“நீ செத்தால் தான் விடிவு காலம் வரும்…” என்று எண்ணிக் கொண்டிருந்தால் வரும் கடும் தீய விளைவுகள்

“நீ செத்தால் தான் விடிவு காலம் வரும்…” என்று எண்ணிக் கொண்டிருந்தால் வரும் கடும் தீய விளைவுகள்

 

குருநாதர் இட்ட கட்டளைப்படி யாம் திருத்தணியில் மலைக்குச் செல்லும் பொழுது… ஒருவர் எம்மைச் சந்தித்து… நான் ஒரு விவசாயி… இங்கிருந்து பத்தாவது மைலில் எங்கள் கிராமம் இருக்கிறது. என் மனைவிக்கு ஒன்றரை வருட காலமாக எழுந்து உட்காரவோ நடக்கவோ முடியவில்லை. என்ன நோய் என்று தெரியவில்லை…? எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படவில்லை…! என்ன செய்வது…? என்றும் தெரியவில்லை என்று கூறினார்.

சாமி… நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து “என் மனைவியின் நோயைப் போக்கி நடக்க வைக்க வேண்டும்…” என்று கண்களில் நீர் ததும்ப எம்மை ஊருக்குக் கூப்பிட்டார்.

யாம் இங்கு தியானத்திலிருந்து விட்டு அதன் பிறகுதான் எங்கும் வரமுடியும் என்றோம்.

தாங்கள் எப்படிச் சொல்கிறீர்களோ அதுவரைக்கும் இங்கேயே இருந்து தங்களை அழைத்துக் கொண்டு போகிறோம் என்றார் அவர்.

விவசாயியைக் கூட்டிக் கொண்டு திருத்தணி மலைமீது ஏறிச் சென்றேன். குருதேவர் கூறிய இடத்தை அடைந்தவுடன் அவரை நான்கு நாள் கழித்து வரும்படிச் சொல்லிவிட்டுk குருதேவர் குறிப்பிட்ட இடத்தில் தியானத்தில் அமர்ந்து கொண்டேன். யாம் இங்கிருக்கிறோம் என்று ஊரில் யாரிடமும் தெரியப்படுத்தக் கூடாது என்று சொல்லி அனுப்பிவிட்டோம்.

யாம் தியானத்தில் இருந்த நான்கு நாள்களிலும், பல நிலைகள் காட்சிகளாகத் தெரிந்து கொண்டிருந்தன. யாம் காட்சிகளாகப் பார்த்த பல நிலைகளுக்கும் குருதேவர் விளக்கி உபதேசித்து அருளிவிட்டு, நாளை வரும் விவசாயியின் ஊருக்குச் செல்லும்படிக் கூறிவிட்டு மறைந்து விட்டார்.

நான்காம் நாள் யாம் இருக்கும் இடத்திற்கு விவசாயி வந்து, என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். விவசாயின் மனைவி வாத நோயால் கை, கால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தார்.

அன்று இரவு தியானத்தில் அமர்ந்தேன். அந்த சமயம் காட்சியாக… விவசாயியின் தாயார் வாத நோயுடன் கை கால் வராமல் படுக்கையிலிருந்து கொண்டு வேதனையுடன் பல முறை மருமகளைக் (விவசாயின் மனைவியை) கூப்பிட்டார்கள்.

அப்பொழுது மருமகள்… “சனியன் தொலைய மாட்டேனென்கிறதே…” என்று முனங்கிக் கொண்டே மாமியாரைப் பார்க்க அருகில் வந்தார்.

“ஒரு பக்கமாக எனக்குக் கை கால்கள் வலிக்கின்றது… என்னை அந்தப் பக்கம் கொஞ்சம் புரட்டிவிடு…!” என்றார்கள்.

மருமகளோ… “நீ செத்தால்தான்… எனக்கு விடிவு காலம் வரும்” என்று சொல்லிக் கொண்டே வேண்டா வெறுப்புடன் மாமியாரை ஒரு பக்கமாகப் புரட்டிவிட்டார்.

இதைக் கண்டு மாமியார் வேதனையுடன்… “இப்படியெல்லாம் ஏசுகிறாயே முருகா…!” என்று சொல்லி வேதனையுடன் பெருமூச்சு விட்டார்கள்.

மருமகளுக்குக் கோபம் வந்து… என்ன…? இப்படியெல்லாம் பேசுகிறாய்…!” என்று ஏச மாமியாரும் வேதனையுடன் பேசினார்கள்.

1.மருமகள் கோபத்துடன் ஏசிய உணர்வலைகள் மாமியாரின் இரத்தத்தில் கலப்பது, காட்சியாகத் தெரிந்தது.
2.மாமியார் சாபமிட்டு ஏசிய உணர்வலைகள் மருமகள் உணர்வுகளில் உந்தப்பட்டு அவர் இரத்தத்தில் கலப்பதும் காட்சியாகத் தெரிந்தது.

மேற்கூறியவாறு… ஒருவருக்கொருவர் பல மாதங்களாக “நினைத்தும் ஏசியும் பேசிக் கொண்ட உணர்வலைகள்…” அதாவது,
1.மருமகள் மாமியாரை நினைத்து ஏசிய உணர்வலைகள் மாமியாரின் உடலில் வினைகளாக விளைகின்றன.
2.மாமியார் மருமகளை நினைத்துச் சாபமிட்டுப் பேசிய உணர்வலைகள் மருமகளின் உடலில் வினைகளாக விளைகின்றன.

கடைசியில்… வேதனை உணர்வுடன் “மருமகளை எண்ணியவாறே…” மாமியாரின் உயிராத்மா உடலைவிட்டுப் பிரிந்து சென்றது.

மாமியார் எப்பொழுது இறக்குமோ…? என்ற வேதனையுடன் ஏங்கி இருக்கும் நிலையில் “மாமியார் இறந்ததைப் பார்த்தவுடன்…” மாமியாரின் உயிராத்மா மருமகளின் சுவாசத்தின் ஈர்ப்புக்குச் சென்று இரத்தத்தில் கலந்து விடுகின்றது…!

சில நாட்களில்
1.மருமகளின் உடலில், மாமியாரின் உயிராத்மா இயங்கத் தொடங்கி
2.மாமியார் எந்த நோயால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்களோ,
3.அதே வேதனையை, மருமகளும் அனுபவிக்கத் தொடங்குகிறார்.

இவை எனக்குக் காட்சியாகத் தெரிந்து கொண்டிருக்கும் சமயம். குருதேவர் காட்சி கொடுத்து… இதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்…? என்று கேட்டுவிட்டு அதற்குச் சில வழிமுறைகளை உணர்த்தி, உபதேசித்தார்கள். பிறகு தியானத்தைக் கலைத்துவிட்டேன்.

விவசாயின் மனைவியிடம் நீங்களும் உங்கள் மாமியாரும் அடிக்கடிக் கோபித்துக் கொள்வீர்களா…? என்று கேட்டேன்.

ஆம்…! என்று ஒப்புக் கொண்டார்கள்.

யாம் சொல்கிறபடிச் செய்தால் நோய் தீரும் என்றதும் தாங்கள் எப்படிச் செய்யச் சொல்கின்றீர்களோ அதன்படி நாங்கள் செய்கிறோம் என்றார்கள்.

விவசாயின் குடும்பத்தில் உள்ள, அனைவரையும் தியானத்தில் அமரச் செய்தேன்., தியானமிருந்து, கண்களைத் திறந்தவுடன்…
1.விவசாயின் தாயாரின் பெயரைச் சொல்லி…
2.அந்த உயிராத்மா மகரிஷிகளின் அருள் ஒளியால் புனிதம் பெற வேண்டும் என்று
3.குடும்பத்தில் உள்ள அனைவரையும் குருதேவர் உணர்த்திய வழியில் சொல்ல வைத்தோம்.

இவ்வாறு, பத்து நாள்கள் தியானமிருந்து சொல்ல வைத்ததனால், விவசாயின் மனைவி 10 நாள்களில் மெள்ள மெள்ள எழுந்து நடக்கலானார்.

1.விவசாயின் குடும்பத்தில் அனைவரும் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள்.
2.விவசாயின் மனைவி “இனி நான் யாரையும் மனம் நோகும்படிப் பேச மாட்டேன்…!” என்று வேண்டிக் கொண்டார்.

தொடர்ந்து நீங்கள் தியானம் செய்தால் உங்களை அறியாது வரும், கோபம், குரோதம், பயம், நீங்கி… உங்கள் குடும்பத்தில் நலமும் வளமும் பெற்று வாழ்வீர்கள் என்று யாம் ஆசீர்வதித்தோம்.

குறைகளை வளர்த்தால் நமக்கு நாமே எதிரி ஆகின்றோம்

குறைகளை வளர்த்தால் நமக்கு நாமே எதிரி ஆகின்றோம்

 

1.பிறரிடம் குறை காணும் உணர்வுகளானது அதே குறைகளை நம்மிடத்திலும் உருவாக்கிவிடும்.
2.இந்த வகையில் நமக்கு எதிரி வேறு எங்கும் இல்லை… நாமேதான் நமக்கு எதிரி.

எல்லோரும் நல் நிலை பெற வேண்டும் என்ற உணர்வுகளை நம்மிடத்தில் வளர்க்கும் பொழுது நம்மிடத்திலும், நம்மைச் சார்ந்தவர்களிடத்திலும் நல் உணர்வுகள் விளைந்து நம்மையும் நம்மைச் சார்ந்தவரையும் உயர்ந்த நிலை பெறச் செய்யும்.

நாம் யாரிடமெல்லாம் பழகினோமோ அவர்கள் நம்மிடம் பகைமையாகப் பேசியிருந்தாலும் சரி அல்லது நல்ல நிலைகளில் பழகியிருந்தாலும் சரி அவர்களை எல்லாம் காலை துருவ தியானத்தின் பொழுது நாம் நமது நினைவிற்குக் கொண்டு வர வேண்டும்.

கொண்டு வந்து
1.அவர்களது குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
2.அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின் அவர்களது குடும்பங்களில் கணவனும், மனைவியும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும். வசிஷ்டரும் அருந்ததியும் போன்று அவர்கள் வாழ்ந்திட வேண்டும் நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்திட வேண்டும் சாவித்திரி போன்று, இரு உணர்வுகளும் ஒன்றிடல் வேண்டும் என்று இது போன்ற உணர்வுகளைக் கலந்தே நமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.

அதிகாலையில் இவ்வாறு அனைவரும் ஏகோபித்த நிலையில் செயல்படுத்தும் பொழுது
1.அனைவரது உடல்களிலும், பகைமை உணர்வுகளுக்கு இடம் இல்லாது அவை தடைப்பட்டுவிடும்.
2.இந்தப் பரமாத்மாவில் (காற்று மண்டலத்தில்) மகிழ்ந்து வாழும் அருள் உணர்வுகள் பெருகும்.

ஒரு புழு ஒரு விஷச் செடியைத் தனது உணவாக உட்கொண்டால் அதனின் உணர்வின் எண்ணங்கள் புழுவினுள் உருவாகிக் கொண்டிருக்கும்.

அந்தப் புழுவை ஒரு குருவி உணவாக உட்கொண்டிருந்தால் அதை உணவாக உட்கொள்ளும் அந்தக் குணத்தின் தன்மை கொண்டு அதை ஜீரணிக்கும் சக்தி அதனிடத்தில் இருக்கும்.

ஆனால் அதே புழுவின் உயிர் இந்த குருவியின் தன்மைக்கு வந்திருக்கும். இதைப் போன்று பல கலவைகள் கலந்தே நாம் வந்துள்ளோம்.

ஒன்றைக் கொல்கிறது… ஒன்றை வளர்க்கின்றது. ஒன்றுக்கு அது விஷத்தன்மையாக இருந்தாலும் விஷத்தை விஷத்தாலே தனக்குள் உணவாக எடுத்து, உட்கொள்கின்றது.

விஷச் செடியில் புழுக்கள் உருவாகின்றது, அதைக் குருவிகள் கொத்திச் சாப்பிடுகின்றன. புழுவின் உயிரான்மா குருவியின் உடலுக்குள் சென்று குருவியின் ரூபத்தை அடைகின்றது.

ஆனால் அந்த உணர்வின் தன்மை விஷத்தின் தன்மையை ஒடுக்கும் அணுவாக வருகின்றது பரிணாம வளர்ச்சியில்.

இன்று பிறிதொருவரிடம் எனக்குத் தொடர்பு இல்லை என்று ஒருவரும் இருக்க முடியாது.
1.யாரும் பிரிந்து தனியாக இல்லை.
2.ஒருவன் உங்களைச் சபித்து அதை உங்களிடம் பதிவாக்கி விட்டான் என்றால் அவனிடமிருந்து நீங்கள் விலக முடியாது.
3.நீங்கள் பிறிதொருவரைச் சபித்தால், நீங்களும் அவரிடம் இருந்து விலக முடியாது.

இதைப் போன்று நாம் ஒருவரோடு ஒருவர் பேசினாலும் அவர்களின் உணர்வுகளும் நமக்குள் உண்டு. இந்த உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகி உங்களை இணைத்துக் கொண்டிருக்கும். “பாவிப்பயல்… இப்படிச் செய்து விட்டான்…!” என்று உங்களை அவரிடத்தில் இணைத்துக் கொண்டே இருக்கும்.

நண்பர்களாக இருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் பொழுதும் இதனின் உணர்வுகள் பதிவாகி இருக்கும். இரண்டு பேரும் இணைந்துதான் இருக்கிறீர்கள்.

ஆக நன்மையின் நிலை வரும் பொழுது இரண்டு பேருக்குமே நன்மையாகி விடுகின்றது. இரண்டு பேரும் தீமை என்ற உணர்வை பதிவாக்கப்படும் பொழுதும் கூட இரண்டு பேர்களுடைய நிலையும் பிரிந்திருப்பதில்லை.

உங்கள் நண்பரின் நிலைகளில் எதை அதிகமாக உங்களில் பதிவாக்கி இருக்கின்றீர்களோ அதன் உணர்வுகள் உங்களிடத்தில் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

ஆக நாம் யாரையெல்லாம் பார்த்தோமோ பேசினோமோ அவர்களை எல்லாம் காலை துருவ தியானத்தில் எண்ணி
1.“அவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்,
3.அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்
4.மெய்ப் பொருள் காணும் சக்தி அவர்கள் பெற வேண்டும்” என்று எண்ணி இந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்.

மேலும் அவர்கள் குடும்பத்தில் கணவனும் மனைவியும் வசிஷ்டர் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழ்ந்திட வேண்டும். நளாயினி போன்று ஒருவரை ஒருவர் உயர்வாக மதித்து வாழ்ந்திட வேண்டும். சாவித்திரி போன்று இரு உணர்வுகளும் ஒன்றி வாழ்ந்திடல் வேண்டும்… என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

அவர்களுடைய குழந்தைகள் உலக ஞானம் பெற வேண்டும் அவர்களுடைய தொழில்களும் நன்றாக இருக்க வேண்டும்…” என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி தியானித்து இந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்.

1.“அவர்கள் வளர்ச்சி பெற வேண்டும்” என்ற உணர்வுகள் நமக்குள் விளையும் பொழுது
2.நமக்குள் அந்த நிலைகள் தானாகவே வளரும் தன்மை பெற்று வளர்ச்சி அடைகின்றது.

நாம் சந்தித்தவர்களின் உணர்வுகளும் நண்பர்களின் உணர்வுகளும் நமக்குள் பதிவாகிய நிலையில் “அவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்…” என்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்கப்படும் பொழுது
1.நம்மிடத்தில் உள்ள தீமை என்ற உணர்வுகள் மறைந்து விடுகின்றன.
2.அதே சமயத்தில் அவர்களும் அவ்வண்ணமே உயர்ந்த நிலைகளைப் பெறுகின்றார்கள்.

யாம் உபதேசித்து, உங்களிடம் பதிவாக்கிய, அருள் வாக்கினை நீங்கள் நினைவுபடுத்தும் பொழுது இந்த உணர்வுகள் உங்களுக்கு நல்வழி காட்டும். அது உங்களில் அஞ்ஞான இருளை அகற்றி மெய்ப்பொருளை அறிந்திடும் நிலையைப் பெறச் செய்யும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் உங்களில் பெருகித் தீய உணர்வுகளுக்கு உங்களிடத்தில் இடமில்லாது “உங்களில் எப்பொழுதும் மகிழ்ச்சியான உணர்வுகளும் நல்மனமும் பெருகி வளர்வதற்கு எமது அருளாசிகள்…”

அரசர்கள் நமக்குள் உருவாக்கி வைத்துள்ள கலாச்சாரத்திலிருந்து நாம் மாற வேண்டும்

அரசர்கள் நமக்குள் உருவாக்கி வைத்துள்ள கலாச்சாரத்திலிருந்து நாம் மாற வேண்டும்

 

காலம் காலமாக… கலாச்சார அடிப்படையில் இயக்கிய உணர்வுகள் நமக்குள் (உடலுக்குள்) செல்கள் ஏராளமாக விளைந்திருக்கின்றது. நம் தாய் தந்தையரிடமிருந்து… மூதாதையர்களிடமிருந்து… வளர்த்துக் கொண்ட அணு செல்கள் கலாச்சாரத்தில் மாறி உள்ளது.

கலாச்சார அடிப்படையில் மதங்களை உருவாக்கினாலும்
1.மதங்கள் மாறிய கலாச்சாரத்தில் பாருங்கள்… அதுவும் தொன்று தொட்டு ஊடே வந்து கொண்டேயிருக்கும்.
2.இந்தக் கலாச்சாரமும் ஊடே ஊடுருவியே இருக்கும்… இதை “மதங்களுக்குள் இனங்கள்…” என்று சொல்லலாம்.

கராச்சியை (பாகிஸ்தான்) எடுத்துக் கொண்டால்… முஸ்லிம் மதமாக இருந்தாலும் கலாச்சார நிலைகள் அங்கே வலுப்பெறும் போது எதிரியாகின்றது.
1.போர் முறையினால் அங்கே கலாச்சாரமே தன்னையும் வளர்க்க முடியவில்லை… பெருக்கிக் கொள்ளவும் முடியவில்லை.
2.தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மற்றவரை எதிரியாகக் கருதி வீழ்த்தத் தான் செய்கின்றது. ஒன்றுக்கொன்று
3.இன்றும் அங்கே போர் செய்வதால் தன்னையும் அது வீழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது.

அதே கலாச்சாரம் தான் மதம் இனம் என்ற நிலையில் தன்னை வளர்ப்பதற்காக வேண்டிப் போர் முறைகளாகி… மனிதன் அன்றைய அரசன் வழிகளில் தேய்பிறையாகவே உலகமெங்கும் இன்றும் வந்து கொண்டிருக்கின்றது.

அதிலிருந்து மீள்வதற்குத் தான் மகரிஷிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

விண்டார் கண்டதில்லை… கண்டார் விண்டதில்லை…! அந்தப் பழமொழிக்கொப்ப மகரிஷிகள் ஞானிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்டார்கள். வளர்த்துக் கொண்டது “அறிவின் ஒளியாக…” மாறிக் கொண்டே போகின்றது.

ஆனால் காட்சிகளாக எத்தனையோ பார்க்கின்றோம், தியான ஆரம்பத்தில் நிறைய பேருக்குக் காட்சியும் யாம் கொடுத்துக் கொண்டு வந்தோம். அந்தக் காட்சியின் பெருமையைத் தான் அவர்களால் காண முடிகின்றதே தவிர காட்சிகளுக்குண்டான உண்மையைப் பார்க்க முடியவில்லை.
1.நம்முடைய உணர்வின் கிளர்ச்சிகள் எந்த அளவுக்கு இருக்கின்றதோ
2.”அதே தொடர்பு கொண்ட அலைவரிசையில்…” மனிதனில் விளைய வைத்த அலைகளை அது இழுக்கும்.

குளவி தன் உணர்வைப் புழுவின் மீது பாய்ச்சும் போது அந்தக் குளவியின் உணர்வலைகள் வரும் அதே அலைவரிசையில் தான் காட்சியாக அது இழுத்துப் புழுவின் உடலில் விளைகின்றது… குளவியைப் பற்றிய காட்சிகளைப் புழு எடுத்துத்தான் அதுவும் குளவியாக மாறுகிறது.

ஏனென்றால் சில பேர் “தியானத்தில்… காட்சி…காட்சி…” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அந்தக் காட்சியை… எதன் அடிப்படையில் நாம் பார்க்கின்றோமோ அதன் நினைவாக அது வரும்.

நாம் எந்தெந்தப் பக்தியில் தெய்வத்தின்பால் பற்று கொண்டுள்ளோமோ இந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருக்கின்றது.

அதாவது… எந்தெந்த ஒலிகளை நமக்குள் பரப்பி இருக்கின்றார்களோ நாதங்கள் சுருதிகள் வாத்திய இசை மலர்களின் மணங்கள் சோம பானம் இது போன்ற உணர்வு எல்லாம் கலந்து தான் அந்த ஒரு இசையாக அமைத்து அந்த உணர்வுகளைப் பதிவு செய்கின்றனர் “கடவுளாக…!”

எல்லா மதங்களிலும் இப்படித்தான் செய்கின்றார்கள். வெறும் சொல்லாக இருக்கலாம். உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பலாம் அதனுடைய நிலைக்கு அது காட்சியாக வரும்.

ஆனால் யாம் இப்பொழுது
1.உங்கள் அணுக்களில் குருநாதருடைய உணர்வுகளையும் அவர் கண்டுணர்ந்த உணர்வுகளையும் இணைத்து
2.அந்த உணர்வை உங்களுக்குள் வளர்க்கச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே தொடர்ந்து கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
3.இதை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களுக்குள் அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் நல்ல வளர்ச்சி அடைவதற்குச் சரியாக இருக்கும்.

குளவி புழுவைத் தன் இனமாக மாற்றுவது போல் தான் இயற்கையின் செயலாக்கங்களும்

குளவி புழுவைத் தன் இனமாக மாற்றுவது போல் தான் இயற்கையின் செயலாக்கங்களும்

 

ஒரு குளவி ஒரு புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து அதைத் தன் இனமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றது.

இன விருத்திக்கான உமிழ் நீரைச் சுரக்கும் பொழுது அதை மண்ணிலே போட்டுப் பிசைகின்றது. மண்ணிலே போட்டுப் பிசையும் பொழுது ஒரு நிறம் இருக்கிறதென்றால் தனக்குகந்த மண்ணை எடுத்துச் சுண்ணாம்பினால் அதைக் கலந்து எடுத்துக் கொண்டு வருகின்றது.

அதிலே இருக்கக்கூடிய காந்தப் புலனறிவிலே தன் உமிழ் நீரைப் பாய்ச்சுகின்றது. பாய்ச்சி உருண்டையை எடுத்து வந்து கூடாகக் கட்டுகின்றது. அதற்குள் புழுவைக் கொண்டு வந்து அடைக்கிறது.

1.தன் இனவிருத்தியின் உணர்வின் நோக்கம் கொண்டு புழுவைத் தாக்குகின்றது.
2.தாக்கியவுடன் புழுவின் உணர்வின் செல்கள் வெளியிலே போகாதபடி அது மறைத்து விடுகின்றது.
3.முதலில் கவசமாகக் கட்டி விடுகின்றது…. அதிலிலுள்ள விஷத்தின் தன்மை புழுவின் தோலைச் சருகாக மாற்றி விடுகின்றது.

அதற்கு அந்தச் சக்தி இருக்கின்றது.

அப்பொழுது புழுவின் உடலை உருவாக்கிய உயிரும்… உயிரால் உணர்வால் ஆக்கப்பட்ட, உடலுக்குண்டான அணுக்களிலும்… இந்த விஷத்தின் தன்மை பாய்ந்து விஷமாக ஆகின்றது.
1.விஷத்தன்மை பாய்ந்த நிலையில்
2.புழுவிற்கு அந்தக் குளவியின் நினைவாற்றல் தான் அதிகமாக வருகின்றது.
3.அந்த நினைவாற்றல் அதிகரிக்கப்படும் பொழுது உடல் சருகாகுகிறது.

மீண்டும் அந்தக் கூட்டின் மேலிருந்து குளவி “ரீங்கார ஒலிகளை” எழுப்புகின்றது.

அந்த உணர்வின் இயக்கமானபின்…
1.இதே நினைவலையில் அந்த உணர்வின் செல்கள் மாறி விடுகின்றது.
2.இந்தக் கூட்டின் வழியாக அந்த உமிழ் நீரைச் சேர்த்தபின்… அந்த ஒலி அலைகளைப் புழு எடுக்கின்றது.

உதாரணமாக… நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்கங்கள் பூமிக்குள் ஊடுருவி… அந்தக் காந்தப் புலனறிவு இயக்கும் காந்தம் அதிகமாகும் பொழுது… பூமியின் நடுவிட்டம் வரை ஊடுருவிச் செல்லும்.

ஊடுருவிச் செல்லும் பொழுது மரங்கள் மேல் தாக்கப்பட்டால் மரங்கள் கருகி விடுகின்றது. அப்படி ஊடுருவிப் பூமிக்குள் சென்றவுடனே, வெல்டிங் (welding) வைத்தால் எப்படி ஓட்டை ஆகின்றதோ அதே போல பாறைகளில் ஊடுருவி “அதற்குள் சில நுண்ணிய அலைகளைப் பாய்ச்சுகின்றது…”

அது தனக்குள் சேர்த்து…
1.மொத்தத்தில் வடித்துக் கொண்ட உணர்வுகளை ஆவியாக மாற்றும் பொழுது
2.அதன் வழி பூமிக்குள் பல மாற்றங்களைக் கொடுக்கின்றது.

பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத் தன்மையை நட்சத்திரங்கள் அது தனக்குள் உருவாக்கி… அது உமிழ்த்தும் அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டபின் அந்த அலைகளின் வீரியம் வருவதும்
1.நம் பூமியின் ஈர்ப்புக்குள் நுழைந்து கொண்டபின்
2.அது ஈர்த்து நடுமையத்தில் கொண்டு சேமித்துக் கொள்கின்றது.

அதைப் போல் நாம் சுவாசிக்கும் நிலைகள்… எந்தந்த உணர்வுகளை உடலுக்குள் பாய்ச்சினாலும்
1.உடலில் விளைந்த அந்த உணர்வுகள் எல்லாவற்றையும்
2.உயிரிடமே கொண்டு வந்து உயிராத்மாவாகச் சேர்த்து வைத்துக் கொள்கின்றது.

உயிரின் இயக்கங்களில் ஊடுருவி…
1.உணர்வின் அணுக்களைப் பெருக்கித் தன் நினைவுடன் இயக்கச் செய்து
2.தன்னுடன் ஒன்றச் செய்து ஒரே இயக்கமாகக் கொண்டு வருகின்றது.

இதற்கும் அதற்கும் (பூமிக்கும் உயிருக்கும்) உண்டான வித்தியாசத்தைக் காட்டுகின்றார் குருநாதர்.
எனக்குப் படிப்பறிவு இல்லாததால் “நேர்முகமாகவே…” இதையெல்லாம் காட்டுகின்றார். இந்த உணர்வின் இயக்கங்கள் பூமியின் நடுமையும் அடைவதை காட்டுகின்றார்.

ஆனால் நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் ஊடுருவும் பொழுது ஒவ்வொன்றையும் எப்படி இடைமறித்துக் கருக்கச் செய்கின்றது…? வெல்டிங் அடிக்கும் போது ஓட்டை விழுவது போன்று எப்படி ஆகின்றது…? என்று காட்டுகின்றார்.

மின்னல் தாக்கிய பின் மரங்கள் கருகின்றது. மின்னல் ஊடுருவி பூமிக்குள் செல்கின்றது. இப்படி… 27 நட்சத்திரங்கள் நிலைகள் அங்கே பூமிக்கடியில் ஒன்று சேர்த்துக் கொதிக்கலனாக மாறுகின்றது. அதிலிருந்து… கலவைகள் ஆவியாக மாறி தனது நிலைக்குப் பூமி மாற்றுகின்றது.

இதைப் போல் தான்
1.குளவியின் விஷத்தன்மை கூட்டிற்குள் அடைபட்ட புழுவின் உடலுக்குள் பாய்ந்து
2.அது தன்னுடைய வேகங்களை எடுத்து அணுக்களில் பட்ட பின்
3.புழுவின் உயிர் குளவியை எண்ணியே அதனின் உணர்வலைகளை எடுத்து
4.உடலின் செல்களை மாற்றிப் “புழு குளவியின் ரூபமாகின்றது…”

இது பரிணாம வளர்ச்சி.

அகண்ட அண்டத்தின் ஒளிர் ஞான தத்துவ அடக்கமே… “பேரருள் பேரொளி”

அகண்ட அண்டத்தின் ஒளிர் ஞான தத்துவ அடக்கமே… “பேரருள் பேரொளி”

 

(1) முடிவே இல்லாதது…!
1.ஒன்றுடன் ஒன்று மோதி 2.ஒன்றுடன் ஒன்று கலவையாகி உருவாகி
உருமாற்றமாகிக் கடைசியில் ஆவியாகி 3.மீண்டும் திடமாகி
மீண்டும் அதே சுழற்சி 1,2,3.. 1,2,3

(2) என்றுமே அழிவில்லாதது
1.விண்ணிலே தோன்றும் உயிர்
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிய மகரிஷிகள்

(3) நிலையானது…! (4) சத்தியமானது…!
ஆதிசக்தியின் இயக்கம்…! வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும் சேர்ந்து எதைக் கவர்கிறதோ அதனின் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே உள்ளது.

5) ஒளிர் ஞான தத்துவ அடக்கமே…! பேரருள் என்பது.
ஆதிசக்தியின் இயக்கத்தின் நோக்கமே அனைத்தையும் ஒளியாக ஒளிரச் செய்வது… ஒளியின் வளர்ப்பாக முதிர்வடையச் செய்வது தான். அது தான் பேரருள்.
அப்படிப் பேரருளாக முதிர்ந்து ஒளியாக ஒளிரச் செய்து ஒளியின் வளர்ப்பை வளர்க்கும் போது பேரொளியாகிறது. அவர்கள் தான் மகரிஷிகள். துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் போன்றவைகள்.

மேலே சொன்ன ஐந்தையும் உள்ளடக்கிய தத்துவம்

ஆதிசக்தியின் படைப்பின் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக ஆன பின் ஞானத்தின் வழித்தொடரைத் தனக்குள் விளைய வைத்து உடலை விட்டு அகன்றால்
1.பேரண்டத்தில் எத்தனை தீமையின் நிலைகள் நஞ்சாக இருப்பினும் தன்னை அணுகாது
2.அதை அடக்கிடும் நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக மாற்றிடும் நிலைகள் வருகின்றது.

அப்படி ஆனவர்கள்தான், இன்று எதனையும் பிளந்திடும் நிலைகள் பெற்றவர்கள், சப்தரிஷிகள்.
1.ஆக ஒவ்வொரு பூமியின் தொடர் கொண்டும் வாழுகின்றார்கள்
2.அந்தந்த பிரபஞ்சம் இறந்தாலும், இவர்கள் தனி மண்டலமாக இயக்கப்பட்டு
3.தீமையற்ற உலகை அவர்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏற்பட்ட இந்த மண்டலங்கள் வேறு வேறு விதமாக இருப்பினும்
1.உடல் பெற்ற உணர்வின் நிலைகளிலிருந்து
2.தீமைகளைப் பிளந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து
3.பெரும் மண்டலமாகத் திகழ்கின்றார்கள்.

இந்த அகண்ட பேரண்டத்தில், இப்பேர்ப்பட்ட மகரிஷிகளும் உண்டு. ஆக, மனிதனில் தெளிந்த நிலைகள் கொண்டு அது பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
1.மனிதர்களாகிய நாம் அனைவரும்
2.அதிலே இணைந்தால்தான் நல்லது.

முழுமையான விரிவாக்கம்

பேரண்டம், முதலிலே இருண்ட நிலைகளில் இருந்தது,
1.ஒன்றுடன் ஒன்று மோதி சுழற்சி வேகம் கொண்டு சூரியன்களாக விளைந்து நட்சத்திரங்களாக விளைந்து
2.அதிலே தோன்றிய கோள்களாக விளைந்து, உயிரணுக்களாக விளைந்தது.

உயிரணுக்கள் அதனின் நிலைகள் நுகர்ந்து நுகர்ந்து
1.உணர்வின் தன்மை உடல் பெற்று
2.எண்ணத்தின் நிலைகள் கொண்டு இயங்கத் தொடங்கும் நிலைகள் கொண்டு
3.தன்னைக் காத்திடும் காத்திடும் நிலைகள் கொண்டு வந்தது.

இப்படி இந்த உயிரின் நிலைகள் உடல்களைக் காத்திடும் நிலையாக வந்தாலும்,
1.இந்த உயிருடன் ஒன்றி
2.ஒளியின் சரீரமாகத் தன்னைக் காத்திடும் நிலைகளில் விளைந்தவர்கள் தான் மகரிஷிகள்.

ஆகவே அது அனைத்தும் நாம் பெற முடியும்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி விண்ணின் ஆற்றலைக் காண அதைப் பெறும் பாக்கியத்தை இன்று நாம் அனைவரும் பெற்றுள்ளோம்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

சாகாக்கலை பெரிதல்ல

சாகாக்கலை பெரிதல்ல

 

ஒரு சில வைத்தியர்கள்… ரசமணி போன்று செய்யக்கூடியவர்கள் என்னிடம் வந்து “சாகாக்கலை…” உங்களுக்குத் தெரியுமா…? என்று கேட்டார்கள்.

தெரியவில்லையே என்று சொன்னேன்…!

என்னங்க… நீங்கள் பெரிய சாமி ஆகி விட்டீர்கள்…? என்னென்னமோ சொல்கின்றீர்கள்…! எதை எதையோ சொல்கின்றீர்கள்…! சாகாமல் இருப்பதற்கு வழி உண்டா…? சாகாக்கலை உங்களுக்குத் தெரியுமா…?

பயங்கரமாக அவர் அடித்துப் பேசுகின்றார். பல பல மருந்துகளைப் பற்றிப் பேசுகிறார்.

பின்பு கடைசியில் அவரிடம் நான் சாகாக்கலை என்றால் உங்களுக்கு என்ன தெரியும்…? என்று கேட்டேன்.

என்ன நீங்கள் இப்படிக் கேட்கின்றீர்கள்…! உங்களுக்கு இந்த விவரமே தெரியவில்லை…! எனக்கு விவரம் தெரியவில்லை என்று அவர் பேசுகின்றார்.

மனித வாழ்க்கையில் எதை எதை எல்லாம் நீங்கள் உடலில் விளைய வைக்கின்றீர்களோ அது சாவதில்லை. இந்தக் கலைப்படி
1.ஒருவனைக் கொல்ல வேண்டும் கொல்ல வேண்டும் கொல்ல வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால்
2.அந்தக் கொல்லும் உணர்வு உங்களைக் கொல்லும்… இது சாகாக்கலையாக மாறும்.
3.அடுத்தாற்போல் மற்றதைக் கொன்று சாப்பிடக்கூடிய சாகாக்கலையாக மாறி
4.மற்றதை இம்சைப்படுத்திய உணவாக உட்கொள்ளும் உயிரினமாக உருவாக்கிவிடும்.

இதற்குப் பெயர் தான் சாகாக்கலை என்று சொன்னேன்.

அவர் உடனே என்னங்க…! இப்படி சொல்கின்றீர்கள்…! என்றார்.

வேகாநிலை…! மனிதனைத் தூக்கித் தீயிலே போட்டால் உயிர் வேகின்றதா…? வேகுவது இல்லை.

ஆனால்… இந்த உடலிலே எவ்வளவு காலம் வளர்த்துக் கொண்டது இருக்கின்றதோ அது அனைத்தும் “ஐய்யயோ… அம்மம்மா…!” என்று அலறுகின்றது. அந்த நேரத்தில் தன்னுடைய தாயை நினைத்தால் இந்த உயிரான்மா தாயின் உடலுக்குள் செல்கின்றது.

ஐயோ… அண்ணே…! என்று அந்த இட்த்தில் எதிரிலே கண்ணிலே படும் நண்பர்களையோ மற்றவர்களையோ எண்ணினால் இந்த உணர்வுகள் பதிவாகி “உடலெல்லாம் எரிகின்றதே… எரிகின்றதே… என்னைக் காப்பாற்றுங்கள்…” என்ற ஓலத்தை எழுப்பி
1.கண்ணில் இந்த உணர்வுகள் ஆழமாகப் பதிவாகி விட்டால்
2.உடலை விட்டுச் சென்ற பின் சாகாக்கலையாக அவர் உடலுக்குள் சென்று இயக்கத் தொடங்கும்.

உயிர் வேகுவது இல்லை. ஆனால் உடலும் உணர்வுகளும் கருகுகின்றது. இந்தக் கருகிய உணர்வுடன் இங்கே உருவாக்கிய நிலையை அந்த உடலுக்குள்ளும் சென்று
1.அடுத்து “அம்மம்மா… ஐயோ எரிகின்றதே… எரிகின்றதே…” என்று அவரும் சொல்லத் தொடங்குவார்.
2.சீக்கிரம் எதையாவது மேலே போட்டு அல்லது ஊற்றி அவரும் தீயை வைத்துத் தன்னை எரித்துக் கொள்வார். இதைப் பார்க்கலாம்.

ஆக எந்தெந்த உணர்வு கொண்டு இறக்கின்றார்களோ இன்னொரு உடலுக்குள் சென்றால் இதே வேலையை அங்கேயும் செய்யும்.

ஒருவர் ஹார்ட் அட்டாக்கினால் வேதனைப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு உதவி செய்த நண்பர்கள் யாரையாவது அவர் நினைவில் அதிகமாக வளர்த்திருந்தால்… இவர் இறந்தால் இது சாகக்கலையாக மாறி அந்த உடலுக்குள் சென்று விடும்.

அங்கே சென்ற சிறிது காலத்தில்
1.“நண்பர் இவ்வாறு ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார்…” என்று கேள்விப்பட்டபின் இதே உணர்வுகள் இயக்கி
2.அவருக்கும் இதே நோய் வந்து அதனால் இறந்து விடுவார்… இதற்குப் பெயர் சாகாக்கலை.

எதன் எதன் அடிப்படையில் வருகின்றதோ இது எல்லாம் சாஸ்திரங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆனால் “சாங்கிய சாஸ்திரம்…” என்று இதையெல்லாம் மூடி மறைத்து விட்டார்கள்… மறைக்கப்பட்டு விட்டது.

ஆகையினால்… இந்த மனித வாழ்க்கையில் வெறுப்பையும் வேதனையையும் வளர்த்தால் இது சாகாக்கலை. சாகாமல் அது வளர்ச்சியாகிக் கொண்டே இருக்கும்.

ஆனால் வேகா நிலை என்றால் என்ன…?

1.மகரிஷிகள் அனைவரும் வேகா நிலை அடைந்தவர்கள்
2.இந்த உலகிலே… பேரண்டத்திலே எத்தகைய நிலைகள் வந்தாலும் அவர்களை அது சுட்டுப் பொசுக்க முடியாது.
3.எதிலேயும் அவர்களை வேக வைக்க முடியாது… ஒளியின் சுடராகவே இருக்கும்.. அது தான் வேகாநிலை என்பது.

இந்தப் பேருண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். என்றுமே நாம் அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை நமக்குள் விளைய வைத்துக் கொண்டால் நாமும் அந்த நிலை பெற முடியும்.

அந்த நிலையை அனைவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

சர்க்கரை நோய் அதிகளவில் வரக் காரணம் என்ன…?

சர்க்கரை நோய் அதிகளவில் வரக் காரணம் என்ன…?

 

நாம் ஒரு குழம்பு வைக்கக் காரம், புளிப்பு, துவர்ப்பு, உப்பு என்று பலவிதமான சுவைகளைக் கலந்து தயாரிக்கின்றோம். நாம் குழம்பு வைக்கும் பொழுது எந்தப் பொருளை அதிலே அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதாவது
1.மிளகாய் அதிகமாக இருந்தால் மிளகாயின் காரத்தைக் காட்டும்.
2.உப்பின் தன்மை அதிகமாகிவிட்டால் உப்பின் குணத்தைக் காட்டும்.
3.அதற்குள் மற்றதையெல்லாம் சுவையற்றதாக்கி இந்தச் சுவையே முன்னிலையில் நிற்கும்.

இதைப் போல பிறர் செய்யும் “தவறான உணர்வுகளை நாம் அடிக்கடி பார்க்க நேர்ந்தால்…” அந்த உணர்வின் தன்மை நம் ஆன்மாவில் கலந்துவிடும்.

ஆன்மாவில் கலந்தவுடன்… அன்றைய தினம் அவரைக் கோபமாகப் பேசுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் கோப உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

1.அப்பொழுது ஆன்மாவிலிருக்கும் மற்ற குணங்களுடன் கலந்து “நம் உயிருடன் இணைக்கப்படும் பொழுது…”
2.நம் உடலில் உள்ள கணங்களுக்கு (குணங்களுக்கு) அதிபதியாகிச் செயல்படுகின்றது.
3.மற்ற உணர்வின் மணங்களை இது ஒடுக்கி விடுகின்றது.

பின்னர் அதனின் உணர்வு செயல்பட்டாலும், அந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் இருக்கும் கார குணம், கசப்பான குணம், சங்கடமான குணம், “அதிலே கார குணம் அதிகமாகவே எடுத்துக் கொள்ளும்…”

குழம்பில் காரம் அதிகமானால் அனைத்துச் சுவையையும் அது கெடுத்துக் கார உணர்ச்சியையே தூண்டுகின்றது. பிறர் செய்யும் தவறின் நிலைகளைப் பார்க்கும் பொழுது நம் நல்ல உணர்வுக்குள் கோபம் ஏற்பட்டால் நமக்குள் கார உணர்ச்சிகளைத் தூண்டி நம்மிடம் நல்ல குணங்களை இயங்கவிடாது செய்து விடுகின்றது.

அவ்வாறு, செயல்படுத்தும் கார நிலை நம் உடலுக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்து, மற்ற குணங்களைச் செயலற்றதாக்கி இந்த உணர்வின் தன்மையை அதிகமாகச் சுவாசிக்கின்றோம்.

1.சாப்பிடும் போது நம் ஆகாரத்தில் அந்தக் காரமான சுவையே கேட்கும்.
2.காரம் அதிகமானால்தான் ருசியே இருக்கும்.
3.கோபமாகப் பேசும் குணம் கொண்டவர்களுக்கு “அடிக்கடி கோபமாகப் பேசினால்தான்…” ரசிப்பே இருக்கும்.

அந்தக் காரமான உணர்ச்சிகள் நமக்குள் இணைந்து யாராவது “சுருக்…” என்று சொன்னால் போதும், கார உணர்ச்சிகள் அங்கே விளைந்து, உடனே சண்டை வரும்.
1.அந்த உணர்வின் தன்மை கொண்டு சண்டை போடுவதே ரசனையாகும்.
2.ஏன் சண்டை போடுகிறோம்…? என்பதே அவர்களுக்குத் தெரியாது.

உணர்வின் இயக்கமாக அது இயக்குகின்றது… தவறு செய்யவில்லை.

சண்டை போடுபவர்களை வேடிக்கைப் பார்த்துப் பார்த்து… கார உணர்ச்சிகள் நமக்குள் ஏற்பட்டு ஆன்மாவில் அது பெருகி அதனின் உணர்வை அது வளர்க்கத் தொடங்கிவிடும்.

இவ்வாறு அது செய்தாலும் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் படர்ந்து, கார உணர்வுகள் அதிகமாகப் பெருக்கமாகும் பொழுது இரத்த அழுத்த நோய் வருகின்றது.

காரத்தைச் சாப்பிட்டால்… நாம் எப்படி “ஆ…” என்று அலறுகிறோமோ இதைப் போல இந்த உணர்வின் அழுத்த நிலைகள் நமது உடலில் வேகமாக ஓடும் கவன நரம்புகளில் தாக்கப்படும் பொழுது “கும்…” என்று சிரசில் நரம்பு புடைத்துவிடும்.

அவர் எண்ணிய நிலைகள் சிறிது மாறினால் போதும். உடனே கோபம் தன்னை அறியாமல் வரும். உடல் முழுவதற்கும் நடுக்கமாகும். கார உணர்ச்சிகள் வரும் பொழுது இரத்தத்தை இருதய வால்வுகள் இழுக்கப்படும் பொழுது அதனால் நெஞ்சு எரிச்சலாகும்.
1.எதையெடுத்தாலும் நெஞ்சு எரிச்சலாகும்.
2.அதே சமயத்தில் ஈரல் எரிச்சலும் வந்துவிடும்.
3.எரிச்சல்கள் அங்கே சென்றவுடனே எதையெடுத்தாலும் எரிச்சல்… பார்வையிலும் எரிச்சலான நிலைகளாகும்.

நாம் தவறு செய்யவில்லை. நாம் தவறு செய்பவரைப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை நம்மை அது போல ஆக்கிவிடுகின்றது. கடைசியில் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.

கோப உணர்வுகள் வரப்படும் பொழுது மற்றவர் மகிழ்ச்சியாக இருக்கின்றார்… மகிழ்ச்சியான செயல்களைச் செய்கின்றார் என்றால் அதைக் கண்டால் “இந்தக் கோபக்காரருக்குப் பிடிக்காது…”

மகிழ்ச்சியின் உணர்வு தூண்டினால் இனிமை கலந்த சொல்லின் நாதம் பிறக்கும். உதாரணமாக, நாம் இனிப்பைச் சாப்பிட்டவுடன், அந்த உணர்வின் தன்மையால் ரசித்துத் தலையை அசைக்கின்றோம்.

ஆனால்… காரத்திற்குள் இனிப்பைப் போட்டால் அதனின் சுவையே தனித்து இருக்கும்.
1.நமது உடலின் இனிப்பின் சொல்லை அறியச் செய்யும் உணர்வுகள் “இதற்கும்… அதற்கும்…” ஒத்து வராத நிலைகளில் பிரிக்கும்.
2.இது இரண்டும் நெகடிவ் பாசிடிவ் என்ற நிலைகள் கொண்டு இயக்கப்படும் பொழுது
3.நமது இருதய வால்வுகள் நமது உடலில் காரத்தை ஜீரணிக்க முடியாத நிலையில் “கொதிப்பும்…”
4.சுவையான நிலைகளில் பேச முடியாமல், சர்க்கரைச் சத்தும் வந்துவிடும்.
5.உடல் உறுப்பின் தன்மை செயல்கள் ஒடுங்கும் பொழுது இந்தக் காரத்துடன் கலக்காததனால் சர்க்கரைச் சத்து அதிகமாகின்றது.
6.அதனால், இருதயத்தின் துடிப்பு குறைகின்றது.

ஏனென்றால் இது இரண்டும் போர் செய்யப்படும்போது, துடிப்பின் இயக்கங்கள் உறுப்புக்கள் சரியாக இயங்காத நிலையும் இரத்த வால்வுகள் சரியாக இயங்காத நிலையில் “தளர்ச்சியடைகின்றது…”

இவ்வாறு சர்க்கரையின் சத்து அதிகமானபின் இதே இனிப்பின் தன்மை கொண்டு உடலுக்குள் என்ன ஆகிறது…?

செடிகளில் எப்படிச் சில பொருள்கள் சேர்ந்து, உயிரணுக்கள் உண்டாகின்றதோ இதைப் போல “நாம் எடுத்துக் கொண்ட நெகடிவ், பாசிடிவ் என்ற எதிர் நிலையான உணர்வுகள்…” போர் செய்யப்படும் பொழுது நம் ஆன்மாவில் இதே நிலையாகி உயிரின் துடிப்பு அதிகமாகின்றது. இதனால் காற்றிலிருந்து வரும் தீய உணர்வுகள், உடலில் ஒட்டிக் கொள்கின்றன.

1.இரண்டு நிலைகளை எடுத்தவுடனே அந்த அணுவின் தன்மையாக உருவாகி நமது தோலில் அரிப்பு ஏற்படும்.
2.அரிப்பின் தன்மையானவுடன் இரத்தத்துடன் கலந்து இரத்தத்தைச் சுவைத்துச் சாப்பிடும்.
3.பிறகு இரத்தத்திற்குள் சீழாக மாற்றும் நிலை வந்துவிடும்.
4.சீழாக மாறி அதன் மலம் பட்டவுடன் துரித நிலைகள் கொண்டு, இரத்த ஓட்டத்தின் இயக்கம் குறைந்து
5.உடலில் உள்ள உறுப்புக்களையே எடுத்துவிடும் நிலை வருகின்றது.

டாக்டரிடம் சென்றாலோ தடுப்பு ஊசி போட்டு, அங்கங்களைக் குறைத்து விடுகின்றனர். சர்க்கரைச் சத்தை எதிர்ப்பதற்காக, வேறு மருந்தின் நிலைகளை அதிகமாக்குகின்றனர். இவ்வாறு செலுத்தினாலும், சிறிது காலமே, நாம் வாழும் நிலை வருகின்றது.

எதிர்நிலையான மருந்துகள் கொடுக்கப்படும் பொழுது
1.அடுத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் சிறுநீரகம் விஷத்தன்மை அடைந்து
2.இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை இழந்து விடுகின்றது.

பின் நாம் சிறிது காலம் வாழ்வதற்கு எத்தனையோ முறை ஊசிகளைப் போட்டு நம்மை வேதனைப்படுத்தினாலும்
2.அந்த வேதனையே நமக்குள் விளைந்து, ஊழ்வினை என்ற அடிப்படையிலே நமது ஆன்மாவாக மாற்றி விடுகின்றது.

நமக்குள் விளைந்த இந்த உணர்வுகள் இந்த உடலில் எப்படி அங்கங்களைக் குறைக்கச் செய்ததோ அதே போல் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஜீவான்மாவாக விளைந்து, இந்த ஜீவான்மாக்கள் எதனின் நிலை கொண்டு இந்த உடலில் வளருகின்றதோ அதற்குத் தக்கவாறு இதில் விளைந்த உணர்வுகள் “உடலைக் குறைக்கும் நிலை கொண்டு உயிரான்மாவில் சேர்ந்துவிடுகின்றது…”

இந்த உடலில் பற்று உள்ள நாம் குழந்தைகளிடமோ, சகோதரர்களிடமோ, மற்றவர்களிடமோ, பாசத்தை அதிகமாக வளர்த்துக் கொண்ட நிலையில்
1.“இவர்களுக்கு இவ்வளவு செல்வத்தைச் சேர்த்தேன்… என் செல்வத்தை அவர்கள் காத்துக் கொள்ள வேண்டுமே…!
2.ஏனென்றால் எனக்கு இப்படித் துன்பம் நேர்ந்துவிட்டது… இனி இந்தப் பணத்தை “நீங்களாவாது ஒழுங்காக வைத்திருங்கள்…!” என்று
3.இந்தச் சொல்லைச் சொல்லும்போது யார் மேல் பற்றுதல் வருகின்றதோ
4.அவருடைய உணர்வு இவருடைய உடலில் எடுத்துச் சேர்த்துக் கொள்ளும்.

ஆக… நாம் தவறு செய்யாமலே இத்தகைய உணர்வு வந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை உடலிலே விளைந்து “நெகடிவ், பாசிடிவ்…” என்ற போர் முறை வரும் பொழுது கலக்க உணர்வுகள் அதிகமாகத் தோன்றி இங்கே உயிரின் இயக்க நிலைகள் அதிகமாக… ஈர்ப்பின் நிலைக்கு அந்தச் சக்தி வரவில்லை என்றால் “அந்த உயிரான்மா உடலை விட்டு வெளியில் சென்றுவிடும்…”

நமது உடலுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஏக்கம் கொண்டு உயிரான்மாவாக விளைந்தபின் இந்த உடலை விட்டு வெளியில் வரும் பொழுது அந்த உடலில் எதை விளைய வைத்ததோ அதைத் தன்னுடன் கவர்ந்து வெளியில் வந்துவிடும்.

1.யார் மேல் பற்று வைத்து அந்த மணத்தை இதனுடன் இணைத்துக் கொண்டதோ
2.அவர்களின் ஏக்க உணர்வுடன் ஆன்மா வெளியில் வரும்.

யார் மேல் பற்று கொண்டிருந்தார்களோ… அவர்கள் இவர் உடலை விட்டு இந்த ஆன்மா பிரிந்தபின்… அந்த உடலின் மேல் அவர் பற்றாக இருப்பார்.

அந்த உடலின் மணம் கொண்டு… இவர் பதிவு செய்த இந்த நிலைகள் கொண்டு “இறந்தவரின் உயிரான்மா அவர் உடலுக்குள் சென்றுவிடும்…” பின் மனிதனல்லாத கீழான உடலாகத்தான் நம் உயிர் உருவாக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளை நாம் அறிந்து…
1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நமது வாழ்க்கையையே தியானமாக்கி
2.”அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா” என்று ஆத்ம சுத்தி செய்து
3.இந்த உடலில் நோய் நீக்கி வேதனை நீக்கி அறியாது வரும் தீமைகளை நீக்கி
4.இப்பிறவியில் “பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெறுவதே நமது வாழ்க்கையின் அடிப்படை…! என்று
5.கடைப்பிடித்து வாழ்ந்து வரும் அன்பர்கள் அனைவருக்கும் எமது அருளாசிகள்.

“ஐயோ… பாவம்…!” என்று இரக்கப்படுவதில் உள்ள பின் விளைவுகள்

“ஐயோ… பாவம்…!” என்று இரக்கப்படுவதில் உள்ள பின் விளைவுகள்

 

உதாரணமாக இரயிலிலே நாம் பிரயாணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் இரக்கம் ஈகை பண்பு கொண்டவர்கள். அங்கே பயணம் செய்பவர்களில் ஒருவர் கடுமையாக வேதனைப்படுகிறார் என்று பார்க்கிறோம்.

அவரை நமக்குத் தெரியாது… அவர்களிடம் நாம் வேறு உணர்வு கொண்டும் பழகவில்லை. பிரயாணம் செய்யும் பொழுது தான் பழக்கம். அவர் சிரமப்படுவதை… இரக்க மனம் கொண்டு என்ன… ஏது…? என்று பார்க்கின்றோம்.

ஆனால் அவருடன் வந்தவர்களோ சலிப்பாகச் சஞ்சலமாகவே அவரிடம் பேசுவார்கள். ஏனென்றால் அடிக்கடி அவரிடம் கவலைப்பட்டுப் பழகியவர்கள் அல்லவா. இருக்கிற இடத்தில் சும்மா இரு…! ஏன் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறாய்…? என்று அடிக்கடி பேசுவார்கள்.

ஆனால் நாமோ…
1.ஏன் இப்படி…? என்று இரக்கத்தோடு இந்த செயலைக் கவனிக்கின்றோம் ஏனென்றால் அன்று ஒரு நாள் தானே பழகுகிறோம்.
2.ஆகையினால் ஏன் இந்த மாதிரிச் செய்கிறீர்கள்…! உங்களுக்கு என்னம்மா வேண்டும்…? ஏதம்மா வேண்டும்…? என்று இப்படிப் பதிவு செய்கிறோம்.

இப்படிப் பண்போடு சொல்லப்படும் பொழுது அவர்களுக்கு வேதனை கொஞ்சம் தணிகிறது. “இந்த உணர்வு…” அந்த வேதனைப்படுவர் உடலிலே ஆழமாகப் பதிவாகி வலுப் பெற்று விடுகின்றது.

நாம் என்ன நினைக்கின்றோம்…! இந்தப் பெண்மணி இவ்வளவு கஷ்டப்படுகின்றது… ஆனால் இரக்கமில்லாதபடி சமுதாயம் பேசுகிறது பார்…! என்று “அவர்கள் உணர்வை…” நமக்குள் பதிவு செய்கின்றோம்.

அடுத்து அவர் ஊருக்குப் போய்ச் சேருகின்றார். அவரைச் சார்ந்தவர்கள் உணர்வு வரும் பொழுது இந்த எண்ணங்கள் அதிகமாகிறது…
1.பார்… எத்தனை நல்லது செய்தோம்…? எத்தனை வசதி கொடுத்தோம்…? நம்மை இப்படித் தான் பேசுகிறார்கள்.
2.ஆனால் இரயிலில் பயணம் செய்யும் பொழுது “அந்த மகராசி… என்ன உபச்சாரம்…!” என்ற இந்த உணர்வு அங்கே வலுப்பெறுகின்றது.

ஆனால் நாமோ அவர்கள் வேதனையைப் பதிவு செய்கின்றோம். அதாவது
1.அவர்கள் உடலில் விளைந்தது நமக்குள்ளே…!
2.நம்முடைய உடலிலே பதிவான உணர்வுகள் அங்கே…!
3.அதே சமயத்தில் அங்கே வேதனைப்படுவருடைய வீட்டிலோ அவருக்கு வெறுப்பு.

உடலை விட்டுப்பிரியும் போது அவரின் உணர்வுகள் “இரயிலில் தனக்கு ஆதரவாகப் பேசியவர் மேல் நினைவு வருகின்றது…!” விதிப்படி அவர்கள் எண்ணுகின்றார்கள்.

உயிர் பிரியும் பொழுது அந்த ஆன்மா எந்த உணர்வைக் (எண்ணங்களை) கடைசியிலே வலுவாக எடுத்துக் கொண்டதோ…
1.நாம் இங்கே இருந்தாலும் நம் மீது அந்த நினைவுகள் வந்து உடலுக்குள் புகுந்துவிடுகிறது.
2.நம் உடலில் அந்த ஆன்மா புகுந்தது நமக்கே தெரியாது.

ஆனால் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களை எண்ணும் போது… பாவிகள் என்று பதிவு செய்து அந்த எண்ண அலைகளை அங்கே பரப்புகின்றது. இவ்வாறு பதிந்த எண்ணங்கள் கொண்டு இதிலே மடிந்து விடுகின்றது.

சாப அலைகள் அந்தக் குடும்பத்தைச் சாடுகிறது. இறந்த உடலில் விளைந்தது அனைத்துமே அந்தக் குடும்பத்திற்குப் பாய்கின்றது.

ஆனால் இங்கே பற்று கொண்ட நிலையில் மகராசி எனக்கு ஆதரவாகப் பேசியது என்ற அந்த எண்ணத்துடன் அந்த ஆன்மா இங்கே வந்து விடுகின்றது.

விஷத்தில் பாதாமைப் போட்டால் எப்படி இருக்கும்…? அந்த மாதிரி
1.அவர் வேதனைப்பட்ட உணர்வுக்குள் இந்த உணர்வின் தன்மை கலந்து இங்கே இயக்கச் சக்தியாக மாறுகிறது.
2.அந்த உடல் எவ்வாறெல்லாம் வேதனைப்பட்டதோ… தன் குடும்பத்தாரை வெறுப்புடன் எப்படிப் பேசியதோ…
3.இங்கே வந்தபின்… தன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் வெறுப்பாகப் பேச வைக்கும்.

பார்க்கலாம்… சில குடும்பங்களில் நேற்று வரை அவருடைய பேச்சு பழக்க வழக்கம் எல்லாமே… நல்லதாக உதவி செய்வதாக இருக்கும். ஆனால் இந்த ஆன்மா புகுந்த பின் பார்த்தால் எல்லோரையும் வெறுத்துப் பேசும்.

நேற்று வரை எல்லோருக்கும் நல்லதைத்தான் செய்தார் ஆனால் இப்பொழுது இப்படிப் பேசுகின்றாரே…! என்னமோ தெரியவில்லை…! என்பார்கள்.
1.அந்த உடலிலே விளைந்த உணர்வின் செல்கள் நோயாக மாற்றிவிடும்.
2.பெரும்பகுதி இப்படித்தான் மனிதன் வாழ்க்கையில் தேய்பிறையாகச் சென்று கொண்டிருக்கின்றான்.

ஆனால் இது எல்லாம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதைத்தான் உங்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

இரவிலே படுக்கைக்குச் செல்லும் பொழுது “ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்…”

இரவிலே படுக்கைக்குச் செல்லும் பொழுது “ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்…”

 

குழந்தைகளை நாம் வளர்க்கின்றோம், நாம் சொன்னபடி அவர்கள் கேட்கவில்லை என்றால் என்ன ஆகிறது…?
1.நம் பையன் தான்… ஆனால் வெறுப்பின் உணர்வைப் பதிவு செய்து விட்டால்
2.இவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருப்பான்…! என்று இந்த உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்.

ஒரு தரம் பதிவாக்கி விட்டால் பல காலம் நான் நாம் அவன் மீது பேரன்பு வைத்திருந்தாலும் ஒரு தடவை எடுத்த இந்த உணர்வுகள் முன்னணியில் வந்து விடுகின்றது.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வெறுப்பின் எண்ணங்களே வரும். அது வளர்ச்சியாகும். அவனை நல்லதாக மாற்றும் நிலைகளே நமக்குள் மாறி விடுகின்றது. அவன் மீது நாம் வைத்திருக்கும் பற்றைத் தான் மாற்றுகிறது.
1.அவன் மீது பற்று கொண்டு…
2.தீமையிலிருந்து அவனை நல்வழிப்படுத்தும் உணர்வு நமக்குள் வராது.
3.காரணம்… உணர்வின் இயக்கங்களில் தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…!

ஆகவே… இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுதெல்லாம் இது போன்ற உணர்வுகளை நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஆத்ம சுத்தி செய்தாலும் கூட
1.தூங்கச் செல்லும் பொழுது குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது நம் நினைவைத் துருவ மகரிஷியுடன் ஒன்றச் செய்து
2.அடுத்து சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து… சப்தரிஷிகளுடன் நாம் இணையச் செய்ய வேண்டும்.

ஒருவர் மட்டும் நாம் குறி வைத்து எண்ணுவதல்ல. பலரும் சேர்ந்துதான் அது ஒன்றாக ஆனது. இது தான் அடிப்படைக்குறி என்றால் ஒன்றை மட்டும் எடுத்து ஒன்றாக எதுவும் இணைந்ததில்லை.

துருவத்தை முதலில் நுகர்ந்து விண்ணிலே ஒளியாகச் சென்றது துருவ மகரிஷி. அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.

ஆனால் அவர்கள் அனைத்தும் தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள் மகரிஷிகள். மனிதனாக இருக்கும் பொழுது சிருஷ்டித்துக் கொண்டது.
1.இந்த உணர்வை நாம் பருக வேண்டும்.
2.இதையெல்லாம் வலுப்படுத்தி அவர்கள் ஆன நிலையை எடுத்துத் தான் நமக்குள் பெருக்க வேண்டும்.
(சப்தரிஷிகள் சப்தரிஷி மண்டல உணர்வை முதலில் எடுத்துத் தான் துருவ மகரிஷி துருவ நட்சத்திர உணர்வை வலுவாக்க வேண்டும்)

அதைப் பெறச் செய்வதற்குத் தான் பௌர்ணமியன்று கூட்டுத் தியானங்களில் எல்லோரும் சேர்ந்து “சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை வலுவாக்கச் சொல்வது…”

அந்த வலுவை நமக்குள் கூட்டி இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம் ஆன்மாவைச் சிறிது நேரமாவது தூய்மைப்படுத்த வேண்டும்.

உதாரணமாக… சமைப்பதற்காக வேண்டி பாத்திரத்தை நாம் உபயோகப்படுத்துகின்றோம்… பின் தூய்மைப்படுத்துகின்றோம் ஆனால் அதிலே ஒன்றிய நிலைகள் சில இடங்களிலே அழுக்கு அதிகமாகப் படிந்துவிடும்.

அதை நாம் நீக்க முயற்சித்தால் தேய்க்கத் தேய்க்க பாத்திரமே ஓட்டையாகி விடுகிறது. ஒரு பக்கம் மேடாகி ஒரு பக்கம் தேய்மானமாகி மேடு பள்ளம் ஆகி சமமில்லாத நிலையாகி விடுகிறது.

இதைப் போன்று தான் அவ்வப்போது (அன்றன்று) தூங்கச் செல்லும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்துத் தூய்மைப்படுத்துகின்றோம்.

அதில் சில தொக்குகள் இருந்தாலும்
1.இரவிலே மீண்டும் முழிப்பு வந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
2.மறுபடியும் அந்த எண்ணத்தைக் கூட்டித் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் ஆன்மாவிலே அந்த அணுக்களுக்குக் கிடைக்கக் கூடியதைத் தடைப்படுத்தும் போது தன்னாலே மாறிவிடும்.

ஆகவே இரவிலே எப்படி இருந்தாலும் “படுக்கைக்குச் செல்லும் பொழுது ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்…”

உங்கள் உயிராத்மா ஒளி நிலை பெற குருநாதரைப் பிரார்த்திக்கின்றோம்

உங்கள் உயிராத்மா ஒளி நிலை பெற குருநாதரைப் பிரார்த்திக்கின்றோம்

 

நீங்கள் தர்ம சிந்தனையுடன் அன்பு, பரிவு, பாசம், ஞானம், தைரியம், சாந்தமாக வாழ எண்ணி உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தாலும், ஒருவர் மற்றொருவரைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும்போது என்ன நடக்கின்றது…/

நீங்கள் அவரைப் பார்க்கும் பொழுது…
1.உங்கள் புலனறிவால் கோப உணர்வைக் கவர்ந்து உடலில் உள்ள ஈர்ப்பு காந்தத்தில் இணைந்தவுடன்
2.உடல் காற்றில் கலந்துள்ள கோப உணர்வலைகளை ஈர்ப்பதனால் உங்கள் சுவாசத்துடன் கலந்து உயிரில் உராய்வதனால்
3.ஆத்திர உணர்வின் எண்ணம் உங்களை அறியாமலேயே ஆத்திரத்துடன் பேசவோ கேட்கவோ தூண்டுகின்றது.

அச்சமயம் உங்கள் உமிழ் நீரும் மாறுபட்டு நீங்கள் உட்கொண்ட ஆகாரத்துடன் கலப்பதால் குடலில் ஒருவித எரிச்சல் ஏற்படுகின்றது. அப்பொழுது எதைச் சாப்பிட்டாலும், சுவை குன்றியே இருக்கும்.

அதனால் ஆகாரம் குறைத்துச் சாப்பிட்டு உடல் சோர்வடையக் காரணமாகின்றது.
1.கோப ஆத்திர உணர்வலைகளை இரத்தம் வடித்துக் கொள்வதனால்
2.இரவில் உறங்கும் பொழுது “இரத்தம் தசைகளாக மாறும் சமயம்…”
3.உடலில் ஒருவித எரிச்சலும் தூக்கமின்மையும் ஏற்படக் காரணமாகின்றது.

உதாரணமாக… நீங்கள் வயலைப் பக்குவப்படுத்தி நெல்லை விதைத்து அதிலே நெல் முளைத்து வருகிறது என்று வைத்துக் கொள்வோம். காற்றில் மிதந்து வந்த, வேண்டாத வித்துக்கள் வயலில் வீழ்ந்து களைகளாக முளைத்து விட்டால் நெல்லிற்கு இட்ட உரத்தைக் அந்தக் களைகள் எடுத்துக் கொண்டு களைகள் பெருகுகின்றன.

களைகளை நீக்கவில்லையென்றால் நெல் பயிர் வளர்ச்சி குன்றி நெல்லின் தரம் குறைந்து விடும்.

இதைப் போன்று
1.நீங்கள் சுவாசித்த கோப குணங்களின் உணர்வலைகளின் நுண் அணுக்கள் உங்கள் இரத்தத்தில் பெருகி
2.தசைகளாக மாறும் பொழுது தசைகளிலும் உடல் உறுப்புகளிலும் பெருகி மேல் வலி, தலை வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதும்
3.அதனால் உடல் சோர்ந்து “எச்செயலையும் சோர்வுடன் செய்யக் காரணமாகின்றன…”

நீங்கள் உலக நிலைகளை அறிந்து கொள்ளும் வண்ணம் பத்திரிக்கையைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அதிலே “இரவு 8.00 மணியளவில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீர் என்று கொள்ளையர்கள் வீடு புகுந்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் அடித்துப் படுகாயப்படுத்திப் போட்டுவிட்டு வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் வாரிக்கொண்டு போய்விட்டார்கள்” என்று படிப்பீர்கள்.

அப்பொழுது உங்களையறியாது, பயம் கலந்த வேதனை உணர்வுகளைச் சுவாசிப்பதனால் அவை உங்கள் இரத்தத்தில் கலந்து விடுகின்றன.

அன்று இரவு… நீங்கள் அமைதியாகப் படுத்திருந்தாலும், வேறு ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாலும் எதிர்பாராது சன்னல் கதவின் ஓசை “டப்…” என்று உங்கள் செவிகளில் கேட்டவுடன், உங்களையறியாது பய உணர்வு உந்தப்பட்டு உடல் சிலிர்த்து, பய உணர்வலைகளை சுவாசித்து, மேலும் மேலும், பய உணர்வுகள் பெருகக் காரணமாகின்றன.

இது போன்று அடிக்கடி நேர்ந்தால் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் மனத்தில் ஒருவிதப் பயத்துடன் செயல்படும் நிலை ஏற்படுகின்றது,

நீங்கள் வேலையின் நிமித்தம், தெருவில் நடந்து செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தெருவின் முனை அருகில் செல்லும் சமயம் ஒரு கார் திடீரென்று திரும்புகையில் உங்கள் மீது மோதும் நிலையை நீங்கள் பார்க்க நேர்ந்தால்…
1.கண்களின் ஈர்ப்பு காந்தத்தில் பாய்ச்சுவதால் உங்கள் உடல் துரித நிலையில் பய உணர்வுகளை அதீதமாகச் சுவாசித்து
2.துரிதமாக இயங்கி, உடல் நடுக்கமாகி உங்களைக் காக்கும் எண்ணம் உருப்பெற்று
3.விபத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்கின்றீர்கள்.

அதே சமயத்தில் அதீதமான பயத் துடிப்புடன் ஓட்டுநரைப் பார்க்கும் பொழுது ஆத்திர உணர்வுகள் உந்தப்பட்டு, ஆத்திர உணர்வுகளையும் சுவாசிக்க நேருவதால் பயத் துடிப்புடன் ஆத்திர உணர்வலைகள் உயிரில் உராய்வதால் புலன்களின் பொறிகள் இயக்கப்பட்டு “ஆத்திரத்துடன் பேசுவதும்… அதற்குரிய செயலையும் செய்விக்கின்றன…”

நீங்கள் விபத்திலிருந்து தப்பியதைப் பார்த்தவர்கள் உங்களைப் பார்த்து “நீங்கள் செய்த தர்மத்தால் உங்களைத் தெய்வம் காப்பாற்றியது…” என்று ஆறுதல் கூறுவார்கள்.

ஆனால் நீங்கள் சுவாசித்த அதீத பய ஆத்திர உணர்வலைகளின் நுண் அணுக்கள் “இரத்தத்தில் கலந்து தசைகளாக மாறுகின்றன…”

வயல்களைப் பக்குவப்படுத்தி நெல்லை விதைத்துப் பயிராக முளைத்து வரும் நிலையில் எங்கோ காற்றில் கலந்து வந்த வித்துகள் வயலில் வந்து வீழ்ந்தால் அதுவும் முளைத்து விடுகின்றது.

நீங்கள் எதிர்பாராது அதீத பய உணர்வுடன் ஆத்திர உணர்வையும் சுவாசித்ததால்
1.அவைகள் இரத்தத்தில் கலந்து தசைகளாக மாறுவதும்
2.தசைகளில், பய உணர்வுகளின் அணு திசுக்களும் ஆத்திர உணர்வுகளின் அணு திசுக்களும் உருப்பெற்று
3.அதன் இயக்கத்தால், தசைகளில் அமிலங்கள் சுரந்து
4.இந்த அமிலங்கள் உடலை இயக்கும் நரம்புகளில் ஈர்க்கப்பட்டு
5.நரம்புகள் இயங்குவதால் நரம்புகளில் உள்ள அமிலங்களின் உணர்வுகளின் சத்தை எலும்பின் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு
6.எலும்பினுள் “ஊனாக” வடித்துக் கொள்கின்றன
7.இந்த ஊனைத்”தான் ஞானிகள் “ஊழ்வினை” என்று பெயர் வைத்தார்கள்.

எடுத்துக்காட்டாக வேப்ப மரத்தை எடுத்துக் கொள்வோம்.

வேம்பின் வித்து எத்தனை வகையான உணர்வின் சத்தில் வித்தானதோ அது நிலத்தில் முளைத்து வரும் பொழுது அதன் உணர்வுகளின் சத்தில் கலந்துள்ள ஈர்ப்பு காந்த சக்தியால் நிலத்தில் உள்ள நீரையும், காற்றில் இருந்து வரும் தன் இனமான உணர்வுகளின் சத்தையும் ஈர்த்துக் கொண்டு… ஈர்த்துக் கொண்ட வெப்பத்தினால் நீரில் கலந்துள்ள உணர்வின் சத்துகள் அனைத்தும் உறைந்து விடுவதால் வெப்பத்தின் இயக்கத்தினால் நீரில் வேப்ப மரமாக வளர்கின்றது.

இதைப் போன்று…
1.அதீத பய குணத்தின் சத்தையும் ஆத்திர குணத்தின் சத்தையும் எலும்புக்குள் ஊனாக வடித்து வைத்துவிடுகிறது.
2.அவ்வாறு வடித்து வைப்பதனால் உயிரின் இயக்கத்தால் எலும்பின் காந்த ஈர்ப்பினால்
3.உடல், காற்றில் பரவி இருக்கும் பய உணர்வலைகளையும் ஆத்திர உணர்வலைகளையும் ஈர்க்கின்றது.

வேப்ப மரம் தன் உணர்வான கசப்பான சத்தை ஈர்த்துத் தன்னை வளர்த்துக் கொண்டு தான் வளர்த்துக் கொண்ட கசப்பான உணர்வுகளின் மணத்தை வெளிப்படுத்தும் பொழுது அதை நீங்கள் நுகர்ந்தால் அதன் கசப்பான உணர்வலைகள் உங்கள் முகத்தைச் சுளிக்கச் செய்கின்றன.

அதைப் போன்றே… உங்கள் உடல் ஈர்க்கும், பய குணத்தின் உணர்வுகளையும் ஆத்திர குணத்தின் உணர்வுகளையும் நீங்கள் சுவாசிக்கும் பொழுது “முகம் கடுகடுப்பு அடைகின்றது…”

வேம்பின் இலைகளைச் சாப்பிட்டால் கசப்பின் உணர்வுகள் குடலில் இயங்கி, குமட்டல் ஏற்படும் பொழுது, வாந்தி வந்து விடும் என்ற பயம் கலந்த எண்ணம் தோன்றுகின்றது.

இதைப் போன்று, உங்கள் உடல் ஈர்க்கும் பய குணத்தின் உணர்வுகளையும், ஆத்திர குணத்தின் உணர்வுகளையும், நீங்கள் சுவாசித்துக் கொண்டு இருப்பதனால் இரத்தம் வடித்துக் கொண்டதால்
1.பய ஆத்திர குணங்களின் உணர்வலைகள் இரத்தத்தில் நுண் அணுக்களாக வளர்ச்சி பெற்று
2.இரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகள் வரக் காரணமாகின்றது.

மேலும், அதனால் அதிர்ச்சியான பேச்சைக் காதில் கேட்டால் பயமான எண்ணம் தோன்றுவதும்… அச்சமயத்தில், பயத்தினால் சிந்திக்கும் திறன் இழந்து கோபப்படுவதும்…
1.ஏதாவது ஒரு பொருள், கீழே விழும் ஓசையைக் காதில் கேட்டால்
2.உங்களை அறியாது உடல் சிலிர்ப்பதும் அதனால் பயமான எண்ணங்கள் தோன்றுகின்றது.

இதைப் போன்று, எச்செயலை நீங்கள் செய்ய முற்பட்டாலும், உங்களை அறியாது அவசர ஆத்திர உணர்வுடன் செயல்படத் தூண்டுகின்றது. ஆனால் சிறிது தடைப்பட்டாலோ கோபமான எண்ணம் உருப்பெற்று விடுகின்றது.

இரத்தம் தசைகளாக உடல் உறுப்புகளாக மாறும் பொழுது அதில் பய, ஆத்திர குணங்களின் அணு திசுக்களாக வளர்ச்சி பெற்றுத் தசைகளிலும், உடல் உறுப்புகளிலும் தசைவாதம் குடல்வாதம், பக்கவாதம் போன்ற நோய்கள் வரக் காரணமாகின்றது.

அதே போல் தசைகளில் உருவான அமிலங்களை உடல் உறுப்புகளை இயக்கும் நரம்புகள் ஈர்த்துக் கொள்வதால் அதனால் கீல்வாதம் மூட்டுவாதம் முடக்குவாதம் போன்ற நோய்கள் உருப்பெறக் காரணமாகின்றது.

இப்படி… நாம் நமது வாழ்க்கையில் நல்ல குணங்களின் உணர்வுடன் சுவாசித்து உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தாலும் எதிர்பாராது பய குணங்களின் உணர்வையோ, கோப குணங்களின் உணர்வையோ, வேதனையின் குணங்களின் உணர்வையோ, ஆத்திர குணங்களின் உணர்வையோ, குரோதமான குணங்களின் உணர்வையோ, சோர்வான குணங்களின் உணர்வையோ, சஞ்சலமான குணங்களின் உணர்வையோ, சந்தர்ப்பவசத்தால் சுவாசிக்க நேர்ந்தால்…
1.நல்ல குணங்கள் பலவீனமாகி தசைகளிலும் உடல் உறுப்புகளிலும் நோய்கள் உருப்பெற்று
2.அதில் விளைந்த நுண் அணுக்கள் உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று
3.உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்குவதும்
4.உயிராத்மா வளர்ச்சி குன்றி உடலை விட்டு உயிராத்மா பிரிந்து செல்கின்றது.
5.இவ்வாறு பிரிந்த உயிராத்மா மறு பிறவியில் மனித உருப் பெறும் தகுதியை இழக்கின்றது.

இவ்வாறே, சாதாரண மனிதர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கு ஒப்ப சந்தர்ப்பவசத்தால் கண்களால் காதுகளின் புலனறிவால் ஈர்க்கப்பட்ட, கோபம், குரோதம், ஆத்திரம், அதீத பயம் போன்ற குணங்களின் உணர்வலைகளைச் சுவாசித்து உடல்களில் பதிவாகி நோய்கள் உருப்பெறுகிறது. அதை இன்றைய மருத்துவம் குணப்படுத்துகிறது.

ஆனால் நோய்களினால் உடலில் விளைந்த நுண் அணுக்கள் உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று
1.உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்கிக் கொண்டிருக்கும்
2.அந்த “உணர்வுகளின் அணுசிசுக்களை” மாற்ற விஞ்ஞானிகளால் முடியாது.

விஞ்ஞான முன்னேற்றத்தினால் மனித உடல்களைப் பாதுகாக்க முடியுமே தவிர… அவர்களின் உடலை இயக்கும் “உயிராத்மாவை ஒளி நிலையாக மாற்றும் ஆற்றல்…” விஞ்ஞானிகளுக்கு இல்லை.

ஞானிகள், மகரிஷிகள் தங்கள் தபோவலிமைகளினாலும் தியானங்களினாலும் பேரண்டத்தில் பரவிக் கிடக்கும், பேராற்றல்களின் உண்மை நிலைகளைக் கண்டறிந்து தங்களின் புலனறிவால் அதை உடலில் சேர்த்து வளர்த்துக் கொண்டதால்
1.சந்தர்ப்பவசத்தால் தீய கோப குரோத ஆத்திர குணங்கள் போன்ற உணர்வலைகளைச்
2.தங்களுக்குள் சுவாசிக்க நேர்ந்தால் அவைகளை மாய்த்து விடுகின்றனர்.

அவ்வாறு தங்களின் உடல்களில் பேராற்றல் மிக்க உணர்வலைகளை வளர்த்துக் கொண்டு உயிராத்மாவை ஒளியாக மாற்றித் தங்கள் சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பேராற்றல்கள், ஒளியலைகளாகக் காற்றில் பரவிக் கொண்டிருக்கிறது.

உயிராத்மாவை ஒளியாக மாற்றிக் கொண்டு உடலை விட்டு விண்ணைச் சென்றடைந்து இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கின்றார்கள்.

அதிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒலி, ஒளியின் ஆற்றல் மிக்க உணர்வலைகள் பரவெளியில் பரவிக் கொண்டே இருக்கின்றன.

மேற்கூறிய நிலைகளை…
1.எம் குருநாதர் காட்சியாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும், உணர்த்தி உபதேசித்து அருளியதை யாம் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.
2.மெய்ஞானிகள் மகரிஷிகள் உபதேசித்து அருளிய ஒளியான உணர்வுகளையும்
3.சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரும் ஒலி ஒளியான ஆற்றல் மிக்க உணர்வுகளையும்
4.நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்று
5.உங்கள் உயிராத்மா ஒளி நிலை பெற குருநாதரைப் பிரார்த்திக்கின்றோம்.