கணவன் மனைவி ஒன்றி வாழ வேண்டியதன் அவசியம்…!

Shiva - ardhanreeswara

கணவன் மனைவி ஒன்றி வாழ வேண்டியதன் அவசியம்…!

 

இராமாயணத்தைக் கற்றுக் கொண்ட இராகவேந்திர சுவாமிகள் இராம நாம ஜெபத்தைப் பாடிக் கொண்டே “நான் சொர்க்கம் அடைய வேண்டும்” என்ற நிலை பெற்றவர்.

இராமனுடைய பாடல்களை… இராம ஜென்ம பூமி என்ற நிலைகளில் இராமாயணக் காவியங்களைப் பாடிக் கொண்டவர்.

சங்கர பீடங்களில் இராம நாம ஜெபத்தைத் தினமும் ஆயிரம் முறை எழுதிக் கொண்டிருந்தால் “உனக்குச் சொர்க்கம் கிடைக்கும்…!” என்று இன்றும் சொல்வார்கள். இராமன் யார் என்றே அறிய முடியாதபடி அந்த நிலைகள் அவ்வாறு இருக்கிறது.

இராகவேந்திரரின் மனைவி என்ன செய்கிறது…?

நீ இராமனையே பாடிக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றாய்…! எனக்குச் சாப்பாட்டுக்கு இல்லையே…! என்று கேட்கிறது.

நீ என் கூட வந்தால் பிசாசு…! நீ வரக்கூடாது என்கிறார். நான் இராமனையே பாடிச் சொர்க்கம் அடையப் போகிறேன்…! என்று உலகிற்குச் சொல்கிறார்.

தன் மனைவியைக் கூட வரவிடாதபடி துரத்திவிடுகின்றார். ஆனால் உலகிற்கு இராம நாம ஜெபத்தைப் பாடுகின்றார்.

மனைவியோ இராம நாமத்தைப் பற்றிச் சொல்ல முடியாதபடி அவர் உணவுக்கு வழி இல்லை.

ஆக மொத்தம் திருமணமாகிக் கணவனும் மனைவியும் ஆன பிற்பாடு இங்கே அனாதையாக விட்டுவிட்டு… “நான் போகின்றேன்…!” என்றால் என்ன ஆகிறது…?

அப்பொழுது மனைவி பின்னாடியே வருகின்றது. எனக்கு எப்படியும் உணவைக் கொடு… இல்லை என்றால் உன் கூடவே நானும் பாடுகிறேன்…! என்று சொல்கிறது.

1.நீ (மனைவி) வந்துவிட்டால் எனக்கு உன் மீது ஆசை வந்துவிடும்.
2.அதனால் நரகத்திற்குத்தான் போவேன்…! என்று இப்படிப்பட்ட நம்பிக்கையில் அவர் சொல்கிறார்.

அவரை இன்று கடவுளாகத் துதிக்கலாம். ஆனால் அவர் தன் மனைவியைத் துறந்துவிட்டு இப்படிப் போகிறார். அவருடைய மனைவியும் பின்னாடியே துரத்திக் கொண்டே போகின்றது.

நான் இராமனைப் பாடுகிறேன். நீ பிசாசு… வரக்கூடாது…! என்றே சொல்கிறார்.

நான் பிசாசாகி உன்னிடமே வருவேன்…! என்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்கிறது. வெளி வந்த அந்த ஆன்மா அங்கே அவருக்குள் போகிறது.

அதற்குப் பின் அவரால் பாடல்கள் பாட முடியவில்லை. அப்பொழுது என்ன செய்கிறார்…? அந்தக் காலத்தில் “ஜீவ சமாதி” என்பார்கள்.

இனி என்னால் முடியாது என்று சொல்லிக் குழியைத் தோண்டச் சொல்லி அந்த இராமனைப் பாடிக் கொண்டே ஜீவ சமாதிக்குள் சென்று அதற்குள் ஐக்கியமாகின்றார்.

ஆனால் மனைவியின் ஆன்மா அவர் உடலுக்குள் தான் போனது. போய் இந்த நிலை (ஜீவ சமாதி) ஆன பிற்பாடு உயிர் எங்கே போகிறது…? விண் செல்லவில்லை.

சோறு மேல் தான் ஆசை வந்தது…! இராகவேந்திரர் சாமிகள் கும்பிடுபவர்களை எல்லாம் பெரும்பகுதி பாடல்களைப் பாடி விட்டு சாப்பாடு போட்டார்கள்… சாப்பாடு போட்டார்கள்…! என்று தான் சொல்வார்கள்.

அதனின் உணர்வின் ஆசை இருக்கும் பொழுது அதிலே சிக்கிக் கொண்டு செல்வம் வேண்டும்… செல்வாக்கு வேண்டும்… சொத்து வேண்டும்…! என்று தான் போவார்கள்.

அர்ச்சனை என்று எல்லாக் காசுகளும் போட்டு இந்த ஆசைகளில் தான் கும்பிடுகின்றார்கள். “மோட்சம் அடைய வேண்டும்” என்ற எண்ணம் இல்லை.

இராகவேந்திர சுவாமிகள் பக்தியின் நிலைகளில் அவர் தர்மத்தைப் பேசும் பொழுது
1.அந்த ஞானிகளின் அருளைப் பெற வேண்டும் என்ற உண்மையை எடுத்துரைத்தார்.
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்.
3.ஆனால் தன்னை அணுகி உள்ளவரை (மனைவியை) மறந்துவிட்டார்.

இராகவேந்திரரின் ஆன்மா பல காலம் திரிந்து மும்முடிவாரத்திலிருந்த பாலயோகீஸ்வரரின் உடலில் புகுந்தது.

அவருடைய உடலில் இராகவேந்திர சுவாமிகளுடைய உணர்வுகள் பதியச் செய்யும் பொழுது பாலயோகியினுடைய உடலில் இருந்துதான் இந்த உணர்வின் சக்தியை மெய் ஒளியைப் பெற முடிந்தது.

ஒன்றுமறியாத பாலயோகியினுடைய உடலிலிருந்து மெய் ஒளியைக் காணும் நிலைக்கு அவர் எடுத்துக் கொண்ட மெய் ஒளியின் தன்மை கொண்டு எவ்வாறு ஜீவ சமாதி ஆனாரோ
1.முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் அவருடைய உயிராத்மாவும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் அடைந்தது.

Leave a Reply