கூட்டமைப்பின் மூலம் நாம் உருவாக்க வேண்டிய பேரருள் பேரோளி

கூட்டமைப்பின் மூலம் நாம் உருவாக்க வேண்டிய பேரருள் பேரோளி

 

கூட்டுத் தியானத்தின் மூலம் “அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்ற உணர்வினைக் கூட்டமைப்பாக நாம் வெளிப்படுத்தும் போது
1.அனைவரது செவிகளிலும் அது பட்டு இந்த உணர்வுகள் உயிருக்கு எட்டிக் கண்ணுக்குப் பாய்ச்சப்பட்டு
2.கண்ணின் துணை கொண்டு இந்தப் பூமியில் பரவி இருப்பதையும்… சொல்லும் உணர்வையும் கவர்ந்து
3.அத்தகைய வலுக் கொண்ட அணுவாக உடலுக்குள் உருவாக்குவது தான் கூட்டுத் தியானத்தின் அமைப்பு.

பல பொருள்களைப் போட்டுச் சுவைமிக்க குழம்பாக உருவாக்குவது போன்று பலரும் ஒன்றாகச் சேர்த்து அனைவரும் நலம் பெற வேண்டும்… இருளில் இருந்து மீள வேண்டும்… நஞ்சில் இருந்து விடுபட வேண்டும்… பேரருள் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வைச் சொல்லப்படும் பொழுது இந்தக் கூட்டமைப்பின் உணர்வின் சக்தி நமக்குள் “பேரருள் சக்தியாக மாறுகின்றது…”

இப்படி…
1.ஒவ்வொரு மனித உடலிலும் விளையும் அந்த அருள் உணர்வுகளை ஒன்றாக இணைத்துக் கூட்டுத் தியானத்தினை வளர்ப்போம் என்றால்
2.கடும் தீமைகளை வெல்லும் ஆற்றலை நாம் அனைவருமே பெறுகின்றோம்.

ஆகவே இந்தக் கூட்டமைப்பை நாம் ஒழுங்குப்படுத்தி அதைப் பற்றுடன் செயல்படுத்தி பேரருளை நமக்குள் கூட்டுதல் வேண்டும்.

அந்தப் பேரருள் என்ற உணர்வே துருவ நட்சத்திரத்திலிருந்து பெற்றது தான். அதன் உணர்வை நமக்குள் கவர்ந்து பேரருள் என்ற இயக்கச் சக்தியை… தீமைகளை அகற்றும் வல்லமை பெற வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

ஒவ்வொரு உயிரும் ஈசனாக இருந்து… ஒவ்வொரு உடலும் கோயிலாக இருந்து… அந்தக் கோவிலுக்குள் மனிதனாக இருக்கும் நற்பண்புகளையும் நற்செயல்களையும் நல்ல உணர்வுகளையும் தீமையை அகற்றும் உணர்வாக விளையச் செய்துள்ளது.

ஆகவே…
1.நஞ்சினை வென்று உணர்வைப் பேரருளாக மாற்றும் இந்த மனித உடலுக்குள் இருக்கும் பேருண்மைகளை நாம் உணர்ந்து
2.பகைமை உருவாகாது அருள் ஒளியைப் புகுத்தி… அருள் ஞானத்தைப் பெருக்கிப் பேரருளாக மாற்றி
3.நமது சொல்லும் செயலும் கேட்போர் உணர்வுகளில் மகிழ்ச்சி பெறச் செய்வதும்
4.அவர்கள் பேரானந்த நிலைகளில் வாழும் பொழுது அதை நுகர்ந்து அரும்பெரும் சக்தியாக நமக்குள் மாற்றி அமைப்பது தான் கூட்டுத் தியானத்தின் நோக்கம்.

இதை எல்லாம் அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும். பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். பேரானந்த நிலை பெற வேண்டும்.1.
1.அந்தப் பேரருளைப் பெற்று அனைவரும் பேரொளியாக வாழ வேண்டும்
2.அனைவரும் பேரருளைப் பெற்று பேரொளியின் இயக்கமாக இருக்க வேண்டும் என்ற
3.இந்த உயர்ந்த நோக்கத்துடனே நாம் அனைவரும் செயல்படுவோம்… கூட்டமைப்பின் மூலமாக நாம் இதை உருவாக்குவோம்.

அவரவர்கள் பெற்ற உண்மைகளைத் தெளிவாக்கி அனைவரையும் தெளிவாக்குவோம்… மற்றவர்கள் இருளைப் போக்கிடும் சக்தியாக இது வளரட்டும்.

அதிகாலையில் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்

அதிகாலையில் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்

 

விஷத்தன்மைகள் பூமியில் அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது. சாயப்பட்டறைகள் மூலமாகக் கெமிக்கல்கள் பரவிக் கொண்டுள்ளது. அதே போல கரும்பு ஆலைகளிலும் கரும்புச் சாற்றில் உள்ள அழுக்குகளை நீக்க அதிலும் கெமிக்கலைப் போடுகின்றார்கள். அந்தக் கெமிக்கலை நம் துணியில் போட்டால் துணி வெந்து ஓட்டையாகிவிடும். ஆனால் அந்த கெமிக்கலை உபயோகித்து அதிலே உருவான சர்க்கரையைத் தான் நாம் உட்கொள்கிறோம்.

1.பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது… ருசியாக உள்ளது. ஆனால் விஷத்தன்மைகள் கலந்து வருகின்றது
2.இப்படி விஞ்ஞான அறிவு கொண்டு பொருள்களை தெளிவாக்கினாலும் இந்த நிலை ஆகிறது.

குடி தண்ணீரிலும் இதைச் செயல்படுத்தினார்கள். நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் எண்ணெய்களையும் தூய்மைப்படுத்த இது போன்றே செயல்படுத்துகின்றார்கள். எண்ணையில் இருக்கும் கொழுப்புச்சத்தை எடுக்கின்றோம் என்று சொல்கின்றார்கள்.

அதை எடுக்கின்றது… ஆனால் அந்த எண்ணெயை நாம் உபயோகப்படுத்தும் பொழுது இந்தக் கெமிக்கல் நம் உடலுக்குள் இணைந்து விடுகின்றது… அணுக்களிலும் சேர்கின்றது.

இதிலிருந்து எல்லாம் நாம் தப்ப வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சேர்த்து மேலே சொன்ன தீமையான விளைவுகள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும்.

விஞ்ஞான அறிவால் பல வகைகளிலும் நச்சுத்தன்மைகளைப் பரவ விட்டுள்ளார்கள். அதனால் அஞஞான வாழ்க்கையாகச் சிந்தித்து செயல்படும் திறனை பெரும்பகுதியானவர் இழந்து விட்டோம்.

1.அதனால் திடீரென்று உணர்ச்சிவசப்படக் கூடிய நிலைகளும் தவறு செய்யக்கூடிய உணர்ச்சிகளைத் தூண்டுவதும் சிந்தனை இல்லாது செயல்படுத்தும் நிலைகளும் வருகின்றது.
2.இதைப்போல் வரும் பொழுது தான் போக்குவரத்திலும் விபரீத விபத்துகள் ஏற்படுகின்றது.
3.மனிதனுக்கு மனிதன் என்ற நிலை இல்லாதபடி பல விபரீத செயல்களும் இரக்கம் ஈகையற்ற நிலைகளும்
4.ஒருவரை ஒருவர் தாக்கிக் கொன்றிடும் நிலைகள் வந்து விடுகின்றது.

காரணம் ஒரு பொருளிலே விஷம் பட்டு விடடால் அதை நாம் உட்கொள்ளும் பொழுது நம்முடைய சிந்தனைகள் இழக்கப்படுகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

அதே போலத்தான் நம்மை அறியாமலே விஷத்தன்மைகள் சிறுகச் சிறுக உடலில் உள்ள அணுக்களில் சேர்க்கப்படும் பொழுது தவறு செய்யும் இயல்புகளாக மாறி விடுகின்றது. கடும் நோய்களும் வருகிறது.

இதிலிருந்து நாம் மீள வேண்டும்.

1.காலையில் கண் விழித்த உடனே துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலு சேர்த்துக் கொண்டு
2.அந்தச் சக்தி கணவன் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்றும்
3.குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று குடும்பத்தில் உள்ள அந்த குழந்தைகளும்
4.இதைப் போன்று எண்ணக் கூடிய ஒரு பழக்கத்திற்கு நாம் கொண்டு வர வேண்டும்.

அந்தக் குழந்தைகளுக்கு ஒரு இரண்டு நாள் மூன்று நாள் சொல்லிப் பதிவாக்கி அவர்களையும் பழக்கிக் கொண்டு வந்தால் சீராகும். அவர்களுக்கும் நல்ல படிப்பு வரும் ஞானங்கள் வரும் என்று சொல்லிப் பழக்கப்படுத்திக் கொண்டு வர வேண்டும்.

அதிகாலை ஒரு ஐந்து ஐந்தரைக்குள் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
1.நம் உடலை உருவாக்கிய எல்லா அணுகளுக்கும் வலு சேர்த்துப் பழக வேண்டும்.
2.அந்தச் சக்திகளை நாம் அவசியம் பெருக்கிப் பழக வேண்டும்.

நாம் செய்யும் தியானத்தைச் சீர்படுத்ததும் முறை

நாம் செய்யும் தியானத்தைச் சீர்படுத்ததும் முறை

 

மனித வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகளை நாம் பதிவாக்கி வைத்துள்ளோம். கோபப்பட்டவரை வேதனைப்பட்டவரை நோய்வாய்ப்பட்டவரை இது போன்று எத்தனை வகையான மனிதர்களை நாம் பார்க்கின்றோமோ அவையெல்லாம் நமக்குள் பதிவாகி விடுகின்றது. ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… என்று நம் உடலாக மாறிவிடுகின்றது.

இருந்தாலும் அவரிடம் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் அனைத்தும் அலைகளாக நம் புமியிலே பரவுகின்றது.
1.அவ்வாறு பரவி இருப்பது நம் உடலில் அணுக்களாக மாறிவிட்டால் அது உணவுக்காக நம் உடலில் உணர்ச்சிகளை உந்தும்.
2.அப்படி உணர்ச்சிகளை உந்தினால் நம் முன் இருப்பதை அது கவரும்.

அதாவது செடி கொடிகள் தன் சத்தினை எப்படிக் கவர்ந்து கொள்கின்றதோ இதைப் போல நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைக் கவர்ந்தால் நாம் சுவாசிக்க நேர்கின்றது.
1.சுவாசித்தால் அவர்கள் என்னென்ன சங்கடப்பட்டார்களோ அது எந்தெந்த நிலையோ நம்மை அறியாதபடியே சோர்வடையும் நிலைகள் வரும்.
2.அத்தகைய சோர்வடையும் நிலைகள் வந்தால் இரத்த நாளங்களில் கலந்து அது உணவாக எடுத்துக் கொள்ளும்.
3.இப்படி நம்மை அறியாமலே சில நேரங்களில் சிந்தனை இல்லாதபடியே இது போன்ற சிந்தனைகள் வரும்… தியானம் செய்யும் பொழுது.

சிலரிடம் அதிகப் பற்றுடன் பழகி இருப்போம். சந்தர்ப்பத்தில் அவர்கள் கஷ்டப்பட்டு இருப்பார்கள். அதை நாம் நுகர்ந்து விட்டால் அந்த அணுக்கள் நமக்குள் விளைந்து விட்டால் நாம் தியானிக்கும் நேரத்திலே நம்மை அறியாமலே அவருடைய எண்ணங்கள் நமக்குள் வரும்.

வியாபாரத்தில் ஏமாற்றி இருந்தால் கொடுக்கல் வாங்கலில் அவருடைய உணர்வுகளை நாம் பதிவு செய்திருப்போம். அப்படிப் பதிவு செய்திருந்தால் நமக்குள் ஏமாற்றம் அடைந்த உணர்வுகள் இருப்பினும் இந்த உணர்வுகளுக்கு எல்லாம் வலு அதிகம்.

தியானத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணினாலும்… இந்த விஷம் கொண்ட உணர்வுகள் இந்த உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் உணவுக்காக உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது “நம் ஆன்மாவில் அதிகமாகச் சேர்கின்றது…”

அதைச் சுவாசித்தோம் என்றால் நம்மை அறியாமலே இயக்கும். நாம் நினைப்பது துருவ மகரிஷி என்று…! ஆனால் அவருடைய உணர்வுகள் தான் அதிகமாக வரும்.
1.அந்த மாதிரி நினைவு வந்தாலும் கண்களை மூடித் தியானித்துக் கொண்டிருக்கிருக்கும் பொழுது உடனடியாக கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் நினைவை இணைக்க வேண்டும்.
2.கண்களைத் திறந்து சிறிது நேரம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா என்று அப்படியே கண்களை மூட வேண்டும்.

இப்படி அந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துவிட்டால் மற்றவருடைய உணர்வுகளை இழுப்பது குறையும். இப்படி ஒவ்வொரு சமயத்திலும் நாம் தியானிக்கும் போது இத்தகைய நிலை வந்தால் இதைப் போன்று நாம் சமாளித்துப் பழக வேண்டும்.

தீமை விளைவிக்கும் உணர்வுகளுக்கு நாம் நுகர்ந்த உணர்வு ரத்த நாளங்களிலே கலக்கப்படும் பொழுது இது அதிகரித்து… அதாவது
1.நம் உடலில் உள்ள வெறுப்பான உணர்வுகளைச் சுவாசிக்கும் அந்த அணுக்களுக்கு
2.இரத்த நாளங்களில் துருவங்கள் நட்சத்திரத்தின் பேரருள் பேரோளியைக் கலக்கப்படும் பொழுது அந்த அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தும்.

நல்ல குணங்களுக்கொ மற்ற நிலைகளுக்கோ பிற உணர்வு நம்மைத் தடைப்படுத்துவது போல நாம் அந்த மகரிஷியின் அருள் சக்திகளை கண்ணைத் திறந்து ஏங்கி சிறிது நேரம் உள்ளே செலுத்தினோம் என்றால்… ரத்தங்களிலே கலந்த பின் அந்த அணுக்களின் செயலை இந்த வலுவான நிலைகள் அதைத் தடைப்படுத்தும்.

இப்படி நாம் மாற்றிப் பழக வேண்டும்.

பலருடைய உணர்வுகள் இருக்கும் பொழுது இந்த உணர்வுகளைக் கவர்ந்த பின் அந்த அலைகளை எடுத்து நமக்குள் ஆன்மாவாக ஆனபின் இதுதான் முன்னணியில் வருகின்றது. நாம் தியானிக்கும் நிலையை மாற்றிவிடும்.

நாம் தியானித்துக் கொண்டே இருப்போம். திடீரென்று திசை மாறிச் சென்றுவிடும்.

இதே போலத் தான் நம் ரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தினோம் என்றால் அதனுடைய உணர்வுக்கு உணவு கிடைக்கவில்லை என்கிற பொழுது அது ஒடுங்கிவிடும்.
1.இப்படி நாம் அதை ஒடுக்கி ஒடுக்கி அருள் உணர்வுகளை பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.
2.தியானம் செய்யும் பொழுது நாம் பழக வேண்டியது முக்கியமான பயிற்சி இது.
3.தீமை செய்யும் அணுக்கள் அனைத்தும் நல்லதாக மாறத் தொடங்குகிறது.

எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்

எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்

 

தியானம் என்றாலே சாமியாராகப் போய்விடுவோம்… சாமி கும்பிடுவோர் நாங்கள் எப்படித் தியானம் செய்வது…? என்றெல்லாம் சிலர் நினைப்பார்கள்.

தியானம் என்பதே உயர்ந்த எண்ணங்களைப் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணுவது தான்.

நம்மிடம் யாராவது சண்டையிடுகிறார்கள் அல்லது திட்டுகின்றார்கள்… என்றால்
1.அப்பொழுது என்ன நினைக்கின்றோம்…?
2.என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்…! என்று எண்ணுவது இது தியானம் தான்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் இது தியானம்தான்.

காரணம்…
1.நாம் எண்ணியது நமக்குள் உடலாகின்றது
2.எண்ணியதை உயிர் இயக்குகின்றது
3.எண்ணியதை உடலாக்குகின்றது உயிர்.
4.எண்ணியதை உடலுக்குள் விளைய வைக்கின்றது
5.விளைந்ததைத் தான் உடலை விட்டுப் பிரியும் சமயம் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது
6.நமக்குள் இருக்கும் எண்ணங்களை… உயிரே அதைப் படைக்கின்றது
7.நம்மை ஆளும் ஆண்டவனும் உயிரே
8.ஆண்டவனாக இருப்பதும் உயிரே
9.எண்ணியதை இயக்கி இறை ஆக்குவதும் இறைவன் ஆக்குவதும் உயிரே
10.எண்ணியதை ஓ என்று ஜீவன் ஆக்குவதும் உயிரே
11.எண்ணி உடலுக்குள் பதிவு செய்தாலும்… அது அனைத்திற்கும் குருவாக இருப்பதும் உயிரே.

நாம் எந்தெந்த உயர்ந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அதைத் திரும்ப எண்ணி அதற்குக் குருவாக நின்று நல்வழி காட்டுவதும் உயிரே.

1.ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்யும் பொழுது
2.மீண்டும் அதை எண்ணுவீர்கள் என்றால் குருவாக நின்று உங்களுக்கு அது நல்வழி காட்டும்.

தீமை செய்த உணர்வுகளை எண்ணினால் அது “ஓ” என்று ஜீவனாக்கி உடலுக்குள் “ம்” என்று பதிவு செய்தால்… திரும்ப எண்ணினால் தீமை செய்யும் எண்ணமாகக் குருவாக நின்று தீமையை விளைவிக்கும் நிலைக்கே அது உங்களை அழைத்துச் செல்கின்றது.

நோய் என்ற நிலைகள் பதிவானால் அந்த நோயைப் பற்றிப் பேசினாலும் அந்த நோயே ஜீவனாகி அதுவே குருவாகி நோயாக உடலுக்குள் உருவாக்கி விடும்.

ஆனால் நோயை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அதனை உங்கள் உயிர் ஜீவனாக்கி இந்த உணர்வின் தன்மை நோயற்றவனாக ஆக்கி
2.ஞானத்தின் தன்மை கொண்டு பொருளறிந்து செயல்படும் திறனாக நமக்குள் அதை வளர்க்க
3.அந்த உணர்வின் எண்ணம் குருவாக நின்று இந்த வாழ்க்கையை தீமை அற்றவனாக்கி
4.தீமைகளை அகற்றிடும் சக்தியாக நமக்குள் அது விளையும்.
5.அப்படி விளையச் செய்யும் சக்தி இதைக் கேட்டுணர்ந்தவர்கள் நீங்கள் பெற முடியும்.

உங்களுக்குள் ஊழ்வினையாக அந்த மெய் ஞானிகள் உணர்வுகள் ஆழமாகப் பதிய வேண்டும். உங்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும். நீங்கள் நன்மை செய்த நிலைகள் அந்தத் தெய்வ குணங்கள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.

மெய் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் விளைந்திட வேண்டும்… உங்கள் மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக மலர்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை யாம் உபதேசித்தது.

கேட்டுணர்ந்தோர் அனைவருக்கும் இது பதிவாகி இதன் வழி கொண்டு உங்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும். அந்தச் சிறந்த எண்ணங்கள் உங்களுக்குள் பதிவாகி ஞானத்தின் வழித்தொடராக வளர வேண்டும்.

1.எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்.
2.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து மக்களை மீட்டிடும் சக்தியாக விளைந்து
3.உங்கள் மூச்சும் பேச்சும் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக வளரும்.

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் ஆசீர்வாதம்

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் ஆசீர்வாதம்

 

யாகத்தைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். உண்மையான யாகம் என்பது பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1.ஒவ்வொரு உயிரும் சிறு துளி… சிறு நெருப்பு.
2.சிறு துளி சிறு நெருப்பாக இருந்து… நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து “பெரும் நெருப்பாக…”
3.யாம் உபதேசிக்கும் அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை எல்லோரும் சுவாசித்து
4.சுவாசித்த உணர்வலைகள் இந்தக் கூட்டுத் தியானத்தின் மூலம் உங்கள் உடல் முழுவதற்கும் படர்ந்தது.
5.அப்படிப் படரும் நிலை தான் யாகம்… “யாக வேள்வி…” என்பது.

யாகத் தீயில் எந்தப் பொருளைப் போடுகின்றமோ அதனின் மணம் வருகின்றது. இதைப்போல நம் உயிருக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் படரச் செய்து உடலுக்குள் அந்த யாகக் குண்டத்திற்குள் படரும்படி செய்கிறோம்.

அவ்வாறு படர்ந்து… நீங்கள் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அனைத்தையும் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
1.அவ்வாறு வெளிப்படும் இந்த யாக உணர்வுகள் எல்லோருடைய உணர்வுக்குள்ளும் ஊடுருவிப் படர்ந்து
2.நாம் இருக்கக்கூடிய இடம் கல் மண் தாவர இனங்கள் அதில் இருக்கக்கூடிய காந்தப் புலன்கள் இதைக் கவர்ந்து
3.அதிலே மெய்ஞானிகள் உணர்வுகளை படரச் செய்வதுதான் யாக வேள்வி என்பது.

இது உண்மையான யாக வேள்வி.

யாகத் தீயில் நெய்யை விடுகின்றோம். அதனின் உட்பொருள் என்ன…?

இந்த மனித வாழ்க்கையில் உயர்ந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்ற மகரிஷிகள்…
1.சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் அவர்களின் உணர்வின் எண்ணங்களை இயக்கி
2.நம் அனைவரது உயிருக்குள்ளும் யாகக் குண்டத்திற்குள் (உடலுக்குள்)
3.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உள் செலுத்துவது தான் நெய் ஊற்றுவது என்பது.

இந்த உணர்வலைகள் நம் உடல் முழுவதும் படர்ந்து பேச்சால் மூச்சால் பார்வையால் சொல்லால் செயலால் இது அனைத்தும் வெளியிலே படர்ந்து “கேட்போர் உணர்வுகளை மகிழ்ச்சியைத் தூண்டும் உணர்வாக அமைகின்றது…!”

யாகக் குண்டமான உடலில் நம் உயிரான நெருப்பில் போடப்பட்ட
1.அந்த மகரிஷிகள் உணர்வு தான் எல்லோருக்குள்ளும் படர்ந்து
2.நாம் இட்ட மூச்சலைகள் அனைத்தும் நம் வீட்டில் தெருவிலும் ஊரிலும் நாட்டிலும் படர்ந்து உலகம் முழுவதும் “ஊடுருவிப் படர்கின்றது…”

இதைத்தான் “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் கூடி நின்று ஆசீர்வாதம் செய்தார்கள்…” என்று காட்டப்பட்டது.

ஆகவே நாம் அனைவரும் ஒன்று சேர்த்து உணர்வின் எண்ணங்களைக் கூட்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பதிவு செய்யும் பொழுது
1.இந்தப் பதிவே ஊக்கச் சக்தியாக இருந்து
2.மெய்ஞானத்தின் தொடராக எல்லா இடங்களிலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்.

அதற்குத் தான் கூட்டுத் தியானத்தை அமைத்துள்ளோம்… எல்லோரும் அதிலே கலந்து கொள்ளுங்கள்…. அருள் ஞானக் கூட்டமைப்பை உருவாக்குங்கள்.

துருவன் நஞ்சை நீக்கி ஒளியாக மாற்றிய சக்தியை நம் கிட்னிக்குப் பெறச் செய்ய வேண்டும்

துருவன் நஞ்சை நீக்கி ஒளியாக மாற்றிய சக்தியை நம் கிட்னிக்குப் பெறச் செய்ய வேண்டும்

 

வயல்களில் நாம் களைகளை நீக்கினாலும் அதற்குள் மறைந்த வித்துக்கள் மீண்டும் முளைத்து வந்துவிடுகின்றது. இதைப்போலத்தான் நமது வாழ்க்கையில் எத்தனையோ விதமான வெறுப்பு உணர்வுகளை நாம் நுகர நேருகின்றது.

கண்களால் நாம் பதிவாக்கித்தான் நாம் நுகருகின்றோம். நுகர்ந்த உணர்வால் நாம் அறிகின்றோம்.
1.அந்த உணர்வுகள அனைத்தும் நம் இரத்தத்தில் கலந்து
2.நம் இரத்தமே மாசுபடும் நிலைகள் கொண்டு மாசுபடும் இரத்தங்கள் நம் உடல் முழுவதும் படரப்படும் பொழுது
3.நமது நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றிக் கடும் நோயாகி நம் உறுப்புகளில் நோய்கள் உருவாகி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை நாம் தடுப்பதற்கு… அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி ஒளியின் உடலாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் எண்ணி ஏங்கி நம் நினைவினைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும்.

அப்படி வைக்கப்படும்பொழுது நாம் இதற்கு முன்னாடி தீமைகளை நுகர்ந்திருந்தாலும் அந்த வெறுப்பு, வேதனை, சலிப்பு, சஞ்சலம், சங்கடம், கோபம், குரோதம் போன்ற உணர்வுகள் நம் உடலுக்குள் போகாது தடைப்படுத்திவிடும்.

அடுத்து நம் கண்ணின் நினைவு கொண்டு ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அதை உருவாக்கிய அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அது வீரியமடைந்து இந்த இரத்தங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளை அது ஏற்காது அது கழித்துவிடும்.

பின்… விஷத்தின் தன்மைகளை வடிகட்டும் கிட்னிக்குள் “துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும்” என்று வீரிய சக்தி உண்டாக்கப்படும் பொழுது
1.எப்படி அகஸ்தியன் அவன் துருவனாகும் பொழுது விஷத்தின் தன்மை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றானோ
2.அத்தகைய வலுவான நிலைகள் கொண்டு கிட்னி விஷத்தின் தன்மை வடிகட்டி நல்ல இரத்தங்களாக உருவாக்கி
3.நம் இருதயத்தைச் சீராக இயக்கி இருதயத்திலிருந்து மூளை பாகம் செல்லும் இந்த இரத்தங்களைப் பரிசுத்தமாக்கி
4.நமக்குள் நல்ல இயக்கமும் நல்ல நினைவும் உருவாக்குகின்றது.

இவ்வாறு அந்தத் “துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள்” நமக்குள் இருளை நீக்கி ஒளி பெறும் தன்மையாக நமது அறிவாக இயக்கத் தொடங்கும்.

வாழ்க்கையில் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க அதைப் பற்றுடன் பற்றி வாழும் நிலை உருவாகிறது.

சலிப்போ, சோர்வோ, சஞ்சலமோ, வேதனையோ, கோபமோ இந்த உணர்ச்சிகள் நமக்குள் வரும் பொழுதெல்லாம்…
1.“ஈஸ்வரா” என்று உங்கள் கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரின்பால் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணினால் அங்கே தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது.

பின் அதே கண்ணின் நினைவு கொண்டு ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கும் அந்தச் சக்தியைச் செலுத்தப்படும் பொழுது அது வீரியத்தன்மை அடைந்து விடுகின்றது.

அப்பொழுது நாம் அறியாது நுகரும் வேதனை உணர்வுகள் இரத்தத்தில் கலந்தாலும் “கிட்னி அதைச் சுத்தப்படுத்தி” நல்ல உணர்வுகளை நம் உடலுக்குள் பரவச் செய்கின்றது.

அதே போன்று எல்லா அணுக்களிலும் “துருவ நட்சத்திரத்தின்” உணர்வுகளை வலுவாக்கப்படும் பொழுது உடலில் உள்ள அணுக்கள் தீமைகளை ஏற்காது அதை நீக்குகின்றது.

இப்படி ஒதுக்கும்போது
1.நமது வாழ்க்கையில் நோய் வராததும் மன வலிமையும் சிந்தித்துச் செயல்படும் தன்மையும்
2.நாம் எத்தகைய தீமையைப் பார்த்தாலும் அந்தத் தீமையின் உணர்வு இயக்காது… நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.

எல்லா அணுக்களிலும் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறச் செய்வோம்

எல்லா அணுக்களிலும் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறச் செய்வோம்

 

1.உங்களையெல்லாம் யாம் எங்கே கொண்டு போகின்றோம்…?
2.அந்த அகஸ்தியன் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்துடன் இணைக்கின்றோம்.
3.குருநாதர் என்னை இப்படித்தான் கொண்டு சென்றார்.

அவர் காட்டிய நிலைகளில் தான் யாம் உங்களையும் அங்கே இணைக்க முடியும்.

ஒவ்வொன்றையும் சேர்த்து உங்கள் உடலில் எத்தனை விதமான குணங்கள் இருந்தாலும் அதனுடன் இணைத்து இணைத்து அதனின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சுகிறேன்.

உங்கள் கண்ணின் நினைவு உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் இதைச் சேர்க்கும்.
1.அப்படிச் சேர்க்கும் பொழுது நம் உடலிலுள்ள அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஏற்கும் பருவம் வருகின்றது.
2.அதை ஏற்கக்கூடிய பருவத்தைச் செய்தால் தான் ஈர்க்கும்… இல்லையென்றால் எடுக்காது.

அதனால் தான் அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு நமது குருநாதர் கொடுத்த அருள் வழியில் இதை உங்களிடம் சேர்க்கின்றோம். இதைப் பக்குவப்படுத்துதல் உங்கள் கையில்தான் இருக்கின்றது. ஆனாலும் உங்களை ஆயுள் மெம்பராகச் சேர்த்துக் கொண்டோம்.

வீட்டில் ஏதாவது சலிப்பு சஞ்சலம் வந்து விட்டால் “ஈஸ்வரா” என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் படர்ந்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்… உற்சாகம் ஊட்டும்.

குழந்தைகள் ஏதாவது குறும்புத்தனம் செய்தால் இதே போல ஆத்ம சுத்தி செய்து விட்டு… என் பிள்ளை ஞானியாக வேண்டும்…. அவன் கல்வியில் உயர்ந்தவனாக வேண்டும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

யாராவது எதிரியாகப் பேசுகிறார்கள் என்றால் உடனே “ஈஸ்வரா” என்று எண்ணி அதைத் தடுத்துவிடுங்கள்.
1.அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்.
2.அவர்கள் செய்வது யாருக்கும் தொல்லையில்லாத நிலை பெற வேண்டும்
3.அவர்களது பகைமையூட்டும் இந்த நிலைகள் மாற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இவ்வாறு நாம் எண்ணும் பொழுது அவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

ஏனென்றால்… “ஈஸ்வரா” என்று எண்ணி நம் உடலுக்குள் பெறச் செய்து விட்டு அந்த உணர்வின் தன்மையைச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வு (நாம் எடுக்கும் அருள் உணர்வுகள்) இரத்தத்தில் கலந்து செல்லும். இந்த அருள் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறுகின்றது… வலுவாகிறது.

அப்பொழுது இந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அங்கே போய்ச் சேரும். அவன் திருந்தும் நிலை வரும்.
1.அவன் திருந்த எண்ணினால் அவனுக்கு நல்லதாகிறது.
2.நம்மைத் திட்டும்போது நம் உடலுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.

இதே மாதிரி வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலும்
1.ஒவ்வொரு குணங்களிலும்
2.ஒவ்வொரு உணர்விலும்
3.ஒவ்வொரு செயல்களிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்து கொண்டே வரவேண்டும்.

பல விதமான குழம்பு வைக்கிறோம், பல விதமான பலகாரம் செய்கின்றோம். அதே மாதிரி நமக்குள் அந்தத் தீமை செய்யும் உணர்வைச் சுவை மிக்கதாக மாற்றிவிடுகிறோம்.

இப்படி நம் இரத்தத்தில் கலக்கும் பொழுது நம் உடலிலுள்ள எல்லா அணுக்களுக்கும் சேர்கின்றது. “கொஞ்சம் இதில் பொறுமை தேவை…”

ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகள் ஒருவர் மேல் வெறுப்பாகி விட்டால் ரோட்டில் போகும் பொழுது பார்த்தால் “போகின்றான் பார்…” என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்கின்றோம்.

இதே மாதிரி ஒருவன் யாருக்கோ தவறு செய்கின்றான். அதை நாம் பார்த்து விடுகின்றோம். பார்த்தவுடன் அவனின் நினைவு வருகின்றது. அதே உணர்வை எடுத்துத் தவறு செய்யும் அணுக்களைத்தான் நாம் வளர்க்கின்றோம்.

ஒருவன் சாபம் விடுகின்றான்… அவன் எதைப் பார்த்தாலும் சாபம் விட்டுக் கொண்டே இருப்பான். அவனைப் பார்த்தவுடன் பதிவு செய்து விடுகின்றோம். இந்த சாப அலைகள் அடுத்து நமக்குள் எதை எடுத்தாலும் தீமை செய்யும் அணுக்களாக வளர்ச்சி பெறுகின்றது.

அந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுது
1.அந்தக் கணமே “ஈஸ்வரா”என்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் கொண்டு வரவேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம் வாழ் நாளில் இதைப் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்து அந்தத் தீமையான உணர்வுகளை நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து தள்ளிப் பழக வேண்டும்..

ஒருவர் திட்டினார் என்று வைத்துக் கொள்ளுங்கள். திட்டியவர்களை எண்ணினால் புரை ஓட வைக்கின்றது. இங்கிருந்து தானே போகின்றது. யார் உடலில் விளைந்ததோ அங்கே போகிறது.

அப்படி உங்களை நினைக்கும்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் என்று நீங்களே இதைப் பெற்றிட வேண்டும்.

அதாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவர்களுக்குள் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்
2.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் போது இந்த உணர்வு நமக்குள் வருகிறது.
3.அவர்கள் உணர்வு பதிவாகிறது… இதனுடன் கலந்து அதை நாம் மாற்றி விடுகின்றோம்.

அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளை இங்கே இணைத்து விடுகிறோம். உள்ளே கெட்டது போகாமல் மாற்றி விடுகிறோம். இந்த உணர்வு இரத்தத்தில் கலக்கிறது. இரத்தத்தில் கலந்தவுடன் அதை எடுப்பதற்கு வழிவேண்டுமல்லவா…!

அது கலந்தவுடன் இதை மாற்றிவிட்டுத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதை முந்திக் கொடுத்துவிடுகிறோம்.
1.அதைக் கொடுத்தவுடன் நாம் கலந்து போவதை எடுத்துப் பழக வேண்டும்.
2.ஒன்றில்லாது ஒன்றில்லை…! எதுவுமே ஒன்று இணைந்தால் தான் அது வளரும்.

வட துருவத்தில் இருப்பது இழுக்கும். தென் துருவத்தில் இருப்பது தள்ளும். ஏனென்றால்
1.தென் துருவம் சூரியனைப் பார்த்து இருக்கின்றது.
2.வட துருவம் மேலே இருந்து இழுக்கிறது.
3.அதாவது காந்தத்தில் மற்றொரு காந்தத்தை வைத்தால் தள்ளிக் கொண்டே போகும்.

இதைப் போன்று நாம் நமது வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

1.நம் உடலில் உள்ள இரத்தத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும்,
2.நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

அந்த மகரிஷிகள் சென்றடைந்த எல்லையை நாம் அடைய வேண்டும், அதற்குத் தான் இதை உணர்த்துகின்றோம்.

நாம் அனவரும் ஒன்று சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை உலகமெங்கும் பரவச் செய்வோம்

நாம் அனவரும் ஒன்று சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை உலகமெங்கும் பரவச் செய்வோம்

 

அருள் ஞானச் சக்கரத்தை தினமும் உற்றுப் பாருங்கள். அதிலிருந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வரும்.

என்னென்ன காரியங்கள் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை எல்லாம் எண்ணுங்கள்.
1.குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.விவசாயம் செழிக்க வேண்டும்
3.தொழில் பெருக வேண்டும் வாடிக்கையாளர்கள் நலமாக வாழ வேண்டும்.
4.நோயுற்றவர்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைத்து
5.அவர் நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

சக்கரத்தை வைத்துப் பயபக்தியுடன் செயல்படுங்கள். பாலோ பழமா பதார்த்தத்தையோ வைத்துத் தியானம் இருந்துவிட்டு நீங்களும் உட்கொள்ளுங்கள்… குழந்தைகளுக்கும் கொடுங்கள்.

எல்லோரும் உடல் நலம் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த வழியைக் கடைப்பிடித்து வாருங்கள்.

எங்கள் ஊர் நன்றாக இருக்க வேண்டும் தெரு நன்றாக இருக்க வேண்டும் வீடு நன்றாக இருக்க வேண்டும் அடிக்கடி இந்த உணர்வுகள் இங்கே படர வேண்டும் என்று சக்கரத்தை உற்றுப் பார்த்து இந்த உணர்வுகளைப் பரப்புங்கள்.

1.ஊரில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.ஊரிலே விவசாயம் செழிக்க வேண்டும்
3.மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று
4.”சக்கரத்திற்கு முன்…” இதை எல்லாம் சொல்லிக் கொண்டே வாருங்கள்.

அதன் வழி ஓரளவுக்கு அனைவருக்கும் இந்த உணர்வுகள் படரும்… பரவும். ஊரில் உள்ள குடும்பங்களும் நலமாகும் சக்தி பெறும். இந்த உணர்வுகள் பரவப் பரவ எல்லோரும் அதைப் பெறும் தகுதி ஏற்படும்.

டிவி ஸ்டேஷனில் எந்த ஒளிபரப்பு செய்கின்றார்களோ அந்த அலைவரிசையைத் திருப்பினால் அது தான் வரும். அதே போல
1.குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அந்த அல்லைவரிசையை எடுத்துப் பரப்பப்படும் பொழுது
2.மற்ற யாரிடமும் பேசினாலும் கூட அவர்களுக்குள்ளும் இது பதிவாகின்றது.

அவர்களுக்கு இந்த எண்ணம் வந்தால் அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் அவர்களும் அவர்களை அறிய முடிகின்றது. அறியாது வந்த கஷ்ட நஷ்டங்களைப் போக்க முடிகின்றது.

உலகம் நலம் பெற்று வாழ நாம் இந்த முறைப்படி தியானத்தைச் செயல்படுத்த வேண்டும். எல்லோரும் நன்றாக ஆகும்பொழுது நமக்குள் அருள் மகரிஷியின் உணர்வுகளை எளிதில் பெற முடியும்.

ஒவ்வொரு குடும்பங்களிலும் கூட்டுத் தியானமிருங்கள். அந்தக் குடும்பம் நன்றாக வேண்டும்… குடும்பத்தில் குழந்தைகளும் மற்றவர்களும் தொழிலும் சீராக வேண்டும் என்று தியானமிருங்கள்.

நோயற்றவர்களுக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் அவர்கள் நலம் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானத்தில் முயற்சி எடுங்கள்… நலமாக வேண்டும் என்று ஒன்று சேர்ந்து சொல்லுங்கள். கூடுமானவரை சீக்கிரம் அவர்கள் உடல் நலம் பெறுவார்கள்.

என்ன தான் நோய் நீங்கினாலும் கூட நாம் வாழக்கூடிய காலம் குறுகியதுதான். எப்படியும் இந்த உடலை விட்டு நாம் பிரியத் தான் வேண்டும்… இந்த உடல் நமக்குச் சொந்தம் இல்லை.

அப்பொழுது என்ன செய்ய வேண்டும்…?

1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று அருள் ஒளியை அங்கே பாய்ச்சப்படும் பொழுது
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குச் சொந்தமாகின்றது.

உடல் நோய்வாய்ப்பட்டாலும் உடல் சுருங்கத் தான் செய்யும்… அருள் உணர்வுகள் பெற்ற பின் தீய உணர்வுகள் தீய அணுக்கள் குறையப்படும் பொழுது உடல் சுருங்கத் தான் செய்யும். ஆனால்
1.பேரருள் என்ற உணர்வுகள் உயிரிலே பட்டு… ஒன்று சேர்த்து இணைந்த பின்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து அதைக் கவர்ந்து
3.அந்த உணர்வை உணவாக எடுத்து “ஒளியின் பிளம்பாக…” மாறும்.

எப்போதுமே பிறவியில்லா நிலை அடையும் அந்தச் சக்தி பெறுகின்றோம். அதைத்தான் இராமாயணத்தில் இராமன் நேரமாகிவிட்டது என்று மனதைக் குவித்துப் பூஜித்தான் என்று காட்டியிருப்பார்கள்.

நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து… பகைமை இல்லாத உணர்வுகளை வளர்த்து… உடலில் இருக்கும் பொழுது ஒளியின் உணர்வைச் சேர்த்து… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும். கடைசி நிலை அது தான்…!

தியானிக்கும் பொழுது என் நெற்றியைப் பார்க்கச் சொன்னதன் நோக்கம்

தியானிக்கும் பொழுது என் நெற்றியைப் பார்க்கச் சொன்னதன் நோக்கம்

 

குரு காட்டிய அருள் வழியில் என் உயிரான ஈசனிடம் வேண்டி என் குரு காட்டிய அருள் உணர்வை நான் ஏங்கிப் பெறுகின்றேன்.
1.அந்த அருள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நீங்கள் உங்கள் உயிரை வேண்டும் பொழுது
2.கண்ணின் வழி குரு காட்டிய அருள் வழியில் “அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்களை இணைக்கச் செய்கின்றேன்…”

குரு எனக்கு அதன் வழி தான் காட்டிக் கொண்டு வந்தார். அதன் வழியே உங்களுக்கும் குரு வழியைக் காட்டி அந்த உணர்வினை எடுக்கும்படி செய்வதற்காக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

இப்பொழுது என்னுடைய நெற்றியில் புருவ மத்தியைப் பாருங்கள்…! அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அப்படியே உற்றுப் பாருங்கள்.

குரு காட்டிய அருள் வழியில் அவர் அருள் வழி காட்டிய அகஸ்தியனுடைய அருளும் அவன் துருவனான அந்த அருள் உணர்வும் துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும்
1.உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று என் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கின்றேன்.
2.அதன் வழி நீங்கள் ஏங்கும்போது அந்த உணர்வுகள் அந்த அலைகள் இங்கே வந்து
3.உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் பரவி பேரருளைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

நாம் அதிலே ஆயுள் கால மெம்பராக இணைகின்றோம். இதிலிருந்து உறுதி பூண்டு யாம் உபதேசித்த உணர்வின் வழிப்படி வாழ்க்கையில் வழி நடத்துகின்றேன். அந்த வழி நடத்தும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி அதே உணர்வு கொண்டு கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் எண்ணி உற்றுப் பாருங்கள்… அதை ஏங்கிப் பெறுங்கள்.

உங்களுக்கு… உங்கள் உயிரான ஈசனிடம் நான் வேண்டி…
1.ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அந்த அருள் உணர்வுகள் படர வேண்டும்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் படர வேண்டும்
3.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
4.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
5.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
6.உங்கள் உடலில் அந்த அருள் சக்தி படர வேண்டும் என்று உங்களைத் தியானிக்கின்றேன்.

நீங்களும் அதன் வழி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அந்த அருள் உணர்வுகள் நீங்கள் பெறுவதை உணர முடியும் உங்கள் உடலில் அது ஒளியலைகளாகப் பரவுவதையும் உணரலாம்.

தியானப் பயிற்சி

தியானப் பயிற்சி

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
1.கண்ணின் நினைவை அங்கே கொண்டு செல்லுங்கள்… கண்ணால் ஈர்க்கும் சக்தி வரும்.
2.இந்த உணர்வுகள் நெஞ்சின் எலும்புக்குள் ஊழ் ஊழ்வினை என்ற வித்தாக இப்பொழுது பதிவாகின்றது.
3.உங்கள் நெஞ்சில் பதிவாகும் உணர்வுகள் தெரிய வரும்.

கண்களால் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவரும் சக்தி வருகின்றது. கருமணிகளில் ஈர்க்கும் சக்தி கிடைக்கும். கண் கனமாக இருக்கும். கருமணியில் கவரப்படும் பொழுது நெஞ்சிலே ஊழ் வினை என்ற ஞானவித்து பதிவாகும்.

கண்களை மூடுங்கள். புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் இணையுங்கள்.

இப்பொழுது உயிரால் கவரப்படும் சக்தியாக மாறுகின்றது.

முதலில் கண்களிலே கவர்ந்தோம். கவர்ந்த உணர்வு நுகரப்படும் போது உயிரில் பட்டுத் தான் அது இயங்கும்.

ஆனால் கண்ணில் கவர்ந்த நிலைகள் ஈர்க்கும் சக்தி பெறச் செய்து ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

1.உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் சக்தி பெறுகின்றீர்கள்.
2.உங்கள் புருவ மத்தியில் கனமாக அந்த ஈர்ப்பு நிலைகள் தெரிய வரும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி உயிரில் மோதும் பொழுது சில வெளிச்சங்களும் தெரிய வரும்.

இப்பொழுது உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் ரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.

இரத்த நாளங்களில் எத்தனையோ கோடி உணர்வுகள் உண்டு. அந்த உணர்வுகளை இயக்கும் கருத்தன்மை உண்டு. ஜீவணுக்கள் உண்டு.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ரத்தங்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

எறும்பை நசுக்கினாலும் அந்த ஆன்மா ரத்தத்தில் தான் இருக்கும் மனிதன் மேல் பண்பு கொண்டு வாழ்ந்திருந்தாலும் அந்த ஆன்மா நமக்குள் வந்தால் அதனுடைய இயக்கத்தை உண்டாக்கும்.

எறும்பின் உயிரான்மா மனிதனாக உருப் பெறும் கருத்தன்மை அடைகின்றது.
1.ஆனால் மனிதனுடைய ஆள்மா வந்தால் அவனுக்குள் ஈர்க்கப்பட்ட துயரம் எதுவோ அந்த உணர்வை நமக்குள் இயக்கும்.
2.அத்த இயக்கம் நமக்குள் வராதபடி தடுக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ரத்த நாளங்களில் கலந்து
3.அதில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.கண்ணின் நினைவை ரத்தத்தில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது இரத்த நாளங்களிலே புது உணர்ச்சிகள் தோன்றும். உடலிலேயே உற்சாகம் ஊட்டும் உணர்வு வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்தங்களிலே கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

எல்லா உறுப்புகளிலும் நினைவைச் செலுத்துங்கள். இவ்வாறு செய்வதனால் உயிர் வழி உடலுக்குள் செல்லும் தீய உணர்வுகளைத் தடைப்படுத்துகின்றோம்.

அதே சமயத்தில் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்க்கின்றோம்.
1.நமது ஈர்ப்பு வட்டத்தில் உள்ள தீய அணுக்களுக்குண்டான உணர்வுகளை
2.உடலில் ஈர்ப்பு வட்டத்திலிருந்து நகர்த்திச் சென்று விலக்கி விடுகின்றது… அல்லது ஒதுக்கி விடுகின்றது.
3.இப்பொழுது நல்ல அமைதி கிடைக்கும். தீய உணர்வுகள் அனைத்தும் நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து அகன்று சென்று விடுகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுகுடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

முதல் முகப்பில் உள்ள அந்தச் சிறுகுடலில் தான் முதலில் ஆகாரங்கள் செல்கின்றது. அந்த ஆகாரத்தை ஜீரணிக்கும் சக்தி அந்த அணுக்களுக்குத் தான் உண்டு.

துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை அந்த அணுக்களுக்குப் பெறச் செய்யுங்கள். அதன் கீழ் உள்ள பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்படித் தியானித்து வந்தால் அந்த உறுப்புகள் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வரும். இதை எடுக்க எடுக்க அதை உணர முடியும் அறிய முடியும் உங்கள் உடல் உறுப்புகளில் என்ன நடக்கிறது…? என்று.

1.சிறுகுடல் பெருங்குடல் உருவாக்கிய அணுக்கள் வீரியமடையும் பொழுது குடலில் உள்ள குறைபாடுகள் நீங்கும்.
2.வயிற்று வலியோ மற்ற கோளாறுகளோ அது எல்லாம் நீங்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கணையங்கள் முழுவதும் படர்ந்து கணையங்களை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா.

சிறுகுடல் பெருங்குடல் ஆகாரத்தின் சத்துகளை அது உருவாக்கி அமிலமாக மாற்றி வெளி வருவதை உங்கள் உடலில் உள்ள கணையங்கள் மூன்று விதமாகப் பிரிக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே செலுத்தப்படும் பொழுது ஆகாரத்தில் கலந்து வரக்கூடிய விஷத்தன்மைகளை மாற்றி நல்ல உணர்வை உருவாக்கும் தன்மை கணையங்களுக்கு ஏற்படுகின்றது.
1.உடலை ஒட்டி இருக்கக்கூடிய கணையங்களின் உணர்ச்சிகளை…
2.அந்த உறுப்பின் இயக்கத்தை உணர முடியும்… அறிய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கல்லீரல் மண்ணீரல் முழுவதும் படர்ந்து கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

கல்லீரலை மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறும் பொழுது உற்சாகமடையும். அங்கிருக்கும் குறைகளை நீக்கும் அரும்பெரும் சக்தியாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரல் முழுவதும் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை நுரையீரலில் செலுத்துங்கள்.

நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் உற்சாகம் அடையும். இந்த வீரிய சக்தியை நீங்கள் உருவாக்குகின்றீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சிறுநீரகங்கள் முழுவதும் படர்ந்து சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா. கண்ணின் நினைவைக் கிட்னியில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இவ்வாறு செலுத்தினோம் என்றால் உப்புச் சத்து சர்க்கரைச் சத்து வாதநீர் போன்ற நிலைகளைச் சுத்திகரித்து நல்ல ரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படர்ந்து அதை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா. இப்போது அந்த இருதயம் சுறுசுறுப்படைவதை உங்களால் உணர முடியும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.கண்களிலே துருவ நட்சத்திரத்தின் சக்தி ஈர்க்கப்படும் பொழுது கருமணியில் வெளிச்சம் வந்து கொண்டே இருக்கும்.
2.நெஞ்சிலே உள்ள எலும்புக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வு பதிவாகிக் கொண்டே இருக்கும்.

குறைகளையோ வேதனைகளையோ மற்றவைகளைப் பார்த்தவுடனே அடுத்த நிமிடமே ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கருமணிகளில் படர வேண்டும் என்று ஏங்கித் தியானித்தால் கருமணிகளில் படும் விஷத்தன்மைகளைச் சுத்தப்படுத்தும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து நரமபினை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை நரம்பு மண்டலம் முழுவதும் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

நரம்பு மண்டலத்தில் உள்ள வாதநீர் பித்த நீர் விஷ நீர் முடக்குவாதம் போன்ற நிலைகள் வராதபடி அந்த அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது நரம்பு மண்டலம் சீராகும். வாத சம்பந்தப்பட்ட பல நோய்களைத் தவிர்க்க இது உதவும்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சின் எலும்புக்குள் படர்ந்து அங்கிருக்கும் ஊன் முழுவதும் படர்ந்து ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

1.இவ்வாறு செய்யும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எளிதில் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.
2.நாம் எண்ணும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக் கூடிய சக்தியைப் பெறுகின்றோம்.
3.அந்த சக்தி அங்கே நெஞ்சின் ஊனுக்குள் படர்வதை இப்போது உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தசை மண்டலம் முழுவதும் படர்ந்து தசைகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரழகும் எங்கள் தோல் மண்டலம் முழுவதும் படர்ந்து தோலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

தோல் மண்டலத்தை உருவாக்கிய அணுக்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தப்படும் பொழுது உடலிலே பெரிய வெளிச்சமே தோன்றும். உடலில் இருந்து வெளிச்சங்கள் வரும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை இவ்வாறு எடுத்து ஒரு பெரிய பாதுகாப்புக் கவசமாக அமைத்துக் கொண்டால்
2.விஞ்ஞானத்தினால் வரும் தீமைகளிலிருந்து விடுபட்டு நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள இந்தச் சந்தர்ப்பம் உங்களுக்கு உதவும்.

இந்தத் தியானத்தை அனுதினமும் காலையில் ஐந்தரை மணியிலிருந்து ஆறரை மணிக்குள் ஒரு அரை மணி நேரமாவது எடுக்க முடிந்தால் எடுங்கள். முக்கியமான நேரம் அது… அந்த நேரத்திலே அருள் சக்திகளைச் சேர்த்துத் தீமைகளைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.