ஒவ்வொரு நொடியிலேயும் உயர்ந்த சக்தியைப் பெறச் செய்யும் பயிற்சி…!

Good and bad segregation

ஒவ்வொரு நொடியிலேயும் உயர்ந்த சக்தியைப் பெறச் செய்யும் பயிற்சி…!

 

ஒரு விஷச் செடியின் அருகிலே இருக்கும் ரோஜாப்பூ தன் மணத்தின் வலிமை கொண்டு அந்த விஷச் செடியின் மணத்தைத் தனக்குள் அணுகாது தடுத்து நிறுத்தி விடுகிறது.

இதைப்போல தான் அருள் ஞானிகள் தீமையைத் தனக்குள் அணுக விடாது நறுமணத்தின் மகிழ்ச்சியின் நிலைகள் உணர்வாக ஒளிகளாக ஒளியாக மாற்றிக் கொண்டு இன்றும் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகள் நமக்கு முன் படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் அடிக்கடி கவர்ந்து உங்கள் உடலுக்குள் சக்தி வாய்ந்த மணங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது அந்த மணத்தின் உணர்வின் செயலாக நல்ல எண்ணங்கள் நம்மை இயக்கி நம் சொல்லின் தன்மை கேட்போருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும். நாம் எடுத்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள்ளும் மகிழ்ச்சியை ஏற்படச் செய்யும்.

இத்தகைய நிலைகளை நாம் உருவாக்க உருவாக்க தீமைகளைக் கண்ணுற்றுப் பார்த்தாலும் ரிமோட் கண்ட்ரோல் (REMOTE CONTROL) போல
1.அந்தத் தீமைகள் நம்மை அணுகாது
2.அது அறிந்திடும் ஆற்றலாகத் தான் பயன்படும்
3.ஆக தீமைகள் நமக்குள் சேராது தடுக்கும் ஆற்றலைப் பெருகச் செய்யும்… உங்களை நம்புங்கள்…!

அந்த நல்ல சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன். இந்த உபதேச உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து அருள் ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றேன்.

அதனின் வலுவின் துணை கொண்டு உங்களுக்கு முன் படர்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷியின் உணர்வின் ஆற்றலை நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அதைப் பருக முடியும். ஆற்றல் மிக்க சக்தியாக வளர்த்துத் தீமைகள் அகற்றும் நிலையைப் பெற முடியும்.

ஒரு வித்தினை ஊன்றி விட்டால் அது தனது உணர்வின் வலுக் கொண்டு அந்தச் செடியின் சக்தி வளர்கின்றது. அதைப் போல ஒருவர் உங்களை ஏசிவிட்டால் அவர்களைத் திரும்பத் திரும்ப எண்ணும் போது கொதிப்பும் கோபமும் உங்களுக்குள் எழுகின்றது,

பின் உங்கள் நல்ல காரியங்களைச் செயல்படுத்த முடியாது அந்தக் கொதிப்பின் தன்மை கொண்டு உங்களுக்குள் நோயாகவும் விளைகின்றது. ஆகையினால் அந்த நோயை நீக்க அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

உங்களுக்கு எத்தகைய துன்பங்கள் ஏற்பட்டாலும்… நோய்கள் வந்தாலும்… உங்கள் எண்ணத்தால் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்களை அறியாது சேர்ந்த தீமைகள் நீங்க வேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் வீடு முழுவதும் படர வேண்டும்.
6.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெற்று மன பலம் மன வளம் பெற வேண்டும்.
7.எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் வசிஷ்டரும் அருந்ததி போல ஒற்றுமையாக வாழ்ந்திடும் நிலைகள் வேண்டும்.
8.எங்கள் தொழில் வளம் பெருக வேண்டும்.
9.எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்.
19.எங்கள் விவசாய நிலங்களில் பயிர்கள் நல்ல நிலைகள் விளைந்திட வேண்டும்.
11.எங்கள் விவசாய நிலங்களில் வேலை செய்வோர் அனைவரும் மன பலத்துடன் இருக்க வேண்டும்.
12.அவர்கள் பயிரிடும் பயிர்கள் வலுவான நிலைகள் கொண்டு வளர வேண்டும்.
13.அதிலே விளைந்ததை உணவாக உட்கொள்பவர்ளும் அதைப் பயன்படுத்தும் அனைவரும் மன பலத்துடன் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்ற
14.இந்த உணர்வுகளை எல்லாம் எப்பொழுது நீங்கள் எடுக்கின்றீர்களோ
15.ஒவ்வொரு நொடியிலேயும் அந்த அருள் ஆற்றல் மிக்க மகரிஷியின் அருள் சக்தியை உங்களுக்குள் பற்றுடன் பற்றி வாழ்கின்றீர்கள்.

இந்தப் புவியில் ஏற்படும் தீமைகளை எல்லாம் பற்றற்றதாக மாற்றி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திட இது உதவுகிறது.

ஆகவே தீமையையே எண்ணாது எந்தத் தீமையும் நமக்குள் வராது
1.மீண்டும் மீண்டும் உயர்ந்த நிலைகளை நாம் எண்ணி
2.இந்த உணர்வலையைப் பரப்பப்படும் போது தான்
3.நமக்குள் உயர்ந்த சக்தியைப் பெற முடியும்.

கார்த்திகை நட்சத்திரம் வெளியேறியதால் பூமிக்குள் ஏற்படும் மாற்றங்கள்

Maharishi doctor

கார்த்திகை நட்சத்திரம் வெளியேறியதால் பூமிக்குள் ஏற்படும் மாற்றங்கள்

 

நம்முடைய சூரியக் குடும்பத்திலிருந்து கார்த்திகை நட்சத்திரம் விலகிப் போய்விட்டது. அதனால் நம் பிரபஞ்சத்தில் அறிவின் ஞானம் சூனியமாகிப் போய்விட்டது. ஏனென்றால்
1.ஒன்றுடன் ஒன்று மோதி… அந்த உணர்வின் தன்மை
2.”அறிவு ஒளியாக..” வருவதெல்லாம் குறைந்து விட்டது.

கார்த்திகை நட்சத்திரம் போல ஏனைய சில நட்சத்திரங்களும் விலகும் பருவத்தில் இருக்கிறது. இப்படி விலகி விட்டால் நம் சூரியக் குடும்பத்தில் மங்கல் ஏற்பட்டுவிடும்.

சில ஆயிரம் ஆண்டுகள் செல்லப்படும் போது நம் சூரியன் தனித்துப் பிரிந்து விடும். நம் பூமிக்குள் நீர் வளம் அதிகமாகிவிடும். இந்த எடையின் தன்மை கூடும் போது ஈர்க்கும் தன்மையாகி சூரியனை விட்டு விலகிச் செல்லும்.

சூரியனை விட்டு விலகினால் அப்பொழுது பூமி முழுவதும் பனிப்பாறைகளாக (வியாழன் கோள் போல்) மாறும். அதற்குள் இங்கே இருக்கக்கூடிய உயிரினங்கள் தாவர இனங்கள் அனைத்தும் பூமிக்குள் (பனிகளுக்குள்) ஒடுங்கி விடும்.

ஐஸ் (பெட்டிக்குள்) பாறைகளுக்குள் வைத்து மறுபடியும் சுழலும்போது சிதறுண்டு போகும் போது உயிரணுக்கள் எல்லாம் அடுத்த பிரபஞ்சத்திற்குள் பரவும்.

நம் உயிரான அணுக்கள் அப்படிப் பரவப்போகும் போது அது எடுத்துக் கொண்ட… நாம் நுகர்ந்த உணர்விற்கொப்ப… வேறு எங்கேயோ போய் உருவாக்கும். இதைத் தான் நாம் பெற முடியும்.

இப்படிப்பட்ட கால கட்டத்தில் இந்த உடலில் நாம் இப்பொழுது நல்ல நினைவுடன் இருக்கும் பொழுதே குறுகிய காலத்திற்குள் நாம் ஒளி நிலை பெற வேண்டும்.

1.ஏனென்றால் இந்த உடலில் எத்தனை நாள் நாம் வாழுகின்றோம் என்று தெரிகிறது. (அறுபதே எழுபதோ அவ்வளவு தான்…!)
2.நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக வாழ வேண்டும்…! என்று தான் கஷ்டப்பட்டுச் சம்பாரிக்கின்றோம்.
3.அதைச் செலவழிக்கவும் செய்கிறோம். ஆடம்பர பொருளுக்காகவும் செலவழிக்கின்றோம்.

ஆனால் இது எல்லாம் நமக்கு உதவியாக இருக்கிறதா…?

சம்பாதித்து வீடு சொத்து பணம் பொருள்கள் மனைவி மக்கள் எல்லாமே அழகாக வைத்திருந்தாலும் கூட
1.நமக்கு நோய் என்ற உணர்வு வந்தால் என்ன செய்கிறோம்…?
2.அதை எல்லாம் தள்ளி விட்டுத் தூக்கித் தூக்கி எறிகிறோம்.
(உடல் சரியில்லை என்றால் நல்ல உணவை உட்கொள்ளும் எண்ணமோ சொத்தையும் சுகத்தையும் உடைகளையும் நகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறதா…? இல்லையே…!)
3.அப்போது எல்லாவற்றையும் தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணம் தான் வருகிறதே தவிர “நல்லா இருக்க வேண்டும்…!” என்று அது நமக்கு உதவுகிறதா…?

அதே போல் நாம் நன்றாகத் தான் இருக்கிறோம். அடுத்தாற்போல யாராவது வந்து நம்மை ஏளனமாகச் சிரித்து கேவலப்படுத்தினால் என்ன நினைக்கின்றோம்…?

பார்…! என்னை எப்படிக் கேவலப்படுத்துகின்றான்… இப்படிக் கேவலப்படுத்துகின்றானே…! என்ற இந்த உணர்வைத் தான் எண்ணுகின்றோம்.

அந்த உணர்வை எடுத்தவுடனே நாம் நன்றாக இருந்ததை மறந்து விட்டு அவர் மேல் கோபமும் வெறுப்பும் வேதனையும் ஆகி அவர்கள் எதை எதை எல்லாம் சொல்கிறார்களோ… அதை நமக்குள் விளைய வைக்கின்றோம். அதைத் தான் பழகி வைத்திருக்கின்றோம்.

அதுதான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்குகின்றார்கள்…!

1.அவர்கள் என்னமோ சொல்லி விட்டுப் போகிறார்கள்…
2.அவர்களுக்கு நல்ல புத்தி வரட்டும்…
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்து
4.அவர்கள் சொல்லும் தீமை நமக்குள் வராது தடுக்கப் பழக வேண்டும்.

அதனால் தான் ஆறாவது அறிவைச் “சேனாதிபதி…” என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள். அந்த அருள் ஞானத்தை நாம் பெருக்கப்படும் போது அது நமக்குப் பாதுகாப்பாக வரும்.

அருள் ஞானத்தை பெருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? நாம் எந்த மகரிஷிகளை எண்ணுகின்றோமோ அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிருடன் நினைக்கப்படும் போது உயிர் அதை உருவாக்குகிறது.

அது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது. அறிந்துணர்ந்து செயல்படும் அந்தச் சக்தியைக் “கார்த்திகேயா…!” என்று காட்டுகின்றார்கள்.

வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் தீமையின் உணர்வின் தன்மையாக நம்மை மாற்றும். அதைத் தடுக்க அருள் ஒளியை உருவாக்கும் அணுவை நமக்குள் பெருக்கினால் அது நம்மை காக்கும்…!

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

முருகா… அழகா…! என்று சொல்வதன் உட் பொருள் என்ன…?

Muruga murugu

முருகா… அழகா…! என்று சொல்வதன் உட் பொருள் என்ன…?

 

ஒரு சமயம் ஆன்மீகப் பெரியவர் ஒருவரிடம் விநாயகருக்கு முன்னாடி எலியைப் போட்டு இருக்கின்றார்கள். அதற்கு என்ன அர்த்தம்…? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டேன்.

முருகனுக்குப் முன்னாடி மயிலைப் போட்டு வைத்து காலடியில் பாம்பைப் போட்டு வைத்து இருக்கிறது. இது என்னங்க..? என்றும் நாம் (ஞானகுரு) கேட்டேன்.

கேட்டவுடனே அந்தப் பெரியவர் எதை எதையோ சொல்லிக் கொண்டு வந்தார். தான் படித்த பாட நிலைகளைச் சொல்லிக் கொண்டே வந்தார்.

சுருக்கமாகச் சொல்லுங்கள் எனக்கு அர்த்தம் ஆகவில்லை. நான் படிக்காதவன்.. நீங்கள் படித்தவர்…! என்று சொன்னேன்.

அவரால் ஒன்றும் விளக்கமாகச் சொல்ல முடியவில்லை. அப்புறம் நான் விளக்கத்தைச் சொன்னேன்.

ஒரு வேதனைப்படுபவனை நான் பார்க்கின்றேன். பார்த்து அந்த வேதனையை நான் நுகர்கின்றேன். சுவாசித்த உடனே உயிர் அதை என்ன செய்கிறது…?

என் உடலுக்குள் வேதனையை உருவாக்கும் அணுவின் கருவாக உருவாக்குகிறது. கரு முட்டையாகி வெடித்து அந்த அணு உருவான பிற்பாடு என்ன செய்கிறது…?

உருவான அந்த அணு மீண்டும் வேதனைப்படச் செய்யும் உணர்வையே உணவாகத் தனக்குள் சேர்க்கிறது. அதன் வழியில் என்னை வேதனைப்படும்படியாகத் திருப்பித் திருப்பி எண்ணச் செய்கிறது.

வேதனை வேதனை என்று சுவாசித்து உடலுக்குள் வளர்த்துக் கொண்ட நிலையில் அதனின் கணக்கு அதிகமான பிற்பாடு எங்கே போகிறோம்…!

உடல் சிவமாகின்றது. வேதனையான உணர்வின் கணக்குக் கூடிய நிலையில் அடுத்து நம்மைப் பாம்பாக பிறக்கச் செய்கிறது நம் உயிர்.

1.அவன் இல்லை என்றால் அணுவும் அசையாது.
2.அதாவது இந்த உயிர் என்ற ஈசன் இல்லை என்றால் உடலான ஈசன் என்னாகும்…?
3.ஒன்றும் செய்ய முடியாது.

மூஷிகவாகனா அதாவது எலியை வாகனமாகப் போட்டுள்ளார்கள். இப்போது நான் உங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தேன். அதைச் சுவாசித்தேன். உயர்ந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்று எண்ணி வந்தேன்.

அந்த உயர்ந்த ஞானத்தைக் கேட்டு உயர்ந்த வழியில் நான் சிந்தனை செய்தால் அது கணங்களுக்கு (உடலில் உள்ள குணங்களுக்கு) அதிபதியாகிறது.

விநாயகர் அருகிலே வேப்ப மரத்தை வைத்தார்கள் என்கிற போது மனித வாழ்க்கையில் ஒருவன் சிரமப்படுகின்றான் என்று பார்க்கின்றோம். அவன் படும் வேதனையை நுகரப்படும் போது அது மாறி நமக்குள் தாயாக வந்து விடுகிறது.

நம்முடைய நல்ல குணத்தைக் கொண்டு தான் மற்றவர்களைப் பார்க்க வேண்டும். ஆனால் அந்த நல்ல குணத்தைக் கொண்டு நாம் பார்க்கும் போது பிறர் படும் வேதனையான உணர்வுகள் அந்த அணுக்கள் நம் உடலுக்குள் புகுந்தவுடனே என்ன செய்கிறது…?

1.பூமிக்குள் (தரையில்) எலி எப்படி வங்கு போடுகிறதோ இதே மாதிரி
2.நம் உடலுக்குள் வந்த அந்த வேதனைபப்டும் அணு நம் நல்ல குணத்தை எல்லாம் வங்கிட்டு விடுகின்றது.

சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் “ஓ…” என்று இயங்கினாலும் அந்த வேதனைப்பட்ட உணர்வுகள் இதற்குள் சேரத்தவுடனே “ஓமுக்குள் ஓ…ம்” ஆகின்றது.

ஓ…ம் என்று ஜீவ அணுவாக உடலாக ஆனது. ஆனால் அதை அடக்கக்கூடிய வலிமை கொண்ட ஓங்காரமாக அந்த வேதனையான அணு இங்கே வருகிறது

1.இந்த ஓங்காரத் தன்மை வந்தவுடனே
2.நம்முடைய நல்ல சுருதிகள் குறைகிறது.
3.அப்போது அதை அடக்கி ஆளும் அந்த அணுவின் தன்மையாக வேதனை வருகிறது.

நம் உயிர் ஓ என்று இயக்கிக் கொண்டிருந்தாலும் நாம் எண்ணியதை எல்லாவற்றையும் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றுகிறது.

ஓமுக்குள் ஓமாகி… அந்த ஓமுக்குள் ஓ…ம் வேதனை வரப்போகும் போது உடலிலே எப்படி மாற்றம் ஆகிறது…? என்பதைக் காட்டுவதற்குத் தான் எலியை போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

புறத்திலிருந்து நாம் சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் குடி புகுந்து நல்ல குணங்களை வங்கு போட்டுத் தன் இருப்பிடமாக்குகிறது என்பதைச் சாதாரண மனிதனும் புரிந்து கொள்வதற்காக அப்படிக் காட்டினார்கள் அன்றைய ஞானிகள்.

அதாவது நாம் நல்ல குணம் கொண்டு வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அந்த வேதனையை நுகர்ந்தால் நம் நல்ல குணத்தை அது வங்கு போட்டுக் குடி கொள்ளும் என்றனர் ஞானியர்.

அந்த அரத்தத்தைப் புரிந்து கொள்ளாமல் எலிக்கு அபிஷேகம் செய்து எலிப் பாடல்கள பாடி விநாயகரைத் தூக்கி அவன் சுமந்தான் என்ற நிலையில் அத்தனை பெரிய சரீரம் எலி மேல் உட்கார்ந்தால் என்ன ஆகும்…?

நசுங்கிப் போகும் அல்லவா…! இதையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டுமா இல்லையா…?

வேதனை உணர்வு நுகர்ந்த பின் அந்த விஷத்தின் தன்மை நம்மை ஆட்கொள்கின்றது. அதை அடக்க என்ன செய்ய வேண்டும்…?
1.உடனே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
3.உடலுக்குள் பல முறை செலுத்தப்படும் போது அந்த வேதனையை ஒடுக்குகின்றது.

ஏனென்றால் நஞ்சினை அடக்கி அதை ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவர்கள் மகரிஷிகள். அவர்கள் அருள் சக்தியை எடுக்க்கப்படும் பொழுது நம் உடலுக்குள் அறியாது வந்த நஞ்சை அடக்குகின்றது.

அதற்கு அடுத்து யாரைப் பார்த்து நாம் வேதனைப்பட்டோமோ அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் நன்றாக வேண்டும் என்ற எண்ணத்தை நாம் எண்ணுதல் வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நீ பெறுவாய்…
2.நோயிலிருந்து விடுபடுவாய்.
3.உனக்கு நோய் இல்லை நீ நன்றாக இருப்பாய் என்று அவரிடமும் சொல்லாகச் சொல்ல வேண்டும்.

இப்படிச் சொல்லப்படும் பொழுது நமக்குள்ளும் மகிழ்ச்சி தோன்றுகிறது. அவரையும் மகிழச் செய்யும் உணர்வாக வருகிறது.
1.அப்போது அந்த விஷம் நமக்குள் ஒடுஙகுகின்றது.
2.அவரும் அதை எண்ணினால் விஷம் அங்கேயும் ஒடுங்குகின்றது.

கருணைக் கிழங்கு இருக்கிறது என்றால் மாடு அதை முகர்ந்து பார்த்து விட்டு விலகிப் போய்விடுகிறது. ஆனால் மனிதனான நாம் என்ன செய்கிறோம்…?

அதை வேக வைத்து விஷத் தன்மையை ஒடுக்குகிறோம். புளியைக் கரைத்து ஊற்றினோம் என்றால் விஷத்தின் அரிப்பை ஒடுக்குகின்றது. மிளகாயைக் கலந்த பின் உணர்ச்சியைத் தூண்டுகிறது. உப்பு கைப்பாக இருக்கிறது. இதையும் சேர்த்தவுடனே அங்கே சுவை வருகின்றது.

விஷமான கருணைக் கிழங்காக இருந்தாலும் அதை எல்லாம் முறித்து விட்டுச் சுவையாக உருவாக்குகின்றோம். மாற்றி அமைக்கின்றோம்…!

முருகனுக்கு “முருகு…” என்று ஒரு பேர் உண்டு. ஏனென்றால் மனிதனான பின் மாற்றி அமைக்கும் ஆறாவது அறிவின் சக்தியை முருகு என்று காட்டுகின்றார்கள் ஞானிகள். இதெல்லாம் சந்தர்ப்பம்.

அடுத்தாற்போல அந்தக் கருணைக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால் ருசி வருகின்றது. நமக்குள் மகிழ்ச்சி வருகிறது. ஆகவே நஞ்சை ஒடுக்கி அழகுபடுத்தும் நிலையாக வருகின்றது. அதற்குத்தான் மயிலின் காலடியில் பாம்பைப் போட்டுள்ளார்கள்.

முருகா… அழகா…! என்று காரணப் பெயர் வைத்து இதை நமக்குத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

நம்முடைய முன்னோர்கள் சொன்ன முறைப்படி தீய வினைகளை நாம் கரைக்கின்றோமோ…?

Lord vinayar

நம்முடைய முன்னோர்கள் சொன்ன முறைப்படி தீய வினைகளை நாம் கரைக்கின்றோமோ…?

 

விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணில் செய்த விநாயகரை வைத்துத்தான் கும்பிடுகின்றோம். அதைப் பார்த்தால் அன்றைக்கு நல்லா கிராக்கியாக இருக்கும்.

மாலையைப் போடுகிறோம். ஆடம்பரப் படுத்துகின்றோம். வாழை மரத்தை வைக்கின்றோம். மஞ்சள் கும்பம் வைக்கின்றோம் இனிப்பை வைக்கின்றோம். கரும்பை வைக்கின்றோம்.

எல்லாவற்றையும் வைத்துச் சமைக்கின்றோம். பூஜை செய்கிறோம். ஆடுகிறோம் பாடுகிறோம். கடைசியில் அந்த விநாயகரைக் கொண்டு போய்த் தண்ணீரில் கரைக்கின்றோம்.

1.ஞானிகள் சொன்ன தத்துவம் வேறு. நாம் சொல்வது வேறு.
2.எல்லாம் கும்பிட்ட பின் களிமண்ணில் செய்த அந்த விநாயகரைக் கடலில் கொண்டு போய் கரைத்து விடுகிறோம்.
3.ஏன் எதற்கு என்று சிந்திக்கின்றோமா…?

விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு அதிகாலையில் நாம் என்ன செய்ய வேண்டும்..? துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய பேரருள் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக நம் பூமிக்குள் பரவச் செய்கின்றது.

காலையில் விழித்தவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தன் மனைவிக்கு கிடைக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். மனைவியும் தன் கணவருக்குப் பெற வேண்டும் என்று இந்த உணர்வை வலு பெறச் செய்ய வேண்டும்.

மகரிஷியின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர வேண்டும். நாங்கள் யாரை எல்லாம் சந்தித்தோமோ பேசினோமோ அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும். அங்கே அருள் ஒளி படர வேண்டும். அவர்கள் குடும்பத்தில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணிப் பகைமை உணர்வை நமக்குள் நுழையாத படி முதலில் இதைச் செய்ய வேண்டும்.

நம் பிள்ளைகளை நினைத்து அந்த மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற்று அருள் ஞானம் பெற வேண்டும் என்று அன்றைக்கு எண்ண வேண்டும்.

ஆனால் அதை விடுத்துவிட்டு விநாயகர் சதுர்த்தி தினத்திலேயும் “இப்படி இருக்கிறார்களே… உன்னை நான் வணங்கினேனே…!” என்று இப்படி வேதனைகளை எண்ணினால் நமக்குள் அந்த வேதனை தான் வளரும்.

ஆகையினாலே பிள்ளைகள் அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் சொல்ல வேண்டும்.

அன்றைக்குத் தினத்தில் பிள்ளைகளும் என்ன நினைக்க வேண்டும்…?

எங்கள் தாய் தந்தையரின் அருளால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அம்மா அப்பா அருளாசி நாங்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ண வேண்டும்.

1.குடும்பத்தில் சந்தர்ப்பத்தில் பகைமைகள் உண்டானாலும்
2.விழாக்கள் போன்ற காலத்திலேயாவது எல்லோரையும் ஒன்றாக இணைத்து
3.உணர்வின் தன்மையைப் பக்குவப்படும் நிலைக்கு ஞானிகள் வைத்தார்கள்.

பொதுவாகச் சொன்னால் பிள்ளைகள் கேட்க மாட்டார்கள். அன்றைக்கு அந்த விழாக் காலத்தில் சாமி கும்பிடும் போதாவது இந்த மாதிரி எண்ணி அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது அந்த அருள் உணர்வு வளர்கிறது.

அருள் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அறியாத இருள்கள் நீங்குகிறது. அம்மா அப்பா மேலிருக்கும் வெறுப்பின் தன்மை மறைகின்றது. தாய் தந்தையரின் நல்லாசிகளைக் கவரும் சக்தி வருகிறது.

1.நமக்குள் இருக்கும் பகைமை வெறுப்பு போன்ற உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைந்தவுடனே
2.யாரும் இங்கே இழுக்கும் சக்தி இல்லை என்றால் அது ஒதுங்கி நிற்கும்.

காலையில் ஆறு மணிக்கு எல்லாம் சூரிய ஒளி வருகிறது. வந்தவுடனே இழுத்துக் கொண்டு மேலே சூனிய மண்டலத்திற்குக் கொண்டு செல்கிறது. நம் பூமியில் அந்தச் சக்தி இருப்பதில்லை.
1.அப்போது நாம் எண்ணினாலும் புதிதாக உருவாவதில்லை.
2.இது கிடைக்காது. இது மயங்கி போகும்.
3.ஆக தீமையான வினைகளுக்குச் சாப்பாடு கொடுக்காமல் இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தொடர்ந்து இந்த எண்ணங்களை எடுக்கப்படும் போது நமக்கு முன்னாடி இருக்கும் இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலிலுள்ள ஜீவான்மாக்களும் தீமைகளை நுகர்வதில்லை. அதுவும் சுத்தமாகின்றது. நம் உயிராத்மா ஒளியாக மாறுகின்றது.

ஞானிகள் விநாயகரைத் தண்ணீரில் (கடலில்) கரைக்கச் சொன்னதன் உட்பொருளே ஒவ்வொருவருக்குள்ளும் அறியாது சேர்ந்த தீய வினைகளைக் கரைப்பதற்குத்தான்…!

சோர்வாக இருக்கும் பொழுது மற்றவர்களின் மகிழ்ச்சியை நம்மால் தாங்க முடியவில்லை ஏன்…?

soul-protections

சோர்வாக இருக்கும் பொழுது மற்றவர்களின் மகிழ்ச்சியை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏன்…?

 

ஆகாதவர்களைப் பார்த்தவுடனே நமக்குக் கோபம் வரும். போகிறான் பார்…! இவன் தான் என்னை ஏமாற்றினான்…! என்ற உணர்ச்சிகள் நம்மை அறியாமலே இயக்கும்.
1.ஏதாவது நல்ல காரியங்கள் செய்து கொண்டிருந்தாலும்
2.அவரைப் பார்த்ததுமே இத்தகைய உணர்வுகள் வரும்.

இது எதனால் வருகிறது…?

சில பேர் என்ன செய்வார்கள்…? அவர்களுடைய உணர்விற்குத் தகுந்த மாதிரி ஒரு கம்பீர நடையாக இருக்கும். கம்பீரமாக மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு அவர்கள் நடந்து போவார்கள்.

ஆனால் நம்முடைய உணர்வு சோர்வடைந்திருக்கும் பொழுது அவரைப் பார்த்தோம் என்றால் என்ன சொல்வோம்…? நடையைப் பார்…! என்னத்தைக் கண்டான்… என்று தெரியவில்லை…! என்போம்.

அவருடைய கம்பீரமான நடையைப் பார்த்தவுடனே நம்மை அறியாமலே அந்த வெறுப்பும் வேதனையும் சோகமும் வரும். அதாவது தாங்க முடியாமல் அந்த உணர்ச்சிகள் இயக்கும்.

அதிகமான ஒரு சுமையைத் தூக்கித் தலையில் வைத்தால் தாங்க முடியாமல் இருக்கிறோம் அல்லவா. அதே மாதிரி அவருடைய மகிழ்ச்சி நம் உடலில் நல்ல அணுக்களுக்கு தாங்க முடியாது போய்விடுகிறது.

அப்போது நாம் நுகரும் உணர்வுகள் பொறாமையாக வளர்ந்து விடுகின்றது. ஆனால் பொறாமை உணர்வை வளர்த்து விட்டோம் என்றால் அடுத்து என்ன தான் அங்கே நல்லதைச் சொன்னாலும் நம் வாயிலே வேறு விதமாகத்தான் வார்த்தைகள் வரும்.

யார் யாரை ஏமாற்றினாரோ…? என்னென்ன செய்தாரோ…? அதனால் தான் இப்படிக் கம்பீரமாகப் போகிறான் போல…! என்று அறியாமலே இந்த மாதிரி உணர்வுகளைச் சேர்த்து நம் உடலுக்குள் அணுக்களை வளர்த்து விடுகிறோம்.

ஆகவே நாம் எண்ணும் உணர்வுகள் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது போல் நமக்குள் அந்தத் தாங்க முடியாதபடி ஆகிவிடுகின்றது.

ஆனால் அந்த மாதிரி உணர்ச்சிகள் நமக்குள் தோன்றுகிறது என்றாலும் அது நாமல்ல. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை நம் உடலில் சில சிரமங்களும் பக்குப்பட முடியாத நிலைகளும் அவ்வாறு இயக்கிவிடுகின்றது.

1.அதாவது நம் குழந்தை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
2.கடன் வாங்கியவன் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றுகின்றான் என்ற
3.இதைப் போன்ற உணர்வுகள் தொடர்ச்சியாக இயக்கினால் நம்மை அறியாமலே அந்தச் சலிப்பும் சஞ்சலமும் வரும்.
4.அந்த நேரத்தில் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்ற உணர்வு பட்டவுடனே
5.நம்மால் அதைத் தாங்க முடியாதபடி எதிர் நிலையாகின்றது.
6.அந்த அணுக்களால் இந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா..!

ஆகவே இதைப் போன்ற சந்தர்ப்பங்களால் தீமையான நிலை உருவாகிறது என்றால் “ஈஸ்வரா…! என்று தடைப்படுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் சேர்க்கப் போகும் போது இங்கே உருவாக்கி விடுகிறது.

1.விவசாயப் பண்ணைகளில் (AGRICULTURE) எப்படி வித்தின் தன்மை
2.அந்தச் செல்களை கொஞ்சம் மாற்றி அமைத்துப் புது வித்துகளை உருவாக்குகின்றார்களோ அது போல்
3.நமக்குள் மற்ற உணர்வுகள் பதிவாகும் போதே
4.அந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் இணைத்திடல் வேண்டும்.

கோபமோ ஆத்திரமோ பயமோ வேதனையோ எதுவாக இருந்தாலும் அந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லி இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

உதாரணமாக இரண்டு பேர் சண்டை போட்டு கொள்கிறார்கள் என்று பார்த்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்துக் கொண்டு அவர்களுக்குள் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வு வர வேண்டும். அரவணைத்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வை எடுங்கள்.

இப்படிப் பழகிக் கொண்டால் இந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் இங்கே பதிவாகும் (“RECORD”). அது மட்டுமல்ல…!
1.சண்டை போடுகின்றவர்களை எங்கே பார்த்தாலும்
2.அடுத்தாற்போல நமக்குள் அந்தச் சரிபடுத்தும் உணர்வின் தன்மைகளே வரும்.
3.நீங்கள் உங்கள் அனுபவத்தில் இதை எல்லாம் கொண்டு வர வேண்டும்.

அதை விட்டு விட்டு நான் சாமியைப் (ஞானகுரு) பார்த்தேன். நன்றாக ஆசிர்வாதமும் கொடுத்தார். நானும் தியானம் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

ஆனால் என் கஷ்டங்கள் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது. இது என்ன தியானம்…! என்று சொல்கிறவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள்.

இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் “கார்த்திகேயா…” என்ற நிலையில் தெளிவாக அறிந்து கொண்ட பின் தீமைகளை நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.

ஏனென்றால் அந்த அரும் பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவாக்கி வைத்திருக்கின்றோம். முறைப்படி எண்ணினால் காற்றிலிருக்கும் அந்தச் சக்திகளை எளிதில் நீங்கள் பெற முடியும்.

அந்த அருள் உணர்வுகளை உடலுக்குள் சேர்க்கப்படும் போது அது புதுவிதமான உணர்ச்சிகளாக நம் உடலிலே இருக்கும். ஆனால்
1.தீமை செய்பவர்களைப் பார்த்து நுகர்ந்த உணர்வுகள்
2.தொக்கிய நிலைகளாக நம் இரத்த நாளங்களில் கலந்து வந்தாலும்
3.நாம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் அழுத்தம் அதை அடக்கும்.

வலுகொண்ட உணர்வுகள் நம் உடலிலே வளர்ச்சி பெறும். ஆக சிந்திக்கும் ஆற்றல் வரும். இதை எல்லாம் நாம் செய்து பழக வேண்டும். கொஞ்ச நாள் இதைப் பழக்கம் செய்து கொண்டால் அப்புறம் சர்வ சாதாரணமாக வரும்.

 

வீணாக வம்பு செய்பவர்களிடமிருந்து நாம் விடுபட எப்படித் தியானிக்க வேண்டும்…?

Argument

வீணாக வம்பு செய்பவர்களிடமிருந்து நாம் விடுபட எப்படித் தியானிக்க வேண்டும்…? 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கிறது. அதை எல்லாம் மறந்து விட்டு
1.நாம் இப்படித் தான் நல்லதாக வர வேண்டும் என்ற நிலையில் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பாய்ச்சி
2.எல்லோரையும் மகிழ்ந்து வாழச் செய்வதற்குத்தான் கூட்டுத் தியானங்களை அமைத்திருக்கின்றோம் (ஞானகுரு)
3.ஆகவே தியானத்தை கடைப்பிடிப்போர் அனைவருமே வாரத்தில் ஒரு நாளாவது கண்டிப்பாகக் கூட்டுத் தியானம் இருக்க வேண்டும்.

கூட்டு தியானத்தில் எடுக்கின்ற சக்தியை வைத்துத் தான் அதிகாலை விழித்ததும் வீட்டிலே நீங்கள் தனித்து எடுத்தாலும் துருவ தியானத்தின் மூலமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற ஏதுவாக இருக்கும்.

அதற்கடுத்து உங்கள் குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவர்களைப் பிறவியில்லா நிலைகள் அடையச் செய்யத் தியானிக்க வேண்டும்.

இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மட்டும் செய்துவிட்டு அப்படியே விட்டு விடக் கூடாது. அனுதினமும் செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் எப்போது குறையைக் காணுகின்றோமோ உடனே அது நமக்குள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும். “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பவசத்தால் பிறருடைய நிலைகளை நாம குறையாக எடுத்துக் கொண்டோம் என்றாலும் கூட மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் துடைத்துக் கொண்டு
1.“நீங்கள் உண்மையை உணர்வீர்கள்…!” என்று மட்டும் சொன்னாலே போதும்.
2.வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம்… அந்தக் குறை நமக்குள் வராது.
3.அவர்கள் மீது அதிகமான வெறுப்பு உணர்வு கொண்டு ஜாஸ்தி பேச வேண்டியதில்லை.
4.சரி… எனக்கு வேண்டாம்… நீங்கள் சொன்னதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…
5.நன்றாக இருப்பீர்கள்…! என்ற சொல்லிவிட்டு விலகிக் கொள்ள வேண்டும்.

நல்லதுக்காக நாம் அவர்களுடன் வாதம் செய்து கொண்டிருந்தால் நம்மை அறியாமலே பகைமை உணர்வுகளைத் தோற்றுவிக்கும். அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் “என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்…! என்ற சோர்வும் வேதனையும் நிச்சயம் வரும்.

அப்பொழுது அந்த வேதனையை எடுத்தால் சிந்திக்கும் தன்மை குறைகிறது. இத்தகைய உணர்வுகளை எல்லாம் நம் உயிர் உருவாக்கிவிடும். அவர்களை நினைத்து வெறுப்பையும் வேதனையையும் நம்மை அறியாதபடியே நாம் வளர்த்துக் கொள்கிறோம்.

அந்த மாதிரி ஆகாதபடி அவர்கள் அறியாத இன்னல்களிலிருந்து விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த நினைவை எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்குள் வெறுப்பு வராது.

இது நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வந்தாக வேண்டும். குருநாதர் காட்டிய வழியில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கின்றோம் என்றால் மற்றவர்கள் மரியாதை கொடுக்கக்கூடிய அளவுக்கு நாம் வளர்ந்து காட்ட வேண்டும்.

“ஒரு தெய்வீகப் பண்புள்ளவர்கள்…!” என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அப்படித் தோற்றுவிக்கும் நிலைகளுக்கு நாம் வளர வேண்டும். சேவை மனப்பான்மை வர வேண்டும்.

பிறருடைய தீமைகளை எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் தெளிந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று அருள் உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சிட வேண்டும்.
1.நம் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடியதாக வர வேண்டும்.
2.அந்தளவுக்கு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு மருந்தையோ மற்றதையோ நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தாலும் கூட அவர்களுக்கும் உதவியாக இருக்கும். கூடுமான வரையிலும் அவர்கள் நோய் நீங்கும்.

ஆனால் அதற்காக வேண்டி மருந்து குடிக்காமலே நல்லாக வேண்டும் என்பதில்லை. உடனடி நிவாரணத்திற்கு அந்த மருந்து உதவும்.
1.ஆனால் அந்த மருந்திற்கு வீரியம் ஊட்ட
2.உங்கள் வாக்கு நிச்சயம் பயன்படும்.

ஏனென்றால் ஒரு கடுமையான வேதனைப்படுவோர் உடலில் நல்ல மருந்தினைக் கொடுத்தாலும் அவரின் வேதனை உச்சகட்டம் ஆகி விட்டால் மருந்து கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளாது

அதற்காக வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் எடுத்து விட்டு அந்த உணர்வுடன் மருந்தை அவரை உட்கொள்ளும்படி செய்தால் உடனடியாக அது நல்லாகும்.

என்ன இருந்தாலும் தூசியைத் துடைக்கின்ற மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து எடுத்து உடனுக்குடன் நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் நமது நினைவாற்றல் முழுவதும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடனே இருக்க வேண்டும். தீமை செய்யும் எண்ணங்களை முறித்திட வேண்டும். நீக்கிட வேண்டும். அந்த உணர்வுகள் நமக்குள் வளரக் கூடாது.

கல்யாணராமா…! அதாவது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பிறருடைய தீமைகளை அகற்றிவிட்டு தம்முடன் இணைந்து வாழும் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்த வேண்டும்.

“ஆயுள் கால மெம்பர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறை இது…”

 

தீமை செய்பவர்களுக்கு நாம் பயத்தை ஊட்ட வேண்டும்…

Image

Lord velaudham

தீமை செய்பவர்களுக்கு நாம் பயத்தை ஊட்ட வேண்டும்…

 

தியான வழியில் அன்பர்கள் இருப்பது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் ஏதாவது செய்து கொண்டிருக்கும் போது அதிலே சில கஷ்டங்கள் வந்து விட்டது என்றால்
1.இவ்வளவு நாள் தியானம் இருந்து நீ என்னத்தைப் பார்த்தாய்…? என்று
2.அடுத்தவர்கள் நம்மிடம் உணர்ச்சியைத் தூண்டும்படி சொன்னால் போதும்.

அந்த உணர்வை அப்படியே எடுத்துக் கொண்ட பின்…
1.அட.. ஆமாம்… என்ன வந்தது…?
2.தியானம் செய்து ஒன்றும் கிடைக்கவில்லையே…! என்று
3.அடுத்தவர்கள் உணர்வைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்கிறோமே தவிர
4.அவர்களுக்கு எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ளவில்லை.

யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகப் பதிவாக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வு கொண்டு உங்களுக்குள் தீமைகள் எப்படி இயங்குகிறது…? இதை எப்படி மாற்ற வேண்டும்..! என்று நீங்கள் திருப்பிச் சொல்லிப் பாருங்கள். (செய்து பாருங்கள்)
1.இந்த உணர்வு நமக்குள் நல்லதை வளர்க்கச் செய்யும்.
2.அடுத்தவர்கள் உணர்வை மாற்றலாம்.

ஆனால் நீங்கள் சோர்வடைந்து உட்கார்ந்திருக்கும் போது ஒருவர் வந்து பற்ற வைத்தால் தீ அது பாட்டுக்க கிளம்பிவிடும். குறைகளைப் பேசிக் கொண்டு இருந்தால் என்ன ஆகும்…? தீமைகளின் இயக்கம் தான் அதிகமாகும்.

உதாரணமாக நீங்கள் நல்ல விஷயங்களையே பேசிக் கொண்டிருந்தாலும் கூட ஒருவர் வந்து நல்லதைச் சொல்லாதபடி “இது அப்படி… அது இப்படி…! அவன் இப்படியே தவறு செய்கிறான்…!” என்ற வகையில் உங்களிடம் சொல்ல ஆரம்பித்தால் உங்கள் நல்லது காணாமல் போய்விடும்.

அவர் சொன்ன உணர்வு உங்களை இயக்கி அந்த விஷத்தின் இயக்கமாகத்தான் வரும். ஏனென்றால் அதற்கு வல்லமை அதிகம். இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அதிகாலையில் எடுக்கும் துருவ தியானத்தை நீங்கள் மறக்கக் கூடாது.
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி உணர்வுகளை
2.காலை நான்கிலிருந்து ஆறுக்குள் எடுப்பதே துருவ தியானம்.
3.காலையில் கண் விழித்ததுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து
4.நம் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு இடத்தில் நாம் வேலை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். தெரியாமல் கை தவறி ஒரு பொருளைக் கீழே விட்டு விடுகிறோம்…. உடைந்து விடுகிறது…!

நம்முடைய மேலதிகாரி ஏதாவது நினைப்பார்கள் என்ற உணர்வு வரப்படும் பொழுது இதை மறைக்கத் துணிவோம். மறைக்க முயற்சிக்கும் போது நம்மை முதலில் குற்றவாளியாகப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறார்.

ஆனால் அதற்குப் பதிலாக ஆத்ம சுத்தி செய்துவிட்டு மேலதிகாரியிடம் இந்த மாதிரிச் செய்தேன். என் கை தவறி விழுந்து விட்டது
1.இன்னென்ன மாதிரியான சூழ்நிலையில் தான்
2.இந்தத் தவறு ஏற்பட்டது என்று சொல்லி விட்டால் பரவாயில்லை.

அதே சமயத்தில் தவறி விழுந்து விட்டது…! இருந்தாலும் உண்மையைச் சொன்னால் என்ன சொல்வாரோ…? என்று தப்பை மறைக்கும் உணர்வு கொண்டு உடைந்ததைப் பற்றி சொல்லப் போனால் என்ன ஆகும்..?

கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று சொல்வது போல் நம்முடைய எண்ணமெல்லாம் அந்தச் சந்தேக உணர்வு கொண்டு மேலதிகாரியிடம் பயமானவுடனே
1.நாம் தப்புப் பண்ணி இருக்கிறோம் என்ற நம் உணர்வே அங்கே வேலை செய்யும்.
2.அது நம்மைக் குற்றவாளியாகவே ஆக்கும்.
3.இதைப் போன்ற நிலைகளை சில நேரங்களில் நீங்கள் அனுபவமாக நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.

அதே போல் நம்முடைய குழந்தையே ஒரு தவறு செய்கிறான். சுட்டித்தனம் செய்து எதையாவது உடைத்துவிட்டான் என்றால் உடனே நம்மை அறியாது கோபம் வருகிறது.

எவ்வளவு தான் செல்லமாக குழந்தையை வளர்த்தாலும் கூடக் குறும்புத்தனம் செய்தவுடனே அந்த உணர்வு நம்மை எதிர்த்துத் தாக்கும். அவனை உதைத்தால் தான் என்ன…? என்று உடனே அந்த வேக உணர்ச்சி வரும்.

(உடனே) நம் எண்ணத்தில் என்ன செய்ய வேண்டும் என்றால்
1.ஈஸ்வரா…! என்று ஒரு நிமிடத்திற்குள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் கலந்து
2.அவனுக்கு நல்ல அறிவு வர வேண்டும் என்று சொல்லிவிட்டு நீங்கள் உதைத்துப் பாருங்கள்.
3.ஆனால் உதைக்க வராது…!

அவனிடம் இந்த உணர்வைச் சொல்லி நீ தவறு செய்ததற்கு நான் உன்னை அடிக்க வந்தேன் அல்லவா…! என்று இந்தப் பயத்தை ஊட்டி நீ தப்பு செய்யாமல் இருந்து நல்லவனாக வர வேண்டும் இந்த உணர்வைக் கொடுத்துப் பாருங்கள்.

நீ இனிமேல் நல்லவனாக வா. இந்த இந்தச் செயல்களை நீ இப்படிச் செய்தாய் என்றால் அது குற்றமாகத்தான் வரும் என்று சொல்லிவிட்டு அவன் குற்ற இயல்புகளிலிருந்து மீட்டுவதற்கு நாம் இப்படிச் சொல்ல வேண்டும்.

1.அப்போது அந்த பயத்தால் அவன் நல்ல உணர்வை நுகரும் வாய்ப்பாகின்றது
2.நாம் சொன்ன நல்ல உணர்வு அவனுக்குள் புகுந்து நன்மையைச் செய்யும்.
3.இப்படி… நாம் தப்பு செய்வதற்கு அந்த இடத்தில் பயத்தைக் கொடுக்க வேண்டும்.
4.தப்பு செய்ததற்குப் பயத்தை கொடுக்கவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் தைரியம் வரும்.
(இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது)

“ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி என்று நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று குழந்தை குறும்புத்தனம் செய்யப் போகும் போது அதை எடுத்து நாமும் தணித்துக் கொள்ள வேண்டும். அருள் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு தான் இருந்தாலும் கூடத் தவறு செய்யும் பொழுது கோபம் வரத் தான் செய்யும். ஏனென்றால் அந்த உணர்ச்சி தூண்டவில்லை என்றால் நாம் அதை அறிய முடியாது.
1.ஆனால் குற்றத்தை அறியும் பொழுது அதைச் சொல்லும் பருவத்தில்
2.நல்லதாகச் சொன்னால் அவனைத் திருத்த முடியும்.

அவன் செய்யும் தவறு நமக்குள் வராதபடி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று இதை நுகரப்போகும் போது அதை அடக்கி விடுகின்றது. ஞானிகளின் உணர்வின் அறிவாக நாம் சொல்லப்போகும் போது அவனுக்கு அந்த தெளிவாக்கும் உணர்வை ஊட்ட முடியும்.

உப்பு கைப்பாக இருக்கிறது. தனியாகச் சாப்பிட முடியுமா…? முடியாது. ஆனால் குழம்புடன் சேர்க்கும் போது சுவையாக வந்து விடுகிறது.

அதைப் போல் தான் இந்த வாழ்க்கையில் வரும் மற்ற உணர்வுகளுடன் (எதுவாக இருந்தாலும்) அந்த அருள் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்துச் சுவை மிக்கதாக உருவாக்க வேண்டும். இது தான் கார்த்திகேயா.

பாதுகாப்பான உணர்வுகளைத் தான் நாம் கொடுக்க வேண்டும். மெய் உணர்வின் தன்மையை எடுத்து இப்படிச் சொன்னோம் என்றால் இந்த எண்ணம் மற்றவரை நிச்சயம் பாதுகாக்கும்.

“பிரம்மாவைச் சிறைபிடித்தான்…!” முருகன் என்கிற பொழுது ஆறாவது அறிவின் துணை கொண்டு பாதுகாக்கும் உணர்வின் எண்ணங்களை நமக்குள் உருவாக்கி அத்தகைய சொல்லாகச் சொல்லப்படப்போகும் போது அந்த உணர்ச்சிகள் அது தான் கூர்மை.

அதாவது அடி பெருத்து நுனி சிறுத்து இருக்க வேண்டும் – “வேலாயுதம்…!” அந்தக் கூர்மையின் தன்மைகள் கொண்டு தீமைகளைப் பிளக்கும் தன்மையாக அந்தச் சொல்லாக வரும் என்பதையே வேலாயுதம் என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஒரு உருவத்தைக் காட்டி அருவத்தின் செயலை நுகர்ந்து நமக்குள் அருவத்திற்குள் இருக்கும் தீமைகளை அடக்கும் வல்லமை பெறுவதைத்தான் ஞானிகள் இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

“அதர்வண…!” என்பதன் பொருள் என்ன…?

Murugan Veerabhadra

“அதர்வண…!” என்பதன் பொருள் என்ன…?

 

நமக்கு வேண்டியவர் ஒருவர் நோயினால் கடுமையாகத் துன்பப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பார்க்கும் பொழுது நமக்குள்ளும் வேதனையாகி நம்மிடம் இருக்கும் மகிழ்ச்சியை (நல்ல குணத்தை) அப்பொழுது இழக்கின்றோம் இது “அதர்வண…!”

(அதர்வண என்றால் மாற்றம் அடைதல் என்று பொருள்)

ஆனாலும் அந்த நேரத்தில் உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று நமக்குள் இணைத்து அந்த வேதனையான உணர்வு நமக்குள் செயல்படாதபடி தடுக்கும் பொழுது அதுவும் “அதர்வண…!”

அதாவது அருள் ஒளியான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து அவருக்குள்ளும் அதைப் பாய்ச்சி அந்த நல் வழியைச் செயல்படுத்தும் நிலையில்
1.மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து நல்லதாக்கும் பொழுது அது அதர்வண.
2.நல்லதுக்குள் வேதனை கலக்கப்படும் பொழுது அதுவும் அதர்வண தான்
3.ஆக இரண்டுமே அதர்வண தான்.

ஆனாலும் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு உணர்வையும் அருள் ஒளியின் உணர்வாக நல்லதாகவே நமக்குள் மாற்றுதல் வேண்டும்.

யார் யாரிடம் எல்லாம் பழகினோமோ அவர்கள் எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் மலரைப் போல் மணம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

காலையில் எழுந்ததுமே ஒவ்வொருவரும் இந்த மாதிரி எண்ணி எடுக்க வேண்டும்.
1.ஏனென்றால் பழகியவர்கள் உணர்வு எல்லாம் நம் உடலுக்குள் இருக்கிறது.
2.அவர்களின் உணர்வுகள் அது வளராது இந்த அருள் சாப்பாட்டைக் கொடுத்து அதை மறைக்க வேண்டும்.
3.இப்படி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

இல்லை என்றால் என்ன செய்யும்…?

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று பார்த்தவுடனே பிறருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அந்த வேதனைப்படும் அணுக்களை நுகரச் செய்து நாமும் வேதனைப்பட ஆரம்பிப்போம்.

அந்த உணர்வின் அணுக்கள் உடலுக்குள் வந்து என்ன செய்யும்…? விஷத்தை நுகரும் தன்மையாக அது வரும் பொழுது நல்ல அணுக்களைக் குறைத்து விடுகின்றது. விஷத்திற்கு அந்த அளவு வலு இருக்கின்றது.

அந்த மாதிரி ஆகாதபடி அடுத்த நிமிடமே நம் நல்ல அணுக்களைப் பாதுகாக்க வேண்டும்.
1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரிடம் வேண்டி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதைச் சொல்லியே தீர வேண்டும்.

தீமைகளைப் பார்த்தாலும் தீமையான சொல்லைக் கேட்டாலும் இந்த உணர்வு உடலுக்குள் போகும் பொழுது “ஈஸ்வரா…!” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இந்த உபதேச வாயிலாக நீங்கள் இதைத் தெரிந்து கொண்ட பின் மற்ற தீமையான உணர்வுகளைக் கேட்க நேர்ந்தாலோ அல்லது பார்க்க நேர்ந்தாலோ
1.அவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்ற இந்த எண்ணத்தைத்தான் எண்ண வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்களுக்குள் நன்மை பெறும் சக்தி பெறவேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.
3.நாம் இப்படிச் சொல்லப்படும் பொழுது இது அதர்வண.
4.அவர்கள் சொன்ன உணர்வை அந்த அருள் மகரிஷிகளின் சொல்லால் அடக்கி விடுகின்றோம்.

இந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது நரசிம்ம அவதாரத்தில் சொன்னது போல் வாசல்படியிலேயே அதாவது நம் சுவாசத்தின் வழியாக உடலுக்குள் புகாதபடி இங்கேயே நீக்கி விடுகின்றோம். உள்ளுக்குள் போகாது.

நம்முடைய ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி அந்த வலிமையின் துணை கொண்டு எதையுமே நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

பிறரைக் காக்க வேண்டும் என்ற நிலையில்… அவர்கள் கஷ்டங்களையும் துன்பங்களையும் நாம் எடுத்துக் கொண்டால் “நம்மை யார் காப்பது…?”

Fool proof protection

பிறரைக் காக்க வேண்டும் என்ற நிலையில்… அவர்கள் கஷ்டங்களையும் துன்பங்களையும் நாம் எடுத்துக் கொண்டால் “நம்மை யார் காப்பது…?”

 

எப்பொழுதெல்லாம் தீமையின் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று அவனிடம் வேண்டி அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று பல முறை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் உணர்வின் வலுவை உடலுக்குள் இப்படிக் கூட்டினால்
2.இந்த உணர்வின் “மணம்” வரப்படும் பொழுது தீமைகளை உந்தித் தள்ளிவிடும்.
3.தீமைகளை நுகரும் சக்தி இழக்கப்படுகின்றது. உள் புகாமல் தடுக்கப்படுகின்றது.

இதைத் தான் மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நர நாராயணன் இரண்யனைப் பிளந்தான்…! என்று ஞானிகள் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

1.நமக்கு வாசல் படி எது..?
2.மூக்கின் வழியாகச் சுவாசிக்கும் இந்தச் சுவாசத்தின் வழியாகத் தானே உள் செல்கிறது.
3.மூக்கின் வழியாகச் செல்லும் தீமைகளைப் புருவ மத்தியில் அமர்ந்து தடுக்க (வகுந்திட) வேண்டும்.

எல்லாவற்றையும் இரட்சிப்பது யார்…? அவனே தான்…! யார்…? நம் உயிர் தான்…!
1.யாரையும் வேண்டாம் என்று சொல்வதில்லை.
2.வருவோரை அரவணைப்பதும் அவன் வேலை தான்.
3.நம் உடல் வரவழைக்கின்றது.
4.வரம் கொடுத்துவிடுகின்றது நம் உயிர்.
5.ஆனால் நாம் நுகர்ந்த பின் பிரம்மமாகின்றது சிருஷ்டியாகின்றது.
6.உருவான உணர்வுகள் உடலாகின்றது. அப்பொழுது இங்கே அரவணைக்கின்றது.

இதைச் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஆகவே எதை நமக்குள் உருவாக்க வேண்டும்…? அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதை நமக்குள் உருவாக்க வேண்டும். நாம் எண்ணியதைத்தான் உயிர் உருவாக்குகின்றது.

அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் உருவாக்கி நாம் பார்க்கும் குடும்பமெல்லாம் நன்றாக இருக்க வேண்டும்…! என்று எண்ண வேண்டும். துன்பமோ துயரமோ கஷ்டமோ நஷ்டமோ கொண்டு மற்றவர்கள் வந்தாலும் நாம் அவர்களிடம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறுவீர்கள்…
2.நிச்சயம் நன்றாக இருப்பீர்கள்…! என்று சொன்னால்
3.இந்த உணர்வுகள் அவர்கள் தீமைகளைத் தள்ளுகின்றது.
4.நமக்குள் அந்தத் தீமைகள் வராது.

தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து இப்படிச் சரியான முறையில் எண்ணிப் பாருங்கள். நோயோ கஷ்டமோ துன்பங்களோ “எல்லாமே நீங்கிப் போகும்…!” என்று நீங்கள் சொல்லுங்கள்.

இப்படி உங்கள் எண்ணம் தான் மற்றவர்களின் தீமைகளை நீக்க வேண்டும். அவர்கள் உணர்வு நம்மை இயக்கிவிடக் கூடாது (இது மிகவும் முக்கியம்)

ஆனால் அவர்கள் சொல்லைக் கேட்டு நீங்கள் பலவீனப்படுத்திச் சொன்னால் “என்ன காலமோ…? இந்த மாதிரி வந்துவிட்டது…! என்ற நிலையில் என்று அந்த விஷமான உணர்வுகள் இயக்கிவிடும்.

சாமிக்கு (குருநாதருக்கு) என்ன தெரியும்…? நான் சொல்கிறேன் போகிறது பார்…! என்பார்கள். அப்புறம் ஆணி வேரையே பிடுங்கிவிட்டு விடுகிறார்கள்.
1.பாசத்துடன் பிறருடைய கஷ்டங்களைக் கூர்ந்து கேட்டு
2.இந்த மாதிரிச் சொல்லும் பொழுது இதைக் கடந்து வரப்படும் பொழுது நாளடைவில் அதே கஷ்டம் இங்கேயும் அதிகமாகும்.

அந்த மாதிரி எல்லாம் ஆகாதபடி தடுக்க வேண்டுமா இல்லையா…?

ஏனென்றால் மனிதனுடைய வாழ்க்கையில் பிறருடைய கஷ்டமான உணர்வுகளைப் பண்புடன் அன்புடன் பரிவுடன் கேட்டுணரப்படும் பொழுது அவைகள் எல்லாம் நமக்குள் பிரம்மமாகின்றது. உடலுடன் உடலாக ஆக்கிவிடுகின்றது.

அப்படி ஆகவிடாமல் தடுக்க ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்து இணைத்து அந்த வலுவைக் குறைக்க வேண்டும்.

“நீங்கள் ஒவ்வொருவரும் அந்த அருள் மகரிஷியாக வேண்டும்…!” என்பது தான் என்னுடைய ஆசை. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னிடம் (ஞானகுரு) அதைத்தான் சொன்னார். அவர் காட்டிய அதே உணர்வைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றோம். உபயோகப்படுத்துங்கள்…!

சண்டை போடுபவர்களைப் பார்த்தாலே நமக்குப் பட படப்பு ஏன் வருகிறது…? இதயம் ஏன் படக் படக் படக் என்று துடிக்கிறது…?

Third eye - மூன்றாவது கண்

சண்டை போடுபவர்களைப் பார்த்தாலே நமக்குப் பட படப்பு ஏன் வருகிறது…? இதயம் ஏன் படக் படக் படக் என்று துடிக்கிறது…?

 

இரண்டு பேர் சண்டை போடுபவர்களைப் பார்க்கிறீர்கள். ஆனால் அந்த இரண்டு பேரும் உங்கள் நண்பர்கள் தான் என்று பார்த்தவுடனே “இப்படிச் சண்டை போடுகிறார்களே…!’ என்று அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் வரும். அப்போது வெறுப்பும் வேதனையும் தோன்றும்.

அப்போது நீங்கள் நுகர்ந்த உணர்வை ஆட்சி புரிவது யார்…? உங்கள் உயிர் தான். இந்த உணர்வின் தன்மை அதிகமான நிலைகளில் வேதனை வேதனை என்று வெறுப்பும் வேதனையும் தனக்குள் உருவாகும் போது
1.இது விஷ உணர்வாக மாற்றப்பட்டு நமக்குள் எதிரியான நிலைகள் வருகிறது.
2.அடுத்து இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கப்பட்டு இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கிட்னிக்குப் பாயும்.
3.அதிகமான உணர்ச்சிகளாகும் பொழுது இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தும் நிலை இல்லாதபடி
4.கிட்னி அப்படியே திறந்து விட்டு விடும். அசுத்தம் உள்ளுக்குள் போகிறது.
5.அப்போது இதயம் படக்… படக்… படக்…! என்று அடிக்கும்.

சண்டை போடுபவர்களைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மைகள் தனக்குள் வந்த பின் எதிர்பாராது
1.எனக்குப் படக்… படக்… என்று அடிக்கிறது.
2.எனக்கு அப்படியே பட… பட… என்று வருகிறது.
3.வெட… வெட,,, என்று உடல் ஆடிவிட்டது…! என்றெல்லாம் சொல்வார்கள்.
4.இவையெல்லாம் நமக்குள் உள் புகுந்து போகும் நிலை தான்.

நண்பன் சண்டை போடுவதைப் பார்த்திருப்போம். இந்த உணர்வு இதயத்தின் பக்கம் வரும் போதெல்லாம் அந்தப் பட படப்பு வரும். ஆனால் என்ன என்றே தெரியவில்லை…! என்பார்கள்.

அதே மாதிரி நாம் சந்தோஷமாக இருப்போம். நமக்குச் சம்பந்தமில்லாதபடி இரண்டு பேர் சண்டை போடுவார்கள். வெறுப்பும் வேதனையும் கொண்ட நிலைகளில் பேசுவார்கள்.

அதை நாம் பார்க்க நேர்ந்ததும் நம்மை அறியாமலேயே நம் உணர்வின் இயக்கம் மாறும். நமக்குள் பய உணர்வை ஏற்படுத்தும். எனக்குப் பயமாக உள்ளதே…! ஏன் என்று தெரியவில்லையே…! இதயம் பலவீனமாக இருக்கிறது என்பார்கள். இது உலக இயல்போடு வரும்.

உதாரணமாக ஒரு பேட்டரியை இயக்குவதற்கு அதற்குள் சில விஷப் பொருள்களைச் சேர்க்கிறார்கள். அந்த பேட்டரியில் இருக்கக்கூடிய அந்த விஷங்களைக் கொண்டு நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற உணர்வின் தன்மையை இயக்கக்கூடிய நிலையில் கரண்டை உற்பத்தி செய்கின்றார்கள்.

மின்சாரத்தை அந்தப் பேட்டரிக்குள் (SOLAR CELLS AND BATTERY) முதலில் சேமித்து வைக்கின்றார்கள். எப்படி…? சூரியன் ஒளிக்கற்றையால் எடுக்கிறது. அதிலிருந்து வரக்கூடிய ஒளிக்கற்றையை இதில் இயக்கப்படும் போது இதிலே சேமிப்பு என்ற நிலைகள் வருகிறது.

ஒவ்வொரு அறையிலும் வைத்திருக்கக்கூடிய நிலைகளில் வடிகட்டி அதிலே அழுத்தத்தை அதிகமாகக் கூட்டி ஒரு இயக்கச் சக்தியின் நிலைகளுக்குக் கொண்டு வருகிறார்கள்.

அதிலே உள்ள செல்களில் நெகட்டிவ் பாசிடிவ் என்ற நிலைகளை வைத்து இயந்திரங்களையே ஓட்டச் செய்கிறார்கள். ஆனால் எதிலிருந்து உற்பத்தி ஆகிறது…?
1.இதிலிருக்கக்கூடிய ஆசிட் மற்றவைகளுக்கு எதிரியாகும் போது
2.பொறி கிளம்புகிறது… கரண்ட் உற்பத்தியாகிறது…!

இதைப் போல தான் முதலில் சொன்ன மாதிரி நம்முடைய சகஜ வாழ்க்கையில் எதிர் நிலையான உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் நம் உடலிலே எடுக்கப்படும் போது அது உடலிலே வீரிய உணர்வுகளாக மோதப்படும் போது உணர்ச்சியின் வேகங்களைக் கூட்டுகிறது.

அதாவது பேட்டரியில் பாசிடிவ் நெகடிவ் என்ற் மோதலாகும் பொழுது அந்த உணர்வின் அழுத்தத்தால் அந்த ஆற்றல் மின்சாரமாக (இயக்கச் சக்தியாக) தோன்றுவது போலத் தான் நமக்குள்ளும் தோன்றுகிறது.

ஆகவே நம் உடலில் அத்தகைய எதிர்ப்பு நிலைகளை உருவாக்கும் சக்தி வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

இதை அடக்க வேண்டும் என்று சொன்னால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துப் பழக வேண்டும். துருவ நட்சத்திரத்தைப் பற்றிப் பல முறை உபதேச வாயிலாக உங்களிடம் பதிவு செய்திருக்கின்றோம்.

“ஈஸ்வரா…!” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது இது முக்கண் ஆகிறது. இதன் வழி இழுத்துப் பழக வேண்டும்.

ஏனென்றால் புறக்கண்ணால் நாம் கவருவது நம் ஆன்மாவாக மாறுகிறது. சுவாசித்தவுடன் உயிரிலே படுகின்றது. சுவாசித்ததை உயிர் அகக்கண்ணாக இருந்து உணர்த்துகிறது.
1.அந்த உணர்ச்சியின் தன்மை தான் நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்ச்சிகொப்பத் தான் எண்ணங்கள் வருகிறது.
3.அந்த உணர்ச்சிகொப்பத் தான் நம்முடைய செயலும் வருகிறது.

ஆகவே மற்றவர்கள் செய்யும் தீமையின் உணர்ச்சிகள் நம் உடலில் சேரும் பொழுது
1.உடனே அந்த உணர்வின் வேகத்தைக் கூட்டாது
2.”ஈஸ்வரா…!” என்று நாம் கண்ணின் நினைவை உயிருடன் (புருவ மத்தியில்) இணைத்து முதலில் நிறுத்திப் பழக வேண்டும்.

(ஏனென்றால் உணர்வின் வேகத்தைக் கூட்டும் பொழுது தான் நமக்குப் பட படப்பும் இதயம் படக் படக் என்று அடிப்பதும் மற்ற உணர்ச்சி வசப்படும் நிலைகள் எல்லாமே வருகிறது – இது முக்கியம்)

அப்பொழுது அந்த அழுத்தம் வரும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதனுடன் இணைத்து இதன் வழி கவருதல் வேண்டும்.

ஏனென்றால் இந்த உணர்ச்சியின் உணர்வுகளை புருவ மத்தியில் செலுத்தும் போது அதன் வலு கூடும். வலு கூடிய பின் தீமைகள் தடுக்கப்படுகின்றது.

தீமைகள் உள் புகாது தடைப்படுத்திய பின் நாம் என்ன செய்ய வேண்டும்…?

யார் தவறு செய்கிறார்களோ அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். உண்மையின் உணர்வை அறியும் திறன் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் செயலெல்லாம் நல்ல நிலை பெற வேண்டும் என்று இவ்வாறு ஒவ்வொரு குணங்களுக்குத் தக்கவாறு நாம் தியானிக்க வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் மகரிஷிகளின் உணர்வுகளையும் நமக்குள் சேர்க்கும் போது இதற்கு முன்னாடி உடலுக்குள் இருந்த பகைமை உணர்வுகளும் பய உணர்வுகளும் தணிக்கப்படுகின்றது.

ஆகவே தீமை என்று தெரிந்து கொண்டாலே அந்தத் தீமையை அடக்க “ஈஸ்வரா…” என்று சொல்லி கண்ணின் நினைவை உயிருக்குள் கொண்டுவர வேண்டும். இந்தப் பழக்கம் அவசியம் வர வேண்டும்.