அகஸ்தியர் கண்ட உண்மைகளைக் காட்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் அறியும் வழி

Spiritual realization - vision

அகஸ்தியர் கண்ட உண்மைகளைக் காட்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் அறியும் வழி 

ஒரு நோயாளி தன் நோய் தீர வேண்டும் என்றால் மருத்துவர் தரும் மருந்தைக் கட்டாயமாகச் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

இதே போன்று நம்முள் அறியாது சேர்ந்த நஞ்சான உணர்வுக்ளை நீக்க வேண்டுமென்றால் நமக்குள் கட்டாயப்படுத்தித்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருகச் செய்ய வேண்டும்.

ஆகவே தான் உங்கள் அனைவரையும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றச் செய்யும் நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

அந்த உணர்வோடு கொண்டு போகப்படும் பொழுது அவ்வுணர்வின் ஒளிக் கற்றைகளை உங்களில் சேர்த்துப் பழகுங்கள். மின் கதிர்களை எண்ணிச் சுவாசிக்கப்படும் பொழுது அதன் உணர்வின் தன்மையினை உங்களிடத்தில் ஒவ்வொரு அணுவிலும் சேர்க்க உதவும்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து மற்ற அணுக்களில் சேர்கின்றது இவையெல்லாம், குரு தன்மையால் வருவது.

“சாமி (ஞானகுரு) சொன்னார்.., இதையெல்லாம் பெறவேண்டும்” என்று எண்ணப்படும் பொழுது நீங்கள் எண்ணிய ஆற்றல் பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும்.

நான் “தனித்தன்மையில் செல்வேன்” என்று எண்ணினால் முடியாது.

குரு இல்லாத வித்தை எதுவுமே வித்தையாகாது. ஆகையால், “குருநாதர் சொன்னார்…” என்ற நிலையில் ஒன்றை இணைத்துப் பார்க்கும் பொழுது தனக்குள் உருவாகும்.

ஆகவே இதன் வழியில்தான் நாம் அறிய முடியும்.

நமது குருநாதர் தம் உணர்வின் தன்மை கொண்டு அகண்ட அண்டத்தையும் அகஸ்தியர் கண்டுணர்ந்த உணர்வையும் அறிந்துணர்ந்தார்.

தமக்குள் பெற்ற பேரருளின் உணர்வுகளை  எமக்குள் யாம் எவ்வாறு பெறவேண்டும் எனும் வழிமுறைகளைக் காண்பித்தார்.

உணர்வின் உணர்ச்சிகளை எமக்குள் தூண்டச் செய்து “செவி வழி ஓதி… உணர்வுகளை அறியும்படி” நுகர்ந்தறியும் ஆற்றலைக் கொடுத்தார்.

1.நுகரும்போது உடல் உணர்ச்சி கொண்டு அறிவதும்
2.உணர்வின் தன்மை கூறும்போது காட்சியாகத் தெரிவதும் போன்ற நிலைகள் கொண்டு எம்மை அறியச் செய்தார் அறிந்தோம்.
3.அதனின் உணர்வுகளை உங்களுக்குள்ளும் யாம் பதிவாக்குகின்றோம்.

இதனை உங்களுக்குள் ஏங்கிப் பெறும் நிலை வரும்பொழுது அதற்குத் தக்கவாறு உங்களில் உருப்பெறும் தன்மை வருகின்றது.

உணர்வுகளை உங்களில் குவிக்கப்படும் பொழுது அது காட்சியாகவும் உங்களுக்குத் தெரியும்.
1.கண் திறந்திருந்தாலும் சரி
2.கண் மூடியிருந்தாலும் சரி உணர்வின் அலைகளாக மாறும் தன்மை வரும்.

தெளிந்த மனம் கொண்டு கண்களை மூடித் தியானித்தால் உணர்வின் தன்மை புற நிலைகளை அடக்கும். அருள் ஒளி என்ற உணர்வின் தன்மையைப் பெருக்கும்.

நமக்குள் உணர்வின் தன்மைகள் காட்சியாகத் தெரியும். ஆகவே  நீங்களும் இதைப் பெறவேண்டும்.

ஏனென்றால் ஒரு வித்து ஒருவருக்குப் பசி தீர்க்காது. நீங்கள் பெற்ற அருள் உணர்வின் சத்தை மற்றவர்களிடத்திலும் படரச் செய்யும் உணர்வை  நீங்கள் உங்களிடத்தில் வளர்த்துக் கொண்டால் நாம் அனைவரும் ஒன்றென இணைந்துவிடலாம்.

சிறு துளி என்ற நிலை வரப்படும் பொழுது அதன் தன்மை புவியில் தங்கி விடுகின்றது. சிறு துளிகள் இணைந்து பெரும் வெள்ளமாக வரப்படும் பொழுது பலவற்றிற்கும் பயன்படுகிறது.

அது போன்று நாம் சிறு துளியாக இருப்பினும் பலரிடத்தில் அருளுணர்வுகளை வளர்த்து அனைவரும் ஒன்றென இணைக்கப்படும் பொழுது அரும்பெரும் சக்திகளை நாமும் பெறலாம்,
1.வரும் தீமைகள் அனைத்தையும் நீக்கவும் செய்யலாம்.
2.அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் பெருக்கவும் முடியும்.

தியானத்தின் மூலம் மெய் ஞானிகளுடன் “நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்” (சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல்)

Spiritual contact.jpg

தியானத்தின் மூலம் மெய் ஞானிகளுடன் “நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்” (சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல்) 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளியது போன்று அவர் அருளை நீங்களும் பெறவேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஏங்கிப் பெற இப்பொழுது ஏங்கித் தியானிப்போம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான  அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிப் பெறுங்கள்.

கண்களைத் திறந்தே தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கவும்.

இப்பொழுது நமது குரு அருளும் அவர் கண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குக் காட்சியாகவும் கிடைக்கலாம்.

கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து ஏங்கும் பொழுது குரு அருளால் பெறப்பட்ட அந்த ஆன்மாவை நீங்கள் உணர முடியும். காட்சியாகவும் பார்க்க முடியும்.

நமது குரு அருளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இப்போது உங்கள் சுவாசித்திற்குள் வரும். உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் நல்ல உணர்ச்சிகள்  உருவாகும்.

உங்கள் இரத்த நாளங்களில் அந்த அரும்பெரும் சக்தி உடல் முழுவதும் அது சுழன்று வரும் அந்த உணர்ச்சிகள் உங்களில் தோன்றும்.

உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்துங்கள். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியான அந்த அரும்பெரும் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தி
2.இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
3.உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் குரு அருளும் உங்கள் உடலுக்குள்
1.இயங்கிக் கொண்டிருப்பதை
2.இயக்கிக் கொண்டிருப்பதை உணர முடியும்.

உங்கள் ஆன்மாவில் இப்போது அவருடைய உணர்வுகள் காட்சியாகவும் வரலாம். சொல்லாகவும் வரலாம்.

1.ஒலி ஒளி என்ற நிலையில் காற்றிலிருந்து வரும் அலைகளை
2.டிவி யில் எப்படிக் கவர்ந்து படமாகப் பார்க்கின்றோமோ
3.ஒலியாகக் கேட்கின்றோமோ இதைப்போல
4.உங்கள் ஆன்மாவில் படர்ந்திருப்பதை நீங்கள் நுகரப்படும்போது
5.அந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு
6.காட்சியாகவும் உணர்வாகவும் அறிய முடியும்.

யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைப் பதிவாக்கி அந்த நினைவுடன் இவ்வாறு ஏங்கித் தியானித்து வரும் பொழுது உங்கள் ஆன்மாவில் மகரிஷிகளின் அருள் ஒளிகள் பெருகத் தொடங்கும்.

ஒளி அலைகள் பெருகும்பொழுது உங்கள் சுவாசத்தில் கலந்து உயிரிலே படும்பொழுது அந்த உணர்ச்சிகள் தோன்றும். அதன் துணை கொண்டு அந்த ஞானிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும்.

விண்ணிலிருந்து கணப்பொழுதில் அவர்களின் அருள் சக்திகளைப் பெற முடியும். (சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல்)

தியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது

தியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது

  1. நமது எல்லை – சப்தரிஷி மண்டலம் அடைவதுதான்

காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக இருக்கும் இவ்வேளையில் நாம் அனைவரும் நம் குருவின் அருளின் துணைகொண்டு மகரிஷிகளின் அருள்சக்தி துணைகொண்டு நமக்குள் அந்த உயர்ந்த ஞானத்தைப் பெறவேண்டும்.

இந்த உடலைவிட்டு நாம் எந்த நிமிடம் அகன்றாலும் நாம் சப்தரிஷிகளின் அருள்வட்டத்தில் இணைந்து என்றும் பிறவியில்லா நிலைபெறும் சக்தி பெற வேண்டும்.

1.நமது எல்லை அதுதான் என்ற நிலைகள் தெளிந்து
2.நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ்வோம்.
3.குறைகள் வராதபடி நிறைவாக்குவோம்.

2.அருள் ஞான உபதேச நூல்களை அடிக்கடி படித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும்

தியான வழியில் உள்ளோர் அனைவரும் தபோவனத்தில் வெளியிட்ட நூல்களை நாம் அடிக்கடி எடுத்துப் படித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

யாம் கொடுக்கும் இந்த நூல்களை ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்க வேண்டும். பூஜை அறையில்தான் இருக்கவேண்டும். படித்தபின் மீண்டும் பூஜை அறைக்கே சென்றிட வேண்டும்.

வெளியிட்ட நூல்கள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும் அடிக்கடி நாம் படித்து, ஒரு பாரா அல்லது இரண்டு பாரா படித்துவிட்டுத் தியானத்திற்குச் செல்ல வேண்டும்.

அதை நாம் அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லும் நிலையும், கேட்கும் நிலையும் அவர்களுக்குள் அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை நாம் ஊட்டப் பழக வேண்டும்.

இதை எல்லாம் நீங்கள் பெறுவதற்காக உங்கள் உயிரை ஈசனாக மதித்து உங்கள் உடலைச் சிவனாக மதித்து இந்த உடலுக்குள் நம்மை  மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களுக்குள் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும் என்று தியானிக்கச் சொல்லுகின்றோம்.

அவ்வழியே தியானிக்கும்போது குரு காட்டிய அருள் வழியில் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் போரொளியும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

  1. ஒற்றுமையை வளர்த்திடக் கூட்டுத் தியானங்கள் அமைத்திடல் வேண்டும்

தியானவழி அன்பர்கள் அடிக்கடி கூட்டுத் தியானங்கள் அமைத்திட வேண்டும். அந்தந்தக் குடும்பங்களில் இரண்டு பேர் சேர்த்தால் போதும். தியானம் செய்து குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிப் பழகுதல் வேண்டும்..

இந்த மாதிரி ஒற்றுமையை வளர்ப்பதற்கு குடும்பங்களில் தெளிவான நிலை வருவதற்கு இதைப் போன்று அவசியம் கூட்டுத் தியானங்கள் செய்ய வேண்டும்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடுமபத்திலும் எடுத்துக் காட்டாக இந்த தியானத்தைக் கடைப்பிடித்து உங்கள் அருகில் உள்ளவர்களையும் அந்த உயர்வடையச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

  1. உலகில் நடக்கும் அதிர்ச்சியான செய்திகளைக் கேட்டவுடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்

உலக நிலைகளிலே இன்று எடுத்துக் கொண்டால் வேதனை, வெறுப்பு பயம் என்ற நிலைகள் அதிகமாக இன்று மனித உடலில் உருப்பெற்று வெளிப்படுகின்றது.

கோடிச் செல்வம் இருப்பினும் பயம் இல்லாது எவரும் இல்லை. ஆகவே ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உலகில் நடக்கும் மதம், இனம், மொழி என்ற நிலைகளில் கடும் விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் உலகம் முழுவதும் பரவி உள்ளது.

ஒவ்வொரு மனித உடலிலும் வெளிப்பட்ட உணர்வுகள் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்திருப்பதும் T.V மூலமாகவும்,  பத்திரிகைகளில் படிக்கும் போதும் நாம் அறிய நேர்கின்றது.
1.உலகில் ஒவ்வொரு இடத்தில் நடக்கும் விபத்துக்களும் விபரீதச் செயல்களும்,
2.திருட்டு கொலை சம்பத்தப்பட்ட செய்திகளைப் பார்க்கும் பொழுதும், படிக்கும் பொழுதும்
3.மன அதிர்ச்சியும் பயமூட்டும் உணர்வுகளும் நமக்குள் அதிகமாகப் பதிவாக்கி விடுகின்றது.

பயத்தின் உணர்வுகள் அதிகரித்துவிட்டால் சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றது. சிந்திக்கும் திறன் இழந்தால் ஆத்திரத்தில் நம்மை அறியாது கடும் பிழைகளைச் செய்யும் நிலைகளும் நமக்குள் உருவாகிவிடுகின்றது.

இதைப்போன்ற விபரீத நிலைகளில் இருந்து நாம் மீளவேண்டும் என்றால் ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் ஆத்மசுத்தி செய்து ஒரு பத்து நிமிடமாவது நமக்குள் செயல்படுத்திடல் வேண்டும்.

  1. குறை காணுவதற்குப் பதில் அதை நிவர்த்திக்கும் செயலாக அமைதல் வேண்டும்

இதேபோன்று குறை என்பது அவ்வப்பொழுது சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிகழ்ச்சி.

தொழில் செய்வோம் என்றால் நாம் ஒன்றைச் செய்து கொண்டு இருப்போம். அடுத்த கணம் இன்னொரு பக்கம் குறை உருவாகும்.

அந்தக் குறை உருவாவதைத் தெரிந்து கொண்டால், உடனே ஆத்ம சுத்தி செய்து அந்தக் குறைகளை நிவர்த்திக்கும் நிலையில் நமது செயலாக்கங்கள் அனைத்தும் அமைதல் வேண்டும்.

குறைகள் எப்பொழுது எவ்வழியில் வர நேர்ந்தாலும் மற்றவர்களின் குறையைச் சுட்டிக் காட்டுவதற்கு மாறாக மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று நாம் அடுத்த நிமிடம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு,
1.மகரிஷிகளின் அருள்சக்தி அவர்கள் பெறவேண்டும்.
2.மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
3.குரு காட்டிய அருள் வழியில் அவர்கள் வளரவேண்டும்.
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அருள் சக்தி பெறவேண்டும்.
5.தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வுகள் பெற்று அனைவருக்கும் நற்போதனை கொடுக்கும் நிலைகள் அவர்களில் உருவாக வேண்டும்.
6.அன்பும் பண்பும் பரிவும் பெறும் அந்த அருள்சக்தி அவரில் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இவ்வாறு நாம் அனைவரும் அவ்வழியில் வழி தொடர வேண்டும். பெண்கள் இந்த உணர்வினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் பல கோடிகளில் பலவிதமான நிலைகளில் இருப்பினும் குறைகள் காணும்போது நாம் ஆத்மசுத்தி செய்து ஒரு பத்து நிமிடமாவது அதன் நிலைகளைச் செயல்படுத்த வேண்டும்.

  1. குடும்பத்தில் கணவன் மனைவி ஒன்றுபட்டு வாழவேண்டும்

அனைவருடைய குடும்பங்களிலும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்தல் வேண்டும். கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து, நாளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து வாழ வேண்டும்.

சாவித்திரியைப் போன்று ஒன்றிய நிலைகள் கொண்டு தெளிந்த மனதுடனும் மகிழ்ந்திடும் உணர்வுடனும் வாழ்ந்து அருள்ஞான சக்தி பெற்று தீமையை அடக்கிடும் அருள் ஒளி பெற்று மெய்ப்பொருள் கண்டிடும் அந்த அருள்ஞானம் வளர வேண்டும்.

நம் ஊரில் உள்ளோர் அனைவரும் அதைப் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். சதா இதை நமக்குள் தியானமாக்க வேண்டும்.

  1. குழந்தைகள் அனைவரையும் அருள் ஞானிகளாக வளர்க்க வேண்டும்

நம்  குழந்தைகளுக்கும் இதைப் போல மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும். அவர்கள் அருள்ஞானம் பெறவேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று அருள் உணர்வுகளைக் குழந்தைகளுக்குச் சொல்லி நாம் தியானிக்க வேண்டும்.

குழந்தைகள் உலக ஞானம் பெறவேண்டும். உலகைக் காத்திடும் அருள்ஞானக் குழந்தையாக அவர்கள் உரு பெறவேண்டும். வளர வேண்டும் வளர்ச்சி பெறவேண்டும்.

நம் நாட்டின் பண்புகளைத் தெளிவாக ஞானிகளின் அருள்சக்திகளை எடுத்து அடுத்தவருக்குப் போதிக்கும் நிலை நம் குழந்தைகள் பெறவேண்டும்.

அவர்கள் வெளிப்படுத்தும் சொல் மற்றவரைப் பிணிகளிலிருந்தும், தீமைகளிலிருந்தும் அவர்கள் வறுமையிலிருந்தும் நீக்கிடும் அந்த வலிமை பெறவேண்டும்.

கேட்போர் உணர்வுகள் வலிமை பெற்றுத் தீமைகளிலிருந்து விடுபட்டு அருள் ஞானத்தைப் பெறும் தகுதியை ஏற்படுத்தும் நிலை பெறவேண்டும்.

  1. கருவுற்றிருக்கும் தாயின் வயிற்றில் வளரும் சிசுக்களுக்கு அகஸ்தியன் அருளைப் பெறச் செய்யவேண்டும்

அதே போல பெண்கள் கர்ப்பமாக இருந்தால் அனைவரும் கூட்டுத் தியானமிருந்து அந்தக் கருவில் வளரும் குழந்தை மகரிஷிகளின் அருள்சக்தியைப் பெறவேண்டும் அருள்ஞான சக்தி பெற வேண்டும்.

1.அகஸ்தியன் பெற்றது போன்று நஞ்சை வென்றிடும் உணர்வுகள் பெற்று,
2.அருள் வழியின் உணர்வைத் தனக்குள் வளர்க்கும் ஆற்றல் பெற்று,
3.உலக இருளை நீக்கிவிட்டு அருள் ஒளிபெறும் தகுதியை கருவில் வளரும் குழந்தை பெறவேண்டும்.
4.வானுலக ஆற்றல் அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெறவேண்டும்.
5.உலக மக்களை இணைத்திடும் அருள்ஞானம் அந்தக் கருவிலே விளைய வேண்டும்.
6.உலகில் நன்மைகள் செய்விக்கும் அகஸ்தியனின் அருள் உணர்வுகள் கருவிலே உருபெற வேண்டும்.
7.உலகைக் காத்திடும் அருள்ஞானக் குழந்தையாக வளர வேண்டும் என்று
8.கூட்டுத் தியானங்களில் இதை முறைப்படுத்தி அந்தக் கருவில் வளரும் குழந்தைகளுக்கு நாம் அடிக்கடி இதைச் சொல்லித் தியானமிருக்க வேண்டும்.

கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு நாம் தபோவன நூல்களைப் படித்துக் காட்டிக் கருவில் இருக்கும் அந்தக் குழந்தை அருள் மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று ஏக்கத்துடன் நீங்கள் சொல்லிவிட்டு அடுத்து தியானத்தை நாம் வழிநடத்தும் முறை வரவேண்டும்.

இதைப் பார்த்தபின் நம்மைச் சுற்றியிருப்பவர்களும் இதைப் போன்று நாமும் வழிப்படுத்த வேன்டும் என்ற நிலைகளில் அவர்களுக்கும் இந்த உணர்வுகளை ஊட்டுதல் வேண்டும்.

  1. மற்றவர்களுக்கு வழி காட்டும் அளவிற்கு நாம் வளரவேண்டும்

தியானவழி அன்பர்கள் என்று நம்மை எடுத்துக்கொண்டால், எல்லாரும் போற்றும் நிலைகளுக்கு,
1,நம்மைப் பார்த்தாலே எப்பொழுதும் மற்றவர்களுக்கு
2.அவர்களுக்கு நல்வழி காட்டும் நிலை அடைந்திடல் வேண்டும்
3.ஒருவருகொருவர் அந்தத் தெய்வீகப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
4.நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அந்த அளவிற்கு நாம் வளர்ந்தால்தான் அது வரும். அதனால் அதை நீங்கள் பெறுவீர்கள் என்று நினனைக்கிறேன். அதைப் பெறவேண்டும் என்று தியானிக்கிறேன் பெறவேண்டும் என்று தவம் இருக்கிறேன்.

அதை நீங்கள் பெறுவீர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன். இதை எடுத்துக்காட்டாக வளரவேண்டும். அதை நான் சொல்வதற்குப் பதில்
1.அந்த உயர்வை நீங்கள் உயர்த்திக்காட்டி
2.செயலிலே நீங்கள் வரவேண்டும் பிரார்த்திக்கின்றேன்.

அன்பர்கள் அனைவரும் குரு காட்டிய அருள்வழியைக் கடைப்பிடித்து உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்றி, அனைவரும் அறிந்திடும் நிலையாக அருள் ஞான சக்தி போதித்து, உலக மக்களைத் தெளிந்த மனதுடன் மகிழ்ந்திடும் உணர்வுடன் வாழ வைக்கும் அந்தத் திறன் அனைவரும் பெறுதல்வேண்டும்.

நாம் அனைவரும் மாமகரிஷிகளின் அருள்சக்தியை நமக்குள் வளர்த்து நம் தொழிலும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நம்மிடம் தொழில் செய்பவர்கள் அதாவது நம்மிடம் வாடிக்கையாளராக வரும் போது அவர்களுக்கும் நன்மை பயக்கும் சக்தியாக வருகிறது.

அப்படி நன்மை ஏற்படும் பொழுது, நம் தொழிலும் சீரடையும்.

  1. உங்கள் பார்வையால், சொல்லால், பிறருடைய தீமைகள், நோய்கள் அகல வேண்டும்

உங்கள் பார்வையில் இந்தத் தியானத்தின் பலனால் மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று உங்கள் பார்வையில் “எவரேனும்.., கெட்டது என்று சொன்னாலும்” அடுத்த கணம் நீங்கள் சிறிது நேரம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் நோய் நீங்கி உடல் நலம் பெற்று, அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

எத்தகைய நோய்கள் இருப்பினும் கேட்டறிந்தால் அடுத்து ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் நோய் நீங்கி அருள்ஞான வழியில் அவர்கள் நலம் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேலும் அவர்கள் குடும்பங்கள் மகிழ்ச்சி பெறவேண்டும் என்று எண்ணி அவர்கள் உடல் நலம் பெற
1.நாம் எடுத்த தியானத்தின் பலனால்,
2.நம் சொல்வாக்கின் தன்மை அவருக்குள் பதிவாகி
3.கடும் நோய்களையும் நீக்கும் பலன் பெற வேண்டும்b என்று நீங்கள் எண்ண வேண்டும்.

இதைப் போல அந்த அருள்சக்தியை வளர்த்துப் பேரின்பத்தை ஊட்டும் நிலைகளை உருவாக்க வேண்டும்.

எந்த நிலையிலும் நாம் அனைவரும் அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று யாருக்காவது நோய் வந்தாலும் அதை நீக்க நீங்கள் முற்பட வேண்டும்.

கூட்டுத்தியானமிருந்து மகரிஷிகளின் அருள்சக்தி அவர் உடலிலே படரவேண்டும். அவர் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவேண்டும். அவர் நோய் நீங்கி நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று நாம் அவர்களுக்கு அடிக்கடி இதைச் சொல்லி வழி நடத்துதல் வேண்டும்.

1.அவர்கள் நலம் பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது
2.நமக்குள்ளும் நலம் பெறும் அணுக்கள் உருவாகின்றது.
3.இந்தச் சொல்லின் தன்மை வெளிப்படும்போது கேட்போர் உணர்விலேயும் நலம் பெறும் சக்தியாக உருப்பெறச் செய்யவும் முடிகின்றது.

இந்தப் பழக்கத்தை நாம் பழக முயல வேண்டும்.

  1. விஞ்ஞான அழிவிலிருந்து உலக மக்களைக் காக்கும் நிலையைச் செயல்படுத்த வேண்டும்

இதைப்போல உலகில் மதம் இனம் என்ற அன்னியத் துடிப்பிலிருந்து மக்களை விடுபடச் செய்து அருள் வழித் தொடராக அவர்கள் வாழ்வில் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்று
1.நாளை விஞ்ஞான உலகில் வரும் அழிவில் இருந்து
2.அவர்கள் மீளூம் மார்க்கத்தையும் நாம் உபதேசித்தல் வேண்டும்.

ஒவ்வொரு நேரத்திலேயும் நீங்கள் சொல்ல முடியவில்லை என்றாலும் இந்த உபதேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதைப் படித்து வாசித்துக் காட்டுங்கள். திரும்பத் திரும்பப் படித்துக் காட்டினால் நமக்குள்ளும் பதிவாகின்றது.

அந்த அருள் உணர்வை நாம் எண்ணிய உணர்வை நம் உயிர் அந்த அருள் சக்தியாக அணுக்களாக நமக்குள் மாற்றுகின்றது. நினைவாற்றலைப் பெருக்குகின்றது.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழ வழி வகுக்கும் அந்தத் தகுதியை நமக்குள் அது பெறச் செய்கின்றது.

உயிரின் இயக்கச் சக்தியைக் கூட்டி நோயை நீக்கும் முறை

Third eye Meditation.jpg

உயிரின் இயக்கச் சக்தியைக் கூட்டி நோயை நீக்கும் முறை 

நோய் வந்தவர்கள் என்ன செய்கின்றார்கள்? நோயை எண்ணி “ஐயோ.., எனக்கு இப்படி ஆகிவிட்டதே” என்று அதையே ஜெபிக்கின்றார்கள்.

அதாவது நாம் பலவீனமடையும்போது எதில் பலவீனம் அடைகின்றோமோ அதில் விஷமான உணர்வுகள் ஊடுருவுகின்றன.

விஷத்தை மாய்க்கக்கூடிய சக்தி ஒவ்வொருவருக்கும் உண்டு. நெருப்பு எந்த அளவிற்கு இருக்கின்றதோ அந்த அளவிற்குச் சமைக்க முடிகின்றது.

1.நாம் பலவீனமான உணர்வுகளைச் சுவாசிக்கும்போது
2.உயிரின் நிலைகளிலும் உடல் உறுப்புகளின் சில பகுதிகளிலும் காந்தத் தன்மை குறைகின்றது.
3.இதனால் நம்மிடத்தில் மின் (கரண்ட்) உற்பத்தி குறைகின்றது.

வீடுகளில் மின்சாரம் குறைவாக வந்தால் ட்யூப் லைட் “மினுக்.., மினுக்..” என்று விட்டு விட்டு எரியும். அதைப் போன்று நம்மிடத்தில் நினைவின் சக்தி குறையும்போது பலவீனமான நிலைகளில் விஷமான உணர்வுகள் ஊடுருவுகின்றன.

நம்மிடத்தில் விஷமான உணர்வுகள் ஊடுருவும்போது நமக்குள் உணவை ஜீரணிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.

சூரியன் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு பிற விஷ ஆற்றலின் தன்மை தன்னிடம் நெருங்க விடாதபடி தடுத்து  தன் உணர்வின் ஆற்றலைப் பிரபஞ்சம் முழுவதும் பரவச் செய்கின்றது.

இதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை தம்மிடத்தில் சேர்த்து அதன் உணர்வின் ஆற்றலைத் தம்மிடத்தில் பெருக்கி பிற துன்பம் வேதனை சஞ்சலம் போன்ற விஷ உணர்வுகள் தம்மிடம் வராதபடி தடுத்து அருள் உணர்வின் மணத்தைத் தங்களிடமிருந்து வெளிப்படுத்தியவர்கள் அருள்ஞானிகள்.

நீங்கள் தினமும் 10 நிமிடமாவது தியானம் செய்யுங்கள். “மனிதரால் முடியாதது… எதுவுமே இல்லை”.

துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

ஈஸ்வரா என்று சொல்லும்போது உங்கள் கண்ணின் நினைவைப் புருவமத்தியில் செலுத்தி உயிரான ஈசனை எண்ண வேண்டும்.

யாம் உங்களுக்குக் கொடுத்துள்ள ஆத்ம சுத்தி என்ற ஆயுத்த்தைப் பயன்படுத்தி உங்களிடத்தில் வரும் தீமைகளை உடனுக்குடன் துடைத்துப் பழகுங்கள்.

1.துன்பங்கள் வரும்பொழுதெல்லாம்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை உங்கள் உடலுக்குள் திணியுங்கள்.

உங்களையறியாது துயரப்படுத்திக் கொண்டிருக்கும் உணர்வுகளை மாய்த்துவிட்டு மகிழ்ச்சியின் எண்ணங்களை உங்களுக்குள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்… வலிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

உயிரின் துடிப்பிற்குள் ஏற்படும் வெப்பம்தான் நம் உடலை இயக்குகின்றது. “அந்த வெப்பம்” இல்லையென்றால் நமக்குள் இயக்கமில்லை.

ஆனால் வெப்பமும் கதிரியக்கமும் ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஒன்று மற்றொன்றை வெல்லப் பார்க்கின்றது. கதிரிக்கயம் ஒன்றினுள் ஊடுருவி ஒன்றை வெல்லும் சக்தி பெற்றது. வெப்பமோ ஒன்றைக் கருக்கும் தன்மை பெற்றது.

கதிரியக்கச் சக்தி வெப்பத்தைத் தாக்கியவுடன் வெப்பம் அதிகமாக ஆகின்றது. இதன் தொடர் கொண்டு வெப்பத்தின் நிலைகள் கதிரியக்கத்தை அடக்கப் பார்க்கின்றது.

இதன் போர் முறைதான் “நம் உயிரின் துடிப்பு”.

இவைகளின் போரினால் தோன்றும் வெப்பம்தான் நமக்குள் இருக்கக்கூடிய காந்த அலைகளை இயக்கி கரண்டை (மின் ஆற்றலை) உற்பத்தி செய்கின்றது.

1.நம் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவையும் இயக்குவது
2.நமது உயிரின் மின் ஆற்றல்தான்.

இந்த இயற்கையின் நியதிகளை பேருண்மைகளை நம் ஆறாவது அறிவால் அறிந்து கொண்டபின் உடலை விட்டுச் செல்லும் நம் உயிரான்மா விண்ணில் அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும்.

இதுதான் “முழு முதற் கடவுள்” என்பது.

ஆகவே உங்கள் உடலுக்குள் நின்று ஆட்சிபுரியும் அவனை உயிரை ஈசனைக் கடவுள் என்று எண்ணுங்கள். உடலை அவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று மதியுங்கள்.

உயிர் நமக்குள் ஒளியாக நின்று ஆட்சி புரிகின்றது. உயிரைப் போன்றே உயிரில் ஒன்றும் உணர்வனைத்தும் ஒளியாக மாற்றி “விண் செல்வோம்” என்று நமக்குள் உறுதிப்படுத்தி அந்த உறுதியின் அடிப்படையில் நாம் தியானிப்போம் தவமிருப்போம்.

தியானம் செய்ய நேரம் இல்லை என்று சொல்பவர்களுக்கு…

Life meditation.jpg

தியானம் செய்ய நேரம் இல்லை என்று சொல்பவர்களுக்கு… 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் என்றுமே பெறவேண்டும் என்று எண்ணுங்கள். உங்கள் வாழ்க்கையே தியானமாக்குங்கள்.

ஏனென்றல், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் தீமை என்று வந்தால் அந்தத் தீமை புகாது தடுக்க அருளை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள இது உதவும்.

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவு கொண்டு உங்கள் நினைவு முழுவதையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அதனின்று வரும் பேரருள் பேரொளியை ஏங்கிப் பெறுங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத்தான் உங்களுக்குள் ஏங்க வைத்து அதை நுகரச் செய்து அந்த வலிமையை ஊட்டிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வலிமையின் துணை கொண்டு உங்கள் உடலிலுள்ள அணுக்களுக்கு இந்தச் சக்தியை ஊட்ட முடியும்.

உங்கள் கண்ணின் நினைவினை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். துருவ நட்சத்திரம் எப்படி இருக்கும் அது எங்கே இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை.

உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் எங்கேயோ இருக்கின்றார். அவர் இந்த மாதிரி எல்லாம் அவஸ்தைப்படுகின்றார் என்று கேள்விப்பட்டவுடன் உங்களுக்குள் பதிவாகின்றது.

அது நினைவாகும் பொழுது என்ன செய்கின்றது? அவர் அங்கே “எப்படிச் சிரமப்படுகின்றாரோ..! என்ன செய்கின்றாரோ..?” என்று உங்களுக்குள் அந்த உணர்ச்சிகள் உங்களுகுள்ளும் இயங்குகின்றது.

இதைப் போல துருவ நட்சத்திரம் எங்கேயோ இருக்கின்றது. உங்கள் கண்களால் பார்க்க முடியவில்லை. குருநாதர் எனக்குக் காட்டினார். பார்த்தேன்.

அவர் காட்டிய நிலைகள் கொண்டு அதனின் ஆற்றலைப் பெற்றேன். அந்த உணர்வினை இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றேன்.

பதிவானதை நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அடுத்து உங்கள் கண்களாலேயும் பார்க்க முடியும். இப்பொழுது உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது
1.அந்த அருள் ஒளிகள் இங்கே படர்ந்து வருவதையும் உங்களால் பார்க்க முடியும்
2.நீல நிற ஒளி அலைகள் சுழன்று வருவதைப் பார்க்கலாம்.
3.ஒரு வெல்டிங்கைத் (WELDING) தட்டினால் “பளீர்..,” என்று வெளிச்சமாவது போல் தெரியும்.
4.ஏனென்றால், பழக்கப்பட்டோர் உணர்வுகளில் இதைப் பெற முடியும்.

பேசுவது நான் அல்ல. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வே இங்கே பேசுகின்றது.

அவர் ஒளி என்ற உணர்வைப் பெற்றார். அது உங்களுக்குள் வந்து அதைப் பெறும் தகுதி பெறக் கூடிய சந்தர்ப்பம் தான் இப்பொழுது சொல்லும் இந்தத் தியானம்.

ஏனென்றால் அவர் ஒளியான உணர்வை நீங்களும் பெற முடியும் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்குள் பதிவாக்குவது.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினைச் செலுத்துங்கள்
2.உங்கள் உடலிலுள்ள எல்லா நினைவுகளையும் ஒன்றாக இணைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
3.அதனின்று வரும் பேரொளியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்
4.மெதுவாகக் கண்களை மூடுங்கள்.
5.உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவினைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நீங்கள் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு இங்கே வரும் பொழுது உங்கள் உடலுக்குள் இருக்கும் தீமையான அணுக்களுக்குத் தீமையின் உணர்வுகள் போகாதபடி இப்பொழுது எடுக்கும் தியானத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நினைவினைச் செலுத்துங்கள்.

இப்பொழுது
1.புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் அந்த “ஈர்க்கும் சக்தி” பெருகும்
2.சிலருக்கு வெளிச்சமும் தெரியும்.
3.சிலருக்கு அந்தப் புருவ மத்தியில் “உறுத்தல்” இருக்கும்.

“இதுதான் துருவ நட்சத்திரத்தைத் தியானிக்க வேண்டிய முறை”

தினசரி காலையில் “படுக்கையில் எழுந்தவுடன்” ஒரு 10 நிமிடமும் இரவு “படுக்கும் முன்பு” ஒரு 10 நிமிடமும் இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உடலுக்குள் உள்ள சஞ்சலம் சலிப்பு வெறுப்பு கோபம் போன்ற உணர்வுகளால் விஷத்தின் தன்மையால் ஏற்பட்ட விஷத்தின் தன்மையால் உருவாக்கப்பட்ட அணுக்களுக்கு ஆகாரம் போகாது இப்படித் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

உங்கள் உயிர் என்ற உணர்வுகளில் நமது குருநாதர் காட்டிய அருள் உணர்வுகளை (மேலே சொல்லப்பட்டவைகளை) இதை ஏற்றி வைத்துக் கொண்டு வெளியிலே செல்லுங்கள்

விபத்துக்களிலிருந்து தப்பலாம். தீமைகளிலிருந்து நோய்களிலிருந்து விடுபடலாம். எதிரி என்று இருந்தால் அவர் உணர்வுகள் நமக்குள் இயக்காது தடைப்படுத்திக் கொள்ளலாம். நமது உணர்வுகள் அவரை மாற்றவும் செய்யும்.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமையான சந்தர்ப்பமாக இருந்தாலும் அந்த நேரத்திலும் அதை மாற்றிட இதைப் போன்று தியானத்தைச் செய்யுங்கள்.

உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும். உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களைக் காக்கும் அரும் பெரும் சக்தியாக மாறும்.

துருவத்தின் வழியாக வரும்.. துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் சுவாசிப்பதே… “துருவ தியானம்”

dhuruva-meditation

துருவத்தின் வழியாக வரும்.. துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் சுவாசிப்பதே… “துருவ தியானம்”

அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து அறிந்தனால் துருவ நட்சத்திரமானான். இன்று நம் பூமிக்கு வருவதனைத்தையும் அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒளிச்சுடராக மாற்றி ஒளியின் சுடராக உருவாக்கிக் கொண்டே உள்ளார்கள்.

துருவ நட்சத்திரம் தன் இனப் பெருக்கத்தை ஒளிச் சுடராக மாற்றி இன்றும் நமது பூமியில் பரவிக் கொண்டுள்ளது. அந்தத் துருவப் பகுதியில் இருந்து வரும் அந்தச் சக்தியை நாம் பருகும் நிலைக்குத்தான் இந்த உபதேசமே.

அவர்கள் இருவரும் நஞ்சினை வென்று இந்த உடலிலேயே ஒளி அதாவது ஒளியாக மாற்றும் உணர்வுகள் பெற்றார்கள்.

இந்த வாழ்க்கையில் நம்மையறியாது எத்தனையோ விஷத்தன்மைகளை நுகர நேர்கின்றது. அதனால் விஷ அணுக்கள் நம் உடலுக்குள் உருவாகின்றது.

உருவான அந்த விஷமான அணுக்கள் இந்த மனிதனின் உடலைக் கரையச் செய்யும் அல்லது மாற்றி அமைக்கும். இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்ப அந்தத் துருவ நட்சத்திரதிலிருந்து வரும் உணர்வுகளை நாம் நுகர்தல் வேண்டும்.

எப்படி வராகன் தீமைகளை வென்றிடும் உணர்வு பெற்று மனிதனாக உருவாக்கியதோ இதைப் போல மனிதனான பின்
1.தீமையை வென்றிடும் அந்த உணர்வின் எண்ணம் கொண்டு
2.நாம் அந்தத் தீமையை வென்றிட்ட அருள் மகரிஷியின் உணர்வை நாம் நுகரவேண்டும்.

துருவ மகரிஷியின் ஆற்றலை நாம் பெற்று விட்டால் நமக்குள் அதை உருவாக்கி நம் உடலிலே வளர்த்துக் கொண்டபின் இந்த உடலை விட்டு நாம் செல்லும்போது இந்தப் புவியின் பிடிப்பை அகற்றி விட்டு விண் செல்ல முடியும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஏழாவது நிலைகள் கொண்ட சப்தரிஷி மண்டலத்துடன் சென்று நாம் ஐக்கியமாக முடியும்.

இன்று சூரியனின் காந்த சக்தி துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளைக் கவர்ந்து துருவப் பகுதியின் வழியாக நம் பூமிக்குள் பரவச்செய்து கொண்டிருக்கின்றது.

நமது குருநாதர் ஈஸ்வரபட்டர் எந்தத் தருணத்தில் எனக்குள் (ஞானகுரு) அதை உபதேசித்து அந்த உணர்வைக் கவரும்படி செய்தாரோ அதைப் போல் உங்களுக்கும் ஏற்படுத்துகின்றோம்.

துருவ மகரிஷி துருவ நட்சத்திரமானபின் அதிலிருந்து வெளிப்படும் உணர்வை சூரியன் காந்த சக்தி கவர்ந்த அலைகளாக மாற்றி நம் பூமிக்கு வந்து கொண்டிருக்கும் அந்த அதிகாலை நேரத்தில் அந்த அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் அந்த உணர்ச்சியைத் தூண்டச்செய்கின்றோம்.

1.”செவி வழி” இந்த உணர்வின் தன்மை உணர்ச்சிகளை ஊட்டி
2.உங்கள்  நினைவின் ஆற்றலைக் கவரும் “கண்களால்” ஈர்க்கச் செய்வதும்
3.இப்போது யாம் உபதேசிக்கும்போது உங்கள் நினைவுகள் உணர்வுகள் அனைத்தும் “துருவப் பகுதியில் துருவ நட்சத்திரத்தின் நினைவுடன்” உங்கள் எண்ணங்களைச் செலுத்தச் செய்வதும் இந்த உணர்வுகளைத் தூண்டச்செய்வதும்
4.அதை உங்கள் கண்களில் நினைவாக்கப்படும்போது கண்களின் கருவிழி அந்த நினைவின் ஆற்றலை உங்கள் உடலுக்குள் இருக்கும் “ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்குகின்றது”
5.ஊனுக்குள் பதிவாகும் இதே உணர்வின் தன்மையை “விண்ணை நோக்கி” நீங்கள் ஏகும்போது
6.உங்கள் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன்கள் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நம் பூமிக்கு வரும் துருவ மகரிஷியின் உணர்வுகளைக் கவர்ந்து உயிரின் தன்மை கொண்டு “உயிர் வழியாக” உங்களை சுவாசிக்கச் செய்து
7.”நஞ்சினை வென்றிடும்” உணர்வின் அணுக்களாக உங்களுக்குள் அது உருவாக்கச் செய்வதற்கே இந்தத் துருவ தியானம்.

 

ஏனென்றால் நமது குருநாதர் இத்தருணத்தில் தியானிக்கும்படி எமக்குள் எப்படி உருவாக்கினாரோ அதே போன்று உங்களுக்குள்ளும் இது உருவாக்கப்பட்டு அந்தச் சக்திகளை நீங்களும் பெறுவதற்குத்தான் இந்தத் “துருவ தியானத்தை” அமைத்திருக்கிறோம்.

கூட்டுத் தியானத்தின் சிறப்பு என்ன…?

Combined meditaion

கூட்டுத் தியானத்தின் சிறப்பு என்ன…?

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் தியானமிருக்கும் அனைவரது குடும்பங்களிலும் படர்ந்து அவர்கள் இரத்தநாளங்களில் கலந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

அவர்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் பாப வினைகள் அனைத்தும் அகன்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

தியானமிருக்கும் குடும்பங்களில் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மன நோய் நீங்கி மன பலம் பெற்று உடல் நோய் நீங்கி உடல் நலம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

தியானமிருக்கும் குடும்பங்களில் வாழ்ந்து வரும் கணவனும் மனைவியும்
1.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து
2.நளாயினியைப் போன்று கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதித்து நடந்து
3.சாவித்திரியைப் போன்று கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றி வாழ்ந்து
4.இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து
5.இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி
6.நஞ்சினை வென்று பேரருள் பெற்று பேரொளி என ஆகிட அருள்வாய் ஈஸ்வரா

தியானமிருக்கும் குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள் அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற்று அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

எங்கள் குழந்தைகள் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
1.கல்வியில் ஞானம் பெற்று
2.கருத்தறிந்து செயல்படும் திறன் பெற்று
3.உலக ஞானம் பெற்று
4.உலகைக் காத்திடும் உத்தம ஞானிகளாக
வளர்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

இதை எல்லோரும் ஒன்று போலச் சொல்லி “உணர்வின் ஒலிகளை எழுப்பும் பொழுது..,
1.எல்லோருடைய செவிகளிலும் படுகின்றது.
2.இந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டுகின்றது.
3.கண்களுக்கு வருகின்றது.
4.சொன்ன உணர்வுகள் எல்லாம் இந்த பூமி முழுவதும் படர்கின்றது.
5.நம்முடைய கண்களில் உள்ள கருமணிகள் பதிவாக்குகின்றது.
6.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் இந்த அருள் உணர்வுகளைக் கவர்ந்து இழுக்கின்றது.
7.நம்மைச் சுவாசிக்கச் செய்கின்றது.
8.நம் உயிரிலே மோதுகின்றது.
9.இந்த உணர்ச்சிகள் இரத்தநாளங்களில் கலக்கின்றது.

இப்படி “எல்லோரும்.., நன்றாக வேண்டும்” என்று நாம் சொல்லும் உணர்வுகள் வலுப்பெறுகின்றது. அடிக்கடி இந்த மாதிரிச் சொன்னோம் என்றால் “நோயுள்ளவர்கள் கேட்டால் கூட.., அந்த நோயெல்லாம் நீங்கிவிடும்”.

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் குடுமபத்தில் உள்ள சிரமங்களெல்லாம் நீங்கள் வேண்டும் என்று நீங்கள் ஒன்று சேர்ந்து கூட்டாகத் தியானித்துப் பரிசுத்தப்படுத்துங்கள்.., நீங்கிவிடும்.

இது ஒரு “பழக்கத்திற்கு..,” வரவேண்டும்.

ஒருவர் மிகக் கொடுமையான நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதனின் வீரியத்தைக் குறைக்க முடியும். ஆனால், அதே சமயத்தில் “இறப்பதை…, யாரும் தடுக்க முடியாது”.

அவர் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அவர் உயிரான்மா வெளியிலே சென்றாலும்.., இந்தக் கூட்டுத் தியானத்தின் அமைப்பு கொண்டு அவரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ளுதல் வேண்டும்.

அங்கே இணைத்து அவரைப் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.

ஆனால், முழுமையாக ஆயுள் காலம் முழுவதும் தியானம் செய்து “தியானத்தால்.., நோயெல்லாம் நீக்கிவிடுவேன்” என்று சொன்னால் யாரும் முழுமையாக இருக்கப் போவதில்லை. “இருக்கவும் முடியாது”.

1.சிறிது காலம் இந்த உடலிலிருந்து “நல்லதை எண்ணுவதற்காக வேண்டியாவது..,” வாழ வைக்கலாம்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை “அவரைப் பெறச் செய்வதற்காக வேண்டி” வாழ வைக்கலாம்.

முழுமையாக யாரையும் நாம் காப்பாற்ற முடியாது. நம்மையே.., நாம் காப்பாற்ற முடியாது. பிறகு.., யாரை நாம் காப்பாற்ற முடியும்…!

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து முழுமை பெறுவதற்காகத்தான் இதை மீண்டும் மீண்டும் உபதேச வாயிலாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

எல்லோரும் நல்லதாக வேண்டும் என்று சொல்லும் பொழுது எல்லா உணர்வுகளும் நமக்குள் நல்லதாகின்றது. நாம் கூட்டமைப்பு கொண்டு எல்லோரும் சேர்ந்து சொல்லப்படும் பொழுது மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும்.

வெள்ளம் வந்தால் குப்பை கூளங்களை ஒட்டு மொத்தமாக அடித்துச் செல்வது போல் அந்த அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து எண்ணும்போது ஒவ்வொருவருக்குள்ளும் அதீத அளவில் சக்திகள் கூடும்.

தீமைகள் விலகும். வாழ்க்கையில் வேதனையின்றி வாழ முடியும். மன மகிழ்ச்சி கிடைக்கும். ஆகவே, வாரத்தில் ஒரு நாளாவது கூட்டாகத் தியானியுங்கள்.

கூட்டமைப்பாகத் தியானித்து “அதீத சக்திகளைப் பெறுங்கள்” – சக்தி வாய்ந்தவர்களாக நீங்கள் ஆவீர்கள். உங்கள் அனுபவம் பேசும்.

“இன்றைய தியானம்” நாளைய அழியா ஒளிச் சரீரம்

அழியா ஒளிச் சரீரம்

“இன்றைய தியானம்” நாளைய அழியா ஒளிச் சரீரம்

உயிரைக் கடவுளாக மதித்து உடலைக் கோவிலாக மதித்து உணர்வுகளைத் தெய்வமாக மதித்து நாம் தியானமும் ஆத்ம சுத்தியும் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:-

தியானத்தின் பலன்கள்

1.நமக்குள் சிந்திக்கும் தன்மைகளும் தெளிவான நிலைகளும் நமக்குள் வருகின்றன.

2.நமது ஆன்மா (உணர்வுகள்) தூய்மை அடைகிறது.

3.கண் கவர்ந்து பதிய வைத்த தீமைகளை “அதே கண் கொண்டு” அகற்றும் திறன் நாம் பெறுகின்றோம்.

4.தீமைகள் உட்புகாது தடுக்க முடிகின்றது.

5.மன வலிமை உடல் நலம் தொழில் வளம் பெருகுகின்றது.

6.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் நமக்குள் “புயலெனப் பெருகி..,” ஜீவ அணுக்களாகி மற்ற தீய உணர்வுகளை வெளியேற்றிவிடும்

7.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் ஜீவ அணுக்களாகி அது நமது  எலும்புகளுக்குள் இருக்கும் ஊன்களுக்குள் அருள்ஞான வித்துகளாகி நமது உயிராத்மாவின் செயலாக்கமாகி நம்மை ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

8.துருவ நட்சத்திரத்தின் பேரருள்  பேரொளியின் “காந்தப் பாதுகாப்பு வட்டத்திற்குள்” செயல்படும் நிலை பெறுவோம்.

9.கணவன் மனைவி இணைந்து எடுக்கும் தியானம் நம் ஆத்மாவை “வைரமாக.., ஜொலிக்க வைத்திடும்”.

10.மனிதனாக இன்று இருக்கும் நாம் பரிணாம வளர்சியான “ரிஷி நிலை” பெறும் தகுதியை அடைகின்றோம்.

11.நமக்குத் தீமை புரிபவர்களது உயிரையும் கடவுளாக மதிக்கும் பண்புகள் வளர்கின்றது. ஆகவே அந்த உயிரிலும் தீமை புகாது தடுத்திடும் நிலையை உருவாக்குகின்றோம்.

12.அதனால் இந்த உலக மக்களையும் நாம் காக்க முடியும். அவர்கள் படும் துயரங்களையும் நம்முள் புகாமல் தடுக்கவும் முடிகின்றது.

13.நம்மை அறியாது சேர்ந்துள்ள சாப வினைகள்  பாப வினைகள்  தீய வினைகள் பூர்வஜென்ம வினைகள் வலு இழந்து விடுகின்றன. இனி வரும் எத்தகையை வினைகளையும் மாற்றிடும் அருள்ஞானம் நமக்குள் வளர்கின்றது.

14”மெய்ப் பொருள் காணும் திறனும்” மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெறுகின்றோம்.

பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெறக்கூடிய வழிமுறை

1.அருள் ஞானிகளைப் பற்றிய உணர்வுகள் நம் சிந்தனைக்குள் இருக்க வேண்டும்.

2.ஞான குருவின் உபதேசங்களைத் திரும்பத் திரும்பப் படித்து அறிந்து உணர்ந்து அதை நம் நினைவிற்குள் கொண்டு வர வேண்டும்.

3.மகிழ்வான உணர்வுகளைக் குருவிற்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

4.“நம் எண்ணம் சொல்  செயல் வெளிப்படும் பொழுது..,” இவற்றில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் கண்டிப்பாக நுகர்ந்து “ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்.., அதை முன்னிலைப்படுத்த வேண்டும்”.

5.மற்றவர்களின் எண்ணங்கள் சொல் செயல்களால் நாம் நுகரும் எத்தகைய உணர்வுகளுக்கும் முன்பாக.., “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை உடனுக்குடன் நுகர்ந்து..,” அவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும்.

6.சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொழுதெல்லாம், இதைச் செய்து கொள்ள வேண்டும். இதை ஒரு பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.

7.நாம் ஒவ்வொருவரும் இரவு தூங்கச் செல்லும் முன்  அரை மணி நேரமாவது குறைந்தது பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படர்ந்து என் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வை நமக்குள் தியானித்து இணைக்க வேண்டும்.

8.அந்த உணர்வுடனே நாம் உறங்குதல் வேண்டும். அதே நினைவுடன் காலையில் ஒரு பத்து நிமிடமாவது அதைத் தியானித்தல் வேண்டும்.

9.உயிருடன் இணைந்த உணர்வுகளை “குரு காட்டிய வழியில்.., குருவின் துணை கொண்டு.., ஒளியின் சரீரமாக மாற்றும் சந்தர்ப்பங்களை உணர்ந்து.., அதைக் கூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்”.

10.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை… சதா.., “முன்னிலைப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்”.

11.மருத்துவர் கொடுக்கும் மருந்தினை நாம் கட்டாயமாக்கி உட்கொள்வது போன்று விஞ்ஞானிகள் உயிரினத்தின் செல்களை இணைக்கும் நிலையில் (இரு உயிரணுக்களை) கட்டாயப்படுத்தி ஓர் புது ரூபத்தை மாற்றி உற்பத்தி செய்வதுபோல் “கட்டாயப்படுத்தி.., துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நமக்குள் இணைக்க வேண்டும்”.

12.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நாம் கவர்ந்து நமக்குள் ஒளி சுடராக மாற்றும் நிலையைத்தான்.., “நமது இன்றைய செயல்களாக அமைத்து.., நாளைய சரீரமாக நமது உயிராத்மாவை ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்”.

ஓம் ஈஸ்வரா குருதேவா…! ஓம் ஈஸ்வரா குருதேவா…!

அகக்கண் தியானம் என்றால் என்ன…?

Polaris Nebula

அகக்கண் தியானம் – உயிர் வழி சுவாசம்

  1. துருவ நட்சத்திரத்தின் இயல்பு

சிறிதளவு விஷத்தைக் கண்டாலும் அதனுடைய செயலாக்கத்தை அடக்கி எரித்துப் பொசுக்கி ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.

துருவ நட்சத்திரத்தின் அருகில் இன்றைய அணுகுண்டுகளோ அணுக் கதிரியக்கங்களோ செல்ல முடியாது. அதை அடக்கிவிடும். அதன் செயலாக்கத்தைத் தணித்துவிடும். தனக்குள் ஒளிச் சுடராக மாற்றிவிடும்.

சூரியனே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் தன் செயலாக்கங்களை இழக்காது. அந்த துருவ நட்சத்திரம், அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய நஞ்சினையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.

ஆசைகளையும், குரோதங்களையும் வளர்க்கின்றவரிடத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அணுகாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளின் உணர்வுகளை வளர்த்தவரிடத்தில் ஆசைகளும் குரோதங்களும் அணுகாது.

  1. “முதல் தெய்வங்களின்” (குரு) அருள் பெறவேண்டும்

உங்கள் தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்கி அவர்கள் அருளாசி பெறவேண்டும் என்று முதலில் ஏங்குங்கள். அவர்களுடைய அருளால் குருவின் அருள் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

  1. துருவ நட்சத்திரத்திற்குள் ஊடுருவிச் செல்லவேண்டிய முறை (METHOD)

ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்று உங்கள் உயிரை எண்ணி கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.

உங்கள் உடலில் உள்ள எல்லா எண்ணங்களையும் உணர்வுகளையும் குணங்களையும் ஒன்றாகத் திரட்டி.., “அழுத்தமாக” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

அவ்வாறு திரட்டிய உணர்வுகளை ஒன்றாகக் குவித்து ஒரு வில்லில் (தனுசு) அம்பை ஏற்றுவது போன்று நாணை நிதானமாக இழுத்துப் பூமியின் வடகிழக்கு திசையில் விண்ணிலே இருக்கும் “துருவ நட்சத்திரத்தை இலக்காகக் குறிவைத்து” புருவ மத்தியிலிருந்து இழுத்து விடுங்கள்.

புருவ மத்தியிலிருந்து ஏக்கத்துடன் வீசும் நம்முடைய உணர்வுகள் துருவ நட்சத்திரத்திற்குள் நேரடியாக அம்பாகத் தைக்கின்றது.

  1. துருவ நட்சத்திரத்தின் எதிர் அலை (“ECHO”) நீல நிற ஒளி நம் மீது மோதும்

ஒரு இசைக் கருவியை உதாரணமாக வீணையை நாம் தட்டினோம் என்றால் நாதம் எழும்பும். அதே சமயத்தில் அதனுடைய அதிர்வுகள் அலை அலையாக வரும்.

இதைப் போன்று துருவ நட்சத்திரத்தில் மோதும் நம் உணர்வுகள் பாய்ந்து அதிர்வாகி (ECHO) அங்கிருந்து துருவ நட்சத்திரத்தின் அலைகள் உயிரில் உள்ள காந்தம் ஈர்ப்பதால் திரும்ப வந்து புருவ மத்தியில் மோதுகின்றது.

ஆக, திரும்பத் திரும்ப நாம் நம் உணர்வுகளைக் குவித்து புருவ மத்தியிலிருந்து அம்பாக துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தச் செலுத்த அப்படி மோதும் உணர்வின் அதிர்வுகள் அலை அலையாக மாறி அலைத் தொடர்பாக மாறி அலை வரிசையாகின்றது. (FREQUENCY).

இது தொடர் வரிசையாகி துருவ நட்சத்திரத்துடன் நேரடித் தொடர்பு (LINK) நம் உயிருக்கு நமக்குக் கிடைக்கின்றது.

ஒரு வெல்டிங்கைத் (WELDING) தட்டினால் எப்படிப் “பளீர்..,” என்று வெளிச்சமாகின்றதோ அதைப் போன்று துருவ நட்சத்திரத்துடன் நாம் மோதும் இத்தகைய உணர்வுகள் நம் உயிரிலே இளம் நீல நிறத்தில் ஒளி வீசும்.

அந்த சமயத்தில் புருவ மத்தி சிறிது கனமாகவும் இருக்கும். நாம் புருவ மத்தியிலிருந்து இழுத்து சுவாசிக்கும் பொழுது அலைகள் நமக்குள் “ஜிவ்., ஜிவ்.,” என்று இழுப்பதைப் பார்க்கலாம், உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரொளி இப்பொழுது உயிர் வழி சுவாசமாகி அந்த உணர்வுகள் வாயிலே உமிழ்நீராகக் கரைகின்றது.

  1. துருவ நட்சத்திரத்தின் பேரருளை உடலில் உள்ள அணுக்களின் முகப்பில் இணைக்க வேண்டும்

இவ்வாறு வரும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை கண்ணின் நினைவு கொண்டு எங்கள் ரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்குங்கள்.

இப்பொழுது நம் உடலில் இருக்கும் சுமார் 5 அல்லது 6 லிட்டர் ரத்தம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் அலைகள் படர்கின்றது.

அடுத்து, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களிலும், அறியாது உட்புகுந்த ஜீவ ஆன்மாக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

இப்பொழுது, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களின் முகப்புகளிலும் அந்த சக்தி இணைகின்றது.

அதே சமயத்தில் ஜீவ ஆன்மாக்களின் முகப்பிலும் அந்த சக்தி இணைகின்றது.

திரும்பவும், புருவ மத்தியிலிருந்து துருவ நட்சத்திரத்திற்கு அம்பு போன்று நினைவைச் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தில் மோதி, அங்கிருந்து வரும் எதிரலை (ECHO) அதை உயிரின் வழியாக இழுத்து சுவாசியுங்கள்.

கண்ணின் நினைவு கொண்டு உடல் முழுவதும் பரவச் செய்து, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாகச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

  1. துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நம் ஆன்மாவிற்குள் கொண்டுவரும் முறை

திரும்பத் திரும்ப “நினைவு”

  1. புருவ மத்தியிலிருந்து துருவ நட்சத்திரத்திற்குச் செல்லவும்,
  2. துருவ நட்சத்திரத்திலிருந்து உயிர் வழி இழுத்து சுவாசிக்கவும்,
  3. கண்ணின் நினைவு கொண்டு அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடலில் உள்ள அணுக்களில் இணைக்கச் செய்யவும்,
  4. அந்த சக்தி பெறவேண்டும் என்று மறுபடி புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிரான ஈசனிடம் வேண்டுவதும்தான் “தியானம் செய்யவேண்டிய முறை”

அதாவது வட்டம் போன்று (CIRCULATION) புருவ மத்தியில் ஆரம்பித்து புருவ மத்தியிலே முடிக்கும்போது அலை அலையாக இழுக்கும் பொழுது துருவ நட்சத்திர சுவாசமானது உடல் முழுவதும் சுழன்று வருகிறது.

இப்படி சுழலச் சுழல உடலின் வெப்பத்தால் கொதித்து அந்த துருவ நட்சத்திர அலைகள் உடலிருந்து மணங்களாக வெளிப்படத் தொடங்குகின்றது.

உடலிலிருந்து வெளிப்படும் துருவ நட்சத்திரத்தின் மணம் ஏற்கனவே நம் உடலைச் சுற்றியிருக்கும் ஆன்மாவில் உள்ள தீமை செய்யும் அலைகளைப் பிளந்து நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து கழற்றி வெளியே தள்ளிவிடுகின்றது.

நம் உடலைச் சுற்றியிருக்கும் காற்று மண்டலம், அதாவது நம் ஈர்ப்பு வட்டம் தான் “ஆன்மா”.

நாம் கண் வழி உற்றுப் பார்த்த உணர்வுகள் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் அந்த உணர்வலைகளைக் கவரும் பொழுது நம் ஈர்ப்புக்கு வரும் உணர்வலைகள் நமது ஆன்மாவாக மாறுகின்றது.

நம் ஆன்மாவில் அதாவது நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் எதைக் கவர்கின்றோமோ அதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம்.

அது புருவமத்தியில் உயிரில் பட்டவுடன் நாதமாகி எண்ணங்களாகி சொல்லாகவும் செயலாகவும் இயக்கச் செய்கின்றது.

இப்படி உருவான அணுக்களின் மலம்தான் நம் உடலாக உருவாகியுள்ளது. உருவான அந்த அணுக்களுக்கு நம் உயிர் இந்த பூமியின் காற்று மண்டலத்திலிருந்து உணவை எடுத்து நம் ஆன்மாவாக மாற்றி தொடர்ந்து அதைச் சுவாசிக்கச் செய்கின்றது.

ஆக, எத்தனையோ விதமான இந்த உணர்வுகள் அனைத்தும் நம் ஆன்மாவாக மாறிவிடுகின்றது. அந்த ஆன்மாவில் உள்ளவற்றைத் தூய்மைப்படுத்தும் நிலைதான் உயிர் வழி சுவாசமான மேலே குறிப்பிட்டுள்ள தியானம் செய்யும் முறை.

இப்படி தியானிக்கும் பொழுது நம் ஆன்மாவில் துருவ நட்சத்திர அலைகள்தான் இருக்கும். பிற உணர்வுகள் நம் ஆன்மாவிக்குள் வர முடியாது. நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது.

  1. துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் வாழத் தொடங்குகின்றோம்

ஆகவே, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம்முள் சேர்க்கும் பொழுது நம்மிடமிருந்து வெளிப்படும் மணம் அனைத்து விஷங்களையும் வெல்லக் கூடியதாக இருக்கும்.

உயிர் வழி அதாவது புருவ மத்தியின் வழி விண்ணின் ஆற்றலைச் சுவாசித்துப் பழகிக் கொண்டால் நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை அடைகின்றது.

நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழத் தொடங்குகின்றோம்.நமக்கு இன்னொரு பிறவி (உடல்) இல்லை.

எந்தத் துருவ நட்சத்திரத்தைக் குறி வைத்து இழுத்து சுவாசிக்கின்றோமோ அந்த மணம் நம் ஆன்மாவில் பெருகி அதன் முலாமாக உயிரிலே சேர்ந்து யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் நமது உயிர்.

அங்கே சென்று பேரின்ப பெருவாழ்வு பெற்று ஏகாந்தநிலை அடைந்து எத்தகைய இன்னலும் இல்லாது எதிர்ப்பும் இல்லாது என்றும் பதினாறு என்ற அழியா ஒளி சரீரம் பெறமுடியும்.

இது இறுதியானதும், உறுதியானதும், மனிதன் நாம் எல்லோராலும் சாத்தியமாகக் கூடிய ஒன்றாகும்.

எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் எல்லா மகரிஷிகளின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கின்றேன்.

ஓ..ம் ஈஸ்வரா குருதேவா

இமயமலையில் தவமிருக்க வேண்டும்… நம்மால் அது எப்படி முடியும்..?

power of dhiyaanam

இமயமலையில் தவமிருக்க வேண்டும்… நம்மால் அது எப்படி முடியும்..?

இமயமலையிலே தபசு இருந்தார் என்றால்… “இமய…” என்றால் என்ன…?

இமை என்பது இரண்டு கண்களின் மையம் – “உயிர்”

உடல் உயர்த்தியான நிலைகள் மலை.

இமயம்…! என்று அவர்கள் பாடியிருந்தால் இமயமலையிலே போய் நான் தபசு இருக்கவேண்டும் என்றால் என்ன அர்த்தம்…?

உட்பொருளின் தத்துவத்தை அவர்கள் கொடுக்கப்படும்போது இமயமலையிலே போய் தவம் இருக்கச் சொன்னார். தவம் இருந்தார் என்றால் தவம் என்றால் என்ன…?

இந்த இமய மலையிலே புருவ மத்தியிலே நாம் எதையெல்லாம் உயர்த்தி எண்ணுகின்றோமோ இந்தத் தவத்தை நீ கூட்டி இங்கே சேர்க்க வேண்டும்.

இதுதான் பொருள்.

அந்தக் காவியத்திற்குள் இருக்கக்கூடிய பொருள். இமயமலையிலே போய் தவம் இருந்தார்கள். பெரிய பெரிய தவயோகிகள் என்று வர்ணித்துக் கொண்டேயிருக்கின்றோம்.

ஆனால் ஓவியங்களில் அவர்கள் நெற்றியைக் காட்டப்படும்போது, இது தெரியாமல் தான் எங்கெங்கோ சுற்றித் திரிகின்றோம்.
1.ஒளியாக இருக்கும் நம் உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி
2.அவனோடு ஒன்றி அவனாக மாறும்
3.(ஒளியாக மாறும்) பக்குவத்தைத்தான் மெய்ஞானிகள் அன்று காட்டினார்கள்.