ஆவி நிலையில் வாழ்வது எல்லாம் “பெரும் அல்லல் படும் நிலை தான்”

ஆவி நிலையில் வாழ்வது எல்லாம் “பெரும் அல்லல் படும் நிலை தான்”

 

“ஆவிகளைப் பற்றி” எல்லாமே தெரியும் தன்மை நாய்க்கு மட்டும் தான் உண்டு. அதற்காகத்தான் என்னுடன் நாயை நிறுத்திக் காட்சி தந்தேன்.

நாயாகப் பிறப்பவர்கள் எல்லாம் ஆவி உலகில் உள்ள பெரும் ஆத்திரக்கார ஆவிகள் என்றேனல்லவா முதல் பாடத்தில். உடலில் இருக்கும் பொழுது எந்த விரோதத்தில் அவர்களின் ஆவி பிரிந்து சென்றதோ
1.அவ்வாவி தான் முடிக்கும் காரியத்தை முடித்தவுடன் வருவது “நாயின் உடலில் தான்…”
2.மனித உடலை எடுக்கும் சந்தர்ப்பமும் பாக்கியமும் அந்த ஆவிகளுக்குக் கிட்டுவதில்லை.

இவ்வழியில் வந்த நாய்கள் எல்லாத் தன்மையையும் ஆவி உலகில் உள்ள ஆவிகள் எப்படி எந்நிலையும் தெரிந்திருக்கின்றனவோ… எந்நிலை என்பது மற்ற ஆவிகளின் நிலையும் முன் ஜென்ம விரோதத்தின் நிலையும் தெரிந்து வைத்திருக்கின்றதோ… அதே போலத்தான் நாயின் உடலிலும் இருக்கும்,.

நாய்க்கு எல்லா சக்திகளும் தெரிந்திடும். நாயின் தன்மையை ஊன்றிப் பார் நாயில் உள்ள வெறித்தன்மைதான் உணர்ந்திட்டாய். நாய்க்கும் ஜென்மத் தொடர் உண்டப்பா.

நாயின் நிலை எல்லாம் பெரும் பூகம்பத்தையும் அறிந்திடும்… வரும் வெள்ளத்தையும் அறிந்திடும்…! அதன் தன்மையில் சிறு அணுவும் ஆவி உலகத்தின் தன்மையும் ஆண்டவனின் தன்மையும் தெரிந்து விடும்.

ஆனால் ஆவியையும் ஆண்டவனையும் பிரித்துப் பார்க்கும் தன்மை அதற்கு இல்லை. அதன் வெறி உணர்விலே அத்தன்மை மறைந்து விடுகிறது.

நாய் கடித்து இறப்பவர்கள் எல்லாம் நாயுடன் முன் ஜென்மத்தில் தொடர்பு உடையவர்களே. முன் ஜென்மத்தில் விட்ட குறையை அந்த நாய் தீர்த்துக் கொள்கின்றது.

நாய் கடித்துத் தப்புபவர்கள் எல்லாம் அவர்கள் முன் ஜென்ம “பூஜா பலனினால்தான்…”

1.பூஜா பலன் என்பது கற்பூரம் காட்டி விடுவது மட்டுமல்ல…
2.அதன் பலனை அடைந்தவன் என்பது அவனின் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை வைத்துத்தான் பூஜா பலன் என்று சொல்கின்றேன்.

கடவுள் சிலைக்கு முன்னால் நிற்பவர் எல்லோருமே பூஜா பலன் எய்தியவனா…? இல்லை…!

கோயிலுக்குச் செல்லாதவனும்… கடவுளே இல்லை என்பவனும்… தன் நிலை உணர்ந்து நியாயத்தைக் கடைப்பிடித்து நல்லொழுக்கம் பெற்றவரும்… நாடு போற்றும் தன்மை உள்ள எல்லோருமே… பூஜை பலன் பெற்றவர்கள்.

ஆயிரம் தவறுகள் செய்தாலும் தான் தர்மம் செய்கின்றேன்… கோயில் கட்டி வழிபடுகின்றேன் என்பவன் எல்லாம் பூஜா பலன் பெறுகின்றானா…? இல்லை… பெரும் பூஜ்யம் தான் அவன் நிலை.

கோயில் என்பதையே தான் செய்யும் பாவத்தைக் கொட்டித்தான் பாவ மன்னிப்புக் கேட்கின்றான். அவன் நினைக்கின்றான்…
1.செய்த பாவத்தைச் செய்து விட்டுக் கோவில் கட்டி கும்பிட்டால்
2.கூப்பிட்ட குரலுக்கு “கும்பேஸ்வரன் வந்திடுவான்” என்ற எண்ணம் அவனுக்குள்ளே.

மறு ஜென்மம் என்பது உள்ளதப்பா அவனைப் பார்த்துக் கொள்ள…!

ஆவி உலகில் ஊடுருவி அதன் தன்மையில் பார்த்து விட்டால் உலக நிலை எல்லாமே உன்னுள்ளே தெரிந்திடும்.
1.மனித உடலில் உள்ளவரை தான் அமைதியும் சந்தோஷத்தையும் காண முடியும்.
2.ஆவி நிலை எல்லாம் பெரும் அல்லல் படும் நிலை தான்.

மனித உடலின் நிலையிலேயே மூன்றில் ஒரு பாகம் (1/3) அமைதியான ஆனந்தமான நித்திரை அருளியுள்ளான் அவ்வாண்டவன். எந்த நிலையிலும் அந்த ஆனந்தமான நித்திரை இல்லை அப்பா “ஆவிகளுக்கு…”

மனித உடலில் பெற்ற பேற்றை வழி வழியாகச் சொல்கின்றேன் இப்பேறு பெற்றதற்கு பல கோடித் தவம் வேண்டும். தவமிருந்து பெற்ற உடலைத் தான் தன்னிச்சையாக அழிக்கின்றார்கள் மானிடர்கள்.

1.மனித உடலின் தன்மை எல்லாம் பெரும் பேரின்ப நிலையப்பா
2.மனித உடலில் இருந்து கொண்டே வாழும் வாழ்க்கை அழகுடனும் அர்த்தமுடனும்… ஆனந்தத்திலும்… களித்திட வேண்டுமப்பா.

மனித உடலை எய்தியவன் எல்லாம் தன் நிலையை உணர்ந்திடாமல் பிறந்த உடனே ஆத்திரத்துடனும் பேராசையுடனும் பழிவாங்கும் நிலையிலும் கோப தாபத்துடன் வளர்க்கப்படுகின்றான். எப்படி அப்பா இருக்கும் வாழ்க்கை நிலை…?

பிறந்தவுடனே நல்லறிவை ஊட்டும் குடும்பத்தில் வளரும் குழந்தை நல்ல நிலைக்கு வந்து விடுவான். வளரும் தன்மையிலே வாழ்க்கை அமைகின்றது.

இப்பாடம் புரிவதற்கு புதியவனல்ல நீ…! எல்லா பாடத்தின் தன்மையும் தெரிந்திடவே புகுத்திட்டேன் இதை.

நான் என்கிறது யார் என்று தெரிகிறதா…?

நான் என்கிறது யார் என்று தெரிகிறதா…?

 

நான் யார்…? இன்னவர் மகனா…? இன்னவர் கணவனா…? இன்னவர் மனைவியா…? இன்னாரின் அப்பாவா… அம்மாவா…?
1.நீ இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்க்கை நடத்தி முடிக்கும் வரை தான் சொந்தம் பந்தம் எல்லாம்…
2.இறந்த பின் மறுபடியும் பிறப்பு.
3.பிறந்த பின்… இந்த வாழ்க்கையில் (மீண்டும்) ஒரு சொந்த பந்தம் குடும்பம்… வாழ்க்கை… பெயர்… எல்லாம்……

குழந்தைப் பருவத்தில் ஓர் ஆடை அணிகின்றோம். பிறகு வயதுக்குத் தக்க ஆடைகளை அணிகின்றோம். ஆக… ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு பெயர் வாழ்க்கை… சொந்த பந்தங்கள்…!

1.பிறப்பு எடுக்கும் முன்னும்… இந்தப் பிறப்பிலிருந்து வேறு பிறப்புக்குப் போகும் போதும் உன் நிலை என்ன…?
2.எத்தனையோ வாழ்க்கையும்… பிறப்பும்… அப்போது நான் யார்…?
3.பிறப்பு என்பது தொடர்ந்து வரும் போது… நான் என்பது யார்…?

எந்தப் பிறப்பும் எடுத்து முடியும் வரை எந்தவித ஆசைகளும் நிறைவேறாமல் தான் போகின்றோம். அடுத்து ஓர் பிறவியில்… மறுபடியும் அனுப்பும் போதும் ஆசைகள் நிறைவேறாமல் தான் போகிறோம்.

1.”என்று” ஆசைகள் பற்று பாசம் இல்லாமல் உலக வாழ்க்கையில் இருந்து வெளியேறுகிறோமா…
2.முழு நிறைவோடு போகிறோமோ… அதன் பிறகு பிறவி இல்லை.

தற்போது நான் என்கிறது யார் என்று தெரிகிறதா…? எங்கும் எதிலும் இத்தகைய விளக்கம் இருக்காது…!

ஆகவே வாழ்க்கையில் சலிப்புடன் இல்லாமல் “நிறைவோடு வாழ்…!”

வேலைக்காரனை முதலாளி ஒரு வேலை கொடுத்து அனுப்பும் பொழுது… சரியாக வேலை செய்து முடித்து அவன் வரவில்லை என்றால்… மறுபடியும் அனுப்பிச் சரியாக செய்து வரச் சொல்லி அனுப்புவது போல்… பிறவி எடுத்ததிலும் நிறைவோடு இல்லாமல் ஆத்மா பிரிந்தால் “மறுபடியும் பிறவி எடுத்துத் தான் ஆக வேண்டும்…”

விதியை யாராலும் வெல்ல முடியாது என்கிறார்கள். விதி என்பது என்ன…? விதி என்பது வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பம் தான்…!

ஆண்டவனை நினைத்தால் விதியை வெல்லலாம். பாசம் பிடித்த இடத்தில் நடக்கும் பொழுது வழுக்கி விழுந்து விடுகின்றோம். அதே இடத்தில் ஆண்டவனை நினைத்து ஜாக்கிரதையாக நடக்கும் பொழுது விழாமல் நடக்கின்றோம்.

விழுந்து விட்டால் விதி என்றும் விழாமல் நடந்தால் ஆண்டவன் செயல் என்றும் சொல்கிறோம். அது மாதிரித் தான் நம் வாழ்க்கையிலும் வழுக்கலும் இருக்கலாம் சம தரையும் இருக்கலாம்

1.கஷ்டம் வரும்போது… அந்தக் கஷ்டத்தை நாம் எப்படி வெல்லுகிறோமோ
2.கஷ்டம் வரும் போது கடவுளை நிந்திக்காமலும் மனம் தளராமலும் வெல்லுகிறவன் தான் வாழ்க்கையின் பலனைப் பெறுகின்றான்

கஷ்டம் வரும்போது எல்லாம் தாண்டி வந்துவிட்டு… இப்போது சிறிய இடையூறுக்கு ஏனப்பா உனக்கு இவ்வளவு கலக்கம்…!

அன்பு பண்பு பரிவு கொண்டு வாழ்ந்தாலும்… அந்த நல்ல குணங்களைக் காக்கும் சக்தியை நாம் அடிக்கடி எடுக்க வேண்டும்

அன்பு பண்பு பரிவு கொண்டு வாழ்ந்தாலும்… அந்த நல்ல குணங்களைக் காக்கும் சக்தியை நாம் அடிக்கடி எடுக்க வேண்டும்

 

மனிதனாக பின் அன்பும் பண்பும் கொண்டு பாசத்துடன் நாம் வாழ்ந்தாலும் பிறர்படும் துயரத்தையும் அந்தத் துயரச் செயல்களைச் செயல்படுத்துவோரைப் பார்ப்பதும் பிறரைத் துன்பப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவரையும் நாம் காண நேருகின்றது.

அவர்களை உற்றுப் பார்க்கும் பொழுது “பிறருக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றான்” என்ற இந்த உணர்வினை நாம் அறிந்தாலும்… அதை நுகர்ந்து எந்த நல்ல குணத்துடன் நாம் இணைந்து அவர்கள் செய்யும் தவறை உணர்கின்றோமோ… அவர் செய்யும் தவறான உணர்வுகள் இதற்குள் பட்டபின் என்ன நடக்கின்றது…?

சந்தர்ப்பத்தில் நாம் கீழே விழுந்து விட்டால் மேலே எழுந்திருக்க முடியாது ஒருவன் மேலே நம்மை அமுக்கிக் கொண்டிருப்பான் என்றால் எப்படி இருக்கும்…?

இதைப் போன்று நமக்குள் மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களில் ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்று அன்புடன் பண்புடன் பரிவுடன் பார்த்தோம் என்றால்… இந்த இரண்டு குணங்களுடன் நுகரப்படும் பொழுது…
1.அவன் தீமை செய்து கொண்டிருக்கின்றான் என்ற நிலை வந்தாலும்
2.நம் நல்ல அணுக்களில் இது பட்டபின் அவைகள் பலவீனம் அடைகின்றது.
3.ஒருவனைக் கீழே தள்ளிவிட்டு மேலே ஏறி உட்கார்ந்தால் எப்படித் துன்பமாக இருக்குமோ
4.அதைப்போல மனிதனை உருவாக்கிய இந்த அணுக்கள் அது வேதனையுடன் துடிக்கத் தொடங்கிவிடும்.
5.நாம் வேதனையுடன் துடிக்கப்படும் பொழுது எழுந்திருக்க வேண்டும் என்று எண்ணினால் கீழே தள்ளும் நிலை தான் வரும்.

மனித வாழ்க்கையில் பண்பும் பரிவும் கொண்டு உற்றுப் பார்க்கும் பொழுது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தீங்கு செய்கின்றான் என்றால் தீங்கு செய்பவனையும் பார்க்கின்றோம்… தீங்கினால் பாதிக்கப்பட்டுப் பதறி அழுபவனையும் பார்க்கின்றோம்.

இரண்டையும் கலந்து இந்த உணர்வுகள் வெளிப்படுவதை நாம் நுகர்ந்தறியும் பொழுது நம் நல்ல குணங்களுடன் இணைந்து விடுகின்றது.

அப்பொழுது நம் நல்ல குணங்கள் அடுத்து ஒரு தரம் செய்தாலும்…
1.நம்மை அறியாமலேயே “என்ன உலகம்…? எந்த நன்மையைச் செய்தாலும் இப்படி ஒரு உலகம் இருக்கின்றதே…!” என்று
2.அந்த உணர்வுகள் நல்லதைப் பேசாது தவறு செய்யும் உணர்வுகளையே நம்மைப் பேச வைத்து விடுகின்றது.

உதாரணமாக ஒரு இனிமையான பாடலை டேப்பில் பதிவு செய்து கொண்டிருக்கும் போது அதில் எதிர்மறையாக ஒலி பதிவாகிவிட்டால் நல்ல பாடலையும் அது இடைமறித்து அந்த இனிமையை மடக்கி விடுகின்றது.

இதைப் போன்று தான் நாம் நுகரும் சந்தர்ப்பத்தில்… நம் உயிர் ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… தீமை செய்பவனையும் அதிலே சிக்குண்டவரையும் இந்த இரண்டு உணர்வையும் நுகரப்படும் பொழுது… அவன் பதறுவதை இந்த வலுக் கொண்ட உணர்வாக உயிர் மாற்றிவிடுகின்றது.

அதே சமயத்தில் நல்ல குணங்களுடன் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்த நல்லவனுக்காக நம் எண்ணங்கள் பட்டாலும் அவன் பேசும் வேதனை உணர்வுகளை நல்ல அணுக்களில் பதிந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை…! உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களை… நல்ல உணர்வுகளை உருவாக்கும் அந்த அணுக்களைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது.

அவ்வாறு அது செயலிழக்காமல் இருக்க வேண்டுமென்றால்
1.உடனுக்குடன் ஆத்ம சுத்தி செய்து அதை மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
2.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுதல் என்ற நிலை கொண்டு
3.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி.. நாம் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.

வேதனைப்படவும் கூடாது… வேதனைப்படுவோரைக் கண்டு ரசிக்கவும் கூடாது

வேதனைப்படவும் கூடாது… வேதனைப்படுவோரைக் கண்டு ரசிக்கவும் கூடாது

 

அரசியலில் ஒன்றாகச் சேர்ந்திருந்தால் கூடிக் குலாவி மகிழ்வார்கள். ஆனால் கட்சி மாறிவிட்டால் “இவன் துரோகி…! நாட்டுக்கே ஆகாது…” என்று அவன் எவ்வளவு நண்பனாக இருந்து எவ்வளவு உதவி செய்திருந்தாலும் அரக்கத்தனமாகத் தாக்கி… வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்கள்.

மனிதனுடைய பண்புகள் எந்த அளவிற்கு இருக்கின்றது…? என்று பாருங்கள்.

அரசியலில் மதம் இனம் குலம் என்று மனிதருக்கு மனிதர் உதவி செய்து கொண்டிருந்தாலும்,,, சந்தர்ப்பத்தில் பேதங்கள் வந்துவிட்டால் செய்த நன்மைகளையும் மறக்கச் செய்து தவறுகள் செய்யும் உணர்ச்சிகளைத் தான் ஊட்டுகின்றது.

காரணம் மனிதனின் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ அதன் உணர்வுப்படி உயிர் இயக்குகின்றது. பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனாகப் பிறந்தோம்.

ஆனால்
1.மனிதனான பின் அசுர உணர்வுகள் தனக்குள் நுழைந்து விட்டால்
2.மீண்டும் நரகலோகத்திற்குச் செல்லும் அணுக்களாகத் தனக்குள் மாற்றுகின்றது என்று பொருள்.

இன்று இரக்கமற்று ஒருவரைப் பேசலாம் தொல்லைகளைக் கொடுக்கலாம் அது மட்டுமல்ல அவர்கள் வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்கவும் செய்யலாம்.

ஆனால் எதனை இப்படி நாம் உருவாக்கினோமோ இந்த உணர்வுகள்
1.அதை நுகர நுகர நுகர விஷத்தன்மை கொண்ட அணுக்களாக நமக்குள் விளையும்
2.பின் நோயாக விளையும் பொழுது அந்த உணர்வுகள் விஷத்தன்மை கொண்ட மனிதனல்லாத உருவை உருவாக்கும் நிலைகளுக்குச் சென்று விடும்.

அதிகமாக வேதனைப்படுவோரைப் பார்த்து “அவனுக்கு இப்படித்தான் வேண்டும்…” என்ற நிலைகளை நாம் எண்ணி ஏங்கி அந்த வேதனையை ரசித்தோம் என்றால் அடுத்து பாம்பினமாகத் தான் நாம் பிறப்போம்.

அந்த அணுக்களின் மாற்றங்களும்… அதன் உணர்வின் இயக்கங்கள் எப்படி மாறுபடுகின்றது…? இந்த உடல் எப்படி நலிகின்றது…? மனிதனின் உணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகின்றது…? என்பதனை நமது குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

1.அவன் செய்ததற்குத் தண்டனை கிடைக்கின்றது…
2/அவன் அனுபவிக்கின்றான்… என்ற எண்ணமே நமக்கு வரக்கூடாது.

அப்போது நாம் எதை எண்ண வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவனுக்குள் நல்ல உணர்வு தோன்ற வேண்டும்… அறியாத நிலையிலிருந்து அவன் விடுபட வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதற்குப் பதிலாக… அதிகமாக நம்மைத் தாக்கிப் பேசுகிறான்…! ஆகையினால் அவனுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வைத் தோற்றுவித்து விட்டால்… நம்மால் தாங்க முடியவில்லை என்றால் நமக்குள் கோபமும் கொதித்தெழும் தன்மையும் அவனை அழித்திட வேண்டும் என்ற உணர்வே தூண்டும்.

அந்த உணர்வு தூண்டப்படும் பொழுது
1.தவறு செய்தது அவர்கள்
2.நுகர்ந்தறிந்தது நாம்
3.உயிர் அறியச் செய்கின்றது… அந்த அணுவாக மாற்றி விடுகின்றது
4.அவன் எந்தத் தவறைச் செய்தானோ அதிலிருந்து உருவான அணு நம் உடலில் ஒட்டி வினையாக அது இயங்கத் தொடங்கி விடுகின்றது.

ஆனால்… நாம் தவறு செய்யவில்லை.

“அவன் கெட வேண்டும்” என்று நாம் தொல்லைகள் கொடுத்தோம் என்றால் அதே உணர்வை நுகரப்படும் பொழுது அதே உணர்வின் அணுக்களாக உடலுக்குள் உருவாகி… அவன் செயல் நம் உடலில் உருவான உணர்வின் தன்மை கொண்டு அந்த அணுக்கள் தன் இரைக்காக உணவுக்காக ஏங்கும் பொழுது… அந்த உணர்வின் செயலாக உடலை இயக்கி விடுகின்றது.

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே ஒருவர் கடுமையாக நம்மை ஏசுகிறார் என்றால் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இதை எடுத்து அந்தத் தீமை விளையாதபடி அந்த மகரிஷியின் உணர்வுகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும்.

அப்பொழுது
1.அவர் சொல்லும் உணர்வையும் இதையும் இணைத்து நாம் நுகரப்படும் பொழுது
2.அவர் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வராது தடுக்கும்.
3.அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் கூடும்.
4.இதனை எடுத்து அவன் அறியாத இருளில் இருந்து நீங்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதற்கு மேலும் அவர் உணர்வு “நம் மீது தாக்கி… நாம் தாங்க முடியாத நிலை இருந்தால்…” அவன் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றானோ அவனுக்குள் அதுவே விளைந்து அவன் உணரட்டும்…! என்று
1.எனக்கு வேண்டாம்…
2.நீயே அனுபவித்து உன்னுடைய உணர்வுகளை அறிந்து… அதன் வழியாக நீ அதை அனுபவித்துப் பார் என்று மட்டும் சொல்லி விடுங்கள்.

அதாவது… எவர் ஒருவர் நீங்கள் கெட வேண்டும் என்ற உணர்வை எண்ணி அதிகமாகத் தூஷிக்கின்றனரோ… அந்தக் காலங்களில் நீங்கள் ஒன்றுமே சொல்ல வேண்டாம்

அதுவே அவருக்குள் விளைந்து அவரே அனுபவித்துத் தெரிந்து கொள்ளட்டும்…! என்ற நிலையைச் சொன்னால் போதும். அது நம்மைப் பாதிக்காது.

நாம் எல்லோரும் நல்லவரே…!

நாம் எல்லோரும் நல்லவரே…!

 

பத்திரிக்கை வாயிலாக இன்று நாம் படிக்கப்படும் போது எங்கெங்கோ நடந்து கொண்டிருக்கும் அதிர்ச்சியான செய்திகளைப் படிக்க நேருகின்றது.

அதில் எண்ணத்தைக் கூர்ந்து செலுத்தி விட்டால்… எங்கேயோ விபத்தானதைப் படித்தறியப்படும் பொழுது அந்த உணர்வு நமக்குள் சேர்த்து… உடனே அதிர்ச்சி… அல்லது பயம்… அல்லது வேதனை… இது போன்ற உணர்வுகள் நமக்குள் விளைந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. உலகத்தை அறிந்து கொள்ள நாம் படித்தாலும் இந்த உணர்வுகள் நமக்குள் இயங்கி விடுகின்றது.

எதை நாம் படித்துத் தெரிந்து கொண்டோமோ அந்தச் செய்திகள் ஊழ்வினையாகப் (வித்துக்களாக) பதிவாகின்றது. அவ்வாறு படித்து நுகர்ந்து
1.எத்தனையோ பேர் வெளியிட்ட உணர்வலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நமக்கு முன் சுழன்று கொண்டே இருக்கின்றது.
2.அதை மீண்டும் எண்ணும் பொழுது நமக்குள் பதிவான அதே நிலைகள் அலைகளாக மீண்டும் குவித்து நம்மை உணரச் செய்கின்றது
3.சாதாரண ஆண்டென்னாவின் இயக்கம் போல (அருகிலிருப்பதை இழுத்து) அந்தந்த உணர்ச்சிகளாக இயக்கி நம்மைச் செயல்படுத்தி விடுகின்றது.
4.ஆக… எந்த வேதனையைப் பட்டோமோ அந்த வேதனைகளை விளைவிக்கும் தன்மையாக வந்து விடுகிறது.

ஆக… உலகை அறிந்து கொள்ள நாம் பத்திரிக்கையைப் படித்த்தாலும் நடந்த சம்பவங்களை அறிந்து நுகரப்படும் பொழுது தீய விளைவுகளாக நமக்குள் வந்து நோயாக உருவாகி விடுகின்றது.

தவறான செயல்கள் எதை எல்லாம் செய்தார்களோ… “அங்கே அடித்தான் இங்கே திருடினான் இங்கே கொலை செய்தான்…” என்று
1.தன்னைக் காத்திட இத்தகைய செயலைச் செய்தார்கள் என்று உணர்வின் நினைவலைகள் நமக்குள் பதிவான பின்
2.அதையே திரும்பத் திரும்பப் படிக்க நமக்குள் அதுவே விளைந்து
3.எந்தத் தவறைச் செய்யக்கூடாது என்று நினைக்கின்றோமோ அதை நம்மையும் செய்யும்படி வைத்து விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்கு அந்த மகா ஞானிகளின் உணர்வுகளை எடுத்து அதைத் துடைக்க வேண்டும் அல்லது தடுத்து நிறுத்த வேண்டும்.

குருநாதர் எனக்கு எவ்வளவு பெரிய சக்தியை உணர்த்தினாரோ அதனின் உணர்வின் ஆற்றலை நான் பருகி அவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அந்த உணர்வுகள் ஊழ்வினையாக எனக்குள் (ஞானகுரு) பதிவானது.

அவரை நினைவு கொள்ளும் பொழுதெல்லாம்… அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியை நுகர்ந்து அந்த உணர்வை எனக்குள் பெருக்கிக் கொள்ள முடிந்தது.

நீங்கள் துயரத்துடன் எம்மிடம் வரும் போது “உங்கள் துன்பம் நீங்கிப் போகும்…” என்று சொல்லால் சொல்வதை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து அதை மீண்டும் நீங்கள் நினைவு கூர்வீர்கள் என்றால் அந்தத் துன்பங்கள் நீங்கி மெய் ஞானிகளுடைய உணர்வு உங்களுக்குள் விளையத் தொடங்குகிறது.

ஒவ்வொரு நிமிடத்திலும் துன்புறும் உணர்வுகளை குருநாதர் எனக்குள் பாய்ச்சி அந்தத் துன்பப்படுத்தும் உணர்வுகளை நீக்குவதற்காக “விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருக வேண்டும்…?” என்று உபதேசித்து அதனின் அனுபவபூர்வமான செயல்களை ஊட்டினார்.

அதனின் பக்குவம் கொண்டு நான் எடுத்துக் கொண்ட நிலையில் தான் 20 வருட காலம் அனுபவ ரீதியாக உலகைச் சுற்றி வந்தேன்.
1.மூன்று லட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அவருடைய உணர்வுகளை அது எவ்வாறு இயங்குகின்றது…? என்றும்
2.எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்கள் எதன் வழி எப்படி அவதிப்படுகிறார்கள்…? என்ற நிலையினை உணரும்படி செய்தார்.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவால் விஞ்ஞானிகள் எப்படி பிறரை (ஆன்மாக்களை) நஞ்சு கொண்ட நிலைகள் கொண்டு இயக்குகின்றார்கள்…? அந்த ஆன்மாக்கள் எப்படிப் பதை பதைக்கின்றது…!

எதை அழித்திடும் உணர்வாகச் செலுத்தி விஞ்ஞானத்தைக் கண்டு கொண்டானோ அதனால் பாதிக்கப்பட்ட ஆன்மாக்கள் (விஞ்ஞான அறிவு கொண்டு செயல்பட்ட உயிரான்மாக்கள்) இறந்து… அதன் வழியில் விஞ்ஞான அறிவில் இவன் முன்னேறினாலும்
1.துன்புறுத்தப்பட்டு இறந்தவர்கள்… நஞ்சு கொண்ட ஆன்மாக்களாக எவ்வாறு உலகில் படர்ந்து கொண்டிருக்கிறது…? என்பதை
2.அனுபவ ரீதியிலே தெரிந்து கொள்வதற்காக குருநாதர் உலகம் முழுவதும் சுற்றும்படி சொன்னார்.

அதிலே பெற்ற அனுபவங்களைத் தான் உங்களுக்கு இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகின்றேன். இதை நீங்களும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

பிறரை வேதனைப்படுத்தி வாழ்ந்தால் அவர்கள் இடும் சாபம்… “நம்மையும் சந்ததியினரையும் தாக்கத் தான் செய்யும்”

பிறரை வேதனைப்படுத்தி வாழ்ந்தால் அவர்கள் இடும் சாபம்… “நம்மையும் சந்ததியினரையும் தாக்கத் தான் செய்யும்”

 

தீமை என்ற நிலையில் ஒருவன் பேசி விட்டால் அது வாலி என்ற நிலையை அடைகின்றது.
1.அந்தத் தீமையான சொல்லை ஒருவன் கேட்டால் அது அவன் நல்ல குணங்களை வீழ்த்தி விடுகின்றது.
2.திருப்பி அவருடைய எண்ணங்களும் வாலியாகின்றது.

இத்தகைய போர் முறை வரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் சுவைமிக்க உணர்வுகளைச் செயல்படுத்தும் அந்த நல்ல உணர்வுகள் மடிந்து விடுகின்றது.

அதனால் தான் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான்…! என்று காவியத்திலே காட்டினார்கள்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் இன்று உலகில் வரும் தீமைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும். ஏனென்றால் குறுகிய காலமே வாழும் நாம் உடலின் இச்சைக்கு அடிமையானால்… கடும் நஞ்சு கொண்ட உணர்வின் தன்மையாக நமக்குள் விளைந்து விடுகின்றது.

உடலின் இச்சைக்கு வாழப்படும் பொழுது வேதனைப்படுத்தி மற்றொன்றைத் துன்புறுத்தி அதில் மகிழ்ந்து இந்த உடலில் வாழலாம்.
1.அடுத்த கணம் இந்த நஞ்சின் தன்மையை கொண்டு பிறருடன் தொடர்பு கொள்ளப்படும் பொழுது
2.அவன் இடும் சாப அலைகளிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம்…!

இன்று இவர்கள் இவ்வாறு செய்யலாம் ஆனால் அவன் குடும்பத்தில் கருவில் விளையும் சிசுவிற்கு
1.சாபமிட்ட அலைகளைக் கர்ப்பிணியாக இருக்கும் அந்த தாய் நுகர நேர்ந்தால்
2.அந்தச் சிசுவிற்குள் இந்த உணர்வுகள் விளைந்து
3.இவனால் பட்ட வேதனைகள் அந்த ஒன்றுமறியாத குழந்தையும் நரக வேதனைப்படும் தன்மை வருகின்றது.

இவன் செல்வத்தைச் சம்பாதித்தாலும் அந்த குழந்தை அதை பெறுவதற்கு இல்லை. ஆனால் தட்டிப் பறித்துச் சென்றுவிடும் இவன் அதை அனுபவிக்கப் போவதில்லை.

குழந்தைக்காகத் தான் பணத்தைச் சேமிக்கிறேன் என்று சொன்னாலும்
1.அவனிட்ட சாப அலைகளால் இவனும் வாழ முடிவதில்லை
2.அவன் குழந்தையையும் வாழ முடியாத நிலைகள் செய்து விடுகின்றது.

இப்படி ஒவ்வொரு மனிதனும் ஆசையின் எல்லை கொண்டு தன் நிலைகளிலே விஷம் கொண்ட உணர்வுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலை தான் இன்று உள்ளது.

அன்று ஆண்ட ஒவ்வொரு அரசனும் தான் வாழ… மதம் இனம் என்ற நிலைகளைத் தூண்டிவிட்டு அதிலே நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் மதத்திற்குள் மதம் மதத்திற்குள் இனம் இனத்திற்குள் இனம் என்ற நிலையில் நஞ்சின் தன்மையாகப் பாயச் செய்து விட்டார்கள்.

வழி வழியாக வந்த நிலைகளில் இன்று எது உண்மை…? எது பொய்…? நாம் எப்படி வாழ வேண்டும்…? என்ற சிந்தனையற்ற நிலையாக… சிதைந்த நிலையில் தான் இன்று அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இதிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

இந்த மனித உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்றால் அருள்
1.யாம் உபதேசிக்கும் மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்.
2.அடிக்கடி அதை நினைவுக்குக் கொண்டு வந்து உங்கள் உடலுக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

தூல சரீரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்… சூட்சம சரீரத்தை எண்ணுவதில்லை

தூல சரீரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்… சூட்சம சரீரத்தை எண்ணுவதில்லை

 

எண்ணத்திலும்… செயலிலும்… வார்த்தையிலும்… “உயர்வு தாழ்வு” என்ற எண்ணம் தான் மனிதர்களின் மனதிலே ஊன்றியுள்ளது.

உயர்வு எனும் பொழுது நம் உடலுக்கு… நம் உயிருக்கு.. அவ்வழியாகச் செல்வம் என்ற உயர்ந்த நிலை நாம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!

1.உடல் வாழ்க்கையில் இந்த உலகிலே சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம்.
2.அழியாச் செல்வத்தை நாம் எண்ணுவதில்லை.
3.தூல சரீரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்… சூட்சம சரீரத்தை எண்ணுவதில்லை.

மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்திடுகிறார்கள்.

1.வாழும் நாள் எல்லாம்…
2.மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்து விட்டால்
3.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
4.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.

தீய எண்ணத்தை வளரவிட்டு அந்நிலையையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது.

அந்நிலையில் நம் உயிர் அணுவிற்குப் பெரும் சோர்வைத்தான் நாம் அளிக்கின்றோம். இந்நிலையையே வளர விட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு இன்னும் பல தீய அணுக்களைத்தான் நாம் மேலும் மேலும் பெறுகின்றோம்.

இந்நிலை எல்லாம் அறிந்து நம் உயிரணுவிற்கு நாம் பெறும் அழியாச் செல்வமான “ஆத்ம ஜோதி” என்ற நிலையைப் பெறத்தான் இந்த ஜெப நிலையிலிருந்து “ஈஸ்வர தியானங்கள் பெற்று” அந்நிலையில் நமக்குக் கிடைக்கும் பல அரிய பொக்கிஷங்களை நம் உயிரணுவிற்குச் சேமித்து வைத்திடல் வேண்டும்.

இந்த உடலில் உள்ள பொழுதே மனிதனாகப் பிறந்த இந்தப் பாக்கியத்தை
1.ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற…
2.நம் ஆத்மாவிற்கு அழியா நிலை பெற…
3.நம் எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே என்றும் நாம் சுவாச நிலையில் எடுத்துக் கொண்டால்
5.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது,

நல்லதுக்காக ஏங்கினாலும்… எந்தக் காரணத்தைக் கொண்டும் “வேதனையை வளர்த்து விடக்கூடாது…”

நல்லதுக்காக ஏங்கினாலும்… எந்தக் காரணத்தைக் கொண்டும் “வேதனையை வளர்த்து விடக்கூடாது…”

 

மனிதனான பின் மனிதனின் வாழ்க்கையில் நல்லது செய்யும் போதும் அறியாது எத்தனையோ சிக்கல்கள் வருகிறது…! எப்படி…?

உயர்ந்த குணங்கள் கொண்டோர் பிறருக்குப் பண்பு கொண்டும் பரிவு கொண்டும் உபகாரம் செய்தால் அதன் விளைவாக எதிர் நிலையான உணர்வுகளைச் சந்திக்க நேர்கிறது.

அப்போது… பண்பு கொண்ட அந்த மனிதனுக்குள் விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது இவனையும் வேதனைப்படச் செய்து… நரகலோகத்திற்கே அவனை அழைத்துச் சென்று விடுகின்றது.

1.நல்ல பண்புகளை அவன் எண்ணி ஏங்குகின்றான்…
2.நான் நல்லதைத் தான் செய்தேன்… எனக்கு இப்படி வந்து விட்டதே…! என்று ஏங்கி அந்த விஷத்தை வளர்த்துக் கொள்ளும் நிலையில்
3.விஷ அணுக்களை உருவாக்கிக் கொண்டு அந்த வேதனை கொண்டு அவன் மடிகின்றான்.

மடியும் பொழுது எதன் மேல்… யார் மேல் வேதனையாக எண்ணி அவன் வெளி வந்தானோ அந்த உணர்வின் நினைவாற்றல் வந்தபின் அந்த உடலுக்குள் புகுந்து
1.அங்கேயும் இந்த விஷத்தைப் பாய்ச்சி அவனையும் வீழ்த்தி விட்டு
2.விஷமான அணுக்களைப் பெருக்கி முழுமை அடைந்து வெளிவந்த பின்
3.விஷப் பூச்சிகளாக விஷப் புழுக்களாக பாம்பினங்களாக உருமாற்றி விடுகின்றது உயிர்.

எத்தனையோ கோடிச் சரீரங்களில் ஒன்றுக்கு இரையாகி… அதிலிருந்து மீண்டிடும் உணர்வை எடுத்துப் பரிணாம வளர்ச்சி அடைந்து… எல்லாவற்றையும் அடக்கிடும் நிலை பெற்றவன் தான் மனிதன்.

ஆகவே… வரும் தீமைகளிலிருந்து மனிதன் எவ்வாறு மீள வேண்டும்…? என்பதனை நான் (ஞானகுரு) அறிய… இரவும் பகலும் ஒவ்வொரு நொடியிலும் காடு மேடுகளில் எம்மை அலையச் செய்தார் குருநாதர்.

அனுபவ வாயிலாகப் பேருண்மைகளை அறியச் செய்து தீமையிலிருந்து உன்னை மீட்டுக் கொள்ளும் நிலையாக நீ எதைத் தேர்ந்தெடுக்கின்றாய்…? அதை நீ எவ்வழியில் பெற வேண்டும்…?

தீமைகளை நீ செய்யவில்லை என்றாலும் தீமை செய்வோனை நீ உற்று நோக்கினால் அந்த உணர்வினை நீ நுகரப்படும் பொழுது… அதை அறியும் தன்மை வந்தாலும்…
1.ஓம் நமச்சிவாய என்று உன் உயிர் உனக்குள் அதை ஜீவ அணுவாக… உடலாக உருவாக்கி விடுகின்றதே…!
2.மீண்டும்… சிவாய நம ஓம் அவன் இப்படித் தவறு செய்கின்றான்…! என்று நீ திரும்பச் சொல்கின்றாய்.

ஆகவே இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி பெற அந்த அணுக்களும் உனக்குள் பெருகுகின்றது. மனித இனம் என்ற நிலைகளையே மாற்றி உனக்குள் உணர்வுகள் மாறுகின்றது… உருவங்கள் மாறுகின்றது மனிதன் மீண்டும் தேய்பிறையாகத் தான் போக முடிகின்றது.

1.இதிலிருந்து தேய்பிறை ஆகாது உன்னை நீ எவ்வாறு காத்திட வேண்டும்…?
2.எவ்வழியில் உன்னை நீ வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்பதனை
3.பல அனுபவங்களைக் கொடுத்து உண்மைகளை உணரும்படி செய்தார் குருநாதர்.

அதைத்தான் உங்களுக்கும் சிறுகச் சிறுக சொல்லி வருகின்றோம்.

எனக்கு குருநாதர் தொட்டுக் காட்டியது போன்று உங்கள் உணர்வுகளுக்குள்ளும் ஞானிகளின் உணர்வுகளைத் தொட்டு காட்டி அதை இணைத்து… அதன் மூலம் அவர்கள் பெற்ற அரும்பெரும் சக்திகளை நீங்களும் பெறும் தகுதியாக “இதைப் பதிவு செய்கின்றோம்…”

குரு வழியில் நீங்கள் இதைப் பதிவாக்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்த நன்மை… அது உங்களுக்குள் என்றுமே நிலைத்திருக்கும் நிலையாக
1.அந்த அருள் ஞானிகள் உணர்வு கொண்டு
2.உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றோம்.

உங்கள் வேதனையைத் தூக்கி எறிந்து விட்டு எமது அருள் வாக்கினை எடுத்துக் கொள்ளுங்கள்

உங்கள் வேதனையைத் தூக்கி எறிந்து விட்டு எமது அருள் வாக்கினை எடுத்துக் கொள்ளுங்கள்

 

மனித வாழ்க்கையில் ஒருவருக்குக் கடுமையான வேதனை என்று வந்து விட்டாலே “வேதனை… வேதனை… வேதனை…” என்று சொன்னால் தான் அடுத்து அவர்களுக்கு அது மகிழ்ச்சியாக இருக்கும்.

என்னை இப்படிச் செய்கின்றார்கள்… அடிக்கடி எனக்குத் தொல்லை செய்கின்றார்கள்… என் உடல் எல்லாம் வலிக்கின்றது… எரிச்சல் ஆகின்றது… வேதனையாக இருக்கின்றது… என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு (அதைச் சொல்லச் சொல்ல) மகிழ்ச்சியாகும்.

உதாரணமாக உடலிலே வலி ஏற்பட்டால்
1.அம்மம்மம்மா…! என்று வேதனையை இணைத்துக் கொடுத்தால் அந்த வலி கொஞ்சம் குறையும்…
2.ஆனால் மகிழ்ச்சியாகப் பேசினால் அதே ஏற்காது மீண்டும் வலி அதிகமாகும்.
3.வேதனைக்குத் தகுந்த உணர்வைக் கூட்டும் பொழுது தான் இந்த உணர்வின் சத்து அதற்குள் ஒடுங்கும்

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் ஒரு தரம் பட்ட வேதனையை அடிக்கடி அந்த வேதனையை ரசித்து “அம்மம்மா… ஐய்யய்யோ…” என்று இதையே சொல்லி வரும் பொழுது… நல்லதை யாராவது சொன்னாலும் அவரால் ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லாது போய் விடுகின்றது.

பாலுக்குள் பாதாமைப் போட்டாலும் அதில் நஞ்சு கலந்து விட்டால் அந்தப் பால் முழுவதுமே நஞ்சாகத்தான் மாறும்.

இதைப் போன்று தான் எம்மிடம் (ஞானகுரு) வருபவர்களுக்கு அருள் வாக்குகளைக் கொடுத்து
1.தீமையிலிருந்து விடுபடுவீர்கள் நல்ல நிலை அடைவீர்கள் என்று நான் சொன்னாலும்
2.எங்கெங்கே என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது
2.என் உடல் வலி குறையவே மாட்டேன் என்கிறது… பத்து வருடமாக இருக்கின்றது
3.குடும்பத்தில் தொல்லைகள் போக மாட்டேன் என்கிறது…. விவசாயமே ஒன்றுமில்லை…! என்று இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

பாலில் நஞ்சு பட்ட பின் அதற்குள் பாதாமைப் போட்டாலும் அதையும் நஞ்சாக மாற்றுவது போன்று இந்த உணர்வின் தன்மை நஞ்சாக மாற்றி
1.யாம் சொல்வதை எது என்று கூர்ந்து கவனிக்க முடியாது
2.நல்ல உணர்வுகளை தனக்குள் பதிவு செய்ய முடியாத நிலைகள் ஆகி விடுகின்றது.

அது போன்ற நிலைகளை மீட்டுவதற்குத் தான் கூட்டுத் தியானங்களாக உங்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கின்றோம். அதிலே அனைவருடைய ஒத்துழைப்பு கொண்டு அனைவருடைய எண்ணங்களையும் ஒருங்கிணைத்து
1.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கச் செய்து அதைப் பெருக்கச் செய்து
2.எல்லோருக்கும் அந்தச் சக்தியைக் கிடைக்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் அந்த எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது கூடி இருக்கும் அனைவருக்கும்
1.அந்த (மகரிஷிகளின்) உணர்வின் சத்து செவிப் புலன்களில் தாக்கப்பட்டு
2.அந்த உணர்வின் உந்து விசையால் அந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பெரும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

யாம் உபதேசிப்பதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கிக் கொண்டால் அடுத்து நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.

இதை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் நான் உதவி செய்தேன் என்று சொன்னாலும்… அதிலே பலன் அடைகிறோமா…?

எல்லோருக்கும் நான் உதவி செய்தேன் என்று சொன்னாலும்… அதிலே பலன் அடைகிறோமா…?

 

உதாரணமாக நாம் எண்ணிய காரியம் நடக்கவில்லை என்ற காரணத்தால் கோபத்தால் கொதிப்பும்… வேதனை என்ற உணர்வும் எடுத்துக் கொண்டால் அதை நாம் சுவாசிக்கப்படும் பொழுது “உயிரிலே பட்டு” அது கொதித்தெழும் உணர்வாக உடல் முழுவதும் படரச் செய்கின்றது.

ஆனால் உடலை இயக்கப்படும் பொழுது
1.கொதித்தெழும் உணர்வுகளையே அதிகமாக சுவாசிக்கச் செய்து இந்த உணர்வின் சத்தினை உமிழ் நீராக வடித்து விடுகின்றது.
2.ஆகாரத்துடன் இது கலந்து கை கால் குடைச்சல் சோர்வு போன்ற நிலைகள் வந்து விடுகின்றது

கோபம் என்பது கார உணர்ச்சிகள்… வேதனை என்பது விஷத்தின் தன்மை கொண்டது. இது இரண்டறக் கலந்து ஆகாரத்துடன் கலக்கப்படும் பொழுது நமது உடல் அதை இரத்தமாக மாற்றுகிறது.

உதாரணமாக ஒரு இன்ஜினில் ஒரு பக்கம் பெட்ரோலை ஊற்றினால் அதிலிருக்கும் பிஸ்டன் அந்தப் பெட்ரோலை உறிஞ்சி ஆற்றலாக மாற்றி… அந்த இயந்திரத்தினைச் சுழலச் செய்து இயக்கச் செய்கின்றது.

இதே போன்றுதான் நாம் உணவாக எடுத்துக் கொள்வது வயிற்றுக்குள் சென்ற பின் கொதிகலனாகி ஆவியாக மாற்றி அதில் வருவதை இரத்தமாக மாற்றுகின்றது.

இஞ்சினில் உள்ள பிஸ்டன் பெட்ரோலை எப்படி இழுக்கின்றதோ அதே போன்று நாம் இருதய வால்வுகள் இரத்தத்தை இழுத்து… பின் சுத்திகரிக்கும் சிறுநீரகங்களுக்கு அனுப்புகின்றது.

ஆனால்
1.இரத்தத்தை இந்தப் பிஸ்டன் அதாவது இருதய வால்வு இழுக்கப்படும் போது…
2.அந்த வேதனையும் கொதிப்படைந்த உணர்வுகளும் இரத்தத்தின் வழியாகச் சென்று தாக்கப்படும் பொழுது
3.அந்த வால்வுகள் வீக்கம் அடைய ஆரம்பித்து விடுகின்றது.
4.அவ்வாறு வீக்கம் அடைந்து விட்டால் இருதயம் இயக்கப்படும் பொழுது எரிச்சலும் வலியும் ஏற்படுகின்றது
5.அதாவது அப்போது நெஞ்சு வலி ஏற்படுகின்றது என்று சொல்லலாம்.

உடல் முழுவதும் பரவும் பொழுது உடலிலும் எரிச்சல் ஒரு விதமான கொதிப்பு… மனதிலும் கொதிப்பு… அடுத்து நாம் செம்மையாக எந்த வேலையும் செய்ய முடியாத நிலை உருவாகி விடுகிறது.

நல்லதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாசத்தால் எடுத்துக் கொண்டாலும் உடலுக்குள் இத்தனை வேதனைகளை உருவாக்கிவிடுகிறது. எ
1.எவ்வளவு அழகான உடலாக இருப்பினும் அதை நலியச் செய்துவிடுகிறது. நம் எண்ணங்களையும் நலிவடையச் செய்து விடுகின்றது.
2.அடுத்து நம் சொல்லைக் கேட்பவர்களையும் நம் மீது வெறுப்படைய வைத்து விடுகின்றது.

இப்படித்தான் பாசத்தால் பண்பால் பரிவால் நம்மை அறியாமலேயே சில தீமைகள் உள் புகுந்து விடுகின்றது.

குடும்பத்திற்குள் சிறிது குறை காணும் போது வேதனைப்படுகின்றோம். வெளியிலே பழகுபவர்களிடம் பண்பாக நடந்து கொண்டாலும் நாம் எதிர்பார்த்த நிலைக்கு வரவில்லை என்றால் அங்கேயும் வேதனைப்படுகின்றோம்.

காரணம்… அவர்களுக்கு நாம் உயர்ந்த நிலைகள் கொண்டு உதவி செய்திருப்பினும்… சந்தர்ப்ப பேதத்தால் அவர்கள் நினைவில் அது வராதபடி சிறு குறைகள் செய்து விட்டால்
1.தக்க சமயத்தில் நாம் அவர்களுக்குச் செய்த உதவியை மறந்துவிட்டு
2.எனக்கு இப்படித் தீங்கு செய்கின்றார்களே…! என்று வேதனைப்படுகின்றோம்.

ஆக… நன்மைகள் பல செய்திருப்பினும் நம்மை அறியாமலே தீமைகள் நுழைந்து நம் நல்ல குணங்களை நல்ல உடலை நல்ல மனதைச் செயலற்றதாக ஆக்கி நோயாக மாற்றி விடுகின்றது.

பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்து எத்தனையோ தீமையிலிருந்து விடுபட்டு மீண்டு வந்த நிலையில் இன்று சகலத்தையும் அறியக்கூடிய சக்தி பெற்றிருக்கின்றோம்.

ஆனாலும்… பாசத்தால் பண்பால் பரிவால் நல்லதைச் செய்யும் போது நம்மை அறியாது வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளும் ஊடுருவி நமக்குள் வந்து விடுகின்றது.

பௌர்ணமிக்குப் பின் நிலா சிறுகச் சிறுக தேய்ந்து மறைவது போல் நம் நல்ல குணங்கள் மறையத் தொடங்கி விடுகிறது.

அதை மாற்ற வேண்டுமா இல்லையா…?