எல்லாமே ஒரே சொந்தம் தான்… நாம் பிரித்து வாழ வேண்டியதில்லை

எல்லாமே ஒரே சொந்தம் தான்… நாம் பிரித்து வாழ வேண்டியதில்லை

 

ஒவ்வொரு மனிதனும் தன் நிலை உணர்ந்து வாழ வேண்டும்.

எப்படி நாம் உண்ணும் உணவு நான் சந்தோஷ நிலை கொண்டு இருக்கும் பொழுது நல்ல மணமும் நல்ல சுவையும் கூடியதாக நம் நாவிற்கும் மனதிற்கும் தெரிகிறது

அந்நிலையில் உண்ணும் உணவு நம் உடம்பிற்கு அமிழ்தமாக அரும்பெரும் சுவை கூடியதாக நம் உள்ளமும் உடலும் ஏற்கிறது.

நாம் நம்மில் உள்ள பல கலக்கங்கள்… பல கஷ்ட நிலைகள் சோர்ந்த நிலை கொண்டு மனச்சங்கடத்துடன் உள்ள பொழுது… நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலும் மனமும் பெரும் சங்கடத்துடனே ஏற்று… அதில் உள்ள சுவையும் நம் நாவிற்கு ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாமல் நம் உடல் நிலையும் அதனால் பாதிக்கப்படுகிறது.
1.ஒன்று போல் உள்ள உணவை உண்டாலும்
2.நம் மனநிலையைப் பொறுத்துத் தான் உடல் ஆகாரத்தை எடுத்து நாம் ஆத்மாவிற்கு அளிக்கிறது.
3.ஒவ்வொருவரும் தன் சுவாச நிலையும் எண்ண அலைகளும் கொண்டு தான் இவ் உயிர் உடலை இயக்கி வாழ்கின்றோம்.

எப்படி ஒரு பொருளையோ நாம் சமைக்கும் சமையலையோ நம் எண்ணத்தை அதன் மேல் செலுத்திப் பக்குவப்படுத்திப் பதம் பார்த்துச் செய்கின்றோமோ… எந்த ஒரு பொருளுக்கும் நாம் செய்யும் பொழுது “அதன் பதம் அறிந்து செய்தால்தான்” அது முழுமை அடைகிறது.

அதைப் போல் தான் இவ்வுடல் எனும் கூட்டை
1.இவ்வுள்ளத்தினாலும் இச்சுவாசத்தினாலும் தான் இவ்வுடலுக்குப் பதமறிந்து
2.சந்தோச நிலை கோப நிலை என்ற நிலையில் நாம் நம்மைச் சமமாக நிலைப்படுத்திக் கொண்டு இவ் உடலையே பக்குவப்படுத்திப் பதமறிந்து
3.நாம் நம் ஆத்மாவை வணங்கி வாழும் நிலைக்கு நம்மை நாம் பதப்படுத்தி வாழ்ந்திட வேண்டுமப்பா.
4.நம்மில் நம்மைச் சுற்றிப் பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் அடிபணிந்து வாழ்ந்திடாமல் “நமக்கு நாம் அடிபணிந்து வாழ வேண்டும்…”

நாம் எடுத்திடும் சுவாச நிலைகள் எல்லாம் நம் உடலுக்கு எந்தெந்த நிலையில் நாம் எடுக்கின்றோமோ அதைக் கொண்டுதான் “நன்மையும் தீமையும் அமைகின்றது” என்பதனை உணர்ந்து நம்மை நாம் பக்குவப்படுத்திச் சமப்படுத்தி வாழ வேண்டும்.

இப்பாட முறை கொண்டு நீங்கள் பகுத்தறிந்து உணர்ந்து… நமக்கு முன் உபதேசித்த பல பெரியோர்களின் வழியில் நடந்து ஏற்றமுடன் நல் எண்ணம் கொண்டே பதப்படுத்தி வாழ்ந்திடுங்கள் “பக்குவ நிலையில்…”

நாம் வேறல்ல இவ்வுலகம் வேறல்ல இவ்வுலக அனைத்திலும் உள்ள உயிரணுக்கள் வேறல்ல அச்சக்தியின் அருளில் உருளும் இவ்வுலகத்தில் உதித்துள்ள உயிரணுக்கள் எல்லாமே… “எல்லாமே ஒரே சொந்தம் தான்…”
1.நம்மை நாம் பிரித்து வாழ வேண்டியதில்லை. நம்முள் கலந்தது தான் எல்லாமே.
2.அவ் எல்லாவற்றிலும் கலந்து உள்ளவர்தான் நாமுமே.
3.நான் என்ற தனி நிலை இல்லாத நாம்…
4.இந்த உருளுகின்ற உலகுடன் உலகமாகச் சுற்றி நாம் பெற்ற அருளை நம்முள் ஈர்த்து வாழ்ந்திடுவோம்
5..நல் மனத்துடனும் அன்பு கொண்டு வாழ்ந்திடுவோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply