மறதிப் பூடு

மறதிப் பூடு

 

காட்டிற்குள் சில வகையான செடிகள் உண்டு அந்தச் செடிகளின் மீது மிதித்து விட்டால் நம் நினைவையே இழந்து விடுவோம். அடுத்து எங்கே போகின்றோம்…? என்ன செய்கிறோம்…! என்றே தெரியாது.

அந்தச் செடியைத் தூசி போல் ஆக்கி… வீட்டு வாசல்படியில் தேய்த்து விட்டால் உங்கள் நினைவுகள் மறந்துவிடும். உங்கள் கடையில் கொண்டு போய்ப் போட்டால் உங்களுக்குச் சிந்திக்கும் தன்மை வராது. இதை “மறதிப் பூடு…” என்று சொல்வார்கள்

குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று இதை எல்லாம் எமக்கு (ஞானகுரு) ஞாபகப்படுத்திக் காட்டுகின்றார்.

நாங்கள் ரெண்டு பேரும் செல்லும் பொழுது திடீரென்று அவர் ஒதுங்கிச் செல்கிறார்… என்னைச் செடி மீது மிதித்து விட்டு வாடா…! என்று சொல்கின்றார்.

செடியை மிதித்து நான் கடந்து சென்றவுடன் என் நினைவே இல்லை…! எந்த பக்கம் போகின்றேன்… என்ன செய்கின்றேன்…? என்றே எனக்குத் தெரியவில்லை

செடிகளுக்குச் சத்து எப்படி இருக்கிறது பாருடா…! என்கிறார்.

1.மனிதனான பின் காட்டிற்குள் அவன் அடிபட்டு வேதனையுடன் கீழே விழுந்து தன்னை மறந்த நிலைகள் மடிந்த பின்
2.அவனுடைய உணர்வுகள் செடியுடன் கலந்து அதை அது உணவாக உட்கொண்ட பின்
3.அதன் விழுதுகளில் இப்படி எல்லாம் ஆற்றல் வருகிறது…. அதை மிதித்தால் நம் சிந்தனையை இழக்கச் செய்கின்றது

பிறகு குருநாதர் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே செல்கின்றார். ஆனால் என்ன செய்வது… எந்தப் பக்கம் போவது…? என்று எனக்குத் தெரியவில்லை.

வேகமாக என் கையை பிடித்து இழுத்து… வாடா… வாடா… வாடா… வாடா… என்று என்று கூப்பிட்டுக் கொண்டே சென்றார்.

பின் வேறு சில செடிகளைக். காண்பித்து… “அதன் மீது உட்கார்…” என்றார். உட்கார்ந்த பின் அப்புறம் எனக்கு நினைவு வருகின்றது.

இப்படி அனுபவரீதியில் தான் குருநாதர் எனக்குக் கொடுத்தார். வெறும் வாயால் சொல்கிறேன் என்று அல்ல.

1.உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் திரை மறைவாக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் செல்ல வேண்டும்
3.விஞ்ஞான உலகில் வரும் கடுமையான தீமைகள் இருந்து விடுபட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் இத்தனையும் கற்றுக் கொடுத்தார். இருந்தாலும் இதை எல்லாம் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டு உங்களிடம் சொல்லாமல் விட்டால் என்னவாகும்…! எனக்குள் அது மறைந்து விடுகின்றது.

அப்படி இல்லாதபடி உங்களுக்குள் அதை எல்லாம் உணர்த்தப்படும் போது
1.உங்கள் பார்வையால் மற்றவருடைய தீமைகளைப் போக்க முடியும்
2.சிந்தனை இழக்கச் செய்யும் நிலையிலிருந்து மற்றவர்களை மீட்கும் சக்தியும்
3.அதனை மாற்றியமைக்கும் சக்தியாகத் தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக
4.அந்த ஞானத்தின் வழிகளில் உங்கள் வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமையும்.

இதன் வழியில் ஒவ்வொருவரும் சென்றால் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் உங்களுக்குள் கிடைக்கின்றது. ஆகவே… நீங்கள் எல்லோரும் ஞானியாக வேண்டும்.

உங்கள் உணர்வைக் கேட்போருக்கும் அருள் ஞானத்தை ஊட்டி மறைத்திருக்கும் தீமையான உணர்வுகளை நீக்கி அருள் ஒளியின் உணர்வை அவர்களும் பெருக்க வேண்டும்… உங்களுக்குள்ளும் அருள் சக்தி பெருக வேண்டும்.

அத்தகைய நோக்கத்தில் தான் குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று எமக்குக் காட்டிய உண்மைகளை உங்களுக்குள்ளும் தெளிவாக்குகின்றேன்.

உடலுக்குள் பல மாற்றங்களை உண்டாக்கி வலியோ வேதனையோ நோயோ எப்படி உருவாகிறது…? என்பதை நேரடியாகக் காட்டினார் குருநாதர்

உடலுக்குள் பல மாற்றங்களை உண்டாக்கி வலியோ வேதனையோ நோயோ எப்படி உருவாகிறது…? என்பதை நேரடியாகக் காட்டினார் குருநாதர்

 

ஈஸ்வரபட்டாய குருதேவர் எம்மை (ஞானகுரு) பதினான்கு வருடம் பல காடு மேடெல்லாம் அலையச் செய்தார். என்னை அறியாது எனக்குப் பல துன்பங்களை அங்கே ஊட்டினார்.

அந்தத் துன்பத்தை நான் நுகர்ந்து பார்க்கும் போது அது எல்லாம் எனக்குள் வந்து விடுகின்றது. அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று அனுபவபூர்வமாக நான் தெரிந்து கொள்வதற்காகவே அதை எல்லாம் கொடுத்தார்.

அதற்காக வேண்டி மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படியும் செய்தார். அதை நான் வேடிக்கை பார்க்கும் பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
1.ஒருவருக்கொருவர் சண்டை போடுவது… ஒருவருக்கொருவர் தகாத நிலையில் பேசுவது…
2.இது போன்ற எத்தனையோ உணர்வின் தன்மைகளை நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது
3.சுவாசித்தது உயிருடன் மோதும் பொழுது ஏற்கனவே நான் எடுத்துக் கொண்ட நல்ல குணங்களுக்குள் இது கலந்து
4.அந்த விஷத்தின் தன்மை எனக்குள் இருக்கும் நல்ல குணத்தைச் செயலாக்க விடாதபடி
5.என் எண்ணங்கள் எப்படி எல்லாம் மாறுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும்
6.என்னை அறியாமலே உடலுக்குள் பல கவலையும் பல சஞ்சலமும் ஏற்படச் செய்து
7.எவ்வளவு திடசாலியாக இருந்தாலும் பலவீனப்படுத்துவதையும் குருநாதர் காட்டினார்.

ஏனென்றால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருக்கும் போது அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வைக் கூர்மையாகக் கவனிக்கப்படும் பொழுது அந்த உணர்வின் அலைகள் இங்கே பதிவாகி விடுகின்றது.

அந்த அலைகள் உடலுக்குள் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் இரவில் படுத்திருக்கும் போது அந்த உணர்வுகள் தன்னை அறியாமலேயே சுவாசிக்கச் செய்து “பயப்படச் செய்வதையும்… தூங்கவிடாமல் எப்படிச் செய்கிறது…? என்பதையும்” நேரடியாக அனுபவபூர்வமாக குருநாதர் காணும்படி செய்தார்.

அங்கே பார்த்த உணர்வுகள் உடலுக்குள் அது எதுவாக இணைகின்றது…? அது மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக உணர்ச்சிகளை ஊட்டி உடலில் அணுக்களாக வளரச் செய்து நோய்களாக எப்படி உருவாகிறது…?

காரணம்…
1.ஒவ்வொரு நாளும் எந்தெந்தக் குணங்களை எடுக்கின்றோமோ…
2.அந்தக் குணங்களுக்குத் தக்கவாறு… ஒவ்வொரு உணர்வுக்குத் தக்கவாறு தான் உடலும் உடல் உறுப்புகளும் அமைந்தது.
3.ஈரல் கல்லீரல் மண்ணீரல் கிட்னி சிறுகுடல் பெருங்குடல் இருதய வால்வுகள் சிறு மூளை பெரு மூளை என்று
4.அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு எதனெதனை அது சேர்த்ததோ
5.அந்த மிருதுத் தன்மைக்குத் தக்கவாறு தான் அதனுடைய செயல்களும் இருக்கின்றது.

அந்த உறுப்புகளின் இயக்கங்களையும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒலிகளுக்கொப்ப அது எப்படி இயங்குகிறது..? என்ற நிலையையும் உடலுக்குள்ளேயே வைத்துக் காட்டினார் குருநாதர்.

மருத்துவம் படிப்பவர்கள் படிப்பு (PRACTICAL) மூலமாகத் தெரிந்து கொள்வதற்காக பிறருடைய உடல்களை எப்படி எடுத்துப் பரீட்சித்துப் பார்ப்பார்களோ அதே போல
1.எத்தகைய உணர்வை நீ சுவாசிக்கின்றாய்…?
2.எடுக்கும் எண்ணங்கள் அனைத்தும் உடல் உறுப்புகளை எப்படித் தாக்குகின்றது…?
3.அந்த உணர்வின் வேகத் துடிப்பு இரத்தத்துடன் கலந்து சுழன்று வரப்படும் போது
4.ஒவ்வொரு உறுப்புகளிலும் இது எதிர்மாறாகும் போது அது எப்படி எரிச்சலாகின்றது…
5.அது எந்தெந்த வேதனையாக உருவாக்குகின்றது…? என்று காட்டினார்.

உடலிலே சர்க்கரைச் சத்து அதிகமாகி விட்டால் எந்த அளவிற்குச் சர்க்கரை அதிகமாக இருக்கின்றதோ அதற்குத் தகுந்த மாதிரி சிறு நீரின் கலர் மாறுகின்றது… பார்க்கலாம்…!

அதைப் போல் பிறருடைய செயல்களை நாம் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும்… இந்த உணர்வுகள் அது சுவாசித்து உடலுக்குள் செல்லும் போது இரத்தமாக மாறி… உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளுக்குள் ஊடுருவி… இதற்கும் அதற்கும் எதிர்மறையாகும் போது
1.அந்த உறுப்புகள் எப்படிப் பின்னமாகின்றது…?
2.உனக்குள் வலி எப்படி வருகிறது…? என்ற நிலையையும்
3.என்னையே முன்னிறுத்தி என் உடலின் இயக்கங்களைப் பார்க்கச் சொல்கிறார்.

எக்ஸ்ரே படங்களிலும் மற்ற ஸ்கேன் படங்களிலும் பார்ப்பது போல் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அது எவ்வாறெல்லாம் உன் உடலில் விளைகிறது…? என்பதை குருநாதர் ஒவ்வொரு நிலைகளிலும் இதைக் காட்டினார்.

பின் அதை எல்லாம் மாற்றும் உபாயமாக மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்க வேண்டிய முறைகளையும் கொடுக்கின்றார். அதை எல்லாம் கண்டுணர்ந்த பின் தான் உங்களுக்குள் இதை உபதேசிக்கின்றேன்.

1.நீங்கள் சாதாரண நிலையில் இருந்தாலும்
2.சிறு குழந்தையாக இருந்தாலும் அல்லது படிக்காதவர்களாக இருந்தாலும்
3.யாம் உபதேசிப்பதைக் கூர்மையாகப் பதிவு செய்யப்படும் போது
4.குருநாதர் காட்டிய அருள் ஞானிகளின் சக்திகளை நீங்களும் பெற முடியும்.

அந்த மெய் ஞானிகள் தீமையை நீக்கும் ஆற்றல்களைப் பெற்று எவ்வாறு விண்ணுலகம் சென்றார்களோ அந்த உணர்வின் சத்தை உங்களுக்குள் நினைவு கூர்ந்து இங்கே உபதேசமாகக் கொடுக்கும் போது உற்றுக் கவனித்தால் அது உங்களுக்குள் பதிவாகிவிடுகின்றது.

அந்தப் பதிவை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அவர்கள் பெற்ற சக்தியை நீங்களும் பெற முடியும்… விண் செல்லவும் முடியும்…!

மரண வாயிலில் வைத்து குருநாதர் எனக்குக் கொடுத்த சக்தி

மரண வாயிலில் வைத்து குருநாதர் எனக்குக் கொடுத்த சக்தி

 

ஒரு சமயம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கை கால் வராது போல் இருந்தார் என்று சொல்லி (தூக்கிக் கொண்டு தான்) ஐவர் மலைக்கு அழைத்துச் சென்றிருந்தேன் (ஞானகுரு).

அங்கே சென்ற பின் இரவிலே நீ என் பக்கத்திலேயே படுத்துக்கொள்…! என்றார், குருநாதர். பனிரெண்டு மணி இருக்கும். கை கால் வராமல் முடமாக இருந்தவர் எழுந்து நடக்கிறார்… சாதாரணமாக நடக்கின்றார்…!

அங்கு ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். நடந்து போய் அங்கே உட்கார்ந்து கொண்டார். அவர் செய்வதை நான் முழித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

அங்கே போனவுடன்… “தெலுங்கு ராஜ்ஜியம் இங்கே வாடா…” என்னை எவனோ தூக்கிக் கொண்டு வந்து இங்கே வைத்துவிட்டான்… வந்து தூக்குடா…! என்கிறார்.

இரவு நேரத்தில் அங்கே போய் என்ன செய்வது…? சருக்கலான பாறையில் உட்கார்ந்திருக்கிறார்.

அந்த இடத்தில் இருந்து கொண்டு என்னைக் காப்பாற்றுடா… என்னைக் காப்பாற்றுடா,.. என்கிறார். பார்த்தால் சறுக்கலான பாறையில் பிடிக்க முடியாத இடத்தில் இருக்கின்றார். (இன்னும் கூட அந்த வழுக்குப்பாறை அங்கே இருக்கின்றது)

நான் எப்படி சாமி வர முடியும்…? என்று கேட்டேன். பின் வேஷ்டியெல்லாம் கட்டி விட்டு இதைப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு கீழே போய்க் கொண்டே இருக்கின்றார், நீ வந்து என்னைக் காப்பாற்றுடா, துண்டு… வேஷ்டி எல்லாம்… என்னைக் காப்பாற்றாது…! என்கிறார் குருநாதர்.

சாமி… வேஷ்டியையும் பிடித்துக் கொள்ளுங்கள், நானும் பிடித்துக் கொள்கிறேன் என்றாலும் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது நான் (ஞானகுரு) ஒரு பக்கம் இருந்தாலும் என்னை வழுக்கிவிட்டு இந்தப் பக்கம் கொண்டு போகின்றது..

குருநாதர் “என்னை காப்பாற்றுடா…” என்கிறார்.

சாமி, நான் கீழே போய்த்தான் காப்பாற்ற வேண்டும். கீழே விழுந்தால் நொறுங்கித் தூள் ஆகிப்போகும். அங்கு போய்த்தான் காப்பாற்ற வேண்டும் என்றேன்.

இது நடந்த நிகழ்ச்சி.

அப்பொழுதுதான் அதிகாலை விடிந்து சில நிலைகள் வருகின்றது. அங்கு கீழே ஒரு பஸ் போய்க் கொண்டிருந்தது. உடனே குருநாதர் “ஏறு சிங்… இறங்கு சிங்… என்று நீ பார்த்திருக்கிறாயாடா…?” என்றார்.

1.சாமி… இப்பொழுது நான் இறங்கு சிங்கில் கீழே போய்க் கொண்டு இருக்கிறேன்.
2.செத்த பிற்பாடு… உடலிருந்து உயிர் ஏறு சிங்காக மாறிவிடும்.
3.அதிலே வேண்டுமென்றால் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் சாமி என்றேன்.

ஏன்டா நான் சொல்கிறேன்… நீ எதிர்த்துப் பேசுகின்றாயா…? என்றார், குருநாதர்.

பார்த்தால் அந்த இடத்தில் வைத்துக் குருநாதர் பல நிலைகளில் பல அற்புதங்களைக் காட்டுகின்றார். இந்த உலக நிலைகளையும் மற்ற நிலைகளையும் எல்லாவற்றையும் காட்டுகின்றார்.

அப்பொழுது நீ இந்த உலகத்தைப் பாருடா…! என்கிறார்.

எங்கே சாமி பார்ப்பது…? இன்னும் கொஞ்ச நேரத்தில் கீழே போய் எல்லாம் அடங்கிவிடும் போல் இருக்கின்றது…! என்றேன் நான்.

நீ உலகத்தைப் பாருடா என்றால்… என்னடா நீ அடங்கிவிடும்…! என்று சொல்கின்றாய்…? என்று இப்படி வாதம் பண்ணிக் கொண்டே இருக்கின்றார் குருநாதர்.

அப்படியே பாறையில் நெஞ்சோடு தேய்த்து இரத்தம் வடிகின்றது. வழுக்குப் பாறையாக இருப்பதால் அப்படியே என்னைக் கீழே கொண்டு போகின்றது. இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்விடுவோம் (உயிர்) போலத் தெரிகின்றது.

நீ இதைப் பார்… உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்…! என்று என்னென்னமோ அதிசயங்களை எல்லாம் காட்டுகின்றார் குருநாதர்.

சாமி… இன்னும் கொஞ்சம் நேரத்தில் நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் போய்ப் பார்க்கப் போகின்றேன், அது வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்கள்…! என்றேன்.

அதற்குப்பின்…
1.எத்தனையோ உணர்வுகளை ஊட்டுகிறார், உலக நிலைகளைக் காட்டுகின்றார்
2.இந்த மரண நிலைகளில் வைத்துத்தான் முழுமையான சக்தியைக் கொடுக்கிறார்
ஐவர் மலையில் வைத்துத்தான் அதைக் கொடுத்தார் நமது குருநாதர்.

அந்தக் காலை நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். குருநாதர். அங்கிருந்து எழுந்து வந்து என்ன செய்தார்…?

1.சிவ தாண்டவம் ஆடுகிறார்
2.ஒரு பெரு விரலில் நின்று கொண்டு அப்படியே “கிறு…கிறு…கிறு” என்று பம்பரம் போல் சுற்றி அவ்வளவு அற்புதமாக ஆடுகிறார்.
3.எல்லா வேலைகளையும் செய்கின்றார், குருநாதர்.

நீ பல உண்மைகளை அறிவாய்… பல நிலைகளைப் பெறுவாய் என்று இந்த இடத்தில் வைத்து மரண வாயிலில் வைத்துத்தான் இந்த சக்திகளைக் கொடுக்கிறார்.

இந்த உலகம் எப்படி இருக்கிறது என்று நீ அறியும் தன்மை பெறுவாய், அதை எப்படிக் காக்க வேண்டும்…? என்று காட்டுகின்றார்.

யாராவது தவறு செய்தால் கூட என்னிடம் இருக்கும் சக்தியைக் கொண்டு ஒன்றும் செய்வதில்லை. ஆனால் அதைச் செய்தால் இந்தச் சக்தி விரயம் ஆகும்.
1.அந்த விரயம் ஆகும் நிலைக்குக் கொண்டு செல்லாமல்
2.உருவாக்கும் நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார் குருநாதர்.

இப்படித்தான் ஏதேதோ செய்யும்படி பல நிலைகளைச் செய்து… அதை எல்லாம் சொல்வதற்கில்லை…! இப்படி எண்ணிலடங்காத நிலைகளைச் செய்துதான் எனக்கு இந்த வாக்குகளைக் கொடுத்தார் குருநாதர்.

நமது அகண்ட அண்டமும் பேரண்டமும் இந்த உணர்வின் தன்மை எப்படி இயங்குகிறது…? என்ற சில உண்மையின் தன்மைகளை எல்லாம் கொடுக்கிறார்.

நமது பிரபஞ்சமும் 27 நட்சத்திரங்களும் எப்படி எல்லாம் இயங்குகிறது…? என்பதை நேரடியாகப் பார்த்தால் எப்படி இருக்கும்…!
1.அந்த மரண வாயிலில் வைத்துத்தான் இந்த அற்புதங்களை
2.பார்க்காத காட்சிகளை எல்லாம் காட்டுகிறார் குருநாதர்.

பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு ஏறு சிங்… இறங்கு சிங்… என்று சொல்லி இந்த ஆட்டங்களைக் காட்டி அப்புறம் என்னை எழுப்பிவிடுகிறார் குருநாதர்.

அப்பொழுது, அந்த இடத்தில் மற்றவர்கள் பார்க்கும் போது கால் முடமாக இருப்பது போல இருக்கிறார். ஆனால் இங்கே நன்றாக நடனம் ஆடுகின்றார்.

மற்றவர்கள் அவரைப் பைத்தியம் என்றுதான் நினைத்தார்கள். அதனால் காலை முடக்கி கொன்டார். ஆனால், அந்த உண்மையின் தன்மையை எமக்குக் கொடுத்து இங்கு நடனம் ஆடுகிறார்.

1.குருநாதர் ரசமணி செய்வார்… தங்கத்தைச் செய்வார்
2.இந்தச் சரக்குகளைச் செய்தால் நாமும் தங்கம் செய்யலாம் என்ற வகையில்
3.குருநாதரிடம் ஆசைப்பட்டு அணுகியவர்கள் ஏராளமானோர்.

ஆனால் இதிலிருந்து ஒடுங்கப்பட்டு தனித்தன்மையாக, எனக்கு இந்த ஐவர்மலையில் வைத்துத்தான் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.

அவர் இருக்கும் பொழுதே பல காடுகள் பல மேடுகள் எல்லாம் அலைந்து பார்த்தேன். இந்த உண்மையெல்லாம் எமக்குத் தெளிவாகத் தெரிந்த்து இந்த ஐவர் மலையில் தான்.

ஏனென்றால் அந்த உண்மையின் உணர்வுகள் வந்த பின் குருநாதர் என்ன செய்வார்…?

என் கையை நீட்டச் சொல்வார். அங்கிருக்கும் மரங்களும் கற்களும் அப்படியே தூக்கிக் கொண்டு மேலே போகும். தூக்கி வீசுவது போன்ற சில சக்திகளைக் கொடுக்கின்றார்.

அப்பொழுது எனக்கு என்ன செய்கின்றது…?

1.மரத்தையே தூக்கி வீசும் பொழுது நம்மால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று ஒரு திமிர் ஏற்படுகின்றது.
2.எதிரி இருந்தால் அவனை வீழ்த்தக்கூடிய சக்தி நமக்கு இருக்கிறது என்று இப்படித்தான் எனக்குச் சிந்தனை வருகிறது.

ஆனால் அதை எப்படி நல்ல வழிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று அந்தந்தச் சமயங்களிலெல்லாம் குருநாதர் ஒவ்வொரு உணர்வின் நிலைகளையும் எனக்கு உபதேசித்தார்.

ஆகவே… எம்மை குருநாதர் எப்படிப் பண்படுத்தி வளர்த்துக் கொண்டு வந்தாரோ அதே போல மற்றவர்களையும் கொண்டு வர வேண்டும் என்று தான் விரும்புகின்றேன்.

1.இந்த உலகம் எப்படி இருக்கிறது…? என்ற நிலையும்
2.இந்த உடலுக்குப்பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையும்
3.பிறவி இல்லா நிலைகள் எப்படி அடைய வேண்டும்…? என்ற உண்மைகளையும் எனக்கு உணர்த்தினார் குருநாதர்.

அப்பொழுது அந்த நிலையில்… எது எது உன்னைச் சந்திக்கும்…? அந்த ஆசையின் நிலைகள் உனக்குத் திரும்பும்…! அல்லது ஆசையின் நிலைகள் உனக்குள் திரும்பும் போது உன்னை எதிரி என்ற நிலையில் உன்னைத் தாக்கும் உணர்ச்சி வரும்.

அப்பொழுது, இந்தக் கடுமையான நிலைகளின் உணர்வை ஏற்றினால் உன்னையும் ஆட்கொண்டு உனது நல்ல குணங்களைக் கொல்லும்… மற்றவரையும் காக்க முடியாது.

இப்படிக் கடுமையான சோதனைகளைக் கொடுத்தார் குருநாதர். நான் போகும் பக்கம் எல்லாம் பல எதிர்ப்புகள் வரும். நாய் கூடக் கடிக்க வரும், அப்பொழுது என்னென்ன செய்வது…? என்று முதல் அனுபவத்தைக் கொடுத்தார்.

இப்படித்தான் இருபது வருடம் அனுபவம் பெற்று உங்களுக்குள் இந்தச் சக்தியைக் கொடுத்து உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறேன்.

நிறையச் சொல்லப் போனால் ஒவ்வொரு நேரத்திலும் நான் பட்ட அவஸ்தைகள் இன்னதென்று சொல்ல முடியாது. ஆகையால் இதைப் பேணிக் காத்து எல்லோருக்கும் இந்த உண்மையை உணரும் தன்மை பெறச் செய்ய வேண்டும். நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சலைகள் பிறருடைய தீமைகளை அகற்றும் சக்தி பெற வேண்டும்.

என்னுடைய ஆசை… நீங்கள் அனைவரும் என்னைப் போல் (ஞானகுரு) பெரும் ஞானிகளாக மாற வேண்டும்.

பிறருடைய தீமைகளைப் போக்கும் மகான்களாகத் தான் நீங்கள் மாற வேண்டுமே தவிர இந்த உடலின் இச்சைக்கு மாறி விடாது உங்களைக் காத்து நல் வழியில் கொண்டு வருவதுதான் “என்னுடைய முழுமையான தியானம்….!”

நீங்கள் முழுமை பெற்றால்தான் இதைச் செயல்படுத்த முடியும்.

ஏனென்றால் அதைத்தான் இப்பொழுது மிகவும் வலுப்படுத்துகின்றேன். இந்தச் சக்தி பெற்ற நீங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலும் வழி காட்டுதல் வேண்டும்.

இப்பொழுது உபதேசித்த நிலைகள் கொண்டு
1.நுகர்ந்த உணர்வுகள் உங்களை எப்படி இயக்குகின்றது…?
2.அதிலிருந்து நீங்கள் எப்படி மீள வேண்டும் என்று உபாயத்தை
3.மற்றவருக்கு எடுத்துக் கூறி அந்தப் பதிவின் நிலைகளை அவர்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

அந்தப் பதிவின் நிலைகள் அவர்களுக்குள் வளர்ந்தால்…
1.அந்த எண்ணத்தால் தீமையிலிருந்து அவர்கள் விடுபடுவதும்,
2.தீமை செய்தவர்கள் திருத்திக் கொள்வதும்
3.நன்மை செய்யும் உணர்வு உள்ள மக்களாக அவர்களை மாற்றும் திறன் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத் தான்
4.யாம் இதைச் சொல்வது.

அந்த முழுமையின் தன்மைகளை நாம் எல்லோரும் அடைதல் வேண்டும். இது தான் நமது லட்சியமே…!

ஆகவே இந்த லட்சியத்தின் நிலைக்கு வரும்போது செல்வத்தை நாம் தேடிப் போக வேண்டாம். செல்வம் தன்னாலே வந்து சேரும். ஏனென்றால் செல்வத்தைக் குறிக்கோளாக வைத்தால் அதனுடைய ஆசையின் நிலைகள் “உடல் பற்று தான் வரும்..”

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
1.நீங்கள் எல்லோரும் அந்த அகஸ்தியனைப் போன்று
2.உலகைக் காக்கும் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன்.

மலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்

மலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்

 

காட்டிற்குள் ஒரு சமயம் மலைப்பாம்பு ஒன்று வருகிறது நான் (ஞானகுரு) படுத்திருக்கிறேன். அது சுருண்டு…சுருண்டு சுருண்டு…சுருண்டு. புஸ்…புஸ்…புஸ்ஸென்று வருகின்றது.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) தான் இதை ஏவிவிட்டாரா… அல்லது நிஜமாகவே வருகின்றதா…? என்று எனக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு சீறிக் கொண்டு வருகின்றதே…! நிஜமாகவே உருவாக்கி கொடுக்கின்றாரா…! என்ற எண்ணமும் வருகின்றது.

ஆனால் குருநாதர் அருகில் இல்லை… காட்டிற்குள் சென்று விட்டார். குருநாதர் என்ன ஏவல் செய்கிறார்…? என்றும் எனக்குத் தெரியவில்லை. நிஜமா… பொய்யா…? என்று தெரியவில்லை.

அந்தப் பாம்பு அதிபயங்கரமான நிலைகளில் சீறிப் பாய்ந்து கொண்டு வரும் பொழுது என் மேலே இருக்கக்கூடிய துண்டையும் அதிலே ஒரு கல்லை முடிந்து அதைத் தூக்கிக் கொடுக்கின்றேன்.

இது என்னுடைய யோசனை…! புஸ்…ஸ்ஸ்… என்று இழுக்கும் பொழுது அதைத் தூக்கி கொடுக்கின்றேன். வாயில் சிக்கிக் கொண்டது.

மனிதனுடைய வாசனை என்று தெரிந்து அந்தக் கல்லுடன் சேர்த்து அப்படியே விழுகின்றது. ஏனென்றால் துண்டைக் கையில்தான் எடுத்திருந்தேன். அதற்குள் கல் தான் இருக்கிறது என்று அதற்குத் தெரியாது.

அந்த நேரத்தில் எனக்குள் பல விதமான உணர்வுகள் சுழல்கின்றது.
1.ஒரு பக்கம் தைரியமும் வருகின்றது. ஒரு சில நேரங்களில் தப்ப முடியவில்லை.
2.ஆனாலும் இதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமே என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.

ஏனென்றால் அதற்கு முன்னாடி என் விரலை நீட்டினால் மரத்தையே வேருடன் சாய்க்கும் சக்தியை குருநாதர் கொடுத்திருந்தார்.

சரி…! என்னிடம் கொடுத்த சக்தியை வைத்து நான் ஏதாவது செய்கின்றேனா…? என்று தான் குருநாதர் பரிசோதிக்கிறார் என்ற இப்படி ஒரு சிந்தனை வந்தது.

1.எதுவானாலும் சரி… அப்பா நீயே பார்த்துக் கொள்…
2.எனக்கு ஒன்றும் தெரியாது.
3.என்னைப் பாம்பு விழுங்கினாலும் சரி… அல்லது கடித்தாலும் சரி…
4.நீயே பார்த்துக் கொள் என்று சொல்லி விட்டேன்… அவ்வளவுதான்…!

அந்த மலைப் பாம்பை அனுப்பி வைத்தது அவருடைய ஏவல்தான் என்று அப்புறம் நான் புரிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு மறைகின்றது.

குருநாதர் கெக்கெக்..கெக்க.. என்று சிரித்துக் கொண்டு வருகின்றார். என்னுடைய பயிற்சியில் நீ தப்பிவிட்டாய்…! என்கிறார்.

குருநாதர் இந்த மாதிரிப் பல பரிசோதனைகளை வைத்து அவர் எனக்குக் கொடுத்த சக்தியை நான் எப்படி உபயோகிக்கின்றேன்…? என்று பார்க்கின்றார்.

இது போன்ற பல இன்னல்களைப் பட்டேன்… காடு மேடெல்லாம் அலைந்தேன்… குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் உணர்த்திய உண்மைகளை அறிந்தேன்… அந்தச் சக்தியை எனக்குள் பெருக்கினேன்.
இருந்தாலும் குருநாதர் எனக்குச் சொன்னது…
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி
2.ஒவ்வொரு உடலையும் கோவிலாக மதி
3.அந்தக் கோவிலுக்குள் இருக்கும் நற்குணங்களை நீ உயர்ந்த நிலையில் எண்ணு…!

இவ்வாறு நீ எண்ணுவாய் என்றால் நான் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்தி உனக்குள் நற்பயனை அடையும்…! என்று இப்படி இந்த மூன்று சுருக்க நிலையைச் சொன்னார்.

அந்த அடிப்படையில் தான் உங்களுக்குள் அருள் ஞானத்தைப் போதிக்கின்றேன்.

போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு அடித்துக் கொண்டிருந்த குருநாதரின் செயல்கள்

Eaganthanilais

போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு அடித்துக் கொண்டிருந்த குருநாதரின் செயல்கள்

 

மனிதனுடைய சிந்தனை முழுமையாக மறைந்து போகும் காலம் நெருங்கிக் கொண்டுள்ளது.

உயிரணுக்களாக ஆரம்பக் காலங்களில் தேடியது எந்த நிலையோ அதைப் போல் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு என்ற உணர்வினை நமக்குள் சேர்த்து அதனால் பல கலக்கங்கள் ஆகி சிந்தனை செய்யும் திறன் குறைந்து இந்த உடலை காக்கும் செயலையே இன்று இழந்து கொண்டிருக்கின்றோம்.

1.இந்தக் கோயிலுக்குப் போனால் நன்றாக இருக்குமா…? அந்தக் கோயிலுக்குப் போனால் நன்றாகுமா…?
2.இந்த ஜோதிடத்தைப் பார்த்தால் நன்றாக இருக்குமா…? ஜாதகத்தைப் பார்த்தால் நன்றாக இருக்குமா…?
3.இந்த மந்திரத்தைச் சொன்னால் நன்றாக இருக்குமா…? என்று
4.ஒவ்வொன்றாக எடுத்துத் தேடி நாம் அலைகின்றோமே தவிர
5.நாம் சுவாசிப்பது நமக்குள் எப்படி இயங்குகின்றது…? என்றே நாம் அறியாது
6.விஞ்ஞான உலகில் மெய்ப்பிக்கும் இந்தக் காலத்திலும் நம்மை அறியாமலே இது பித்தனாக இருக்கின்றோம்.

இதைத்தான் குருநாதர் சொன்னார்..! போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு அடித்துக் கொண்டிருப்பார்.

என்ன சாமி… சும்மா இருக்கின்ற போஸ்ட்டில் போய் கல்லைக் கொண்டு அடிக்கின்றீர்கள் என்று கேட்டேன் (ஞானகுரு).

நீ தான்டா என்ன என்று கேட்கிறாய்..! ஆனால் மற்றவர்கள் எல்லாம் என்னைப் பைத்தியக்காரர் என்று நினைக்கின்றார்கள்.

ஒவ்வொரு மனிதனும் அவன் எதன் மேல் ஆசைப்பட்டானோ… அதிலே அந்தப் பித்துப் பிடித்துப் போய்… அதையே பெற வேண்டுமென்று எண்ணுகின்றான்.

1.ஆனால் தன் அருகிலே நல்ல பொருள் இருந்தாலும் கூட அதை எடுக்கும் வழியில்லை
2.தன் உடலில் நல்லது இருந்தாலும் அதை வளர்க்கும் வழியில்லை.
3.இப்படிப் பித்தனாக அலைந்து கொண்டிருக்கின்றான்.

நான் இந்தப் போஸ்டில் தட்டும் போது இந்த ஓசை வருகின்றது. அந்த ஓசையைக் கேட்டு ஏன் இப்படித் தட்டுகிறீர்கள்…? என்று என்னை நீ கேட்கின்றாய். அதனால் உனக்கு இப்பொழுது அதற்கு விளக்கம் நான் கொடுக்கின்றேன்.

நான் தட்டுவதைப் பார்த்து… “பைத்தியக்காரன்… தட்டிக் கொண்டிருக்கின்றான்…” என்று மற்றவன் நினைக்கின்றான்.

1.இந்த ஓசையை அவன் கேட்டு அவன் உணர்வுகள் என்னைப் பைத்தியக்காரனாக எண்ணி
2.பைத்தியக்காரன் என்று அவன் எண்ணும்போது அதைச் சுவாசித்து
3.உயிர் அவன் எதை எண்ணினானோ அந்த உணர்வின் தன்மையை அவன் உடலில் ஓடச் செய்கின்றது.

ஆக… அவன் பித்துப் பிடித்து இருக்கின்றான் என்று அவனுக்கே தெரியவில்லை. அந்தப் பித்தின் நிலைகள் அவனுக்குள் விளைகின்றது.

அதாவது நம் உடல் ஒரு அரங்கம்… சுவாசித்த உணர்வு உயிரிலே பட்டபின் அரங்கநாதன் ஆகி ஒலிகளாக எழும்புகின்றது. அந்த உணர்ச்சிகள் நம்மை ஆளுகின்றது என்பதனை ஆண்டாள்…! என்று ஞானிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் காரணப் பெயர் வைத்து இதை அறியச் செய்கின்றனர்.

1.நான் தட்டும் அந்த ஓசையை நீ சுவாசித்தாய்…
2.அதை என்ன என்று கேட்டாய்…? நுகர்ந்து என் அருகில் வந்தாய்…!
3.நான் இதற்கு விளக்கம் சொல்கின்றேன்… நீ புரிந்து கொண்டாய்.
4.தீமைகளிலிருந்து நீ மீளும் உபாயத்திற்கு உன் அறிவு இங்கே அழைத்து வந்தது.

ஆனால் அவன் (மற்றவர்கள்) அறிவு என்ன செய்கின்றது…?

அவன் என்ன செய்கின்றான் என்று தெரியாதபடி அவன் பித்தனாக இருக்கின்றான். இருந்தாலும்…
1.அவன் என்ன தப்பு செய்தான் என்ற எண்ணத்தில் நான் (ஈஸ்வரபட்டர்) வந்தால்
2.நான் அந்தப் பித்தனாகத் தான் வளருவேன்….
3.அவன் பித்தனென்றால் நான் பித்தனாகத்தான் இருக்க வேண்டும்.
4.அதனால் அதை நான் நுகர்வதில்லை…!

போஸ்டில் அடித்து வரும் இந்த ஓசையினைத் திரும்பிப் பார்த்து ஏன்… என்ன..? என்று கேட்கும்போது இதன் நிலையை நீ செய்தால் நல்லதாக இருக்கும் என்று சொல்வதை நுகர்ந்தால் அவர்களுக்குள் நன்மை பயக்கும்.

அவன் என்னைப் பித்தனாக்குகின்றான்…. அவன் பித்தன் என்று அவன் உணர முடியவில்லை..!

போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டிய இந்தச் சத்தத்திற்கு
1.குருநாதர் இத்தனை வியாக்கியானங்கள் சொல்கின்றார்….
2.மனிதன் இயல்பில் உயிரின் உணர்வுகள் எப்படி வருகின்றது என்று..!

கோலமாமகரிஷி தவமிருந்த இடத்தில் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்

kudajadri

கோலமாமகரிஷி தவமிருந்த இடத்தில் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்

 

இன்று விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. கருவில் இந்த உயிரணு உடல் பெறும்போது இந்த இன்னொரு உடலில் பெற்ற நிலையோ அல்லது தாய் நுகரும் உணர்வின் தன்மையில் அந்தக் கருவில் இருக்கும் சிசுக்கு இந்த உணர்வுகள் பட்டபின் அந்த கருவும் அந்த வேதனைப்படுகின்றது.

அந்த வேதனை என்ற உணர்வுகளையே அது இயக்குகின்றது. இதை நமது குருநாதர் பல முறை காட்டினார்
1.கருவில் வளரும் குழந்தைகள் தாய் நுகரும் உணர்வால் எவ்வாறு இயங்குகின்றது…?
2.இன்னொரு உடலில் பெற்ற அந்த உயிரணு (உயிராத்மா) தன் உடலுக்குள் சென்ற பின் அந்த உடலை எப்படி ஆட்டிப் படைக்கின்றது..?
3.நாம் கொல்லும் உயிரான்மாக்கள் மனித உடலுக்குள் வந்தபின் மனிதனின் உணர்வை நுகர்ந்து அது கருப்பைக்குள் செல்லும்போது மனித உரு பெறும் தன்மைகள் எப்படி பெறுகின்றது…?

மனித உருப்பெறும்போது அந்தத் தாய் வேதனைப்படுவோரையோ சலிப்புப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ முடமானவர்களையோ கண் இழந்தவர்களையோ பார்க்கும்பொழுது அந்த உடலில் இருந்து வெளிப்படுவதை அந்த உருவத்திலிருந்து வெளிப்படுவதை சூரியனின் காந்தச் சக்தி கவரும்போது கர்ப்பமான தாய் நுகர்ந்து விட்டால் கருவிலே எவ்வாறு அது உருப்பெறுகின்றது…?

இதைப்போல ஒவ்வொரு நொடிகளிலும் ஒரு உயிரணு ஒரு உடலுக்குள் செல்வதும் தாய் மனித உணர்வை நுகர்ந்து மனிதனாகப் பெறும் நிலையும் ஆனால் கருப்பைக்குச் சென்ற பின் அந்தக் கருவிலே வளரும் பொழுது தாய் நுகரும் உணர்வுகள் அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக எவ்வாறு அமைகின்றது…?

இதை எல்லாம் குருநாதர் காட்சியாகவே காண்பித்தார். நான் (ஞானகுரு) இதை எல்லாம் அறிந்து கொள்வதற்காக குறைந்தது “ஒரு லட்சம் உணர்வுகளின் தன்மைகளையாவது..” குருநாதர் காட்டினார். இதற்கு மூன்று வருடம் ஆகிவிட்டது.

அதைக் காணும் போது சரியான ஆகாரம் கிடையாது.. குறித்த நேரங்களில் சில பச்சிலைகளையும் ஒரு பேரீச்சம்பழத்தையும் தான் சாப்பிட வேண்டும். அதைச் சாப்பிட்டுவிட்டுத் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

இதற்கு ஒரு அரை மணி நேரம் விடுபடும்படி செய்வார். அதற்குள் அதைச் சாப்பிட்டுவிட்டு அமர்ந்து அவர் சொன்னதைப் பேசாமல் பார்த்திருக்கும்படி சொல்வார்.

ஏனென்றால் இவை அனைத்தும் கொல்லூர் மூகாம்பிகை என்று சொல்லும் என்று குடசாஸ்திரி மலைக் காட்டில் தான் பார்த்தது.

1.அன்று கோலமாமகரிஷி அவர் தியானமிருந்த இடம் சிறு குகையாக இருக்கும்.
2.அங்கு பெரிய வனமாக இருக்கும்… தபோவனமும் உண்டு.
3.மலை மேலே கொஞ்ச தூரம் இவ்வளவு தூரம் சென்றால் கூடு மாதிரி இருக்கும்
4.அதற்குள் அமர்ந்து அவர்கள் பெற்ற உணர்வுகளை எல்லாம் காணும்படி செய்தார் குருநாதர்.

மற்ற உயிரினங்களை மனிதன் கொல்வான் என்றால் அந்த ஆன்மாக்கள் எல்லாம் அவர்கள் உடலுக்குள் செல்கிறது. இப்பொழுது நாம் செல்லப் பிராணிகளை வளர்க்கின்றோம் ஆடு மாடு எல்லாம் வளர்க்கின்றோம். அவை யார் மேல் பற்றுள்ளதோ அது பற்றுள்ள நிலைகளில் இறந்தால்… அந்த ஆன்மா வளர்த்தவர் உடலுக்குள் சென்று மனிதனாக எப்படிப் பிறக்கின்றது…? என்ற நிலையையும் இதை தெளிவாகக் காட்டியுள்ளார்.

இப்படி எல்லாம் நாம் எத்தனையோ நிலைகள் பட்டுப் பல பிறவிகள் தாண்டித் தான் இன்று மனிதனாக பிறந்திருக்கின்றோம் என்று காட்டுகிறார் குருநாதர்.

இதைப் போல் தான் நம் பூமியில் ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான். அவனைப் பின்பற்றியவர்கள் எல்லாம் சப்தரிஷி மண்டலமாக அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால் அவர்கள் எல்லாம் எத்தனையோ இன்னல்கள் பட்டு அந்த நிலையை வளர்த்துக் கொண்டவர்கள். சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த சக்திகள் கொண்டு ஒளியின் சரீரம் பெற்றவர்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வெளிப்படும் உணர்வின் ஒளியை
2.நாம் சுவாசித்து… அதை நாம் நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொண்டோம் என்றால்
3.நம்முடைய இந்தச் சந்தர்ப்பம் நம்மைப் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையச் செய்கின்றது.

தியானத்தின் மூலம் நாம் எடுத்துப் பாய்ச்சும் மகரிஷிகள் அருள் சக்தியின் வலு எப்படிப்பட்டது…? நடந்த நிகழ்ச்சி

Gnanaguru Blessings

தியானத்தின் மூலம் நாம் எடுத்துப் பாய்ச்சும் மகரிஷிகள் அருள் சக்தியின் வலு எப்படிப்பட்டது…? நடந்த நிகழ்ச்சி

வட இந்தியாவில் ஒரு சமயம் நானும் (ஞானகுரு) குருநாதரும் (ஈஸ்வரபட்டரும்) போய்க் கொண்டிருக்கின்றோம். அப்பொழுது குருநாதர் என்னிடம் காண்பிக்கின்றார்.

ஒரு கூனி இப்படி நடந்து போகின்றான் பார். அவன் கூனியாக (முதுகு வளைந்து) இருக்கின்றான். அவனுடைய சந்தர்ப்பத்தை இப்பொழுது பார்..! என்கின்றார்.

வெகு காலமாக இவன் இப்படிக் கூனிக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றான். சிறு பிள்ளையிலேயே இவனுக்கு இப்படி ஏற்பட்டு விட்டது. அதிலிருந்து வளர்ச்சியாகி… வளர்ச்சியாகி… அது அவனை வளர விடாமல்… நிமிர முடியாமல்.. இந்த நிலையில் இருக்கின்றது

அவன் குனிந்து கொண்டே போகின்றான். அவனுடைய சந்தர்ப்பம் நீயும் நானும் அவனைப் பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. அவனுக்கு ஒரு அதிர்ஷ்டம் வந்திருக்கின்றது.. இப்பொழுது பார்…! என்று சொல்கிறார் குருநாதர்.

என்ன சாமி அதிர்ஷ்டம்…? அவன் வேதனைப்பட்டுக் கொண்டல்லவா போகின்றான்…! என்றேன் நான்.

அவன் முதுகுத் தண்டிலே இங்கே உன் கண்ணிலிருந்து நீ அலைகளைப் பாய்ச்சுடா…! என்கின்றார். குருநாதரும் அவனப் பார்க்கின்றார்

உடனே அவனுக்கு அங்கே முதுகிலே அரிப்பு ஆகின்றது. அரிப்பு ஆனவுடனே அவன் என்ன செய்கின்றான்…?

அங்கே ஒரு தூணிலே போய்ச் சாய்ந்து கொண்டு முதுகை வைத்துத் தேய்.. தேய்… என்று தேய்க்கின்றான். தேய்த்ததும் நெடு…நெடு.. என்று நிமிர்ந்து விட்டான்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் அங்கே பரிட்சைக்குப் பார்க்கப்படும்போது அவன் முதுகுத் தண்டில் பார்த்தவுடனே அவனுக்கு அரிக்கின்றது. அப்பொழுது அதைத் தாங்க முடியவில்லை என்று தூணிலே போய்த் தேய்க்கின்றான்.

அதைப் பார்த்ததும் அங்கே இருக்கின்றவர்கள் ஏனப்பா இப்படி…? என்று கேட்கிறார்கள்.

இல்லைங்க… என்னால் அரிப்பு தாங்க முடியவில்லை… என்று சொல்லிவிட்டுத் தூணிலே சொறிந்து கொள்கிறான். நெடு…நெடு.. என்று நிமிர்ந்து விடுகின்றான். இது நடந்த நிகழ்ச்சி…. அவனுடைய சந்தர்ப்பம்…!

1.ஏனென்றால்… அவனை உற்றுப் பார்த்து
2.இந்த உணர்வின் தன்மையை அவன் பெற வேண்டுமென்ற உணர்வைப் பார்க்கப்படும்போது…
3.முதுகு தண்டில் அரிப்புக் கொடுக்கும்போது…
4.இந்தச் சந்தர்ப்பம் அது புற நிலைகளில் இருந்து தாக்கப்படுகின்றது.

உன் பார்வை அவன் மீது பட்டதும் அரிப்பு ஆகி உடனே தேய்க்க ஆரம்பித்து விடுகிறான்… அப்படியே அந்தப் பிடிப்பு விடுகின்றது…! என்று என்னிடம் உணர்த்துகின்றார் குருநாதர்

அவன் சிறு குழந்தையாக இருக்கும் போது “அச்…ச்..” என்று தும்முகின்றான் இரண்டு நரம்பு பிடித்துக் கொள்கின்றது. முதுகை வளைய விடாதபடி செய்கிறது. நிமிர்ந்தால் வலிக்கின்றது.

இப்படியே அந்தக் குழந்தையிலிருந்து வளர்த்து வளர்த்து யாரும் ஒன்றும் செய்யாததனால் அவன் முதுகுத் தண்டு அப்படியே இறுகிப் போய் விட்டது.

அவன் சந்தர்ப்பம் இப்பொழுது அரிக்கப்படும்போது…
1.உணர்வுகள் வேகம் அந்த வாடிய உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.அந்தப் பிடிப்பு அகன்றது. அவன் முதுகு நேராகி விட்டது.

ஆனால் இதை எல்லாம் அவனிடம் சொல்லாமல் நானும் குருநாதரும் அப்படியே சென்று விட்டோம். குருநாதருடன் யாம் இப்படிச் சுற்றி வரப்படும் பொழுது சந்தர்ப்பம்… சில பேருக்கு ஆச்சரியப்படும் அளவிற்கு இப்படி நல்லதாகின்றது.

ஆகவே… ஒவ்வொரு நிமிடமும் நாம் வலுவைக் ஊட்டிக் கொள்ள வேண்டும். நாம் எண்ணியது எதுவோ அதைத் தான் நம் உயிர் உருவாக்குகின்றது.

குழந்தைகளுக்கு இது மாதிரியான குறைகள் வந்தால் உடனே நாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

அதாவது சில குழந்தைகளுக்கு ஊனக் குறைவோ… சிந்தனை இல்லாதோ.. மூளை வளர்ச்சி இல்லாமலோ… இருக்கும். மேலே சொன்ன மாதிரி எண்ணி அந்த மகரிஷிகளின் சக்தியை நமக்குள் வளர்த்துக் கொண்டபின் அதை அவர்களுக்குப் பாச்சுதல் வேண்டும்.

நம்மில் கரு உண்டானதுதான் அந்தக் குழந்தைகள். இதைப்போல அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்ற உணர்வினைக் கூட்டி
1.எங்கள் குழந்தை மகரிஷிகள் உணர்வுகள் பெற வேண்டும்.
2.அது சிந்தனையை வளர்ச்சி பெற வேண்டும்.
3.ஞானத்தின் தன்மை குழந்தையிடம் வளர வேண்டும் என்ற இந்த எண்ணத்தை வலுவாக்கிவிட வேண்டும்.

வலுவாக்கிய சக்திகளை குழந்தைகளுக்கு ஒவ்வொரு நொடியும் உணவு கொடுக்கும் போது இது மாதிரிச் செய்யலாம். அதை தலை வாறும்போது இதைப் போலச் செய்யலாம். அதை பார்க்கும் போதெல்லாம் இந்த நிலை வளர வேண்டும் என்று இந்த உணர்வைப் பாய்ச்சிப் பாருங்கள்.

இதைப் போன்று எண்ணும்போது இந்த உணர்வுகள் நம் குழந்தையைப் பற்றி நமக்குள் மன வலுப் பெறச் செய்வதும் நாம் பாய்ச்சும் அலைகள் குழந்தையின் மேல் படரப் போகும்போது நலமாகும் சந்தர்ப்பத்தை அது உருவாக்கும்.

ஏனென்றால் இவ்வாறு எண்ணிய உணர்வுகள் செயல்படும்போது இது கடவுளாகின்றது. செய்து பாருங்கள்…!

 

மனிதனுடைய பரம்பரை வழியில் உடலைக் காப்பதா…? ஞானிகள் வழியில் உயிரான்மாவை ஒளியாக மாற்றுவதா…? – நடந்த நிகழ்ச்சி

Treasure hunt

மனிதனுடைய பரம்பரை வழியில் உடலைக் காப்பதா…? ஞானிகள் வழியில் உயிரான்மாவை ஒளியாக மாற்றுவதா…? – நடந்த நிகழ்ச்சி

 

சுமார் 12 அல்லது 13 வயது பெண் குழந்தை ஒன்று ஆஸ்த்மா நோயினால் மிகவும் வாடிக் கொண்டிருந்தது. எம்மிடம் (ஞானகுரு) அழைத்து வந்து விபரம் கேட்டார்கள்.

நோயின் கடுமையினால் வேதனை என்ற உணர்வையே எடுத்துக் கொண்டால் விஷத்தின் தன்மை அடைகின்றது. அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு
1.விஷத்தின் உணர்வை அதிகமாகச் சேர்த்திருப்பதால்
2.இந்த ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் மனிதன் அல்லாத பிறவியாகத்தான் பிறக்கும்..
3.ஆனால் அந்த உடலிலேயே அருள் மகரிஷிகளின் உணர்வை ஏற்றுக் கொண்டால்
4.இந்த உடலை விட்டுப் பிரிந்தால் அது பிறவியிலலா நிலை அடையும்…! என்று தெளிவாக்கினேன்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை அந்தக் குழந்தைக்குச் செருகேற்றப்பட்டு உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வுடனே தொடர்ந்து அதைச் செயல்படுத்தினார்கள்.

நுரையீரல் பாகத்தில் அதிகமான விஷ்த் தன்மை சேர்ந்து… நரம்பு இழுத்துப் பிடித்திருப்பதனால் அது அவஸ்தைப்படுகின்றது. அவர்கள் பரம்பரையில் அந்தப் பெண்ணின் அப்பாவிற்கு ஆஸ்த்மா இருந்தது.. தாத்தவிற்கும் உண்டு.

இப்படிப் பரம்பரை வழியாக வந்திருப்பதனால் இந்தப் பின்னம் அதிகமாக இருக்கும். இதிலிருந்து (பரம்பரை) விடுபட்டால் தான் நோயிலிருந்து தப்ப முடியும்.

இருந்தாலும்…
1.இந்த ஆன்மா பெண் குழந்தையாக இருக்கும் பொழுது அடுத்துத் திருமணமாகி
2.அதன் பின் இதன் வாழ்க்கையில் மீண்டும் அதீதமாக வேதனைப்பட்டால்
3.மனிதனல்லாத உருவாக உருவாக்கிவிடும்.

அதற்கு முன்னாடி… எம்மைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் அருள் ஒளியைச் சேர்க்கும் பருவமாக வரப்படும் பொழுது
1.இந்த ஆன்மா அருள் ஒளியின் தன்மை கொண்டு
2.மகிழ்ச்சியின் உணர்வு கொண்டு நஞ்சை வென்றிடும் உணர்வுகள் இதற்குள் பெறப்பட்டு
3.அதனுடைய வளர்ச்சியில் உடலை விட்டுப் பிரிந்தால்
4.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணையவும்… உடல் பெறும் உணர்வுகள் கரையவும்…
5.பிறவியில்லா நிலையை அடையவும் இது உதவும்.

ஏனென்றால் கடும் நோய்வாய்ப்பட்டவரின் நிலைகளை அது மாற்றி அமைக்க வேண்டும். ஆனாலும் அந்தப் பெண்ணின் தாய் வேதனையை எடுக்கின்றது.

அதிலிருந்து மாற்றி ஒளியின் தன்மையாக மாற்றுவதற்கு “இந்த உடலிலேயே அந்த உணர்வுகளைக் கரைத்திட வேண்டும்…” என்ற நினைவை அங்கே கூட்டச் சொன்னேன்.

1.அதன் வழி பின்பற்றினால் எளிதிலே அங்கே சப்தரிஷி மண்டலம் போய்ச் சேரும்..
2.உடல் பெறும் உணர்வுகள் கரையும்…! என்றும் விளக்கமாகச் சொன்னேன்.

ஆகவே… மனிதன் இந்த உடலுக்கு இச்சையை அதிகமாகக் கூட்டாது அருள் ஒளி பெறவேண்டும்… இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்க வேண்டும்…! என்ற உணர்வை வலுவாக எடுத்தால் போதும்.

1.குறித்த காரியங்கள் பெறவேண்டும்…! என்று எண்ணுவதற்குப் பதில்
2.அருள் ஒளியின் உணர்வுகள் வரும் பொழுது தெளிவான உணர்வுகள் வரும்.
3.அப்பொழுது வழி அறிந்து செயல்படக்கூடிய திறன் வரும்.
4.சோர்வென்ற நிலைகள் விடாது தெளிந்த மனதைக் கூட்ட இது உதவும்.

ஆகவே எத்தகைய தொல்லைகள் வரினும் அருள் ஒளி எங்கள் உடலில் பெருக வேண்டும். இந்த உடலை விட்டுச் சென்றால் பிறவில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அந்த அரும் பெரும் சொத்தே… நமக்கு மிகப் பெரிய செல்வம் ஆகும்…!

நாம் தேடிச் செல்லும் எந்தச் செல்வங்களும் நம்முடன் வருவதில்லை. அழகான உடலும் நம்முடன் வருவதில்லை. அலங்காரப் பொருள்களும் நம்முடன் வருவதில்லை. ஆடம்பரமாகக் கட்டிய வீடும்… காரும்… நம்முடன் வருவதில்லை.

அருள் ஞானத்தை இந்த உடலில் வளர்த்துக் கொண்டால் உயிருடன் ஒன்றிய ஒள்யின் சரீரமாக நிலை பெறும். ஆகவே எதிலேயும் வேகாத நிலையாகப் பிறவி இல்லா நிலை அடைந்து… “அகண்ட அண்டத்தில் என்றுமே வாழலாம்…!”
1.அகண்ட அண்டத்தில் வாழும் பருவத்தை
2.இந்த உடலிலே சேர்த்தால் தான் அடுத்த நிலை வரும்.

ஏனென்றால் இந்த உடல் எந்த நேரத்திலும் போகத்தான் செய்யும். மிஞ்சிப் போனால்… கூட ஒரு பத்து இருபது வருடம் வாழப் போகின்றோம்… அவ்வளவு தான்…!

பெண் குழந்தை என்று வரப்படும் பொழுது “சீரான உடல் அமைப்பு இல்லை…” என்றால் திருமணம் ஆனாலும் மிகவும் வேதனைப்படும், குழந்தைப் பேறு போன்ற பருவங்கள் வரும் பொழுதெல்லாம் வேதனைப்படும்.

ஆகவே இந்த உடல் தேறாது என்ற நிலை வந்தவுடன் தேறுவது எது…?
1.அருள் உணர்வின் ஒளியே தேறும்.
2.அதுவே என்றும் பிறவியில்லா நிலை
3.இந்தப் பருவத்தில் ஒளியாகி விட்டால் நலமாகும்.

மாறாக… குழந்தை மேல் பாசமாக எண்ணி ஏங்கி விட்டால் அந்தப் பெண்ணின் ஆன்மா தாயின் உடலுக்குள் மீண்டும் வரும். இந்த உடலில் எந்த வேதனையை அது பட்டதோ தாயின் உடலுக்குள்ளும் அதே வேதனையைத் தான் உருவாக்கும்.

ஆனால் வேதனை உணர்வை அருள் உணர்வுகள் கொண்டு மாற்றப்படும் பொழுது தாய்க்கும் தொல்லை இல்லை. இந்த உணர்வின் தன்மை ஒளியாக மாறும் பொழுது எல்லோருக்கும் நன்மை ஏற்படும்

அதனால் தான் அந்த ஆன்மா பிறவியில்லா நிலையை அடையும்படி இதைச் செய்தது.

குடும்பத்தார் படும் சிரமங்களைக் காட்டி அந்தப் பாசம் எப்படி இயக்குகிறது..! என்று இமயமலையில் வைத்துக் காட்டினார் குரு

Remote spiritual power

குடும்பத்தார் படும் சிரமங்களைக் காட்டி அந்தப் பாசம் எப்படி இயக்குகிறது..! என்று இமயமலையில் வைத்துக் காட்டினார் குரு 

குருநாதர் காட்டிய வழியில் ஒவ்வொரு நாளும் நான் கால் நடையாகச் செல்லும் பொழுது மக்கள் கஷ்டப்படுவதையும் குடும்பத்தில் கஷ்டப்படுவதையும் பார்க்கின்றேன்.

ஒரு சமயம் இமயமலைக்குப் போகும்படி சொன்னார் குருநாதர். வெறும் கோவணத் துணியுடன் தான் அங்கே போகச் சொன்னார்.

அங்கே குளிர் பாதிக்காமல் இருப்பதற்காக குருநாதர் சொன்ன உணர்வுகளை மட்டும் நான் எடுக்க வேண்டும். அப்பொழுது உடல் உஷ்ணமாகும். எனக்கு அந்தக் குளிர் தெரியாது.

இப்படி இருக்கும் பொழுது என்னுடைய கடைசிப் பையன் சிறியவன் மீது பாசமாக இருந்ததால்… அவன் நினைவு எனக்கு அங்கே வருகின்றது.

அவனைப் பற்றிய நினைவு சென்றவுடனே இங்கே குளிர் தாக்கி உடல் எல்லாம் கிடு…கிடு… என்று நடுங்க ஆரம்பித்துவிட்டது.

1.பையன் மேல் ஆசை வைத்துப் பார்த்தேன்.
2.அவனைக் காக்க வேண்டும் என்று ஏதாவது உபாயம் செய்ய வேண்டும் என்பதற்காக எண்ணிப் பார்த்தேன்.

ஏனென்றால் என் பையன் வீட்டிற்கு வெளியே தெருவில் ஒரு ஓரமாக இரத்த இரத்தமாக வெளியே போய்க் கொண்டிருக்கின்றான். நானா..நானா.. (நைனா) என்று என்னை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கின்றான்.

“அந்தக் குரல்” எனக்கு இங்கே இமயமலையில் கேட்கின்றது. அப்பொழுது குருநாதர் சொன்னதை என்னால் எடுக்க முடியவில்லை.

உடல் கிர்…! என்று இதயம் இரைய ஆரம்பித்துவிட்டது. அப்பொழுது தான் குருநாதர் உணர்த்துகின்றார்.

1.நீ உன் பாசத்தை அங்கே செலுத்துகின்றாய்
2.நீ இங்கே இப்பொழுது மடிந்து விட்டால் உன்னை யார் காப்பாற்றுவது..?
3.காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நீ செல்லப்படும் பொழுது
4.உன் ஆன்மா பையன் உடலுக்குள் தான் புகும்.
5.அவனுக்குள் போய் நீ வேதனையைத்தான் உருவாக்க முடியுமே தவிர நல்லதைச் செய்ய முடியாது.

இப்பொழுது நீ எப்படிச் சிரமப்படுகின்றாயோ… இதே உணர்வின் தன்மை அவனுக்குள் இயக்கப்பட்டு… அவனும் சாமியாராக ரோடு ரோடாகச் சுற்ற வேண்டும் என்கிறார் குருநாதர்.

ஆகவே நீ என்ன செய்ய வேண்டும் என்பதை அங்கே தெளிவாக்குகின்றார். பின் குருநாதர் சொன்ன உணர்வை எடுத்துக் கொண்ட பின் என் குழந்தையின் உடல் நலமாக ஆனது.

அங்கே என்னுடைய வீட்டில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். விறகுக் கடையில் வியாபாரம் சரியாக இல்லை. சாப்பாட்டுக்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மோசமான சூழ்நிலையாக இருக்கின்றது.

இதை எல்லாம் பார்த்துப் பதட்டம் அடையப் போகும் பொழுது தான் எனக்கு மேலே சொன்ன அந்த நிலை எல்லாமே வந்தது.

பிறகு குருநாதர் சொன்ன காலக்கெடு முடிந்ததும் இமயமலையிலிருந்து இருந்து ஜோஸ்மெட் என்ற் இடத்திற்கு வந்தேன். போஸ்ட் ஆபீஸ் மூலமாக என்னுடைய புகைப்படத்தையும் ஒரு பத்து ரூபாயும் கவருக்குள் போட்டு அனுப்பினேன். எனக்கு மணியார்டர் செய்யத் தெரியவில்லை.

ரூபாய் வெளியே தெரியாமல்தான் காகிதத்திற்குள் வைத்து அனுப்பினேன். பணம் அனுப்பியிருக்கின்றேன் என்று கடிதமும் எழுதி இருந்தேன்.

இது அங்கே பதினைந்து நாள் கழித்து இவர்களுக்குக் கிடைக்கின்றது. அந்தப் பதினைந்து நாளுக்குள் அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல…!

என் மனைவி தன் தாலியையும் அடமானம் வைத்துப் பிள்ளைகளைக்குச் சாப்பாடு போட்டிருக்கின்றது. ஒரு பத்து ரூபாய் வந்ததும் கடவுளைப் பார்த்த மாதிரி ஆர்வம் வருகின்றது.

ஆனால் கவரில் போட்ட அந்தப் பத்து ரூபாயை இடைவேளியிலே யாரோ எடுத்து விட்டார்கள்.

கடிதம் இருக்கிறது… என் படம் இருக்கிறது.. ஆனால் ரூபாயைக் காணோம்…! பிரிக்கும் பொழுது “கீழே விழுந்து விட்டதோ…!” என்று அங்கே தேடு…தேடு… என்று தேடுகின்றார்கள். இதையும் நான் அங்கிருந்து பார்க்கின்றேன்.

இது எல்லாம் அனுபவரீதியில் குருநாதர் எனக்குக் காட்டியது. ஒவ்வொரு குடும்பத்திலும் எதன் எதன் நிலைகள் எப்படி எல்லாம் சிரமப்படுகின்றார்கள் என்பதை அப்படியே படம் பிடித்தது போல் காட்டுகின்றார்.

ஆக…
1.பிறருக்கும் எமக்கும் இந்த உணர்வின் தன்மை கொண்டு தெளிவாக்குகின்றார்
2.இப்படித்தான் நான் உண்மைகளைத் தெரிந்து கொண்டேன்
3.வரும் இன்னல்களிலிருந்து தப்பும் உபாயங்களையும் சக்திகளையும் அனுபவபூர்வமாக அறிந்தேன்.

உங்களுக்கும் அந்த அரும் பெரும் சக்திகளைக் கிடைக்கச் செய்வதற்காகத் தான் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

நீங்களும் இதைப் போல் அந்த அருள் உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அவர் செய்வாரா…? இவர் செய்வாரா..? என்று யாரையோ எண்ணுவதற்கு மாறாக
2.உங்களுக்குள் வரும் இன்னல்களை உங்கள் எண்ணத்தாலேயே நீக்கிக் கொள்வதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றேன்.

ஆகவே யாம் அனுபவத்தால் பெற்ற இந்த உண்மையின் உணர்வுகளையும் அந்த அருள் மகரிஷிகளின் அருளையும் நீங்கள் பெற்று இந்த உபதேசத்தின் வாயிலாக கேட்டுணர்ந்த உணர்வுகளையும் அணுக் கருவாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.உங்கள் பார்வையால் பிறருடைய துன்பங்கள் மாய வேண்டும்
2.உங்களுக்குள் துன்பங்கள் சேராவண்ணம் தடைப்படுத்தும் அந்தச் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான்
3.குருநாதர் மூலம் பெற்ற அனுபவங்களை எல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

அகோரியின் சாபத்திலிருந்து மீட்ட நிகழ்ச்சி

gnanaguru-venu gopal saamigal

அகோரியின் சாபத்திலிருந்து மீட்ட நிகழ்ச்சி

 

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய வாழ்நாளில் எத்தனை எத்தனை சிரமப்படுகின்றான் என்பதை அனுபவபூர்வமாக அறியச் செய்வதற்காக என்னை (ஞானகுரு) ஊர் ஊராகச் சுற்றச் சொல்லியிருந்தார் ஈஸ்வரபட்டர்.

ரோட்டில் நடந்து செல்லப்படும் பொழுது வீட்டில் சில பேர் மிகவும் அவஸ்தைப்பட்டுச் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தந்த வீட்டில் நடப்பதைப் பற்றித் தெரிந்து கொள்வேன். அங்கே அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருப்பேன்.

ஒரு குடும்பத்தில் பார்த்தால்… ஒருவருக்கொருவர் நல்லவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் ஒருவர் வந்து பல தீமைகளைச் செய்து அவர்களுக்கு எத்தனையோ தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இருந்தாலும் ஒவ்வொரு நேரத்திலேயும் ஆண்டவனை வணங்கி… கடவுளை வணங்கி… ஆண்டவனுக்கு அபிஷேகங்கள் செய்து வந்தாலும் அவர்களுக்கு நன்மை பயக்கவில்லை…! ஆகவே அந்தத் தெய்வத்தையே நொந்து எத்தனையோ வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்தக் குடும்பமே சிறுகச் சிறுக நசிந்து கொண்டிருக்கின்றது. பம்பாயில் பார்த்த நிகழ்ச்சிகள் இது.

ரோட்டிலே செல்லப்படும் பொழுது இத்தகைய நிலைகளை உற்றுப் பார்த்து… அங்கே நடக்கும் செயல்களைப் பின் தொடர்ந்தே… அவர்களுடைய நிலைகளை வட்டமிட்டேன்.

அவர்கள் குடும்பத்தில் என்ன நடக்கின்றது…? எப்படிச் செயல்படுகின்றது..? என்ற நிலையை இரவிலே அவர்கள் குடும்ப வாழ்க்கையைத் தெரிந்து கொள்வேன்.

அதாவது ஒரு “சாமியாராக” இருந்தவன் பல நிலைகள் கொண்டு இவர்கள் வீட்டுக்கு யாசகம் கேட்டுக் கொண்டு வருகின்றான். ஆனால் இந்தக் குடும்பமோ “உண்மையில் கஷ்டப்படுகின்றார்கள்…” என்றால் அவர்களுக்குத் தர்மம் செய்யக் கூடியவர்கள்.

ஆனால் இந்தச் சாமியாரோ… பல பில்லி சூனியங்களைக் கற்றுக் கொண்டவன்.
இந்தக் குடும்பத்தார் பலருக்கு ஈகையுடன் தர்மம் செய்து உதவி செய்தாலும்
1.இந்தச் சாமியார் தவறு செய்கிறான்…! என்ற நிலையில்
2.அவனை அப்புறப்படுத்த… ஒரு கடும் சொல்லைச் சொல்கிறார்கள்.

அப்படி ஆன பின் அவன் என்ன செய்கின்றான்…? அவர்களுக்கு என்னென்ன தடைகள் ஏற்படுத்த வேண்டுமோ அதை எல்லாம் ஏற்படுத்தினான்.
1.பார்… உன்னை நடுத் தெருவில் நிறுத்துகின்றேன்…! என்ற
2.இந்த வாக்கினை (சாபம்) அங்கே பதிவாக்குகின்றான்.

அதனால் நன்றாக இருந்த குடும்பத்தின் தொழில்கள் சிதையத் தொடங்கியது… குழந்தைகள் உடல் நலிந்தது… அவர்கள் பல அவஸ்தைகள் பட ஆரம்பித்தனர்.

குருநாதர் இதைக் காட்டுகின்றார்.

அந்தக் குடும்பத்தார் யாரும் தவறு செய்யவில்லை. ஆனால் அகந்தை கொண்ட அந்தச் சாமியார்.. பிறரிடத்திலிருந்து பணம் பறிக்கும் எண்ணம் கொண்டவன்… “சாது” என்ற நிலைகள் கொண்டு இத்தகைய நிலைகளைச் செய்கின்றான்.

காரணம் அவன் ஒரு “அகோரி…!” அமாவாசை அன்று பல பிணங்களைத் தின்று அதன் வழி கொண்டு வாக்குகளை இடும் பொழுது இந்த மாதிரி ஆகின்றது.

தான் பணம் கேட்டதைக் கொடுக்கவில்லையே… தன்னை மதிக்கவில்லையே என்று… இவன் எண்ணுகின்றான்.

அவர்களோ “இவனுக்கே ஏன் காசு கொடுக்க வேண்டும்…! ஏழைகளுக்குத் தானே காசு கொடுத்து உதவ வேண்டும்…” என்ற அந்த நிலையில் இருந்தார்கள்,

அதனால் அந்த அகோரி கொடூர நிலைகள் கொண்டு அப்படிச் சாபமிட்டான். நோய் நொடி என்று ஆகி தொழில்கள் எல்லாமே சிதைந்து விட்டது.

அவர்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பதை நான் பார்க்கின்றேன். அனால் அவர்கள் தவறு செய்யவில்லை.
1.தெய்வத்தை வணங்கி வந்தவர்கள் தான்
2.ஆராதனைகளையும் அபிஷேகங்களையும் செய்பவர்கள் தான்.
3.பண்பு கொண்டு மற்றவர்களுக்குத் தர்மத்தைச் செய்தவர்கள் தான்.
4.அந்தத் தர்மங்கள் செய்திருந்தாலும் இவர்கள் வணங்கிய தெய்வம் அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.

அந்த அகோரியினுடைய வாக்கின் வன்மை தீமைகளைச் செய்விக்கும் நிலை. பாலில் பாதாமைப் போட்டிருந்தாலும் அதிலே விஷம் பட்டால் எப்படியோ இதைப் போன்ற் அந்த விஷத் தன்மையான வாக்கின் உணர்வுகள் அந்தக் குடும்பத்தை இயக்கியது.

தொழில்கள் அனைத்தும் செயலற்ற நிலையாகி குடும்பத்தில் உள்ளோர் நோயாகப்படும் பொழுது அந்தக் குடும்பமே நசிந்து… தெருவில் அலைந்து…
1.“மாளிகையில் இருந்தவர்கள் குடிசையில் போய் வாழுகின்றார்கள்…”
2.அந்தக் குடிசையிலும் அவர்களுக்கு எதிர்ப்புகள் வருகின்றது.

பின் அவர்களைச் சந்தித்து குருநாதர் காட்டிய அருள் வழியைக் காட்டிக் கடைப்பிடிக்கச் செய்து அந்தத் தீமையின் செயலிலிருந்து அவர்களை விடுவித்தேன்.

அந்த அகோரி விட்ட சாப நிலைகளிலிருந்து விடுபட
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் எண்ணுங்கள்
2.அந்த உணர்வை குடும்பத்திலுள்ளோர் எல்லோரும் வளர்த்துக் கொள்ளுங்கள்
3.மீண்டும் நல் வாழ்க்கை கிடைக்கும் என்று சொன்னேன்.

அதன்படி செய்தார்கள் நன்றாக ஆனது… இது நடந்த நிகழ்ச்சி…!