உலக மக்களை அருள் ஞான வழியில் வளரச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா

உலக மக்களை அருள் ஞான வழியில் வளரச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா

 

அகஸ்திய மாமகரிஷிகளை அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உடலிலே இடுப்பு வலி உள்ளவர்களோ தலைவலி உள்ளவர்களோ நெஞ்சுவலி உள்ளவர்களோ வயிற்றுவலி உள்ளவர்களோ “அனைவரும்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று… எங்கள் உடலில் இருக்கக்கூடிய வலிகள் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது
1.மின்சாரம் பாய்வது போன்று அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களிலும் பாய்ந்து
2.உணர்வுகள் மகிழ்ச்சி பெறும் சக்தியாக இப்பொழுது தோற்றுவிக்கும்.
3.உங்கள் உடலிலே இப்பொழுது இடுப்பு வலி தலைவலி நெஞ்சுவலி குறைவதைக் காணலாம்…
4.உடலில் ஒரு விதமான மகிழ்ச்சி தோன்றுவதையும் காணலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரது உடல்களிலும் படர்ந்து அவர்களை அறியாது சேர்ந்த சர்வ நோய்களும் நீங்கி அவர்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

அவரவர்கள் உடலில் உள்ள நோய்கள் பலவீனமடைந்து அருள் ஒளி உங்களுக்குள் வளரும் ஆற்றல் பெருகும். அதை நீங்கள் இப்போது உணரலாம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து
அவர்களது உடல்களில் இருள்கள் மறைந்து… அருள் ஒளி படர்ந்து
அவர்களது வாழ்க்கையில் மலரைப் போன்ற மனம் மகிழ்ந்து… மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி படர்ந்து
அருள் ஞான வழியினிலே அருள் ஒளி படர்ந்து… உலக இருளை மறைத்திடும் அருள் சக்திகள் படர்ந்து
உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இனைந்து வாழ்ந்து
விஞ்ஞான உலகில் பரவிக் கொண்டிருக்கும் இருள்கள் மறைந்து
அருள் ஒளி பெருகி வளர்ந்து… அருள் ஞான வழி படர்ந்து… மெய் ஒளி பெரும் சக்தி பெற்று
மனிதன் என்ற தன் நிலை அடைந்து
தன்னை உருவாக்கிய உயிரை ஈசன் என்று மதித்து
உயிரால் உருவாக்கப்பட்ட கண்களை மதித்து
அருள் ஒளி பெறும் அருள் ஞானம் பெறும் நிலையை எண்ணி… அருள் வழியில் வளர்ந்து
அதன் வழி மகரிஷிகளின் அருள் சக்தியால் மகிழ்ந்திடும் உணர்வின் அணுக்கள் பெருகி
அதன் வழி உடல் நலம் பெற்று அதில் வளரும் அருள் மணங்கள் வெளிப்பட்டு
உலக மக்களை அருள் ஞான வழியில் வளரச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply