முழு முதல் கடவுள் யார்…?

ganesha

முழு முதல் கடவுள் யார்…?

 

ஆதிமூலம் என்ற உயிர் இந்த மனிதனாக ஆன பிறகு முழு முதற் கடவுள் என்று அன்றே ஞானிகள் தெளிவாக்கியிருக்கிறார்கள். அந்த விநாயகருக்கு அங்குசத்தையும் போட்டுக் காட்டியுள்ளார்கள். ஏன்…?

யானையை அங்குசத்தை வைத்து அடக்குவார்கள். அது போல் இந்த உலகில் உள்ள அனைத்தையும் அடக்கி ஆட்சி புரியும் சக்தி பெற்றது இந்த மனித உடல் என்று காட்டுவதற்காக அங்குசத்தை விநாயகருக்குக் காட்டியுள்ளார்கள்.

1.மனிதன் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆகிவிட்டால்
2.இந்த அண்டத்தில் இருக்கிறது எதையுமே தனக்குக் கீழ் கொண்டு வர முடியும்.
3.அதனால் தான் விநாயகரை முழு முதல் கடவுள் என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஆனால் இவர்கள் என்ன செய்து விட்டார்கள் என்றால் “சிவனுக்கு முந்தியவன் விநாயகன்… அதனால் விநாயகர் முழு முதல் கடவுள்…!” என்று இப்படிச் சொல்வார்கள்.

சிவனுக்கு முந்தியவன் வினை தான். அந்த உணர்வின் தன்மை “ஓ…!” என்று பிரணவமாகி இந்த உடலாகும் போது சிவன். உடலாகும் போது சிவன். சிவனின் பிள்ளை விநாயகன். ஆகவே பிரணவத்திற்குரியவன். எது…?

இந்த வினை.

ஒரு உயிரணுவிற்குள் எந்தச் செடியின் சத்து மோதுகிறதோ அது பிரணவம். ஜீவ அணுவாக மாற்றும் சக்தி பெற்றது உயிர். (உயிரணுவிற்குள் துடிப்பும் அதனால் வெப்பமும் உருவாகிறது)
1.செடியின் சத்தை அந்த உயிரணு நுகர்ந்தால் பிரணவமாகிறது.
2.ஆகவே அந்தச் சத்து வினையாகிறது.
3.அதனால்தான் அந்த வினை உயிருடன் சேர்க்கப்படும் போது “விநாயகா…!” என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.
4.இந்த மூலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு செடியின் சத்தை நுகர்ந்தால் அது வினை. அதனால் தான் சிவனுக்கு முந்தியவன் விநாயகன். செடியின் சத்தை அது நுகர்ந்தபின் “ஓ…!” என்று பிரணவமாகி “ம்…!” என்று உடலாகும் போது விநாயகன். (சிவம் என்பது திடப்பொருள்)

எந்தச் செடியின் சத்தை உயிரணு நுகர்ந்ததோ மூஷிக வாகனா…!
1.அதாவது அந்த மணமே இயக்கி
2.அந்தச் செடி இருக்கும் பக்கம் நகர்ந்து செல்லும் இயக்கச் சக்தியாக மாறுகிறது.
3.இது தான் விநாயகன்.

ஆனால் முழு முதற் கடவுள் என்று சொல்லும் பொழுது
1.பல கோடி வினைகளைச் சேர்த்து மனிதனாக ஆன பின் கணங்களுக்கு அதிபதி
2.எல்லாவற்றையும் அடக்கி ஆட்சி புரியும் நிலை பெற்றது…!
3.அதனால் தான் அங்குசத்தை வைத்துக் காட்டியது.

மனித உடலில் முழு முதற் கடவுள் என்ற நிலையில் எண்ணத்தால் எண்ணி நாம் உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம். பிரணவத்தைத் தெரிந்து கொண்டவன் தான் மனிதன்.
1.இந்த உயிரின் இயக்கத்தைத் தெரிந்து கொண்டவனும்
2.தன்னை அறிதல் என்ற நிலையிலே கண்டுணர்ந்தவனும் ஆதியிலே அகஸ்தியன் தான்.
3.அதாவது இயற்கையின் இயக்கச் சக்தியை உணர்ந்து கொண்டவன்… பிரணவத்தை உணர்ந்து கொண்டவன் அந்த அகஸ்தியன்.
4.ஆகையினால் தான் விநாயகரை முழு முதற் கடவுள் என்றும் நாம் உருவாக்கும் சக்தி பெற்றவர்கள் என்றும் சொல்வது.

அதே சமயத்தில் மனித உடலின் ஆறாவது அறிவாக வரக்கூடிய மணம் முருகன். பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன் என்றால் நம் உடலுக்குள் அந்த உருவாக்கும் திறன் உண்டு
1.அதை வைத்து உருவாக்கக் கூடிய நிலையும்
2.உலகில் வரக்கூடியதை அடக்கும் சக்தி பெற்றது என்றும் ஞானிகள் கொடுக்கிறார்கள்.
3.இந்த வினையைச் சேர்த்துக் கொண்டவர்கள் அகண்ட உலகில் எங்கே வேண்டும் என்றாலும் போகலாம்.

ஆனால் இப்போது இந்த உடலிலிருந்தே இந்த உணர்வுகளை அடக்கினால் தான் உண்டு. இதைச் செய்யத் தவறி விட்டோம் என்றால் மீண்டும் பரிணாம வளர்ச்சியில் தேய் பிறையாகத்தான் போய்விடுவோம்

ஆகவே மனித உடல் பெற்ற இந்தப் பாக்கியத்தை நழுவ விடாது அந்த அகஸ்தியமாமகரிஷி சென்ற அருள் வழியில் நாம் செல்வோம். அகஸ்தியரைப் போன்ற மெய் ஞானியாக வளர்வோம்.

ஓ…ம் என்ற நாதமாக எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குகிறோம்…!

Omm

ஓ…ம் என்ற நாதமாக எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குகிறோம்…!

 

நாம் எந்த உணர்வை எண்ணுகிறோமோ அது “ஓ…” என்று நம் உயிரிலே பட்டுப் பிரணவமாகி அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்குகிறது.

அவ்வாறு இயக்கப்படும் போது எந்தக் குணத்தை நாம் இயக்கி நம் உடலில் சேர்க்கின்றோமோ நம் உயிர் அதைத்தான் ஆளுகிறது.
1.அதை வைத்துத் தான் நம்மை செயல்படுத்தச் செய்கிறது.
2.அதை வைத்து தான் நாம் சொல்லைச் சொல்கிறோம்.
3.அதன் வழி தான் நாம் செயலைச் செய்கிறோம்.

சங்கடமாகவும் சலிப்பாகவும் இருக்கும் போது அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்கி நம்மை ஆள்கிறது.
1.சலிப்பாக சஞ்சலமாக இருக்கும் போது சரியான கணக்குப் பார்க்க முடியுமோ…?
2.சலிப்பாக சஞ்சலமாக இருக்கும் போது ஒருவர் யோசனை கேட்டால் உங்களால் சொல்ல முடியுமோ…? முடியாது.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வை வைத்துத் தான் நம்மை ஆட்சி புரிகிறார். யார்…? நமது உயிர் தான்…! அந்த வழியில் நம்மை இயக்குவதும் நம்மை ஆள்வதும் அவனாகத்தான் இருக்கிறான்.

இருந்தாலும் அதே உணர்வை நம் உடலில் சேர்க்கும் போது அது ஈசனாக இருந்து நாம் எதை நுகர்ந்தோமோ அதை நம் உடலில் சேர்க்கின்றது. நம் உடலுக்குள் புகுந்து விட்டால் அது நம் இரத்தங்களில் கலந்து அது நம் உடலாக ஆகிவிடுகிறது.

நீங்கள் நல்லதோ கெட்டதோ எந்த குணங்களை நுகர்ந்தாலும் அந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலுள்ள இரத்தங்களில் கலந்து கொண்டே தான் இருக்கும்.

அதில் பலவிதமான வண்ணங்கள் இருக்கும். பலவிதமான உணர்வுகளை உணர்ச்சிகளை ஊட்டிக்கொண்டே இருக்கும். எதன் உணர்வு வலுவாக இருக்கிறதோ அந்த உணர்வு இயக்கமாகி உணர்ச்சிகளை வெளிப்படச் செய்து அது சொல்லாகவும் செயலாகவும் மாறும்.

கோபம் வரும்போதெல்லாம் பார்க்கலாம். ஒருவர் தவறான செயலைச் செய்யும் போது உங்கள் இரத்தங்களில் எப்படி அந்த உணர்ச்சிகள் மாறுகின்றன…? என்று தெரியும்.

இதே மூச்சலைகளை மற்றவர்களும் நம்மைப் பார்த்து நுகரும் போது இந்த உணர்வுகள் அவர்களுக்குள்ளும் இயக்கப்பட்டு அவர்களும் அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிலைகள் வரும்.
1.அவர்கள் உணர்வுக்கும் நம் உணர்வுக்கும் என்ன…? என்ற வகையில்
2.அடுத்து கலந்து பதில் சொல்லும் நிலையாக வரும்.

உதாரணமாக நம்முடைய நண்பன் அவனுடைய இன்னொரு நண்பருடன் இருக்கிறான். நம்முடைய நண்பனுக்காக அவன் எதையும் செய்யக்கூடியவன்.

இருந்தாலும் நம் நண்பருடன் சேர்ந்தவன் சரியில்லை… தவறு செய்கிறான் என்ற நிலையில் அவன் தப்பு செய்வதை நாம் திருத்தச் சொல்லிச் சொன்னோம் என்றால் நம் நண்பன் இந்தத் தப்பை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

1.ஏனென்றால் நம்முடைய நண்பனின் உணர்வுக்கு முன்னாடி அவனின் நண்பன் உணர்வு இருப்பதால்
2.அதை எண்ணி முன்னாடி வலு சேர்த்துக் கொள்ளும் போது
3.நம் உணர்வுகளை நுகர்ந்த உடனே குற்றப் பெருக்குகளைக் கூட்டி
4.நம்மைத் தான் குற்றவாளியாகத்தான் சொல்வான்.
5.ஆக நுகர்ந்த உணர்வுகள் பற்று எதனின் உணர்வு கொண்டு வருகிறதோ
6.அதன் உணர்வு வலு சேர்க்கப்படும் போது நல்ல உணர்வுகள் செயல் குறைந்து போகும்.
7.இரத்தங்களில் கலந்த நிலைகள் கொண்டு இத்தகைய நிலை வருகிறது.

நம்முடைய உணர்வை ஏற்கவில்லை என்னும் போது நம்மிடம் உள்ள நல்ல குணங்களுக்கும் நல்ல குணங்களை உருவாக்கும் அணுவிற்கும் எதிர்ப்பான நிலைகள் வந்து
1.அந்த நல்லது ஒடுங்குகிறது.
2.நல்ல உணர்வை ஈர்க்கும் சக்தியை அது இழக்கிறது.
3.கார உணர்ச்சிகளும் வேதனை உணர்ச்சிகளும் தூண்டப்படும் போது அது ஒடுங்குகிறது… ஏற்றுக் கொள்வதில்லை… பார்க்கலாம்…!

ஏற்றுக் கொள்வதில்லை என்றாலும் நம்முடைய உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகும் போது கூடக் கொஞ்ச நேரம் நிலை நிறுத்தி விட்டோமென்றால் இதற்குச் சாப்பாடு தேவை.

நாம் எப்படி மூச்சு விடுகிறோமோ அதேபோல அந்த இயக்கத் தொடருக்குப் பிரணவம் – ஜீவன் வேண்டுமென்றால் நம் உடலின் உஷ்ணத்தினால் வாயு உண்டாகிறது. அழுத்தமும் ஏற்படுகிறது.

நாம் சமையல் செய்யும் போது எப்படிப்பட்ட வாசனை வருகிறது…? எந்தெந்தப் பொருள்களை அதற்குள் அதிகமாகப் போட்டிருக்கின்றோமோ அந்த வாசனை தான் அதிலிருந்து வெளியிலே வரும். அதிலிருந்து உருப்பெரும்.

அதைப் போன்று நல்ல அணுக்களுக்கு உண்டான ஆகாரம் இல்லை என்கிற நிலையில் மற்ற உணர்வுகளின் அழுத்தத்தினால் உடலிலே ஒருவிதமான மாற்று உணர்ச்சிகள் தோன்றுவதைப் பார்க்கலாம்.

இதையெல்லாம் எது இயக்குகிறது…? நமது உயிர் தான். அது எலெக்ட்ரிக் ஆக இருக்கிறது. நாம் நுகரும் உணர்வுகள் எலெக்ட்ரானிக் ஆக எதிர் நிலையான நிலையில் இயங்குகிறது.

இதைப் போன்ற நிலையில் ஒவ்வொரு நிமிடமும் நம் இரத்த நாளங்களில் பல கலக்கங்கள் ஆவதும் பலவிதமான அணுக்களின் மாற்றம் ஆவதும் நடக்கிறது, நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் மற்றவர்களுடன் பழகும் போது எதன் உணர்வைக் கவர நேருகின்றதோ அதனால் ஏற்படக்கூடிய நிலைகள் தான்…! இவை எல்லாம்.

நல்லவர்களுடன் நாம் அமைதியான நிலையில் கேட்டு வந்து பேசிக் கொண்டு பழகி வந்திருந்தாலும் அடுத்தாற்போல் திடீரென்று ஒருவருக்கொருவர் சண்டை போட்டு வெறுப்பாகித் தாக்கிப் பேசும் போது என்ன நடக்கிறது…?

அதை நுகர்ந்தவுடன் நமக்கு மிகவும் இக்கட்டான நிலை\யாகி ஆகின்றது. அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் ஒன்றுக்கொன்று மோதும் போது சலனங்களும் சஞ்சலங்களும் ஆகி நம்முடைய நல்ல அணுக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது உடல் சோர்வடைகிறது. உணர்ச்சியும் மாறுகிறது.

எந்த உணர்வின் தன்மையை அதிகமாக்குகிறோமோ கண் வழி அதை நுகர்ந்து உயிரிலே பட்டு மீண்டும் அந்த உணர்ச்சிகள் அதிகமாக நம் இரத்த நாளங்களிலே சேர்க்கிறது.
1.இந்த இரண்டு பேருக்குள் சண்டை போட்டுவிடப் போகிறார்களோ…! என்று
2.வேடிக்கை பார்க்கும் நமக்குள் இந்தப் பதட்டம் வருகிறது. (ஆனால் நாம் சண்டை போடவில்லை)

அடுத்து அந்தச் சண்டையைத் தடுக்க வேண்டும் என்ற நிலையில் அவர்களிடம் சொல்வதற்கு நமக்குத் துணிவு வந்தாலும் சிந்தையான பதில் சொல்லத் தெரியாது.
1.பின்பு நம்மை அறியாமலேயே பகைமை உணர்ச்சிகள் உடலுக்குள் சேரும்.
2.அப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இரத்தங்களில் தான் முதலில் கலக்கிறது.

உயிர் அதை நம் உடல் முழுவதும் பரவச் செய்கிறது என்றும் அதன் வழியே தான் நம்மை வாழச் செய்து ஆளுகின்றது என்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே ஆண்டவன் யார்…? நம்மை இயக்கும் அந்த ஆண்டவனுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும். நம் உடல் முழுவதற்கும் அந்த உணர்வைப் பரவப் செய்யும் போது நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஒரு நிம்மதியையும் சாந்தமும் சாந்தமான நிலைகளையும் தருகிறோம்.

நல்ல உணர்வின் உணர்ச்சிகளை நமக்குள் பரப்பச் செய்யும் பொழுது தீமையின் உணர்வுகளை அடக்கி நம்மை அமைதிப் படுத்தச் செய்கிறது

ஆனால் சாதாரண மனிதனின் உணர்வை வைத்து அதை நாம் அமைதி படுத்த முடியாது. அதற்காக வேண்டித்தான் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அந்தப் பதிவின் நினைவு கொண்டு “ஈஸ்வரா..!” என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எடுத்து அதைத் தடுத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று நம் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தும் போது ஏற்கனவே பார்த்துப் பதிவு செய்த ஊழ்வினை என்ற (தீமையான) வித்திற்குள் இது கலந்து கொஞ்சம் கொஞ்சமாக இதன் வலு கூடும் போது அதை அடக்கக் கூடிய சக்தி பெற்று விடும்.

அப்பொழுது தீமையை அடக்கி நம் மனதை அமைதிப்படுத்தும் வல்லமையை நாம் பெறுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனையும் ஆண்டு கொண்டிருக்கும்… தில்லை அம்பலத்தாண்டவா…!

siva-nataraj

ஒவ்வொரு மனிதனையும் ஆண்டு கொண்டிருக்கும்… தில்லை அம்பலத்தாண்டவா…!

 

“நெருப்பில் இருந்து தான் நீர் தோன்றியது…!” என்று திருமூலர் அன்று உணர்த்தினார்.

ஆதியிலே எதுவுமே இல்லாது சூனியப் பிரதேசமாக இருந்தாலும் அந்த விஷம் விஷமற்றதைத் தாக்கும் பொழுது வெப்பம் உருவாகின்றது,

வெப்பத்தால் ஒன்றுடன் ஒன்று வேக வைக்கும் பொழுது அந்தச் சத்துகள் இரண்டற இணைந்த பின் ஆவிகள் வெளிப்படுகிறது.

ஆவிகள் அடர்த்தியாகும் பொழுது மேகமாக மாறி மேகத்திற்குள் மாறுபட்ட ஆவிகள் மோதும் போது நீராக வடிகின்றது என்ற நிலையைத் தெளிவாகத் திருமூலர் உரைத்துள்ளார்.

நீராக மாறி அடை கூடி நகரும் பொழுது மற்றதைத் தனக்குள் கவர்ந்து மீண்டும் வெப்பமாகி அது உறையும் பொழுது ஒரு திடப் பொருளாகின்றது.

ஆதியிலே எல்லையே இல்லாத பரந்த வெளியில் முதன் முதலில் ஒரு திடப்பொருள் உருவாகும் பொழுது அது பரம் பொருளாகின்றது. பொருளுக்குள் உள் நின்று இயக்கும் சக்தியைப் “பரமேஸ்வரா…!” என்று அழைத்தார்.

திருமூலர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

எல்லையே இல்லாத இடத்தில் பரம் பொருளாக (உலகம்) உருவாகின்றது. பெரிய கோளாக உருவாகும் போது இது சுழற்சியின் நிலைகள் கொண்டு நிற்காமல் ஓடுகிறது.
1.நிற்காமல் ஓடியதால் அதைத் “தில்லை நடராஜா…” என்று காரணப் பெயர் வைக்கின்றார்
2.அதாவது அது நிற்காமல் ஓடும் போது அரசனாக நின்று இந்த உலகை எவ்வாறு அது உருவாக்கியது என்ற நிலையை நிலைப்படுத்துகின்றார்.

அதிலே உருவான உணர்வின் தன்மை உயிரணு தனக்குள் நுகர்ந்த உணர்வுக்கொப்ப “தில்லை அம்பலத்தாண்டவா…”

1.உயிரினங்கள் தான் நுகர்ந்த அந்தந்த உணர்வுக்கொப்ப உரு அமைவதும்
2.அதற்கொப்ப அதனுடைய நாத ஒலிகளை எழுப்புவதும்
3.இந்த  உணர்வுக்கொப்ப ரூபங்கள் அமைவதும்
4.அவைகளின் நடை உடை பாவனைகளைப் பார்த்து ஆயிரத்தெட்டு நடனங்களைக் காட்டினார் திருமூலர்.
5.அதுவே மனிதனுக்குள் வரும் போது நூற்றியெட்டு நடனங்களாக காட்டினார்.

நடனக் கலை என்று இன்று நடராஜருக்கு நாட்டியாஞ்சலி செய்தால் நடராஜர் நமக்கு ஏதோ செய்வார் என்று இப்படி சாங்கியங்களைச் செய்து வரம் கேட்பவர்களாகத்தான் இன்று இருக்கின்றோம்.

இதை எல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.

அந்த ஸ்தலத்தில் சிதம்பரத்திலிருந்து அதை நாம் பெறவில்லை. அங்கே நாம் பூஜை செய்வதும் அதனுடைய வாரிசுகளுக்குக் கொடுத்து விட்டு அருள் வாங்குவது என்ற நிலையில் தான் இருக்கின்றோமே தவிர திருமூலர் உணர்த்திய பேருண்மையை அறிவதற்கு இல்லை.

அவரின் வாரிசுகளாவது இன்று சீராக இருந்து அவர்களாவது அந்த உண்மையைப் பெற்று இருக்கிறாரா என்றால் இல்லை.

கிடைத்த மட்டும் லாபம் என்ற நிலையில் இந்த வாழ்க்கையின் நிலைகளைத்தான் ஓட்டுகின்றாரே தவிர அந்த மகா ஞானி திருமூலர் காட்டிய மெய் வழியைப் பின்பற்றவில்லை.

அவர் பிறவியில்லா நிலைகள் அடைந்தார். அதைப் பெற வேண்டும் என்ற நிலை இல்லை. ஏனென்றால் விஞ்ஞான அறிவால் மனிதனுடைய எண்ணங்கள் முழுவதும் அழியும் இத்தருணத்தில் இதைத் தெளிவுபடுத்துகின்றோம்.

1.திருமூலர் காட்டிய நெறிகள் கொண்டு
2.மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்த அந்த மகரிஷிகள் உணர்வை நமக்குள் எடுத்தால்
3.வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க முடியும்
4.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து நம்மைக் காக்க முடியும்.

இந்த ஆலயம் வருவோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும். பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும். இந்த வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும். என்று எண்ணி இந்த முறைப்படி தியானியுங்கள்.

எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்த ஆலயத்தில் தவம் இருங்கள்.

ஒவ்வொரு மனிதனும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்தால் இது தான் தவம்.

ஆண்டவனை நான் காணப் போகின்றேன் அவன் அருளை நான் பெறப் போகின்றேன் என்று இருப்பது தவம் அல்ல.

ஒவ்வொரு மனிதனையும் ஆண்டு கொண்டு இருப்பது உயிர். அது தான் தில்லை அம்பலத்தாண்டவா…!
1.ஆண்டவனாக இயக்கிக் கொண்டு இருப்பதும
2.எண்ணியதை ஈசனாக உருவாக்கிக் கொண்டு இருப்பதும்
3.உணர்வின் அணுவை உடலாக்கிக் கொண்டு சிவனாக்கிக் கொண்டு இருப்பதும்
4.சிவத்துக்குள் சக்தியாக்கி  இயக்கிக் கொண்டு இருப்பதும் உயிரே.

ஆகவே அந்த உடலை ஆண்டு கொண்டிருக்கும் உயிர் வீற்றிருக்கும் ஆலயத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தச் செய்யும் போது அந்த ஆண்டவனின் அருளை நாம் பெற முடியும்.

எல்லோரும் மகிழ வேண்டும் என்று எண்ணினால் இது தவம். அந்த மகிழ்ச்சியின் தன்மை நமக்குள் போற்றும் நிலை வந்தால் அந்த தவத்தின் பலனை நாம் பெறுகின்றோம். ஆலயங்களில் இந்த முறைப்படி எண்ணிப் பெறுங்கள்.

அந்த மெய் ஞானிகள் காட்டிய வழிகளில் நாம் இதைச் செயல்படுத்துவோம். இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மையை அகற்றுவோம். நமக்குள் அறியாது புகுந்த அந்த நஞ்சின் தன்மையை அதை வளராது தடுப்போம். உலக மக்களைக் காப்போம்.

அடுத்து வரும் சந்ததியினர் கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஞானியருடைய உணர்வைப் போதிப்போம். அதைப் பூர்வ புண்ணியமாக அமைப்போம்.

பிறந்த பின் உலகைக் காத்திடும் ஞானிகளாகக் காப்போம்… வளர்ப்போம்… அதைச் செயலாக்குவோம்.. என்று “உறுதி கொள்வோம்…!”

பல நினைவுகளில் இல்லாமல் இருக்கப் புருவ மத்தியில் ஒரு நிலைப்படுத்துங்கள்…!

Third eye - Siva

பல நினைவுகளில் இல்லாமல் இருக்கப் புருவ மத்தியில் ஒரு நிலைப்படுத்துங்கள்…!

 

ஒருவர் நோயோடு ரொம்ப வேதனைப்படுகிறார் என்று நாம் பார்க்கின்றோம். ஐயோ.. பாவமே…! என்று சொல்லி விட்டு அந்த நோயை நீக்குவதற்கு அவருக்கு நாம் உதவி செய்கிறோம்.

ஆனாலும் அந்த இடத்தில் பரிபக்குவம் இல்லை என்றால் என்ன ஆகும்….?
1.அவரின் நோயின் தன்மையைப் பற்றிக் கேட்டு நுகர்ந்த பின்
2.அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த நோயின் தன்மை நமக்குள் வரும்.

நோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் ஈஸ்வரா என்று உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி அதை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் பெற வேண்டும். அவர் உடல் நலமாக வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

அதை விடுத்துவிட்டு அவருக்கு வந்ததைப் பார்த்து “ஐயோ…! என்றால்…
1.நமக்குள்ளும் ஐயோ என்று அந்த நோயை இழுத்துக் கொண்டு வந்துவிடும்.
2.அவர் பட்ட வேதனையைத்தான் உருவாக்கும்.

நல்லதைச் செய்கிறேன் என்ற நிலையில் “நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்…! என்று அந்தப் பக்குவ நிலை தவறினால் என்னாகும்..?

வடையைச் சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். எண்ணெய் காயாமல் தட்டிப் போட்டால் ஒரு வடை போட்டால் வேகும். இரண்டாவது வடையை போட்டவுடன் சூடு அமர்ந்து விடும்.

அப்போது வடை வேகுமா…? எண்ணெயைத்தான் எடுத்துக் கொள்ளும். சட்டியில் எண்ணெய் காணமல் போகும். வடையில் ருசி இருக்காது.

ஆகையால் வாழ்க்கையில் எந்த ஒரு தீமை என்ற உணர்வை நுகர்ந்தாலும் அடுத்த கணம் அதைத் தூய்மை செய்ய வேண்டும் என்ற நிலைக்குப் பக்குவம் வர வேண்டும்.

ஒருவன் தீய வினைகளைச் செய்கிறான். அதைப் பார்க்கிறோம் என்றால் அது நமக்குள் வராதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை வைத்துத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அடுத்தாற் போல் யாரிடம் சொன்னாலும் குற்றங்களில் இருந்து அவன் மீள வேண்டும்… “மீள்வான்…!” என்று சொல்ல வேண்டும். ஆனால்
1.பாருங்கள்…! இந்த மாதிரித் திட்டிக் கொண்டு இருக்கின்றான்.
2.நானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் என்று கோபமாகச் சொன்னால் என்ன செய்யும்?

பக்குவம் தவறினால்… இதே உணர்வு கோபமாக அவரையும் நம் மீது திருப்பிப் பேசச் செய்யும். நம் மீது தான் குற்றவாளி ஆக்கும். ஏனென்றால்
1.அவன் உணர்வு நமக்குள் வந்து
2.இதே சொல் அங்கே போய்
3.நம்மைக் குற்றவாளியாக ஆக்கும்.
4.அப்போது தவறு செய்பவனுடைய உண்மையை நாம் எடுத்து சொல்ல முடியாது.

ஆகவே அந்த மாதிரி ஆகாதபடி உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் பெறவேண்டும்… உண்மையை அவர் உணர வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் அந்தப் பரிபக்குவத்தைப் பெற்று தீமையை நமக்குள் புகாதபடி தீமையை மாற்ற வேண்டும். நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சாமியார் செய்வார்… சாமி செய்யும்.. கடவுள் செய்வார்… என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால்
1.உள் நின்று இயக்கும் நம் உயிரே கடவுள்
2.நாம் எண்ணிய உணர்வே நமக்குள் கடவுளாகின்றது – அதுவே நம்மை இயக்குகின்றது.

தீமையான இயக்கங்களிலிருந்து நாம் மீள்தல் வேண்டும். தீமையை நீக்கிய மகரிஷிகளின் உணர்வினை எடுத்து ஒவ்வொரு செயலையும் நமக்குள் பக்குவப்படுத்த வேண்டும்.

அந்த நிலை பெறுவதற்காகத்தான்
1.பாட்டை மட்டும் பாடி விட்டுப்
2.பல நினைவில் நான் இல்லாமல் பரி பக்குவ நிலை நான் பெற
3.எனக்கு அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை வேண்டிக் கேட்கின்றோம்.

ஈசனுக்குச் செய்யும் பணி எப்படி இருக்க வேண்டும்…?

Soul is sole God

ஈசனுக்குச் செய்யும் பணி எப்படி இருக்க வேண்டும்…?

 

மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துப் பழகுங்கள்… உங்கள் கஷ்டம் எல்லாம் போகும்…! என்று யாம் (ஞானகுரு) சொல்கின்றோம். கஷ்டத்தை நீக்கும் வழி முறைகளையும் ஆற்றல்களையும் கொடுக்கின்றோம்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அடுத்தாற்போல் என்ன சொல்கிறார்கள்…?

அதை ஏன் கேட்கின்றீர்கள்…? என் பையன் எதிர்த்துக் கொண்டே இருக்கின்றான். எப்போது பார்த்தாலும் இப்படி இருக்கின்றான். பக்கத்து வீட்டுக்காரன் இடைஞ்சல் செய்கின்றான். நான் கொடுத்த கடன் பாக்கி பணம் வரவில்லை என்று இப்படியே சொல்கின்றார்கள்.

பையன் நல்லவனாக வேண்டும். கடன் பாக்கி பணம் திரும்ப வர வேண்டும் என்று “இப்படிக் கேளுங்கள்” என்று சொன்னாலும் அதற்குத் தானே வந்தேன் என்பார்கள்.

அப்பறம் திருப்பி இரண்டாவது தரம் மறுபடியும் அந்தக் கஷ்டத்தையே சொல்வார்கள்.

யாம் எத்தனை தரம் ஞானிகளின் உணர்வை இணைத்து நல்ல வாக்காகக் கொடுத்தாலும்
1.என் கஷ்டம் எல்லாம் அப்படியேதான் இருக்கிறது என்று
2.நான் சொன்ன நல்லதைத் திருப்பி என்னிடமே விட்டு விட்டு
3.மீண்டும் கஷ்டத்தை எடுத்துக் கொண்டு போகிறார்கள்.

துன்பங்களைப் போக்கும் நல்ல வாக்கை என்னிடமே விட்டு விட்டு கஷ்டத்தைச் சொல்லிக் கஷ்டத்தைத் தான் எடுத்துக் கொண்டு போகின்றார்கள்.

ஏனென்றால் அது அவருடைய குறை இல்லை. காரணம் சாப அலைகளே இதற்கு மூலமாகிவிட்டது.

ஒரு வீட்டில் ஒரு பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்றால் உங்கள் மனது எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறது…!

உங்கள் நண்பருக்கு அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஒன்றைச் செய்து கொடுத்து அது சரியான நிலையில் வரவில்லை… அவர் சரியாகச் செய்யவில்லை… உங்கள் மனம் எப்படிப் புண்படுகிறது…?

“நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்” என்று நான் பல ஆயிரம் பேரிடம் சொல்கிறோம். அப்படி நான் கொடுக்கும் நல்ல வாக்குகளைச் சரி வரப் பயன்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்?

ஏனென்றால் குருநாதர் எத்தனையோ ஆபத்தான நிலைகளில் எம்மைச் சிக்க வைத்து அந்த உணர்வின் எண்ணங்கள் உனக்குள் எப்படி இயங்குகின்றது என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ளச் செய்தார்.

அதே சமயத்தில் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அது எப்படி இயக்குகின்றது என்று மூன்று இலட்சம் பேரைக் காண்பித்தார்.

அவர்கள் ஆரம்பத்தில் நன்றாக இருப்பதும் பின்னாடி நல்லதை இயக்க முடியாமல் எந்த நிலையில் அல்லல்படுகிறார்கள் என்று காட்டி
1.இப்படிப்பட்ட மாய வாழ்வாக இருக்கின்றது…,
2.இதில் நீ எதைக் காணப் போகின்றாய்…?
3. நம்முடைய கடைசி எல்லை எது? என்று வினா எழுப்புகின்றார்.

என்றும் நிலையான நிலைகள் கொண்டு அழியாமல் இருப்பவர்கள் மகரிஷிகள்.

1.ஒளிச் சரீரம் பெற்ற அந்த மகரிஷிகளினுடைய அருள் சக்தியை எடுத்து
2.நாம் அவர்களைப் பின்பற்றி
3.அவர்களுடன் தான் நாம் ஐக்கியமாக வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர்.

“எல்லோரும் நல்லவரே” ஆனாலும் ஒவ்வொரு மனிதரும் சந்தர்ப்ப பேதத்தால் குடும்பத்தில்கள் சிக்கல்களாகி பல இன்னல் படுகின்றார்கள்.

அந்தத் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்று நல்ல வாக்கைப் பதிவு செய்தாலும் ஒரு நூறு பேர் வருகின்றனர் என்றால் அதில் இரண்டு பேர் தப்புவது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.

எம்மிடம் நல்ல வாக்கை வாங்கிய பின் அடுத்தவர் கூப்பிட்டு சாமி (ஞானகுரு) உங்களுக்கு என்ன சொன்னார்…? என்று கேட்டால்
1.நன்றாக இருப்பாய் என்று தான் சாமி சொல்கின்றார்.
2.என் கஷ்டத்தைப் பார்த்தால் பெரிய தொல்லையாக இருக்கின்றது என்கிறார்கள்.
3.சாமி நல்ல வாக்கு கொடுக்கின்றார் – வாஸ்தவம் தான்.
4.ஆனால் என் காலம் நல்லதை எங்கே ஒட்டி வருகின்றது…? என்று
5.கொடுத்த வாக்கை நினைவில் வைக்காதபடி இப்படிச் செய்து விடுகின்றார்கள்.

சாமி கொடுத்த அருள் வாக்கினால் நான் நன்றாக இருக்க வேண்டும். என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். நான் பார்க்கின்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படிச் சொல்கிறார்களா…? என்றால் இல்லை.

குருநாதர் காட்டிய வழியில் துன்பத்தை நீக்கும் அந்த அருள் ஞான விதையை முளைக்க வைத்து விளையச் செய்து மறுபடியும் பல வித்துகளாக உருவாக்கி ஒவ்வொருவருக்கும் குடும்ப வாழ்க்கையில் வந்த இன்னலைப் போக்குவதற்குகாக வேண்டி பதியச் செய்கின்றோம்.

1.நான் அதை முளைக்க வைக்க
2.அந்த வித்தை உருவாக்குவதற்கு “என்ன பாடுபட்டேன்…!” என்று எனக்குத்தான் தெரியும்.

நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் அந்த நல்ல வித்தை ஊன்றுகின்றோம்.
1.அதை முளைக்க வைக்காமல் விட்டால் என்ன செய்யும்?
2.இங்கேயே உதறிவிட்டுப் போய்விடுகின்றார்கள்…!
3.அப்போது என் மனது எப்படி இருக்கும்…?

நாம் சொல்லி அது முளைக்க வைக்காமல் சிதறவிட்டார்கள் என்றால் அதைப் போக்குவதற்காக நான் கடுமையான தியானம் இருக்கின்றேன்.

உங்களை வளர்த்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு உயிரையும் நான் வேண்டுகின்றேன்.

1.இந்த உடல்களை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனே…!
2.ஒவ்வொருவருக்குள்ளும் அறியாமல் இயக்கிக் கொண்டிருக்கும் தீமைகள் அகல வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்
4.மகிழ்ச்சியான உணர்வுகள் அங்கே தோன்ற வேண்டும்
5.அந்த நிலையை நீ அவர்களுக்குக் கொடு என்று
6.உங்கள் உயிரை (ஈஸ்வரனை) வேண்டிச் சதா நான் தியானமிருக்கின்றேன்… தவமிருக்கின்றேன்…!

காரணம் என்ன என்று கேட்டீர்கள் என்றால் உங்கள் கஷ்டமான உணர்வுகளை நான் கேட்டறிந்தேன் என்றால் என் உயிர் சும்மா இருக்காது.
1.உங்கள் கஷ்டத்தின் பால் என் நினைவுகள் சென்றால்
2.அதை உயிர் அறியச் செய்து அணுவாக மாற்றி
3.என் உடலாகவே ஆக்கி விடுகின்றது.

ஏனென்றால் உயிரின் வேலை அதுவாக இருக்கின்றது.

ஆகவே ஆறாவது அறிவின் ஞானமாக சேனாதிபதி என்ற நிலையில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு வரும் தீமைகளை என்னால் அகற்ற முடிகின்றது. உங்களுக்கு மீண்டும் மீண்டும் அதை உபதேசிக்கவும் முடிகின்றது.

அதை போன்று நீங்களும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வாழ்க்கையில் எதைச் செய்தாலும் யாம் கொடுத்த ஞானிகளின் அருள் ஞான வித்தை உங்களுக்குள் விளைய வைக்க வேண்டும்.

நிச்சயம் அதனின் பலனைப் பெற முடியும்…!

வெப்பம் தான் கடவுள்…! எப்படி…?

Image

light-2

வெப்பம் தான் கடவுள்…! எப்படி…?

ஆதியில் ஓர் விஷம் கொண்ட ஆவி விஷமற்றதைத் தாக்கப்படும் போது அந்தத் தாக்குதல் தாங்காது வெப்பமாகி அணுக்களாகச் சிதறுண்டு பரவுகின்றது,

அவ்வாறு தாக்கி அணுக்களாகப் பரவிய நிலைகளை இந்த உண்மையைக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன். அவன் கண்டதை எல்லாம் சாதாரண தன் இன மக்களும் கண்டு கொள்வதற்காக அதற்குக் காரணப் பெயர்களை வைத்தான்.

ஏனென்றால் விஷத்தின் தாகுதலால் ஆரம்பத்தில் ஏற்பட்ட வெப்பம் அது நகர்ந்து செல்லும் போது காந்தமாக அமைகின்றது. வெப்பம் காந்தம் விஷம் இவ்வாறு ஆதியிலே இந்த மூன்றும் ஒன்றாக அது உருபெறும் சந்தர்ப்பத்தைத் தான் “உலகின் இயக்கச் சக்தியாக மாறுகின்றது…!”

1.வெப்பம் உருவாக்கும் சக்தி
2.காந்தம் எப்பொருளையும் தன்னுடன் (கவர்ந்து அல்லது இழுத்து) இணைத்து அணைத்துக் கொள்ளும் சக்தி.
3.அதனுடன் சேர்ந்த விஷமோ இயக்கும் சக்தி

அதாவது எப்பொருள் அதனுடன் கலந்ததோ அப்பொருளின் மணத்தையும் குணத்தையும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி அது இயக்கச் சக்தியாகச் செயல்படுத்துகின்றது என்பதனைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தான் காரணப் பெயரை வைத்தார்கள் அன்று ஞானிகள்.

உதாரணமாக
1.நாம் சமையல் செய்ய வேண்டும் என்றாலும் வெப்பத்தை வைத்துத் தான் பல பொருள்களைச் சமைக்கின்றோம்.
2.மனித உடலில் அந்த வெப்பம் இருந்தால் தான் அணுக்கள் இயக்குகின்றது.
3.ஒரு மரத்திற்கு வெப்பம் இருந்தால் தான் அதுவும் வளர்கின்றது.

அதைப் போல இன்று கடலுக்குள் நீரிலே வாழும் உயிரினங்கள் இருப்பினும் பூமியின் வெப்ப அலைகளால் ஏற்படும் காந்த அலைகள் நீருக்குள் பரவும் போது தான்
1.அந்த மீன்களிலுள்ள உயிரின் நிலைகளுக்குள் வெப்பங்கள் ஊடுருவி
2.அதைத் தனக்குள் கவரும் ஓட்டத்தில் எலக்ட்ரானிக்காக மாற்றி
3.அந்த வெப்பங்களை வைத்து அதுவும் வாழ்கின்றது வளர்கின்றது.

இதைப்போல நம் உயிருக்குள் வெப்பமும் கதிரியக்கச் சக்தியும் இரண்டும் ஒன்றோடொன்று சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றது. அதனால் தான் துடிப்பு ஏற்படுகின்றது.

இது அதைக் கொல்ல ஆரம்பிக்கிறது. அது இதைக் கொல்ல வேண்டுமென்று நினைக்கிறது. இந்தப் போர் முறையினால்தான் துடிப்பாகி அங்கே வெப்பம் ஏற்படுகிறது.

அந்தத் துடிப்புக்குள் ஏற்படக்கூடிய வெப்பத்தினால் ஈர்க்கும் சக்தியான காந்தமாகி மற்ற ஏதாவது ஒரு மணம் (சத்து) இருந்ததென்றால் இழுக்கின்றது.

அந்த வெப்பத்திற்குள் அது பட்டவுடனே அது இயங்குகிறது… உற்பத்தி செய்கின்றது, ஈர்த்த அந்த மணங்கள் வெப்பத்துடன் இணைந்தவுடனே அந்தப் பொருளாக (உடலாக) மாறுகின்றது. சுவாசிக்கும் போது அது என்ன மணமோ அதை எடுத்துக் கொள்கின்றது.

உதாரணமாக ஒரு பையன் அடிபட்டு அதனால் வேதனைப்படுகின்றான். நான் அதைப் பார்க்கின்றேன். அப்பொழுது அதைச் சுவாசித்து என் உயிரில் பட்டவுடனே அவன் உடலில் விளைய வைத்தது என்னுடன் கலந்து உடலில் வந்து ஜீவன் பெறுகின்றது

அ.எனக்கும் உடலில் வேதனை வருகின்ற மாதிரி
2.அதே உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

அடிபட்ட அவன் உடலில் வேதனை வரும் பொழுது, “ஆ..” என்று அலறி அவனிடமிருந்து மூச்சு வெளி வருகின்றது. அப்பொழுது அந்தக் காந்த அலைகள் அதை எடுத்துக் கொண்டதை நான் பார்த்தவுடனே எனக்குள்ளும் அந்த வேதனையாகி அவனைக் காப்பாற்றச் சொல்லுகின்றது.

அப்பொழுது அந்தப் பாச உணர்வுடன் காப்பாற்றுகின்ற எண்ணம் வரும் பொழுது இந்தக் குணம் எனக்குள் பட்டவுடனே பிரணவம், “ஓ..ம்”. எனக்குள் காப்பாற்றுகின்ற சக்தி ஏற்படுகின்றது. அப்பொழுது “ஓ…ம்”.

அதாவது நாம் ஒரு சரக்கைப் போட்டு வேக வைக்கும் பொழுது, அதில் இருக்கின்ற சத்தை என்ன செய்கின்றது…? உறிஞ்சித் தண்ணீருடன் கலந்து விடுகின்றது. நாம் வேக வைத்தால் என்ன செய்கின்றது..? ஒரு பொருளைப் போட்டவுடனே அது கரைந்து மற்றதுடன் கலக்கின்றது.

நாம் குழம்பு வைப்பது போல உயிரான வெப்பத்தில் மோதியவுடனே அவன் வேதனைப்பட்ட அந்த வேதனையான சத்து என்னிடம் உமிழ்நீராக மாறி என் உடலில் சேர்ந்து விடுகின்றது, “இது ஓ…ம்”

என் கண்ணுக்குப் புலப்படாத இந்தச் சக்தி என் உயிரிலே பட்டவுடனே ஜீவனாகி அது என் உடலுடன் சேர்த்து இணையும் பொழுது ஓ…ம் நமச்சிவாய…! நமதாக எனதாக மாறுகின்றது.

இப்படித்தான் நம் உயிர் இயங்கிக் கொண்டுள்ளது. நாம் சுவாசிப்பது அனைத்தையுமே பிரணவமாக்கி நமக்குள் ஜீவன் பெறச் செய்து நம் உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். மெய் ஞானிகள் அவர்கள் தன்னைத்தான் எப்படி அறிந்தார்களோ உயிருடன் ஒன்றி விண்ணின் ஆற்றலைப் பெற்று நஞ்சை வென்று ஒளியாக ஆனார்களோ அதைப் போல நாமும் ஆக முடியும்.

உயிரின் இயக்க ஓட்டத்தின் இரகசியம்

Om - ohm

உயிரின் இயக்க ஓட்டத்தின் இரகசியம் 

மனிதன் தன் வாழ்க்கையில் ஒரு நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணுவான். அதிலே குறை ஏற்பட்டால் குறையாகி விட்டதே..! இனி எதிர்காலம் என்ன ஆகுமோ…! என்று சலிப்பின் உணர்வை எடுத்துக் கொள்கின்றான்.

அந்தக் குறையான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து விட்டால்
1.உயிரான விஷ்ணு அதன் தன்மை கொண்டு வரம் கொடுக்க
2.அதனுடைய நிலைகளை உயிரில் இருக்கும் காந்தம் (லட்சுமி) கவர
3.கவர்ந்தது சிருஷ்டியாகப் பிரம்மமாக உருவாக்கி விடுகின்றது,
4.நாம் கவர்ந்த அந்தக் குறையை தன் தாய் தந்தை சொன்னபடி மகன் அந்தக் கஷ்டத்தையே உருவாக்குகின்றான்.
5.(தாய் தந்தை – உயிரில் இருக்கும் வெப்பமும் அதனுடன் இணைந்த காந்தமும்) (மகன் – நடந்த நிகழ்ச்சியால் குறையான உணர்வுகள் உயிரிலே மோதும் சந்தர்ப்பம் “பிரம்மா”)
6.ஏனென்றால் இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

நமது காவியங்கள் ஒவ்வொரு நுணுக்க நிலைகளையும் அந்த மூலங்கள் எப்படி இயக்குகின்றது…? என்றும் தெளிவாகக் கூறுகின்றது.

ஆகவே நம்மை ஒரு அறிவாளியாக உருவாக்குவதும் நம்மை அறிவிலியாக அறிவை இழக்கச் செய்வதும் இதைப் போன்ற நிலைகள் தான். (சந்தர்ப்பத்தில் எது நம் உயிரிலே இணைகின்றதோ அது தான்)

உதாரணமாக எவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த பொருளாக இருப்பினும் அல்லது ஒரு சத்துள்ள சுவைமிக்க உணவாக இருப்பினும் விஷம் அதிலே கலந்து விட்டால் அந்த விஷமான சத்து பொருளின் சக்தியைச் சுத்தமாகவே இழக்கச் செய்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நாம் வேதனை என்ற நிலைகளை எடுத்துக் கொண்டால் உயிரான விஷ்ணு அதற்கு வரம் கொடுத்து விடுகின்றான். அங்கே உயிருக்குள் இணைந்தபின் “பிரம்மம்…!”
1.தன் தந்தை சொல்படி தட்டாது அதனை உருவாக்கி
2.வேதனை கொண்ட உணர்வின் செயலாக அதை இயக்கத் தொடங்கி விடுகின்றான்.
3.ஆகவே இவை இரண்டும் சேர்த்து ஒன்றாக இருக்கும் போது தான் ஈசன் என்று பெயர். இங்கே சிருஷ்டி.
4.தந்தையும் தன் குழந்தையும் இரண்டும் சேர்த்து இயக்கப்படும் போது பிரம்ம ரிஷி சிருஷ்டி… “ஈசா… ஓ..ம்… ஈஸ்வரா…!
5.நமது ஞானிகள் வைத்த காரண காரியப் பெயர்கள் சாதாரணமானவை அல்ல.

அதே சமயத்தில் சிருஷ்டி என்று உருவாவது அனைத்தும் அணுக்களாக உடலாக மாறுகின்றது. சிவத்திற்குள் அறையாக (ROOM) அமைத்து அதனை உருவாக்கி அதனைத் தன் இயக்கமாக வைத்துக் கொள்கின்றது. (உடலாக உருவாவதைச் சிவம் என்றார்கள் ஞானிகள்.)

நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எண்ணி எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் சதா சிவமாக உடலாக உருவாகிக் கொண்டே உள்ளது. வருவதை எல்லாம் சிவன் அரவணைத்துக் கொள்கின்றான்.

ஆனால் நாம் நல்லவைகளை எடுத்துக் கொண்டால் சிவனால் அதைத் தாங்க முடிகின்றது. தீமையானவைகளை எடுத்துக் கொண்டால் சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகின்றான் என்று அதையும் காட்டுகின்றார்கள்.

1.உதாரணமாக ஒரு குளிர்ச்சியான பொருளைக் கையில் கொடுத்தால் விறு..விறு…விறு…! என இருக்கிறது.
2.ரொம்ப நேரம் அதைக் கையில் வைக்க முடியவில்லை.
3.அதே சமயத்தில் ஒரு சுடும் பொருளை நாம் கையில் வைத்தாலும் சுரு…சுரு…சுரு…! என்கிறது
4.அதையும் நாம் நீண்ட நேரம் வைத்திருக்க முடிவதில்லை.

அதைப் போன்று தான் நாம் எண்ணியது அனைத்தும் உடலுக்குள் அது எது போய்ச் சேர்ந்தாலும் அதனதன் உணர்ச்சியைத் தூண்டத்தான் செய்யும்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் வேதனை என்று எண்ணினால் விஷம் தீண்டினால் எவ்வாறோ அதைப் போல நம் உடலுக்குள் நஞ்சாக விளையத்தான் செய்யும்.
1.அப்பொழுது உடலான சிவனால் அதைத் தாங்க முடியாது.
2.ஆனாலும் லட்சுமியுடைய (காந்தம்) நிலைகள் என்ன…?
3.உயிருக்குள் இருக்கும் காந்தம் எதையுமே கவர்ந்து கணவனுக்குச் (விஷ்ணு) செய்ய வேண்டிய தொண்டுகளைச் செய்கின்றது.

உயிருடைய இயக்கம் எதுவாக இருந்தாலும் தன் கணவருடனே இணைந்து விஷ்ணுவுடன் இணைக்கப்படும் போது அதிலே உருபெறும் குழந்தைகள் தான் நாம் சுவாசிக்கும் வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் எல்லாமே…!

ஆகவே
1.நம் உயிருக்குள் படும் உணர்வின் தன்மையில் மிகுந்த கவனம் தேவை.
2.நம் உயிரிலே எக்காரணத்தைக் கொண்டும் தீமைகள் சேராது பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும்.

அதற்காக வேண்டித் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து அதை உயிர் வழியாகச் சுவாசிக்கும் முறையும் இந்த உபதேச வாயிலாக உணர்த்துகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய நிலைகளைச் சந்திக்க நேர்ந்தாலும் “ஓ…ம் ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியைக் கவரப் பழகிக் கொள்ளுங்கள்.

1.உங்கள் உயிர் அதை இயக்கி
2.சிருஷ்டி என்ற நிலைகளில் மெய் உணர்வுகளை உங்களுக்குள் பிரம்மமாக்கி
3.அதுவாகவே உங்களை மாற்றும்.

உயிர் தான் உங்கள் கஷ்டத்தைப் போக்குகின்றது…! எப்படி…?

Soul and body

உயிர் தான் உங்கள் கஷ்டத்தைப் போக்குகின்றது…! எப்படி…?

எத்தனையோ நிலைகளிலிருந்து வரும் தீமைகளை நீக்குவதற்கு உங்களுக்கு உபாயமும் சக்தியும் கொடுக்கிறோம். அதை நீங்கள் தான் தியானத்தின் வழியாகச் சுவாசித்து எடுத்து உங்களுக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பதிலாக என்னை நினைத்துக் கொண்டு “சாமி தான் (ஞானகுரு) செய்து கொடுப்பார்…! என்று என்னிடம் கஷ்டத்தைச் சொல்வதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

ஏனென்றால் நீங்கள் எண்ணியது எதுவோ உங்கள் உயிர் அதையே தான் உருவாக்கும். கஷ்டம் போக வேண்டும்… கஷ்டத்தைப் போக்க வேண்டும்…! என்று எண்ணினீர்கள் என்றால் உங்கள் உயிர் அந்தச் சக்தியை உருவாக்கித் தரும் என்று பல முறை சொல்கிறேன்.

1.இந்தக் காற்றில் எல்லாச் சக்திகளும் இருக்கிறது.
2.உங்களால் அதிலிருந்து பிரித்து எடுக்க முடியும்.
3.தீமையை உங்களால் போக்க முடியும்.
4.அந்த அருளைப் பெருக்கக்கூடிய தகுதி உங்கள் ஆறாவது அறிவுக்கு உண்டு.

இதைத் தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி உங்கள் ஆறாவது அறிவின் சக்தியைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் நாம் எதை இச்சைப்பட வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரொளி பெற வேண்டும் என்று இச்சைபட்டால் அது உடலுக்குள் செல்லும் போது கிரியையாகி அது ஞானத்தின் வழி கொண்டு உங்கள் வாழ்க்கையைச் சரியான வழியில் நடத்தும்.

தீமையை நுகர்ந்த அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் புருவ மத்தியில் எண்ணி விட்டால் தீமைகள் உள்ளுக்குள் போகாமல் தடுத்துக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தால் நமக்கு முன்னாடி இருக்கும் ஆன்மாவில் வலுவாகச் சேர்கிறது.

1.தீமைகளையோ துன்பங்களையோ வேதனைகளையோ நாம் சந்திக்கும் பொழுதெல்லாம்
2.இப்படி எச்சரிக்கை பண்ணி விட்டால் தீமைகளை இழுக்கும் திறன் குறைகின்றது.
3.நம் சுவாசத்தின் வழி உடலுக்குள் தீமைகள் போவதில்லை.

உங்கள் ஆன்மா தூய்மை அடைகின்றது. அருள் சக்திகள் உங்களுக்குள் பெருகுகின்றது. தீமையை நீக்கும் இந்தப் பேராற்றலை உங்கள் உயிர் ஜீவ அணுக்களாக உடலுக்குள் உருவாக்குகின்றது.

உடல் நலம் பெறுவீர்கள். சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் பெறுவீர்கள். மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறுவீர்கள்.

இதைத் தான் மடி மீது வைத்து வாசற்படி மீது அமர்ந்து நர நாராயணன் இரண்யனைப் பிளந்தான் என்று சொல்வது.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று உச்சரித்து “சக்தியையும் பலனையும் எப்படிப் பெறுவது…?”

Eswara third eye

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று உச்சரித்து “சக்தியையும் பலனையும் எப்படிப் பெறுவது…?” 

ஈஸ்வரா…! என்பது நமக்குள் ஜீவனாக இருப்பது அதாவது ஓ…” என்று இயக்கி நாம் எணணியதை “ம்…” என்று உடலாக மாற்றி
1.இயக்கும் சக்தியாக இருப்பது… உற்பத்தி ஆக்குவது… அது தான் “ஓ…ம்…” ஈஸ்வரா…
2.பிரம்மாவும் நீயே… உருவாக்குவதும் நீயே… என்று உயிரை எண்ணுவது தான் ஓ…ம் ஈஸ்வரா…!
3.இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளுக்கும் குருவாக இருப்பது நமது உயிரே… ஆகவே ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

ஆகையினால் நம் உயிரை இப்படி எண்ணி இந்த நிலைகளில் ஏங்கிச் சொல்லுங்கள். வெறும் வாயிலே ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா குருதேவா… என்று சொல்ல வேண்டாம். உணர்வுடன் நம் உயிரை எண்ணுதல் வேண்டும் (இது முக்கியம்).

அதே சமயத்தில் நமது குருவின் பெயரும் அந்த ஈஸ்வரா தான். ஏனென்றால்
1.அவர் சர்வ சக்தியும் உருவாக்கக்கூடிய நிலைகள் அந்த உடலிலே பெற்றார்.
2.அவருக்கு “ஈஸ்வரா” என்று பெயரை வைத்தார்கள்.

அவரே குருவாக இருந்து அவர் உடலிலே விளைய வைத்த உணர்வை எனக்குள் (ஞானகுரு) கொடுத்தார். அதையே எண்ணச் சொன்னார்.

1.உன் உயிரைக் குருவாக நீ எண்ணு.
2.அந்த உயிரின் தன்மையை ஈசனாக எண்ணு.
3.அந்த உணர்வின் சக்தி அது உனக்குள் செயலாக்கும்…! என்று சொன்னார்.
4.அதைத்தான் உங்களிடமும் இப்போது நான் சொல்வது.

ஆகையினால் உங்கள் உயிரை மதித்து உங்கள் உயிரை ஈசனாக எண்ணி உங்கள் உயிரைக் குருவாக எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏக்க உணர்வுடன் இந்தச் சொல்லைச் சொல்லுங்கள்.

அப்படிச் சொல்லும் போது உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றி விண்ணிலே துருவச் நட்சத்திரமாகவும் சபதரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை மகரிஷிகளின் அருள் சக்தியும் உங்கள் ஈர்ப்புக்குள் (உயிருக்குள்) வரும்.

ஆகவே ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்பது மந்திரச் சொல் அல்ல.
1.உயிருடன்… ஈசனுடன்… நம் குருவுடன்..
2.என்றுமே எப்பொழுதுமே ஒன்றி வாழும் நிலை தான் அது.

நம் உடலை இயக்கும் காந்த சக்தி குறைந்தால் என்ன ஆகும்…?

Image

Magnetic power of human body

நம் உடலை இயக்கும் காந்த சக்தி குறைந்தால் என்ன ஆகும்…? 

உதாரணமாக பெரும் கொண்ட மிளகாயைப் பார்க்கலாம். ஆனால் “செக்கச்செவேல்…!” என்று இருக்கும். அதற்குள் விஷத்தின் தன்மை கம்மியாக இருக்கும். ஆனால் அந்த மிளகாயில் காரம் இருக்காது.

அதே சமயம் இன்னொரு மிளகாயை எடுத்துக் கொண்டால் வாயில் வைத்தவுடனே “சுரீர்…!” என்று காரம் உடல் முழுவதற்கும் ஊடுருவும். ஆனால் அதில் விஷம் அதிகமாக இருக்கும்.
1.விஷம் அதிகமாக இருப்பதால் அந்த மணத்தை வேகமாகத் தூக்கிச் சென்று
2.அதை இயக்கவல்ல ஆற்றலாகச் செயல்படுத்துகின்றது.

இதைப்போல தான் ஒவ்வொன்றிலேயும் இருக்கும் விஷத்தின் அளவுகோலுக்கொப்ப அதனின் ஆற்றலை நாம் காணலாம்.

சாந்த குணத்தை எண்ணுகின்றோம் என்றால் அதில் விஷம் கம்மி. நாம் கோபமான நிலைகளை எண்ணினால் அதிலே விஷத்தின் ஆற்றல் அதிகம். பயத்தின் நிலைகள் அதிகமாக எடுக்கின்றோம். அதிலும் விஷம் ஜாஸ்தி.

அதை அதிகமாக எண்ணிச் சுவாசிக்கும் போது இந்த விஷத்தின் தன்மை நம் உடலை வேகமாக இயக்கச் செய்து நம்மை ஆபத்தில் இருந்து நம்மை காக்கவும் செய்கின்றது. ஆனால்
1.ஆபத்திலிருந்து காத்தாலும் நம் உடலின் சக்தியை அதிகமாக இயக்கப் போகும் போது
2.நாம் எடுக்கும் இந்தக் குணத்தை ஈர்க்கும் நிலைகள்
3.நம் உடலில் இருக்கக்கூடிய காந்தத்தின் சக்தி அது பலவீனமடைகின்றது.

உதாரணமாக ஒரு மோட்டாரில் மேக்னட் இருக்கின்றது. மோட்டார் சுழன்று ஒரு ரைஸ் மில்லிலே அது இயக்குகின்றது. நெல்லை அரைக்கும் பொழுது அதிலே நெல்லை அதிகமாகக் கொட்டி விட்டால் அரைக்கும் திறன் குறைந்து “மோட்டார் சூடாகிவிடுகின்றது…!”
1.ஆக அது சூடாகும் போது அதில் (WINDING) இருக்கக்கூடிய காந்த சக்தி குறைகின்றது.
2.இப்படி மோட்டாரில் இருக்கும் காந்தம் குறைந்து விட்டால்
3.அடுத்து சிறிதளவு நெல்லைப் போட்டாலும் அதனின் அரைக்கும் திறன் குறைகின்றது.
4.மோட்டார் வலு குறைந்துவிட்டது (WEAK) என்று சொல்கிறோம்.

இதைப்போல தான் விஷத்தை முறியடிக்கும் உணர்வின் சத்து நம் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாக இருந்தாலும் அடிக்கடி நாம் எடுக்கும் கோபமும் வெறுப்பும் பயமும் வேதனையும் ஆத்திரமும் அதிகமாகி விட்டால் நமக்குள் இருக்கக்கூடிய காந்தத்தின் சக்தி குறைந்து விடுகின்றது.

அதனால் நாம் சுவாசிக்கும் உணர்விற்குள் வரும் விஷத்தின் சத்தை வடிக்கும் திறன் இழக்கப்பட்டு நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்குள் கோபம் பயம் வேதனை என்ற குணங்களின் “விஷம்” கலந்து விடுகின்றது.

சத்தான பாலாக நாம் குடித்தாலும் சத்தான சுவையான ஆகாரம் என்று சாப்பிட்டாலும் அதற்குள் ஒரு துளி விஷம் பட்டுவிட்டால் அந்த விஷம் அதிகமாகி அது உட்கொள்பவரை மாய்த்து விடுகின்றது.

அதைப் போன்று தான் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணம் அனைத்தும் காந்தப்புலனின் தன்மை குறைக்கப்படும் போது இந்த விஷத்தை நீக்கும் திறன் இழக்கப்படுகின்றது.

நாம் சுவாசித்த உணர்வுக்குள் வரும் விஷத்தைக் கழிக்க முடியாததால் நம்மை மனிதனாக இயக்கச் செய்யும் அறிந்துணர்ந்து செயல்படும் நற்குணங்களின் ஆற்றல் அனைத்தும் குறைந்து விடுகின்றது.

ஆரம்ப நிலைகளிலே மிருகங்கள் எப்படி விஷத்தின் தன்மையைத் தன் உடலாக மாற்றிக் கொண்டதோ அதைப் போன்றே நல்ல குணங்கள் அனைத்திற்குள்ளும் விஷம் புகுந்து அதிலே ஆக்கிரமித்துக் கொள்ளும்.

இப்படித்தான் நம் நல்ல குணங்கள் பாழாகின்றது. நல்ல குணங்களால் உருவான நல்ல உடலிலும் நோயாகின்றது. பின் குறுகிய காலத்திலேயே மடிந்து பின் மனிதனல்லாத உடலுக்குள் தான் சென்று பிறக்க நேரும்.

இதைப் போன்ற நிலைகளைத் தடுப்பதற்காகத் தான்
1.விஷத்தை வென்றிடும் ஆற்றலைப் பெற்று
2.தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிய
3.அந்த மகா ஞானிகளின் உணர்வை உங்களைப் பெறச் செய்கின்றோம்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதை இணைத்துக் கொண்டே வந்தால் நம் நல்ல குணங்களுக்கு அது ஊட்டச் சக்தியாகி விஷத்தைக் கழிக்கும் வீரிய சக்தியாகப் பெறுகின்றது.

அதாவது நாம் சுவாசித்த கோபம் பயம் வேதனை ஆத்திரம் போன்ற குணங்களை இயக்கும்
1.விஷத்தின் சக்தியை நாம் அடக்குகின்றோம்.
2.அடக்கி நல்ல குணங்களை இயக்கும் வீரிய சக்தியாக மாற்றுகின்றோம். அவ்வளவு தான்.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய விஷம் வந்தாலும் அதை உணவாக எடுத்து ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளது. என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வேகா நிலையில் உள்ளது.

அந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும்.