குருநாதர் எம்மை அரவணைத்துச் செய்த நிகழ்ச்சி

குருநாதர் எம்மை அரவணைத்துச் செய்த நிகழ்ச்சி

 

ஒரு சமயம் நான் (ஞானகுரு) பழனியில் இருக்கின்றேன்… கல்கத்தா செல்வதற்கு டிக்கெட் எடுடா…! என்று குருநாதர் சொல்கின்றார்.

எதற்கு சாமி…? என்று கேட்டேன்.

டிக்கெட் எடுடா…! என்றார்.

குருநாதர் பணத்தையும் கொடுக்கின்றார். ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று டிக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்தேன்.

ஒரு குதிரை வண்டியைப் பிடிடா… என்று சொன்னார். வண்டி வந்தது.

ஆனால் கொடைக்கானல் பக்கம் காட்டுப் பக்கமாக வண்டியைப் போகச் சொல்கிறார்.

சாமி… நாம் இந்தப் பக்கம் செல்ல வேண்டும்…! என்று சொன்னேன்.

கல்கத்தா செல்ல டிக்கெட் எடுத்து விட்டாய் அல்லவா…! குதிரை வண்டியில் ஏறு… வண்டியைப் போகச் சொல்…! என்று சொல்கின்றார்.

வண்டியில் ஏறிய பின்… கல்கத்தாவில் குருநாதர் அங்கே சுற்றி வந்த பல நிகழ்ச்சிகளைச் சொல்கிறார். கல்கத்தா காளி எவ்வாறு இருக்கின்றது…? எப்படி எப்படி உருவானது…? எந்தெந்த நிலை…! என்று சொல்லிக் கொண்டு வருகின்றார்.

அதை எல்லாம் சொன்ன பின்… இப்பொழுது எதற்காக உன்னை அங்கே அழைத்துப் போகின்றேன் தெரியுமா…! என்று கேட்டார்.

அவர் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நன்றாகப் பதம் பார்த்துவிட்டு என் கழுத்தைப் பிடிக்கின்றார்.
1.இங்கே குத்தி இந்த இரத்தத்தை அங்கே கொண்டு போய்க் காளிக்குக் கொடுத்துவிட்டு
2.“நான் மந்திரத்தைக் கற்றுக் கொள்ளப் போகின்றேன்…!”
3.அதற்குத்தான் கல்கத்தாவிற்கு உன்னை அழைத்துப் போகின்றேன் என்றார்.

எனக்கு எப்படி இருக்கும்…? காட்டிற்குள் அழைத்துச் சென்ற பின் இப்படிச் சொல்கிறார்.

நான் என்ன சொன்னேன்…?

என் மனைவியை நோயிலிருந்து காப்பாற்றி எழுப்பிக் கொடுத்தீர்கள். நீங்கள் என்ன சொல்கின்றீர்களோ அதன்படி…
1.என்னைக் கொன்றாலும் சரி… அல்லது மற்ற எப்படி வேண்டுமானாலும்
2.எதை வேண்டுமானாலும் நீங்கள் செய்து கொள்ளுங்கள்…! என்று சொன்னேன்.

குருநாதர் “கெக்கெக்க….கெக்க….” என்று பலமாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் மறுபடியும் என் கழுத்தைப் பிடித்துக் கத்தியை எடுத்துக் குத்த வருகின்றனர்.

மீண்டும் என்னை மிரட்டுகின்றார்…! பார்க்க வேண்டிய எல்லா பரீட்சைகளையும் செய்து பார்க்கின்றார்.

சிறிது நேரம் கழித்து
1.”என்னை அரவணைத்து…” கல்கத்தாவிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
2.நானும் இப்படித்தான் அங்கே சென்று வந்தேன் என்று சொல்கின்றார்

உன்னை அங்கே பலி கொடுத்து நான் சக்தி பெற போகின்றேன்… நான் உலகத்திலேயே மிகச் சக்தி வாய்ந்தவனாக மாறப் போகின்றேன் என்று சொல்கின்றார்.

அரசர்கள் காளில் கோவிலை எப்படி உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்…? பலி பீடங்களை அமைத்து எதிரிகளை வீழ்த்துவதற்கு என்ன செய்கின்றார்கள்…? அதே சமயத்தில் எந்தெந்தக் காலங்களில் எதைச் செய்கின்றார்கள்…?

ஆடு மாடு அனைத்தையும் பலி கொடுத்துவிட்டுக் கடைசியில் மனிதனையும் பலி கொடுக்கின்றார்கள். படிப்படியாக அசுவமேதை யாகம் செய்வது போன்று கடைசியில் மனிதனை நரபலி கொடுக்கின்றார்கள்.

ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமான சக்திகளை0ப் பெறுவதற்காக மனிதனுக்குள் விளைந்த உணவு உணர்வுகளை எடுத்து இந்த உடலைப் பலி கொடுத்து எப்படிச் சக்தி பெறுகின்றார்…? என்று காட்டுகின்றார்.

முருகன் ஆலயத்தில் பாலாபிஷேகம் தேனாஅபிஷேகம் செய்கின்றார்கள். கருப்பணசாமி மாடசாமி கோவில்களில் கோழியோ ஆட்டையோ அறுத்து இரத்தத்தை அங்கே அபிஷேகம் செய்கின்றார்கள்.

இதே போன்று மனிதனுடைய இரத்தத்தையே காளிக்குக் கொண்டு போய்க் கொடுக்கின்றார்கள். மந்திர ஒலி கொண்டு அங்கே என்ன செய்கின்றனர்…? என்று நேரடியாகக் காண்பிக்கின்றார்.

என்னை அங்கு அழைத்துக் கொண்டு சென்று இந்த உண்மைகளை எல்லாம் காட்டுகின்றார்.

இங்கே வருவதற்கு முதலில்… உடல்களைச் சரியான இடத்திலே கொண்டு போய் மறைத்து வைக்கின்றார்.

ஏனென்றால் நாம் இருவரும் இங்கே வந்து விட்டோம் அங்கே மனிதர்கள் இந்த உடலைப் பார்த்தார்கள் என்றால் “எல்லாம் தீர்ந்து போகும்டா…” என்கிறார்.

நாம் வருவதற்கு நேரமாகி விட்டது என்றால்
1.“செத்து விட்டோம் என்று என்று சொல்லி உடலை எரித்துப் பொசுக்கி விடுவார்கள்…
2.கடைசியில் நாம் இருவரும் ரோட்டிலே தான் அலைய வேண்டியிருக்கும்…! என்று அதையும் சொல்கின்றார்.

கல்கத்தா காளி கோவில் நடக்கக்கூடிய பல உண்மைகளை இப்படித்தான் குருநாதர் எம்மை அறியும்படி செய்தார்.

கடும் விஷம் கொண்ட தாவரங்களின் மத்தியில் அமரச் செய்து தான் அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர்

கடும் விஷம் கொண்ட தாவரங்களின் மத்தியில் அமரச் செய்து தான் அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர்

 

என்னைக் குருநாதர் காட்டுக்குள்ளும் மேட்டுக்குள்ளும் அழைத்துச் சென்று
1.சில நஞ்சான தீய இடங்களில் கொண்டு போய் அமரச் செய்தார்.
2.அந்த நஞ்சின் தன்மை எண்ணத்தால் எப்படித் தாக்குகின்றது…?
3.நஞ்சற்ற நிலைகளை நீ எப்படிப் பெற வேண்டும்…? என்ற அனுபவத்தைக் கொடுத்தார்

ஏனென்றால்… இன்றைய காற்று மண்டலத்தில் மனிதனால் “செயற்கையில் உருவாக்கப்பட்ட… இயக்கப்பட்ட நஞ்சுகள்” பலவாறு இந்தப் பூமி முழுவதுமே படர்ந்திருக்கின்றது.

இதற்குள் நாம் நல்லதை எண்ணினாலும் இந்த நஞ்சின் தன்மை கவர்ந்து நம் நல்ல குணங்களை இயக்கவிடாது நாம் எப்படித் தவிக்கின்றோம்…?

இந்த நிலையை உணர்த்துவதற்குத்தான்…
1.கடும் விஷச் சக்திகள் கொண்ட தாவர இனங்களின் மத்தியில் என்னை அமரச் செய்தார் குருநாதர்.
2.அதை நான் நுகரப்படும் பொழுது என்னுடைய சிந்தனையே அழிந்திடும் நிலை வருகின்றது
3.இந்த உணர்வினை அங்கே எனக்குள் இணைத்துக் காட்டுகின்றார்.
4.அங்கே சென்றபின் மயக்கம் வந்துவிடும். அத்தகைய செடிகளுக்குப் பக்கத்தில் சென்றாலே மயக்கம் வந்துவிடும்.
5.உனக்குள் அந்த நஞ்சின் தன்மை இயக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்…?

இது தான் அனுபவம்…!

இன்றைய உலகில் பிறர் செய்யும் நிலைகளும் பிறர் செய்யும் தவறுகளும் அதிகமான அளவில் நாம் பார்த்துக் கேட்டு அறிந்துணர நேருகின்றது… நம்மையறியாமலே அவைகள் நமக்குள் வந்து விடுகின்றது.

பிறர் செய்யும் தீமையான உணர்வுகள் நமக்குள் வந்தபின் நல்லதை எண்ணும் பொழுது நாம் நல்லதை வளர்க்க முடியாத நிலைகள் எப்படி இருக்கின்றது…? என்ற நிலைகளைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

நஞ்சான தாவர இனங்கள் மத்தியில் அந்த மணத்தை நுகரப்படும் பொழுது நுகர்ந்தாலே மயக்கம் வருகின்றது.

அப்போது… ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை அந்தத் தத்துவத்தைச் சொல்லப்படும் பொழுது இவருடைய தத்துவத்தை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது…?

இப்பொழுது மக்கள் மத்தியில் இருக்கும் பொழுது எனக்குத் துரோகம் செய்தான் பாவிப்பயல்…! இவன் உருப்படுவானா..,? என்று ஒருவரைச் சொல்லப்படும் பொழுது நல்ல மனம் கொண்டவர்கள் என்ன செய்கின்றோம்..?

அவன் சும்மா இருக்கின்றான்… நீ ஏன் இப்படிப் பேசுகின்றாய்…? என்று அவன் உணர்வைத்தான் சுவாசிக்க நேருகின்றது…
1.நல்ல குணத்தைச் செயல்படுத்த முடியவில்லை.
2.இப்படித்தான் இருக்கின்றது உலகம்…! என்ற நிலைகளில் தீமைகளில் சிக்கப்பட்டு…
3.தீமையான உணர்வுகளைப் பதிவு செய்தபின்… இது தான் இயக்குகின்றது.

நல்லதை இயக்க முடியவில்லை… நல்லதை வளர்க்க முடியாதபடி தத்தளிக்கின்றான்…! ஞானத்தின் அருள் பெறத் தெரியாதபடி தவிக்கின்றான். ஆகவே இந்த மக்கள் மத்தியில் என்ன செய்யப் போகின்றாய்…?
1.தீமைகளுக்கு (நஞ்சான செடிகளுக்கு) மத்தியில் நீ அமரப்படும் பொழுது
2.உண்மையின் தன்மையை உனக்குள் நீ அறிய முடியவில்லை
3.இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? என்று வினா எழுப்பினார்.

துருவ மகரிஷிகளின் அருள் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி “உயிர் வழியாகச் சுவாசிக்க வேண்டும்…!”

துருவ மகரிஷி… அவர் வாழ்ந்த காலத்தில் இதைப் போன்ற தீமைகளை வென்று… நஞ்சினை ஒளியாக மாற்றி… அகண்ட அண்டத்தின் இயக்கத்தையும் அறிந்து பேரருள் பேரொளியாக இன்று விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்.
1.அந்த மணங்களை நுகர்ந்தால் அவர் நஞ்சினை ஒளியாக மாற்றியது போன்று
2.நீ பெற முடியும்… மக்களையும் பெறச் செய்ய முடியும்…! என்று அனுபவபூர்வமாக எனக்கு உணர்த்திக் காட்டினார்.

இதைப் போன்று அனுபவ வாயிலாகப் பெற்ற அரும் பெரும் சக்திகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் “நீங்களும் பெற முடியும்… பெற வேண்டும்…!” என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.

“திருடன்டா…… நீ…!” என்றார் குருநாதர்

“திருடன்டா…… நீ…!” என்றார் குருநாதர்

 

ஒரு சமயம் பழனியில் தாய் தந்தையுடன் ஏழு பேர் சேர்ந்து கிணற்றில் விழுந்து செத்துப் போனார்கள். அதனால் அந்தக் கிணற்றுப் பக்கமாகப் போவதற்குப் பயந்து கொண்டே இருப்பார்கள்.

குருநாதர் என்ன செய்தார்…? என்னை இங்கே வாடா…! என்று கூப்பிட்டார். நான் சொல்வதைக் கேட்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…! என்று சொல்லிக் குளத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்.
அந்தக் குளத்திற்கு அருகில் உள்ள ஓரு கிணற்றுக்கு என்னைப் போகச் சொன்னார். நான் இங்கே இருந்து கொள்கிறேன்டா…! நீ (ஞானகுரு) அந்தக் கிணற்றில் ஒரு கல்லைக் கொண்டு போட்டு விட்டு வாடா…! என்கிறார்.

நான் எப்படி அங்கே போக முடியும்…?

ஏற்கனவே நிறையப் பேர் விழுந்து அதிலே இறந்திருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அங்கே போய் எத்தனையோ பேர் பயத்தாலே “நெஞ்சு வலித்தது…” என்று செத்துப் போயிருக்கின்றார்கள்.

இந்த எண்ணம் எல்லாம் எனக்குள் ஏற்கனவே பதிவாகி இருக்கின்றது. என்னை இராத்திரியில் ஒரு மணிக்குக் கல்லைக் கொண்டு போய் அந்தக் கிணற்றில் போடச் சொன்னால் எப்படி இருக்கும்…?

கல்லைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டேன். போடா…..! என்கிறார் குருநாதர்.

சாமி…! என்றேன் நான்.

முன்னே வைத்த காலைப் பின்னே வைக்காதடா… என்கிறார் குருநாதர்.

அங்கே நான் போகப் போக.. போகப் போக.. போகப் போக… அந்த உருவம் முதலில் வெள்ளையாகத் தெரிகின்றது. பிறகு அந்த அம்மா குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வந்தது… எல்லாமே அப்படியே தெரிகின்றது.

அங்கே கிணற்றில் விழுந்தது எல்லாம் தெரிகின்றது. “ஜல்…ஜல்…!” என்ற நினைப்பு அந்த எண்ணங்கள் அப்படியே குவித்து வருகிறது. அடுக்கடுக்காக அத்தனை உருவங்களும் தெரிகிறது.

இதைப் பார்த்தவுடனே எனக்கு என்னாகிப் போனது…? நான் சாப்பிட்ட ஆகாரம் ஜீரணிக்கவில்லை. பூராம் வயிற்றோட்டமாகப் போய் வேஷ்டியெல்லாம் அசிங்கமாகிவிட்டது. அவ்வளவு தைரியம் எனக்கு…!

இந்த அளவுக்கு ஆனவுடனே தலையிலிருக்கும் கல் தன்னாலே கிடு…கிடு…! என்று நடுங்கிக் கீழே வருகின்றது. விழுந்துவிட்டது.

கல் விழுந்தவுடனே குருநாதர் என்ன செய்து விட்டார்…?

டேய்…டேய்…டேய்…! என்னைக் காப்பாற்றுடா…. என்று சப்தம் போடுகின்றார். அந்த உருவம் இங்கே குருநாதரைச் சுற்றிக் கொண்டு அவர் மண்ணையைப் பிடிக்கின்ற மாதிரி (மூச்சுத் திணறல்) கழுத்தைப் பிடித்ததும் அலறுகின்றார்.

அட… இதென்னடா வம்பாகப் போய்விட்டது…? இவரே இப்படி இருக்கிறார்…! என்று சொன்னால் எப்படி…? நீ என்னைக் காப்பாற்றுடா… என்று குருநாதர் சொன்னதும் எனக்குப் பயம் இன்னும் அதிகமாகி விட்டது.

சரி…. அவ்வளவு தான் போலிருக்கின்றது என்று நான் நினைத்தேன்.

ஏனென்றால் என்னுடைய மனைவி இறக்கும் தருவாயிலிருந்து குருநாதர் காப்பாற்றினார். பின்
1.நான் சொல்வதை நம்புகிறாயா..?
2.நான் சொல்வதைக் காப்பாற்றுவாயா..?
3.இதிலிருந்து மாற மாட்டாய் அல்லவா…! என்று ஏற்கனவே வாக்கை வாங்கிக் கொண்டார்.

மனைவி இப்பொழுது தான் நன்றாக உள்ளது. சிறிய குழந்தைகளாக இருக்கின்றது. சரி இனி நமக்கு அவ்வளவு தான்…! இப்பொழுது வயிற்றோட்டம் போய்விட்டது… நாளைக்கு ஆள் இருக்கின்றனோ… இல்லயோ…? என்று இந்த எண்ணம் தான் எனக்குள் ஓடுகின்றது.

என் எண்ணம் இப்படி ஓடிக்கொண்டு இருக்கும் போது… குருநாதர் நான் சொன்னதைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னாய் அல்லவா… என்னைக் காப்பாற்றுடா…! என்கிறார்.

அவரிடம் நெருங்கிப் போகிறேன்…! நடுக்கம் தான் வருகிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை.

திடீரென்று குருநாதர் என்னிடம் “அதைக் கொன்று விடுவேன்…. என்று சொல்லுடா…! என்றார்

கொன்று விடுவேன்…! என்று சொன்னேன்.

அப்புறம் கொஞ்ச நேரத்தில் என்னாகிப் போகின்றது…? அந்த உருவம் “பட்…!” என்று விலகி விடுகின்றது… மறைந்து விட்டது…!

1.நீ என்னிடமே பெரிய வேலை பார்க்கிறாய்.
2.உன்னிடம் என்னென்னமோ சக்தியை வைத்துக் கொண்டிருக்கின்றாய்.
3.அந்த ஆவியைப் போகச் செய்து விட்டாய்…!
4.வேஷ்டியெல்லாம் கழித்துவிட்டாய் என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன்.
5.நீ திருடன்டா……!” என்கிறார் குருநாதர்.

சாமி…! நீங்கள் தானே அதைச் சொல்லச் சொன்னீர்கள்…! போகச் சொல்லிச் சொன்னதே நீங்கள் தானே…! என்று சொன்னேன்.

அதோடு விட்டாரா குருநாதர்…!

நீ இந்த வேஷ்டிய எடுத்துக் கொண்டு போய் அந்தக் கிணற்றில் இறங்கிக் கழுவித் துவைத்துச் சுத்தப்படுத்திவிட்டு வாடா என்கிறார்..!

எப்படி இருக்கும்..,?

ஏனென்றால் அந்தக் கிணறு உடை கிணறு. அதாவது காலை வைத்து இறங்கி உள்ளே போகப் படிக்கட்டுகள் இருக்கின்றது. திருடன்டா நீ…! போய் அலசி விட்டு வாடா…! போடா……! என்று சொல்கிறார் குருநாதர்.

இப்படி ஒவ்வொரு உணர்வுகளிலேயும் எனக்கு நேரடி அனுபவமாகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டினார்.

1.நீ பார்த்த நினைவால் அங்கே காற்றில் மறைந்து இருக்கக்கூடிய உணர்வுகள் அது எப்படிக் குவிகின்றது…?
2.அந்த நினைப்புக்கு அணைவாக அது எப்படி டி.வி.யில் சுவிட்சைப் போட்டவுடனே படம் தெரிவது போல் காற்றிலே பரவி இருக்கின்ற அலைகளைக் குவித்து உனக்குப் படமாக எப்படிக் காண்பிக்கின்றது…?
3.அங்கே கிணற்றுக்குள் விழுந்ததைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கின்றாய். இந்த உணர்வின் எண்ணம் வரப்போகும் போது அந்த அலைகள் படர்ந்திருப்பதை எப்படி குவிக்கின்றது…?
4.அது உன் உடலுக்குள் வந்தவுடனே மற்றவர்கள் சொன்ன உணர்வுகள் அந்த எண்ணங்கள் உனக்குள் அது இயக்கச் சக்தியாக எப்படி மாறுகின்றது…? என்று
5.இப்படி அனுபவத்தைக் கொண்டு வருகின்றார்.

“முதன் முதலில்…” என்னை ஒன்றுமே இல்லாமல் இப்படிப் பயப்படச் சொல்லி அந்த உணர்வுகளை எண்ணச் சொல்லி அது நடந்த நிகழ்ச்சிகளை இதே மாதிரிப் பார்த்து விட்டு வரச் சொல்கின்றார் குருநாதர்.

நாம் புலனறிவால் (கண் காது) நுகரும்போது சுவாசிக்கும் உணர்வுகள் நம்மை எப்படி எல்லாம் இயக்குகிறது…? உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது…? என்று காட்டினார்.

“சொல்வது…” உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா…!

எல்லோரும் ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்பவர்கள் தான்…! இதிலே யாரும் தப்புவதில்லை

எல்லோரும் ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்பவர்கள் தான்…! இதிலே யாரும் தப்புவதில்லை

 

குருநாதர் சொன்ன முறைப்படி இமயமலையிலே நான் (ஞானகுரு) சென்று கொண்டிருந்தேன். அங்கே பனிப்பாறையைக் கடந்து செல்லும் பொழுது அந்தப் பாதை திடீரென்று இடிந்து விழுந்து விட்டது.

அந்த நேரத்தில் குருநாதர் என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சொல்லிக் கொடுத்த அத்தனையும் மறந்து விட்டேன். மரணம் அடையும் நிலையே ஏற்பட்டு விட்டது. என் மனைவி மக்களை எல்லாம் எண்னத் தொடங்கிவிட்டேன்.

குருநாதர் காட்சி கொடுக்கின்றார்…
1.பனிப்பாறைகள் நொறுங்கிய பின் திரும்ப எப்படிப் போவது…? என்று பயந்தாய்…
2.உனக்குள் புயலே வந்து விட்டது… தலை சுற்ற ஆரம்பித்து விட்டது
3.உன்னுடன் இணைந்த மனைவி மக்களள் எல்லோரையும் எண்ணத் தொடங்கி விட்டாய்.

அவர்களை எண்ணும்போது இந்தப் பனியின் குளிரிலிருந்து தப்ப முடியவில்லை நீ மரணம் அடையும் நிலைக்கு வந்து விட்டாய்… இப்போது நீ யாரைக் காக்கப் போகின்றாய்…? என்று கேட்டார் குருநாதர்.

ஆகவே மனமே இனியாகிலும் மயங்காதே…! இந்த மனித வாழ்க்கையில் நீ தயங்காதே..
1.இந்த உடல் ஆசையை நீ வைக்காதே
2.எது நடக்க வேண்டுமோ அது நடக்கும்
3.ஆனால் நடக்காது தடுப்பதற்கு உனக்குள் சக்தி கொடுத்துள்ளேன்.

அதை எண்ணி எடுக்காதபடி… இந்த உடல் இச்சையை நீ பட்டு விட்டால்… “என் குழந்தை… என் பிள்ளைகள்… என் மனைவி…!” என்று நீ எண்ணினால் இந்த உணர்வின் இச்சைப்பட்டு… உடலை விட்டு நீ கீழே வந்து விடுகின்றாய்.

உன் குழந்தையின் ஈர்ப்பிற்குள் போகின்றாய்… அல்லது மனைவியின் ஈர்ப்புக்குள் தான் செல்ல முடியும். அந்தக் குழந்தையையும் மனைவியையும் நிம்மதியாக இருக்க வைக்க முடியுமா…?

“நீ இறந்து விடுகின்றாய்…” என்று வைத்துக் கொள்வோம். தன்னைக் காத்தவர் என்று ஆசையுடன் அவர்கள் ஏங்கி இருக்கப்படும் பொழுது அவர் உடலுக்குள் எளிதில் புகுந்து அவர்களையும் திருந்தி வாழ முடியாத நிலைகள் கொண்டு அனாதையாக்கி… நோயாக்கி விடுகின்றாய்.

1.உன்னை நம்பிய அனைவருக்கும் நீ பட்ட வேதனைகளை உருவாக்கி
2.துரித நிலையில் அவர்களும் மடியும் தன்மையை நீ உருவாக்குகின்றாய்.
3.அந்த வேதனையைத்தான் உன்னால் அங்கே உருவாக்க முடியும் அவர்களைக் காக்க முடியாது.

ஆகவே நீ எண்ணிய உணர்வுகள் அவர்கள் உணர்வுடன் நீ மடிந்தாலும் அவர்கள் உடலுக்குள் தான் செல்கின்றாய். அவர்களையும் அழித்து விடுகின்றாய்.

அந்த உடலுக்குப் பின் எந்த வேதனையும் துயரத்தையும் பட்டாயோ இந்த உயிர் அதற்குத்தக்க உடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும். இன்று நீ மனிதனாக இருக்கின்றாய்… அடுத்து நீ எங்கே போகின்றாய்…? என்று தெரியுமா…!

நீ எந்த வேதனை என்ற உணர்வை எடுத்தாயோ… அந்த விஷத்தையே தனக்குள் ஜீரணித்துத் தன் உடலைப் பாதுகாக்கும் கொள்ளும் அத்தகைய உயிரினங்களுக்குள் அழைத்துச் சென்று உயிர் அதற்குத் தக்க உடலை அங்கே உருவாக்கிவிடும்.

இதனை அனுபவபூர்வமாகக் காட்சியாகவே குருநாதர் காட்டுகின்றார்.

அதற்குப் பின் அங்கிருந்து டெல்லி வந்து… சென்னைக்கு விமானத்தில் திரும்பும் போது… குருநாதர் இன்னொரு அனுபவத்தையும் கொடுக்கின்றார்.

விமானத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எதிர்மறையான காற்று மண்டலத்திற்குள் செல்லும் போது “விமானம் கவிழும்…” சந்தர்ப்பம் ஏற்பட்டது.

விமானி முதற்கொண்டு மற்றவர்கள் எல்லாருமே பயந்து கதிகலங்கி விட்டார்கள். நான் மட்டும் அசையாமல் உட்கார்ந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.

குருநாதர் அங்கே சில விளக்கங்களைக் கொடுக்கின்றார்.

மற்றவர்கள் எல்லாம் பயந்தார்கள்… நீ ஏன் பயப்படவில்லை…?
1.உடலின் இச்சையை நீ படவில்லை… நீ உயிரின் இச்சைப்பட்டாய்.
2.உயிர் ஒளியானது.. அறிவின் தன்மை ஆனது.
3.அதே அறிவின் தன்மை நீ அச்சமில்லாது இருப்பதனால் உனது சக்தியும் சேரலாம் என்று சொல்கிறார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு நொடிக்குள் எடுத்து அங்கே செலுத்துகின்றாய்… அவர்களையும் காக்கின்றாய்… உன்னையும் காத்துக் கொண்டாய்…!

அத்தனை பேரிலும் ஒருவன் நீ எண்ணிச் செயல்பட்டதால் “இது உனக்குள் இருக்கக்கூடிய வலு…” என்று சொல்கின்றார். இப்படிக் காக்கப்பட்ட விமானங்கள் எத்தனையோ…! என்று விமானத்தில் வைத்து குருநாதர் உபதேசம் கொடுக்கின்றார்.

இருந்தாலும்… எல்லோரும் ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்பவர்கள் தான்…! இதிலே யாரும் தப்புவதில்லை.

இன்று நாட்டுக்கே அரசனாக இருந்தாலும் சரி… மகான் என்று மக்கள் மத்தியிலே அவரைப் போற்றிக் கொண்டிருந்தாலும் சரி…
1.இந்த உடலின் விதி முடிந்து விட்டால்..
2.எதனுடைய அழுத்தம் அதிகமாகின்றதோ இந்த உடல் போய்த்தான் ஆகும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் அதிகரித்து விட்டால் இந்த மனித உடல் என்ற இச்சையிலிருந்து விடுபட்டு… உணர்வுகள் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறுகின்றது.

நான் காட்டிற்குள் சென்று கஷ்டப்பட்ட மாதிரி நீங்களும் கஷ்டப்பட முடியுமா…

நான் காட்டிற்குள் சென்று கஷ்டப்பட்ட மாதிரி நீங்களும் கஷ்டப்பட முடியுமா…

 

குருநாதர் காட்டிய வழியிலே எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதற்கு இருபது வருடம் அனுபவப்பட்டேன். ஆனால் அதையெல்லாம் நீங்கள் இப்போது சமமாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள்.
1.உங்களிடம் பதிவு செய்கின்றேன்…
2.நீங்கள் இந்த நினைவைக் கூட்டினீர்கள் என்றால் நான் பெற்ற எல்லாச் சக்திகளையும் பெற முடியும்.

ஆனால் நான் காட்டிற்குள் சென்று தெரிந்து கொண்ட மாதிரி நீங்களும் காட்டிற்குள் போய்த் தெரிந்து கொள்ள முடியுமா…? உங்கள் பிழைப்பு என்னாகின்றது…?

மனைவி பிள்ளைகள் எல்லாம் விட்டுவிட்டு காட்டிற்குள் சென்ற பின் அவர்கள் எத்தனை வேதனைப்பட்டு இருப்பார்கள்…! விட்டுச் சென்ற பின் அவர்கள் வேதனை என்ன செய்யும்…?

குருநாதர் இதை எல்லாம் சொல்லுகின்றார். வீட்டை விட்டு வந்து விட்டாய்… உன் பிள்ளைகள் என்ன செய்கிறது என்று பார்…! இமயமலையில் இருக்கும் பொழுது குருநாதர் இதைக் காட்டுகின்றார்.

என் கடைசிப் பையன் தண்டபாணி… அவனுக்குப் பேச்சு அப்போது முழுமையாக வராது நானா… நானா… என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

இவனுடைய அம்மா (என் மனைவி) திட்டிக் கொண்டிருக்கின்றது. நான் தான் அவனுக்கு பிஸ்கட்டோ மற்றதுளை வாங்கிக் கொடுப்பேன். என்னுடைய எண்ணம் தான் அவனுக்கு இருக்கும். அவன் அம்மா மீது எண்ணம் இருக்காது.

“ஆளைக் காணோம்…” என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.

நானோ குருநாதர் கட்டளையிட்ட நிலையில் இமயமலையில் இருக்கின்றேன். இங்கே தெருவிலே நானா… நானா… என்று சொல்லிக்கொண்டு அது உஷ்ணமாகி இரத்த இரத்தமாக அவனுக்கு வெளியேறிக் கொண்டிருக்கின்றது.

இந்த உணர்வுகள் அங்கே காட்சியாகத் தெரிய வருகின்றது. வீட்டில் மனைவி “தொலைந்து போன உங்கப்பன் இப்படிச் செய்து விட்டான்…” என்று சொல்கிறது.

இப்படிப் பண்ணிவிட்டாரே…! என்று என் மாமியார் அந்த மாதிரிப் பேசுகின்றது. இந்தம்மா “என்னை இந்த இடத்தில் கொண்டு போய்க் கட்டி வைத்துக் கஷ்டப்படுத்தி விட்டாய்… என்னை விட்டுச் சென்று விட்டார்…!” என்று இந்த மாதிரிச் சொல்கின்றது.

ஒன்றுக்கொன்று இந்த வேகங்கள் எப்படி மாறுகிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர். நடந்த நிகழ்ச்சி இது.

பையனுக்கோ இரத்தமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இமயமலையில் இருந்து இதை நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அங்கே பனி மலையில் இருப்பதால் இதைப் பார்த்தவுடன் குருநாதர் சொல்லிக் கொடுத்ததை மறந்து விட்டேன்.

காரணம் அந்தப் பனி என்னைத் தாக்காது இருப்பதற்காக… என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு யுத்தியைச் சொல்லிக் கொடுத்திருந்தார். மனைவி பையன் மீது எண்ணம் வந்த உடனே இதயம் கிர்…ர்ர்ர்ரென்று இரைய ஆரம்பித்துவிட்டது.

ஏனென்றால் என் பையன் சிரமப்படும் உணர்ச்சிகளையும்… ஏங்கிக் கொண்டிருக்கும் உணர்வையும் எண்ணிய பின் எனக்கு இந்த நிலை வருகின்றது.

அப்பொழுதுதான் குருநாதர் பாடலைப் பாடுகின்றார்…
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…!
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

உன்னுடைய எண்ணங்கள் எல்லாம் இப்பொழுது மறையப் போகின்றது நீ யாரைக் காக்கப் போகின்றாய்…?
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…? என்று பாடுகின்றார்.

நீ இங்கிருந்து எதை எண்ண வேண்டும்…? என்று அந்த இடத்தில் உணர்த்துகின்றனர்

பையன் மீது ஆசையாக இருக்கின்றோம். அப்பொழுது நம்மையும் காக்க முடியவில்லை.

உன்னையே காக்க முடியாது போகும் பொழுது அவனை நீ எப்படிக் காக்கப் போகின்றாய்…? என்று குருநாதர் வினா எழுப்புகின்றார்.
1.இந்த உணர்வோடு உடலை விட்டு நீ சென்றால் அவன் உடலுக்குள் தான் செல்வாய்.
2.அந்த உடலுக்குள் சென்ற பின் அவனையும் பைத்தியக்காரனாக ஆக்குவாய்…
3.அவனைக் கொல்வாய்… அதற்குத்தான் உதவும்…! என்று அந்த இடத்தில் இப்படி உணர்த்துகின்றனர்.

குருநாதர் உணர்த்திய பின் ஈஸ்வரா…! என்று மறுபடியும் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த இரைச்சலை அடக்குகின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் பையன் உடல் முழுதும் படர வேண்டும். அவன் உடல் நோய் நீங்க வேண்டும். என் மனைவிக்கு மன உறுதி வர வேண்டும்… நல்ல சிந்தனைகள் வர வேண்டும்… சிந்தித்துச் செயல்படும் அந்த வலிமை பெற வேண்டும்…! என்று குருநாதர் சொன்னபடி எண்ணுகின்றேன்.

இது போன்று செய்த பின் அவர்களுக்கு அங்கே வருமானமும் தெளிந்து செயல்படக்கூடிய வழிமுறைகளும் கிடைக்கிறது. காசு இல்லாதபோது காசு கிடைக்கிறது.

1.நான் சொன்ன முறைப்படி செய்தால் உன்னையும் காக்கலாம் அவர்களையும் காக்கலாம்…! என்று
2.குருநாதர் இமயமலையில் வைத்துத் தெளிவாக்கினார்.

புத்தகத்திலோ ஏட்டிலோ படித்து யாம் உபதேசிக்கவில்லை… அன்று நடந்ததை நுகர்ந்தறிந்து தான் சொல்கிறோம்

புத்தகத்திலோ ஏட்டிலோ படித்து யாம் உபதேசிக்கவில்லை… அன்று நடந்ததை நுகர்ந்தறிந்து தான் சொல்கிறோம்

 

அருணகிரிநாதர் பல தவறுகள் செய்தவர். செல்வத்தை வைத்துப் பேரின்பம் பெற விரும்பியவர்.

அதன் வழி எல்லை கடந்து தன்னுடைய சகோதரியிடமே கேட்கப்படும் பொழுது “நீ எதை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ என்னையவே நீ அனுபவித்துக் கொள்…” என்று ஏக்க உணர்வுடன் மூர்ச்சையாகி மாரடைப்பால் சகோதரி இறந்து விடுகின்றது.

தம்பி மீது உள்ள உணர்வுகளை வைத்து அவனுடைய உடலிலே அந்த ஆன்மா சேர்கின்றது.

தன்னுடைய சகோதரி இறந்து விட்டதே… உணவு கொடுத்த தாயை மறந்து விட்டோமே…! என்று அப்போது தான் தன் தவறைப் பற்றிச் சிந்திக்கின்றான் அருணகிரி.

ஆனால் அவருடைய சகோதரியோ… தன் சகோதரன் நல்லவனாக வேண்டும் என்றும்… உலகத்தை அறிந்திட வேண்டும் என்றும்… உலகத்தை அறிந்திட்ட திருமூலரின் உணர்வுகளையே எடுத்து வளர்த்துக் கொண்டது.

இந்த உடலை விட்டுச் சென்ற பின் என்ன நடக்கின்றது…?

இவனோ மரணமடைய எண்ணுகின்றான். திருவண்ணாமலையில் உள்ள கிளிக் கோபுரத்தின் மீது ஏறி அதிலிருந்து கீழே விழுந்து தன் உடலை மாய்த்துக் கொள்ள விரும்புகின்றான்.
1.இந்த உடலில் இந்தப் பிறவியில் நாம் செய்த தவறுகள் போதும்…
2.இனி அடுத்த பிறவியாவது “தவறில்லாத நிலைகள்” நடந்து கொள்ள வேண்டும் என்று உடலை அழிக்க முயற்சிக்கின்றான்.

ஆனாலும் அவனுடைய சகோதரி இந்த உடலை விட்டுச் சென்ற பின் அவனுடைய உடலுக்குள் சென்று அந்த உணர்வினை ஈர்த்துவிட்டது உள் சென்ற பின் உடலுக்குள் உந்தி அவனை மடிய விடாதபடி அவனுள் நின்றே தான் வளர்த்த உணர்வை அங்கே நிறைவேற்றுகின்றது.

சிறிது நேரம் கழித்த பின் அவன் சிந்திக்கின்றான்.
1.அவன் உடலிலிருந்த சகோதரியின் உணர்வுகள் இயக்கப்பட்டு
2.”நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேத மந்திர சொரூபாய நமோ நமோ… வெகு கோடி…!” என்று பாடலையே பாடுகின்றான்.

எதனின் உணர்வுகள் கொண்டு எந்த இசையின் தன்மையை வருகின்றதோ அந்த உணர்வின் தன்மை உடலில் இரத்த நாளங்களில் சேர்க்கப்படும் போது… அதனின் உணர்வை உருவாக்கும் விந்துகளாக ஆகின்றது.

இப்படி இந்த உடலில் எடுத்துக் கொண்ட பல கோடி உணர்வுகள் உடலுக்குள் எப்படிச் சேர்கின்றது…? ஆகவே எப்போது எதனை அதிகமாகச் சேர்த்தோமோ அதனின் உணர்வு கொண்டு தான் வருகின்றது என்று தன்னை அறியும் நிலையில் அவன் வெளிப்படுத்துகின்றான்.

தன் உடலில் சேர்த்துக் கொண்ட அகந்தை என்ற உணர்வுகளும் ஆசை என்ற உணர்வும்
1.ஆசை என்ற உணர்வு கொண்டு பிறிதொரு வேதனையை உணராத நிலையில்
2.குருடனைப் போன்று தவறின் வழியிலே செய்து கொண்ட உணர்வுகள்
3.அந்த உணர்ச்சியின் நாதங்களே அவனுக்குள் அதை இயக்கிவிட்டது என்ற இந்த நிலையை அறிகின்றான்.

அந்தச் சகோதரி அவனுள் நின்று “திருமூலரின் மந்திரத்தை” தான் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் எப்படி அதனின் இசையாக மாற்றுகின்றது…? நீ குஷ்டரோகியாக எப்படி ஆனாய்…” என்ற இந்த உணர்வுகளை இங்கே உணர்த்தப்பட்டு இந்த பாடலைப் பாடுகின்றான்.

அந்த சகோதரி தன் சகோதரனை மீட்ட வேண்டும் என்ற உணர்வுடன் அந்த உடலுக்குள் சென்று… 1.27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து கவரக்கூடிய உணர்வுகள்
2.சூரியனுடைய ஈர்ப்புக்குள் உணவாக அது வரும் நிலையில் ஒன்றுடன் ஒன்று மோதி நாதங்கள் மாறுவதும்… சுருதிகள் மாறுவதும்…
3.ரா ரா ரா ரா ரா… ரீ ரீ ரீ ரீ ரீ…. ரூ ரூ ரூ ரூ ரூ… டூ டூ டூ டூ டூ… என்ற நிலைகளில் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த நாதங்கள் எப்படி மாறுகின்றது…? என்று
4.திருமூலர் கண்ட உண்மையை உணர்த்துகிறது.

இதைப் போன்று தான் உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து உணர்வுகள் உயிரிலே உராய்வுக்குத் தக்க எண்ணங்களும் எண்ணத்தின் உணர்வும் உணர்வுக்கு ஒப்ப செயல்களும் அதற்குத்தக்க உடல் என்ற நிலையில் இதை தெளிவாக திருமூல மந்திரத்தின் உணர்வினை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

காலத்தால் அதை எல்லாம் மாற்றி விட்டார்கள்.

ஆனால் இந்த உண்மைகளை உணர்வதற்காக குருநாதர் என்னை அந்தந்த ஸ்தலங்களுக்குச் செல்லும்படி செய்து அக்காலத்தில் நடந்த சம்பவங்கள் அந்த உணர்வுகள் பரவி இருப்பதை அருணகிரிநாதர் என்ன எடுத்தார்…? சகோதரி என்ன எடுத்துக் கொண்டது…? என்று காட்டுகின்றார்.

அருணகிரியின் வாழ்க்கையைப் பற்றிப் புத்தக வாயிலாக வந்திருப்பினும் ஏடுகளில் இது பதிவாக்கப்பட்டு இருப்பினும்
1.அவர்கள் (அருணகிரியும் அவருடைய சகோதரியும்) உடலிலிருந்து வெளிப்பட்ட உண்மையின் உணர்வுகள் எப்படி இருக்கிறது…? என்று திருவண்ணாமலைக்கு என்னைப் போகச் சொல்லி
2.அதன் உணர்வின் தன்மை எப்படி இருக்கிறது…? என்று இந்த காற்றிலே படர்ந்து இருப்பதை நுகரும்படி செய்து
3.ஆந்த உணர்ச்சிகளால் அவன் பாடிய பாடலும் அவன் பிறவி இல்லாத நிலை அடைந்ததும்
4.அவன் உடலுக்குள் இருந்த சகோதரி இந்த உணர்வின் தன்மை எடுக்கச் செய்ததும்
5.உடலுக்குப் பின் இரண்டு உயிரான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று ஒளியின் சரீரம் எப்படி அடைந்தனர்…? என்று தெளிவாகக் காட்டினார்.

அதைத்தான் உங்களுக்குச் சொல்கின்றேன் (ஞானகுரு).

குருநாதர் வழியில் காடு மேடெல்லாம் அலைந்து உண்மைகளைத் தெரிந்தாலும்… உலகம் எப்படிப் பார்த்தது…?

குருநாதர் வழியில் காடு மேடெல்லாம் அலைந்து உண்மைகளைத் தெரிந்தாலும்… உலகம் எப்படிப் பார்த்தது…?

 

தனித்து நான் (ஞானகுரு) சாமியாராக இருந்தேன். குருநாதர் காட்டிய வழியில் காடு மேடு எல்லாம் அலைந்து பல அனுபவங்களைப் பெற்று விட்டு வந்த பிற்பாடு என் மனைவிக்கு இதையெல்லாம் சொன்னேன்.

ஆனால் “சாமியாராகப் போய்விட்டார்…!” என்று ஊரெல்லாம் என்னைத் திட்டினார்கள். குடும்பத்தை விட்டு விட்டுச் சாமியாராகச் சென்று விட்டார் என்று திட்டிய சொந்தக்காரர்களும் நண்பர்களும் ஏராளம்.

சாமியம்மாவும் “பாவிப்பயல்…! என்னை விட்டு விட்டுச் சென்று விட்டார்…” என்று என்னைத் திட்டியதும் உண்டு. அதே சமயத்தில் என் பிள்ளைகளைக் கூப்பிட்டு உன் அப்பனிடம் காசு வாங்கிக் கொண்டு வா…! பெத்துப் போட்டுச் சென்று விட்டால் யார் கொடுப்பது…? என்று துரத்தி விட்டவர்களும் உண்டு.

இது எல்லாம் இமயமலையில் நான் குருநாதர் காட்டிய வழியில் அனுபவம் பெறுவதற்காகச் சென்ற போது நடந்த நிகழ்ச்சிகள்.

குருநாதர் எம்மைக் கோவணத் துணியைக் கட்டிக் கொண்டு தான் அங்கே போகச் சொன்னார். அங்கெல்லாம் பனி ஜாஸ்தி. அது சீன எல்லை வேறு. அதிலே பல இம்சைகள். துணி இல்லை கிடு… கிடு… என்று நடுங்குகின்றது.

அப்படி நடுக்கம் வரும் பொழுது குருநாதர் சிலவற்றைச் சொல்லியுள்ளார். அதன்படிச் செய்தவுடன் உடலுக்குள் வெப்பமாகி நடுக்கம் நீங்குகின்றது.

நடுக்கம் நீங்கியபின் என்னுடைய பையன் தண்டபானி இருக்கின்றான். அவனைக் காட்டுகிறார் குருநாதர்.

அவனுக்கு மூல பௌத்திரம் மாதிரி இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கிறது. தெரு மூலையில் உட்கார்ந்து கொண்டு நைனா… நைனா… என்று சொல்லிக் கொண்டு வலி பொறுக்க முடியாமல் உட்கார்ந்து போய்க் கொண்டிருப்பதைக் குருநாதர் காட்சியாகக் காட்டுகின்றார்.

அதைப் பார்த்ததும் பாசத்தால் எண்ணியவுடன் உடனே எனக்குக் குளிர் அதிகமாகிறது. மறுபடியும் கிடு… கிடு… என்று உதறுகிறது. பார்த்தோம் என்றால் “கிர்…” என்று இருதயமே விரைக்கின்றது.

அப்பொழுது குருநாதர் என்ன சொல்கிறார்…?

அனுபவம் பெறுவதற்காக எனக்குக் காட்டிய அந்த மூன்று இலட்சம் குடும்பங்களை எண்ணச் சொல்கிறார்.

அந்தக் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் “நன்றாக வாழவேண்டும் என்று நீ இங்கிருந்து எண்ணு…” என்று அங்கே உபதேசிக்கின்றார்.

அப்பொழுது அவர்களுக்கெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணும்போது இங்கே குளிரினால் வரும் இரைச்சல் குறைகிறது. பனி என்னைத் தாக்கவில்லை.

ஏனென்றால்… இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு…? என்ற நிலையை அந்த இடத்தில் வைத்துத்தான் பாட நிலையாகக் கொடுக்கின்றார்.

அதாவது… அங்கே காட்சி தெரியும்போது “இப்படி ஆகிவிட்டதே…” என்று பையன் மேல் பாசம் வருகிறது. அதே சமயத்தில் சாமியம்மா (என் மனைவி) என்ன நினைக்கின்றது…?

இரண்டு மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு அது பட்டினியாக இருக்கின்றது. ஏனென்றால் என் மூத்த பையன் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… என்று சொல்லி சொத்தை எல்லாம் இழக்கச் செய்துவிட்டான்.

இந்தச் சூழ்நிலையில்… இப்படியெல்லாம் இருக்கிறதே என்று சொல்லி மைசூரில் இருக்கும் என் மகள் என்னைத் திட்டுகின்றது. “பிள்ளைகளைப் பெத்துவிட்டுச் சோறு போடாமல் சுற்றிக் கொண்டுள்ளான்…!” என்று திட்டுகிறார்கள்.
1.இதெல்லாம் என் காதில் கேட்கிறது.
2.நான் இமயமலையிலிருந்து இதெல்லாம் பார்க்கின்றேன்.

பாசத்தினால் எடுக்கும் பொழுது எப்படியெல்லாம் இந்த உணர்வுகள் மாறுகின்றது…?

அந்த உணர்வால் நான் என்ன அவஸ்தைப்படுகின்றேன்…? என்று குருநாதர் அந்த இடத்தில் வைத்து நேரடி அனுபவமாகக் கொண்டு வருகின்றார்.

ஆக…
1.கஷ்டப்படும் குடும்பங்களை எண்ணி அவர்களுக்கெல்லாம் நல்லதாக ஆகவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் போது குளிர் ஒடுங்குகின்றது.
2.அதே சமயத்தில் குடும்பப் பாசம் என்ற நிலையில் அந்த இடத்தில் எண்ணும் பொழுது குளிர் பாதிக்கின்றது… நல்லதை எண்ண முடியவில்லை.

சிலர் எல்லோருக்கும் நல்லவைகளைச் சொல்வார்கள். தன் குடும்பப் பற்று வரும்பொழுது “தன் பையன்… தன் பிள்ளை…” என்று வரும்போது அவர்களுக்குள் அந்த உணர்வுகள் வரத்தான் செய்யும்.

ஏனென்றால் அந்தப் பாசம் என்ற உணர்வு வரும்போது எப்படியெல்லாம் தடைப்படுத்துகிறது…? என்று இமயமலையில் வைத்து குருநாதர் சொல்லிக் கொடுக்கின்றார்.

யாம் சந்தித்த அந்த மூன்று இலட்சம் பேரை எண்ணி… அவர்களெல்லாம் நலம் பெற வேண்டும் என்று அங்கிருந்து எண்ணச் சொல்கிறார்.

இப்படி பல வகையில் சிரமப்பட்டு உண்மைகளை எல்லாம் தெரிந்து நான் இங்கே வந்த பிற்பாடு சில இடங்களில்
1.இந்தச் சாமி கல்யாணம் செய்து விட்டாரே…!
2.கல்யாணம் பண்ணிய சாமியார்கள் எல்லாம் அயோக்கியச் சாமியார்கள் என்று இப்படியும் சொல்கின்றார்கள்.

காரணம்… சாமியார் ஆகிவிட்டால் கல்யாணம் செய்யக்கூடாது.

எப்பொழுதாவது என் மனைவி என் அருகில் வந்து ஏதாவது பேச முற்பட்டால் சில பேருக்கு இதைப் பார்க்கும் பொழுது “குடும்பப் பற்றுடன் இருக்கின்றாரே இந்தச் சாமியார்…” என்று சொல்கின்றார்கள்.

இது எல்லாம் “மனித உணர்வுகளுக்குள்…” நடந்த நிகழ்ச்சிகள்.

இறந்தபின் இந்த உடலில் விளைந்த உணர்வுகள் (ஆவி) அடுத்த உடலில் எப்படிச் சாடுகிறது…?

இறந்தபின் இந்த உடலில் விளைந்த உணர்வுகள் (ஆவி) அடுத்த உடலில் எப்படிச் சாடுகிறது…?

 

நான் (ஞானகுரு) சித்தான பிற்பாடு ஒரு சமயம் இது நடந்த நிகழ்ச்சி. ஒரு ஊரில் இரண்டு பேரில் ஒருவருக்கொருவர் பகைமையில் அடுத்தவரை வெட்டி வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விடுகின்றார்கள்.

எதிரி என்ற நிலையில் இருக்கப்படும் பொழுது இறந்தவருக்கோ தன்னிடம் வேலை செய்யும் ஒரு சாதாரண கூலி ஆளிடம் பேசிப் பழக்கம் இருந்திருக்கின்றது. இறந்த பின் அவருடைய ஆவி அந்த கூலி ஆளின் உடலுக்குள் சென்று விட்டது

அந்த உடலுக்குள் சென்ற பின் “ஐய்யய்யோ… என்னை வெட்டிப் போட்டு விட்டார்களே… வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விட்டார்களே…! என்று சொல்லத் தொடங்குகின்றார்.

ஆனால் இப்படிப் பேச ஆரம்பித்ததும் “இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது…” என்று ஊர்க்காரர்கள் எல்லாம் சொல்கின்றார்கள். அந்த ஆளை என்னிடம் அழைத்து வருகின்றார்கள்.

என்னை வெட்டி விட்டார்கள்… வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விட்டார்கள்… என் துணி எல்லாம் இங்கே இருக்கின்றது… அரிவாள் எல்லாம் இங்கே இருக்கின்றது… புதைத்தவர்கள் இன்னார்…! என்று அந்தப் பெயர்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றது இன்னென்ன இடத்தில் இப்படி இருக்கிறது என்று சொல்கின்றது.

அந்த நேரத்திலே போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்த்தாற் போல் தான் நான் சைக்கிள் தொழில் செய்து கொண்டிருக்கிறேன் அங்கே இருக்கக்கூடிய சப் இன்ஸ்பெக்டர் இங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

காரணம் அவருக்கு ஏற்கனவே இங்கே என்னிடம் பழக்கம் இருந்தது.

அவருடைய கொழுந்தியாளுக்கு ஒரு சிக்கல் இருந்தது. அவர்கள் கேரளாவில் இருப்பவர்கள். அந்தப் பெண்ணிற்கு அங்கே செய்வினை செய்து விட்டார்கள்.

சேலை கட்டினால் சேலை கிழிந்து விடும் வெளியிலே வர முடியாது இரவில் முகத்தை எல்லாம் பிறாண்டி வைத்து விடும்.

ஆரம்பத்தில் இங்கு நடப்பதை எல்லாம் பார்த்துவிட்டு அந்தச் சப் இன்ஸ்பெக்டர் என்னை அது விஷயமாகச் சந்தித்தார். என்னை அவர்கள் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

இந்தப் பெண்ணுக்கு இப்படி இருக்கின்றது… என்ன செய்ய வேண்டும்…? என்று கேட்டார்.

மாந்திரீக வேலை செய்து ஏவல் செய்து இருக்கின்றார்கள். சுருட்டையும் மதுவையும் வைத்திருப்பார்கள். ஒரு ரூமில் கொண்டு போய் அந்தப் பதார்த்தங்களை வையுங்கள் என்று சொல்லி வைக்கச் சொன்னேன்.

சொன்ன மாதிரி வைத்தவுடன் அதை எல்லாம் எடுத்துக் கொண்டது. அன்று இந்தப் பெண்ணை எதுவும் செய்யவில்லை. சேலை எல்லாம் அப்படியே இருக்கின்றது… முகத்தில் காயமும் இல்லை.

சுயநினைவு வந்த பின் இங்கே என்னிடம் அழைத்து வந்தார்கள். அந்த அம்மாவிடம் சில விவரங்களைச் சொல்லி இந்த மாதிரிச் செய் உனக்கு நன்றாகி விடும்… பாதுகாப்பாக இருக்கும்…! என்று சொன்னேன் செய்தது

அதன் பிறகு அது நன்றாக ஆனது. செய்வினை எதுவும் பாதிக்கவில்லை. அதற்குப் பின் சப் இன்ஸ்பெக்டர் இங்கே வந்தார் என்றால் உள்ளே சிறிது நேரம் உட்கார்ந்து நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்.

அப்படி அவர் இருக்கும் நேரத்தில் இந்த ஆள் வந்து இப்படிப் புலம்ப ஆரம்பிக்கின்றான்.

என்னை வெட்டி விட்டார்கள்… புதைத்து விட்டார்கள்…! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

அவர் உடனே என்ன…! ஏது…? என்று கவனித்துக் கொண்டே சென்று அது நிஜமா… பொய்யா…? என்று அது எத்தனாவது வாழை மரம்…? என்று விசாரித்து அங்கே சென்று தோண்டிப் பார்க்கின்றார்கள்.

பார்த்தால் அங்கே எல்லாமே இருக்கின்றது.

துணி எங்கே இருக்கிறது என்று சொன்னது…? கொன்ற ஆயுதங்கள் எங்கே இருக்கிறது…? என்று சொன்னது. எல்லாம் தேடிப் பிடித்து எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.

எடுத்த பின் மற்றவர்கள் தலைமறைவாகப் போய்விட்டார்கள்…
1.கடைசியில் என்னைக் (ஞானகுரு) கொலை செய்ய வந்து விட்டார்கள்
2.இந்த ஆள்தான் எல்லாம் சொல்லி இந்த மாதிரி ஆகிவிட்டது…! என்று என்னைத் தேடி வருகின்றனர்.

பின் அவர்களை அரெஸ்ட் செய்து விட்டார்கள். மரண தண்டனை கிடைத்தது.

இருந்தாலும்…
1.சந்தர்ப்பத்திலே இதைச் சொல்லப்படும் பொழுது நமக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வருகின்றது…? என்ற வகையில்
2.அப்பொழுது குருநாதர் சில உணர்வுகளை உணர்த்துகின்றார்

அவர்கள் மனதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

1.ஆபத்து வந்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இப்படிச் செய்…! என்று சொன்னார்
2.அதனால் அவர்கள் மனதை மாற்றி அந்த இடத்தில் தப்பித்துக் கொண்டேன்

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் இது எப்படி நடக்கின்றது என்ற நிலையை
1.ஒரு ஆன்மா எப்படி வெளியில் செல்கின்றது
2.இன்னொரு உடலுக்குள் சென்ற பின் என்ன செய்கின்றது
3.இதையெல்லாம் அறிந்து கொள்வதற்குத் தான் மூன்று லட்சம் பேரைப் பார்த்தது.

எல்லாம் அனுபவபூர்வமாகக் கண்ட நிலைகள்.

மறதிப் பூடு

மறதிப் பூடு

 

காட்டிற்குள் சில வகையான செடிகள் உண்டு அந்தச் செடிகளின் மீது மிதித்து விட்டால் நம் நினைவையே இழந்து விடுவோம். அடுத்து எங்கே போகின்றோம்…? என்ன செய்கிறோம்…! என்றே தெரியாது.

அந்தச் செடியைத் தூசி போல் ஆக்கி… வீட்டு வாசல்படியில் தேய்த்து விட்டால் உங்கள் நினைவுகள் மறந்துவிடும். உங்கள் கடையில் கொண்டு போய்ப் போட்டால் உங்களுக்குச் சிந்திக்கும் தன்மை வராது. இதை “மறதிப் பூடு…” என்று சொல்வார்கள்

குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று இதை எல்லாம் எமக்கு (ஞானகுரு) ஞாபகப்படுத்திக் காட்டுகின்றார்.

நாங்கள் ரெண்டு பேரும் செல்லும் பொழுது திடீரென்று அவர் ஒதுங்கிச் செல்கிறார்… என்னைச் செடி மீது மிதித்து விட்டு வாடா…! என்று சொல்கின்றார்.

செடியை மிதித்து நான் கடந்து சென்றவுடன் என் நினைவே இல்லை…! எந்த பக்கம் போகின்றேன்… என்ன செய்கின்றேன்…? என்றே எனக்குத் தெரியவில்லை

செடிகளுக்குச் சத்து எப்படி இருக்கிறது பாருடா…! என்கிறார்.

1.மனிதனான பின் காட்டிற்குள் அவன் அடிபட்டு வேதனையுடன் கீழே விழுந்து தன்னை மறந்த நிலைகள் மடிந்த பின்
2.அவனுடைய உணர்வுகள் செடியுடன் கலந்து அதை அது உணவாக உட்கொண்ட பின்
3.அதன் விழுதுகளில் இப்படி எல்லாம் ஆற்றல் வருகிறது…. அதை மிதித்தால் நம் சிந்தனையை இழக்கச் செய்கின்றது

பிறகு குருநாதர் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே செல்கின்றார். ஆனால் என்ன செய்வது… எந்தப் பக்கம் போவது…? என்று எனக்குத் தெரியவில்லை.

வேகமாக என் கையை பிடித்து இழுத்து… வாடா… வாடா… வாடா… வாடா… என்று என்று கூப்பிட்டுக் கொண்டே சென்றார்.

பின் வேறு சில செடிகளைக். காண்பித்து… “அதன் மீது உட்கார்…” என்றார். உட்கார்ந்த பின் அப்புறம் எனக்கு நினைவு வருகின்றது.

இப்படி அனுபவரீதியில் தான் குருநாதர் எனக்குக் கொடுத்தார். வெறும் வாயால் சொல்கிறேன் என்று அல்ல.

1.உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் திரை மறைவாக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் செல்ல வேண்டும்
3.விஞ்ஞான உலகில் வரும் கடுமையான தீமைகள் இருந்து விடுபட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் இத்தனையும் கற்றுக் கொடுத்தார். இருந்தாலும் இதை எல்லாம் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டு உங்களிடம் சொல்லாமல் விட்டால் என்னவாகும்…! எனக்குள் அது மறைந்து விடுகின்றது.

அப்படி இல்லாதபடி உங்களுக்குள் அதை எல்லாம் உணர்த்தப்படும் போது
1.உங்கள் பார்வையால் மற்றவருடைய தீமைகளைப் போக்க முடியும்
2.சிந்தனை இழக்கச் செய்யும் நிலையிலிருந்து மற்றவர்களை மீட்கும் சக்தியும்
3.அதனை மாற்றியமைக்கும் சக்தியாகத் தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக
4.அந்த ஞானத்தின் வழிகளில் உங்கள் வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமையும்.

இதன் வழியில் ஒவ்வொருவரும் சென்றால் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் உங்களுக்குள் கிடைக்கின்றது. ஆகவே… நீங்கள் எல்லோரும் ஞானியாக வேண்டும்.

உங்கள் உணர்வைக் கேட்போருக்கும் அருள் ஞானத்தை ஊட்டி மறைத்திருக்கும் தீமையான உணர்வுகளை நீக்கி அருள் ஒளியின் உணர்வை அவர்களும் பெருக்க வேண்டும்… உங்களுக்குள்ளும் அருள் சக்தி பெருக வேண்டும்.

அத்தகைய நோக்கத்தில் தான் குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று எமக்குக் காட்டிய உண்மைகளை உங்களுக்குள்ளும் தெளிவாக்குகின்றேன்.

உடலுக்குள் பல மாற்றங்களை உண்டாக்கி வலியோ வேதனையோ நோயோ எப்படி உருவாகிறது…? என்பதை நேரடியாகக் காட்டினார் குருநாதர்

உடலுக்குள் பல மாற்றங்களை உண்டாக்கி வலியோ வேதனையோ நோயோ எப்படி உருவாகிறது…? என்பதை நேரடியாகக் காட்டினார் குருநாதர்

 

ஈஸ்வரபட்டாய குருதேவர் எம்மை (ஞானகுரு) பதினான்கு வருடம் பல காடு மேடெல்லாம் அலையச் செய்தார். என்னை அறியாது எனக்குப் பல துன்பங்களை அங்கே ஊட்டினார்.

அந்தத் துன்பத்தை நான் நுகர்ந்து பார்க்கும் போது அது எல்லாம் எனக்குள் வந்து விடுகின்றது. அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று அனுபவபூர்வமாக நான் தெரிந்து கொள்வதற்காகவே அதை எல்லாம் கொடுத்தார்.

அதற்காக வேண்டி மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படியும் செய்தார். அதை நான் வேடிக்கை பார்க்கும் பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
1.ஒருவருக்கொருவர் சண்டை போடுவது… ஒருவருக்கொருவர் தகாத நிலையில் பேசுவது…
2.இது போன்ற எத்தனையோ உணர்வின் தன்மைகளை நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது
3.சுவாசித்தது உயிருடன் மோதும் பொழுது ஏற்கனவே நான் எடுத்துக் கொண்ட நல்ல குணங்களுக்குள் இது கலந்து
4.அந்த விஷத்தின் தன்மை எனக்குள் இருக்கும் நல்ல குணத்தைச் செயலாக்க விடாதபடி
5.என் எண்ணங்கள் எப்படி எல்லாம் மாறுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும்
6.என்னை அறியாமலே உடலுக்குள் பல கவலையும் பல சஞ்சலமும் ஏற்படச் செய்து
7.எவ்வளவு திடசாலியாக இருந்தாலும் பலவீனப்படுத்துவதையும் குருநாதர் காட்டினார்.

ஏனென்றால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருக்கும் போது அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வைக் கூர்மையாகக் கவனிக்கப்படும் பொழுது அந்த உணர்வின் அலைகள் இங்கே பதிவாகி விடுகின்றது.

அந்த அலைகள் உடலுக்குள் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் இரவில் படுத்திருக்கும் போது அந்த உணர்வுகள் தன்னை அறியாமலேயே சுவாசிக்கச் செய்து “பயப்படச் செய்வதையும்… தூங்கவிடாமல் எப்படிச் செய்கிறது…? என்பதையும்” நேரடியாக அனுபவபூர்வமாக குருநாதர் காணும்படி செய்தார்.

அங்கே பார்த்த உணர்வுகள் உடலுக்குள் அது எதுவாக இணைகின்றது…? அது மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக உணர்ச்சிகளை ஊட்டி உடலில் அணுக்களாக வளரச் செய்து நோய்களாக எப்படி உருவாகிறது…?

காரணம்…
1.ஒவ்வொரு நாளும் எந்தெந்தக் குணங்களை எடுக்கின்றோமோ…
2.அந்தக் குணங்களுக்குத் தக்கவாறு… ஒவ்வொரு உணர்வுக்குத் தக்கவாறு தான் உடலும் உடல் உறுப்புகளும் அமைந்தது.
3.ஈரல் கல்லீரல் மண்ணீரல் கிட்னி சிறுகுடல் பெருங்குடல் இருதய வால்வுகள் சிறு மூளை பெரு மூளை என்று
4.அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு எதனெதனை அது சேர்த்ததோ
5.அந்த மிருதுத் தன்மைக்குத் தக்கவாறு தான் அதனுடைய செயல்களும் இருக்கின்றது.

அந்த உறுப்புகளின் இயக்கங்களையும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒலிகளுக்கொப்ப அது எப்படி இயங்குகிறது..? என்ற நிலையையும் உடலுக்குள்ளேயே வைத்துக் காட்டினார் குருநாதர்.

மருத்துவம் படிப்பவர்கள் படிப்பு (PRACTICAL) மூலமாகத் தெரிந்து கொள்வதற்காக பிறருடைய உடல்களை எப்படி எடுத்துப் பரீட்சித்துப் பார்ப்பார்களோ அதே போல
1.எத்தகைய உணர்வை நீ சுவாசிக்கின்றாய்…?
2.எடுக்கும் எண்ணங்கள் அனைத்தும் உடல் உறுப்புகளை எப்படித் தாக்குகின்றது…?
3.அந்த உணர்வின் வேகத் துடிப்பு இரத்தத்துடன் கலந்து சுழன்று வரப்படும் போது
4.ஒவ்வொரு உறுப்புகளிலும் இது எதிர்மாறாகும் போது அது எப்படி எரிச்சலாகின்றது…
5.அது எந்தெந்த வேதனையாக உருவாக்குகின்றது…? என்று காட்டினார்.

உடலிலே சர்க்கரைச் சத்து அதிகமாகி விட்டால் எந்த அளவிற்குச் சர்க்கரை அதிகமாக இருக்கின்றதோ அதற்குத் தகுந்த மாதிரி சிறு நீரின் கலர் மாறுகின்றது… பார்க்கலாம்…!

அதைப் போல் பிறருடைய செயல்களை நாம் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும்… இந்த உணர்வுகள் அது சுவாசித்து உடலுக்குள் செல்லும் போது இரத்தமாக மாறி… உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளுக்குள் ஊடுருவி… இதற்கும் அதற்கும் எதிர்மறையாகும் போது
1.அந்த உறுப்புகள் எப்படிப் பின்னமாகின்றது…?
2.உனக்குள் வலி எப்படி வருகிறது…? என்ற நிலையையும்
3.என்னையே முன்னிறுத்தி என் உடலின் இயக்கங்களைப் பார்க்கச் சொல்கிறார்.

எக்ஸ்ரே படங்களிலும் மற்ற ஸ்கேன் படங்களிலும் பார்ப்பது போல் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அது எவ்வாறெல்லாம் உன் உடலில் விளைகிறது…? என்பதை குருநாதர் ஒவ்வொரு நிலைகளிலும் இதைக் காட்டினார்.

பின் அதை எல்லாம் மாற்றும் உபாயமாக மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்க வேண்டிய முறைகளையும் கொடுக்கின்றார். அதை எல்லாம் கண்டுணர்ந்த பின் தான் உங்களுக்குள் இதை உபதேசிக்கின்றேன்.

1.நீங்கள் சாதாரண நிலையில் இருந்தாலும்
2.சிறு குழந்தையாக இருந்தாலும் அல்லது படிக்காதவர்களாக இருந்தாலும்
3.யாம் உபதேசிப்பதைக் கூர்மையாகப் பதிவு செய்யப்படும் போது
4.குருநாதர் காட்டிய அருள் ஞானிகளின் சக்திகளை நீங்களும் பெற முடியும்.

அந்த மெய் ஞானிகள் தீமையை நீக்கும் ஆற்றல்களைப் பெற்று எவ்வாறு விண்ணுலகம் சென்றார்களோ அந்த உணர்வின் சத்தை உங்களுக்குள் நினைவு கூர்ந்து இங்கே உபதேசமாகக் கொடுக்கும் போது உற்றுக் கவனித்தால் அது உங்களுக்குள் பதிவாகிவிடுகின்றது.

அந்தப் பதிவை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அவர்கள் பெற்ற சக்தியை நீங்களும் பெற முடியும்… விண் செல்லவும் முடியும்…!