“எனக்கு எதிலேயும் இறப்பு இல்லை…!” என்று இரண்யன் சொல்வதன் உட்பொருள் என்ன…?

“எனக்கு எதிலேயும் இறப்பு இல்லை…!” என்று இரண்யன் சொல்வதன் உட்பொருள் என்ன…?

 

இரண்யன் சாகா வரம் பெற்றவன். ஈரேழு 14 லோகத்திலும் எதிலும் எனக்கு இறப்பு இல்லை என்று நாராயணனிடம் வரம் வாங்கிக் கொண்டான். நாராயணன் என்பது சூரியன்.

1.வெப்பமும் காந்தமும் கலந்து விஷத்தின் தன்மை அதனுடன் கவர்ந்து வரப்படும் பொழுது ஒரு அணுவை இயக்கும் சக்தி கொண்டு செயல்படுகின்றது.
2.விஷத்தின் துடிப்பு இல்லை என்றால் “எதனையுமே இயக்க முடியாது”
3.விஷத்தின் துடிப்பு அதிகமாக இருப்பதினால் தான் சூரியனின் சுழற்சியின் வேகமும் அதிகமாகின்றது.

சூரியனின் சுழற்சி வேகம் அதிகமாகி அதிலே உருவான நஞ்சினைப் பிரித்துத் தள்ளினாலும் வெப்பமும் காந்தமும் என்று அணுக்களை உருவாக்கி காந்த புயலாக வெளிக் கக்கினாலும்
1.காந்தப் புயலாக வருவது அந்த விஷத்தினைக் கவர்ந்து வரப்படும் பொழுது அது இறப்பதில்லை.
2.ஆனால் அது இறந்து விட்டால் எதுவுமே இயக்கமில்லை
3.ஆகவே “நான் இல்லாது எதுவுமே இயங்காது” என்று பிரகலாதன் கதையிலே அவ்வாறு காட்டுகின்றார்கள்.

உலக சிருஷ்டிக்கு நான் தான் மூல காரணம் என்று இரண்யன் சொல்கின்றான். சூரியனோ இந்த உலக அனைத்தையும் ரட்சிக்கிறேன் என்று இயக்குகிறது.
1.இரு பிரிவுகளையும் அதாவது விஷத்திற்கும்… ஒன்று சேர்த்து இயக்கக்கூடிய நிலைகளுக்கும்… நாம் கண்டுணர
.இத்தகைய நிலைகளைத் தெளிவாகக் காவியங்களாகப் படைத்துக் கொடுத்துள்ளார்கள்.

இரண்யன் தன் மகனான பிரகலாதனிடம் என் பெயரைத் தான் நீ சொல்ல வேண்டும் என்று கேட்கின்றான். பிரகலாதன் என்றால் இந்த இரு உணர்வும் சேர்த்து உருவான நிலைகள் தான்.

ஒரு ஜீவ அணு உண்டாக வேண்டும் என்றால் இந்த விஷத்தின் துடிப்பு கொண்டு தான் இயங்குகிறது என்றும் அதே சமயத்தில் சூரியனுடைய நிலைகள் வெப்பமும் காந்தமும் மற்றொன்றைக் கவர்ந்து உலகை இரட்சிக்கும் நிலையாக மற்றதை உருவாக்கும் நிலை என்று இதனின் செயல்களை நாம் கண்டுணரக் காவியங்களாகத் தீட்டினார்கள் ஞானிகள்.

சாதாரண பாமர மகனும் அறிந்திடும் நிலையாக… இந்த உலக இயற்கையின் சிருஷ்டியும் அணுவின் இயக்கமும் என்ற தலைப்பில் காவியமாகப் படைத்துச் சூரியனை நாராயணனாக மையமாக வைத்து… அதனின்று வெளிப்படும் உணர்வின் அலைகளைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் மகரிஷிகள்.

இதைப் போன்று அது அது நஞ்சைக் கடந்து வந்தாலும் உலகிலே எனக்கு இறப்பு இல்லை என்று வரம் வாங்கிக் கொண்டான் இரண்யன்.

பாலுக்குள் விஷம் பட்டால் அந்தச் சத்தை அது தனக்குள் அடிமை ஆக்கிக் கொள்கிறது. ஒரு வெப்ப காந்தம் ரோஜாப் பூவின் மணத்தைக் கவர்ந்து கொண்டால் விஷத்தின் துடிப்பால் அந்த மணத்தை வீரிய உணர்வாக (மணம்) உண்டாக்கும்.

அதே சமயத்தில் ஒரு காரமான உணர்வை வெப்ப காந்தம் எடுத்துக் கொண்டால் விஷத்தின் தன்மை அதனுடைய வேகத்துடிப்பாக இயக்கிக் காட்டும். ஆகவே
1.இயக்கத்திற்கு மூலமாக இருப்பது
2.இந்த நஞ்சின் தன்மை தான்…!

ஆதியிலே அணுவின் தன்மை உருவாவதற்கு… ஆவியாகப் படர்ந்துள்ள நிலையில் விஷத்தின் தாக்குதலால் அது தாங்காது… அது பிரிந்து அணுக்களாக நகர்ந்து சென்று… “வெப்பமும் காந்தமும்” என்ற நிலைகள் அடைந்தது.

விஷத்தின் இயக்கம் இல்லை என்றால்
1.பேரண்டத்தில் படர்ந்து கிடந்த நிலைகள் இயக்கமே இல்லாத சூனியமாகத்தான் இருக்கும்
2.விஷம் இதில் தாக்கப்படும் பொழுது தான் “சூனியத்தின் நிலை மாறி… இயக்க நிலையாக மாறுகின்றது…”

ஆகவே தான் இரண்யன் எனக்கு எதிலேயும் இறப்பு இல்லை என்ற நிலையில் “அவன் வாதிடுகின்றான்” என்று காட்டுகின்றார்கள்.

மனித சமுதாயத்தின் எண்ண ஈர்ப்பு அலை இருந்தால் தான் “சப்தரிஷிகளின் செயலுக்கே உணவு கிடைக்கும்”

மனித சமுதாயத்தின் எண்ண ஈர்ப்பு அலை இருந்தால் தான் “சப்தரிஷிகளின் செயலுக்கே உணவு கிடைக்கும்”

 

போகரின் காலத்திற்குப் பிறகு போகரால் வழிப்படுத்திச் சென்ற பண்டிகை தான் தீபாவளிப் பண்டிகை.
1.நம்முள் உள்ள அசுர குணங்களை அழித்து நற்குணங்களின் ஒளியைப் பெறத் தான்
2.தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் முறை உணர்த்தப்பட்டது.

ஆனால் இன்றைய எண்ண ஓட்டத்தில் அசுரனையே வணங்கும் முறைப்படுத்திச் செயல்படும் வழியில் எண்ண ஓட்டங்கள் வளர்ந்து விட்டன.

தீய குணங்களை அகற்ற வேண்டிய அந்த நந்நாளில் சமமான எண்ணத்தைச் சாந்தமுடன் புத்தாடை புனைந்து… மகிழ்ந்து… தீபமேற்றி… உற்றார் சுற்றமுடன் இனிமையுடன் கலந்துறவாட ஏற்படுத்திய தினத்தைச் “சந்தோஷமுடன் எந்த ஆத்மா எந்த வழியில் கொண்டாடுகிறது…?”

1.இன்றைய சமுதாய இனப் பிடிப்பாக “அந்த நாள்”
2.பல இன்னல்களுக்கு மனித ஆத்மாக்கள் செல்லக்கூடிய உணர்வு ஓட்டத்தில் சுழன்று கொண்டுள்ளது.
3.அன்று சித்தர்களினால் ஒவ்வொன்றையும் உணர்த்திச் சென்றதன் பொருள் வேறு
4.இன்றைய மனித ஆத்மாக்கள் செயலாக்கும் பொருள் வேறு…!

ஒவ்வொரு காலத்திலும் சப்தரிஷிகள் சில உடல்களை ஏற்று எதற்காக அவர்களின் உணர்வலைகளை வெளிப்படுத்திச் செல்கின்றனர்…?

1.படைப்பின் படைப்பையே
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக்க…
3.அவர்களின் செயல் முறை செயலாக்குகின்றதப்பா…!

ஆவியாகிப் பிம்பமாகி ஆவியாகிச் சுழலும் வளர்ச்சியில்
1.சுழற்சி நிலைக்கொப்ப வழி நிலை செல்லாமல்
2.சுழற்சியின் சக்தியைப் படைக்கப்பட்டவனிடம் சமர்ப்பிக்கும் செயலுக்குத் துணை செய்கின்றார்கள் சப்தரிஷிகள்.

நீரில் ஓட்டத்தை நாம் அதன் இச்சையில் (போக்கில்) விடாமல் அந்த நீரைத் தேக்கி வைத்து “அணையைக் கட்டி” அந்த நீரின் சக்தியைப் பல ரூபங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

அதைப் போல்… பால்வெளி மண்டலத்தில் படர்ந்து சுழன்று நிறைந்துள்ள அமில குணங்களின் ஈர்ப்பை
1.உருவான உலகமாக்கி
2.உலகினிலே கருவைக் கொண்டு உருவாக்கி
3.உருவின் உருக்களாகப் பல உருக்களை வளரச் செய்து
4.தன் ஞானத்தின் சக்தி அலைக்குச் சக்தி எடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்

நாம் பலன் காணத்தான் பலவற்றையும் செய்கிறோம். ஒவ்வொரு மனிதனும் அவன் எண்ணத்திற்குகந்த நிறைவைக் காண நித்தமும் செயலாற்றுகின்றான்.

இருந்தாலும்… எண்ணியோ எண்ணாமலோ எல்லா ஆத்மாக்களும் தன் உணர்வில் வழி பெறுவது எதனை…?

வாழ்க்கையில் தன் உணர்வுக்குகந்த எண்ணச் செயல் நிறைவுறாதவன் விரக்தி என்ற வீண் சலிப்புடன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தற்கொலை என்ற நிலைக்கும் தன் உணர்வைச் செயலாக்குகின்றான்.

வெறுப்பு விரக்தி என்ற நிலை மனிதனுக்கு எப்படி ஏற்படுகின்றது..?

தன் உணர்வின் எண்ணத்திற்கொப்ப எண்ணச் செயல் நிறைவுறாத தருணத்தில் சலிப்பும் சோம்பலும் விரக்தியும் உட்பட்டுத் தன் ஆத்மாவையே மாய்த்துக் கொள்ளும் வழிக்குச் செல்கின்றான்.

உணர்வாலும் உருவாலும் தன் நிலையை எண்ணுபவன்…
1.உருவ எண்ணத்தின் சுழற்சியிலேயே சிக்குண்ட வாழ்க்கை உணர்வை மாற்றி
2.எண்ணத்தால் உணரும் ஞான வழிபாட்டில் தன் உணர்வைச் செலுத்தினால்
3.விரக்தியும் சலிப்பும் அற்று விவேகம் பெறலாம்.

இவ்விவேக உணர்வலையின் ஞானத்தை உணர்ந்து வாழ்க்கையில் எண்ணும் நிறைவைப் பல ஆத்மாக்கள் பெறுகின்றனர்.

ஆனால் இன்றைய காலத்தில் மனிதனின் உணர்வலை அனைத்தையுமே அரசர்கள் ஆண்ட காலத்தில் தன் உயர்வை வெளிக்காட்ட
1.“கதைகளையும்… கற்பனைக் காவியங்களையும்…” உண்மை போல் வெளிப்படுத்தியதை…
2.அந்த மாய உணர்வுகளையே உண்மை என்ற வாழ்க்கையின் நெறியில் கலந்து விட்ட
3.அத்தகைய உணர்வலையின் சுழற்சியில் சிக்கி (SOCIAL MEDIA) உழன்று கொண்டுள்ளது.

இந்த நிலை மாறிச் சப்தரிஷிகளின் செயல் வட்டத்திற்குள் சென்றால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே அவர்களின் உணர்வின் உணவு கிடைக்கப் பெறும்.

அதன் வழியில் அவர்களுக்கும் அவர்களின் சக்தி அமிலத்தைக் கூட்டிடல் முடியும். அதன் மூலம்
1.மீண்டும் மனிதக் கரு தோன்றினால் தான்
2.மனிதக் கருவின் பிம்ப உடல் ஞானத்தை வைத்துத்தான் மீண்டும் மனித சமுதாயம் காண முடியும்.

மனித சமுதாயத்தின் எண்ண ஈர்ப்பு அலை இருந்தால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே உணவு கிடைக்கும். உணவு இல்லாவிட்டால் அவர்களின் உணர்விற்கு உருவில்லை.

சப்தரிஷிகளின் செயல் அந்தந்தக் காலகட்டத்தில் உணர்த்தப்படுகின்றதென்றால் இந்த அடிப்படையில் தான்…!

இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் இன்றுள்ள எண்ண உருவ சுவாச மக்கள் இதே உணர்வலையில் இந்தப் பிம்பங்களை மாற்றி மீண்டும் மனித அமில ஜீவன் தோன்றினால்… இன்றுள்ள ஞானத்தைக் காட்டினாலும்… உருவ பிம்ப அழகைக் காட்டிலும்.. முற்றும் மாறுபட்ட உருவ அமைப்பு ஞான உருவங்கள் தான் அமையப் பெறும்.

அதுவும் கலி மாறி கல்கி மனித ஜீவன் கொள்ளப் பல பல ஆண்டுகள் ஆகிவிடும்.
1.காற்று மண்டலத்தில் உருளும் அமில உயிர்களுக்கெல்லாம்
2.மீண்டும் ஜீவன் கொள்ளும் காலத்திற்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டு விடும்.

அதனால் இன்றைய ஞான சக்திகளைச் செயலாக்கக்கூடிய பிம்ப ஜீவன்களான நாம் நம் சப்தரிஷிகளின் உணர்வலையின் சக்தியுடன் ஜெபம் கொண்டால்
1.அவர்களின் செயலின் சக்திக்கு
2.நம் சக்தியும் கூடிச் செயல் கொள்ள முடியும்.

பூமியைத் தவிர மற்ற மண்டலத்தில் மனிதர்கள் வாழும் வாய்ப்பே இல்லை

பூமியைத் தவிர மற்ற மண்டலத்தில் மனிதர்கள் வாழும் வாய்ப்பே இல்லை

 

இப்பூவுலகில் நாம் நம் ஜீவ உடலுடன் நம் ஆத்மா எந்த நிலை கொண்டு சுவாசம் எடுத்ததோ… அந்த நிலை கொண்டெல்லாம் சப்த அலைகள் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளனவோ… அதே நிலை கொண்டு தான் இவ் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் “ஆத்மாவைச் சுற்றிச் சப்த அலைகள் சுற்றிக் கொண்டே உள்ளன…”

உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு எந்த நிலையில் அந்த ஆன்மா சுற்றிக் கொண்டுள்ளது…? என்ற எண்ணம் எல்லோருக்குமே உள்ளது.

இந்நிலையை வைத்துப் பலர் பல ரூபங்களிலும் பல வித கதைகளிலும் நம் முன்னோர் வாயிலாகவும் கேட்கப் பெறுகின்றோம்.
1.அறிந்த உண்மையை அறிந்த நிலையில் செப்புவதற்கு இன்று யாரும் இல்லை.
2.அன்றைய பெரியோர்கள் தான் அறிந்து செப்பினார்கள். அந்நிலை நமக்கு எதற்கு…?

நம் உடலை விட்டுச் செல்லும் ஆத்மாவிற்கு சுவாசநிலை உடலுடன் இருந்த பொழுது எந்த நிலை கொண்டிருந்ததோ அந்த நிலையிலே தான் அவ்ஆத்மா சுற்றிக் கொண்டே உள்ளது.

1.இவ்ஆத்மா இந்த மண்டலங்களிலேயே சுற்றிக் கொண்டிருந்து இந்நிலை கொண்டே தான் பிறகொரு ஜீவ உடலும் பெற்று ஜென்மம் எடுக்கின்றதா…?
2.இந்நிலையில் இருந்து பிற மண்டலங்களுக்குச் சென்று ஜீவன் எடுப்பது இல்லையா…? என்ற எண்ணம் உள்ளது.

அச்சக்தியின் அருள் பெற்று எந்த நிலையில் அவ் உயிரணு உருவம் பெற்று… எந்த மண்டலத்தில் சுவாச நிலை கொண்டு ஜீவன் பெற்று உயிர் வாழ்ந்ததோ… அந்த நிலை கொண்டே தான் அவ் உயிரணுவின் சுவாச நிலைகள் உள்ளன.

1.உடலுடன் அஜ்ஜீவாத்மா இருக்கும் நிலையும்
2.உடலை விட்டு ஆவி உலகில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையும்
3.பிறகு ஒவ்வொரு ஜென்மங்கள் எடுத்தும்
4.ஒவ்வொரு நிலைகொண்டும் எத்தனை ஜென்மங்கள் எடுத்து அவ்ஆத்மா வாழ்ந்தாலும்
5.அதன் தாய் சக்தியான எந்தச் சக்தி நிலைபெற்று அவ்உயிரணுவிற்கு சுவாச நிலை கிடைத்ததோ அதே நிலை பெற்று
6.மீண்டும் மீண்டும் எந்த மண்டலத்தில் தோன்றியதோ அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்க முடியும் அவ்வ்யிரணு எனும் ஆத்மா எல்லாமே.

அவ்ஆத்மாவின் சுவாசத்தால் எப்பூமியில் அவ் உயிரணுவிற்கு ஊட்டம் தந்ததோ அந்நிலை கொண்டே தான் அவ் உயிரணு எத்தனை காலமானாலும் சுற்றிச் சுற்றிப் பிறவி எடுத்துக் கொண்டே வாழ்ந்திடும் இந்தப் பேருண்மை நிலையை எந்த நிலை கொண்டும் யாரும் செப்பிட முடிந்திடாதப்பா.

பிற மண்டலத்திற்கு சென்று வாழ்ந்திட இன்று விஞ்ஞானத்தில் பல ரூபங்களைச் செய்து சென்றாலும் இவன் தாய் சக்தி தந்த சுவாச நிலையை மாற்றிப் பிற மண்டலத்தில் எப்படி ஜீவிதம் நடந்திட முடியுமப்பா…?
1.இம்மண்டலத்தில் தோன்றியவர் பிற மண்டலத்தில் பிறந்து உயிர் வாழ்ந்திட முடிந்திடாது
2.காரணம் பிற மண்டலங்களின் உயிர் நிலை இம்மண்டலத்திற்கும் அம் மண்டலத்திற்கும் மாறுபடுகின்றது.

அம்மண்டலத்தின் சுவாச நிலை கொண்டே தான் அங்கு தோன்றிய ஜீவணுக்கள் எல்லாமே ஜீவன் பெற்று உயிர் வாழ்ந்திட முடியும்.

அங்கு இருப்பவர் இங்கும் இங்கு இருப்பவர் அங்கும் ஜென்மம் மாறிப் பிறந்தாலும் பிறக்கவும் முடிந்திடாது… வாழ்ந்திடவும் முடிந்திடாது,

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தாய் என்பவள் யார் என்று இப்பொழுது புரிகிறதா…? நம் சுவாச நிலைக்கு உயிர் தந்த அச்சக்தித் தாய்தான் நம் முதல் தாயப்பா.

பிற மண்டலங்களில் வாழ்ந்து… பிற மண்டலங்களுக்குச் சென்று… அந்நிலையில் இருக்கும் உண்மையைக் கண்டறிய “இச்செயற்கை நிலை எதற்கப்பா…?”

பிற மண்டலங்களின் நிலையை அறிய
1.நம் சுவாச நிலை அளித்த அச்சக்தித் தாயின் ஜெபத்தை எண்ணி
2.நம் உயிரணுவின் உண்மை நிலையை அறிந்து
3.நாம் நம்முள் இருக்கும் அவ்ஈஸ்வர சக்தியை எண்ணி
4.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று நாம் ஜெபிக்கும் பொழுது
5.அவ்ஆண்டவனின் ரூபத்தில் நமக்குப் பல உண்மைகளைப் புகட்டிட அப்பெரியோர்கள் உதவிக்கு வருவார்கள்.

அந்நிலையில் நாம் நம் ஜெப நிலையிலேயே எல்லா மண்டலங்களின் நிலையையும் அறிந்து இம்மண்டலத்தில் வாழ்ந்திடலாம். எம்மண்டலத்திற்கும் சென்று வரும் பாக்கியம் பெற்ற நிலை எய்துபவர்கள் எல்லாம் யார் என்று இப்பொழுது புரிகிறதா…?

இருந்த நிலையிலேயே ஜெப நிலையில் அமர்ந்து எல்லா மண்டலங்களின் தன்மையையும் தன் நிலைக்கு உணர்ந்து கொண்ட பல கோடிச் சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள்… இப்படித் தெய்வத்தன்மை வாய்ந்த நம்மில் பல முன்னோர்கள் சூட்சும உலகம் என்னும் உலகத்தில் “அன்றும்… இன்றும்…” வாழ்ந்து வருகிறார்கள்.

பேராசை என்னும் நிலையில்தான் இன்று கண்டிடும் விஞ்ஞானம் எல்லாம்
1.அங்கிருக்கும் பொக்கிஷத்தை எடுத்து வந்து இன்று தன் நாடு வாழ தன் நிலை உயர
2.தன் நிலையை… சக்தி நிலையைச் சிதறவிட்டு வாழ்ந்து என்ன பயன்…?
3.அவ்ஆத்மாவின் நிலைக்கு அழியாக் கஷ்டத்தைத் தான் அளித்து வாழ்கிறார்கள் இன்றைய விஞ்ஞானம் என்னும் ரூபத்தில்.

தெய்வீகத் தன்மையில் தேவனின் சக்தியை ஜெயித்து வாழ்ந்திட “ஜெபம் (தியானம்) ஒன்றுதான் இஜென்மத்தில் உள்ளது” என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டுமப்பா.

தீமையை அடக்கி ஆளும் சக்தியை நீங்கள் பெறுங்கள்

தீமையை அடக்கி ஆளும் சக்தியை நீங்கள் பெறுங்கள்

 

இயற்கையின் உண்மை நிலைகளை அறிந்துணர்ந்து அதனின் செயலை அறிந்து கொண்ட பின் மக்களுக்கு நீ ஓது என்றார் குருநாதர்
1.நாம் அல்ல…! நாம் நுகர்ந்த உணர்வுகள் எப்படி எல்லாம் இயக்குகின்றது…? பார்…! என்று குருநாதர் எனக்குத் தெளிவாக்கினார்
2.அதைத் தான் உங்களிடம் சொல்கின்றேன்.

கண்ட அனுபவங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லிக் கொண்டே வருகின்றேன். எப்படியோ அருள் உண₹சிகளைத் தூண்டித் தூண்டித் தூண்டித் தூண்டி உங்களுக்குள் அந்தச் சக்தியைப் பெறச் செய்கின்றேன்.

கூர்மையாக உங்களைப் பார்க்க வைக்கின்றேன்.
1.நாளை ஏதாவது சந்தர்ப்பத்தால் ஏற்பட்டால் “உடனே ரிமோட் செய்து”
2.எப்படி இருக்கின்றது…? என்ன செய்கின்றது…? என்பதை உணர்ந்து
3.நீங்கள் திருந்தி வாழ்வதற்கு இது உதவி செய்ய வேண்டும் என்பதற்குத் தான் சொல்கிறேன்.

உங்களை இயக்காதபடி “அந்தத் தீமையை அடக்கி ஆளும் சக்தி நீங்கள் பெற வேண்டும்” என்பதற்குத்தான் இந்த உபதேசத்தைக் கொடுப்பது

குரு அருளைப் பெற முயற்சிப்போம். இந்தச் சக்தி பெற்ற பின் அதன் வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்… உடல் பெற்ற நஞ்சுகளைக் கரைப்போம்.

அவர்கள் ஒளியாக மாறினால்… அவர்களை மீண்டும் நாம் எண்ணும் பொழுது நம்முடைய பாதை சீராகச் செல்லும் அதனுடைய உணர்வைப் பெற்று நாம் தீமையிலிருந்து விடுபட முடியும்.

அவர்கள் முன்னாடி விண் சென்றால் நாம் அவர்கள் வழியில் பின்னாடி செல்வது எளிதாகும். அவர்கள் ஒளியான உணர்வை நாம் எடுத்து நாமும் ஒளிச் சரீரமாக முடியும். ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்வோம்.

1.இதை எல்லாம் உருவாக்கிப் பேச வைத்தது… உணர்த்துவது யார்…? உயிரான ஈசன் தான்.
2.இந்நேரம் வரை கேட்டறிந்த உணர்வுகளைக் உடலாக உருவாக்குவது யார்…? உங்கள் உயிர் தான்.
நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி “உங்களை அந்த ஞானிகள் உணர்வு வழி நடத்த வேண்டும்” என்ற உணர்வை வைத்துத் தான் பேசினேன் (ஞானகுரு).

நுகர்ந்த உணர்வுகள் எந்த அளவுக்குப் பதிவாகின்றதோ வசிஷ்டர்…! யாம் உபதேசிப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும்.

ஏதோ சொல்கின்றார் சாமியிடம் விபூதி வாங்கிச் சென்றால் போதும் என்றால் கவனம் அதிலே தான் இருக்கும். அந்த அறிவின் ஞானம் நமக்குள் வளராது.

ஆகவே உண்மையின் உணர்வின் தன்மையை உணர்ந்து பிறவியில்லா நிலை அடைவோம். இன்னொரு பிறப்பு இல்லாத நிலை அடைய வேண்டும்.
1.எப்படியும் இந்த உடலை விட்டுச் செல்ல வேண்டி வரும்
2.அதற்கு முன் இருளை நீக்கும் அருள் ஒளி என்ற உணர்வை நாம் பெற முற்பட வேண்டும்.

மனிதனின் கடைசி நிலை… அது தான் இராமேஸ்வரத்தில் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தனுசுக்கோடி. தீமைகளை நீக்கி நம் மனதை ஒன்றாக்க வேண்டும் என்ற நிலையில் “இராமன் மனதைக் குவித்து தியானித்தான்” என்று அங்கே காட்டியிருப்பார்கள்.

“பச்சிலை மிரட்டி” உருவாகும் விதம்

“பச்சிலை மிரட்டி” உருவாகும் விதம்

 

பச்சிலைகளைக் கண்டபின் மற்ற மிருகங்கள் ஏன் எப்படி எதனால் அஞ்சி ஓடுகிறது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார். உடல் பெற்ற பின் ஆந்த மணங்கள் கண்டு அதனால் விலகிச் செல்கிறது.

கீரிப்பிள்ளையும் பாம்பும் சண்டையிடுகின்றது. அதற்கும் ஒரு பச்சிலை உண்டு. பாம்பு கடித்து விட்டது என்றால் கீரி அந்தப் பச்சிலையில் போய்ப் பிரண்டு கொள்ளும்… அதனின் விஷங்கள் தணிந்து விடும்.

விஷத்தைத் தணித்தபின் மீண்டும் வந்து பாம்பைச் சண்டையிட்டு அது கத்திரித்து விடுகிறது. இதை நேரடியாக என்னிடம் காட்டுகின்றார்.

கீரியும் பாம்பும் சண்டையிடும் போது பக்கத்தில் நின்று தான் நான் (ஞானகுரு) வேடிக்கை பார்க்கின்றேன். இரண்டும் மனிதனைக் கண்டு பயப்படவில்லை.

ஏமாந்து திரும்பி பார்த்தால் அடுத்தது அடித்து விடும் என்ற நிலையில் இந்த முசிடில் தான் இருக்கின்றது.

இதனுடைய எதிர்ப்பு உணர்வுகள் எப்படி இருக்கின்றது…? அந்த மூச்சலைகள் வெளி வரும் போது சூரியனுடைய காந்த சக்தி எப்படிக் கவர்கிறது…?

1.கீரிக்கும் பாம்புக்கும் போர் முறையில் உடலில் விளைந்த உணர்வுகள் இந்த உணர்ச்சிகளை எடுத்து
2.மற்ற தாவர இனங்களில் வரக்கூடிய சத்துக்களுடன் இது ஊடுருவி
3.ஒன்றை ஒன்று அஞ்சி ஓடி ஒன்றுடன் மோதி ஒரு சுழல் காற்று போலப் பரவி எடை கூடியது மீண்டும் மண்ணிலே பதிந்து விடுகிறது.
4.அதிலே மின்னல் தாக்கப்படும் பொழுது துடித்து வீரியமாக எழுந்து ஒரு புது விதமான செடியாக உருவாகின்றது
5.செடியாக அது உருவான பின் பாம்பின் அருகில் கொண்டு போய் அதைக் காண்பித்தால் பாம்பு பயந்து விலகிச் சென்று விடுகிறது.

கீரிப்பிள்ளை நஞ்சை முறிக்கும் பச்சிலைக்குச் செல்கின்றது… தப்பி விடுகின்றது ஆனால் அந்தச் செடியைப் பாம்பின் அருகில் வைத்தால் பாம்பு பயப்படுவதில்லை.

எப்படி எல்லாம் கலவை ஏற்பட்டு இந்தச் செடிகள் புதிது புதிதாக உருவாகின்றது என்பதை மலைப்பகுதிகளில் அழைத்துச் சென்று 20 வருடம் குருநாதர் எனக்கு அனுபவத்தைக் கொடுக்கின்றார்.
1.அத்தகைய செடிகள் எப்படி உருவாகின்றது
2.விஷத்தின் தன்மைகள் எப்படி மாறுகின்றது…?
3.ஒன்றை ஒன்று எப்படி மாற்றிக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகின்றார்.

காட்டிற்குள் இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்றார்.

அங்கே பார்த்தால் ஒரு புலி செத்துக் கிடக்கின்றது. உயிர் போனவுடனே புலியினுடைய உடல் அழுகிக் கிடக்கின்றது. புழுக்களாக அரிந்து கொண்டிருக்கின்றது.

அழுகிய அந்தப் புலியின் உடலுக்குப் பக்கத்திலே போய் “உட்காருடா…! என்றார். நாற்றமோ சகிக்க முடியவில்லை.

சாமி… ஒரே நாற்றமாக இருக்கின்றது…! என்று சொன்னேன்.

நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…! அதனாலே “உட்கார்ந்து பார்…!” என்று சொல்கிறார்.

உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். எத்தனை நாள்…? ஒரு நாளா… இரண்டு நாட்களா…! ஒரு பத்துப் பதினைந்து நாட்கள் உட்கார்ந்து பார்த்தேன்.

பத்துப் பதினைந்து நாட்கள் வேறு எதுவும் சாப்பிடவே முடியவில்லை. இரண்டு பச்சிலையைக் கொடுத்தார். அதை மென்று சாப்பிட்டுக் கொள் என்றார்.

அதையெல்லாம் எனக்கு விபரமாகக் கணக்குச் சொல்ல வேண்டும் என்கிறார். நான் எந்தக் கணக்கைச் சொல்லட்டும்….?

புலியின் உடலில் உள்ள புழுக்கள் அந்த உடல் முழுவதையும் சாப்பிட்டு விடுகின்றது. கடைசியில் எலும்பும் தோலாகவும் தான் இருக்கிறது.

புலி உயிருடன் இருக்கும்போது எத்தனை வகையான உயிரினங்களைக் கொன்றதோ அந்த உணர்வெல்லாம் உடலுக்குள் அணுக்களாக இது புலியாக உருவாகின்றது.

இந்தப் புலியின் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் முதலில் ஜீவ அணுக்களாக இருந்தது. புலியின் உயிர் வெளியே சென்ற பின் ஜீவஅணுக்கள் உயிரணுக்களாக மாறுகின்றது. புழுக்களாக ஆகின்றது.

புழுக்களாக இருந்ததெல்லாம் புலி உடலைத் தின்றவுடன் அடுத்து ஆகாரம் இல்லை என்றால் மடிந்து விடுகின்றது. அந்தப் புழுக்களின் உயிர்களும் வெளி வருகின்றது.

புலி தன் பசிக்காக மாட்டையோ மற்ற எதை எதை அடித்துச் சாப்பிட்டதோ அதன் உடலுக்குள் இந்தப் புழுவின் உயிர்கள் உயிரணுக்களாக விளைகின்றது.

அதாவது உயிரணுக்கள் என்றால் புலியின் உடலில் முதலில் ஜீவ அணுக்களாக இருக்கின்றது. பின் உயிரணுக்களாக மாறுகின்றது.

உயிரணுக்களாக மாறியவுடனே மாடு ஆடு மற்ற உயிரினங்களில் பட்டபின் “உண்ணி… ஈ…” போன்ற நிலைகளில் உருவாக்கி அந்த உடலிலுள்ள இரத்தத்தை உறிஞ்சி வாழும் தன்மை வருகின்றது.

இரத்தத்தை உறிஞ்சி உடல் வளர்த்த அந்தப் புலியின் உணர்வுகள் உயிர் சென்ற பின் அதே அணுக்கள் உயிரணுவாக மாறி மீண்டும் மற்ற உடல்களில் என்னென்ன செய்கின்றது…? என்பதனை உற்றுப் பார்க்கச் சொல்லுகின்றார்.

அதே சமயத்தில் புலி ஒரு உயிரினத்தைக் கடித்துக் குதறும் போது இரத்தங்கள் சிந்துகின்றது. இரத்தங்கள் சிந்தியபின் இரத்தத்திலே மின்னல்கள் தாக்கப்படும் போது இதில் ஜீவக்கருக்கள் உருவாகி அதன் நிலைகள் “அட்டைகளாக…” வளர்கின்றது.

நாம் நடந்து போனால் போதும். அந்த அட்டை தவ்வி நம் உடலிலே அமர்ந்து நம் இரத்தத்தைக் குடிக்கின்றது.

இதைப்போல ஒரு உடலிலிருந்து எத்தனை வகையான நிலைகள் அது உருவாகிறதென்று குருநாதர் காட்டுகின்றார்.

அந்தப் புலியின் உடலிலிருந்து வெளிப்படும் அழுகிய ஆவிகள் காற்றிலே போகின்றது. இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்ளுகின்றது. அது அலைகளாக மாறுகின்றது.

அதே சமயத்தில் விஷச் செடியில் இருந்தும் பல மற்ற தாவர இனங்களில் வரக்கூடிய சத்தையும் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிப் பரமாத்வில் சுற்றிக் கொண்டிருக்கின்றது.

அழுகிய புலியின் உணர்வைக் கவர்ந்த அலைகளைக் கண்ட பின் மற்ற செடி கொடிகளின் சத்துக்களை கவர்ந்து கொண்ட அலைகள் ஓடுகின்றது.

இவ்வாறு அது ஓடும் பாதையில் இன்னொரு பக்கம் பிற விஷச் செடியில் இருந்து உமிழ்த்தும் உணர்வுகள் மோதிய பின் “கிறு..கிறு..” என்று சுற்றுகின்றது.

அது சுற்றி ஒன்றோடொன்று மோதி அந்த மோதலில் ஆவியின் தன்மை மேலே செல்கின்றது. மூன்றும் இரண்டறக் கலந்த உணர்வுகள் பூமியில் படர்கின்றது.
1.புலி ரிக். அழுகிய புலி உடலில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை. இந்த நாற்றம் நமக்கு வருகின்றது.
2.செடி கொடி ரிக். அதில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை.
3.ஒரு விஷச் செடி ரிக். அதில் இருந்து வரக்கூடிய மணங்கள் சாம இசை.
4.இது மூன்றும் ஒன்றுக்கொன்று மோதல் ஏற்பட்ட பின் மோதலில் ஒன்றாகக் கலக்கப்படும் போது அதர்வண.
5.ஒன்றோடொன்று மோதி அதன் உணர்வுகள் ஒன்றாக இணைந்த பின் யஜூர். ஒரு வித்தாகி விடுகின்றது.

பல விதமான உணர்வுகளைச் சேர்த்து நாம் ஒரு பலகாரத்தை வேக வைத்தால் அது ஒன்றாகி ஒரு சுவையாக மாறுகின்றது.

இதைப் போல பல உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அது ஒன்றாக அமைகின்றது. மோதியதால் ஏற்படும் ஆவியாக மேலே செல்லுகின்றது.

இரண்டறக் கலந்தது தரையிலே படுகின்றது. தரையிலே பட்டபின் எதிர் நிலையான நட்சத்திரங்களிலிருந்து துகள்கள் நம் பூமிக்குள் மின்னலாகத் தாக்கப்படும் போது
1.இதில் கலந்த நிலைக்கு எதிர் நிலையாக வரும் போது
2.அதிலே தாக்கப்பட்டு இழுக்கும் சக்தியாக வருகின்றது
3.அப்போது அது செடியாக வளர்கின்றது.
4.அவ்வாறு அது செடியாக வெளியில் வரையிலும் என்னைக் குருநாதர் அங்கே உட்கார வைத்துக்கொண்டு இருந்தார்.

இந்த இயற்கை எப்படி மாறுபடுகின்றது…? என்பதனைத் தெரியச் செய்கின்றார். பின் அந்தச் செடி முளைத்து வந்தது. அந்தச் செடியின் அருகில் அடையாளம் தெரிவதற்காகக் கோடு போடச் சொல்கின்றார்.

அந்த இடத்தை விட்டுப் போய் விட்டு ஒரு இரண்டு மாதம் கழித்து வருகிறோம். அந்தச் செடி கொடியாக வளர்ந்திருக்கிறது. கையில் நீ் கத்தியை எடுத்துக் கொண்டு போடா என்றார். கத்தி எதற்கு சாமி…? என்றேன். கத்தியைக் கொண்டு போ என்றார்.

அங்கே மரம் அருகில் அந்தக் கொடி விளைந்திருக்கிறது. அத்ற்கு எதிரிலே உட்கார் என்றார். நான் உட்கார்ந்தவுடனே என்னை நோக்கி அந்தக் கொடி நைசாக நகர்ந்து இருக்கின்றது.

அந்தக் கொடி நகர்ந்து வந்து உன்னைத் தொட்டுவிட்டது என்றால் எப்படிக் கரண்ட் பாய்கின்றதோ அதே மாதிரி பாய்ந்து புத்தியில்லாமல் போய்விடும். உன் இரத்தத்தை உறிஞ்சிவிடும் என்றார் குருநாதர்.

கொடி உன்னைத் தொடும் பொழுது “சுரீர்…” என்று வரும். உடனே கத்தியால் அதை “வெட்டுடா…” என்றார்.

நான்கைந்து தரம் வெட்டிய பிற்பாடு அப்புறமும் நீண்டு வருகிறது. வெட்டியபின் அது எட்டாத நிலை ஆகும் போது அடுத்து ஒன்றும் செய்யவில்லை.

பார்த்தயா…! அன்றைக்கு அந்தப் புலி எந்தெந்த உயிரினங்களின் இரத்தத்தை உறிஞ்சியதோ அதனின் உணர்வு செடியுடன் கலந்தது. கொடியாக விளைந்தது.

இப்பொழுது மனிதனின் இரத்தத்தை உறிஞ்சும் தன்மை அந்தக் கொடிக்கு வந்துவிட்டது என்று காட்டுகிறார்.

1.நம் மனித வாழ்க்கையில் வேதனை வேதனை என்ற உணர்வுகள் எடுத்துக் கொண்ட பின்
2.உடலில் விஷமான அணுக்கள் பெருகியபின் நல்ல அணுக்களைக் கொன்றுவிடும்.
3.விஷமான அந்த அணுக்கள் பெருகி விட்டால் அதைத்தான் கேன்சர் நோய் என்று சொல்கிறோம்
4.மற்ற அணுக்களுக்குள் இருக்கும் இயக்கச் சக்தியையும் அது கவர்ந்து கொள்ளும்.
5.உடலிலுள்ள நல்ல அணுக்கள் இயங்காது. இந்தக் கேன்சர் என்ற நிலை வந்துவிட்டால் எதுவுமே செயல்படுத்த முடியாது போய்விடும்.

அதைக் கொல்ல வேண்டும் என்றால் இதற்கு மருந்து இல்லை.
ஏனெனில் அதைக் கொல்ல வேண்டும் என்றால் வீரியத் தன்மை மருந்தை ஊட்ட வேண்டும்.

வீரியமான மருந்தை ஊட்டினால் நம் உடலிலுள்ள சாந்தமாக இருக்கக்கூடிய அணுக்களெல்லாம் மடிந்து விடும். மருந்து கொடுத்தும் பயன் இல்லை.

கேன்சர் போன்ற நிலைகளுக்கு
1.இந்தக் கொடியை எடுத்து அதில் வேறு சில பச்சிலைகளை இணைத்துப் பக்குவப்படுத்திக் கொடுத்தால்
2.அந்தக் கேன்சர் விஷத்தின் தன்மையை இது உறிஞ்சிவிடும்.
3.கேன்சர் நோயை இந்தக் கொடியை வைத்து நீக்கி விடலாம் என்று காட்டுகிறார் குருநாதர்.

காடுகளில் உயிரினங்கள் ஒவ்வொன்றும் தன்னிச்சையாக மடிந்த பின் மடிந்த உடலிலிருந்து வரக்கூடிய ஆவிகளும் மற்ற தாவர இனத்தில் ஒன்றோடொன்று மோதும் போதும் புதுப் புது விதமான செடிகள் எப்படி உருவாகின்றது…?

செடிகளைத் தின்று ஒன்று வளர்ந்தாலும் அந்த உயிரினங்களைக் கொன்று வாழ்ந்த இந்த உடல்கள் அது மடிந்து விட்டால் அந்த உணர்வுகள் எப்படிச் சேர்கின்றது…?

மீண்டும் ஜீவ அணுக்களாக மாற்றி அது மனிதனுக்கு மருந்தாக உபயோகப்படுத்தும் தன்மை எப்படி வருகின்றது…?

ஏனென்றால் பல உயிரினங்களின் தன்மையானால் இதே மருந்தைச் சேர்க்கப்படும்போது
1.நம் உடலில் உள்ள விஷத்தின் தன்மைகளை அது மாற்றி
2.நம் உடலை எப்படி நலமாக்குகின்றது…? என்பதனைக் குருநாதர் அங்கே காட்டுகின்றார்.

இயற்கையின் உண்மைகள் எப்படியெல்லாம் செயல்படுகின்றது…? இதிலிருந்தெல்லாம் மனிதன் எப்படித் தப்ப வேண்டும்…? என்ற நிலையைக் காட்டுக்குள் என்னை அழைத்துச் சென்று இவ்வாறு பல உண்மைகளைக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

மனித வாழ்க்கையில் செல்வம் நம்மைக் காக்காது… “அருள் செல்வமே நம்மைக் காக்கும்”

மனித வாழ்க்கையில் செல்வம் நம்மைக் காக்காது… “அருள் செல்வமே நம்மைக் காக்கும்”

 

கொசுக்களாகி மனிதனின் இரத்தத்தைக் குடித்துக் கருமுட்டைகளாகி மனிதனாகப் பிறவிக்கு வந்தால் அந்தக் குழந்தைகளின் உணர்வுகளைப் பார்த்தோம் என்றால் மிகவும் மோசமாக இருக்கும்.

இப்படி எத்தனையோ வகையான உயிரணுக்களின் தோற்றத்திலிருந்து சேர்த்துக் கொண்ட நிலையில் இருந்து உரு மாறிக்கொண்டே இருக்கின்றது.

பன்றியாக இருந்து நஞ்சினை நீக்கி மனிதனாக உருவாக்கிய பின்
1.நஞ்சை நீக்கும் சக்தி பெற்ற நிலையில்
2.இந்த மனித வாழ்க்கையில் வரும் நஞ்சினை துடைக்கத் தவறினால்
3.மீண்டும் பிறவிக் கடனில் தான் உழல்வோம்.

இன்று மனிதனாக இருக்கின்றோம் சமாளிக்கின்றோம்… செல்வத்தையும் தேடி வைத்திருக்கின்றோம். இருந்தாலும் ஹார்ட் அட்டாக் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இலட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்தால் உடனே இதயத்தை மாற்றிக் கொடுத்து விடுகின்றார்கள் சிறிது காலத்திற்கு வாழும்படி செய்கின்றார்கள். பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்…?

என்னுடைய (ஞானகுரு) பற்கள் விழுந்துவிட்டது. பல் செட்டைக் கட்டி நிஜப்பல் இருக்கின்ற மாதிரி நான் சாப்பிடுகின்றேன்… விஞ்ஞான அறிவு கொண்டு செய்து கொடுத்து விடுகின்றார்கள்.

பல் இல்லாதவர்கள் சரியாக மென்று சாப்பிடவில்லை என்றால் சத்தை சரி வர நல்ல இரத்தமாக மாற்ற முடியாது. அதனால் உடல் பலவீனம் அடைந்து விடும்.

ஒவ்வொன்றுக்கும் அதற்குத் தகுந்த உபாயங்ககளைக் கண்டுபிடித்துக் கொண்டு வருகின்றார்கள். ஆனால்
1.இப்போது இந்த மெய்ஞான அறிவைத் தெரிந்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெறத் தவறினால்
2.வரும் தீமைகளை அதை வைத்துத் துடைக்கத் தவறினால் நோயாகி
3.மீண்டும் கீழான சரீரங்களுக்குத் தான் செல்ல வேண்டி வரும்.

அதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் அடிக்கடி தியானப் பயிற்சியை உங்களுக்குப் பல வகைகளிலும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

பௌர்ணமி தியானங்களை அமைத்து அந்தத் தியானத்தின் வலுக் கொண்டு குடும்பத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை அந்தச் சூட்சும சரீரத்தைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும் போது உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகின்றது.
1.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் நாம் தியானித்த உணர்வுகள் அங்கே அதற்குள் தொக்கி நிற்கின்றது
2.அதை வைத்து அவர்கள் பிறவியில்லா நிலை அடைகின்றனர்.

அதே சமயத்தில் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோரும் துருவ நட்சத்திரத்தை எண்ணும் போது அதிலே விளைந்த உணர்வுகள் எளிதில் பெறக்கூடிய தகுதியும் பெறுகின்றார்கள்… வரக்கூடிய நோயிலிருந்து விடுபடவும் முடிகின்றது… வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. எப்பொழுது உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் இணையும் பருவம் பெறுகின்றனர்.

விஞ்ஞானிகள் இன்றைக்கு எத்தனையோ புதுப்புது உயிரணுக்களை உருவாக்குகின்றார்கள் உடல்களை மாற்றுகின்றார்கள்.

ஆனால் இறந்த பின் தன் உயிரான்மாவைப் பிறவியில்லா நிலை அடையச் செய்ய முடியுமா…? என்றால் அது முடிவதில்லை. கண்டுபிடித்த உணர்வின் தன்மை கொண்டு தன் சீடனுக்குக் கற்பித்திருந்தால் இறந்த பின் சீடனின் உடலுக்குள் தான் போக முடியும். தான் கற்ற ஞானத்தை வேண்டுமென்றால் அவனுக்குப் போதிக்கலாம்.

ஆனால் சந்தர்ப்பத்தில் வேதனையும் துன்பங்களும் வந்தால் ஞானிகள் காட்டிய முறைப்படி காலை துருவ தியானத்தினை எடுத்துக் கொண்ட பின்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் தூய்மைப்படுத்திக் கொண்டு
2.நோயற்றவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சக்தி கிடைக்க வேண்டும் என்று இந்த உணர்வைப் பதிவு செய்து
3.நோய் நீங்கி நீங்கள் நன்றாக வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கும் நம் வாக்கு நல்லதாகின்றது
4.நமக்குள்ளும் தீமை புகாது தடுத்துக் கொள்கின்றோம்.

இப்பொழுது எதன் மீது அதிகமாகப் பற்று கொள்கின்றோம்…? நோயை நீக்கும் அருள் ஞானிகள் உணர்வைப் பற்று கொள்கின்றோம். நோயின் உணர்வைப் பற்றற்றதாக மாற்றுகின்றோம்.

பற்று… பற்றற்று இரு…!

ஆகவே இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதன் மீது நாம் பற்று கொள்ளலாகாது. அதைப் பற்றற்றதாக ஆக்க வேண்டும் என்றால் அடுத்த நிமிடமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்த உணர்வினை நமக்குள் எடுத்து அதைப் பற்றுடன் பற்றிட வேண்டும்.

வேதனை உணர்வுகள் நம்மைப் பற்றிடாது பற்றற்றதாக மாற்றி… மற்றவர்களுக்கும் தீமையை நீக்கும் உணர்வுகளை இயக்கும் சக்தியாக அவர்களை அதைப் பற்ற வைத்து… பலவீனத்திலிருந்து மீட்டும் சக்தியாகக் கொண்டு வர வேண்டும். இதை வழிப்படுத்தி நாம் நடக்க வேண்டும்.

1.இந்த மனித வாழ்க்கையில் நம்மைச் செல்வம் காக்காது… அருள் செல்வமே நம்மைக் காக்கும்.
2.எத்தனையோ செல்வத்தை வைத்திருப்பவர்கள்… அவர்கள் குடும்பம் எல்லாம் துயரத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுங்கள்.

பிறவிகளைப் பற்றிய உண்மைகள்

பிறவிகளைப் பற்றிய உண்மைகள்

 

தாயைப் போல் பிள்ளை… நூலைப் போல் சேலை…! என்கிறார்கள் தாய் வழி தந்தை வழி என்பதெல்லாம் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தை எல்லாம் ரத்தத் தொடர்புடையது… “வம்ச வழி” வந்தது என்கிறார்கள்.

வம்ச வழி என்பதெல்லாம் என்னப்பா…?

ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தை எல்லாமே வம்ச வழியில் வந்தது தான் என்றிட்டால் ஒரு தாய்க்கு ஒரு மகன் பிறக்கின்றான். அடுத்த பிறவியில் அத்தாயே பிறவி எடுத்தாலும் பத்துக் குழந்தை பிறப்பதில்லையா…! வம்ச வழி என்றால் என்னப்பா…?

இப்பிறவியில் பிறந்த எல்லோருமே அவரவர் குடும்பத்திலேயே தான் மறுபிறவியலும் பிறக்கிறார்களா…? இல்லையப்பா…!

இப்பிறவியில் இருந்து மறுபிறவிக்குச் செல்லும் பொழுது இப்பிறவியில் உள்ள ஆசை பாசம் இவைகளை வைத்து மறுபிறவியில்
1.எந்த இடத்தில் பிறந்திட்டால் இந்தப் பிறவியில் விட்ட ஆசைகளை முடித்து விடலாம் என்று தெரிகிறதோ
2.அங்கு தான் பிறக்கின்றது அவ்வாவி மறு ஜென்மத்தில்.

தாயின் வழி என்பதெல்லாம் வளர்க்கும் முறையில் தான் வந்திருக்கின்றது
1.குழந்தைகளுக்கு வம்ச வழியும் இல்லை… வந்த வழியும் இல்லை.
2.வளர்க்கும் முறையில் தான் எண்ணத்தின் எண்ணமாக வந்திருக்கின்றான் ஒவ்வொருவனும்.

ஒரு தாயின் வயிற்றுக் குழந்தைகளும் மனநிலையிலும் குண நிலையிலும் மாறுபட்டுத் தான் இருக்கின்றன. அவரவர்களின் முற்பிறவியின் பயனால் தான் இம் மாறுபாடு நிலை எல்லாம்.

தந்தை மகனுக்கு எழுதி வைக்கும் சொத்தெல்லாம் ஒன்று போல் பகிர்ந்திட்டாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் தான் செல்லுகின்றது. ஒரு மனிதன் அழிக்கின்றான் பல மடங்கும் பெருக்குகின்றான். ஒருவன் அந்தப் பொருளை ஒரே நிலையில் வைத்துள்ளான்.

இதன் பொருள் எல்லாம் முற்பிறவியின் பலனாகும்…! அவன் எடுத்த மூச்சுத் தன்மையினாலும் அவன் எண்ணத்தின் தன்மையினாலும் வந்தது தானப்பா இந்நிலை எல்லாம்.

வளரும் தன்மையிலேயே வடிகால் அமைத்துத் தந்திடலாம். அவ்வண்ணத்தை ஊன்றிக் கொண்டு அவ்வழியில் சென்றிட்டால் உயர்ந்திடலாம் தன் வழியில் செல்பவனுக்கு.

1.அவனவன் எண்ணத்தைப் பொருத்துத் தான் அமைகிறது வாழ்க்கை எல்லாம்
2.தாய் தந்தையரின் வளர்ப்பினிலே வருகின்றது “மனநிலையின்” மாற்றம் எல்லாம்.

பூர்வ புண்ணியப் பலன் உள்ள குழந்தைகளையும் மன நிலையில் மாற்றிடலாம்… எண்ணத்தின் வழியினிலே. தாய் தந்தையரின் எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!

வளரும் சூழ்நிலையைப் பார்த்திருப்பாய், மண் வாடை நீர் வாடை என்கிறார்கள் அதுவும் உண்மைதானப்பா.

ஒவ்வொரு இடத்திற்குத் தகுந்த மனநிலையும் நம் மனநிலையைப் பொறுத்து வரும் மூச்சினால் அவ்வழியில் வளரும் குழந்தைகளின் தன்மை எல்லாம் ஒன்று போல் இருக்குமப்பா.

மண் வாடை எல்லாமே அந்நிலையில் உள்ள நிலையைப் பொறுத்துதானப்பா வருகின்றது. அங்கு வளரும் குழந்தைகளின் எண்ணமும் செயலும் ஊரின் தன்மையும் ஊன்றிப் பார்த்தால் புரிந்திடும் மன நிலைகள்.

பெரும் நகரத்தில் அந்தந்தப் பகுதிகளிலும்… சிறு ஊர்களில் அந்தந்த ஊர்களின் தன்மையிலும்… ஊன்றிப் பார்த்தால் உனக்குள்ளே தெரிந்துவிடும் எல்லாமே.

அவ்விடத்தில் உள்ள மனநிலையைப் பொறுத்துதான் மண்வாடையும் வருகின்றது… நீரின் சுவையும் தெரிகின்றது.

ஒரு வீடு ஒரு வீதி ஒரு ஊர் என்று சொல்கின்றோம். ஒரு வீடு என்னும் பொழுது அவ்வீட்டின் தன்மையும் வீதியின் தன்மையும் கலந்திருக்கும். வீதியின் தன்மையிலே ஊரின் தன்மையும் கலந்து விடுகின்றது.

அவ்வூரில் உள்ளவரின் மனநிலையைப் பொறுத்துத்தான் அந்த ஊரில் உள்ள மண்வாடையும் வருகின்றது. அம்மண் வாடையின் ஈர்ப்புத் தன்மையை ஈர்த்துத் தான் அவ்விடத்தில் உள்ள மழையும் காற்றும் வருகின்றது.

அக்காலத்தில் பெரியவர்கள் மழைக்கும் நல்லோருக்கும் தொடர்புபடுத்திச் சொன்னதெல்லாம் இந்த வழியில் தான்… புரிகிறதா…?

மண்வாடையின் தன்மையினால் தான் அங்குள்ள பயிர்களும் வளர்கின்றன பாலகர்களும் வளர்கின்றார்கள். பாலகர்கள் வளர்வது என்பது உருவ அமைப்பைச் சொல்கின்றேன்.

ஒரு ஊரில் பிறக்கும் பிறவி எல்லாம் அந்த ஊரின் தன்மையில் தான் பிறந்திருக்கும்.
1.மன வாடையிலிருந்து மண் வாடை வந்து
2.பெரும் மழையில் செழித்திடும் காய்கனிகளில் இருந்தும் வளரும் பயிரிலிருந்தும்
3.உண்டு வளரும் பாலகர்கள் எல்லாம் ஒன்று போல் தான் இருந்திடுவார்கள்.

இப்பொழுது இக்கலியின் செயற்கை யுகமும் வாழும் வாழ்க்கைக்காக இடம் பெயரும் நிலையும் இந்நிலையில் வளர்ந்த பயிர்களை மறு இடத்திற்குக் கொண்டு செல்லும் நிலையும் வந்ததனால் “மாறுபட்டு இருக்கின்றது உலகமே இக்கலியில்…”

இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் மச்சாவதாரம் என்ற காலத்தில் எல்லாம் ஒரு நிலையில் உள்ளவர்களின் தன்மை எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து… ஒன்றுக்கு ஒன்று ஒத்த அமைப்புகள் இருந்தாலும் “இக்கலியில் தானப்பா… பெரும் செயற்கை யுகம் வந்தது…”

இடத்திற்கு இடம் தேசத்திற்குத் தேசம் மாறுபட்ட உருவ ஒற்றுமைகளைப் பார்த்திருக்கின்றாய். இந்நிலை எல்லாம் மண்ணிலும் மழையிலும் உள்ள ஈர்ப்புத் தன்மையினால் வந்ததப்பா.

ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தை எல்லாம் ஒன்றைப் பார்த்து ஒன்றைப் போல ஒன்று இருப்பது எல்லாம் இவ் ஈர்ப்புத்தன்மையினால்… அத்தாயின் அந்த வீட்டின் சுவாச நிலையினால் தான்.

இந்த ஜென்மத்தில் பிறந்த உடல் அடுத்த ஜென்மத்தில் வருவதில்லை. இந்த ஜென்மத்தில் இங்குள்ள மனநிலை மண் நிலை மழை நிலைகளைப் பொறுத்து அத்தாயின் சுவாச நிலை வருகின்றது உடல் அமைப்பு.

1.அவ்வுடலின் ஆவி மட்டும்தான்… முன் ஜென்ம ஆவி.
2.இவ் உடலை விட்டு ஆவி பிரிந்து சென்றால் இந்த ஜென்மத்தில் இருந்த உடல் இந்த ஜென்மத்திலேயே அழிகின்றது.

மறு ஜென்மம் எடுக்கும் பொழுது எந்த இடத்தில் பிறக்கின்றோமோ அங்குள்ள சூழ்நிலையை மனநிலை மண் நிலை மழை நிலையைப் பொறுத்துத் தான் “அவ்வுடல் வருகின்றது…” புரிந்ததா பாட நிலை…?

வீட்டில் பூச்சி வருவதெல்லாம் எந்நிலையில்…? அணுவின் அணுக்கள் எல்லாம் வருவது எந்நிநிலையில்…? விட்டில் பூச்சி வருவதெல்லாம் ஊன்றிப் பார்த்தால் தெரிந்துவிடும்.

சோர்வுடன் இந்த மண்ணில் உள்ள அணுக்கள் எல்லாம் காற்றுடன் கலந்து வரும் ஈரப்பசையில் இருந்து… அக்காற்று அம்மண்ணில் மோதும் பொழுது அந்த அணுக்கள் எந்த ஆகாரத்தை எடுத்துச் சுவாசிக்கும் நிலையில் உள்ளதோ… அந்தக் காற்று அதன் மேல் படும் பொழுது அதற்கு உயிர் தன்மை வருகின்றது.
1.அக்காற்றின் அழுத்தம் அந்நிலையில் உள்ளவரை தான் அதன் உயிரும் சுற்றுகின்றது
2.அதன் சுவாச நிலைக்கு அதன் ஈர்ப்புத் தன்மை குறைந்து விட்டால் மடிகின்றது.

ஈசல் வருவதும் இதைப் போலவே…! எறும்புப் புற்றுகள் தோன்றுவதும் இதைப் போலவே. சில நொடிகளில் தோன்றி மறைவதைப் பார்த்திருப்பாய்… சில நாட்களில் வந்து மறைவதைப் பார்த்திருப்பாய்.

அதனுடைய ஆகாரம் கிடைக்கும் வரை தான் அதன் ஜீவன் எல்லாம்.
1.சுவாச நிலையில் தான் அதனுடைய ஆகாரங்கள் கலந்திருக்கும்…
2.சுவாச நிலை மாறுபட்டால் மடிகின்றது.
3.சுவாச நிலை சுவாச நிலை என்கின்றேன்… இவ்வுலகமே சுவாச நிலைதானப்பா.
4.செயற்கை நிலைக்கு நான் எதிரியப்பா
5.கலியுகத்தில் வந்ததெல்லாம் இச்செயற்கை வினையினால் தான்.

இன்றைய பாடங்கள் புரிந்ததா…?

இயற்கையைப் பயன்படுத்துபவன் மனிதன்… ஆனால் இயற்கையை வளப்படுத்துபவன் சித்தன்

இயற்கையைப் பயன்படுத்துபவன் மனிதன்… ஆனால் இயற்கையை வளப்படுத்துபவன் சித்தன்

 

உணர்வலையின் ஜீவ பிம்ப ஞானத்தால் தான் “நுண்ணிய காந்த ஈர்ப்பலையை…” நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

1.இந்த மனித உடலுக்குள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும் இவ்வுணர்வலையின் செயலையும்
2.இவ்வெண்ண சுவாசத்தால் “ஒரு நிலைப்படுத்தும்” பக்குவ மேம்பாட்டினால்
3.ஞான ஈர்ப்பின் நுண்ணிய காந்த அலையின் வளர்ச்சி ஒளியை
4.இவ்வுடல் முழுமைக்கும் ஈர்க்கவல்ல சக்தி முறையை வழிப்படுத்தும் செயல் உணர்ந்து
4.நம் ஜெப நிலை இருக்கும் பக்குவம் தான் “ஓ…ம் என்ற நாதமுடன் ஈர்த்து வழி பெறுங்கள்…!” என்னும் யான் சொல்லி வரும் நிலை.

இந்த உடலுக்கு உணர்வும்… உணர்வுடன் கூடிய குண அமிலங்களும்… குண அமிலங்களுடன் வழி நடத்தும் எண்ண சுவாசமும்… இருந்தால் தான் ஜீவ சக்தியான நுண்ணிய காந்த அலையின் சக்தியை நாம் எடுக்க முடியும்.

நம் உயிராத்மாவிற்கு சேமிக்கும் சொத்து எது…? என்று பல தடவை வினாக்களை ஏற்கனவே எழுப்பியுள்ளேன்.

உயிராத்மாவிற்குத் தேவையான சொத்தைச் சேமிக்க வேண்டும் என்றால்… பலவான எண்ணத்தில் உணர்வின் உணர்ச்சி அலையின் வாழும் மனிதனின் ஞானம் எத்தகையதைப் போல் இருந்திடல் வேண்டும்…?

இன்றும் பல காலமாகவும் பல மேதைகள் புதிய புதிய செயல் முறைகளைக் கண்டுபிடித்து விஞ்ஞானச் செயலும் கல்வி ஞானமும் இன்னும் சிலர் கவிதை ஞானமும் பெற்றுத்தான் வாழ்கின்றனர்.

இந்த ஞானம் எத்தகையதைப் போன்றது..?

சித்தனின் ஞானத்திற்கும் இந்த ஞானத்திற்கும் மாறுபாடு என்ன…? சித்தனின் வளர்ச்சியும் ஞானம் தான்…! இவையும் ஞானம் தான்…!

சூரியனின் ஒளி சக்தியினால் இந்தப் பூமியின் வளர்ச்சி பூமி எடுத்து வளர்ந்து பலவாக உள்ளது. வளர்ந்துள்ள இயற்கையில் இருந்து அதிலுள்ள சத்தான நமக்குகந்தது எது..? என்று அறிந்து அதன் பெருக்கத்தை உற்பத்தியாக்கி அதன் சுழற்சி செயலில் இருந்தே மேன்மேலும் புதிய புதிய படைப்புகளை ஒன்றுடன் ஒன்று கலந்து அதன் பலனைப் பெறுவது போன்ற ஞானம் தான் விஞ்ஞானமும்.. இன்றைய கல்வி ஞானமும்… கவி ஞானமும்…! எல்லாமே.

ஆனால் சித்தனின் ஞானம் எப்படிப்பட்டது…?

இயற்கையில் பலவான நிலையில் இப்பலவற்றையும் கண்டு இவற்றிற்கு மேல் இவற்றையே வாழ வைக்கும் நிலை எவை..? என்பதனை உணர்ந்து இந்நிலையின் வளர்ச்சியின் “மூலம் அறிந்திட…” இந்த மூலத்துடன் சென்றடையும் நிலையில் கலந்தால் தான் இன்றைய படைப்பைப் போன்று பலவான புதிய படைப்புகளை இயற்கையில் படைக்கவல்ல ஆற்றலுக்கு வழி பெறச் செல்லுகின்றான் சித்தன்.

1.இயற்கையில் விஞ்ஞானம் காணுகின்றான் மனிதன்.
2.அந்த இயற்கையையே வளரச் செய்கின்றான் சித்தன்…!

காற்றிலும் நீரிலும் ஒளியிலும் உள்ள அமிலங்களைக் கொண்டு விஞ்ஞானச் சாதனையான அணு குண்டையும் விஷ வாயுக் குண்டையும் பலவாகப் படைக்கும் இன்றைய மனிதன்
1.நீரையும் காற்றையும் ஒளியையும் படைக்க முடியுமா…?
2.இயற்கையில் விளைந்த நாணல் புல்லைக் காற்றும் நீரும் ஒளியும் இல்லாமல் விஞ்ஞானத்தால் படைக்க முடியுமா…?

ஆனால் காற்றையும் நீரையும் ஒளியையும் படைத்தவனும் மனிதனே.. சித்தனாகவும் ஆனான்.. சப்தரிஷியாகவும் ஆனான்… சகலத்தையும் படைக்கும் ஆற்றலின் ஒளி காந்த சக்தியாகவும் ஆனான்…!

அத்தகைய ஞானத்தின் படைப்பு தானப்பா நீயும் நானும்…!

அந்த ஞானத்தையே பெறவல்ல சக்திக்கு ஜீவத் துடிப்புக் கொண்ட எண்ண சுவாசம் இருந்தால் தான் “எந்த ஞானமும் பெற முடியும்…!”

“ஒவ்வொரு ஸ்டேஜாகத் தான்” உங்களை வளர்ச்சி பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்

“ஒவ்வொரு ஸ்டேஜாகத் தான்” உங்களை வளர்ச்சி பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்

 

1.நட்சத்திரங்கள் பிற மண்டலத்தில் இருந்து வருவதை தனது உணர்வின் தன்மையாக எடுத்து
2.மற்றதோடு கலக்கப்படும் பொழுது “மின்னணுவாக” மாறுகின்றது.
3.அதாவது ஒரு கல்லுடன் கல் தட்டினால் “நெருப்பு” (பொறி) வருவது போன்று.

அதிலே முதல் நிலைகள் எடுத்துக் கொண்ட கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் மற்றதுடன் கலக்கப்படும் பொழுது “மின் காந்த ஒளிகளை” உருவாக்குகின்றது. அத்தையை அணுக்களாக மாறும் பொழுது தான் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.

அதனின் துகள்கள் பரவிக் கொண்டே வருகின்றது.

இதற்கு அடுத்து இருக்கக்கூடிய மற்ற நட்சத்திரங்கள் அதனின் வட்டப்பாதை மாறினாலும் உமிழ்த்திய உணர்வுகள் இங்கே பரவி இருப்பதும் அதுவும் மற்ற மண்டலங்களிலிருந்து கவர்வதை இதுவும் கவர்ந்து இதே கலவையாக்குகின்றது.

இப்படி அடுக்கடுக்காக 27 நட்சத்திரங்களின் கலவைகள் ஒவ்வொன்றும் கார்த்திகை நட்சத்திரத்தைப் போன்ற விஷத்தின் தன்மைகள் “கூடுவதும் உண்டு… குறைவதும் உண்டு…!”

இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது/. வானியலில் கடும் விஷத் தன்மைகள் பிரபஞ்சத்தில் இவ்வாறு பரவி வரும் போது
1.ஒவ்வொரு கோளும் துருவப் பகுதியின் வழியாகக் கவர்கின்றது.
2.அலைகளாக தன் உடல் (மண்டலம்) முழுவதும் அது பரவச் செய்வதும் சுழற்சியால் வெப்பம் ஏற்படுவதும்
3.இவை இரண்டும் கலந்தாலும் வெப்பத்தின் தன்மை சுழற்சி ஆகும் போது நடு மையம் அடைந்து விடுகின்றது.

ஆக… வெப்பத்தின் தணல் அதிகமாகி கொதிகலன்கள் கூடி நடு மையம் செல்லப்படும் பொழுது அந்தந்த மண்டலத்தில் “ஈர்க்கப்பட்ட உயிரணுக்கள்” அதனுடன் குவிக்கப்பட்டு உறையப்படும் போது பாறைகளுக்கு இடையில் சிக்கி பாறைகளுக்குள் அணுக்களாக மாறுகின்றது.

1.நமது பூமியிலும் ஆதியில் இவ்வாறு ஏற்பட்ட இந்த அணுவின் தன்மைகள்
2.பாறைக்குள் தேரைகளாகவும் வண்டுகளாகவும் விஷத்தன்மை கொண்ட சில உயிரினங்களாகவும் உண்டு.

இதே போன்று எல்லாக் கோள்களிலும் அது அது ஈர்த்து எடுத்துக் கொண்ட உயிரணுக்கள் அதிலே சிக்குண்டு வளர்ச்சியற்ற நிலையில் வளர்ந்து கொண்டு தான் உள்ளது.

1.நட்சத்திரங்களில் இவை இல்லை… ஆனால் சூரியனில் உண்டு
2.விஷ அணுக்களை உருவாக்கி இருந்தாலும் அதனுடைய கதிரியக்கப் பொறிகள் பெரும் மாற்றங்களை உருவாக்கும் தன்மைகளும் உண்டு.

ஏனென்றால் இதை எல்லாம் யாம் சொல்லிக் கொண்டு வந்தாலும் சிலவைகளைத் தொட்டுத்தான் காட்டலாம். ஏன் முழுமையாகச் சொல்லவில்லை…? என்று நீங்கள் எண்ணலாம்.

பொதுவாக கல்வியில் பாட நிலைகள் கொடுக்கும் பொழுது அது விஞ்ஞானியாக வரப்படும் பொழுது தான் அந்த முழுமை வரும்.
1.முதலில் கொஞ்சம் கொஞ்சமாகத் தொட்டுப் பார்த்து இணை சேர்த்து உணர்வினைப் பதிவு செய்து
2.பின் ஒவ்வொரு பாட நிலையும் ஒவ்வொரு ஸ்டேஜுக்குக் கூட்டமைப்புகள் வரப்படும் பொழுது தான்
3.கல்வி அறிவையே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

அதைப் போன்று தான் அந்த மெய் ஞானிகளின் அணுக்களை உங்களுக்குள் யாம் துணுக்குத் துணுக்காகப் பதிவு செய்யப்படும் பொழுது
1.அந்த ஞானிகள் உணர்வுடன் ஒன்றி வளரலாம்…
2.இந்தப் புவியில் வரும் விஷத்தன்மைகளை மாற்றிடும் சக்திகளை நீங்கள் பெறலாம்
3.நீங்கள் அதைப் பெற முடியும்… பெற வேண்டும் என்பதற்குத் தான் இவ்வாறு உபதேசிப்பது.

குருநாதர் எனக்கு எவ்வாறு அதைப் பயன்படுத்தினாரோ அதே போன்றுதான் உங்களுக்குள்ளும் கொடுக்கின்றேன் நீங்கள் இங்கே சமமாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள் நான் காட்டிலும் மேட்டிலும் அவதிப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன் பெற்றேன்.

அதை வளர்க்கும் முறைக்கு…
1.பல எத்தனையோ இன்னல்களை உருவாக்கப்பட்டு
2.அந்த இன்னல்களில் இருந்து அது எவ்வாறு மீள வேண்டும்…? என்ற நிலையில்
3.இன்னலான உணர்வுகள் என் உடலுக்குள் ஊடுருவி… அதனால்
4.உடலில் உருப்பெற்ற அணுக்கள் எவ்வாறு எல்லாம் மாற்றமடைகின்றது என்பதை தன்னில் தானே உணரும்படி செய்தார் குருநாதர்,

உங்களுக்கு யாம் அதையெல்லாம் செய்யவில்லை. உயர்ந்த ஞானத்தின் சக்தியே உங்களுக்குள் இப்போது பாய்ச்சப்படுகின்றது.

தாவர இனங்களுக்கு உரம் கொடுத்து அதைச் செழித்து வளரச் செய்வது போன்று உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களிலும்… ஒவ்வொரு ஜீவ அணுக்களிலும் அந்த அருள் மகரிஷிகள் உணர்வை உரமாக்குகின்றோம். அதை நுகரும் ஆற்றலையும் பெறச் செய்கின்றோம்.

அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் நீங்கள் செல்லப்படும் பொழுது “பேரண்டத்தின் பேருண்மைகளை நீங்கள் அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றீர்கள்…”

இப்பொழுது இல்லை என்றாலும்…
1.இதனுடைய வரிசையில்… “யாரெல்லாம் பின்பற்றுகிறார்களோ… அவர்கள்”
2.இந்த அண்டத்தின் நிலைகள் உங்கள் பிண்டத்திற்குள் எப்படி இயங்குகின்றது…? என்பதை நிச்சயம் உணர முடியும்.

ஒலி – ஒளி

ஒலி – ஒளி

 

“ஒளியைப் பற்றி சொல்கின்றேன்” என்று சொன்னேன்.
1.இவ்வுலகின் தன்மையிலேயே கலந்து இருப்பதும் ஒலி தான்
2.நீ பேசுவதும் ஒலி தான்
3.உன்னுள் இருந்து வரும் மூச்சும் ஒலி தான்
4.சிறு அசைவும் ஒலி தான்
5.பெரும் மின்னலும் ஒலி தான்
6.மழைத்துளியிலும் ஒலி உள்ளது.
7.மலர் மொக்கு விரியும் பொழுதும் ஒலி உள்ளது.

உலகம் ஒலியுடனே உருளுகின்றது ஒளியுடன் மட்டும் உலகம் இல்லை… ஒலியுடனும் கலந்து இருக்கின்றது. சிறு எறும்பின் வார்த்தையிலும் ஒலி உள்ளது… நம் உலகச் சுழற்சியிலும் ஒலி உள்ளது.

ஒலி அழிவதில்லை… காலமுடன் கலக்கின்றது.
1.உடல்கள் அழிகிறது… ஆனால் நாம் விட்ட மூச்சும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கின்றது.
2.ஆத்மாவானது மறு உடல் பெறுகின்றது… ஆனால் “ஒலி” அவன் எடுக்கும் எந்த ஜென்மத்திலும் அழிவது இல்லை… மாறுவதும் இல்லை.

அழிவதும் இல்லை மாறுவதுமில்லை என்றேன் அல்லவா. அப்போது இந்த ஒலியெல்லாம் என்னவாயிற்று…? என்று நினைக்கின்றீர்கள். இவ்வுலகம் தன்னைத்தானே சுற்றுகிறது என்கின்றீர்கள்…! அது சுற்றுவதற்குச் சக்தி எதிலிருந்து வந்தது தெரியுமா…?

இந்த ஒலியின் தன்மை எல்லாம் ஒன்று சேர்ந்து… காற்றுடனே கலந்து உலகைச் சுற்றிவிடும் நீ விட்ட நல் மூச்சும்.

நல் மூச்சு…! என்பதன் பொருள்… நல்லவர் உள்ள நாட்டில் எல்லாம் மழை பெய்கிறது என்று சொல்லும் பழக்கத்தில் இல்லையா…!

நல்லுணர்வு உள்ள வீட்டில் இலட்சுமி களை உள்ளது என்கிறோம். தன் உணர்வை மறந்து விட்ட நிலையில் உள்ள வீட்டில் எல்லாம் நாதியற்ற நிலைதானப்பா. அந்த வீட்டைப் பார்த்தவுடன் மூதேவி குடி இருக்கின்றாள் என்பதும் இது தான்.

இலட்சுமியும் பிறக்கவில்லை… மூதேவியும் பிறக்கவில்லை… ஒலியில் தான் எல்லாம் உள்ளதப்பா…!

ஒளியைப் பற்றி நினைத்து வந்தால் ஒலியின் பாடம் என்பது தான் முதல் பாடம். எல்லாம் முதல் பாடம் என்கின்றீர்கள் இரண்டாம் பாடம் இல்லையா…?
1.எல்லாமே முதல் பாடமாக இருக்கட்டுமப்பா
2.முதலாவதாகவே இருக்கட்டும்… முடிவு நிலை வேண்டாம்
3.எல்லாத் தன்மையுமே முதல்… முதல் தன்மை தான்.

குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நிலையும் முதல் தான் குழந்தைக்கு. என்றும் முதலாகவே இருந்திடும் நிலையிலேயே பாடங்கள். முதல் பாடம்… முதல் பாடம்…! என்பதன் பொருள் இதுவே தான்.

மூல முதல்வர் என்று சொல்கின்றோம் அது போல மூல இரண்டாமவர் என்று சொல்கின்றோமா…? “எல்லாமே முதல் பாடமாக இருக்கட்டும்…”

ஒலியின் தன்மையை உணர்ந்திடுவாய். ஒலிக்கும் இசையில் உணர்ந்திடுவாய். ஒளியை அமைப்பது இந்த ஒலி தான். ஒளிமயமான எதிர்காலம் என்று சொல்கின்றோம். ஒளிமயமான எதிர்காலம் ஒலியில் இருந்து தான் வருகின்றது.

ஒலிக்கும் ஒலியெல்லாம் எதிலிருந்து என்கின்றாய்…? ஒளியின் தன்மை தானே புரிந்திடும். இந்தப் பாடத்தின் தன்மை புரிந்ததா.

நீ ஜெபிக்கும் ஜெபமும் என்னிடம் தான்… நீ துவேஷித்த சொல்லும் என்னிடம் தான். உன் ஜெபம் மட்டும் தான் என்னிடம் அடையும்… துவேஷம் எங்கு செல்கிறது என்று நினைக்கின்றாய்…?

ஜெபம் துவேஷம் காற்றில் தான் கலக்கின்றது புரிந்ததா…? ஒளியின் தன்மை சொன்னேன்… ஒளியின் தன்மை புரிந்ததா…? ஒலியில் தான் ஒளியின் தன்மை இருக்கின்றது.

இதைப் புரிந்து கொண்டால் ஒலியின் தன்மை புரியும். ஒளி எங்கிருந்து வருகின்றது…? ஒலியிலிருந்து தான் ஒளி உள்ளது.

1.சுவாச நிலை என்பதும் இது தான்
2.சுவாச நிலை ஒன்றுபட்டால் ஜெப நிலை கூடிவிடும்
3.ஜெப நிலை கூடிவிட்டால் ஒளியின் தன்மை தெரியும் என்கிறோம்.

சுவாச நிலை என்னும் பொழுதே ஒலியாக ஆகிறது. அந்த ஒலி தான் ஒளியப்பா. விளக்கில் தான் ஒளியுள்ளது. விடியும் விடிவில் தான் ஒளி உள்ளது. சந்திரனும் சூரியனும் தான் ஒளி தருகின்றது.

நட்சத்திர மண்டலத்தில் உள்ள ஒலி எல்லாம் ஒளி என்கிறார்கள். அந்த ஒலி ஒளி அல்ல. ஒலிதானப்பா ஒளியே. நம்முடைய சுவாசத்தில் உள்ள ஒலி நல் ஒலியாக உள்ள நேரத்தில் தான் நல்ல பூவும் பூக்கும் நல்ல கனியும் கனியும்.

என் தாயார்… என் தாயாரின் தாயார் சமைத்த ருசி… இப்பொழுது இல்லை என்கிறாய்.
1.காலநிலை மாற மாற மன நிலையும் மாறிவிட்டது.
2.மனிதனும் மூச்சுக் காற்றும் மாறிவிட்டது.
3.அந்நிலையில் இருந்து வரும் தன்மையில் இருந்து தான் விளையும் பயிரின் ருசி எல்லாம்.

தர்மம் நியாயம் எங்கு உள்ளது…? அன்றுள்ள நிலையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை.

பிறகு எப்படி இருக்கும் நிலை எல்லாம்…? “சுவாச நிலையை மாற்றிக்கொள்” என்பதும் இது தானே. சுவாச நிலையைப் பற்றிச் சாமி விடிய விடியச் சொன்னாலும் ஏற்றுக் கொண்டீரா…? இப்பொழுது புரிகின்றதா ஒலியின் தன்மையும் ஒளியின் தன்மையும்.

உன்னுள்ளே ஒளி பிறந்திட “ஒலியை முதலில் கற்றிடு…” குழந்தைக்கும் புரியும்படி இந்தப் பாட நிலை உள்ளது.

ஒளியின் தன்மைக்குப் புதுப் பாடம் வேண்டுமா…? ஒளியைப் பற்றி இன்னும் கேட்டால் நான் ஒலியைப் பற்றி தான் மீண்டும் சொல்வேன்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல… பெரும் மேகங்கள் வந்தால் மறைந்துவிடும். மேகத்தின் தன்மையே மின்னல் வந்தால் மறைத்திடும்.

அது போல
1.நல் உணர்வை எடுத்து நல் மூச்சு விட்டிடுவாய்.
2.நல் மூச்சு விட்டால் ஆயிரம் நஞ்சின் தன்மை இருந்தாலும் “ஒருவரின் நல் மூச்சு அதை மாற்றிவிடும்…”

வைரத்தின் தன்மை வார்த்தையில் வேண்டுமென்றேன் அல்லவா வைரத்தின் தன்மை எல்லாம் அதன் ஜொலிப்பில் தான் உள்ளது அதற்குள்ள மதிப்பை பார்த்தாயா…?

அது போலத் தான் எல்லாமே. நல்லுணவை நான் சமைத்தேன். உனக்குள்ளே ஊட்டி விட்டேன் இந்த நிலையை மாற்றி விடாமல் ஊக்கமுடன் இருந்திடுவாயா…? புது பானையில் விறகு வைத்துச் சமையல் செய்யும் காட்சி…!

1.நான் (ஈஸ்வரபட்டர்) இங்கும் உள்ளேன்… அங்கும் உள்ளேன்…
2.எங்கும் உள்ளேன்… எல்லாமில் எல்லாமாக உள்ளேன்.