மகிழ்ச்சி பெறச் செய்யும் உணர்வின் இயக்கங்களாக நாம் எப்படி மாறுவது…? என்பது தான் ஆலயத்தின் பண்புகள்

Lord vinayar

மகிழ்ச்சி பெறச் செய்யும் உணர்வின் இயக்கங்களாக நாம் எப்படி மாறுவது…? என்பது தான் ஆலயத்தின் பண்புகள்

 

ஒரு கோபப்படும் உணர்வு வரப்படும் பொழுது அதைச் சொன்னதும் நமக்கும் அந்தக் கோபமான எண்ணம் வருகின்றது. அந்த உணர்ச்சியை ஊட்டுகிறது. அது சமயம்…
1.ஏனப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று சொன்னோம் என்றால் ஒன்றுமில்லை.
2.ஏய்…ய்..! ஏண்டா இப்படிச் செய்கிறாய்…? என்றால் வெறுப்பு தன்னாலே வருகின்றது.
3.காரத்தின் தன்மை அதிகமாகின்றது.
4.ஆகவே சூடாகச் சொல்லும் பொழுது வெறுக்கும் தன்மை வருகின்றது.

ஆனால் ஏனப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று சொல்லும் பொழுது அந்த உணர்ச்சி “ஏதோ தவறு செய்து விட்டோம்… போலிருக்கிறது…!” என்று வருகிறது.

சாதாரணமாகச் சொல்லும் பொழுது அரவணைக்கும் தன்மையாக வருகின்றது.
1.ஆக இந்தக் கோபம் சுவையை ஊட்டுகின்றது.
2.தன்னைத் திருந்தச் செய்கிறது.

இதைத்தான் நம்முடைய உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்பதைத் தெளிவாக்கப்படுகின்றது ஆலயங்களில். இந்த உடல் ஒரு ஆலயம். அதிலே எத்தனையோ குணங்கள் நமக்குள் இருக்கின்றது.

இரண்டு பேர் சண்டை போட்டால் அதை நாம் பார்த்தால் அந்த உணர்வு நமக்குள் வந்து பதிவாகி விடுகின்றது. உள்ளுக்குள் புகுந்து விடுகின்றது.

ஒருவன் கோபத்துடன் செயல்பட்டு மற்றவரை வேதனைப்படுத்துகின்றான். அந்த உணர்வைப் பார்த்ததும் அதே உணர்வு கோபத்துடன் அடுத்தாற்போல் வேதனைப்படும் சொல்லாகவும் வேதனைப்படும் செயலாகவே நமக்குள்ளும் மாறுகின்றது.

அங்கே சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல…! இங்கே நம் உடலிலேயும் வேதனையை உருவாக்கும் அணுவாகி உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்லும் அணுவாக மாறுகின்றது.

எப்படிக் காடுகளில் புலி கரடி பாம்பு போன்ற பிராணிகள் மற்றவைகளைக் கொன்று சாப்பிடுகின்றதோ அது போல் நம் உடலுக்குள் வந்த அந்தத் தீமை செய்யும் அணு மற்றதைக் கொல்கிறது.

ஏனென்றால் நம் உடல் ஒரு பெரிய காடு. எந்தெந்தத் தாவர இனங்களின் சத்தை வளர்த்ததோ அதனின் மணம் அந்தக் குணம் அந்த அணுவின் தன்மையாகி ஒன்றுக்கொன்று போர் முறையாகி விட்டால்
1.ஐயோ… பளீர்.. என்று இங்கே (ஊசி குத்துவது போல்) மின்னுகிறதே
2.இங்கே உடலில் வலிக்கின்றதே… வயிறு வலிக்கிறதே… இது எல்லாம் வரும்.

போர் முறை வரப்படும் பொழுது அதைச் சீராக ஜீரணிக்கும் சக்தி இல்லாது போய்விடுகின்றது. உடல் உறுப்புகளின் இயக்கங்கள் தடைப்படுகின்றது.

ஒரு அரசன் ஒரு கிராமத்திற்குப் போகும் பொழுது அதை அடக்கி அங்கே தன் நிலைகளை எப்படிச் செயல்படுத்துகின்றானோ இதே மாதிரி நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலுக்குள் அது போகும் பாதைகளில் அங்கே இருப்பதை எல்லாம் துரத்திக் கொண்டே செல்லும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! இதுகள் எல்லாம் எதிலிருந்து வந்தது..? என்று ஞானிகள் தெளிவாக்கியிருக்கின்றார்கள்.

எந்த உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவருகின்றதோ அது சீதாலட்சுமி… (சீதா என்றால் சுவை) அந்தச் சுவையை வளர்க்கும் சக்தியாக வளருகின்றது.

அதாவது கோப குணத்தை வெளிப்படுத்தினால் அது சீதா..! சூரியனின் காந்த சக்தி கோபத்தை எடுத்து வைத்துக் கொண்டு சீதாலட்சுமியாக மாறுகின்றது.
1.கோபிப்பவரைப் பார்த்ததும் சீதாராமா…
2.அந்தக் கோபத்தின் உணர்ச்சியின் வேகமாக அதே எண்ணங்கள் நமக்குள்ளும் வருகின்றது.

ஒருவன் கசப்பான செயலைச் செய்கின்றான். அந்த உணர்வுகள் சீதா லட்சுமியாக மாறுகின்றது. சுவாசித்ததும் சீதாராமனாக அதே கசப்பான வெறுப்பின் எண்ணங்கள் வருகின்றது. இது தனித் தன்மை.

அதே போல் பண்பு கொண்ட தெய்வீக உணர்வுகளை ஆலயத்தில் காட்டப்படும் பொழுது அந்த உணர்வுகளை எடுத்தால் சீதா…! அந்தத் தெய்வ குணங்களை… அந்தச் சுவையை எண்ணுகின்றோம். அப்பொழுது சீதாராமனாக நமக்குள் வருகின்றது.

அது எப்படி வருகிறது..?
1.இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்…
2.ஆலயத்தில் காட்டிய தெய்வ குணத்தை எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இத்தகைய உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் பொழுது அதே உணர்வலைகளை எடுத்து எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்பதைக் கலவையாக்கி நீங்களும் இதே மாதிரிச் சொல்கிறீர்கள்.

அப்பொழுது இந்த உணர்வலைகள் அந்த ஆலயம் முழுவதும் படர்கிறது. கோவிலுக்குள் இந்த உணர்வுடன் சென்றால் மகிழ்ச்சி ஊட்டும் உணர்ச்சிகள் நிச்சயம் வரும்.

ஆலயங்களை ஞானிகள் உருவாக்கியதன் நோக்கமே அது தான்.

கணவன் மனைவி ஒன்றி வாழ வேண்டியதன் அவசியம்…!

Shiva - ardhanreeswara

கணவன் மனைவி ஒன்றி வாழ வேண்டியதன் அவசியம்…!

 

இராமாயணத்தைக் கற்றுக் கொண்ட இராகவேந்திர சுவாமிகள் இராம நாம ஜெபத்தைப் பாடிக் கொண்டே “நான் சொர்க்கம் அடைய வேண்டும்” என்ற நிலை பெற்றவர்.

இராமனுடைய பாடல்களை… இராம ஜென்ம பூமி என்ற நிலைகளில் இராமாயணக் காவியங்களைப் பாடிக் கொண்டவர்.

சங்கர பீடங்களில் இராம நாம ஜெபத்தைத் தினமும் ஆயிரம் முறை எழுதிக் கொண்டிருந்தால் “உனக்குச் சொர்க்கம் கிடைக்கும்…!” என்று இன்றும் சொல்வார்கள். இராமன் யார் என்றே அறிய முடியாதபடி அந்த நிலைகள் அவ்வாறு இருக்கிறது.

இராகவேந்திரரின் மனைவி என்ன செய்கிறது…?

நீ இராமனையே பாடிக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றாய்…! எனக்குச் சாப்பாட்டுக்கு இல்லையே…! என்று கேட்கிறது.

நீ என் கூட வந்தால் பிசாசு…! நீ வரக்கூடாது என்கிறார். நான் இராமனையே பாடிச் சொர்க்கம் அடையப் போகிறேன்…! என்று உலகிற்குச் சொல்கிறார்.

தன் மனைவியைக் கூட வரவிடாதபடி துரத்திவிடுகின்றார். ஆனால் உலகிற்கு இராம நாம ஜெபத்தைப் பாடுகின்றார்.

மனைவியோ இராம நாமத்தைப் பற்றிச் சொல்ல முடியாதபடி அவர் உணவுக்கு வழி இல்லை.

ஆக மொத்தம் திருமணமாகிக் கணவனும் மனைவியும் ஆன பிற்பாடு இங்கே அனாதையாக விட்டுவிட்டு… “நான் போகின்றேன்…!” என்றால் என்ன ஆகிறது…?

அப்பொழுது மனைவி பின்னாடியே வருகின்றது. எனக்கு எப்படியும் உணவைக் கொடு… இல்லை என்றால் உன் கூடவே நானும் பாடுகிறேன்…! என்று சொல்கிறது.

1.நீ (மனைவி) வந்துவிட்டால் எனக்கு உன் மீது ஆசை வந்துவிடும்.
2.அதனால் நரகத்திற்குத்தான் போவேன்…! என்று இப்படிப்பட்ட நம்பிக்கையில் அவர் சொல்கிறார்.

அவரை இன்று கடவுளாகத் துதிக்கலாம். ஆனால் அவர் தன் மனைவியைத் துறந்துவிட்டு இப்படிப் போகிறார். அவருடைய மனைவியும் பின்னாடியே துரத்திக் கொண்டே போகின்றது.

நான் இராமனைப் பாடுகிறேன். நீ பிசாசு… வரக்கூடாது…! என்றே சொல்கிறார்.

நான் பிசாசாகி உன்னிடமே வருவேன்…! என்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்கிறது. வெளி வந்த அந்த ஆன்மா அங்கே அவருக்குள் போகிறது.

அதற்குப் பின் அவரால் பாடல்கள் பாட முடியவில்லை. அப்பொழுது என்ன செய்கிறார்…? அந்தக் காலத்தில் “ஜீவ சமாதி” என்பார்கள்.

இனி என்னால் முடியாது என்று சொல்லிக் குழியைத் தோண்டச் சொல்லி அந்த இராமனைப் பாடிக் கொண்டே ஜீவ சமாதிக்குள் சென்று அதற்குள் ஐக்கியமாகின்றார்.

ஆனால் மனைவியின் ஆன்மா அவர் உடலுக்குள் தான் போனது. போய் இந்த நிலை (ஜீவ சமாதி) ஆன பிற்பாடு உயிர் எங்கே போகிறது…? விண் செல்லவில்லை.

சோறு மேல் தான் ஆசை வந்தது…! இராகவேந்திரர் சாமிகள் கும்பிடுபவர்களை எல்லாம் பெரும்பகுதி பாடல்களைப் பாடி விட்டு சாப்பாடு போட்டார்கள்… சாப்பாடு போட்டார்கள்…! என்று தான் சொல்வார்கள்.

அதனின் உணர்வின் ஆசை இருக்கும் பொழுது அதிலே சிக்கிக் கொண்டு செல்வம் வேண்டும்… செல்வாக்கு வேண்டும்… சொத்து வேண்டும்…! என்று தான் போவார்கள்.

அர்ச்சனை என்று எல்லாக் காசுகளும் போட்டு இந்த ஆசைகளில் தான் கும்பிடுகின்றார்கள். “மோட்சம் அடைய வேண்டும்” என்ற எண்ணம் இல்லை.

இராகவேந்திர சுவாமிகள் பக்தியின் நிலைகளில் அவர் தர்மத்தைப் பேசும் பொழுது
1.அந்த ஞானிகளின் அருளைப் பெற வேண்டும் என்ற உண்மையை எடுத்துரைத்தார்.
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்.
3.ஆனால் தன்னை அணுகி உள்ளவரை (மனைவியை) மறந்துவிட்டார்.

இராகவேந்திரரின் ஆன்மா பல காலம் திரிந்து மும்முடிவாரத்திலிருந்த பாலயோகீஸ்வரரின் உடலில் புகுந்தது.

அவருடைய உடலில் இராகவேந்திர சுவாமிகளுடைய உணர்வுகள் பதியச் செய்யும் பொழுது பாலயோகியினுடைய உடலில் இருந்துதான் இந்த உணர்வின் சக்தியை மெய் ஒளியைப் பெற முடிந்தது.

ஒன்றுமறியாத பாலயோகியினுடைய உடலிலிருந்து மெய் ஒளியைக் காணும் நிலைக்கு அவர் எடுத்துக் கொண்ட மெய் ஒளியின் தன்மை கொண்டு எவ்வாறு ஜீவ சமாதி ஆனாரோ
1.முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் அவருடைய உயிராத்மாவும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் அடைந்தது.

மனைவியிடம் கணவன் பெற வேண்டிய அருளாசி (ஆசீர்வாதம்)

Spiritual wife.jpg

மனைவியிடம் கணவன் பெற வேண்டிய அருளாசி (ஆசீர்வாதம்)

புதிதாகத் திருமணமான கணவன் மனைவி உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் சிறு குறைகள் ஏற்பட்டாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

திருமண நாளில் உங்களுக்கு ஆசீர்வதித்தார்கள் அல்லவா…!
1.அந்த அனைவரின் ஆசீர்வாதமும் பெற வேண்டும் என்று ஏங்கிவிட்டு
2.கணவனுக்கோ மனைவிக்கோ இந்தக் குறைபாடுகள் வந்தாலும் அந்தக் குறைகளை எண்ணாதபடி
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெறவேண்டும்… நாங்கள் தெளிந்த மணம் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

மனைவி பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் அந்த அருள் ஞானம் பெறவேண்டும் என்று மனைவி பால் உள்ள குறைகளை கணவன் இப்படி எண்ணுதல் வேண்டும்.

அதே போல் கணவன் பால் இத்தகைய குறைகள் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று கணவன் பொருளறிந்து செயல்படும் சக்தியும் மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும் என்று மனைவி எண்ணுதல் வேண்டும்.

என்னை அரவணைக்கும் அந்த அருள் ஞானம் என் கணவர் பெறவேண்டும்… அந்த அருளாசி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மனைவி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.ஏனென்றால் மனிதன் என்ற வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலேயும் சிறு குறைகள் வரத்தான் செய்யும்
2.அந்தக் குறைகளை உடனடியாக நீக்கிப் பழக வேண்டும்.

கணவன் மனைவி இருவருமே எந்தக் குறைகளைக் கண்டாலும் முதலில் தன் தாய் தந்தையரை எண்ணி உங்கள் திருமண நாளை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் என் கணவர்/மனைவி பொருளறிந்து செயல்படும் அருள் சக்தியும் மலரைப் போல் மணம் பெறும் சக்தி பெற்று அருள் ஞானம் பெறும் அந்த அருளாசி எனக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

வெளியிலே எங்கே சென்றாலும் அம்மா அப்பா அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… “எங்கள் காரியங்கள் எல்லாம் வெற்றி பெறவேண்டும்…” என்று எண்ணித் தியானிக்க வேண்டும்.

கணவன் வெளியிலே எங்கே சென்றாலும் மனைவியிடம் சொல்லி
1.உன்னுடைய அருளாசி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
2.எல்லோரும் என்னை மதிக்க வேண்டும்
3.அந்த அருள் சக்தி உன்னிடம் தான் இருக்கின்றது…
4.எனக்கு அந்த அருளாசி கொடு…! என்று எண்ணிவிட்டு வெளியிலே செல்ல வேண்டும்.

அதே போல மனைவியும் கணவனை எண்ணி என் அன்னை தந்தையரின் அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கணவர் பெறவேண்டும் அவர் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும் அவர் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும் அவர் பார்ப்போருக்கெல்லாம் நல்ல நிலை கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

விவசாய நிலங்களுக்குச் செல்லும் பொழுதும் மனைவி தன் கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் அவர் பார்வையில் அந்தப் பயிரினங்கள் செழித்து வளர வேண்டும் அந்தச் சக்தி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொல்லுதல் வேண்டும்.

எங்கே வெளியில் சென்றாலும் கணவன் மனைவியிடம் சொல்லி
1.என் காரியம் சித்தியாக வேண்டும்
2.உன் அருள் வேண்டும் என்று மனைவியிடம் கேட்டுச் செல்ல வேண்டும்.
3.ஏனென்றால் இருவரும் வேறல்ல… சக்தி இல்லையேல் சிவமில்லை… சிவம் இல்லையேல் சக்தியில்லை….!

ஆகவே இந்த வாழ்க்கையில் எப்பொழுதுமே அன்னை தந்தையரின் அருளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கி வாழ்ந்தால் வாழ்க்கையில் என்றுமே பேரின்பம் கிடைக்கும்.

1.சாதாரணமாக… “மனைவி தான்” என்று எண்ணிவிடக் கூடாது.
2.அருள் தெய்வம் என்ற எண்ணத்திலேயே நாம் வருதல் வேண்டும்.
3.மகாலட்சுமி என்று கூட நீங்கள் எண்ணலாம் – சர்வத்தையும் உருவாக்கும் சக்தி பெற்றது.

பெண்களுடைய வாக்கை என்றுமே ஆண்கள் தொடர்ந்தால் எதை வாழ்த்தி அனுப்புகின்றார்களோ அந்த வாக்கின் பிரகாரம் அந்தக் காரியங்கள் நல்லதாகும்.

கணவன் மனைவி திருமணமாகும் பொழுது இரு மனமும் ஒன்றாக ஆனது போல
1.என்றுமே இந்த வாழ்க்கையில் எண்ணினால்
2.என்றுமே பிரியாத நிலைகள் கொண்டு உங்களுக்கு இனிப் பிறப்பே இல்லை.

இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து இந்த வாழ்க்கையில் எப்பொழுது நீங்கள் பேரின்பம் பெறுகின்றீர்களோ அந்த அருள் வாழ்வு என்றுமே இருக்கும். அடுத்து உடல் இல்லை. இதே உடலின் உணர்வுகள் ஒளியாகிப் பேரின்பமாக வாழ முடியும்.

அகண்ட அண்டத்தின் சக்தியைக் கணவன் மனைவி பெறும் வழி

universe-cosmos

அகண்ட அண்டத்தின் சக்தியைக் கணவன் மனைவி பெறும் வழி

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை நம் உடல் கழிவாகப் பிரித்து விட்டு நல்லதை…
1.நறுமணம் கொண்ட உணர்வாகவும்
2.நறுமணத்தை அறியும் அறிவாகவும்
3.நறுமணத்தை நுகரும் தன்மையாகவும்
4.நறுமணத்தின் உணர்வு கொண்டு நற்செயலைச் செயல்படுத்தும் உணர்வாகவும் உடல் மாற்றுகின்றது.
5.உடலின் மணங்கள் இவ்வாறு இயக்குகின்றது

ஆனால் மற்ற உயினங்கள் விஷத்தின் தன்மையைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு தன் உடலில் வலிமை பெறுகின்றது நல்ல உணர்வின் தன்மைகளை நஞ்சாக (கழிவாக) மாற்றுகின்றது.

உடல் வலிமை கொண்டு சிந்திக்கும் செயல் இழந்து ஒன்றோடு ஒன்று போர் முறை கொண்டு அது மற்றொன்றைத் தாக்கி மற்றவைகளின் உணவைப் பரிமாறிக் கொள்கின்றது.
1.இது மிருக உணர்வுகளின் இயக்கங்கள்.
2.ஆக நஞ்சின் வலிமை கொண்டு வரும் பொழுது சிந்திக்கும் தன்மை அவைகளுக்கு இல்லை.

ஆனால் மனிதனோ சிந்தித்துச் செயல்படும் தன்மை பெற்றவன். அந்த நஞ்சினை அடக்கும் உணர்வு கொள்ளும் பொழுது
1.அண்டத்தில் எட்டாத உயரத்தில் இருக்கும் உணர்வின் தன்மையையும் எட்டிப் பிடித்து
2.அகண்ட அண்டத்தில் அந்த அருள் ஒளியின் சுடராக அறியும் வல்லமை பெற்றது “மனிதனின் ஆறாவது அறிவு…”

அகண்ட அண்டத்தின் உணர்வுகளை நம் பிரபஞ்சம் கவர்ந்து சூரியன் ஒளிச் சுடராக மாற்றுகிறது. அதைப் போல
1.நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி
2.ஒளியின் சரீரம் பெறும் அறிவின் தன்மையைத்தான் கார்த்திகேயா என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
3.கார்த்தி என்றால் வெளிச்சம்.

அகண்ட அண்டத்தையும் அறியும் தன்மையும் அண்டத்தில் உருவான நம் பிண்டத்திற்கு (உடலுக்கு) உண்டு. அகண்ட அண்டத்தின் ஆற்றலை நமக்குள் பெறும் தகுதியும் உண்டு.

ஆகவே எத்தகைய நஞ்சின் தன்மை வந்தாலும் அதை வென்றிடும் உணர்வு பெற்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து என்றுமே நமக்குள் பேரின்பம் என்ற நிலையை உருவாக்கிடல் வேண்டும்.

அத்தகைய அருள் ஞானத்தை கணவன் மனைவி இருவருமே பெற்றுப் பழக வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் இரு மனமும் ஒன்றாகி இரண்டறக் கலந்து உணர்வின் ஒளியாக மாற்ற வேண்டும்.

கணவனும் மனைவியும் அருள் ஞான சக்தி பெற்று நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு உயிரும் ஒன்றி வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி ஒளியின் உணர்வாக உருவாக்கும் தன்மை பெறவேண்டும். உலக ஞானம் பெற்று இந்த உலகைக் காத்திட வேண்டும்.

உலகில் தான் நாம் வாழ்கின்றோம். நம் உடலுக்குள் உலக உணர்வுகள் அனைத்தும் உண்டு. ஆகவே அந்த உலக உணர்வை பகைமையற்ற நிலையாக்கிப் நம்மிடம் பகைமை வளராது தடுக்க வேண்டும்.

ஒளியின் சுடரான அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்தால்
1.உலக ஞானம் பெறலாம். பகைமைகளை அகற்றிடலாம்.
2.அருள் ஒளியின் சுடராகப் பேரருள் வாழ்க்கை வாழ்ந்து
3.மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற்று
4.நம் பேச்சும் மூச்சும் பிறரை மகிழச் செய்யும் உணர்வாக வளரும்.
5.இந்த உடலுக்குப் பின் அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத வாழ்க்கை வாழலாம்.

நன்றாகப் பழகியவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பழிச் சொல்கள் எப்படி வருகின்றது…?

Polaris soul protection.jpg

நன்றாகப் பழகியவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பழிச் சொல்கள் எப்படி வருகின்றது…?

இரண்டு பேர் நண்பர்களாக இருக்கின்றார்கள். சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு ஆகிச் சண்டை இட்டுக் கொண்டார்கள் என்றால் என்ன ஆகின்றது..?

ஒருவரின் செயலைப் பார்த்து “நீ இப்படிச் செய்துவிட்டாயே…!” என்று பழிச் சொல்லாக மாறுகிறது. அதைக் கேட்ட பின் பதிலுக்கு அவரும் “நீ மட்டும் ரொம்ப யோக்கியமா…?” என்று சொல்வார்.

இராமன் அம்பை எய்தான்…! என்றால் கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான். ஆகவே அப்பொழுது அந்த இரண்டு நண்பர்களுக்குள் தவறு செய்தவர் யார் என்ற முடிவு தெரியாது. ஆனால் சந்தர்ப்பம் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகிறது.

இந்த உணர்வுகள் ஊட்டப்படும் போது இருவருக்குள்ளும் பழிச் சொல்லாக மாறுகின்றது. அப்பொழுது அந்த நேரத்தில் நம்மை எது இயக்குகின்றது…?

இரண்டு பேரில் யார் தவறு செய்தார்கள் என்று அந்த இருவருக்குமே தெரியாது. கோபப்பட்டுச் சண்டை போட்டார்கள் என்றால்
1.நான் ஒன்றும் செய்யவில்லை.. அவர் தான் செய்தார் என்பார்
2.இரண்டமாவர் நான் ஒன்றும் செய்யவில்லை அவர் தான் அப்படிப் பேசுகிறார் என்பார்
3.ஆக இதிலே அந்த முடிவையே காண முடியாது… காண முடிகின்றதா…?

அதே சமயத்தில் இதைக் கேட்டு நியாயம் பேசுவதற்காக ஒருவர் வருவார். இரண்டு பேருக்கும் சார்பாக வந்து
1.சரி போங்கள்…! என்று உண்மையை எடுத்துச் சொன்னால்
2.உடனே அவர்கள் மேலேயும் பகைமை ஆகும்.
3.எப்படியும் ஒருவரிடம் பகைமை ஆகிவிடும்

இரண்டு பேரும் சமாதானமாகப் போங்கள்… என்று மத்தியஸ்தம் சொனால் “அவருக்கு என்ன…? அவருக்கு வேண்டியர் போல இருக்கிறது. அதற்காக இப்படிப் பேசிவிட்டுப் போகிறார்…!” என்பார்கள்.

ஒர் உணர்வின் தன்மை ஒன்றிலே மாற்றப்படும் போது அந்த மாறுபட்ட உணர்வு நம் நல்ல குணங்களை அது சீராக இயக்க விடாதபடி செயல்படுத்துகின்றது.

எது…?

நீங்கள் காரத்தை எடுத்து அதை எதிலே கொண்டு போய்க் கலந்தாலும் அதனுடைய ருசி கெடத்தான் செய்யும். ஆனால் மற்ற “சப்…” என்று இருக்கும் பொருளிலே அந்தக் காரத்தைச் சேர்த்தால் உணர்ச்சியைத் தூண்டி அந்தச் சுவையின் உணர்வுகளை நமக்குள் உணரச் செய்கின்றது.

இதைப் போல தான் வாழ்க்கையில் அறியாது வரக்கூடிய தீமைகளிலிருந்து நமது சொல்லின் நிலைகளைப் பக்குவப்படுத்தும் அந்த நிலைகளைப் பெறுதல் வேண்டும்.

அந்தப் பக்குவ நிலை பெறச் செய்வதற்காக வேண்டித்தான் பகைமைகளை அகற்றி ஏகாந்தமாக வாழும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களைப் பெறச் செய்கின்றோம்

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் சென்றால்
1.எது நம்மை இயக்கியது…?
2.தவறான சொல்கள் எப்படி வருகிறது…?
3.பகைமை எதனால் வருகிறது…?
4.பகைமைகளை அகற்றி எப்படி ஒன்றி வாழ வேண்டும் என்ற உண்மைகளை உணர்த்தும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

நீங்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றீர்கள் என்று சொல்வதே “பெருமைப்பட வேண்டியதும் புகழப்பட வேண்டியதும் ஆகும்…!”

blissful ADI PERUKKU

நீங்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றீர்கள் என்று சொல்வதே “பெருமைப்பட வேண்டியதும் புகழப்பட வேண்டியதும் ஆகும்…!”

 

குருநாதர் சொன்னது…! குப்பையிலிருந்துதான் மரம் சத்து எடுக்கிறது, அதைப் போல குப்பையான இந்தச் சரீரத்திலிருந்து சத்தான எண்ணங்களைக் கூட்டுவோம்.
1.நீ சரீரத்தைக் குப்பையாக எண்ணினாலும்
2.உனக்குள் இருக்கக்கூடிய அந்த நல்ல எண்ணத்தை அந்த வைரத்தை,
3.குப்பையான சரீரத்திலிருந்து விளையச் செய், அதுதான் சொந்தம் என்றார் குருநாதர்.

ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் எத்தனையோ துன்பங்கள் இருக்கிறது. அந்தத் துன்பங்களை விளைவிக்கக் கூடிய எண்ணங்கள் இருக்கிறது. அந்தத் துன்பத்தை விளைவிக்கக் கூடிய எண்ணங்களிலிருந்து அவர்களை மீட்க வேண்டும்.

அவர்களிடமிருந்து மகிழ்ச்சியை நீ எதிர்பார். அந்த மகிழ்ச்சியே உனக்குச் சொர்க்கம்…! என்ற நிலைகளை நமது குருநாதர் எமக்குச் சொன்னதினாலே நீங்கள் மகிழ்ச்சியான உணர்வை எப்பொழுது வெளிப்படுத்துகின்றீர்களோ அதில்தான் யாம் (ஞானகுரு) சொர்க்கத்தைக் காண்கிறோம்.

எப்பொழுதுமே நீங்கள் மகிழ்ந்து
1.நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்
2.மகிழ்ச்சியான நிலையில் தொழில் செய்கிறோம்
3.மகிழ்ச்சியான நிலைகளில் வாழ்கிறோம் என்று சொல்வதுதான் எமக்குப் பெருமை.

அந்த பெருமையைத்தான் நான் எதிர்ப்பார்க்கிறேனே தவிர எம்மைப் போற்ற வேண்டுமென்பதற்காக வேண்டி அல்ல.

உங்களிடம் தவறிருந்தால் அதை நிவர்த்திக்க வேண்டி ஏதாவது செய்துதான் ஆக வேண்டும். அதற்காக வேண்டித் தவறை வளர்க்கச் சென்றால் அப்பொழுது யாம் புகழுக்கு எதிர்ப்பார்க்கிறேன் என்றுதான் அர்த்தம்.
1.எப்படி இருந்தால் என்ன…?
2.நீங்கள் எம்மை மதித்தால் போதும் என்ற இந்த மதிப்பு அல்ல…!

நீங்கள் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக நஇருக்கிறீர்கள் என்றால் அதுதான் எமக்கு பெருமையும் புகழும்…! இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

எம்மைப் பற்றிச் சொல்லி இப்படி இருக்கிறார்,… அப்படி இருக்கிறார்…! என்று புகழ்ந்து பேசுவதை யாம் எதிர்ப்பார்க்கவவில்லை.

அதே சமயத்தில் நாம் யாரையுமே முதலில் பழித்துப் பேசிவிடக்கூடாது.
1.அங்கே குறைபாடுகள் இருந்தாலும் நாம் அணுகி
2.அதை நிவர்த்தி பண்ணுவதற்கு என்ன வழியோ அதற்கு நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

சொல்லிப் பார்ப்போம்… முடியவில்லை…! என்கிற பொழுது அது அவருடைய சந்தர்ப்பம். அதற்காக வேண்டி.. முடியவில்லையே… அவர் தவறு செய்கிறார்…! என்ற உணர்வை நமக்குள் எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஏனென்றால் அவர்கள் இப்படித் தவறு செய்கிறார்களே என்று நாம் எண்ணினோமானால் அவர்களுடைய உணர்வைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்கிறோம்.

அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன…?

யார் எதைப் பேசினாலும் குறைத்துப் பேசினாலும்
1.வாழ்க்கையிலே அவர்கள் உயர வேண்டும்
2.அவர்களை அறியாமல் அவர்களுக்குள் துன்பத்தைத் தோற்றுவிக்கும் உணர்வுகளிலிருந்து மீள வேண்டும் “ஈஸ்வரா…!” என்று
3.உங்களுக்குள் நின்று உங்களை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரை எண்ணிச் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வு உங்களுக்குள் விளைகின்றது.

இவ்வாறு நாம் அடிக்கடி செய்தோமானால் அவர்களை அடிக்கடி எண்ணத் தொடங்கினோமேயானால் அவர்களுக்கும் நிச்சயம் நல்லது உண்டாகும். இதைத்தான் யாம் உங்களிடம் எதிர்பார்ப்பது.

தைப் பொங்கல் அன்று பல நறுமணமான பொருள்களைப் போட்டுச் சுவைமிக்க பொங்கலாக உணவைப் படைப்பதன் காரணம் என்ன…?

Happy pongal

தைப் பொங்கல் அன்று பல நறுமணமான பொருள்களைப் போட்டுச் சுவைமிக்க பொங்கலாக உணவைப் படைப்பதன் காரணம் என்ன…?

 

சூரியன் சகல பொருள்களையும் உருவாக்கி மனிதனுக்கு உணவாகக் கொடுக்கின்றது. சூரியனால் விளைய வைத்த பொருள்களை எல்லாம் ஒன்று சேர்த்துச் சுவைமிக்க உணவாகப் படைத்து அதைச் சூரியனுக்கே அர்ப்பணிக்கும் நாளாகத் தான் பொங்கல் பண்டிகையை நாம் கொண்டாடுகின்றோம்.

காரணம் ஞானிகள் காட்டிய அருள் வழி அது..!

சூரியனால் விளைய வைத்த பொருளான அரிசி வெல்லம் போன்ற பொருள்களையும் அதற்குள் மற்ற உயர்ந்த பொருள்களாக விளைந்த ஏலக்காய் ஜாதிக்காய் குங்குமப்பூ போன்ற நறுமணத்தை ஊட்டும் சில பொருளையும் இதோடு இணைத்து நாம் சுவை மிக்கதாக உருவாக்குகிறோம்.

அந்தப் பொங்கலைப் பொங்கும் பொழுது அதிலிருந்து வெந்து ஆவியாக வெளிப்படும் உணர்வினைச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. அதை நறுமணம் கமழும் நற்சக்தியாக நமது பூமியில் பரவச் செய்கின்றது. அது மிகவும் சுவை கொண்டதாக மாறுகின்றது.

நாம் வேக வைக்கும் போது அதிலிருந்து வரக்கூடிய நல்ல மணங்கள் அதைச் சுவாசிப்போருக்கும் மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகளாக வருகின்றது.

சூரியனால் உருவாக்கப்பட்ட உணர்வுகளை எல்லாம் மனிதனான நாம் சுவையாக உருவாக்கி அந்த நறுமணங்களை வெளியிடும் போது நுகர்வோருக்கெல்லாம் அத்தகைய நறுமணங்கள் கிடைக்கின்றது.

1.அவ்வாறு உருவாக்கிய பொங்கலைச் சுவைத்து உணவாக உட்கொள்ளும் போது
2.மகிழ்ச்சிக்குரிய உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து
3.மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம்…!

ஒரு மிளகாயை நாம் வாயில் போட்டால் ஆ…! என்று அலறுகின்றோம். சுவையற்ற ஒரு பொருளைச் சாப்பிட்டோம் என்றால் நம் மணம் சோர்வடைகின்றது… சலிப்படைகின்றது…!

ஆனால் பல பொருள்களைச் சேர்த்து இணைத்து நாம் அதைச் சுவையான பொங்கலாக மாற்றும் போது அது மகிழ்ச்சி ஊட்டும் உணர்வினை ஊட்டுகிறது.
1.நாம் சுவைத்த உணவு அந்த அமிலமாக… அந்த உமிழ் நீராக மாறி…
2.நம் இரத்த நாளங்களில் அந்த மகிழச் செய்யும் உணர்வுகளை அந்த உணர்ச்சிகளை உருவாக்குகின்றது.

அதே போல நாம் சமைத்த பொருளிலிருந்து வெளிப்படும் ஆவியினைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றது. சூரியனால் தான் எல்லாமே உருவாகிறது என்ற இந்த நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்… ஒவ்வொரு நொடியும் கூட… நம்மை அறியாமலே
1.அச்சுறுத்தும் செயலையோ… அஞ்சி வாழும் செயலையோ
2.பயமுறுத்தும் உணர்வுகளையோ.. பயந்து வாழும் உணர்வுகளை
3.வெறுப்புட்டும் உணர்வையோ… வெறுத்து வாழும் உணர்வுகளையோ
4.இதைப் போல உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்கிறது.
5.இதை இல்லை என்று யாரும் மறுக்க முடியாது…!

பொங்கலைச் சுவையாக உருவாக்கி அதை உணவாக உட்கொண்டு மகிழ்வது போல் நம் மனதிற்குள் வரும் மேலே சொன்ன அந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் சுவையாக மாற்றுகின்றோமா…?

ஏனென்றால் ஒருவர் கோபித்த உணர்வினை நாம் நுகரப்படும் போது ஒரு மிளகாயைத் தனித்து நாம் வாயில் போட்டால் எப்படி அந்தக் கார உணர்ச்சி இயக்கி “ஆ…” என்று அலறுகின்றோமோ இதைப் போல நம்மை இயக்குகிறது.

கோபப்படுவோர் எதையோ எண்ணியிருப்பார் அந்தச் சிந்தனை இல்லாது இருக்கும். அதனால் வேதனைப்பட்டு இருப்பார். வேதனையின் உணர்வுகள் உந்திய பின் சிந்திக்கும் தன்மை இல்லாததால் கோபத்தின் உணர்ச்சியை அவருக்கு ஊட்டுகின்றது.

அப்படி விளைந்த உணர்வுகள் அவர் உடல்களிலே பரவப்பட்டு அவர் உடலிலே இருக்கும் நல்ல அணுக்களுக்கு வேதனையும் கோபமும் தான் உணவாகப் போய்ச் சேர்கிறது. அதனால் தான் நல்ல உணர்வுகளை அவரால் செயல்படுத்த முடியவில்லை.

அவர் வெளிப்படுத்தும் அந்த மூச்சின் உணர்வை நாம் செவி கொண்டு கேட்டு நாம் அந்த உணர்வினை நாம் நுகர்ந்தால் சுவாசத்தின் வழி கூடி நம் ரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது நமக்குள் மகிழ்ந்து வாழும் நல்ல அணுக்கள் இதை ஏற்க மறுக்கிறத்.

தனித்து ஒரு மிளாகாயை வாயிலே போட்டால் “ஆ…” என்று அலறுவது போன்று நல்ல அணுக்கள் துடிக்க நேரும். நாளடைவில் அந்த அணுக்கள் பாழடைந்து விடும். அடுத்துச் சிந்திக்கும் தன்மை இழக்கும்.

சிந்திக்கும் உணர்வுகள் இல்லாது வெறுக்கும் உணர்ச்சிகளை நம் உடலிலே கூட்டி நம் உறுப்புகளும் சீராக இயங்காத நிலையே உருவாக்கி நோயாக உருவாக்கிவிடும்.

அதைப் போன்ற நிலைகளை மாற்றியமைக்க
1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்றும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
4.அந்த அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் சேர்த்துச் சுவை மிக்க உணர்வுகளாக உருவாக்க முடியும்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளைக் கூட்டி வெறுப்பு என்ற நிலையை மாற்றி மகரிஷிகளைப் போன்று மகிழ்ந்து வாழும் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் அது நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்குமே மகிழ்ந்து வாழும் உணர்ச்சிகளை ஊட்டும். அது மகிழ்ந்து வாழும் போது நம் உடலும் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறது.

ஒருவர் கோபப்படுகிறார்… நம்மிடம் அந்தக் குரோத உணர்வுடன் பேசுகின்றார்.. அதை நாம் நேரடியாகக் கேட்க நேர்ந்தால் அடுத்த கணம் நாம் என்ன செய்ய வேண்டும்…?
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் அவர் பெற வேண்டும்
3.சிந்திக்கும் ஆற்றல் அவர் பெற வேண்டும்
4.அவர் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்
5.அந்த உயர்ந்த நிலை அவர் பெற வேண்டும் என்று நாம் எண்ணினால்
6.அவர் கோப உணர்வுகள் இயக்கி நம்மையும் கோபக்காரனாக மாற்றுவதற்கு மாறாக
7.அந்தக் கோபம் என்ற கார உணர்ச்சிகள் தணிந்து அருள் உணர்வுகளாக நமக்குள் பெருகி
8.அந்த நல்ல உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களில் கலக்கப்படும் போது
9.நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் அந்த மகிழ்ந்து வாழும் தன்மை பெறுகின்றது.
10.நம் உடலும் மகிழ்ச்சி பெறுகின்றது. நம் சொல்லும் செயலும் பிறரை மகிழ்விக்கும் உணர்வாக வெளிப்படுகின்றது.

ஆகவே பிறருடைய கோபத்தையோ சலிப்பையோ சங்கடத்தையோ வெறுப்பையோ வேதனையோ நாம் நுகரப்படும் போது நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதற்குள் இணைத்துச் சுவையாக அதாவது நல்லதாக… நன்மை பயக்கும் சக்தியாக… “பல பொருள்களைச் சேர்த்துச் சுவையான பொங்கலாக எப்படி மாற்றுகின்றோமோ..” அதைப் போல நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

செய்து பாருங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் மகிழ்ந்து வாழ முடியும்…!

கணவனை இழந்தவர்கள் மாங்கல்யத்தைக் கழட்டக் கூடாது…! ஏன்…?

Siva sakthi

கணவனை இழந்தவர்கள் மாங்கல்யத்தைக் கழட்டக் கூடாது…! ஏன்…?

 

மதங்கள் குலங்கள் என்ற நிலையில் இருந்தாலும் அதற்குள் அனுஷ்டானம் ஆச்சாரம் என்ற நிலைகளில் தான் நாம் இன்று வாழ்ந்து வளர்கின்றோம்.

இன்று உதாரணமாக எடுத்துக் கொண்டால் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தாலும் கணவர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால்
1.உன் கணவனே போய்விட்டார்
2.உனக்கு எதற்கு மாங்கல்யம்…? என்று அதைக் கழட்டிவிடும்படிச் சொல்கின்றனர்.

ஆனால் கணவனுடன் வாழ்ந்த காலத்தில் அவருடைய உணர்வுகள் அனைத்தும் மனைவியின் உடலிலே உண்டு.
1.மாங்கல்யத்தைக் கழட்டினால் பார்க்கும் பொழுதெல்லாம் “கணவரை இழந்தவர்…! என்று தான்
2.அடுத்தவர்கள் எண்ணுகிறார்களே தவிர அங்கே பரிதாபப்படும் நிலை இல்லை…!

ஆகவே கணவர் இறந்த பின் அவர் இட்ட அந்த மாங்கல்யத்தைக் கழட்டவே கூடாது.
1.அவர் என்னுடன் வாழ்கின்றார்… என்னுடனே இருக்கின்றார்…
2.அவர் உணர்வுகள் என்னுடனே வலு பெற்று உள்ளது…! என்று தான் எண்ணிப் பழகுதல் வேண்டும்

கணவன் உடலை விட்டுச் சென்றால் உடனே மனைவி என்ன செய்ய வேண்டும்..?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை வேண்டி அந்த வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

கணவனின் உணர்வு மனைவிக்குள் இருப்பதனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்ற வலுவின் துணை கொண்டு கணவனின் அந்தச் சூட்சம சரீரத்தைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அங்கே அனுப்பிடல் வேண்டும். ஆகவே அங்கே அனுப்பி விட்டால்
1.கணவன் உடலில் பெற்ற நோயின் தன்மைகள் அனைத்தையும் அங்கே கரைத்து விடுகின்றது.
2.சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்த கணவரின் உயிரான்மா
3.ஒளி உடலாக அங்கே வாழத் தொடங்கும்.

மனைவி இங்கே இருக்கப்படும் போது எப்போதுமே கணவரின் ஆன்மா அந்த சப்தரிஷி மண்டலத்துடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்து அழியாச் ஒளி சரீரம் பெற்றுப் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற நினைவினை ஒவ்வொரு நாளும் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

கணவர் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பேரொளி என்ற நிலை அடைந்த நிலையில்
1.எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருளை நீக்கி
2.மெய் வழியில் அழைத்துச் செல்லும் அருள் உணர்வுகள் எங்களுக்குள் படர்ந்து
3.சாபவினைகளோ தீயவினைகளோ வராது எங்களைக் காத்து அருள வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.
4.இவ்வாறு எண்ணினோம் என்றால் அந்த அருள் என்றுமே நமக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆனால் இங்கே சாதாரண வாழ்க்கையின் நிலையில் இருப்பது என்ன…? என்றால் கணவர் பட்ட துயரத்தை எல்லாம் மனைவி தனக்குள் எடுத்து வைத்துள்ளது.

அதே சமயத்தில் குடும்பத்தில் உள்ள குழந்தைகளும் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் நிலைகளிளும் இது பதிவாகி உள்ளது. நுகர்ந்தது இவர்கள் உடலிலே அணுவாகவும் உள்ளது.

இறந்த கணவர் அவர் வாழ்ந்த காலத்தில் உடலிலே விளைந்த உணர்வுகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.

அப்பொழுது மனைவியோ குடும்பத்திலுள்ளவர்களோ அவருடன் நெருங்கிப் பழகியவர்களோ அவருடைய நினைவுகளை மீண்டும் மீண்டும் எண்ணி எடுத்துக் கொண்டால்
1.அவர் உடலிலே விளைந்த நோய்க்கு காரணம் எதுவோ
2.அதெல்லாம் நமக்குள் அதே நோயை உருவாக்கும் தன்மையாக இங்கே உருவாகி
3.நம்மை அறியாது சஞ்சலப்படும் நிலையை உருவாக்கி அடிக்கடி வேதனைப்படும் நிலையே வரும்.
4.அவ்வாறு வேதனைப்பட்டால் பிறிதொரு ஆன்மா நம் உடலுக்குள் வந்து சேரும். அது உடலில் வந்த தீமைகளே இங்கே வளரும்.

அத்தகையை தீமைகள் வராதபடி நாம் செயல்படுத்த வேண்டும் என்றால் அதிகாலையில் எழுந்தவுடன் உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவரைச் சப்தரிஷியாக ஆக்க வேண்டும்.

அவர் அந்தப் பேரருள் பேரொளி பெற்றுச் சப்தரிஷியாக ஆனது போல் நாங்களும் இருளை நீக்கிப் பேரொளியாக மாறும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும். எங்கள் வீடு முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும். இருளை நீக்கும் அந்த அருள் சக்தி எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்குதல் வேண்டும்.

இப்படி முறைபடுத்திக் கொண்டால் நமக்குள் தீமைகள் வராது தடுக்கவும் முடிகின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் வளர்க்கவும் முடிகின்றது.

நாம் சேர்த்துக் கொண்ட இந்த வலுவுக்கொப்ப நம் உயிர் நம்மை அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்லும்…!

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொள்ள வேண்டிய “மிகப் பெரிய பாதுகாப்புக் கவசம்…!”

siva parvathi

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொள்ள வேண்டிய “மிகப் பெரிய பாதுகாப்புக் கவசம்…!”

 

நமக்கு எதிரியாக இருப்பவர்களை எண்ணி “எனக்குத் துரோகம் செய்தான் பாவி…!” என்ற எண்ணத்துடன் ரோட்டிலே நாம் நடந்து சென்றால் நிலை தடுமாறி மேடு பள்ளம் தெரியாத படி கீழே விழுந்து விபத்தாகும்.

ஒரு பஸ் வந்தால் கூட நமக்குத் தெரியாதபடி அங்கு புரை ஒடுவது போல் சிந்தனை இழந்து இனம் தெரியாதபடி விபத்தாகும். இவைகள் எல்லாம் இயற்கையில் நடக்கும் சில சாதாரண நிலைகள்.

இதைத் தடுப்பதற்கு எந்தச் சக்தியை வைத்திருக்கின்றோம்…?

கணவன் மனைவியாக வாழ்பவர்கள்.. கணவன் தன் மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெறவேண்டும்… மனைவியின் அருள் எனக்கு உறுதுணையாக இருந்து என்றுமே அந்த நல்லாசி கொடுக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு வெளியிலே செல்ல வேண்டும். (தொழிலுக்கோ ஒரு வேலைக்கோ அல்லது எதுவாக இருந்தாலும்)

அதே சமயத்தில் மனைவியும் வெளியிலே செல்லும் போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் கணவர் பெறவேண்டும், அவர் அருள் என்றுமே எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.வெளியிலே செல்லும் பொழுதெல்லாம்
2.இப்படி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் எண்ணிய பின் தான் செல்ல வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவர் உடல் முழுவதும் படரவேண்டும். அவர் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி
1.அவர் எந்தக் காரியம் செய்தாலும் அது நல்லவையாக அமைய வேண்டும்.
2.அந்த அருள் மணம் என் கணவர் பெறவேண்டும். அவர் தொழிலில் நல்ல செழிப்பு ஏற்பட வேண்டும்.
3.அவரைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வரவேண்டும் என்று மனைவி எப்போதுமே வாழ்த்துதல் வேண்டும்.
4.அந்த எண்ணத்துடன் “வழி அனுப்புதல் வேண்டும்…!”

இதை எதற்காகச் சொல்கிறோம்…? என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்,

ஒருவர் நமக்குத் தீங்கு செய்கிறார். அவர் அமெரிக்காவிலே இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்,

1.எனக்கு இப்படித் தீங்கு செய்தான்… அவன் உருப்படுவானா…? என்று எண்ணும் போது
2.அங்கு சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது எண்ணினால் புரை ஓடுகின்றது.
3.வாகனம் ஓட்டும் போது இதைப் போல எண்ணினால் விபத்தாகின்றது.
4.தொழிலிலிருக்கும் பொழுது இதை மாதிரி எண்ணும் போது சிந்தனை குறைகின்றது. ஓடும் எந்திரங்களில் சிக்குகின்றனர்.
5.ஒரு கணக்கையோ பொருளையோ நல்ல முறையில் பார்க்க வேண்டும் என்று எண்ணினாலும் சிந்தனை குறைந்து அது முடியாத நிலை ஏற்படுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் வெளியிலே செல்லும் போதெல்லாம் கணவனும்/ மனைவியும் மேலே சொன்ன முறைப்படி செய்து மாற்றிப் பழகுதல் வேண்டும்.

என் அன்னை தந்தை அருளும் என் மனைவினுடைய அருளும் என்றும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெறவேண்டும் என்ற இந்த எண்ணத்துடன் வெளியிலே செல்லுதல் வேண்டும்.

கணவனும் மனைவியும் இதைப் போல எண்ணி வாழ்ந்து வந்தால் “வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ்கிறோம்…!” என்று அர்த்தம். அதாவது இணைந்து வாழ்கிறோம் என்று பொருள்.

ஒரு தாய் எப்போதுமே என் மகன் அவன் வாழ்க்கை உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று ஆசி கொடுத்துக் கொண்டு இருக்கும். அதே சமயத்தில் மனைவினுடைய எண்ணங்களும் அந்த அன்பான எண்ணங்கள் கொண்டு மகிழ்ச்சியான உணர்வு கூடவே (கணவனுடன்) இருக்கும்.

ஆகவே நாம் ரோட்டிலே போகும் பொழுது எதிர்பாராமல் ஒரு பஸ் எப்படியோ தறி கெட்டு வருகிறது என்றலும் கூட
1.மனைவியின் உணர்வுகள் அந்த சமயம் அந்தப் பக்கம் போகாது நம்மைத் தடுக்கும்.
2.அந்தப் பஸ்சிலேயே ஏறப் போகிறோம் என்றாலும் அந்த பஸ்சில் ஏறவிடாத படி மனைவியின் உணர்வுகளும் தாயின் உணர்வுகளும் அங்கே தடுக்கும்.
3.இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆகவே
1.தீமைகள் என்று வரப்படும் போது அந்த எண்ணமே எமன் ஆகின்றது.
2.எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…!
3.ஞானிகள் காட்டிய அருள் வழியில் இணைந்து வாழ்வதே சாவித்திரி.
4.அருள் உணர்வு கொண்டு மனைவியை எண்ணப்படும் போது நமக்குள் அந்தச் சக்தி என்றுமே உறுதுணையாக இருக்கும்.

கணவன் மேல் பிரியமாக இருக்கிறோம். அப்பொழுது வீட்டிற்குச் சொந்தமோ மற்றவர்களோ வந்து கொஞ்சம் வேதனைப்படும்படி சொல்கின்றனர்.

கணவர் வீட்டில் இல்லாத போது… “பாவிகள் இந்த மாதிரிச் செய்கிறார்களே…!” என்று வேதனையான உணர்வுகளைச் சேர்த்துக் கணவனை எண்ணினால் இந்த உணர்வுகள் கணவன் எந்தக் காரியத்துக்குப் போனாலும் அங்கே தடைப்படுத்தும்.

வாகனம் ஓட்டும் போது மனைவி இப்படி எண்ணினால் கணவனுக்குச் சிந்தனை இழக்கப்பட்டு விபத்தாகும்.
1.மனிதனுக்கு மனிதன் சாதாரணமாக எண்ணும் போது அந்த உணர்வு எப்படி இயக்குகிறதோ இதைப் போலத் தான்
2.கணவன் மனைவிக்குள் மற்றவர்கள் செய்யும் உணர்வை எடுத்துத் தன் கணவனை எண்ணினால் இதே உணர்வு அங்கே தடைபடுத்தும்.

மற்ற உணர்வுகள் வந்து இப்படித் தடைபடுத்தும்படியாகப் பேசினாலும் நீங்கள் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்.
2.அவர்கள் அறியாமை இருள் நீங்க வேண்டும் என்று எண்ணி
3,அந்தக் குறை கூறுபவர்களை இப்படி மாற்றிவிட வேண்டும்.

கணவர் தொழிலுக்குச் சென்றாலும் சரி… பொருள்களை உற்பத்தி செய்தாலும் சரி.. அதைப் பயன்படுத்துவோர் குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று மனைவி எப்போதுமே தன் கணவனை வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இதே மாதிரி கணவனும் தன் மனைவி எங்கே சென்றாலும் அந்த அருள் உணர்வுகளை எடுத்து மனைவியை வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

கணவன் மனைவி இப்படிச் செயல்படுத்திக் கொண்டு வந்தால் அன்று அகஸ்தியனும் அவரின் மனைவியும் எப்படி வாழ்ந்தார்களோ அதே போல நாமும் வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்கிப் பேரொளியாக்க முடியும்.

ஒரு பையன் நல்லவனாக இருந்தான். ஆனால் திடீரென்று கடுமையான நோயாகி விட்டது. என்ன.. ஏது…? என்று விசாரிப்பதற்காக அவனைப் பார்த்தாலும் அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் அந்த நோயின் தன்மை நமக்குள் வந்து விடுகின்றது.

ஆகவே மனைவி எப்போதுமே அதிகாலையில் விழித்தவுடன் என் கணவருக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். அது அவர் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். அவர் ஜீவான்மா ஜீவ அணுக்கள் அந்தச் சக்தி பெறவேண்டும். அந்த அருள் மணங்களைக் கவரக்கூடிய அந்தச் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மனைவிக்கும் அதே நிலை பெற வேண்டும் என்று கணவரும் எண்ணி இரண்டு பேரும் இப்படி எண்ணி வந்தால் பிறருடைய தீமைகளைபோ மற்றவையோ நமக்குள் வளராது தூய்மையாக்கி விடுகின்றது. ஏனென்றால்
1.இருவருடைய சக்தியும் ஒன்றாகச் செயல்படும் பொழுது
2.அது சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.
3.பிறர் சாபமிட்டிருந்தாலோ அல்லது முந்தைய முன்னோரின் சாப நிலைகளோ இருந்தாலும் அதையெல்லாம் அடக்கும் சக்தியாக இது அமைகிறது.

இதைப் போல நீங்கள் தொடர்ந்து நடந்து வந்தால் ஜோதிடமோ ஜாதகமோ பார்க்க வேண்டாம். யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டியதில்லை.
1.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்
2.அருள் வழியில் என்றுமே மகிழ்ந்து வாழச் செய்யும். (இதை நிச்சயம் தெரிந்து கொள்ளலாம்…!)

நாளைய அரசு நல்ல அரசாக ஆட்சியில் அமர “மக்களாகிய நாம் செய்ய வேண்டிய தலையாயக் கடமை…!”

spiirtual election

நாளைய அரசு நல்ல அரசாக ஆட்சியில் அமர “மக்களாகிய நாம் செய்ய வேண்டிய தலையாயக் கடமை…!”

 

அரசாங்க நிர்வாகத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும் பெறவேண்டும். அவர்கள் மன பலம் பெற வேண்டும்.
1.மக்களுக்கு நல் உணர்வு காட்டும் அந்தச் சக்தி
2.அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
3.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி இந்த அருள் உணர்வுகளை அவர்களுக்குப் பாய்ச்சுதல் வேண்டும்.

அப்பொழுது நம்முடைய எண்ணம் அவர்களுக்கு நல் வழி காட்டவும் சகோதர உணர்வுடன் வளரவும் இது உதவும். இதைப்போல மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் “ஓர் குடும்பம்…!” என்று நாம் செயல்படுத்த வேண்டும்.

மனித உடலுக்குள் நல்ல குணங்களும் உண்டு கெட்ட குணங்களும் உண்டு. இருந்தாலும் உயர்ந்த உணர்வு கொண்டு தியானிக்கும் பொழுது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை வளர்த்திட இது உதவும்.

ஆகவே அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற அந்த ஒருக்கிணைந்த நிலைகளில் இணைந்திடும் போது
1.நமது அரசே உலகிற்கு எடுத்து காட்டும் அரசாகவும்
2.அதன் கீழ் வாழும் மக்கள் நாம் உயர்ந்தவர்களாகவும் இருக்க முடியும்.

ஏனென்றால் விஞ்ஞான முறையால் மத பேதத்தாலும் இன பேதத்தாலும் மொழி பேதத்தாலும் இன்று உலகம் அழிந்திடும்… மனிதனுடைய எண்ணங்கள் அழிந்திடும் இத்தருணத்தில்
1.மாமகரிஷி ஈஸ்வர பட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி
2.நாம் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் இந்த முறைப்படி நாம் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலையும்
3.ஆட்சி புரிந்து கொண்டு இருக்கும் நமது அரசும் வளமாக இருக்க வேண்டும் என்றும் எண்ணுங்கள்.
4.இப்படி ஒருக்கிணைந்தால் கட்சி பேதமும் வராது… இன பேதங்களும் வராது… மத பேதங்களும் வராது…!

ஏனென்றால் நாம் அனைவரும் ஆட்சி சீரானதாக அமைக்க வேண்டும் என்று எண்ணி அந்த ஆட்சி சீராக அமைந்தால் “யாருக்கும் தொல்லை இல்லை…!”

அப்படி எண்ணாது என்னுடைய வழியில்… “நான் உயர்ந்து இருக்க வேண்டும்…!” என்று எண்ணி விட்டால் அடுத்து தொல்லைகளே வருகிறது. ஆகவே இந்த எண்ணங்கள் நமக்குள் வளராதபடி ஞானிகள் காட்டிய அருள் உணர்வு கொண்டு அரசை ஒத்தே நாம் வாழ வேண்டும்.

நமது சக்தி எல்லாம் ஒருக்கிணைந்து ஒன்றாகச் சேர்ந்து நம்முடைய ஓட்டைப் பெற்றுத்தான் ஆட்சிக்குச் செல்கிறார்கள். ஓட்டு அதிகமாக வாங்கி வென்று அங்கே சென்றாலும் அவர்கள் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று நாம் அனைவரும் சொன்னால் “நம்மைக் காக்கும் உணர்வுகள் அவர்களுக்குள் வளர்கின்றது…!” பின் நாம் இந்த எண்ணங்கள் பகைமை இல்லாத நிலைகள் வளர்கின்றது.

இது போன்ற நிலைகளை நாம் பெறுவதற்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அடுத்தடுத்து…
1.மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெற வேண்டும்.
2.நமது நாட்டு மக்கள் அனைவரும் மத பேதம் இன்றி இன பேதம் இன்றி ஒருக்கிணைந்து மகரிஷிகளின் அருள் சக்தியால் வாழ வேண்டும்.
3.ஆட்சி புரியும் அந்த ஆட்சி நிர்வாகிகள் அனைத்தும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
4.தலையாயக் கடமையாக இது ஒவ்வொரு நாளும் நாம் எண்ண வேண்டும்.

மனித உடலுக்குள் எப்படி நல்ல குணமும் கெட்ட குணமும் இருப்பது போன்றே நம் நாட்டுக்குள்ளும் இருக்கும் அனைவரும் (நல்லவராக இருந்தாலும் சரி கெட்டவராக இருந்தாலும் சரி) ஒருக்கிணைந்தால் தான் இந்த நாடும் நலம் பெறும். மக்களும் ஒருக்கிணைந்து வாழ்வோம்.

ஆகவே தீமையை விளைவிக்கும் சக்திகளிலிருந்தும் மக்களைக் கலக்கமுறச் செய்யும் தவறான செயல் கொண்ட இந்த உணர்வுகளிலிருந்தும் அனைவரையும் காத்திடும் சக்தியாக
1.நாட்டில் பிறந்த அனைத்து மக்களும் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.அவர்களை அறியாது தவறு செய்யும் நிலையில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும்.
3.மக்கள் பேரானந்த பெருநிலைகள் பெற வேண்டும்
4.மனிதனாகப் பிறந்த முழுமையின் உணர்வுகள் பெற வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்துங்கள்.

கட்சி பேதம் இல்லாத மத பேதம் இல்லாத இன பேதமில்லாத மொழி பேதமில்லாத அரசியல் பேதமில்லாத உலகைச் சிருஷ்டிக்க “நாம் எண்ணும் எண்ணமே தான்…” அத்தகைய உலகைச் சிருஷ்டிக்கின்றது.

மத பேதத்தால் போர்கள் நடக்கின்றது. கட்சி பேதத்தால் உண்மையினுடைய நிலைகள் அறியாது சீராக செயல்படும் தன்மைகள் காலத்தால் உலக நிலைகளில் இருந்து இன்று மறைந்து கொண்டு வருகிறது.

இதைப் போன்ற நிலைகளை நாம் வாழும் நாட்டிலே விளையாது
1.கட்சி என்ற பேரை அகற்றி விட்டு
2.இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஆட்சியின் நிலைகள் சீராக வர வேண்டும் என்று ஒருக்கிணைந்தால் “எல்லோரும் நல்லவரே…!”
4.எல்லோரும் நல்ல ஆட்சியை நிச்சயம் பெற முடியும்…!

ஒவ்வொரு நாளும் அரசாங்கத்தின் மேல் நாம் குறைகளை எண்ணி வளர்த்துக் கொண்டேயிருந்தால்
1.அவர்கள் எதைச் செய்தாலும் நாம் குறைகளைக் கூறி கொண்டே தான் இருப்போமே தவிர
2.குறையை நிவர்த்திக்கும் எண்ணமே நமக்குள் வராது.
3.நாம் குறையைச் சொல்லி விட்டு நாமும் குறையைச் செய்து கொண்டு இருப்போம்.

ஆகையால் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற சொன்ன நிலைகளில் நமது நாட்டில் ஆட்சி புரியும் அந்த நிலைகளுக்கு
1.மகரிஷியின் அருள் சக்தி படர்ந்து
2.நாடு சீராக வளர்ச்சி பெற வேண்டும் என்று நாம் அனைவரும் ஒருக்கிணைவோம்.
3.யார் ஆட்சிக்கு வந்தாலும் அது நல்ல ஆட்சியாக அமைய வேண்டும் என்று பிரார்த்திப்போம்… தியானிப்போம்… தவமிருப்போம்…!