ஓசோன் திரை கிழிந்ததை நாம் அடைக்க முடியும்

ஓசோன் திரை கிழிந்ததை நாம் அடைக்க முடியும்

 

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பூமியில் ஓசோன் திரை கிழிந்ததை… அந்த ஓட்டையை அடைக்க முடியும்.
1.நமது குருநாதர் வழியில் தியானத்தை ஒருங்கிணைத்து ஓசோன் திரை அடைபட வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர வேண்டும் என்று முறைப்படி தியானித்து ஆணையிடும் பொழுது
3.தொடர்ந்து அதைச் செய்து வந்தால் அடைக்க முடியும்… அந்த நம்பிக்கை உங்களுக்கு வர வேண்டும்
4.நிச்சயம் ஓசோன் திரை அடைபடும்… நம்மால் அடைக்க முடியும்… அந்தத் திறன் உண்டு என்று நம்பிப் பழக வேண்டும்
5.விஞ்ஞானிகளால் முடியாது…! மெய் ஞானிகளின் அருளைப் பெற்று நாம் இதைச் செயல்படுத்த முடியும்.

காரணம் துருவத்தின் வழி விஷக் கதிரியக்கங்கள் புகுந்து தான் பூமியின் ஓசோன் திரை கிழிந்தது.

ஆகவே அருள் மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர்ந்து பூமிக்குள் வரும் தீமைகளை அடக்கிப் பேரருள் பேரொளி என்று பெறும் உணர்வு அனைத்து மக்களுக்கும் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கித் தியானியுங்கள்.

பேரருளைப் பெறலாம்… பேரின்பத்தைப் பெறலாம்… பேரின்பப் பெரு வாழ்வு வாழும் அந்தச் சக்தி உங்களுக்குள் உருவாக்குங்கள்

1.அனைத்து மக்களும் நோயற்ற வாழ்க்கை வாழ உங்களுடைய பிரார்த்தனைகள்… தியானம்… தவம் அமையட்டும்.
2.அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருங்கள்.

அது நல்ல பலனைத் தரும்…!

அந்த அருள் சக்தி உங்களிலே பெருகும்… பேரின்பப் பெரு வாழ்வு வாழ்வீர்கள்… மகிழ்ச்சி பெறும் சக்தியாக உங்களுக்குள் வளரும்… மலரைப் போன்ற மணம் பெறுவீர்கள்… தெளிந்த மனமும் தெரிந்து வாழும் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.

1.உங்களுக்குள் அந்தச் சக்தி உருவாகி உலகம் அனைத்தும் அந்த அருள் வழியிலே உருவாகும்.
2.நமது பரந்த மனம் “மகிழ்ந்திடும் உணர்வாக நமக்குள் விளைந்து”
3.குரு அருள் உலக மக்களைத் தெளிந்த மனம் கொள்ளச் செய்திட உங்களுக்குள் அருள் ஞானம் பெருகி
4.நீங்கள் என்றென்றும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட
5.மகரிஷிகளின் அருள் துணை உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).

மழை

மழை

 

இப்பூமியில் காற்று வீசுவதும் மழை பெய்வதும் பனி பெய்வதும் எரிமலை கக்குவதும் எல்லாமே… பூமியின் ஈர்ப்புத் தன்மையிலிருந்து பூமி ஈர்த்து அது வெளிப்படுத்தும் நிலை கொண்டு… அந்தந்த நிலையில் வருவது தான் மழை காற்று பனி உஷ்ணம் எல்லாமே என்று முதலிலேயே உணர்த்தி உள்ளேன்.

அதனின் விளக்கம் இன்று தருகின்றேன்.

மழை பெய்வதற்கு முதல் பூமி ஈர்த்து அது வெளிப்படுத்தும் உஷ்ண நிலைகள் ஆவியாகி மேகமாகச் சூழ்ந்து மழை வருகிறது என்றேன்.

இம்மழை பெய்வதற்கு பூமியிலிருந்து எந்த நிலை கொண்டு உஷ்ணம் வெளிப்படுத்துகிறதோ அது வெளிப்படுத்தும் நிலை போலவே உயிரினங்கள் எல்லாமே தன்னுள் உள்ள உஷ்ணத்தை வெளிப்படுத்துகின்றன.

1.மழை வருவதற்கு முதலிலேயே உயிரினங்கள் எல்லாவற்றுக்குமே அந்நிலை தெரிந்திடும்.
2.ஒவ்வொருவரும் அவரவர் உடல் நிலையில் இருந்தும் அறிந்திடலாம் மழை வரும் தன்மையை.

பூமி வெளிப்படுத்தும் உஷ்ண அலைகளைக் கொண்டு மேல் நோக்கி ஆவி நிலைக்குச் செல்லும் பொழுது இவ்வுலகில் உள்ள ஜீவனுடன் ஒன்றிய எல்லா நிலைகளுக்குமே மனித உடல் முதற்கொண்டு அந்நிலை தெரிந்திடும்.

மழை வருவதற்கு முதலிலேயே நம் உடல் நிலையில் பெரும் புழுக்கத்தை நாம் உணர்கின்றோம். அந்நிலை போலவே எல்லா ஜீவராசிகளும் தாவர வர்க்கங்களும் அந்நிலையைப் பெறுகின்றன.

பூமி வெளிப்படுத்தும் உஷ்ண நிலையில் இருந்து மற்ற உயிரினங்களுக்கும் அது தாக்கப்பட்டு அவ்வுஷ்ணம் வெளிப்பட்டு ஆவியாகி மேகமாக மழை பெய்கிறது.

நீர் நிலையில் உள்ள நீர் மட்டும் ஆவியாகி மேகம் கொண்டு மழை பெய்கிறது என்கின்றோம். எந்த இடத்தில் எல்லாம் மழை பெய்கிறதோ அந்த இடங்களில் உள்ள அப்பூமியில் உள்ள நீர் நிலைகள் நிலங்கள் ஜீவனுள்ள மலைகள் கல் மண் மற்ற உயிரினங்கள் மனித உடல் முதற்கொண்டு ஜீவனுள்ள எல்லாவற்றின் நிலையிலிருந்தும் தான் பூமி வெளிப்படுத்தும் உஷ்ண நிலை கொண்டு நாம் மழை வரும் பாக்கியத்தை அடைகின்றோம்.

1.நம் உடலுக்கு மற்றவற்றில் தொடர்பு இல்லை என்ற எண்ணம் வேண்டாம்.
2.எல்லாவற்றிலுமே நாமும் கலந்துள்ளோம் என்று உணர்ந்து வாழ்ந்திடுங்கள்.

ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள இப்பூமியின் சுற்றலில் கலந்துள்ள நாம் ஒவ்வொன்றையும் அறிந்து நம் வாழ்க்கைக்கு என்ன பயன் என்று எண்ண வேண்டாம்.

நம் வாழ்க்கை என்பது தனித்த வாழ்க்கை அல்ல. ஒளியும் ஒலியும் காற்றும் நீரும் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை என்பதற்கே பொருள் இல்லை.
1.ஒவ்வொன்றின் நிலையையும் அறிந்து வாழ்வதின் அர்த்தம் கொண்டே வாழ்வதற்குத் தான்
2.இப்பாட நிலையின் மூலமாகச் சில உண்மைகளை விளக்கி வருகின்றேன்.

பனிமழை பெய்யும் ஊர்களிலும் இங்கு எப்படி நாம் மழையை நம்முடன் ஒன்றியதாகப் பெய்கிறது என்கின்றோமோ அந்நிலை போலத் தான் அங்கங்கு வாழ்ந்திடும் ஜீவாத்மாக்களின் தொடர்பு கொண்டு… அங்குள்ள பூமி எந்த நிலை கொண்டு அப்பனிக்காற்றை வெளிப்படுத்துகின்றதோ அதைக் கொண்டு தான் பனிமழையும் பெய்கிறது.

பூமியில் நில அதிர்வும் நில வெடிப்பும் வருவதும் இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் தன்மை கொண்டு தான் நில அதிர்வு நில வெடிப்பு எல்லாம் ஏற்படுகின்றன.

இப்பூமித் தாய் ஆரம்ப காலத்தில் இவ்அவதாரம் என்று நாம் செப்பிடும் காலத்திலேயே பல பொக்கிஷங்களை ஈர்த்துப் பெற்ற நிலையை நாளை விளங்கிடுவேன்.

உயிரின் துடிப்பு அதிகரிக்கும் போது மனிதன் அசுரனாகி விடுவான்

உயிரின் துடிப்பு அதிகரிக்கும் போது மனிதன் அசுரனாகி விடுவான்

 

நட்சத்திரங்களின் மின் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி எதிர்மறையாகி மின்னலாகக் கடலில் பாய்ந்தால் கடல் உப்பின் தன்மை அதை அடக்கி மணலாக மாற்றுகின்றது.

அதையே மனிதன் யுரேனியமாகப் பிரித்து எடுக்கின்றான். அணுவைப் பிளந்து அணுக்கதிரியக்கங்களை உருவாக்கி அணு உலைகளை உருவாக்கி இயந்திரங்களைத் துரித கதியில் வெப்பமாக்கும் நிலைக்குச் செயல்படுத்துகின்றார்கள்.

“மின்னல் தாக்கும் பொழுது… எவ்வளவு தூரம் விரிவடைந்து அது செயல்படுகின்றதோ” அதைப் போன்று
1.மனிதன் அணுவைப் பிளந்து அதன் உணர்வைச் சேமித்து
2.ஹைட்ரஜன் என்ற நீரின் அழுத்தத்தைக் கொண்டு அதை அடக்கி
3.மற்ற இயந்திரங்களை உருவாக்கி விஷத்தன்மை ஊட்டி இயக்கினாலும்
4.அதனின் கசிவுகள் வெளிவரும் பொழுது “சூரியனுடைய காந்த சக்தி” ஆதைக் கவர்ந்து தான் தீரும்.

இது பரவப் பரவ நச்சுத்தன்மைகளாக மாறி… சிந்திக்கும் தன்மை இழக்கச் செய்து விடும்.

அது மட்டுமல்ல…! அணுக்கதிரியக்கத்தின் தன்மை துரிதப்படுத்தி இயக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவச் செய்த பின்
1.அது சூரியனால் மீண்டும் ஈர்க்கப்பட்டு அதனுள் சென்ற பின் கொதிகலனாக மாறி அது வெடிக்கின்றது.
2.பூமிக்குள் எப்படி நிலநடுக்கம் ஆகின்றதோ அது போன்று சூரியனுக்குள் இத்தகைய நிலைகள் வெளிப்படுத்தும் நிலைகளும் வந்துவிட்டது.

காரணம்… சூரியன் இயற்கையாகக் கவரும் விஷத் தன்மைகளும் மனிதன் செயற்கையாக உருவாக்கிய கதிரியக்கப் பொறிகள் இரண்டும் மோதும் போது
1.எலக்ட்ரிக் அதிகமாகி… பொறிகளாக உருவாகி
2.கொதிகலனாகிக் காந்தப் புயல்களாக வீசுகின்றது.

ஒரு மேக்னட்டை அதிகமாக்கிச் சுழற்றும் போது காந்தம் அதிகமாகி மின் உற்பத்தி அதிகமானால் அது அதனுடன் பொருத்தப்பட்டுள்ள வயர்களைக் கருக்குகின்றது… அதில் இயக்கக்கூடிய மோட்டார்களையும் ஃபுயூஸ் ஆக்கிவிடுகின்றது.

இதைப் போன்று நம்மை இயக்கக்கூடிய உயிரின் தன்மையும்
1.எலக்ட்ரானிக்காக உற்பத்தி ஆகி கொண்டிருக்கும் உயிரின் துடிப்பு அதிகமானால்
2.நம் உடலுக்குள் அதன் தொடர் கொண்டு இயக்கும் அணுக்களின் நிலையும் பாய்ச்சலாகிச் சிந்தனைகள் இழக்கப்பட்டு
3.இந்த உணர்வின் தன்மை அதீத நிலைகள் கொண்டு நாம் சிந்திக்கும் செயலிழக்கப்பட்டு
4.ஆதிகாலத்தில் ஒன்றை ஒன்று கொன்று எப்படிப் புசித்து வாழ்ந்தார்களோ
5.இதைப் போன்று அசுர உணர் கொண்டு செயல்படும் நிலையாக வந்துவிடும்.

ஆப்பிரிக்கா நாடுகளில் இன்றும் மனிதனுக்கு மனிதன் கொன்று புசித்திடும் நிலையும்… இறந்த மனிதனை உணவாக உட்கொள்ளும் அநாகரீக நிலைகளாக அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையும் உண்டு.

அது போல் மக்கள் வாழும் காட்டுப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளில் சில இடங்களில் இத்தகைய மனிதனைப் புசிக்கும் நிலைகள் உண்டு.
1.நகரப் பகுதிகளில் விஞ்ஞான அறிவு வளர்ந்து இருந்தாலும் இதனுடைய வளர்ச்சி அங்கே சுருங்கி இருந்தாலும்
2.உலகம் முழுவதும் பரவும் நிலை மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்கும் நிலை வந்துவிட்டது.

உணர்வின் அதிர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது எலெக்ட்ரிக் என்ற எர்த் நிலையில் வரப்படும் பொழுது எலக்ட்ரானிக் என்று நமக்குள் இயக்கும் “உணர்வுகள்” செயலிழக்கத் தொடங்கிவிடும்.

அதே போல் விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்ட எலக்ட்ரானிக் கருவிகளும் திசை மாறிக் கணக்கீடுகளை தப்பாக இயக்கும்.

அதாவது… ஒவ்வொரு நாட்டிலும் அணுகுண்டுகளையும் மற்ற ஆயுதங்களையும் கம்ப்யூட்டரால் கண்கானிக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.

வெப்பங்கள் தாக்காது இருப்பதற்காக கட்டுப்படுத்தி வைத்துள்ளார்கள் மின்னலோ மற்ற இயற்கையினுடைய சீற்றங்களும் தாக்காதபடி பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.

கால நிலைகள் உணர்ந்து அத்தனை வெடிகுண்டுகளையும் பாதுகாக்கும் கம்ப்யூட்டரும்
1.மாறுபட்ட நிலை கொண்டு சிதைவுண்டால் புதைத்து வைத்திருக்கும் குண்டெல்லாம் வெடிக்கும் நிலைக்கு வந்துவிடும்.
2.வெடித்து விட்டால் உலகம் முழுமைக்குமே விஷத்தின் தன்மைகள் பரவிவிடும்.
3.மனிதர்களுக்குள் இது ஊடுருவினால் உருவம் இருக்கும் ஆனால் அவருடைய சிந்தனைகள் குலைந்து விடும் உடலை மாற்றிவிடும்

அது பரிசுத்தமாக எண்ணிலடங்காத வருடங்கள் ஆகிவிடும்.

அத்தகைய சூழ்நிலையில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்த உடலில் நல்ல நினைவிருக்கும் பொழுதே நாம் எதைப் பெற வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நான் சொல்வது வெறும் சொல்லாகவோ எளிதாகவோ தெரியலாம். யாம் ஏற்கனவே சொன்னது அனைத்துமே என்று விஞ்ஞானிகள் நிரூபித்துக் கொண்டுதான் உள்ளார்கள்.

சூரியனுக்குள் எரிமலைகள் உருவாகும் என்று முன்பே சொல்லியிருந்தோம். இப்போது அடிக்கடி எரிமலைகள் சூரியனில் உருவாகி அது கக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இது பரவப் பரவ பூமியில் இயங்கக்கூடிய கம்ப்யூட்டர்கள் இயங்காத நிலையில் ஆகிவிடும்.
1.அதைப் போன்று தான் மனிதனுடைய உணர்வின் எண்ணங்கள்.
2.உணர்வுகள் அழுத்தம் அதிகமானால் மனிதனுடைய செயல்கள் மாற்றம் அடைந்து விடும்.

உயிர் எலக்ட்ரிக் நாம் எடுக்கும் உணர்வுகள் அனைத்தும் எலக்ட்ரானிக் ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது… அந்த உணர்வின் செயலாகத் தான் கம்ப்யூட்டர் இயந்திரம் இயக்குகின்றது உணர்வின் உணர்ச்சிகள் அதன் வழியே இயக்குகின்றது

ஆகவே சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

1.நல்ல நினைவு இருக்கும் போதே அருள் மகரிஷிகள் உணர்வைப் பற்று கொள்ளுங்கள்.
2.பகைமை உணர்வுகளை அகற்றிப் பழகுங்கள்
3.அசுர உணர்வுகள் பரவாது அருள் ஞானிகள் உணர்வு கொண்டு நம்மை பாதுகாத்திடும் நிலையாகச் செயல்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரம் இதையெல்லாம் வென்றது. அதை எடுத்து நமக்குள் வளர்த்து இந்த உலகம் முழுவதும் பரவச் செய்து எல்லோரையும் காக்கக்கூடிய சக்தியாக நாம் செயல்படுத்துவோம்.

ஆரம்பத்திலே சூரியனைப் பார்த்து தியானிக்கும்படி சொல்லி இருந்தோம். ஆனால் சூரியன் பாழடைந்து அதற்குள் எரிமலைகள் உருவாகத் தொடங்கும் பொழுது அதை நிறுத்தி… யாரும் சூரியனைப் பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்

ஏனென்றால் அதில் உருவாக்கும் கசிவுகளை நாம் நுகர்ந்தால் அசுர உணர்வு நம்மையும் இயக்கிவிடும். ஆனால் இதையெல்லாம் வென்றது துருவ நட்சத்திரம்
1.அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் இப்பொழுது எடுக்க உங்களுக்கு பயிற்சி கொடுக்கின்றோம்
2.அதை எடுத்து வளர்த்து அனைவரையும் காத்திடும் சக்தியாக நீங்கள் செயல்படுத்துங்கள்.

ஐயப்பன்

ஐயப்பன்

 

சப்தரிஷிகள் சகலமும் அறிந்த முனிவர்கள் ஞானநிலை பெற்ற சித்தர்கள் இப்படி நம்மில் கலந்துள்ள பல பெரியவர்களின் நிலையெல்லாம் தாயின் வயிற்றில் கர்ப்பத்திலேயே வந்து பிறப்பதில்லை.

நிலையறிந்து புனிதத்தைப் போற்றும் தன்மையில் புனிதமாக்கும் எண்ணம் கொண்ட இப்பெரியவர்கள்
1.“எவ்வுடலையும் தன் உடலாக ஏற்றுத் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட முடிந்திடும்….”
2.நாம் அனைவரும் சரணம் கொண்டே வணங்கிடும் “ஐயப்ப சாமியின்” நிலையும் இந்நிலை போன்றதே.

ஒவ்வொரு முனிவரும் இம்மனித உடல் பெற்று முதல் பிறவியிலேயே சப்தரிஷி நிலைக்குத் தன் நிலையை உயர்த்தி வராத நிலையில் தான் தன் எண்ணத்தைச் செயல்படுத்த ஒவ்வொரு உடலுக்கும் வந்து புனிதத்தை நிலை நிறுத்தி வைக்கின்றார்கள்.

புனிதத் தன்மையின் ஜெபத்தைக் கொண்டு அவர்கள் எடுக்கும் ஜெப நிலைக்கும் அவர்கள் சக்தி நிலையும் பெரும் நிலையை அடைகிறது.

சப்தரிஷியும் முனிவர்களும் வந்த நிலையெல்லாம் பிறவியிலேயே அந்நிலை பெற்று வரவில்லை. பிறவி எடுத்து பிறவிப் பயனை அறிந்து வாழ்ந்து சிறுகச் சிறுக வந்ததுதான் அவர்கள் நிலையும்.

இம்மனித ஆத்மாவை நாம் பெறுவதற்கே புண்ணியம் கொண்ட நிலையில் தான் இப்பூவுலகுக்கே வந்துள்ளோம்.
1.இப்பூவுலகின் பல பிறவிகளைக் கடத்தியுள்ள நாம்
2.நாமெடுத்த இந்தப் பிறவியிலாவது உண்மை நிலைகளை அறிந்து நம் பிறவிப் பயனைக் காத்து வாழ்ந்திடலாம்.

காத்து வாழ்வதற்கே இந்நிலையில் உள்ள பல பெரியவர்களையும் சப்தரிஷிகள் ஞானிகள் ஞான சித்தர்கள் இப்படி ஒவ்வொருவரின் நிலையையும் இம்மனித ஆத்மா எடுத்த ஒவ்வொருவருக்கும் போதிக்கின்றேன்.

இன்று நாம் எல்லோரும் வணங்கிடும் ஐயப்பனின் நிலையும் இதுதான். அவர் பிறவி எடுத்துப் பிறக்கவில்லை.

பிறந்த ஒரு சிசுவை அது இறந்த பிறகு அதன் தாய் தந்தை அதை ஒரு பேழையிலே வைத்து அடக்கம் செய்து புதைத்த நிலையில் அந்நிலையில் ஆற்றுப் படுகையில் அது இருந்ததினால் அன்று வந்த பெரும் மழையும் காற்றும் பெரும் வெள்ளமும் அந்த ஆற்றுப்படுகையில் இருந்த மரப்பேழையை அடித்து வந்ததில் குழந்தைப் பாக்கியம் பெறாத அன்று ஆண்ட ஒரு அரசனின் கையில் அப்பேழை கிடைக்கும் தருவாயில் அவ்வரசன் அப்பேழையைத் திறக்கும் பொழுது உயிரற்ற நிலையில் இருந்த சிசுவின் உடலில் ஒரு முனிவரின் நிலை உடலுக்கு வந்ததினால் அவ் உடல் உயிர் பெற்றது.

அந்நிலையில் இருந்து அவ்வரசன் வளர்த்த நிலை கொண்டு நடந்தவை தான் பலவும். சிறு குழந்தையின் உடலில் சகலமும் அறிந்த முனிவரின் ஆத்மா குடி கொண்டவுடன் குழந்தை மழலையா பேசிற்று…?

சகலமும் அறிந்த ஞான முனிவரே அவ்வுடலில் குடிவந்த பிறகு அக்குழந்தையின் தன்மையில் இருந்தே அன்று வாழ்ந்த பல மக்களின் எண்ணத்தை புனிதமாக்கிடப் பல வழிகளைச் செய்தாரப்பா.

ஐயப்பன் என்ற நாமம் சூட்டிக்கொண்ட சகல நிலையும் அறிந்த அம்மாமுனிவர். அவர் இன்றும் உள்ளார் அன்றும் இருந்தார்.

வரும் இன்னல்களைப் போக்கி மனிதர்களின் மனதில் பக்தி நிலையை வளர விட்டால்தான் புனிதத் தன்மை பெற்று புனித ஆத்மாக்கள் ஆக முடியும் என்ற நல்ல ஆசீர்வாதம் தந்தே நடத்திச் செல்கின்றார்.

அவர் ஈர்க்கும் நிலையில் தான் பல பக்தர்களின் நிலை எல்லாம் புனிதம் பெற்று புண்ணியம் எய்தும் நிலையில் உள்ளதப்பா.

கடும் ஜெப நிலையில் உள்ளவரப்பா ஐயப்ப சுவாமிகள்…! இவர்கள் வணங்கும் படியிலும் கல் என்று வைத்து ஐயப்பன் என்று வணங்கும் நிலையிலும் பக்தி கொண்ட நிலையில் வணங்கிடும் இதயத்திலும் நல்வழியில் செல்வோரைத் தன் வழியில் ஜெபம் கொண்டே நல்லாசி வழங்குகின்றார் ஐயப்ப சுவாமிகள்.

எந்த நிலைகொண்டெல்லாம் அவரை எண்ணி வணங்குகின்றார்களோ அந்நிலையின் புனிதத்திற்கு என்றுமே அவர் அருளும் ஆசியும் உண்டப்பா.

ஆண்டவன் என்று நாம் வணங்கிடும் ஆண்டவர்கள் எல்லாம் இந்நிலை பெற்று… தன் ஜெபத்தினால் அருள்வதுதான் நாம் ஆண்டவனாக வணங்கிடும் ஆண்டவன்களின் நிலை எல்லாம்.

ஆண்டவன் என்று யார் உள்ளார் என்று கேட்டேன். ஆண்டவன் தான் நாமெல்லாம்.
1.ஆண்டவன் அருள் பெற்று ஆண்டவனாக உதித்த நாம்
2.நம்மைப் பேயாக்கி ஆவி உலகில் அல்லல் பட்டு அலைந்து திரியும் நிலைக்கு வந்திடாமல் “நம்மை நாம் காக்க வேண்டும்…”

அந்நிலையில் இருந்து நாம் தப்புவதற்குத் தான் இப்படிப் பல நிலைகளை உணர்த்துகின்றேன். இப்பொழுது மனிதப் பிறவியில் உள்ள நமக்கு மட்டுமல்ல இஜ்ஜெப நிலை.

நம்மைச் சுற்றிக் கொண்டுள்ள எல்லா ஆத்மாக்களுமே நல் ஜெபம் பெற வேண்டும்.
1.ஆவி உலகில் உள்ள தன்னைத்தானே துஷ்டன் ஆக்கி பேயாக அலைந்து கொண்டுள்ள எல்லா ஆத்மாக்களுமே
2.தன் எண்ணத்தையும் குரோதத்தையும் நல் நிலை ஆக்கி ஜெபம் பெற்று
3.நல்ல தாய் தந்தையரின் கர்ப்பத்தில் பிறந்து இப்பிறவியின் பயனை முடித்திட வேண்டும்.
4.உங்கள் ஜெப நிலையில் இருந்து அவர்களுக்கும் நல்ல நிலை தா…! என்றே வணங்கிடுங்களப்பா.

பத்தாவது நிலை அடையும் உயிரால் உருவாக்கப்பட்டது தான் பத்தாவது நிலை அடையும் உடல்

பத்தாவது நிலை அடையும் உயிரால் உருவாக்கப்பட்டது தான் பத்தாவது நிலை அடையும் உடல்

 

இந்த மனித உடலில் நம்மை அறியாது தீமை என்ற உணர்வுகளை வளர்த்து விட்டால் அந்த அசுர குணங்கள் கொண்டு மற்றவர்களைத் தாக்கும் நிலையே வருகின்றது

1.இந்த உடலின் இச்சை கொண்டு
2.பாசத்தால் தனக்குள் வளர்க்கும் பல தீமைகளை உணர்ந்து அதிலிருந்து விடுபடும் நிலைகள் வந்தாலும்
3.அசுர உணர்வு கொண்டு அது விளைந்த பின் மற்றவர்களை அழித்திடும் உணர்வுகள் இங்கே வருகின்றது.
4.இதை இராமாயணத்தில் (பத்தாவது நிலை) அடையும் இராவணனாகக் காட்டுகின்றார்கள்.

தான் கற்றுணர்ந்தோம் என்ற நிலையில் சர்வத்தையும் அறியும் நிலையும்… சர்வ இசைகளையும் கண்டுணர்ந்த அவன் அதன் வழி அவன் வளர்ச்சி வரும் பொழுது… சர்வ கலா சக்திகளையும் பெற்றவன் இராவணன் பத்தாவது நிலை அடையக் கூடியவன்…!

உயிரோ தசரத சக்கரவர்த்தி…! பத்தாவது நிலை அடையும் இந்த உயிர் சக்கரவர்த்தியாக மாறுகின்றது என்ற நிலையும்
1.இந்தப் பத்தாவது நிலை அடையும் உயிரால் உருவாக்கப்பட்ட்து தான் பத்தாவது நிலை அடையும் உடல்.
2.இந்த உடலுக்கும் இந்த உயிருக்கும் உண்டான வித்தியாசத்தைத் தெளிவாக வான்மீகி காட்டுகின்றார் “நம்மை நாம் அறிவதற்காக..”

நமது உயிர் எத்தனையோ கோடிச் சரீரங்கள் நடந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு சரீரத்திலும் புல்லைத் தின்றோம் தழைத் தாம்புகளைத் தின்றோம் கனிகளைத் தின்றோம் மனிதனான பின் சுவை மிக்க உணவைப் படைத்துச் சாப்பிடும் “இந்த மனித உடலைப் பெற்றோம்…! இந்தப் பிள்ளை யார்…?” என்று தன்னைச் சிந்திக்கும்படி செய்கின்றார்கள்.

ஆனால் அதே சமயத்தில்
1.உயிரால் வளர்க்கப்பட்ட உணர்வுகள் ஒவ்வொன்றும் தன் உணர்வுக்கொப்ப உடலை அமைத்து
2.அந்த உணர்வுக்கொப்ப உடலைக் காத்திடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து
3.அதிலே வளர்ச்சி பெற்றவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன்.

அவன் நிலைகளை நாம் எண்ணிப் பார்ப்பதற்குக் காவியத்தை அப்படிப் படைத்துக் காட்டுகின்றனர். அதாவது…
1.நஞ்சை வென்று விண்ணுலகம் சென்று உணர்வை ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும்
2.அகஸ்தியன் துருவனாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி அருள் ஒளி பெற்று அருள் ஞானம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்து
3.இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி ஒளியாக இன்றும் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும்
4.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று நம்மை எண்ணி ஏங்கும்படிச் செய்கின்றார்கள்.

அதை யாராவது நாம் இப்பொழுது எண்ணுகிறோமா…? என்றால் இல்லை.

சித்தர்கள் கடும் தவமிருந்த “மண்டலக் கணக்கு”

சித்தர்கள் கடும் தவமிருந்த “மண்டலக் கணக்கு”

 

நம் முன்னோர்கள் ஜெபித்த நிலை பூஜை முறை எல்லாமே அன்று இருந்த சித்தர்களின் ஜெப நிலையில் இருந்து அறிந்து வெளியிட்ட சக்தி நிலைகளை வைத்துத் தான்… நம் முன்னோர்கள் ஆண்டவனை நாம் ஜெபிப்பதற்குக் கோவில்கள்… பூஜை முறை என்று பல வழிகளை நமக்கு உணர்த்தினார்கள்.
1.48 மண்டலங்களின் தொடர்புடைய இப்பூமியின் ஈர்ப்பு நிலையை உணர்ந்து
2.48 மண்டலங்களில் இருந்து நாம் பெறும் சக்தி நிலையை வைத்துத்தான் இப்பூமியின் நிலை உள்ளது.

இப்பூமியில் தோன்றியுள்ள உயிரினங்களும் மனித உடல் பெற்ற இவ்வாத்மாக்களும் இப்பூமியில் உள்ளதைப் போல் இப்பூமியைச் சுற்றியுள்ள மண்டலங்களின் தன்மையில் மாறுபட்டுள்ளது.

இம்மனித ஜீவாத்மாக்கள் இந்த 48 மண்டலங்களிலும் இல்லை. இந்த 48 மண்டலங்களின் சக்தி கொண்டு தான் பூமியில் உள்ள மனிதர்களின் நிலை எல்லாம் உள்ளன.

இப் பூமியின் நிலையே இக்கலி முடிந்து கல்கி வந்த பிறகு பெறக்கூடிய உயிர் நிலைகளின் உருவ அமைப்புகள் மாறுபட்ட தன்மையில் தான் புதிய உயிரணுக்கள் எல்லாம் தோன்றும் நிலையில் உள்ளது.

1.மனிதன் பெண் ஆண் என்ற இன வேறுபாட்டுடன் வாழும் தன்மையில் இன்றுள்ள நிலை
2.அடுத்து வரும் கல்கி நிலையில் மாறுபட்ட நிலையில் தான் வருகின்றது.
3.வரும் உண்மைகளை இன்றே நாம் பகர்ந்து விட்டால் பல சித்தர்களின் கோபத்திற்கு ஆளாகும் நிலை நமக்கு எதற்கு…?

இந்நூலில் நாம் அறிந்த பல உண்மைகளை சிறுக சிறுகத்தான் அருளி உள்ளோம். இந்நிலையில் இன்னும் “பல உண்மை நிலைகள்” உள்ளன. அவரவர் எடுக்கும் ஜெப நிலையை கொண்டு அறிந்திடலாம்.

அனைத்தையுமே. ஒரு மண்டலம் – 48 நாள் என்ற ஜெப நிலையை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியதும்…
1.நமக்கு முதலில் இருந்த சித்தர்கள் கடும் தவம் இருந்த நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டலத்தின் சக்தியை ஈர்த்தெடுத்து
2.ஒரு மண்டலம் என்ற 48 நாளை ஜெபத்திற்கு உகந்ததாக எடுத்து ஜெபம் பெற்று அறிந்தனர் பல உண்மைகளை.
4.அதன் வழியில் வந்தது தான்… இன்று ஒரு மண்டலம் 48 நாள் என்னும் முறையயெல்லாம்.

நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்திய பல முறைகளை நாம் ஊன்றிப் பார்த்தால் ஒவ்வொன்றின் உண்மை நிலையும் நமக்கு புரிந்துவிடும்

நம் கண்ணிற்கு நாம் சாதாரணமாகப் பார்க்கும் பொழுது கணக்கில் அடங்க நட்சத்திரங்களைக் காணுகின்றோம். புள்ளி போல் நாம் காணும் நட்சத்திரங்கள் எல்லாம் நாம் வாழும் பூமியை காட்டிலும் பல மடங்கு பெரிய மண்டலமாகச் சுற்றி வாழ்கின்றன.

1.இம் மண்டலங்களில் பல மண்டலங்களில் நம்மை ஒத்த இம்ம மனித உடலை பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன.
2.நம்மைக் காட்டிலும் திறம் பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன பல மண்டலங்களில்.

ஆனால் நம் பூமியைச் சுற்றியுள்ள நாம் காணும் சூரியனிலிருந்து இந்த 48 மண்டலங்களிலுமே நம்மை ஒத்த மனித உடல் கொண்ட ஜீவாத்மாக்கள் இல்லை.

நம் சூரியனைக் காட்டிலும் இன்னும் வேகமாகச் சுழலும் பல சூரிய மண்டலங்கள் உள்ளன. இவ்வுலகிலே நாம் இப்பிறவி எடுத்து வாழும் பாக்கியத்தை ஜெபம் பெற்று எண்ணத்தையும் நினைவையும் என்றும் நாம் பெற்ற சக்தியை அழியாச் சக்தி ஆக்கி
1.இக்கலி எனும் காலத்தில் மீண்டும் கல்கியுடன் கலந்து வாழும் பக்குவ நிலைக்கு
2.நம்மை நாம் பக்குவப்படுத்தும் நிலைக்கு வந்திடவே
3.இப்பாட நிலைக்கு ஈஸ்வரபட்டனாகிய நான் ஆசை என்னும் நிலை கொண்டே இந்நிலையில் வந்து அருளியுள்ளேன்.
4.ஒவ்வொருவரும் கால நிலையை கடத்திடாமல் அருள் பெறுங்கள்

இவ்வுலகில் பல நிலைகளை இன்னும் உங்களுக்கு விளக்குவேன்.

உணர்வுகளின் கலவைகளையும் அது நம்மை இயக்குவதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்

உணர்வுகளின் கலவைகளையும் அது நம்மை இயக்குவதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்

 

உதாரணமாக ஒரு மனிதன் கோபமாகப் பேசுகிறான் என்றால்… அவனுக்குள் விளைந்த கோபமான உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவருமே என்றால் அதன் உணர்வின் தன்மையை மற்றொரு மனிதன் நுகர்ந்தால்… அந்த உணர்ச்சியின் தன்மை அவனுக்குள் வந்து பெண் சக்தி என்ற நிலைகள் “காளியாக” மாறுகின்றது.

உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் உணர்ச்சியின் வேகங்கள் வரும் பொழுது அந்த எண்ணங்கள் வருகின்றது.

ஆக… கண் கொண்டு ஒருவர் தவறு செய்யும் உணர்வினைக் கண் கருவிழி பதிவாக்கித் தன் உடலுக்குள் வைத்துக் கொண்ட பின் இந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் இந்த எண்ணங்கள் வருகின்றது.

அந்த எண்ணங்கள் வரும் பொழுது தான்
1.கோபத்தின் நிலை கொண்டு இந்த உணர்வுகள் இவன் எப்படிக் கோபப்பட்டானோ
2.அதே மாதிரி இந்த உணர்வுகளைத் தூண்டச் செய்து அந்த உணர்வின் அறிவாக அங்கே இயக்குகின்றது.

ஆனால் அவன் நுகர்ந்த உணர்வுகள் காளியாகி உடலான “சிவன் ருத்ர தாண்டவமாக” அந்த உணர்ச்சிக்கொப்ப உடலின் அங்கங்களும் அசைவுகளும் வருகின்றது.

அதே சமயத்தில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை நமக்குள் எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவித்து அரவணைக்கும் தன்மை வருகின்றது.

மகிழ்ச்சி பெறும் உணர்வை ஒரு மனிதன் வெளிப்படுத்துகின்றான் என்றால்… கண்ணில் உள்ள கருவிழி அந்த மகிழ்ச்சி பெறும் மனிதனைப் பதிவாக்கி விட்டால்
1.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா அவன் மகிழ்ச்சி பெறும் உணர்வினை நாம் நுகரப்படும் பொழுது
2.உயிரிலே பட்டபின் இனிமையான நாதங்களாக வாசிக்கின்றது.

உதாரணமாக நான் உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாய் தனது நிலைகளுக்கொப்ப குரைக்கப்படும் பொழுது “இடைமறித்தால்” எப்படி வருகின்றது…?

1.உபதேசத்தைக் கூர்ந்து கேட்க வேண்டும் என்ற எண்ணமும்
2.நாய் குரைத்து அதைக் கேட்க விடாது இப்போது தடைப்படுத்துகிறதே…! என்ற உணர்வும் இந்த இரண்டும் கலந்த எண்ணங்களாக நமக்கு வருகின்றது.

ஆகவே நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ இது கலவையின் உணர்வின் தன்மையாக அணுவாக உருவாக்குவது இந்திரீகம் என்பது. ஆகவே இந்த உடலில் இந்திரலோகம் என்று அதைக் காரணப் பேர் வைத்து அழைத்தார்கள்.

நல்ல உணர்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு எதிர்மறையான உணர்வு இரண்டும் கலக்கப்படும் பொழுது
1.நமது உயிர் இதனை நன்மை என்று கருதினாலும் இந்த உணர்ச்சிகள் நமக்குள் அதன் மீது “வெறுப்பான உணர்வுகளும்” கலக்கின்றது.
2.வெறுப்பு கலந்த பின் நம் உடலுக்குள் அது இந்திரீகமாக மாறுகின்றது
3.சாமி நன்றாக பேசிக் கொண்டிருந்தார்… இந்த நாய் குரைத்தது கேட்க முடியாமல் போய்விட்டது…! என்று திரும்பத் திரும்ப எண்ணினால்
4.இந்த உணர்வின் “அதிர்வுகள்” அடுத்தாற் போல் அந்த அணுவின் தன்மை அடைகின்றது.

நாம் நல்ல நிலைகளைச் செயல்படுத்தி வந்தாலும் இதே குணங்கள் என்ன செய்யும்…?

கண்ணால் பார்க்கப்பட்டது ஹரி கிருஷ்ணா. சூரியன் ஹரி…! அந்த உணர்வின் தன்மை தனக்குள் பதிவாகிய நிலைகள் வந்தாலும்… செவி வழி கொண்டு உணர்வின் தன்மை வரும் பொழுது… நினைவு அதன் பால் கவர்ந்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து “இரண்டும் கலந்து” அது இந்திரீகமாக மாறுகின்றது.

அவ்வாறு இந்திரீகமாக மாறினால் அதன் உணர்வின் தன்மை மீண்டும்… “சாமி அன்றைக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்… அதைக் கேட்க விடாது நாய் குரைத்துக் கொண்டே இருந்தது…” என்ற அந்த உணர்வும் கலந்து கலந்து இதன் அணுவின் தன்மையாக விளையும் தன்மை வந்து விடுகின்றது.

அப்படிப்பட்ட அணுத்தன்மை அடைந்து விட்டால் பிரம்மா…! நான் சொன்ன உணர்வும் நாய் குரைத்த உணர்வுகளும் கலக்கப்பட்டு அந்த உணர்வின் இயக்கமாக அணுவின் தன்மை அதையே உணவாக எடுத்து நமக்குள் இந்திரலோகத்தில் சேர்கின்றது.
1.நல்ல கருத்துக்களைக் கேட்க விரும்பினோம்
2.இடைமறித்து நாய் குரைத்துத் தடுத்தது என்ற எண்ணங்களும் வரும்.

இதே போன்று நீங்கள் யாரிடமும் எடுத்து இதைச் சொல்லும் பொழுது நல்ல செயல்களை செய்தாலும் அடுத்து எவராவது இடைமறித்தால் தாங்கும் நிலை இல்லாது “அவர் மீது வெறுப்பின் உணர்வு கொண்டு” நல்ல வார்த்தை இல்லாதபடி நம்முடைய சொல்லும் சொல்ல வேண்டி வரும்.

ஆக மையமாக இருந்து… சொல்வதைக் கேட்டாலும் அவருக்குள் என்ன இப்படிப் பேசுகின்றார்…? என்று வெறுப்பின் தன்மை வரும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சந்தர்ப்பம்…!
1.உணர்ச்சியின் தன்மை செவி வழி உந்தி
2.கண் வழி அந்த உணர்வினை நுகரும் தன்மையும்
3.நுகர்ந்த உணர்வு உயிரின் தன்மை கொண்டு உணர்ச்சிகளின் தன்மை உடலை இயக்குவதும்
4.அதற்குள் எண்ணம் சொல் செயல் என்ற நிலைகளை எப்படி உருவாக்குகின்றது…? என்பதனை
5.நமது குருநாதர் ஒவ்வொரு நிலைகளிலும் அனுபவரீதியிலே எம்மை அறியும்படி செய்தார்.

தன்னைத்தானே அழிக்கப் பார்க்கும் “அழிவு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்…?”

தன்னைத்தானே அழிக்கப் பார்க்கும் “அழிவு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்…?”

 

ஜீவனுள்ள மண்டலம் ஜீவனற்ற மண்டலம் என்று இரண்டு நிலை பெற்ற மண்டலங்கள் பல சுற்றி கொண்டுள்ளன. ஜீவனுள்ள மண்டலங்களைப் பகர்ந்துள்ளேன் பல நிலையில்.

ஜீவனற்ற மண்டலம் எந்நிலையில் வந்தது…? அஜ்ஜீவனற்ற மண்டலங்களில் ஒலி ஒளி காற்று நீர் மற்ற ஜீவராசிகள் எவையுமே அந்நிலையில் இல்லை.

வெறும் கல்லும் மண்ணும் கலந்த பெரும் பெரும் கோளங்களாக இருண்ட நிலைகள் கொண்டு அந்தரத்தில் அப்படியே நிற்கும் நிலையில் பல மண்டலங்கள் உள்ளன.
1.அம்மண்டலங்கள் மற்ற மண்டலங்களுடன் மோதும் தன்மையும் இல்லை
2.சூரியன் தன்னுள் அதை ஈர்க்கும் தன்மையும் அதற்கு இல்லை… ஜீவனே இல்லாமல் உள்ளன அம்மண்டலங்கள்.
3.வளர்ச்சியும் இல்லை குறைவும் இல்லை…
4.எந்த நிலையில் அது பிற மண்டலத்தில் இருந்து ஜீவன் இல்லாத நிலையில் உதிர்ந்ததுவோ
5.அதே நிலையில் அந்த நிலை கொண்டே அது உள்ளது… அம் மண்டலங்களுக்கு ஒலியும் இல்லை.

இப்பொழுது பூமி சுற்றும் வேகத்தில் ஓ…ம் ஓ…ம் என்ற ஒரு நிலை கொண்ட நாதத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. அந்நாதத்திற்குத் தகுந்த மணங்களைத் தான் நாம் பெறுகின்றோம்.

நம் பூமிக்கு மேல் பெரிய பூமியான வியாழனின் நாதம் வேறுபடுகின்றது. நம்மைக் காட்டிலும் சிறிய மண்டலமான சந்திரன் செவ்வாய் இப்படிப் பல மண்டலங்களின் நாதமும் வேறுபட்டுத் தான் உள்ளது.

அதனதன் ஈர்ப்புத் தன்மையைக் கொண்டும் அவை சுற்றும் நிலையைக் கொண்டும் அவற்றின் நாதம் வேறுபடுகின்றது.
1.சூரியனின் வேகம் வெகு துரிதமாக உள்ளதால் அதனுடைய வேகத்தைக் கொண்டு
2.அதனுடைய ஓங்கார இசை பெரும் ஓசையான “ஓ-ஓ…” என்றே தான் அதுவும் சுற்றுகின்றது.

இம்மண்டலங்களின் ஒவ்வொன்றின் நிலையையும் ஊன்றிப் பார்த்தால் பல உண்மை நிலைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளலாம்.

இப்பொழுது இப்பாடநிலையில் வரும் மண்டலங்களின் தன்மையை வைத்து இதைப் படித்திடும் ஒவ்வொருவரின் நிலைக்கும்
1.அவரவர்களின் நிலைக்கு ஏற்ப எண்ணங்கள் தோன்றி இந்நிலையின் தத்துவம் உண்மையா…? என்ற வினாவும் எழுந்திடலாம்.
2.இந்நிலை கொண்ட வினா எழும்பத்தான் இப்பாட நிலையே வந்துள்ளது.

கண்டார் விண்டதில்லை விண்டார் கண்டதில்லை என்று உரைப்பர் நம் முன்னோர். நாம் நம் ஜெப அருளினால் கண்டுள்ளோம் இவ்வுண்மையை. நாம் அறியா உண்மை பலவும் உள்ளன.

இவ்வுலகினில் உதித்துள்ள மனித உயிரணுக்கள் எல்லாம் தாம் செய்யும் ஜெப நிலையால்
1.நாம் வேறல்ல இவ்வுலகம் வேறல்ல இவ்வுலகைச் சுற்றியுள்ள பிற மண்டலங்கள் வேறல்ல. தனித்து நிற்பவை எவையும் இல்லை.
2.எல்லாவற்றிலுமே எல்லாமாகக் கலந்துள்ள நாம்… நம் உயிராத்மாவை பெரும் சக்தியுள்ளதாக ஆக்கி… சகல நிலையையும் ஈர்த்தெடுத்து அறிந்திடலாம்.
3.இவ்வுலகத்தின் உண்மை மட்டுமல்ல பல மண்டலங்களின் நிலையையும் அறிந்திடலாம்.

ஆனால் இன்று நம்மில் இருந்து நம்முடன் கலந்து பிறந்த பல ஜீவாத்மாக்கள் விஞ்ஞானத்தின் துணை கொண்டு தன்னைத்தானே அழிக்கும் நிலையில் ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்திற்குச் செல்லும் நிலைக்காகப் பல நிலைகளை விஞ்ஞானத்தில் சென்று காண பல முயற்சிகளைச் செய்கிறார்கள்.

நல்வழிக்குச் செய்திடலாம். ஆனால் ஒருவர் செய்வதை ஒருவன் அழிப்பதற்காக இவ்வுலகின் காற்று மண்டலத்தில்… காற்று மண்டலத்திற்கு மேலும் பல நிலை கொண்ட விஷ ஊசிகளை (இராக்கெட்டுகளை) ஏவி விட்டிருக்கின்றார்கள்.

அவன் செய்து அனுப்பிய விஷ ஊசிகள் அவனைத் தாக்காத நிலை கொண்டு அவன் அனுப்பும் கூடுகளை அவ்விஷ ஊசிகள் வந்து தாக்கினாலும் பாதிக்காத தன்மையில் பல நிலைகளில் பறக்க விட்டுள்ளான்.

பிற மண்டலங்களின் நிலையை அறிந்திட தன்னைத்தானே அழித்து ஒருவனுக்கு மேல் பொறாமை கொண்டு விஞ்ஞானம் என்ற நிலையில் காலத்தைக் கடத்திக் கொண்டு ஏனப்பா அந்த நிலை பெற வேண்டும்…?

அன்றிலிருந்து இன்று வரை பல சித்தர்கள் பல உண்மை நிலைகளைத் தன் எண்ணத்திலும் தன் ஜெபத்திலும் ஈர்த்து எடுத்துத் தன் உடலுடனே பறந்து பல மண்டலங்களுக்குச் சென்று… பல ஆற்றல்களை அறிந்து அவர்கள் எழுதிய பல நூல்கள் தானப்பா… இன்றைய விஞ்ஞானிகள் ஆராயும் தன்மை கொண்டு நடத்தி வரும் நாடகங்கள் எல்லாம்.

அந்நாடகத்தின் நிலையினால் தன்னைத்தானே அழிக்கப் பார்க்கும் அழிவு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்…?

உண்மை நிலைதனை ஜெப நிலை கொண்டு அறிந்திடத் தான் நாம் அறிந்த உண்மைகளை இந்த நூல் வழியில் ஒவ்வொருவரும் அறிந்து நல் ஜெபம் பெற்று நடத்திடத் தான் இப்பாட நிலை.

இப்பாட நிலையில் உள்ள கருத்துக்களின் உண்மையை அறிந்திட ஒவ்வொருவருமே ஜெபத்தில் இருந்து கண்டிடலாம்.
1.எல்லோருமே அச்சக்தியின் சக்திகள் தான்
2.ஜெபம் பெறும் நிலையில் இது உண்மைகளை எல்லோரும் அறிந்திடலாம்.

அகஸ்தியன் வெளிப்படுத்திய எண்ணங்களையும் உணர்வுகளையும் மூச்சலைகளையும் நாம் நுகரப் பழக வேண்டும்

அகஸ்தியன் வெளிப்படுத்திய எண்ணங்களையும் உணர்வுகளையும் மூச்சலைகளையும் நாம் நுகரப் பழக வேண்டும்

 

பிறந்த பருவத்திலிருந்து அகஸ்தியன் வானை நோக்கி உற்றுப் பார்த்த்துப் பல பல நிகழ்ச்சிகளைக் காணுகின்றான் அவனை அறியாமலே.

அதாவது… சூரியனின் இயக்கத்தின் நிகழ்ச்சிகளும்… அது நஞ்சைப் பிரிக்கும் நிலையும் தனக்குள் ஒளியின் சக்தியாக மாற்றிக் கொள்வதும்… மாற்றியது தனக்குள் பாதரசங்களாக மாறுவதும்… சுழற்சியிலே வெளிப்படும் இந்தப் பாதரசங்கள் பிற நட்சத்திரங்களிலிருந்தும் மற்ற கோள்களிலிருந்தும் தன் ஈர்ப்புக்குள் வரும் அந்தச் சக்திகளை மோதி… விஷத்தைப் பிரித்துத் தனக்குகந்ததாக இப்படி மாற்றிக் கொண்டே வருகின்றது சூரியன்.

இதையெல்லாம் அகஸ்தியன் கண்டுணர்ந்து தனக்குள் விளையச் செய்தபின்
1.அவனுக்குள் அதனின் எண்ணத் தோற்றங்கள் வருகின்றது
2.மனிதனான பின் இந்த உணர்வின் எண்ணங்கள் வருகின்றது… அந்த மூச்சலைகள் வெளிப்படுகின்றது
3.சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது.
4.வளரும் பருவத்தில் “நஞ்சை வென்றிடும் உணர்வாக” அகஸ்தியன் நுகரப்படும் பொழுது அவனுக்குள் அந்தச் சக்தி வளர்கின்றது.

27 நட்சத்திரங்களும் கடுமையான விஷத்தன்மை வாய்ந்தது. ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொரு நட்சத்திரத்திற்கும் வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி ஒன்றுடன் ஒன்று மோதும் போது தான் “மின்னலாக மாறுகின்றது…. அந்த மின் பொறிகள் வீரியமாக வெளி செல்கிறது…”

விஞ்ஞான அறிவு கொண்டு கரண்டை உற்பத்தி செய்யும் பொழுது இரண்டு கரண்ட் வயர்களை இணைத்தால் எப்படிப் பொறிகள் கிளம்புகின்றதோ இதைப் போன்று தான் அந்த மின்னலின் இயக்கப் பொறிகள் கிளம்பி ஒளி அலைகளாக மாறுகின்றது.

1.அந்த விஷத்தினை அகஸ்தியன் நுகர்வதால் இவனுக்குள் அடங்குகிறது.
2.அதாவது அவன் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதை ஒடுக்கி ஒளியின் உணர்வாக மாற்றிடும் சக்தியாகப் பெறுகின்றான்.

ஆரம்ப நிலைகள் மனிதனாக வளர்ச்சி பெற்ற நிலையில் இத்தகைய தன்மை அவனுக்குள் விளைகின்றது.
1.அவனில் விளைந்த அத்தகைய உணர்வுகளும்
2.நஞ்சை ஒடுக்கிய சக்திகளும்
3.அதை ஒளியாக மாற்றிய உணர்வுகளும்
4.சூரியனுடைய காந்த சக்தி கலந்து இன்றும் நம் பூமியில் படரச் செய்துள்ளது.

சூரியனின் இயக்கத்தையும் அதே சமயத்தில் நட்சத்திரத்தின் செயலாக்கங்களையும்… மின்னலாகத் தாக்கப்பட்டு அதனுடைய நிலைகள் பிரிக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஆவியாகச் செல்வதும்… வான மண்டலங்களில் மேகமாகச் செல்வதையும்… அந்த மேகத்தின் தன்மையை சனிக்கோள் தன் சுழற்சி வட்டத்தில் கவர்ந்து உறை பனியாக மாற்றுவதும்… அந்தச் சுழற்சியின் தன்மை அதனுடைய காலப்பருவம் சூரியனின் ஒளிக் கதிர்கள் அதிலே தாக்கப்படும் பொழுது கரைந்து ஆவியாகச் செல்வதும்… இந்த ஒளிக் கதிருக்குள் அது கவரப்பட்டு மற்ற கோள்களின் உணர்வைத் தனக்குள் கவர்ந்து வரும் பொழுது அந்த அணுக்களாக வளர்ச்சி பெறும் சக்தியாக வருவதையும்… “அது எவ்வாறு…?” என்று துருவன் காணுகின்றான்.

சிறு பருவத்தில் இதை எல்லாம் அகஸ்தியன் கண்டுணர்ந்தாலும்
1.வளர்ச்சியின் பருவத்தில் அவன் கவர்ந்த உணர்வுகள் அதை வெளிப்படுத்தும் போது எண்ணங்களாகவும்
2.வடிவமைத்து செயல்படும் உணர்வின் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றான்.
3.அவ்வாறு வெளிப்படுத்தும் போது சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கும்
4.அகஸ்தியனுடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் மூச்சலைகளையும் நாம் நுகர்ந்தால்
5.அதே எண்ணங்கள் அதே உணர்வுகள் நமக்குள் வந்து அவன் அறிந்தது போன்று
6.நாமும் அறியக்கூடிய ஆற்றலாக அறியும் தன்மையாக வருகின்றது

ஒலி(ளி)மயமான உலகம்

ஒலி(ளி)மயமான உலகம்

 

இவ்வுலகிற்கு “காற்று தண்ணீர் ஒலி” இம்மூன்றும் எப்படி முக்கியமோ அதைப் போல் தான்
1.இம்மூன்றையும் பெறுவதற்கு ஆதி முதலாம் “ஓம்” என்ற நாதத்தை எழுப்பும் சப்த அலையும் மிகவும் முக்கியம்.
2.”சப்த அலை” இல்லாவிட்டால் காற்று வீசிட முடிந்திடாது.
3.அக்காற்று இல்லாவிட்டால் ஒளி பெற்றிட முடியாது.
4.அவ்வொளிக் கதிர்களிலிருந்து வரும் நீரின் நிலையும் நாம் பெற்றிருக்க முடியாது.

இம்மூன்றிற்கும் மூலமான அச்சப்த அலைகள் நாம் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை நமக்கு அருளும் நிலை “வியாழன் மண்டலத்திற்குத் தான்” கிடைத்துள்ளது.

வியாழன் மண்டலம் இப் பூமியை விட பத்தில் ஒரு மடங்கு அளவு தான் சுற்றலின் வேகம் உள்ளது. நாம் இங்கு பத்து நாள் என்று கணக்கிடும் நாள் வியாழனில் ஒரு நாள் தான். நீண்ட பகலும் நீண்ட இரவும் கொண்டதுமே வியாழன் மண்டலத்தின் நிலை.

இப்பூமிக்கு மேல் பெரிய மண்டலம் அது. பெரிய மண்டலம் என்பது வியாழன் மண்டலத்தில் மூன்றில் ஒரு பகுதி தான் பூமியின் நிலை உள்ளது

அந்த வியாழன் மண்டலத்திலிருந்து தான் “சப்த அலைகள்” காற்றுடன் கலந்து அச்சூரியனின் அதிவேகச் சுற்றலில் அவ்வியாழன் மண்டலத்திலிருந்து வரும் சப்த ஒளிக்கதிர்களை ஈர்த்து இப்பூமிக்கும் மற்ற மண்டலங்களுக்கும் இச்சூரியனிலிருந்து சூரியனின் ஒளிக்கதிர்களைப் பெறும் எல்லா மண்டலங்களுக்குமே இச்சப்த அலைகளைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் உள்ளது.

இச்சப்த அலைகளிலிருந்துதான் நாம் நுகரும் தன்மையும் வருகின்றது. முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன். அவ்ஒலியிலிருந்து கலந்து தான் நமக்கு மணமும் பெற முடிகின்றது என்று.

அம்மணம் எல்லா வகை மணம் பெறுவதற்கும் அச்சப்த அலைகளினால் தான் நாம் பெற முடியும்.
1.வியாழன் நிலை இல்லாவிட்டால் இச்சப்த அலைகளும் இல்லை.
2.சப்தத்திலிருந்து ஒளியும் காற்றும் நீரும் பெறும் நிலையும் இல்லை.

இச்சூரியனைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மண்டலங்களிலிருந்தும் ஒவ்வொரு நிலை கொண்ட அணுக்கதிர்களை அச்சூரியன் பெற்றுத் தான் நமக்கு அளிக்கின்றது எல்லா நிலைகளையுமே.

மழை வருவதற்கும் நீர்நிலை பெறுவதற்கும் செவ்வாய் மண்டலத்தின் நிலையைப் பற்றி விளக்கினேன். அச்செவ்வாய் மண்டலத்திற்கு வியாழனிலிருந்து அணுக்கதிர் சூரியனின் மேல் பட்டு… அச்சூரியனிலிருந்து பாயும் தன்மையில் செவ்வாய் மண்டலம் ஈர்த்து வெளியிடும் நிலையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே இப்பூமி பெறுகின்றது.

இப்பூமியைப் போல ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு நிலை உள்ளது. இப்பூமியிலிருந்து சில நிலைகள் இவ் பூமியை நேர்கொண்டுள்ள மண்டலங்களுக்குப் பெற்றுக் கொள்ளும் தன்மையும் உள்ளது.

நாம் இங்கிருந்து பார்க்கும் பொழுது சந்திரனின் நிலை எப்படிக் குளிர்ந்து காணப்படுகின்றதோ அதே நிலை கொண்டுதான் பூமியின் நிலையையும் சந்திரனிலிருந்து கண்டிடலாம்.

சூரியனிலிருந்து சூரியனை மையமாக வைத்துச் சுற்றி கொண்டுள்ள எல்லா மண்டலங்களின் நிலையும் இந்த நிலை கொண்டு தான் நாம் சந்திரனைக் காணும் நிலை கொண்டு தான் குளிர்ந்த நிலையில் காணப்படுகின்றது.

1.எல்லா மண்டலங்களின் அணு சக்தியை ஈர்த்துச் சுற்றும் தன்மை உள்ளதால் தான் சூரியனின் வேகம் துரிதப்படுகின்றது.
2.சூரியனின் வேகம் துரிதமாகச் சுற்றுவதால் தான் அதன் ஒளியும் மற்ற எல்லா மண்டலங்களுக்கும் அதிகமாகப் பெறும் பாக்கியம் பெற்றுள்ளது.

சூரியனை மையமாக வைத்துச் சுற்றி கொண்டுள்ள மண்டலங்களைப் போல பல சூரியன்களும் பல மண்டலங்களும் ஜீவனுள்ள மண்டலங்களும் ஜீவன் பெறாத மண்டலங்களும் கணக்கில் அடங்கா நிலை கொண்டு சுற்றி கொண்டுள்ளன.