நாம் எண்ணும் எண்ணங்களும்… பித்த சுரப்பியின் இயக்கங்களும்

நாம் எண்ணும் எண்ணங்களும்… பித்த சுரப்பியின் இயக்கங்களும்

 

இந்த வாழ்க்கையில் அடிக்கடி நம்மை அறியாமல் வேதனைப்பட்டோம்… பயந்தோம்… என்றால் அத்தகைய உணர்வுகளினால் உடலில் இருக்கக்கூடிய “பித்த சுரப்பிகள் சுரக்கும் சுரப்பும்” அதிகரித்துவிடும்.

பாம்பு கடுமையான தன் விஷத்தின் தன்மை கொண்டு அதனுடைய தலை சிறிதாக இருப்பினும் பெரிய உயிரினங்களைக் கூட விழுங்க முயற்சிக்கும். அந்த உயிரினத்தைப் பிடித்து விட்டால் தன் உடலில் உருவான விஷத்தின் தன்மைய கொண்டு அந்த உயிரினத்திலே பாய்ச்சி அதைப் பலவீனப்படுத்தி… உடலுக்குள் செல்லச் செல்ல அந்த உயிரினம் கரையும் தன்மை அடைகின்றது.

அதைப்போல மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் நாம் உணவாக உட்கொண்டாலும் நமக்குள் இருக்கும் பித்த சுரபி அதுவும் நஞ்சு தான்.
1.பித்த சுரப்பி எந்த அளவிற்கு உமிழ்த்துகின்றதோ
2.அது உணவுடன் கலக்கப்படும் பொழுது உணவைக் கரைத்து விடுகின்றது.

அடிக்கடி நாம் கடினமான உணவுப் பொருளை உட்கொள்கிறோம் என்றால் “பித்த சுரப்பிகள் அதிகமாக இயக்கப்பட்டு” அந்தக் கடினப் பொருளைச் சீக்கிரமே அது கரைத்து விடச் செய்யும்.

ஆனால் அடுத்த சமயங்களில் இந்த கடின பொருளை நாம் உட்கொள்ளவில்லை என்றால்
1.பித்த சுரப்பி உமிழ்த்திய வேகத்தில் நஞ்சு அதிகமாகி குடலுக்குள் அரிப்பும்
2.பசி கொடூரமாக இருந்தாலும் உணவு உட்கொள்ள முடியாதபடி தடைப்படுத்தும்.
3.நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது உடலின் உணர்வின் செல்கள் சீராக இயங்காது.
4.அப்போது உணவாக உட்கொள்வதில் சுவையை அறிய முடியாத நிலை ஏற்படுகின்றது.
5.சுவை அறியவில்லை என்றால் உணவை உள்ளே ஈர்க்கும் திறன் அது தடைப்படுகின்றது.
6.பித்தத்தில் கசப்பின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது உணவை உள்ளே செல்ல விடாதபடி வெளிப்படுத்தும் சக்தியாக மாற்றி விடுகின்றது.

உதாரணமாக… ஒருவர் பலகாரம் சுடுகிறார் என்றால் தண்ணீரைத் தெளிப்பார்… எண்ணெய் எந்த அளவுக்குக் காய்ந்திருக்கிறது…? என்று பரீட்சித்துப் பார்ப்பார். வடையைத் தட்டிப் போடும் பொழுது அதில் எழும் நாதத்தின் ஒலி கொண்டு வெப்பத்தின் தணனலைக் கண்டு கொள்கிறார்.

வெப்பம் சரியாக இருந்தால் வடை நன்றாக வேகின்றது… சுவையாகவும் இருக்கின்றது. ஆனால் வெப்பம் சரியாக இல்லை என்றால் வடையைத் தட்டிப் போட்டால் அது லேசாக இருக்கும் பொழுது எண்ணெய் ஊடுருவி விடும்… வடை சுவை அற்றுப் போய்விடும்.

ஆக
1.வெப்பத்திற்குத் தக்கவாறு வடையில் அந்த மாவின் சத்தைச் சுவை கொண்டதாக மாற்றுவது போன்று
2.நமது உணர்வின் இயக்கச் சக்தி எந்த அளவிற்கு இருக்கின்றதோ அதைப் போன்றே ஜீரணிக்கும் சக்தி பித்த சுரபிகளுக்கு வருகின்றது.
3.பித்தம் அதிகரித்து விட்டால் மற்ற உறுப்புகளை இயக்கும் தன்மையும் குறைந்து விடுகின்றது உணவாக உட்கொள்ளும் நிலையும் மறைகின்றது.

ஏனென்றால் சாதாரணமாகத் தான் நாம் எண்ணினோம் கோபப்பட்டோம் வேதனைப்பட்டோம் எல்லாம் வேடிக்கை தானே பார்த்தோம் என்று நாம் இருக்கலாம்.

அந்தக் கோபித்த உணர்வின் செயல்கள் நம் உடலில் எவ்வாறு விளைந்து மாறுகிறது என்ற நிலையை தத்துவ ஞானிகள் இப்படித் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
1.ஆகவே நமது வாழ்க்கையில் நம்மை அறியாமல் இயக்கும் மனித உணர்வுகள் அனைத்தையும்
2.தெரிந்திடும் நிலையும் தெளிந்து செயல்படும் நிலையும் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

அதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

கோபம் அதிகமானால் விளையும் தீமைகள்

கோபம் அதிகமானால் விளையும் தீமைகள்

 

சந்தர்ப்பவசத்தால் “கோப உணர்வுகளை” அதிகமாக… தொடர்ச்சியாக நுகர நேர்ந்தால் இந்தக் கார உணர்ச்சிகள் நம் இரத்தங்களிலே உந்தப்படும் போது இரத்தத்தில் இருக்கும் நீரின் சக்தியை வடிக்கப்பட்டு அது காணாது போய் விடுகின்றது.

இந்த இரத்தக் கொதிப்பு உள்ளோருக்கு அடிக்கடி ஆவேச உணர்வுகளும் தாகமும் வரும். இந்த உணர்வுகள் படரப்படும் பொழுது அந்த உணர்ச்சியின் வேகங்களாகும் பொழுது சிறு மூளையின் இயக்கத்திற்குச் சென்ற உடனே அதன் உணர்வைத் தாங்காது அது அதிகரித்துவிட்டால் கைகால் நரம்புகளை வேகமாக இறுக்கி மடக்கிவிடும்.

1.நாம் எவ்வாறு “ஆ…!” என்று அலறப்படும் பொழுது வாயின் தன்மை தன்னிச்சையாக அந்த உணர்ச்சிகள் இயக்கச் செய்கின்றதோ
2.இதைப்போன்று தான் இந்தக் கார உணர்வின் சத்து நமக்குள் இப்படி இயக்கமாக மாறிவிடுகிறது.
3.“ஆ…!” என்று அலறுவது போல நம் இரத்தத்திற்குள் இருக்கும் நீர் சத்து நிலைகள் மடிந்து விடுகின்றது அல்லது வேர்வையாகக் கொட்டி விடுகின்றது.

இந்த இரத்தக் கொதிப்பு உள்ளவருக்கு நடக்கும் பொழுது தலைசுற்றல் கிறுகிறுப்பு இத்தனையும் வரும். அடுத்து ஒரு காரியத்தை எண்ணினார்கள் என்றால் அதைச் செயல்படுத்தும் போது உணர்ச்சியின் வேகங்கள் உந்தப்பட்டு
1.உடனே மயக்கத்தின் நிலைகள் “ஹோமா ஸ்டேஜிக்கும்” சென்றுவிடும்.
2.சிந்தனையற்ற நிலைகளும் நரம்பியல்களை இயக்காதபடி இருதய வால்வுகளைச் சரியாக இயக்காத நிலைகள் ஆகி விடுகின்றது.

காரணம் இந்த உணர்வின் வேகம் அதிகரித்து விட்டால் இரத்தத்தில் கார உணர்ச்சிகள் அதிகரிக்கும் பொழுது இரத்த வால்வுகளிலே கார உணர்ச்சிகள் ஆனபின் அந்த வால்வின் நுழைவாயிலில் அதிக வீக்கம் ஆகிவிடுகிறது.

உற்பத்தியான இரத்தத்தை உள்ளுக்குள் இழுத்து வடிகட்டும் நிலையாக ஈர்க்கப்படும் பொழுது வராது. அப்பொழுது கடினமாக இழுக்கப்படும் பொழுது அந்த ஒரு பாகத்தில் எரிச்சலும் அடுத்த பாகம் இழுக்கும் நிலைகள் மின் அதிர்வைப் போன்று பளீர்….ர்ர்… என்று மின்னிவிடும்.

இப்படி மின்னினாலும் இதன் தொடர் வரிசை தனக்குள் வரவில்லை என்றால் ஆவேச உணர்வு கொண்டு பதட்டமும் பயமும் நடுக்கமும் ஏற்பட்டு விடுகின்றது.

நடுக்கமும் பயமும் உருவானால் அது அதி துரிதமாக இயங்கப்படும் பொழுது… நம் எண்ணங்கள் அப்பொழுது எதுவாகின்றதோ…
1.நாளை இந்தக் குடும்பம்… தன் குழந்தைகள் என்ன ஆவார்கள்…?
2.தொழில் என்னவாகும்…? பணம் கொடுக்கல் வாங்கல் என்ன ஆகும்…? என்று அதனால் பலவாறு சோர்வடையும் நிலைகளும்
3.உணர்ச்சியின் வேகம் பயம் அதிகரித்து நடுக்கத்தில் கொண்டு போய் விடுகின்றது.
4.இவ்வாறு ஒரு சமயம் இரண்டு சமயம் ஆனால் இந்த உணர்வுகள் இயக்கி “ஹார்ட் ஃபெயிலியர்…!”

இருதய வால்வுகள் சீராக இயங்காது ரத்தத்தின் அழுத்தம் அதிகமாகச் செல்லாது. அப்போது ரத்தத்தின் அழுத்தம் உள்ளே அதிகமாகி விட்டால் கை கால்களைச் சுண்டிவிடும்.

பயமும் நடுக்கமும் அதிகரிக்கப்படும் பொழுது இருதயம் வேகமாகத் துடிக்கும் நிலை வரும் பொழுது அதற்கு வேண்டிய இரத்தம் சரியாக வரவில்லை என்றால் பட்…! என்று நின்று விடும்.

ஹார்ட் அட்டாக் என்று மருத்துவர்கள் இதைச் சொல்வார்கள்.

கடும் நோய்களைப் போக்கி எல்லோரையும் நலமும் வளமும் பெறச் செய்யும் சக்தி

கடும் நோய்களைப் போக்கி எல்லோரையும் நலமும் வளமும் பெறச் செய்யும் சக்தி

 

உதாரணமாக ஒருவர் திட்டினால் காதிலே கேட்கின்றோம்… அந்த உணர்வுகள் உயிரிலே படுகின்றது… உணர்ச்சிகள் ரத்தத்திலே கலக்கிறது. அவரைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது “ரத்தக் கொதிப்பு” வருகிறது

அதே போல உதாரணமாக ஒரு வேதனைப்படுபவரைப் பார்க்கின்றோம்… அதை நுகர்ந்தறிந்து உதவி செய்கின்றோம். அவருடைய வேதனையை அறிந்த பின் அந்த உணர்ச்சிகள் நம் ரத்த நாளங்களில் கலக்கின்றது. கருவாகி உருவாகிக் “கடும் நோயாக” நமக்குள் மாறுகின்றது. மனிதனுடைய சகஜ வாழ்க்கையாக இது மாறுகின்றது.

ஆனால் இதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைக்க
1.கூட்டு தியானங்கள் இருந்து துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று
2.ஆயிரக்கணக்கானவர்களின் சக்தி வாய்ந்த உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பப்படும் பொழுது
3.ஒவ்வொருவருடைய செவிகளிலும் இது பட்டு கண்ணின் கருவிழியால் பதிவாக்கி…
4.இந்த உணர்வின் ஈர்ப்பு காந்தமான கண்ணின் காந்தப்புலனறிவால் கவரப்பட்டு உங்கள் உயிரிலே மோதப்படும் பொழுது அரங்கநாதன்…!
5.அத்தனை பேரின் உணர்ச்சிகளும் உங்கள் உடலிலே தீமைகளை நீக்கிடும் உயர்ந்த சக்தியாக மாறுகின்றது.
6.இந்த உணர்ச்சிகள் உங்கள் உடலிலே அரங்கநாதனாக இருந்து “கடும் நோய்களையும் நீக்கும் சக்தி பெறுகின்றது…”

அருள் உணர்வுகள் உங்கள் ரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது இந்திரலோகமாக தீமைகளை நீக்கிடும் வலுக்கொண்ட உணர்வின் அணுவாக உருவாக்க இது உதவுகின்றது.

ஆகவே கூட்டுத் தியானத்தின் மூலம் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் சக்திகளைச் சேர்த்துக் கொண்டால் தீமைகளை நீக்கும் அந்த அணுக்கள் நம் உடலில் உருவாகிறது.

சர்வ பிணிகளையும் நீக்கிடும் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெறும் தன்மையும் இந்த வாழ்க்கையில் பெற்று நாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று தீமைகள் புகாத சக்தியும் நாம் பெற்று பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

“அத்தனை பேரும் சேர்த்த உணர்வுகள்” ஒவ்வொரு செவிகளிலும் பட்டு இந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது நாம் எல்லோரும் நலமும் வளமும் பெறுகின்றோம்.

1.கூட்டமைப்பாக உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது எல்லோருக்குள்ளும் இது ஊடுருவி ரத்த நாளங்களில் குவிக்கின்றது.
2.சர்வ நோய்களிலிருந்து விடுபடச் செய்யும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

ஆனால் நோயுடன் இருப்பவரை உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் நமக்கும் நோய் வருகிறது. அதற்குப் பதிலாக அருளைப் பெருக்கி இருளைப் போக்க வேண்டும் என்ற உணர்வுகளை இதைப் போல கூட்டமைப்பாக நுகரப்படும் பொழுது
1.தீமையை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வுகளைப் பெறுகின்றோம்…
2.மன வலிமை பெறுகின்றோம்… துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெருக்குகின்றோம்.

இந்த வழியில் நாம் தொடர்ந்து செல்லப்படும் பொழுது நமது வாழ்க்கை சீராகச் செல்ல ஏதுவாகின்றது. இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடைகின்றோம்.

கோபமும்… இரத்தக் கொதிப்பும்

கோபமும்… இரத்தக் கொதிப்பும்

 

சந்தர்ப்பத்திலே கோப உணர்வுகளை நாம் நுகர நேர்ந்தால் அந்த உணர்ச்சிகள் மீண்டும் மீண்டும் நமக்குள் வளர்ந்தால் கார குணத்தின் இனத்தை அது விருத்தி செய்து கொண்டே இருக்கும்.

ஒரு அணுவிற்கு ரத்தத்தில் அந்த உணர்ச்சியின் தன்மை வரும் பொழுது… அது பல அணுக்களாகப் பெருகி விட்டால்
1.பல அணுக்களும் அந்தக் கார உணர்ச்சிகளை உணவாக உட்கொண்டால் என்ன செய்யும்…?
2.அது போன்று வளர்ச்சி பெற்றவர்களுக்குக் கோபம் அதிகமாக வருவதைப் பார்க்கலாம்… வேகமாக வரும்
3.நரம்புகள் எல்லாம் அவர்களுக்குப் புடைத்து விடும்
4.அவர்கள் நரம்பைப் புடைக்க வைக்கின்றார்களா இந்த உணர்ச்சிகள் ரத்த நாளங்களில் அவ்வாறு இயக்குகின்றதா…?
5.கண்கள் எல்லாம் சிவந்து விடும் தலை கும்… என்று ஆகிவிடும்
6.நெற்றியில் கண்ணுக்கு வரக்கூடிய ரத்த ஓட்டங்களில் வேகமாக இருப்பதைக் காணலாம்.

தவறு யார் செய்தது…?

கோபப்படுவோரை வேடிக்கை தான் பார்த்தோம் அந்த உணர்வுகள் அணுவாக விளைகிறது. அந்த அணுக்கள் பெருகும் பொழுது அதனுடைய மலம் ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது இந்த உணர்வின் வேகம் உயிரிலே இயக்குகிறது.

எப்படி…?

டி.வி ரேடியோக்களில் ட்ரான்ஷாக்ஷன் என்று சொல்வார்கள். இந்த உணர்வின் தன்மை அது எந்த உணர்ச்சியோ “ட்ரான்ஷாக்ஷன்…” அதை எடுத்து இந்த உணர்வுகளை மூளை பாகம் வரை சிந்திக்கச் செய்து உடல் முழுவதும் பரவப்படும் பொழுது
1.நுண்ணிய நரம்புகளில் கார உணர்ச்சிகள் ஆகிப் பலூன் மாதிரி உப்பிவிடும்.
2.நம்மை அறியாதபடியே தலை கிண் என்று ஆகிவிடும் கண்களும் அப்படியே ஆகும்.

குழந்தை மீது பாசமாக நாம் இருந்தாலும் அந்த நேரத்தில் அவன் எதையாவது கீழே போட்டான் என்றால் “அறிவு கெட்டதனமாகச் சாமானைப் போடுகிறான் பார்…” என்று கோபம் வரும்.

தன் மனைவியைக் கூப்பிட்டு ஒரு பொருளை எடுக்கச் சொன்னால் சரி எடுத்து வரலாம் என்று சாதாரணமாக அவர்கள் நடந்தால் “நடப்பதைப் பார்… நீ என்ன வேலை செய்கின்றாய்…?” என்று அவர்கள் மீதும் வெறுப்பு வரும்.

தொழில் செய்யும் இடங்களில் பார்த்தோம் என்றால் வேலை பார்க்கும் பையனிடம் ஒரு வேலையைச் சொல்லி “இந்த ஃபைலைக் கொண்டு போய் இன்னாரிடம் கொடுத்து வா…” என்று சொன்னால் சரிங்க சார்…! என்று சாந்தமாகச் சென்றால்
1.அவன் போகும் பொழுது நடையைப் பார் இவனெல்லாம் உருப்படுவானா…? எப்படி வேலை செய்கின்றான் பார்…! என்று
2.நம்மை அறியாமல் அவனைத் திட்டுவோம்..

ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்…! அவனிடம் இதைச் சொன்ன பின் காதிலே கேட்கின்றான் கேட்டபின் அதே உணர்வின் தன்மை “என்ன இப்படிக் கோபிக்கின்றார்…?” என்று கோபத்துடன் செல்வான்.

இந்த உணர்வோடு செல்லும் பொழுது யாரிடம் அந்த ஃபைலைக் கொடுக்க வேண்டுமா அவரிடம் கொடுக்காத படி வேறொருவரிடத்தில் கொடுத்து விடுவான். ஃபைலைக் கொடுத்துவிட்டேன் என்று சொல்லிவிடுவான்.

ஆனால் ஆனால் யாரிடம் போய்ச் சேர வேண்டுமோ அங்கே சேர்ந்திருக்காது. அவரிடம் பெல் அடித்து ஃபைல் வந்து சேர்ந்ததா என்று கேட்டோம் என்றால் இல்லை வரவில்லை என்பார்.

அந்த பையனைக் கூப்பிட்டு “உன்னை எங்கேடா நான் கொடுக்கச் சொன்னேன் எங்கேடா கொடுத்தாய்…?” என்று சண்டை வரும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள்
1.இவர் உணர்வு தான் அந்தப் பையனை இயக்குகின்றது.
2.அதன்படி அவன் சரியாகச் செய்ய முடியாமல் போய்விடுகின்றது.

குற்றம் யார் செய்தது…? அது தான் ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்…! நம் உணர்வுகளை அது இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது.

அப்போது தவறு யார் செய்தது…? நாம் நுகர்ந்த உணர்வுகளே அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றது. நுகர்ந்தது அணுவின் கருக்களாகப் பெருகி அது வளர்ச்சி அடைந்த பின் “நமக்குக் கோபம் அதிகமாக வருகின்றது…”

உணவு சாப்பிடுவதற்காக மனைவி சாப்பாடு கொண்டு வருகிறார்கள் என்றால் அதைப் பார்த்த உடனே உணர்ச்சிகள் ஆவேசம் வரும். கொண்டு வரும் பொழுது இடையிலே சிறிது நின்றால் போதும்.

ஏன் இப்படிக் கொண்டு வந்து வைக்க வேண்டியதுதானே அதற்குள்… என்ன…? என்று தன்னாலே மனைவியிடம் சண்டை வரும்.
1.இது மாதிரி நிறைய ஆன பின் அது இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.
2.அடுத்து எதைப் பார்த்தாலும் அந்தத் துடிப்பின் வேகம் தான் வரும்.
3.சிறு மூளையில் போய் ட்ரான்சாக்ஷன் செய்யக் கூடிய அதிர்வுகளை உருவாக்கும் இடத்திலே பலூன் மாதிரி உப்பி விடும்.

அது நுரையீரல் பக்கம் சென்றால் அங்கே விரிவடைந்து மூச்சுத் திணறல் அதிகமாகிவிடும் சிறிது நேரத்தில் சிந்திக்கும் தன்மை இல்லாது மனிதனை ஆபத்திற்குள் கொண்டு போய் விட்டு விடும்.

அதே சமயத்தில் கை பாகம் இயக்கப்படும் பொழுது ஏதோ ஒரு வேலை செய்ய வேண்டும் என்று உணர்ச்சிகள் வரும் போது அதனுடைய அழுத்தமானால் ஒரு பக்கம் இருக்கும் கை காலிலே செயலிழந்து விடும். “டபக்” என்று இழுத்துச் சுண்டிவிடும்.

ஏனென்றால் அதற்குச் செல்ல வேண்டிய உணர்வின் உணர்ச்சிகளைத் தடைப்படுத்தி விடுகின்றது பலூன் மாதிரி அந்த இடத்தில் உப்பிக் கை கால்கள் சுருங்கி விட்டால் அப்புறம் அதற்கு வேண்டிய வைத்தியங்களைத்தான் பார்க்க வேண்டி வரும்.

ஆனால் பலூன் மாதிரி உப்பியது வெடித்து விட்டால் “இரத்தக் கொதிப்பு வந்தது இறந்துவிட்டார்” என்று சொல்லிவிடுவார்கள்.

இதை எல்லாம் மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்… வழி வேண்டுமல்லவா…!

சோகமா…! சுகமா…?

சோகமா…! சுகமா…?

 

இமைகளின் துரித கதி இயக்கத்தின் ஊடே (தூசி) உள் நுழையும் செயலே சந்தர்ப்பவசம்.

ஞானத்தின் பாங்கு செயல்பட விழிப்பு கொள்ளும் மனம்… வாழ்க்கையின் நடைமுறை அனுபவ சந்தர்ப்பங்கள்… படர்தல் எனும் எண்ணத்தின் குணம் நம்முள் இயங்கி அனுபவ நிகழ்வுகளை உணர்த்துகின்றன.

1.இமை காத்திடும் செயலின் கவனம்
2.அந்த இயற்கை உணர்வின் உந்துதல்… “நொடிக்கும் குறைவான காலமே…”

கண்ணில் படிந்த தூசியின் உறுத்துதல் “உடனடியாக உணர்த்துவதைப் போன்று…”
1.மெய் ஞானத்தின் ஆன்ம வலு காட்டிடும் செயலில் நாம் ஊட்டிக் கொள்ளும் குணங்களின் செயலில்
2.அக்குணங்களின் வலுவைக் கூட்டும் ஈர்ப்பின் சந்தர்ப்பவசங்கள்…
3.வாழ்வின் நடைமுறை அனுபவ நிகழ்வுகள் காட்டுவதை மனிதர்கள் உணர்வதில்லை.

நடைமுறை அனுபவங்களில் நாம் சந்திக்கும் துக்கமோ அல்லது மகிழ்ச்சியோ அதை அனுபவித்திடும் செயலாக அதே உணர்வுகளின் வலுவைக் கூட்டிக் கொள்வதினால் மாமகரிஷிகள் சுட்டிக்காட்டிய “சோ..க…ம்” கிடைக்குமா…?

ஆத்ம சக்தி எனும் அருமருந்தைக் கைகொள்ளும் நமக்கு… எண்ணியதை எண்ணியபடி பெற்றுவிடும் நற்பயனாய்… ஈர்ப்பின் செயல் அச்செயலுக்குள் சமைப்பு…
1.“சமைப்பின் பலன்…” என்றே கொள்ளும் குணங்களின் வலுவை வலுவாக்கிடும் செயலில்
2.”சோகம்” என்ற நாதம் இன்று மனிதனின் எண்ணத்தில் அது வெறும் துக்கமாகத் தான் காட்டப்படுகின்றது.

கலங்குகின்ற நெஞ்சம் சரீரம் கொண்டு அனுபவித்திடும் துக்கமாகப் பெருக்கிக் கொண்டு இடர்படும் நிலைகள் இராமன் பெற்ற அனுபவங்களாக அதனுள் மூழ்கி… கொண்ட குணங்களை வலுவாக்கிடும் செயலின் துரிதம் போல… நற்குணங்களின் செயல்பாட்டில் உயர்வைக் கூட்டிக் கொள்ள செயல்படும் குணங்களின் தன்மைகளில் “துரிதமும்… செயல்பாடும்… ஒன்றே…!

வானைச் சுட்டிக்காட்டி செயல்பாட்டின் பேதங்களைப் பகுத்தறியும் பண்பாக “சோ…” என்ற ஒலி ஈர்ப்பில் “க…” எனச் சமைத்து “ம்…” எனும் முழுமையாக நம்மால் நற்குண நற்சுவாசமாக எடுத்து… மாறு கொண்ட குணங்கள் நமக்குள் வந்து ஊறு விளைவிக்கும் செயலை மாற்றி… விரிவு கொண்டிடும் நல் ஒளி அணுக்களின் செயல் உறுதியாக்குவதே “சோ…க…ம்…”

(குறிப்பு:- சோகம்…சோகம்…சோகம்… என்று ஒரு இருபது முறை வேகமாகச் சொல்லிப் பாருங்கள்… “சுகம்” என்று வரும்)

சூரியன் சுழலும் பொழுது ஒலி வருகின்றது “சோ……கம்”.
1.அதாவது தன் நிலைகளில் மற்றதை விரிவடையச் செய்து
2.தனக்குள் இழுத்து “கம்…” – “சோ……கம்”.
3.விஷத்தை வெப்பத்தால் நீக்கி விட்டுத் தனக்குகந்ததாக எடுத்துக் கொள்கின்றது என்று
4.அந்த நாத சுருதியின் தன்மையை அன்று வியாசகர் தெளிவாகக் காட்டினார்.

மனப்போராட்டமும்… உடலில் வரும் வலி வேதனைகளும்

மனப்போராட்டமும்… உடலில் வரும் வலி வேதனைகளும்

 

சில குடும்பங்களில் ஒருவருக்கொருவர் தேளும் பாம்புமாக இருப்பார்கள். எவ்வளவு தான் இருந்தாலும் உள்ளே ஒன்றுக்கொன்று வெந்து கொண்டு தான் இருக்கும்… ஒருவருக்கொருவர் போராட்டம் அதிகமாக இருக்கும்.
1.அச்சுறுத்தும் உணர்வுகளும் பயமான உணர்வுகளும் அதிகமாகும் பொழுது உடலுக்குள் போர் நடந்து கொண்டிருக்கும்
2.ஏனென்றால் அதற்குச் சாப்பாடு தேவை.

பையன் மீது வெறுப்படைந்து விட்டால் அத்தகைய அணு உண்டாகிவிட்டால் அந்த வெறுப்பின் உணர்வுகளே அதற்குச் சாப்பாடு. அந்த வெறுப்பு வளரப்படும் பொழுது அத்தகைய அணுக்களே பெருகும்.

அந்த அணுக்கள் பெருகும் பொழுது நாம் நுகர்ந்ததற்கும் உடலுக்கும் வெறுப்பாகி போர் முறையாகி உடல் நலியத் தொடங்கும். ஒன்றுக்கொன்று சண்டை போடும்.
1.இங்கே பளீர்…ர் என்று மின்னுகின்றது… இங்கே குத்துகின்றது
2.தலை வலிக்கின்றது பிடரி வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது கால் வலிக்கின்றது கை வலிக்கின்றது என்று ஆரம்பித்து விடுவார்கள்.

இது எல்லாம் எங்கிருந்து வருகின்றது…?

நாம் நுகர்ந்த உணர்வுகள் அணுவாகி அதற்கு உணவு அது தேடும் பொழுது அந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டி இந்த உணர்வின் தன்மையாகும் பொழுது பளீர்…ர்.. என்று உடலில் குத்தினால் ஆ…! என்று சொல்வார்கள்.

இப்படி வலி எடுக்கும் பொழுது அந்த நேரத்தில் நீ சந்தோஷமாக இரு என்று யாராவது சொல்லிப் பாருங்கள்… பார்க்கலாம். ஒன்றுமில்லை… நீ சந்தோஷமாக இரு…! என்று இப்படிச் சொல்லச் சொல்லக் கோபம் அதிகமாகும்.

இன்னும் கொஞ்சம் ஆன பிற்பாடு
1.”இவர்களுக்கு என்ன தெரியும்…” நான் படுகின்ற அவஸ்தை…!” என்று
2.அந்த அவஸ்தையைத் தான் எடுத்துக் கொள்வார்களே தவிர நல்ல சொல்களை எடுக்க முடிவதில்லை.

தாயாகவே இருந்தாலும் சரி குழந்தை வேதனைப்படுகிறது என்று “அட கண்ணு… நீ இதைச் சாப்பிடு…” என்று சொன்னாலும் “நீ சொல்லிக் கொண்டே இருந்தாலும் நான் கேட்க மாட்டேன்” என்று தாய் மீது வெறுப்பு தான் இன்னும் அதிகமாகும்.

ஐயோ… தன் பையன் கெட்டுப் போகின்றானே… இந்த மாதிரி இருக்கின்றான் சும்மா இருடா ராஜா…! என்று சந்தோசமாகச் சொல்லிக் கொஞ்சிப் பாருங்கள். உங்களை எப்படிப் பதிலுக்குக் கொஞ்சுகிறான் என்று பாருங்கள்.

இரண்டு தடவை சாப்பாடு கொடுத்துப் பாருங்கள் சிறிய குழந்தையாக இருந்தாலும் சரி பெரியவராக இருந்தாலும் சரி எவ்வளவு கோபம் வருகிறது என்று பார்க்கலாம்…! அந்த உணர்வுக்குத் தக்க குணங்கள் வரும்.
1.அப்பொழுது எது இயக்குகின்றது…? அந்த நல்லதை எடுக்க முடியவில்லை…
2.அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

இதை எல்லாம் சுட்டிக்காட்டுவதற்குத் தான் ஆலயத்தில் காட்டுகின்றார்கள்.
1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்ச்சிகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் அனைவரும் பெற வேண்டும்
3.இந்த ஆலயம் வருவோரெல்லாம் தெய்வீக நிலைகள் பெற வேண்டும்.
4.அவர்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும்.
5.நான் பார்க்கும் குடும்பம் எல்லாம் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
6.காரணம்… அந்த உலக மக்களுடைய உணர்வுகள் அனைத்தும் நம் உடலில் இருக்கின்றது.

நல்லவர்களையும் பார்த்திருக்கின்றோம். கெட்டவர்களையும் பார்த்திருக்கின்றோம். பார்த்த ஒவ்வொரு குடும்பத்திலும் அந்தத் தெய்வீக நிலைகள் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் புனிதம் பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தல் வேண்டும்.

1.இப்படி எண்ணி அந்த அருள் உணர்வுகளை எடுத்தால் தான்
2.நம் உடலுக்குள் வரக்கூடிய போர் முறைகளையும்… ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இயங்கக்கூடிய நிலைகளையும்
3.நாம் நல்லதாக மாற்றி அமைக்க முடியும்.

உடலுக்குள் நோய் உருவாகும் விதம்

உடலுக்குள் நோய் உருவாகும் விதம்

 

உதாரணமாக வேதனை என்ற உணர்வினை அதிகமாக நாம் எடுத்தால் கோழி… குஞ்சுகளைப் பொரிப்பது போன்று நம் உடலில் இரத்தத்தில் அணுக்கள் உருவாகி விடுகின்றது.

எந்த வேதனைப்பட்டமோ அது தான் அதற்கு உணவு…! நம் உயிரால் கருவாக்கப்பட்டு அந்த அணுத்தன்மை அடைந்தால் பசிக்காக ஏங்கும் பொழுது உயிருக்கே எட்டுகின்றது.

நாம் எந்தக் கண் வழி வேதனைப்படுவோரைப் பார்த்தோமோ அதன் உணர்வு உயிரின் நிலை கொண்டு அந்த உணர்வால் உணர்ச்சிகளாக நாம் அறிகின்றோம்.

இருந்தாலும் இரத்த நாளங்களில் அது கருவாக உருவாகி விடுகின்றது. கருவாக உருவானதோ அணுவாகி விடுகின்றது அணுவான பின் உணவுக்காக அது அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் போது உயிருக்கு வருகின்றது.
1.உயிருக்கு வந்தபின் கண்களுக்கே மீண்டும் வருகின்றது.
2.கண் வழி இந்த பூமியில் படர்ந்துள்ள எந்த மனிதனின் உடலில் இருந்து அந்த வேதனையான உணர்வுகள் வெளிப்பட்டதோ
3.அதை நமது கண்ணான காந்தப்புலன் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
4.நமது ஆன்மாவாக மாற்றிய பின் நமது உயிரில் உள்ள காந்தம் இழுத்து அந்த உணர்வினை இரத்தங்களில் கலக்கச் செய்கின்றது.

இரத்தங்களில் கலந்த பின் எத்தகைய வேதனை உணர்வு அணுவானதோ அந்த இரத்தத்திலிருந்து வேதனையான உணர்வுகளை உணவாக உட்கொள்கின்றது.

காற்று மண்டலத்தில் எல்லாச் செடி கொடிகளின் சத்துகளும் கலந்துள்ளது ஆனால் அதனதன் வித்துகளை நிலத்தில் ஊன்றும் பொழுது… எப்படி நிலத்தின் துணை கொண்டு அதனதன் செடியின் சத்தைக் கவர்ந்து செடிகள் விளைந்து அதனதன் வித்துக்களை உருவாக்குகின்றதோ இதைப் போன்று தான்
1.நம் உடலுக்குள் அந்த இரத்தங்களில் சுழன்று வருவதை எந்தெந்த குணங்கள் கொண்டோமோ அந்த அணுக்கள் அதை உணவாக உட்கொள்ளும்.
2.அதன் வழி அது தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கும்… வேதனை என்ற உணர்வை வளர்த்துக் கொண்டே இருக்கும்.

நம் உடலில் நுரையீரல் இருக்கிறது என்றால் வேதனை என்ற உணர்வுகள் அங்கே அந்த முட்டை வெடித்து அணுவாக உருவானால்… அந்த இடத்திலிருந்தே இரத்தத்திலிருந்து வருவதை அந்த அணு உறிஞ்சி தன் இனத்தைப் பெருக்குகின்றது.

தன் இனமான அணுக்களைப் பெருக்கப்படும் பொழுது நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நுரையீரல் பழுதடையத் தொடங்கி விடுகிறது.

நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட அந்த நுரையீரல் சசுருங்கத் தொடங்கினால் அதனால் உடலில் உபாதைகளும் சரியாக சீராக இயங்காதபடி நாளடைவில் இந்த அணுக்கள் பெருகப் பெருகப் உடலும் சுருங்கத் தொடங்கிவிடும்.
1.வேதனையான உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க
2.உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்திலும் விஷங்கள் புகுந்து விடுகின்றது. கடும் நோயாகின்றது.

மெய் ஞானத்தின் வழிப்படித் தான் எதையுமே நல்லதாக்க முடியும்

மெய் ஞானத்தின் வழிப்படித் தான் எதையுமே நல்லதாக்க முடியும்

 

சிலர் கடுமையான மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அதன் வழியில் “சுவாசிக்கின்றேன்…” என்று உயர் அழுத்தத்தைக் கொடுத்தால் என்ன ஆகும்…?
1.சுவாசப் பையில் காற்று நிரப்பப்படுகிறது.
2.அங்கே வடிகட்டத் தவறும் உணர்வுகள் சுவாசப் பையில் சேர்ந்தால் என்ன நடக்கும்…?
3.ஆதிலே அழுக்குகள் சேரும். நாளடைவில்… இருமல் வரும்.

அதே அழுத்தத்தின் உணர்வு கொண்டு அடுத்து நரம்பு மண்டலங்களில் சரம் என்று சொல்வார்கள். உணர்வை அடக்கி நரம்புகளில் பாய்ச்சுவார்கள் சரத்தைப் போட்டு உடலிலே பழகியவர்களிடம் பார்த்தோம் என்றால் தம் கட்டி நரம்புகளில் ஏற்றுவார்கள்… பார்த்தால் வீரியமாக இருக்கும்.

சரம் என்ற நிலையில் மற்றதை அறியப் பயன்படுத்துவார்கள் அதே சமயத்தில் என்ன செய்யும்…?
1.நரம்புகளில் எடுத்துப் பழகிய பின் கடைசியில்
2.நரம்பெல்லாம் வலிக்கின்றது… கை கால் வலிக்கின்றது குடைகின்றது என்று சொல்வார்கள்.

இது எல்லாம் சரத்தைப் போட்டுத் தனக்குள் கற்றுக் கொண்டேன் என்று பெருமை பேசுவார்கள். சில அசுர உணர்வின் தன்மை வரப்படும் பொழுது அழுத்தத்தின் தன்மை ஆகி “வாய்வு” என்ற நிலைகள் உருவாகும்.

வாய்வு என்ற நிலைகள் உருவாக்கப்படும் பொழுது தன் எண்ணத்தின் அழுத்தம் வரும்பொழுது ஏரோபிளேன் எப்படி உணர்வின் அழுத்தம் கொண்டு மற்றதுடன் மோதி அதை எப்படி மேலே மிதக்கச் செய்கின்றதோ மிதப்பார்கள். இந்த உணர்வின் தன்மைக்குச் சில ஆவியின் உணர்வுகள் அதற்கு உண்டு.

அந்த உணர்வின் தன்மை அழுத்தமாகி அதைப் பெருக்கப்படும் பொழுது
1.சம்மணம் கட்டி இருப்பார்கள்… அப்படியே மிதக்க ஆரம்பிப்பார்கள்… இதை ஒரு பெரிய வித்தையாகக் காட்டுவார்கள்.
2.சில வேலைகளைச் செய்து பெரிய அற்புதத்தைக் கண்டேன் என்றும் அவர்கள் சொல்வார்கள். மேலே வரையும் மிதந்து காட்டுவார்கள்.

இத்தகைய ஆவியின் தன்மை பெறுவதற்கு ஒரு மந்திரம் உண்டு அந்த மந்திரத்தை நுகர்ந்தால் உணர்வின் தன்மை அழுத்தமாகும் பொழுது தன் உடலில் இருந்து வரக்கூடியதற்கும் இதற்கும் மாற்றமாகித் “தூக்கி நிறுத்தும்…”

ஆஹா… மிதக்கின்றார்… பறக்கின்றார்… என்ற நிலை வரும். இது போன்ற பல அற்புதங்களையும் செய்யலாம்

இந்த உடலிலே இப்படிப் பல நிலைகள் செய்தாலும் நாம் எந்த உணர்வின் தன்மை சேர்த்துக் கொண்டோமோ இதையெல்லாம் விளைய வைத்து வந்தபின் என்ன செய்யும்…?

ஆவியின் தன்மைய அடையச் செய்து மற்றொன்றுக்குள் ஊடுருவி இதே தீமைகளைச் செய்யச் செய்யும். அதே போன்று வரிசைப்படுத்திச் செல்லும்.

மனிதனாகப் பிறந்த பின் உடலில் உள்ள உறுப்புகள் வைத்திய ரீதியிலும் சரி மற்ற எந்த நிலைகளிலும் இதைக் கண்டு கொண்டு பல நிலைகளை விஞ்ஞான அறிவால் செயல்படுத்துகின்றனர்.

மெய்ஞான அறிவால்… ஓர் தாவர இனம் விஷத்தை முறிக்கின்றது நல்ல உணர்வை ஊட்டுகின்றது என்று காண்கின்றனர்.

அதைக் கண்டுணர்ந்து கலவைகளாக மருந்தாகக் கொடுக்கப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய சில அணுக்களை மாற்றி இரத்தத்தில் கலந்த பின் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு நல்ல வீரியம் ஊட்டுகின்றது… நல்ம் பெறச் செய்கிறது.

அதனுடைய உணர்வுகள் மீண்டும் அதற்குள் சேர்த்து மாற்றிக் கொண்டே இருக்கலாம்.

உதாரணமாக ஒரு வேதனைப்படுபவரைக் கண் கொண்டு உற்றுப் பார்த்தால் அந்த உணர்வு எலும்புக்குள் ஊழ் வினை என்ற வித்தாகி விடுகின்றது.

வயலிலே களைகள் முளைத்தால்… நீக்கினால் மீண்டும் அந்தக் களைகள் வருகின்றது. இதைப் போன்று நமது வாழ்க்கையில் தீமை என்று உணர்வை உற்றுப் பார்க்கும் பொழுது ஊழ்வினையாக வித்தாகி விடுகிறது.

வித்தாக ஆன பின் அதன் உணர்ச்சியைத் தூண்டிச் சுவாசிக்க நேரும். அந்த உணர்ச்சிக்கொப்ப எண்ணங்கள் வருகின்றது.
1.இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கப்படுகிறது.
2.கலந்த பின் மீண்டும் அந்த அணுக்களுக்குள் சேர்க்கப்பட்டு தீய விளைவுகள் விளைகின்றது.

இதை மாற்றுவதற்காக வைத்திய ரீதியிலே ஆங்கில மருத்துவத்தில் இதற்கு இரண்டையும் கலவை ஆக்கி உணவு வழி மாத்திரைகளாகச் செலுத்துகின்றனர். இன்ஜெக்ஷன் செய்து இரத்தத்திலும் கலக்கச் செய்கின்றனர். நல்ல சத்துக்களை அணுக்களுக்குக் கிடைக்கச் செய்து மாற்றியமைக்கின்றனர்

அந்த மருந்து ஊசி மூலமாகச் செலுத்தப்பட்டு இரத்தத்திலே கலந்த அளவிற்குத் தான் சிறிது நேரம் சரியாக இருக்கிறது. அது இல்லை என்றால் மீண்டும் அதனுடைய வேலை அதிகமாகிவிடும்.
1.நோய் தீர்ந்துவிட்டது என்று எண்ணலாம்… சில காலமான பின் அந்த விஷத் தன்மை வேறு ஒரு நோயாக வருகின்றது.
2.பின் அந்த நோய்க்கு மீண்டும் மாற்றுக் கொடுத்து இந்த உடல் இருக்கும் மாற்றிக் கொண்டே வர வேண்டியது தான்…!

முழுமையாகத் தப்ப முடியாது.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் நோய் நீக்கும் அரும் பெரும் சக்தி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் நோய் நீக்கும் அரும் பெரும் சக்தி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

 

மகரிஷிகளின் அருள் ஒளி பெற எனக்கருள்வாய் ஈஸ்வரா… என் உடலில் அறியாது சேர்ந்த “தீய வினைகள் அகன்றிட” அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து கடும் நோய்கள் நீங்கி மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மலரைப் போல மணம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது குடும்பங்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது குடும்பங்களில் அறியாது சேர்ந்த சாப வினைகள் அகன்று அவர்களது குடும்பங்களில் அருள் ஒளி படர்ந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மலரைப் போல மணம் பெற்று அவர்களது குடும்பங்கள் மகிழ்ந்து வாழ அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது உடலில் அறியாது சேர்ந்த வாத நோய்கள் நீங்கி அருள் ஒளியால் அருள் ஞானம் பெற்று அவர்களின் உடல் நலம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது உடல்களில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த சர்க்கரைச் சத்து நீங்கி அருள் சுரபிகள் உருவாகி அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் அணுக்கள் உருவாகி அவர்களது உடல் நலம் பெற்று உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலை பெற்று அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா

இவ்வாறு எண்ணும்போதெல்லாம் உடலில் உள்ள நோய்கள் அது அகன்று செல்வதை உங்களால் உணர முடியும். கடும் நோய்களை நீக்க அனைவரது ஒலிகளும் கேட்ணர்ந்தோர் உணர்வுகளில் படர்ந்து அவர்கள் உடலில் உள்ள கடும் நோய்களும் சர்க்கரைச் சத்தும் இரத்தக் கொதிப்பும் வாத நோயால் உருவான நிலைகளும் விஷத்தால் தாக்கப்பட்டு விஷ உணர்வுகளால் உருவான அணுக்களும் இப்போது அகலும்.

அனைவரும் சேர்ந்து ஓதும் இந்த உணர்வுகள் அனைத்தும் அனைவரது உடல்களிலும் படர்ந்து கடும் நோய்களை நீக்க இது உதவும்.

ஓம் ஈஸ்வரா.

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த இரத்தக் கொதிப்பு அகன்று மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்களது உடல்களில் சாந்த உணர்வும் மலரைப் போன்ற மணம் பெற்றிடும் அணுக்கள் வளர்ந்து அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த இருதயங்களில் உள்ள அடைப்புகள் நீங்கி இருதயங்கள் சீராக இயங்கி அருள் ஞான ஒளி படர்ந்து தெளிந்திடும் தெரிந்திடும் மனம் பெற்று மகிழ்ந்திடும் உணர்வு பெற்று அவர்களது வாழ்க்கையில் மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நச்சுத்தன்மைகள் அனைத்தும் அகன்று துருவ மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் விளைந்து மகிழ்ச்சி பெறும் அணுக்கள் அவர்கள் உடலில் விளைந்து மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் உடல் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்து வாத பித்த நோய்கள் அகன்று அருள் ஒளி அவர்கள் உடலிலே படர்ந்து அருள் ஞான அணுக்கள் விளைந்து மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவர்களது வாழ்க்கையில் மலரைப் போன்ற மணம் பெற்று அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த முடக்கு வாதம் முழங்கால் வாதம் செவி வாதம் மன வாதம் அனைத்தும் அகன்று மகரிஷிகளின் அருள் சக்தி உடல்களில் படர்ந்து மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ்ந்து தெளிந்த மனதுடன் மகிழ்ந்திடும் உணர்வுடன் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த தீய அணுக்கள் மறைந்து அருள் ஞான அணுக்கள் வளர்ந்து அருள் வழியில் அருள் ஞானம் பெற்று வளர்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது உடல்களில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் வந்த வயிற்று வலி நீங்கி மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் ஆற்றல் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

தியானமிருக்கும் அனைவரது குடும்பங்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களது குடும்பங்களில் அறியாது சேர்ந்த சாப வினைகள் நீங்கி தீயவினைகள் நீங்கி அவர்களது குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்து கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும் உலக ஞானமும் உலகைக் காத்திடும் உலக ஞானம் பெற்று உலகில் தீமைகளை மாற்றிடும் அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா ஓம் ஈஸ்வரா…!

இந்நேரம் வரை உபதேசித்த உணர்வை
1.உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.
2.உங்களுக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படர்ந்து
3.இங்கே வந்தோர் உடல்களில் உள்ள கடும் நோய்கள் நீங்கி அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறும் சக்தியாக உங்களில் விளையும்.

நீங்கள் எத்தகைய வேதனையுடன் வந்திருந்தாலும் இப்போது நாம் பாடிய
1.இந்த அருள் உணர்வுகள் அனைவரது உடல்களிலும் கருவுற்று தீய வினைகள் அகன்று
2.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அந்த சக்தி படர்ந்து
3.உங்கள் உடலிலே மகிழ்ச்சி பெறும் நிலையாக நோய்கள் அகன்று
4.உங்களில் அந்த அருள் ஞான சக்தி இப்பொழுது பெருகும்.
5.நோயற்ற வாழ்வு வாழும் அருள் ஞான சக்தி உங்களில் விளையும்.
6.நோயுடன் வந்தோர் நோய்கள் நீங்குவதை இப்பொழுது நீங்கள் உணரலாம்.

கை கால் குடைச்சலோ சர்க்கரை சத்தோ ரத்தக் கொதிப்போ வாத நீரோ மன நோயோ இவை அனைத்தும் அகலும். அருள் ஒளி உங்களில் பெருகும்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர்ந்து உங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் வளர்ந்து உங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் வளர்ந்து உங்கள் பேச்சால் மூச்சால் பிறரை மகிழச் செய்யும் உணர்வு உங்களில் விளையும்.

மகிழச் செய்யும் அணுக்கள் உங்களுக்குள் விளையும்… அருள் ஒளி வளரும்… மெய்ப் பொருளைக் காணும் திறன் பெறுவீர்கள். உங்களுடைய பார்வையால் உங்களுடைய நினைவால் உங்கள் சொல்லால் பிறருடைய துன்பங்களைப் போக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.
1.பிறருடைய துன்பங்களைப் போக்கும் அந்த அருள் சக்தி வலுப் பெற்றால்
2.பிறருடைய துன்பங்கள் உங்களை அணுகாது தடுத்துக் கொள்ள முடியும் “உங்கள் உணர்வால்…”

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து சர்வ ரோகங்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் பெருகி மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று உங்கள் மூச்சும் பேச்சும் உலக மக்களை மகிழச் செய்யும் உணர்வாக வளர சகோதர உணர்வை வளர்த்திட மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி வாழ்ந்திட அருள் சக்திகள் உங்கள் மூச்சலைகளாகப் படர்ந்து உலக மக்களைக் காத்திடும் அருள் சக்தி உங்களிலே விளைந்திட எமது குரு அருளைப் பிரார்த்திக்கின்றேன்.

1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்களில் படர்ந்திட
2.மகிழ்ச்சி பெறும் உணர்வினை வளர்த்திட
3.இந்த உணர்வுகளை உங்கள் உயிரான ஈசன் கவர்ந்து
4.இந்த உயர்ந்த உணர்வுகளை உங்கள் உடலான சிவமாக்கி
5.மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் கண்ணின் பார்வையிலே வெளிப்பட்டு
6.மகிழ்ச்சி பெறும் சொல்லாக அந்த சீதா ராமனாக எண்ணங்கள் தோற்றுவிக்கவும்
7.அருள் ஒளி படர்ந்து உங்களுக்குள் நல்வினையாக விளைந்து
8.நல்ல அரண் உங்களுக்கு உடலாக அமைந்து
9.இந்தப் பிறவியிலேயே அருள் ஞான வழியில் என்றும் பேரின்பப் பெரு வாழ்வு பெறும் நிலையாக
10.நீங்கள் எண்ணியதை உங்கள் உயிரான ஈசன் உருவாக்கி அதையே பிரம்மமாக்கி உங்கள் உடலைச் சொர்க்கலோகமாக்கி
11.உங்கள் உயிரே சொர்க்கவாசலாக அமைத்திட
12.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களில் படர்ந்திட
13.எமது அருளாசி உறுதுணையாக இருந்திட பேரின்ப பெருவாழ்வு வாழ்ந்திட
14.எமது அருளாசியும் குரு அருளும் உங்களுக்குள் உறுதுணையாக விளைந்திட
15.உங்கள் பார்வை தீமைகளை அகற்றிட
16.மெய் வழியைப் பரப்பிடும் ஆற்றல் மிக்கவர்களாக வளர்ந்திட
17.பேரின்ப வாழ்க்கை வாழ்ந்திட
18.இந்த வாழ்க்கையில் என்றும் அழிவில்லா வாழ்க்கை வாழ்ந்திட மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்திட அருள் ஒளி உங்களிலே படர்ந்து
19.உங்கள் மூச்சும் பேச்சும் உலகைக் காத்திடும் உத்தம உணர்வுகளாக விளைந்திட
20.அருள் மகரிஷிகள் உணர்வுகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து அதை வளர்த்திட வளர்ந்திட குரு அருள் உறுதுணையாக என்றுமே இருக்கும்

அருள் வழியில் அருள் ஞான குருவாக… அருள் வழியில் உங்கள் எண்ணங்கள் அருள் ஞானத்தை வளர்த்திடும் அருள் சக்தி உங்களில் வளர்ந்திடப் பிரார்த்திக்கிறேன்… தியானிக்கின்றேன்.

இதைப் படித்துணர்ந்தோர் உடல்களில் கடும் நோய்கள் இப்போது குறைந்திருப்பதைக் காணலாம்… சர்க்கரைச் சத்து நீங்கி உடல் நலம் பெறுவீர்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் நல்ல ரத்தங்கள் உருவாக வேண்டும் அருள் ஞானம் வளர வேண்டும் என்னை அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று இதை அதிகாலையில் துருவ தியானத்தில் ஏங்கிப் பெறுங்கள்

“இப்பொழுது உருவாக்கிய அருள் ஞான வித்தை…” நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் நினைவால் எண்ணும் பொழுது
1.”உங்கள் உயிரே” அதை அணுக்களாக வளர்த்து
2.உங்களை நலம் பெறும் சக்தியாக உங்களுக்குள் வளர்ந்து மன பலம் பெறச் செய்து
3.அருள் ஒளி பெறும்… அருள் ஞான வழியில் என்றும் பேரின்பப் பெரு வாழ்வு வாழும் உணர்வின் உடலாக மாற்றியமைக்கும் “உங்கள் உயிர்”

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது
1.எண்ணியதை உருவாக்குவது உயிரே (ஈசன்)
2.எண்ணியதை உடலாக்குவதும் உயிரே
3.எண்ணியதைக் காத்தருள்வதும் உயிரே
4.ஆண்டவனாக இருப்பதும் உயிரே
5.நம்மை அரண் போல் காத்து நம்மைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும் உயிரே.

உலக மக்களை அருள் ஞான வழியில் வளரச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா

உலக மக்களை அருள் ஞான வழியில் வளரச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா

 

அகஸ்திய மாமகரிஷிகளை அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உடலிலே இடுப்பு வலி உள்ளவர்களோ தலைவலி உள்ளவர்களோ நெஞ்சுவலி உள்ளவர்களோ வயிற்றுவலி உள்ளவர்களோ “அனைவரும்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று… எங்கள் உடலில் இருக்கக்கூடிய வலிகள் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது
1.மின்சாரம் பாய்வது போன்று அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களிலும் பாய்ந்து
2.உணர்வுகள் மகிழ்ச்சி பெறும் சக்தியாக இப்பொழுது தோற்றுவிக்கும்.
3.உங்கள் உடலிலே இப்பொழுது இடுப்பு வலி தலைவலி நெஞ்சுவலி குறைவதைக் காணலாம்…
4.உடலில் ஒரு விதமான மகிழ்ச்சி தோன்றுவதையும் காணலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரது உடல்களிலும் படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த சர்வ நோய்களும் நீங்கி அவர்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

அவரவர்கள் உடலில் உள்ள நோய்கள் பலவீனமடைந்து அருள் ஒளி உங்களுக்குள் வளரும் ஆற்றல் பெருகும். அதை நீங்கள் இப்போது உணரலாம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து
அவர்களது உடல்களில் இருள்கள் மறைந்து… அருள் ஒளி படர்ந்து
அவர்களது வாழ்க்கையில் மலரைப் போன்ற மனம் மகிழ்ந்து… மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி படர்ந்து
அருள் ஞான வழியினிலே அருள் ஒளி படர்ந்து… உலக இருளை மறைத்திடும் அருள் சக்திகள் படர்ந்து
உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இனைந்து வாழ்ந்து
விஞ்ஞான உலகில் பரவிக் கொண்டிருக்கும் இருள்கள் மறைந்து
அருள் ஒளி பெருகி வளர்ந்து… அருள் ஞான வழி படர்ந்து… மெய் ஒளி பெரும் சக்தி பெற்று
மனிதன் என்ற தன் நிலை அடைந்து
தன்னை உருவாக்கிய உயிரை ஈசன் என்று மதித்து
உயிரால் உருவாக்கப்பட்ட கண்களை மதித்து
அருள் ஒளி பெறும் அருள் ஞானம் பெறும் நிலையை எண்ணி… அருள் வழியில் வளர்ந்து
அதன் வழி மகரிஷிகளின் அருள் சக்தியால் மகிழ்ந்திடும் உணர்வின் அணுக்கள் பெருகி
அதன் வழி உடல் நலம் பெற்று அதில் வளரும் அருள் மணங்கள் வெளிப்பட்டு
உலக மக்களை அருள் ஞான வழியில் வளரச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!