ஒலி(ளி)மயமான உலகம்

ஒலி(ளி)மயமான உலகம்

 

இவ்வுலகிற்கு “காற்று தண்ணீர் ஒலி” இம்மூன்றும் எப்படி முக்கியமோ அதைப் போல் தான்
1.இம்மூன்றையும் பெறுவதற்கு ஆதி முதலாம் “ஓம்” என்ற நாதத்தை எழுப்பும் சப்த அலையும் மிகவும் முக்கியம்.
2.”சப்த அலை” இல்லாவிட்டால் காற்று வீசிட முடிந்திடாது.
3.அக்காற்று இல்லாவிட்டால் ஒளி பெற்றிட முடியாது.
4.அவ்வொளிக் கதிர்களிலிருந்து வரும் நீரின் நிலையும் நாம் பெற்றிருக்க முடியாது.

இம்மூன்றிற்கும் மூலமான அச்சப்த அலைகள் நாம் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை நமக்கு அருளும் நிலை “வியாழன் மண்டலத்திற்குத் தான்” கிடைத்துள்ளது.

வியாழன் மண்டலம் இப் பூமியை விட பத்தில் ஒரு மடங்கு அளவு தான் சுற்றலின் வேகம் உள்ளது. நாம் இங்கு பத்து நாள் என்று கணக்கிடும் நாள் வியாழனில் ஒரு நாள் தான். நீண்ட பகலும் நீண்ட இரவும் கொண்டதுமே வியாழன் மண்டலத்தின் நிலை.

இப்பூமிக்கு மேல் பெரிய மண்டலம் அது. பெரிய மண்டலம் என்பது வியாழன் மண்டலத்தில் மூன்றில் ஒரு பகுதி தான் பூமியின் நிலை உள்ளது

அந்த வியாழன் மண்டலத்திலிருந்து தான் “சப்த அலைகள்” காற்றுடன் கலந்து அச்சூரியனின் அதிவேகச் சுற்றலில் அவ்வியாழன் மண்டலத்திலிருந்து வரும் சப்த ஒளிக்கதிர்களை ஈர்த்து இப்பூமிக்கும் மற்ற மண்டலங்களுக்கும் இச்சூரியனிலிருந்து சூரியனின் ஒளிக்கதிர்களைப் பெறும் எல்லா மண்டலங்களுக்குமே இச்சப்த அலைகளைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் உள்ளது.

இச்சப்த அலைகளிலிருந்துதான் நாம் நுகரும் தன்மையும் வருகின்றது. முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன். அவ்ஒலியிலிருந்து கலந்து தான் நமக்கு மணமும் பெற முடிகின்றது என்று.

அம்மணம் எல்லா வகை மணம் பெறுவதற்கும் அச்சப்த அலைகளினால் தான் நாம் பெற முடியும்.
1.வியாழன் நிலை இல்லாவிட்டால் இச்சப்த அலைகளும் இல்லை.
2.சப்தத்திலிருந்து ஒளியும் காற்றும் நீரும் பெறும் நிலையும் இல்லை.

இச்சூரியனைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மண்டலங்களிலிருந்தும் ஒவ்வொரு நிலை கொண்ட அணுக்கதிர்களை அச்சூரியன் பெற்றுத் தான் நமக்கு அளிக்கின்றது எல்லா நிலைகளையுமே.

மழை வருவதற்கும் நீர்நிலை பெறுவதற்கும் செவ்வாய் மண்டலத்தின் நிலையைப் பற்றி விளக்கினேன். அச்செவ்வாய் மண்டலத்திற்கு வியாழனிலிருந்து அணுக்கதிர் சூரியனின் மேல் பட்டு… அச்சூரியனிலிருந்து பாயும் தன்மையில் செவ்வாய் மண்டலம் ஈர்த்து வெளியிடும் நிலையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே இப்பூமி பெறுகின்றது.

இப்பூமியைப் போல ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு நிலை உள்ளது. இப்பூமியிலிருந்து சில நிலைகள் இவ் பூமியை நேர்கொண்டுள்ள மண்டலங்களுக்குப் பெற்றுக் கொள்ளும் தன்மையும் உள்ளது.

நாம் இங்கிருந்து பார்க்கும் பொழுது சந்திரனின் நிலை எப்படிக் குளிர்ந்து காணப்படுகின்றதோ அதே நிலை கொண்டுதான் பூமியின் நிலையையும் சந்திரனிலிருந்து கண்டிடலாம்.

சூரியனிலிருந்து சூரியனை மையமாக வைத்துச் சுற்றி கொண்டுள்ள எல்லா மண்டலங்களின் நிலையும் இந்த நிலை கொண்டு தான் நாம் சந்திரனைக் காணும் நிலை கொண்டு தான் குளிர்ந்த நிலையில் காணப்படுகின்றது.

1.எல்லா மண்டலங்களின் அணு சக்தியை ஈர்த்துச் சுற்றும் தன்மை உள்ளதால் தான் சூரியனின் வேகம் துரிதப்படுகின்றது.
2.சூரியனின் வேகம் துரிதமாகச் சுற்றுவதால் தான் அதன் ஒளியும் மற்ற எல்லா மண்டலங்களுக்கும் அதிகமாகப் பெறும் பாக்கியம் பெற்றுள்ளது.

சூரியனை மையமாக வைத்துச் சுற்றி கொண்டுள்ள மண்டலங்களைப் போல பல சூரியன்களும் பல மண்டலங்களும் ஜீவனுள்ள மண்டலங்களும் ஜீவன் பெறாத மண்டலங்களும் கணக்கில் அடங்கா நிலை கொண்டு சுற்றி கொண்டுள்ளன.

பூமியில் மழை வருவதற்கு “மூலமே வியாழன் கோள் தான்”

பூமியில் மழை வருவதற்கு “மூலமே வியாழன் கோள் தான்”

 

சிறு பிராயம் முதல் கொண்டு பள்ளிகளில் போதிக்கும் முறையில் மழை எந்த நிலை கொண்டு வருகிறது…? என்று போதிக்கின்றார்கள்.

இம்மழையை நாம் பெறுவதற்கு நம்மைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் நிலையிலிருந்து மூலமாக உள்ளது “வியாழன் மண்டலம் தான்…”

சூரியனிலிருந்து பாயும் ஒளிக் கதிர்களைக் கொண்டு
1.அவ்வியாழன் மண்டலம் ஒளிக்கதிரைத் தன்னுள் ஈர்த்து அது பாயும் தன்மையைக் கொண்டு (பூமி ஈர்க்கும் தன்மையைக் கொண்டு)
2.இப்பூமியின் மேல் அவ்வொளிக்கதிர்கள் பட்டு… அப்பூமி ஈர்த்து… அப்பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகள் வெளிப்படுவதைக் கொண்டு
3.புதன் மண்டலத்தில் இருந்து வரும் நாம் பெறும் காற்று மண்டலம்… காற்று மண்டலம் என்னும் பொழுது
4.புதனிலிருந்து வரும் காற்றை அளிக்கும் அணுக்கதிர்கள் பூமியிலிருந்து கிளம்பும் உஷ்ண மண்டலத்தைக் குளிர விடும் தன்மையில்
5.அந்தந்த நிலைகளில் மேகங்கள் படர்ந்து உள்ள நிலையில்
6.அதன் மேல் செவ்வாய் மண்டலத்தினுடைய சப்த அலைகள் மோதும் பொழுது வருவதே “மழை மேகங்கள் எல்லாமே…”

பூமியில் உள்ள மழை நிலை மற்ற மண்டலங்களில் மாறுபடுகின்றது. சந்திரனில் இந்நிலை கொண்ட பெரும் மழை இல்லை. ஈரப்பசை உண்டு… மழை நிலை மாறுபடுகிறது.

பூமியின் நிலையை எண்ணிப் பார்த்தால் பல நிலைகளில் ஒரே மாதிரி இல்லாமல் மாறுபட்ட நிலைகளில் உள்ளதின் நிலையில் எப்படி உள்ளன…? என்று எண்ணிடலாம்.

சில இடங்களில் மாறுபட்ட உலோகத் தன்மையும் நேற்றைய பாடத்தில் சொன்னபடி பல நிலைகள் உள்ள நிலை எல்லாம் ஆரம்பக் காலத்தில் எப்படி வந்தன…?

இவ்வுலகம் இவ்அழியா உலகம் ஆரம்ப நிலையில்… ஆரம்ப நிலை என்பது உலக ஆரம்ப நிலை அல்ல. கலி முடிந்து கல்கி வருகின்றது என்கின்றோம் அல்லவா.

அதைப்போல யுகம் என்று சொல்லும் வழியில் இவ்வுலகம் மாறுபட்டு வரும் தன்மை கொண்டு அந்த நிலையில் சூரியனிலிருந்தும் மற்ற மண்டலங்களில் இருந்தும்… இப்பூமியின் மேல் வந்து தாக்கும் அணுக்கதிர்கள் எந்த நிலையில் வந்து தாக்குகின்றனவோ… அந்த நிலை கொண்டே அந்தந்த நிலைகளில் உள்ளன நிலைகள் எல்லாம்.

மனிதனுக்கு மட்டும் இல்லையப்பா கரு தோன்றி வளரும் தன்மை. இவ் உலகுக்கே உள்ளது கரு நிலை. இவ்வுலகினில் சில நிலைகளில் பயிர்கள் வளராத நிலையிலும் உள்ளன… சில இடங்களில் பூரித்து வளரும் தன்மையும் உள்ளது.

1.வளராத கல் வளராத வைரம் வளராத தங்கம் இப்படிப் பல நிலைகளைச் சொல்லிக் கேட்டிருக்கலாம்
2.அவ்வளராத இடத்தில் இப்பூமியின் தன்மை ஜீவனற்ற நிலையில் உள்ளது.

உயிரினங்களுக்கு மட்டும் ஜீவன் பெற்றுப் போகும் நிலை எப்படி உள்ளனவோ அதைப் போல் தான் இப்பூமியின் நிலைக்கும் உள்ளது.

இப்பூமியில் கடலில் உள்ள தண்ணீர் உப்பு உடையதாகவும் ஆற்றுப்படுகையின் தண்ணீர் சுவையுடன் உள்ளதாகவும்… கடலின் அருகிலேயே உள்ள கிணறுகளில் உள்ள தண்ணீர் சுவை உள்ளதாகவும் கடலுக்கு வெகு தூரத்தில் உள்ள சில ஊர்களில் உள்ள கிணற்றின் தண்ணீர் உப்புக் கரிப்பதாகவும் உள்ளது.

இந்நிலை எல்லாம் எந்த நிலை கொண்டு வந்தன…?

சூரியனிலிருந்து வரும் பாயும் ஒளியைக் கொண்டு அந்தந்த இடத்தில் அப்படியே இந்நிலை பெறுவதல்ல.

இப்பூமி சுழலும் வேகத்தில் பூமித்தாய் தன்னுள் ஈர்த்துள்ள சக்தியைக் கொண்டு
1.பூமியின் “உள்நிலையின் நிலை” என்று முதலிலேயே உணர்த்தியுள்ளேன்.
2.அந்நிலை கொண்டு அதை ஈர்த்து அது வெளிக் கக்கும் நிலையைக் கொண்டு
3.அந்தந்த இடங்களில் உள்ள வடிகால்களின் மூலமாக அது வெளிப்படும் தன்மையில் வளர்வது தான்
4.மண்ணின் நிலையும்… அம்மண்ணிற்குத் தகுந்த சுவையும் அத்தண்ணீரில் நமக்குக் கிட்டுகின்றது.

பூமிக்கும் சுவாச நிலையுண்டு

பூமிக்கும் சுவாச நிலையுண்டு

 

இவ்வுலகம் இவ்வுலகைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் ஈர்ப்புத் தன்மைகளைக் கொண்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே சுற்றும் இவ்வுலகினில்… எல்லா இடங்களும் ஒன்று போல் இல்லாமல் இடத்திற்கு இடம் மாறுபட்டு… மழை காற்று உஷ்ணம் இப்படிப் பல நிலைகளில் மேடு பள்ளம் சமதரை கடல் இப்படியும் ஒன்று போல் இல்லாமல் ஒரே நிலையில் சூரியனிலிருந்து சக்தியைப் பெறும் நிலைகளில் ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபட்ட நிலை இவ்வுலகினிலே உள்ளதல்லவா.

இவ்வுலகம் சுழலும் தன்மையில்
1.அங்கங்கு வசிக்கின்ற உயிரணுக்களின் நிலையைக் கொண்டு அங்குள்ள பூமியின் நிலை உள்ளது…
2.அங்கங்கு வளரும் தாவரங்களின் நிலையும் உள்ளது.
3.அந்நிலை கொண்டே அச்சூரியனின் சக்தியை எந்த நிலை கொண்டு பூமி ஈர்த்து வெளிப்படுத்துகின்றதோ
4.அந்த நிலையில் தான் உள்ளன அங்கங்கு உள்ள நிலை எல்லாம்.

சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் பூமியில் படும்பொழுது பூமி அச்சக்தியை தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றது. ஈர்த்த நிலை கொண்டு இப்பூமி விடும் சுவாச நிலை கொண்டு தான் அந்தந்த நிலையில் உள்ள இயற்கைத் தன்மை எல்லாம்.
1.உயிரணுக்களுக்கு மட்டுமல்ல சுவாச நிலை
2.இப்பூமித் தாயும் ஈர்த்து எடுத்துச் சுவாசிக்கும் தன்மை பெற்றவள் தான்.

அவள் ஈர்த்து எடுத்த நிலையில் வளர்வதுதான் உயிர் அணுக்களும் மற்ற தாது பொருளும் தாவர வர்க்கங்களும் மனிதனிலிருந்து எல்லா உயிரணுக்களும் தான்.

1.மழையும் எரிமலையும் பனிமலையும் குளம் ஆறு கடல் எல்லாமே உயிரணுக்கள் தான்.
2.ஜீவன் உள்ள ஜீவன்கள் தான் எல்லாமே.

சில இடங்களில் வளர்ந்திடும் பனி மலையும் எரிமலையும் எந்த நிலை கொண்டு வந்ததப்பா இப்பூமியில்…?

இப்பூமியில் உள்ளது போல் கலந்த நிலை எரிமலை பனிமலை சமநிலை இப்படிப் பல கலந்த நிலை ஒவ்வொரு மண்டலத்திற்கும் மாறுபடும் தன்மையில் உள்ளது.

எரிமலை எப்படித் தோன்றுகிறது…? ஆகாயத்திலிருந்து அக்கினிப் பிழம்பு வந்து அத்தரையில் மோதி வளர்ந்ததுவா எரிமலை…? இல்லையப்பா…!

இப்பூமியின் மேல் ஒவ்வொரு நிலை கொண்டு இப் பூமி சுழலும் வேகத்தில் மழை பனி காற்று இப்படி எல்லா நிலைகளும் மோதும் பொழுது இப்பூமி ஈர்த்து அப்பூமியின் உள்நிலையில் பெரும் காற்று மண்டலம் உள்ளது.

அப்பூமி ஈர்க்கும் தன்மையில்
1.உள் நிலையில் உள்ள உஷ்ணமான காற்றும் குளிர்ந்த காற்றும் ஒன்றை ஒன்று மோதும் நிலை கொண்டு
2.பல நிலை கொண்ட தன்மையில் பூமி ஈர்ப்பதினால் அந்த நிலையிலேயே அத்தன்மை வெளிப்பட்டுத் தான்
3.அப்பூமியிலிருந்து பொங்கி வருவது தான் எரிமலைகளும் பனி மலைகளும்.

இப் பூமியின் மேல் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு நிலை கொண்ட தன்மை உள்ளதெல்லாம் இந்த நிலை கொண்டு தான். நில அதிர்வு வருவதும் நில வெடிப்பு வருவதும் சூரியனிலிருந்து வரும் தாக்கும் நிலையில் வருவது அல்ல.

சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்களை இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் நிலையில்தான் வருகின்றன இந்நிலைகள் எல்லாம்.

இப்பூமியில் மழை நிலை அதிகம் உள்ளது.
1.பூமிக்கு எந்த நிலை கொண்டு மழை வருகின்றது…?
2.எந்த நிலை கொண்டு ஒலி வருகிறது…?
3.எந்த நிலை கொண்டு ஒளி வருகிறது…?
4.இப்படி மணம் சுவை காற்று இப்படிப் பல நிலைகளையும் இப் பூமி எப்படிப் பெறுகிறது…? என்பதனையும் விளக்கிடுவேன்.
5.இப்பூமி பல நிலைகளைப் பெறுவதற்கு பல மண்டலங்களின் தொடர்புடன் தான் எல்லாமே உள்ளன இப் பூமிக்கு.

உணர்வின் ஒலிகளையும் அதனின் இயக்கங்களையும் குருநாதர் எனக்குக் காட்டிய விதம்

உணர்வின் ஒலிகளையும் அதனின் இயக்கங்களையும் குருநாதர் எனக்குக் காட்டிய விதம்

 

குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் செல்கின்றார் ஒரு மரத்தின் சக்தி எவ்வாறு இருக்கின்றது…? என்று காட்டுகின்றார்.

ஆனால் அந்த மரத்தில் வாழும் புழுக்கள் எப்படி இருக்கின்றது…? என்பதனைக் காட்டுவதற்காக மரத்தை உற்றுப் பார்க்கும்படி சொல்கின்றார். ஒரு கையை அதன் மேல் வைத்து உற்றுப் பார்க்கும்படி சொல்கின்றார்.

அவர் கையில் இருக்கக்கூடிய ஒரு ஆயுதத்தை வைத்து மரத்தின் தாவை (மரத்தின் கொப்பு) வெட்டுகின்றார். அந்தத் தாவு நிறைய புழுக்கள் உண்டு. அதில் இருக்கக்கூடிய சத்தை அது உணவாக உட்கொள்கின்றது.

1.ஆனால் வெட்டும் பொழுது அந்தப் புழுக்கள் கத்துகின்றது தன் இரை போய்விடுமே என்று…!
2.மரத்தின் கொப்பு கீழே முறிந்த பின் அதிலிருக்கக்கூடிய புழுக்கள் கத்தக்கூடிய நிலையும் ஒன்றுடன் ஒன்று ஓலமிடக்கூடிய நிலையும்
3.அதன் உணர்வு ஏங்கி வெட்டுபவரைப் பார்ப்பதையும் உற்று நோக்கும்படி செய்தார்.

உயிரணு தோன்றிய பின் புழுவாக உடல் பெற்ற நிலையில் தன் வாழ்க்கைக்கு எந்த மரத்தின் தழையை உணவாக உட்கொள்கின்றதோ அதை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மையைப் பார்க்கின்றது.

1.அதனுடைய சப்தங்கள் பயங்கரமாக இருக்கின்றது…!
2.அதை பன்மடங்கு பெருக்கி அதனுடைய ஒலிகளை எடுக்கும்படி செய்கின்றார்.

அதே சமயத்தில் மரத்தையும் உற்றுப் பார்த்து கை வைத்துப் பார்க்கப்படும் பொழுது
1.மனிதனை அடித்தால் எப்படி நாம் துடிக்கின்றோமோ
2.கை, கால் அங்கங்களை இழந்தால் எப்படி வேதனைப்படுகின்றோமோ
3.அதை வெட்டும் பொழுது அதனுடைய சோர்வலைகள் எப்படி ஊடுருவுகின்றது…?
4.மரத்தின் உணர்ச்சிகள் எவ்வாறு தடைப்படுகின்றது…? என்பதையும் காட்டுகின்றார்.

அந்த மரம் தன் இலைகளின் நுனிகளிலிருந்து தன் இனமான சத்தை… இதற்கு முன் தாய் மரம் விளைய வைத்த சத்தினை சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி இருப்பதைக் கவர்ந்து தான் உணவாக உட்கொள்கின்றது. அதை வைத்துத் தான் அந்த மரம் வளர்கின்றது.

நமக்கு எப்படி மூட்டைப் பூச்சி கடித்தாலோ கொசு கடித்தாலோ உணர்ச்சியின் தன்மை படுகின்றோமா இதைப் போல
1.இந்தப் புழுக்கள் மரத்தின் இலை நுனிகளை உணவாக உட்கொள்ளும் பொழுது
2.அதைக் கடிக்க அந்த உணர்வின் தன்மை நெளிந்து கொடுப்பதும்
3.இதைப்போல அதனின் உணர்வின் உணர்ச்சிகள் ஒரு விதமான ஓசைகளை எழுப்புகின்றது.

தாவு வெட்டிக் கீழே விழுந்த பின் இதனுடைய துடிப்பும் மனிதன் ஒரு கையை இழந்தால் நாம் எப்படி வாடுகின்றோமோ வேதனைப்படுகின்றோமோ “அந்த உணர்வின் ஒலி அதிர்வுகள்” அங்கே வருவதைக் காட்டுகின்றார்.

இதையும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்தால் அதை நாம் நுகர்ந்தால் அந்த மரம் வெட்டுண்ட நிலையைப் பார்க்கும் பொழுது “உங்கள் உணர்வுகளும் சோர்வடைவதைப் பார்க்கலாம்…”

ஒரு மரத்தை வெட்டுகின்றீர்கள்
1.அதிலிருந்து வரக்கூடிய உணர்வை நீங்கள் ஆனந்தமாகச் சுவாசித்தாலும்
2.வெட்டியபின் உடலில் சோர்வின் தன்மை நிச்சயம் உணர முடியும் என்று இதைத் தெளிவாக்குகின்றார்.

வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் வரப்பப்படும் பொழுது எதன் உணர்வை அது கவர்ந்து கொள்கின்றதோ அந்த கவர்ந்து கொண்ட உணர்வுகள் இந்தச் செடியின் தன்மை போகும் பொழுது இன்னொரு செடி அதைக் கவருகின்றது.

ஈர்க்கும் சக்தி குறையப்படும் பொழுது உணவு இல்லை என்றால் அதன் பகுதி எடுக்கப்படும் பொழுது அதனுடைய நிலைகள் என்ன…? என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

ஏனென்றால்
1.இயற்கையில் எப்படி ஜீவன் கிடைத்தது…?
2.உணர்வுக்கொப்ப உடல் எப்படி அமைந்தது…? என்பதை
3.காடுகளுக்கு அழைத்துச் சென்று முதலில் இதைத்தான் குருநாதர் காட்டினார்.

ஜீவன் இல்லாத நிலையில் எதுவுமே இல்லை

ஜீவன் இல்லாத நிலையில் எதுவுமே இல்லை

 

உயிரணுக்கள் இம்மண்டலம் மட்டுமல்ல பல கோடி மண்டலங்களிலும் கணக்கிலடங்கா மண்டலங்களிலும் உயிரணுக்களும் ஜீவராசிகளும் வாழ்கின்றன.

ஒன்றை ஒன்று பின்னியே வாழும் உயிரணுக்கள்
1.அவ்வுயிரணுக்கள் வாழ ஒன்றை ஒன்று அழித்தே ஒன்றின் சக்தியை ஒன்று பெற்றே
2.அழித்த நிலையிலும் மற்றொன்றின் சக்தியைத் தான் பெற்றே
3.ஒன்றில் ஒன்று பின்னியுள்ள உயிரணுக்கள் ஒன்றை ஒன்று அழித்துத் தான் ஒன்றிலிருந்து ஒன்று சக்தி பெற்று
4.இம்மண்டலம் பிற மண்டலங்கள் எல்லாமே சுழல்கின்றன.

இப்பூமி (மட்டும்) என்று எப்படிச் சொல்வது…?
1.மற்ற எல்லா நிலைகளிலும் உள்ள எதுவுமே அழிவதில்லை.
2.அழிவு என்ற நிலை “ஒன்றில் இருந்து ஒன்று மாறுபடும் நிலையாகத் தான்” அழியும் நிலை என்ற நிலையும் உள்ளது.

எல்லாமே எங்கு செல்கின்றன…?

இம்மனித உயிரணு உயிர் ஆத்மா இவ்வுடலை விட்டு மறு உடல் எடுக்கும் பொழுது அதன் நிலைக்கு வேண்டிய உயிர்ச்சத்தை எடுப்பதற்கு… இக்காற்றினுள் கலந்துள்ள பல கோடி ஜீவ அணுக்களின் சத்தைத் தன்னுள் ஈர்த்துத் தன் நிலைக்கு ஏற்ப உடலுக்கு வருகின்றது.

உடலை விட்டுப் பிரியும் ஆத்மாக்களும் அவ்வாத்மாவிற்கு வேண்டிய சத்தை இக்காற்றினிலிருந்து ஈர்த்துச் சுற்றிக் கொண்டே உள்ளது… மறு உடல் எடுக்கும் வரை.

இம்மண்டலங்கள் அனைத்திற்கும் உயிர் உண்டு. கல் மண் காற்று தண்ணீர் எல்லாவற்றிற்குமே ஜீவன் உண்டு. இவ்வுலகினிலே… இவ்வுலகம் மட்டுமல்ல
1.இம்மண்டலங்களிலே ஜீவன் இல்லாத நிலையில் எதுவுமே இல்லை.
2.பூமித்தாயும் ஜீவனுடன் தான் சுற்றுகின்றாள்.
3.இப்பூமியில் விளையும் எல்லா தாதுப் பொருள்களுக்குமே ஜீவன் உண்டு.

பல வகை உலோகங்களை பூமியிலிருந்து பிரித்து எடுக்கின்றோம். நாம் அதைப் பிரித்து எடுக்கும் நாள் வரை அந்த உலகத்திற்கு ஜீவன் உண்டு. தாமிரம் தங்கம் வைரம் என்று பல உலோகங்களை நாம் இவ்வுலகில் இருந்து பிரித்து எடுக்கும் நாள் வரை அதற்கு ஜீவன் உண்டு.

உதாரணமாக… மண்ணுக்குள் விலையும் வைரம் சூரியனில் இருந்து வரும் ஒளிக் கதிர்களில் இருந்து தனக்குகந்த நிலை கொண்ட சத்தைப் பிரித்து எடுத்து ஈர்த்தெடுத்து விளைகிறது.
1.அதை நாம் பிரித்து எடுக்கும் நாள் வரை அது வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.
2.அதை வெட்டிய பிறகு தான் அது வளரும் தன்மையை இழக்கின்றது.

மற்ற உலோகங்களும்… நிலக்கரி… பூமியிலிருந்து ஊற்றாக எடுத்திடும் ரசாயன முறை கொண்ட பல வகைத் திரவ வஸ்துக்களும்… பூமியிலிருந்து கிடைக்கும் எல்லாவற்றின் நிலைகளும் உயிர் என்னும் ஜீவனுடன் தான் உள்ளது.

நாம் வாழும் பூமியை போல் உள்ள எல்லா மண்டலங்களிலுமே இதே நிலையில் தான் ஜீவனுடன் தான் சுற்றுகின்றது.

இரண்யன் “மூன்று லோகத்தையும் கைப்பற்றுகின்றான்” என்றால் அதனின் பொருள் என்ன…?

இரண்யன் “மூன்று லோகத்தையும் கைப்பற்றுகின்றான்” என்றால் அதனின் பொருள் என்ன…?

 

உதாரணமாக… ஒருவரைப் பழி தீர்க்கும் உணர்வுகளையோ… அல்லது அவனைக் கொன்றிடும் நிலையோ… துன்பப்படுத்தும் உணர்வோ… நமக்குள் அதிகமாகி விட்டால் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களை அது துன்புறுத்தி அதை மடியச் செய்துவிடும்.

பின் அதனால் உருவான உறுப்புகள் அனைத்தையும் சுருங்கச் செய்வதும் உடலின் தன்மை நலியச் செய்வதும் எண்ணத்தின் செயலும் அசுர உணர்வு கொண்டு சாபங்கள் இடுவதும்… “உன் குடும்பம் தொலைந்தது… உன் குடும்பத்தை அழித்தே தீருவேன்…!” என்ற சாப அலைகள் இங்கே வருகின்றது.

இப்படி விளைந்த இந்த உணர்வுகள் கொண்டு உடலை விட்டு அகன்றால் அடுத்து புலியாகத் தான் பிறக்க நேரும்.

தன் பசியைத் தீர்க்கும் உணர்வு கொண்ட ஒரு புலி மற்றதை அடித்து இரக்கமற்றுக் கொன்று புசித்துத் துன்புறுத்தும் நிலைகள் கொண்டு அச்சுறுத்தும் உணர்வு கொண்டு தான் அதன் உணர்வுகள் செயல்படும்.

அதைப் போன்றே
1.மற்றவரை ஈவு இரக்கமற்றுப் பழி தீர்க்கும் உணர்வாகச் செயல்படும் போது…
2.இவன் கேட்ட வரப்படி மனிதனான இந்திரலோகத்தை மாற்றி அமைத்து இவன் உயிர் புலியாக மாற்றும்.

அப்போது புலியின் உயிரும் விஷ்ணுவே…! அது எடுக்கும் அசுர உணர்வுகள் இந்திரலோகமாகி… அதன் உணர்வு கொண்டு அடுத்ததைக் கொன்று புசிக்க வேண்டும் என்று “பிரம்மனின் நிலைகளும்” அதை உருவாக்குகின்றது.

புலி அசுர குணங்கள் கொண்டு தாக்கும் போது மகிழ்ச்சி பெறும் சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது. எப்போதும் கொடூர உணர்வு கொண்டே வாழுகின்றது.

அதே சமயத்தில்
1.புலியான உடலும் சிவமே… அந்தச் சிவத்திற்குள் அசுர உணர்வின் சக்திகள் கூடி
2.இந்திரலோகத்தில் மகிழ்ச்சி என்ற நிலையே இல்லாதபடி ஆகிவிடுகிறது.
3.தன் இனத்தின் நிலைகளில் கூடப் போர் செய்ய செய்யும் முறையே வருகின்றது
4.”தன் குட்டிகளின் அரவணைப்பு” ஒன்றே அதற்குள் மிஞ்சும்.

ஆதாவது “தன் இனம்” என்ற நிலைகள் இருந்தாலும் சிறிது நேரமே ஒன்றி வாழுகின்றது அடுத்து… பகைமை உணர்வு கொண்டு தாக்கிடும் உணர்வுகளே அதற்குள் பெருகுகின்றது.

ஆகவே மனிதனான பின் இத்தகைய அசுர உணர்வுகளை எடுத்தால் நம்முடைய அந்த எண்ணப்படி இந்திரலோகத்தை மாற்றி அமைத்து அதை ஆட்சி புரியும் தன்மை வருகின்றது.

அதைத்தான் மூன்று லோகத்தையும் இரண்யன் தனக்குள் அடிமைப்படுத்தினான்… இந்திரலோகத்தில் உள்ள அனைவரையும் அடிமைப்படுத்தினான் என்று சொல்வது. காற்றுப் பகுதியில் உள்ள உணர்வுகளையும்… உடலான இந்திரலோகத்தையும் அடக்கி ஆளுகின்றான்.

அதாவது காற்று மண்டலத்தையும் அதுவாக (தன் உணர்வாக) மாற்றுகின்றான். அதே சமயத்தில் சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வினை அதிலேயும் (தன் உணர்வின் தன்மை கொண்டு) மற்றொரு நிலைகளில் அது அடக்கிடும் உணர்வின் சக்தியை எவ்வாறு பரப்புகின்றது…? என்ற நிலையைத் தான் “மூன்று லோகம்” என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றார்கள்.
1.உடலான ஒரு லோகமும்…
2.புறத்தால் வரும் தன் சுற்றுப்புறச் சூழ்நிலையில் உள்ள நிலையும்
3.சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷத்திலும் இவன் இடும் உணர்வே அதனின் செயலாகவும் செயல்படுகிறது என்று காட்டுகின்றார்கள்.

அசுர குணங்கள் கொண்டு பேசினால் சுற்றுப்புறச் சூழ்நிலையான (காற்று மண்டலம்) அந்த லோகத்தையும் கவர்ந்து விடுகின்றது. அதற்குள் வாழும் மக்களும் சிறிதளவு அதை நுகர்ந்த பின் அந்த உடலையும் அடக்குகின்றது… அச்சுறுத்தி வாழும் நிலைகள் வருகின்றது.

உதாரணமாக ஒரு இடத்திலே போக்கிரி கடுமையாகப் பேசினால் அவன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தை அடக்குகின்றான்.

நல்ல உணர்வின் தன்மை அடங்கிடும் உணர்வுகள் வெளிப்படுத்தும் போது கேட்போர் உணர்வுகளில் அவர்களுக்குள் புகுந்து அங்கே அச்சுறுத்தும் உணர்வு வருகின்றது.

அதே சமயத்தில் சூரியனால் வெளிப்படும் உணர்வின் தன்மையை அது மற்றதுடன் இணைந்து உணர்வின் அலைகளாக படரப்படும் பொழுது சூரியனின் சக்தியையும் இவனுக்குள் ஆட்சி புரிந்து கொள்கின்றான்.

இப்படி ஆக்கிரமிப்புத் தன்மையே அனைத்திலும் வரப்படும் பொழுது அவனின்று விளையும் தன்மை
1.உடலையும்
2.காற்று மண்டலத்தையும்
3.சூரியனுடைய உணர்வுகளையும்
4.இந்த மூன்று மண்டலங்களையும் அவனுடைய வீரியத் தன்மை கொண்டு ஆட்சி புரியத் தொடங்கி விடுகின்றது.
5.இதை நுகந்தோர் அனைவரும் மடியும் உணர்வும் அசுர உணர்வு கொள்ளும் நிலையை வருகின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்காகத் தான் சாஸ்திரங்களில் இப்படிக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

சூரியனின் இயக்கம்

சூரியனின் இயக்கம்

 

இன்று இப்பூமியில் நாம் உயிர் வாழ்ந்திட… நாம் மட்டுமல்ல இப்புவியில் உள்ள எல்லா உயிரணுக்களும் உயிர் வாழ்ந்திட… “காற்றும் நீரும் அவ்வொளியும்…” ஒளி என்பது சூரியனின் சக்தியிலிருந்து ஒளிக்கதிர்கள் இவ் பூமியில் வந்து தாக்கும் நிலையைக் குறிப்பிடுகின்றேன்.
1.இந்நிலை எல்லாம் இல்லாவிட்டால்
2.இப்புவிதனிலே உயிர் அணுக்கள் இல்லை.

அச்சூரியனுக்கு இந்நிலைகளைப் பூமிக்கு அளிக்க அச்சூரியனின் சக்தி எந்நிலையில் உள்ளது…?

இப்பூமி ஒரு முறை சுற்றிவர தன்னைத்தானே 24 மணி நேரம் ஆகின்றது என்று இந்தக் குறிப்பிட்ட கால நிலைகளை வைத்து ஒரு நாளைக் குறிப்பிடுகின்றோம்.

இங்கு எப்படி நாம் ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்று சொல்கின்றோமோ அதைப்போல் இல்லாமல்… அச்சூரியனின் சுற்று அதி விரைவாக உள்ளது. அதாவது 12 மணி நேரம் என்னும் நிலையில் நாம் இங்கு ஒரு நாள் என்று குறிப்பிடும் நிலை அச்சூரியனின் சுற்றில் இரண்டு நாளாக உள்ளது.

அச்சூரியனிலிருந்து எப்படி நமக்கு ஒளி கிடைக்கின்றது…? அச்சூரியனின் தன்மை என்ன…?

சூரியனில் சரி பாதி நிலமும் சரி பாதி நீரும் உள்ள நிலையில் பல உயிரினங்களும் உள்ளன.
1.சூரியனைப் போல் உள்ள பல சூரியன்களின் ஒளியின் கதிர்கள் நம் சூரியனில் அவ்வொளிக்கதிர்கள் படும் நிலை கொண்டு
2.மற்ற மண்டலங்களில் உள்ள ஈர்ப்பு தன்மையைத் தன்னில் ஈர்த்து அச்சூரிய மண்டலம் வெகு விரைவில் சுற்றுகிறது.

சூரியன் சுருங்கி விட்டது என்று இன்றைய நிலையில் சொல்கின்றார்கள். அச்சூரியனின் சக்தியும் எடையும் சுருங்கவில்லை. முதலில்… என்பது நாளும் வருடமும் குறிப்பிடாத நிலையில் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.

பூமி எப்படி மற்ற மண்டலங்களின் நிலையை ஈர்த்துச் சுழல்கின்றதோ அதைப் போல் அச்சூரியன் மற்ற மண்டலங்களில் இருந்து வரும் ஒளிக் கதிர்களை ஈர்த்துச் சுழன்று கொண்டே உள்ள நிலையில் அதன் எடை எப்படிக் குறையும்…? ஈர்ப்பு நிலை பெறப் பெற அதன் சக்தி நிலை தான் அதிகம் பெற்றுச் சுழல்கின்றது.

1.சூரிய மண்டலத்திற்குச் செல்ல முடியாது. பெரும் நெருப்புக் கோள் போல் உள்ளது என்று நினைக்கின்றோம்.
2.அச்சூரியமண்டலமும் நாம் வாழ்ந்திடும் நாம் வாழும் பூமியின் நிலை போல் தான் நீருடனும் நிலத்துடனும் காற்றுடன் சுற்றிக் கொண்டுள்ளது.

சூரியனிலிருந்து நாம் பார்க்கும் ஒளி அது தன்னைத்தானே சுற்றும் வேகத்தில் அக்காற்றும் அக்காற்றுடன் கூடிய அணுக்கதிர்களும் அதிவேகத்தில் சுற்றும் பொழுது இவ்வொளியின் தன்மை நாம் பெறக்கூடிய பாக்கியத்தைப் பெற்றுப் இப்பூமியில் வந்து தாக்கி இப் பூமியையே சுழல வைக்கின்றது.

ஒவ்வொரு மண்டலத்தின் நிலையும் ஒன்றிலிருந்து ஒன்று அவ்வொளியின் சக்தியைப் பெற்றுச் சுழன்று கொண்டே தான் உள்ளது. நம் பூமிக்குச் சூரியனின் ஒளி மட்டுமல்ல… சந்திரனின் ஒளி மட்டுமல்ல… மற்ற எல்லா மண்டலங்களில் உள்ள அணுக்களின் தன்மையும் பெறுகின்றோம்.

சூரிய மண்டலத்திற்கு மேல் உள்ள மண்டலங்களின் நிலை கொண்டே அச்சூரியன் ஈர்த்து நமக்கு அளிக்கின்றது. அதைப்போல இப்பூமியின் சுழற்சியின் நிலை கொண்டு சந்திரனுக்கும் ஏன் சூரியனுக்கே கூட பூமியின் அணுக்கதிர்கள் செல்கின்றன.

இப்பூமி தனியாக இயங்கவில்லை 48 மண்டலங்கள் என்று உரைத்தேன். ஒவ்வொரு மண்டலமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு சுற்றிக்கொண்டே உள்ளன.

நெருப்புக் கோளங்கள் என்ற நிலை எங்குமே இல்லை. ஒவ்வொரு மண்டலமும் சுழலும் வேகம் கொண்டு தான் ஒளியும் ஒலியும் நாம் பெறுகின்றோம்.

1.எல்லா மண்டலங்களிலுமே நீரும் நிலமும் உண்டு… உயிரணுக்கள் உண்டு
2.ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு நிலை கொண்ட உயிரணுக்கள் உயிர் வாழ்கின்றன.

எல்லா மண்டலங்களும் ஒன்று போல் உருண்டை வடிவத்தில் இல்லை… என் நம் பூமியே இல்லை…! உருளும் தன்மையை வைத்துப் பந்து போல் உருண்டையாக உள்ளது என்கின்றார்கள்.

இமயமலையும் பனிமலையிலும் உள்ள நிலைகளில் எப்படியப்பா உள்ளது பந்து போன்ற நிலை…? ஒவ்வொரு இடத்திலும் இந்நிலையே ஒவ்வொரு நிலை கொண்ட ஏற்றத்தாழ்வுடன் உள்ள பொழுது உலகம் பந்து போல் உருண்டையாக இருக்கிறது என்கின்றார்கள்.

பந்து போல் இருந்திட்டால் அச்சூரியனிலிருந்து விழும் ஒளிக் கதிர்கள் காலை மாலை என்ற நிலை இவ்வுலகனைத்திலும் ஒன்று போல் அல்லவா இருக்க வேண்டும்.

சில நிலைகளில் அச்சூரியனின் ஒளியே படாத நிலையான இடம் இருக்கின்றதல்லவா. உலகத்தை உருண்டையாகவும் தட்டையாகவும் கால நிலைக்கு ஏற்ப மனிதர்கள் யூகம் கொண்டு பல விஞ்ஞான நிலையில் பார்க்கும் பொழுது உருண்டை வடிவம் என்றும் தட்டையான நிலை என்றும் இன்றளவும் ஆராய்ந்து கொண்டே உள்ளனர்.

எந்த ஒரு பொருளும் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது உருண்டை வடிவமாகவோ நீண்ட வடிவமாகவோ தான் தெரியும். இந்நிலை வைத்து நம் யூகத்தில் தெரிந்ததாக நாம் எண்ணிக் கொண்டே வாழ்கின்றோம்.

சந்திர மண்டலத்தின் நிலை முக்கோண வடிவினிலே குமிழ் வடிவினிலே மேலும் பள்ளம் கொண்ட நிலையாகத் தான் உள்ளது.

1.ஒவ்வொரு மண்டலமும் ஒன்றைப் போல் ஒன்று இல்லை.
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே சுற்றிக் கொண்டு நிலையான நிலையில் தான் உள்ளது.
3.இப்பூமி தனி பூமியும் அல்ல. இவ் பூமியில் உள்ள உயிரணுக்கள் எதுவுமே தனி அல்ல
4.ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ்ந்திடும் “நாம் இணையில்லா வாழ்வு பெற்று” என்றும் நிலைத்து வாழ்ந்திடவே இப்பாட நிலை.

உயிரிலே பட்ட பின் “உணர்வின் ஒலிகள்” எப்படி எழும்புகிறது…?

உயிரிலே பட்ட பின் “உணர்வின் ஒலிகள்” எப்படி எழும்புகிறது…?

 

உதாரணமாக ஒரு கடலைச் செடியில் விழுந்த உயிரணு அதனின் உணர்வின் சத்தை நுகர்ந்தால் அந்தச் சாந்த குணத்தின் அணுக்களாக உருவாகும்… மற்றொன்றைக் கொல்லும் தன்மை இழந்து விடுகின்றது.
1.அணு செல்களாக இருப்பதை ஜீவணுக்களாக இந்த உயிரணு மாற்றப்படும் பொழுது
2.அதனின் அணுவின் மலமாக புழுவின் உடலாக வளர்கின்றது
3.உணர்வின் எண்ணங்களாகத் தோற்றுவிக்கும் நிலை வருகின்றது.

இப்பொழுது மைக் இல்லாமல் நான் (ஞானகுரு) பேசினால் உங்களால் கேட்க முடியுமா…? சப்தம் வராது. மைக் ஆக “எது” அமைகின்றது…?

சூரியணிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் அதற்குள் (செடிக்குள்) வளர்கின்றது அதே வெப்பத்தையும் காந்தத்தையும் ஈர்த்து எந்த மணத்தின் தன்மை வருகின்றதோ செடிக்குள் வருகின்றது.

இந்தச் செடியின் மணம் (சத்து) வெளிவரப்படும் பொழுது
1.சூரியனுடைய காந்த சக்தி அதை எடுத்துக் கொண்டால் தான்
2.இதில் உள்ள விஷத்தின் தன்மை உணர்ச்சிகளை ஊட்டவும்
3.வெப்பம் அதனின் உணர்வின் மணத்தைக் கூட்டவும் அது செயல்படும்.

அப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு மைக்கிலே காந்தப் புலனறிவு இல்லை என்றால் ஓசை கேட்குமா…?
1.அந்த காந்த அலைகளின் தன்மைகள்
2.அந்த மேக்னட் இரும்பால் இருந்தாலும்
3.அதிர்வின் ஒலி அலைகளை எளிதாக மெதுவாக (ஒலிகளை வெளிக்கொண்டு வருவதற்காக) ஊட்டுவதற்காக
4.அந்த ஸ்பீக்கரில் காகிதத்தை வைப்பார்கள் அல்லது மெலிதான தகடை வைப்பார்கள்.
5.அந்த காந்தப் புலனை இழுத்து ஒலியின் ஓசையைத் தெளிவாக்குவதற்கு

இது விஞ்ஞான அறிவால் செயல்படும் நிலை.

இதைப் போன்றுதான் இயற்கையின் நியதிகளில் அது எடுத்து வைத்த பின்
1.இந்த உணர்வின் தன்மை (கடலையின் மணத்தை) உயிரணு நுகர்ந்தால் “ஓசையின்” உணர்வாக இயக்கத் தொடங்குகின்றது.
2.செடியாக இருந்தால் இந்த உணர்வின் தன்மைக்கொப்ப அந்த ரூபத்தை அமைக்கும் தன்மை வருகின்றது.
3.ஆனால் மணத்தின் தன்மை கொண்டு அது வெளிப்படும் தன்மை வருகின்றது.

இப்படிப் பல பல உணர்வின் சத்தை எது நுகர்ந்ததோ அதற்குத் தக்கவாறு அதனுடைய சுவைகளும் மாறும். ஆகவே அதனின் மணங்கள் வரும் போது
1.உயிரனங்கள் நுகரும் பொழுது எண்ணங்கள் சீதாராமா
2.அந்த எண்ணங்கள் தோன்றி அதனதன் தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.

இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக்கிப் பதிவாக்கிக் கொடுக்கின்றேன் குருநாதர் எனக்குள் எவ்வாறு பதிவாக்கினாரோ அதனின் உணர்வின் செயலாக்கங்களை அறியும் ஆற்றல் பெற்றேன்.

வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில்… தீமை என்று உணர்ந்து அறிந்தாலும்
1.அதிலிருந்து விடுபடும் வல்லமையை அதை அடக்கும் வல்லமை கொண்ட அருள் மகரிஷிகள் உணர்வுகளை நுகர்கின்றேன்.
2.அது வளர தீமைகள் அதற்குள் அடங்குகின்றது

விஷம் என்பது வலுக் கொண்டது அந்த விஷத்தை அடக்கியவன் அருள் ஞானி. விஷத்தை ஒளியாக மாற்றிக் கொண்டவன் துருவ மகரிஷி

அவன் வழியைப் பின்பற்றியவர்கள் ஆறாவது அறிவினை ஏழாவது நிலையாக உருப் பெற்று ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் வருகின்றார்கள்.

ஒவ்வொரு சந்தர்ப்பமும் நிகழ்ந்த சந்தர்ப்பத்திற்கொப்ப உணர்வின் தன்மை வரப்படும் போது
1.பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி பெற்று மனிதனாக எப்படியெல்லாம் வந்தோம்…? என்ற நிலைகளை தெளிவாக்கி உள்ளார்கள் ஞானிகள்.
2.அதைத்தான் உங்களுக்கும் உணர்த்துகின்றேன்.

பரிணாம வளர்ச்சியில் உடல் பெறும் உணர்வுகள் “உயிரால் எப்படி மாற்றப்படுகின்றது…?”

பரிணாம வளர்ச்சியில் உடல் பெறும் உணர்வுகள் “உயிரால் எப்படி மாற்றப்படுகின்றது…?”

 

பரிணாம வளர்ச்சியில் தாவர இனங்கள் எப்படி உருமாறி குணங்கள் மாறியதோ இதைப்போல தான் ஒரு உயிரணு தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு மற்ற உடலிலே விளைந்த அந்த உணர்வின் சத்தை நுகர்ந்து அதனிடமிருந்து காத்துக் கொள்ளும் நிலைகள் வந்தது.

அப்படி வந்தாலும்…
1.இந்த உணர்வுகள் இரண்டறக் கலந்து உயிர் அதனின் உணர்வாக விளையச் செய்து
2.முதலிலே பெற்ற உணர்வுக்கும் இரண்டாவது மற்றொன்று இதற்குள் சேர்த்தவுடனே நோயாக வந்து
3.சுழிக் காற்று அடிப்பது போல இதனுடைய மணங்கள் பெருகச் செய்து
4.கவர்ந்த உணர்வுகள் ஒன்றாகி… உயிருடன் ஒன்றும் பொழுது
5.முதலிலே உருப் பெற்ற உடலைப் பிரித்துவிட்டு
6.இணைந்து கொண்ட உணர்வுகள் தனியாக விளைந்து அதனின் நிலைகளில் வந்த உணர்வு கொண்டு தான்
7.இந்த உயிர் மற்ற மற்ற உடல்களை உருவாக்கியது என்பதனை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

அகஸ்தியன் இதைத் தெளிவாக எடுத்துரைத்தான். அதாவது இந்தப் பிள்ளை யார்…? என்று அவன் கேள்விக்குறி போட்டு நம்மைத் தெளிவாகச் சிந்திக்கும்படி செய்துள்ளான்.

ஆகவே நாம் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு நாம் எவ்வாறு மனித உடல் பெற்றோம்…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் வலிமை பெற்றது தான் மிருகங்கள். மிருகங்களாக இருக்கும் போது தன்னைக் காத்திடும் உணர்வுகள் பெற்றுப் பெற்று… அந்த உணர்வால் ஈர்க்கப்பட்டு நமது உயிர் மனிதனாக உருவாக்கியுள்ளது.

தன்னைக் காத்திடும் இந்த உணர்வின் நிலைகள் கொண்டு
1.தன்னைக் காத்திடும் அங்கங்களும் தன்னைக் காத்திடும் உணர்வின் எண்ணங்களும் அது விளையச் செய்து
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உயிர் ஒளியாக எப்படி ஆனதோ
3.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றது தான் இந்த மனித உடல்.

நமது உயிரே அதை உருவாக்குகின்றது.

1.ஒவ்வொரு சரீரத்திலும் எடுத்துக் கொண்ட எண்ணங்களை இந்த உயிரே அது இணைக்கின்றது
2.எடுத்துக் கொண்ட எண்ணத்தை நமது கண்களே வழிகாட்டி
3.அதனின்றி தப்பித்துக் கொள்ளும் நோக்குடன் அதைக் கவர்ந்து அதனின் வலுவை இதற்கு உணர்த்தி
4.அதனின் நிலைகளிலேயே உணர்வுகள் மாறி உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து
5.உடலின் தன்மை மாற்றமானது என்ற நிலையை தெளிவாக எடுத்துரைத்தான் அந்த அகஸ்தியன்.

இவ்வளவு பெரிய தத்துவத்தை மகரிஷிகள் சாதாரண நிலைகளில் விநாயகர் தத்துவமாகக் கொடுத்துள்ளார்கள்.

நாம் எதை எதை எல்லாம் சேர்த்துக் கொண்டோமோ அந்த வினைக்கு நாயகனாக… ஒவ்வொரு உடலிலும் சேர்த்துக் கொண்ட உணர்வு “எது அதிகமோ” அதற்கு நாயகனாக அந்த உணர்வுகள் நம்மை இயக்கி… அந்த உடலை உருவாக்கி… அந்த எண்ணத்தால் தன்னை எவ்வாறு காத்துக் கொள்கின்றது…? என்பதைத்தான் அன்று அகஸ்தியன் “விநாயகர் தத்துவத்தில்” எடுத்துக் காட்டினார்.

“எனக்கு எதிலேயும் இறப்பு இல்லை…!” என்று இரண்யன் சொல்வதன் உட்பொருள் என்ன…?

“எனக்கு எதிலேயும் இறப்பு இல்லை…!” என்று இரண்யன் சொல்வதன் உட்பொருள் என்ன…?

 

இரண்யன் சாகா வரம் பெற்றவன். ஈரேழு 14 லோகத்திலும் எதிலும் எனக்கு இறப்பு இல்லை என்று நாராயணனிடம் வரம் வாங்கிக் கொண்டான். நாராயணன் என்பது சூரியன்.

1.வெப்பமும் காந்தமும் கலந்து விஷத்தின் தன்மை அதனுடன் கவர்ந்து வரப்படும் பொழுது ஒரு அணுவை இயக்கும் சக்தி கொண்டு செயல்படுகின்றது.
2.விஷத்தின் துடிப்பு இல்லை என்றால் “எதனையுமே இயக்க முடியாது”
3.விஷத்தின் துடிப்பு அதிகமாக இருப்பதினால் தான் சூரியனின் சுழற்சியின் வேகமும் அதிகமாகின்றது.

சூரியனின் சுழற்சி வேகம் அதிகமாகி அதிலே உருவான நஞ்சினைப் பிரித்துத் தள்ளினாலும் வெப்பமும் காந்தமும் என்று அணுக்களை உருவாக்கி காந்த புயலாக வெளிக் கக்கினாலும்
1.காந்தப் புயலாக வருவது அந்த விஷத்தினைக் கவர்ந்து வரப்படும் பொழுது அது இறப்பதில்லை.
2.ஆனால் அது இறந்து விட்டால் எதுவுமே இயக்கமில்லை
3.ஆகவே “நான் இல்லாது எதுவுமே இயங்காது” என்று பிரகலாதன் கதையிலே அவ்வாறு காட்டுகின்றார்கள்.

உலக சிருஷ்டிக்கு நான் தான் மூல காரணம் என்று இரண்யன் சொல்கின்றான். சூரியனோ இந்த உலக அனைத்தையும் ரட்சிக்கிறேன் என்று இயக்குகிறது.
1.இரு பிரிவுகளையும் அதாவது விஷத்திற்கும்… ஒன்று சேர்த்து இயக்கக்கூடிய நிலைகளுக்கும்… நாம் கண்டுணர
.இத்தகைய நிலைகளைத் தெளிவாகக் காவியங்களாகப் படைத்துக் கொடுத்துள்ளார்கள்.

இரண்யன் தன் மகனான பிரகலாதனிடம் என் பெயரைத் தான் நீ சொல்ல வேண்டும் என்று கேட்கின்றான். பிரகலாதன் என்றால் இந்த இரு உணர்வும் சேர்த்து உருவான நிலைகள் தான்.

ஒரு ஜீவ அணு உண்டாக வேண்டும் என்றால் இந்த விஷத்தின் துடிப்பு கொண்டு தான் இயங்குகிறது என்றும் அதே சமயத்தில் சூரியனுடைய நிலைகள் வெப்பமும் காந்தமும் மற்றொன்றைக் கவர்ந்து உலகை இரட்சிக்கும் நிலையாக மற்றதை உருவாக்கும் நிலை என்று இதனின் செயல்களை நாம் கண்டுணரக் காவியங்களாகத் தீட்டினார்கள் ஞானிகள்.

சாதாரண பாமர மகனும் அறிந்திடும் நிலையாக… இந்த உலக இயற்கையின் சிருஷ்டியும் அணுவின் இயக்கமும் என்ற தலைப்பில் காவியமாகப் படைத்துச் சூரியனை நாராயணனாக மையமாக வைத்து… அதனின்று வெளிப்படும் உணர்வின் அலைகளைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் மகரிஷிகள்.

இதைப் போன்று அது அது நஞ்சைக் கடந்து வந்தாலும் உலகிலே எனக்கு இறப்பு இல்லை என்று வரம் வாங்கிக் கொண்டான் இரண்யன்.

பாலுக்குள் விஷம் பட்டால் அந்தச் சத்தை அது தனக்குள் அடிமை ஆக்கிக் கொள்கிறது. ஒரு வெப்ப காந்தம் ரோஜாப் பூவின் மணத்தைக் கவர்ந்து கொண்டால் விஷத்தின் துடிப்பால் அந்த மணத்தை வீரிய உணர்வாக (மணம்) உண்டாக்கும்.

அதே சமயத்தில் ஒரு காரமான உணர்வை வெப்ப காந்தம் எடுத்துக் கொண்டால் விஷத்தின் தன்மை அதனுடைய வேகத்துடிப்பாக இயக்கிக் காட்டும். ஆகவே
1.இயக்கத்திற்கு மூலமாக இருப்பது
2.இந்த நஞ்சின் தன்மை தான்…!

ஆதியிலே அணுவின் தன்மை உருவாவதற்கு… ஆவியாகப் படர்ந்துள்ள நிலையில் விஷத்தின் தாக்குதலால் அது தாங்காது… அது பிரிந்து அணுக்களாக நகர்ந்து சென்று… “வெப்பமும் காந்தமும்” என்ற நிலைகள் அடைந்தது.

விஷத்தின் இயக்கம் இல்லை என்றால்
1.பேரண்டத்தில் படர்ந்து கிடந்த நிலைகள் இயக்கமே இல்லாத சூனியமாகத்தான் இருக்கும்
2.விஷம் இதில் தாக்கப்படும் பொழுது தான் “சூனியத்தின் நிலை மாறி… இயக்க நிலையாக மாறுகின்றது…”

ஆகவே தான் இரண்யன் எனக்கு எதிலேயும் இறப்பு இல்லை என்ற நிலையில் “அவன் வாதிடுகின்றான்” என்று காட்டுகின்றார்கள்.