தொழில் செய்யும் இடங்களில் மற்றவர்களால் தொல்லைகள் ஏற்படும் பொழுது அதனால் குடும்பத்திற்குள் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றது…? அதை எப்படி நல்லதாக்குவது…?

அகத்தியர்

தொழில் செய்யும் இடங்களில் மற்றவர்களால் தொல்லைகள் ஏற்படும் பொழுது அதனால் குடும்பத்திற்குள் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றது…? அதை எப்படி நல்லதாக்குவது…?

 

கணவர் வெளியில் வேலை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அங்கு தொழிலில் சில இம்சைகள் வந்துவிடுகிறது.

இவர் நன்றாக வேலை செய்கிறார். தவறே செய்ய மாட்டார். எப்படியோ சந்தர்ப்பத்தில் ஒருவன் அவரைத் திட்டுகிறான். தான் மேலே வர வேண்டும் என்பதற்காக அவரைக் குற்றவாளியாக ஆக்குவதற்கு மறைமுகமாக ஏதாவது செய்வான். அந்த நேரத்தைச் சந்திக்கும் போது குற்றமாகி விடுகிறது.

நான் தவறு செய்யவில்லையே இப்படிச் செய்கிறார்களே…! என்று ஆத்திரப்பட்டு வேதனைப்படுகிறோம். அப்போது எதை எடுக்கிறோம்…?

நல் வழியில் நல்வினைப் பயனாக வாழ்க்கை நடத்தி வந்தாலும் அடுத்தவன் தவறு செய்துவிட்டு நம்மைக் குற்றவாளியாக்கும் பொழுது வேதனை என்ற விஷத்தின் தன்மையைத் தான் நமக்குள் எடுக்கிறோம்.

1.அப்படி விஷத்தின் தன்மை ஆகிவிட்டால்
2.நம்மிடம் இருக்கும் அந்த உண்மையின் நிலைகளை எடுத்துச் சொல்லக் கூட முடியாது – நாம் தவறு செய்யவில்லை.
3.ஆனால் நம்மைக் குற்றவாளியாக்க வேண்டும் என்று கற்பனை பண்ணிக் கொண்டவன்… அத்தகைய விஷத்தை உருவாக்கியவன்
4.அந்த உணர்வுக்குத்தக்க திடமான உணர்வு கொண்டு நம்மைக் குற்றவாளியாகவே ஆக்கிவிடுகின்றான்.

அந்த அளவுக்கு ஆன பின்னாடி என்ன நடக்கிறது…? தொழில் செய்தேன். இப்படி ஆகி விட்டது. ஆனால் நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை என்று வீட்டில் வந்து மனைவியிடம் சொல்கிறார்.

இதை மனைவி கேட்டால் என்ன ஆகிறது…? அந்த வேதனை அங்கேயும் இயக்குகிறது. கணவருக்கு… “இப்படி ஆகி விட்டதே…!” என்று மனைவி எண்ணுகிறார்.

அப்பொழுது அந்த வேதனையான சக்தியை எடுத்து அந்த வேதனையை உருவாக்கும் அணுக்களைத் தான் இங்கே உருவாக்க முடிகிறதே தவிர அதைத் தணிக்க முடிகின்றதா…? பெண்களுக்கு வேதனை தான் வருகிறது. சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதா…?

ஆனால் காவியங்களிலே எப்படிக் காட்டுகின்றார்கள்…? சாவித்திரி எமனிடமிருந்து தன் கணவனை மீட்டாள் என்று கதைகளில் கொடுக்கிறார்கள்.

அகஸ்தியரும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல கவர்ந்து கொண்ட இரண்டு சக்தியும் ஒரு மனமாக ஒரு உணர்வாக ஒன்றியது.

நளாயினி என்ன செய்கிறது…? குறைகளை எண்ணாது கணவனை உயர்த்தி எண்ணுகிறது. அதே சமயத்தில் கணவரும் தன் மனைவி உயர வேண்டும் என்று எண்ணுகிறார். அந்த இரண்டு உணர்வுகளும் ஒன்றி வரும்போது தான் இரு உயிரும் ஒன்றுகிறது. இரு உணர்வுகளும் ஒன்றுகிறது. இரு உணர்ச்சிகளும் ஒன்றுகிறது.

உயிரைக் போன்றே உணர்வின் தன்மையை நாம் எண்ணிய உணர்வுகள் கருத்தன்மையை அடைகிறது. அப்படி அடைந்தவர்கள் தான் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தன் கணவனுக்குப் பெறவேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.

வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் குறைகளை வீட்டில் மனைவியிடம் கவலையாகச் சொன்னால் மனைவி என்ன செய்வார்கள்…?

கணவன் வேலைக்குப் போகும் பொழுதெல்லாம்
1.தொழில் செய்யும் இடத்திலுள்ளவர்களை எண்ணி
2..இந்தச் சண்டாளார்கள் என் கணவரை என்ன செய்கிறார்களோ…? ஏது செய்கிறார்களோ…! என்று
3.இப்படி அவர்களை சாபமிடும் உணர்வின் தன்மையே வரும்.

ஆனால் இப்படி எண்ணினால் இந்த உணர்வின் தன்மை என்ன செய்யும்…? மீண்டும் அவர்கள் உணர்வுடன் கலந்து அந்த உணர்ச்சியை மீண்டும் வீரியத் தன்மை ஆக்கும். இடையூறுகளை அதிகமாக ஊட்டும் தன்மை தான் வரும். நீங்கள் பார்க்கலாம்.

உதாரணமாக வேலை பார்க்கும் இடத்திலுள்ள நண்பர் என்ற நிலையில் கணவர் இங்கே வீட்டுக்கு அழைத்து வந்தாலும் மனைவி சந்தேகப்பட்டு என் கணவர் எல்லோருக்கும் உதவி செய்தார்…! ஆனால் பாவிகள் என் கணவருக்கு இடையூறு செய்கிறார்களே…! என்று அந்த நண்பரையும் எதிரியாக்கும் நிலைக்கு அழைத்துச் சென்றுவிடும்.

ஏனென்றால் இதெல்லாம் இயற்கையின் நியதிகளை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கணவருக்கு இடைஞ்சல் செய்கிறார்கள் என்ற உணர்வு தூண்டப்பட்டு நம்மை அறியாமலேயே எதிரியைக் கூட்டுகின்றது. பகைமையாக்கி விடுகின்றது.

இத்தகைய உணர்வுகளால் தொழிலும் கெடுகின்றது. வேதனை அதிகமாகி உடலில் நோய் வரக் காரணமாகின்றது. அதே சமயத்தில் அந்த வேதனையால் தினசரி வேலைகளில் நாம் பிற பொருள்களைப் பயன்படுத்தும் விதமும் மாறுகிறது.

வேதனையோடு இருக்கும் பொழுது ஒரு இடத்தில் அமர்ந்தாலும் அதிலள்ள ஒரு கம்பியோ மற்றதோ நீட்டியிருப்பது தெரியாது. அதைச் சரி பார்த்த பின் அமர வேண்டும் என்ற சிந்தனையும் வராது.

எழுந்திருக்கும் பொழுது அதிலே மாட்டிக் கொண்டு போட்ட துணி கிழிகிறது. உடனே என்ன நினைப்போம்…? தரித்திரம்…! பார் போறாத காலம் இப்படி ஆகிவிட்டதே…! என்று மீண்டும் வேதனைப்படுவோம். ஏனென்றால் பார்த்து அறிந்துணர்ந்து செயல்படும் தன்மையை இழக்கின்றது.

அடுத்தாற் போல் ரோட்டிலே நடந்து செல்லும் போது மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து விடுவோம். ஏனென்றால் சிந்தனையை இழக்கும் போது கீழே விழுந்தான் மேலே விழுந்தான் என்ற நிலை எல்லாம் வருகிறது.

ஆகவே நம்மை எது இயக்குகிறது…?
1.நாம் நுகர்ந்ததைத்தான் நம் உயிர் இயக்குகிறது.
2.உணர்வின் உணர்ச்சி நம் உடலில் எதுவோ அந்த மணத்தின் தன்மை வெளிப்படுகிறது.
3.அந்த மணத்தின் தன்மை நல்ல மணங்களை அடக்கி விடுகிறது.
4.நல்ல மணங்களை அடக்கும் போது இத்தகைய நிலை ஆகின்றது.

எல்லோருடனும் தான் நாம் வாழ்கின்றோம். நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். தொழில் செய்யும் இடங்களில் எவ்வளவு இருந்தாலும் கூட எடுத்துக் கொண்ட உணர்வுக்கு ஒப்ப அவரவர்களின் குணம் அமைகிறது.

அந்த உணர்வு நம் நல்ல குணங்களுக்கு ஏற்றதாக இல்லை. நமக்குள் எதிரி என்ற உணர்வு வருகிறது. அதனால் தொழில் செய்யும் இடங்களில் போட்டி பொறாமை என்று இவ்வாறு ஆகி விடுகிறது.

இதை மனைவியிடம் சொன்னால் அவர்கள் என்ன செய்கிறார்கள்…? மனைவியும் நம்மோடு ஒத்துழைக்கிறார். எதற்கு…? நாம் படும் வேதனையை வளர்க்கும் விதமாக அவர்களும் சேர்ந்து வேதனைப்படுவார்கள்.

அந்த நேரத்தில் நம் குழந்தைகள் அன்பாகப் பேசினாலும் “சனியன்கள்…! இது வேறு…! சும்மா இருந்தால் என்ன…? நேரம் காலம் தெரியாமல்…! தன் பிள்ளைகள் என்று கூட அறியாதபடிச் சாபமிடும் நிலை வருகிறது.

அதே சமயத்தில் இந்த மாதிரி வேதனையில் இருக்கும் சமயம் அக்கம் பக்கம் இருப்பவர்கள் அவர்கள் வீட்டில் தங்களுக்குள் பேசி சிரிப்பதைக் கேட்டால் போதும். அவர்கள் சிரிப்பது நமக்கு வேறு விதமாகத் தோன்றும்.

அவர்கள் தங்கள் குடும்பத்தில் இயல்பாகப் பேசிச் சிரித்திருப்பார்கள். ஆனால் நாம் அதைக் கேட்கும் பொழுது
1.நாம் வாழ்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
2.நம்மைப் பார்த்து பொறாமையில் ஏளனமாகச் சிரிக்கிறார்கள் என்று
3.நம்மை அறியாமலேயே இப்படி எண்ணி இதை எடுத்து நமக்குள் வளர்க்கும் தன்மை வந்து விடுகிறது.

இப்படி எது எதனுடன் கலக்கின்றது…? குற்றம் இல்லாதவர்களைக் கூட குற்றவாளியாக்கும் நிலையும் அவர்களை எதிரி ஆக்கும் நிலையும் வருகிறது.

அதே சமயம் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு நாம் நுகர்ந்த உணர்வுகள் எதிரியாகி விடுகிறது. நமக்குள் ஒத்துழைக்கும் அந்த உண்மையின் தன்மையும் அது செயலிழக்கிறது.

ஏனென்றால் நாம் நுகர்ந்ததை… பார்த்ததை… கேட்டதை… நம் உயிர் சமைக்கின்றது…. உடலுக்குள் உருவாக்குகின்றது. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் நம் உயிர் உருவாக்குகின்றது.

ஆனால் ஆறாவது அறிவு கொண்ட நாம் எந்த சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும்…? சிந்தியுங்கள்…!

மிளகாய் தனித்து இருக்கும் போது காரமாக இருக்கின்றது. இருந்தாலும் மற்ற பொருள்களுடன் இதை இணைத்துச் சுவையாக மாற்றுகிறோம்.

அது போன்று தான் குடும்பத்திலோ தொழிலிலோ சந்தர்ப்பத்தால் வேதனை என்ற உணர்வுகள் வந்தால் கணவனும் மனைவியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கொஞ்மாவாது எடுக்க வேண்டும்.

அகஸ்தியரும் அவர் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ்ந்து இருளை நீக்கி உணர்வின தன்மையை ஒளியாக மாற்றியவர்கள்.
1.துருவத்தின் வழி தான் விண்ணின் ஆற்றல் பூமிக்குள் வருகிறதென்று துருவத்தை உற்று நோக்கி
2.துருவத்தின் பாதையில் வரும் உணர்வை இருவருமே அந்த ஒளியின் கற்றையாக மாற்றினர்.

மின்னல்கள் ஏற்படும் போது மற்ற நட்சத்திரங்களிலிருந்து வரும் மின் ஒளிக்கற்றைகளை நுகருகின்றார்கள். இயற்கையின் விஷத்தின் உணர்வைலைகள் அங்கே செல்வதை அடக்கி தமக்குள் ஒளிக் கற்றைகளாக மாறுகின்றனர்.

உயிர் எப்படி ஆனதோ இதேபோல தான் அவர்கள் இருவருமே அந்த கருத்தன்மையை உருவாக்கி அந்த அணுவை ஒளித் தன்மையாக மாற்றியவர்கள். நஞ்சை வென்று ஒளியின் சுடராக துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்கின்றார்கள்.

அதை நம் உடலுக்குள் சேர்த்து வலுவாக்கிக் கொண்டு
1.என் கணவர் தொழில் செய்யும் இடம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்.
2.அங்கே கணவருடன் வேலை செய்வோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று
3.சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானமும் பொருளறிந்து செயல்படும் திறனும் பெறவேண்டும்.
4.என் கணவரின் செயல்கள் அனைத்தும் மற்றவர் போற்றும் நிலை பெறவேண்டும் என்று
5.மனைவி இதை எண்ணித் தனக்குள் சமைத்து இந்த உணர்வைத் தன் கணவனுக்குப் பாய்ச்சிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த உணர்வுகளை மனைவி கணவனுக்குப் பாய்ச்சப் பாய்ச்ச “ரிமோட் கன்ட்ரோல்…!” போல் இயங்கி அங்கே தொழில் செய்யும் இடங்களில் வரும் பகைமைகளை மாற்றும். ஒன்று சேர்ந்து வாழும் உணர்வுகளை ஊட்டும். மகிழ்ந்து வாழச் செய்யும்.

இதேபோல நீங்கள் கணவன் மனைவி செய்து பாருங்கள்.

அன்றாட வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய “சில கடமைகள்…!”

spiritual-path

அன்றாட வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய “சில கடமைகள்…!”

நம்மைச் சாராதவர்கள் அல்லது நமக்குப் பிடிக்காதவர்கள் கஷ்டப்பட்டார்கள் என்றால் நாம் என்ன சொல்கிறோம்…?

அவர்கள் செய்ததற்கெல்லாம் அவர்களுக்கு நடக்கின்றது…! துன்பத்தை அவர்கள் அனுபவிக்கின்றார்கள் என்று அவர்கள் படுகின்ற கஷ்டத்தைப் பார்த்து நாம் ரசிக்கின்றோம்.

உதாரணமாகப் பாம்பு என்ன செய்கின்றது…? விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவை ரசித்து உணவாக உட்கொள்கின்றது.

ஆகவே பிறருடைய வேதனையை நாம் ரசித்தோம் என்றால் அந்த விஷத்தின் தன்மை நமக்குள் கூடி மனிதனினுடைய சிந்தனைகள் அழிந்து இறந்த பின் பாம்பின் உருவத்தைத்தான் நாம் பெற முடியும்.

மற்றவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து ரசிப்போம். இதே போல தன் குழந்தை மேல் பாசமாக இருக்கும் போது அவன் படும் வேதனையால் நாம் வேதனையின் உணர்வை அதிகமாக எடுக்கும் பொழுது கடைசியில் அதுவும் விஷத் தன்மை அதிகமாகி பாம்பின் ஈர்ப்புக்கே அழைத்துச் செல்லும்.

ஆகவே நாம் எந்தச் சூழ்நிலையிலும் பிறர்படும் கஷ்டங்களையும் துன்பங்களையும் கண்ணுற்றுப் பார்த்து அந்தத் தீமைகளை அறிந்தாலும்
1.அந்தத் தீமையினுடைய அணுக்கள் தனக்குள் விளையாதபடி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஒரு சில நொடிக்குள் அதை எண்ணி
3.மகரிஷிகளின் அருள் சக்தி உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி விட்டு
4.எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்
5.எங்கள் சொல் அனைவரையும் இனிமையாக்க வேண்டும்
6.அனைவரும் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்துக் கொண்டு
7.தீமைகளை நீங்கள் மாற்றி அமைத்துக் கொண்டு செல்லுங்கள்.

குழந்தை தவறு செய்கிறான்… அவனைச் சீர்படுத்த வேண்டும் என்றால்
1.எங்கள் குழந்தை மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்.
2.அவன் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.சிந்தித்துச் செயல்படும் உணர்வுகள் அவனிலே விளைய வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எடுத்துக் கொண்டு
4.அதன்பின் மகரிஷிகளின் அருள் சக்தியால் நீ ஞானியாக வருவாய் என்று சொல்லால் சொன்னால்
5.இந்த உணர்வுகள் அவன் திருந்த உதவும்.

அவ்வாறு இல்லையென்றால் அவன் மேல் வெறுப்பின் உணர்வுகள் வந்து “ஏன்டா இப்படிச் செய்கிறாய்…?” என்ற இந்த உணர்வின் தன்மை கேட்ப்படும் போது இது எதிர் நிலையை உருவாக்கும்.

இதுவே அவனுக்குள் வெறுப்பின் தன்மை ஊட்டும். அவனை வெறுக்கும் செயலைச் செய்ய வைக்கும். அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் நமக்குள் மீண்டும் வெறுப்பின் தன்மையே வளரும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அனுபவத்தைப் பெற்றவர்கள் அனைவருமே எந்த நிலையானாலும் இரவிலே படுக்கும் பொழுது “அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும்…” என்ற எண்ணத்துடனே உறங்குங்கள். இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

“குழந்தை கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான்…” என்று அந்தக் கஷ்டத்தை எல்லாம் நினைத்து இதைச் சொன்னீர்கள் என்றால் முதலில் இது வரும். இது கலந்தவுடன் மறுபடியும் கலக்கங்கள் தான் வரும்.

அதே மாதிரி ஒருவன் நமக்கு இடைஞ்சல் செய்தான் என்றால் அந்த இடைஞ்சல் செய்தவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் அவன் திருந்த வேண்டும் என்று நினைத்தீர்களென்றால் இந்த விஷத்தோடு கலந்து மறுபடியும் இடைஞ்சல் செய்தவன் உணர்வுதான் நினைவுக்கு வரும்.

ஆகையினாலே அதை மறக்க அந்த மகரிஷிகளை எண்ணி
1.நாங்கள் பார்க்கும் அனைவரும் எங்களைப் பார்க்கும் அனைவரும்
2.நாங்கள் நினைக்கும் அனைவரும் எங்களை நினைக்கும் அனைவரும்
3.அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும்
4.அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று தவம் இருங்கள்.

இதை நாம் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

ஏனென்றால் குருநாதர் எமக்கு (ஞானகுரு) எந்த முறைப்படி சக்திகளைக் கொடுத்தாரோ அதே முறைப்படித்தான் உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளின்பால் செலுத்தச் செய்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஆலயங்களுக்குச் சென்றாலும் அல்லது உறவினர் நண்பர்களுடைய குடும்பங்களுக்குச் சென்றாலும் அங்கே போய் அமர்ந்தவுடனே நாம் களைப்பால் “உஷ்ஷ்…ஷ்ஷ்.. அப்பா…! என்று பெரு மூச்சையும் சோர்வையும் வெளியிடுகின்றோம்.

அப்போது நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் அதை எடுத்து,
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் மகிழ்ச்சியின் நிலைகள் இங்கே வளர வேண்டும்
3.இந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

நோயாளியைப் பார்க்கச் சென்றாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
2.அவர் உடல் நலம் பெற வேண்டும்
3.அவர்கள் குடும்பத்தில் மகிழ்ந்திடும் செயல்கள் உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைப்போல நாம் கடைப்பிடித்து நம் குருநாதர் காட்டிய அருள் வழிகளில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று எல்லோரும் மகிழ்ந்திடும் நிலை பெற நாம் தியானிப்போம்… தவம் இருப்போம்…!”

திருமணம் ஆனவர்கள் தியானத்தின் மூலம் அருள் சக்திகளை எடுக்க வேண்டிய “சரியான முறை…”

வசிஷ்டர் அருந்ததி - கௌரி

திருமணம் ஆனவர்கள் தியானத்தின் மூலம் அருள் சக்திகளை எடுக்க வேண்டிய “சரியான முறை…” 

 

யாம் சொல்லும் வழியில் இந்தத் தியானம் செய்பவர்கள் அனைவருமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று இணைத்துப் பழக வேண்டும்.
1.உடலுடன் இருந்தாலும் சரி.. அல்லது
2.உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் சரி இந்த மாதிரி எண்ணித்தான் ஆக வேண்டும்.

திருமணம் ஆகாதவர்கள் தன் தாய் தந்தையருக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். அந்த அருள் சக்திகளை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

(கணவன் இந்த வழியில் இல்லை அல்லது மனைவி இந்த வழியில் இல்லை. என் தாய் தந்தையர் இந்தத் தியான வழியில் இல்லை. அதனால் தான் மட்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணக் கூடாது.)

கூட்டுத் தியானமாக இல்லாமல் தனியாக வெளியூரிலோ அல்லது வேறு இடத்தில் இருக்கும் பொழுது தியானம் செய்தாலும் இதைப் போன்று கணவன்.. மனைவி… தாய்… தந்தையர்… என்று எல்லோருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று அவசியம் தியானிக்க வேண்டும்.

அந்த அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும். அந்த அருள் ஞானம் எனக்கும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து இணைக்க வேண்டும்.

எங்கே இருந்தாலும் இதைப் போன்று எண்ணி அந்த இணைந்த நிலைகளில் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்கும் இதைப் பழக்கிக் கொடுக்க வேண்டும்.

பக்கத்தில் இருந்தாலும் பக்கத்தில் இல்லாவிட்டாலும் தியானம் இருக்கும் நேரத்தில் அவர்களையும் இந்த மாதிரி எண்ணிப் பழக வேண்டும்.

ஏனென்றால் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று இதை இச்சைப்பட வேண்டும். நமக்குள் அதைக் கிரியை ஆக்க வேண்டும்.

1.கணவன் மனைவி இருவரும் “எப்பொழுதும் இணைந்த நிலைகளில்… சிவ சக்தியாக
2.சப்தரிஷி மண்டலத்தில் குடும்பங்களாக வாழ்ந்திடும் மகரிஷிகள் போல்
3.ஒன்றிய நிலைகளில் எல்லோரும் வாழ வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

தியானத்தில் எடுக்கும் அருள் சக்திகளை “நான் பெறவேண்டும்…” என்று தனித்து எடுத்தால் வளர்ச்சி இருக்காது…! (இது மிகவும் முக்கியம்)

வியாபாரத்தைச் சீராக்கத் தியானிக்க வேண்டிய முறை

flower-meditation

வியாபாரத்தைச் சீராக்கத் தியானிக்க வேண்டிய முறை 

 

மிளகாயைக் குழம்பில் போடுறோம். அதிலே அளவுடன் வைக்கப்படும் போது சாப்பிடக் கூடிய நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அதிகமாகப் போட்டு விட்டால் சுவையைக் கெடுத்து விடுகின்றது. எரிச்சல் வருகின்றது.

இதைப்போல தான் நம் வாழ்க்கையில் நமக்குள் வரும் கார உணர்ச்சியோ வெறுப்பு உணர்ச்சியோ வேதனை உணர்ச்சியோ இவை அனைத்தும் நம் நல்ல குணங்களின் வலுவை இழக்கச் செய்து நல்ல உணர்வுகளை வளர்க்கும் தன்மையைத் தடைப்படுத்தும் சக்தியாக வந்துவிடுகின்றது.

ஆனால் உங்கள் வாழ்க்கையில் சங்கடத்தையோ கஷ்டங்களையோ பார்க்காமல் இருக்க முடியாது. அதைப் பற்றிப் பேசாமலும் இருக்க முடியாது.

எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் காசைக் கொடுத்த பின் நான்கு தரம் உங்களை அலைய வைத்தவுடனே என்ன செய்வீர்கள்…? இப்படிச் செய்கிறானே…! என்ற வேதனை தன்னாலே வரும்.
1.அந்த விஷத்தைச் சுவாசித்துத் தான் ஆக வேண்டும்.
2.விஷம் இல்லாது எதுவுமே இயங்குவது இல்லை.

வேதனை என்ற உணர்வுகள் தூண்டப்படும் போது நாம் நல்ல குணங்களில் விஷம் கலந்து விட்டால் இது சோர்வடையத் தொடங்கி விடுகின்றது.

அப்போது அது சோர்வடையாமல் தடுக்க வேண்டும் என்றால் இந்த விஷத்தை ஒடுக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்க வேண்டும்.

வியாபாரத்தில் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்று சொன்னால் அடுத்த நிமிடமே “ஈஸ்வரா…!” என்று தன் உயிரை நினைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்று ஒரு நிமிடம் உடல் முழுவதும் அந்தச் சக்திகளைச் செலுத்திப் பழக வேண்டும்.

ஒரு நிமிடம் இப்படித் தியானித்து விட்டு அவரைப் பார்த்து… “பரவாயில்லை… அடுத்து உங்களுக்கு வருமானம் வரும். நீங்கள் நிச்சயமாகக் கொடுப்பீர்கள். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது என்று இந்த உணர்வைச் சொல்லி விட்டு வந்து விடுங்கள்.

இந்த உணர்வுடன் நாம் சொன்னவுடனே அவருக்கு காசு வரத் தொடங்கும். அடுத்து நம்மைப் பார்த்ததும் வாங்கிய பணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற அந்த எண்ணங்கள் வரும்

ஆனால் அப்படிச் செய்யாமல் சொன்னபடி பணத்தைத் திரும்பத் தரமாட்டேன் என்கிறான்…! இவனை என்ன செய்யலாம்…? என்ற நிலையில் வெறுப்புடன் அவரிடம் பேசிவிட்டு வந்தீர்கள் என்றால் அந்த வெறுப்பான அலைகளால் அடுத்து அவர் வியாபாரமும் மந்தமாகும். காசு தரக் கஷ்டமாக இருக்கும்.

நாம் இங்கிருந்து கடைக்கு வசூலுக்குப் போகலாம் என்று நினைத்தோம். யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்று நம்முடைய வெறுப்பு அங்கே போய்விடும் முன்னாடியே…!

1.அங்கே ஏற்கனவே கசமுசா ஆகி இருக்கும்.
2.நாளைக்குப் போக வேண்டும் என்று நினைப்பீர்கள்.
3.ஆனால் இன்றிலிருந்தே அங்கே வியாபாரம் மந்தமாக இருக்கும்.
4.இது எல்லாம் இபற்கையினுடைய செயல்.

அப்போது நாம் இங்கே போனவுடனே நம்மைப் பார்த்தாலே அவருடைய எண்ணங்கள் எப்படி வரும்….? கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால்
1.காசு வரவில்லையே… எப்படிக் கொடுக்கிறது…? என்ற திகட்டல் இருக்கும்.
2.அவரும் வேதனைப்படுவார். இந்த வேதனையால் அவர் தொழிலும் கெடும்.
3.நாம் கொடுத்த பணமும் விரையமாகும். பொருளும் வருவது தடையாகின்றது.
4.ஆகவே அவர் நன்றாக இருந்தால் தான் நமக்கு அந்தப் பணம் வரும்.

அப்போது அந்தச் சந்தர்ப்பம் அவரால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. உடனே முதலில் சொன்ன மாதிரி “ஈஸ்வரா…! என்று கொஞ்ச நேரம் நின்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்.

இந்த வாடிக்கையாளரும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று அவர் நலம் பெற வேண்டும். அவர் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும். அவர் தொழில் வளம் பெற வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து தியானியுங்கள்.

தியானித்த பின் அவரிடம் இனி உங்கள் வியாபாரம் நன்றாக இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பாக்கி எல்லாம் சீக்கிரமாக வரும். எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுப்பீர்கள் என்று இந்த வாக்கைச் சொல்லி விட்டு வாருங்கள். நம்மைத் தேடி வந்து பணத்தைக் கொடுப்பார்கள். செய்து பாருங்கள்.

அதே மாதிரி உங்கள் கடையில் வியாபாரம் செய்யும் பொழுது துருவ நட்சத்திரத்தை எண்ணி ஒரு ஐந்து நிமிடம் ஆத்ம சுத்தி செய்து விட்டு என்னிடம் சரக்கு வாங்குகிறவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து ஓரளவிற்கு அவர்கள் மனதிற்குத் தெரிகிற மாதிரி ஆசீர்வாதம் செய்து சரக்கைக் கொடுத்துப் பாருங்கள். அவர்களுக்கு ஒரு பெருமிதமாக இருக்கும்.

ஒரு துணி வியாபாரமே நீங்கள் செய்தாலும் இந்த உணர்வைப் பரப்பும் போது அந்தத் துணிகளில் நாம் பாய்ச்சும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் படரும்.

அடுத்தாற்போல் வேறு எத்தனை துணியைப் போட்டாலும் கூட இந்தத் துணியை தான் கேட்பார்கள். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். அப்போது நம்மிடம் தான் சரக்கு வாங்குவார்கள்.

தொழில் செய்கிற இடங்கள் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அங்கே நல்ல மன பலமும் ஒரு தெம்பும் வர வேண்டும். அங்கே உற்பத்தி செய்ய கூடிய பொருள்கள் எல்லாம் தெளிவாக இருக்க வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானித்து விட்டு
1.எல்லாப் பொருள்களின் மீதும் நம் பார்வையைச் செலுத்திப் பழக வேண்டும்.
2.இப்படிச் செய்யச் செய்ய நம் உடலில் ஒவ்வொரு நிமிடமும் அந்த உயர்ந்த சக்தி வளர்ந்து கொண்டே இருக்கும்.

ஆகவே தொழில் செய்கிறோம் என்றால் இது வாழ்க்கையே தியானம் ஆகின்றது. நமக்குள் இப்படிச் சக்திகளைக் கூட்டிப் பழகிக் கொள்ள வேண்டும்.

என்றுமே இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்…?

exalted-state

என்றுமே இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்…?

முதுமை என்பது வயதால் வருவது அல்ல. அறுபது வயது…, எழுபது வயது… நான் முதுமை அடைந்து விட்டேன்..! என்று வெறும் வருடத்தால் கணக்கிட்டுச் சொல்வதல்ல…!

ஒரு தானியம் விளைந்தாலும் அதனின் முதிர்ச்சியின் தன்மையில்
1.தன் இனத்தை உருவாக்கும் வித்தின் தன்மையாக அடைந்து
2.அது மீண்டும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக வளர்க்கச் செய்யும் போது தான்
3.அது முதுமை அடைந்தது (முதிர்ந்த வித்து) என்று சொல்ல முடியும்.

அதைப் போன்று தான்
1.ஒரு உயிரின் தன்மை மனித உடலாக உருப் பெற்ற பின்
2.அறிந்திடும் உணர்வு கொண்ட
3.ஒளியின் சரீரம் பெற்ற மெய் ஞானியின் உணர்வைச் சேர்த்து உடலை முதுமையாக்கிவிட்டு
4.உணர்வின் தன்மையை – நம்மை என்றும் இளமையாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.
(உடல் அழியக்கூடியது உயிர் என்றுமே அழியாதது)

இப்படி ஒவ்வொரு சரீரத்திலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் அது இளமைப் பருவமே பெறுகின்றது.

1.நாம் இளமை பெற்று அது உடலிலே முதுமை பெறும்போது தான் (உடலுக்குள் விளைந்தது)
2.”முதுமையின் வித்தாக…! உருபெற்ற உணர்வின் அறிவாக…
3.அது உயிருடன் ஒன்றிய நிலை கொண்டு,
4.அடுத்த அறிவின் ஞானச் சுடராக கனியின் வித்தாக (உணர்வாக) ஞானத்தை வளர்க்கின்றது.

ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றிடும் நிலையாக உயிருடன் ஒன்றிய முதுமையின் நிலைகள் பெற்று முழுமையின் நிலையாக அந்தப் பேரானந்த பெருநிலை பெறுவோம்

அந்த பேரானந்த உணர்வை நமக்குள் வளர்த்திடுவோம். அனைவரும் பேரானந்த நிலை பெறும் சக்தியாக நமக்குள் விளைய வைத்து அந்தச் சத்தான வித்துக்களைப் பரப்புவோம்.

அதை நுகர்வோர் அனைவருக்கும் அந்தச் சத்தான வித்துக்கள் படர்ந்து அவர்களும் பேரானந்தப் பெரு நிலையை அடையட்டும்.

1.மகரிஷிகளின் அருள் வட்டத்திலே
2.நாம் என்றுமே இளமையாக
3.என்றும் பதினாறாக வளர்ந்து கொண்டேயிருப்போம்… வாழ்வோம்.

பகையை அகற்றி ஒற்றுமை உணர்வுடன் மகிழ்ச்சியாக வாழும் வழி முறை…!

Image

mahatma-gandhi

பகையை அகற்றி ஒற்றுமை உணர்வுடன் மகிழ்ச்சியாக வாழும் வழி முறை…!

 

மக்களைக் காக்க வேண்டும் என்று மகாத்மா காந்திஜி எண்ணினார். உயர்ந்த பண்பான எண்ணங்கள் கொண்டு பகைமையற்ற உணர்வைத் தனக்குள் எடுத்து அவரின் ஆன்மா பிரிந்து சென்றாலும்
1.அதற்கு இருப்பிடம் தெரியாது போய்விட்டது.
2.இந்த உடலை விட்டுச் சென்ற பின் அவர் எல்லை எது…? என்ற நிலைகள் இல்லாது போய்விட்டது.
3.ஆகவே காந்திஜியின் உயிரான்மாவை நீ விண்ணுக்குச் செலுத்த வேண்டும்…! என்று குருநாதர் சொன்னார்.

நான் அவ்வளவு பெரிய சக்தியைக் கொடுத்து இருக்கிறேன். காந்திஜி மன உறுதி கொண்டு செயல்பட்டது போல உன் வாழ்க்கையில் இந்த அருள் சக்தியை நீ செயல்படுத்துவாயாக…! என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டினார்.

(ஏனென்றால் எனது (ஞானகுரு) குடும்பமும் அன்று அரசியலில் தான் இருந்தது. அதைப் போல அன்றிருந்த பெரும் பகுதியானவர்கள் எல்லாம் தேசிய அளைவில் அரசியலில் தொடர்புடையவர்கள் தான்.)

குருநாதர் அந்த உண்மையை எடுத்துக் காட்டி மக்களை நல்வழிபடுத்திய அந்த உயிரான்மாவை நீ எப்படி விண் செலுத்த வேண்டும் என்று அவர் சொன்ன முறைப்படி விண் செலுத்தி சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தேன்.

இதை எதறாகச் சொல்கிறோம் என்றால் நம் உடலுக்குள் பல பகைமை உணர்வுகள் உண்டு. நம்மை அறியாமலே பகைமை உணர்வுகளைத் தூண்டிக் கொண்டிருக்கும் அந்தப் பகைமை உணர்வுகள் செயலற்றதாக மாற்ற வேண்டும் என்றால் காந்திஜியின் நினைவு கொண்டு நம் எண்ணத்தால் வலு கொண்டு செயல்படுத்தும் நிலைகளை நுகர்தல் வேண்டும்.

நமக்குள் பகைமையற்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

கொடுமையான செயல்களையும் தவறு செய்வோரின் உணர்வுகளையும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டு இருந்தால் அதை நுகர்ந்தறிந்த பின்
1.ஒரு பத்து நாளைக்குத் தொடர்ந்து கேட்டால் போதும்
2.அந்தத் தவறு செய்யும் உணர்வுகள் நம் உடலுக்குள்ளும் விளையும்.
3.நம்மைத் தவறுள்ளோர்களாக மாற்றி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து மனிதன் விடுபட வேண்டும். மகான் என்ற நிலைகள் அன்று வாழ்ந்த காந்திஜியை நினைவு கொண்டு அவர் பெற்ற அரு:ள் ஞானத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.தீமைகள் செய்யும் எண்ணங்களை நமக்குள் உருவாக்காதபடி
2.தீமை இல்லாத உடலாக நமக்குள் உருவாக்கி
3.தீமையற்ற உலகம் உருவாக வேண்டும் என்றும்
4.தீமையற்ற நாடு உருவாக வேண்டும் என்றும்
5.தீமையற்ற மக்கள் உருவாக வேண்டும் என்றும்
6.காந்திஜி வழியில் அவருக்குள் பிறக்கச் செய்த அருள் ஞானத்தின் நிலைகளை
7.நமக்குள் அருள் ஞானத்தின் சகதியாக உருவாக்குதல் வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய வழியில் அவர் பெற்ற அருள் சக்தியைப் பெற வேண்டும் என்பதற்கே இதை நினைவு கூறுகின்றோம்.

நாம் கோவிலுக்குச் சென்று மகிழ்ச்சியைப் பெருக்குகின்றோமோ…! அல்லது சங்கடத்தைப் பெருக்குகின்றோமா…?

Image

Treasure in Temple

நாம் கோவிலுக்குச் சென்று மகிழ்ச்சியைப் பெருக்குகின்றோமோ…! அல்லது சங்கடத்தைப் பெருக்குகின்றோமா…?

உதாரணமாக T.V. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது வீட்டில் ஒருவன் நுழைந்து திருடிச் சென்றால் கூட ஒன்றும் தெரியாது.

அதே மாதிரி மற்றவர்களைப் பற்றி “அவர்கள் அப்படி மோசம்… இப்படி மோசம்…” என்று பேசிப் பாருங்கள். நான்கு மணி நேரமானாலும் நேரம் போவது தெரியாது.

இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருந்தால் கடைசியில்…
1.ஹு,,,ம் என்ன பேசி என்ன செய்ய…? என்ற இந்தச் சோர்வு வரும்.
2.அடுத்து யாராவது கொஞ்சம் அதிகமாகப் பேசினால் வீட்டில் சண்டை வரும்.
3.கடைக்குப் போனால் வியாபாரம் சரியாகச் செய்ய மாட்டோம்.

அதே மாதிரி கவலையாகச் சங்கடமான நிலைகளில் பேசிக் கொண்டிருந்த பின் அந்த வேதனை உணர்வுகள் கைக்குழந்தை உள்ளத்தில் பட்டவுடன் நம் குழந்தை வீல்…வீல்…! என்று கத்த ஆரம்பித்துவிடும்.

அதிகம் வேதனைப்பட்டவர்களின் வேதனைகளைக் கேட்டுணர்ந்து அதன்பின் நீங்கள் குழந்தையைப் பாருங்கள். கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தை எவ்வளவு தூரம் கத்துகிறது…? என்று பாருங்கள்.

உங்கள் மூச்சு பட்டவுடன் அதற்கு வயிற்று வலி வரும். கண் வலி வரும். ஏதாவது ஒன்று வரும்.

ஏனென்றால் அந்தக் குழந்தை நம்மைப் பாசமாகப் பார்க்கின்றது. அதற்கு வேதனை தெரியாது, பிஞ்சு உள்ளம். நாம் எடுத்துக் கொண்ட இந்த விஷமான உணர்வுகள் பட்டவுடன் இந்தக் குழந்தையின் உடல் பாதிக்கும்.

கல்யாண வீட்டிற்குள் சென்று பாருங்கள். நம் கைக் குழந்தையைப் பலர் கொஞ்சினால் குழந்தைக்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லை வரும்.

கூட்டத்திற்குள் எடுத்துச் சென்று விட்டு வந்தால் ஒருவர் சங்கடமாக இருந்திருப்பார். அவர் குழந்தையைத் தூக்கினால் போதும். அந்தச் சங்கடமான மூச்சலைகள் பட்டுக் குழந்தைக்குள் அந்த சங்கட அலைகள் சேர்ந்து விடும்.

இவையெல்லாம் இந்த உணர்வுகள் பாய்வதுதான். எல்லாமே உணர்வின் செயல்தான். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகள் நம்மை அறியாது இப்படி வருவதிலிருந்து விடுபடுவதற்குத்தான் ஞானிகள் ஆலயங்களை உருவாக்கினார்கள். ஆலயத்திற்குள் சென்றால் நாம் எப்படி இன்று வணங்குகிறோம்..? என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் சிறிது நேரம் “தியானம்…” செய்து பழகுங்கள். மகிழ்ச்சி வருவதைப் பார்க்கலாம். அர்ச்சனை செய்வதற்குப் பதில் அந்தக் கோவிலிலே நின்று
1.ஆலயத்தில் காட்டப்பட்ட அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும்
2.இதை அருளிய மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்
3.மகரிஷிகள் உணர்வுகள் கலந்த உங்கள் மூச்சலைகளை வெளிப்படுத்தி அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…! என்று அங்கே பரப்புங்கள்

இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் இந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்ற இந்த மூச்சலைகளை நூறு பேர் ஒவ்வொரு நாளும் அங்கே விட்டார்கள் என்றால் எல்லாமே பரிசுத்தமாகும்.

ஆனால் இப்பொழுது என்ன செய்கிறோம்…? நூற்றுக்கணக்கில் செல்கிறோம். கோவிலுக்குச் சென்று அங்கே கஷ்டத்தை எல்லாம் கொட்டி விட்டுத்தான் வருகிறோம்.

அதே உணர்வுடன் கோவிலுக்குச் என்றால் அவை எல்லாம் நம்மைப் பிடித்துக் கொள்ளும். கோவிலுக்குச் சென்று வரும் பொழுது சோர்ந்துதான் வருகின்றோமே தவிர நன்றாக வருகின்றோமா…?
1.கோவிலுக்குப் போகும் பொழுது எந்த வேகத்தில் செல்கிறோமோ…
2.அதே வேகத்தில் வீட்டிலிருக்கக் கூடிய கஷ்டத்தைத்தான் எண்ணுகின்றோம்.

சோர்வாக வரப்படும்பொழுது “இன்னொருவர் தனக்கும் கஷ்டம்…!” என்று சொல்வதைக் கேட்டுக் கொண்டேயிருந்தால் அந்தக் கஷ்டம் உடனே நமக்கும் வந்துவிடும்.

இப்படி நம்மை அறியாமல் சோர்விலேயும் சஞ்சலத்திலேயும் தான் கோவிலுக்குச் சென்று வருகிறோமே தவிர நல்லதை நாம் பெற முடிவதில்லை. “இந்தச் சோர்வுடன் போய் தெய்வத்திடம் வரம் கேட்பதுதான் நல்லது…!” என்று நினைக்கிறார்கள்.

அர்ச்சனையோ மற்றதோ செய்யும் காசை உண்டியலில் போடுங்கள். நல்ல காரியத்திற்கு அது பயன்படட்டும். ஆலய நிர்வாகம் அங்கே வருபவர்களுக்குத் தங்குவதற்கு வசதி செய்யட்டும்.

நீங்கள் வசதியாகப் போய் அங்கே உட்கார்ந்து அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும், இங்கே வருபவர்கள் எல்லாம் அந்தத் தெய்வ குணம் பெறவேண்டும் என்று மூச்சை விட்டுப் பாருங்கள். அங்கே நல்லது நடக்கும்.

மத்திரத்தைச் சொல்லிச் சொல்லி ஜெபித்துப் பார்த்தால் இந்த மந்திரத்தினால் இன்னொரு மனிதரிடம் விளைந்த உணர்வுகள் தான் உடலுக்குள் வரும். அது நமக்குள் வந்த பின் நம்மை அருளாடச் செய்யும்.

அருளாடும் பொழுது என்ன நடக்கும்…?

1.நாம் நான்கு பேருக்கு நல்லது செய்தோம்,
2.அவர்கள் கஷ்டத்தையெல்லாம் கேட்டு நாம் நுகர்ந்தோம்.
3.அவர்களுக்கு நல்லதாகிவிட்டது…. ஆனால் தெய்வம் என்னை இப்படிச் சோதிக்கின்றதே…! என்று
4.மறுபடியும் விஷத்தைத்தான் சேர்த்துக் கொள்கிறோம்.

அதற்குப் பதிலாக அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் ஆலயத்திற்குள் சென்றால் உங்களுக்குள் வரக்கூடிய இருளை நீக்கலாம். உங்கள் உயிர் தான் ஈசன். உங்களை நீங்கள் நம்பவேண்டும்.

மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம்…! ஆனால் வாழ்க்கையில் நாம் எதைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றோம்…?

Image

blissful ADI PERUKKU

மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம்…! ஆனால் வாழ்க்கையில் நாம் எதைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றோம்…?

 

ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்து செயலாக்கும் போது தான் ஒரு குடும்பமாக இயங்க முடியும். அதில் மகிழ்ச்சி தரும் நிலையும் வரும்.

ஒன்றிணைந்து வாழ்ந்தாலும் சந்தர்ப்பவசத்தால் கோபம் வெறுப்பு போன்ற குணங்கள் இயக்கப்பட்டு அந்தச் சக்திகள் நம் உடலிலே பிரம்மமாகச் சிருஷ்டிக்கப்பட்டு விடுகின்றது.

அதனால் மனைவி மீது கணவனுக்கு வெறுப்பும் கணவன் மீது மனைவிக்கு வெறுப்பும் வரும் போது
1.அந்தக் குணம் இருவர் உடலிலும் சிருஷ்டிக்கப்படும் பொழுது அது பிரம்மம் தான்.
2.அதனின் சக்தியாக இயக்குவது பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
3.அந்த உணர்வின் ஞானமாக வெறுக்கும் உணர்வு வளர்ந்து வெறுப்பின் வித்தை உடலுக்குள் பெருக்குகின்றது

ஆனாலும் குடும்பம் ஒன்று சேர்த்து வாழ்ந்து அதிலே மனம் பெருகி அமைதி பெறுகி செல்வம் பெருகி ஞானம் பெருகி இவை எல்லாம் பெருகி வளரப்படும் போது வீட்டிற்குள் மகிழ்ச்சி பெருகுகின்றது. அந்த மகிழ்ச்சியினால் பொருள் காணும் நிலைகள் உருவாகின்றது.

அப்படி மகிழ்ச்சியின் நிலைகள் பெறப்படும் போது நல்ல பொருளின் தன்மைகளைக் கவர்ந்து அதைப்பெற வேண்டும் என்றும் அதன் வழிகளில் மகிழ்ச்சி பெற வேண்டும் என்றும் அதை எடுக்கின்றார்கள்.

1.சந்தோஷமாக இருக்கும் போது நீங்கள் ஒரு பொருளைப் பாருங்கள். அது தெளிவாகத் தெரியும்.
2.ஆனால் வெறுப்பின் தன்மை நமக்குள் வந்த பின் பொருளைக் காண்பதும் கஷ்டம்…! அந்தப் பொருளைப் பாதுகாக்கிறதும் கஷ்டம் தான்….!

மகிழ்ச்சியாக இருக்கும் போது ஒரு பொருளை எடுத்து நாம் பார்த்தாலும் அதைப் பந்தோபஸ்தாக வைப்போம். ஆனால் வெறுப்புடன் இருக்கும் பொழுது எந்தப் பொருளைக் கொடுத்தாலும் உடனே தூக்கி எறிவோம். எந்த வெறுப்பை நாம் எடுத்தோமோ அதனால் தீமையைப் பெருக்கும் நிலை வருகின்றது.

சநதர்ப்பத்தால் குடும்ப வாழ்க்கையில் மிகவும் வெறுப்பாகி விட்டால்… எதைக் கண்டாலும்
1.இது எதற்கு…? இந்த வீடு எதற்கு…? காடு எதற்கு…?
2.பொருள் எதற்கு…? துணி எதற்கு…? என்ற நிலைகள் இது பெருகிவிடும்.
3.இத்தகைய தீமையின் தன்மை பெருகி விட்டால் மனித உடலுக்குள் தீமைகள் பெருகி
4.தீமையின் உணர்வுகளைச் சேர்த்து அதற்குத் தகுந்த ஓர் உருவாக உடலின் அமைப்பாகப் பிரம்ம ரிஷி சிருஷ்டித்து விடுவான்.

யார்..?

நம் உயிரே பிரம்ம ரிஷியாக நின்று நமக்குள் அது சிருஷ்டிக்கும் பிரம்மாவாக நாம் எண்ணியதை எல்லாம் சிருஷ்டித்து உருவாக்கி விடுவான்.

1.நீங்கள் எதை எண்ணி எடுத்தாலும் அந்த ரிஷி தான் (உயிர்)
2.அதனின் உணர்வின் வேகமாக உங்களை இயக்குகின்றான்.
3.அதனால் தான் பிரம்ம ரிஷி என்பது.

ஆகவே உயர்ந்த குணங்கள் பெருக வேண்டும்… குடும்பம் உயர வேண்டும்… குடும்பத்திற்குகந்த செல்வம் உயர வேண்டும்…! என்றால் நாம் எதனைப் பெருக்க வேண்டும்…?

ஒவ்வொரு நாளும் காலையில் எழும் போதும் சரி இரவு படுக்கச் செல்லும் போதும் சரி “ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி நினைவை விண்ணிலே செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று குறைந்தது ஒரு பத்து நிமிடமாவது அந்த அருள் சக்தியை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று சிறிது நேரம் தியானியுங்கள்.

பின் உங்கள் வாழ்க்கையில் தீமைகளைச் சந்திக்கும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வாருங்கள்.

சிறிது நாள் செய்து பழகிக் கொண்டால் மகரிஷிகளின் அருள் சக்தியை உயிர் அணுக்களாக உருவாக்கி உங்கள் உடலுக்குள் அதைப் பெருக்கத் தொடங்கும்.
1.அருள் சக்தி உங்களுக்குள் பெருகப் பெருக அதனின் ஞானமாக இயக்கி
2.உங்களை அருள் வாழ்க்கை வாழச் செய்யும்.

கணவன் மனைவியாக ஒன்றி சப்தரிஷி மண்டலமாக இன்றும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பவர்கள்…

shiva-parvati

கணவன் மனைவியாக ஒன்றி சப்தரிஷி மண்டலமாக இன்றும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பவர்கள்… 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் குரு காட்டிய அருள் வழிகளில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அரும் பெரும் சக்திகளையும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் அரும் பெரும் சக்திகளையும் பெறக் கூடிய வழியைக் காட்டுகின்றோம்.

1.அந்த வழியில் இதைக் கடைப்பிடிப்போருக்கு
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் “ஒளிப் பேழைகளாக…!” வருவதைப் பார்க்கலாம்.
3.உயிருடன் ஒன்றி உங்கள் புருவ மத்தியில் அந்த ஈர்ப்பின் தன்மை வரும்.
4.புருவ மத்தியில் மோதும் அந்த “மின்னணுவின் உணர்வுகள்…!” உங்கள் நினைவாற்றலை
5.அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கின்றது.

எந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் எண்ணுகின்றோமோ அதைப் பின்பற்றிச் சென்றோர் அக்காலத்தில் வாழ்ந்த அனைவரும் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழுகின்றார்கள். பேரின்பப் பெரு வாழ்வாக வளர்ந்து வருகின்றார்கள்

எவ்வாறு…?

மனித வாழ்வில் உயர்ந்த உணர்வின் தன்மையை தன் மனைவிக்குப் பெற வேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்குப் பெற வேண்டும் என்று இந்த உணர்வு இரண்டையும் ஒன்றாக்கியவர்கள்…
1.கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி
2.கணவன் மனைவியும் இரு உணர்வும் ஒன்றாகி
3.கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றாகி
4.கணவன் மனைவியாகத் தனக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வினை வளர்த்துக் கொண்டவர்கள் தான் அந்தச் “சப்தரிஷிகள்…!”

அவர்களைப் போன்ற அருள் வாழ்க்கையை நாமும் வாழ்ந்து அவர்கள் அருள் வட்டத்தில் நாமும் இணைந்து வாழ வேண்டும்.

இப்போது எப்படி ஆண் பெண் என்ற அன்பில் எண்ணத்தின் உணர்வு கொண்டு
1.மகிழ்ச்சி பெறும் நிலைகளை உருவாக்கப்பட்டால் காமமாகின்றது.
2.அந்தக் காமத்தின் நிலைகள் கொண்டு இரு மனமும் ஒன்றாகின்றது.
3.அதிலே விளையும் அணுக்களின் தன்மைகள் அமிலங்கள் ஒன்று சேர்க்கின்றது.
4.பின் தன் இனத்தின் விருத்திகளை உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் மகரிஷியின் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் தன்மை மோகமாக்கி அதனின் உணர்வைத் தனக்குள் அணுவாக்கிடல் வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கணவன் மனைவி இருவரும் பெற வேண்டும் என்ற உணர்வை நீங்கள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி மனைவி பெற வேண்டும் என்றும் மகரிஷிகளின் அருள் சக்தி கணவன் பெற வேண்டும் என்றும் இரு உணர்வும் ஒன்றாக்கிய பின் கருவிலே வளரும் சிசுவிற்கும் அந்த மகரிஷியின் உணர்வுகள் பெற வேண்டும் என்ற உணர்வினை வளர்த்து விட்டால் கருவிலே வளரும் குழந்தைக்குள்ளும் அருள் ஞானம் வருகின்றது.

இதெல்லாம் அன்றைய மெய் ஞானிகள் காட்டிய அற வழிகள்.

இதன் வழி கொண்டு செயல்படுவோம் என்றால் உடலை விட்டுச் செல்லும் இரண்டு உயிரான்மாக்களும் ஒன்றாகி எந்தத் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் எண்ணினோமோ அதன் வழி ஈர்க்கப்பட்டு அந்த அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைகின்றோம்.

இந்தத் தியானம் செய்தால் “நஷ்டம்” என்ற வார்த்தை வராது…!

souls-cleaning

இந்தத் தியானம் செய்தால் தொழிலில் நஷ்டம் என்ற வார்த்தை வராது…!

 

ஒருவன் நமக்குக் கெடுதல் செய்கிறான். அதைக் கண்ணில் பார்க்கின்றோம். அவன் உணர்வு நுகர்ந்த பின் அந்த இயக்க அணு ஜீவ அணுவாக நம் இரத்தத்தில் கலந்து விடுகின்றது.

அவன் உணர்வு நமக்குள் இருக்கப்படும் போது அவன் எனக்குத் துரோகம் செய்தானே…! உருப்படுவானா…? என்று அவனைப் பற்றி எண்ணுகின்றோம்.

அப்போது இந்த உணர்வலைகள் அந்த உடலில் பாய்ச்சி புரை ஓடுகிறது. சாப்பிட முடியாமல் செய்கிறது. வாகனம் ஓட்டிக் கொண்டு போனான் என்றால் அந்த வாகனத்தை ஓட்ட முடியாமல் தடைப்படுத்துகிறது. ஆக்சிடென்ட் ஆகிறது.

இதையெல்லாம் உங்கள் வாழ்க்கையில் பார்க்கலாம்.

1.நீங்கள் ஏதாவது முக்கியமான ஒரு வேலை செய்து கொண்டு இருக்கும் போது
2.உங்களுக்கு ஆகாதவர்கள் ஏதாவது அங்கே பேசினார்கள் என்றால்
3.உங்கள் ஞாபக சக்தி திடீரென்று மறையும்.
4.இது “புரை…!” என்ற நிலைகள்.

ஞாபக சக்தி குறைந்தது என்றால் உங்களுக்குச் சிந்திக்கும் தன்மை இல்லாமல் போய் விடும். அப்போது அந்த இடத்தில் தொழிலில் நஷ்டத்தை உண்டாக்கிவிடும்

இந்த மாதிரி ஒருவருக்கு ஒருவர் இயக்கக்கூடிய இந்த உணர்வுகள் இப்படி இருக்கின்றது. மற்றவர்கள் உணர்வு நம் உடலில் இருக்கிறது.

ஆகவே இந்தத் தியானத்தில் வந்தவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும் நிலைகள் என்ன என்றால் தியானம் எடுத்துத் “தொழிலில் நஷ்டம்…!” என்ற வார்த்தையே இங்கே வரக்கூடாது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்த நாளங்கள் முழுவதும் அந்தச் சக்தி கலக்க வேண்டும் என்று கொஞ்ச நேரம் சிந்தித்தீர்கள் என்றால்…
1.ஏன்…? எதனால்…? என்ற அந்த ஞானம் வரும்.
2.அப்போது அதில் எந்தக் குறைபாடு என்று அறிந்து அதைத் திருத்தி அமைக்கக்கூடிய சக்தி கிடைக்கும்.

ஆனல் எல்லாம் நஷ்டம் ஆகிப் போய்விட்டது…! நாளை என்ன செய்வது…? என்று பலத்தை அங்கே கொடுத்து விட்டோம் என்றால் அடுத்து நல்ல சிந்தனை வராது.

தொழிலில் நாம் வளர வேண்டும் என்றாலும் கூட சில நேரங்களில் நஷ்டம் ஆகும் பொழுது அதை வளர்த்து விட்டால் அது வலுவாகி விடும். பின் அது தான் நம்மை இயக்கும்.

அதை மாற்றுவதற்கு எந்தச் சந்தர்ப்பமாக வந்தாலும் நாம் ஆத்ம சுத்தி செய்து பழகிக் கொள்ள வேண்டும். அதைத் (நஷ்டம்) தூக்கி எறிந்து விட வேண்டும்.

காரணம் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை விண்ணில் செலுத்தி அதை இழுத்துச் சுவாசிக்கும் பொழுது மூக்கின் வழி நுகரப்பட்டு உயிரில் படுகின்றது.

அதாவது நம் கண்ணின் நினைவு துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்கின்றது. கண் வழியாகக் கவர்ந்த உணர்வை உயிரில் இணைத்திட வேண்டும். இணைத்தவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுப் பெறுகிறது.

நமக்குள் சங்கடம் வெறுப்பு போன்ற உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தாலும் அதை இங்கே தடைபடுத்தி உள்ளுக்குள் (உடலுக்குள்) போகாமல் தடைப்படுத்தி விடுகின்றது.
1.முதலில் அதை நிறுத்திப் பழக வேண்டும்.
2.ஏனென்றால் அது நம்மை இயக்கி விடக்கூடாது.
3.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பெற வேண்டும் என்று இங்கே புருவ மத்தியில் எண்ணி நிறுத்தி விட வேண்டும்.
4.சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதா…!

அடுத்த நிமிடம் அதே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி இந்தத் தியானத்தின் முறைப்படி நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் (தலையிலிருந்து கால வரை) வரிசைப்படுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறும்படி பழக்கம் செய்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பத்தில் துன்பமோ தீமையோ வரும் போது உடனே நம் உடலை எச்சரிக்கை செய்து “துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி அது வலு ஏற்றிய பிற்பாடு நம் உடலுக்குள் போவது இல்லை.

ஏனென்றால் வேதனை வெறுப்பு என்கிறது எல்லாம் வாலி. அது சக்தி வாய்ந்தது. ஆனால் அதை வென்றது துருவ நட்சத்திரம். அப்போது நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால் நம் உயிரிலே அது சேர்க்கப்படுகிறது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இச்சைப்படும் பொழுது இச்சாசக்தி. நம் உயிரிலே பட்டவுடனே அந்த உணர்வுகள் உடல் முழுவதற்கும் சென்று கிரியை ஆகின்றது.

அந்த மெய் ஞானியான அகஸ்தியன் அவன் எப்படித் தீமையை நீக்கினானோ அதே உணர்வு அந்த ஞானமாக நம்மை இயக்கும். ஞான சக்தி. வேதனையான உணர்வை நமக்குள் வராதபடி… நம்மை இயக்காதபடி தடுக்கும்.

இது ஒரு பழக்ககத்திற்கு வந்து விட்டது என்றால் எல்லாம் சரியாகப் போகும். தையல் மிஷினில் தைத்துப் பழகியவர்கள் மற்றவர்களிடம் பேசிக் கொண்டே “ஜர்..ர்ர்…!” என்று தைத்து விடுகின்றார்கள்.

பின்னல் ஆடையைக் கையில் பின்னுகின்றவர்களைப் பார்த்தாலும் பேசிக் கொண்டே பின்னுகின்றார்கள். அதைப் பழகாதவர்களோ பார்த்துப் பார்த்துப் பின்னினாலும் கூட ஒழுங்காக வருவது இல்லை.

அதே மாதிரித் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுக்கும் பழக்கத்திற்கு வந்து விட்டோம் என்றால் சர்வ சாதாரணமானது. “டக்…!” என்று மாற்றிக் கொள்ளலாம்.