தியானத்தில் நம் நினைவுகள் திசை மாறினால் என்ன செய்ய வேண்டும்…?

தியானத்தில் நம் நினைவுகள் திசை மாறினால் என்ன செய்ய வேண்டும்…?

 

நாம் தியானம் எடுக்கும் பொழுது சில நேரங்களில் துருவ நட்சத்திரத்தை எண்ணினாலும் கூட அந்த எண்ணங்கள் திசை மாறிப் போகும். இது எதனால் ஏற்படுகின்றது…?

நம் உடலில் இதற்கு முந்தி நாம் நுகர்ந்து சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது தீய அணுக்களாக மாறும் பொழுது “அதற்கு அந்த உணவு தேவை…”

நாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதை எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தால்
1.தனக்காக வேண்டி அந்த எல்லா அணுக்களும் சேர்த்து அதனதன் உணர்வை நுகரப்படும் பொழுது
2.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற முடியாதபடி அது தடுக்கும்.
3.வெறுப்போ வேதனையோ சலிப்போ சங்கடமோ பிறர் மேல் ஆத்திரமோ அந்த உணர்வுகள் தான் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டும்.
4.அதன் வழி நம் உடலில் உள்ள அந்தத் தீய அணுக்கள் உணவை எடுத்து வளரும்.

அதைத் தடுப்பதற்கு “உடனடியாக கண்களைத் திறந்து…” துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று மீண்டும் அதை எண்ணி எங்கள் உடலுக்குள் இருக்கும் ரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்த வேண்டும்.

இவ்வாறு சிறிது நேரம் ஆன பின் கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின் சக்தி உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானியுங்கள்.
1.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதன் வழி உணவை எடுக்காதபடி
2.கண்ணின் நினைவை உயிரில் செலுத்தி அங்கே புருவ மத்தியிலே அடைத்து… விண்ணிலே நினைவைச் செலுத்தி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உயிர் வழி கவர்ந்து ரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.

காரணம்… எத்தனையோ விதமான தீய அணுக்கள் உடலுக்குள் இருப்பதால் அதனுடைய உணவுக்கு “அதனுடைய வலுவை அது காட்டத்தான் செய்யும்…”

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் செலுத்தி உடலில் இருக்கக்கூடிய இரத்த நாளங்களில் கலக்கச் செய்யும் பொழுது அது வலிமை பெறுகின்றது.

உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது “அதை இழுக்கும் சக்தி கிடைக்கின்றது…”

உதாரணமாக ஒரு தவறு செய்பவரைக் கண்ணிலே நினைத்தபின் எப்படி அந்த உணர்வின் நிழல் படம் தெரிகின்றதோ அந்த நேரத்திலே நம்முடைய உணர்ச்சிகள் பல விதமாக வெறுப்பாகத் தோன்றுகின்றது. கண் வழி நுகர்ந்து தான் ஏற்கனவே அது அணுவின் தன்மையாக அடைந்தது.

அதே கண் வழியாக உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று உள்முகமாகச் செலுத்தும் பொழுது அந்த உணர்வுகளை எடுத்து
2.ஏற்கனவே உருப்பெற்ற அணுக்கள் இரத்தத்தின் வழி நுகர்வதை மாற்றி
3.துருவ நட்சத்திரத்திச் சக்தியை ஈர்க்கும் சக்தி பெற்று நல்ல அணுக்களாக அதை மாற்றும் சந்தர்ப்பம் வருகின்றது.

தியானம் இருந்தேன்… என் நினைவுகள் எங்கேயோ இழுத்துக் கொண்டு போகிறது…! என்று அப்படிச் சொல்லி விட்டு விடாதீர்கள்.

யாம் சொன்ன முறைப்படி அதை மாற்றி மாற்றி… உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள்.
1.இரத்தங்களிலே அதைப் பெருக்கி பழகுங்கள்.
2.இப்படி… இந்த வலிமையைத் தான் நாம் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

எதிர் நிலையான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…?

எதிர் நிலையான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…?

 

நம் குடும்பத்தில் எதிர்பாராத நிலைகள் வரும் பொழுது ஒருவர் வெறுப்படைந்து வேதனைப்படும் செயலைச் செய்வார். அவரை நாம் உற்றுப் பார்த்தபின் உணர்வை நுகர்ந்து அறிவோம்.

“இப்படிச் செய்கின்றானே…!” என்ற நிலை வந்துவிடும். அது வந்தபின் சுத்தப்படுத்தாமல் விட்டுவிடக் கூடாது.

அந்த மாதிரிச் செய்கின்றானென்றால்
1.உடனே நம் குரு காட்டிய முறைப்படி “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுத்தப்படுத்தவில்லை என்றால்… அவர் செய்யும் தவறான உணர்வு நம் உயிரில் பட்டு உடல் முழுவதும் பரவுகின்றது. நம் ரத்தங்களில் முழுவதும் கவரப்படுகின்றது.

இரத்தங்களில் கலந்த பின் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களை… “நல்ல உணர்வை ஈர்க்க விடாதபடி” தடைப்படுத்தி விடுகின்றது.

இரத்தத்திலுள்ள உணர்வுகளை நல்ல அணுக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.
1.அப்படி ஏற்றுக் கொள்ள மறுக்கும் பொழுது கொதிப்பென்ற நிலைகள் வருகின்றது.
2.வெறுப்பென்ற நிலைகள் வரும் பொழுது நமக்கு ஒரு விதமான நடுக்கம் வரும்.
3.ஏனென்றால் அந்த அணுக்களுக்குச் சரியான ஆகாரம் இல்லையென்றால் அது பதறும்… நமக்குப் பதட்டம் வரும்.

அப்படி நடுக்கம் வரும் பொழுது சிறிதேனும் அந்த அணுக்களில் சேர்ந்து விட்டால் அந்த உணர்வுகள் இணைந்து கொள்ளும். அடுத்து தவறு செய்யும் உணர்வுகளை நுகர்ந்து அது வளர்ந்துவிடும்.

1.நல்ல அணுக்களின் மலங்களால் உருவானதுதான் நம் உறுப்புகள்… அப்பொழுது உறுப்பின் வளர்ச்சி குறைகின்றது.
2.அதுவும் சேர்ந்து அந்த அணுக்களின் தன்மையும் சேர்ந்து ஒன்றுக்கொன்று போர் முறை செய்து “வலி…” எடுக்கின்றது.

நாம் தப்பு செய்யவில்லை. ஒருவருக்கொருவர் சண்டையிடும் உணர்வை நுகர்ந்தோமென்றால் இந்த நிலையாகின்றது.

அதே சமயத்தில் இந்த வெறுப்பின் உணர்வு கொண்டு வீட்டுக்கு வருகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வெறுப்பின் உணர்வுகள் நமது ஆன்மாவில் அதிகமாகப் பெருகியிருக்கும்.

வீட்டில் சின்னக் குழந்தை ஒரு பாத்திரத்தைப் போட்டால் போதும்…! அல்லது குழந்தை ஏதாவது சத்தம் போட்டுப் பேசினால் போதும்.

இது எதிர் நிலை ஆகும்.

மனைவியைப் பார்த்து…
1.பிள்ளையை வளர்த்திருப்பதைப் பார்…! என்று வெறுப்பான நிலைகளில் பேசச் சொல்லும்.
2.சில நேரங்களில் வீட்டில் ஏதாவது நடந்தால் உங்களை அறியாமலே கோபித்துக் கொள்வீர்கள்.

இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கின்றோம்…?

நாம் நுகர்ந்த உணர்வுதான் நம்மை இயக்குகின்றது. அப்படி இயக்கும் அந்த உணர்வை யாம் கொடுத்த அருள் சக்தி கொண்டு ஆயுள் மெம்பர் அனைவரும் அந்த நிமிடமே புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பேரொளியை நாம் பெற வேண்டும் என்று நம் இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும்.

இரத்தத்தில் கலந்தபின் அவர்கள் இருவருமே பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் தெளிந்த மனம் பெற வேண்டும் ஒன்றுபட்டு வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.அந்த உணர்வின் உணர்ச்சிகளை நம் இரத்தத்தில் சேர்க்கும் பொழுது அவன் சண்டை போட்ட உணர்வைத் தணிக்கின்றது.
2.அவன் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வு கலக்கின்றது.
3.உணர்வின் தன்மையை உயிர் உருவாக்குகின்றது… கருவாகின்றது… நம் இரத்தத்தில் சுழல ஆரம்பிக்கின்றது.
4.இது நம் அணுக்களுடன் சேரும் பொழுது நமக்கு ஒத்த நிலையாக மாறுகின்றது.

இந்த மாதிரி எல்லாவற்றையும் மாற்றிப் பழக வேண்டும்.

சாமி கும்பிட்டேன்… தியானமிருந்தேன்… இப்படி ஆகிவிட்டது…! என்று சொல்லக் கூடாது. பிறருடைய கஷ்டங்களைக் கேட்டுவிட்டுச் சுத்தப்படுத்தாமல் இருந்தால் என்ன செய்வது…?

சட்டையில் அழுக்குப்பட்டால் துவைத்துக் கொள்கின்றோம். ஒரு நாற்றமான பொருள் சட்டையில் பட்டால் உடனடியாக துவைத்துக் கொள்கின்றோம். அது போன்று வெறுப்பென்ற நிலைகளை உடனே சுத்தப்படுத்தியாக வேண்டும்.

எந்த நிலையிலும் எந்தச் சூழ்நிலையிலும் பிறருடைய தவறை நாம் பார்த்து விட்டால் அந்த உணர்வுகள் நம்மிடம் வந்த பின் தான்… “தவறு செய்கின்றான்…” என்று அறிகின்றோம்.

அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி
1.நம்மை அறியாமலேயே “இப்படிச் செய்கின்றான்…” என்று சொல்ல வைக்கின்றது.
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் இப்படிப் பேச வைக்கின்றது… இதை நாம் தடைப்படுத்த வேண்டும்.

அந்த நேரத்தில் “ஈஸ்வரா” என்று நம் உயிரை எண்ணி நம் உடலுக்குள் போகாமல் தடைப்படுத்த வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், என்று எண்ணிக் கண்ணின் நினைவை உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

பின் அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும். நல்ல ஒழுக்கமுள்ளவனாக வரவேண்டும். பண்புடன் நடந்து கொள்ளும், சக்தி பெற வேண்டும் எ\ன்று எண்ண வேண்டும்.

இந்த உணர்வு நம் உடலுக்குள் இரத்தத்திலுள்ள அவன் உணர்வைத் தணிக்கின்றது.
1.ஆக தியானமென்றால் நாம் கடும் தவமிருந்து எல்லாச் சக்தியும் பெறுவதல்ல.
2.ஒவ்வொரு நிமிடமும் நாம் அந்த அருள் சக்தி பெற வேண்டும். நல்ல குணங்கள் வரவேண்டும் என்று தியானித்து
3.வரும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

“தியானமே எனக்கு வரவில்லை…” என்று யாரும் சொல்ல வேண்டியதில்லை

“தியானமே எனக்கு வரவில்லை…” என்று யாரும் சொல்ல வேண்டியதில்லை

 

இயற்கையின் நிலைகளாக… மெய் ஞானிகள் கூறிய “உயிருடன் ஒன்றி ஒளியாகும் உணர்வினை…” யாரும் பின்பற்றவில்லை. இப்பொழுது சொன்னாலும் கூட அதை ஏற்றுக் கொள்வோர் குறைவாகத்தான் உள்ளார்கள்.

தெய்வத்திற்குக் காசைக் கொடுத்தால் தெய்வம் நமக்கு வரம் தரும்… எல்லாம் சரியாகப் போய்விடும்…! என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றோம்.

நாம் உணவாக உட்கொண்ட நிலைகள் உடலுக்குள் சேர்த்துக் கொண்ட நிலைக்கொப்பத்தான் சத்து ஏற்படும். அதைப் போன்று தான் உயர்ந்த உணர்வுகளை நாம் கவர்ந்து வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற வேண்டும் என்று எண்ணினால் அது நமக்குள் பதிவாகும்.

திட்டியவனை எண்ணும் பொழுது சோர்வும் சஞ்சலம் எப்படி நமக்குள் வந்து
1.தவறான வழிகளில் நம்மை அழைத்துச் செல்கின்றதோ அதே போன்று
2.அருள் உணர்வுகள் நமக்குள் பதிவான பின் அது “ஞானிகள் வழியில்” நம்மை அழைத்துச் செல்லும்.

வாழ்க்கையில் எண்ணங்கள் தடுமாறி… கோபமோ வெறுப்போ வேதனையோ சலிப்பு சஞ்சலமோ வரும் பொழுதெல்லாம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற வேண்டும்.

1.அப்போது சஞ்சலங்களை அது மாற்றும். சிந்திக்கும் தன்மை வரும்… முகமும் அழகாகும்.
2.வேதனைப்படும் பொழுது இந்தத் தியானத்தை எடுத்துப் பாருங்கள்.
3.முகத்தில் ஒரு விதமான மலர்ச்சி ஏற்படும்… சிந்திக்கும் ஆற்றல் வரும்… தெளிவான வாழ்க்கையும் வாழ முடியும்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்றி அருள் உணர்வைப் பெறுங்கள்.

சிறிது காலம் இவ்வாறு எண்ணினால் போதுமானது. பின் தன்னிச்சையாக வரும்.

“தியானமே எனக்கு வரவில்லை…” என்று சொல்ல வேண்டியதில்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் கண்களைத் திறந்தபடியே நினைவினை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் அந்த சக்திகளைப் பரப்பிப் பழகுதல் வேண்டும்.

இப்படிப் பயிற்சி எடுத்துக் கொண்டால் நாளடைவில் உணர்வின் தன்மை வலிமையான பின் எந்தத் தீமையும் உடலுக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

சிலர் பிராணயாமம் என்று சொல்வார்கள். மந்திரங்களைச் சொல்லி பிற உணர்வுகளை நுகர்ந்த பின் “கம்…” என்று இருண்ட நிலை ஆகிவிடும். விடுபட்டால் அந்த உணர்வின் விஷத்தன்மையே இயக்கும்.

மந்திர ஒலிகள் கொண்டு தெய்வங்களை எண்ணி ஜெபிக்கப்படும் போது அது நமக்குள் பதிவாகி இறந்த பின்… அதன் உணர்வை வேறு எவர் எடுக்கின்றனரோ அதே வழிகளில் (அந்த மனிதன் சென்ற வழி) அவரையும் அழைத்துச் செல்லும்.

ஆனால் இயற்கையின் உண்மை நிலைகள்
1.ஒளியின் உணர்வைப் பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றுப் பழகினால்
2.இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றும்.

ஏனென்றால் “வேண்டிய சக்திகள்…” நமக்கு முன் இந்தப் பூமியிலே பரவி உள்ளது. அதைப் பதிவாக்கி அதை எடுத்து உங்கள் இருளை நீக்கி உயிருடன் ஒன்றி உயிருடன் ஒன்றி வாழும் உணர்வைப் பெறச் செய்ய வேண்டும். அதை நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

1.குருநாதர் எனக்கு அப்படித்தான் கொடுத்தார்… பல அனுபவங்களைக் கொடுத்தார்.
2.அருள் உணர்வுகளை எடுக்கும் முறைகளைக் கொடுத்தார்… அதை உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.
3.உங்கள் எண்ணத்தால் கவரலாம்… தீமைகளை அகற்றலாம்… பிறவியில்லா நிலை அடையலாம்.
4.குடும்பத்தில் வரும் கலக்கங்களை மாற்றலாம்… ஒன்றுபட்டு வாழ முடியும்.

கணவன் மனைவி எப்பொழுதுமே ஒன்றி நிலைகள் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி மனைவி பெற வேண்டும் என்று கணவனும் கணவன் பெற வேண்டும் என மனைவியும்
1.எவரொருவர் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி வளர்க்கின்றார்களோ
2.நிச்சயம் பிறவியில்லா நிலை அடைகின்றார்கள்… அரும்பெரும் சக்திகளையும் பெறுகின்றார்கள்.

ஆயிரெத்தெட்டு… நூற்றியெட்டு… என்றெல்லாம் நாமாவளி சொல்கிறோம்… ஏன்…?

ஆயிரெத்தெட்டு… நூற்றியெட்டு… என்றெல்லாம் நாமாவளி சொல்கிறோம்… ஏன்…?

 

கௌரவர்கள் 100 பேர் என்று மகாபாரதத்தில் காட்டுவார்கள். 100 விதமான கௌரவர்கள் நமக்குள் உண்டு. ஒன்றுடன் ஒன்று என்ன செய்யும்…?
1.நாம் நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அதைத்தான் அது இயக்கும்… கௌரவர்கள்.
2.தான் எடுத்துக் கொண்ட உணர்வு… தனக்குள் ஏற்கனவே இருப்பதற்கு மாறாக வந்தால் அது விடாது.

மந்திரத்தைக் கற்றுக் கொண்டவர்களிடம் நல்லதைச் சொன்னால் மந்திரக்காரன் ஏற்றுக் கொள்வானா…? கௌரவம் என்ற நிலை வருகின்றது.

நல்ல சத்தின் தன்மை எடுத்துக் கொண்டால் நல்லது என்று வராதபடி கௌரவர்கள் அதனதன் வளர்ச்சிக்குத் தான் இயக்கும்.

இப்படி ஒரு மனித உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் அவனில் அந்த உடலில் எப்படி 100 குணங்கள் எப்படி இயக்குகின்றது…?

கோவில்களில் நாமாவளி சொல்வார்கள். கடவுளின் அவதாரம் 10 என்றால் தெய்வத்தின் அவதாரம் 10 என்ற நிலை வருகிறது. அது எதனதன் நிலைகள் வளர்ந்தது என்று நிலையும் வரும்.

அன்ன வாகனம் யானை வாகனம் சர்ப்ப வாகனம் மயில்வாகனம் என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் வைப்பார்கள் 10 வாகனங்களை. அந்த வாகனங்கள் எதற்கு…?

பாம்பு விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உட்கொள்கின்றது. மயிலும் தனக்குள் மற்றதை உட்கொண்டு விஷத்தை மாற்றுகின்றது. இப்படி
1.பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று கொன்று ஒன்றை ஒன்று தின்று
2.பத்தும் சேர்த்து ஒன்றாக ஒரு குணமாக மாறுகின்றது.

அதனால் தான் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்களை வைத்து எதனதன் நிலையில் வளர்ச்சி அடைந்தது…? என்று ஒவ்வொரு சாமிக்கும் இவ்வாறு வைத்திருப்பார்கள்.

இப்படி நூறு விதமான குணங்களுக்கும் ஒவ்வொன்றுக்கும் பத்து. இந்த நூறும் சேர்த்தால் ஆயிரம் ஆகும். அஷ்டதிக்கும் அறியும் உணர்வு வரப்படும் போது எட்டு…! அதாவது
1.ஆயிரெத்தெட்டு என்ற நிலைக்குக் கொண்டு வருவார்கள்… அதே போல நூற்றியெட்டு…
2.எதன் உணர்வின் தன்மையோ இதன் உணர்வுக்கொப்ப அஷ்டதிக்கும் அது உணர்வின் தன்மை எப்படி எடுக்கிறது…? என்று
3.இந்த உணர்வின் குணங்கள் மாறுவது எப்படி…? இந்த உணர்ச்சியின் செயல்கள் எப்படி மாறுகின்றது…?
4.இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடலில் எந்தக் குணத்தின் தன்மையை நாம் எடுக்கின்றோமா… உதாரணமாக சர்க்கரைச் சத்து என்ற குணத்தை வைத்துக் கொண்டு சர்க்கரையைச் சாப்பிட்டால் எதிர்நிலையாகின்றது.

சர்க்கரை அதிகமாகி விட்டால் அனைத்தையும் வெள்ளணுக்களாக மாற்றி விடுகின்றது. கோப உணர்வு அதிகமாகி கார உணர்வானால் அந்த உணர்ச்சிகளை அதிகமாகத் தூண்டுகின்றது… பின்னாடி இரத்தக் கொதிப்பால் வாத நோயாகி கை கால்களைச் சுண்டி விடுகிறது.

1.இப்படி ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வு எதிர் நிலையாகும் பொழுது உடலுக்குள் எப்படிப் போர்கள் நடக்கின்றது…?
2.மனிதனுடைய நிலை எப்படி இருக்கின்றது…? எதன் வழியில் அது வருகிறது…? என்பதைக் குருநாதர் காட்டுகின்றார்.

கூட்டமைப்பாக இருந்து… ஒவ்வொரு குடும்பத்திற்கும் “நாம் செய்ய வேண்டிய அருள் சேவை…”

கூட்டமைப்பாக இருந்து… ஒவ்வொரு குடும்பத்திற்கும் “நாம் செய்ய வேண்டிய அருள் சேவை…”

 

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் அனைத்தும் ஒன்று கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

மனிதர்களாக வாழக்கூடிய நாம்…
1.பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொண்டு உடலை வளர்த்த உணர்வுகள்
2.அந்த நினைவின் ஆற்றல் கொண்டு மேலே சொன்ன உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பப்படும் போது இது அனைத்திலும் கலந்து
3.எந்தெந்தத் தாவர இனங்களை உணவாக உட்கொண்டோமோ அதற்குள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து சர்வ தீமைகளையும் அகற்ற உதவும்.

தீமைகள் வரப்படும் பொழுது… அது எப்படி நமக்குள் கலக்கின்றதோ… அந்தத் தீமை எப்படி இயக்குகின்றதோ… இதைப் போன்றே
1.அந்தத் தீமை செய்யும் உணர்வுகளுக்குள் அருள் ஞானிகளின் உணர்வுகளைக் கலக்கப்படும் பொழுது
2.மழை மேகங்களுக்குள் அருள் சக்திகளைப் பரப்பப்படும் போது அந்தத் தீமைகள் அகற்றப்படுகின்றன.

அதே சமயத்தில் ஆங்காங்கு கூட்டுத் தியானங்கள் இருக்கப்படும் பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன…?

ஒருவர் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும் தியானமிருப்போர் அனைவரும் ஒன்று சேர்த்து மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர் உடலில் படர்ந்து… அவரை அறியாது தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்கி… அவர் உடல் நலம் பெற்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும் என்று “பல முறை சொல்லுங்கள்…”

1.இந்த உணர்வின் ஒலிகளைப் பரப்பப்படும் பொழுது இந்த உணர்வு எல்லோருடைய செவிகளிலும் பட்டு…
2.இந்த உணர்வை அவரும் நுகரப்படும் பொழுது அவர் நோயின் கடுமை குறைவதைப் பார்க்கலாம்.

இதை மீண்டும் மீண்டும் அவர் எண்ணத் தொடங்கினால்… அனைவரும் சேர்ந்து அவர் உடல் நலம் பெற செய்ய வெளிப்படுத்திய அருள் உணர்வுகள் அவருக்குள் ஓங்கி வளர்ந்து அந்த கடுமையான நோயைத் தணிக்க இது உதவும்.

இதையெல்லாம் நாம் அவசியம் செயல்படுத்த வேண்டும்.

தியானம் செய்து கொண்டிருந்தாலும்… ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ சாப அலைகள் உண்டு. நாம் தியானத்திற்குச் செல்லும் போது
1.அங்குள்ள சாப அலைகள் நீங்கி தீய வினைகள் நீங்கி அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பதிவாக்க வேண்டும்.
2.நாம் இப்படி வலுவான நிலைகள் கொண்டு பதிவாக்கும் இந்த உணர்வலைகளை வீடுகளில் உள்ள காந்தப்புலனறிவு கவர்ந்து கொள்ளும்.
3.இந்த உணர்வுகள் அந்த வீட்டில் உள்ளோருக்கு மீண்டும் நினைவூட்ட உதவும்….
4.தீமை அகற்றும் எண்ணங்கள் அங்கே தோன்றுகின்றது.

அ\ந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் இந்த உணர்வுகளைப் பதிவாக்கப்படும் பொழுது “ஒவ்வொரு நிமிடத்திலும் நன்மை பயக்கும் சக்தியாக மாறுகின்றது…”

ஒரு குடும்பத்தில் அதிகமான சிரமம் என்று கேள்விப்பட்டால் தியானம் செய்யும் இருபது பேர் அங்கே சென்று அமர்ந்து தியானித்து மகரிஷிகளின் உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

அப்போது அவர்கள் தொழில் வளம் பெறவும் கடும் பிணிகளில் இருந்து மீளவும் அருள் ஞானம் பெருகவும் ஞானத்தின் வழியில் அவர்கள் வழி நடக்கவும் இது உதவும்.

அந்த வலிமையான உணர்வுகளை நாம் அவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். “குடும்பம் நலம் பெற வேண்டும்…” என்ற உணர்வின் ஏக்கம் கொண்டு ஆங்காங்கு கூட்டமைப்பாகச் செயல்படுத்துங்கள்… நன்மை பயக்கும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இதைச் செயல்படுத்தி… அவர்கள் மகிழ்ந்து வாழ்வதைக் கண்டு “மகிழ்ச்சியான உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்…”

1.இதை அனைவரும் செயல்படுத்துங்கள்
2.அருள் ஞானம் பெறுங்கள்… அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையுங்கள்.
3.அருள் வழிகளிலே இந்த வாழ்க்கையை வழிநடத்துங்கள்.
4.அருள் ஞானிகளுடன் ஒன்றி வாழ்வோம்
5.அருள் ஞான உணர்வுடன் ஒன்றி வாழ்ந்து அந்த மகரிஷிகள் சென்ற அந்த இடத்திற்கு நாமும் செல்வோம்.

அனைவரும் பிறவி இல்லா நிலைகள் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

“பத்து மைல் சுற்றளவிற்கு…” துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொருவரும் பரவச் செய்ய முடியும்

“பத்து மைல் சுற்றளவிற்கு…” துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொருவரும் பரவச் செய்ய முடியும்

 

விஷத்தன்மைகள் பரவி புவியின் காற்று மண்டலத்தில் கலக்கப்படும் பொழுது அது நமது சுவாசத்திலும் கலந்து உடலுக்குள் செல்வதால்… உயிரின் இயக்கத்தால் நமது சுவாசம் பலவீமடைகின்றது.

ஒரு விஷத்தை நாம் உட்கொண்டால் நமது உடல் எப்படிப் பலவீனமடைகின்றதோ அதைப் போன்ற உணர்வுகளை நமக்குள் தோற்றுவிக்கின்றது.

இது இயற்கையின் செயல்களில் ஒன்று..

ஆனால்…
1.விண்ணில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களாக உள்ளவர்கள்
2.இத்தகைய நஞ்சுகளை அடக்கி ஒளியின் சுடராக அதை மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.

தியான வழியில் உள்ளவர்கள் அனைவரும் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவருவதனால் அவர்களை இந்த விஷத் தன்மைகள் பாதிப்பதில்லை.

ஆகவே… நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் “நாம் அனைவருமே ஒருங்கிணைந்து…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்குவது நல்லது.

ஏனென்றால்
1.ஏற்கனவே நமக்குள் பதிவாகி இருக்கும் இருண்ட உணர்வுகளைக் கரைப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
2.நாம் விடும் மூச்சலைகளால் இந்தப் பூமியில் படர்ந்துள்ள விஷத்தன்மைகள் முறியடிக்கப்படுகின்றன.

இந்தப் பூமியில் மனிதர்கள் சங்கடத்தாலும் வேதனனையாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வலைகள் பரவிப் படர்ந்துள்ளன.

நாம் கூட்டமைப்பாக இருந்து நல்லுணர்வின் அலைகளை வலுவாக வெளிப்படுத்தினோம் என்றால் நமது மூச்சலைகள் காற்று மண்டலத்தில் சிறுகச் சிறுகப் பெருகுகின்றது.

ஒரு முறை செய்துவிட்டு அடுத்த முறை தொடராமல் விட்டு விட்டால் கடலில் பெருங்காயத்தைக் கரைத்தது போல் ஆகிவிடும்.

அதாவது கடலில் கரைத்த பெருங்காயத்தின் மணம் சிறிது நேரம் கரைத்த இடத்தில் இருக்கும். பிறகு அதனின் மணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.

இதைப் போன்று அல்லாது “நமது மூச்சலைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி…” இந்தக் காற்று மண்டலத்தில் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியைப் பெருகச் செய்வதன் மூலம் இதனின் வலு அதிகமாகின்றது. இதனால் புறத்தில் பரவிக் கொண்டிருக்கும் நஞ்சின் வலுவினை இழக்கச் செய்கின்றோம்.

1.நாம் அனைவரும் கூட்டுத் தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இழுத்துக் கவர்ந்து
2.மூச்சலைகளாக நாம் வெளிப்படுத்தும் பொழுது அந்த அலைகள்
3.நமது காற்று மண்டலத்தில் குறைந்த பட்சம் “10 மைல்” சுற்றளவிற்கு மேலேயும் அகலமாகவும் பரவுகின்றது.
4.அந்த மூச்சலைகள் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மையினைக் குறைப்பதற்கு உதவும்.

ஏனென்றால் ஒரு நூலால் கனமான பொருளைத் தூக்க முடியாது. பல நூலை ஒன்றாகச் சேர்த்துக் கயிறாகத் திரித்து ஒரு கனமான பொருளைத் தூக்குவது போன்று
1.நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து
2.அதனின் உணர்வினை நமக்குள் சுவாசித்து மூச்சலைகளாக நாம் வெளிப்படுத்தும் பொழுது அது இந்தக் காற்று மண்டலத்தில் பரவும்.

சூரியனுடைய கதிரியக்கங்களில் அதிகமாக நச்சுத் தன்மை தாங்கியிருந்தாலும் நாம் வெளியிடும் மூச்சலைகள்
1.அந்த நச்சுத் தன்மையை முறியடிக்கும் உணர்வலைகளாக “10 மைல்” அளவுக்காவது இது பரவும்.
2.அப்போது இந்த “10 மைல்” சுற்றளவில் உள்ளவர்களுக்குத் தீங்குகள் இல்லாத நிலைகளும்
3.அவர்கள் சுவாசத்தில் நல்ல தன்மையினைப் பெறும் நிலையும் ஏற்படுகின்றன… நம்மிடத்திலும் இந்த நிலையைப் பெறுகின்றோம்.

ஆகவே நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உயிர் வழி கவர்ந்து உடலுக்குள் பரவச் செய்து நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உணவாகக் கொடுப்போம்.

அவ்வாறு அந்தச் சக்தி வாய்ந்த உணர்வின் ஒளி அலைகளை மூச்சலைகளை நாம் வாழும் ஊர் முழுவதும் படரச் செய்வோம்.

1.நம் ஊர் மக்கள் அனைவரையும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறச் செய்து
2.இனி வரும் எல்லாத் தீமைகளில் இருந்து விடுபடச் செய்து மகிழ்ந்து வாழச் செய்து
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அனைவரையும் நாம் இணைந்து வாழச் செய்வோம்.

எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் அனைவருக்கும் உறுதுணையாக இருக்கும்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

“உங்கள் மூச்சலைகளால்…” விஷக் கதிரியக்கங்கள் மாய வேண்டும்

“உங்கள் மூச்சலைகளால்…” விஷக் கதிரியக்கங்கள் மாய வேண்டும்

 

இன்று கெமிக்கல் கலந்த அணுக்களை… “செல்கள்… அதாவது சிலிகன்களைப் போன்று…” நமக்குள் உணர்வின் எண்ணங்களைப் பதியச் செய்து விட்டனர்.

1.விஞ்ஞான அறிவு கொண்ட கெமிக்கல் கலந்த உணர்வின் ஆற்றல்
2.நமக்குள் இருக்கும் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் இன்று அதிகமாகப் பதிந்து விட்டது.
3.அதிலிருந்து நாம் திசை திரும்பவே இல்லை.
4.மனிதன் என்ற எண்ணமே இங்கே போய்விட்டது,
5.இயந்திர வாழ்க்கை வாழும் நிலைக்கு இன்று நாம் வந்து விட்டோம்.

சிலிகனைப் போன்று நமக்குள் பதிவு செய்த நிலைகளில் “இருந்த இடத்திலே இருந்து கொண்டே… ஆட்டிப்படைக்கும் தன்மைக்கு வந்து விட்டது இன்றைய விஞ்ஞானம்…! (இதை யாரும் மறுக்க முடியாது)

மனிதனுடைய சிந்தனைகள் சிதறுண்டு போகும் நிலைகளும் சூரியனே சுக்குநூறாகிக் கரையும் நிலைக்கும் இந்தப் பூமியினுடைய நிலைகளும் பொசுங்கிப் போகும் நிலைக்கு வருகின்றது அல்லது இருள் சூழ்ந்த நிலைக்கு வருகின்றது.

பூமியில் அணுகுண்டுகள் வெடித்தால் இவன் நீருக்குள்ளும் நீர் நிலைகளுக்குள்ளும் பதித்து வைத்திருக்கின்ற லேசர் கதிரியக்கங்கள் அணுக்கள் வெடிக்கும். அதை அப்புறப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கின்றனர்.

அவ்வாறு எடுத்தாலும் அணு நீர் மூழ்கியின் தன்மையில் அந்த இயந்திரத்திற்குள் பாய்ச்சி இருந்தாலும் ஒவ்வொரு இயக்கத்திற்குள்ளும் அந்த அணுக் கதிரியக்கங்கள் தாக்கிடாதபடி அதை நீர் நிலைகளில்தான் மறைக்க வேண்டும்.

அல்லது வேறொரு மண்ணுக்குள் பதிய வைத்தாலும் பூமியின் வெப்ப அலைகள் கலக்கப்பட்டு இந்த அணுக்கள் மண்ணுக்குள் பூமிக்குள் வெகுதூரம் ஊடுருவி வரும் நிலைகள் வருகின்றது.

அணு உலைகள்… அது போன்ற மற்ற இடங்களிலிருந்து வருவதை
1.அந்தக் கசிவுகளை… கழிவுகளை எல்லாம் மண்ணுக்குள்ளே மறைக்க வேண்டுமென்று இவன் எண்ணுவான்.
2.ஆனால் இந்த அணுக்கதிரியக்கங்கள் பூமிக்குள் சென்றவுடன்
3.இயற்கையின் துடிப்பு கொண்டு கதிரியக்கச் சக்தியை அதிகமாகக் காட்டும்.
4.எதிர்நிலையான நிலை வரப்படும்போது பூமியில் நிலநடுக்கம் ஏற்படும்… எல்லாமே போய்விடும்.

இந்த அளவுக்குத்தான் இன்றைய உலகின் நிலை இருக்கின்றது.

இயற்கையின் நிலைகளை அசுத்தப்படுத்திக் கொண்டு… மனித உணர்வுக்குள்ளும் அதைப் பதியச் செய்து… இன்று மனிதன் என்ற நிலையே கூண்டுடன் அற்றுப்போகும் நிலை வருகின்றது.

ஏகக் காலத்தில் குண்டுகள் வெடித்தாலும்… வெடித்த நிலையில் புகை மண்டலங்களாகக் குவியப்பட்டுச் சூரியனுடைய ஆற்றல்மிக்க சக்தி வாய்ந்த கதிரியக்கங்கள் படாதபடி
1.பூமியில் இருக்கக்கூடிய நீர் வளங்கள் அனைத்துமே உறையும் தன்மை பெறும்.
2.இங்கே நாம் இருக்ககூடிய நிலைகள் அனைத்துமே உறையும் தன்மை வருகின்றது.

இதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் சூரியனுடைய கதிர் வெப்பங்கள் கலந்தவுடன் இதிலிருந்து ஆவியாக வெளிப்படுத்தி இதே உணர்வின் தன்மைகள் சூரியனே மாறுபடும் காலம் வருகிறது. மனிதனாலே இந்தப் பிரபஞ்சமே சூனியமாகும் காலம் வந்துவிட்டது.

1.யாம் சொல்வது உங்களுக்குப் புதிராக இருக்கலாம்.
2.ஆனால் விஞ்ஞானிகள் கணக்குப் போட்டு நாளைக்கு இப்படி வரப்போகிறது என்று சொல்வார்கள்.
3.எழுதி வைத்துக் கொள்ளுங்கள்… யாம் சொல்வது (1989 ஆம் வருடம்) உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம்.

நமது குருநாதர் ஒவ்வொரு அணுவிற்குள்ளும் ஊடுருவி மனிதனுடைய நிலைகள் எவ்வாறு இருக்கின்றது…? அதிலே நீ எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்று எமக்கு உபதேசித்தார்.

ஆகையினாலே இன்று மனித வாழ்க்கையினுடைய நிலைகளை விடுத்து “இது சரி… இது தப்பு…!” என்று வரவேண்டாம். குறைகளைக் காண வேண்டாம்.

நாம் அனைவரும் மெய் ஒளியைக் காண வேண்டும். மெய்யைக் காண்போம். மெய்யுணர்வின் தன்மையை நாம் பெறுவோம். இதிலே நாம் அனைவரும் “ஓரே குடும்பம்… ஓரே நிலை தான்…”

எத்தகைய இருள் வந்தாலும் உடனடியாக அதை மாற்ற வேண்டும். அதாவது மகரிஷிகளின் அருளாலே அந்த இருள் நீங்க வேண்டும்… நாம் அனைவரும் ஒளி நிலை பெற வேண்டும் என்ற உணர்ச்சிகளைக் கூட்டுவதற்குத் தான் குருநாதர் ஆணையை யாம் செயல்படுத்துகிறோம்.

நாம் எடுக்கும் எண்ணங்கள் அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த உணர்வின் ஒளிகள் நமக்குள் ஒன்றாக இருக்க வேண்டும்.

1.நாம் இடும் மூச்சலைகள் மழை நீராகக் கொட்ட வேண்டும்.
2.அப்படிப் பெய்யும் மழை நீரால் விஷக் கதிரியக்கங்கள் மாய வேண்டும்.
3.அத்தகைய விஷத் தன்மைகளை நீக்கும் ஆற்றல்களை ஒவ்வொருவரும் பெற வேண்டும்
4.அந்த மெய் உணர்வைத் தூண்டும் நிலைகளுக்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

தியானம் செய்பவரின் கடமைகள்

தியானம் செய்பவரின் கடமைகள்

 

நாம் எதைச் சொந்தமாக்க வேண்டும்…?
1.நமது உயிருடன் ஒன்றி வாழ்ந்து
2.இந்த உயிருடன் ஒன்றி வாழும் அந்த ஒளியின் சரீரத்தை நாம் நமக்கு சொந்தமாக்க வேண்டும்.

ஆகையால் தியான வழி அன்பர்கள் ஒவ்வொருவரும் “உலகுக்கு எடுத்துக்காட்டாக…” இருக்க வேண்டும். நமது கடமைகளிலிருந்து தவறக் கூடாது.

அருள் ஒளி என்ற உணர்வுகளை நமது உடலிலுள்ள அணுக்களுக்குக் கொடுத்து
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் குரு வழியில் பாய்ச்சி அதைக் கடமையாக அமைத்து
2.அந்த அருள் வழியில் ஒளியாக மாற்றும் உணர்வைப் பெற வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிர்தான் நமக்குச் சொந்தம். உணர்வை எல்லாமே ஒளியாக மாற்றி விட்டால் “தனுஷ்கோடி…”

இதை நமக்குள் எடுத்து லட்சம் என்கிற பொழுது அந்த லட்சம் இந்த லட்சம் என்றும் ஒன்று இரண்டு மூன்று என்ற நிலைகள் வரும்போது, பல லட்சம் ஆகிறது.

அப்பொழுது எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக்கும் போது “கோடி என்ற நிலைகளில் தனுஷ்கோடி ஆகின்றது…” எவ்வளவு அழகாக இராமாயாணத்தில் கொடுத்திருக்கின்றார்கள்.

ஆகையால் நாம் அனைவரும் இதனுடைய உணர்வுகளை வளர்த்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து… அதனுடன் சேர்த்த உணர்வின் தன்மை ஒன்றாக இணைத்துக் காற்றில் வரும் விஷ உணர்வுகளை நீங்கள் விடும் மூச்சலைகளால் மாற்றியமைத்து நாளை வரும் விஞ்ஞான அழிவிலிருந்து எல்லோரையும் காக்க வேண்டும்.

1.நியூட்ரான் என்ற நிலைகள் வரப்படும் பொழுது அது எப்படி எல்லாவற்றையும் விரட்டுகின்றதோ இதே போல்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நீங்கள் அனைவரும் பரப்பித் தீமைகளை எல்லாம் விரட்ட வேண்டும்.

ஒரு கிராமத்தில் இருக்கின்றோம் என்றால் அங்கே நோயோ, கலவரங்களோ இதைப் போன்ற சில நிலைகள் இருந்தால் அனைவரும் கூட்டுத் தியானமிருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்திகளைக் கவர்ந்து அந்த மூச்சலைகளை அங்கே பரப்புங்கள். அப்பொழுது அந்தக் கிராமத்தில் உள்ள தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் மாறுகின்றது.

சில ஊர்களில் விவசாயம் மிக மோசமாக இருக்கிறது என்று தெரிந்தால் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானமிருந்து
2.பயிரினங்களில் அந்தச் சக்தி படர வேண்டும் என்றும்
3.இதில் உருவாகும் அணுக்கள் தாவர இனத்தை வளர்க்கும் அணுவாக வளர வேண்டும் என்று
4.அந்த அருள் உணர்வுகளைப் பரப்ப வேண்டும்.

எனென்றால் காற்றிலிருந்து விஷத்தின் தன்மையை நுகர்ந்து அது அணுவாகி அதைச் சாப்பிடுகிறது. அதே சமயத்தில் நாம் எடுக்கும் உணர்வு கொண்டு அந்த விஷத்தன்மையை எடுத்தாலும் இது காற்றிலிருந்து வெளிப்படும் செடியின் சத்தை நுகர்ந்து அந்த உணர்வின் மலத்தை இடும்போது அது உரச் சத்தாக மாறும். அந்த அணுவும் வளரும்…! சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

நீங்கள் விடும் மூச்சலைகள் நல்ல அணுக்களாகின்றது. எனவே இதைப் போன்ற நிலைகளில் நாம்
1.நம்மைக் காக்க வேண்டும்.
2.நம் குடும்பத்தைக் காக்க வேண்டும்
3.நம் ஊரைக் காக்க வேண்டும்

இதைப் போல் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.

“உலகுக்கு எடுத்துக் காட்டும் நிலைகளில்…” நமது குருநாதர் காட்டிய அருள் நெறிகளைப் பெறச் செய்து இதற்கு முன்னால் அறியாமல் சேர்ந்த நிலைகள் நம்மை இயக்கினாலும் அதையெல்லாம் தடுத்துப் பழக வேண்டும்.

ஏனென்றால் ஒரு பொருள் கெட்டுப் போய்விட்டது என்றால் மறுபடியும் அதை திருப்பிச் செய்கிறோம். ஒரு கட்டத்தில் குறையானால் அதை நிறுத்தி நாம் செயல்பட வேண்டும்.

ஒரு செடியின் வளர்ச்சி குன்றினால் அதற்கு என்ன பக்குவம் வேண்டும்…? என்று மீண்டும் வளர்க்கச் செய்கின்றோம். இதைப் போல நாம் ஒவ்வொன்றிலும் பக்குவப்பட வேண்டும்.

வாழ்க்கையில் இப்படிச் செய்தேனே… இப்படி இருந்தேனே…! என்பதையெல்லாம் மறந்து விடுங்கள்.

நாம் எப்படி இருக்க வேண்டும்…?
1.நல்ல உணர்வுகளை வளர்க்க வேண்டும்
2.இருளை அகற்றும் அருள் சக்தி பெற வேண்டும்.
3.நம் குரு அருளால் அந்த மெய்ப்பொருளைக் காணும் நிலை நமக்குள் வரவேண்டும்.
4.அனைவரும் அந்த மெய்ப்பொருள் கண்டு அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் சக்தி பெற வேண்டும்.

இதை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.

இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ விஷத் தன்மையான நிலைகளை நாம் காண… சுவாசிக்க நேருகின்றது. விஞ்ஞான அறிவால் உலகைக் காக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் தன்னைக் காக்கத் தன் நாட்டைக் காக்க என்று பிழை கொண்ட உணர்வுகளைத்தான் இன்று செய்கின்றார்கள்.

ஆகவே இப்போது நாம் உலக மக்களின் உணர்வுகளை எடுத்துக் கொண்டாலும் நமக்குள் வீரிய உணர்வின் தன்மை இருந்தாலும் நாம் நல்லதை எண்ணும் போது இதனுடைய (விஷதன்மைகளின்) அழுத்தம் நல்ல குணங்களைச் சிந்திக்கும்படி செய்வதோ… நல்ல குணங்களைச் செயல்படுத்தும் நிலையோ இல்லாது போகும்.

அப்போது நமக்குள் இந்த எதிர்மறையான உணர்வுகளால் நல்ல உணர்வுகளைத் தூண்டும் நல்ல அணுக்களின் செயலைத் தடைப்படுத்தும்.

இதை மாற்ற வேண்டுமென்றால்
1.திசை திருப்புவது போல…
2.சக்தி வாய்ந்த நிலைகளில் குருநாதர் எமக்குக் கொடுத்த அரும்பெரும் அருள் சக்தியை
3.அப்படியே உங்களுக்கு கொடுத்திருக்கிறோம்.

ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் அதை வளர்க்க வேண்டும்,..! எமது அருளாசிகள்.

கூட்டுத் தியானத்தின் மூலம் தான் மகரிஷிகள் சக்தியைப் பெற முடியும்

கூட்டுத் தியானத்தின் மூலம் தான் மகரிஷிகள் சக்தியைப் பெற முடியும்

 

நாம் தனித்து ஒருவர் தியானமிருந்து இந்த சக்திகள் அனைத்தையும் பெறுவோம் என்றால் அது சாதாரண மனிதனுக்கு “அத்தகைய வலு இல்லை…” மகரிஷிகளின் அருள்சக்தி பெறும் தகுதியில்லை.

நாம் தனி மனிதனாக அமைந்தாலும்
1.நாம் கூட்டுத் தியானங்களில் இருந்து அதன் துணை கொண்டு எண்ணத்தின் உணர்வு வலுவான பின்பு தான்
2.நாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்
3.”அந்த நிமிடமே அதைக் கவரும் தன்மை வருகின்றது…”

ஆகவே ஒரு சமயம் கூட்டுத் தியானத்தில் இருந்து அடுத்து நாம் பெறுவோம் என்ற நிலைகள் இல்லாதவாறு “அடுத்தடுத்து வாரத்தில் ஒரு நாள் கூட்டுத் தியானங்கள் செய்து…” ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் அதைச் செருகேற்றும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

“தனித்து நாம் எல்லாச் சக்தியும் பெறுவோம்…” என்று விலகிச் செல்லாது ஒவ்வொரு வாரத்திலும் ஆங்காங்கு ஒரு பத்துப் பேரானாலும், இருபது பேரானாலும் கூட்டுத் தியானங்கள் செய்து பழகிக் கொள்ளுங்கள்.

அதே சமயத்தில் மாதத்தில் ஒரு நாள் பௌர்ணமி அன்று இங்கே தபோவனம் வருபவர்கள் கூட்டுத் தியானத்தில் கலந்து கொள்ளலாம்.

இங்கே வர இயலாதவர்கள் தன் அருகிலே பத்து நூறு பேர் இருந்தாலும் பௌர்ணமியன்று ஒரு கூட்டமைப்பாக இருந்து இதே போல் கூட்டுத் தியானம் இருக்க வேண்டும்.

கூட்டுத் தியானமிருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிரான்மாக்களை உங்கள் வலுக் கொண்ட எண்ணத்தால் அந்த மகரிஷிகளின் உணர்வின் துணை கொண்டு, விண் செலுத்த முடியும்,

1.அந்த உயிரான்மாக்களை விண் செலுத்தினால் தான் உங்கள் எண்ணம் துரித நிலைகள் கொண்டு விண்ணை அடைந்து
2.விண் சென்ற அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் பூமியில் படர்ந்திருப்பதை எளிதில் கவர்ந்து
3.உங்களுக்குள் அதை உரமாகச் சேர்த்துக் கொள்ள முடியும்.

இந்த மனித வாழ்க்கையில் ஏற்படும் தீமைகளை அகற்ற “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று ஒவ்வொரு நிமிடமும் எடுத்து நமக்குள் செலுத்துவோம் என்றால் அந்தத் தீமைகள் அகலுகின்றது.

அதே சமயம் நம் எண்ணம் கூர்மையாக விண்ணை நோக்கிச் செல்கின்றது. அப்பொழுது நமது உடலுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உரமாக வலுப் பெறுகின்றது.

இவ்வாறு நாம் வாழும் இந்தச் சிறிது காலத்திலேயே
1.அந்த மகரிஷியின் அருள் சக்தியை உடலுக்குள் வலுவாக்கிக் கொண்டால்
2.இந்த உடலை விட்டு இந்த உயிரன்மா எப்பொழுது சென்றாலும்
3.எந்த மகரிஷியின் எண்ணங்களை நாம் அடிக்கடி எடுத்தோமோ
4.அவர் ஒளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் நம் உயிரான்மா இணைந்து
5.இன்னொரு உடல் பெறும் உணர்வலைகள் கரைந்து
6.அந்த ஒளியுடன் ஒளியாக நாம் என்றும் நிலைத்து நின்று
7.பத்தாவது நிலையான கல்கி என்ற நிலையை அடைகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் அருளை “உயிரில் அழுத்தம் பட வைத்து…” உயிர் வழி நுகர வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் அருளை “உயிரில் அழுத்தம் பட வைத்து…” உயிர் வழி நுகர வேண்டும்

 

நம் உயிரான ஈசனை வணங்கி… தாய் தந்தையரை வணங்கி… ஞானகுரு சற்குரு சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி
1.ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள அருள் ஞானிகளின் அருள் உணர்வை எண்ணி ஏங்கி
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி
3.நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கிச் செலுத்தி
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று “வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்…”

அவ்வாறு, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் “ஊடுருவிச் செலுத்தி…”
1.நமது கண்களின் காந்தப் புலனறிவால்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து
3.”உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து…” உயிர் வழி நுகர வேண்டும்.

“இப்பதிவின் துணை கொண்டு…” மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி ஏக்கமான நிலையில் அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என எண்ணி
1.நம் உடலுக்குள் “அலை அலையாகப் படரச் செய்ய வேண்டும்…”
2.இதுவே துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் கொண்டு வரச் செய்யும் தியானம்… மற்றும் ஆத்ம சுத்தி.