தியானம் செய்பவரின் கடமைகள்

தியானம் செய்பவரின் கடமைகள்

 

நாம் எதைச் சொந்தமாக்க வேண்டும்…?
1.நமது உயிருடன் ஒன்றி வாழ்ந்து
2.இந்த உயிருடன் ஒன்றி வாழும் அந்த ஒளியின் சரீரத்தை நாம் நமக்கு சொந்தமாக்க வேண்டும்.

ஆகையால் தியான வழி அன்பர்கள் ஒவ்வொருவரும் “உலகுக்கு எடுத்துக்காட்டாக…” இருக்க வேண்டும். நமது கடமைகளிலிருந்து தவறக் கூடாது.

அருள் ஒளி என்ற உணர்வுகளை நமது உடலிலுள்ள அணுக்களுக்குக் கொடுத்து
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் குரு வழியில் பாய்ச்சி அதைக் கடமையாக அமைத்து
2.அந்த அருள் வழியில் ஒளியாக மாற்றும் உணர்வைப் பெற வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிர்தான் நமக்குச் சொந்தம். உணர்வை எல்லாமே ஒளியாக மாற்றி விட்டால் “தனுஷ்கோடி…”

இதை நமக்குள் எடுத்து லட்சம் என்கிற பொழுது அந்த லட்சம் இந்த லட்சம் என்றும் ஒன்று இரண்டு மூன்று என்ற நிலைகள் வரும்போது, பல லட்சம் ஆகிறது.

அப்பொழுது எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக்கும் போது “கோடி என்ற நிலைகளில் தனுஷ்கோடி ஆகின்றது…” எவ்வளவு அழகாக இராமாயாணத்தில் கொடுத்திருக்கின்றார்கள்.

ஆகையால் நாம் அனைவரும் இதனுடைய உணர்வுகளை வளர்த்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து… அதனுடன் சேர்த்த உணர்வின் தன்மை ஒன்றாக இணைத்துக் காற்றில் வரும் விஷ உணர்வுகளை நீங்கள் விடும் மூச்சலைகளால் மாற்றியமைத்து நாளை வரும் விஞ்ஞான அழிவிலிருந்து எல்லோரையும் காக்க வேண்டும்.

1.நியூட்ரான் என்ற நிலைகள் வரப்படும் பொழுது அது எப்படி எல்லாவற்றையும் விரட்டுகின்றதோ இதே போல்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நீங்கள் அனைவரும் பரப்பித் தீமைகளை எல்லாம் விரட்ட வேண்டும்.

ஒரு கிராமத்தில் இருக்கின்றோம் என்றால் அங்கே நோயோ, கலவரங்களோ இதைப் போன்ற சில நிலைகள் இருந்தால் அனைவரும் கூட்டுத் தியானமிருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்திகளைக் கவர்ந்து அந்த மூச்சலைகளை அங்கே பரப்புங்கள். அப்பொழுது அந்தக் கிராமத்தில் உள்ள தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் மாறுகின்றது.

சில ஊர்களில் விவசாயம் மிக மோசமாக இருக்கிறது என்று தெரிந்தால் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானமிருந்து
2.பயிரினங்களில் அந்தச் சக்தி படர வேண்டும் என்றும்
3.இதில் உருவாகும் அணுக்கள் தாவர இனத்தை வளர்க்கும் அணுவாக வளர வேண்டும் என்று
4.அந்த அருள் உணர்வுகளைப் பரப்ப வேண்டும்.

எனென்றால் காற்றிலிருந்து விஷத்தின் தன்மையை நுகர்ந்து அது அணுவாகி அதைச் சாப்பிடுகிறது. அதே சமயத்தில் நாம் எடுக்கும் உணர்வு கொண்டு அந்த விஷத்தன்மையை எடுத்தாலும் இது காற்றிலிருந்து வெளிப்படும் செடியின் சத்தை நுகர்ந்து அந்த உணர்வின் மலத்தை இடும்போது அது உரச் சத்தாக மாறும். அந்த அணுவும் வளரும்…! சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

நீங்கள் விடும் மூச்சலைகள் நல்ல அணுக்களாகின்றது. எனவே இதைப் போன்ற நிலைகளில் நாம்
1.நம்மைக் காக்க வேண்டும்.
2.நம் குடும்பத்தைக் காக்க வேண்டும்
3.நம் ஊரைக் காக்க வேண்டும்

இதைப் போல் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.

“உலகுக்கு எடுத்துக் காட்டும் நிலைகளில்…” நமது குருநாதர் காட்டிய அருள் நெறிகளைப் பெறச் செய்து இதற்கு முன்னால் அறியாமல் சேர்ந்த நிலைகள் நம்மை இயக்கினாலும் அதையெல்லாம் தடுத்துப் பழக வேண்டும்.

ஏனென்றால் ஒரு பொருள் கெட்டுப் போய்விட்டது என்றால் மறுபடியும் அதை திருப்பிச் செய்கிறோம். ஒரு கட்டத்தில் குறையானால் அதை நிறுத்தி நாம் செயல்பட வேண்டும்.

ஒரு செடியின் வளர்ச்சி குன்றினால் அதற்கு என்ன பக்குவம் வேண்டும்…? என்று மீண்டும் வளர்க்கச் செய்கின்றோம். இதைப் போல நாம் ஒவ்வொன்றிலும் பக்குவப்பட வேண்டும்.

வாழ்க்கையில் இப்படிச் செய்தேனே… இப்படி இருந்தேனே…! என்பதையெல்லாம் மறந்து விடுங்கள்.

நாம் எப்படி இருக்க வேண்டும்…?
1.நல்ல உணர்வுகளை வளர்க்க வேண்டும்
2.இருளை அகற்றும் அருள் சக்தி பெற வேண்டும்.
3.நம் குரு அருளால் அந்த மெய்ப்பொருளைக் காணும் நிலை நமக்குள் வரவேண்டும்.
4.அனைவரும் அந்த மெய்ப்பொருள் கண்டு அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் சக்தி பெற வேண்டும்.

இதை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.

இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ விஷத் தன்மையான நிலைகளை நாம் காண… சுவாசிக்க நேருகின்றது. விஞ்ஞான அறிவால் உலகைக் காக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் தன்னைக் காக்கத் தன் நாட்டைக் காக்க என்று பிழை கொண்ட உணர்வுகளைத்தான் இன்று செய்கின்றார்கள்.

ஆகவே இப்போது நாம் உலக மக்களின் உணர்வுகளை எடுத்துக் கொண்டாலும் நமக்குள் வீரிய உணர்வின் தன்மை இருந்தாலும் நாம் நல்லதை எண்ணும் போது இதனுடைய (விஷதன்மைகளின்) அழுத்தம் நல்ல குணங்களைச் சிந்திக்கும்படி செய்வதோ… நல்ல குணங்களைச் செயல்படுத்தும் நிலையோ இல்லாது போகும்.

அப்போது நமக்குள் இந்த எதிர்மறையான உணர்வுகளால் நல்ல உணர்வுகளைத் தூண்டும் நல்ல அணுக்களின் செயலைத் தடைப்படுத்தும்.

இதை மாற்ற வேண்டுமென்றால்
1.திசை திருப்புவது போல…
2.சக்தி வாய்ந்த நிலைகளில் குருநாதர் எமக்குக் கொடுத்த அரும்பெரும் அருள் சக்தியை
3.அப்படியே உங்களுக்கு கொடுத்திருக்கிறோம்.

ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் அதை வளர்க்க வேண்டும்,..! எமது அருளாசிகள்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply