காயத்ரி – முழுமையான ஒளி

gayatri-wallpaper.jpg

 காயத்ரி – முழுமையான ஒளி

நம் ஆள்களில் பெரும் பகுதியான பேர் இருக்கிறார்கள். அதாவது யாராவது ஒன்று சொன்னால் போதும்….!
1.குருநாதர் எவ்வளவு பெரிய சக்தி பெற்றவர்…?
2.பார்… அவர்களுக்கெல்லாம் சக்தி கொடுக்கிறார்..!
3.நம்மை ஒன்றும் கவனிக்கவில்லை… என்பார்கள்.

தியான வழியில் எல்லோரும் சென்று கொண்டிருந்தாலும் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் நிலையில் ஒருவருக்கொருவர் பேசும் பொழுது இப்படிக் குறையாகப் பேசுவார்கள்.

நாம் போகும் ஞானப் பாதையில் இப்படிப்பட்ட நிலைகள் வரும். அதை எல்லாம் நீங்கள் விட்டுவிட வேண்டும்.

அவ்வாறு குறையாகப் பேசுபவதை நீங்கள் கேட்க நேர்ந்தால் உடனே நீங்கள் செய்ய வேண்டியது…
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும்.
2.மெய்யை அறியும் வாய்ப்பு – “அந்தச் சந்தர்ப்பம்” அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
3.அந்த மெய்ப் பொருள் அவர்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.
4.மெய்யை வளர்க்கும் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
5.அப்போது அந்த ஞானிகளின் அருள் சக்தி உங்களுக்குள் இது விளைகின்றது.

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போர் உங்களுக்குள் இவ்வாறு விளைவித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

சமைக்கத் தெரியவில்லை என்றால் ஹோட்டலில் ருசியாகச் சமைக்கின்றார்கள் என்று தெரிந்து தேடிப் போய்ச் சாப்பிடுகின்றோம் அல்லவா…!

அதைப் போல உங்களுக்குள் சமைத்த அந்த அருள் ஞானிகளின் உணர்வை
1.அவர்களுக்குள் சொல்லாகச் சொல்லிப் பதிவு செய்ய வேண்டும்.
2.அப்பொழுது மகரிஷிகளின் உணர்வை அருள் ஞானச் சாப்பாடாக அவர்களுக்குக் கொடுக்கின்றீர்கள்.

அதைக் கேட்டுப் பதிவாக்கியவர்கள் அடுத்து உங்களிடம்
1.ஒரு காரியம் அன்றைக்கு ஆகவேண்டும் என்று எண்ணியிருந்தேன்.
2.நீங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்
3.”நல்லதாகும்…!” என்று சொன்னீர்கள்.
4.அதே போல நல்லது நடந்தது என்று உங்களிடம் வந்து சொல்வார்கள்.

அப்போது எதை நீங்கள் சமைக்கின்றீர்கள்…?

சுவை கொண்ட அருள் ஒளியை உங்களுக்குள் சமைக்கின்றீர்கள். அதை எடுத்துச் சொல்லப் போகும் போது மற்றவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கின்றது. மகிழ்ச்சி ஊட்டுகின்றது.

அப்போது யாருக்குச் செய்கின்றீர்கள்…?

1.அவர்களை ஆண்டு கொண்டு இருக்கும் அந்த ஆண்டவனுக்கு நீங்கள் சேவை செய்கின்றீர்கள்.
2.அங்கே இயக்கிக் கொண்டு இருக்கும் அரும் பெரும் சக்தியான நல்ல குணங்களுக்கு
3.அந்தத் தெய்வங்களுக்கு அமுது கொடுக்கின்றீர்கள். சாப்பாடு கொடுக்கின்றீர்கள்.
4.அவர்கள் அதைக் கேட்டவுடனே அந்த நல்லதைச் சாப்பிட்டவுடனே என்ன செய்கின்றது…? மகிழ்ச்சி பெருகுகின்றது.

அதைத்தான் யாம் உங்களைச் செய்யச் சொல்கிறோம்.

இராமன் எப்போது கல்யாணராமன் ஆகின்றான்…? பகைமை உணர்வை அகற்றப்படும் போது அரவணைக்கும் சக்தி பெறுகின்றது. சீதாவை அரவணைக்கின்றான். (இராமன் என்றால் எண்ணம்; சீதா என்றால் சுவை)

1.உங்கள் உடலோடு ஒட்டி அந்தச் சுவையான உணர்வு மகிழ்ச்சியான வரப்போகும் போது சீதா.
2.அதனுடன் சேர்த்த அந்த மணத்தின் தன்மை ஞானம் சரஸ்வதி.
3.அதன் வலிமை கொண்டு ஒளியின் உணர்வாக “காயத்ரி…!” முழுமை அடைகின்றீர்கள்.

தீமையையும் உணர்த்தி… அதைச் சேர்க்கக் கூடாது….! என்று உணர்த்தும் “ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துகின்றோமா…!”

murugu-karthi

தீமையையும் உணர்த்தி… அதைச் சேர்க்கக் கூடாது….! என்று உணர்த்தும் “ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துகின்றோமா…!”

இப்போது நாம் மனிதனாக இருக்கின்றோம். பிறர் நம்மைப் பற்றிக் தவறாகச் சொன்னால் “பாவி… என்னைப் பற்றி இப்படி இல்லாததைச் சொல்கின்றானே… உருப்படுவானா இவன்…?” என்று சொல்லி விட்டுப் பிடிவாதமாக இருக்கின்றோம்.

அவர்கள் உடலில் எது கெட வேண்டும் என்று நினைத்தோமோ அந்த உணர்வு பூராம் இங்கே நமக்குள் கெடுதல் ஆக்குகின்றது.
1.கெடுதல் ஆனாலும் நமக்குள் அது தெரிகின்றது.
2.அவனால் தான் இந்த மாதிரி வருகின்றது.. அதனால் தனக்கு என்னவெல்லாம் வருகின்றது என்றும் தெரிகின்றது.
3.ஆனால் அதை நீக்கத் தெரிகின்றதா…?

ஏனென்றால் நம் ஆறாவது அறிவு அதை உணர்த்துகின்றது. உணர்த்தி அதை மீட்க வேண்டும் என்ற உணர்வையும் ஆறாவது அறிவு கொடுக்கின்றது.

1.இருந்தாலும் நாம் அந்த ஆறாவது அறிவை அடக்குகின்றோம்
2.அவர்கள் உணர்வால் அது அடக்கப்படுகின்றது.
3.நம்மால் நல்லதைச் சிந்திக்க முடியவில்லை
4.அதிலிருந்து விடுபட்டு வெளியில் வர வேண்டும் என்றால் அவர்கள் உணர்வு தான் வருகின்றது.

நாம் குழம்பு வைக்கும் பொழுது அதில் கொஞ்சம் போல காரத்தை அதிகமாகச் சேர்த்து விட்டால் என்ன ஆகும். காரம் தான் முன்னாடி இருக்கும். விஷத்தைச் சேர்த்தால் விஷம் தான் முன்னாடி இருக்கும். உப்பைச் சேர்த்தால் உப்பு தான் முன்னாடி இருக்கும்.

ருசியெல்லாம் கெடுத்து விடுகின்றது. “எது அதிகமோ” அது ஆக்கிரமிப்பு செய்கின்றது.

ஆகவே மனித வாழ்க்கையில் வரும் இதைப் போன்ற தீமைகளை நீக்கியவர்கள் யார்…? அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது.

1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து “பல அலைகள்” பேரருள் பேரொளியாக வருகின்றது.
2.அதை நாம் எடுத்து நம் உடலுக்குள் சேர்த்துத் தீமைகளை அகற்றப் பழக வேண்டும்.
3.சூட்சுமத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்றது.
4.அதனை எடுப்பதற்குத்தான் விநாயகத் தத்துவத்தையே ஞானிகள் வைக்கின்றார்கள்.
5.ஒரு தடவைப் பதிவு செய்து கொண்டாலும் அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதற்குத் தான்
6,அந்த உருவத்தை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

காவியமாகப் படைத்து அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக “எப்படி ஒளியாக ஆனான்…?” என்று கருத்தினை அறியும்படி செய்கின்றார்கள்.

ஒருவன் தீங்கு செய்கிறான் என்று தெரிகின்றது.. நாம் பார்க்கின்றோம். அது நம் உடலுக்குள் பதிவாகும் போது வினையாகின்றது. அதைப் போன்ற தீய வினைகளை எல்லாம் நீக்கியவன் துருவ மகரிஷி என்று நம் ஆறாவது அறிவால் தெரிகின்றது அது “கார்த்திகேயா…”

நம் வாழ்க்கையில் தீமை வரும் பொழுது அடுத்த கணமே அந்தத் தீய வினையை நீக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றோம் என்றால் நமக்குள் வரும் இருளை நீக்கும். நம் உணர்வுகள் தெளிவாகும்.

தீமைகளை நம் உடலுக்குள் உருவாகாதபடி தடுத்து விடுகின்றோம். அதைத்தான் “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…!” என்று நம் ஆறாவது அறிவைப் பற்றித் தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

விஷ்ணு கோவில்களில் எல்லாம் ஆஞ்சநேயரை ஏன் வைத்துள்ளார்கள்..?

Jai Anjanaeya

விஷ்ணு கோவில்களில் எல்லாம் ஆஞ்சநேயரை ஏன் வைத்துள்ளார்கள்…? 

 

இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் அறிய முடியாதபடி திரித்து அவைகள் காலத்தால் தடைப்படுத்தப்பட்டது. இன்றும் நாம் தேடிக் கொண்டேயிருக்கின்றோம்.

எது உண்மை…! எது பொய்..?

இராமன் நிஜமாகவே இருக்கிறார் என்று எண்ணுகிறார்கள். ஞானிகள் சொன்னது… என்ன..?

ஒரு உணர்வை நாம் நுகர்கின்றோம். நுகரப்படும் பொழுது இராமனின் பக்தன் – வாயு புத்திரன் “ஆஞ்சநேயன்…!”

1.எந்தக் குணத்தின் தன்மை நமக்குள் எண்ணமாகின்றதோ
2.அது நம்மிடமிருந்து சொல்லாக வெளியில் வரும் பொழுது
3.வாயுவாகத்தான் வருகின்றது.
4.கண்ணில் பார்க்கின்றீர்களா…? இல்லையே…!

அது அடுத்தவர் உடலுக்குள் போனவுடனே இந்த உணர்வை
1.அந்த எண்ணங்களைச் (காற்று) சுவாசிக்கும் பொழுது
2.இராமன் இட்ட கட்டளையின் பிரகாரம் அவர்களை இயக்குகின்றது.
3.எவ்வளவு அழகாகக் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

விஷ்ணு கோவில்களில் எல்லாம் பாருங்கள்…! ஆஞ்சநேயர் இருக்கும். சிவன் ஆலயத்தில் எல்லாம் பாருங்கள். விநாயகர் இருக்கும்.

இதையெல்லாம் நாம் கொஞ்சம் தெரிந்து கொண்டோம் என்றால் நம் சாஸ்திரம் எவ்வளவு பெரிய உண்மையைக் கொடுத்திருக்கின்றது…? என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அதை எல்லாம் இழந்துவிட்டு இன்று நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

ஏமாற்றுபவர்கள் கையில் சிக்கிக் கொண்டு இந்த யாகத்தைச் செய்தால் பாவம் போகும் என்றும் அந்த மந்திரத்தைச் செய்தால் கஷ்டம் போகும் என்றும் “பாவத்தைச் செய்து… கஷ்டத்தைத்தான் தேடிக் கொள்கிறோம்…!”

நம்மை மீட்டுவதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா…? நான் (ஞானகுரு) எதுவும் தவறாகச் சொல்லவில்லை…!

ஞானிகள் கொடுத்த இயற்கையின் பேருண்மைகளைக் காலத்தால் அரசர்கள் மாற்றிவிட்டார்கள்.

எப்படியோ…, இன்று வாழ வேண்டும்…! என்று நாம் விரும்புகின்றோம். அதற்குண்டான நிலைகளைச் செய்து ஏதோ இன்றைக்கு அந்தக் கஷ்டம் போனால் போதும்…! என்ற நிலையில் இருக்கின்றோம்.

தலை வலியை ஒருவர் போக்குகிறார் என்றால் அங்கே போவோம். தலை வலி கொஞ்ச நேரத்தில் போகும்.

உடனே “ஆஹா…!” நான் அங்கே போனவுடன் சரியாகி விட்டது என்பார்கள். இரண்டு நாள் கழித்தவுடன் அந்த உணர்வுகள் இங்கே இருக்கும். மீண்டும் முளைத்துவிடும்.

வயலில் களைகளை எடுக்கின்றோம். எடுத்தாலும் மீண்டும் மீண்டும் முளைக்கின்றது.
1.ஒரு தடவை எடுத்தவுடன் முழுமையாகப் போய்விட்டது
2.இனி வராது என்று சொல்ல முடியுமோ…!

நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்தது எல்லாம் ஊழ்வினை என்ற வித்தாக எலும்புக்குள் பதிவாகி இருக்கின்றது. இது முழுமையாகப் போக வேண்டும் என்றால் அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்த ஆற்றல்களை நாம் எடுக்க வேண்டும்.

அதற்காக வேண்டித்தான் மெய் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினை என்ற வித்தாக எல்லாம் கலந்து (MIXING) உங்களிடம் பதிவு செய்கின்றோம்.

அந்த ஞானிகள் கொடுத்த உணர்வின் சக்தியை உபதேசமாகக் கொடுக்கும் பொழுது செவி வழி கேட்கின்றீர்கள். அந்த உணர்வுகள் அலைகளாக மாறுகின்றது,

சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வின் தன்மையை உயிர் உங்களுக்குள் அணுவாக உருவாகும் கருவாக மாற்றுகின்றது.

எப்படியாவது உங்களிடம் ஆழமாகப் பதிவாக்க வேண்டும் என்பதற்காக கூடக் கொஞ்சம் நேரம் உபதேசித்து உங்களை நுகரும்படி செய்கின்றோம்.

அந்த ஞானிகளின் சக்தி வளர்ந்து விட்டால்
1.வரும் தீமைகளின் பிடியிலிருந்து நீங்கள் விடுபடலாம்
2.தீமையின் பிடியிலிருந்து மற்றவர்களையும் விடுபடச் செய்யலாம்.
3.அந்தச் சக்தியை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்ற பேராசையில் தான் இதைச் சொல்கின்றேன்.

குருநாதரின் அருள் என்றென்றும் உங்களுக்கு உறு துணையாக இருக்கும். எமது அருளாசிகள்.

ஞானிகளால் வைக்கப்பட்டுள்ள தெய்வச் சிலையின் மகிமையை அறிந்திருக்கின்றோமா…!

பழனியாண்டவர்

ஞானிகளால் வைக்கப்பட்டுள்ள தெய்வச் சிலையின் மகிமையை அறிந்திருக்கின்றோமா…! 

ஒருவர் கஷ்டமாக இருப்பார் நஷ்டமாக இருப்பார் வேதனைப்பட்டு இருப்பார் துன்பப்பட்டு இருப்பார் துயரப்பட்டு இருப்பார் எல்லாம் பட்டிருப்பார்.

ஆனாலும் இங்கே கோவிலுக்குள் போனவுடன் அந்த ஞானிகளின் எண்ணங்களை எடுத்து ஒருங்கிணைக்க வேண்டும்.

எப்படிக் குழம்பு வைக்கும் பொழுது எல்லாம் ஒன்றாகச் சேர்த்துச் சுவையாக இருக்கின்றதோ இதைப் போல நாம் துன்பத்தை நீக்கி இன்பத்தின் நிலைகள் பெறவேண்டும் என்று எல்லோரும் ஒருங்கிணைந்த நிலைகளில் சொல்லி கோவிலுக்குள் ஒலிபரப்பும் பொழுது அங்கே எதிரொலிக்கும்.

எப்படி..?

ஒரு மேக்னட்…! (காந்தம்). அதாவது மலைகளிலே அதிகமாக உயரமாக வளர்ந்து தன் காந்தத்தின் நிலையாக இழுக்கப்பட்டு நெடு நெடு என்று வளர்ந்திருக்கும். அதே சமயத்திற்குள் அந்தக் கல்லுக்குள் மறைந்த நிலையில் காந்த அலைகளும் பதியப்பட்டு இருக்கும்.

அத்தகைய மலைகளில் எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு தான் ஆலயத்தில் தெய்வச் சிலையாக வைத்துள்ளார்கள் ஞானிகள்.

கோவிலுக்குள் சென்று நாம் அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் இடும் இன்பமான அலைகள் அங்கே படரப்பட்டு சிலையின் காந்தத்தால் ஈர்க்கப்படுகின்றது.

சாதாரண மக்களும் அந்தச் சிலையைப் பார்த்து எண்ணியதும் அந்த உயர்ந்த சக்தியைப் பெறச் செய்வதற்காக வேண்டி அந்த மெய்ஞானி ஆலயத்தை அவ்வாறு அமைத்தான்.

கோவிலுக்குள் போனவுடன் தீபாராதனை காட்டுகின்றார்கள். இருட்டறைக்குள் சாமி இருக்கின்றது.

நம் உடலுக்குள் மறைந்திருக்கும் நல்ல குணம் அதைப் பார்க்கப்படும் பொழுது தெரிந்துணர்ந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று வானை நோக்கி எண்ணி நாம் ஏங்கவேண்டும்.

சாமி மேலே நறுமணமான மலர்களைப் போட்டிருப்பார்கள்.

எனக்குள் நல்ல குணத்தைத் தெய்வமாக உருவாக்கி இந்த உடலுக்குள் நீ எந்த மணம் பெற வேண்டும் என்று காட்டுவதற்காக மலரைப் போட்டிருக்கிறார்கள்.

மலரின் மணம் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் மணக்க வேண்டும். எங்கள் பேச்சும் மூச்சும், நறுமணங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணும் பொழுது, இந்த உடலிலே நறுமணம் வருகின்றது.

ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் இப்படி ஏகோபித்த நிலைகள் ஒவ்வொருவரும் எண்ணும்படி வைத்துள்ளார்கள் அன்றைய ஞானிகள்.

இதையெல்லாம் நான் (ஞானகுரு) சொல்லவில்லை. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்னது.

நான் படிக்கவில்லை. எமக்குக் கோவிலைப் பற்றியும் தெரியாது. இந்த ஸ்தல விருட்சத்தைப் பற்றியும் தெரியாது. அவர் சொன்னதைத் தான் உங்களிடம் சொல்லுகின்றோம்.

குருநாதர் எம்மிடம் கோவிலுக்குப் போனால் இப்படித்தான் கும்பிட வேண்டும் என்றார்.
1.நாம் அந்த எண்ணத்தை எடுக்கும் பொழுது தெய்வமாகின்றது.
2.எண்ணிய எண்ணம் இறையாகின்றது இறைவானாகின்றது.
3.அந்த உணர்வின் சக்தி நமக்குள் தெய்வமாகின்றது.
4.அந்த செயலின் தன்மையாக நாம் ஆகின்றோம் என்ற செயலின் தன்மையை குருநாதர் சொன்னார்.

அதைத்தான் யாம் உங்களிடம் சொல்லுகின்றோம்.

பிரதோஷத்தைக் கழிக்க வேண்டிய முறை – சம்போ மகாதேவா…!

நந்தீஸ்வரன் - கணக்குப்பிள்ளை

பிரதோஷத்தைக் கழிக்க வேண்டிய முறை

சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று ஏன் வைத்திருக்கின்றார்கள்…? அதனின் உட்பொருளை அறிந்துள்ளோமா…?

கோயிலில் போய் நம் கஷ்டத்தை எல்லாம் சொல்லிவிட்டால் அந்தத் தெய்வம் நிவர்த்தி செய்து தரும் என்று தான் நாம் நினைக்கின்றோம்.

வாழ்க்கையில் கஷ்டம் வேதனை என் தொழில் நடக்க வில்லை… அது நடக்கவில்லை… இது நடக்கவில்லை… என்று  வேதனையை எடுத்துக் கொள்கின்றோம்.

பிறருடைய கஷ்டங்களை நாம் கேட்கின்றோம். அறிகின்றோம்.. நுகர்கின்றோம்… பின் உதவி செய்கின்றோம்.

பிறருடைய உடலில் இரத்தக் கொதிப்பு இருக்கின்றது. பிறருடைய உடலில் கோபம் இருக்கின்றது. பிறருடைய உடலில் வேதனை இருக்கின்றது.

இதையெல்லாம் நாம் பார்த்து “பாவம்… அவர்கள் குழந்தை குட்டிகளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். நல்லவர்களாக இருக்கின்றார்கள்.

சந்தர்ப்பத்தில் அவர்கள் குழந்தை தான் அத்தனை அட்டகாசம் செய்கின்றான். அவனைப் பார்த்தால் அவர்களுக்குத் தொல்லையாகின்றது என்று நாம் அதையெல்லாம் அறிந்து கொள்கிறோம்.

பிறர் சிரமப்படுவதைப் பார்க்கின்றோம்.. உணர்கின்றோம்.. அவன் திருந்தி வாழவேண்டும் என்றும் நினைக்கின்றோம். ஆனால் அதையெல்லாம் கூர்ந்து கவனித்து நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் வந்தவுடனே
1.பிறருடைய அந்தத் தோஷம்
2.”தோஷமாக…” நமக்குள் வந்து விடுகின்றது.

எது…?

பிறருடைய கஷ்டம் நஷ்டம் எல்லாம் நமக்குள் வருகின்றது. இது தான் பிரதோஷம். சிவன் கோயில்களில் இதைத்தான் “பிரதோஷம்…” என்று தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

பிறருடைய கஷ்டம் நஷ்டம் எல்லாம் நமக்குள் வந்தவுடனே  நாமும் புலம்பத் தொடங்குவோம்.

காசு கொடுத்தவன் கொடுக்கவில்லை. என் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் நம் வீட்டிலேயே “அந்தத் தோஷம்” இங்கே வந்து விடுகின்றது

நம் வீட்டில் இருப்பவர்கள் நன்றாக உயர்வாக இருந்தாலும் உடலில் நோய் வந்து விட்டது என்றால் உற்றுப் பார்க்கின்றோம். “அவர்கள் உடலில் விளைந்த தோஷம்” நம்மிடம் வந்து விடுகின்றது.

நான்கு பேர் நண்பர்களுடன் நாம் பழகுகின்றோம். அவர்கள் உடலில் சந்தர்ப்பவசத்தால் நோய்கள் வருகின்றது. அதை நாம் கேட்டறிகின்றோம். “நண்பருடைய தோஷம்…” நமக்குள் வந்து விடுகின்றது.

1.இந்த வாழ்க்கையில் நாம் தவறு செய்யவில்லை.
2.வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களை எல்லாம் நாம் கேட்டறிந்து
3.இதை எல்லாம் நமக்குள் சேர்த்ததும்
4.நமக்குள்ளும் தோஷமாகின்றது.

நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள். நாம் எந்தெந்தக் குணங்களை அதிகமாக நேசித்தோமோ இந்தக் கணக்கின் பிரகாரம் நம் உடலுக்குள் மாற்றங்களாகின்றது.

கோபம் கோபம் என்று ஆத்திரப்பட்டால் இரத்தக் கொதிப்பு வருகின்றது.

கோபமும் வேதனையும் சலிப்பும், சஞ்சலம் வந்து சரவாங்கி நோயாகிக் கை கால் எல்லாம் முடக்குகின்றது. கோபம் வந்தால் “பளீர்..” என்று வந்து வெட்டி “வெடுக்…”கென்று இழுத்துக் கொள்கின்றது.

விஷம் என்ற நிலைகள் வந்துவிட்டால் பாம்பு போல “தொளக்..” என்று போட்டு விடுகிறது. விஷம் பாய்ந்தவுடனே என்ன செய்யும்? கை இல்லாமல் போகும்.

நம் வாழ்க்கையில் நாம் எந்தெந்தக் குணங்களை அதிகமாகச் சுவாசித்தோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் இந்த உடலில் அதறிகுத்தக்க மாற்றம் வருகின்றது.

1.நாம் சுவாசித்த நந்தி… “ஈஸ்வரர்”
2.நாம் சுவாசித்த உணர்வுகள் உயிரான ஈஸ்வரனிடம் படுகின்றது.
3.நாம் சுவாசித்தது நம் உடலுக்குள் போய்
4.எந்தக் குணமோ உயிரைப் போலவே ஜீவ அணுவாக உருவாகி
5.அந்தக் கணக்குகள் நமக்குக் கூடும்.

உயிரைப் போலவே ஜீவனாகின்றது. உயிருக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. ஆக..
1.விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன்.
2.எதன் சுவையோ அந்த உணர்வுக்கொப்ப எண்ணங்கள் வரும்.
3.வேதனை என்ற சுவை இருந்தால் வேதனை என்ற உணர்ச்சி வரும்.

அது தான் உயிரைப் போலவே அந்த அணுக்கள் அந்த உடலில் உருவாகும் – விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன்.

எவ்வளவு அழகாகக் கொடுக்கின்றார்கள்? நாம் எந்தக் குணத்தை அதிமாக எடுத்தோமோ அதன் ரூபமாக நம்மை மாற்றும்.

நந்தீஸ்வரன் – நாம் சுவாசித்த உணர்வெல்லாம் உடலில் சிவமாக மாறிவிடுகின்றது.

ஓ…ம் நமச்சிவாய… ஓ…ம் நமச்சிவாய… என்றால் அது எப்படி…?

நாம் வேதனைப்படுவோரைப் பார்த்தவுடனே பார்வதி பஜே அரஹரா சம்போ மகாதேவா.

1.பார்வையில் பார்க்கின்றோம் – பார்வதி பஜே
2.வேதனைப்படுபவரின் உணர்வுகள் நமக்குள் வந்து நம்மை இயக்கி –  அரஹரா
3.சந்தித்த சந்தர்ப்பம் இணைந்து – சம்போ
4.நம் உயிர் மகாதேவன் அதை உருவாக்கி விடுகின்றான் – மகாதேவா

கோபப்படுபவர்களைப் பார்த்தாலே பார்வதி பஜே அந்தப் பார்வையில் படுகின்றது நுகர்கின்றோம். பார்வதி பஜே ஹரஹரா சம்போ மகாதேவா கோபமான உணர்ச்சிகள் நமக்குள்ளே வந்துவிடுகின்றது.

அதாவது… பிறருடைய தோஷங்களை நாம் அறிந்து உதவி செய்தாலும் இந்தத் தோஷங்களைச் சந்தித்த சந்தர்ப்பம் நமக்குள் என்ன நடக்கின்றது? எந்தக் கணக்கு கூடுகின்றது?

“சம்போ மஹாதேவா…” – நான் சந்தித்ததை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றான். மஹா தேவனாக இருக்கின்றான்,

யார்…?

நம் உயிர்…!

நமக்கு இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்களே…! நாம் யாராவது நினைக்கின்றோமா?

பிரதோஷம் அன்றைக்கு முழுவதும் பட்டினியாக இருந்து நல்ல குணங்களுக்குச் சாப்பாடு கொடுக்காமல் “நீ இரு…” என்று இருக்கச் செய்து விடுகிறோம்.

நான்கு மணி வரையிலும் பட்டினியாக இருந்துவிட்டுச் சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றோம். விளக்கைக் கொண்டு போய் வைக்கின்றோம் – இது கார்த்திகேயா.

கார்த்திகை என்றால் விளக்கை முன்னாடி வைத்துக் காட்டுகின்றார்கள். ஆறாவது அறிவு முன்னாடி இருக்கிறது,

விளக்கில் எல்லாப் பொருளும் தெரிகின்றது.

ஆறாவது அறிவால் இதைத் தெரிந்து கொள்…! என்று விளக்கை வைத்துக் காட்டுகின்றான். அந்த விளக்கு எது?

துருவ நட்சத்திரத்தின் விளக்கு. துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து இப்படித் தூய்மைப்படுத்து. தன்னுடைய மனதை விளக்கு என்று தான் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

இதற்குப் பதில் புறத்தீயின் நிலைகளை வைத்து தீபத்தை வைத்துக் காண்பிக்கின்றனர்.

ஆக… சாப்பிடவில்லை என்றால் நல்ல அணுக்கள் கெட்டுப் போகும். இந்த ஆறாவது அறிவால் தெரிந்தும் கூட பட்டினியாக இருந்து விரதம் இருக்கின்றோம்.

ஆனால் எது விரதம்?

வேதனை, வெறுப்பு, சஞ்சலம் அவன் அப்படிச் செய்கின்றான் என் பையன் என்னை எதிர்க்கின்றான் – இதைப் போன்ற உணர்வுகள் எல்லாம் சந்தர்ப்பத்தில் வரும் போது அந்தத் தீமைகள் நமக்குள்ளே போகாமல் தடுக்க வேண்டும்.

அது தான் உண்மையான விரதம்.

நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுத்தால் வீரியமாகும். அதற்குச் சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் சோர்வடையும். சோர்வோடு இருக்கும் போது எப்படி இருப்போம்?

இன்றைக்கு விரதம் என்றால் உற்சாகமாகவா இருக்கின்றீர்கள்…! முகம் அப்படியே வாடிப்போகும்… இல்லையா…! அந்த முகம் மாறினவுடனே என்ன செய்கின்றது,

சிவனுக்கு அபிஷேகம் செய்து அந்தப் பிரசாதத்தை எடுத்து நந்தீஸ்வரனுக்குக் கொண்டு வந்து முன்னாடி கொடுத்து “இந்தாப்பா சாப்பாடு….! என்று கொடுக்கின்றோம்.

1.என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்.
2.என் மாமியார் திட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்.
3.என் மாமனார் சொல்வதைக் கேட்டுக் கொண்டு என் வீட்டுக்காரர் திட்டிக்கொண்டே இருக்கின்றார்.
4.கடன் கொடுத்தது அவன் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கின்றான்.
5.சாப்பாட்டைக் கொடுத்து இதையெல்லாம் நந்தீஸ்வரன் காதில் மிகவும் வேதனையோடு சொல்வார்கள்.

பிரதோஷம் அன்றைக்கு விரதம் எது?

சங்கடம், சலிப்பு, சஞ்சலம், வேதனை, வெறுப்பு இதைப் போன்ற தீமையான உணர்வுகளைச் சுவாசிக்காமல் இருப்பதற்காகவும் தீமைகளை நாம் நினைக்கக்கூடாது என்பதைத்தான் விரதம் என்றார்கள் ஞானிகள்.

ஆனால் பிரதோஷம் அன்றைக்கு
1.என் வீட்டுக்காரர் மாமனார் சொன்னதைக் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்.
2.மாமனார் சொல்வது மாமியார் கேட்டுக் கொண்டு இருக்கிறது.
3.இவர்கள் பேச்சைகளைத்தான் என் பிள்ளைகள் கேட்கிறது.
4.எங்கள் வீட்டிலேயும் அவர்கள் பேச்சைத்தான் கேட்கிறார்கள்
5.இந்தக் குறைகளை நீ போய் ஈஸ்வரனிடம் சொல்லப்பா என்று
6.தோஷங்களை நீக்குவதற்குப் பதில் சேர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் இதெல்லாம் குருநாதர் சொன்ன பிற்பாடு தான் பிரதோஷம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். இல்லை என்றால் எனக்கும் தெரியாது.

பிரதோஷம் அன்றைக்கு முழுவதும் பட்டினியாக இருப்பார்கள். அன்றைக்கு நமக்கும் கொஞ்சம் பசி எடுக்கும். நாம் சாப்பாடு வேண்டும் என்று கேட்டால் “இப்போது என்ன அவசரம்…?” என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள்,

நீங்கள் விரதம் இருக்கிறீர்கள். எனக்குச் சாப்பாடு கொடு என்று கேட்டால் “சாமிக்குக் கொடுத்த பின் தான் சாப்பிட வேண்டும்..” என்று அவர்களுக்குக் கோபம் வரும்.

விரதம் இருக்கும் அன்றைக்கு இது போல நீங்கள் சொல்லுங்கள். அவர்களுக்கு எப்படிக் கோபம் வரும் என்று பாருங்கள்…! பிறருடைய தோஷங்களை இன்னும் கொஞ்சம் வளர்த்துக் கொள்கின்றோம்.

எல்லா தோஷத்தையும் நீக்கி உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் உடலாக இருப்பது தான் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்த்தால் நமக்குள் நம்மை அறியாது வந்த – வரும் தீய வினை சாப வினை பூர்வ ஜென்ம வினை பாவ வினை என்று எல்லாத் தோஷங்களையும் நீக்க முடியும்.

“முருகப் பெருமான்…!”

Muruga Peruman

“முருகப் பெருமான்…!”

நம் உயிர் “ஓ…ம்” என்று பிரணவமாக்கி இயக்குகின்றது. நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மையை ஜீவனாக்கி ஜீவனின் மலமாக நம் உடலை ஆக்கிக் கொண்டேயிருக்கின்றது.

“ஓ…” பிரணவம் “ம்…” பிரம்மம்
1.எனக்குள் எண்ணியதைச் சிருஷ்டித்து அதனின் இயக்கமாக இயக்கி
2.ஈசனாக எனக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறாய் என்று
3.நம் உயிரை ஈசனாக மதிக்கும்படிச் சொன்னார்கள் ஞானிகள்.

நாம் எண்ணியதை இயக்கி எண்ணியதைப் பிரம்மமாக்கி நமக்குள் உடலாக்கி அந்த உணர்வின் செயலை நமக்குள் இயக்கிக் கொண்டே இருக்கின்றான் உயிரான ஈசன்.

அந்த உயிரே ஆண்டவன்.

1.நம் உடலில் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும்
2.பெருமாளாக வீற்றிருப்பதும் உயிரே.
3.பெருமானாக இருப்பதும் உயிரே.

மனிதனின் நிலைகள் உருபெற்ற நிலைகளை உங்களுக்குள் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

நமக்குள் இருக்கும் ஆறாவது அறிவு என்பது “முருகு…”. அதாவது மாற்றி அமைக்கும் பெருமானாக இருப்பது நமது ஆறாவது அறிவு.

1.உடலின் இயக்க உணர்வுகள் அனைத்திற்கும் பெருமாளாக இருப்பது உயிரானாலும்
2.இயக்கத்தின் தன்மை ஈசனாக இருப்பினும்
3.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனாக இருப்பினும்
4.ஆறாவது அறிவின் தன்மையை “முருகப் பெருமான்…!” என்றனர் ஞானிகள்.

அதாவது இந்த உடலை ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பது ஈசனாக இருப்பினும் அவனின் நிலைகள் கொண்டு மாற்றியமைக்கும் பெருமானாக இந்த ஆறாவது உணர்வின் துணை கொண்டே இந்த உயிர் நம்மை ஆட்சி புரிகின்றான்.

இது அனைத்தையும் ஆட்சி புரியும் நிலைகளை நாம் நினைவு கொண்டு நாம் அல்ல என்ற நிலைகளுக்கு வருதல் வேண்டும்.
1.நம் உடலை அவனின் உடல் என்றும்
2.அவனின் உணர்வு என்றும்
3.அவனின் கண் என்றும் உணர்தல் வேண்டும்.

எல்லாமே அவனின் நிலைதான் என்று அறிந்து கொண்ட பின்  ஒருவன் என்னைக் கேவலமாகப் பேசி விட்டான்… நான் அவனை விடுவேனா…! என்ன செய்கிறேன் பார்…” என்ற நிலைகளில் சொல்லி “ரோசப்படுவது…” என்பது  தேவையற்றது.

ஒரு உடலுக்குள் விளைந்த உணர்வுகளை எடுக்காது உத்தராயணம் என்ற நிலைக்கு வர வேண்டும்.

அதாவது மகாமகம் என்று சொல்வார்கள். நாம் சமையல் செய்யும் போது எப்படிப் பொங்கி வடிக்கின்றோமோ இதைப் போல இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “உத்தராயணம்…” தீமைகளை நாம் மாற்றியமைக்க வேண்டும்.

இந்த நிலை வரும் போது தான் பங்குனி உத்திரத்தை நாம் தெளிவாகக் கொண்டாட முடியும். தெளிந்திடும் உணர்வு கொண்டு நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

இதற்குத் தான் மாதத்திற்கு நாள் என்று விழாக் கோலம் வைத்தனர் ஞானிகள். பன்னிரண்டு ராசி என்று சொல்வார்கள்.

பன்னிரண்டு ராசி என்று சொல்லும் போது நமக்குள் எந்த ராசி அதிகரிக்கின்றமோ அதனின் விளைவின் தன்மை தான் நமக்குள் வருகின்றது.

“முருகப் பெருமான்” – நாம் மாற்றி அமைக்கும் ஆறாவது அறிவின் நிலைகள் கொண்டு அது உயர்ந்த நிலைகள் கொண்டு நமக்குள் பெருமாள் ஆக இருந்து ஆட்சி புரியும் உயிருடன் அவனுடன் ஒன்றி அவனாக நாம் ஆகும் நிலையே மகரிஷிகள் அன்று உணர்த்திய தியானம்.

தியானம் என்பது என்ன?

நம்மை மாற்றி அமைக்கும் முருகப் பெருமானின் உறு துணை கொண்டு மெய் ஞானி உணர்வை நமக்குள் இணைத்து உயிருடன் ஒன்றிடும் நிலையாக அந்தப் பெருமானுடன் ஒன்றி என்றுமே நாம் ஒளியின் சுடராக வாழ்வதே தியானம்.

நமது எல்லை எது? இனி உடல் பெறாத நிலை தான் உத்தராயணம்.

இந்த மனித உடலை விட்டு நாம் அகன்ற பின் ஒளியின் சிகரமாக நாம் ஆவதற்கே இந்தத் தியானம்.

இந்தப் புவியின் வாழ்க்கையில் நமக்குள் வரும் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற நிலைகள் அனைத்தும் பற்றற்றதாக மாற்றுவோம்.

1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பற்றுடன் பற்றுவோம்.
2.மகரிஷிகளுடன் நாம் மகரிஷிகளாக நாமும் கலந்திடுவோம்.

எதிரிகள் அழிய வேண்டும்… நாசமாகப் போக வேண்டும்… என்று தெய்வத்திடம் வேண்டலாமா…?

Karuppannachami

எதிரிகள் அழிய வேண்டும்… நாசமாகப் போக வேண்டும்… என்று தெய்வத்திடம் வேண்டலாமா…?

அடிக்கடி இடைஞ்சல் செய்கிறார்கள். அவரைப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் குடும்பம் நாசமாகப் போக வேண்டும், உங்கள் குடும்பம் மண்ணில் போகும் என்ற இந்த நிலைக்கு எண்ணத் தொடங்கிவிடுகின்றார்கள்.

இந்த உணர்வுகளை அவர்கள் எடுக்கப்படும் போது இதே உணர்வு அவர் உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வுகள் உடல் முழுவதும் பெருக்கப்படுகின்றது.

இவ்வாறு எடுத்த உணர்வையே உயிர் உடலாக உருவாக்கி அவர்களுக்கேதான் அது பாதகமாக்கும்.

ஏனென்றால் ஒரு வித்தினை உருவாக்கினால் மீண்டும் அதை நிலத்தில் ஊன்றும்போது அதனின் வித்துக்களாக விளையத் தொடங்குகின்றது.

கெடுதல் செய்தவர் “நாசமாகப்போக வேண்டும்…” என்ற உணர்வினை முதலில் இவர்கள் எண்ணுகின்றனர்.

அந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக இவருக்குள் உருவாகின்றது. அதைக் கெடுதல் செய்தவரிடம் சொல்லாகச் சொல்லப்படும் போது இங்கே விளைந்த சொல்கள்
1.அந்த ஆகாத எதிரியின் செவிகளில் படுகிறது.
2.அந்த உணர்ச்சிகள் கண் வழி கவருகின்றது.

ஆகா… என்னை இவ்வாறு சொல்லத் தொடங்கிவிட்டாயா…? என்று எதிர் பதிலாக இரண்டு பேருமே இந்த உணர்வுகளைப் பேசுகின்றனர்.

இப்படிப் பேசும் உணர்வுகள் என்ன செய்கின்றது?

இருவரையுமே அது கொல்லுகின்றதே தவிர அவர்களுக்குள் நல்ல குணங்களை எண்ணுவதற்கு வழியில்லை. இருவரிடத்திலும் உள்ள நல்ல குணங்கள் அனைத்தும் மடிகின்றது.

மனிதனுக்கு மனிதன் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அறியாது ஆலயங்களுக்குச் சென்று
1.என் எதிரி வீழ வேண்டும்
2.என் வாழ்க்கை நல்லதாக அமைய வேண்டும் என்று
3.தவறான வழியில் வரம் கேட்கின்றார்கள்.

இப்படிச் சந்தர்ப்பத்தால் மோதிய உணர்வுகள் அந்த வெறுப்பின் அலைகளுக்குத்தான் செல்லச் செய்கின்றது என்று குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

கருப்பணச்சாமி – இதைப் போலக் கொடூர தெய்வங்களைக் காட்டும் போது ஆடையோ கோழியோ பலி கொடுக்கின்றோம் என்று வேண்டுகிறார்கள்.

ஆக சிந்திக்கும் தன்மை இழந்தால் அப்பொழுது அதற்குத் தக்க பிறிதொன்றைக் கொல்லும் உணர்ச்சிகளைத் தான் நமக்குள் ஊட்டுகின்றது.

நல்ல சிந்திக்கும் தன்மையை நமக்குள் மாற்றும் அத்தகைய நிலைகளில் இருந்து மீள்வதற்குத்தான் கருப்பணச்சாமி போன்ற உருவங்களைக் காட்டினார்கள் ஞானிகள்.

நம்மை மறைக்கும் தீமைகளிலிருந்து மீள…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா பெற வேண்டும்.
4.எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.
5.எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும்.
6.நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று இப்படி மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்…?

கருப்பணச்சாமியை எண்ணி
1.என் எதிரி வீழ்ந்தால் என் தொழில் விருத்தியானால்
2.உனக்கு ஆட்டைக் கொடுக்கிறேன் பலி கொடுக்கிறேன் என்ற உணர்வுகளில் தான்
3.நாம் பக்தியில் செல்லுகின்றோம்.

நமக்குள் தீமை வருகிறது என்று அறியவில்லை.

நாம் வேதனைப்படும் உணர்வினை நுகர்ந்தால் வேதனைப்படுவோர் உணர்வினை நுகர்ந்தால் பாசத்துடன் இருக்கும்போது குழந்தைக்கு நோய் என்று உணர்வானால் நாம் சிந்திக்கும் தன்மை இழந்துவிடுகின்றோம்.

அவனைப் பாதுகாப்பதற்கு மாறாக அவசரத்தில் இந்த வைத்தியரிடம் போவோமா அந்த வைத்தியரிடம் போவோமா என்று அதில் முழுமை பெறாதபடி இந்த “ஆவேச உணர்வுகள் தான்” வருகின்றது.

தீமையின் உணர்வை நமக்குள் வளர்த்து அந்த ஆவேசத்தால் காக்கும் உணர்வை இழந்து அவனையும் காக்க முடியாது. கடைசியில் அவனால் எடுத்துக் கொண்ட வேதனைகள் கடும் நோயாகவும் மாறுகின்றது.

சாதாரணமாக மனிதனானவன் தீமையை அதிகமாக அவன் செயல் படுத்த வேண்டும் என்று எண்ணுவதில்லை. நன்மை செய்யவே முற்படுகின்றான். ஆனால்
1.நன்மை செய்ய முற்பட்டாலும்
2.பிறருடைய துயரப்படுத்தும் நிலையோ வேதனைப்படுத்தும் உணர்வோ அவன் நுகர்ந்து விட்டால்
3.அவன் நல்ல குணங்களை மறைத்து செயலற்றவனாக மாறி
4.இவனும் தீயவனாகதான் மாறுகின்றான்.

ஒருவர் நம்மை அடிக்க வருகிறான் என்று வைத்துக் கொண்டால் அவன் நம்மை அடித்து விடுவான் என்று பயந்து ஓடுகின்றோம்.

அப்படி ஓடினாலும் ஒரு சமயம்… “ஏன் இப்படி…?” என்று திரும்பினால் அவன் செய்வதற்கு முன் நாம் தவறு செய்பவனாக மாறுகின்றோம். இப்படித் தான் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு அறியாத நிலைகளில் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். அதிலிருந்து அவர்களை மீட்க “மெய் ஞானிகளின் உணர்வினை நீ பதிவு செய்…” என்றார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரும் கடவுள். உயிரால் உருவாக்கப்பட்ட அந்த உடல் ஆலயம். மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து அதைப் பாதுகாக்கும் உணர்வுடன் நீ செயல்பட வேண்டும் என்றார்.

தீமைகளை நீ பார்க்க நேர்ந்தால் கேட்க நேர்ந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று நீ எடுத்துக் கொள்.

அவர்கள் நலம் பெற வேண்டும் என்றும் அந்த ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் பரி்சுத்தம் ஆக வேண்டும் என்றும் நீ அந்த உயிரைக் கடவுளாக மதி. அவர் உடலை நீ கோயிலாக மதி. மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் அங்கே வளர வேண்டும் என்று நீ எண்ணு.

அதன் வழி நீ செயல்படவேண்டும், அதற்கேதான் துருவ நட்சத்திரத்துடன் உன்னை ஆயுள் கால மெம்பராக இணைக்கிறேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

1.நான் அதிலே இணைந்தேன்.
2.நான் அங்கே செல்கின்றேன்.
3.நான் சென்ற பின்பும் இதன் உணர்வை நீ தொடர்பு கொண்டால்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நீ பெற முடியும்.
5.அதை நீ எளிதில் பெற்று அனைவருக்கும் கொடுக்க முடியும்.
6.இருளிலிருந்து அனைவரையும் மீட்க முடியும் என்று உணர்த்தினார் குருநாதர்.

“இலட்சுமி நாராயணா…” என்று ஏன் சொல்கிறோம்…?

Adi Sakthi Goddess - Matha

“இலட்சுமி நாராயணா…” என்று ஏன் சொல்கிறோம்…? 

குடும்பத்தில் நீங்கள் அனைவருமே ஒற்றுமையாக இருக்க வேண்டும். பெண்களுக்கு அதிகமான சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் மறந்திட வேண்டாம்.

பெண்கள் சாபமிட்டால்
1.அந்தச் சாப அலைகள் பிறரைத் தாக்கும்.
2.சாப அலைகள் வரும் போது தீமைகளை உருவாக்கும் உடலாகத்தான் மாறும்.
3.தீமை செய்யும் பூச்சியும் புழுவாகத் தான் நம்மை மாற்றி விடும்.

பெண்பாலுக்கு அதிகமான சக்தி இருக்கிறது என்றால் குடும்பத்தில்   ஒன்றுபட்டு வாழவேண்டும். உணர்வின் தன்மை ஒன்றான செயலில் வளர வேண்டும் என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் அதன் வழி வாழும்.

உதாரணமாகக் குடும்பத்தில் கஷ்டம் என்று வந்து விட்டால்
1.கணவனுக்கு இப்படிக் “கஷ்டம் வந்து விட்டதே…” என்று மனைவி வேதனையுடன் எண்ணினால்
2.மீண்டும் கணவனுக்கு அந்தத் தொல்லைகள் தாக்கும்.
3.கணவன் தொல்லைகளிலிருந்து மீள வேண்டும்
4.அருள் ஒளி பெற வேண்டும்,
5.அவர் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்று மனைவியின் உணர்வுகள் வலுப் பெற்றால்
6.அதை மாற்றியமைத்துத் தொல்லைகள் மாறி கணவனுக்கு உறு துணையாக இருக்கும்.

இதைப் போன்ற நிலைகள் பெண்கள் நாள வரும் உலகத்தை உயர்வாக்கச் செய்யும் நிலையாக வளர வேண்டும்.

ஏனென்றால் முதலில் ஆதி சக்தியாக இருந்தது விஷம் தான். அது தாக்குதலால் ஏற்படும் நிலைகளில் தான் அதிகமாகி… விஷத்தின் தன்மை அழுத்தம் அதிகமாகும் போது… வெப்பமாகின்றது.

வெப்பமான பின் தான் அணுக்களாகப் பிரிந்து ஓடும் தன்மை வரும். ஓடும் நிலைகளில் தான் காந்தமாகிறது. இநத மூன்று விளைவிற்கும் தான் காரணப் பெயர் வைக்கிறார்கள் ஞானிகள்.

முதலில் பெண்பால் தான் உருவாகிறது.
1.ஆதி சக்தி என்பது விஷம்
2.ஆதிபராசக்தி என்பது இரண்டாவது வெப்பம்
3.வெப்பமான பின் ஈர்க்கும் தன்மை வரும்போது ஆதிலட்சுமி என்பது காந்தம்

(பெண் பால் என்ற நிலையில்) காந்தம் இழுத்து ஒரு பொருளை உருவாக்கும் தன்மை வரும்போது தான் பிரம்மம். ஒரு உருவின் தன்மை ஆண்பால் என்ற நிலை வருகிறது. ஆக பெண்பால் என்ற உணர்வுகள் அதனுடன் சேர்க்கப்படும் பொழுதுதான் ஒரு உருவத்தின் அமைப்பே வருகிறது.

முதலில்
1.அணுவின் தன்மையும் துடிப்பின் தன்மையும் தான் இருக்கும்
2.ஒரு உணர்வின் தன்மை மோதலாகி அந்த உணர்வின் சத்தைத் தன்னுள்  எடுத்தால் அணுத்தன்மை என்ற நிலையை அடையும்.
3.அப்பொழுது ஆண்பால் என்ற நிலை வருகிறது.

எதன் உணர்வைப் பெற்றதோ காந்தம் வெப்பம் விஷம் என்ற மூன்று உணர்வும் நுகர்ந்து கொண்ட உணர்வினை இயக்கி ஒரு இயக்கச் சக்தியாக மாற்றுகிறது.

இதைப் போன்ற நிலைகளில் பெண்பால் தான் சக்தி தான் சிவமாகின்றது. சிவத்துக்குள் சக்தியாக இருக்கின்றது.

நாம் எவ்வளவு பெரிய உடலாக இருந்தாலும் வேதனையின் உணர்வுகள் அதிகமாகிவிட்டால் அந்தச் சக்தி வேதனையின் உணர்ச்சி கொண்டு நம்மை அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

உருவாக்க வேண்டும் என்ற உணர்வினை அந்தப் பெண்பாலின் சக்தியைக் கூட்டினால் அந்த உயர்ந்த உணர்வினை வளர்க்கும் சக்தியைப் பெறுகின்றோம்.

இன்று பெண்கள் திருமணமாகும் போது
1.வரதட்சணை வரவில்லை என்றால்
2.பெண்பால் என்று உணராதபடி அவர்கள் ஒவ்வொருவரும் வரும் மருமகளை  செல்வத்திற்காக அவமதிப்பதும்
3.செல்வம் கிடைக்கவில்லை என்றால் தூஷிப்பதும்
4.இதைப்போன்ற நிலைகளில் செல்வத்திற்கு அடிமையாகி
5.அருள் உணர்வை இழந்து
இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் பகைமை உணர்வுதான் வளர்ந்து கொண்டு உள்ளது.

1.நல்ல குணங்கள் இருந்தால்
2.நல்ல பண்புகள் இருந்தால்
3.செல்வம் இல்லை என்றாலும்
4.அந்த அருள் செல்வத்தை வைத்து நாம் வேண்டும் செல்வத்தைப் பெற்றுக் கொள்ளும் நிலை  வருகிறது.
5.செல்வத்தின் அழியாத் தன்மையும் செல்வத்தில் மகிழ்ந்து வாழும் நிலையையும் கூட்டும்.

கல்யாணம் ஆகும்போது வரதட்சணையாக ஒரு லட்சம் கொடுத்தாயா..? இரண்டு லட்சம் கொடுத்தாயா..? உன் அப்பன் வீட்டிலிருந்து “கார் வாங்கி வா…” என்பது எல்லாமே விலை பேசி வாங்கும் தன்மை தான்.

பெண்கள் இதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பெண்களை எந்த அளவிற்கு அடிமைகளாக அறிவிலிகளாக வைத்துள்ளது இந்தச் சமுதாயம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும்.

நல்ல குணங்கள் இருந்தால் ஒன்றுபட்டு வாழும் போது செல்வம் எவ்வளவு வேண்டுமானாலும் கூடி வருகிறது.

செல்வத்தை வாங்கி வைத்து அடுத்து அந்தச் செல்வத்தின் மீது ஆசைப் படும் போது உங்கள் அப்பன் வீட்டிலிருந்து என்ன வாங்கி வந்துவிட்டாய்…? என்று இதே பெண்கள் தான் பேசுகின்றனர். பெண்களைப் பெண்களே அவமதிக்கின்றனர்.

இந்த உணர்வின் தன்மை வரப்படும் போது
1.அதனால் வரக்கூடிய பகைமை
2.இந்தச் செல்வத்தையும் பாதுகாக்க முடியவில்லை.
3.நாம் தேடிக் கொண்டிருக்கும் செல்வத்தையும் இடைமறித்து வேதனை என்ற உணர்வுகள் வருகின்றது.

வேதனைகள் வந்த பின் தன்னை அறியாமலேயே உடலிலே கடும் விஷத் தன்மையான நோய்கள் வருகின்றன என்பதையும் மறந்து விடுகின்றார்கள்.

ஆக உடல் நலம் பெற்று உணர்வுகள் வளம் பெற்றால் அந்த வலுப் பெற்றால்
1.செல்வத்தை நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை
2.செல்வம் தானாக வந்து சேரும்

தீமைகளை அகற்றும் நிலைகளை அடைய எனக்கு க் குருநாதர் இந்த உண்மையை உணர்த்தினார். அனுபவபூர்வமாக அறியச் செய்தார்.

தாய்மார்கள் இந்த உலகிலே
1.சக்தி என்ற நிலைகளாகி உணர்வின் தன்மை அதிகமாகி
2.இந்தச் சூரியனை உருவாக்கியதும் இதே சக்தி தான்.

அது தான் “இலட்சுமி நாராயணா” என்பது பெண்பால்தான் – சூரியனை வளர்க்கிறது. பெண்பால் என்று வளர்ந்தாலும் ஸ்ரீதேவி பூதேவி என்று உணர்வின் தன்மை இந்த உடலாக உருவாக்கியதும்  இந்தப் பெண்பால் தான் என்ற நிலைகளை நீங்கள் மறந்திடலாகாது.

நீங்கள் வேதனை என்றோ வெறுப்பு என்றோ பகைமை என்றோ உணர்வுகளை எடுத்தால் அந்த உணர்வுகள் அதிகமாகத்தான் வளரும்.

நன்மை என்ற உணர்வு நம்மிலும் வளராது, நம் குடும்பத்திலும் வளராது, நமக்குள்ளும் அது வளராது. பகைமை உணர்வு தான் பூமியிலும் ஊரிலும் பரவும்.

குரு காட்டிய அருள் வழியில் நீங்கள் தாய்மார்கள் உயர்ந்த சக்தி பெற்றவர்கள் வேதனைப் படுதல் கூடாது வெறுப்படையும் செயல்கள் கூடாது.

1.அருள் ஒளி பெற வேண்டும்
2.நம் வீட்டில் இருள் அகல வேண்டும்
3.மெய்ப் பொருள் காணவேண்டும்
4.அருள் வழியில் நம் குடும்பம் வளர வேண்டும் என்ற உணர்வினை நீங்கள் பெற வேண்டும்.
5.உங்கள் சக்தி அங்கே செயல்படும்.

சிறு குறைகளைக் கண்டாலும் மனம் தாங்காது பெண்பால் அந்த உணர்வின் தன்மை வேதனைப் படும்போது அந்தக் குடும்பமே எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகி விடும்.

அதிகமான பாசமும் பற்றும் இருக்கும். ஆனால் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனை என்ற உணர்வு வந்துவிடுகின்றது. இதைப் போன்ற உணர்வுகள் குடும்பத்திலே வளரப்படும்போது நஞ்சான நிலைகளுக்கு மாற்றிடும்.

நம் குரு காட்டிய அருள் வழியில் ஒவ்வொரு தாய்மார்களும்
1.உங்களுக்குண்டான சக்தியைச் சீராக்குங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும்
4.என் கணவர் உடல் முழுவதும் பரவ வேண்டும் அவர் அருள் ஞானம் பெற வேண்டும்
5.எங்கள் குடும்பத்தில் அருள் ஒளி படர்ந்து இருளை அகற்றிடும் அருள் ஞானக் குடும்பமாக வளர வேண்டும்
6.கருவுற்றிருந்தால் கருவிலிருக்கும் குழந்தைக்கும் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று ஊட்டுங்கள்.

இந்த உலகையே இருளிலிருந்து மீட்டிடும் சக்தி உங்களுக்குத் தான் உண்டு. ஆகவே கணவனின் நிலைகள் கொண்டும் அது வளரும் பருவமல்ல, அது வளரமற்றது.

நீங்கள் அருள் ஞானத்தைப் பெற வேண்டும். என் கணவர் உயர வேண்டுமென்றால் உயர்த்திக் கொள்ளும் நிலைகள் அங்கே உண்டு.

பெண்பால் என்ற நிலைதான் ஒரு செடியானாலும் பெண்பால் என்ற உணர்வு தான் கவர்ந்து கொண்ட நிலைகள் தான் அதன் வித்தினை உருவாக்குகிறது.

பெண்கள் எந்த உயர்ந்த குணத்தை எடுக்கிறார்களோ அது அவர்களுக்குள் வளர்கிறது. கணவன்பாலும் அது வளர்க்கச் செய்கிறது.

அன்பு கலந்த உணர்வைத்தான் வளர்க்க வேண்டுமே தவிர பண்பிழந்த நிலைகளை அல்ல. அதேபோல ஆண்களும் பெண்களை மதித்து நடத்தல் வேண்டும்.

அது உயர்ந்த நிலை. பெண் தாய்க்குச் சமம். நாம் சொல்லும் உணர்வினை அது தன் கருவாக உருவாக்குகிறது. நம்மைப் பார்க்கும் போது நல்லவரென்றால் நல்லது என்று உருவாகிறது. நல்லது என்று சொல்லே இங்கே வருகின்றது.

வேதனை என்ற உணர்வுகளை அங்கே வளர்க்கப்படும் போது மனதிற்கும் அந்த நிலை வரும். வெறுப்பின் உணர்வு வரும் போது  அதை மாற்றி அமைத்திடும் சக்திகளை நாம் மாற்றிட வேண்டும்.

ஆண்கள் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தன் மனைவி பெற்று அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று தன் மனைவிக்கு இந்த உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

பெண்கள் எப்பொழுதுமே ஈர்க்கும் தன்மை – கவரும் சக்தி பெற்றவர்கள்.

ஒரு வேதனை என்ற உணர்வை நுகர்ந்து விட்டால் அவர்கள் அறியாமலே அந்த உணர்வுகள் அவர்களுக்குள் சென்று அவர்கள் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகிறது.

ஆண்கள் மன உறுதி கொண்டு் துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தான் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து
1.தன் மனைவிக்கும் அந்தப் பேரருள் பெற வேண்டும்
2.மன உறுதியும் மன வலிமையும் இருளை அகற்றும் அந்த வல்லமை பெற வேண்டும் என்ற உணர்வை  எடுத்துக் கொண்டால்
3.கணவன் மனைவி உணர்வு இரண்டும்  கலந்து அந்த உணர்வின் தன்மை செயலாக்கம் பெறும்.
4.இது பெண்களின் செவிகளில் பட்ட பின்  உணர்வில் நெகிழ்ந்தும் உயர்ந்த நிலையை அது உருவாக்கிவிடும்.
5.அதன் சொல்லும் நம்மை இனியதாக்கும் நிலையும்
6.நம் வீட்டிற்குள் அருள் ஞானத்தைப் பெருக்கும் நிலையும் வரும்.

பதட்டமும் ஆத்திரமும் நம்மை அறியாமல் உடலை இயக்குவது ஏன்…?

Lord Shiva tandav

பதட்டமும் ஆத்திரமும் நம்மை அறியாமல் உடலை இயக்குவது ஏன்…? 

ஒரு வீணையை வாசிக்கும் பொழுது காதிலே கேட்டவுடன் அந்த இனிமையான நாதம் நம்மை மயக்கச் செய்கின்றது. ஆனால் அதிலே நாதங்கள் பேதங்களாகிவிட்டால் உடனே நம் உடலில் ஒரு விதமான வெறுப்பு ஏற்படுகின்றது.

ஏனென்றால் அந்த நாதங்களை ஒழுங்குபடுத்தி வாசிக்கும் பொழுது நம்முடைய உடல்கள் அசைகின்றது. அதன் மேல் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

வீணையில் நாதத்தின் சுருதிகள் மாறும் பொழுது செவியில் கேட்டவுடன் அந்த உணர்ச்சியின் தூண்டுதலால் அதன் மீது வெறுப்பாகி எழுந்தும் போகச் செய்கின்றது.

உட்கார்ந்து கேட்க முடிவதில்லை.

இதைப் போல் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்தால் வெறுப்பான உணர்வுகளானவுடன் நம் உயிரான ஈசனிடத்தில் பட்டு அந்த வேகமான உணர்வுகள் உடலுக்குள் போனவுடன் நல்ல குணங்களெல்லாம் பதறுகின்றது.

இத்தனை குணங்களையும் தாங்கியிருக்கும் உடல் “பட..பட…” என்று துடிக்கின்றது. பயமோ ஆத்திரமோ வந்துவிட்டால் துடிக்கின்றது. நம் உயிரான ஈசனிடத்தில் படும் பொழுது அவனுக்கு எரிச்சலாகின்றது.

அந்த எரிச்சலான குணம் வெறுப்பாகப் பேசுவதைக் கேட்டு வெறுப்பாக நாம் சொன்னாலும் அந்த உணர்வுகள் உயிரிலே படுகின்றது.

நம் உயிரான ஈசனிடத்தில் அந்த மணம் பட்டவுடன் அவனுக்கு எரிச்சலாகின்றது. எரிச்சலான உணர்வு வரும் பொழுது

1.கண்கள் கோவைப் பழம் போன்று சிவக்கின்றது.
2.காதும் விடைத்துவிடுகின்றது.
3.வாயிற்குள் பார்த்தால் எரிச்சல் “ஆ…” என்கிற நிலை வருகின்றது.
4.உடலுக்குள்ளும் எரிச்சல்.

இந்த உணர்வின் அலைகள் நமக்குள் பாயும் பொழுது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களில் பட்டவுடன் தசைகள் எல்லாம் ஆட ஆரம்பித்துவிடுகின்றது.

நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் நல்லதைச் செய்யும் தெய்வமாக எண்ணுகின்றோம். நம் உடல் சிவம்.

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு சுவாசிக்கின்றோமோ அந்த உணர்வின் சுருதிக்கொப்ப நம் “நாடி நரம்புகள்” அப்படியே துடிக்க ஆரம்பித்துவிடுகின்றது.

நாம் எரிச்சலாக இருக்கும் பொழுது நம் உடல் இப்படியெல்லாம் மாறுகின்றது. ஒரு இடத்தில் நிலை கொள்ள விடுவதில்லை. ஆத்திரம் வந்தவுடன் “ருத்ர தாண்டவம்” ஆரம்பித்துவிடுகின்றது.

நம் நரம்புகள் துடிக்க ஆரம்பித்துவிடுகின்றது. நம் உடலான சிவன் ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்துவிடுகின்றது.

நாம் அல்ல.

கோப உணர்ச்சிகள் வந்தவுடன் ஈசனிடத்தில் பட்டவுடன் இந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

கோப உணர்வுகள் நம் நல்ல குணங்களில் பட்டவுடன் அது பதறுகின்றது. நல்ல குணங்களைத் தாங்கியுள்ள இந்த உடலான சிவம் என்ன செய்கின்றது?
1.அது தானாகவே அசைய ஆரம்பிக்கின்றது.
2.நீங்கள் கட்டுப்படுத்தினாலும் அது முடிவதில்லை.

இதுவெல்லாம் சந்தர்ப்பத்தினால் நிகழக் கூடியது. மனிதனாக இருக்கக்கூடியவர்கள் நாம் இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பிறர் தவறு செய்யும் பொழுது நீ குறைகளைச் செய்கிறாய் என்று சொல்கிறோம். ஆனால் அந்தக் குறையான உணர்வு வரப்படும் பொழுது
1.அந்தக் குறை நம் உடலை ஆட்டிப்படைக்காதபடி
2.நமக்கு ஆத்திரம் வராதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

நமக்கு நாமே நம்மைக் கோபப்படச் செய்யும் குரோதப்படச் செய்யும் வேதனைப்படச் செய்யும் சோர்வடையச் செய்யும் இந்தக் குறைகள் நமக்குள் வராதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

அதைத் தடுத்து நிறுத்துவதற்காகத்தான் மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றோம்.

ஆத்ம சுத்தி என்ற நிலைகளில் அந்த அருள் ஞானிகளின் ஆற்றல்களை நீங்கள் எடுத்து உடல் முழுவதும் பரவச் செய்யும் பொழுது
1.உங்கள் மனக்க கலக்கத்தைத் தடுத்து நிறுத்தும்.
2.மன பலம் கிடைக்கும். மன நலம் கிடைக்கும்.

குறையான உணர்வுகளை நாம் எங்கே காணுகின்றோமோ யார் மீது காணுகின்றோமோ எந்த வழிகளில் காணுகின்றோமோ அந்த நேரத்தில் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அதைப் பார்த்தீர்கள் என்றால் அதன் வீரியம் நம்மைப் பாதிக்காது.

ஆத்ம சுத்தி செய்துவிட்டு நாளை அவர்கள் செய்வது நல்லதாக இருக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் அவர்களுக்குள் உதயமாக வேண்டும் என்று இந்த உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சிடல் வேண்டும்.

இதன் மூலம் நமக்கும் நல்லதாகின்றது. நாம் பாய்ச்சி உணர்வுகளை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்றால் அவர்களுக்கும் நல்லதாகும்.

ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான் என்றால் அர்த்தம் என்ன…?

Sun God with horses

ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான் என்றால் அர்த்தம் என்ன…?

அகஸ்தியர் தன் தாய் கருவிலேயே பெற்று அகண்ட அண்டத்தையும் தன்னுள் நுகர்ந்து ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்.
1.அதன் அறிவைத்தான் செவி வழி ஓதி
2.உங்கள் நினைவினை அங்கே அழைத்துச் செல்வது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வரிசைப்படுத்தி இதனுடன் சுழன்று உணர்வுகளை தனக்குள் சேர்க்கப்படும் பொழுது அகண்ட அண்டத்தில் வருவதையும் உங்கள் உணர்வுக்குள் அது பெறும் உணர்ச்சியின் நிலையை அணுவாக மாற்றும் நிலை கொண்டு அது உருப்பெற்று விட்டால் தன்னிச்சையாக அது நுகரும் சக்தி பெறுகின்றது.

உங்களால் “நினைத்த நேரத்தில்” அகண்ட அண்டத்தினையும் அதன் செயலாக்கங்களையும் காணமுடியும்.

அதில் வெளிப்படும் உணர்வில் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் சேர்த்துப் பகைமை உணர்வு உங்களுக்குள் வராது பேரின்ப உணர்வினை உங்களுக்குள் உருவாக்க முடிகின்றது.

எமது அருள் குரு அருளால் கிடைத்தது.  குரு அருள் பேரருளைக் கவர்ந்து அவர் உணர்வு என்னை பக்குவப்படுத்தியது போல் உங்களைப் பக்குவப்படுத்துகின்றேன்.

இதில் எவர் ஒருவர் தொடர்ந்து வருகின்றாரோ அவர் இவ்வாழ்க்கையைச் சீர்படுத்தி வாழவும் அடுத்துச் சீராக என்றும் பிறவியில்லா நிலைகளை அடையவும் இது உதவுகின்றது.

குறுகிய காலமே இருக்கும் இந்த உடலுக்கு வலுவைச் சேர்ப்பதைக் காட்டிலும் உயிருக்கு அருள் ஒளி என்ற வலுவை உருவாக்குதல் வேண்டும்.  இதுதான் வாழ்வின் கடைசி எல்லை.

ஒளியின் உணர்வாக உருவாக்கப்பட்டது உயிர். ஒளியின் உணர்வாக நம் அணுக்களை ஆறாவது அறிவின் துணை கொண்டு உருவாக்கக் கற்றுக் கொள்வதுதான் “பிரம்மாவைச் சிறை பிடித்தான்” என்பது.

உயிர் நுகர்ந்ததை உருவாக்குகின்றது. அதே சமயத்தில் அந்த உணர்வுகள் நமக்குள் அணுவாகும் பொழுது உயிரைப் போன்றே உணர்வின் தன்மை ஆக்கப்படும் பொழுது நல்ல ஒளியின் உணர்வை உருவாக்குகின்றது.

இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால் ஒளியின் தன்மை கூடுகின்றது.

சற்று சிந்தனை செய்து பாருங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து இது  தவறு இது கெட்டது என்று உணர்வினை நுகர்ந்து நுகர்ந்து இதனைக் கலந்து கலந்து இந்த உடலினை உருவாக்கியது உயிர்.

1.ஈசனாக இருந்து அவனே உருவாக்கினான்
2.கடவுள் என்ற நிலையில் உள் நின்று இயக்கிக் கொண்டு உள்ளான்,
3.நாம் எதனை நுகர்ந்தோமோ அவை நம்முள் நின்று அதனின் துணை கொண்டு அங்கே இயக்குகின்றது.
4.அவனல்லாது உணர்வுகள் இயங்குவதில்லை.
5.அவன் தான் உருவாக்குகின்றான்.
6.ஆகவே உணர்வின் தன்மையை ஒளியாக்க வேண்டும்.

நம் குரு என்னை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றார். அவர் காட்டிய அருளின் நினைவைப் பதித்து உங்கள் கண்ணின் நினைவை என்னிடத்தில் செலுத்தினாலும் “நீங்களும்… அண்டத்தில் மிதக்கின்றீர்கள்”.

அதனின் உணர்வை நினைவை கொள்ளும் பொழுது அதன் அருளை நீங்களும் பெறமுடியும்.

அண்டத்திலுள்ளது இந்த பிண்டத்திலும் உண்டு அகண்ட அண்டத்தைத் தெளிவுபடுத்தியவன் அகஸ்தியன்.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமானான். அவன் அகண்ட அண்டத்தில் வருவதை ஒளியாக மாற்றுகின்றான்.

அதன் உணர்வின் தன்மை இந்தப் பிண்டத்திற்குள் (நமக்குள்) சேர்க்கப்படும் பொழுது  அகண்ட அண்டத்தில் வருவதையும் ஒளியாக மாற்றிடும் திறன் நீங்கள் பெறவேண்டும்.

நீங்கள் சிறிதளவே இருப்பினும் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள்ளும் பரவுகின்றது. இந்த பூமியிலும் பரவுகின்றது. அதன் உணர்வின் நினைவு கொண்டு கவருங்கள்.

சூரியனில் இருந்து வரக்கூடிய நிறங்கள் ஆறு ஏழாவது ஒளி. இதைத்தான் “சூரிய பகவான் வருகின்றான்…” என்று வேக ஓட்டத்தைக் காட்டி ரதத்தைக் காட்டியது.

அந்த ஏழு கலர் ஓட்டத்தை நமக்குள் எடுத்தால் நம்மை அந்த உலகத்திற்கு இட்டுச் செல்லும்.

மனிதனான ஆறாவது அறிவின் நிலைகள் வரும்போது… “ஏழாவது”  ஒளியின்  நிலைகள் அடைதல் வேண்டும்.

1.இதுதான் “ஈரேழு லோகத்தை வென்றவன் விண் சென்றான்”  என்பது.
2.அவன் தனி உலகமாக ஒளியின் உணர்வாக மாற்றுகின்றான்.
3.அவன் ஏகாந்த நிலைகள் பெறுகின்றான்.

சூரியனில் இருந்து வரக்கூடிய கலர்கள் ஆறு. ஒளி ஏழு. மனிதனின் அறிவு ஆறு மற்றதைத் தெளிந்து உணர்ந்து ஒளியாக மாற்றுவது ஏழு.

காவியங்களில் ஈரேழு லோகத்தையும் தேடிப் பார்த்தேன் என்று சொல்லுகின்றனர். மனிதனுக்குள் உணர்வுக்குள் இந்த ஏழு லோகத்திற்குள் தேடி நாம் காணுதல் வேண்டும்.

மேலே ஏழு என்ற உணர்வுகள் மனிதனுக்குள் உண்டு.  நமக்குள் தேடினால் உண்டு.

பேரருள் என்ற உணர்வினை எடுத்து நமக்குள் பேரொளியாக மாற்ற வேண்டும். அந்த உணர்வின் தன்மையை உங்களில் உருவாக்கத்தான் இந்த நிலை.