ஆத்மாவைச் சுத்தம் செய்ய ஆயுதம் கொடுக்கின்றோம்…!

Soul cleansing

ஆத்மாவைச் சுத்தம் செய்ய ஆயுதம் கொடுக்கின்றோம்…!

 

யாம் (ஞானகுரு) பிரச்சாரம் செய்யவில்லை. உங்கள் ஒவ்வொருவருடய நிலைகளிலும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பதியச் செய்து இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கூட்டச் செய்கின்றோம். அதற்குத்தான் இந்தத் தியானம்.

வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பமானாலும் சரி “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உடலைத் தியானித்துக் கொள்ளுங்கள். இதற்குப் பெயர் “ஆத்ம சுத்தி”

1.உங்களை அறியாமலேயே உங்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான்
2.தக்க ஆயுதத்தை “மிஷின் கண்” (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.
3.ஏனென்றால் இது எல்லாம் வாக்குடன் கூடிக் கொடுக்கும் நிலைகள்.
4.நீங்கள் எல்லாம் கடும் ஜெபமிருந்து இந்தச் சக்தியைப் பெறுவதென்றால் அவ்வளவு சாதாரணமானதல்ல.

சரியான முறைகளில் இந்த ஆத்ம சுத்தி என்கிற எண்ண உணர்வின் எண்ண வாக்கை உங்களுக்குக் கொடுப்பதற்கு இந்த உணர்வின் தன்மையைக் கொல்லூரில் 16 வருடங்கள் எடுத்து வளர்த்து அந்த வாக்கின் ஒலியை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

இப்படிப் பதியச் செய்ததை
1.யாம் சொல்லும் இந்த முறைப்படி யார் ஒருவர் தியானத்தில் இருக்கின்றார்களோ
2.அவர்களுக்கு இந்த வாழ்க்கையிலே எத்தகைய துன்பமிருந்தாலும் நிச்சயம் நீங்கிவிடும்.

பெண்களாக இருக்கக்கூடியவர்கள் அனைவருமே சமையல் செய்யும் பொழுது ஆத்ம சுத்தி செய்து விட்டு அரிசியைப் போடும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நாம் சமைக்கும் சாப்பாட்டை யார் புசித்தாலும் அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டுமென்று எண்ணுங்கள். நீங்கள் அப்பொழுது சுவாசிக்கக் கூடிய உணர்வு உங்களை அறியாமலேயே உங்களைச் சுத்தப்படுத்தும்.

பெண்களுக்கு அடிக்கடி கவலையும் தொல்லைகளும் வருவதனால் அந்த உணர்வுகளால் அவர்களுக்குக் கை கால் குடைச்சலும் தலைவலியும் ஒற்றைத் தலைவலியும் அதிகமான நிலையில் வரும். காரணம் பெண்களுக்கு ஈர்ப்பு சக்தி ஜாஸ்தி.

1.அடிக்கடி கவலையும் மற்ற நிலைகளையும் எண்ணி எண்ணி
2.அவர்களை அறியாமலேயே இந்த உணர்வுகள் உடலில் சேர்ந்து கை கால் குடைச்சல் வந்துவிடுகின்றது.
3.அதுவே பின் நாட்களில் நோய்களாக வளர்ந்து நல்லதையே சிந்திக்க முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

ஆகையினால் சமையல் செய்யும் பொழுதும் சமையல் செய்தபின் பரிமாறும் பொழுதும் இந்த நிலைகளைச் செய்து கொள்ளுங்கள். கணவன் மனைவியும் அவசியம் இந்த ஆத்ம சுத்தியைச் செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.

வீட்டை விட்டு வெளியே சென்றாலும் தொழிலில் போய் அமர்ந்தாலும் ஒரு சங்கடமான வார்த்தைகளைக் காதில் கேட்டாலும் அடுத்த நிமிடம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நிமிடமும் சுத்தப்படுத்துவதற்கே இந்த ஆயுதத்தை யாம் கொடுக்கின்றோம்.

இவ்வாறு நமது வாழ்க்கையில் தொடர்ந்து செய்து வந்தால் மகரிஷிகள் எவ்வாறு தங்கள் உணர்வுக்குள் ஒளியைச் சேர்த்து தீமைகளை நீக்கி உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரமாகிச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் சுழன்று கொண்டிருக்கின்றார்களோ அதைப் போல நாமும் அவர்களுடைய நிலையை அடைய முடியும்.

இதற்கு உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!

வாலியை இராமன் கொல்லாமல் குகையின் வாசலில் கல்லைப் போட்டு ஏன் மூடுகிறான்…?

Vali vadam - sukreevan.jpg

வாலியை இராமன் கொல்லாமல் குகையின் வாசலில் கல்லைப் போட்டு ஏன் மூடுகிறான்…?

வாழ்க்கையில் நாம் நல்லது செய்து வந்தாலும் தூசி (தீமைகள்) வெளியில் இருந்து தான் உடலுக்குள் வருகிறது. அதனால் தான் இராமாயணத்தில் வாலியை இராமன் குகைக்குள் போட்டு மூடி விடுவதாகக் காட்டுகிறார்கள்.

அதாவது “தீமைகள் நமக்குள் உட்புகாதபடி தடுக்க வேண்டும்…” என்று உணர்த்துகிறார்கள்.
1.குகைக்குள் வாலி இருக்கின்றான்.
2.இராமன் அம்பை எய்து ஒரு கல்லைப் போட்டு அந்தக் குகையின் வாசலை அடைத்து விடுகின்றான்.
3.ஆனால் அவனைக் கொல்லவில்லை.
4.அவன் வீரியத்தைத் தடைபடுத்துகிறான் என்று காட்டுகின்றார்கள்..

உதாரணமாக பிறர் செய்யும் தீமையான எண்ணங்களும் குற்றச் செயல்களும் நம் உடலுக்குள் போனால் என்ன செய்யும்…? அந்தத் தீமையின் உணர்வாக அதனுடைய வலிமை கொண்டு இயக்க ஆரம்பித்துவிடும்.

நம் நல்ல குணம் வேலை செய்யுமோ…? அது செயலற்றுப் போகும். அதற்காகத் தான் தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும்…! என்று காட்டுகிறார்கள்,

கோபமாகப் பேசுகிறார்கள்… தவறான செயல்களைச் செய்கிறார்கள் என்றால் அதை நாம் நுகர்ந்த உடனே அவர்கள் மேலே வெறுப்பு வரும்.

அந்த இரண்டு உணர்வும் சேர்ந்து நம் உயிர் என்ற ஈஸ்வர லோகத்தில் உருவாக்கும்.
1.அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஜாடையாக நம்மைப் பேச வைக்கும்.
2.இப்படி எல்லாம் செய்கிறான்… இவன் என்ன யோக்கியமா…? என்போம்.
3.அவர்கள் நல்லது செய்தாலும்… அதை ஏற்க மாட்டோம்…!
4.முதலில் அவர்கள் எப்படியெல்லாம் நம்மைப் பேசினார்கள்…? இப்பொழுது மட்டும் யோக்கியம் மாதிரி நடக்கின்றார்கள்…! என்று நம்மைப் பேச வைக்கும்.
5.இந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகி வரும் போது வெறுப்பின் தன்மை அதிகமாகி விடுகிறது.

நம்மை அறியாமலேயே இப்படி வெறுப்பின் உணர்வுகள் அதிகமாகி நம் ஈஸ்வரலோகத்தில் அந்தக் கருவின் தன்மை உருவாகி நம் உடலுக்குள் பிரம்மலோகமாக மாறுகிறது.

பிரம்மலோகத்தில் அணுக்களாக உருவாகி விட்டால் அது தன் சாப்பாட்டுக்காக ஏங்கும். அந்தத் தீமையின் உணர்வை எடுத்து வளர்க்கத் தொடங்கும். அப்பொழுது நாம் இதை மாற்றி அமைக்க வேண்டுமா இல்லையா…?

ஆகவே நம்மை எது கோபப்படச் செய்கிறது..? என்று நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
1.அவர்கள் செய்த தவறு நம் உயிரிலே பட்ட பின் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
2.அதுவே சொல்லாக வருகின்றது என்று உணர்தல் வேண்டும்.

அடுப்பிலே பாத்திரத்தை வைத்து எந்தக் காய்கறியைப் போட்டு வேக வைக்கிறோமோ அதற்குத் தகுந்த மணம் தான் வரும். ஆகையினால் இந்த மணத்தை நல்ல மணமாக மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்கு இந்தத் தியானத்தின் மூலம் சக்தியைக் கொடுக்கின்றோம்.

நம்மை அறியாமல் நடக்கும் நிகழ்ச்சிகளில் நம்மை எப்படி அந்தத் தீமைகள் இயக்குகிறது என்று தன்னை அறிதல் வேண்டும். நாம் ஏன் கோப்படுகிறோம்…? எதற்காக அந்தக் கோபம் வருது…? என்ற சிந்தனை வேண்டும்.

ஆகவே கோபத்தைத் தணிக்க வேண்டும் என்றால் ஒரு தவறு நடக்கிறது என்றால் பண்பு அன்பு பரிவு என்ற உயர்ந்த உணர்வுகள் கொண்டு உண்மையில் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

கோபத்துடன் பதில் சொல்லப்படும் பொழுது நாம் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் அந்த வழியில் அதைப் பயன்படுத்தும் நேரம் சரியில்லை என்றால் பகைமை உணர்வுகளைத் தான் ஊட்டும். அந்தப் பகைமை உணர்வு ஊட்டுவதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு குடும்பத்தில் பகைமை உணர்வு அதிகமாகும் போது சாப அலைகளாகி அதன் தொடர்ச்சியில் அந்தக் குடும்பமே சின்னா பின்னாமாகிறது. அதனுடைய நிலைகளில் பின் வரும் சந்ததிகள் தவறு செய்யவில்லை என்றாலும் அவர்களையும் அது இயக்கி குறைபாடுகளாகி விடுகின்றது.

ஆகவே இதைப் போன்று நாம்
1.மற்றவர்களுடைய குறைகளைக் கண்டாலும் அவருடைய முந்தைய நிலைகள் இயக்கப்பட்டு
2.அதே உணர்வுகள் நம்மை இயக்கி நம்முடைய நல்ல உணர்வுகளையும் மாற்றுகிறது என்பதை
3.அந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.

சிந்திக்கின்றோம் என்றால் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி அவன் வீற்றிருக்கும் ஆலயம் தான் அந்த உடல்…! என்று எண்ணி விட்டால் அவர்கள் செய்யும் தவறும் குறைகளும் நமக்குள் வராது.

உயிரால் உருவாக்கப்பட்ட அந்த ஆலயத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அவர்களும் பொறுப்பை உணர்ந்து சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும். ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயத்தில் மனத் தூய்மை ஏற்பட வேண்டும் என்று இப்படி நீங்கள் எண்ணிப் பாருங்கள். கோபமோ பழிச் சொல்லோ நமக்குள் எதுவுமே வராது.

இது எல்லாம் நாம் இந்த மனித வாழ்க்கையில் ஞானிகள் காட்டிய வழியில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல் நெறிகள்.

தீமைகளையும் குறைகளையும் சமப்படுத்தும் பரிபக்குவ நிலை

mirror mind.jpg

தீமைகளையும் குறைகளையும் சமப்படுத்தும் பரிபக்குவ நிலை

உதாரணமாக பாலில் விஷம் பட்ட பின் அதை நாம் குடித்தால் மயக்கம் தான் வரும். சிந்திக்க முடியுமா…? அதே மாதிரி பாலில் காரம் பட்டு விட்டது என்றால் அதிலே இனிப்புப் போட்டிருந்தாலும் குடித்தால் ருசி வருமா…? வராது.

இதைப் போல் தான் நாம் நல்ல மனதுடன் இருந்தாலும் பிறருடைய தீமையான செயல்களைப் பார்க்கப்படும் பொழுது அது நம்மை இயக்கி விடுகின்றது. அதனால் நாம் அமைதி இழக்கின்றோம்.

அந்தத் தீமையின் இயக்கத்திலிருந்து காத்துக் கொள்வற்குத்தான் இந்த அதிகாலைத் துருவ தியானத்தையே உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் இந்தத் தீமைகள் நடக்கிறது என்றால் அது நடக்காமல் தடுத்து நம்மை நாம் பாதுகாத்தல் வேண்டும். அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அது எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

அதைச் சேர்க்கப்படும் பொழுது பிறிதொரு தீமை நம்மை இயக்காதபடி அதை அடக்கிச் சிந்திக்கும் தன்மை வரும்.

அப்பொழுது…
1.அந்தத் தீமை செய்பவர்களுக்கு எப்படிச் சொல்ல வேண்டும்…? என்ற ஞானமும் கிடைக்கும்.
2.அதை அவர்கள் எற்றுக் கொள்ளும்படியான சந்தர்ப்பத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற பருவமும் நமக்குள் வரும்.

உதாரணமாக நாம் சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுது சரியாக வேகாமல் தாளித்தால் எப்படி இருக்கும்…? சரியான முறையில் வெந்து இறக்கப்படும் பொழுது அதைச் செய்தால் அது ருசியாக வரும்.

காய்கள் வேகப்படும் பொழுது வேகுவதற்கு முன்னாடி அதிகமான உப்பைச் சேர்த்து விட்டால் சில காய்களும் அதனுடன் இணையும் தன்மையைப் பிரித்துவிடும். உப்பு அதிகமாகிவிடும். குழம்பின் ருசி மாறிவிடும். இந்த மாதிரிச் சிலர் குழம்பு வைத்தார்கள் என்றால் ருசியே மாறிவிடும்.

1.பருவம் தெரியாதபடி உப்பைக் கலப்பதனால் குழம்பின் ருசி மாறிவிடும்.
2.அந்தப் பருவம் இதனுடன் இணைந்திடும் சந்தர்ப்பம் வரும் பொழுது உப்பை நாம் கலக்கலாம்.

சில மசால்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கொதிக்க வைக்கப்படும் பொழுது அந்தச் சூட்டிலே சமமாகப் போய்ச் சேரும். ஆனால் இந்த உப்பென்ற நிலைகள் வரும் பொழுது முன்னணியில் இருந்து தடுத்துவிடும்.

அது தடுத்து விட்டால் அந்தக் காய்கறிகள் ருசி இருக்காது. உப்பு தான் முன்னாடி இருக்கும். குழம்பின் நிலைகள் மாறிவிடும். இவைகள் எல்லாம்
1.அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் செய்யக்கூடிய உணர்வுகள் எதுவோ
2.அது கலப்பதற்குத் தகுந்த மாதிரித்தான் அந்த ருசி வரும்.

ஆகவே ஒருவர் தவறு செய்கிறார்… என்று எண்ணும் பொழுது “அவர்களை அறியாமல் அது இயக்குகிறது…!” என்பதை நாம் உணர்தல் வேண்டும். அதற்காகத் தான்
1.நாம் பார்க்கும் அனைவரையும் மதிப்போம்
2.உடலைக் கோவில் என மதிப்போம்
3.அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் என்று துதிப்போம் என்று சொல்வது.

ஈசனால் உருவாக்கப்பட்ட ஆலயம் தான் அந்த உடல். அவர்களை அறியாமலே அந்தச் செயல்களும் அந்தச் சொல்களும் வெளிப்படுகிறது என்று சொன்னால்
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று
2.அந்த நேரத்தில் நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படிச் செய்தால் நம்முடைய நல்ல உணர்வுகளும் காக்கப்படுகின்றது. நம் மனதில் அமைதியும் கிடைக்கின்றது. அருள் சக்திகளும் நமக்குள் கூடுகின்றது. நம் சொல்லைக் கேட்கும் மற்றவருக்கும் நல்லதாகின்றது.

தீமைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது… எப்படி வலுப் பெறுகின்றது…?

soul cleaning method

தீமைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது… எப்படி வலுப் பெறுகின்றது…?

 

குருநாதர் என்ன செய்தார்…? எம்மைக் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய்ப் பல பச்சிலைகளைக் காண்பித்து, இது பேசுமாடா…? பாருடா பச்சிலையை…! என்றார்.

அது எப்படி சாமி பேசும்…? என்றேன். பிறகு நான் பச்சிலை பேசும் என்று சொல்வேன்.

அது எப்படிடா பேசும்…? என்று எம்மைக் கேட்டார். பிறகு எல்லா உண்மையயும் சொல்வார்.

இதே மாதிரி ஒரு புலி செத்துப் போய்விட்டது, இது என்னடா செய்யும்…? என்று கேட்டார்.

சாமி…! அது செத்துப் போய்விட்டது என்றால் எப்படி எதை எதைக் கொன்றதோ அங்கே போய் இந்த உயிர் பிறக்கும்…! என்றேன்.

அது எப்படி என்று நீ சொல்லுடா…! என்பார். அது செத்துப் போய்விட்டது. அதில் இருந்த அது சேர்த்த சத்தெல்லாம் எங்கடா போனது…? என்பார்.

அது செத்துப் போனால் ஆவி எல்லாம் காற்றிலே போகும் என்று யாம் சொன்னால் இரண்டு பேருக்கும் தர்க்கம் ஆகும்.

யாம் இந்த மாதிரிச் சொன்னாலும் உடனே அவர்
1.அது எப்படிக் காற்றில் போகும்…?
2.காற்றில் போனால் என்ன செய்யும்…? என்று கேட்பார் குருநாதர்.
3.இப்படியெல்லாம் விளக்கம் கேட்பார்.

அன்றைக்கு யாம் (ஞானகுரு) காட்டுக்குள் செல்லும் பொழுது, சாப்பாடு இல்லை. நடந்து போகக் கூட முடியாது. நாம் ஏதோ நினைக்கின்றோம். ஆனால் காட்டுக்குள் போய் நடந்து போகக் கூடிய சக்தியை இழந்து விட்டால் என்ன செய்ய முடியும்…!

அப்பொழுது அந்த இடத்தில் வேதனை வரும். அந்த வேதனையை எடுக்கப் போகும் போது என்ன ஆகும்…?

1.வேதனை ஏற்பட்ட உடனே குருநாதரை எண்ணி
2.இப்படி இந்த மாதிரி பண்ணிவிட்டாரே…!
3.எப்படியும், அவர் சொன்ன இடத்திற்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வரும்.

எமக்கு வேதனை வரும் பொழுது… சொல்கின்றார் குருநாதர். வேதனைப்படுத்தி விட்டார்…! என்று எண்ணினால், நடக்க முடியாது. ஆனால் நடக்க முடியவில்லை என்றால் நீ என்ன செய்கிறாய்…?

அங்கே அந்த இடத்திற்கு நாம் போய்விட்டால் உடனே கொஞ்சம் சௌகரியமாக இருக்கலாம்…! என்ற எண்ணம் வருகின்றதல்லவா?

எப்பொழுது வருகிறது…?

அங்கே. அந்த எண்ணம் வருகின்றது. அப்பொழுது அந்த எண்ணம் வரும் பொழுது
1.இதிலிருந்து எப்படியும் தப்பிக்க வேண்டும்… தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஓங்கி வருகின்றது.
2.இப்படித்தான், தீமைகளை நீக்கும் வலுவான எண்ணத்தை எமக்குக் கொடுத்தார் குருநாதர்.

நம் உடலில் உள்ள தீமைகளை முழுவதும் அழிக்க முடியுமா…?

meditation-results.jpg

நம் உடலில் உள்ள தீமைகளை முழுவதும் அழிக்க முடியுமா…?

வயல்களில் நாம் விளைய வைத்த நல்ல பயிர்களை அறுவடை செய்து முடிந்த பின் அந்த வித்துக்கள் அடியோடு மாய்ந்து விடுகின்றது. திருப்பி அதுவாக முளைத்து வருவதில்லை.

ஆனால் மற்ற புல் பூண்டு தாவர இனங்களின் செடிகள் பூமிக்குள் வெகு ஆழத்தில் பதிந்து இருக்கின்றது. பூமியின் வெப்பத்தால் அந்த விதைகள் அப்படியே பாதுகாக்கப்படுகின்றது.

1.மழை பெய்தால் போதும்…
2.நீர் சக்தியை நுகர்ந்து அந்தச் செடி (களைகள்) பூமியை விட்டு வெளியே வருகின்றது.
3.மழை பெய்த இரண்டு நாளுக்குள் புல் பூண்டுகள் கருவுற்று முளைத்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நம் உடலில் எலும்புக்குள் தீமை என்ற நிலைகள் ஊழ்வினையாக ஆழமாகப் பதிந்துள்ளது. நாம் நன்மை என்ற நிலைகளில் வளர்த்திருந்தாலும் அது எளிதில் கரைந்து விடுகின்றது. அது ஆழமாக இருப்பதில்லை.

வேதனை கோபம் போன்ற உணர்வுகள் வலுவான நிலைகள் கொண்டு நமக்குள் அந்த ஆழமாக ஊடுருவியிருப்பதனால் நமது வாழ்கையில் சந்தர்ப்பத்தால் வேறொருவரின் உணர்வுகளைக் கேட்கவோ அல்லது பார்த்து நுகர நேர்ந்தால் போதும். அது மறுபடியும் ஜீவன் பெற்றுவிடும்.

உதாரணமாக குடும்பத்தில் திடீரென்று “தந்தை இறந்து விட்டார்…!” என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை எண்ணி
1.அப்பா இருந்தார்… ஆனால் இப்படிப் போய்விட்டார்…! என்றோ
2.அவர் இப்பொழுது இருந்தால் கஷ்டமெல்லாம் இருக்காது… ஆனால் அவர் இல்லையே..! என்று
3.ஏக்கமாக மீண்டும் மீண்டும் அவரை எண்ணினால் போதும்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் எப்படித் துயரங்கள் பட்டாரோ அதே உணர்வின் துயரங்களை நமக்குள்ளும் இயக்கத் தொடங்கி விடுகின்றது. அவர் கடைசிக் காலத்தில் நோயால் மிகவும் அவதிப்பட்டிருந்தால் அந்த நோயும் நம்மை இயக்கத் தொடங்குகின்றது.

ஏனென்றால் நாம் அவரைப் பற்றி நினைக்கும் போது காற்றுக்குள் படர்ந்துள்ள அவரின் உணர்வுகள் கவரப்பட்டு அந்த உணர்வுகள் நமக்குள் வளரத் தொடங்கிவிடுகின்றது.

(1.ஏனென்றால் நமக்குள் அவரைப் பற்றிய பதிவு இருக்கிறது.
2.அவதிப்பட்ட உணர்வும் இருக்கிறது.
3.எண்ணியவுடனே அந்த வித்துக்கள் ஜீவன் பெற்று இயக்கி அது வளரத் தொடங்குகிறது)

இதை போன்ற நிலைகளை நாம் தடைப்படுத்த வேண்டும் என்றால் உடலை விட்டுப் பிரிந்த தந்தையின் உயிரான்மாவை உந்தித் தள்ளி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் முதலில் இணைக்க வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அதிகாலையில் துருவ தியானத்தில் எடுக்கப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் அதிகமாகப் பரவத் தொடங்குகின்றது.

அந்த வலிமை பெற்ற பின் அந்த தீமை என்ற உணர்வுகளை இப்ப நாம் என்ன செய்கிறோம்.

நெல்லை நாம் வயலில் பயிரிட்டாலும் அதனுடன் சேர்ந்து புல் பூண்டு எல்லாம் வருகின்றது. வயலிலே தண்ணீர் அதிகமாகக் கட்டியிருந்தால் அந்தப் புல் பூண்டுகள் வளர்வதில்லை. ஏனென்றால்
1.நீரில்லாது காய்ந்து வறட்சியாக இருந்தால் புல் பூண்டுகள் வளர்ச்சி பெறுகின்றது.
2.தண்ணீரை அதிகரிக்கப்படும் போது வளர்ந்து வரும் தழைகள் அழுகிவிடுகின்றது… களைகள் வளர்வதில்லை.

தண்ணீரை நிறுத்திய பின் நெல் வயலைப் பார்த்தால் ஏராளமாகப் பல களைகள் முளைத்து விடுகின்றது. பார்க்கலாம் நீங்கள்…!

இதைப் போன்று தான் நம் உடலிலும் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் நம் ஆன்மாவில் அதிகமாகப் பெருக்கிக் கொண்டால்
1.எத்தகைய தீமையான வித்துக்களையும் வளர விடாது
2.ஒவ்வொரு நிமிடமும் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.

வயல்களைப் பண்படுத்தி அந்த நெல் மணிகளை எப்படி நாம் எடுக்கின்றோமோ இதை போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கிப் பேரருள் பேரொளியாக நம் உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்.

ஏனென்றால் நமக்குள் ஏற்கனவே பதிவானது அழிவதில்லை. பேரருள் உணர்வினை நமக்குள் பெருக்கிய பின் மற்ற தீமைகளைச் சிறுத்து இந்த உணர்வினை ஒளியாக மாற்றினால்
1.உடலை விட்டு நாம் செல்லும் பொழுது
2.தங்கத்திலே திரவகத்தைச் சேர்த்துச் செம்பையும் வெள்ளியையும் கரைப்பது போன்று தொக்கிய நஞ்சுகளைக் கரைத்து விடலாம்
3.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே பேரானந்த நிலையில் ஒளியாக வாழ முடியும்.

மகரிஷிகளின் அருள் மணங்களையும் அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகளையும் நாம் தியானத்தின் மூலம் பெறவேண்டும்

அருள் ஞானி ஆகுங்கள்

மகரிஷிகளின் அருள் மணங்களையும் அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகளையும் நாம் தியானத்தின் மூலம் பெறவேண்டும்

 

நாம் ஒரு வேலை செய்யும் பொழுது கையிலே அழுக்குப்படுகின்றது. ஆனால் அதைத் துடைத்துவிட்டுத் தான் உணவு உட்கொள்ளுகின்றோம். அடுத்த காரியத்தைத் தொடர்கின்றோம்.

ஏனெனில் நாம் கையிலே அழுக்கானபின் தொழில் செய்தபின் அதைத் துடைக்காதபடி மற்றொரு இடத்தில் செயல்பட்டால் அதுவும் மாசு பட்டுவிடும்.

இதைப்போல ஒருவருடைய நிலைகள் நாம் பார்த்துக் கொண்ட பின் அவர்களைக் காப்பாற்றும் எண்ணம் கொண்டு காப்பாற்றினாலும் அதைத் துடைக்கும் நிலை நமக்கு வரவேண்டும். அதைத் துடைத்திடும் உணர்வு நமக்குள் உண்டு.

ஒரு குழந்தைக்குத் தலைவலி வந்து விட்டால் பச்சிலை இங்கிருக்கின்றது என்றால் நாம் எப்படி தேடிச் சென்று, கொண்டு வந்து அதைக் குழந்தைக்குக் கொடுக்கின்றோம். நம் ஆறாவது அறிவு இப்படி வேலை செய்கிறது.

இதைப் போலத் தான் தீமைகள் வரும் பொழுதெல்லாம் தன் உணர்வின் எண்ணத்தால் “மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்…!” என்ற ஏக்க உணர்வு கொண்டு எண்ணி நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும் அருள் ஞானியின் உணர்வைத் தனக்குள் எடுத்துத் துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மெய் ஞானிகள் அனைவரும்
1.தன் வாழ்க்கையில் வந்த எதிர் நிலைகள் அனைத்தையும்
2.தனக்குள் தீமைகள் விளைவித்த அந்தச் சக்தியை அவர்கள் துடைத்துப் பழகி,
3.நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக்கி,
4.ஒளியின் சிகரத்தால் பொருள் கண்டு உணரும் ஆற்றல் பெற்று
5.மற்ற எந்த சக்தியானாலும் தெரிந்திடும் ஆற்றல் பெற்று
6.தெரிந்து கொள்ளும் உணர்வின் தன்மையை வளர்த்து
7.தங்கள் உணர்வு அனைத்தையும் ஒளியாக மாற்றிச் சென்றவர்கள்.

இதைத்தான் ஏழாவது அறிவு சப்தரிஷி என்று சொல்வது. இதைச் சப்தரிஷி மண்டலம் என்று சொல்வார்கள்.

மனிதனாக வளர்ந்து அந்த மெய் ஞானி அவன் தெளிந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி,
1.அவன் உடலிலே விளைய வைத்த ஆற்றல்களும்
2.அவன் உடலில் வெளிப்பரப்பிய மணமும் மூச்சலைகளும்
3.அவன் எண்ணத்தால் வெளியிட்ட உணர்வும் இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்துள்ளது.

இப்பொழுது, உங்களுக்கு யாம் உபதேசிக்கும் பொழுது அவர்கள் உடலில் விளைய வைத்த மணங்களை நீங்கள் நுகர நேருகின்றது.

அந்த மணங்களை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த வேதனைகளையும் மனக்கவலையையும், நீக்கிடும் சக்தியாக அமையும்.

மேலும் அந்த மகரிஷிகளின் அருள் மணங்கள் ஆற்றல்மிக்க சக்தியாக உங்களுக்குள் இணைந்து உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகளை சாப வினைகளை பாவ வினைகளை பூர்வ ஜென்ம வினைகளை நீக்கிடும் உங்களுக்கு மன ஆறுதலும் மன பலமும் மனத் தெளிவும் ஏற்பட்டு மகிழ்ந்த உணர்வுகளை உங்களுக்குத் தூண்டிக் கொண்டே இருக்கும்.

நம்மை ஆட்டிப் படைக்கும் தீமைகளை அடக்கி நல்லதைச் செயல்படுத்தும் வழி முறை என்ன…?

1.jpg

நம்மை ஆட்டிப் படைக்கும் தீமைகளை அடக்கி நல்லதைச் செயல்படுத்தும் வழி முறை என்ன…?

மனிதன் தவறு செய்வதில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வு அவனை இயக்கி விடுகின்றது. அதுதான் அவனை ஆட்சி புரிகின்றது. ஆனால் சந்தர்ப்பத்தை ஏற்படுத்த கூடிய நிலை பெற்றவன் தான் மனிதன்.

மற்ற உயிரினங்கள் வலு கொண்ட மிருகத்தைக் கண்டு “அது தன்னத் தாக்கிவிடும்…!” என்று அதையே நினைத்து அதில் இருந்து தப்ப வேண்டும் என்று எண்ணுகின்றது.

அதே போல நமக்கு யாராவது தொல்லை செய்கிறார்கள் என்றால் அவர்களையே நினைத்து “எனக்கு தொல்லை கொடுத்து கொண்டிருக்கின்றான்…!” என்று எண்ணி வாழுகிறோம்.
1.அவன் தொல்லை கொடுத்த உணர்வு நமக்குள் வரும் போது
2.அந்தத் தொல்லையே மீண்டும் மீண்டும் வருகின்றது.

தொழிலின் நிமித்தம் நாம் கடன் கொடுத்து வாங்குகின்றோம். ஒருவருக்குக் கொடுத்த பின் சந்தர்ப்பம் அவர்களால் திரும்பக் முடியவில்லை என்றால் “நான் கொடுத்தேன்… எனக்குத் திரும்பக் கொடுக்கவில்லை…!” என்ற வேதனையைத் தான் எடுக்கின்றோம்.

அந்த வேதனை உணர்வை எடுத்து இங்கே நம் உடலுக்குள் சமைத்து வேதனையை வளர்க்கப்படும் போது அடுத்து யாரிடம் பேசினாலும் அந்த வேதனை உணர்வுடனே பேசுகிறோம்.

அப்பொழுது அவர்கள் நல்ல மனதையும் கெடுக்கச் செய்கின்றது. நம்மையும் கெடுக்கின்றது. ஆக மொத்தம் அந்த வேதனை என்ற உணர்வே நம்மை ஆட்சி புரியத் தொடங்கின்றது.

நம்முடைய திறமைகள் எவ்வளவு இருப்பினும்… முதலில் நல்ல குணங்கள் இருக்கும் போது செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் இந்த வேதனை அதிகமான பின் அந்த செல்வத்தையே காக்கும் திறன் அற்றுப் போகிறது.

செல்வத்தில் சுகமாக வாழ்ந்த நிலையில் அடுத்தவர்களுக்குப் பணத்தைக் கொடுத்திருந்தாலும் அது திரும்ப வரவில்லை என்றால் அவர்களிடம் கேட்டுச் சண்டைக்குப் போகிறோம்.

கடன் வாங்கிவரோ… என்னிடம் பணம் இல்லையே… நான் எப்படிக் கொடுப்பேன்…? நான் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று தானே நினைக்கின்றேன்… நான் என்ன தரமாட்டேனா…? என்ற வாதம் தான் வரும்.

ஆனாலும் பணம் வரவில்லையே…! என்ற நிலையில் வேதனை உணர்வுகளை எடுத்து எடுத்து அது நம்மை அறியாமலேயே பெரும் சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும்.

அப்பொழுது வேதனையான அணுக்கள் நமக்குள் வளரத் தொடங்கி விடுகின்றது. அது நல்ல உணர்வை நமக்குள் அணுக விடாது செயல்படுத்தும். அதிலிருந்து நாம் எப்படித் தப்புவது…?

இதைத் தான் மகாபாரதத்தில் கௌரவர்கள் என்று காட்டியிருப்பார்கள். ஒவ்வொரு செயலிலும் நல்லது செய்து கொண்டு இருப்பீர்கள்.
1.வேதனை என்ற வந்த பின் அந்த வேதனையோ மிகவும் வலு பெற்றது.
2.அதையே அடிக்கடி எண்ண வேண்டியது வரும்.
3.நல்லதை யார் சொன்னாலும் உங்களால் கேட்க முடியாது.
4.அவர் சொல்வார்…! அவருக்கென்ன தெரியும்…? நான் படுகிற கஷ்டம் எனக்குத் தானே தெரியும்…! என்று நல்லதை எண்ண விடாது.

அந்தக் கௌரவர்கள் வலு கொண்ட நிலையில் நாம் நல்லதைச் செய்ய விடாதபடி சிந்தனை இல்லாத சில செயல்களைச் செயல்படுத்தச் செய்கின்றது.

ஆகவே இதிலே நாம் எத்தகைய நல்லதை எண்ணினாலும் நம் உடலில் விளைய வைத்த உணர்வுகள் வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் இவைகள் எல்லாம் நம் உடலில் வளர்ந்து விளைந்து விட்டால் அவைகளுடைய வலுவால் நம்மை நல்லதை நுகர விடாது.

அதாவது நமக்குள் இருக்கக்கூடிய கௌரவர்கள்… “என்னை இப்படித் திட்டினான்… திட்டினான்…!” என்ற உணர்வு வரும் போது
1.நல்லதை உள்ளுக்குள் விடுவது இல்லை.
2.நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை.
3.கோபம் வந்தால்.. நீங்கள் நல்லது யார் சொன்னாலும் கேட்கின்றீர்களா…?
4.கோபமான உணர்வுகள் உங்களுக்குள் தூண்டப்பட்டிருந்தால் நல்லது ஏதாவது கேட்பீர்களா…?

கோபமான உணர்வுடன் நீங்க இருக்கப்படும் போது ஒரு சந்தோசமான உணர்வையோ ஒரு ஆடல் பாடலையோ ஒரு நல்ல சம்பவங்களையோ சொன்னால் என்ன ஆகும்…? அந்த உணர்வின் தன்மை கொண்டு இதை அழிக்கத்தான் செய்யும். அழிக்கத்தான் உதவும்.

அதைத்தான் கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போர்…! எனறு சொல்வது.

ஏனென்றால் நமக்குள் எடுத்து கொண்ட உணர்வுகள் ஒவ்வொன்றும் தன்னை வளர்த்துக் கொள்ளும் நிலைக்குதான் அது செயல்படுத்தும். ஆகவே அதிலிருந்து நாம் மீள்வதற்கு என்ன செய்வது…?

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பமும் காந்தமும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய உணர்வைக் கவர்கின்றது.
1.நாம் அந்த அருள் உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலுக்குள் பெருக்க வேண்டும்.

நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புலனறிவால் நுகர்ந்தோமோ ஒளியின் சுடராக நமக்குள் இங்கே விளைகின்றது. இருளை அகற்றி மெய் பொருள் காணும் அந்த சக்தியை நமக்குள் பெறச் செய்கின்றது.

1.அதிலே அர்ஜுனன் என்பது துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கதிரின் வலிமை.
2.நாம் நுகர்ந்த பின் அந்த ஒளியின் உணர்வை ஊட்டுவது பீமன். அதாவது வலுக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு எதையுமே அலட்சியமாகத் தூக்கும்…! என்பது.
3.நகுலன் என்பது நாம் நுகர்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் (உடலிலே) ஒவ்வொன்றுடன் இணைந்து அதனுடன் “தன் உணர்வை உயர்த்தும்…!” என்று பொருள்.
4.சகாதேவன் என்பது இருளை அகற்றி அதைத் “தன்னுடைய பண்புடன் அரவணைத்துக் கொள்வது…!”
5.தர்மன் என்பது அந்த அருள் உணர்வின் தன்மையைத் “தனக்குள் ஏற்றுக் கொள்வது…!” என்பது பொருள்.

அப்படி ஏற்றுக் கொண்ட நிலையில் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றும்… நம்மைப் பேரொளியாக மாற்றும் என்பது பொருள்.

நல்லதைக் காக்கும் சக்தி

Fool proof protection

நல்லதைக் காக்கும் சக்தி 

நாம் நகை செய்யும்போது பித்தளையும், செம்பும், பொடி செய்து வைத்து இவை இரண்டையும் நெருப்பில் காட்டியவுடன் அந்தத் தங்கச் செயின் ஒன்றாக ஒட்டிக் கொள்கின்றது.

வெறும் தங்கத்துடன் தங்கத்தை வைத்துச் செயினாக செய்ய வேண்டுமென்றால் முடியாது. இரண்டிற்கும் ஒரு அளவான சூடு வேண்டும். வெள்ளியும் செம்பும் கலந்து வைத்தவுடன் இது சீக்கிரம் சூடாகி கரைந்து இத்துடன் போய் ஒட்டிக் கொள்கிறது. அதைப்போல
1.நாம் நல்ல மனது எவ்வளவு தூரம் இருந்தாலும்
2.நல்ல மனது கொண்டே நம்மைக் காப்பாற்ற முடியாது.

நாம் நல்ல மனதுடன் போய்க் கொண்டிருக்கிறோம். எதிற்புறம் ஒரு மாடு பயத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ மிரண்டு ஓடி விருகிறது. அப்பொழுது அது வெளிப்படுத்தும் மூச்சலைகள் நாம் கண்ணில் பார்த்தவுடன் அந்த உணர்வை நாம் சுவாசிக்க நேருகிறது.

அது எதைக் கண்டோ பயந்து மிரண்டு தன்னையறியாமல் கட்டுக் கடங்காமல் ஓடி வருகிறது. அப்படி ஓடி வரும்போது நம் மீது மோதினால் என்ன ஆகும்…?

நம் உயிருக்கே ஆபத்து. நம் வாழ்க்கையைச் சரிபடுத்த முடியாது.

அப்பொழுது அந்த மாடு வெளிப்படுத்தும் மூச்சில் நம் கண் புலனறிவு ஈர்த்து உயிரிலே பட்டவுடன் அது வேகமாக நமக்குள் பயத்தை ஊட்டி அந்த மாடு மிரண்டு வருவதில் இருந்து நம்மைத் தப்பிக்கச் செய்கின்றது.

1.அப்பொழுது அந்த வாழ்க்கை என்கிற செயின் ஒழுங்காக இருக்கிறது.
2.இல்லாவிட்டால் நம் வாழ்க்கையில் நல்ல குணத்தை நல்லதை எண்ணியதைக் காப்பாற்ற முடியாது.
3.இந்த உடலில் உயிர் இருக்கும் வரைக்கும்தான் செயல்படுத்த முடியும்.
4.இந்த உயிர் போய்விட்டால் ஒன்றுமே இல்லை.
5.இந்த உடலுக்குள் இருந்து உயிர் இயங்க வேண்டுமென்றால் உடல் நலமாக இருக்க வேண்டும்.

அந்த மாடு மிரண்டு ஓடிப் வரப்படும்பொழுது அந்த உணர்வுகள் பட்டுத்தான் நம்மைக் காப்பாற்ற முடியும். ஆக நம் உடலைக் காப்பாற்றிக் கொள்கிறோம். அதே சமயம் பயமான எண்ணங்களை நாம் சுவாசித்து நம் உடலுக்குள் சேர்த்துக் கொள்கிறது.

நாம் செம்பும் வெள்ளியும் சேர்த்து தங்கத்துடன் ஒட்ட வைக்கும்போது இரண்டும் அதனுடன் கலந்து விடுகின்றது. மறுபடியும் நெருப்பில் போட்டு உருக்கினாலும். இவை இரண்டும் கலந்தேதான் இருக்கும்.
1.நீங்கள் அடிக்கடி அழித்து அழித்துப் பற்ற வைத்துக் கொண்டே இருந்தால்
2.செம்பும் வெள்ளியும்தான் தேறும், கடைசியில் தங்கம் குறைந்துப் போகும்.

இதே மாதிரி நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் கொஞ்சம் கொஞ்சமாக நம்மைப் பாதுகாக்கும் எண்ணத்தை எடுத்து எடுத்து நாம் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு சரீரமாக மாற்றி எல்லா துன்பத்தையும் துடைக்கக் கூடிய ஆற்றல் மிக்க சக்தியாகப் பெற்று வந்துள்ளோம்.

இவ்வளவு உயர்ந்த தங்கத்தைப் போல சுத்த தங்கத்தைப் போல அதே மாதிரிப் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் அந்த உயர்ந்த சக்தியின் நிலைகளை நமக்குள் தங்கமாக வைத்திருக்கிறோம்.

வாழ்க்கை என்கிற நிலைகளில் ஒவ்வொரு நிமிடமும் பயம் ஆத்திரம் எல்லா நிலையும் வருகிறது. எல்லாம் பித்தளை செம்பு வெள்ளி போன்றவை, அடிக்கடி இவை நம் உடலில் சேர்ந்து விட்டால் நம் உயிரான வெப்பம் இவையெல்லாம் சேர்த்துக் கலந்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கும்.

நல்ல மனதாக இருப்போருக்கு இப்படி ஆகிறது. இன்று நல்லதைப் பற்றி எண்ணுகிறோம். அடுத்து யாராவது தப்பான நிலைகளைப் பார்த்து விட்டால், அந்த உணர்வு வந்து அதையும் நாம் சேர்த்துக் கொள்கிறோம்.
1.இப்படி நம் நல்லகுணத்தை அழித்து விடுகின்றது.
2.இதை நாம் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…!

வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் குறையில்லாமல் நாம் வாழமுடியாது. நாம் ரோட்டில் போகும்போது குறையான நிலைகளை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. யாராவது சண்டை போடுகிறார்கள் என்றால் அதைப் பார்ககாமல் இருக்க முடியாது.

இருவர் சண்டை போடும்போது யார் எதற்கு என்கிற வகையில் நாம் கேட்போம். சும்மா போய்க் கொண்டிருக்கும்போது அடித்தான் உதைத்தான் அடித்து ரொம்பக் காயமாகிவிட்டது என்று சொல்வார்கள்.

அடப் பாவிப்பயலே…! இந்த மாதிரி அடித்தானே என்று நமக்குள் பயமும் ஆத்திரமும் கோபமும் வருகிறது. ஏனென்றால் அந்த உணர்வுப் பட்டு அதற்குத் தகுந்த எதிர்மறை நமக்குள் உருவாகிறது.

அப்பொழுது நாம் அதைச் சுவாசிக்கும்போது உயிரில் பட்டு உணர்வு உமிழ் நீராக மாறுகிறது. நம் உடலில் சேர்ந்து விடுகின்றது. அதைத் துடைக்க வேண்டுமல்லவா…!

ஆகவே தீமையோ கஷ்டமோ துன்பமோ வேதனையோ வரும் பொழுதெல்லாம்
1.உங்கள் கண்களின் நினைவு ஈஸ்வரா…! என்று
2.புருவ மத்திக்குச் சென்று அதைத் தடைப்படுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று இதை நீங்கள் வழிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் (ஞானகுரு) பெறுகின்றேன். உங்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஜெபம் இருக்கின்றேன்.

நீங்கள் எதை எல்லாம் நல்லதாக வேண்டும் என்று செய்கின்றீர்களோ அது நல்லதாக வேண்டும் என்று ஜெபம் செய்கின்றேன்.

ஏனென்றால் உபதேசம் செய்த உணர்வலைகள் இங்கே இருக்கின்றது. உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம்.

டி.வி. ஸ்டேசனிலிருந்து ஒலி – ஒளி பரப்பு செய்யும் போது அதே ஸ்டேசனை வைத்தால் எப்படிப் படம் தெரிகின்றதோ அதே போல்
1.ஈஸ்வரா…! என்று உயிரை நினைக்கும்போது
2.அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் உங்களுக்குக் கிடைக்கும்.
3.நீங்கள் அதை வளர்ப்பதற்கு உங்களுக்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது.

உங்களால் முடியும்…!

பிரதோஷத்தை நீக்கும் வழி முறைகள்

shiva pradosham

பிரதோஷத்தை நீக்கும் வழி முறைகள்

 

நமது வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்கள்… சாபமிடுதல்… வேதனைப்படுதல்.. இதை எல்லாம் பரிவுடன் கேட்டால் அது எல்லாம் நமக்குள் வலிமையாகி விடுகின்றது.

அப்போது அதையேல்லாம் நாம் நுகரப்படும் போது அவர்கள் உடலிலே விளைந்த தோஷங்கள் எல்லாம் நமக்குள்ளும் வந்து விளைந்து விடுகின்றது. இதைத்தான் “பிரதோஷம்…!” என்று சொல்வார்கள்.

அந்தப் பிரதோஷத்தை நீக்க நாம் என்ன செய்கின்றோம்…?

சிவனுக்கு முன்னாடி இருக்கிற நந்தீஸ்வரனுக்கு மாலையைப் போட்டு அபிஷேகமும் செய்து அதற்கு வேண்டிய பதார்த்தத்தை எல்லாம் கொடுத்து அந்த நந்தீஸ்வரன் செவியில் போய்ச் சொல்கிறோம்.
1.என் குடும்பத்தில் இப்படிக் கஷ்டமாக இருக்கிறது.
2.என் பிள்ளை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
3.நான் கொடுத்த கடனைத் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.
4.என் வீட்டில் உள்ளவர்களுக்கு எல்லாம் நோய் வந்து விட்டது.
5.எங்கள் கஷ்டத்தை எல்லாம் நீ ஈசனிடம் சொல்லு. அவன் பார்த்து ஏதாவது செய்வான்…!
6.இப்படி ஒரு நிலையில் தான் நாம் அபிஷேகம் ஆராதனை செய்து கொண்டு கோவில்களுக்குப் போகிறோம்.

ஆனால் இவைகள் எல்லாம் எவ்வாறு இருக்க வேண்டும்…?

நாம் நல்ல பண்புடன் தான் எல்லோரையும் பார்த்தோம்… கேட்டோம்…! ஆனால் அந்தத் தோஷங்கள் நமக்குள் விளைந்து விட்டது. அதை நாம் நீக்க வேண்டும் அல்லவா…!

எல்லா வகையான பிரதோஷங்களையும் நீக்கிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகிக் கணவன் மனைவி இணைந்து துருவ நட்சத்திரமாகப் பேரொளியாக இன்றும் நம் பூமியின் வட துருவப் பகுதியில் விண்ணிலே வாழ்கிறார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. அதிகாலை நான்கு மணியில் இருந்து துருவப் பகுதியின் வழியாக இழுத்து நம் பூமிக்குள் கொண்டு வருகின்றது.

அப்படிக் கொண்டு வரப்போகும் போது நாம் அந்த நான்கு மணியில் இருந்து ஆறு மணிக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ ஆன்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று பல முறை சொல்லி நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

நான் எனது வாழ்க்கையில் யார் யாரையெல்லாம் பார்த்து அவருடைய கஷ்டங்களையும் துன்பங்களையும், துயரங்களையும் கேட்டுணர்ந்தேனோ… அவர்கள் குடும்பங்களில் எல்லாம் அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி படர்ந்து அவர்கள் குடும்பத்தில் அவர்கள் அறியாது சேர்ந்த சகல தோஷங்களும் நீங்க வேண்டும்.

நாங்கள் பார்த்தவர்கள் அனைவரும் தோஷங்களிலிருந்து விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் குடும்பங்கள் அனைத்திலும் படர்ந்து அவர்கள் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நாம் சொன்னோம் என்றால் அப்போது என்ன ஆகின்றது…? (இதை எதற்காக நினைக்க வேண்டும்…?)

மற்றவர்களின் கஷ்டங்களையும் துன்பங்களையும் குறைகளையும் நாம் கேட்டோம் அல்லவா…! அப்பொழுது அவருடைய தோஷ உணர்வுகள் நமக்குள் வந்து பதிவாகின்றது.

அந்த உணர்வுகள் நமக்குள் வராதபடி நாம் (மேலே சொன்ன மாதிரி) எண்ணும் போது
1.“அவர்கள் எல்லாம் நலமாக வேண்டும் என்று எண்ணும் போது”
2.நமக்குள் வந்த அந்தத் தோஷங்களை நீக்கி விடுகின்றோம்
3.அந்தப் பேரொளி என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்கின்றது.
4.நமக்குள் பிறருடைய தோஷங்களைத் துடைக்கும் சந்தர்ப்பத்தை அப்பொழுது உருவாக்குகின்றோம்.
5.காரணம் அன்று நாம் பகைமை உணர்வை எல்லாம் மறக்கின்றோம்
6.அதே சமயத்தில் மகிழ்ச்சியான உணர்வை உணவாக்குகின்றோம்
7.பிரதோஷத்தை முடித்த பின் சுவை மிக்க உணவை உணவாக்கி மகிழ்ச்சி என்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றோம்.

இப்படி எல்லோரும் இதைப் போல மகிழ்ந்து வாழ வேண்டும். அவர்கள் வாழ்க்கையின் சுவையும் மகிழ்ச்சியும் பெறவேண்டும் என்று பிரதோஷம் அன்றைக்கு இப்படி எண்ண வேண்டும்.

இப்படி யாராவது எண்ணுகிறார்களா என்றால் இல்லை…! சாயங்காலம் 4 ல் இருந்து 6 க்குள் காசைக் கொண்டு செலவு செய்து சாங்கியப்படி அதைச் செய்கிறார்கள்.

ஆனால் ஞானிகள் காட்டியது அதிகாலை 4 ல் இருந்து 6 க்குள் நாம் இதை எண்ணச் சொன்னார்கள். காலை ஆறு மணிக்கெல்லாம் சூரியன் உதயம் ஆகின்றது. அப்பொழுது பூமியிலிருப்பதை இழுக்கும் சக்தி வருகிறது.

பிரதோஷம் என்ற நிலையில் மேலே சொன்ன மாதிரி நாம் அந்தத் தீமைகளை எல்லாம் நீக்க வேண்டும் என்று எண்ணினால் நாம் அதை (தீமைகளை) இழுக்கும் சக்தி குறைகிறது.
1.நமது ஆன்மா முன்னால் இருக்கும் அந்தத் தீமைகளை நாம் இழுக்க மறுக்கும் பொழுது
2.அந்தச் சூரியன் அது இழுத்துக் கொண்டு போய்விடும்,
3.சூரியன் தனது அருகிலே கொண்டு போனால் அதற்குள் அருகிலே போகும் போது நெருப்பாக மாறுகின்றது. விஷத்தைக் கருக்கி நீக்கி விடுகின்றது.
4.இப்படித் தான் தோஷங்களை அன்று நீக்கும்படிச் சொன்னார்கள்.

ஆனால் நந்தீஸ்வரன் காதில் ஓதி… “இந்தப்பா…! நான் லட்டு ஜிலேபி வாழைப் பழம் ஆப்பிள் பழம் எல்லாம் கொடுத்திருக்கிறேன். என் கஷ்டத்தை எல்லாம் நீ ஈசனிடம் போய்ச் சொல்லப்பா…!” என்று ஞானிகள் சொல்லச் சொல்லவில்லை.

ஏனென்றால் நந்தீஸ்வரன் என்றால் “நாம் எதைச் சுவாசிக்கிறோமோ… அது தான் நமக்குள் உருவாகிறது. அப்பொழுது நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்..?

அந்தப் பேரருள் பெற்ற அந்த ஞானிகள் உணர்வின் தன்மையை நுகர்ந்தால் நமக்குள் அது உருவாகி நமக்குள் பிறருடைய தீமைகளை நீக்கிவிடும். தோஷங்கள் வராது தடுக்க இது உதவும். இப்படித் தான் நாம் பழக்கப்படுத்த வேண்டும்.

காசைக் கொடுத்து விட்டுப் பிரதோஷம் அன்றும் சிவன்ராத்திரி அன்றும் விடிய விடிய முழித்துக் கொண்டு நாம் வரம்பு மீறித் தவறுகளைத் தான் செய்கின்றோமே தவிர
1.தவறை நீக்கும் மார்கங்களை ஞானிகள் காட்டி இருந்தாலும்
2.யாரும் இதைச் செயல்படுத்தவில்லை…! (இது தான் இன்றைய நிலை)

எதிர்பாராத விபத்துகள் ஏற்படக் காரணம்

Curse rays

எதிர்பாராத விபத்துகள் ஏற்படக் காரணம் 

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு பக்கம் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கே படமாக்கிப் பதிவாக்குகின்றார்கள். அதை அலை வரிசையில் அலைகளாக மாற்றி அனுப்புகிறார்கள்.
1.அதை இருக்கும் இடத்திலிருந்தே பதிவாக்கி
2.அதனின் உணர்வின் நிலையை உலகம் முழுதும் பரப்பச் செய்கின்றான் (RELAY) மற்றொருவன்.

உலகம் முழுதும் பரவச் செய்யும் போது அதே அலை வரிசையில் டி.வி. வழியாகவோ கம்ப்யூட்டர் மூலமாகவோ மற்றவர்கள் இருப்பிடத்திலிருந்து உற்றுப் பார்க்கும் நிலை வருகின்றது. இது புறத்தில் விஞ்ஞானக் கருவிகளால் நடக்கக்கூடிய சம்பவம்.

ஒருவருடன் நண்பன் என்ற நிலையில் நன்றாகப் பழகுகின்றோம். அவனை நமக்குள் பதிவாக்கி விட்டால் நண்பனின் நினைவு கொண்டாலே போதும். அவன் உருவ நிலை நம் முன் நிற்பதை காணலாம்.

1.ஆக மனித உடலுக்குள் ஒன்றைப் பதிவாக்கி விட்டால்
2.அவனின்று வெளிப்படும் உணர்வின் அலைகள் அங்கே பதிவாகின்றது.. அலைகளாக மாறுகின்றது…!
3.பதிவான உணர்வினை நினைவு கொள்ளும் போது “குவித்து” அந்த உணர்வின் தன்மையை அறிகின்றோம்.

அவனுடன் எந்த உணர்வுடன் உறவாடினோமோ அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் போது நமக்குள் உணர்ச்சியின் தன்மையாக உடலை இயக்குகின்றது.

பண்பு கொண்டு… பரிவு கொண்டு… நண்பன் எனக்கு உதவி செய்தான்… உபகாரம் செய்தான்…! என்ற உணர்வை நுகரப்படும் போது நமக்குள் மகிழ்ச்சியின் உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது. நண்பனை நினைத்தாலே நமக்குள் மகிழச் செய்யும் நிலையாக வருகின்றது.

ஆனால் பண்புடன் வாழ்ந்து வந்த நிலையில் சந்தர்ப்பத்தில் பகைமையாகி வெறுப்பின் உணர்வாக ஆகி தீமைகள் விளைந்தது என்ற உணர்வுகளை இருவரும் பதிவாக்கிக் கொண்ட பின் என்ன நடக்கிறது…?

தன் வாழ்கையில் சிரமம் என்ற உணர்வுகள் உந்தப்படும் போது எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்ற உணர்வின் வேகத்தைக் கூட்டும் போது
1.அவனில் உருவான இந்த உணர்வுகள்
2.இவனின் உணர்வு அங்கே பதிவானதனால்
3.அந்த உணர்வுகள் இரண்டும் மோதிப் பகைமை உணர்ச்சிகளைத் தூண்டி
4.உணவை உட்கொள்ளும் நேரமாக இருந்தால் சாப்பிடும் உணவை உள் இழுக்கும் செயலை இழந்து விடுகின்றது… புரை ஓடுகின்றது…!
5.ஒரு பருக்கை நுரையீரலுக்குப் போனால் மடிந்து விடுவான்.

ஆனால் ஒரு வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். கண்ணுற்றுப் பார்த்துக் கவர்ந்த உணர்வின் தன்மையை வைத்து வாகனத்தைச் சீராக இயக்கிச் சென்றாலும் நண்பர்களுக்குள் துரோகம் செய்தான் என்ற உணர்ச்சிகள் உந்தி எதிர்மறையான எண்ணங்கள் கொண்டு தாக்கப்படும் போது ஒரு நொடி அவன் சிந்திக்கும் தன்மை இழந்தால் உடனே விபத்தாகின்றது. (ACCIDENT)

மனிதனுக்கு மனிதன் வாழும் போது பகைமை உணர்வு கொண்டால் ஒரு தொழிலில் வேலை செய்யும் போது இத்தகைய நிலையானால் புரையாகி அந்தச் சந்தர்ப்பத்தால் மரணம் அடையும் நிலை கூட வருகின்றது.

ஒரு எலக்டிரிகல் டிபார்ட்மெண்டில் வேலை செய்கிறான் என்றால் இதைப் போல நண்பர்களுக்குள் தன்னுடைய வேகத்தின் உணர்வைக் கூட்டினால் சிந்திக்கும் செயல் இழந்து மின்சாரம் செல்லும் வயரில் கையை வைத்தான் என்றால் இவன் மடிகின்றான்.

இதைப் போன்று ஒரு நொடி தவறினால் மனிதனை அது வீழ்த்தி விடுகின்றது. ஆகவே மனிதனுக்கு மனிதன் தொடர்பு இல்லாது எவரும் இல்லை.
1.பகைமை கொண்டாலும் உணர்வுகள் தொடர்பு உண்டு.
2.மகிழ்ந்தாலும் உணர்வுகள் நமக்குள் தொடர்பு உண்டு.
3.மனிதர்கள் யாரும் பிரிந்து வாழ்ந்ததில்லை.

நாம் பிரிந்து வாழ்கின்றோம் என்று நினைக்கின்றோம். ஆனால் பிரிவினையான எண்ணங்களை நுகரப்படும் போது நம் உடலுக்குள் அந்தப் பகைமையான உணர்வின் அனுக்களும் பண்புடன் வளர்ந்த அணுக்களும் போர் முறையாக மாறிவிடுகின்றது.

அது ஒன்றை ஒன்று உணர்ச்சிகளால் தாக்கப்படும் போது நம் உடலில் மேல் வலியும் கை கால் குடைச்சலும் வரும். சில பேருக்குப் “பளீர்…!” என்று ஊசி குத்துவது போல இருக்கும்.

ஏனென்றால் அந்தப் பகைமை உணர்ச்சி கொண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது அது நம் உடலுக்குள் வேதனையைக் கொடுக்கும் நிலையாக வருகின்றது.

நாம் எப்பொழுதோ சண்டையிட்டோம். அதனால் பகைமை ஆனது. இப்பொழுது அவனிடமிருந்து விடுபட்டிருக்கிறோம்…! என்று எண்ணுகின்றோம். ஆனால்
1.அவனின்று நுகர்ந்த உணர்வு நம்முள் நின்றே அதன் வீரியத்தை ஊட்டும் போது
2.நல் உணர்வை ஊட்டிய அணுக்கள் இங்கே அஞ்சி நடுங்குகின்றது.
3.அதனால் சிந்திக்கும் தன்மை இழந்து ஒரு செயலின் தன்மை குறைகின்றது… வேதனைப்படுகின்றோம்.

வேதனையை நுகரப்படும் போது மேலும் சிந்திக்கும் தனமை குறைந்து…
1.நினைத்த காரியம் நடக்கவில்லை என்றால் உணர்வுகள் உந்தப்பட்டு
2.கோபத்தின் உணர்ச்சி உச்சகட்டம் ஏறுகின்றது.
3..தன்னையே அழித்திடும் தன்மை வருகின்றது அல்லது
4.தன்னுடைய சார்புடையோரால் அந்தக் காரியம் நடக்கவில்லை என்றால் அவரைக் கொன்றுவிட வேண்டும் என்ற உணர்ச்சிகளே தோன்றுகின்றது.

ஆகவே இதைப் போன்ற உணர்வின் இயக்கங்களிலிருந்தெல்லாம் நாம் தப்புதல் வேண்டும். அதற்காகத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம்.
1.ஈஸ்வரா…! என்று நம்முடைய உயிரைப் புருவ மத்தியில்
2.உடனுக்குடன் எண்ணும் பழக்கம் வந்து விட்டால் தீமைகளைத் தடுக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி விட்டால் தீமைகள் நமக்குள் உருவாகாது நன்மை செய்யும் சக்தியாக அதை மாற்றிக் கொள்ள முடியும்.