விஷ்ணு தனுசு

விஷ்ணு தனுசு

 

பரசுராம்… மனித உடலைப் பெற்ற பின் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றினாலும்… ஒருவன் தீமையான இடைஞ்சல்களைச் செயல்படுத்தும் போது அதை நுகர்ந்த பின்… அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் அது அணுத் தன்மையாக ஆகி விட்டால் இதில் விளைந்த உணர்வுகள் என்ன செய்யும்…?

ஒருவர் மீது எதிரியாகி விட்டால் எப்படியும் தாக்க வேண்டும் என்று தான் எண்ணம் வரும் அவரை வீழ்த்த வேண்டும்… தன்னைக் காக்க வேண்டும் என்று சமப்படுத்தும் நிலை வரும் பொழுது பரசுராமனுக்கும் ராமனுக்கும் போர் முறை வருகின்றது.

ஆனாலும் அதிலே ராமன் தான் ஜெயிக்கின்றான்.

1.காரணம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நாம் நுகர்ந்து
2.இந்த உணர்வினைத் தனக்குள் எடுத்து உருவாக்கி அதைத் தனுசாகத் தன் உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.அந்த வேதனையான உணர்வுகளைத் தாக்கி அதை அழிக்கின்றது.

அதைத் தான் ராமன் விஷ்ணு தனுசை எடுக்கின்றான்
1.உயிரின் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தினை எண்ணித்
2.தன் உடலுக்குள் இருக்கும் தீமைகளை மாற்றும் சக்தி பெறுகின்றது என்று காட்டுகின்றார்கள்.

தீமையை அப்படியே விட்டுவிட்டால் அந்த உணர்வின் தன்மை ஆக்கிரமிப்பு “வாலி என்ற உனர்வு நமக்குள் வந்து” தீமை என்ற நிலைகள் அந்த வீரிய உணர்வு கொண்டு தனுசாக மாறி நமக்குள் தீங்கு செய்யும் எண்ணங்களையே உருவாக்குகின்றது.

அதனால் தான் அதைச் சிவ தனுசு என்று காரணப்பெயர் வைத்து சாதாரண மனிதனும் புரிந்து கொள்ள
1.தனது வாழ்க்கையில் எவ்வாறு அது நம்மை இயக்குகின்றது எப்படி இயக்குகின்றது…?
2.நாம் இயங்குகின்றோமா…? அல்லது நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்குகின்றதா…? என்று உணர்த்துகிறார்கள்.

ஆறாவது அறிவு கொண்ட நாம் கார்த்திகேயா…! தீமை என்று தெரிந்து கொண்டாலும் அது உடலுக்குள் புகாது சேனாதிபதியாக… பாதுகாப்பாக இருக்கும் இந்த ஆறாவது அறிவைப் பயன்படுத்த வேண்டும்.

தீமைகளை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து “அதை உயிரிலே சேர்க்கப்படும் போது தான்” விஷ்ணு தனுசாக மாறுகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் எங்கள் உடல் முழுவதும் வளர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் வலிமை கொண்டு வரும் பொழுது
1.நம் உடலில் தீங்கு செய்யும் இந்த அணுக்களுக்குள் ஊடுருவி
2.தீங்கான உணர்வைக் கவராதபடி அதை அடக்குகின்றது.

விஷ்ணு தனுசு கொண்டே தீமை என்ற உணர்வினை நாம் மாற்றி அமைத்தல் வேண்டும் என்பதைத் தான் இராமாயணக் காவியங்கள் உணர்த்துகின்றது.

அதாவது வாலி (தீமைகளை) என்ற நிலையைக் குகையிலிருந்து வெளி வராதபடி அடைத்து “அதனின் செயலைத் தடுக்க வேண்டும்” என்று காட்டுகின்றனர்.

வட துருவம் – ஈஸ்வரன் – புருவ மத்தி

வட துருவம் – ஈஸ்வரன் – புருவ மத்தி

 

1.தெய்வ சக்தி பெறுவதும் மனிதன் தான்.
2.பேயாக… புழுவாகச் செல்லுபவனும் மனிதன் தான்.
3.மனித எண்ணத்தில் இருந்து தான் மனிதக் கருவின் வளர்ச்சி வாழ்க்கை மண்டலங்களில் வேரூன்றுகின்றது.

நம் பூமியின் ஈர்ப்புக் குணமும் வளர்ச்சி நிலையும் மனித குணத்தின் எண்ணச் செயலுக்குகந்ததாக உள்ளதினால்தான் மனிதன் இங்கு வாழ்கின்றான்.

மனிதன் காணாத அறியாத பல உயிரினங்கள் இப்பூமியில் வாழ்கின்றதென்றாலும் மனிதனின் தொடரிலிருந்து சென்ற வகைகள்தான் அவைகளும்.

இயற்கையில் பல மாற்றங்கள் இருந்தாலும் ஒன்றை ஒட்டி ஒன்று வளர்ந்து பலவாகிச் செயல்படும் நம் பூமியிலே பூமியின் இயற்கைத் தன்மை பலவாக உள்ளதற்கு இப்பூமி ஈர்க்கும் நிலை கொண்டு மனிதனின் தாவரங்களின் எண்ண சுவாச ஈர்ப்பின் நிலை வளர்ச்சி எப்படி மனிதனுக்கு உட்பட்டு வெளிப்படுகின்றதோ அதைப் போன்றுதான் பூமியின் ஈர்ப்பின் நிலைக்கொப்ப அந்தந்த இடங்களில் ஏற்படும் குண சீதோஷ்ண-தட்ப வெட்ப-நிலை என்று பல தடவை முந்தைய நூல்களில் உணர்த்தியுள்ளேன்.

ஆவியாகி… நீராகி… பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி… நீராகி.. பிம்பமாகி…! முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.

அன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால்
1.கதையாகப் படைக்கப்பட்ட்தன் உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால்
2.“அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்…”

இந்த உலகில் வட துருவ தென் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது… வளர்ந்து கொண்டுள்ளது.

இந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வட திசையும் தென் திசையும்.
1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான்
2.தீயவை தீயவையுமல்ல… நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…!

“சிவன் விஷத்தை உண்டு…” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்… தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்…! என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா…?
1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல்
2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல் புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.

வட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்திப் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.

நம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது.
1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும்
2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.

பலனை எல்லாம் தந்தது. அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்து விட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்…?

நம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.

வட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…?

மாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…?

அதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

1.மாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால்
2.வட துருவ தென் துருவ செயல் நிலையிலும் “இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது…!”

எதுவுமே… அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்து “ஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்…” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.

குழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.

1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா…?
2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு…!
3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்… பருவ நிலை மாற்றம்… அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்… எல்லாமே.

தீமை செய்யும் உணர்வுகளை நம் ஆன்மாவிலிருந்து “ஒரு சாணுக்கு வெளியே” தள்ளிப் பழகுதல் வேண்டும்

தீமை செய்யும் உணர்வுகளை நம் ஆன்மாவிலிருந்து “ஒரு சாணுக்கு வெளியே” தள்ளிப் பழகுதல் வேண்டும்

 

வேதனை வெறுப்பு கோபம் குரோதம் இவை எல்லாவற்றையும் இராமாயணத்தில் வாலியாகக் காட்டுகிறார்கள்… வலிமை மிக்க சக்தி.

அந்த வாலியை இராமன் என்ன செய்தான்…?

1.குகை மேல் இருக்கக்கூடிய பாறையை அம்பால் அடித்து அதை மூடுகின்றான்…
2.வாலியினால் வெளியே வர முடியவில்லை. அவன் திறமைகளைக் காட்ட முடியவில்லை.

ஏனென்றால் வாலி யாரைப் பார்த்தாலும் அவருடைய வலிமையை நுகர்ந்து எல்லாவற்றையும் அடக்கி விடுவான். அவன் நிலைக்குத்தான் நாம் போக வேண்டும் என்பதற்காக “அதை மாற்றியமைக்கும் நிலைக்கு” இதைச் சொல்கின்றார்கள்.

தெளிவாக ரூபமாக்கிக் காவியம் படைத்து இந்த உணர்வை நாம் எண்ணினால் சீதாராமா. இராமன் என்ன செய்கின்றான்…?
1.கெட்டதைப் பார்க்கவில்லை… அதை மூடி விடுகின்றான்.
2.உடலில் உள்ள கெட்ட அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை அது வாடுகின்றது.

இதைப்போல் நாம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
1.நம் தலைக்கு மேல் இருப்பதை… பாறை மாதிரி இருப்பது தான் துருவ நட்சத்திரம்
2.அந்த உணர்வை எடுத்து நினைத்து இங்கே புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்.

காலையிலிருந்து நாம் எத்தனை பேரைப் பார்க்கின்றோம். எல்லாம் இந்த வழியில் தான் உள்ளே செல்ல வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இங்கே வலுவாகச் சேர்த்துக் கொண்ட பிற்பாடு அதற்கடுத்து கண்ணின் நினைவு உடலுக்குள் செலுத்தி…
1.உடலில் எத்தனை கோடி குணங்கள் உண்டோ அத்தனை குணங்களுக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.பேரொளியாக மாற வேண்டும் என்று நாம் எண்ணங்களைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

இதைத்தான் கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது கண்ணின் நினைவை உடலில் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் அந்த அணுக்களுக்கு உள்ளே நினைவு செலுத்தி தீமைகளை நிறுத்திப் பழகுதல் வேண்டும்.

அப்போது அதை மறைத்துக் கொள்கின்றது. இந்த எண்ணங்கள் வரப்படும் பொழுது உள்ளே அணுக்கள் இழுக்கக்கூடியது… அதாவது வேதனைப்படுத்துவது கோபப்படுத்துவதோ சஞ்சலப்படுத்துவது பொறாமைப்படுத்துவது என்னை இப்படி பேசினானே என்ற எண்ணங்கள் கொண்ட உணர்வின் அணுக்களை நிறுத்தி விடுகின்றோம்.

அருள் உணர்வைக் கூட்டக் கூட்ட அது வலுப் பெறுகிறது.
1.உயிர் வழி தான் எல்லாமே உள்ளே செல்ல வேண்டும்
2.ஆனால் அங்கே துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் போட்டு நாம் அடைத்து விடுகின்றோம்.
3.இந்த உணர்வை வலுப்படுத்துகின்றோம்… அது வலுவான பிற்பாடு மற்றதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

வேப்பமரம் பக்கம் ரோஜாப்பூ மணம் சென்றால் விடுமா…? ரோஜாச் செடியின் அருகிலே வேப்பமரம் மணம் சென்றால் விடுமா…?

இதைப் போன்று அருள் உணர்வின் வலிமையை நாம் அதிகமாக்கிக் கொள்கின்றோம். அந்த அருள் சக்திகளை நம் உடலுக்குள் சேர்த்தவுடனே இங்கே அடைத்து விடுகின்றோம்.

உடலில் உள்ள தீமை செய்யும் அணுக்களுக்குச் சாப்பாடு இல்லை.
1.இந்த உணர்வின் வலுத்தன்மை ஆகி அழுத்தமான பின் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளி வருகிறது.
2.தள்ளும் போது ஒரு சாணுக்கு மேலே ஆன்மாவிலிருந்து விலக்கி விட்டால் சூரியன் இழுத்துக் கொண்டு சென்று விடுகிறது.
3.நம் ஆன்மா தூய்மையாகின்றது.

இந்த பழக்கத்தை நாம் ஒவ்வொருவரும் கொண்டு வருதல் வேண்டும்.

ஆத்ம சுத்தியின் முக்கியத்துவம்

ஆத்ம சுத்தியின் முக்கியத்துவம்

 

உதாரணமாக நல்ல தண்ணீர் குழாய்கள் செல்லும் பாதைக்கு அருகில் சாக்கடைத் தண்ணீர் போகக்கூடிய குழாய்களும் இருந்தால்… சந்தர்ப்பத்தால் அந்தக் குழாய்கள் துருப்பிடித்து ஓட்டையாகி விட்டால் நல்ல தண்ணீருக்குள் அந்தச் சாக்கடை தண்ணீரும் கலந்து தான் வரும்.

இதே போன்று நாம் ரோட்டிலோ மற்ற இடங்களுக்கோ செல்கிறோம் என்றால்
1.மற்றவர்கள் உணர்வுகளை நாம் கவர்ந்து… தெரிந்து தான் செல்கிறோம்… அவரின் உணர்வை இழுத்துத் தான் உணரச் செய்கிறது.
2.நல்ல எண்ணத்தோடு நாம் வேலைக்குச் செல்கிறோம் என்றால் இந்த உணர்வுகளும் அதனுடன் கலந்து விடுகின்றது

நல்லதை நினைத்து அந்தக் காரியத்தை நடத்த வேண்டும் என்று தான் செல்கின்றோம். ஒருவன் தவறு செய்கின்றான்… அதை உற்றுப் பார்க்கும் பொழுது நல்ல தண்ணீருக்குள் சாக்கடை நீர் கலந்தது போன்று ஆகிவிடுகிறது.

அப்பொழுது நம் காரியத்துக்குச் செல்லும் பொழுது
1.அவன் வெறுப்படைந்ததோ தீமை செய்ததோ கோபமாக இருந்ததோ நாம் வேடிக்கை பார்த்தது
2.நல்ல உணர்வுகளுடன் இது மோதிக் கலந்து விடுகின்றது.

இதன் வழி தான் நாம் நல்லதை எண்ணிப் போகின்றோம். அதனுடன் குறுக்கே இந்த உணர்வுகள் வந்து மோதி ஆன்மாவிலே கலந்தபின் இழுத்து உள்ளே கொண்டு போய் சேர்த்து விடுகிறது.

1.அவனுடைய கண்ணின் உணர்வும் நம்முடைய உணர்வுகளும் இழுக்கப்படும் பொழுது உயிரிலே படுகிறது
2.அந்த நல்ல காரியத்தைச் செய்வதை விடுத்து விட்டு இந்த உணர்வு குறுக்கே வந்தபின்
3.ஆபீசிலேயோ கடையிலே உட்கார்ந்து பின் இது கலந்தது முன்னாடி வந்து விடுகின்றது
4.அங்கே நம் நல்ல காரியங்களைத் தடை செய்யும் விதமாகி விடுகிறது.

அப்படி என்றால் அங்கே சென்று அமர்வதற்கு முன் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா என்ற உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.

நாம் பார்த்த அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நினைத்து அதை மாற்றிவிட வேண்டும். ஏனென்றால்
1.இங்கே அடைத்து விட்டு… அதை மாற்றி அமைத்து… உள்ளுக்குள் நல்ல உணர்வுகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
2.இரத்தத்திலே அந்த மகரிஷிகள் உணர்வுகள் கலந்த பின் அந்த உணர்வுகளை நல்லதாக்கச் செய்கின்றது

இதற்குத்தான் உங்களை அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. நன்றாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையை உயர்த்துவதற்குத் தான் இதைக் கொடுக்கின்றேன் ஏனென்றால் நான் கஷ்டப்பட்டு… அனுபவப்பட்டுத் தெரிந்து கொண்டேன்
1.உங்களுக்குச் சக்தியும் கொடுக்கின்றேன்… அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2.நீங்கள் முயற்சி எடுங்கள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்
3.உங்கள் எண்ணம் நிச்சயமாக அதை நிறைவேற்றும்.
4.நல்ல எண்ணங்களை உருவாக்க முடியும்… நல்ல சிந்தனைகளை உருவாக்கி நல்ல நிலை பெற முடியும்.

ஆகவே எங்கு சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உடல் முழுவதும் படரச் செய்து விட்டு என்னைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் அந்த நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் செயல்படுத்துங்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எல்லாவற்றிலும் இப்படிப் போட்டு
2.இரத்தத்திலே கலந்து இணைத்துக் கொள்ள வேண்டும்.

இதைத்தான் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன் என்று சொல்வது.

சந்தர்ப்பத்தில் தீமையைப் பார்த்தோம் உயிரிலே பட்டு மோதுகின்றது உயிர் உருவாக்குகின்றது. சிவனுக்கே ஓதினான் ஓ…ம் என்ற பிரணவத்தை. உடலில் இருந்து வருவது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா.

எத்தனையோ உடல்களைக் கடந்து இந்த உடலான சிவத்தை உருவாக்கியது உயிர். இதிலிருந்து வளர்ந்தது தான் கார்த்திகேயா.

ரோட்டில் போகும் போது வெறுப்பான காரியங்களைச் செய்வதைப் பார்த்தோம். உயிரிலே பட்ட பின் ஓ என்று பிரணவமாக்கி அவன் செய்த உணர்வை இரத்தத்தில் கலக்கச் செய்து விடுகின்றது.

நம் ஆறாவது அறிவு கொண்டு அதைத் தடுத்து நிறுத்தி அருள் ஒளியின் உணர்வு கொண்டு மாற்றி அமைக்க வேண்டும். அதுதான் கார்த்திகேயா…!

தீமை என்று வந்தபின் வலுவான உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று இங்கே இடமறித்துத் தீமை உள்ளே போகாது தடைப்படுத்திவிட்டு அதை வெளியே தள்ளி விட்டு விடுகின்றோம்.

ரோட்டிலே பார்த்த அந்த உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெறாது அணுக்களாக உருவாகாதபடி இப்படி நாம் தடுத்துக் கொள்கின்றோம். ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

1.இப்படி ஒவ்வொரு நிலைகளிலும் நல் உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டே வர முடியும்
2.அருள் உணர்வுகள் நமக்குள் பெருகிக்கொண்டே வரும்
3.இப்படித்தான் நாம் அதை வளர்த்து உயர்ந்த நிலைக்கு நாம் கொண்டு வர முடியும்.

ஆத்மா என்பது என்ன…? அது எங்குள்ளது…?

ஆத்மா என்பது என்ன…? அது எங்குள்ளது…?

 

எண்ணத்தை ஒருநிலைப்படுத்தும் பக்குவ நிலைக்கு நம் ஆத்மாவை நாம் செயல்படுத்திட வேண்டும்.

ஆத்மா என்பது எங்குள்ளது…?

நாம் இறந்துவிட்டால் ஆத்மா பிரிந்து விட்டது என்கின்றோம். ஒரு ஜீவ உடல் இறக்கும் பொழுது அவ்வுடலில் இருந்து அவ்வுடலின் உயிரணுதான் முதலில் பிரிகின்றது.

அவ் உயிரணுவிற்கும் அவ்வுடலில் உள்ள ஜீவனற்ற ஆத்மாவிற்கும் தொடர்பு கொண்டுதான்
1.அவ்வுடலில் இருந்து ஓர் அங்குல வட்டத்திற்குள் தான்
2.அவ்வுயிரணு அவ்வுடலின் மேல் பகுதியிலேயே அவ்வாத்மாவுடன் இருக்கும்.

ஆத்மா என்பது என்ன…?

அவ்வுயிரணு சேமித்த அமில சக்திதான் ஆத்மா. அவ்வுடலை எந்நிலைப்படுத்துகின்றோமோ “அதன் பிறகுதான்”
1.அவ்வுடலைச் சுற்றிக் கொண்டே உள்ள அவ்வுடலின் ஆத்மா
2.இவ்வுயிரணுவுடன் கலந்து ஆவி உலகிற்கு வருகின்றது.

எவ்வுடலும் அதன் ஜீவன் பிரிந்த உடனே அதனுடைய செயல்நிலை ஏற்படுத்துவதில்லை. அவ்வுடலை எரிக்கும் நிலையில் அதனுடைய உயிருடன் அவ்வாத்மா சுற்றிக்கொண்டு ஆவி உலகில் கலக்கின்றது.

மற்ற நிலையில் அடக்கம் செய்யும் உடலாத்மா அதன் உயிரணுவுடன் சேர்ந்து உடலில்லாமல் செயல் கொள்ளப் “பல நாட்களாகின்றன…”

1.ஆத்மா என்பது உடலின் அனைத்து உறுப்புகளிலுமே ஆவித் தன்மையில்
2.உடலில் மட்டுமல்லாமல் உடலைச் சுற்றியுள்ள நிலையிலும் படர்ந்துள்ளது.
3.உயிரணுவிற்கும் ஆவி ஆத்மாவிற்கும் ஜீவனுடன் கூடிய ஆத்மாவிற்கும் பொருள் புரிந்ததா…?

ஆவி உலக ஆத்மாவிற்கும் ஜீவ உடல் ஆத்மாவிற்கும் மாறுபட்ட நிலை இது தான்.

ஜீவ உடலை விட்ட ஆத்மாவிற்கு எண்ணத்தின் நிலையைச் செயலாக்கிட பிற எண்ணமுடன் (உடலுடன் கொண்டவருடன்) மோதித்தான் அதன் செயல் நிலை இருந்திடும்.

நம் எண்ணத்தை ஒரு நிலை கொண்டு ஒவ்வோர் ஆத்மாவும் ஆசையுடன் வாழும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

அனைத்திற்குமே ஆசை வேண்டும்…
1.அன்பு கொள்ளவும் ஆசை வேண்டும்
2.கோபத்தை விடவும் ஆசை வேண்டும்.
3.எந்நிலை செயல் கொள்ளவும் அவ் ஆசை வேண்டும்.
4.நமக்குகந்த ஆசையை நாம் ஆசைப்பட்டால்தான் எச்செயலும் நடக்கும்.

பேராசைக்குத்தான் நாம் இடந்தரலாகாது.

அமுதான உணவானாலும் நாம் நம் உடலுக்கு வேண்டிய அளவுதான் உண்ணுகின்றோம். எப்படி உண்டாலும் அதிகமாய் நம் உடம்பு ஏற்றுக் கொள்கின்றதா…?

உடலே தனக்குகந்த அளவு உணவைத்தான் செரிக்கும் பொழுது…
1.நம் எண்ணத்தையும் அளவுடன் கூடிய ஆசையை எண்ணியே
2.செரிக்கும் பக்குவத்தை நாம் பழக்கப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

“அழுக்குப்படிகிறதே” என்று அஞ்சி ஒதுங்கிடலாகாது… அழுக்கை அகற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும்

“அழுக்குப்படிகிறதே” என்று அஞ்சி ஒதுங்கிடலாகாது… அழுக்கை அகற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும்

 

நம் உடலைத் தினமும் நீர் விட்டுக் குளித்துத் தூய்மைப்படுத்துகின்றோம். நம் உடல் தூய்மையாய் உள்ளதென்று நாம் வெளியில் செல்லாமல் இருக்க முடியுமா…?
1.வெளி உலகில் கலந்துள்ள காற்றும் மண்ணும் நம் மேல் படத்தான் செய்யும்
2.மீண்டும் மீண்டும் இவ்வுடலைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

புற உலகின் அழுக்கு நம் மீது வேண்டும் என்றே படிகிறதென்று நாம் வெளியில் செல்லாமலே இருக்க முடியுமா…?

அதைப்போல் நம் எண்ணம் ஒரு நேர்கோடான சத்தியச் செயலைச் சார்ந்துள்ள நிலையில்… நம்மைச் சுற்றியுள்ள மற்ற ஆத்மாக்களின் நிலையும் நம்மை ஒத்திருந்தால்தான் நாம் அதனுடன் கலந்து வாழ்ந்திட முடியும்.

1.தீய பழக்க வழக்கம் கொண்டவனை விட்டு நாம் விலகித்தான் வாழ வேண்டும் என்று நம் எண்ணத்தில் எண்ணினோமானால்
2.நம் எண்ணத்தில் உள்ள அச் சத்திய நேர்கோட்டின் பிடிக்கு நாம் அடிமைப்பட்டு
3.”நான்” (நான் ஒழுக்கமானவன்) என்ற வைராக்கிய ஆத்மாவாகத்தான் நாம் இருந்திட முடியும்.

நாம் பெற்ற சக்தியை நமக்கே சொந்தமாக்கி நம் ஆத்மாவிற்கு எத்தனை செல்வங்கள் சேமித்தாலும் அதுவும் “நான்” என்ற சக்தியாகத்தான் இருந்திடுமப்பா.

1.நான்… எனது… என்ற அணுவளவு எண்ணத்தில் பிற பேராசை பற்று இருந்தாலும்
2.ஆண்டவனைப் பூஜிக்கும் பற்றானாலும் சரி
3.தான் கற்ற வித்தையின் பலனை எண்ணினாலும் சரி… அந்த நிலை “அந்த நானாகிவிடுகின்றது…”

பல ஆத்மாக்கள் இயற்கையிலேயே பல உன்னத சக்தியைப் பெற்று வாழ்கின்றனர்… மருத்துவம், விஞ்ஞானம், இயல், இசை, நாடகம், ஓவியம், விவசாயம் எல்லாவற்றிற்கும் மேன்மையான சமையல் திறன்.

இப்படி ஒவ்வோர் ஆத்மாவும் இயற்கையிலேயே உன்னத சக்தி பெற்றிருந்தாலும் அச் சக்தியைத் தன் நலம் நாடாமல் பொருள் ஆசையின் நிலையில் அத் திறனை வளரவிட்டால் “நான் என்ற நிலையில்தான்… அவர்கள் பெற்ற பயன் சிக்குண்டு விடுகின்றது…!”

பொருள் இல்லாவிட்டால் எப்படி ஜீவிதம் கொள்ள முடியும்…? என்ற வினா எழும்பலாம்.

பொதுவான நிலைப்படுத்தி அவரவர்கள் பெற்ற பயனைச் செயலாக்கித் தேவை என்ற அடிப்படையில் ஜீவிதத்திற்குகந்த பொருள் நிலை பெற்றுத்தான் அஜ்ஜீவன் நடக்கும்… உண்மைதான்…!

ஆனால்… அதற்காக ஆண்டவன் அருளில் பெற்ற அதி பொக்கிஷ செயல் திறமையை நாம் பேராசைக்கு அடிமைப்பட்டு உழலும் காலமாய் இன்றைய கால நிலை உள்ளது.

தேவை என்ற அடிப்படையில் பொருள் சேமிக்கலாம்.
1.அதி தேவையாக்கி நம்மையே நாம் அதற்கு அடிமைப்பட்டு சேமிக்கும் பொருளினால்தான்
2.இன்றைய இவ்வுலகமே இப்பேராசைப் பிடிக்கு அடிமை கொண்டு வாழ்கின்றது.

ஆத்மீக நெறிக்கு வருபவர்களும் இச் சந்நியாசிக் கோலத்தை மனிதர்களுக்கு உணர்த்திக் குடும்பப் பற்றையும் மற்ற எல்லா ஆசை நிலையையும் துறந்துதான் ஆத்மீக நெறிக்கு வர வேண்டும் என்பதனை ஒரு சாரார் உணர்த்திவிட்டனர்.

இன்னும் ஒரு சாரார் அப்பக்தியை பொருளாக்கி வளரவிட்டு விட்டனர்.

இன்னும் ஒரு சாரார் தனக்கு அனைத்து நிலைகளும் தெரிந்துள்ளதாகவும் அவ் ஆண்டவனே இவர்களின் மூலமாய்த்தான் பிறருக்கு அச்சக்தியை அளிப்பதாகவும் எண்ணத்தில் கொண்டு மடாலயம் கட்டி மதகுருக்களாய் அனைவரையும் வணங்கச் செய்கின்றனர்.

எல்லா மதத்திலும் இந்நிலை தான்.

உலகுடன் பல காலமாய் எண்ணத்துடனே வளர்ச்சியின் பல நிலைகள் வந்துவிட்டன. இதிலிருந்து எல்லாம் நமது ஆத்மாவை…
1.எல்லாமில் எல்லாமாய் அவன் அருள் எப்படிக் கலந்துள்ளதோ அதைப் போன்றே
2.எல்லாவற்றுடனும் எல்லாமாய்த் தான் நாம் நம் ஆத்மாவைத் தூய்மைப்படுத்திடல் வேண்டும்.
3.அழுக்குப்படிகிறதே என்று அஞ்சி ஒதுங்கிடலாகாது. அழுக்கை அகற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

மண்ணில் இருந்து கரும்பை எடுத்து அதனைச் சாறாக்கும் நிலையில் அதன் நிறமும் அதன் மணமும் கண்ணுற்றால் “இதையா” நாம் உண்ணுகின்றோம் என்று எண்ணுகின்றோம்.

அச்சாறே அதனுடன் சில கலவையை ஏற்றிய பிறகு தூய கற்கண்டாய் உள்ள நிலையில் அதன் வெண்மையும் சுவையும் கண்டு நாம் அருவருப்பதில்லை.

அதைப்போல் உலகத்துடன் ஒன்றியுள்ள நாம் பிற ஆத்மாக்களின் தீய எண்ணத்தைக் கண்டு ஒதுங்கிடலாகாது. கரும்புச்சாறு பார்க்க அருவருப்பாய் உள்ளது என்று ஒதுக்கிவிட்டால் கற்கண்டு கிடைக்குமா…?

மற்ற ஆத்மாக்களையும் நம் நிலையினால் தூய்மைப்படுத்த வேண்டுமேயன்றி எதையுமே வெறுத்து ஒதுக்குதலாகாது.

ஆதவனுடன் ஆதவனாய் ஜோதி நிலை பெற்றுக் கலந்திட
1.அவ்வாதவன் எப்படி நன்மை தீமை கொண்டு அவ்வொளியைப் பாய்ச்சவில்லையோ அதைப்போல்
2.உலகுடன் கலந்துள்ள பல நிலை கொண்ட எல்லாமில் எல்லாமாய்த்தான் நம் ஒளியையும் நாம் பெறல் வேண்டும்.

வாழ்க்கையுடன் இருந்திட்ட பெரியோர்கள் தான் இன்று அவ்வொளியுடன் ஒளியாய்க் கலந்து ஆண்டவனாய் உள்ளார்கள் என்பதனை யார் வினா எழுப்பினாலும் அவர்களுக்கு விடையளிக்கப்படும்.

குடும்பப் பற்றிலிருந்தும் உலகப் பற்றிலிருந்தும் விலகி இமயமலைச் சாரலுக்குச் சென்று ஜெபம் இருக்கும் ஆத்மாவானாலும் சரி…
1.அவ் ஆத்மாவும் உடலைவிட்டுப் பிரிந்த பிறகு மறுபடியும் இவ்வுலகில் பிறந்து வாழத்தான் வேண்டும்.
2.சித்தனாகவும் முனிவனாகவும் சப்தரிஷியாகவும் எந்நிலையும் பெற முடிந்திடாது என்பதனை இங்கே வெளிப்படுத்துகிறேன்.

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும்… நம் எண்ணமுடன் கூடிய சுவாசத்தை எடுக்கும் முறையில் இருந்து தான்… நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் அமில சக்தி கூடுகின்றது.

ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட எண்ணத்தின் மோதலில் இருந்தும் நாம் தப்பி நல் உணர்வையே நம் ஆத்மா சேமிக்கும் அமிலமாக நம்மை நாம் பக்குவப்படுத்திப் பல ஆத்மாக்களை அப்பக்குவ ஜெபத்திற்கு ஈர்த்துச் செயல்படுத்திட வேண்டும்.

இதை உணர்ந்து…
1.நான் என்ற தனித்த நிலையை விட்டு
2.எல்லாமுடனும் எல்லாமாய் நம் ஆத்மாவும் ஒளிரும் வழிமுறை பெற்று எல்லாமே ஒளிரச் செய்ய வேண்டும்.

மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பழகுதல் வேண்டும்

மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பழகுதல் வேண்டும்

 

ஒருவன் தவறு செய்கின்றான் என்று பார்க்கின்றோம். ஆனால் தவறை அவன் நமக்குச் செய்யவில்லை. பிறருக்குத் தவறு செய்கின்றான் என்ற உணர்வினை நுகரப்படும் பொழுது அந்தத் தவறின் உணர்ச்சிகள் நமக்குள் வந்து தவறு செய்கின்றான் என்பதை உணரச் செய்தாலும் அந்தத் தவறின் உணர்ச்சிகளை ஊட்டினாலும் அந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கும் அதே உணர்ச்சிகளை ஊட்டித் தவறு செய்யும் உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக நம் அணுக்களை மாற்றி விடுகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? நன்றாக யோசனை செய்து பாருங்கள். விஞ்ஞான உலகில் தான் இன்று வாழ்கின்றோம் நாம் எப்படி வாழ வேண்டும்…?

1.ஒருவரை நாம் பார்க்கப்படும் பொழுது அவருடைய தீமை நமக்குள் வந்தால் அதை எப்படி மாற்ற வேண்டும்…?
2.தவறு என்ற அந்தச் சிறு திரையை நாம் நீக்க வேண்டும்… திரையை நீக்கித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்
3.நம்முடைய ஆன்மாவில் அத்தகைய தீமைகள் பட்டால் மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பழகுதல் வேண்டும்.

முகம் பார்க்கும் கண்ணாடியில் அழுக்குப்பட்டால் “துடைத்த பின் தான்” முகம் தெரிகின்றது.

அழுக்குப் படும்போது நம்முடைய மனது பிறருடைய மனதை அறிய முடியாதபடி நம்மை அறியாமலே வேதனைப் படும் பொழுது என்ன செய்வது…? என்று அறியாதபடி அந்த வேதனைகள் தூண்டப்பட்டு தீமையைத் துடைப்பதற்கு மாறாகக் கண்ணாடியை உடைக்கும் தன்மை வந்து விடுகின்றது.

கண்ணாடியை உடைத்து விட்டால் என்ன செய்யும்…? முகத்தைப் பார்க்க முடியுமா…? இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நமது வாழ்க்கையில் சதா இது நடந்து கொண்டே இருக்கின்றது.

இதை அவ்வப்பொழுது நாம் மாற்றிப் பழக வேண்டும் அல்லவா.

ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி இத்தகைய இருளை எல்லாம் வென்ற ஒரு நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வினை உடலுக்குள் சேர்த்து நம் ரத்தங்களிலே கலக்கச் செய்து இருளை மாற்றிப் பழகுதல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் இதைச் செய்து பழகுதல் வேண்டும்

ரோட்டிலே செல்லுகின்றோம்… உடையில் தூசி படுகின்றது… துணியைத் துவைத்து விடுகின்றோம். ஏதோ ஒரு பொருளைத் தொடுகின்றோம் அழுக்காகி விடுகின்றது… சாப்பிடுவதற்கு முன் நம் கையைக் கழுவிக் கொள்கின்றோம்.

ரோட்டிலே ஒருவன் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றான் பார்க்கின்றோம். அதை நுகர்ந்த பின் இரத்த்த்தில் அழுக்காகப் படுகின்றது. அந்த வேதனையைத் துடைக்க வேண்டும் அல்லவா.

நல்ல உணர்வுகள் இருந்தாலும் பிறருடைய உணர்வுகள் அந்த நல்ல குணங்களிலே சித்திரையாக அதை மாற்றி விடுகின்றது.. சிறு திரையாக மூடுகின்றது.

அந்த வேதனை உணர்ச்சி தான் முன்னணியில் வருகின்றது. ஆனால்
1.அதை நீக்க வேண்டும் என்று நிலைகள் தான் வரவேண்டும்.
2.அதை நீக்க வேண்டும் என்றால் வேதனைகளை எல்லாம் நீக்கியது துருவ நட்சத்திரம்
3.அதை நுகர்ந்து இரத்தத்தில் கலந்து தீமைகளைப் பிரித்தல் வேண்டும்.

தீமைகளை எரிபொருளாக மாற்றி ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்

தீமைகளை எரிபொருளாக மாற்றி ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்

 

சந்தர்ப்பத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வு தான் இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது.
1.மனிதனான பின் தீமை என்று உணர்ந்த பின் அதை நீக்க
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் உருவாக்கினால் இது வலுப்பெற
3.தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வராது “அதை எரிபொருளாக” மாற்றியமைத்துவிடும்.

இன்று விறகை எரித்த பின் அது கருகி விடுகின்றது. எண்ணெய் ஊற்றி நெருப்பினை வைத்த பின் ஒளியைத் தருகின்றது, எண்ணெய் தீர்ந்தால் இதுவும் தீர்ந்து விடுகின்றது.

இதைப் போலத் தான்
1.நம் உடலில் உள்ள உணர்வுகளை எரிபொருளாக மாற்றி
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சக்தி பெறக்கூடிய தகுதி பெற்றது இந்த ஆறாவது அறிவு.

இப்படி ஒளியாக மாற்றும் தன்மை பெற்ற
1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை உங்களை நுகரச் செய்வதற்கும்
2.அதைக் கவரச் செய்வதற்கும் இந்த உண்மையின் உணர்வைப் பதிவாக்குகின்றேன்.

உங்களை ஒருவர் திட்டி விட்டார் என்றால் அதைப் பதிவாக்கி விட்டால் “என்னை இப்படித் திட்டினானே…” என்று எண்ணினால் அப்போது உங்களுக்குக் கோபம் வருகின்றது.

அந்த கோபமான நிலைகள் வரப்படும் பொழுது… பெண்கள் சமையல் செய்து கொண்டிருந்தால் மிளகாயை ஜாஸ்தி போட்டு அதைச் சாப்பிட விடாமல் செய்து விடுவார்கள்.

ஆண்கள் இதே மாதிரி திட்டியவனின் நினைவு வந்தால் அங்கே கணக்கு சீராக எழுத மாட்டார்கள். ஒரு இயந்திரத்தை இயக்கினாலும் அதைச் சீராக இயக்குவதற்கு மாறாக அந்த உணர்வின் தன்மை தவறு செய்யும் நிலைக்கு இயக்கி விடுவார்கள்.‌ இதைப் போல “பதிவான அந்த உணர்வுகள்” அங்கே அதை இயக்கி விடுகின்றது.

நீங்கள் தியானத்தில் இருக்கும் பொழுது நமது குரு அருளை உங்களுக்குள் பதியச் செய்து
1.துருவ நட்சத்திரத்தின் இயக்கத்தின் சக்தியை அது துருவ நட்சத்திரமாக எப்படி ஆனது…? என்ற உண்மையினை உணர்ந்து
2.அதை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது “ஊழ்வினை” என்ற வித்தாகப் பதிவாகின்றது.

ஒரு கோபிப்போன் உணர்வை உற்று நோக்கினால் அது ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி விடுகின்றது. மீண்டும் அந்தக் கோபிப்போனை நினைக்கும் பொழுது அது நமக்குள் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது… உடலிலே கடும் நோயாக மாறுகின்றது.

இதைப் போல இவை அனைத்தையும் நீக்கியவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆனது. அந்த உணர்வினை நுகர்ந்தால் தீமை என்ற நிலைகளை மாற்றி அமைக்கும் சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

நரசிம்மா

நரசிம்மா

 

உதாரணமாக நாம் ஒரு ஆசையில் வலிமையாகச் சிக்கி விட்டால் அதை அடக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. அப்போது நாம் நுகரும் உணர்வுகள் அசுத்த அணுக்களாகப் பெருகி மீண்டும் இழிநிலையான சரீரத்திற்கு அழைத்துச் சென்றுவிடும்.

சீதாராம் பரசுராம் என்றால் இந்த எண்ணங்கள் தான். ஆக எந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ சூரியன் அதைச் சீதாலட்சுமியாக மாற்றுகின்றது. அதை நுகர்ந்தால் திரேதா யுகத்தில் நாராயணன் சீதாராமனாகத் தோன்றுகின்றான்… “எண்ணம்…”

இப்படி மனிதனான பின்
1.பல உணர்வுகளைச் சேமித்து அந்த உணர்வின் அறிவாக இயக்கக்கூடிய நிலைகள் கொண்டு
2.மனித உடலில் பல எண்ணங்களை வைத்து இயக்கும் சக்தி வருகின்றது.

பல பல சரீரங்களைச் சேர்த்துக் கொண்டு மனிதன் முழுமையாகும் உணர்வும் நஞ்சினை வென்றிடும் உணர்வும் நமக்குள் சேமித்து மனிதனாக உருவாக்கும் ஆற்றல் பெறுகின்றது.

இது தான் பலராம் பல எண்ணங்கள் வைத்து நாம் இயக்கும் தன்மை வருகின்றது. ஆனால்
1.இவை அனைத்தும் தீமைகளை அகற்றிடும் நரசிம்மனாக மாற வேண்டும்.
2.அதாவது பலவற்றையும் நாம் உணர்ந்தாலும் தீமையை அககற்றும் நரசிம்மனாக மாறினால் தான்
3.நாம் அழியாத நிலைகள் பெற முடியும்.

நமது உயிர் பலவற்றை உருவாக்கினாலும் தீமைகளை வென்றிடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்… நம் உயிரிலே அந்த உணர்வுகள் மோதப்பட்டு… இந்த உணர்வுகள் உடலுக்குள் பரப்பப்படும் பொழுது தீமைகள் அடைபடுகிறது… “அத்தகைய நஞ்சு அடக்கப்பட வேண்டும்…”

நாம் நுகர்ந்த உணர்வுகள் முதலில் நம் ஆன்மாவாக மாறுகின்றது பிறருடைய தீமைகள் ஆன்மாவாக அவ்வாறு மாறுவதை…
1.நரநாராயணன் – நம் உயிர் நரசிம்மனாக மடி மீது இரண்யனை வைத்து
2.வாசல்படி மீது உயிர் இங்கே அமர்ந்து தீமைகளைப் பிளந்தான்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் மகரிஷிகள் உணர்வை நுகர்ந்து அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி விட்டால் விஷம் கொண்ட நிலையை அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அடக்குகின்றது.
1.அடக்கப்படும் பொழுது அந்த அணுக்கள் உணவு கிடைக்காது தவிக்கின்றது
2.அதற்கு ஈர்க்கும் சக்தி அப்பொழுது குறைகின்றது.
3.அப்போது தீமையைப் பிளக்கும் நிலையாக அது அமைந்து அந்த்த் தீமைகள் பிரிக்கப்படுகிறது.
4.தீமைகள் பிரிக்கப்பட்டு அகன்று செல்கின்றது… ஒளியான உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது.

இதைத்தான் மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன் பிளந்தான் என்று காட்டுகின்றார்கள். அதாவது…
1.நாம் கை கால் அங்கங்கள் கொண்டு மற்ற வேலைகளைச் செய்வது போன்று
2.ஞானிகளின் நினைவு கொண்டு அருள் உணர்வுகளை நுகர்ந்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.அதனுடைய வலிமை கொண்டு அடக்கப்படும் பொழுது தீமைகளை ஈர்க்கும் தன்மை இழக்கப்படுகிறது.

ஆகவே வேதனைப் படுவோரைப் பார்த்தால் அடுத்த கணம் ஆத்ம சுத்தி செய்து மாற்றிடல் வேண்டும்.

காரணம் வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்தால் கருவிழி ஊழ்வினை என்று வித்தாகப் பதிவாக்குகின்றது. ஊழ்வினையாகப் பதிவானால் மீண்டும் அதைத்தான் நுகர வேண்டி வரும். உயிரிலே பட்டு அதன் உணர்வின் அறிவாக இயக்கி விடுகின்றது அதுவே உடலுக்குள் வேதனைப்படச் செய்யும் அணுவாக மாறி விடுகின்றது.

நாம் இதை மாற்றி அமைக்க முடியும்… மாற்றி அமைக்க வேண்டும். அகஸ்தியன் இதையெல்லாம் மாற்றி அமைத்தவன். அதை நீங்கள் எல்லோரும் பெற முடியும்… பெற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

இனி வரக்கூடிய காலங்கள் மோசமாக இருக்கும் நேரத்தில் உங்களைக் காத்திடும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே இதை மீண்டும் மீண்டும் பல கோணங்களில் உபதேசிப்பது.

இந்த உணர்வின் வலிமையை நீங்கள் சேர்ப்பித்து தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்/ இந்த உடலை விட்டு அகன்றால் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்பதற்கே இதைத் தெளிவாக்குகின்றேன்.

ஆறாவது அறிவால் தீமைகளை அகற்றிடும் எண்ணங்களை எண்ணினால் கண்ணின் நினைவுக்கே வருகின்றது
1.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி விண்ணை நோக்கி ஏகும் பொழுது
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகள் நம் ஈர்ப்புக்குள் வருகிறது
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அவ்வாறு உடலுக்குள் பெருக்கி தீமைகளைப் பிளப்பது தான் நரசிம்மா…!

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக்கூட்டிக் கொள்ள வேண்டிய “சரியான நேரம்”

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக்கூட்டிக் கொள்ள வேண்டிய “சரியான நேரம்”

 

பல வகையிலும் இம்சைப்பட்டுத் தான் இயற்கையின் பேருண்மைகளை எல்லாம் தெரிந்து கொண்டேன் (ஞானகுரு). ஏனென்றால் இது அனுபவம்.

ஒவ்வொரு நேரத்திலும் துன்பத்தை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை எனக்கு உருவாக்கினார் குருநாதர்… சிருஷ்டித்துக் கொடுத்தார்.
1.அந்தத் துன்பங்கள் வரப்படும் பொழுது உன் உடலுக்குள் அது என்ன செய்கின்றது…?
2.பின் விளைவு ஒரு வாரத்திற்குள் உன் உடலில் என்னென்ன வேலைகள் செய்கிறது…?
3.அடுத்து அதை நிவர்த்திப்பதற்கு நீ என்ன செய்ய வேண்டும்…? என்று இப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்.

தனித்து அழைத்துச் சென்று எனக்குக் கஷ்டங்களை உண்டு பண்ணி… அந்தக் கஷ்டம் எப்படி வேலை செய்கிறது…? அதை எப்படி மாற்ற வேண்டும்…? என்று தெரிந்து கொண்டு வந்தேன்.

அதே சமயத்தில்… உங்களுக்குக் கஷ்டம் சந்தர்ப்பத்திலே உண்டாகின்றது. அந்தக் கஷ்டத்தை உண்டாக்கக்கூடிய நிலைகளை நிவர்த்தி செய்வதற்கு உடனே கையிலே ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாகக் கொடுக்கின்றோம்.

காரணம்…
1.நாம் எதையுமே மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற்றவர்கள் தான்
2.இந்த மனித உடலில் இருந்து நாம் அருள் ஒளியைப் பெருக்குதல் வேண்டும்.
3.இந்த உடலிலிருந்து இன்னொரு சரீரம் பெற்று விடக்கூடாது.
4.அது ஒளிச் சரீரமாகத் தான் இருக்க வேண்டும்.

ஆகவே முடிவாக “அந்த ஒளிச் சரீரம் பெற வேண்டும்” என்ற எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகள் அருள் ஒளியைப் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த உணர்வை நீங்கள் ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது நம்முடைய உணர்வின் எண்ணங்கள் இந்தப் பூமிக்குள் சுழலாது.
1.அடிக்கடி இவ்வாறு எண்ணினோம் என்றால்
2.விண்ணின் சப்தரிஷி மண்டலங்களினுடைய உணர்வுகள் நமக்கு அதிகமாகக் கிடைக்கும்.

இதற்காக வேண்டி மணிக் கணக்கில் உட்கார்ந்து ஜெபமிருந்து… “சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்வேன்” என்ற நாள் கணக்கில் அமர்வது அல்ல.

இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் எப்பொழுது… எது… எதிர் கொண்டு
1.நம்மைக் கடுமையான எண்ணங்கள் கொண்டு தாக்குகின்றதோ அப்பொழுது
2.நாம் எடுத்துக் கொண்ட தியானத்தின் வலுக் கொண்டு
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன் என்ற வலுவைக் கூட்ட வேண்டும்.

காரணம் கோபம் வந்து விட்டால் இப்படி ஆகி விட்டதே…! என்று வேக உணர்வு நம்மை இயக்குகிறது. “அதே உணர்ச்சியைத் தூண்டி” அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உணர்வைக் கூட்டுங்கள்.

ஏனென்றால் காரத்தின் உணர்வு நமக்குள் கோபத்தை உண்டாக்கப்படும் பொழுது
1.ஈஸ்வரா…! என்று இந்த வேகத்தைக் கூட்டுங்கள்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
3.இந்த உணர்ச்சி அந்த உயர்ந்த சக்தியை எடுக்க உதவும்.

மற்றவர் திட்டிய உணர்வுகள் உணர்ச்சியைத் தூண்டிய உடனே துருவ நட்சத்திரத்தின் பால் நம் எண்ணங்களைச் செலுத்தப்படும் பொழுது அதை வேகமாக இழுத்துக் கோபத்தை “டபக்…” என்று அடக்கி உங்களுக்குள் ஞானத்தைச் செயலாக்கும் நிலைகள் வரும்.

எங்கிருந்து அந்தக் கோபத்தை யார் தோற்றுவிக்கின்றார்களோ உங்கள் சொல்லாலே சொல்லும் போது அங்கேயும் அடங்கும். இதை நீங்கள் அனுபவத்திலே தெளிவாகப் பார்க்கலாம்.

ஆகவே மனிதனாக உருப்பெற்ற இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடாத நிலைகள் கொண்டு
1.ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காக்க உங்கள் எண்ணத்தைத் துருவ நட்சத்திரத்தின் பால் வலுக் கூட்டுங்கள்.
2.அதற்கு எம்முடைய இந்த உபதேசத்தின் வாக்கினை நீங்கள் பதிவாக எடுத்துக் கொள்ளுங்கள்.