நஞ்சை முறிக்கும் சக்தி

நஞ்சை முறிக்கும் சக்தி

 

ஒரு தேள் வெள்ளாட்டைத் தீண்டி விட்டால் விஷம் பாய்ந்து அந்த ஆடு மடிகின்றது. ஆனால் அதே சமயத்தில் கோழி பட்சி மற்ற பறவைகள் இதை உணவாக உட்கொள்கின்றது. அவைகள் பயப்படுவதில்லை… அதற்கு வீரிய உணர்வுகள் வருகின்றது.

உதாரணமாக கருடனை எடுத்துக் கொண்டால் அதுவும் விஷத்தை ஒடுக்கும் நிலைகள் பெற்றது… அதை ஒடுக்கி விடுகின்றது தேள் கொடுக்கு மிகவும் விஷம் கொண்டது. தேள் இறந்தாலும் அந்தக் கொடுக்கை வைத்து லேசாகக் குத்தினாலே அதில் உள்ள விஷங்கள் நமக்குள் கடுகடுப்பை ஊட்டிவிடும்.

ஆனால் கோழி மற்ற பறவைகள் அதை உணவாக உட்கொள்கின்றது அதனின் உடலில் இருக்கக்கூடிய அமிலம் இந்த விஷத்தைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது… வீரிய நிலைகளும் பெறுகின்றது.

கருடனைப் பாம்பு சீறித் தாக்கினால் அதனுடைய விஷம் அதற்குள் ஏறுவதில்லை. கருடன் அதை தாங்கிக் கொள்கின்றது. அது கூட்டைக் கட்டிக் குஞ்சுகளைப் பொரிக்கின்றது.
1.இரும்புக் கம்பிகள் கொண்டு அந்த குஞ்சுகளை நாம் விலங்கிட்டோம் என்றால்
2.கருடன் பறந்து சென்று அதை முறிக்கக் கூடிய தாவர இனங்களைத் தேடிச் செல்கிறது.
3.அதனுடைய குச்சிகளை எடுத்துக் கொண்டு வந்து அந்த இரும்புக் கம்பி மேல் போடுகின்றது… அந்தக் கம்பிகள் அறுந்து விடுகின்றது.

அந்தத் தாவர இனத்தைக் கண்டு கொள்ள வேண்டும் என்றால் நம்மால் முடியாது.

ஒரு வாய்க்காலிலே நீர் வேகமாக ஓடுகிறது என்றால்
1.அந்தக் கருடன் குஞ்சுகளை வைத்திருந்த கூட்டைப் பிரித்து அதில் போட்டால்
2.அது (மீன்களைப் போல்) எதிர்நீச்சல் அடிக்கும்.

மெய்ஞானிகள் சில முறைப்படுத்தி இதை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள் விஷத்தை ஒடுக்கும் உணர்வாக மற்ற உலோகங்களை முறித்திடும் நிலையாக அத்தகைய தாவர இனங்களுக்கு இந்த ஆற்றல் உண்டு.

இது எல்லாம் இயற்கையில் விளைந்த உணர்வுகள் தான்.

ஒவ்வொரு உயிரினங்களும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எவ்வாறு இயங்குகின்றது…? என்று இதையெல்லாம் அறிவதற்காகப் பல நிலைகளை எனக்குக் குருநாதர் காட்டுகின்றார்.

ஒரு சமயம் நான் கொல்லூரிலே குருநாதர் காட்டிய வழியில் தியானமிருந்து கொண்டிருக்கின்றேன். அங்கே ஆற்றங்கரை ஓரங்களில் கருநாகம் போன்று மிகப் பெரிய பாம்புகள் உண்டு… காளிங்கராயன் என்று சொல்வார்கள்.

அந்த ஆறு குடசாஸ்திரி என்ற மலையிலிருந்து பச்சிலைகளையும் மூலிகைகளையும் பல பல தாவர இனங்களின் சத்துக்களையும் கவர்ந்து கொண்டு இங்கே வருகின்றது.

அங்கிருக்கக்கூடிய ஒரு பாறையிலே தான் அமர்ந்து இயற்கையின் உண்மை நிலைகளை அறிவதற்காக இரவு முழுதும் தியானம் இருப்பேன். காலையில் எழுந்து காலைக்கடன் கழிப்பதற்காக எழுந்து நடக்கின்றேன்

அவ்வாறு நடந்து செல்லப்படும் பொழுது என்னை அறியாமலேயே ஒரு செடியின் புதரிலே காலை வைத்து விட்டேன்.
1.சிர்….ர்ர்ர்…! என்று அந்தப் பாம்பு எழுந்து நின்றது. சுமார் 70 அடி நீளம் இருக்கும்
2.என் தலைக்கு மேலே “சுளவு” போன்று படத்தைப் பிடிக்கின்றது.

அப்பொழுது குருநாதர் சொல்கின்றார். நீ அந்தப் பாம்பை இடறி விட்டாய். ஆனால் அது உன்னைச் சீறித் தாக்கவில்லை. நீ தெரியாமல் மிதித்து விட்டாய் என்பதை அது உணர்கின்றது… ஆகையினால் தாக்கவில்லை.

1.இங்கே வாழ்ந்த சில ரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகளை அந்தப் பாம்பு நுகர்ந்துள்ளது.
2.அதனால் அதனுடைய பரிமணம் சில விஷத்தன்மைகளை நீக்கும் வல்லமையும் பெற்றது என்று குருநாதர் இதையும் காட்டுகின்றார்.

எறும்புக் குழியில் அமர வைத்து எனக்கு குரு கொடுத்த அனுபவம்

எறும்புக் குழியில் அமர வைத்து எனக்கு குரு கொடுத்த அனுபவம்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் உலக அனுபவங்களைப் பெறுவதற்காக பல இன்னல்களை என்னை அனுபவிக்கச் செய்தார்.
1.நுகர்ந்த உணர்வுகள் எனக்குள் எப்படிச் செயலாக்குகின்றது…?
2.இதிலிருந்து மாற்றியமைக்கும் தன்மை எப்படிக் கொண்டு வர வேண்டும்…? என்று உணர்த்தினார்.

எறும்புக் குழியில் அமர்ந்து தவம் இருக்கும்படி செய்கின்றார். அமைதியாக நான் இருக்கும் பொழுது ஒன்றும் நடக்கவில்லை ஒரு எறும்பு என் காதிற்குள் சென்றது. அது உள் செல்லாதபடி விரலை வைத்துத் தள்ளினேன். அது துடித்து விட்டது.. மடிந்து விட்டது.

அந்த உணர்வின் அலைகளை மற்ற எறும்புகள் நுகர்ந்து துரித கதியில் இயங்கத் தொடங்குகிறது. புற்றிலிருந்து வரக்கூடிய எறும்புகள் அனைத்தும் இந்த உணர்வின் ஒலியை எப்படி அறிந்ததோ மணத்தின் தன்மை எப்படி அறிந்ததோ தெரியவில்லை.

என்றாலும் அதன் உணர்வின் தன்மையை வேகமாக அறிந்து கொண்டு என் உடலில் பல நிலைகள் கொண்டு கடிக்கின்றது. கடி தாங்காது அதையெல்லாம் நான் தேய்க்கத் தொடங்கினேன்.

1.நீ தேய்த்து நசுக்கிய எறும்புகள் அனைத்தும் உன்னுடைய ஈர்ப்புக்குள் வந்து விடுகிறது.
2.உனது உணர்வைக் கவர்ந்து கருவாக மாறுகின்றது.
3.ஆனால் எறும்பின் உடலில் உள்ள விஷமும் அது நசுக்கப்படும்போது அதனின் வேதனையையும் நுகர்ந்து நீ மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டாய்.
4.அந்த உணர்வுகள் உன் உடலுக்குள் செல்லும்போது உன் இரத்த நாளங்களில் விஷ அணுக்களை உருவாக்கும் உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகின்றது.

நீ எத்தனை எறும்பை நசுக்கினாயோ உன் உடலில் 48 நாட்களுக்குள் இது ஒரு கூட்டமைப்பான உணர்வுகள் விளையப்பட்டு
1.உன் உடலில் கை கால் குடைச்சல் என்றும்
2.அந்த எறும்புகள் சாகும்போது எந்தத் துடிப்பு அவைகளுக்கு இருந்ததோ
3,பளீர் பளீர் என்று ஊசி குத்துவது போல் அதை நீ உணரலாம் என்று உணர்த்தினார்.
4.அதனுடைய இயக்கங்கள் எப்படி இருக்கிறது என்பதையும் காட்டுகின்றார்.

மனிதனான பின் ஒன்றைக் கொன்றோம் என்றாலும் அல்லது மனிதனாகப் பிறந்தாலும் கொல்லும் பொழுது பட்ட வேதனையின் உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது.

கொல்லவில்லை என்றாலும் விஷம் தாக்கப்பட்டு அதன் உணர்வின் நினைவானால் உடலுக்குள் செல்கின்றது. இதிலிருந்து மீளும் மார்க்கம் என்ன…? என்று இந்த வினாவை எழுப்புகின்றார்.

ஆக மொத்தம் எறும்பு தான் வாழ அது செயல்படுகிறது. அதனைக் காக்க அதன் உணர்வால் நம்மைத் தீண்டுகின்றது. நம்மைத் தீண்டும் போது அதன் உணர்வு நமக்குள் பட்டால் நாம் அதுவாக மாறிவிடுகின்றோம். இது இயற்கையின் நியதிகள்.

ஆறாவது அறிவு கொண்ட மனிதன் நாம் அதைக் கொன்றால் உடலுக்குள் வந்தாலும் அதனின் வேதனையை நாம் துடைக்க வேண்டும் அல்லவா அதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்…? என்று கேட்கின்றார் குருநாதர்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீ நுகர்ந்தால் அது உனக்குள் பதிவாகி இருந்தால் அந்தச் சக்தியை நீ பெற முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி என் உடலில் படர வேண்டும்.
2.கொன்ற உயிரான்மாக்கள் என் உடலுக்குள் வந்தாலும் “அருள் உணர்வு பெற வேண்டும் அருள் ஒளி என்ற உணர்வைப் பெறுதல் வேண்டும்…”
3.அருள் ஞானம் பெறும் உயர்ந்த உணர்வாக எனக்குள் வளர வேண்டும் என்று உடனுக்குடன் அதை மாற்றப்படும் பொழுது
4.அதைக் கொன்றாலும் நமக்குள் வந்து “அருள் ஞான உணர்வை வளர்த்திடும்” கருத்தன்மை அதிலே இணைந்து வளரும் தன்மை வருகின்றது.

இவ்வாறு இந்த உணர்வின் தன்மை இணைத்து விட்டால் உடனடியாக நமக்குள் அந்த அணுக்கள் ஈரத்தத்தில் வளரப்படும் பொழுது தீமையை மாற்றி நன்மையின் உணர்வை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

இது அனைத்தும் நம் இரத்த நாளங்களில் வந்த பின் தான் உடலை உருவாக்கும் கரு விந்து என்ற உணர்வுகளுக்கு அழைத்துச் செல்கின்றது. அதனின் வலுக் கொண்டு தான் மனிதனை உருவாக்கும் கருத்தன்மை அடைகின்றது.

1.அப்படிக் கருத்தன்மை அடைவதற்கு முன் இந்த உணர்வினை மாற்றி விட்டால்
2.நாம் ஏங்கிய அருள் உணர்வுகள் கரு அறைகளுக்கு செல்லப்படும் பொழுது
3.அதை மாற்றி அமைத்து விடுகின்றது என்பதனை குரு தெளிவாகக் காட்டுகின்றார்.

இரத்தத்தை உறிஞ்சும் கொடிகள்

இரத்தத்தை உறிஞ்சும் கொடிகள்

 

காடுகளுக்குள் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று பல உண்மை நிலைகளை அறியும்படி செய்தார்.

புலி கொடூரமாக பல மான்களை அடித்து உட்கொள்கின்றது ஆனால் மானையே அதிகமாக அந்தப் புலி உட்கொண்டிருந்தால் அதனுடைய முதுமைப் பருவத்திலே உடலை விட்டுப் பிரியும் சமயம் அந்த உயிரான்மா மானினுடைய ஈர்ப்புக்குள் செல்வதையும் காட்டுகின்றார்.

அதே சமயத்தில்… புலி இறந்த பின்
1.புலியின் உடலை வளர்த்த அணுக்கள் அந்த உடலையே உட்கொள்கின்றது.
2.எதை எதையெல்லாம் இந்தப் புலி கொன்று விழுங்கியதோ அதனதன் அணுக்களின் தன்மையாக
3.உடல் உறுப்புகளில் உள்ள நிலைகள் அந்தப் புழுக்கள் அந்த உடலைச் சாப்பிடுகின்றது.

பின் இதிலிருந்து வரக்கூடிய உணர்வின் தன்மை நாற்றம் ஆகின்றது. அது ஆவியாக மாறுகின்றது… சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்கின்றது… அலைகளாகச் செல்கின்றது.

பல தாவர இனங்களை புசித்த உயிரினங்களின் உடல்களை இது உட்கொண்டதால் அத்தகைய உணர்வின் தன்மை கொண்ட
1.அந்தப் புலியின் உடலிலிருந்து வெளிவரும் வாசனைகளைச் சூரியன் கவர்ந்து கொண்ட பின்
2.இதே போல இன்னொரு பாம்பு மடிந்திருந்து அதனுடைய உணர்வின் அலைகள் வெளி வருவதைக் (அந்த மணத்தை) கண்டபின்
3.அது வலுவான நிலையாக இருப்பதால் புலியின் உணர்வலைகள் அஞ்சி ஓடுகின்றது.
4.அது ஓடும் பாதையிலே ஒரு விஷச் செடியிலிருந்து வெளிப்படும் மணத்துடன் இது மோதினால்
5.கிறு…கிறு… என்று சுழற்சியின் தன்மை அடைகின்றது.

சுழற்சியின் தன்மை அடைந்தபின் மூன்றும் இரண்டறக் கலந்து அது ஒரு ஒரு தாவர இன வித்தாக… கொடியாக மாறுகின்றது. பூமியின் ஈர்ப்பிலே பட்டப்பின் கொடியின் தன்மை அடைகின்றது.

அந்தக் கொடி மூன்று உணர்வும் (புலி+பாம்பு+விஷச்செடி) கலந்து உருவானது. அந்தந்த உடலில் இருந்து வெளிப்படக்கூடிய அழுகிய மணங்களைச் சூரியன் எடுத்துக் கொண்ட எந்த உணர்வின் தன்மை பெற்றதோ “அந்த மணத்தின் தன்மை கொண்டு கொடியின் தன்மை அடைகின்றது…”

உடல்கள் இறந்த பின் பெற்ற உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியன் எப்படிக் கவர்ந்து வைத்துள்ளது…? நீ தெளிவாகத் தெரிந்து கொள்…! என்று குருநாதர் காட்டுகின்றார்.
1.அதைப் பார்ப்பதற்குண்டான சக்தியை கொடுத்தார். அனுபவரீதியிலே தெரிந்து கொண்டது.
2.இதை எல்லாம் புத்தகங்களிலே பார்ப்பது மிகவும் கடினம்.

அப்படிக் கொடியாக வளர்ந்த நிலையில் ஜீவனுள்ள உயிரினங்கள் இதன் அருகில் வந்தால் அலுங்காமல் அது நகர்ந்து வரும்.
1.பாம்பு விழுங்குவது போன்று அந்தக் கொடி சுற்றிவிடும்…
2.உடலில் இருக்கும் சத்தை எல்லாம் உறிஞ்சி விடும்… பின் மரணம் தான்.

சந்தன மகாலிங்கம் என்ற குகைப் பகுதிகளில்… அங்கே புலியினங்களும் பாம்பினங்களும் ஜாஸ்தி உண்டு. அத்தகைய கொடிகள் உண்டு பெரிய விலங்குகள் இறந்த பின் பச்சிலை மூலிகைகளும் பல நிலைகள் உண்டு அஸ்ஸாம் காடுகளிலும் இதைப் போன்று உண்டு.

மிருகங்களும் மற்ற உயிரினங்களும் இதைப் போன்று மடிந்த நிலைகள் கொண்டு சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உயிர் வெளியே செல்லும் பொழுது அதற்கு ஒத்த மற்ற உடலுக்குள் செல்கின்றது… உடல் பெறுகின்றது.

ஆனால் இறந்த உடலில் இருந்து கெட்ட மணம் வெளி வந்த பின் சூரியன் எடுத்துக் கொண்டால் அவைகள் கலந்து கொடியின் தன்மைகளாக செடியின் தன்மைகள் எப்படி மாறுகிறது…? அந்தச் செடி கொடிகள் இரத்தத்தை உறிஞ்சும் தன்மை எப்படிப் பெறுகின்றது…? என்பதை அங்கே காட்டுகின்றார்.

வெங்கடாஜலபதியை தோஸ்த் செய் என்றார் குருநாதர்… “எனக்கு முருகன் தான் வேண்டும்” என்றேன் நான்

வெங்கடாஜலபதியை தோஸ்த் செய் என்றார் குருநாதர்… “எனக்கு முருகன் தான் வேண்டும்” என்றேன் நான்

 

என்னுடைய உபதேசத்தை எத்தனை பேர் எத்தனை விதமாக எடுத்துக் கொள்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. காரணம் எத்தனையோ பேர் சொத்துக்கும் சுகத்திற்கும் தான் ஆசைப்படுகின்றார்கள்.

குருநாதர் என்னிடமும் இப்படித்தான் வினா எழுப்பினார்…! அழியாச் சொத்து கிடைக்கும்டா…! என்றார்.

ஓய்… தெலுங்கு ராஜ்யம்…! இங்கே வாடா…! என்று என்னைக் கூப்பிட்டார்.

நான் போனேன்.

வெங்கடாஜலபதியை தோஸ்த் பண்ணிக்கோ… நிறையச் சொத்து கிடைக்கும்…! என்று சொன்னார்.

ஆனால் நான் தெரிந்தோ தெரியாமலோ…
1.என்னை காப்பாற்றுவதற்கு ஞானம் வேண்டும்.
2.ஞானவான் என்று முருகனைச் சொல்லி இருக்கின்றார்கள்…
3.ஆகையினால் முருகன் தான் எனக்கு வேண்டும் என்று சொன்னேன்.

அவன் ஆண்டிப்பயல்… ஒன்றும் கொடுக்க மாட்டான்…! ஆனால் வெங்கடாஜலபதியைப் பிடித்தால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்…! என்று இப்படி எல்லாம் என்னைச் சிக்கலான நிலையில் சோதிப்பார் குருநாதர்.

ஆறாவது அறிவு ஞானம். வாழ்க்கையில் மெய் ஒளியின் தன்மையை உருவாக்க வேண்டும். ஏற்கனவே இதைச் சொல்லி இருக்கின்றார். கேள்விகளைப் போட்டு என்னை மடக்கி ஆசையைத் தூண்டுவார்
1.உடல் இச்சைக்குக் கேட்கின்றேனா அல்லது
2.அருள் ஞானத்திற்கு என்னுடைய எண்ணங்கள் செல்கின்றதா…? என்று பல பரீட்சைகள் வைப்பார்.

அப்பொழுது நான் என்ன செய்வது…? எனக்கு முருகன் தான் வேண்டும் என்றேன்.

இல்லை… வெங்கடாஜலபதியை நீ வைத்துக் கொள்…! முருகன் என்றால் ரொம்பக் கஷ்டப்படுவாய் என்றார்.

முருகனை வைத்து எனக்குக் கஷ்டம் வராது…! என்பேன்.

அடிக்கடி இரண்டு பேருக்கும் இப்படி வாக்குவாதம் வரும்.

1.குருநாதர் பைத்தியக்காரத்தனமாகத்தான் பேசுவார்.
2.ஆனால் அத்தனையும் பொருள் பொதிந்ததாக இருக்கும். குறுகிய காலத்திற்குள் இந்த மாதிரி உருவாக்குவார்.

ஆகவே அதிகாலையில் விழித்தவுடன் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும். ஆன்மாவில் பட்ட அழுக்கைக் காலையில் போக்கப் பழக வேண்டும்.

அதிகாலை 4 மணியிலிருந்து ஆறரை வரையிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வருகின்றது. அந்த நேரத்தில் நாம் அதை எண்ணி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

அந்தச் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு இந்த உபதேசமே அடிக்கடி கொடுப்பது. எனக்கு
1.குருநாதர் இப்படித்தான் கொடுத்தார் அந்தச் சக்தியை எடுக்கவும் சொன்னார்.
2.உங்களுக்கும் அதையே தான் கொடுக்கின்றேன்

எத்தனை பேர் நீங்கள் அதிகாலையில் எண்ணி… அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அவர்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்கின்றது.

ஆனால் வெறும் உடல் அசைக்காக வேண்டி சொத்து கிடைக்கும் உடல் நலம் கிடைக்கும் என்ற நோக்கத்தில்… சாமியைச் சந்தித்தோம்…! சாமியிடம் ஆசிர்வாதம் கேட்டோம்…! என்றால் அது சிறிது நாளைக்குத் தான் இருக்கும். ரொம்ப நாளைக்கு இருக்காது.

உடலில் ஆசைகள் கூடிக் கொண்டே போகும். கிடைக்கவில்லை என்றால் வேதனை என்ற விஷம் வரும்… பின் நல்ல குணங்களைக் காக்காதபடி அழித்துச் சென்று விடும்.

“இது எல்லாம் நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நிலைகள்…”

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அந்த அதிகாலை நேரத்திலே எடுத்துப் பழக வேண்டும்… “படுக்கையிலே இருந்தாலும் கூட…!”

ஈஸ்வரா…! என்று உயிரிடம் வேண்டுங்கள். அம்மா அப்பா ஆசி வேண்டும் என்று அடுத்து எண்ணுங்கள். பின் உயிரை வேண்டி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படரர வேண்டும் என்ற நினைவை
3.உடலுக்குள் திரும்பத் திரும்ப செலுத்திக் கொண்டே இருங்கள்.

இது மிகவும் முக்கியமானது.

சக்தி கொடுத்தாலும்… ஞானம் கொண்டு அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?

சக்தி கொடுத்தாலும்… ஞானம் கொண்டு அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?

 

குருநாதர் எம்மைப் பல இன்னல்களைப் படச் செய்தார்… எப்படி எல்லாம் சந்தர்ப்பங்கள் உருவாகிறது…? என்று.

சில இடங்களில் மிருகங்கள் வருகிறது என்றால் நான் கையை நீட்டினால் போதும்… அவைகள் கீழே விழுந்து விடும். எனக்குச் சக்தி இருக்கிறது என்று நான் நினைக்க முடியுமா…?

ஒரு பாதையில் என்னைப் போகச் சொல்கின்றார் குருநாதர். யானை வருகின்றது… பார்த்தவுடன் பயம் வருகின்றது… யானை என்னைத் தாக்கிவிடும் என்று நினைக்கின்றேன்.

யானையை நீ தோஸ்து (நண்பன்) பண்ணுடா என்று குருநாதர் சொல்கின்றார். தோஸ்த் பண்ணுவது என்றால் எப்படி…? என்று குருநாதர் சொல்லிக் கொடுத்திருக்கின்றார்.

ஆனால் யானையை பார்த்ததும் பயம் தான் வருகின்றது. எங்கே நான் தோஸ்த் செய்வது…? காதை விடைத்துவிட்டது என்றால் நிச்சயம் அடிக்கும்

ஏனென்றால் நான் வேட்டைக்குப் போய்ப் பழக்கப்பட்டவன். காதை மட்டும் யானை விடைத்து விட்டால் எவ்வளவு தூரத்தில் எப்படி இருந்தாலும் யானை விடாது.

பார்த்துக் கொண்டே இருக்கும்… நாம் நகர்ந்தோம் என்றால் ஓடி வந்து லபக்கு என்று நம்மைப் பிடித்துவிடும்.

இந்த மாதிரி நிலை இருந்ததால்… “யானை என்னை அடித்து விடும்” என்ற பயம் தான் அப்பொழுது எனக்கு வந்தது. குருநாதரை நினைக்கின்றேன்… சாமி…! என்று சொல்கின்றேன்.

முன்னே வைத்த காலைப் பின்னே வைக்காதே…! என்று சொல்கின்றார்.

எங்கே சாமி என்றேன்…! சத்தம் போட்டால் அடித்து விடும். மனதில் தான் நான் நினைக்கின்றேன்.

தோஸ்து செய்டா… சரியாகப் போய்விடும் என்று சொல்லுகின்றார். நான் கொடுத்த சக்தியை வைத்து யானை உடலிலிருந்து வரக்கூடிய வாசனையை உன் உடலிலே ஏற்றுடா என்று சொல்கிறார்.

1.ஒருவன் நம்மைப் பயமுறுத்துகிறான் என்ற உணர்வு வந்தால் அந்த வாசனை நமக்குள் வரும்.
2.எதிரி என்ற நிலையில் நம்மைத் தாக்க வருகிறார் என்றால் பார்த்தவுடன் அந்தப் பயமுறுத்தக் கூடிய உணர்வு வரும்.
3.யார் பார்த்தாலும் அந்த பயம் நடுக்கம் வரும். அதைப் பற்றிக் கேட்டவரும் ஏன் பயப்படுகிறாய்…? என்று கேட்பார்கள்.
4.இதே மாதிரி யானையின் உணர்வை நீ நுகரு என்று சொல்கிறார் குருநாதர்.

அவர் சொன்ன முறைப்படி அதை எடுத்து எனக்குள் கொஞ்சம் ஏற்றிக்கொண்ட பின் காதை விடைப்பதை யானை விட்டு விட்டது.

ஏனென்றால் அந்த இடம் கொப்பங்கள் கட்டி யானைகளைப் பிடிக்கக்கூடிய இடம். முன்னாடி ஆண் யானை குச்சியை வைத்துத் தரையில் ஊன்றி அதைப் பார்த்துக் கொண்டே வருகின்றது பின்னாடி மற்ற யானைகள் வரிசையாக வருகின்றது. அந்த நேரத்தில் மனிதனைக் கண்டால் எப்படி இருக்கும்…?

ஆனால் குருநாதர் சொன்ன முறைப்படி யானையின் மணத்தை நான் ஏற்றுக் கொண்டதால் அவைகள் பேசாமல் நகர்ந்து செல்லுகின்றது எல்லா யானைகளும்.

ஆனால் அதிலே ஒரு குட்டி யானை என்ன செய்கின்றது…?

அது சும்மா செல்லாதபடி என்னை வந்து உடலில் தட்டுகின்றது. உடனே திரும்பி மற்ற யானைகள் முறைத்துப் பார்க்கின்றன.

பயத்தால் நான் ஏதாவது கையையோ காலையோ நீட்டினேன் என்றால் போச்சு…! ஆனால் யானை அது என்னிடம் விளையாடுகின்றது… முட்டிப் பார்க்கின்றது. மற்ற யானைகள் கொஞ்ச நேரம் நின்று பார்க்கின்றது.

குருநாதர் அனுபவத்திற்கு இப்படிக் காட்டுகின்றார்.

1.ஈஸ்வரா என்று குருநாதரை நினைத்து அந்தக் குட்டி யானை விலகிச் செல்ல வேண்டும்
2.அதற்குண்டான புத்தி வர வேண்டும் என்று நான் நினைத்தேன்.

ஆனால் பயந்திருந்தேன் என்றால் நிச்சயம் யானை என்னை விரட்டிவிடும்.

இப்படித்தான் சந்தர்ப்பத்தில் என்னை அங்கே சிக்க வைத்தார். சக்தி கொடுத்தாலும் ஞானம் கொண்டு எப்படிப் பயன்படுத்த வேண்டும்…? என்று காட்டுகின்றார்.

ஆனால் அடுத்தாற்போல் குருநாதர் “கெக்கெக்கே…” என்று சிரிக்கின்றார். ஒன்றுமே தெரியாதவன் என்று சொல்லுகின்றாய். என்னடா…? யானையெல்லாம் மடக்குகின்றாய்..! பயந்தேன்…! என்று சொன்னாய் ஆனால் இப்பொழுது யானையை மடக்குகின்றாயே…! என்றார்.

இந்த மாதிரி இதையும் செய்யச் சொல்வார் எல்லா அனுபவத்தையும் கொடுக்கின்றார்.

ஆகவே குருநாதர் காட்டிய வழியில் நாம் தெளிந்த மனம் கொண்டு
1.ஒளியின் சரீரமாகப் பெற்ற அருள் ஞானிகள் உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் நுகர்ந்து
2.இருள் சூழா நிலைகளாக எப்பொழுது கொண்டு வருகின்றமோ அப்போது நாம் முழுமை அடைகின்றோம்.
3.நீங்கள் முழுமை அடைய அந்த அருளைப் பெற வேண்டும் என்பதுதான் எம்முடைய உபதேசம்.

சிரமமான நேரத்தில் குருநாதர் எனக்குக் கொடுத்த உபதேசங்கள்

சிரமமான நேரத்தில் குருநாதர் எனக்குக் கொடுத்த உபதேசங்கள்

 

குருநாதர் எம்மை இமயமலை… சைனா பார்டர் வரையிலும் போகச் சொன்னார்…!

அன்று சக்தி கொடுத்தார்.
1.அதை வைத்து அந்த நேரத்தில் எதைப் பயன்படுத்த வேண்டுமோ பயன்படுத்த வேண்டும்.
2.ஒருத்தரைக் கொல்லவோ துன்புறுத்தவோ அதைப் பயன்படுத்தக்கூடாது
3.உன்னைக் காத்துக் கொள்வதற்கு எந்த நிலையோ அதை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லித் தான் கொடுத்தார்.

வெறும் கோவணத் துணியுடன் அங்கே இமயமலைக்குச் சென்றேன். ஒரு பாதையைக் கடந்து செல்லும் பொழுது பனிபாறைகள் திடு… திடு… என்று இடிந்து விழுகின்றது. பார்த்தவுடனே… நாம் எப்படித் திரும்பப் போகப் போகின்றோம்…? என்று சிந்தனை வருகிறது.

அப்போது என் வீட்டின் நிலைகள் காட்சியாகத் தெரிகின்றது. என் கடைசிப் பையன் தண்டபாணி “நானா… நானா…” என்று சொல்லிக் கொண்டு தெரு வாசல்படியில் அமர்ந்திருக்கின்றான்.

என் மீது அவனுக்கு ஏக்கம் அதிகமாகி இரத்த இரத்தமாக வெளியே சென்று கொண்டிருக்கிறது. இந்த எண்ணம் அங்கே சென்றவுடன் நாம் எப்படித் திரும்பச் செல்லப் போகின்றோம்…? பிள்ளைகள் எல்லாம் என்ன ஆவார்கள்…? என்று இங்கிருந்து இது எல்லாம் சிந்தனை ஓடுகின்றது.

எல்லாம் காட்சியாகத் தெரிகின்றது என்னுடைய மனைவியோ விறகுக் கடையில் “விறகே இல்லை” என்று தவித்துக் கொண்டிருக்கிறது.

என் பையனுக்கு இரத்த இரத்தமாகப் போகிறது என்று தெரிந்த உடனே… ஐயோ…! அவனை எப்படிக் காப்பாற்றுவது…? என்ற இந்த நினைப்பு எனக்குள் வருகின்றது.

உடனே என் உடலுக்குள் “அடித்தது பாருங்கள்…!” கிர்…ர்ர்ர்… என்று இருதயமே துடிக்க ஆரம்பிக்கின்றது. சிறிது நேரத்தில் உயிர் பிரிந்து விடும் போல் தெரிகின்றது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் அடிக்கடி குருநாதர் ஒரு பாடலைப் பாடுவார்

மனமே இனி ஆகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் சுகமா
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

மின்னலைப் போல் இப்பொழுது நீ உடலை விட்டுப் போய் விட்டாய் என்றால் எதை நீ பார்க்கப் போகின்றாய்…? என்று கேட்கின்றார்.

நேற்றிருந்தார் இன்று இருப்பது நிஜமோ…? இந்த நிலையில்லா உலகம் உனக்குச் சதமா…? நீ சிந்தித்துப் பார்…! என்று சொல்கின்றார். நீ சென்று விட்டால் உன் பிள்ளையை எப்படிக் காக்கப் போகின்றாய்…?
1.நான் உனக்குச் சக்தி கொடுத்தேன்
2.இங்கிருந்து அவன் காக்கப்பட வேண்டும் என்று எண்ணினால் காக்கலாம்.

தூரத்தில் இருக்கும் ஒருவனை இங்கிருந்து நீ திட்டினால் அவனுக்குப் புரை ஓடுகின்றது. பிள்ளை மீது பாசமாக இருந்து அவனை எண்ணி வேதனைப்பட்டால் அவனுக்கு நோய் தான் அதிகமாகும்.

அந்த நோயிலிருந்து அவனைக் காக்க வேண்டும் என்றால் நீ என்ன செய்ய வேண்டும்…? என்ற உபதேசத்தை தான் அந்த மாதிரி நேரங்களில் எனக்கு குருநாதர் கொடுக்கின்றார்.

சக்தி வைத்திருந்தாலும்…
1.இவ்வளவு சிரமமான நேரத்தில் அவர் கொடுக்கும் உபதேசங்கள் நமக்குப் பயனுள்ளதாக
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உருவாக்கப்பட்டு… குருநாதர் கொடுத்து உதவுகின்றார்.

இப்படித்தான் அனுபவப்பட்டு நான் வந்தேன். நீங்கள் அமர்ந்து ஆசுவாசமாக இதைக் கேட்கின்றீர்கள். உங்களுக்கு இது போன்ற சோதனைகளைக் கொடுத்தால் என்ன சொல்வீர்கள்…?

ஆசைப்பட்டது நடக்கவில்லை என்றால் “சாமி என்னைச் சோதிக்கின்றார்” என்று தான் சொல்வீர்கள். ஒரு சிலர் என்ன செய்கிறார்கள்…?

வாழ்க்கையின் ஆசை நிமித்தம் செல்லும் பொழுது… ஒரு பொருளை எண்ணுகிறார்கள்… அது கிடைக்கவில்லை என்றால் என்றால் “சாமி நிறைய என்னைச் சோதிக்கின்றார்” என்று இப்படிச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றார்கள்.

ஏனென்றால் நான் இயற்கையின் உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்குக் குருநாதர் எத்தனையோ சோதனைகளை வைத்தார். அதன் வழி தான் ஒவ்வொன்றையும் அறிந்து கொண்டேன்.

சரியான உணவு இல்லை… வீடு வயல்கள் எல்லாம் சென்று விட்டது குழந்தைகள் அனைவரும் அனாதையாக இருக்கின்றார்கள். எல்லா நிலங்களும் விற்று விட்டாயிற்று. சரியான காரணம் இல்லாமலே சொத்துக்கள் அழிந்தது.

இவ்வளவு நிலை வந்த பிற்பாடு இப்படி எல்லாம் செய்யப்பட்ட பிற்பாடு இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்டு வருகின்றேன். ஒவ்வொரு குடும்பத்திலும் இத்தகைய நிலைகள் உண்டு.

1.ஆக அந்த குடும்பத்தில் எப்படி அறியாது இயக்குகின்றது…?
2.அவர்களை மீட்டுவதற்கு என்ன வழி…? என்ற நிலையில் தான் அனுபவமே கொடுத்தார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக நீ மதி அவர்கள் உடலைக் கோவிலாக மதி சந்தர்ப்பத்தால் அவருக்குள் வரும் நிலையை…
1.ஈசனால் கட்டப்பட்ட அந்த ஆலயம் இடிந்திடாது இந்தக் கட்டிடத்திற்குள் இருந்து உணர்வின் தன்மை ஒளியாகப் பெருக்கும் மார்க்கம் என்ன…?
2.அவர்களைக் காக்க வேண்டும் என்றால் நீ எப்படிக் காக்கப்படுகின்றாய்…?
3.இந்த உடலுக்குப் பின் நீ எப்படி ஒளியாகின்றாய்…?
4.அவர்களை ஒளியாக்கும் உணர்வை அந்த உபாயத்தைச் சொன்னால் அது உனக்குள் வளர்கின்றது
5.அந்த உணர்வே உனக்குள் தெளிவாகின்றது
6.அதை வைத்து நீ அவர்களையும் காக்க முடியும்.

இப்படித்தான் குருநாதர் எனக்கு அனுபவங்களைக் கொடுத்தார்.

ஆரம்பத்தில் என்னைச் சமாதியாக்க முயற்சித்தார்கள்

ஆரம்பத்தில் என்னைச் சமாதியாக்க முயற்சித்தார்கள்

 

இங்கே எம்மை… (ஞானகுரு) ஆளைக் காணவில்லை என்று சொன்னதும் சாமியம்மா (என் மனைவி) எம்மை தேடிக் கொண்டிருந்தது. நான் பாபநாசம் சென்று விட்டேன் என்று அங்கே சென்று விட்டது. அது மலைக்காடு தண்ணீராக இருக்கின்றது… தனியாகத்தான் சென்றது. அங்கே ஒருவரும் இல்லை என்பதால் அடுத்த பஸ்ஸில் ஏறித் திரும்பிவிட்டது.

ஆக
1.அன்றைக்குச் சரியான நேரத்தில் அந்தம்மா தேடி வந்து எம்மைக் கூட்டிக் கொண்டு வந்ததால் ஆவியாக வந்து எம்மைப் பிடிக்கவில்லை.
2.இல்லையென்றால் இப்பொழுது உங்களிடம் இந்த உபதேசக் கருத்துக்களை நான் பேச முடியாது… நிச்சயமாகப் பேச முடியாது.

காரணம்… ஆரம்பத்தில் நான் பவானியில் (சத்தியத்தின் சக்தி நிலை) இருந்தேன்… பல உண்மைகளை அங்கே அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தேன்.

ஆனால் அவர்களோ எமக்குப் பல பல வகைகளிலும் இடைஞ்சல் செய்ய ஆரம்பித்தார்கள். எல்லாம் முடிந்த பிற்பாடு “என்னைச் சமாதியாக்க வேண்டும்” என்று முயற்சித்தார்கள். காரணம்…
1.அவர்கள் தனித்துப் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார்கள்.
2.என்னைக் கொன்று விட்டு அவர்கள் தனித்து அதையெல்லாம் அனுபவிக்கலாம் என்று…!

இயற்கையின் உண்மை நிலைகளை எல்லாம் அங்கே தான் வெளி முதலில் உலகத்திற்குத் தெரியப்படுத்தியது. அங்கே தான் சாமியம்மா என்னைத் தேடி வந்தது.

ஏனென்றால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சாமியம்மாவிடம்… அங்கே சமாதியாக்கி விடுவார்கள் நீ போ…! என்று சொல்லி இருக்கின்றார். நடந்த நிகழ்ச்சி இது…!

ஏனென்றால் பவானியில் உள்ளவர்களின் திட்டம் இதுதான். அருகிலே மலை ஒன்று இருக்கிறது… அருகிலே இடமும் வாங்கி இருந்தார்கள். அதிலே கட்டடத்தைக் கட்டி விட்டு அங்கேயே என்னைச் சமாதியாக்கி விடலாம் என்று.

இங்கே வந்தார்… திடீரென்று சொர்க்கம் சென்று விட்டார்…! என்று சொல்லி அதை வைத்துச் சம்பாதித்துக் கொள்ளலாம். யாம் கொடுத்த பாட நிலைகள் உலகில் யாருக்கும் சொல்லாது தாங்களே அதை மறைத்துக் கொள்ளலாம் என்று செயல்பட்டார்கள்.

இப்படிப்பட்ட மனிதர்கள் அன்று இருந்தார்கள்… ஏனென்றால் குருவை மறந்து விட்டார்கள். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! அங்கே நடந்த சில உண்மைகளை இப்பொழுது தான் உங்களுக்குச் சொல்கின்றேன்.

ஆகையினால்
1.என் மனைவி அங்கே வந்து “அவசியம் நீ என்னுடன் வந்து தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது…:
2.நான் சிறிது நாள் இங்கே இருந்து விட்டு வருகின்றேன் என்று சொன்னேன்
3.இல்லை இப்போதே… உடனடியாக வரவேண்டும் என்று சொல்லிவிட்டது

அந்த நேரத்தில் நான் இருந்த இடத்திலே அவர்களுடைய செயல்களும் அதற்குத் தகுந்த மாதிரியே இருந்து விட்டது. பவானியில் எம்மைச் சமாதியாக்க வேண்டும் என்று முயற்சித்தார்கள்.

யார்…? எஸ்.எஸ்.எம் என்பவர்…! அங்கே ஆரம்பத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் இது எல்லாம் தெரியும் பணம் இருந்தும் கொடுத்த ஞானத்தை வெளிப்படுத்துவதற்கு மாறாக… ஆசை கொண்டு என்னைக் கொலை செய்யும் அளவிற்குச் சென்று விட்டார்கள்.

இது வரையில் இதை எங்கேயும் வெளிப்படுத்தவில்லை.
1.ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எப்படி எல்லாம் சந்தர்ப்பங்கள் வரும் என்பதை
2.நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்

அதற்கப்புறம் தான் இங்கே வந்து தபோவனத்தை ஆரம்பித்தது. என்னுடைய மனைவி அப்பொழுது என்னை இழுத்துக் கொண்டு வரவில்லை என்றால் என்னைச் சமாதியாக்கி இருப்பார்கள்.
1.குருநாதர் அந்தம்மாவின் உடலில் வந்து எல்லாவற்றையும் சரி செய்து என்னை இழுத்து வந்தது
2.காரணம் அன்றைக்கு குருநாதர் யார்…? என்பது அவர்களுக்குத் தெரியாது
3.ஆனால் அவருடைய செயலை யாரும் மறைக்க முடியாது
4.அவர் இட்ட கட்டளையைத் தான் செய்ய வேண்டுமே தவிர சுதந்திரம் எனக்கு இல்லை
5.அவர் இட்ட வேலையை நான் (ஞானகுரு) வேலைக்காரனாகச் செய்து கொண்டிருக்கின்றேன்… அவ்வளவுதான்
6.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும்… உடலைக் கோவிலாக மதிக்க வேண்டும் என்று சொன்னார்
7.அந்த அருள் உணர்வைப் பெற செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்
8.ஆக… நீங்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று உங்களிடம் தான் என் வரம் கேட்கின்றோம்
9.அருள் உணர்வுகளை யாம் பாய்ச்சப்படும் பொழுது நீங்கள் அந்த அருளைப் பெருக்கினால் தான் எனக்கும் அந்த அருள் கிடைக்கின்றது
10.நீங்கள் வளர்ந்தால் தான் நான் வளர முடியும்.

அதாவது… விவசாயம் செய்யும் போது நிலத்தில் நல்ல வித்துக்களைப் போட்டு விளையச் செய்தால் மகசூல் எப்படிக் கிடைக்கின்றதோ அந்த வித்து தான் மற்றவர்களுக்குக் கிடைக்கும்.

ஆகையினால் என் மனைவி தேடி வந்து என்னை அழைத்துக் கொண்டது. நாங்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனம் ஆகி… நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து கொண்டு வருகின்றோம்
1.இதே நிலை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தான்
2.நாங்கள் இருவரும் அருள் சேவை செய்து கொண்டிருக்கின்றோம்.

முக்காலத்தையும் அறியும் சக்தி கொடுக்கின்றோம்

முக்காலத்தையும் அறியும் சக்தி கொடுக்கின்றோம்

 

காட்டுப் பகுதிகளுக்குள் குருநாதர் அழைத்துச் செல்லப்படும் பொழுது அங்கே மனிதனும் மிருகங்களும் சந்தர்ப்பத்தால் மடிந்த நிலையில் அந்தச் சடலங்கள் மண்ணிலே பதிந்து கிடக்கும் போது
1.அந்த அழுகிய உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளைச் சூரியன் காந்த சக்தி கவர்ந்து கொள்வதும்
2.மற்ற தாவர இனங்களில் வெளிப்பட்ட உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்வதும்
3.இன்னொரு விஷச் செடியின் மணத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்வதும்
4.அதே சமயத்தில் முதலில் சொன்ன தாவர இனத்தின் மணம் அழுகிய மணத்தைக் கண்டு அஞ்சி ஓடி வரப்படும் பொழுது
5.மனித உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் விஷச் செடியின் மணத்திலே தாக்கிய பின் கிறு கிறு என்று சுழன்று
6.இது அனைத்தும் ஒன்றாக சேர்த்து மனித உடலில் உருவான உணர்ச்சிகளும் கலந்து “புது விதமான செடியாக” உருவாகின்றது.

அந்தச் செடிகளை மனிதன் தொட்டால் “கரண்ட் இழுப்பது போன்று” சில செயல்களைச் செயல்படுத்துகின்றது. இதையே மருந்தாக அரைத்துக் கொடுத்தால் பல பகைமை உணர்வுகளை நீக்கும் சக்தியும் வருகிறது.
1.அதனுடன் எந்தெந்த மருந்துகளைச் சேர்த்தால் எந்தெந்தத் தாவரங்களைச் சேர்த்தால்
2.மனித உடலில் விளைந்த தீமைகளை ஊடுருவி அந்த உணர்ச்சிகளை எப்படி மாற்றுகின்றது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

சில பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றார். ஆனால் அந்த இடத்திலே மிதித்த பின் கீழே ஒரு கொடி படர்ந்துள்ளது. கொடி மேல் என் கால் பட்ட பின் எனக்கு நினைவு இழந்து விட்டது. மறதிப் பூடு என்று சொல்வார்கள்…!

இந்த செடியினுடைய தன்மை என்ன…? ஏன் இப்படி வளர்ந்தது…? என்ற நிலைகளை குரு விளக்குகிறார்.
1.பல மனிதர்கள் உணர்வு கொண்டு ஒருவருக்கொருவர் இரக்கமற்றுத் தாக்கி இரத்தக்கசிவுகளாகி இருந்தால்
2.இதைப் போன்ற சில பூடுகள் ஒன்றுடன் ஒன்று கலந்து அங்கே உருவானதால்
3.அங்கே தாக்கும் போது “அவர்கள் எப்படி நினைவிழந்தார்களோ” இதைப் போன்று
4.இந்தக் கொடியை மிதிப்பவர்களையும் நினைவிழக்கச் செய்கின்றது…?

ஆனால் மற்ற உயிரினங்களை நினைவிழக்கச் செய்வதில்லை.

மனிதர்கள் வரப்படும் பொழுது அவனுடைய உதிரம் அந்த உணர்வுகள் படர்ந்து இருப்பதனால் இந்த பூடுகள் எப்படி விளைகின்றது…? என்று தெளிவாக எனக்கு உணர்த்திக் காட்டுகின்றார்.

மனிதனாக நாம் வாழும் நிலையில் தாவர இனச் சத்தை நாம் நுகர்ந்த பின் அந்த உணர்வின் இயக்கங்கள் அது அணுக்களாக விளைவதும் அதன் வழி தான் பல கோடிச் சரீரங்களை மாற்றி வந்திருக்கின்றோம்.

ஒன்றுடன் ஒன்று… ஒன்றுடன் ஒன்று கலந்து… கலந்து… “வெங்காயச் சருகு போன்று அது தோடாக” (மேல் தோல்) எப்படி இருக்கின்றதோ நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொன்றும் மற்ற மிருகங்களிலிருந்து நுகர்ந்த உணர்வுகள்
1.அணுக்களில் அடுக்கடுக்காக மாறி அது ஒரு முழுமை அடைந்து
2.அந்த உணர்வைப் போல எத்தனையோ கோடி அணுக்கள் சேர்த்துத் தான் மனிதனாக உருவாகக் காரணமானது.

மிருகத்திலிருந்து மனிதனாகத் தோன்றிய நிலையில் அந்த உணர்வு கொண்டு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தியும் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால்
1.நம்முடைய முப்பிறவிகளின் நிலையும் பார்க்கலாம்
2.இப்பிறவியின் வாழ்க்கையின் நிலையை அறியலாம்
3.அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையினையும் அறியலாம் என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

மனிதனாகப் பிறந்த நிலையில் இன்று இருக்கும் இந்த உடலில் இருந்தே நாம் பிறவியில்லா நிலை எப்படி அடைய வேண்டும்…? என்பதற்காகத்தான் இதை எல்லாம் குரு எனக்குக் (ஞானகுரு) காட்டினார்.

சக்தி பெற்றால் இறுமாப்பு தான் வருகிறது…!

சக்தி பெற்றால் இறுமாப்பு தான் வருகிறது…!

 

பல வித்தைகளையும் பல சக்திகளையும் குருநாதர் காட்டினாலும் அந்தச் சக்திகளின் துணை கொண்டு எனக்குள் (ஞானகுரு) இறுமாப்பு அதிகமாக விளைகின்றது.

எதையெதையோ எப்படி எப்படியோ செய்யலாம் என்ற பல சக்திகளையும் உணர்த்துகின்றார் அது வந்த உடனே எனக்குள் இறுமாப்பும் வருகின்றது

இறுமாப்பு வரப்படும் பொழுது சில மந்திரவாதிகளைப் போய் அணுகுவது… அவர்களைச் செயலற்றதாக ஆக்குவது. அப்போது அவர்கள் பதிலுக்கு வன்மம் கொண்டு சில நிலைகளைச் செயல்படுத்துவார்கள்

மந்திரவாதிகளுக்குள் ஒருவருக்கொருவர் இந்த மாதிரிப் பழக்கம் உண்டு.

தனக்குள் மந்திரம் இருக்கிறது என்றால் அடுத்தவனை என்னவென்று சுண்டிப் பார்ப்பது… அதே மாதிரித் தான் என் புத்தியும் செயல்பட்டது. ஏனென்றால்
1.மனித வாழ்க்கையில் வந்ததால் குருநாதர்ர் சக்தி கொடுத்திருக்கிறார் என்றாலும்
2.இவன் என்ன பெரியவனா…? என்ற நிலைகள் அகந்தை கொண்டு செயல்படும் உணர்வே எனக்குள் தோற்றுவித்தது.

ஆனால் மாமகரிஷிகள் உணர்த்தியதோ… நமக்குள் செயல்படும் உணர்வின் இயக்கங்களைக் கண்டறிவதற்காகத் தான். அதாவது எத்தகைய வலு இருந்தாலும்… எண்ணத்தின் வலு கொண்டு வரப்படும் பொழுது நம் எண்ணம் தீமைக்கு எப்படி அழைத்துச் செல்கின்றது…? என்பது தான்…!

குருநாதர் எனக்கு உயர்ந்த சக்தியைக் கொடுத்திருந்தாலும்
1.அகந்தை ஓங்கப்படும் பொழுது மற்றவரை எளிமைப்படுத்திப் பார்ப்பது.
2.தான் தான் நான் தான் என்று நான் என்ற அகந்தை கூடும் பொழுது அங்கே நல்ல உணர்வைக் காக்க முடியாதபடி
3.ஆறாவது அறிவின் தன்மையைச் சீராகச் செயல்படுத்த முடியாதபடி
4.குரு காட்டிய அருள் வழியில் வலுவாகத் தீமையை அகற்றும் நிலைக்கு வருவதற்கு மாறாக
5.தீமையையே தூண்டச் செய்து “இரு நான் பார்க்கின்றேன்…” என்று அவனின் நிலைகளுக்கே என் உணர்வுகள் சென்றது.
6.அந்த உணர்வுகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது என்று பார்…! என்று குருநாதர் உணர்த்துகின்றனர்.

இப்படி உணர்த்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று என்னை அறியாதபடி ஒரு மலை மீது என் இரண்டு கால் பாதங்கள் மட்டும் வைக்கக்கூடிய இடத்திற்கு வந்துவிட்டேன். அங்கே உட்காருவதற்கோ… சரியானபடி நிற்பதற்கோ வழியில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது அந்த மலை.

இந்த இடத்திற்கு நான் எப்படிச் சென்றேன்…? எதனால் இங்கே வந்தேன்…? இப்போது என்ன செய்வது…? என்று தெரியாதபடி திகைத்துக் கொண்டு இருக்கின்றேன்.

எந்த மந்திரவாதி நம்மை இப்படிச் செய்தானோ…? என்று நினைக்கின்றேன். மந்திரவாதிகளைத் தொட்டு நாம் பரிசீலனை செய்ததினால்… யாரோ மிக சக்தி வாய்ந்தவர் என்ன இப்படி அழைத்து வந்து விட்டார்…! என்ற எண்ணம் வருகின்றது.

எந்தப் பக்கமும் என்னால் திரும்ப முடியவில்லை. காரணம் மலை உச்சி அது…! எந்தப் பக்கம் பார்த்தாலும் பாதாளமாகத் தெரிகிறது… தலை சுற்றுகின்றது பின்னாடி… சுத்தமாகவே திரும்பிப் பார்க்க முடியவில்லை.

அந்த அளவுக்கு மோசமான இடத்தில் இருக்கின்றேன். அப்போது திகைத்து…
1.எவ்வளவு பெரிய சக்தியை குரு நமக்குக் கொடுத்திருந்தாலும் அந்தக் குருவின் துணை நமக்கு இல்லையே
2.நான் அகந்தை கொண்டு அல்லவா எண்ணிவிட்டேன்
3.யாரோ ஒரு மந்திரவாதி தான் நம்மை இப்படிச் செய்து விட்டான் என்ற எண்ணமே வருகிறது.
4.குருவின் வலுவை நான் எண்ணவில்லை.

அகந்தை கொண்டு நாம் செய்த செயலுக்கு மற்றவர்கள் இவ்வாறு செய்து விட்டார்கள் என்ற உணர்வுகள் தான் தோற்றுவிக்கின்றது இதிலிருந்து எப்படி மீள்வது…? என்ற நிலை இல்லாதபடி நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

அரை மணி நேரம்… ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. நேரம் ஆக ஆக என் உடல் எல்லாம் வேர்க்கின்றது சறுக்குப் பாறை போல் இருக்கின்றது உடலில் வேர்வை அதிகமாக்க் கால்கள் தன்னிச்சையாக நகரும் தன்மை வருகிறது

பாதுகாப்பாக எதையாவது எட்டிப் பிடிக்க வேண்டும் என்றாலும் ஒன்றும் முடியவில்லை. முன் பக்கம் போனாலும் மரணம் தான் உயரமான இடமாக இருப்பதால் பின் பக்கம் போனாலும் மரணம் தான்… உடல் சுக்கு நூறாகிவிடும்.
1.இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது
2.குருநாதர் கொடுத்த சக்தியை எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை.

சிறிது நேரம் ஆனால் மரணம் ஆகி விடுவோம் என்ற இந்த பய உணர்வு அதிகமாக அதிகமாக உடலில் வெப்பத்தின் தன்மை அதிகரிக்க உடலில் இருந்து வேர்வைகள் கொட்டத் தொடங்கி விடுகின்றது.

ஆக வலு இழந்த நிலையில் இருக்கின்றேன்.

அந்த நேரத்தில் “மனமே இனியாகிலும் நீ மயங்காதே…!” என்ற குரல் வருகின்றது. குருவின் குரலாக அது எனக்குத் தென்பட்ட பின் கொஞ்சம் ஜீவன் வருகிறது.

மனமே இனியாயாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே…!
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

சிறிது நேரத்தில் நீ விழுந்து விடுகின்றாய் என்றால்… உன் குடும்பம் உன் பெண்டு பிள்ளைகள் என்று நீ மனக்கோட்டை கட்டினாய் அல்லவா…! கொஞ்ச நேரத்தில் எல்லாம் மறையப் போகின்றது பார்…!

அதைத் தொடர்ந்து சில உண்மைகளை அங்கே காட்டுகின்றார் குருநாதர்.

ஒவ்வொரு மனிதனும் செல்வங்களைக் குவித்து வைத்து அதைக் காத்திடும் நிலையாகத் தன் பந்துக்களும் தன் இனங்களும் என்ற நிலையில் மற்றவர்களை இம்சித்து… அவர்களைக் காத்துக் கொள்ளும் நிலை இருந்தாலும் “கடைசி நிலையில்” பொருளைக் காக்காத நிலையில் எப்படி வேதனைப்படுகின்றனர்…?

சம்பாதித்து வைத்த பணம் இருந்தாலும் அண்த நேரத்தில் வேதனையைத் தான் வளர்க்க முடிகின்றதே தவிர செல்வத்தைக் காத்திடும் நிலை இல்லாதபடி
1.வேதனையான நஞ்சு உருப்பெறும் நிலையாக
2.நல்ல குணங்கள் அழிந்திடும் நிலையாக சீர் கெட்டு இருக்கும் நிலையை
3.சினிமா படங்களில் காட்டுவது போன்று ஒவ்வொன்றாக அங்கே அந்த இட்த்தில் வைத்துக் காட்டுகின்றனர்.

பலருடைய நிலைகளைக் காட்டுகின்றார்.

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய் என்று பாடிக் காட்டுகின்றார்.

நேற்று இருந்தவர்கள் எல்லாம் இன்று இருக்கின்றார்களா…? நிலை இல்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…? மனமே இனி ஆகிலும் நீ மயங்காதே…! என்று தெளிவாக்குகின்றார்.

குறைந்தது ஒரு இரண்டு மணி நேரம் இருக்கும். இந்த உலகத்தில் உள்ள நான் முன் பின் பார்த்திராத ஒவ்வொரு குடும்பங்களையும் காட்டுகின்றார்.

1.அவர்கள் வாழ்க்கையில் செல்வத்தை எவ்வாறு சம்பாரித்தனர்…?
2.செல்வத்தைக் காப்பதற்காக எத்தனை வேதனைகள் படுகின்றார்கள்…?
3.அதனைத் தொடர்ந்து அந்தக் குடும்பங்களில் சாபங்கள் எப்படித் தொடர்ந்தது…?
4.சாபத்தினால் நலிந்த உடலாக நிம்மதியற்ற நிலைகளில் எவ்வாறு வாழுகின்றனர்…? என்பதைத் தெளிவுர எடுத்துக் காட்டுகின்றார்.

அதன் பின் அந்த மலையிலிருந்து என்னைக் கீழே இறக்கி விடுகின்றார். இனி நீ வலம் வரலாம்… இந்த உலகை அறியலாம்… நான் காட்டிய அனைவரைப் பற்றியும் நீ செல்லும் பாதையில் உனக்கு அந்த உணர்வுகள் வரும்

1.அதன்படி நீ அங்கே சென்று பார்…!
2.அந்தக் குடும்பத்தின் நிலையை ஊன்றிப் பார்
3.அவருடைய செயலைப் பார்… அதிலிருந்து அவர்கள் விடுபட என்னவென்று நீ சிந்தித்துப் பார்…! என்று
4.பல நிலைகளை உணர்த்துகின்றார் குரு.

அதன் வழியில் தான் இன்று வரையிலும் யாரையெல்லாம் காட்டினாரோ அவர்கள் அனைவருக்கும் கன்னியாகுமரியில் இருந்து இமயம் வரையிலும் கால்நடையாகப் பெரும்பகுதி நடந்து அவர் காட்டிய இடங்களுக்கு எல்லாம் அந்த உணர்வுகள் தோன்றி ஆங்காங்கு சென்று அந்தக் குடும்பங்களில் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்…? அவருடைய நிலைகள் என்ன…? என்று அறியும் வண்ணம் அறியச் செய்தார்.

அறிந்த நிலைகளை தான் இன்னும் அறிந்து கொண்டே இருக்கின்றேன்.

குருநாதர் எனக்கு ஊட்டிய ஆசை

குருநாதர் எனக்கு ஊட்டிய ஆசை

 

குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று யானைகள் வரும் இடமாக என்னைப் போகச் சொல்கின்றார்.
1.யானையின் மணத்தை நுகர்ந்து உனக்குள் வலுவாக்கினால்
2.யானையின் மணம் உனக்குள் வந்த பின்
3.மணத்தால் நுகர்ந்து அறியக்கூடிய அந்த மிருகங்கள் உன்னை ஒன்றும் செய்யாது.
4.நீ பயம் கொண்டு சென்றால் யானைகள் நிச்சயம் அடிக்கும்
5.ஆகையினால் பயத்தின் உணர்வு இல்லாதபடி அதனின் மணத்தினை நுகர்ந்து செல்ல வேண்டும் என்றார்.

உதாரணமாக யானைப்பாகனாக இருந்தாலும் அவனும் யானையைக் கண்டு பயந்தான் என்றால் அந்த யானை அவனைத் திருப்பி அடிக்கும். உணர்வின் தன்மை யானையின் மணத்தின் வலுவைக் காட்டப்படும் பொழுது தான் அது அடங்கும்.

ஆகவே குருநாதர் சொன்ன முறைப்படி காட்டிற்குள் செல்லப்படும் பொழுது யானை அருகே நான் சென்று விட்டேன். யானை தன் காதை விடைத்து விட்டால் அடுத்து மனிதனை அடிக்கத்தான் செய்யும். ஏனென்றால் ஏற்கனவே வேட்டைக்குச் சென்று எனக்குப் பழக்கம் உண்டு.

அப்போது காதை விடைத்தவுடன் எனக்குப் பயம் வருகின்றது குருநாதர் சொன்னபடி யானையின் மணத்தை நுகர்ந்தேன்… இருந்தாலும் அடுத்து… “யானை என்னை அடித்து விடுமே…” என்ற பயத்தைத் தான் நுகருகின்றேன்.

யானையின் உணர்வின் மணம் எனக்குள் வரவேண்டும் அந்த வலுப்பெற வேண்டும் என்று நான் எண்ணவில்லை அது என்னை அடித்து விடும் என்ற மணம் வரப்படும் பொழுது எனக்குள் நடுக்கம் ஆகிறது.

அப்பொழுதுதான் முன் வைத்த காலைப் பின் வைக்காதே என்று குருநாதர் சப்தமிடுகின்றார். நான் கூறிய உணர்வை நினைவில் வை…! என்றார்.

அவன் சொன்னபடி
1.பயம் வரும் பொழுது அந்த யானை உணர்வின் மணத்தை நுகர்வதற்கு அவர் சொன்ன சில முறைகள் உண்டு
2.அதை வைத்து அதனுடைய மணத்தை எடுக்கப்படும் பொழுது யானை என்னை ஒன்றும் செய்யவில்லை.

யானையை விரட்டக்கூடிய பச்சிலையையும் குருநாதர் கையிலே எனக்குக் கொடுத்து இருக்கின்றார். அதை எல்லாம் நான் மறந்து விட்டேன் இந்த உணர்வின் நினைவே எனக்கு வரவில்லை. யானை அடித்து விடும் என்று நினைவு தான் ஓங்கி வந்தது

இதை மாற்றப்படும் பொழுது அவர் சொன்ன உணர்வுகள் நுகரப்பட்டு அந்த மணம் அங்கே ஆகும் பொழுது அது தன்னுடைய வலுவை இழக்கிறது.

1.அதாவது துப்பாக்கியையும் கையில் வைத்துக் கொண்டு
2.புலி வருகிறது புலி வருகிறது என்று நடுங்கிக் கொண்டிருக்கின்ற மாதிரி…
3.அந்த இடத்தில் அவ்வாறு எனக்குக் காட்டுகின்றார்.

சுடும் மார்க்கத்தைக் காட்டியிருந்தாலும்… அதை அடக்கும் தன்மை இருந்தும்… இல்லாதபடி ஆகிவிட்டது. இதை எல்லாம் அனுபவரீதியிலே குருநாதர் கொடுத்தது.

அவர் சொன்ன முறைப்படி நுகர்ந்த பின் யானை என்னை ஒன்றும் செய்யவில்லை ஆனால் அந்த கூட்டத்தோடு வந்து ஒரு குட்டி என்னைத் இடித்துத் தள்ளுகின்றது… தொடுகின்றது… என்னை இழுக்கின்றது.

பெண் யானை என்ன செய்கின்றது…? அப்படியே முறைத்து நிற்கின்றது. என் மனதைக் கொண்டு… உள்ளபூர்வமாக நீ போ சாமி…! என்று இந்த உணர்வலைகளை வெளிப்படுத்தும் போது… அந்தக் குட்டி யானை அதனின் தாய் இழுத்துக் கொண்டு சென்று விட்டது.

இயற்கை உண்மை நிலைகளை அறிவதற்குத் தான் என்னை இப்படிக் காடு மேடலாம் குருநாதர் என்னை அலையச் செய்தார்… சாதாரணமாக அல்ல…!

உங்களிடம் இப்போது பேசுகிறேன் என்றால் அந்தக் குரு வழியினை நான் கடைப்பிடிக்கவில்லை என்றால் இருளுக்குள் தான் நான் சிக்க முடியும். உடலின் ஆசை தான் எனக்குள் வளரும்.

இந்த உடலில் ஆசை ஆனால் காட்டிற்குள் செல்லப்படும் பொழுது பல மிருகங்கள் இருந்தும் மரணம் அடைய வேண்டி வரும்.

இதற்கு அடுத்து என்னைத் திருப்பதிக்குச் செல்லும்படி சொல்கின்றார். நாரதர் மன்றம் என்று ஒன்று உண்டு அதையும் கடந்து தாண்டி செல்லச் சொல்கின்றார்.

பழங்கள் காய்க்கும் மரங்கள் ஏராளமாக அங்கே உண்டு. வருடம்தோறும் ஒவ்வொரு காலத்திற்கு எத்தனையோ கனிகள் அதிலே உருவாகும். கொய்யா… நவாப்பழம் போன்று எத்தனையோ வரும். அத்தனையும் அங்கே உருவாகின்றது.

துறவறம் பூண்டு தவத்திற்காகச் செல்பவர்களுக்கு அது தான் அங்கே உணவு. பழங்களை உண்டு தான் அங்கே தவத்தை மேற்கொண்டார்கள். அந்த இடத்திற்கு என்னைப் போகச் சொல்கின்றார்.

கனிகளை பறித்துச் சாப்பிட்டு அங்கே இருக்கலாம் என்றாலும் அந்தக் கனிகளை உட்கொள்ள அதைத் தேடி கரடி போன்ற மிருகங்கள் வருகின்றது… குரங்குகளும் வருகின்றது…!

அவைகள் அதைப் பறித்துச் சாப்பிடுகின்றன. நான் மரத்தில் ஏறித் தான் சாப்பிட வேண்டும் அல்லது கீழே விழுந்ததை எடுத்துச் சாப்பிட வேண்டும்.

ஒரு கரடிக் கூட்டம் அங்கே வருகின்றது.
1.முதலில் பயம் வந்தது..
2.பின் குருநாதர் சொன்ன முறைப்படி அந்த மணத்தை எடுத்தவுடன்… பேசாமல் முர்ர்…முர்ர்…முர்ர்.. என்று உறுமிக் கொண்டே போய்விட்டது.

எல்லாமே அனுபவ ரீதியில் தான் குருநாதர் கொடுக்கின்றார்.

பகலிலே குரங்குகள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றது. ஒரு ரவுடிக் குரங்கு எல்லாவற்றையும் துரத்தி அடித்து விரட்டுகின்றது. ஆனால் அங்கே இன்னொரு குரங்கு குட்டி போடுகின்றது.

அதனுடன் சேர்ந்த குரங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து குழந்தை பிறந்த பிற்பாடு முத்தம் கொடுக்கின்றது. ரவுடிக் குரங்கிடமிருந்து பாதுகாப்பாகவும் இருக்கின்றது.

ஆனால் அது ரவுடித்தனம் செய்தாலும் குழந்தைப் பாசத்தால் “குட்டிக்கு அதுவும் முத்தம் கொடுக்க ஆசைப்படுகின்றது…” அதனுடைய பாசத்தால் இச்.. இச்.. என்று குழந்தையை நாம் கொஞ்சவது போன்று கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தையை நோக்கி நகர்ந்து வருகின்றது.

அது நகர நகர… மற்ற குரங்குகள் அனைத்தும் உஷாராகின்றது. ஆனால் தாய் குரங்கு வெவ்வேவ்வே… என்று கத்த ஆரம்பிக்கின்றது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி… குட்டியிடம் சென்று தொட்டு முத்தம் கொடுக்கின்றது.

ஏதாவது ஆனால் எல்லாக் குரங்குகளும் அதைத் தாக்குவதற்கு உஷாராக இருக்கின்றது. ஆனால் குட்டிக்கு ஒன்றும் தெரியாது இதை குருநாதர் பார்க்கும்படி செய்கிறார்.

குரங்கு தன் குட்டியை எவ்வாறு பாதுகாக்கின்றது…? அதனுடைய இனங்கள் எல்லாம் எப்படிப் பாதுகாப்பாக இருக்கின்றது…? என்று காட்டுகின்றார்.

அப்பொழுது குடும்பத்தின் பால் என் நினைவுகள் செல்கின்றது மனைவியை விட்டு விட்டு வந்தோம்.. பெண் குழந்தைகளையும் விட்டு விட்டு வந்தோம். ஒரு பிள்ளையை மட்டும் தான் கட்டிக் கொடுத்தது. பாக்கி யாரையும் கட்டிக் கொடுக்கவில்லை. ஒரு கைக்குழந்தையும் இருக்கின்றது.

குரங்கையும் அதன் குட்டியையும் பார்த்தவுடன் என் ஞாபகம் அங்கே செல்கின்றது
1.அந்த ஆசை வரப்படும் போது என்னைப் பாதுக்காக்கும் உணர்வு போய்விடுகின்றது… பயமும் மற்ற நிலைகளும் வருகின்றது.
2.கரடி அடித்து விடுமோ பாம்பு கொத்தி விடுமோ புலி அடித்து விடுமோ இந்த உணர்வெல்லாம் வருகிறது.

ஆனால் அந்த உணர்வை நுகராது இருக்கும் வரை பயமில்லை. என் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்ற ஞாபகம் வந்த பின் பயம் எல்லாம் வருகின்றது. இந்த உணர்ச்சியை ஊட்டி அனுபரீதியாக எனக்கு அங்கே காட்டுகின்றார்.

1.நான் கொடுத்த சக்தியை நீ எப்படிப் பயன்படுத்துகின்றாய்…?
2.நான் எப்படிப் பயன்படுத்தும்படி சொன்னேன்…? என்று வினாக்களை எழுப்பி எனக்கு உண்மைகளை உணர்த்துகின்றனர்.

அது மட்டுமல்ல. இன்னொரு வேலையும் குருநாதர் செய்கின்றார். சிறிது நகர்ந்து ஒரு இடத்தில் உட்கார்ந்தேன். உட்கார்ந்த இடத்திலே அந்தக் காலத்து அரசர்கள் மண்ணிலே புதைத்து வைத்த காசு அங்கே வெளியே வருகிறது.

அதுவாக வந்ததா…! அல்லது குருநாதர் அப்படி வரும்படி வரவழைத்தாரா…? அது எப்படி…? என்று எனக்குத் தெரியாது. பார்த்தால் தங்கக் காசாக இருக்கின்றது. மொச்சைப் பயர் அளவு தடிமனாகவும் வட்டமாகவும் நீளமாகவும் இருக்கின்றது.

அதை எடுத்தவுடன் ஆசையை ஊட்டுகிறார். இது எதற்காகச் சோதிக்கின்றாரோ… தெரியவில்லை…! எனென்றால் குழந்தையை அந்த நேரத்திலே நினைக்கின்றோம் அல்லவா…!

இதை எடுத்துக் கொண்டு போய்க் குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு வரலாமா என்ற இந்த எண்ணத்தை ஊட்டுகின்றார்.
1.அப்பொழுது அந்த இடத்தில் எனக்குள் மனப்போராட்டமாகின்றது.
2.குருநாதர் சொன்ன வழியில் ஞானத்தின் வழியில் செல்வதா அல்லது காசைப் பார்த்த பின் இந்த ஆசையின் வழி செல்வதா…?
3/குடும்பத்தில் குழந்தைகளைக் காக்க வேண்டுமே…!

குரங்கு தன் குட்டியைப் பாதுகாத்தது. அது போல் இதை எடுத்து என் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு வரலாமா…? என்று மனப் போராட்டத்தைக் கொடுக்கின்றார்.

இத்தனையும் நான் ஜெயித்து வர வேண்டி இருக்கின்றது. பின் அதற்கப்புறம் நான் அதை எடுத்து அந்தக் காசை எல்லாம் திருப்பதி உண்டியலில் கொண்டு போய்ப் போட்டேன்.

இது நடந்தது 1972 அல்லது 1973ல் இருக்கும். பத்திரிகைகளில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். ஏனென்றால் குருநாதருடைய பரிசோதனை
1.“அவர் கொடுத்த சக்தியைச் சீராக நான் பயன்படுத்துகின்றேனா…? என்று
2.பல வகைகளிலும் மனப் போராட்டங்கள் வருகின்றது.
3.இத்தனையும் வென்று தான் நான் வர வேண்டி இருக்கிறது.

இதைக் கடந்த பின் மூன்று லட்சம் பேரைச் சந்தித்து ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு துன்பப்படுகின்றான்…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

இப்படி எத்தனையோ சிரமப்பட்டு அனுபவங்கள் பெற்ற பின் தான் உங்களுக்கு ஞானத்தின் வழித் தொடராக மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

உங்கள் நினைவினை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பால் செலுத்தி அவர் நமக்குக் கொடுத்த அருளும்… ஞானிகள் பெற்ற உண்மையையும் நாம் அறிந்து இந்த வாழ்க்கையைச் சீர்படுத்தவும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவும்… அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்தின் சக்திகளைப் பெறத் தகுதி உடையவர்களாகவும் உங்களை நீங்கள் மாற்ற வேண்டும்.

அதற்காக வேண்டும் உங்கள் உயிரைக் கடவுளாக வணங்கி உடலைக் கோவிலாக எண்ணி அவனால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் ஈசனுக்கு நற்பணிகளைச் செய்ய வேண்டும் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

1.அதன் வழியில் நல்ல உணர்வுகளை நுகர்ந்து உங்களை நீங்கள் பாதுகாத்தால்
2.உயிரான ஈசனுடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறக்கூடிய தகுதி நீங்கள் பெறுகின்றீர்கள்.

இந்த ஆசையைத்தான் குருநாதர் எனக்கு ஊட்டினார்…!