காற்றோலம்… வாயோலம்…!

காற்றோலம்… வாயோலம்…!

 

காற்றோலம்… வாயோலம்…! என்றால் என்ன…?
1.காற்றின் ஓலம் மிகுந்து விடும் பொழுது அது கடும் மழையைக் காட்டும்.
2.அதே போன்று வாய் ஓலம் மிகுந்தது எனில் அது கோபத்தைக் காட்டும்.

காற்றின் ஓலத்தால் வருவது மழை மாத்திரம் அன்று. அந்த மழை நீர் பெருக்கத்தால் ஏற்படுகின்ற பெரும் வெள்ளமானது… அலை கடலெனப் பொங்கி… நீரின் கரைகளை உடைத்து விடுகின்ற வேகம் கொண்டு நீர் கரையை உடைக்கின்றது.

அதே போன்று மனிதனின் வாய் ஓலம் “அவனின் கோப குணத்தை உணர்த்துவதோடு மட்டுமின்றி…” அந்தக் கோப நீர் பெருகி மனிதனின் ஆற்றல் சிந்தனா சக்தி செயற் கொள்ளும் நிலையைத் தகர்த்துவிடும்.

நீரின் கரைகள் உடையாது இருக்க… அந்த நீர்க் கரையைக் காக்கக்கூடிய பயிர்கள் நடப்பட்டு அந்தப் பயிர்கள் வளர்ந்து பூமியில்
1.ஒன்றுடன் ஒன்று வேர் தொகுதியினால் பின்னிப் பிணைந்து
2.எத்தகைய வெள்ளம் பெருக்கெடுத்து வந்தாலும் அந்த நீர்க் கரையைப் பெரு வெள்ளத்தினால் உடைத்திடாமல் காப்பதைப் போன்று
3.தியானத்தின் மூலம் எடுக்கும் ஞான சக்திகள் சாந்தப் பயிர்களாக ஊன்றப்பட்டு
4.”நிறை பேணல்” என்பதன் வழியாகக் காக்கும் பயிராக வளர்ந்து… சிந்தனையின் சக்தியைக் கட்டிக் காத்து
5.”உலகோதய மோதல்” எனப்படும் செயலில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.

மரத்திலே காயும் உண்டு… கனியும் உண்டு… அந்த மரத்தைப் பாதுகாத்திட்டவன் பிறருக்கு அதைத் தந்திடும் செயலும் உண்டு. அக்கனி கொண்ட மரத்தினைக் காத்திட்டவர் நிலையே “வேதாள மகரிஷியின் நிலை…”

1.”ஞானம் என்ற கோல் தந்து எண்ணம் போல் பெற்றிடுக…” என உரைத்ததில்
2.அந்தக் கோல் கொண்டு காயை விடுத்துவிட்டுக் கனியைக் கவர்ந்திட முயற்சித்திடும் செயலில்
3.அந்தக் கனி விழுகின்ற வேகப்பொருளாக… அதையும் ஆடை கொண்டு காத்திட்டு அளிக்கின்ற பக்குவம் “ஞான நிலைக்கன்றோ வாய்த்தது…”

ஒளி நாதம் கூட்டும் சொல் என்ற சொல்லின் வன்மை பெற்றிட… கனி என்பதே பெற்றிடும் பக்குவ நிலை…. இனியவை இன்னாதவை என்று திருவள்ளுவர் உரைத்த முறையின் பொருள் உணர்ந்க்திருக்கின்றாய் அல்லவா.

சொல் நாத வேறுபாடும் உரைத்து வந்திருக்கின்றோம். அத்தனையும் சூட்சம சக்தியாக மாமகரிஷிகள் வழிகாட்டிட்ட தன்மைக்கு… மனது ஒன்றிச் செயல் கொண்டிடும் சூட்சம உபாயங்கள் கொண்டு… பெற்ற பயனைப் பெற்றுத் தருகின்றேன் என்றே பாடுகின்றாய். அவ்வாறு
1.ஊன் உயிர் கலந்து பெறுகின்ற முயற்சிக்குக் காட்டுகின்ற வழியைக் கூர்மதி கொண்டவன் கலப்பாகப் பெற்றாலும்
2.காக்கின்ற பொருளின் மறைபொருளை உணர்ந்து கொள்…!

நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

 

“அணு ஆயுத இயந்திரங்களை…” கால மணிகளை உருவாக்கும் நிலைகள் கொண்டு எலக்ட்ரானிக் முறைப்படி நாடாக்களில் பதிவு செய்து பாதுகாப்பாக வைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.

அதன் மூலம் விஷத்தன்மை கொண்ட அணுகுண்டுகளையும் ஹைட்ரஜன் குண்டுகளையும் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.

மற்ற நாடுகளில் இராக்கெட்டுகளை ஏவுவதற்காக அதாவது அங்கிருந்து எதிர் அலைகள் வந்தால் சீறிப்பாய்ந்து அந்த இலக்கினைத் தாக்குவதற்காக… அடுத்த நாட்டை அழிப்பதற்காக இப்படி வைத்துள்ளார்கள்.

விமானங்களையும் இராக்கெட்டுகளையும் கம்ப்யூட்டர் துணை கொண்டு இயக்கச் செய்யும்… உணர்வின் அறிவு எலக்ட்ரானிக்காக மாற்றப்பட்டு எதிர் அலை கொண்டு இவன் இடும் கட்டளைகளைச் சீராக வேலை செய்யும் நிலையில் வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் சூரியனுக்குள் இயங்கும் எலக்ட்ரிக் இப்போது அதிகமாகி விட்டால் என்ன நடக்கும்…?

இன்று வீடுகளில் நாம் உபயோகப்படுத்தும் மின்சாரம் அதிகமாகிவிட்டால் பல்புகள் ஃபியூசாகி விடுகின்றது. அதைப் போல்
1.மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் சூரியனுக்குள் அதிகரிக்கப்படும் பொழுது உற்பத்தியாகும் எலக்ட்ரிக் அதிகமாகி
2.சீராக இயங்கிக் கொண்டிருக்கும் எலக்ட்ரானிக்… குண்டுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அந்தச் சாதனங்கள் செயலிழந்து விடும்
3.இராக்கெட்டுகளோ மற்ற சாதனங்களோ தன்னிச்சையாக இயங்கத் தொடங்கும்.

காரணம் அதற்கென்ற மானிட்டர்கள் வைத்துச் செயல்படுவது செயலிழந்து… சிதைவுண்டு… விஷத் தன்மைகள் அதிகளவில் பரவும் நிலை உண்டு.
1.அத்தகைய நிலை வெகு நாளில் இல்லை… வெகு துரிதத்தில் இயங்கி விடும்.
2.இதைக் குறித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்… விஞ்ஞானிகளை அறியாமலே இத்தகைய சிதைவுகள் இனி வரும்.

நடக்கப் போகும் அத்தகைய கொதி நிலைகளில் இருந்து தப்ப வேண்டும் அல்லவா. ஆகவே உடலை விட்டுச் சென்றாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

விஷத்தன்மைகள் பரவி விட்டால் இந்தப் பூமி பரிசுத்தமாகப் பல ஆயிரம் ஆண்டுகளாகும். அதற்குள் மனிதர்கள் வாழ்ந்தால் மிருகமாகத் தான் வாழ வேண்டும்.

விஷத் தன்மை கொண்டு சிந்தனையற்ற நிலைகளில் ஆரம்ப நிலையில் இந்த பூமியில் உருவான மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்தது போன்று தான் வாழ முடியும். சிந்திக்கும் தன்மை இழந்தே இருக்கும்.

1.ஆகவே இப்பொழுது நல்ல நினைவு இருக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுங்கள்.
2.உங்கள் குடும்பங்களில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலதெய்வங்கள் முன்னோர்கள் ஆன்மாக்களை விண் செலுத்த மறந்து விடாதீர்கள்.
3.அவர்களை ஒளியின் சரீரம் பெறச் செய்யுங்கள்.

அவர்கள் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் இனி எதிர்காலம் விஞ்ஞான உலகில் இருந்து தப்பும் நிலையாக பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று செயல்படுத்துங்கள்

இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும்… நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி விட்டால் நாம் விண்ணுலகம் செல்ல முடியும்.
1.துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் பிற மண்டலங்களிலிருந்து வருவதை உணவாக எடுத்து
2.ஒளியின் சுடராக வாழ்வது போன்று நாமும் வாழ முடியும்.

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும் இங்கிருந்து அகன்று சென்று மற்ற மண்டலங்களின் சக்திகளை நுகர்ந்தறிந்து விண்ணிலே “என்றும் 16” என்ற நிலையை அடைய முடியும்.

மனிதனான நாம் தான் இத்தகைய நிலையை உருவாக்க முடியும். அருள் ஞானத்தை நமக்குள் உருவாக்குவோம்… மெய் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்வோம் என்று உங்களைப் பிரார்த்தித்து வேண்டிக் கொள்கின்றேன்.

நான் சொல்வதைத் தயவு செய்து அலட்சியப்படுத்தி விடாதீர்கள் குரு எனக்கு இந்த உண்மைகளை உணர்த்தினார் அதைத்தான் நீங்களும் பெற வேண்டும் என்று
1.உங்கள் உயிரை ஈசனாக மதித்து உடலைச் சிவமாக மதித்து
2.அந்த உயர்ந்த நிலை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று நான் தவம் இருந்து கொண்டிருக்கின்றேன்.

அலைகளும் சுழல்களும் திமிங்கலம் போன்ற விஷஜந்துக்களும் உள்ளிட்ட சாகரம் தான் மனித வாழ்க்கை நிலை

அலைகளும் சுழல்களும் திமிங்கலம் போன்ற விஷஜந்துக்களும் உள்ளிட்ட சாகரம் தான் மனித வாழ்க்கை நிலை

 

உலக நடைமுறை வாழ்க்கையினை உணர்ந்து செல்லும் வழி… நிதான நடைமுறையைக் குறிக்கும்.
1.ஊருடன் ஒன்றி வாழவும் வேண்டும்
2.நாம் கொள்ளும் “ஈஸ்வர அனுபூதியால்” பெற்று வளர்த்துக் கொண்டிட்ட “தனித்துவ மெய்ஞானச் சுடராக”
3.மற்றவர்களுக்கு வழி காட்டிடவும் வேண்டும்.

பேரருள் ஜோதியாக நம் உயிர் ஆத்ம சக்தியை வலு கூட்டிக் கொள்வதின் “பயன் இது…” என்று அன்பு மகரிஷிகளும் இயற்கையில் ஒன்றி வழி நடத்திடும் விதம்தான் என்னப்பா…?

ஆசையுடன் வாழும் மேன்மையையே ஆரம்ப நிலையிலிருந்தே உரைத்துக் கொண்டு வருகின்றோம்.

1.வாழ்வேனும் சாகரத்தில் அலைகள் ஓய்ந்தபின்
2.படகில் பயணம் செய்ய நினைக்கின்ற மனிதன் “பித்து நிலை பெற்றவனப்பா…”

அலைகளும் சுழல்களும் திமிங்கலம் போன்ற எத்தனையோ விஷமான ஜீவஜந்துக்களும் அனைத்தும் உள்ளிட்ட சாகரம் தான் மனிதன் வாழுகின்ற வாழ்க்கையின் நிலை.

தத்துவம் உரைத்திட நான் வரவில்லை…!

வள்ளுவச் சித்தன் உரையே “பிறவிப் பெருங்கடல்… அதனைக் கடந்திடும் காப்பெனும் கவசம் ஈஸ்வர தியான வழிமுறை…!” அதுவே ஒளி தந்து ஒளியாக்கும் செயலுறும் நிலை.

நூல் வழியில் அதை அறிந்து கொண்டவனப்பா நீ.

நீர்க்கரை ஓரம் வேரோடு வளர்ந்திட்ட விருட்சம் புதுப்புனலில் கரை கரைந்து தலை சாய்த்த விதமும்… நீர்க்கரை கொடி நிலை நின்ற விதமே…
1.இவ்வாழ்வின் சாதுரிய வாழ்க்கையின் நடைமுறை என்பதிலும்
2.ஜெபத்தின் வழி தியானமாகத் தன் உயர்வைத் தான் கூட்டி…
3.கிளர்ந்தெழும் ஐந்தடக்கிச் (அதி ஆசை நிலை விடுத்தல்) செயல்படும் காலத்தே
4.சிந்தனையில் உணர்ந்திட்ட “சித்தன் நிலை பெற்றிடும் வாய்ப்பு…”

“உவர் அமிலம்” என்பது மூலகப் பொருளாக பால்வெளியின் தன்மையாக மூலக்கூறுகள் இணைவதும் அந்த உவர் அமில அடர்வு நம் பூமியின் வட தென் துருவங்களாக ஈர்ப்பில் செயலுறும் குளிர்விப்பாக… அம் மூலக அடர்வுகள் நீர் சக்தியின் முத்தொழில் தன்மைகளில் ஒன்றாகச் செயலுறுகின்றது.

திடம் கொண்டிட்ட நீர் சக்தி (பனிப்பாறைகள்) திரவ நிலை பெற்றிடும் நீராகச் செயலுறுங்கால்… ஈர்ப்பின் செயலில் உவர் அமிலம் நீரினுள் கரைந்து அடர்ந்து விட்டால்… உவர் அமில அடர்வில் மிதக்கும் உடல் நீர் மேல்.

உலகில் சூழ்ந்து கொண்டிருக்கும் பாதுகாப்பற்ற செயல்பாடுகள்

உலகில் சூழ்ந்து கொண்டிருக்கும் பாதுகாப்பற்ற செயல்பாடுகள்

 

இராமன் விஷ்ணு தனுசை எடுத்தான் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தான் சுவை மிக்க நிலை சீதாராமன்…!
1.அந்தச் சுவைமிக்க உணர்வு கொண்டு… சொல்லாக உணர்ச்சிகள் உடலுக்குள் வரும்பொழுது
2.உடலுக்குள் உருவான சிவ தனுசு உடலைக் காக்கும் நிலைகளில் இருந்து அருள் ஒளியின் உணர்வாக மாற்றி
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றும்.

சிவ தனுசு விஷ்ணு தனுசு என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப்பொருளை எப்படிக் காண வேண்டும்…? என்று கூறப்பட்டுள்ளது. அதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது கடும் யுத்த காலமாக இருக்கிறது. பார்த்தால் சமாதானமாகப் போவதாகத் தெரிய வரலாம். இருந்தாலும் ஒவ்வொரு நொடிகளிலும் ஒருவருக்கொருவர் போட்டியின் தன்மைகள் அதிகரித்து… “மிரட்டும்” தன்மையே வந்துவிடும்.

விஷமான குண்டை ஒரு நாட்டின் மீது போட்டால் அது வெடிக்கும் தன்மை விஞ்ஞான அறிவால் வந்துவிடும்.
1.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற இயக்க சக்தியின் நிலைகள் கம்ப்யூட்டர் பாதுகாப்பில் இருக்கும் அந்த நிலைகள் (குண்டுகள்)
2.ஒரு நொடி திசை மாறினால் விஷ குண்டுகள் முழுவதும் வெடிக்கப்பட்டு உலகம் முழுவதற்கும் பரவும் தன்மை வந்துவிடும்.

அப்படிப் பரவினால் மக்களை அழித்திடும் உணர்வாகவே வந்துவிடும். விஷ உணர்வுகள் பரவினால் உடலை விட்டுச் சென்ற பின் புழுவாகப் பூச்சியாகப் பிறக்கும் நிலை வந்துவிடும்.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் பல காலம் கழித்துத் தான் மீண்டும் மனிதனாக உருப் பெரும் நிலை உருவாகும்.

1.மனித உடலில் இனி இருப்பார்கள்.. ஆனால் அசுரனாகத்தான் இருப்பார்கள்.
2.அதே சமயத்தில் கடும் நோய்களாக உருவாகிவிடும்.
3.கேன்சர் டிபி போன்ற நிலையில் எல்லாம் விஷத்தன்மையால் உருவானது தான்.

இவைகளில் இருந்து நாம் மீள துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தியானித்து அந்த வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையரின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்தல் வேண்டும்.

அவர்கள் உடலில் பெற்ற நஞ்சுகள் அங்கே கரைக்கப்பட்டு அதன் துணை கொண்டு நமக்குள்ளும் இருக்கும் நஞ்சின் உணர்வுகளை நாம் கரைக்க முடியும்.

பற்றும் பாசத்துடன் நம் மூதாதையர்கள் வாழ்ந்தார்கள் என்றால் நோயின் உணர்வு கொண்ட நிலையில் பண்பால் பரிவால் கேட்டறிந்த அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் தான் வளர்கின்றது. அந்தத் தீயவினைகளை நம்மில் இருந்து அகற்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து அந்த மூதாதையரின் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கப்படும் பொழுது உடலில் பெற்ற நஞ்சு கரைக்கப்படுகின்றது. சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்றி வாழத் தொடங்குகிறது துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வை உணவாக எடுத்து வாழத் தொடங்குகிறது.

ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றினார்கள் என்பது இதுதான். ஆகவே உடலை விட்டு யார் பிரிந்து சென்றாலும் அந்த 48 நாட்களுக்குள் நாம் விண் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
1.கணவன் மனைவியாக இருப்பினும் யார் முதலில் உடலை விட்டுச் சென்றாலும்
2.விண் செலுத்தும் உணர்வுடன் உந்திச் செலுத்தப்படும் பொழுது கணவன் மனைவி உயிரான்மாக்கள் இரண்டற இணைக்கப்பட்டு
3.ஒளியின் உணர்வாகி என்றுமே உணர்வின் ஒளியாகப் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

வாழ்க்கையில் இதை நாம் அவசியம் பெறுதல் வேண்டும்.

பூரண பௌர்ணமி ஆன நிலையில் சப்தரிஷி மண்டலம் அருகில் வரும் அந்தச் சமயத்தில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அதை நாம் எண்ணி எடுக்கப்படும் பொழுது அதைக் கவர்ந்து ஒளி அலைகளைப் பரப்பி தியானத்தின் மூலமாக விண் செலுத்தும் ஆற்றலைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள். இப்பொழுது ஊழ்வினை என்ற வித்தாக அது ஊன்றப்படுகின்றது.

அதை நினைவு கொண்டு மீண்டும் எங்கள் எண்ணி வளர்த்தல் வேண்டும் அதற்குத் தான் உபதேசிப்பது.

திட்டியவனை எண்ணியவுடன் அது பதிவாவது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது உங்களுக்குள் போதிக்கின்றேன்… ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

நீங்கள் மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால் “தீமைகள் அகற்றிடும் அந்த எண்ணம்” உங்களைக் காக்கும்.
1.எதை நுகர்கின்றீர்களோ உயிர் உங்களை இயக்கி நஞ்சினை நீக்குகின்றது… நல்ல உணர்வுகளை வளர்க்கின்றது
2.பிறவி இல்லாத நிலை அடையச் செய்கின்றது.

ஆகவே பேரரருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

கத்தியைத் தலை மேல் தொங்கவிட்டு எப்பொழுது அறுந்து விழுகும்…! என்ற நிலை தான் இன்று இருக்கின்றது

கத்தியைத் தலை மேல் தொங்கவிட்டு எப்பொழுது அறுந்து விழுகும்…! என்ற நிலை தான் இன்று இருக்கின்றது

 

வளர்ச்சி அடைந்த நாடுகளில் எல்லாம் “நியூட்ரான்” குண்டுகளைத் தயார் செய்து வைத்துள்ளார்கள். அதை வெடிக்க நேர்ந்தால் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு உலகம் முழுவதுமே விஷத்தன்மையாகப் பரவும் நிலை வந்துவிடும்.

அது எந்த விஷத்தன்மையோ… ஆடு மாடு மற்ற உயிரினங்களில் பட்டால் புது விதமான அணுக்களாக மாற்றிவிடும். மனித உடலுக்குள் வந்தாலும் ஒரே இனமாக மாற்றிவிடும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் விஷம் கொண்ட அணுக்களாக மாறி விடுகின்றது.

1.இந்த குண்டைச் செய்தவனும் (நாடு) சரி… எந்த இடங்களில் வீசுகின்றார்களோ அங்கேயும் சரி…
2.அது காற்று மண்டலத்தில் பல லட்சம் மைல்கள் என்று கூடச் சொல்லலாம்…
3.அந்த விஷத்தன்மைகள் பரவி ஊடுருவும் தன்மை பெற்றது.

இப்படிப்பட்ட குண்டுகளை ஒருவருக்கொருவர் வீசி விட்டால் தேடிய செல்வமோ… கௌரவமோ… இந்த நாட்டை ஆட்சி புரிகின்றேன் அந்த நாட்டைப் பிடிக்கப் போகின்றேன் என்ற நிலையில் அரசியல் சூழ்நிலைகளால் வரும் நிலைகளோ… “எங்கே போகும்…? எப்படிப் போகும்…?” என்று நிலை இல்லாது போய்விட்டது.

அரசாங்க உத்தியோகத்தில் இருப்போரும் சரி அரசியல் வாழ்க்கையில் இருப்பவரும் சரி மக்கள் வாழ்க்கையைச் சீர்படுத்துவதாக எண்ணுகின்றார்கள்.
1.ஆனால் ஒருவருக்கொருவர் உணர்வின் தன்மை மாற்றப்பட்டு
2.குற்ற இயல்பான உணர்வுகளை வளர்க்கும் தன்மையே வளர்ந்து விட்டது.

இப்படி வளர்ந்த இந்த உலகம் “மனிதனுக்கு மனிதன் தாக்கிக் கொள்ளும் உணர்வுகள்” எல்லா நாடுகளுக்கும் தோன்றி விட்டது.

எல்லா நாடுகளும் இதைப் போல நியூட்ரான் என்று குண்டுகளைத் தயார் செய்து வெடிக்கச் செய்தால் எங்கே வெடிக்கின்றார்களோ எங்கே உருவாக்கினார்களோ அனைத்து உயிரினங்களும் விஷத்தன்மையாக மாறிவிடுகின்றது.

இவர்கள் தேடிய விஞ்ஞானம் தன்னையே அழித்துக் கொள்ளும் நிலையாகத் தான் மாறுகின்றது.
1.கட்டிடங்கள் அப்படியே இருக்கும் மரம் செடி கொடிகள் அப்படியே இருக்கும்
2.ஆனால் தாவரங்களின் மரபு அணுக்களை மாற்றி அமைக்கும் சக்தியாக வந்துவிடும்.

அதிலே விளைந்த பொழுது தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் பொழுது… உயிர் அந்த உணர்வினை நுகரப்படும் போது அந்த விஷமான உணர்வுக்கொப்ப உணர்ச்சிகளை எழுப்புகின்றது.

நியூட்ரான் என்ற உணர்வலைகள் தாவரங்களில் எளிதில் ஊடுருவும் சக்தி பெற்றது. அவ்வாறு விஷத்தன்மையாக மாறி விட்டால் அந்த விஷத்தன்மை கொண்டதை உயிரினங்கள் நுகர நேர்ந்தால் விஷத்தன்மை கொண்ட அணுக்களாகத் தான் மாற்றும் தன்மை வருகின்றது.

இப்படி இந்த உலகம் கூடிய சீக்கிரம் விஷத் தன்மையாகப் பரவப்படும் பொழுது… மனிதனின் சிந்தனை சக்தியை இழக்கப்பட்டு மனித உடல் மாறும் நிலை வருகின்றது.

அப்படியே உடல்கள் இருந்தாலும் விஷத்தன்மை கொண்ட செயலைச் செயல்படுத்தும் நிலையும் சிந்தனையற்ற நிலைகளும் உருப்பெறுகின்றது.

உலகில் ஏற்படும் இத்தகைய நிலை…
1.கத்தியைத் தலைக்கு மேல் தொங்கவிட்டு எப்பொழுது அறுந்து விழுகும்…? என்ற நிலையில் தான் இன்றைய வாழ்க்கை இருக்கின்றது.
2.இதிலிருந்து நம்மைக் காக்க வேண்டும் என்றால்
3.தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும்
4.அந்த அகஸ்தியனின் உணர்வை நுகர்ந்தே ஆக வேண்டும்.
5.நம் ஆன்மாவிலே அகஸ்தியன் உணர்வை வலுவாக்க வேண்டும்.

தீயதில் இருந்து “நல் முத்தை” எடுக்கும் வழி

தீயதில் இருந்து “நல் முத்தை” எடுக்கும் வழி

 

உலக வாழ்க்கை… பந்த… கர்ம… காரியங்கள் நடத்திட…
1.உலகச் சுழற்சியுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையையே
2.நாம் வளரும் வாழ்க்கைக்கு வலுவாக்கிக் கொள்ளும் சத்தாக
3.அவற்றின் நிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

எப்படி ஒரு மரமானது பல விழுதுகளிட்டு வேர் ஓடி… விழுதின் மூலம் சத்தை எடுத்து அம்மரமானது வளருகின்றதோ அதைப் போன்றே வாழ்க்கை கர்ம காரியங்கள் யாவையும் “நம் உயர்வின் வளர்ச்சிக்குச் சத்தெடுக்கும் விழுதுகளாக” அமைக்க வேண்டும்.

1.தீயது என்று எதனையும் ஒதுக்காமல்
2.தீயதில் இருந்து தான் “நல் முத்தை” எடுக்கும் வழி முறை போன்று
3.எண்ணதின் உணர்வைச் செலுத்தும் ஒவ்வொரு செயலையுமே
4.ஞானிகள் காட்டிய வழியில் வழி நடந்து பக்குவப்படுத்திடல் வேண்டும்.

மனித எண்ணமுடன் பலருடன் கலந்துறவாடும் நிலையிலும் அவர்கள் எந்தக் குண எந்த வளர்ச்சியில் ஒன்றியிருந்தாலும்… நம் உணர்வின் எண்ணம் செலுத்தும் அலைக்குகந்த… அலை உணர்வின் எதிர் அலை சக்தியை நாம் பெறும் நிலை தான் உண்டு.

ஆகவே ஒவ்வொரு காலங்களிலும்
1.பூமியின் சுழற்சியில் இருந்து தான் – இருட்டில் இருந்து ஒளி பெறும் நிலையாக
2.உணர்வின் எண்ணம் செயல்படும் வலுவைக் கொண்டு தான்
3.ஆத்மாவின் வலுக்கூடிய நிலையில் ஆத்மாவின் இயக்க நிலை
4.ரிஷித் தொடர்புடன் ஒன்றிய உயர் நிலைக்குச் செல்லும்.

இத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் நாம் எப்படி முயற்சிக்க வேண்டும்…?

அதாவது சரீர அவயங்களில் இரண்டு நிலை கொண்ட உறுப்புகள்
1.இரண்டு கால்களைக் கொண்டு ஒத்த நிலையில் “நடை” போடும் இயக்க நிலை போன்றும்
2.இரண்டு கைகளைக் கொண்டு (“இணைந்த கைகளாக”) ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல் கொள்ளும் இயக்க நிலை போன்றும்
3.ஒளி ஈர்க்கும் கண்களை… ஒத்த நிலை ஒன்று போல் கூர் பாய்ச்சிக் காணும் நிலை போன்றும் இருத்தல் வேண்டும்.

ஏனென்றால் கண்களின் விழிகளின் அமைப்புச் சிறிது மாறினாலும் இரண்டு உருவ நிலையைத்தான் காண முடியும். ஒரு உருவமாகக் காண முடியாது.

ஆக.. ஏற்றத்தாழ்வு நிலையின்றி…
1.இரண்டு விழியைக் கொண்டு ஒன்றாகக் காணும் ஒளி நிலையைப் போன்றும்
2.செவி… சுவாசம்… “இவற்றின் இணைப்பு” இந்த இரண்டின்
3.ஒரு நிலை கூடும் செயலை ஒத்தும் அமைத்தல் வேண்டும்.

அது மட்டுமல்ல…!

1.“சிவம்” என்ற அமிலமும்..
2.“சக்தி” என்ற ஈர்ப்பும்…
3.பூமியாக உருப்பெற்ற தொடரில்
4.சிவசக்தி விநாயகனாக உருவம் பெற்ற ஆத்ம சரீர பிம்ப வளர்ப்பானது
5.எப்படி அந்த “ஆண் பெண் அமில உணர்வு” வளர்ச்சியில் வலுக் கொண்ட ஜீவ நிலை (ஜீவனுள்ள உடலை) பெற்றதுவோ
6.அதைப் போன்று இவ்வாத்ம வழித் தொடர் நிலையிலும்
7.ஆண் பெண் என்ற இணைப்பால் தொடர் கொள்ளும் வழி முறையில் ஆத்மீக வளர்ச்சி கொள்ள வேண்டும்.

செயற்கை நிலைக்கொத்த “கலி மகவுகள் தான்” இனி வரும் பிறப்புகளும் கலி மாற்றப் பிறப்புத் தொடர்புகளும்

செயற்கை நிலைக்கொத்த “கலி மகவுகள் தான்” இனி வரும் பிறப்புகளும் கலி மாற்றப் பிறப்புத் தொடர்புகளும்

 

எண்ணத்தின் உணர்வால் நற்குண சமைப்பான அமிலச் சேர்க்கையின் சமநிலை கொள்ளும் இப் பூமி வாழ்க்கைச் சுழற்சியில் சிக்குண்ட பல குண மோதல் நிலையிலும்… எண்ணத்தின் உணர்வு சமநிலை பெறத்தக்க வழி ஆற்றல் எண்ணம் கொண்டு சூரியனின் அலை சக்தியை காந்த மின் அலை வார்ப்பாக உடல் எலும்புகளின் ஊன் நிலை எடுக்கவல்ல வழிதனை மனித எண்ணத்தால் பெறக்கூடிய ஆத்ம பலத்தின் வலுவைக் கொண்டு…
1.இன்றைய இக்கலியில் சிதறுண்டு சிக்கித் தவிக்கும் மனிதனின் எண்ண உணர்வு வேட்கை
2.மனித ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து ஞான வளர்ச்சி குன்றியுள்ள இக்கலியின் கடைசிக் காலத்தில்
3.மனித ஆத்மா உயரும் ஞான போதனை வழித்தொடர் அற்று
4.மனித எண்ணங்களும் ஆவி உலகில் உள்ள உடலை விட்டுப் பிரிந்த ஆவி ஆத்மாக்களும்
5.செயற்கை விஞ்ஞான ஒலி ஈர்ப்பில் உணர்வைச் செலுத்தி இயந்திர அலைத் தொடர்பின் ஒலி மோதலில் மனித ஆத்மா எடுத்து வெளிப்படுத்தும் சுவாச அலையும்
6.இயந்திர அலையில் வெளிப்படும் காந்த சக்தியைச் சமைத்து சமைக்கப்பட்டதின் ஒலி எடுத்து வெளிப்படுத்தும் மனித சுவாச அலை அணுக்கள்
7.அதற்குண்டான அணு வளர்ப்பைத்தான் வளர்க்கும் ஆற்றலைத் தான் பெற்றுள்ளது.

அதனால்… மனித உணர்வின் சுவாசமே இயந்திர கதியின் ஒலி ஈர்ப்பின் உணர்வெடுக்கும் எண்ண சுவாச அணுக்கதிர்கள்தான் சுவாசத்திலிருந்து வளரும்.

இயற்கைத் தாவர நறுமண மூலிகையின் தொடர்பற்ற… இயந்திர ஓட்ட செயற்கை மனித நிலையில் வெளிப்படும் சுவாச அலையின் அணுக்கதிர்களில் இருந்து வளரவல்ல உயிரணுக்களே…
1.கலி மனிதன் வெளிப்படுத்தும் அலைக்குகந்த புதிய புதிய குறுகிய எண்ண வேட்கை ஞானச் செயலற்ற ஜீவ ஜெந்துக்கள் தான்
2.இப்பொழுது வளரும் ஜீவ அணு உயிர் வளர்ப்புகளும் தாவர இன வளர்ப்புகளும்.
3.இத்தொடரிலேயே செல்லும் வழி தான் செல்லும் நிலை தான் “இன்றைய காலமும் இனி வரும் காலமும்…”

பல நூற்றாண்டுகளுக்கு முன் மனித உருவங்களும் மனிதனைக் காட்டிலும் மிருக உருவங்களும் இன்றுள்ள நிலையைக் காட்டிலும் உருவத்தில் வளர்ந்து வண்ணமும் பொலிவும் மிக்க ஒளியுடன் மிளிர்ந்தன.

இராமாயண காலத்தில் வால்மீகியார் எழுதிய குணத்தின் அடிப்படைக் கதாபாத்திரமே அந்தந்த குணத்திற்கொப்ப “எண்ணத்தில் குறுகியவருக்குக் கூனி என்றும் சகுனி என்றும்…” எண்ணத்தில் உயர்ந்த இராமருக்கு அவரின் உருவ குண அழகை வழிக்காட்டிப் படைத்த காவியத்திலேயே எண்ணத்தைக் கொண்டு உருவகத்தைச் சித்திரித்துக் காட்டினார் வால்மீகியார்.

வளர்ந்தோடிய இக் கலி ஓட்டத்தில் இயந்திரத் தொடர்பு கொண்ட செயற்கை ஒலி ஈர்ப்பில் வாழக்கூடிய மனித எண்ணங்களின் உணர்வு அதன் தொடர்பில் செலுத்தப்படும் வழித்தொடர் கொண்ட எண்ண வேட்கையின் சுவாசு அலை வீச்சின் சுழற்சிதான்… இக்கலி ஓட்ட பூமி ஜீவ ஜெந்துகளின் உருவக வார்ப்புநிலை வழி கொள்ளும் வளர்ச்சியின் வழிமுறையில் எவ் ஒலி அதிகமாய்க் கேட்டு அவ் ஒலி ஈர்ப்பின் சுழற்சியில் சுழல் கொள்ளும் வார்ப்பக ஞான வளர்ச்சியும் மீண்டும் பிறப்பிற்கு வரும் பொழுது
1.ஞானத்தின் வளர்ச்சி கொண்ட எண்ண உணர்வு மகவு பிறப்பதைக் காட்டிலும்
2.தன் ஞானமற்று விஞ்ஞான வேட்கை வழி தந்த உணர்வு ஈர்ப்பில் கர்ப்பம் கொள்ளும் சிசு நிலையிலேயே
3.விஞ்ஞான செயற்கை நிலைக்கொத்த “கலி மகவுகள் தான்” இனிவரும் காலப் பிறப்புகளும் கலிமாற்றப் பிறப்புத் தொடர்புகளும்.

அன்றைய காலங்களில் ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்று பிறக்கும் மகவுகளுக்கே பயில்விக்கும் பயிற்சி ஞான போதனைகள் இன்றைய செயற்கைப் போதனை தன்னைத்தான் நம்பா செயற்கைப் பிடியின் நம்பிக்கை கொண்டு நடைபெறும் காலச் சுழற்சியின் ஓட்ட கதியுடன் மனிதனின் எண்ணம் சென்று கொண்டுள்ளது.

இதிலிருந்து மீண்டிடும் நிலையாக …
1.மனிதனின் ஞானத்தால் ஆத்ம பலத்தின் உயர்வைக் கொண்டு ஜீவ மனித எண்ண உணர்வின் ஞானம் கொண்டு அடையும்
2.இன்ப நிலையின் வழித் தொடரைத்தான் உபதேச போதனையாய் உயரும் வழிகாட்டி
3.ஒவ்வொரு ஆத்மாவும்… மனிதனுக்கடுத்த நிலையான தெய்வநிலை பெறவல்ல வழித் தொடருக்கு இங்கே வழி காட்டுகின்றோம்.

விண்ணின் ஆற்றலைக் கண்ட மெய் ஞானிகளின் நுண்ணிய அறிவினை உங்களையும் பெறச் செய்கின்றோம்

விண்ணின் ஆற்றலைக் கண்ட மெய் ஞானிகளின் நுண்ணிய அறிவினை உங்களையும் பெறச் செய்கின்றோம்

 

விஞ்ஞான அறிவால் ஒரு மனிதனுக்குள் பதிந்த நிலைகளை… இங்கிருந்து இராக்கெட்களைக் கோள்களுக்குள் ஏவி… அதனின் உணர்வை இங்கே தரையில் இருக்கக்கூடிய எந்திரத்தின் துணை கொண்டு கவர்ந்து விஞ்ஞானி படம் எடுக்கின்றான்… அதை அறிகின்றான்.

ஒளி எவ்வளவு தூரம் பாய்கிறதோ… அதாவது இப்பொழுது லைட் போட்டோம் என்றால் அது எவ்வளவு தூரம் சீறிப் பாய்கின்றது என்ற நிலையைக் கணக்கிட்டு… விஞ்ஞானக் கருவிகளின் மூலம் “ஒளி ஆண்டு” என்று கண்டு சொல்வார்கள்.

ஒரு எரி நட்சத்திரம் வியாழன் கோளில் விழுகின்றது என்று வைத்துக் கொள்வோம்,
1.அதை அங்கிருந்து படம் எடுத்து இங்கே வருவதற்கே அதனுடைய வேகத்துடிப்பு அதிகமாகி நான்கு நாட்களாவது ஆகும்… குறைந்தபட்சம்.
2.அந்த நான்கு நாள்களில்… படம் எடுத்த இந்த உணர்வுகள் அலைகளாக இங்கே அனுப்பச் செய்து
3.இங்கே எந்திரத்தின் துணை கொண்டு அது சிறிதளவு புள்ளியைப் பெரிதளவாக அதைப் பெருக்குகின்றான்.
4.பின் அது விழுந்த இடத்தினையும் அவன் அறிகின்றான்.
5.இவன் அங்கே படம் எடுத்து வந்தாலும் “இந்த உணர்வலைகள்” பின் வரும் பொழுது “எதிர்நிலையான அலைகளாகப் பட்டால் இது பிரிக்கும்…”

ஆனால் அங்கே படம் எடுத்த உணர்வின் தன்மையை… மீண்டும் அவன் எடுப்பான் என்றால் அவனுக்குள் அங்கு அந்த ஒளியின் தன்மை எடுத்து அலைகளாக அனுப்பும் பொழுது “இங்கே மாற்றங்களே ஏற்படும்…”

ஆக இங்கே ஒரு எல்லையைக் குறித்து இதனின் வேகத் துடிப்பு வரும் பொழுது சுழற்சியின் வேகத்தில் கண்டுணரலாம். மலை போன்ற உள்ள அந்த பெரும் பாறையின் தன்மைகள் அது சுழன்று வரப்படும் பொழுது… வியாழன் கோளிலே வந்து மோதும் வேகமும் வியாழன் சுழற்சியின் வேகம் அதிகரிக்கப்படும் பொழுது… அந்த வியாழனிலோ தனது ஈர்ப்பின் சக்தி அதிகமாகும் பொழுது அது பனிப்பாறைகள் தான் அவை.

சுழற்சியின் வேகம் கூடும் பொழுது அதன் ஈர்ப்புக்குள் வந்தவுடனே இது சுக்குநூறாகத் தெறித்துப் பஸ்பம் ஆக மாறும்.

அதைப் போன்ற எரிகற்கள் பூமியின் ஈர்ப்புக்குள் வரும் பொழுது பெரும் பாறாங்கல்லாக இருப்பது சிறு கல்லாகத் தேய்ந்து இங்கே விழுகின்றது.
1.அது இங்கே உராய்வின் தன்மையில் “எரியவில்லை” என்றால்
2.மனிதர்கள் இங்கே பூமியில் வாழவே முடியாது.

ஆக இந்த சுழற்சியின் வேகத்திற்கும் சுழற்சியின் வேகத்தில் வரும் காற்று மண்டலத்தில் உராய்ந்து தான் இந்த இதனுடைய நிலைகள் அது குறைந்து வருகின்றது. ஆக இதைப் போன்று பன் மடங்கு சுழலும் நிலைகளில் அது வருகின்றது.

இதை எல்லாம் விஞ்ஞானிகளும் இன்று கண்டு நமக்குச் சொல்கிறார்கள்.

இதே மாதிரித் தான் மெய் ஞானிகள் அன்று அவர்கள் கண்டுணர்ந்தது.
1.தனக்குள் இருக்கும் ஆற்றலின் தன்மை கொண்டு விண்ணிலே தன் எண்ணங்களைப் பாய்ச்சுகின்றான்…. அனைத்தையும் அறிகின்றான்.
2.அந்த மெய் ஞானத்தின் உணர்வின் தன்மையை உங்களில் பதிவு செய்யும் பொழுது
3.இந்த உணர்வைத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப நாம் எண்ணும் போது
4.கோடிக் கணக்கான சரீரத்தில் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் அது பெருகி
5.அது எப்படி நமக்குள் மனிதனாக உருவாக்கியது…? என்ற நிலையை நாம் காண முடியும்.

அந்த மெய் ஞானிகளில் “முதன்மையாக…” 2000 சூரியக் குடும்பத்தையும் கண்டறிந்தவன் அகஸ்தியன்
1.அவன் கண்டுணர்ந்த உணர்வுகள்… அவனில் விளைந்த உணர்வுகள் தான் இன்றும் நம் பூமியில் படர்ந்து கொண்டு உள்ளது.
2.அவன் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் அறிந்து… தீமைகளை அகற்றி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி
3.துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்தும் வளர்ந்து கொண்டுள்ளான் அகஸ்தியன்.

அவன் அருளை நாம் பெற்றால் அவன் கண்டதை நாமும் முழுமையாகக் காணலாம்… அறியலாம். பிறவியில்லா நிலை அடையலாம்… ஒளியின் சரீரம் பெறலாம்.

பதிவு எப்படியோ அப்படித்தான் உணர்வின் இயக்கங்கள்

பதிவு எப்படியோ அப்படித்தான் உணர்வின் இயக்கங்கள்

 

இரண்டு நண்பர்கள் பிரியமாக இருக்கின்றார்கள் ஒருவர் தவறு செய்கின்றார் என்று யாராவது சொன்னால்… நான் சும்மா இருக்கும் பொழுது… “அப்படி இப்படி என்று” எல்லாம் என்னைத் தவறாகச் சொல்கின்றார்கள் என்பார்.

1.நாம் பிரியமாக இருப்பதால் இதைக் கேட்டுப் பதிவு செய்து கொள்கின்றோம்.
2.அடுத்து அவர் தவறு செய்து விட்டு “இல்லை” என்று மறுக்கப்படும் பொழுது அதை ஏற்றுக் கொள்கின்றோம்… நண்பர் என்பதால்…!

இவர்தான் தவறு செய்தார் என்று மற்றவர் வந்து சொன்னாலும் அது எல்லாம் எனக்கு தெரியாதங்க…? என் நண்பருடைய சமாச்சாரம்…! என்போம்.

தவறு செய்தார் என்று சொன்னால் கூட… இல்லை நேரடியாக நான் பார்த்தேன் என்று அவர் சொன்னாலும்
1.அப்படி எல்லாம் செய்யக்கூடிய ஆள் இவர் கிடையாது…! தெரியாமல் ஏதாவது நடந்திருக்கும்.
2.நண்பன் மேல் பிரியம் இருக்கும் பொழுது முதலிலே மறுக்கின்றோம்.
3.இல்லைங்க… நான் நேரடியாக கண்ணிலே பார்த்தேன் என்று இன்னொரு நண்பர் சொன்னால்
4.அசந்தர்ப்பமாகத்தான் அப்படி இருக்குமே தவிர “அவர் தவறு செய்யக்கூடிய ஆளே இல்லைங்க…” என்போம்.

ஏனென்றால் அவர் மீது இருக்கக்கூடிய பற்று தவறை கூட நாம் சுட்டிக் காட்டாதபடி “தெரியாமல் தான் நடந்திருக்கும்…” என்று தான் சொல்கின்றோம்.

இதே போன்று ஒரு குடும்பத்தில் இரண்டு பையன்கள் இருக்கின்றார்கள் ஒருவன் மீது தந்தை பிரியமாக இருக்கின்றார்… இன்னொருவன் மீது வெறுப்பாக இருக்கின்றார்.

அந்த வெறுப்பாக இருக்கக்கூடிய பையன் வெளியே சென்று ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றுகிறான்… ஒரு நல்ல காரியத்தை அவன் செய்கின்றான். அதை மெச்சி அவர் என்ன செய்கின்றார்…?

நீ யார் பெத்த பிள்ளையோ…? உன் தந்தையிடம் நான் நன்றி சொல்ல வேண்டும்…! என்று அழைத்து வருகின்றார். கூப்பிட்டு வந்தவுடன் உங்க பையன் தானுங்களா…? எங்கள் குடும்பத்தையே இவன் காத்தான்…! என்று உயர்வாகச் சொல்கின்றார்.

அப்படியா…! நீங்கள் நாளைக்கு வந்து வேறு விதமாகச் சொல்லி விடாதீர்கள் ஐயா…! என்பார் தந்தை. பையன் செய்த நன்றிக்குச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனது இங்கு தந்தையிடம் இல்லை.

ஆனால் அதே சமயத்தில் பிரியமாக இருக்கும் இன்னொரு பையன் ஒரு இடத்தில் சுட்டித்தனம் செய்கின்றான். அங்கிருந்து வந்து தந்தையிடம் அவனைப் பற்றி முறையிடுகின்றார்கள் “இவன் தவறு செய்கின்றான்” என்று.

1.நீங்கள் இன்னொரு பையனைச் சொன்னால் கூடப் பரவாயில்லை
2.இவன் அந்த மாதிரித் தவறு செய்ய மாட்டான் என்று பிரியமானவனை ஏற்றுக் கொள்கின்றார்கள் எனக்கு தெரியாதுங்களா…? என்று கேட்கின்றார்.
3.உங்கள் பையன் தான் ஏதாவது தவறு செய்திருப்பான் என்று தான் சொல்வார்கள்

ஆனால் அவர்கள் போன பிற்பாடு என்ன கேட்பார்கள் ஏன்டா டேய் அவர்கள் என்ன கேட்கின்றார்கள் பார்த்தாயா…? என்று பையனிடம் கேட்பார்கள்.

இன்னொருவன் நல்லது செய்து வந்தான் அல்லவா…! அவனைப் பார்த்து டேய் இங்கே வாடா…! எத்தனை பேரை நீ ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்…? நாளை என் பெயர் கெட்டுப் போவதற்கு நீ என்ன செய்கின்றாய்…? என்று கேட்பார்.

ஏனென்றால் இந்த உணர்வுக்கொப்ப அப்படித்தான் “அந்த அறிவுகள் வேலை செய்யும்…” எதனின் உணர்வின் தன்மையோ அது தான் இயக்கமாகும்.
1.ஒரு செடி எந்த மணத்தின் தன்மை தனக்குள் வைத்துக் கொண்டதோ
2.மற்ற செடிகளின் மணத்தைத் தன் அருகில் விடாது.

இதைப்போல எந்தச் செடியின் மணத்தை நாம் உணவாக உட்கொண்டு பழகினோமோ அந்த மணத்தின் ஞானமே நமக்கும் வரும்… இது வழி தொடர்ந்து வரும்.

ஆகவே அந்த குணத்தின் இயல்பாகத்தான் நம்முடைய உணர்வின் செயல்களும் அமைகின்றது தாவர இனத்தின் நிலைகள் கொண்டு. இதைப் போன்று தான்
1.எதனை எடுத்து எதனின் வழிகளில் நாம் இணைத்து
2.அதனின் உணர்வின் எண்ணங்களாக மாறுகின்றதோ இதனின் உணர்வு தான் இயக்கம்.

இதற்குத் தான் கடவுளின் அவதாரத்தில் இராமனை மூன்றாவது ஸ்தானத்தில் வைத்துள்ளார்கள். இந்த எண்ணம் சீதாராமா…! ஒரு பையன் மீது எவ்வளவு பிரியமாக இருக்கின்றோமா அந்த சுவை சீதா.

அதே சொல்லை நாம் எடுத்துத் திருப்பிச் சொல்லும் பொழுது இராமன்..!. இராமன் அம்பை எய்தான் என்றால் அந்த கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான். இதே பதில் தான் மீண்டும் வரும்.
1.யார் மேல் எதன் உணர்வை வைத்தோமோ இந்த உணர்வின் சொல்லை எடுத்து
2.“மோசமானவன்” என்ற பதிவிருந்தால் மீண்டும் அதே குறையான சொல்லைத்தான் சொல்லும்படிச் செய்யும்.

கடவுளின் அவதாரத்தில் சூரியனின் இயக்கங்கள்
1.அந்தக் காந்தச் சக்தி மற்ற பொருளைக் கவர்ந்த பின்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் அந்தச் சுவையைக் கவர்ந்தாலும்
3.அதே எண்ணத்தைக் கொண்டு நுகரப்படும் பொழுது சீதா சுவை
4.இந்த உணர்வின் நிலைகள் நம் தசையாகின்றது… நினைவின் சொல்லாக “அந்தந்த எண்ணங்கள் வருகின்றது…”

இந்த இயற்கையின் தன்மையை நாம் புரிந்து கொள்வதற்காக இராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் சிவபுராணம் என்ற நிலைகளில் விண்ணுலக ஆற்றலின் தன்மை உணர்வுகள் கலந்து அது மனிதனாக உருவாக்கப்படும் பொழுது பழமை எவ்வாறு இன்று புதுமையில் இருக்கின்றது…? என்று காட்டியுள்ளார்கள்.

பழமை கலந்ததின் உணர்வின் மாற்றங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்பதைத்தான்
1.ஒரு மனிதனின் இயல்பு எவ்வாறு மாறுகிறது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் ஞானிகள்.
2.இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

முன்னோர்களை வணங்க “ஜீவ நதி உள்ள இடத்திற்கு ஏன் செல்கிறோம்…?”

முன்னோர்களை வணங்க “ஜீவ நதி உள்ள இடத்திற்கு ஏன் செல்கிறோம்…?”

 

இது நாள் வரை முந்தைய பாடங்களில் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப அமிலங்கள் வளர்கின்றன என்று உணர்த்தினேன்.

இவ்வெண்ண‌ நிலையில் அதிகப்படியான குண நிலைகொண்டு
1.அதே குண எண்ணத்தைக் கொண்ட உடலை விட்டுப் பிரிந்த ஜீவ ஆத்மாக்களும்
2.இன்னும் தன் மகன், மகள் என்ற குடும்பப் பாசத்திலிருந்து சென்ற முன்னோர்களின் உயிராத்மாவும்
3.இத்தாயின் கருவில்தான் பிறக்க வேண்டுமென்ற பிறப்புத் தொடரில் இருந்தும்
4.முந்தைய காலங்களில் பல ஜென்மங்களாய் விட்ட குறையில் இருக்கும் உயிராத்மாக்களும்
5.இவ் ஆண் பெண் இரு பாலரின் பருவ மாற்ற உடல் வளர்ச்சி ஏற்படும் காலம் தொட்டே
6.அவர்களின் சுவாச அலையுடன் இவ்வாவிகளின் ஈர்ப்பு அவ்வுடலுடன் ஏறிக்கொள்ளுகின்றது.

நம் முன்னோர்கள் பருவம் எய்திய பெண்களை “அதிகமாக வெளியில் செல்லாமல் வைத்திருந்ததற்கு” இதுவும் ஒரு காரணம்.

தன் மண வாழ்க்கையில் தோல்வி கண்ட ஆவிகள் தன் எண்ணத்தை ஈடேற்ற அதே வயதுக்குகந்த அப்பருவநிலை கொண்டோரின் உடலில் ஏறிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் எதிர் நோக்கிப் பல நிலைகளைச் செய்கின்றது.

இதன் சக்தியின் நிலை சூரியனின் ஒளி அலை அதிகமாகப் பாயும் நேரத்தைக் கொண்டு இதன் செயல் நடக்கும் (உச்சி வெய்யிலில்) அதுவுமல்லாமல் இவ்வாவிகள் மற்ற இடங்களில் சுழன்று கொண்டிருப்பதைக் காட்டிலும் “நீர் நிலைகள் உள்ள இடங்களில்தான்” அதன் சுழற்சி அதிகப்பட்டிருக்கும்.

ஜீவனுக்கு வரவேண்டுமென்ற ஆசையிருப்பதினால்
1.தன் உயிரணுவுடன் கூடிய ஆத்ம நிலை சிதறி விடாமல் இருக்க…
2.நீரிலிருந்து சூரிய ஒளிபட்டு அதிகமாக அவ்வொளி அலை உள்ள இடங்களில் இருந்தால்
3.“இவ்வாவிகளுக்கு அதனுடைய ஆத்ம அமிலம் சிதறுபடாமல் காத்திருக்க முடியும்…”
4.முன்னோர்களை வணங்க எதற்காக “ஜீவ நதி உள்ள இடத்திற்குச் செல்லும் பொருள் புரிந்ததா…?”

இப்படிப் பலவாக உள்ள ஆவி ஆத்ம உயிரும், ஜீவ உடல் கொண்ட ஆத்ம உயிருமான மனிதர்களின் நிலையும் கலந்து வாழ்வதினால் தன் பிறப்பின் ஆசைக்காகப் பிறப்பெடுக்கப் பல உடல்களில் “முன் கூட்டியே இவ்வாவி ஆத்மாக்கள் ஏறிக்கொள்கின்றன…”

ஏறிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அவ் உடலிலிருந்து தன் சாதக நிலைக்காக அம்மனிதனின் எண்ணத்தையே இவ்வாவி ஆத்மாக்கள் செயல்புரிகின்றன.

இப்படி உள்ள ஆவி ஆத்மாக்கள் தான் பிறப்பில் வரும் நிலையில் சிலருக்கு ஒன்றுக்கு இரண்டாகவும்… பலவாகவும்… கருவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் மிருகத்தின் சுவாசத்திற்கு மிருக உடலில் பல உயிர் ஆத்மாக்கள் ஏறிவிடுவதால் ஒரே சூலில் பல குட்டிகளை ஈணுகின்றது. மிருகங்களிலேயே ஒரு நிலை கொண்ட சாந்த குணமுடைய சில பிராணிகளுக்கு ஒரு சூலில் ஒரு கன்று ஈணும் நிலை வழி உள்ளது.

இப்பிறப்பில் நடைபெறும் இச்செயல்களும் எண்ணத்திலிருந்துதான் வழித்தொடர் பெற்று அதனதன் இன நிலையின் அமில குணம் தொட்டு பிறப்பிற்கு வருகின்றது.
1.இதன் தன்மையில் உடலில் ஏறிய அத்தனை உயிராத்மாக்களுக்குமே பிறப்பிற்கு வர முடியாமல்
2.அவ்வுடலிலிருந்து ஆவி பிரிந்த பிறகு அதற்கும் விடுதலை கிடைத்து
3.மீண்டும் தன் பிறப்புக்குகந்த இடம் எடுத்து வருவதற்குள் பல ஆண்டுகள் ஆகி விடுகின்றன… இவ்வுடலை விட்ட ஆவி ஆத்மாக்களுக்கு.

இவ்வாவி ஆத்மாக்களின் வழித்தொடரில் தான் பிறப்பு வருகின்றதா…? என்று வினா எழும்பலாம். ஒவ்வொன்றின் நிலை மனிதனிலேயே பலவாக வருகின்றது.

ஆகவே… இப்பொழுது உடலுடன் இருக்கும் நாம்
1.இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி
2.இதிலிருந்தே மெய் ஒளி காணும் மெய் ஒளி பெறும் நிலைக்கு நம் எண்ணத்தை உயர்த்தி
3.சித்தர்களுடனும் ஞானிகளுடன் இணைந்து வாழும் உன்னத நிலையைப் பெறுதல் வேண்டும்.