நானே கஷ்டப்பட்டு வருகிறேன்…! என்றேன்

என்னமோ… மாலையை உனக்குப் போட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது… நான் போடுகிறேன்…! என்கிறார் அந்த வாட்ச்மேன்.

முதலில் அங்கே அந்த வரவேற்பு.

அந்த மாலையைப் போட்டவுடனே என்ன நடக்கின்றது…? அந்தச் சிலையில் இருந்து முருகன் அப்படியே எழுந்திருந்து வருகின்றார். அது அந்த உணர்வு, முருகன் அந்தக் குழந்தைப் பருவமாக வருவது தெரிந்தது.

நான் முன்னே பின்னே முருகனைப் பார்த்ததும் இல்லை, அப்பொழுது காட்சியாகச் சிலையிலிருந்து முருகன் வந்தால் எப்படி இருக்கும்…? எனக்கு ஒரே அதிசயம் பொங்குகின்றது…!

“நான் நல்லவனாக ஆகவேண்டும்…” என்றுதான் முருகனிடம் கேட்டேன்:-
முருகன் வந்தவுடன்… எனக்கு என்ன ஆனது…? செல்வாக்கு சொல்வாக்கு தனம் இந்தப் பொருள் வேண்டும் என்ற வகையில் செல்வம் வேண்டும் என்று கேட்பதற்கே எனக்கு மனம் வர வில்லை,

வாழ்கையில் முருகனையே நாம் பார்த்து விட்டோம். இனிமேல் இதைக் காட்டிலும் நமக்கு வேறு என்ன வேண்டும்…?
1.நான் நல்லது செய்ய வேண்டும்,
2.நல்லதைச் செயல்படுத்த வேண்டும்,
3,நல்ல வழியில் நடத்த வேண்டும்,
4,என்னை அறியாது தீயது வந்தால் அது வராது தடுக்கக்கூடிய சக்தி எனக்கு வேண்டும்.

எனக்குள் ஆசை என்ற நிலைகளோ தவறான உணர்வுகள் வந்தாலோ அவைகளை வராது தடுக்கும் அந்தச் சக்தியை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று, வேண்டினேன். அவ்வளவுதான்…!

போகர் சமாதியில், போகருடைய அருளைப் பெற்றேன்:-
அதைக் கேட்டுவிட்டு அங்கிருந்து நேராகப் போகர் சமாதிக்குப் போனேன். அங்கேயும் ஆள் இல்லை. போய் நின்றவுடன் போகரைப் பற்றித் தெரிந்தவுடனே சேகண்டிச் சத்தம் கேட்கின்றது.

கேட்கவும் உடனே பூஜை செய்து கொண்டிருக்கின்ற மாதிரி சப்தம் கேட்டவுடன்… அங்கு உள்ளவர் “நைனா…நைனா…” இது என்ன வேலை செய்கிறீர்கள்…? என்று கேட்டுக் கொண்டு அவரும் உள்ளே வருகின்றார். வந்தால் அவருக்கும் சேகண்டிச் சத்தம் கேட்கிறது.

1.அப்படியே நானும் தரையிலிருந்து ஒரு அடிக்கு மேலே இருக்கின்ற மாதிரி இருக்கிறது. எனக்கே தெரிகின்றது.
2.அப்பொழுது பல அற்புதமான வாசனைகளெல்லாம் அங்கே வருகின்றது.
3.அது என்னை எங்கேயோ அழைத்துப் போகின்ற மாதிரி இருக்கிறது.

அப்பொழுது இவர் வந்து பார்த்துவிட்டுச் சிறிது நேரம் கழித்து… “என்ன நைனா…? பெரிய சித்து வேலை எல்லாம் விளையாடுவது போல் இருக்கின்றது…! தரைக்கு மேல் இருக்கிறீர்கள்… சேகண்டி சப்தம் எல்லாம் கேட்கின்றது… போகனுடைய அருளையே பெற்று விட்டீர்கள் போல் இருக்கின்றதே…! என்று சொல்கிறார்.

நான் வழக்கமாக அங்கு போய் வருவதால் அவர் இப்படிக் கேட்கிறார். அங்கே உள்ள பெரியவர் அப்படிக் கேட்கின்றார். போகர் சமாதியில் இது நடந்த நிகழ்ச்சி.

இப்படி நடந்தவுடன் எனக்கு ஒரு பெரிய தனி உற்காகமே வந்தது. நான் சாப்பிடாமல் வந்த நிலையெல்லாம் இங்கே மாறிவிட்டது.

அங்கே முருகனிடம் நான் கேட்டது என்ன…? எனக்குச் செல்வம் வேண்டும், செல்வாக்கு வேண்டும் என்று கேட்பதை விடுத்து நான் நல்லவனாக இருக்க வேண்டும் நல்லதைச் செய்ய வேண்டும் என்றுதான் கேட்டேன்.

எனென்றால் நாம் தப்பித் தவறி தவறு ஏதும் செய்து விட்டால் என்ன ஆகும்…?
1.இவர்கள் எல்லாம் பெரிய மகான்களாகத் தெரிகிறது.
2.ஏதாவது தவறாக ஆகிவிட்டால் இவர்களின் சாபத்துக்கு ஆளாகி விடுவோம் என்ற பயத்திலேதான் நான் அதை அப்படிக் கேட்டேன்.

அங்கிருந்து கீழே இறங்கி வந்தேன். வந்தவுடன் என்னை அறியாமலேயே பெரிய உற்காகம் வந்தது.

ஆவி பிடித்த ஒரு பெண் நலமடைந்தார்:-
இறங்கும் வழியில் சின்ன சேலத்தில் இருந்து வந்த ஒரு ஆவி பிடித்த ஒரு பெண் உடல் பூராவும் பல தாயத்துக்கள். ஆனால் அழகான பெண்.

அவர்கள் எங்கெங்கோ சுற்றி ஒன்றும் முடியவில்லை. ஒரு படையே இவரைக் கூட்டி கொண்டு பழனி மலைக்கு வந்து கொண்டிருக்கின்றார்கள். படி மேல் நின்று கொண்டு “ஏறு…ஏறு…” என்று, மேள தாளங்களோடு சொல்கின்றார்கள். ஆனால் அந்தப் பெண்ணால் ஏற முடியவில்லை.

அப்பொழுது நான் என்ன செய்தேன்…?

போகர் சமாதியில் இருந்து எடுத்த விபூதியை
1.நான் கீழே போகும் பொழுது படி மேல் நின்று கொண்டிருந்த அந்தப் பெண் மேல் வீசி எறிந்துவிட்டுப் போய்விட்டேன்.
2.உடனே… “அரோகரா… முருகா…!” என்று சொல்லிக் கொண்டு அந்தப் பெண் படியில் ஏறிப் போகின்றது. எல்லோரும் மேலே போகின்றார்கள்.

ஆனால் அந்தக் கூட்டதில் இருந்த ஒரு ஆள் என்னைத் துரத்திக் கொண்டு வந்து “ஐயா… நீ முருகனேதான்… நீ என் கூட வரவேண்டும்…!” என்று சொல்கிறார்.

அட… நான் முருகனும் அல்ல… கத்தரிக்காயும் இல்லை…! என்றேன் நான்.

இல்லை… இல்லை… நீங்கள் முருகன் தான்… மாறு வேடத்தில் வந்திருக்கின்றீர்கள்…! என்கிறார் அவர். நாங்கள் இத்தனை பேரும் என்னென்னமோ செய்தோம். எத்தனையோ தாயத்துக்களைக் கட்டினோம் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்தப் பெண் இப்பொழுது வேகமாக ஓடுகின்றது. முருகன் ஏதோ பண்ணியிருக்கின்றார். நாங்கள் வேண்டிக் கொண்டிருந்தோம்… அவர் தான் வந்திருக்கிறார் என்கிறார் அவர்.

ஐயா… நான் சாதாரண ஆள்…! மில்லில் வேலை பார்க்கின்ற ஆள் என்று சொன்னாலும் என்னை அவர் விடவில்லை. அப்புறம் நான் எவ்வளவு சொன்னாலும் விடவில்லை.

அந்த இடத்தில் எமக்கு அவ்வளவு உற்சாகம் ஊட்டுகின்றார் குருநாதர். எனக்கு ஓரே குஷி. ஐயா… நீங்கள் இந்த விபூதியை வேண்டுமென்றால் கொண்டு போங்கள். ஏதாவது ஆனால் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

இல்லை நீங்கள் வந்து தான் ஆக வேண்டும் என்று அவரும் சொல்கின்றார்.

ஐயா… நான் வருவதற்கு இல்லை நான் போக வேண்டும்…! என்று சொன்ன பின்பு போய் விட்டார்.

சூட்டையும் கோட்டையும் என்னைப் போடச் சொன்னார் குருநாதர்:-
இங்கே கீழே நான் வந்தவுடன் பஸ்டாண்டில் வைத்து என்னைப் பயங்கரமாக அடிக்கிறார் குருநாதர். உன்னை முருகனிடம் நான் எதைக் கேட்கச் சொன்னேன்…? நீ எதைக் கேட்டாய்…?

பணம் இல்லை என்றால் எதாவது நடக்குமா…? செல்வம் வேண்டும் சொல்வாக்கு வேண்டும் என்று கேட்கச் சொன்னால் நீ என்ன கேட்டாய்…? என்னிடம் இவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…! ஆனால் என்னை எவன்டா மதிக்கிறான்…? நீ அதைப் பெற வேண்டும் என்பதற்காகத் தான் இதைச் செய்கிறேன் என்று குருநாதர் சொன்னார்.

குருநாதர் என்னை அடிக்கும் பொழுது… அந்த மூலைக் கடைக்காரர் மஜீத் வந்து “மாமா… வசமாக மாட்டிக் கொண்டாயா…?” நான் குருநாதரிடம் தைலத்தை வாங்கி என் உடல் சரியான பின்பு என்னைப் போட்டு அவர் உதைத்தார். இப்பொழுது நீ சிக்கிக் கொண்டாய்…! என்றார்.

அதைக் கேட்டவுடன் எனக்கு இன்னும் கொஞ்சம் பயமாகப் போய்விட்டது. ஆனால் உண்மைகள் அனைத்தும் குருநாதருக்கும் நமக்கும் தான் தெரியும்… எப்படி நடந்தது…? எப்படி நடந்து கொண்டிருக்கிறது…! என்று.

இருந்தாலும் எம்மை அடித்து என் சட்டையெல்லாம் கிழித்து விட்டார் அந்தப் பேருந்து நிலையத்தில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு டாக்சி டிரைவர் “இந்தக் கிழவனை அடிடா…!” என்கிறார்,

ஐயா… நீங்கள் பேசாமல் விட்டுவிட்டுப் போங்கள். எங்களுக்குள் எதுவும் இருக்கும், நீங்கள் எதுவும் அவரைத் தொடாதீர்கள்…! என்று நான் சொன்னேன்.

அவர்… “இல்லை இல்லை.. இது பைத்தியம்தான்… இருக்க இருக்க ரொம்ப முத்திப் போய்விட்டது அதனால் எல்லாரையும் அடிக்கிறார்…! என்றார்.

குருநாதர் அப்புறமும் என்னை விடவில்லை… சட்டையெல்லாம் கிழிந்து விட்டது. வேஷ்டியையும் கிழித்து விட்டார். ஜட்டி இல்லையென்றால் அதுவுமில்லை. இப்படி “டார் பார்…” என்று கிழித்து விட்டார்.

அப்புறம் திண்டுக்கல் ரோட்டில் அந்த ஸ்கூல் பக்கம் அழைத்துப் போய் குருநாதர் எம்மிடம் சொல்கின்றார்.

நான் இவ்வளவு பெரிய சக்தி பெற்றேன் என்னை எவனும் மதிக்கவில்லை. அதற்காக வேண்டித்தான் முருகனிடம் செல்வம் வேண்டும் செல்வாக்கு வேண்டும் சொல்வாக்கு வேண்டும் என்று உன்னைக் கேட்கும்படிச் சொன்னேன். நான் சொன்னதை நீ கேட்கவில்லை… உனக்கு யார் பணம் தரப் போகின்றார்கள்…? என்றார் குருநாதர்.

அப்பொழுது நான் சொன்னேன்.
1.முருகனையே எனக்குக் காண்பித்துக் கொடுத்தீர்கள்.
2.இதனுடைய சக்தியை… நீங்கள் குருவாக இருந்து எனக்கு வழி காட்டுகின்றீர்கள்.
3.“நீங்கள் இருவரும் இருந்தால்… எனக்குப் போதாதா சாமி…?” என்றேன்

அவ்வளவுதான்…! உடனே அங்கு பக்கதில் இருந்த கேன்டீனுக்கு அழைத்துப் போய் லட்டு ஜிலேபி வாங்கிக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.

ஆனால் குருநாதர் இதை மட்டுமா செய்தார்…? பல நிலைகளில் சக்தி வந்தவுடன் ஒரு வார்த்தை கேட்கிறார். “நீ நல்ல சூட்டையும் கோட்டையும் போட்டுக் கொள்…!” என்று ஆசையைத் தூண்டுகின்றார்.

ஜவுளிக் கடைக்குப் போய் நல்ல சூட்டை வாங்கிக் கொள்… நல்ல சட்டையைப் போட்டுக் கொள்… நன்றாக “ஜம்…” என்று வரவேண்டும் என்றார் குருநாதர்.

நான்… “எனக்கு இந்தச் சூட்டும் வேண்டாம் சர்ட்டும் வேண்டாம் சாமி…!” இந்த அவஸ்தைப்பட்டது போதும்.

“நீ வாங்கிக் கொள்கிறாயா இல்லையாடா…?” என்று திரும்பவும் கேட்கின்றார்.

எனக்கு வேண்டவே வேண்டாம் என்றேன் நான்..!

நீ சூட்டைப் போட்டுக் கொண்டு நீட்டா (NEAT) இருக்க வேண்டும். உனக்குச் சக்தி நிறையக் கொடுத்திருக்கின்றேன் நீ செய் என்றார். அதிலும் ஆசையைத் தூண்டுகிறார்.

அப்பொழுது அங்கிருந்தவர்கள் எல்லாம் குருநாதர் என்னமோ சூட்டும் சர்ட்டும் வாங்கித் தருகிறேன் என்று சொல்கின்றார்.. “நீ வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே..” என்றனர்.

1.“எனக்கு இந்தச் சூட்டும் வேண்டாம்… சர்ட்டும் வேண்டாம் என்னை ஆளை விடுங்கள் போதும்…” என்றேன்.
2.அதிலே அவர் சந்தோஷப்பட்டு… அந்தச் சந்தோஷத்திலேயே நானும் வந்தேன்.

என் சைக்கிள் கடையில் வேலை செய்த சின்னத்தம்பி என்ற பையன்… அவன் கடைக்கு வந்தேன். அவனுக்கு ஏற்கனவே சைக்கிள் எல்லாம் கொடுத்திருக்கின்றேன்.

அங்கே வந்தவுடன் அவன் என்னை “ஓய்…” பைத்தியம் பிடித்தவன் நீ அந்தப் பக்கம் போயா… இங்கு கடையில் உட்காராதே தரித்திரம் பிடித்தவன்…! என்று என்னைத் திட்டுகின்றான்.

வேலையையும் விட்டு விட்டுப் பிள்ளைகுட்டி எல்லாம் விட்டு விட்டு ஒரு பைத்தியக்காரன் கூடப் போய்ச் சுற்றிக் கொண்டிருக்கின்றாய்…! இங்கே வராதே என்கிறான்.

என்னடா இது வம்பாகப் போய்விட்டது…? என்னை எதிர்த்துப் பேசாதவன் இப்படிப் பேசுகின்றானே…! என்று அதை விட்டு விட்டுப் போனேன்.

அங்கிருந்து போனால் என் வீட்டுக்கு முன்னாடி உள்ள கடைக்காரர் இப்ராஹிம்… “ஓய் நைனா…! உனக்கு நன்றாகப் பைத்தியம் பிடித்து விட்டது, நல்லய்யா நாயக்கர் சம்பாதித்து வைத்திருகின்றார். நீ சொத்தையெல்லாம் தொலைத்து விட்டாய்…” என்று சொல்கிறார்.

நீ இந்தக் கடையில் உட்காராதே… எனக்கும் தரித்திரம் பிடிக்கும் போய்யா…! என்று சொல்கின்றார். எங்கே போனாலும் இதே மாதிரி எம்மைப் பேசுகின்றார்கள்.

என் பொண்ணு மீராவும் எம்மிடம்… நீ வீட்டிற்குள் வராதே தரித்திரம் பிடித்தவர்…! என்று எல்லோரும் பேசுகின்றார்கள் என்று என்னிடம் சொல்கின்றது.

அந்தத் தெருவிற்குள் வரும் போது அங்கிருக்கும் ஒவ்வொருத்தரும் எம்மை மிகவும் மோசமாகப் பேசுகின்றனர். இந்த மாதிரி எதிர்ப்பின் உணர்வுகள் வருகிறது. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

கேன்சர் நோயை நீக்கச் செய்தார் குருநாதர்
அப்படி ரொம்பக் கஷ்டமாக இருக்கும் பொழுது தான் பாப்பம்பட்டியில் இருக்கும் நண்பர் இராமசாமியின் தோட்டத்துக்குப் போனேன். அவரிடம்… “எனக்குப் பெரிய அவஸ்தையாக இருக்கின்றது, எல்லோரும் கேவலமாகப் பேசுகிறார்கள்…!” என்று சொன்னேன்.

அங்கேயும் எம்மைச் சும்மா விடவில்லை… குருநாதர். பல நிலைகளை ஏற்படுத்துகின்றார். என்னமோ செய்யப் போகிறாய் என்கிறார் குருநாதர்.

அந்தச் சமயத்தில் அங்கே சிலருடைய உடலில் டெங்குக் காய்ச்சல் மூட்டுக்கு மூட்டு வலிக்கிறது…! என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

அப்பொழுது… வெறும் மண்ணைத் தூக்கிப் போட்டு “இது சரியாகும்…” என்று சொன்னால் அந்த நோய் போகின்றது. அதனால் அங்கே ஒரே கூட்டமாகக் கூடுகின்றது. இப்படியெல்லாம் பல நிலைகள் ஆகின்றது. இப்படியும் செய்கிறார் குருநாதர். எனக்கு என்ன செய்வது…? என்று ஒன்றும் தெரியவில்லை.

அப்பொழுது அங்கிருந்து மகாலிங்கம் என்ற ஜாதகம் பார்க்கிறவர் வீட்டில் போய்த் தங்கி இருந்தேன். அங்கும் பல அற்புதங்கள் நடக்கிறது. கூட்டங்கள் வருகின்றது.

அங்கே மகாலிங்கத்தின் அண்ணன் பையனுக்கு வயிற்று வலி என்று சொல்லி இராமசாமி நாயுடுவின் ரைஸ் மில்லுக்கு என்னை வரச்சொல்லிச் சொன்னார்கள்.

அங்கு போய்ப் பார்க்கும் போது அவன் வயிற்று வலியுடன் வேதனைப்படுகிறான். நான் அங்கு சென்றவுடன் ஹாஸ்பிட்டலுக்கு போவதற்குப் பணம் இருந்தால் பரவாயில்லை. பையனுக்குக் கேன்சர் என்று டாக்டர் சொல்லி விட்டார். கேன்சரை நீக்குவதற்குச் சென்னைக்குப் போக வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இராமசாமி எம்மிடம் “உன் குருநாதரை நினைத்து ஏதாவது செய்…!” என்கிறார்.

1.குருநாதரை எண்ணி அங்கிருந்த விபூதியை எடுத்து அந்தப் பையனுக்குக் கொடுத்தேன். ஆனால் என்ன ஆனது…?
2.விபூதியைக் கொடுத்தவுடன் அவனுக்கு இரத்த இரத்தமாக வெளியில் போக ஆரம்பித்துவிட்டது.

இராமசாமி என்ன செய்தார்…? நான் தான் இந்த விபூதியை, உன்னிடம் கொடுத்தேன். நீ என்னிடம் இருந்த விபூதியைத் தான் நீ அந்தப் பையனுக்குக் கொடுத்தாய். ஒரு வேளை இந்த விபூதியில் யாராவது பாலிடாலைக் (பூச்சி மருந்தை) கலந்து வைத்திருப்பார்களோ என்னமோ தெரியவில்லையே…? என்கிறார் எம்மிடம்.

யாரும் இதைத் தொடாதீர்கள்…! என்று இராமசாமி சொல்கிறார்.

ஏனென்றால் இரத்தமாக அவனுக்கு வெளியிலே போகவும் அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. இப்படிப் பல குழப்பங்களில் எல்லோரும் இருக்கின்றனர். நானும் திகைத்துப் போய் இருந்தேன். எனக்கும் காட்சி கொடுக்கவில்லை.

மகாலிங்கத்தினுடைய பையனுக்கு உடனே அருள் மாதிரி வந்து குருநாதர் காட்சி கொடுத்து “நான் தான் வந்துள்ளேன்… அவனுடைய கேன்சரை ஆபரேசன் பண்ணியுள்ளேன்… அதுதான் இப்பொழுது வெளியிலே வந்திருக்கின்றது…!” என்று சொன்னதும் எல்லோருக்கும் ஒரு ஜீவன் வந்தது.

இது நடந்த நிகழ்ச்சி.

நான் ஆபரேசன் செய்த அந்தக் கேன்சர் கட்டி இப்பொழுது வெளியே வந்துள்ளது. இரத்தத்தின் மத்தியில் உள்ளது. அதை எடுத்துத் தண்ணீர் ஊற்றிக் கழுவிப் பார் என்றார் குருநாதர்.

கழுவிப் பார்த்தால் கட்டி இருக்கின்றது.

அந்தப் பையனுக்குச் சாப்பாடு எட்டு நாள் எட்டு மணி நேரம் எட்டு நாழிகை வரையிலும் கொடுக்க வேண்டும். அது இன்னார் வீட்டில் கஞ்சி வடித்திருக்கின்றார்கள் நீ போய்ப் பார்…! என்று சொல்கின்றார் குருநாதர்.

போய்ப் பார்த்தால் அதே மாதிரி கஞ்சி வடித்திருந்தார்கள்.

அந்தக் கஞ்சித் தண்ணீரைக் கொண்டு வா. அதில் இந்த விபூதியைப் போடு. அந்தக் கஞ்சியைத் தான் அவன் இத்தனை நாளைக்குச் சாப்பிட வேண்டும் என்றார் குருநாதர்.

அப்புறம் அதே மாதிரி அவனைச் சாப்பிடச் செய்தேன். அந்த எட்டு நாள் எட்டு மணி நேரம், எட்டு நாழிகை வரையிலும் அந்தக் கஞ்சியைச் சாப்பிட்டவுடன் அந்தப் பையன் எழுந்து குஷியாக விளையாட ஆரம்பித்து விட்டான்.

அங்கேதான் முதன் முதலில் ஆபரேசன் செய்து கேன்சரை நிவர்த்தி பண்ணியது. இப்படிச் சில அதிசயங்கள் அங்கே நடந்து கொண்டே இருந்தது.

டெங்கு காய்ச்சலை நீக்கச் செய்தார் குருநாதர்:-
அப்புறம் ஊரில் உள்ளவர்களுக்குக் கேட்கவா வேண்டும்…! அந்த அற்புதமான நிலைகள் அங்கே பரவுகின்றது. அந்த சமயத்தில் அங்கே எல்லோருக்கும் டெங்குக் காய்ச்சல் பரவிக் கொண்டிருந்தது. அனைவருக்கும் யாம் அந்த விபூதியைக் கொடுக்கவும் உடனடியாகக் குணமானது.

அப்பொழுது இராமசாமிக்கு ஓரே குஷியாகப் போய்விட்டது. பரவாயில்லை… நீ கிழவன் கூடச் சேர்ந்து சுற்றியதற்கு உனக்கு நல்ல சக்தி கிடைத்தது…! என்று எம்மிடம் சொல்கிறார்.

நோய்கள் குணமாவதைக் கேள்விப்பட்டு எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் வண்டியைப் போட்டுக் கொண்டு அங்கு வருகின்றனர். கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது.

கை கால் முடமான நிலையில், குருநாதர் ஆஸ்பத்திரியில் செய்த செயல்கள்:-
அந்த சமயத்தில் இங்கு பழனியில் கங்கா பைண்டிங் அச்சாபீஸில் உட்கார்ந்து இருந்த குருநாதர் “தெலுங்கு ராஜ்ஜியம்…” என்னமோ பண்ணிவிட்டான்… அவன்தான் எனக்குக் கை கால் வராமல் பண்ணிவிட்டான்…! என்று சொல்லிக் கொண்டு ரோடு பூராம் கத்திக் கொண்டே இருந்திருக்கின்றார்.

இப்படிச் செய்தவுடன் உடனே நீ புறப்பட்டு வர வேண்டும் என்று என்னிடம் சொல்லி விட்டார் குருநாதர்.

டெலிஃபோன் ஆபீஸில் வேலை பார்க்கும் நடராஜன் என்ன செய்தான்…? கை கால் வராமல் பண்ணிவிட்டான்… அதனால் இவரை எங்கேயோ கொண்டு போங்கள்…! என்று சொல்லிவிட்டான்.

ஏனென்றால் நான் தான் ஐவர் மலைக்கு குருநாதரைக் கூட்டிக் கொண்டு போயிருந்தேன். சில அற்புதங்களைப் பார்த்தவுடன்… எல்லாம் அவருக்குத் தானே காட்டினார் குருநாதர் எனக்கு ஒன்றும் காட்டவில்லையே…! இவரை நான் எதற்குப் பார்க்க வேண்டும்…? என்று இது நடராஜனுடைய எண்ணம்.

இங்கு திண்ணையில் படுக்க வேண்டாம்…! என்று சொல்லவும் இராமசாமி என்ன செய்தான்…? குருநாதரை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்து விட்டார்.

எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நீ உடனடியாக பாப்பம்பட்டியிலிருந்து வர வேண்டும் என்று என்னைச் சொல்லி விட்டார். ஆனால் இங்கு ஹாஸ்பிட்டலில் இருந்தாலும் குருநாதர் சும்மா இல்லை.

அங்கு ஒவ்வொரு பெட்டில் இருப்பவர்களையும் இழுத்து இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் அவரைக் கொண்டு போய் சவக்கிடங்கு பக்கத்தில் போட்டு விட்டார்கள்.

அப்பொழுது நான் அங்கு போகவும் டாக்டர் என்ன சொல்கின்றார்…?

எப்படியாவது நீங்கள் இவரை வெளியே எடுத்துக் கொண்டு போங்கள், இங்கு பெட்டில் இருக்கின்றவர்களை எல்லாம் இழுத்து இழுத்துப் போடுகிறார் என்கிறார்.

சாவுக் கிடங்கு பக்கத்தில் போட்டவுடன் அங்கு போனாலும் இதே போல கட்டிலில் தீயை வைக்கின்றார். பிறகு நான் குருநாதரைச் சந்தித்தவுடன்… “அங்கு இருக்கும் தட்டியை எல்லாம் எடுத்துக் கொண்டு வாடா… தீயை வைத்துக் கொளுத்துடா…” என்றார்.

சாமி…! தீயை வைத்துக் கொளுத்தினால், எல்லாம் என்ன ஆகும்..,.? என்றேன் நான்.

நான் சொல்வதைச் செய்கிறேன் என்றாய் அல்லவா “கொளுத்து…” என்கிறார் குருநாதர்.

அப்படிக் கொளுத்தக்கூடிய நிலை வரும் பொழுது நான் மறுத்துக் கொண்டே இருந்தேன்.

இந்த நிலையில் அங்கு ஆஸ்பத்திரியில் சேர்ந்த ஒருவருக்கு எலும்புக்குள் ஏவல் செய்து அவருடைய காலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எலும்புகள் துண்டு துண்டாக வந்து கொண்டிருந்தது. எலும்பெல்லாம் கருகி அப்படியே அழுகிக் கொண்டிருக்கின்றது. அதை டாக்டரினால் சரி செய்ய முடியவில்லை.

குருநாதர் என்னிடம்… “நீ இதைச் செய்ய வேண்டியதுதானடா…!” என்கிறார்.

செய்கிறேன் என்று நானும் குருநாதர் சொன்ன முறைப்படி சில நிலைகளைச் செய்தவுடன் அந்தக் கறுப்பு இரத்தம் நின்று நல்ல இரத்தம் வந்தது.

உடனே… டாக்டரைக் கூப்பிடுடா…! அவனை அழைத்துப் பான்டேஜ் போட்டுக் கட்டுடா சரியாகிப் போகும்…!” என்றார் குருநாதர்.

அப்பொழுது நான் சென்று நல்ல இரத்தம் வருகிறது என்று டாக்டரிடம் சொன்னவுடன் அவருக்கு மிகவும் குஷியாகிவிட்டது.

இது என்னால் முடியாதது, இப்பொழுது சரி ஆகிவிட்டது என்றார் டாக்டர்.

1.அதிலிருந்து வெளி வந்தது ஒரு தாயத்து.
2.அவர் உடலில் எலும்புக்கு நடுவில் இதை வைத்து ஏவல் பண்ணி வைத்திருக்கிறார்கள்.

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். சொத்தைப் பறிப்பதற்கு அவன் மேல் இருக்கும் பொறாமையில் ஏவல் செய்து விட்டார்கள். இந்த நிலையில் சொத்தையும் இழந்தான். இப்பொழுது அனாதையாக நிற்கிறான் யாரும் அவனைக் கவனிக்கவில்லை என்று சொல்லி இவனை எல்லாம் யார் காப்பாற்றுவது…? என்று கேட்டார் குருநாதர்.

அவருக்கு நன்றாக ஆனவுடன் டாக்டருக்கும் ஒரே சந்தோஷம். இப்படி எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது என்ன செய்கின்றார் குருநாதர்…?

குருநாதர் என்னிடம்… அந்த தட்டியெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து தீயை வைத்துக் கொளுத்தச் சொல்கிறார். தீயை வைத்துக் கொளுத்தச் சொன்னால் அங்கிருப்பவர்கள் எல்லாம் சும்மாவா இருப்பார்கள்…?

உடனே டாக்டர்… நாயுடு நீ இந்த மாதிரி எல்லாம் இங்கே செய்யக்கூடாது, உங்கள் குருநாதரை உடனே இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்…! என்று சொல்கிறார்.

ஆனால் குருநாதர் என்ன சொல்கின்றார்…? “ஏன்டா…? என்னைக் கூட்டிக் கொண்டு போவதற்காகவா இதைச் சொல்கிறேன்…! என்றார்.

ஓடாத ஆட்டோவை ஓட வைத்தார் குருநாதர்:-
அப்பொழுது பாட்ஷா என்ற ஆட்டோ ஓட்டுபவரிடம் சென்றேன். அவர் எனக்கு நண்பர். கொஞ்சம் ஆட்டோ கொண்டாப்பா. குருநாதரைப் பாப்பம்பட்டியில் ரைஸ் மில் வைத்திருக்கும் ராமசாமியின் தோட்டத்தில் கொண்டு போய் வைத்துக் கொள்கிறேன் என்றேன்.

ஆட்டோ ரிப்பேராக இருக்கின்றது என்றார் அவர். சரி செய்தால் தான் எடுக்க முடியும். கொஞ்சம் காசு கொடுத்தால் சரி செய்யலாம் என்கிறார்.

என்னிடம் ஒரு காசும் இல்லை… நீ பாப்பம்பட்டி வரை கொண்டு வந்து விட்டால் நான் அங்கு வந்து காசு வாங்கித் தருகிறேன் என்றேன்.

ரிப்பேர் செய்து தான் எடுத்து வர முடியும் என்று சொல்லிக் கொண்டிருந்த அவருக்குத் திடீரென்று ஒரு அசரீரி போல் வந்தது.
1.அட… ஆட்டோ ஓடும்…! என்று நான் அவனிடம் சொன்னேன்.
2.ஓடும்… ஓடும்… ஓடும்…! என்று விசித்திரமாகச் சப்தம் வருகின்றது.
3.அவன் காதிலேயே “ஓடும்… ஓடும்… ஓடும்…” என்று கேட்டவுடன்
4.சரி நான் ஓட்டித்தான் பார்க்கிறேன் என்று சொல்லிப் பெட்ரோல் வாங்கிப் போட்டவுடன், ஆட்டோவும் ஸ்டார்ட் ஆகியது.

நானும் அவனுமாகச் சேர்ந்து குருநாதரை ஆஸ்பத்திரியில் இருந்து தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ராமசாமியின் தோட்டதுக்கு வந்தோம். அவரது தோட்டம், ஒரு பத்து ஏக்கர் இருக்கும் வெறும் கரும்புத் தோட்டம்.

அந்தத் தோட்டத்திற்குள் குருநாதரைப் படுக்கச் சொல்லி வைத்தவுடன், குருநாதர் என்ன செய்கிறார்…?

கரும்புக் காட்டில் தீ வைத்தார் குருநாதர்:-
அந்தக் கரும்பு ஆலையில் வைத்திருக்கும் பொருள்களை எல்லாம் எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டு “திருடன்… திருடன்…” எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டான். பூராவற்றையும் திருடி விட்டான் என்று பேசுகிறார், குருநாதர்.

நான் எங்கே திருடினேன்…? ஏதாவது மறந்தால் போல இங்கு வைதிருப்பேன் என்று நான் சொன்னேன்.

குருநாதர்… இல்லை…! இவன்தான் எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டான் என்கிறார்.

இப்படிச் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று என்ன ஆகிவிட்டது…? அந்தக் கரும்புச் சோகை எல்லாம் தீ பிடித்தது. இந்த மாதிரி ஆனவுடன் குருநாதர்… தீயை வைத்து விட்டான் தீயை வைத்து விட்டான் என்று என்னைச் சொல்கின்றார்.

பார்த்தோம் என்றால் பத்து ஏக்கரும் பொசுங்கிப் போகும் என்ற நிலையில் ஆகிவிட்டது. இவன் தான் எல்லாவற்றிற்கும் காரணம்…! என்கிறார் குருநாதர்.

என்ன இது வம்பாகப் போய்விட்டது…? சும்மா இருக்கும் போது இப்படி எல்லாம் சொள்கிறார். சுற்றி எல்லாம் நெருப்பாகிப் போனது… வேறு வழி இல்லை.

இவன் தான் செய்கிறான்… இவன் தான் எரிக்கிறான்… இவன் தான்…! என்று என்னைச் சொல்கிறார்.

எனக்கு எப்படி எரிகின்றது…? என்றே தெரியவில்லை என்றேன். அப்பொழுது அங்கு இருந்தவர்கள் எல்லாம் கூட்டமாகக் கூடி விட்டார்கள்..

குருநாதர் என்னைப் பார்த்து… நீ இதை அவிடா…! என்றார். “அவிடா…” என்று சொன்னவுடன்
1.குருநாதர் என்னை அழைத்துக் காதில் ஓதுகிறார்.
2.ஓதியவுடன் இதை அவித்து விடுடா…! என்று சத்தமாகச் சொன்னவுடன் எல்லாம் அப்படியே “கப்…” என்று அடங்கி விடுகிறது.

அவன் தான் வைத்தான் அவன் தான் தீயை வைத்திருக்கிறான் என்று சொல்கிறார். எல்லாம் இவன் செய்த வேலைதான் என்கிறார் குருநாதர்

இந்தக் கல்யாணம் நடக்காது…! என்று சொன்னார் குருநாதர்:-
இப்படி இருக்கவும் நான் குருநாதரை ஐவர் மலைக்குக் கொண்டு போகலாம் என்று சொன்னேன். அங்கு ஒரு முருகன் கோவில் இருக்கிறது. அருகில் இராமலிங்க அடிகள் மண்டபத்திற்குப் பக்கத்தில் ரூம் இருக்கின்றது. அங்கு இருங்கள் என்றார் ராமசாமி. சாப்பாடெல்லாம் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கூட இரண்டு பேரையும் அனுப்பி வைத்தார்.

ஐவர் மலையில் ஏறும் போது என்னால் எப்படிடா ஏற முடியும்…? நான் கை கால் வராமல் இருக்கிறேன். நான் எப்படிடா ஏறுவேன்…? என்று கேட்கின்றார், குருநாதர்.

குருநாதர் எம்மிடம் கையை வைடா என்றார். கையைக் கீழே வைத்தவுடன் கையில் ஏறி உட்கார்ந்து கொண்டு “எழுந்திரிடா…” என்கிறார்.

எப்படி சாமி இந்தக் கையில்…? என்று கேட்டேன்.

நான் தான் சொல்கிறேன் அல்லவா…? எழுந்திரிடா… உனக்குச் சக்தி கொடுத்திருக்கின்றேன்…! என்று சொல்லிக் கொண்டு கையில் உட்கார்ந்து “தை.. தை… தை…” என்று குதிக்கின்றார். மேலே மலையில் ஏறச் சொல்கிறார்.

கொஞ்ச தூரம் சென்றதும்… நான் “சாமி… கை வலிக்கின்றது…!” என்றேன்.

சொன்னவுடன் கீழே இறக்கி விடு என்று சொன்னார். கூட இரண்டு பேர் வந்தவர்களிடம் தூக்கச் சொல்கின்றார். ஆனால் அவர்களால் குருநாதரைத் தூக்கவும் முடியவில்லை… மேலே ஏறவும் முடியவில்லை..

ஏன்டா…? அவன் ஒரு கையில் தூக்கினான். நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து என்னைத் தூக்க முடியாதா…? என்று வழியில் “ஒரே கலாட்டா பண்ணுகின்றார் குருநாதர்…!”

அப்புறம் ஒரு வழியாக மேலே ஏறிப் போகவும்… படி மேலே ஏறினால் “அந்தப் படியில் போகாதே நீ என்னைக் கீழே உருட்டிவிடுவாய்… இந்த வழியில் போடா…!” என்கிறார் குருநாதர்.

பெரிய வம்பு பண்ணி எல்லாம் மேலே ஏறிப் போனோம். மேலே போனவுடன் அங்கு ஒரு கல்யாணக் கூட்டம் வந்தது. குருநாதர் அவர்களிடம் “இந்தக் கல்யாணம் நடக்காது…” என்று அங்கேயும் பெரிய தகராறு செய்கிறார்.

அவர்கள் எல்லோரும் சேர்ந்து குருநாதரை உதைக்க வருகிறார்கள்.

உடனே நான்… “ஐயா…! அவர் ஏதோ சொல்கிறார் நீங்கள் குற்றமாக நினைக்காதீர்கள்…!” என்றேன் நான்.

அதற்கு குருநாதர்… ஏன்…? யாருடா…! என்னடா தெரியாமல் சொன்னது…? என்று சொல்லி “மீண்டும் இந்தக் கல்யாணம் நடக்காது…” என்கிறார்.

ஏனென்றால் ஏற்கனவே பெண்ணைக் கூப்பிட்டு வரும் இடத்தில் தகராறு. அங்கே சொந்த மாமன்காரன் விடமாட்டேன் என்கிறான். கல்யாணம் செய்ய அவர்கள் வந்தார்கள் என்றால் வெட்டி விடுவேன் என்று சொல்கிறான்.

இந்த அளவில் அங்கு தகராறு நடக்கின்றது. இதைச் சொல்கிறார் குருநாதர்.

இவர்கள் அது எப்படிக் கல்யாணம் நடக்காது…? மாப்பிள்ளை எல்லாம் வந்தாகி விட்டது, பொண்ணு எப்படி வராமல் போகும்…? அது வந்து கொண்டிருக்கின்றது…! என்கின்றார்கள்.

ஆனால் குருநாதர் சொன்ன மாதிரியே நடந்தவுடன் அவர்களுக்கு என்ன ஆனது…? இது பெரிய சமாச்சாரம்…! அங்கே நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம், அப்படியே சொல்கிறார். அவரைப் பைத்தியமாகத்தான் நினைத்தோம்…! என்று அடிக்க வந்தவர்களெல்லாம் குருநாதர் காலில் விழுந்து கும்பிட ஆரம்பித்தார்கள்.

“என்னைக் காப்பாற்றுடா” என்கிறார் குருநாதர்:-
அங்கு மேலே போனவுடன் படுத்துக் கொண்டோம். எனக்குப் பயமாக இருக்கிறது… நீ என் பக்கத்தில் படுத்துக்கொள்…! என்றார் குருநாதர். இரவு பனிரெண்டு மணி இருக்கும்.
1.கை கால் வராமல் முடமாக இருந்தவர் எழுந்து நடக்கிறார்… சாதாரணமாக நடக்கின்றார்…!
2.நடந்து போய் அங்கு ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும் அங்கு போய் உட்கார்ந்து கொண்டார்.
3.அவர் செய்வதை நான் முழித்துப் பார்த்து கொண்டே இருந்தேன்.

அங்கே போனவுடன்… “தெலுங்கு ராஜ்ஜியம் இங்கே வாடா…! என்னை எவனோ தூக்கிக் கொண்டு வந்து இங்கே வைத்துவிட்டான் வந்து தூக்குடா…! என்கிறார்.

இரவு நேரத்தில் அங்கே போய் என்ன செய்வது…? சறுக்கலான பாறை…! அப்பொழுது காலையில் விடிகின்றது. அந்த நேரம் அங்கே பார்த்தால், சறுக்கலான இடத்தில் கோயிலில் சென்று உட்கார்ந்திருக்கிறார்.

அந்த இடத்தில் இருந்து கொண்டு என்னைக் காப்பாற்றுடா… என்னைக் காப்பாற்றுடா… என்கிறார். சறுக்கலான பாறையில் பிடிக்க முடியாத இடத்தில் இருக்கின்றார்.

இன்னும் அந்த வழுக்குப் பாறை அங்கே இருக்கின்றது. நான் எப்படி சாமி வர முடியும்…? என்று கேட்டேன். பின் வேஷ்டியைக் கட்டி இதைப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு கீழே போய்க் கொண்டே இருக்கின்றார். நீ வந்து என்னைக் காப்பாற்றுடா…! துண்டு வேஷ்டி எல்லாம் என்னைக் காப்பாற்றாது..! என்கிறார் குருநாதர்.

சாமி…! வேஷ்டியையும் பிடித்துக் கொள்ளுங்கள்… நானும் பிடித்துக் கொள்கிறேன் என்றாலும் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது நான் ஒரு பக்கம் இருந்தாலும் என்னை வழுக்கிவிட்டு இந்தப் பக்கம் கொண்டு போகின்றது..

குருநாதர் “என்னை காப்பாற்றுடா…!” என்கிறார்.

சாமி… நான் கீழே போய்த்தான் காப்பாற்ற வேண்டும். கீழே விழுந்தால் நொறுங்கித் தூள் ஆகிப்போகும். அங்கு போய்த்தான் காப்பாற்ற வேண்டும் என்றேன்.

இது நடந்த நிகழ்ச்சி.

ஏறு சிங், இறங்கு சிங் பார்த்திருக்கிறாயாடா…? என்று கேட்டார் குருநாதர்
அப்பொழுதுதான் அதிகாலை விடிகின்றது. கீழே ஒரு பஸ் போய்க் கொண்டிருந்தது.
1.உடனே குருநாதர்… “ஏறு சிங்.. இறங்கு சிங்…” என்று நீ பார்த்திருக்கிறாயாடா…? என்றார்.
2.சாமி… இப்பொழுது நான் இறங்கு சிங்கில் கீழே போய்க் கொண்டு இருக்கிறேன்.
3.செத்த பிற்பாடு உடலிருந்து உயிர் ஏறு சிங்காக மாறிவிடும். அதிலே வேண்டுமென்றால் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் சாமி…! என்றேன்.

ஏன்டா நான் சொல்கிறேன்… நீ எதிர்த்துப் பேசுகின்றாயா…? என்றார் குருநாதர்.

பார்த்தால் அந்த இடத்தில் வைத்துக் குருநாதர் பல நிலைகளில் பல அற்புதங்களைக் காட்டுகின்றார். இந்த உலக நிலைகளையும் மற்ற நிலைகளையும் எல்லாவற்றையும் காட்டுகின்றார்.

“இப்பொழுது நீ இந்த உலகத்தைப் பாருடா…!” என்கிறார்.

எங்க சாமி பார்ப்பது…? இன்னும் கொஞ்ச நேரத்தில் போய் எல்லாம் அடங்கிவிடும் போல் இருக்கின்றது…! என்றேன் நான்.

நீ உலகத்தைப் பாருடா என்றால்… எங்கடா நீ அடங்கிவிடும்…? என்று சொல்கின்றாய் என்று இப்படி வாதம் பண்ணிக் கொண்டே இருக்கின்றார் குருநாதர்.

அப்படியே பாறையில் நெஞ்சோடு தேய்த்து இரத்தம் வடிகின்றது. வழுக்குப் பாறையாக இருப்பதால் அப்படியே என்னைக் கீழே கொண்டு போகின்றது. இன்னும் கொஞ்ச நேரத்தில் “போய் விடுவோம்…” போலத் தெரிகின்றது.

“நீ இதைப் பார்… உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்…” என்று என்னென்னமோ அதிசயங்களை எல்லாம் காட்டுகின்றார் குருநாதர்.

சாமி…! இன்னும் கொஞ்சம் நேரத்தில் நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் போய்ப் பார்க்கப் போகின்றேன்… அது வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்கள்…! என்றேன் நான்.

ஐவர் மலையில் வைத்துத்தான் முழுமையான சக்தியைக் கொடுத்தார் குருநாதர்:-
அதற்குப்பின் எத்தனையோ உணர்வுகளை ஊட்டுகிறார்… உலக நிலைகளைக் காட்டுகின்றார். இந்த மரண நிலைகளில் வைத்துத் தான் கொடுக்கிறார்.

முழுமையான சக்தியை அங்கே ஐவர் மலையில் வைத்துத் தான் கொடுத்தார் நமது குருநாதர்.

அந்தக் காலையில் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். குருநாதர் அங்கிருந்து எழுந்து வந்து என்ன செய்தார்…?

1.சிவ தாண்டவம் ஆடுகிறார்…!
2.ஒரு பெரு விரலில் நின்று கொண்டு அப்படியே “கிறு…கிறு…கிறு…” என்று பம்பரம் போல் சுற்றி அவ்வளவு அற்புதமாக ஆடுகிறார்.
3.எல்லா வேலைகளையும் செய்கின்றார் குருநாதர்.

நீ பல உண்மைகளை அறிவாய்… பல நிலைகளைப் பெறுவாய்…! இந்த உலகம் எப்படி இருக்கிறது…? என்று நீ அறியும் தன்மை பெறுவாய், அதை எப்படிக் காக்க வேண்டும்…? என்று இந்த இடத்தில் வைத்து மரண வாயிலில் வைத்து இந்தச் சக்திகளைக் கொடுக்கிறார்.

1.யாராவது தப்பு செய்தால் கூட என்னிடம் இருக்கும் சக்தியைக் கொண்டு ஒன்றும் செய்வதில்லை.
2.அதைச் செய்தால் இந்தச் சக்தி விரயம் ஆகும்.
3.அந்த விரயம் ஆகும் நிலைக்குக் கொண்டு செல்லாமல் உருவாக்கும் நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார் குருநாதர்.

இப்படித்தான் ஏதேதோ செய்யும்படி பல நிலைகளைச் செய்து
1.“அது சொல்வதற்கில்லை…!” இப்படி எண்ணிலடங்காத நிலைகளைச் செய்து தான் எனக்கு இந்த வாக்குகளைக் கொடுத்தார் குருநாதர்.
2.நமது அகண்ட அண்டமும் பேரண்டமும் எப்படி இயங்குகிறது…? என்ற உண்மைகளை எல்லாம் கொடுக்கிறார்.
3.நமது பிரபஞ்சமும், 27 நட்சத்திரங்களும் எப்படி எல்லாம் இயங்குகிறது…? என்பதை நேரடியாகப் பார்த்தால் எப்படி இருக்கும்…!

மரண வாயிலில் வைத்துத்தான் இந்த அற்புதங்களை… பார்க்காத காட்சிகளை எல்லாம் காட்டுகிறார் குருநாதர். ஏறு சிங் இறங்கு சிங் என்று சொல்லி இந்த ஆட்டங்களைக் காட்டி அப்புறம் என்னை எழுப்பி விடுகிறார் குருநாதர்.

மற்றவர்கள் பார்க்கும் போது கால் முடமாக இருப்பது போல இருக்கிறார். அவரைப் பைத்தியம் என்று தான் நினைத்தார்கள். அதனால் காலை முடக்கிக் கொன்டார். ஆனால் அந்த உண்மையின் தன்மையை எமக்குக் கொடுத்து இங்கு நடனம் ஆடுகிறார்.

குருநாதர் ரசமணி செய்வார்… தங்கத்தைச் செய்வார். இந்தச் சரக்குகளைச் செய்தால் அது சரியாகும். தங்கத்திற்காக என்று குருநாதரிடம் ஆசைப்பட்டு அணுகியவர்கள் ஏராளமானோர்.

ஆனால் இதிலிருந்து ஒடுங்கப்பட்டுத் தனித்தன்மையாக எனக்கு ஐவர் மலையில் வைத்துத்தான் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.

அப்புறம் அங்கிருந்து புறப்பட்டு இன்றைக்கு வரையிலும் அவர் சொன்ன உண்மையின் நிலைகளைச் செய்கிறேன். அவர் இருக்கும் பொழுதே பல காடுகள் பல மேடுகள் எல்லாம் அலைந்து பார்த்தேன். இருந்தாலும் உண்மையெல்லாம் எமக்குத் தெளிவாகத் தெரிந்த்து இந்த ஐவர் மலையில் தான்.

அந்த உண்மையின் உணர்வு வந்தபின் குருநாதர் என்ன செய்வார்…?

சில இடங்களில் சில மரங்களை கற்களை எடுத்து… “இப்படிச் சொன்னால் அது தூக்கி மேலே போகும்…? அந்தப் பக்கம் தூக்கி வீசுவது என்ற இந்த மாதிரி உணர்வுகளையும் குருநாதர் காட்டுவார்.

அப்பொழுது இந்தச் சக்தி வரும் போது எனக்கு ஒரு திமிர் ஏற்படுகிறது.

ஒரு மரத்தைத் தூக்கி வீசும் பொழுது நம்மால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். ஓர் எதிரி இருந்தால் அவனை வீழ்த்தக்கூடிய சக்தி நமக்கு இருக்கிறது என்று இப்படித்தான் எனக்குச் சிந்தனை வருகிறது.

அதை எப்படி நல்ல வழிக்குப் பயன்படுத்த வேண்டும்…? என்று அந்தந்தச் சமயங்களிலெல்லாம் குருநாதர் ஒவ்வொரு உணர்வின் நிலைகளையும் உபதேசித்தார்.

இன்று வரையிலும் எம்மை குருநாதர் எப்படிக் கொண்டு வந்தாரோ அதே போல மற்றவர்களையும் கொண்டு வர வேண்டும் என்றுதான் விரும்புகின்றேன்.

இத்தனை பெரிய சிரமங்களைக் கடந்து, இந்த உலகம் எப்படி இருக்கிறது…? என்ற நிலையும் இந்த உடலுக்குப்பின் என்ன…? என்ற நிலையும் பிறவி இல்லா நிலைகள் எப்படி அடைய வேண்டும்…? என்ற உண்மைகளை எனக்கு உணர்த்தினார் குருநாதர்.

1.அந்த நிலையில்… எது எது உன்னைச் சந்திக்கும்…?
2.அந்த ஆசையின் நிலைகள் உனக்கு எப்படித் திரும்பும்…?
3.அல்லது ஆசையின் நிலைகள் உனக்குள் திரும்பும் போது உன்னை எதிரி என்ற நிலையில் உன்னைத் தாக்கும் உணர்ச்சி வரும்.

அந்தக் கடுமையான உணர்வை ஏற்றினால் உன்னையும் ஆட்கொண்டு உனது நல்ல குணங்களைக் கொல்லும். அவனையும் காக்க முடியாது. இப்படிக் கடுமையான சோதனைகள்.

போகும் பக்கம் எல்லாம் எதிர்ப்புகள் வரும். நாய் கூடக் கடிக்க வரும், அப்பொழுது என்னென்ன செய்வது…? என்று முதல் அனுபவத்தைக் கொடுத்தார்.

இப்படித்தான் இருபது வருடம் அனுபவம் பெற்று உலகம் எப்படி இருக்கிறது…? என்ற நிலையைக் காடு மேடெல்லாம் சென்று நான் அறிந்தேன்.

உங்களுக்கு இந்தச் சக்தியைக் கொடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். இன்னும் சொல்லப் போனால், ஒவ்வொரு நேரத்திலும் நான் பட்ட அவஸ்தைகள் இன்னதென்று சொல்ல முடியாது.

நீங்கள் அனைவரும் அகஸ்தியனைப் போன்று அருள் ஞானிகளாக உருவாக வேண்டும்:-
நீங்கள் இதைப் பேணிக் காத்து எல்லோருக்கும் இந்த உன்மையை உணரும் தன்மை பெறச் செய்ய வேண்டும். நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சலைகள் பிறருடைய தீமைகளை அகற்றும் சக்தியாக வளர வேண்டும்.

அதே சமயத்தில்
1.என்னுடைய ஆசை… நீங்கள் அனைவரும் என்னைப் போல் பெரும் ஞானிகளாக மாற வேண்டும்.
2.பிறருடைய தீமைகளைப் போக்கும் மகான்களாகத் தான் நீங்கள் மாற வேண்டுமே தவிர
3.இந்த உடலின் இச்சைக்கு மாறி விடாது உங்களைக் காத்து நல் வழியில் கொண்டு வருவது தான் என்னுடைய முழுமையான தியானம்.

நீங்கள் முழுமை பெற்றால்தான் இதைச் செயல்படுத்த முடியும்.

ஏனென்றால் அதைத்தான் இப்பொழுது மிகவும் வலுப்படுத்துகின்றேன்.
1.இந்தச் சக்தி பெற்ற நீங்கள் யாம் இப்பொழுது உபதேசித்த உணர்வுகள் கொண்டு
2.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலும் வழி காட்டுதல் வேண்டும்.
3.உங்களை அறியாது உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? அதில் இருந்து நீங்கள் எப்படி மீள வேண்டும் என்று உபாயத்தைக் கூறி
4.அந்தப் பதிவின் நிலைகளை அவர்களுக்குப் பதிவு செய்ய வேண்டும்.

அந்தப் பதிவின் நிலைகள் அவர்களுக்குள் வளர்ந்து அந்த எண்ணத்தால் தீமையிலிருந்து அவர்கள் விடுபடுவதும்… தீமை செய்தவர்கள் திருத்திக் கொள்வதும்… நன்மை செய்யும் உணர்வு உள்ள மக்களாக அவர்களை மாற்றும் திறன் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத் தான் யாம் இதைச் சொல்வது.

அந்த முழுமையின் தன்மைகளை நாம் எல்லோரும் அடைதல் வேண்டும். இதுதான் நமது லட்சியமே. இந்த லட்சியத்தின் நிலைக்கு வரும் போது
1.செல்வத்தை நாம் தேடிப் போக வேண்டாம்… செல்வம் தன்னாலே வந்து சேரும்.
2.செல்வத்தைக் குறிக்கோளாக வைத்தால் அதனுடைய ஆசையின் நிலைகள் உடல் பற்று தான் வரும்.
3.ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் எல்லோரும் அந்த அகஸ்தியனைப் போன்று
4.உலகைக் காக்கும் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன்.

எமது அருளாசிகள்.

மனதைத் தங்கமாக்க வேண்டும் என்று சொன்னார் குருநாதர்

மனதைத் தங்கமாக்க வேண்டும் என்று சொன்னார் குருநாதர்

 

குருநாதர் என்னைப் பழனிக்கு அருகில் இருக்கும் மலைக்கு அழைத்துச் சென்று ஒரு கரண்டியும் ஈயமும் எடுத்து வரச் சொன்னார். “இன்ன இடத்தில் இன்ன மாதிரிச் செத்தைகள் இருக்கும் எடுத்துக் கொண்டு வா…!” என்றார்.

நான் அதையெல்லாம் எடுத்து வந்தவுடன்… அந்தக் கரண்டியில் ஈயத்தை வைத்துச் செத்தைகளெல்லாம் போட்டுத் “தீயை வைத்து எரிடா…” என்றார்.

அது எரிந்து ஈயம் உருகியது. உருகியவுடன் அது தங்கம் போன்ற நிறமாக மாறியது. அது அப்படியே எரிந்து கொதிக்கிறது. கொதித்தவுடன்… “எப்படி இருக்கிறது…?” என்று எம்மிடம் கேட்டார் குருநாதர்.

நான் “ஜக…ஜக…ஜக…” என்று இருக்கிறது சாமி என்றேன்.

என்னடா ஜக…ஜக…ஜக…? என்று இரண்டு அடியும் கொடுத்தார். எப்படி இருக்கிறது…? என்றார்.

மீண்டும் ஜக ஜக ஜக என்றேன் நான்.

திரும்பவும் என்னடா ஜக ஜக ஜக என்று சொல்கிறாய்…? என்று இரண்டாவது தடவையும் ஒரு அடி கொடுத்தார் குருநாதர்.

மீண்டும் நான் என்ன செய்தேன்…? ஜக ஜக ஜக என்று சொன்னேன்.

அப்புறமும் எப்படி இருக்கிறது…? என்று கேட்டார் குருநாதர்.

தங்கம் மாதிரி மின்னுகிறது சாமி…! என்றேன்.

குருநாதர் அப்படிச் சொல்லுடா… “தூ…!” என்று சொல்லி அவர் உமிழ் நீரை அதில் துப்புகிறார். துப்பியவுடன்… மூடுடா என்றார்.

பின் உறைந்து இருக்கிறது. எடுத்துப் பார்த்தால் “பார்த்தால் தங்கக்கட்டி…!” அலுங்காமல் கொண்டு போய் அதை விற்றுவிட்டு வா என்றார்.

இது உண்மையா பொய்யா…? என்பதைத் தெரிந்து கொள்ள இரண்டு பேரும் தங்க வேலை செய்பவரிடம் கொண்டு சென்று கொடுத்தோம்.

அவர் உரசிப் பார்த்து விட்டு “அட.. அடடடா…! என்ன இது…? சாமியிடம் நீங்கள் கற்றுக் கொண்டதைக் கொண்டு வாருங்கள். நாம் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்.

நகைக் கடையில் அதைக் கொடுத்தால் “நீ ஏன் பைத்தியம் கூடச் சேர்ந்து சுற்றினாய்…? என்று இப்பொழுதுதான் தெரிகின்றது. ஏதோ விஷயத்தோடு தான் சுற்றியிருக்கிறாய்…! என்கிறார்.

நீ எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டுவா, உனக்கு நான் காசு தருகிறேன். இருவரும் லாபத்தில் பங்கு எடுத்துக் கொள்ளலாம். நீ சும்மா செய்கிறாய். ஆனாலும் நான் இன்றைக்கு உள்ள தங்க விலையில் பாதியை உனக்குக் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். நீ எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்… யாரிடமும் சொல்ல வேண்டாம்…! என்கிறார்.

ஒரு வாத்தியார் இராமகிருஷ்ணன் என்பவர் தங்கம் செய்கிறேன் என்று “நான் பாதரசத்தைக் கட்டிக் கட்டி முடியவில்லை…! எனக்குத் தங்கம் வித்தையைக் கொஞ்சம் சொல்லிக் கொடு…” என்கிறார்.

நீ செய்ய வேண்டாம்… நானே செய்து கொள்கிறேன். உனக்கு வேண்டியதைச் சொல் நான் கட்டித் தருகிறேன் என்று கூறி என் பின்னாடியே சுற்றிக் கொண்டு இருந்தார். பின் அவர் செத்தும் போனார்
1.மனிதனுடைய ஆசைகள் எப்படியெல்லாம் வருகிறது…?
2.எமக்கே இதைச் செய்து கடைகளில் விற்றுப் பணத்தை வாங்கி வந்து என் பிள்ளைகளுக்குச் செய்யலாம் என்ற எண்ணம் வருகிறது.

குருநாதர் தங்கத்தை விற்ற அந்தக் காசை வாங்கிக் கொண்டார். பார்…! எத்தனை பேர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் கஷ்டமெல்லாம் எப்படி இருக்கிறது…? அதை நிவர்த்தி செய்ய வேண்டுமா இல்லையா…? என்று கூறி, அந்தப் பணம் முழுவதையும் கொடுத்துவிட்டு எமக்கு ஒரு ரூபாய் மட்டும் கொடுத்தார்.

இத்தனை தூரம் செய்த பிற்பாடு ஒரு ரூபாயை எம்மிடம் கொடுத்து உன் பிள்ளைகளுக்கு மிட்டாய் திண்பண்டங்கள் வாங்கிக் கொடு என்கிறார் குருநாதர்.

இப்படிச் செய்தவுடன் எமக்கு என்ன ஆசை வருகின்றது…? குருநாதருக்குத் தெரியாமல் அவர் சொன்ன இடத்திற்கெல்லாம் சென்று அந்தச் செத்தைகளையெல்லாம் போட்டு ஈயக் கரண்டியையும் கொண்டு வந்து அவர் செய்த மாதிரியே யாமும் செய்தோம். அதே மாதிரித் தங்கமாக மாறியது.

இரண்டாவது முறையாகத் தங்கமாக ஆனவுடன் தங்கம் பதம் பார்ப்பவர்கள் இரண்டு பேரிடம் கொடுத்து இது எப்படி இருக்கிறது…? என்றேன்.

“அட..அட..அட… நைனா…!” இன்றைக்கு உனக்கு கோடீஸ்வரன் ஆவதற்கு நேரம் வந்துவிட்டது… உங்களைத் தேடி எத்தனை பேர் வருவார்கள் தெரியுமா…? என்று இதில் பெருமை பேசுகின்றார்கள்.

இவர் இப்படிச் சொன்னவுடன் அங்கிருந்து குருநாதர் வருகிறார். ரோட்டில் திட்டிக் கொண்டே… ஏய்.. திருட்டுப் பயலே… திருடா… டேய் தெலுங்கு ராஜ்யம்..! என்று எம்மைத் திட்டிக் கொண்டு வருகிறார்.

ஒரு சைக்கிள் செயினையும் கையில் எடுத்துக் கொண்டு வந்தார். இப்படி யாம் ரகசியமாகத் தங்கம் செய்தோம் என்று “டேய்.. திருடா..!” என்று சொல்லிக் கொண்டே வருகின்றார் குருநாதர்.

நான் என்ன செய்தேன்…? எழுந்து விழுந்தடித்துச் சந்துப் பக்கம் ஓடி ஒளிந்து கொண்டேன். அங்கேயும் பின்னாடி என்னைத் துரத்திக் கொண்டே வந்து விட்டார் குருநாதர்.

“ஏய்… திருடா…!” ஏன்று அவர் எங்கேயோ இருந்து கத்திக் கொண்டே வருகிறார். என்னைத் திட்ட மட்டார்… தெலுங்கு ராஜ்ஜியம் என்று தான் சொல்லித் திட்டிக் கொண்டே வந்தார்.

அப்பொழுது இதை எடுத்துக் கொண்டு ஓடி ஓடிப் பார்க்கிறேன் இருந்தாலும் என்னால் முடியவில்லை… கடைசியில் என்னைச் சுற்றி வளைத்துவிட்டார்.

இங்கே வாடா…! என்றார் குருநாதர். எவ்வளவு தங்கம் செய்தாய்…? என்று பிடித்துக் கொண்டார் அவரிடமிருந்து தப்ப முடியவில்லை. தங்கத்தை அவர் வாங்கிக் கொண்டார். போய் விற்றுவிட்டு வாடா என்றார். விற்றுவிட்டு வந்தவுடன் பணத்தை அவரே வாங்கிக் கொண்டார்.

ஏன்டா உனக்கு இந்தத் திருட்டுப் புத்தி…? என்றார் குருநாதர்.
1.உன் மனதைத் தான் தங்கமாக்கும்படி நான் சொன்னேன்.
2.உன் மனதைத் தங்கமாக்கினால் எத்தனை தங்கம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.
3.ஏன்டா உனக்கு இந்தப் புத்தி வருகிறது…? என்றார்.

அந்த நிலையில் தங்கம் செய்யும் ஆசை எனக்கு வரப்போகும் போது இதே போல் நான் செய்த மாதிரி அடுத்தவர்களுக்கும் ஆசை வரத்தானே செய்யும்.

நான் குருநாதரிடம் பழகிக் கொண்டு இருக்கும் போதே அவருக்குத் தெரியாமல் காசு சம்பாதித்துவிடலாம். வீட்டுக் கஷ்டத்தையும் போக்கி விடலாம் என்று இந்த உணர்வுதான் வருகின்றது. ஏனென்றால் மனிதனுடைய மனங்கள் எப்படி இருக்கிறது…? என்று சோதிக்கிறார் குருநாதர்.

பின் தங்கம் செய்து விற்றார் என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் எம்மைத் தேடி வருவதற்கு ஆரம்பித்தார்கள்.

கொஞ்சம் சொல்லிக் கொடு… நாங்கள் செய்து கொள்கிறோம் நீ செய்ய வேண்டாம்…! நீ செய்தால் தான், குருநாதர் உன்னை விடமாட்டார். நீ சொல்லிக் கொடு நான் எல்லாம் செய்து கொள்கிறேன். உனக்கு வேண்டியதை நான் செய்கிறேன்… பாதிப் பங்கு கொடுக்கிறேன் என்று சேர்ந்து எம்மைச் சுற்றிக் கொண்டு வந்தவர்கள் ஏராளமானோர்.

1.ஏனென்றால் குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொரு ஆசையின் உணர்வின் இயக்கங்களை எமக்குக் காட்டித் தெளிவுபடுத்தினார்.
2.ஆகையால் மனதை நீ எப்படித் தங்கமாக்க வேண்டுமென்று இங்கு தெளிவாகக் காட்டுகிறார்.

சூரியன் எப்படிப் பல உணர்வை எடுத்துப் பாதரசமாக மாறி உலகத்தின் தன்மையை உருவாக்கும் தன்மையை எப்படிப் பெறுகின்றதோ அதே மாதிரித்தான் எல்லா மனிதனுடைய உணர்வும் இந்தப் பாதரசத்தின் தன்மை அடைந்தது. அதன் உணர்வின் தன்மை பெற்றது தான் அந்த உயிர்.

ஆக மொத்தம் உன்னுடைய உயிரையும் இதே போல ரசமாக்குதல் வேண்டும். உணர்வின் தன்மையை ஒன்றாக்குதல் வேண்டும்.

எப்படிப் பாதரசம் சுக்கு நூறாக ஆனாலும் அது மீண்டும் ஒன்று சேர்ந்து ஆகின்றதோ அதன் வழியில் நீ செயல்படுதல் வேண்டும் என்பதைத்தான் இப்படி அங்கே காட்டினார்.

கோடி கோடி – மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

கோடி கோடி – மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

 

விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்பதற்காக… குருநாதர் எம்மை ஓங்கி அடிப்பார். நினைவுகள் எல்லாம் அவர் பால் செல்லும்.

உதாரணமாக… பாசத்தால் நம்மை அடிக்கும்போது நண்பன் மேல் வெறுப்பு வருவதில்லை. அதாவது நீங்கள் தமாஷாக ஒருவரை அடித்துப் பாருங்கள்… கோபம் வருகிறதா என்று…? வராது.

அதே சமயத்தில் தமாஷாக அடித்துக் கொண்டிருக்கும் போது
1.ஒரு சொல்லை மட்டும் இலேசாகக் குறையாகச் சொல்லி அதற்கப்புறம் அடித்துப் பாருங்கள்
2.இந்த உணர்வுகள் மாறும்.

ஆக குரு எனக்குக் காட்டும் நிலைகள் அவர் என்னை அடிக்கப்படும் பொழுது
1.அந்த உணர்வின் தன்மை “எது…?”
2.அடித்தவுடன் சிரிப்பார்… சிரித்தவுடன் பார்த்தால் அது தெரியும்.

எத்தனையோ கோடி உணர்வுகள் சேர்த்து
1.உன்னை நான் அடிக்கும் உணர்வுக்குள் இருப்பதை
2.என் (குருதேவர்) அடிக்குள் கலந்திருந்த நினைவும் அந்த நினைவால் கலந்த உணர்வும்
3.உன்னுடன் அது எப்படிச் சேர்ந்து அண்டத்தை அறிகின்றாய் என்று நீ பார் என்று குரு காட்டுகின்றார்.

நீ அண்டத்தை அறிந்துவிடு… ஒரு மனிதனின் உணர்வுக்குள் நீ சொல்லைப் பாய்ச்சிவிடு. அங்கே கிளரும் உணர்வின் தன்மையை நுகர்ந்தறி. நுகர்ந்து அறிந்தால் அவனுள் விளைந்த உணர்வின் தன்மை உன்னை இயக்கும். ஆனால் அவனை நீ மாற்ற முடியாது.

ஒரு செடியின் தன்மை காரத்தின் தன்மை கொண்டதோ அல்லது கசப்பின் தன்மை கொண்டதோ அதன் நிலை மாறாது. அதைப் போல அவரின் உணர்வின் தன்மை மாறாது.

1.நீ நல்ல சொல்லாகச் சொன்னாலும் அவருக்கு எதிர்மறைதான் ஆகும்.
2.ஆனால் அதை எவ்வாறு மாற்றுவது…? என்று குருநாதர் என்னிடம் கேட்கிறார்.

இப்படித்தான் இதைப் போன்று கேள்விகள் கேட்டுப் பின் விளக்கங்கள் கொடுக்கிறார்.

விண்ணின் ஆற்றலின் சக்தி உன்னில் எவ்வாறு இயக்குகிறது…? என்று அவரின் கோடி உணர்வுகள் சேர்த்து
1.“கோடி கோடி… கோடி கோடி… “கோடி கோடி…” என்ற நிலையில்
2.நான் “தேடித் தேடி… தேடித் தேடி…” சென்று இதைப் பெற்றேன்
3.உன்னை அது “நாடி… நாடி… நாடி…” வருகின்றது
4.நீ “தேடித் தேடி…” அதைப் பெற வேண்டும் என்று இப்படிச் சொல்வார்.

அவருடைய சொல்லுக்குள் பார்த்தோம் என்றால் உட்பொருள்கள் எவ்வளவோ இருக்கும்.
1.என்னை அடித்தவுடன்… “உன்னை தேடித் தேடி வருகின்றது… நீ நாடி நாடி அதைப் பெறுகின்றாய்…!” என்று இப்படிச் சொல்வார்.
2.ஏனென்றால் இதெல்லாம் குருநாதருடைய சொல்லுக்குள் அனைத்தும் சூட்சமம் தான்.

இந்தப் பொருள் காணும் தன்மை… கோடி என்ற நிலைகள் எவ்வாறு இது இயக்குகின்றது…? என்பதைத்தான் இந்தக் கோடியின் நிலையைப் பல கோடி உணர்வின் நிலைகளை உங்களுக்குள் அறியும் தன்மையாகக் குரு கொடுத்ததை உங்களுக்கும் கொடுக்கின்றேன்.

1.அவர் பெற்ற அந்த மெய் உணர்வைக் கவரும் ஆற்றலும்
2.அவர் பிறவா நிலைகள் பெற்றதை… நாமும் பிறவா நிலை அடையும் மார்க்கமும் இதிலே அடங்கியுள்ளது.

விண்ணுலக ஆற்றலைக் “கோடி கோடி…” என்று சொல்லும் பொழுது “இந்தக் கோடியைச் சாப்பிட்டால்… நீ எதை எதையெல்லாம் போய்ச் சாப்பிடலாம்…? போய் சாப்பிடுடா பாருடா…!” என்று குருநாதர் சொல்வார்.

அதனால் தான் இப்பொழுது உங்களுக்கு விளக்கமாகச் சொல்லி…
1.எது எது, எதை எதை விழுங்குகிறது…? என்பதை
2.அதாவது உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை
3.அந்தத் தீமைக்குள் ஞானிகள் உணர்வுகளைக் கலந்தவுடன் அதை விழுங்கி அந்தத் தீமையை அடக்குகின்றது.
4.அப்படி அடக்கிய நிலைகள் கொண்டு உணவாக அதற்கு அமைகிறது.

ஒரு மரக்கட்டை எரிகிறதென்றால் பல உணர்வுகள் சேர்த்து “எண்ணெய்ப் பசை…” அதிலே இருந்தால் தான் எரியும். எண்ணெய்ப் பசை இல்லையென்றால் கருகிவிடும்.

இதைப் போலத்தான்… உணர்வின் தன்மை எதுவாக இருப்பினும் ஒரு குழம்பிற்குள் சுவை தேவை என்றால் காரம் தேவை. அந்தக் காரத்தை எவ்வளவு சேர்க்கின்றோமோ அதற்குத் தக்கவாறுதான் அந்த உணர்ச்சிகள் உந்தும்.

இதைப் போல நமக்குள் எத்தகைய தீய குணங்கள் இருப்பினும் அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இதை விழுங்கிடல் வேண்டும்.
1.ஞானிகளின் உணர்வை நாம் விழுங்கினால் தீமைகளை இது விழுங்கும்.
2.ஆகவே மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் அதிகமாகச் சேர்க்க வேண்டும்.

ஞானத்தை அறிய வேண்டும் என்றால் இப்பொழுது கேட்டறிந்த உணர்வுகள்… உங்களுக்குள் எத்தனை கோடி குணங்கள் இருப்பினும் அவை அனைத்திலும் எண்ணத்தால் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்கும் பொழுது இது உங்களுக்குள் பால்வெளி மண்டலமாகத் துகள்களாகச் சேர்கின்றது.

இவ்வாறு சேர்த்துக் கொண்ட இந்தத் துகள்கள்
1.அதாவது அருள் உணர்வுகளை நுகர நுகர எண்ணங்களாக விரிவடைகின்றது.
2.எண்ணங்களின் தன்மை விரிவடையப்படும் பொழுது உங்களுக்குள் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் ஏற்படுகின்றது.

அந்தத் திறன் இல்லையென்றால் நாம் செயலாக்க முடியாது.

அந்தத் திறன் நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உணர்வைப் பதிவு செய்கிறோம். இதன் துணை கொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும்.

1.அந்த அருள் ஞானிகளின் உணர்வை அடிக்கடி எண்ணி
2.அதை நீங்கள் நுகர வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.

காட்டுவாசிகளுக்கு மத்தியில் எமக்கு ஏற்பட்ட அனுபவம்

காட்டுவாசிகளுக்கு மத்தியில் எமக்கு ஏற்பட்ட அனுபவம்

 

ஒரு சமயம் யாம் அஸ்ஸாம் பகுதிக்குச் சென்றிருந்தோம். அப்பொழுது அங்கே வசிக்கக்கூடிய மலை வாழ் மக்கள் எம்மைப் பிடித்துக் கொண்டார்கள்.

1.மலைப் பகுதியில் வாழும் மக்களின் மத்தியில் என்ன நடைபெறுகிறது…? என்பதை
2.யாம் தெரிந்து கொள்ளும் பொருட்டு அவசியம் நீ அங்கு செல்லத்தான் வேண்டும் என்று குருநாதர் கூறிவிட்டார்.

அந்தக் காடோ யானைகளும் காண்டா மிருகங்களும் மற்றும் பல்வேறு விலங்குகளும் வாழும் அடர்ந்த பகுதி. குருநாதர் கொடுத்த உபாயத்தின் பேரில் யாம் அங்கே சென்று மலைவாழ் மக்களிடம் பிடிபட்டு அவர்கள் இழுத்துச் சென்ற பகுதிக்குச் சென்றோம்.

அங்கே அவர்கள் எம்மை ஒரு மரத்தோடு கட்டிப் போட்டார்கள். உண்பதற்கு ஆகாரம் கொடுத்தார்கள். அங்கே காளி கோவில் மாதிரி ஒரு கோவிலை வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் அந்த மலைவாழ் மக்கள் ஆட்டமும் பாட்டமுமாக இருந்து கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் கவனிக்கும்படி குருநாதர் கூறினார். ஆட்டமும் பாட்டமுமாக இருந்த அந்தக் கூட்டத்தில் தலைவனாக இருந்த பூசாரி பாடிக் கொண்டே வந்து எம் மீது பல இடங்களில் ஊசியால் குத்தினார்.

ஆ…! என்று அலறினோம். அந்த சமயம் சில மந்திரங்களைச் சொல்கிறார்கள். அவைகளை எமக்குள் பதியும்படிச் செய்தனர். இவ்வாறு சில நாட்கள் அதே இடத்தில் கட்டி வைத்திருந்து மந்திர ஒலிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக எம்முள் பதியச் செய்து குறிப்பிட்ட காலம் வந்ததும் எம்மைப் பலியிடக் காத்திருந்தனர்.

இதனின் நிலைகளை எல்லாம் குருநாதர் காண்பித்து குறிப்பிட்ட நாள் வந்ததும் உன்னைப் பலியிடுவார்கள். உன் ஆத்மாவைப் பிரித்தெடுத்துக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

பின் உனது உடலைத் துண்டு துண்டாக வெட்டித் தசைகளைத் தாங்கள் வெள்ளாமை செய்யும் பகுதிகளில் வீசிவிடுவார்கள். மேலும் உனது தசைகளைக் கோவிலில் பொங்கலிடுவார்கள் என்று குருநாதர் எமக்கு உணர்த்தினார்.

இவைகளெல்லாம் யாம் குருநாதர் அருள் துணை கொண்டு அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்ட உண்மைகள்.

மனிதரைப் பலியிட்டு அவர்களது ஆன்மாவைக் கைவல்யப்படுத்தி மந்திர ஒலிகளின் துணை கொண்டு தங்களைத் தற்காத்துக் கொள்ளும் விதமாக அந்த ஆன்மாவை எப்படிப் பயன்படுத்துவர்…? என்பதை அந்த இரவில் யாம் மரத்தில் கட்டப்பட்டிருக்கும் நிலையில் எமக்குக் குருநாதர் உணர்த்திக் கொண்டிருந்தார்.

1.இன்று பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். மலைப் பகுதிக்குச் சென்றால் அமைதியாகத் தனித்து வாழலாம் என்று.
2.ஆனால் சில மலைப் பகுதிகளுக்குச் சென்றால் எவ்வளவு பெரிய ஆபத்து இருகிறது…? என்பதையும் உணர்த்துகிறார்.
3.இறுதியில் யாம் குருநாதர் எமக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு வெளியே வந்தோம்.

பின் இதே மந்திரத்தின் நிலைகளை நகரப் பகுதியில் எப்படி உருவாக்குகின்றார்கள்…? என்ற நிலையைத் தெளிவாக உபதேசித்தார்.

இதைப் போன்ற நிலைகள் நமது நாட்டில் மட்டும்தான் என்றில்லாமல் உலக நாடுகள் அனைத்திலுமே இதன் நிலைகள்தான் இருந்தன. எகிப்து ஈரான் ஈராக் மற்றும் ரோமன் நாடுகள் பற்றியும் அங்கு நடைபெறும் நிலைகளையும் நமது குருநாதர் எமக்குக் கூறினார்.

உன்னைப் பலி கொடுத்து நான் சக்தி பெறப் போகின்றேன் என்றார் குருநாதர்

உன்னைப் பலி கொடுத்து நான் சக்தி பெறப் போகின்றேன் என்றார் குருநாதர்

 

“கல்கத்தா காளி” என்ற துர்தேவதையின் உணர்வுகளை மந்திரங்களைச் சொல்லி அதிலிருந்து உணர்வுகள் பெற்றது அரசர்கள் செய்த நிலைகள். இது பற்றிய உண்மை நிலைகளை உணர்த்திக் கொண்டிருந்த குருநாதர் எம்மைக் கொடைக்கானலின் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச்சென்றார்.

அங்கேயும் கல்கத்தா காளி கோயிலில் நடக்கும் சம்பவங்களைச் சொன்னதோடு மட்டுமில்லாமல் அங்கே நடைபெறும் நிகழ்ச்சியைக் காட்சியாகவும் கண்பித்தார் குருநாதர்.

அது சமயம் ஒரு சக்தியை நன்றாகத் தீட்டிக்கொண்டு கல்கத்தா காளி கோயிலில் எதற்காகப் பலி கொடுக்கின்றார்களோ… அதே போன்று நானும் உன்னைப் பலி கொடுத்துச் சக்தி பெறப் போகிறேன். அதற்காகத்தான் நான் உன்னை மயக்கிக் கொண்டுள்ளேன் என்றார் குருநாதர்.

தீட்டிய கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு
1.குரு எமது கழுத்துச் சங்கைப் பிடித்து “இந்தக் கத்தியால் இப்படிக் குத்தி உன் இரத்தம் அனைத்தையும் வடித்து
2.இங்கேயிருந்து காளி கோயிலுக்கு அனுப்பிவிட்டு உன் உயிரை நான் எடுத்து மந்திரவாதி ஆகப்போகிறேன் என்று கூறினார்.

எப்படியிருக்கும் எமக்கு…?

நான் சொன்னபடி கேள்…! என்று எம்மை மிரட்டியவாறு சொன்னார்.

அப்போது யாம் சொன்னோம்
1.யாம் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம்… ஏனென்றால் உங்களைப் பற்றிய அனைத்து உண்மையும் தெரிந்து விட்டது.
2.நீங்கள் எதைச் செய்தாலும் சரி என் மனைவியைக் குணப்படுத்தினீர்கள்… உங்கள் பிள்ளைகளை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறினோம்.

குருநாதர் உடனே சிரிக்க ஆரம்பித்தார். சிரித்ததோடு மட்டுமல்லாமல் கையில் ஆயிரம் ரூபாய் கொடுத்து எங்கேயும் நிற்காமல் ஓடி இரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்க் கல்கத்தாவிற்கு டிக்கெட் வாங்கு என்றார்.

இரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று எழுதிக் கொடுத்து டிக்கெட் வாங்கினோம். அங்கிருந்து கல்கத்தா செல்வதற்கு நேரடி வசதி இல்லாததால் மாற்று ஏற்பாட்டுடன் எழுதிக் கொடுத்தார்கள். யாம் டிக்கெட் வாங்கிக் கொண்டு திரும்பும் வரையிலும் குருநாதர் அங்கேயே இருந்தார்.

யாம் இரயில் டிக்கெட்டைக் குருநாதரின் கையில் கொடுத்தோம்.
1.டிக்கெட்டைத் தம் கையில் வாங்கிக் கொண்ட குருநாதர் எம்மைக் கட்டி அணைத்தார்.
2.அடுத்த நிமிடம் குருதேவரும் யாமும் கல்கத்தாவில் இருந்தோம்.
3.குருதேவர் சூட்சும நிலையில் எம்மைக் கல்கத்தாவிற்கு அழைத்துச் சென்றார்.

கல்கத்தா அழைத்துச் சென்ற குருநாதர் அங்கே தாம் ஓட்டல் கடை வைத்து நடத்திய இடத்தையெல்லாம் காண்பித்தார். கல்கத்தாவில் காளி கோவிலில் என்னென்ன நடக்கின்றது…? என்பதையெல்லாம் காண்பித்தார்.

காளி ஆலயம் மூடியிருந்தது. அந்த நேரத்தில் சூட்சம நிலையில் உள்ளுக்குள் அழைத்துச் சென்றார். அங்கும் சில விஷயங்களைக் காண்பித்தார்.

அப்பொழுது இராமகிருஷ்ண பரமகம்சரின் வாழ்க்கையில் உள்ள உண்மைகளைக் கூறினார். இராமகிருஷ்ண பரமகம்சர் பிராமணர் படிப்பறிவில்லாதவர்… காளி கோவிலில் பூஜைகள் செய்து கொண்டிருந்தவர்.

அவர் காளியைப் பற்றி நிறையத் தெரிந்து கொண்டார். தெரிந்து கொண்ட உண்மையின் தன்மை கொண்டு காளி கோவிலில் பூஜை செய்து வந்தார்.

வருடத்தில் ஒரு அமாவாசை நாளன்று காளி கோவிலில் நரபலி கொடுப்பார்கள்.
1.அப்படி நரபலி கொடுக்கப்படும் காலத்தில் ஆலய சப்தங்கள் எப்படி இருக்கின்றது…?
2.காளித் தாய் இதற்கெல்லாம் அனுமதி கொடுக்கிறாளே…! என்று சொல்லி அவருக்குள் பாசத்தால் தான் ஏங்கி எடுக்கின்றார்.

அது போன்ற காலத்தில் ஆலய நிர்வாகிகள் ஒரு மந்திரவாதியிடம் அதற்கென்ற நிலைகளைப் பதிவாக்கிப் பூஜைகளை நடத்துகின்றனர். மந்திரவாதி என்ற நிலைகள் வரப்படும் பொழுது அவருக்கு மயக்க நிலை கொடுத்து அவரின் உணர்வின் தன்மையை அதற்குண்டான முறையில் பலி கொடுக்கின்றனர்.

அந்த மந்திரவாதி பல ஜோசியங்களைக் கற்றுக் கொண்டவர். பல அற்புதங்களைக் கற்றுக் கொண்டவர். பல உணர்வுகளை மந்திரத்தால் அறியும் தன்மை பெற்றவர்.

இப்படிப்பட்ட இந்த ஆன்மா… “ஆலயத்தில் இது போன்ற தவறுகளைச் செய்கின்றனரே…” என்று எண்ணிய இராமகிருஷ்ண பரமகம்சரின் உடலில் புகுந்து கொண்டது.

இப்படிப் புகுந்து கொண்ட பின் தான் இராமகிருஷ்ண பரமகம்சர் பித்தரைப் போன்று ஆனது,

இதன் தொடர் கொண்டுதான் அவர் (மந்திரவாதி) தன் உடலில் வாழும் காலத்தில் என்னென்ன அற்புதங்களைச் செய்தாரோ அதைப் போன்ற நிலையை இராமகிருஷ்ண பரமகம்சரின் உடலிலிருந்தும் பல அற்புதங்களை நடத்துகின்றார்.

அதாவது கோவில்களில் பூஜை செய்வதை விடுத்து இறந்த மனிதர்களைப் புதைக்கும் இடங்களில் சென்று அமர்வதும் அந்த உடல்களிலிருந்து வரக்கூடிய மணங்களை நுகர்வதும் அவர்கள் எப்படி இறந்தார்…? என்ற நிலைகளிலும் இராமகிருஷ்ண பரமகம்சர் செயல்பட்டு வந்தார்.

இராமகிருஷ்ண பரமகம்சர் கங்கை ஆற்றின் வழியில் செல்லும் போது, அரிச்சந்திரா காட் கேதார் காட் என்ற நிலை உண்டு. அதற்கென்று காவலாளி என்னும் அரசனும் உண்டு. ஊரிலிருந்து புதைக்கக் கொண்டு செல்லப்படும் பிரேதங்களை அந்த அரசனிடம் ஒப்படைத்து அவருக்கு வேண்டிய காணிக்கைச் செலுத்திய பின் தான் எரிப்பார்கள்.

இப்படி எரிக்கப்படும் காலங்களில் தான் இராமகிருஷ்ண பரமகம்சர் படகில் செல்கின்றார். இப்படிப் படகில் சென்று கொண்டிருக்கும் பொழுது சுடுகாட்டில் பிணங்கள் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஆழ்நிலைத் தியானத்திற்குச் சென்றார்.

இப்படி அமர்ந்தபின் அவருடன் படகில் சென்றவர்கள் பரமகம்சர் ஆழ்நிலைத் தியானத்தில் அமர்ந்துவிட்டாரே… எங்கு சென்றார்…? ஏது சென்றார்…? என்ற நிலை தெரியாமல் இருந்தனர்.

சில மணி நேரம் கழித்து இராமகிருஷ்ண பரமகம்சர் சமாதி நிலையிலிருந்து விடுபட்டதும் அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து “என்ன சாமி பார்த்தீர்கள்…?” என்று கேட்டார்கள்.

அதற்கு இராமகிருஷ்ண பரமகம்சர்… அங்கே நான் சிவனையும், சக்தியையும் பார்த்தேன். என்ன ஆனந்தமாக இருந்தது…? என்று அவர் சொன்னார்.

அவர் பார்த்தது எது…?
1.உடல் சிவம் உடல் வெந்தபின் உடலுக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வலைகள் எப்படி வெளிப்படுகின்றது…?
2.சக்தியாக நுகர்ந்த உணர்வு சிவமாக எப்படி ஆனது…?
3.இப்பொழுது சிவமான நிலைகள் கரைந்து அது சக்தியாக எப்படி வெளிப்படுகின்றது…? என்பதைத்தான் இராமகிருஷ்ண பரமகம்சர் கூறினார்.

ஆனால் இதற்கு மாறாக சிவனையும் சக்தியையும் பார்த்தார் என்று எழுத்து வடிவில் கொண்டு வருகின்றனர் என்று குருநாதர் தெளிவாகக் காண்பித்தார்.

நமது மெய் ஞானியான குருநாதர் இயற்கையின் இயக்கத்தின் உண்மையின் உணர்வினை எமக்குள் பாய்ச்சிப் பரமகம்சரைப் பற்றிய உண்மைகளை உணர்ந்து கொள்ளும்படிச் செய்தார்.

அப்பொழுதுதான்
1.இராமகிருஷ்ண பரமகம்சர் பார்த்த உணர்வும்… அவருடைய உடலில் நுகர்ந்த உணர்வும்
2.அங்கே “கேள்வி பதில்…” (சம்பாஷணை) என்ற நிலைகளில் வெளிப்பட்ட உணர்வுகளும்
3.சூரியனால் சூரியனால் கவரப்பட்டு இப்புவியில் பரவியுள்ள நிலைகளை நீ உற்றுப் பார்…!
4.உணர்வின் அறிவு உனக்குத் தெரியும்… அவரின் உடலும் தெரியும்.
5.அவருடைய சம்பாஷணைகளும் தெரியும் என்று உணர்த்தினார் குருநாதர்..

ஆனால் இதைப் போன்று நீ தெரிந்து கொண்டு இதன் வழியில் நீ அதிகமாக நாட்டம் செலுத்தினால் அவர்களின் உடல்களில் உள்ள சில தீமையின் உணர்வுகள் உனது இரத்தத்தில் கலந்துவிடும்.

1.இதன் நிலை உன்னில் அதிகமாக்கப்படும் பொழுது நீ பித்தனாக வேண்டிய நிலை வரும்.
2.இப்படி வரும் தீமைகளைத் தடுப்பது எங்ஙனம்…? என்று அங்கு பல உபாயங்களைக் காண்பித்தார் குருநாதர்.

இராமகிருஷ்ண பரமகம்சர் தெய்வீகப் பண்புகளைப் பற்றியும் இராமாயணத்தைப் பற்றியும் இராவணனைப் பற்றியும் மகாபாரதத்தைப் பற்றியும் பல வினாக்களுக்குத் தெளிவாகப் பதிலைக் கூறினார்.

1.காவியங்கள் மனிதரின் உணர்வின் தன்மை கொண்டுதான் வந்ததே தவிர
2.இதைப் போன்ற ரூபங்கள் இல்லை என்று வாதாடினார்.
3.ஆனால் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் பண்பு அன்றும் இல்லை.

இராமகிருஷ்ண பரமகம்சர் உபதேசத்தைக் கேட்டவர்கள் ஏராளமான பேர். ஆனால் அவர் கூறிய உணர்வை மாற்றி வெளியிட்டதும் அவருடைய உணர்வுகளைக் கேட்டறிந்தபின் திரிபுகளாக மற்றவர்களால் உணர்த்தப்பட்டு உண்மையின் உணர்வுகள் மறைக்கப்பட்டு விட்ட்து.

தங்களுக்கு ஏற்றவாறு… பக்தி மார்க்கங்களுக்கு உண்டான ஞானத்தைப் பயன்படுத்தி மதங்களுக்கு இணக்கமாகக் கருத்துக்கள் கலக்கப்பட்டு அவருடைய உண்மையின் உணர்வுகள் வெளியாகப்பட்டது என்ற உண்மையை எமக்குக் காண்பித்தார் குருநாதர்.

இப்படி இராமகிருஷ்ணர் சுற்றி வரப்படும் பொழுது அவருடன் ஒரு மந்திரவாதியும் வந்தார்.

இராமகிருஷ்ண பரமகம்சர் படிப்பறிவில்லாதவர்… ஆனால் அவர் பல அற்புத வேலைகளைச் செய்கிறார். புராணங்களைப் பற்றிக் கூறுகிறார். அடிக்கடி மனிதரைப் புதைக்கும் இடங்களுக்கும் எரிக்கும் இடங்களுக்கும் சென்று அங்கு வரும் மணத்தை நுகர்ந்து அதனின் உணர்வு என்ன…? என்று அறிகின்றார்.
1.அவருக்கு இந்தச் சக்தி எதிலிருந்து வந்தது…? எதனை அறிகின்றார்…? எதனைப் பின்பற்றுகின்றார்…? என்று
2.அவரைச் சூழ்ந்திருந்த பல மந்திரவாதிகள் அறிய முற்பட்டனர்.

மாலை நேரத்தில் இவர் நடந்து வரப்படும் பொழுது இருண்டு விடுகின்றது. இராமகிருஷ்ண பரமகம்சருடன் வந்த ஒருவருக்குக் கல் தடுக்கியது. அப்பொழுது ஐயோ…! இருட்டாகிவிட்டதே விளக்கு இல்லாமல் வந்துவிட்டோமே…!” என்று ஒருவர் சொன்னார்.

இதனால் அவர்களுடன் வந்த ஒரு மந்திரவாதி ஒருவர் “ஜெய் பவானி…!” என்று தொடையைத் தட்டினார். சலோ…! என்று சொன்னவுடன் ஒரு வெளிச்சம் முன்னால் சென்றது. இதன் உணர்வைக் காண்பித்தார் குருநாதர்.

மந்திரவாதி தன் மந்திரத்தின் தன்மை கொண்டு ஆவியை ஏவல் செய்து அந்த விளக்கை முன் அனுப்பினார். அப்பொழுது இராமகிருஷ்ண பரமகம்சர் சொன்னார்.

நான் இந்த வெளிச்சத்தை விரும்பவில்லை…
1.என் உடலில் அக வெளிச்சமும் இருளை அகற்றி நான் செயல்படும் “முன் சிந்தனை” என்ற
2.இந்த உணர்வு இல்லாது போய்விட்டதே…! என்று சொன்னவுடன் கூட வந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.

இதனின் உணர்வுகளை அப்படியே பதிவாக்கிக் காண்பித்தார் குருநாதர். இந்த உணர்வின் ஒலி அலைகள்… பதிவாகியிருந்த அந்தப் பகுதியில் நடந்து செல்லப்படும் பொழுது இதனின் உணர்வின் அதிர்வுகளை நினைவுபடுத்தும் போது அதை எப்படி நீ கவர்ந்து உணர்கின்றாய்…? என்பதைக் காண்பித்தார் குருநாதர்.

இப்படியான நிலையில் அந்த மந்திரவாதி இராமகிருஷ்ண பரமகம்சர் பல பேருக்கு மத்தியில் தன்னை அவமதித்து விட்டாரே என்று ஏவல் செய்தார். எந்த வாயினால் கூறினாரோ அந்த உணர்வை அடக்க ஏவல் செய்து உணவு உட்கொள்ள முடியாதபடி பல துன்பங்களை இராமகிருஷ்ண பரமகம்சருக்கு உருவாக்கினார் அந்த மந்திரவாதி.

ஆனால் இராமகிருஷ்ண பரமகம்சருக்கு மந்திரம் தெரியும். உடலில் உள்ள உணர்வுகள் தெரிகின்றது.

உண்மைகளைத் தெரிந்து கொண்டபின்
1.மந்திரவாதி செய்யும் போராட்டத்திற்குத் தான் செல்லாமல்
2.இனி இந்த உடலிலிருந்தே பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று முழுமை பெற்ற உணர்வுகளை எண்ணினார் இராமகிருஷ்ண பரமகம்சர்

ஆகையினால் பரமகம்சர் மற்றவர்களிடம் உடலின் இச்சைக்கு நாம் செல்ல வேண்டாம்
1.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் நமக்குள் நிச்சயமாக இருந்தால் போதும்.
2.இந்த உடல் கழியக் கூடியது. இந்தக் கழிவின் நிலைகளுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்…? என்று பல முறை எடுத்துக் கூறியும் கேட்காமல்
3.எத்தனையோ வைத்தியரைக் கொண்டு பரீட்சிக்கப் பார்த்தாலும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இருந்தாலும் இராமகிருஷ்ண பரமகம்சர் வாழ வேண்டும் என்ற நிலைகளில் அவரைத் துன்புறுத்தினர். இராமகிருஷ்ண பரமகம்சர் தவறேதும் செய்யவில்லை. ஆனால் மந்திரவாதி… பரமகம்சர் தன்னை அவமதித்து விட்டார் என்று எண்ணி அவர் உணவு கூட உண்ண முடியாதபடி செய்தார்.

இராமகிருஷ்ண பரமகம்சர் நீங்கள் எனக்கு ஒன்றும் இதனாலெல்லாம் நிவர்த்திக்க முடியாது என்று சொன்னால் யாரும் கேட்கவில்லை.

பரமகம்சர் இறந்தார். ஆனால் அவருக்குக் கேன்சர் என்று தான் மற்றவர்கள் முடிவு செய்தனர். ஆனால் எவ்வாறு ஏவல் செய்தனர்…? என்ற நிலையை எமக்குத் தெளிவாகக் காண்பித்தார் நமது குருநாதர்.

ஞானிகள் அமர்ந்த இடத்தில் அனுபவம்

ஞானிகள் அமர்ந்த இடத்தில் அனுபவம்

குருநாதர் காட்டுக்குள் சில இடங்களுக்குக் கூட்டிக் கொண்டு போவார். “இங்கே படுடா…!” என்பார்.

இந்தப் பக்கம் படுத்தால் கொசுக் கடிக்கின்றது. இன்னொரு பக்கம் படுத்தால் கொசுக் கடிக்கிறதில்லை. இந்த மண்ணிலே… காட்டிலே இருந்து தவம் செய்து தன்னைப் பெரிய சித்தனாக்கிக் கொள்ள வேண்டும் என்று தவத்திற்கு வந்தவர்கள் இந்த இடத்தில் பச்சிலை மூலிகைளை வைத்திருப்பார்கள்.
1.அவர்கள் அந்தப் பச்சிலை மூலிகைகளை எடுத்துத் தன் உடலிலே பூசிக் கொள்வார்கள்.
2.தவம் என்ற நிலைகளில் இருக்கப்படும் பொழுது அந்த எல்லை வரையிலும் கொசுக்கள் பாம்புகள் மற்றவை வருவதில்லை.

அங்கே சுத்தமான மனிதன் போனால் தான் போக முடியும். தவறான ஆசையுடன் போனால் அவனைத் தூக்கி எறிந்துவிடும் என்றார்.

நான் போனேன்.

அங்கே உட்காருடா…! என்றார்.

தூக்கி எறியப்பட்டேன்… என்ன சாமி…? பேயோ பிசாசோ இருக்கு போலிருக்கு…! என்றேன்.

பேயுமில்லை பிசாசுமில்லை…! அந்தக் காலத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தக் குறிப்பிட்ட இடத்திலே செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

தவறான ஆட்கள் உட்கார்ந்தார்கள் என்றால் விஷத்தன்மை பரவிவிடும் என்று இந்த உணர்வுகள் உன்னைத் தூக்கி எறிகிறது என்று சொன்னார்.

நான் சொன்ன மாதிரி இப்படிச் செய்…! என்றார். இப்போது போய் உட்கார்… என்றார்.

போய் உட்கார்ந்தால் கொசுவும் வரவில்லை ஒன்றும் வரவில்லை. ஆனந்தமாகத் தூக்கம் வந்ததது.
1.அவர் எப்படித் தியானம் பண்ணினாரோ அதே மாதிரி எனக்கும் சக்தி கிடைத்தது.
2.இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தபோவனத்தில் பாய்ச்சப்படும் பொழுது இங்கே பதிவாகின்றது.
3.அதே போல நீங்களும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்கள் வீட்டில் பதிவு செய்து விட்டீர்கள் என்றால்
4.விஷத்தன்மைகளை எல்லாம் போக்கும் நிலைகள் வரும்.

பாச உணர்வின் இயக்கத்தைக் காட்டினார் குருநாதர்

பாச உணர்வின் இயக்கத்தைக் காட்டினார் குருநாதர்

ஒரு சமயம் யாம் வசித்த ஊரில் காலரா எனும் வியாதி பரவியது. ஊரில் உள்ள பலர் காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்தனர். அது சமயம் எமக்குத் தைரியம் அதிகம் இருந்தது.

அதனால் காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்த பலரை… அதாவது சுமார் 20 அல்லது 30 பிணங்களைத் தூக்கிச் சுடுகாட்டில் போட்டு வந்தோம். ஆனால் அது சமயம் இது போன்ற பணிக்கு பயந்து யாரும் வரவில்லை.

அப்போது எமது தந்தையைப் பெற்ற அம்மாவிற்கு அதாவது எம்முடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டது. உறவினர்கள் சிலர் அவரைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போய்விட்டார்கள்.

பாட்டிக்கு காலரா நோய் வந்துவிட்டது… அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள் என்று யாம் கேள்விப்பட்டதும் எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்படத் தொடங்கியது.

காலராவில் இறந்த 30 பிணங்களைத் தூக்கிப் போட்டோம்… அப்பொழுது எமக்கு ஒன்றும் ஆகவில்லை. எம்முடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்து விட்டதே…! என்று எமது உணர்வில் சிறிது இடம் கொடுத்தவுடனே எமக்கும் காலரா வந்துவிட்டது.

குருநாதர் இந்தச் சம்பவத்தைப் பின்னாட்களில் எமக்கு நினைவுபடுத்தி…
1.நீ தைரியத்துடனும் வலிமையுடனும் காலராவில் இறந்தவர்களைத் தூக்கிக் கொண்டு போய்ப் போட்டாய்… உனக்கு ஒன்றும் ஆகவில்லை…!
2.ஆனால் உன்னுடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டது என்று எண்ணியவுடனே “உனக்கும் காலரா நோய் வந்துவிட்டது…”
3.மனிதரிடத்தில் உணர்வு என்ன வேகமாக வேலை செய்கின்றது என்று பார்த்தாயா…? என்று கேட்டார்.

ஆனால் காலராவால் தாக்கப்பட்ட “பாட்டியின் மீதான எண்ணம் வந்தபின் தான்…” எமக்கும் காலரா நோய் வந்தது என்று குருநாதர் சொன்ன பின் தான் யாம் தெரிந்து கொண்டோம்.

மதுரை சுப்பிரமணியபுரத்தில் ஒரு வாய்க்கால் இருக்கும். இப்பொழுது அந்த இடத்தில் மேம்பாலம் கட்டியிருக்கின்றார்கள். அந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதுமே யாம் அந்த வாய்க்காலுக்குச் சென்று விட்டோம்.

வாய்க்காலில் கால் கழுவி விட்டு வரலாம் என்று நினைத்தால், அது நடக்காத காரியமாக இருந்தது. ஏனென்றால் வயிற்றுப் போக்கு நிற்காமல் போய்க் கொண்டிருந்தது.

பிறகு ஒருவாறாகச் சமாளித்து ஹோட்டலுக்குச் சென்று “தயிர் சாதம் கொடுங்கள்…” என்று சொல்லித் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிட்டோம். மனதில் யாம் ஒரு பயில்வான் என்று எண்ணித் தயிர் சாதத்தை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் தயிர் சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு விட்டது. ஹோட்டலுக்குள்ளேயே நடந்து விட்டது, பிறகு மறுபடியும் வாய்க்காலுக்கு வந்து அமர்ந்து அலசிக் கொண்டிருந்தோம்.

ஒரு சந்தர்ப்பத்தில் எமக்குத் தைரியம் சிறிது குறைந்தது. ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “என்ன பண்ணிவிடும் பார்க்கலாம்…” என்று இருந்தோம்.

பசித்தால் இன்னும் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிடலாம் என்று எண்ணினோம். ஏனென்றால் தயிர் குளிர்ச்சி…! தயிர் சாதம் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று இருந்தோம்.

அதனால் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிட்டோம். ஆனால் சாப்பிட்ட சாதம் வயிற்றுப் போக்கால் முழுது முழுதாக வெளியே சென்றது.

எமது கண் முழியெல்லாம் உள்ளே சென்று விட்டது. சரி நாம் இந்தத் தண்ணீரிலேயே உள்ளே சென்று விடுவோம் போலிருக்கின்றது. பாட்டியையும் பார்க்க முடியாது போலிருக்கின்றது… என்று எண்ணினோம். நடந்த நிகழ்ச்சி இது.

காலரா வியாதி பரவியதால் ஊரை விட்டே நிறையப் பேர் ஓடிவிட்டனர். பண்டம் பாத்திரங்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு தாம் தப்ப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டனர்.

வாய்க்காலை ஒட்டி ஒரு பாலம் இருந்தது. அதில் போய் அமர்ந்து கொண்டோம். அப்பொழுது அந்தப் பாலத்தின் வழியாக வண்டி ஓட்டிக் கொண்டு ஒருவர் வந்தார்.

அவர் எம்மைப் பார்த்து… “என்னய்யா… இப்படி உட்கார்ந்திருக்கின்றாய்…?” என்று கேட்டார்.

காலராவில் இறந்தவர்களைத் தூக்கிப் போட்டு வந்தேன்… இப்பொழுது எனக்கே காலரா வியாதி வந்துவிட்டது…! என்று அவரிடம் கூறினோம்.

“அட.. நீ என் வண்டியில் ஏறி உட்கார்…” என்று கூறி எம்மை அவருடைய வண்டியின் பின் சீட்டில் அமரச் செய்து அவருடைய கரும்புக் காட்டிற்கு அழைத்துஅ சென்றார். கரும்பைப் பிழிந்து ஜூஸ் எடுத்துக் கொடுத்து “நன்றாக மூக்குப் பிடிக்கச் சாப்பிடு” என்று கூறினார்.

அவர் கொடுத்த கரும்புச் சாறைக் குடித்தபின் எமக்கிருந்த காலரா நோய், எங்கே போனதென்றே தெரியவில்லை. யாம் பூரண குணம் அடைந்தோம். காலராவிற்கு மருந்து கரும்புச் சாறு. இன்னும் கரும்புச் சாறு கொடுக்கச் சொல்லிக் குடித்து விட்டு அங்கிருந்து வந்தோம்.

எமது உடல்நிலை குணமானவுடனே… “சும்மா இருக்கவில்லை…” ஊர் முழுவதும் சுற்றி மக்களிடம் யாசகம் கேட்டுப் பெற்றுக் காசு சேர்த்துக் கரும்புச் சாற்றை வாங்கி காலராவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொடுத்தோம்.

ஏனென்றால் யாம் அப்பொழுது தேசிய இயக்கத்தில் இருந்ததால் பொது சேவையில் ஆர்வமுடன் ஈடுபட்டு “நீ குடி… நீ குடி…” என்று எல்லோருக்கும் கரும்புச் சாறு வாங்கிக் கொடுத்தோம்.

அதன் பின் காலரா நோயும் ஊரை விட்டே ஓடிப்போயிற்று.

இது ஒரு சந்தர்ப்பம்…! அப்பொழுது தான் சொன்னார் குருநாதர்.
1.“டேய்…! உன்னைக் காப்பாற்றுவதற்கு அப்பொழுது நான் தான்டா வண்டியில் வந்தேன்…”
2.நீ செத்துப் போவாய்… என்று எண்ணினாய், ஆனால் நீ சாகக் கூடாது என்று நான் வந்தேன்…! என்று கூறினார்.

எமக்கிருந்த காலரா நோய் நீங்கிய பின் ஆசனம் செய்வது பயில்வான் தனம் செய்வது என்பதெல்லாம் எம்மால் முடியாமல் போய்விட்டது.

யாம் சாதரணமாக மதுரையில் ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் வரை உடல் பயிற்சிக்காக ஓடுவோம். ஓடியபடியே திருப்பரங்குன்றத்திலிருந்து ஆண்டாள்புரம் வரை திரும்பி வருவோம்.

ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் 6 மைல் இருக்கும். அதன் பிறகு காலை 6 மணிக்கு மில்லிற்கு வேலைக்குப் போவோம்.

இது போன்று இருந்த யாம் காலரா நோய் தாக்கியவுடனே எமக்கும் காலரா நோய் வந்துவிட்டது.

பாட்டியை எண்ணினாய்… என்ன ஆனது உனக்கு…? என்று கேட்டார் குருநாதர்.

1.குருநாதர் சொன்ன பின் தான் உணர்வின் இயக்கத்தை யாம் அறிந்தோம். பிறகு தான் எமக்குத் தெரிந்தது.
2.குருநாதர் சொல்லவில்லை என்றால் எமக்கு ஒன்றும் தெரியாது.

இறந்தவர்களை எல்லாம் தைரியமாகத் தூக்கிக் கொண்டு போய்ப் போட்டாய். ஆனால் உன்னுடைய பாட்டிக்குக் காலரா நோய் தாக்கிவிட்டதே…! என்று ஏங்கினாய், உடனே இதன் உணர்வு உன்னிடத்தில் என்ன வேலை செய்தது…? என்று தெரிந்து கொண்டாயல்லவா…! என்று கேட்டார் குருநாதர்.

இது போன்ற உணர்வுகள் ஒவ்வொன்றையும் எமக்கு அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

பிரேக் அடித்தது போல் ஒரு பெண்ணின் உதிரப் போக்கை நிறுத்தினார் குருநாதர்

பிரேக் அடித்தது போல் ஒரு பெண்ணின் உதிரப் போக்கை நிறுத்தினார் குருநாதர்

 

ஒரு சமயம் தனது மனைவிக்கு இரத்தப் போக்கு போய்க் கொண்டிருக்கின்றது அதைக் குணப்படுத்த வேண்டும் என்று எம்மைத் தேடி ஒருவர் வந்தார். அது சமயம் எனக்கு மூல நோய் இருந்தது… உட்கார்ந்தோம் என்றால் கடு…கடு… என்று இருக்கும்.

நோய் பெண்மணிக்கு…! ஆனால் அந்தப் பெண்ணின் கணவர்தான் வந்திருந்தார். அவர் தனது மனைவிக்குத் தொடர்ந்து உதிரப் போக்கு போய்க் கொண்டிருக்கின்றது… ஆனால் டாக்டர்கள் இதனைக் குணப்படுத்த முடியாமல் கைவிட்டு விட்டார்கள்.

தனக்குக் கண்ணில்லாத குழந்தை ஒன்றும், மற்றும் ஐந்தாறு குழந்தைகள் இருப்பதாகவும்… இவர்களை எல்லாம் காப்பாற்ற வேண்டி இருக்கின்றது. ஆகவே நீங்கள் தான் எனது மனைவியைக் குணப்படுத்தித் தரவேண்டும்… “உங்கள் குருநாதரிடம் சொல்லி மருந்து தாருங்கள்…” என்றார்.

அப்பொழுது குருநாதர் எமக்குக் காட்சி கொடுத்து எம்மிடம் பேசிக் கொண்டிருந்தார். யாம் இதன் விவரங்களை குருநாதரிடம் கேட்கப்படும் பொழுது
1.முருகன் வருகின்றார்…! “ஆறாவது அறிவின் தன்மை பெற்று நீ இங்கே வா” என்றார்.
2.இந்த ஆறாவது அறிவைச் சரியாகப் பயன்படுத்தாதினால் உருவான நிலை என்ன…?
3.இவர்கள் சொன்ன குறை மேல் ஆசை வருகின்றது.

குழந்தைகள் சிரமப்படுகின்றார்கள் எனச் சொல்லும் பொழுது குருநாதர் காட்சி தருகின்றார். இப்பொழுது முருகனைக் காண்பித்து அதன் பின் பக்கமாகக் குருநாதர் காட்சியில் வந்து “சிரிக்கின்றார்…”

யாம் குருநாதரிடம் அவர்களுடைய வீட்டில் ஐந்தாறு குழந்தைகள் இருக்கின்றன. அவற்றில் குருட்டுக் குழந்தையும் இருக்கின்றது. நாளை அவர்கள் இறந்து போனால் அவர்களுடைய குழந்தைகள் தவிப்பார்களே…! அவர்கள் வருத்தமாகச் சொல்கிறார்கள்… நீங்கள் சிரிக்கின்றீர்கள்…! என்றோம்.

போய் ஓமப்பொடி வாங்கி வா…!” என்று குருநாதர் எம்மிடம் கோபமாகச் சொன்னார்.

எமக்குக் கோபம் வந்து விட்டது. சாமி அவர்கள் வேதனையாக இருக்கிறார்கள்… நீங்கள் ஓமப்பொடி வாங்கிக் கொண்டு வரச் சொல்கிறீர்கள்…!, என்றோம்.

எனக்குத் தெரியாது…! நீ போய் ஐயப்பனைக் கேட்டுக் கொள்…! என்றார். குருநாதர்

காட்சியில் ஐயப்பன் வந்தார். ஐயப்பனிடம் கேட்டால்… அவர் மௌனமாக இருக்கின்றார்.
1.“நீ குருவையே எதிர்த்துப் பேசி விட்டாய்…
2.இனி உன்னிடம் ஒன்றும் பேச மாட்டேன்…!” என்று ஐயப்பன் கூறினார்.

குருநாதரிடம் யாம் கேட்டோம்… ஐயப்பன் ஒன்றும் பேச மாட்டேன் என்கிறாரே…! என்றோம்.

அவர் எப்படிப் பேசுவார்…? என்றார் குருநாதர்.

பின்னே யாரிடம் கேட்பது…? என்றோம். யாம் குருவாகிய உங்களிடம் தானே கேட்க முடியும். யாம் என்ன தவறு செய்தோம்…? தேடி வந்தவர்கள் நலம் பெற வேண்டும் என்று தானே கேட்டோம்…! என உரைத்தோம்.

நீ ஐயப்பனையே கேள்…! என்று குருநாதர் கூறிவிட்டார்.

பாவம்… இந்தப் பெண்மணி இறந்ததென்றால் அவர்களுடைய குழந்தைகளெல்லாம் அனாதைகளாக நிற்கும். கண்ணில்லாத குழந்தையும் இருக்கின்றது, இவர்களை எல்லாம் பாதுகாக்க வேண்டுமல்லவா…? அந்தப் பெண்மணியைக் காப்பாற்றினோம் என்றால் அவர்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வார்கள். ஆனால் குருநாதரும் ஐயப்பனும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

அதன் பிறகு எமது மகள் மீராவைக் கூப்பிட்டோம். அப்பொழுது மீரா சிறு வயதுப் பெண். மீரா குருநாதரிடம் உரையாடினார்.

மீரா எம்மைப் பார்த்து…
1.நீங்கள் குருநாதரிடம் முறை தவறிக் கேட்டீர்கள்,
2.குருநாதரிடம் கோபமாகப் பேசினால் எப்படி…?
3.நோய் தீரவேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும்… அதை விட்டு விட்டு, குருநாதரை அதிகாரம் பண்ணிக் கேட்கின்றீர்கள்…! என்றது.

அதிகாரம் செய்து வேண்டுமானால் நீ எடுத்துக் கொண்டு போ…! என்று குருநாதர் மீராவுக்குக் காட்சி கொடுத்துக் கூறினார்.

அப்பொழுது நோயாளியின் கணவர் ஓமப்பொடியை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். அந்தப் பெண்மணியை ஓமப் பொடியைச் சாப்பிடச் சொல்…! என்று மீரா மூலம் குருநாதர் கூறினார்.

அது எப்படிக் குணமாகும்…? என்றோம் யாம்.
1.குருநாதர் தான் சொல்கிறார்,
2.ஆனால் யாம் அது எப்படி ஓமப்பொடி சாப்பிட்டுக் குணமடைய முடியும்…? என்று வாதிக்கின்றோம்.
3.(அதாவது மருந்து சாப்பிட்டால் தானே குணமாகும் என்ற நிலையில்)

இப்படி மறுபடியும் விதண்ட வாதம் செய்தவுடனே குருநாதர் மறுபடியும் மௌனமாகவே இருந்து விட்டார்.
1.நீயே போய்க் காப்பாற்றிக்கொள்… நீ குருவுக்கு மிஞ்சிய ஆளாக ஆகின்றாய்…! என்று கூறிவிட்டார்.
2.அதன் பிறகு நாங்கள் இருவருமே மௌனமாகி விட்டோம். இப்படி நான்கு மணி நேரம் ஆகிவிட்டது.

சாமி…! என் மனைவிக்கு உடலிலிருந்து இரத்தம் முழுவதும் போய்விட்டது. டாக்டர்களும் கைவிரித்து விட்டார்கள். இன்றோ… நாளையோ…! என்று என் மணைவியின் நிலை இருக்கின்றது. நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்று நம்பி வந்தால் குருநாதரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றீர்களே…! என்றார் எம்மைத் தேடி வந்தவர்.

குருநாதரிடம்… நோய் நீக்கும் வழியைக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம், அவர் கொஞ்சம் கூடக் கவனிக்க மாட்டேன் என்கிறார்…! என்றோம் யாம்.
1.இது எம்முடைய புத்திசாலித்தனம்.
2.அன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் என்னுடைய உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? என்பதைக் காண்பித்தார் குருநாதர்.

இதனைத் தொடர்ந்து… பக்கத்து வீட்டுக்காரர் ஒரு தேவர் அவர் எம்மை “மாப்பிள்ளை… மாப்பிள்ளை…!” என்று அழைத்துக் கொண்டே வந்தார்.

என்னப்பா இது…? நல்லய்ய நாயக்கர் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்று நீ ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கின்றாய். என்னென்னவோ மந்திர வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றாய், இதெல்லாம் உனக்கு எதற்கு…? என்று எம்மிடம் கேட்டார்.

நான் என்ன செய்ய வேண்டும்…? என்று அவரிடம் கேட்டோம்.

நீ இது போன்ற மந்திர தந்திர வேலைகளைச் செய்யக் கூடாது. நீ மறுபடியும் வீட்டிற்கு வந்து வெளி வேலைகளுக்குச் சென்று விறகுக் கடையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து அவர்…
1.நீ பைத்தியத்துடன் சேர்ந்து சுற்றி
2.இதையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றாய்…! என்று சத்தம் போட்டார்.

அப்பொழுது மீரா எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. எனது மகள் மீரா அவரைப் பார்த்துக் “கோபிக்காதீர்கள்…! குருநாதர் உங்களுக்கு லட்டு கொடுக்கின்றார்…” என்று சொன்னது.

அதற்கு அவர்… “என்ன பிள்ளை…! எங்கே கொடுக்கிறார்…?” என்று கேட்டார்.

முகர்ந்து பாருங்கள்… வாசனை தெரியும்…! என்றது மீரா.

பக்கத்து வீட்டுக்காரர்… எனக்கு ஒரு வாசனையும் தெரியாது ஒரு கத்திரிக்காயும் தெரியாது, இதுவெல்லாம் யாரை ஏமாற்றுகிற வேலை…? என்று கூறினார்.

இல்லை…! மறுபடியும் முகர்ந்து பாருங்கள்… லட்டு வாசனை தெரியும்” என்றது மீரா.

எனக்கு மூக்கடைத்து விட்டது வாசனை தெரியவில்லை…! என்று கூறினார் அவர்.

தாத்தா…! குருநாதர் இப்பொழுது ஜிலேபி கொடுக்கின்றார்… கொய்யாப் பழம் கொடுக்கிறார்… என்று மீரா சொல்கிறது.

எதுவும் எனக்கு தெரியாது…! யாரை ஏமாற்றுகிறீர்கள்…? கொய்யாப் பழத்தைக் கொண்டு வரச் சொல்… என் கையில் கொடுக்கச் சொல்…! என்றார் தேவர்.

நீங்கள் முதலில் வாசனையைப் பாருங்கள்… பிறகு கொடுக்கிறேன் என்றார் குருநாதர். இப்படி… இருவருக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது.

ஊரை எமாற்றி எங்களைப் பைத்தியக்காரனாக்க விரும்புகிறார் உனது குருநாதர்…! என்று பேசினார் பக்கத்து வீட்டுக்காரர்.

மூக்கடைத்து விட்டது வாசனை தெரியவில்லை என்றுதானே கூறினீர்கள்… இப்பொழுது நிஜமாகவே வாசனை தெரியும் பாருங்கள் என்று மீரா கூறியது.

அந்தச் சமயத்தில்… நோயாளிப் பெண்மணியின் கணவர் “என்னங்க நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றீர்கள்… எனக்கு ஒரு நல்வழியைக் காண்பியுங்கள்…!” என்று கூறினார்.

அது தான் ஏற்கனவே சொல்லி விட்டேனே “ஓமப்பொடியைக் கொடுங்கள் குணமாகும்…!” என்று கோபமாக மீரா மூலம் கூறினார் குருநாதர்.

ஓமப்பொடியைக் கொடுத்தால் நோய் குணமாகுமா…! அது எப்படி…? என்று நோயாளியின் கணவரும் கேட்டார்.

இது நடந்த நிகழ்ச்சி. குருநாதர் எமக்கு ஒவ்வொரு அனுபவத்தையும் நேரடியாகக் கொடுத்தார்.

பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து “முகர்ந்து பாருங்கள் வாசனை தெரியும்” என்று கூறினால்… எனக்கு ஒரு வாசனையும் தெரியாது மூக்கடைத்து விட்டது என்று கூறினால்… திரும்பத் திரும்ப, இதையே கூறுகின்றாயே…! என்று கேட்டார்.

குருநாதர் சிரித்துக் கொண்டே… இப்பொழுது “அழுத்தமாக உறிஞ்சிப் பாருங்கள்…” என்றார்.

பக்கத்து வீட்டுக்காரரும் அது போன்று செய்யவே “நச்… நச்…” என்று பெரிய தும்மலாகத் தும்மினார்.

அவர் வெற்றிலையும் புகையிலையும் எப்பொழுதும் வாயில் போட்டு மென்று கொண்டிருப்பவர். இந்தத் தும்மலினால் அவர் வாயில் இருந்த வெற்றிலை அவருடைய வேஷ்டி சட்டையில் எல்லாம் விழுந்து கறை படிந்து விட்டது. எம் மீதும் வெற்றிலைக் கறையாகி விட்டது.

இப்படிச் சிறிது நேரம் தும்மிக் கொண்டே இருந்தார். பக்கத்து வீட்டுக்காரரும் மீராவைப் பார்த்து… ஏய் பிள்ளை…! தும்மலை நிறுத்தச் செய்கின்றாயா இல்லையா…? என்று கேட்டார்.

எனக்கென்ன தெரியும்…? குருநாதரிடம் கேளுங்கள்…! முகர்ந்து பார்க்கச் சொன்னார். வாசனை இல்லை என்று சொன்னீர்கள்… இப்பொழுது வாசனை தெரிந்ததல்லவா…! என்றாள் மீரா.

“இது என்னவோ பெரிய வேலையாக இருக்கின்றது….”
1.உங்கள் குருநாதரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்…
2.தும்மலை நிறுத்தச் செய்…! என்று கேட்டுக் கொண்டார் தேவர்.

அது சமயம் ஓமப்பொடி வாங்கி வந்தவர் இது என்ன…? எல்லோரையும் ஏமாற்றுவது போன்று இருக்கின்றது. உங்களுடைய குருநாதர் பைத்தியக்காரராக இருந்தார். உங்களுடைய வாழ்க்கையும் பைத்தியக்காரர் போன்று இருக்கின்றது. நானும் போயும் போயும் உங்களைத் தேடி வந்தேன்…! என்று கூறினார்.

தேவரும்… என்னால் தும்ம முடியவில்லை…! மாப்பிள்ளை…! உன் குருநாதரிடம் சொல்லி என்னுடைய தும்மலை நிறுத்து…! என்று எம்மிடம் கூறினார்.

யாம் அவரிடம் எமக்கென்ன தெரியும்…? நீங்களே எமது குருநாதரைக் கேட்டுக் கொள்ளுங்கள்…! என்றோம்.

இதற்கு எமது மகள் மீரா… இனிமேல் இது போன்று சொல்ல மாட்டேன் என்று சொல்லுங்கள்…! என்றது.

இனிமேல் அப்படிச் சொல்வேனா…? உன் குருநாதரிடம் சொல்லி என்னுடைய தும்மலை நிறுத்து…! என்றார்.

முக்கால் அல்லது ஒரு மணி நேரம் தும்மிக் கொண்டிருந்தார். எனக்கு வயிற்று வலி ஆகின்றது… உடலெல்லாம் வலிக்கின்றது… என்னை விட்டுவிடு…! என்றார்.

மீரா… சரி… தும்மல் நின்று போகும், குருநாதர் இன்னொரு பொருள் தருகின்றார் வாசனையைப் பாருங்கள் என்றது.

கொடு பிள்ளை… கொடு என்றார் தேவர். உடனே தும்மலும் நின்றது.

தும்மல் நின்றதைப் பார்த்துக் கொண்டிருந்த ஓமப்பொடியை வாங்கி வந்தவர் எம்மிடம்…
1.“நைனா…! ஓமப்பொடி கொடுத்தால் குணமாகும் போலத்தான் தெரிகின்றது…
2.“நான் தான் பைத்தியக்காரன்…!” என்றார்.

யாம் ஓமப்பொடியைக் கொண்டு போய் உனது மனைவிக்கு கொடு” என்றோம். கொண்டு போய்க் கொடுத்தவுடனே இரண்டு மூன்று மாதமாக இருந்து கொண்டிருந்த உதிரப் போக்கு
1.“பிரேக் அடித்த்து போல் நின்று போனது…”
2.குணமானவுடனே ஓடி வந்து எங்களிடம் சொன்னார்.

அதன் பிறகு குருநாதர்… எம்மிடம் சொன்னார். ஐயப்பனிடம் எப்படிக் கேட்பது…? நீ அவரையே மிரட்டுகிறாய்… முருகனை மிரட்டுகிறாய்…! அதன் பிறகு நான் என்ன சொல்ல வேண்டியிருக்கின்றது…? என்றார்.

1.நீ எப்படி இருக்க வேண்டும்…?
2.குருநாதரிடம் எப்படிப் பேச வேண்டும்…?
3.நீ என்னென்ன செய்ய வேண்டும்…? என்று எமது மகள் மீராவிற்கு குருநாதர் காட்சி கொடுத்து… மீரா மூலம் எமக்கு உபதேசம் கொடுத்தார்.

இவ்வாறு அனுபவபூர்வமாகத்தான் எமக்குப் பல நிலைகளை உணர்த்தி
1.நாம் எவ்வாறு மெய் வழியில்
2.குரு வழியில் செல்வது…? என்று உபதேசித்தார்.

இதன் வழியில் குருநாதர் காட்டிய மெய் உணர்வுகளைக் கடைப்பிடித்து வருபவர்கள் அனைவரும் அவர்களது வாழ்க்கையில் இருள் நீங்கி மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று நோய் நீங்கி நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திடவும் என்றென்றும் அந்த மகரிஷிகள் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திடவும் எமது அருளாசிகள்.

சினிமா படம் மூலம் உணர்த்தினார் குருநாதர்

சினிமா படம் மூலம் உணர்த்தினார் குருநாதர்

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும்
1.சந்தர்ப்பங்கள் அவர்களை எந்தெந்த நேரத்தில் எது எது இயக்குகின்றது…? என்பதையும்
2.அவரவர் வாழ எதைச் செய்கின்றனர்…? என்பதையும் நமது குருநாதர் எமக்குத் தினம் தினம் அனுபவப்பூர்வமாக உணர்த்தினார்.

ஒரு உடலில் ஒரு உணர்வின் தன்மை எப்படிப் பெருகுகின்றது…? பெருகியபின் அவ்வுடல் என்ன நிலையாகின்றது…? என்பதையெல்லாம் எமக்குத் தெளிவாக உபதேசித்து அருளினார்.

குருநாதர் எமக்கு எழுத்து வடிவில் எதையும் கற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் அருள் வழியில் எமக்குக் கற்றுக் கொடுத்தார்.
1.பார்த்தால் சின்ன விஷயமாகத் தோன்றும்.
2.ஆனால் அதனுள் விஷயம் ஏராளமாக இருக்கும்.

எமது சொந்தக்காரர்கள் எல்லாம் எம்மைப் பார்த்துப் பைத்தியத்துடன் சேர்ந்து அலைந்து கொண்டிருக்கின்றேன் என்று எம்மைத் திட்டுவதற்குதான் வந்தார்களே தவிர “குருநாதருக்கும் எமக்கும் இடையே உள்ள உண்மை நிலை என்ன…?” என்பதை அறிந்து கொள்ள முன் வரவில்லை.

நண்பர்களாக இருந்தவர்களும் எம்மைப் பைத்தியத்துடன் சேர்ந்து பைத்தியமாகி விட்டார் என்றுதான் பேசினார்கள். ஏன்…! எமது வீட்டில் சாமி அம்மாவும் அப்படித்தான் பேசினார்கள். வீட்டில் இருந்த மாமா அத்தை எமது குழந்தைகள் என்று அனைவரும் எம்மை அப்படித்தான் நினைத்தார்கள்.

அருள் உணர்வின் தன்மையை சாமி அம்மாவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டார்கள். ஏனென்றால் நாங்கள் வைத்திருக்கும் விறகுக் கடைக்குக் குருநாதர் வந்து ஹாயாகப் படுத்துக் கொள்வார்.

சாமி அம்மாவிடம்… இவர்களைப் பார் அவர்களைப் பார் என்று தனது உள்ளங்கையைக் காண்பிப்பார். இப்படியெல்லாம் பல நிலைகளைச் செய்து உலகம் எப்படி இருக்கிறது…? என்று உணர்த்தினார் குருநாதர்.

பிறகு… சினிமாத் தியேட்டர்களில் என்ன படங்கள் ஓடுகின்றன…? என்று குருநாதர் கேட்பார். சினிமாத் தியேட்டர்களில் ஓடும் படங்களைச் சொன்னால் எந்தச் சினிமாப் படம் பார்க்க விரும்புகின்றாய்…? அதை இங்கேயே பார்க்கலாம்…! என்று கூறுவார்.

அது எப்படித் தியேட்டரில் ஓடும் சினிமாப் படத்தை இங்கிருந்து பார்க்க முடியும்…? என்று யாம் கேட்போம்.

இப்பொழுது பார்…! என்று கூறுவார். சினிமாப் படத்தை அப்படியே நாங்கள் நின்ற இடத்தில் இருந்தே பார்க்க முடிந்தது. எமது மகள் மீராவிடம் தியேட்டரில் என்ன படம் ஓடுகின்றது…? என்று கேட்பார் குருநாதர். மீராவிடம் கேட்டு மீரா விரும்பிய படத்தை அங்கே காண்பிப்பார்.

யாம் குருநாதர் எமக்குக் கொடுத்த உணர்வுகளை வரிசைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி எந்தத் தியேட்டரில் என்ன படம் ஓடுகின்றது…? என்று குழந்தைகளிடம் கேட்டு அதைப் பாருங்கள் என்று கூறி “யாமும் மற்றவர்களுக்குச் சினிமாப் படம் காண்பிக்க ஆரம்பித்தோம்…”

இதனால் எம்மைப் பார்த்தால் போதும், குழந்தைகள் கூட்டம் கூடிவிடும். நைனா… நைனா…. என்று குழந்தைகள் எம்மைச் சூழ்ந்து கொள்வார்கள். இந்தந்தச் சினிமாப் படங்களைக் காண்பியுங்கள் என்று கேட்பார்கள். அவர்கள் கேட்ட சினிமாவைக் காண்பித்தால் உடனே குழந்தைகளுக்குக் குஷியாகும்.

அதன் பிறகு குருநாதர் எம்மைத் திட்டுவார். உன்னைச் சினிமா பார்க்கச் சொன்னேனா…? என்று கேட்டார்.
1.ஒவ்வொருவரும், சினிமாவில் நடிப்பதைப் போன்று வாழ்க்கையில் எப்படி நடிக்கின்றார்கள்…?
2.இதனின் உணர்வு எப்படி வருகின்றது…?
3.ஒருவருக்கு நடிப்பு எப்படி வருகின்றது…?
4.ஒரு உணர்வை நுகர்ந்தபின் எப்படி நடிக்கின்றார்கள்…?
5.நுகர்ந்த உணர்வின் உணர்ச்சிகள் ஒருவரை எப்படி ஆட்டிப் படைக்கின்றது…? என்று
6.அதைத்தான் உன்னைப் பார்க்கச் சொன்னேன்…! என்றார் குருநாதர்.

ஒருவருடைய உணர்வுக்குத் தக்க அவருடைய வாழ்க்கையில் வீட்டில் ஒருவருடன் சண்டைக்குச் செல்கின்றார். ஒரு பக்கம் அரவணைக்கின்றார் மறு பக்கம் வெறுக்கின்றார்… இத்தகைய உணர்வுகளைச் சுவாசிக்கின்றார்.

அதனின் உணர்வுகள் அவருக்குள் எப்படி அங்கே இயங்குகின்றது…? என்று உபதேசித்தார்.

நீ குழந்தைகளுக்குச் சினிமாப் படம் காண்பிக்கின்றாய். அதனால் குழந்தைகள் சந்தோஷப்படுகின்றன. ஆனால் பெரியவர்களிடம் சொன்னால், அவர்கள் எதற்கு ஆசைப்படுகிறார்கள்…?

ஏதாவது, புதையல் கிடைக்குமா…? புதையல் இருக்கும் இடம் தெரியுமா…? என்று கேட்டு வருகின்றார்கள். புதையல் கிடைத்தால் நான் நன்றாக ஆகிவிடுவேன்… குபேரனாக வாழலாம் என்பது பெரியவர்களுடைய ஆசை.

1.ஆனால் அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் இருளைப் போக்க வேண்டும் என்ற நிலைக்குத்தான் அருள் ஆற்றலை உனக்குக் கொடுத்தேன்.
2.நீ மற்றவர்களுடைய ஆசைகளைப் பெருக்கவா போகின்றாய்…? என்று கேட்டார் குருநாதர்.

ஆகையினால் எந்த ஆசையினைப் பெருக்க வேண்டும்…? அருளை ஆசைபட்டால் இருளைப் போக்கும். உடலின் ஆசையை வளர்த்தால் இருள் சூழும். ஆக
1.உயிர் ஆசை
2.உடல் ஆசை என்பதற்கு விளக்கம் கொடுத்தார் குருநாதர்.

ஏனென்றால்… விஞ்ஞான அறிவில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்ற நிலை வரப்படும் பொழுது கம்ப்யூடர் போன்ற சாதனங்களை உருவாக்குகின்றனர்.

கெமிக்கல் கலந்த நிலைகளில் நாம் எப்படி
1.“சிக்கி முக்கி” கல்லைத் தட்டுகின்ற பொழுது அதில் உணர்வின் அதிர்வும் ஒளியும் வருவதைப் போன்று
2.கெமிக்கல் கலந்த பொருள்களில் அதிர்வைக் கொடுத்து உணர்வின் ரூபத்தை விஞ்ஞான அறிவால் காட்டுகின்றனர்.

நாம் கோபம் என்ற நிலையை எடுத்துக் கொண்டபின் கோபத்தின் உணர்வுகள் எலெக்ட்ரானிக் கோப உணர்வின் உணர்ச்சிகள் அழுத்தங்கள் வரப்படும் பொழுது நமது கண் எப்படிச் சிவக்கின்றது…? நரம்புகள் எப்படி முறுக்குகின்றது…? எதன் வழி செயல்படுகின்றது…? என்று குருநாதர் எமக்கு உணர்த்தினார்.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்ற நிலையில் ஒரு பொருளுடன் ஒரு பொருள் கலக்கப்படும் பொழுது அதனின் கலவையின் நிலைகள் எப்படிச் செயல்படுகின்றன…? செடி கொடிகள் எப்படி வளர்கின்றன…? எப்படி ரூபம் மாற்றமடைகின்றன…? என்பதையெல்லாம் எமக்கு உணர்த்தினார்.

இப்படி…
1.எங்களுக்குள் நடைபெறும் உணர்வுப் பரிமாற்றங்கள் வேறு யாருக்கும் தெரியாது.
2.அனுபவரீதியாக ஒவ்வொன்றையும் சினிமாப் படம் போன்று காண்பித்தார்.
3.இந்த உண்மையின் இயக்கத்தை நமது அகத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலைகளில்
4.குருநாதர் எமக்கு உபதேசித்த அருள் வழி கொண்டுதான் இப்பொழுது யாம் உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம்.

வித்தையைக் காண்பிக்கின்றேன் என்றார் குருநாதர்

வித்தையைக் காண்பிக்கின்றேன் என்றார் குருநாதர்

 

ஒரு சமயம் என் நண்பர் பாப்பம்பட்டி இராமசாமி நாயுடுவின் கரும்புத் தோட்டத்தில் யாமும் நமது குருநாதர் நாங்கள் இரண்டு பேரும் இருந்து கொண்டிருக்கின்றோம்.

1“நான் வித்தையைக் காண்பிக்கிறேன்டா… வித்தையைக் காண்பிக்கிறேன்டா…!” என்று சொல்லி விட்டுக் குருநாதர் என்ன செய்தார்…?

கரும்புச் சக்கை சுற்றி எல்லாப் பக்கமும் கிடக்கின்றது. கரும்பு ஆலை இயங்கி கொண்டிருக்கின்றது. கரும்பு ஆலையில் பாகு சரியாக வரவில்லை

கரும்பு ஆலைக்குள் போனவுடன் சாறை எடுத்துக் குடிடா…! என்றார். குடித்தேன்… அந்தப் பாகு சரியாக வரவில்லை என்று சொல்லி எம்மை அழைத்துச் சென்றார்கள்.

குருநாதர் நானும் வருகிறேன் என்றார்…! கூட்டிக் கொண்டு சென்றோம்.

உள்ளே சென்றவுடன் அங்கே மிஷினை நிறுத்தி விட்டார்கள். வெல்லம் எதுவுமே சரியாக வரவில்லை என்று சொன்னார்கள்.

குருநாதர்… இரண்டு பேரும் போகலாம் என்றார். போனோம்…!

போனவுடன் மிஷினை ஓட்டுடா என்றார் என்னிடம்.

ஆயிலும் இல்லை ஒன்றும் இல்லை… மிஷினை ஓட்டச் சொன்னால் எப்படி ஓட்ட முடியும்…? என்றேன்.

ஓட்டுடா என்கிறேன்… சக்தியை வைத்துக் கொண்டிருக்கின்றான்… திருட்டுப் பயல் ஓட்டுடா…! என்று மீண்டும் எமது குருநாதர் சொன்னார். எல்லாமே வைத்துக் கொண்டிருக்கிறாய்… சுவிட்சைப் போட்டு வைத்திருக்கிறாய்… உதை என்கிறார்.

எனக்கு ஒன்றும் தெரியாது சாமி…! என்கிறேன்.

1.இவன் என்னென்னமோ சொல்கிறான்… இவன் என்னமோ பண்ணி வைத்து விட்டான்.
2.இவன் தான் செய்து வைத்திருக்கிறான்…! என்று திட்டிவிட்டு “என்னென்னமோ பண்ணினார்…”
3.கரும்புச் சாறும் வந்தது… கரும்புச் சாறு வந்தபின், முதல் தடவை வெல்லம் நன்றாக வந்தது.

அடுத்து என்னை இழுத்துக் கொண்டு போனார் குருநாதர்.

இராமசாமி நாயுடுவுக்கு எல்லாம் தெரியும். இராத்திரி பனிரெண்டு மணிக்கு நான் எடுத்துக் கொண்ட துணிமணிகளையெல்லாம் குருநாதர் ஒரு பையில் எடுத்து வைத்து விட்டார். இராத்திரி கை கால் வராமல் முடங்கிக் கொண்டு அவர் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்.

எங்களைச் சுற்றிக் கரும்புக் காடு. சோகைகள் நிறைய இருந்தது. தீயை வைத்துவிட்டார் குருநாதர். இரண்டு பேரும்தான் உள்ளே இருக்கிறோம். எல்லோரும் வெளியிலே இருக்கிறார்கள். தீ சுற்றி எரிந்தால் கரும்புக் காடு எல்லாமே எரிந்துவிடும்.

“ஐய்யயோ…! இவன் தீயை வைத்து விட்டான் தீயை வைத்து விட்டான்” என்று என் பெயரைச் சொல்லி சத்தம் போடுகிறார். என்னைக் காப்பாற்றுங்கள்,. என்னைக் காப்பாற்றுங்கள்… என்னை நெருப்புக்குள் போட்டு வாட்டுகிறான் பாவிப்பயல்…! என்று சத்தம் போடுகிறார். கை கால்களை இழுத்துக் கொண்டே, சத்தம் போடுகிறார்.

மற்றவர்கள் எல்லோரும் சுற்றி நின்று, பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எங்கும் போக முடியவில்லை. என் வேஷ்டியிலும் தீ பிடித்துவிட்டது. அணைப்பதற்குத் தண்ணீர் கூட அந்த இடத்தில் இல்லை.

சாமி… வேஷ்டி எல்லாம் தீ பிடித்துவிட்டது என்றேன்.

ஏன்டா…? தீயை நீ வைத்துவிட்டு என்னை ஏன்டா சொல்கிறாய்…? என்கிறார் குருநாதர். இப்படியெல்லாம் அவஸ்தைப்படுத்தினார்.

தீ சுற்றி சூழ்ந்துவிட்டது. இன்னும் ஒரு நிமிடம் தான் இருக்கிறது…! அந்த அளவில் இருக்கப்படும்போது,
1.இந்தத் தீ எப்படிப் பரவுகிறது…?
2.இந்தத் “தீயிற்கு” உண்டான ஆற்றல் என்ன…?

அவனுடைய ஆசை எப்படிக் கரும்புச் சாறுக்காக வேண்டி இங்கே ஆலையை வைத்தான்…? என்று இத்தனை உணர்வை அங்கே காட்டுகின்றார்.

அவன் பணத்திற்காக வேண்டி ஆசைப்பட்டு வைத்தான். நீ சக்தி பெற வேண்டும் என்ற நிலைகளில் இங்கே வந்து கொண்டிருக்கின்றாய். நெருப்பு வந்து சூழ்ந்து கொண்டிருக்கின்றது… நீ எங்கே தப்பப் போகின்றாய்…?

1.நீ ஆசையின் நிலைகளில் இருந்து கொண்டிருக்கின்றாய்.
2.அவன் ஆசையில் அங்கே இருக்கிறான்
3.ஆனால் அவன் வெளியே இருக்கிறான்… நீ இங்கே இருக்கின்றாய்.

அந்த இடத்தில் உபதேசம் எப்படிக் கொடுக்கிறார்…? பாருங்கள்.

எல்லாவற்றையும் போட்டு நசுக்கித் தீயை அணைக்க முற்படுகிறார்கள். எல்லாம் நசுக்கினாலும்… சுற்றி அனல் தாங்க முடியவில்லை, சோகை முழுவதும் அனல் பிடித்திருக்கிறது. இவ்வளவு அவஸ்தையில் இருந்து கொண்டிருக்கிறேன்.

அவன் ஆசையில் வந்தான். கரும்புச் சாறு சரியாக இருக்கிறது என்றான்… உன்னைப் போற்றினான்… நீயும் எல்லாம் பண்ணினாய். இப்பொழுது தீ பிடித்துக் கொண்டது.

இப்பொழுது என்னை யாரடா காப்பாற்றப் போகிறார்கள்…? சக்தி என்ன ஆனது…? என்று கேட்கிறார்.

தீ பிடிக்கிறது எல்லாம் பண்ணிவிட்டு என்னமோ மந்திர வேலை பண்ணிவிட்டான். என்னைத் தீயை வைத்துக் கொல்கிறான்… என்னைக் காப்பாற்றுங்கள்…! என்றார் குருநாதர்.

அவர்கள் அங்கே அருகில் நெருங்க முடியவில்லை. “என் கரும்புக் காடெல்லாம் போகிறதே…!” இங்கே தண்ணீர் ஊற்று… அங்கே தண்ணீர் ஊற்று..,! என்கிறார்கள்.

மோட்டர் பம்பைப் போடு என்றாலும் கூட அங்கே சுவிட்ச் தண்ணீராகி விட்டதால் அந்த மோட்டாரே பாயிலாகி போய்விடுவது போல இருக்கிறது. இந்த அளவுக்கு ஆபத்தான நிலைகளில் சிக்க வைத்துவிட்டு நம்மைப் பார்க்கிறார்.

அப்படியெல்லாம் சிக்க வைத்துத் தான் எனக்கு உண்மைகளை உணர்த்தினார்.
1.அவ்வாறு உணர்ந்ததை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
2.கஷ்டத்தைப் போக்குவதற்குக் கஷ்டம் வரும்போது அதை நிவர்த்தி செய்ய ஆத்ம சுத்தி செய்யச் சொன்னால் “நேரம் இல்லை” என்கிறீர்கள்.

ஆனால் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தைப் புகுத்தி எனக்கு அப்படியே மரணமடையும் நிலை வந்து விட்டது. அப்படி மரணமடையும் நிலைகளில்தான் விளக்கமும் கொடுக்கிறார்.

அவருடைய ஆசையில் உன்னைக் கூட்டிக் கொண்டு வந்தாலும் அந்த ஆசையிலிருந்து அவரகள் தப்பிப் போக முடிந்தது. அவர்கள் அங்கே இருக்கிறார்கள்.
1.ஆனால் நீ எல்லாச் சக்திகளைப் பெற்றாலும், புகழுக்காக வேண்டி இதைச் செய்தாய்.
2.நீ இதற்குள் மாட்டிக் கொண்டிருக்கும் போது உன் புகழ் எங்கே போகப் போகிறது…?
3.இவ்வளவு பெரிய சக்தியை வைத்துக் கொண்டு நீ என்ன பண்ணப் போகின்றாய்…?
4.என்னையும் இழுத்துக் கொண்டு சிக்க வைத்துவிட்டாய்…! நான் என்னடா பண்ணட்டும்…? என்கிறார் குருநாதர்.

கொஞ்ச நேரம் கழித்து… ஹா.. ஹா. என்று சிரித்துவிட்டு இந்த உணர்வின் நிலைகள் அத்தனையுமே மனிதனாகப் போகும்போது என்னவாகும்…? என்பதை உணர்த்தினார்.

மரணமாகக் கூடிய தருணம்,.. வேஷ்டி தீ பிடித்து எரிகிறது. வேறு வழியே இல்லை…! அப்பொழுது நெருப்புக்குள் இருந்து அந்த உணர்வின் அலையை எடுத்துக் காட்டுகிறார்.
1.நீ மரணமடையப் போகும் பொழுது எந்த நிலை…?
2.உன் உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் அலைகள் என்னென்ன செய்கிறது…?
3.அணுக்களின் செயலும்… உன் ஆசையின் நிலைகளும்… உன் உடலுக்குள் வளர்ந்த முந்தைய அணுவின் நிலை எப்படி…?
4.அணுவின் ஆற்றலின் தன்மையைக் காட்டுகின்றார்.

ஆனால்… என் உடலில் தீ பிடிக்க வைத்து அந்த மாதிரிச் செய்தார். இதையெல்லாம் முதல் புத்தகத்தில் யாம் கொடுக்கவில்லை. கொடுத்தால்… பயந்து விடுவீர்கள். இப்படியும் இருக்கிறதா…? என்று.

இன்று உலகத்தின் நிலைகளில் விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்டது. அவனுடைய ஆசையில் தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய உணர்வுகளிலேயே… அவன் அதற்குள்ளேயே போய் சிக்கிக் கொண்டான்.

ஏனென்றால் விஞ்ஞானிகள் இயற்கையின் நிலைகளில் இதனுடைய அலைகளை வைத்து ஒரு நொடிக்குள் அனைவரையும் மாய்க்க வந்துவிட்டார்கள்.

மனிதன் சூரியனிலிருந்து தோன்றிய உணர்வின் அணு கொண்டு வளர்ந்தான். இதையெல்லாம் பின்னாட்களில் விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள். ஒவ்வொரு நிமிடத்திலும் யாம் காலத்தை விரயம் செய்யவில்லை.

உங்கள் ஒவ்வொருவர் உயிரையும் ஈசனாக மதித்து அந்த உடலுக்குள் இருக்கக்கூடிய உயிரை மதித்து
1.அந்த அணுவின் இயக்கங்களுக்குள் உங்களுடன் இரவும் பகலும் தொடர்பு கொண்டு
2.அருள் ஞானிகள் உணர்வைப் பதிவு செய்கின்றோம்.
3.அந்த ஞானிகளின் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்று
4.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் சதா ஜெபித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் எவ்வளவு சிரமப்பட்டு விஞ்ஞான அழிவிலிருந்து மீளுவவதற்கு இந்த உணர்வைப் பாய்ச்சச் செய்து உங்களுக்குள் ஆற்றல் மிக்க சக்தியைப் பெருக்கினாலும் “இதைச் சிந்திப்பார் யாரும் இல்லை…”

இவ்வளவு பெரிய ஆற்றல்களையும் நமது குருநாதர் எப்பொழுதும் இயக்கிக் கொண்டிருக்கின்றார்.
1.குருநாதர் இட்ட கட்டளைப்படி ஒவ்வொருவரது உடலிலும் இதைப் பதிவு செய்கின்றோம்.
2.விஞ்ஞான அறிவால் உலகையே கரைக்கும் நிலைகள் வரும்போது அதை மாற்றும் நிலை வேண்டும்.

அதற்கு… துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஒரு பத்து நிமிடமாவது எடுத்துக் கொள்ளூங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தனக்குள் கூட்டியபின் மகரிஷிகளின் ஒளியை நீங்கள் பெறுங்கள்.