செல்வம் நம்மைக் காப்பதில்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா…?

செல்வம் நம்மைக் காப்பதில்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா…?

 

வேதனை வெறுப்பு என்ற உணர்வுகளை நாம் எண்ணினால் அதற்குத் தக்க உடலுக்குள் அணுக்கள் உருவாகின்றது. மீண்டும் எண்ணும் பொழுது அதனுடைய இனத்தைப் பெருக்குகின்றது.

அது அனைத்தும் பெருகிவிட்டால் நல்ல குணங்களை இழக்கச் செய்கின்றது.
1.வேதனை அதிகமாகும் பொழுது உடல் சுருங்குகின்றது… எண்ணங்களும் சுருங்குகின்றது.
2.இந்த உடலையே மாற்றி அமைக்கும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் மனிதனல்லாத உடலைத் தான் பெறச் செய்கின்றது.

கோடிச் செல்வம் இருப்பினும் நமக்குள் நாடி வருவது எதுவும் இல்லை. கோடிச் செல்வம் இருப்பினும் அதனால் நாடி வருவது எது…?
1.தீமை என்ற நிலையில் செல்வத்தைக் காத்திடும் அச்சமும் பயமும் வருகின்றது.
3.அதைக் காத்திடும் நினைவு வரப்படும் பொழுது காக்கும் உணர்வே வருகின்றது.
3.அதனால் வேதனை என்ற உணர்வும் தோன்றுகின்றது.
4.வெறுப்பை ஊட்டும் உணர்வுகள் பெருகுகின்றது.
5.நம் உடலுக்குள் அந்தச் செல்வமே நமக்கு எதிரியாகிறது.
6.செல்வம் நம்மைக் காப்பதில்லை. மனித உருவைச் சீர்குலைக்கும் ஆசையை ஊட்டுகின்றது.
7.பிறர் துன்பப்படுவதைக் கண்டு ரசிக்கச் செய்கின்றது… தனக்கு எதிரி என்ற நிலைகள் பணம் கொண்டு கொலை செய்யச் சொல்கிறது.

துன்பப்படும் பொழுது அவன் சாபமிடுகின்றான். எனக்கு இவ்வாறு செய்கின்றான் அவன் உருப்படுவானா…? என்ற சாப அலைகள் பாய்ந்தால் இந்தச் செல்வத்தினால் சாபத்தைத் தேடுகின்றான்.

அந்தச் சாபத்தினால் இவன் செல்வத்தைக் காக்கும் நிலையே அற்று விடுகின்றது.. இதைப் போன்ற கொடுமைகள் மனிதனை மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில்
1.தீமைகளை அகற்றும் உணர்வு பெற்றும் தீமைகளை வளர்த்திடும் உணர்வுகளே நமக்குள் வளர்ந்து
2.நம்மை அறியாதபடி அந்த இழி நிலை என்ற உணர்வுகளுக்கே செல்கின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நல்ல நிலை பெற வேண்டும். அதற்காகத்தான் பிறருடைய உணர்வுகள் தனக்குள் வளராது தடுக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அருள் செல்வமாக அழியாச் செல்வமாகச் சேர்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வது. நமக்குள் அறியாத புகுந்த தீமைகளை அது மாற்றி அமைக்கும்.

மனிதருக்குள் மனிதர் ஒன்று சேர்ந்த உணர்வுகள் ஒன்றாக இணைத்து கூட்டுத் தியான்ங்களின் மூலம்
1.உணர்வினை ஒலியாகப் பாய்ச்சப்படும் பொழுது செவி வழி உணர்வுகள் உடலுக்குள் செல்கின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் நிலை கொண்டு கண் வழி நுகர்கின்றது.
3.நமது ஆன்மாவாக மாற்றுகின்றது அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
4.உணர்வின் தன்மை உடலுக்குள் அனைவரது ஆதரவும் நமக்குக் கிடைக்கின்றது
5.அறியாத வந்த பகைமைகளை மாற்றிடவும் முடிகின்றது.

குரு வழியில் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் சீடர்களாக” நாம் அனைவரும் ஆவோம்

குரு வழியில் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் சீடர்களாக” நாம் அனைவரும் ஆவோம்

 

ஒருவர் திட்டினாலும் பேசினாலும் கவலையான நிலைகளாக இருந்தால் அதை எடுத்தால் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது. வேதனை வெறுப்பு கோபம் சலிப்பு சஞ்சலம் இது எல்லாம் உடலுக்குள் வந்தபின் இந்த உடலான கோயிலில் அசுத்தமாகின்றது… நோய்கள் ஆகின்றது பல வேதனைகள் ஆகின்றது.

1.”கூட்டுத் தியானத்தின் மூலம்” நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற உணர்வினைச் செவிகளிலே பாய்ச்சப்படும் பொழுது
3.நமது கண்கள் இந்தக் காற்றிலிருக்கக்கூடிய அந்த நல்ல உணர்வின் சத்தைக் கவருகின்றது நம் உயிரிலே படுகின்றது.
4.இந்த உணர்வுகள் அனைத்தும் இரத்தத்தில் கலக்கின்றது.

இந்தக் கூட்டு தியானத்தின் அமைப்பிலே இந்த உயர்ந்த உணர்வுகளைச் சேர்த்துப் பழகிக் கொண்டால்
1.உயிரான ஈசனுக்கும் இந்த அசுத்தம் சேர்வதில்லை.
2.இந்த உடலான கோவிலுக்குள் தீமைகள் புகாது தூய்மைப்படுத்துகின்றோம்.

ஒருவன் திட்டினான் என்றால் அவனை நாம் மீண்டும் எண்ணுகின்றோம். அப்போது புரையேறுகிறது. தொழிலில் எத்தனையோ இடைஞ்சல் ஆகிறது.

ஆனால் கூட்டுத் தியானத்தின் மூலம் அத்தனை பேரும் சேர்ந்து அந்த அருள் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளியைக் கிடைக்கச் செய்யக்கூடிய சந்தர்ப்பம் உருவாகின்றது.

எல்லோருடைய உடல்களிலும் அருள் உணர்வுகள் வளர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்… எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்… உடல் நலமாக இருக்க வேண்டும்… எங்கள் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும்… என்று
1.கூட்டு தியானங்களில் இதைப் போன்று எடுத்துக் கொண்டால்
2.உங்களுடைய வாக்கு எல்லோருக்குள்ளும் ஆழமாக இது பதிந்து நோய்களைப் போக்க முடியும்.
3.குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்களும் பெரிய மகானாக முடியும்
4.உங்களுடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க வேண்டும்.
5.நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உங்களை அறியாத சேர்ந்த துன்பங்களை அகற்றும்.

இதை நாம் வலுப்பெறச் செய்தல் வேண்டும்.

நாளைக்கு வரும் விஞ்ஞான உலகத்தால் காற்று மண்டலம் நச்சுத்தன்மை அடையும் பொழுது “அந்த விஷங்கள் நமக்குள் சேர்ந்து”
1.நமது சிந்தனையை அழித்துவிடக் கூடாது.
2.அருள் உணர்வுகளை அழித்துவிடக் கூடாது.
3.அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கும் வலிமை பெற வேண்டும்.

அதற்காகத்தான் இதைச் சொல்கின்றேன்… உங்களால் முடியும்.

நான் உங்களுக்குச் சொல்லும் பொழுது உடனே நல்லதாகின்றது. ஏன்..? நீங்கள் அடுத்தவர்களுக்குச் சொன்னால் அவர்களுக்கு நல்லதாக்க முடியும் அல்லவா.
1.அந்த அளவுக்கு நமக்குள் பெருக்கி விட்டால் காற்றிலிருக்கக்கூடிய தீமைகளை ஒதுக்கித் தள்ளிவிடலாம்.
2.நாட்டு மக்களைக் காக்கலாம் நல்லவர்களைக் காக்கலாம்.
3.நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை வளர்க்கலாம்… பகைமையற்ற வாழ்க்கை வாழலாம்.
4.உயிருடன் என்றும் ஒன்றிடலாம்… அகஸ்தியன் துருவ நட்சத்திரம் ஆனது போன்றது என்றும் நாம் வாழ முடியும்.
5.மனதை ஒன்றாக்கப்படும் பொழுது ஒளியின் சுடராக முடியும்.

குறுகிய காலமே நாம் வாழுகின்றோம். மனதை ஒன்றாகக் குவித்து நாம் வாழ வேண்டும் உடலில் அறியாது சேர்ந்த பகைமைகளை அகற்றிப் பண்பைக் காட்டி… அன்பைக் காட்டி.. அரவணைத்து… அருளைப் பெருக்க வேண்டும் என்று நமக்குள் செலுத்த வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அதைச் செயல்படுத்த வேண்டும்.

இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞானத்தினால் பரவப்பட்டுள்ள நச்சுத்தன்மைகளை நாம் அனைவரும் சேர்ந்து அகற்றுவோம். அருள் வழியில் வாழ்வோம்… அதை நாம் செயல்படுத்துவோம்.

ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணவுகளை நாம் பெறுவோம். அதுதான் நம்முடைய கடைசி எல்லை. இந்த உடலுக்குப் பின் அந்த எல்லையை அடைவோம்.

அந்த எல்லை எங்கு இருக்கின்றது…?
1.நம் உயிருடன் ஒன்றி அந்த உணர்வைக் கூட்டினால் அவனே நம்மை அழைத்துச் செல்கின்றான்.
2.ஒளியின் உடலாக நம்மை உருவாக்குகின்றான்.

இல்லை… எனக்குத் தீமை செய்கிறான் என்ற உணர்வை ஊட்டினால் தீமை செய்யும் உடலுக்குள்ளே உயிர் நம்மை அழைத்துச் சென்று விடும். ஆக நாம் எண்ணிய நிலைக்கொப்பத் தான் உயிர் அழைத்துச் செல்கின்றது.

ஆகவே நாம் அருள் வழியைப் பெறுவோம் பேரருளைக் கூட்டுவோம். யாம் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலிலே படரப்பட்டு நமது குருவின் உணர்வுகளை நீங்கள் பெற்று அகண்ட அண்டத்தையும் அறிந்துணரும் சக்தி பெறுவீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் வந்த இருண்ட நிலையை நீக்கி அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தியை நீங்கள் பெற்று அதை மகிழ்ந்து வாழும் உணர்வை உங்களுக்குள் ஊட்டி “உங்கள் பேச்சால் மூச்சால் உலக மக்களைத் தெளிந்து வாழும் மக்களாக வாழச் செய்யுங்கள்…”

1.இந்தக் காற்று மண்டலத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பரவச் செய்யுங்கள்.
2.நமது குரு அருளை உலக மக்களுக்குப் பெறச் செய்யுங்கள்… நீங்களும் அதைப் பெற்று வளருங்கள்.
3.நம் குரு வழியில் அவருடைய சீடர்களாக நாம் அனைவரும் ஆவோம்.
4.அவர் ஒளியின் தன்மை பெற்றார்… அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஒளியைக் கூட்டுவோம்.

நம் பேச்சும் மூச்சும் பிறருடைய இருளைப் போக்கட்டும்… மெய்ப்பொருளைக் காண்போம். இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைவோம். அந்த அருள் சக்தியைப் பெறுவோம்… அனைவரையும் பெறச் செய்வோம்… அருள் வாழ்க்கை வாழ்வோம்… மெய் வாழ்க்கை வாழ்வோம்.

மெய் உலகை உருவாக்குவோம்

மெய் உலகை உருவாக்குவோம்

 

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள்… நேரமாகிவிட்டது வீட்டுக்குச் செல்ல வேண்டும்… தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்று சிலருடைய எண்ணங்கள் இருந்தால்… உங்கள் எண்ணங்களைப் பல நிலை கொண்டு அலைய விட்டால்… இந்த அருள் உணர்வுகளைப் பெறுவது கடினமாகி விடுகின்றது.

ஆலயங்களுக்குச் செல்கிறோம் என்றால் மலர் பூஜை விளக்கு பூஜை என்று எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்துகின்றார்கள். அதைச் செய்ய நாள் கணக்கில் மணிக்கணக்கில் கூட உட்கார்ந்து இருக்கின்றோம்.

யாகங்கள் வேள்விகளைச் செய்தால் அங்கேயும் அமர்ந்து… தான் எந்த ஆசையில் போனோமோ “அவன் அதைக் கொடுப்பான்” என்று ஆர்வத்தில் உட்கார்ந்து இருக்கின்றோம்.

ஆனால் அந்த ஆசைகள் நிறைவேறவில்லை என்றால் தெய்வத்தையே பழித்திடும் நிலைகள் வருகின்றது. ஆக ஆசைக்கொப்பத் தான் நாம் அங்கெல்லாம் செல்கின்றோம்.

அவ்வாறு இல்லாதபடி
1.நமது ஆசை அனைவரும் நலம் பெற வேண்டும் என்றும்
2.அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும் என்றும்
3.என் பார்வை சொல் செயல் எல்லாம் அனைவரும் நலம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்று
4.உயிரான நெருப்பில் இந்த உணர்வின் அலைகளைப் பரப்பினால்
5.உண்மையான யாகம்… உயிரின் நிலைகள் கொண்டு அவ்வாறு உருவாக்கும் சக்திகள் தான்.

அதாவது எண்ணத்தின் உணர்வு கொண்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்ச்சிகளைப் பரப்புவதும்… அந்த உணர்வின் அணுக்களாக மாற்றுவதும்… சொல்லின் உணர்வுகள் அனைவருக்கும் பரவச் செய்து…
1.கண்ணின் நினைவாற்றல் கொண்டு யாரை எண்ணுகின்றோமோ அந்தச் சொல்லின் ஆற்றல் அங்கே ஊடுருவி
2.அவர்கள் நலம் பெற வேண்டும் உலக மக்கள் ஒன்றி வாழ வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணும் போது
3.நம் எண்ணத்தின் உணர்வுகள் கண்ணின் நினைவு கொண்டு அவர்கள் மேல் பாய்ச்சப்படுகின்றது.

அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது “அவருடைய தீமை நமக்குள் வராதபடி தடுக்க இது உதவும்…”

ஆகவே ஒவ்வொருவரும் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் வாழ்வோம். உலக மக்கள் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழத் தியானிப்போம். நமது பார்வையும் சொல்லும் செயலும் புனிதம் பெறுவோம். அனைவரையும் புனிதமாக்கும் உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.

உலக மக்கள் நலம் பெறத் தியானிப்போம். விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழும் அனைவரும் அந்த அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மெய்ஞான வாழ்க்கை பெற வேண்டும் என்று தியானிப்போம்.

உலக மக்கள் அனைவரும் இந்த மனித வாழ்க்கையிலேயே ஒளி என்ற உணர்வை உருவாக்கும் பிறவி இல்லாத நிலை என்ற நிலையை அனைவரும் அடைய வேண்டும் என்று தியானிப்போம்.

1.அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்றும்
2.அவரவர்கள் குடும்பத்தில் பற்றுடன் வாழ வேண்டும் என்றும்
3.எதிர்காலக் குழந்தைகள் மெய்ஞானத்தை வளர்க்க வேண்டும்… மெய் உலகை உருவாக்க வேண்டும் என்றும்
4.எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.

குரு வழியில் உருவாகிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு

குரு வழியில் உருவாகிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு

 

ஒரு கம்ப்யூட்டர் என்ற சாதனத்தில் எலக்ட்ரிக் என்ற அறிவின் தன்மை கொடுத்த பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு அது ஒரு ரூபத்தையே அமைத்துக் கொடுக்கின்றது.

இதைப் போன்று
1.நம் உயிர் உயிர் துடிக்கும் நிலையில் எலக்ட்ரிக்காக இயங்கினாலும்
2.நுகரும் உணர்வுகள் இணைந்த பின் பொறிகளைக் கிளப்பும் எலக்ட்ரானிக்காக (உணர்வுகள்) மாறுகின்றது.

அந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? விஞ்ஞான அறிவிற்கும் அன்று மெய் ஞானிகள் கண்டுணர்ந்ததற்கும் நுகர்ந்த உணர்வுகள் ரூபமாக எப்படிக் காட்சி தருகின்றது…? என்ற நிலையைக் காட்சியாகவே காட்டுகின்றார் குருநாதர்.

ஒரு உயிரினத்திலிருந்து (என்றோ வாழ்ந்து மடிந்த) வெளிப்பட்ட உணர்வினை நுகர்ந்தறியும் பொழுது… அதன் வாழ்க்கையும் அதன் உணர்வின் தன்மையையும் கம்ப்யூட்டரால் விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி அதிர்வுகளைக் கூட்டி… அது வாழ்ந்த காலங்களில் அதனுடைய இயக்கங்களும் உணவுக்காக அது தேடி அலைந்ததும் அதன் ரூபத்தையும் அதனின் குணத்தையும் விஞ்ஞானிகள் அறிகின்றார்கள்.

அதாவது…
1.எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன் இருப்பினும் பாறைகளுக்குள் மக்கிய உணர்வுகளும் அது ஆவியாகக் கலந்த பின்
2.அந்த ஆவியின் தன்மை அந்தப் பாறைகள் அமைந்த இடத்தில் எப்படிச் சுழல்கின்றது…? என்பதையும்
3.அந்த உணர்வைக் கவர்ந்து அது வாழ்ந்த காலங்களில் அதனுடைய உருவத்தைப் படமாக வரையப்பட்டு
4.அதனுடைய செயலாக்கங்களை விஞ்ஞான ரூபமாக இன்று காணுகின்றார்கள்.

இதைப் போன்று தான் நமது குருநாதர் அவர் வாழ்க்கையில்
1.அகண்ட அண்டத்தினை… அகஸ்தியன் கண்ட உணர்வினைக் கண்டுணர்ந்தார்
2.குரு தனக்குள் பெற்றதை நீ எவ்வாறு பெற வேண்டும்…? எதனை…? எவ்வாறு…? என்பதை எனக்கு (ஞானகுரு) அந்த வழியைக் காட்டி
3.செவி வழி ஓதி… உணர்ச்சிகளை உந்தச் செய்து… உணர்வினை அறியும்படி… நுகர்ந்தறியும் ஆற்றலை எனக்குக் கொடுக்கின்றார்.

நுகரும்போது உணர்ச்சியால் உடலில் அறிவதும் உணர்வின் தன்மை குவியும் பொழுது காட்சிகளாகத் தெரிவதும் இதைப் போன்று அறியும்படி செய்கின்றார்.
1.அதன் வழி அறிந்தேன்
2.அதனின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
3.அதை நீங்கள் ஏங்கிப் பெற்றால் அதற்குத் தக்கவாறு உங்களுக்குள் உருப்பெறும் தன்மையாக அது இணைகின்றது.

உணர்வுகள் குவிக்கப்படும் பொழுது அது காட்சியாகவும் தெரியும் கண் திறந்திருந்தாலும் சரி கண் மூடி இருந்தாலும் சரி உணர்வின் தன்மை அலைகளாக மாறும் தன்மை வரும்.

ஆக தெளிந்த மனம் கொண்டு கண்களை மூடினால் உணர்வின் தன்மை புற நிலை அடக்கி அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை உயிருக்குள் உணர்வின் தன்மை காட்சியாகவும் நாம் அறியும் உணர்வாகவும் உணர்வின் தன்மை குவித்து ரூபமாகக் காட்சிகளாகத் தெரிய வரும்.

குருநாதர் பெற்றார் எனக்குள் அதை எனக்குள் பெறும்படி உபதேசித்தார். எனக்குள் பதிவானது பதிவின் நிலைகள் அறிவாக இயக்கி அந்த இயக்கத்தின் தன்மை எனக்குள் உருவாக்கினேன்.

அதையும் நீங்கள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றேன். ஏனென்றால் ஒரு வித்து யாருக்கும் பசி தீர்க்காது.
1.அந்த உணர்வின் சத்தை எல்லோருடைய உணர்வுகளிலும் படரச் செய்து
2.அதை நீங்களும் வளர்த்துக் கொண்டால் நாம் அனைவரும் ஒன்றனை இணைத்து விடலாம்.

சிறு துளி என்ற நிலை வரப்படும் பொழுது புவிக்குள் அது இணைந்து விடுகின்றது. அதே சமயத்தில் சிறு துளி பெருவெள்ளம் என்பது போன்று
1.பலரும் பல உணர்வுகள் கொண்டு சிறு துளிகளாக இருப்பினும்
2.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் எண்ணங்களை இணைத்தால் பெரும் வெள்ளமாக மாறி
3.அரும் பெரும் சக்திகளை நாமும் பெறலாம்… நம்முள் வரும் தீமையான உணர்வுகளை அதை நீக்கவும் செய்யலாம்.

கூட்டமைப்பின் தன்மையில் நாம் உபதேசித்த உணர்வின் துணை கொண்டு கூட்டுத் தியானங்கள் மூலம் அந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அருள் ஒளியைப் பெருக்கவும் அது உதவும்.

அதைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் தெளிவாகக் கூறிக் கொண்டு வருகின்றேன் அதை எளிதில் கண்டுணர… இந்தப் பூமி என்பது பரம். உணர்வுகள் அனைத்தும் இந்தப் பரமான பரலோகத்தில் பரவி உள்ளது. நாம் அதை நுகர்ந்தறிந்தால் சிவலோகமாக மாற்றுகின்றது.

1.உயிரின் துணை கொண்டு அருள் உணர்வுகளைத் தனக்குள் இழுக்கப்படும் பொழுது ஒளி என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் ஊடுருவுகின்றது.
2.உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது
3.இரத்தங்களில் கலக்கின்றது… நாளடைவில் உறைகின்றது
4.உணர்வுகள் கருவாகின்றது கருவின் தன்மை அணுவாகின்றது
5.எதன் வழி கொண்டு அணுவானதோ அந்த உணர்வை அது உந்துகின்றது.
6.உணர்வை நுகரச் செய்கின்றது
7.நுகரும் தன்மை வரப்படும் பொழுது அருள் உணர்வுகள் நமது ஆன்மாவாக மாறுகின்றது
8.உயிரின் தன்மை வரப்படும் பொழுது உணர்ச்சியின் தன்மை அறிவென்ற நிலைகள் அறிகின்றோம்.
9.அந்த அறிவின் தன்மை கொண்டு நம் உடலில் அருள் ஒளியின் அணுக்கள் விளைகின்றது.
10.தீமைகளை நீக்கும் அரும்பெரும் சக்தியாக நாம் பெறுகின்றோம்

ஆகவே… இருளை அகற்றி மகிழ்ச்சி பெறும் தன்மை பெற்றிட்ட அருள் ஞானிகள் உணர்வுகளை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும். அதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

மனிதனின் வாழ்க்கையில் தன் தாயை மறந்தால் அவன் மனிதனே இல்லை

மனிதனின் வாழ்க்கையில் தன் தாயை மறந்தால் அவன் மனிதனே இல்லை

 

சிறு வயதிலே நாம் பல குறும்புத்தனங்கள் செய்கின்றோம்… தாய் என்ன செய்கின்றது…? தூக்கி நம்மை வெளியே எறிந்து விடுகின்றதா…? இல்லை.

அவன் எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும்… எதை எதையோ சொல்லி அவனை அரவணைத்து “இந்தடாக் கண்ணு அதைச் சாப்பிடுடா இதைச் செய்யிடா…! என்னடா இப்படிச் செய்கின்றாய்…?” என்று குழந்தையைக் கெஞ்சிப் பராமரித்து வருகின்றது.

ஆனால் வளர்ந்த பின் தன் தாய் ஏதாவது சொன்னால்… தாயைப் பார்த்து “நீ அறிவு கெட்டதனமாகப் பேசுகின்றாய்…” என்று தாயைப் பேசுபவர்கள் தான் பலர் உள்ளார்கள். தாயை மறக்கும் நிலையே வருகின்றது.

1.தாயை மறந்திடாது எண்ணத்தில் கொண்டு வந்தால்
2.அந்த அருள் எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும்.

ஒரு பித்துப் பிடித்த தாயாகவே இருந்தாலும் தன் குழந்தையை இன்னார் இந்த இடத்தில் அடித்து விட்டார்கள் என்று சொன்னால் போதும்.

பிள்ளை மீது கவனம் முழுமையாக இல்லை என்றாலும் “அடித்து விட்டார்கள்” என்று கேள்விப்பட்ட பின் உடனே பதறி அழுகும். ஆனால் அந்தப் பித்துப் பிடித்த தாயை ஒருவர் அடித்தால் அதனுடைய பிள்ளை இதைக் கேள்விப்பட்டு “கிரகம்…! அப்படித்தான் வேண்டும்” என்று சொல்லும்.

தாயைக் கவனித்துப் பார்ப்பார்களா…? என்றால் இல்லை. ஏனென்றால் இன்று மனிதனுடைய உணர்வுகள் அந்த வழிக்குச் சென்று விட்டது.

அன்று ஞானிகள் காட்டிய அருள் வழியில்
1.தாயை எந்த அளவிற்குப் போற்றித் துதிக்கின்றோமோ
2.அந்த உணர்வுகள் என்றும் உறுதுணையாக இருக்கும்.

நண்பனுக்குள் உதவி செய்வது போன்று பின் தாயின் உணர்வுகள் நமக்கு உதவுகிறது. தாயை எண்ணி ஏங்கினால் அந்த உணர்வுகள் நம்மைப் பாதுகாக்கும்.

ஒரு காரியமே நடக்கவில்லை என்றால்
1.அம்மா…! என்று ஏங்கித் தாயினுடைய அருளைப் பெற்று
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். உடனடியாக அது கிடைக்கும்.

இதையெல்லாம் செயல் வடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மனிதன் என்ற முழுமை பெற வேண்டும் என்றால் இந்த நிலை அடைய வேண்டும். அதற்காக வேண்டித் தான் அம்மா அப்பாவை நினைவுபடுத்தி அக்காலத்தில் வணங்கும்படி செய்தார்கள் “விநாயகர் ஆலயத்தில்…”

இதை வினையாக்க வேண்டும் அருள் உணர்வுகளை கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.

நம் பாட்டன் பாட்டி… அந்தக் குல வழியில் தான் நாம் மனிதனாகப் பிறந்து இருக்கின்றோம். அவர்கள் உடலை விட்டுச் சென்றிருந்தால்
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளி பெறும் சரீரம் பெற வேண்டும். பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் ஈஸ்வரா என்று
3.காலை துருவ தியான நேரத்திலே அவர்களை எண்ணி விண் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் ஒளியின் சரீரம் ஆகின்றார்கள். சப்தரிஷியுடன் ரிஷியாகின்றார்கள். அவர்கள் உணர்வு நமக்குள் இருக்கின்றது மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் உடனடியாக அந்தச் சக்தி இங்கே கிடைக்கும்.

இதை வளர்த்துக் கொண்டால் நாம் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம்முடைய உயிரான்மா அந்தச் சப்தரிஷி மண்டல எல்லைக்குச் செல்லும்.

எம்முடைய உபதேசங்கள் அனைத்தையும் கேட்டுப் பதிவாக்க வேண்டும்

எம்முடைய உபதேசங்கள் அனைத்தையும் கேட்டுப் பதிவாக்க வேண்டும்

 

எம்முடைய அருள் உரைகளைக் கேட்கும் அனைவரும் நீங்கள் இதை ஆழமாகப் பதிவு செய்து உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி அந்த மெய்ஞானியின் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து
1.என்றும் அழியா பெருவீடு பெருநிலை என்று ஒளிச்சரீரம் பெற்று
2.நீங்கள் இந்த வாழ்க்கையிலே இருள் சூழ்ந்த நஞ்சினை நீக்கி ஒளி பெறும் உணர்வின் தன்மை உங்கள் உடலிலே வளர்த்து
3.அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நூல் வடிவிலே உங்களுக்கு நினைவு கூறுகின்றோம்.

உபதேச வாயிலாகக் கொடுத்ததை எழுத்து வடிவில் கொண்டு வரும் பொழுது சொல் வடிவிற்கும் எழுத்து வடிவிற்கும் சில குறைபாடுகள் இருப்பதினால் யாமே இதை எழுத முடியாததால் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவரை வைத்து இதை எழுதுவதினால்
1.சிறிது மாற்றங்கள் குறைகள் இருந்தாலும்
2.அதை மீண்டும் நீங்கள் தியானிக்கும் பொழுது இதனின் உணர்வுகளை நீங்கள் நிறைவு பெறும் சக்தியாகப் பெறுகின்றீர்கள்.

ஆகவே அந்தக் குறைகளை எண்ணாது மீண்டும் மீண்டும் இதைப் படிக்கும் பொழுது இடைவெளியில் விடப்பட்ட சிறு குறைகளையும் அதை நீக்கக்கூடிய சக்தியாக உங்கள் உணர்வுக்குள் தோன்றி அதில் நிறைவு செய்யும் நிலையை நீங்கள் அடைகின்றீர்கள்.

1.நீங்கள் படிக்கும் பொழுது எத்தகைய குறை வந்தாலும் மீண்டும் இதைத் திரும்பத் திரும்பப் படிப்பீர்கள் என்றால்
2.அந்த அருள் மகரிஷியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து
3.எழுத்து வடிவில் வரும் குறைபாடுகளை நீக்கிவிட்டு மூலப்பொருளை நீங்கள் அறிந்துணர்ந்து
4.உண்மையை உங்களுக்குள் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது.

இந்த உணர்வோடு நீங்கள் படித்துப் பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் அந்த மகரிஷியின் அருள் சக்தியை சேர்த்துப் பாருங்கள்.

1.எழுத்து வடிவில் மாற்றங்கள் இருந்து உண்மைகள் மறைந்து இருந்தாலும்
2.அந்த உண்மைகளைத் தெளிந்திடும் சக்தியாக உங்களுக்குள் உணர்வதை நீங்கள் பார்க்கலாம்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழிப்படி விண்ணின் ஆற்றலை நீங்கள் பெற்று இந்த மண்ணின் ஆற்றலுக்குள் இருந்த தீமைகளை அகற்றி இந்த உணர்வின் சக்தியை ஒளியாக மாற்றி விண்ணின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்து என்றும் அழியா ஒளிச்சரீரமாக அதைப் பெறும் நிலையாக உங்களுக்குள் ஊட்டப்படுவது தான் இந்தத் தியானத்தின் அறவழிகள்.

ஆகவே இதைத் தெளிவாகத் தெரிந்து இதைக் கடைப்பிடித்து இந்த வாழ்க்கையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று அந்த உணர்வின் சக்தி ஒளியாக மாற்றும் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் நினைவலைகள் சென்று என்றுமே அந்த மகரிஷிகளின்ன் நினைவுடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றோம்.

தபோவனத்தில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட
1.அனைத்துப் புத்தகங்களையும் அனைத்து ஒலி நாடாக்களையும் அதில் வெளிப்பட்டுள்ள உபதேசங்களை நீங்கள் படித்து கேட்டு…
2.மேற்கூறியவாறு சக்தி பெற வேண்டும் என்று உங்களைச் சதா பிரார்த்திக்கின்றோம்.

கூட்டுத் தியானம் இருப்போம்… மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம். ஆத்ம சக்தி செய்வோம்… அன்றாட வாழ்க்கையில் வரும் நஞ்சினை வெல்வோம். மகரிஷிகளின் அருள் சக்தியால் இந்த மனித வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுவோம்.

பொன்னான இந்த மனிதச் சரீரத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுடன் வாழ்ந்து வளர்வோம்
1.நாம் பார்க்கும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று சதா பிரார்த்திப்போம்.
2.நாம் பார்க்கும் எல்லோரும் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும் என்று தியானிப்போம்.
3.தபோவன தியான மண்டபத்தில் நீங்கள் அமர்ந்து தியானித்தால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்குத் தான் நம் மனக் கதவைத் திறக்க வேண்டும்

உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்குத் தான் நம் மனக் கதவைத் திறக்க வேண்டும்

 

நாம் நண்பர்களாகப் பழகிய அல்லது குடும்பத்தில் பழகியவர்கள் உடலில் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அவருடைய உணர்வு நமக்குள் பதிவாகி இருப்பதால்
1.அதே நினைவு கொண்டு நாம் எண்ணினோம் என்றால்
2.அவர் உடலில் இருந்த உணர்வுகளும் நோய்களும் நினைத்தவர் உடலுக்குள் வருகின்றது.
3.இருள் சூழ்ந்த நிலையாகி விடுகிறது.

ஆனால் அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தப்படும் பொழுது ஒளியின் உடலாகின்றது. அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவான பின்
1.சப்தரிஷி மண்டலம் என்று எண்ணினாலே அந்தச் சக்திகள் நம் உடலுக்குள் புகுந்து தீமைகளை அகற்றி
2.நல் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் நல்ல குணங்களுக்கு நம் மனம் இடம் கொடுக்கின்றது.

ஏனென்றால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! ஒரு செடியில் எத்தகைய குணம் உண்டோ சுவை உண்டோ அதிலே விளைந்த வித்தினை நிலத்திலே போட்டால் அதைக் கவர்ந்து அதனுடைய சுவை அதனுடைய குணங்களை மீண்டும் காட்டுகின்றது.

இதைப் போல் தான் பிறிதொரு உடலில் விளைந்த நோயின் உணர்வுகள் அது வெளிப்படும் என்றால் “அது வித்து…” நாம் நுகர்ந்து நம் உடலில் பதிவாகி விட்டால் அவரைப் பற்றி எண்ணினால் அந்த நோயின் உணர்வே வரும்.

அதற்கு முன்பு அவர் நல்லதாக இருந்த நிலையை எண்ணும் பொழுது அடுத்து இப்படி ஆகிவிட்டாரே…! என்று தான் வரும். அப்போது அவருடைய முழுமை விஷத்தன்மை அடைவதால் நாம் எண்ணினோம் என்றால் அந்த விஷத்தின் உணர்வே நமக்குள் இயக்கப்பட்டு அவர் எப்படி வருத்தப்பட்டாரோ அதே வருத்தம் நமக்குள்ளும் வருகின்றது.

எத்தனை பேருடன் இப்படி பழகுகின்றோமோ வாழ்நாள் முடிவில் நோயின் தன்மை கொண்டு உடலை விட்டு வெளியேறும் போது அவர்கள் உணர்வுகளும் நமக்குள் உண்டு.
1.ஆக நோய் என்ற உணர்வுகள் கொண்டு பலவும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது
2.அவர்களுக்குள் விளைந்த தீமைகளை நமக்குள் வந்து சேருகின்றது.

இதையெல்லாம் நாம் மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1.சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்களை இணைக்கப்படும் பொழுது நஞ்சுகள் கரைக்கப்படுகின்றது.
2.அந்த எண்ணத்தை நமக்குள் செலுத்தப்படும் பொழுது நஞ்சை நீக்கும் உணர்வும் நல்ல சிந்திக்கும் தன்மையும் நமக்கு கிடைக்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு வெறும் அட்டையைக் கொடுக்கின்றார்கள். அந்த அட்டையை வைத்து அதில் சாவியைப் (PASSWORD) போட்டோம் என்றால் எந்த அட்டைக்கு எந்தச் சாவி என்று அதைப் பாய்ச்சி விடுகின்றனர்.

அதைச் சரியாகப் போட்டால் தான் திறக்கின்றது… இல்லையென்றால் திறப்பது இல்லை இதைப் போன்று பல விதமான உணர்வின் தன்மைகளை பிளாஸ்டிக் அட்டைகளிலேயே கொடுத்துத் திறக்கும்படி செய்கின்றார்கள்.

இதைப் போல
1.நாம் நமது உடலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால்
2.நமது எண்ணத்தின் திறவுகோலை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தும் பொழுது
3.அந்த அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு இருளை நீக்கி நல்வழி நடத்தச் செய்யும் நிலை வருகின்றது.

ஆகவே நாம் நம் மனதைத் திறக்க வேண்டியது உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்கு மட்டும் தான்…!

“எம்முடைய உபதேசங்களை” மீண்டும் மீண்டும் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும்

“எம்முடைய உபதேசங்களை” மீண்டும் மீண்டும் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும்

 

இப்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இவை அனைத்தையும்
1.நமது உயிர் ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… என்று அந்தக் குணங்களில் இயக்கும் அணுவாக நமக்குள் உருவாக்கி விடுகின்றது.
2.இவ்வாறு காலையிலிருந்து இரவு வரையிலும் சதாசிவமாக்கிக் கொண்டே உள்ளது நமது உயிர்.

நாம் காலையில் இருந்து இரவு வரையிலும் எத்தனையோ வேதனைகள் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பயம் ஆத்திரம் இதைப் போன்ற உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அவை அனைத்தையும் நமது உயிர் “ஓ…” என்று ஜீவணுவாக மாற்றி “ம்” என்று நமது உடலாக மாற்றி விடுகின்றது.

உதாரணமாக… செடி கொடியினில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றுகின்றோம். ஆனால் (முதலில் உருவான) அந்தச் செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

நிலத்தில் ஊன்றப்பட்ட அந்த வித்து நிலத்தின் துணை கொண்டு… சூரியனால் கவர்ந்து வைக்கப்பட்டுள்ள தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அதே செடியாக விளைந்து அதன் வித்தை மீண்டும் உருவாக்குகின்றது.

இப்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் பயம் அவசரம் ஆத்திரம் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தால்
1.எந்தெந்த மனிதனின் உடலிலிருந்து அந்த வேதனை உருவாகி வெளி வந்ததோ அதனை நாம் நுகரப்படும் பொழுது
2.அதே வேதனையை உருவாக்கும் அணுவாக நம் உடலுக்குள் உருவாகி விடுகின்றது.

இப்பொழுது ஒரு செடியில் விளைந்த வித்து எவ்வாறு தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அது தனது வித்தை உருவாக்குகின்றதோ… தன் இனத்தை உருவாக்குகின்றதோ அதே போல்
1.நம் உடலுக்குள் பிறர்படும் வேதனையோ அல்லது மற்றதையோ வேடிக்கை பார்த்தால்
2.அல்லது சாபமிடுவதைப் பார்த்தால் ஒருவர் வேதனைப்படுவதை உற்றுப் பார்த்தால்
3.அந்த உணர்வை நாம் நுகர்ந்து வேதனைப்படுகின்றார் என்று அறிகின்றோம்.

ஆனாலும் அத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்த பின் உயிர் அறியச் செய்கின்றது. அவை நம் இரத்தங்களில் கலந்து…
1.எந்த உடலில் அது உருவானதோ அதே அணுவின் தன்மை நமக்குள் உருவாக்கப்படும் பொழுது அதற்கு இரை தேவை.
2.எந்த மனித உடலில் இருந்து அது வெளி வந்ததோ அது காற்றில் உண்டு.
3.அப்பொழுது நம் உடலுக்குள் இருந்து அந்த உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது அதே உணர்வை நாம் நுகர்வோமென்றால்
4.நமக்குள் இதே போல் வேதனைப்படுவதும் வெறுப்படைவதும் சங்கடப்படுவதும் போன்ற நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

இவ்வாறு நமக்குள் வருவதிலிருந்து நாம் மீள்வதற்குத் தான் இப்பொழுது உங்களுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கச் செய்கின்றோம். அதைப் பெற வேண்டும் என்றால் யாம் கொடுக்கும் உபதேச உணர்வினைப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரமோ இப்புவியில் துருவ மகரிஷி அல்லது அகஸ்தியராக இருக்கும் பொழுது தீமைகளை வென்று வானை நோக்கி உணர்வுகளை நுகர்ந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

அதனின்று வருவதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நமது பூமியோ அதைத் துருவப் பகுதியில் கவர்ந்து நமது பூமிக்குள் கொண்டு வருகின்றது.

1.அதனை நீங்கள் நினைவு கூர்ந்து உங்களில் பதிவாக்கி நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெற முடியும்.
2.அப்போது நாம் கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்தத் தீமையின் அணுக்களை நமக்குள் வளராது தடுக்க உதவும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வுகளை நமக்குள் அந்த அணுக்களைப் பெருக்கவே நாம் தியானமிருக்கின்றோம்….
3.அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யவும் சொல்கிறோம்.

பூணூல்

பூணூல்

 

ஒருவன் நம்மைப் பழித்துப் பேசுகின்றான் என்றால் அந்தச் சமயத்தில் நம் உடலில் உள்ள குணங்களைக் காத்திட நாம் ஆவேச நிலைகள் கொண்டு தான் செயல்படுவோம்.

அப்போது… “நாம் எண்ணிய நிலைகள் கொண்டு தான் உயிரே இயக்குகின்றது” என்ற இந்த நிலையின் தத்துவத்தைத் தெளிந்து உணர்த்துவதற்கே வசிஷ்டாத்வைதம் என்ற நிலைகளை வியாசகன் பிரித்து உடலின் உறுப்புக்குள் இயக்கும் நிலைகளை உணர்த்தினான்.

1.மகரிஷிகளால் உணர்ந்து ஒளியின் சரீரம் பெற்றதை… வியாசகன் கண்டுணர்ந்த இந்தத் தத்துவத்தைத் தான்
2.தனக்குள் அதை ஆதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில்
3.“ஆவணி அவிட்டம்” என்றும் அந்த நாளில் “பூணூல் போடுவது” என்று காட்டினார்.

நமக்குள் எத்தனை நிலைகள் வந்தாலும் அதிலிருந்து தன்னைக் காத்திடல் வேண்டும். உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இதை உணர்த்திய மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்று தான் “வசிஷ்டாத்வைதத்தை” வியாசகன் காட்டிணார்.

நம் உடலுக்குள் அனைத்து நிலைகளும் இருப்பினும்
1.அந்த ரிஷிகளுக்குள் தீமைகள் அடங்கியது போல…
2.அத்தகைய அடக்கி ஆட்சி புரியும் நிலைகளைப் பெறும் நன்னாளாக எண்ணுவது தான் “பூணூல் பூட்டும் நாள்…”

சாஸ்திர விதிப்படி பூணூலை அணிந்து கொண்டு என் மதம் என் இனம் என்ற நிலைகளில் எங்கள் இனத்திற்காக நாங்கள் அதை அணிந்து அந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்று ஒரு சாரார் அவரவர்கள் விதிப் பிரகாரம் அதைச் செயல்படுத்துகின்றார்கள். அன்று இதைச் செய்து சாஸ்திரீகம் சாங்கியம் என்பதைப் பின்பற்றுகின்றனர்.

1.வசிஷ்டாத்வைதம் என்ற நிலையினை நமக்குள் ஆதாரமாக அமைத்து
2.எப்படி இந்த இரு நூலின் தன்மை வலுக்கொண்டதாக மாற்றுகின்றதோ இதைப் போல நமக்குள் இணைந்திருக்கும் நிலைகள் கொண்டு
3.ரிஷியின் தன்மையாக உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றும் இணைக்கும் தன்மையாக
4.நமக்குள் புறநிலைகளிலே ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து விலகிச் செல்லும் நிலையைத் தான் உணர்த்தப்பட்டது.

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் தன்னை அறியாது தன் சந்தர்ப்பத்தால் மெய் உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளைத் தனக்குள் கண்டுணர்ந்து அவனின் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றான்.
1.அவனைப் பின்பற்றி அவன் ஒளியான நிலைகளை வெளிப்படுத்தியதுதான்
2.இந்த 4000 ஆண்டுகளுக்குள் வியாசகரால் சந்தர்ப்பத்தால் விண்ணுலக ஆற்றலை அறியும் ஆற்றல் வருகின்றது.

காரணம் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை அறிந்தாலும் அதைச் சந்தர்ப்பத்தால் அறிந்துணர்ந்த வியாசகரால் சாதாரண மக்களும் எட்டும் அளவிற்கு அவன் கண்டறிந்த நிலைகளை வெளிப்படுத்தினான்.

வெளிப்படுத்தினாலும் அரும்பெரும் சக்திகளைத் தனக்குள் எவ்வாறு பருக வேண்டும் என்ற நிலைகளை மறந்து ஐதீகம் என்ற நிலையில் மாற்றப்பட்டதே தவிர ஐதீகம் என்று சாஸ்திர விதிகளைத் தான் பின்பற்றும் நிலை வந்தது. ஐதீகத்தை எடுத்துக் கொண்டால் சாங்கியம் சடங்குகள் என்று புறநிலைகளுக்குத் தான் வருகின்றது.

அகநிலைகளைக் கூட்டும் நிலைகள் இல்லை.

1.அந்த ஆற்றல்மிக்க அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தியை நமக்குள் உள் செலுத்தி அதனைப் பூணூல் ஆக அதனின் நிலையே நமக்குள் அடக்கி
2.வசிஷ்டாத்வைதத்தை நமக்குள் நம்முடைய நிலைகளுக்குள் அடங்கி நடக்க வேண்டும் என்ற நிலையும்
3.அதனை ராஜரிஷி என்ற நிலைகள் மற்றவர்கள் ஒடுங்குவது போல அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எடுத்து
4.நமக்குள் அகங்காரமோ பாசமோ மற்ற நிலைகள் தீமையை விளைவிக்கும் நிலைகளில் இருந்து மீட்டி
5.உயிருடன் ஒன்றிய இந்த ராஜ நீதியை அன்று உணர்த்தினான் வியாசகன்.

அதனின் வழிகளை நாம் பின்பற்றிச் செல்வோம்.

நன்மைகள் பல செய்யத் துணிவோம்

நன்மைகள் பல செய்யத் துணிவோம்

 

உலகில் பக்தி மார்க்கங்களில் எத்தனையோ தவறுகள் செய்து வருகின்றனர். அகண்ட அண்டமும் இந்தப் பிரபஞ்சமும் இந்த உடலும் எப்படி உருவானது…? என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் அறியாமையிலிருந்து அவர்களை விடுபடச் செய்ய முடியும்..

ஒருத்தர் இங்கிருந்து போகிறார் என்றால் அங்கே சாக்கடையாக இருக்கின்றது…! என்று சொல்கின்றோம். அந்தச் சாக்கடையில் அவர் விழுகாமல் இருப்பதற்காகச் சொல்கின்றோம்.

ஒருத்தர் குளிக்கப் போகின்றார். இந்த இடத்தில் மடுகு இருக்கின்றது நீ விழுந்து விடாதே என்று சொல்வதற்கு நாம் தயங்கக் கூடாது. ஏனென்றால் அவன் அங்கே சென்றால் செத்துப் போய்விடுவான் என்று காப்பாற்றுவதற்காகக் கட்டாயப்படுத்தி நாம் இழுக்கின்றோம்.

சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான்… “போகட்டும்…!” என்று விடுவதற்கு மனது வருகின்றதா…?
1.அதே போல் நம்முடைய ஞானத்தால் மற்ற மக்களை அறியாமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு வரவேண்டும்.
2.அவன் அகராதி பிடித்தவன் என்று சொல்லக்கூடாது‌ அந்த உணர்வு நமக்குள் வந்து நம் நல்லதையே மாற்றிவிடும்.

அதே சமயத்தில் நம் வீட்டிலோ அல்லது மற்றவர்களோ சில சந்தர்ப்பங்களில் சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்… குறைபாடுகள் வந்துவிடும்.

அந்த அறியாமை என்னும் இருளிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்ற வகையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று அவர்களுக்கு நாம் பாய்ச்ச வேண்டும்.

அவர்கள் செய்யக்கூடிய செயல்கள் நமக்குள் முதலில் இயங்கிவிடக் கூடாது. முன்னால் தடுத்துப் பழக வேண்டும் இல்லை என்றால் அவர்களுடைய தவறு செய்யும் உணர்வு நம்மையும் தவறு செய்பவர்களாக மாற்றுகின்றது.

இப்பொழுது நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…?
1.நான் சொல்லிப் பார்த்தேன் முடியவில்லை என்றால்
2.அதைக் காட்டிலும் நாம் கடுமையான தவறுகளைச் செய்ய ஆரம்பித்து விடுவோம்.

வெறுப்பு வேதனை என்ற நிலைகளில் வரப்படும் பொழுது தேடிய செல்வத்தைக் கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லை. நல்ல ஒழுக்கங்கள் எல்லாம் போய் என்ன வாழ்க்கை…? என்ற இந்த உணர்வுகள் நம்மைத் தவறு செய்பவனாக மாற்றுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபட வேண்டும். இராமேஸ்வரத்தில் என்ன செய்கின்றோம்…? நாம் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் கோடிக்கரை. இப்பொழுது மனிதனாக ஆனபின் என்ன செய்கின்றோம்…? தனுஷ்கோடி.

அகஸ்தியன் என்ன செய்கின்றான்…? தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றினான்.
1.ஆக நமது வாழ்க்கையில் தீமையின் நிலைகள் வந்தால்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

இப்பொழுது நோயாளியைப் பார்த்து இரக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டதே என்று ஏங்கினால் சிவ தனுசு ஆகின்றது. அந்த உணர்வின் தன்மை நாம் இயக்கப்பட்டு அந்த நிலைக்குப் போனால் நாம் அடுத்த பிறவிக்குப் போகின்றோம். மனிதனல்லாத பிறவிக்குத் தான் போக வேண்டும். அவன் வேதனை எப்படிப் பெறுகின்றானோ அந்த உணர்வாகின்றது.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆன பிற்பாடு அந்த துருவ நட்சத்திரம் என்பது விஷ்ணு தனுசு.
1.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை அது ஒளியாக மாற்றும்.
2.நமது குருநாதர் காட்டிய வழியில் அதை நமக்குள் பெருக்கி எல்லோரையும் பெறச் செய்ய வேண்டும்.