“நமது பற்று” என்றுமே மகரிஷிகளின் பால் இருத்தல் வேண்டும்

“நமது பற்று” என்றுமே மகரிஷிகளின் பால் இருத்தல் வேண்டும்

 

எந்தச் சந்தர்ப்பத்தில் எத்தகைய தீமைகளைக் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

கஷ்டம் என்று கேட்டாலும் அல்லது பார்த்தாலும் அவர்களுக்கு மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்மை நடக்க வேண்டும் என்று இந்த உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்போது நமக்குள் தீமை விளைவிக்கும் அணுக்கள் வளர்ச்சி பெறாது தடுக்க முடிகின்றது
2.நமக்குள்ளும் அந்தக் கஷ்டங்களைக் குறைத்திட முடியும்.

அடிக்கடி அடிக்கடி துருவ நட்சத்திரத்தினை எண்ணி
1.அதைப் பற்றுடன் பற்றி
2.இந்த வாழ்க்கையில் வரும் மற்றதை எல்லாம் பற்றற்றதாக மாற்றிடும் ஒரு பழக்கம் வந்து விட்டால்
3.உடலை விட்டு அகலும் நமது உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்துவிடும்
4.மரணமில்லா பெரு வாழ்வு அடைய முடியும்.

அந்த நிலை பெற ஒவ்வொருவரும் மறவாது அவரவர் தாய் தந்தை உயிரைக் கடவுளாக மதித்தல் வேண்டும்… நம்மைக் காத்தருளிய தெய்வமாக மதிக்க வேண்டும்… நல் வழியினை நமக்கு முதலில் போதித்த குருவாகவும் மதித்தல் வேண்டும்.

மனிதனாகப் பிறந்த நாம் இதை மறந்து விடக்கூடாது.

நமது உயிரும் கடவுளாகின்றது நமது எண்ணங்களும் தெய்வமாகின்றது நமது நல்ல சொல்களும் குருவாகின்றது.

ஆனால் தீமை என்று சொன்னால் அது தீமை விளைவிக்கும் குருவாகவே மாறி விடுகின்றது. தீமையை எண்ணும் போது தீமை செய்யும் தெய்வமாக நமக்குள் உள் நின்றே இயக்கும்.

நாம் எண்ணியதை உருவாக்கும் நிலைபெற்றது நமது உயிர்
1.ஆகவே நாம் எண்ண வேண்டியது எது…?
2.நமக்குள் உருவாக்க வேண்டியது எது…? என்று
3.மனிதன் ஆன பின் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கார்ணம்… பல கோடிச் சரீரங்களில் துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துத் தன்னைக் காத்திடும் வலுக் கொண்ட உணர்வை… அந்த்த் தப்பித்துச் செல்லும் உணர்வை எடுக்கும் பொழுது அதனின் வலிமை பெற்றுத் தான் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்துள்ளோம்.

அப்படி நம்மை வளர்ச்சியின் பாதையில் கொண்டு வந்த “உயிரை” நாம் மதித்தல் வேண்டும். உயிரைக் கடவுளாக மதித்து அந்த உணர்வால் ரூபம் பெற்ற உடலையும் சிவமாக மதித்தல் வேண்டும்.

நாம் எண்ணிய குணங்கள் அனைத்தும் நன்மை பயக்கும் சக்தியாக தீமைகள் சேராத வண்ணம் தடுக்கும் அந்த ஆறாவது ஆறறிவின் தன்மையை நாம் போற்றித் துதித்தல் வேண்டும்.

இதை இழந்துவிட்டால் மனிதன் அல்லாத உருவாகத்தான் செல்ல வேண்டி வரும். ஆகவே நாம் ஆறாவது அறிவைப் போற்றிக் காத்தல் வேண்டும்.

1.ஆறாவது அறிவு எத்தகைய தீமைகளையும் அகற்றும் வல்லமை பெற்றது… நல்ல சிந்தனையும் ஞானமும் கொடுக்கின்றது.
2.நல் சிந்தனையும் ஞானத்தையும் வளர்த்துக் கொண்டால் உடலை விட்டுச் சென்றால் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுவோம்…
3.அடுத்து இன்னொரு பிறவிக்குச் செல்லாதபடி உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடும்
4.பேரின்ப பெருவாழ்வு என்று மரணம் இல்லாப் பெருவாழ்வு என்ற நிலை அடைய முடியும்.

ஆக இந்தப் பிரபஞ்சத்தில் உயிரணு தோன்றி மனிதனாக உருப்பெற்ற பின் நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் ஒளியைப் பெற்று அருள் ஞானம் பெற்று பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.

அகண்ட உலகில்… அகண்ட பேரண்டத்தில்… இன்று நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும்… அகண்ட பேரண்டத்தில் வரும் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற முடியும்.

மனிதனான பின் தான் இந்த நிலையைப் பெற முடியும்.

அருள் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வினை நமக்குள் வளர்த்துக் கொள்ளக் காலை துருவ தியானத்தில் அந்த அருள் சக்தியைப் பெறுவோம். அறியாது வரும் தீமைகளை அகற்றுவோம்.

நம்மைப் பார்க்கும் அனைத்துக் குடும்பங்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் படரச் செய்வோம் அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்பெறச் செய்வோம்.

ஆக… இந்த மனித வாழ்க்கையில்
1.அருள் ஒளி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நாம் வளர்த்துக் கொள்வதே நல்லது
2.அதை நாம் பற்றுடன் பற்றினால் இன்றைய செயல் நாளைய ஒளிச் சரீரமாக ஆகின்றோம்.

தியான நிலையும் சுவாச நிலையும்

தியான நிலையும் சுவாச நிலையும்

 

இதை உன் எண்ணத்தில் ஊன்றிடப்பா…!
1.எண்ணும் எண்ணத்தை ஜெபத்துடன் கலந்திட்டு ஓங்கார ரூபத்தில்
2.“ஓம் ஈஸ்வரா…” என்ற நாமத்தை உன்னுள்ளே இழுத்திடப்பா அவ்வீஸ்வரனை.
3.”ஓம் ஈஸ்வரா…” என்னும் நாமத்தை வெளியிடப்பா…
4.மறுபடியும் இழுத்திடப்பா உன்னுள்ளே…!
5.ஓம் ஈஸ்வரா நம… ஓம் ஈஸ்வரா நம…! உன்னுள்ளே சுற்றும் தன்மையில் வந்திட வேண்டுமப்பா.

இப்பொழுது நீ இருக்கும் ஜெப நிலையில் ஓம் ஈஸ்வரா என்னும் நாமத்தை இழுக்கும் பொழுது தடைப்படுகின்றது… நாமம் வெளியிடும் பொழுதும் தடையுடன் வெளி வருகின்றது.

ஓம் ஈஸ்வரா… என்ற நாமம் உன் உடலுக்குள்ளேயும் உன் உயிரிலும் உன் அங்கங்களிலும் உன் அங்கத்தின் அங்கமான எல்லா அணுக்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும் தன்மையில் “உன் ஜெப நிலை வரவேண்டுமப்பா…”

ஜெபம் செய்பவர் எல்லாமே சித்தனாக யோகியாகவும் இருக்க வேண்டும் என்பதல்ல. எல்லோரின் எல்லா அருளையும் பெற்றிடலாம் ஈஸ்வரன் என்ற நாமத்தை இழுத்திட்டால்.

ஈசனின் நாமத்தைப் பகிர்ந்திட்டாலே உன் சுவாச நிலையின் தன்மைகள் மாறிவிடுமப்பா.

தியானத்தில் அமர்ந்தால்… உன் நிலை எல்லாம் பெரும் கலக்கத்துடனும் குழப்பத்துடனும் குறையுடனும் பெரும் ஆவேசத்துடனும் ஏனப்பா அழுகின்றாய்…?

நற்சுவாச நிலை எடுத்திடப்பா… அழுகும் நாற்றம் அண்டிடாது… பூவின் மணமும் வந்திடுமப்பா உன் சுவாச நிலைக்கு…!

தியானத்திற்கு உன் கையால் வாங்கிடப்பா தினமும் புஷ்பத்தை… அளித்திடப்பா அவ்வீஸ்வரனின் நாமத்தைச் சொல்லி அர்ச்சனையாக. பிற நிலை எல்லாம் மாற்றிடப்பா.
1.ஜோதி நிலையானவன் (ஈசன்) வந்து
2.ஜெகஜ்ஜோதியாக உன் வாழ்க்கையில் அருள் புரிவான்.

அவசர நிலை உனக்கு… அதற்குள்ளே விழித்திட்டாய். ஏன்…? நான் பகர்ந்த தியான நிலையிலேயே இருந்திடப்பா.

துவேஷ எண்ணத்தை விட்டிடப்பா. உன் வழியில் உன்னைத் துவேஷிப்பவர்கள் துவேஷிக்கும் சொல்லெல்லாம் திரும்பிவிடும் “அவர்கள் நிலைக்கே…”

விதை விதைப்பவன் விதை அறுப்பான் வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்ற சொல்லைக் கேட்டிருப்பாய். துவேஷ நிலை இனி உனக்கு வேண்டாம்.

பேரானந்தப் பெருநிலை எய்திடவே இத்தியான நிலை. பெரு நிலை என்பது மாட மாளிகை கட்டி… பெரும் சொத்துக்களுடன் வாழும் வாழ்க்கை அல்ல.

1.பெரும் பேறு என்பது அவ்வாத்ம ஜோதியுடன் நீ ஐக்கியமாவது தான்
2.பகர்ந்த வழியில் சென்றிடுவாய்… வந்திடுவேன் நானும் உனக்குள்ளே…!

“துர்மரணம் அடைந்தவரின் உணர்வு…” அவர் மீது பாசம் கொண்டவரை எப்படி எல்லாம் பாதிக்கும்…?

“துர்மரணம் அடைந்தவரின் உணர்வு…” அவர் மீது பாசம் கொண்டவரை எப்படி எல்லாம் பாதிக்கும்…?

 

சந்தர்ப்பத்தால் ஒருவர் வேதனைப்படுகிறார்… துடிதுடிக்கின்றார்… என்று நாம் உற்றுப் பார்க்கின்றோம். வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருப்போம்… ஆனாலும்…
1.ஐயோ இப்படி ஆகிவிட்டதே…! என்று கூர்மையாக அதைப் பதிவு செய்து விட்டால்
2.அந்த உணர்வினை ஈர்க்கும் தன்மை அங்கே வந்து விடுகின்றது.
3.கூர்மையாகப் பார்த்தது நமக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

ஆகா…! நல்லவராக இருந்தார் இப்படிப் போய்விட்டாரே…! என்ற உணர்வினைப் பாய்ச்சப்படும் பொழுது அந்த உடலை விட்டு வெளி வந்த பின் யார் இவர் மீது பற்றாக இருந்தார்களோ அந்த ஆன்மா அவருக்குள் ஈர்க்கப்பட்டு விடுகின்றது.

அந்த உணர்வு இங்கே அதிகரித்து இருந்தால் இந்த உடலுக்குள் வந்து அதே வேலையைச் செய்யும். நான் பார்த்தேன் இந்த மாதிரி ஆகிவிட்டது என்று.

அதாவது… பக்கத்து வீட்டில் உள்ள நமக்கு வேண்டியவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துவிட்டால்… அவர் மீது பாசமான நிலைகள் கொண்டு… அந்தத் தூக்குப் போட்ட அதே உணர்வின் நினைவலைகள் நமக்குள் வரும்.

ஆக… எந்த அளவுக்குப் பற்றுடன் இருந்தாரோ அவர்களுக்குத் தான் இந்த நினைவாற்றல் வரும்.

அவர் மடிந்த பின்… இதே உணர்வுகள் இங்கே தூண்டப்பட்டு அஞ்சிடும் உணர்வுகள் இங்கே உந்தி தன்னை அறியாமலே கயிற்றில் கோர்த்துக் கொள்ளும் நிலை வருகின்றது. இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நான் தப்ப வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…? விநாயகர் தத்துவத்தில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது

அதிகாலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை வலுவேற்றிக் கொள்ள வேண்டும். துர்மரணம் அடைந்து விட்டால் “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் நம் உயிருடன் ஒன்றி அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இதை நமக்குள் பல முறை செலுத்த வேண்டும்.

பின்..
1.உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…
2.அந்த ஆன்மா அருள் ஒளி பெற வேண்டும் இருள் சூழா நிலைகள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் பாய்ச்சுதல் வேண்டும்.
3.இறந்து விட்டார் என்று கேள்விப்பட்ட அடுத்த கணமே அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் வட்டத்தில் இணைய வேண்டும்
4.உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் ஒளிச் சரீரம் பெற வேண்டும்.
5.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணி விட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வராது… “உந்தித் தள்ளிவிடும்…”

அந்த குடும்பத்தைச் சார்ந்தவரும் இதன் வழிகளில் எண்ணினால் அவர்களும் அதை உந்தித் தள்ளிவிடலாம்.

இல்லை… “இப்படி ஆகிவிட்டதே” என்று சோகமும் வேதனையும் கொண்டு ஏங்கி விட்டால் விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் படர்ந்து தன்னை அறியாமலே சோக நிலையினை அடையச் செய்து இந்த உணர்வுகள் அந்தக் குடும்பத்திற்குள் இது கலக்கமாகி பல தீமையின் உணர்வுகளாக விளையும்.

1.விவசாயத்தில் பயிரினங்களை வளர்த்தாலும் அல்லது தொழில் செய்தாலும் அதே விஷத்தன்மைகள் படர்ந்து
2.அது நஷ்டமடையும் நிலையாகத் தான் செயல்படும் பயிரினங்களும் கருகிவிடும்.
3.குடும்பங்களிலும் பகைமைகள் உருவாகிவிடும்… பழி தீர்க்கும் உணர்வுகள் பரவிவிடும்.
4.அவர் தன் உடலை அழித்துக் கொண்டது போல ஒவ்வொரு செயலையும் அழித்திடும் நிலையாக அந்தக் குடும்பத்தில் வரும்.
5.குடும்பம் மிகவும் நசிந்து சாப அலைகளாக மாறி ஒருவரை ஒருவர் பாவ வினைகளில் சிக்க நேரும்.

இது போன்ற நிலை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் தத்துவ ஞானிகள் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை… துருவப் பகுதி வழியாக வருவதைக் கவரும்படி செய்து அதை பெறக்கூடிய தகுதி ஏற்படுத்தினார்கள்.

அதற்குத்தான் விநாயகரை நீர் நிலை இருக்கும் பக்கம் வைத்தார்கள் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ அந்த அருள் உணர்வின் தன்மை நம் மீது பட்டு விடுகின்றது.

உதாரணமாக… நாம் நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும் ஒரு நெருப்பு பாய்ந்து வந்தால் நல்லது செய்கிறேன் என்றால் நெருப்பு நம்மை விட்டு விலகிச் செல்கின்றதா…?

அல்லது ஒரு திரவகம் தவறிக் கீழே விழுந்த பின்… நான் நன்மை செய்தேன் என்று எண்ணிக் கொண்டிருந்தால் அது நம்மைப் பாதிக்காமல் இருக்கின்றதா…? நெருப்பாக இருந்தாலும் திரவகமாக இருந்தாலும் உடலில் பட்ட இடத்தினைச் சுட்டுப் பொசுக்கி விடும்.

ஆக
1.பகைமையற்ற நிலைகள் நாம் வாழ்ந்தாலும் பல நன்மைகள் செய்திருந்தாலும்
2.சந்தர்ப்பம் இது போன்ற அசம்பாவிதங்கள் அருகிலே நாம் இருக்கப்படும் பொழுது அந்தத் தீமைகள் வந்து விடுகின்றது.

இதெல்லாம் வந்துவிட்டால்… நான் நன்மை செய்தேனே என்னை ஆண்டவன் சோதிக்கின்றானே…! என்றால் அந்த உணர்வினை நம் உயிர் தான் (நம்மை) ஆண்டு கொண்டிருக்கின்றது.

வேதனையை நமக்குள் உருவாக்கிக் கொண்டால் உயிர் வேதனை அணுக்களை உடலுக்குள் உருவாக்கி அதைத்தான் இந்த உயிர் ஆளும். வேதனை அணுக்களைத்தான் வளர்க்கச் செய்யும் அந்த உணர்ச்சிகளை தான் ஊட்டும்.

காரணம் நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது உருவாக்கி உடலுக்குள் இருப்பதை ஆண்டு கொண்டும் இருக்கின்றது.

இதை நாம் தெரிந்து கொண்டோம்.
1.நாம் எதை நமக்குள் உருவாக்க வேண்டும்…?
2.எதை நமக்குள் ஆளக்கூடிய சக்தியாக உருவாக்க வேண்டும்…? என்பதை நாம் சற்று சிந்தித்தல் வேண்டும்.

அவ்வப்போது வாழ்க்கையில் வரும் தீமைகளை உடனுக்குடன் அகற்றிடும் சக்தியாக
1.அந்த அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் உருவாக்கி
2.அந்த அருள் ஞானிகள் உணர்வே நம்மை ஆளும் சக்தியாக நாம் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

எந்நிலையிலும் வந்திடுவேன்… “உன்னுடனே”

எந்நிலையிலும் வந்திடுவேன்… “உன்னுடனே”

 

விநாயகரை “ஞான முதல்வனே” என்று சொல்கிறோம். ஞான முதல்வனே என்பதன் பொருள்
1.ஞானத்திற்கும் ஞானோதயத்திற்கும்
2.நம்முள்ளே வரும் எண்ணத்திற்கும் முதல்வன் விநாயகனே.

விநாயகனின் குணம் எல்லாம் அச்சக்தியின் முதல் குணமாக மனிதன் எண்ணத்தில் உதிப்பதற்கே பகர்ந்தப்பா…! விநாயகனின் குணங்களில் மிக நிதானத்தன்மையும்… எண்ணி ஆற்றல் படும் சித்தமும் உள்ள குணம் தான் விநாயகனின் குணம்.

விநாயகரை முதல் தெய்வமாக வணங்குவதும் உன் சித்தத்தை நிதானப்படுத்திப் பணிவுடன் பணியவே விநாயகனை முதலில் பணிவது.

ஈஸ்வர சக்தியின் முதல் அருளே விநாயகனை நினைத்து வணங்கவே தான் விநாயகனின் தன்மையில் உன் மனதை அமைதிப்படுத்திடவே அருள் செய்கின்றார் சிவ சக்தியின் முதல் சக்தி.

முதல் சக்திதானப்பா விநாயகர்…! ஆண்டவனைப் பணிவதற்கு முதலில் அடக்கமும் அமைதியும் வேண்டுமப்பா. அவ்வருளைப் பெற்றிடவே “முதலில் விநாயகனை வணங்குவதெல்லாம்…”

இப்பொருள் தெரியாதவர்களுக்குத் தான் “எல்லாமே கல்… இக்கல்லைக் கும்பிட்டால் என்ன…? அக்கல்லைக் கும்பிட்டால் என்ன…?” என்ற எண்ணம் வருகிறது.

முதலில் விநாயகரை வணங்குவதற்குப் பொருள் புரிந்த்தா…?

விநாயகரை நினக்கும் போது உன் நினைவில் பெரும் அமைதி குடி கொள்ளுமப்பா. சக்தியின் சொரூபத்தில். “துதிப்போர்க்கு வல்வினை போம்,,, துன்பம் போம்,,,” என்னும் பொருள் விளங்கிடுமப்பா.

பகர்ந்திட்டேன் சக்தியின் முதல் சொரூபத்தை…!

1.சூட்சுமத்தில் உள்ள நான்… “வந்திடுவேன் உன்னுடனே…”
2.இனி ஒரு போதும் மாற்றிடாதே உன் வழியை.
உன் வழியில் முன் இரவில் வந்த எண்ணமெல்லாம் ஊன்றிவிடுமப்பா.

உன் நினைவில் ஜெயித்து விடுவாய்…!
1.வந்திடுவேன் உன்னுடனே… வந்திடுவேன் உன்னுடனே
2.எந்நிலையிலும் வந்திடுவேன் உன்னுடனே.

உன் இசையில் இசைத்திடப்பா… வந்துள்ள அனைத்து சிஷ்யர்களுக்கும் காட்சி அருளுகின்றேன்.

நோய் நீக்கும் மருந்து

நோய் நீக்கும் மருந்து

 

நோய்வாய்ப்பட்டவர்கள் அவரவர்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இடுப்பு வலியோ கண் வலியோ பிடரி வலியோ வயிற்று வலியோ இருதய வலியோ சிறுநீரகக் கோளாறோ… இதைப் போன்ற எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் அது எல்லாம் அகல வேண்டும்… வலி குறைய வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்..
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு இப்பொழுது உங்கள் உடல் முழுவதும் படரும்
2.எல்லா உறுப்புகளிலும் அந்த சக்திகள் படரும்
3.அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் உற்சாகமடையும்…
4.அதற்குள் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்க மகரிஷிகள் உணர்வுகள் “மருந்தாக” அமையும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

இப்பொழுது…
1.உங்கள் உடலில் ஒரு மின்சாரம் பாய்வது போன்று இந்த உணர்வுகள் ஊடுருவிப் பாய்ந்து…
2.நோய்களை நீக்கும் ஒரு இயக்கச் சக்தியாக வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய சகல நோய்களும் நீங்க வேண்டும் என்று… அவரவர்கள் உடலில் உள்ள நோயை நீங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

“பொதுவான விதிப்படி” எங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அந்தச் சக்திகளைப் பெறுங்கள்.

கை கால் குடைச்சலோ பிடரி வலியோ மூட்டு வாதமோ அந்த வலிகள் நீங்க வேண்டும் என்று ஏங்கி ஒரு ஐந்து நிமிடம் தியானியுங்கள்.

ருவ நட்சத்திரத்தினுடைய உணர்வுகள் உங்கள் உடலில் பரவுவதை உணரலாம் இருதய வலி இருந்தால் அது நீங்குவதையும் ஆஸ்த்மா தொந்தரவு இருந்தால் நுரையீரலில் இருந்து அந்தச் சளிகள் அகல்வதையும் காணலாம்… மூட்டு வலி நீங்குவதையும் உணர முடியும்.

இராமாயணத்தில் காட்டியபடி ஜனக சக்கரவர்த்தி நற்குணங்களை பேணிக் காக்க நீ என்ன செய்ய வேண்டும்…? என்று அங்கே சுயம்வரத்தை (பந்தயத்தை) வைக்கின்றார்.

மற்றவர்கள் அந்த ஆயுதத்தை வைத்து அவரவர் திறமையைக் காட்டுகின்றார்கள்.
1.இராமனோ தீமை செய்யும் (எண்ணங்களை) அந்த ஆயுதத்தை ஒடித்து விடுகிறான்.
2.அதாவது பகைமை இல்லாது தன்னுடன் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்று இராமன் எண்ணுகின்றான்.

வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்து விட்டால் அதை எண்ணும் பொழுது பிறரை வேதனைப்படுத்தும் நிலையே வருகின்றது.

அதற்குப் பதிலாக…
1.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணித் தீமை செய்யும் எண்ணங்களை ஒடித்து விட்டு…
2.அனைவரும் நலம் பெற வேண்டும் என்று அருள் ஞானிகள் உணர்வைப் பாய்ச்சப்படும் போது நாமும் மகிழ்ந்து வாழ முடியும்.

அத்தகைய மகிழ்ச்சி தரும் அந்த உணர்வைத் தான் கல்யாணராமா…! என்று சொல்வது

1.ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் “நாம் கல்யாணராமன் ஆகின்றோம்…”

பகைமையை உருவாக்கும்… அதனால் உடலில் உருவாகும் நோய்கள் அனைத்தும் அகற்றப்படும்…. நமது நினைவின் ஆற்றல் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.

வாழ்க்கையில் வரும் பகைமை உணர்வைப் பற்றற்றதாக மாற்றி… மகரிஷிகளின் உணர்வை நமக்குள் பற்றுடன் பற்றி… பேரின்பப் பெரு வாழ்வாக அருள் மகரிஷிகளுடன் நாம் இணைந்து வாழ்வோம்.

அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ வேண்டும் என்று நாம் தவமிருப்போம்.

ஆண்டவன் எங்குள்ளான்…?

ஆண்டவன் எங்குள்ளான்…?

 

நடக்கின்றது பங்குனி உத்திரக் காவடி ஆட்டம்… ஆட்ட்த்தில் கலந்திட்டேன் நானும் அதிலே காவடி ஆடிட…! செப்பிடுவான் என் சிஷ்யனும் (ஞானகுரு) வந்து.

நீ பிறந்த ஊரிலும் பிறந்த ஊர் என்பது உன் முதல் ஜென்மத்தைச் சொல்கின்றேன்… மிகவும் முக்கியம்…! நீ பிறந்த ஊரிலும் உன்னால் ஸ்தாபகம் செய்த கோவிலிலும் நடக்கின்றதப்பா பங்குனி உத்திரம் பெரும் விமரிசையாக.

ஊரின் பெயரைச் சொல்லிவிட்டால் உன் கவனம் எல்லாம் அதனுள்ளேதான். உன் தியானத்திற்கு விடுகின்றேன்… கண்டிடுவாய்… அந்நிலையில் காவடியையும் கண்டிடுவாய்.

அழகான துறையினிலே உன் அருளால் அமைந்ததப்பா… அத்திருஸ்தலமே…! உனது புகழ் உலகமெங்கும் ஓங்கிடும் நிலையில் இருந்திட்டாய் போன ஜென்மத்திலும்.
1.உன் பெயருக்கும்… உன் உடலின் பெயருக்கும்… போன ஜென்மத்திற்கும் தொடர்பு உள்ளதப்பா.
2.இந்நிலையை எந்த ஜோசியனும் சொன்னானா…?

உலகெங்கும் தெரிந்த கோயில் இந்த ஜென்மத்திலும் உன்னுடன் தொடர்புடைய கோவில்… இப்பொழுது இருக்கும் நிலையில் தொடர்பில்லை.

உன் நினைவில் போகரின் ஸ்தாபகத்தால் வந்த ஸ்தலம் என்ற எண்ணம் தான் நிலை புரிந்ததா…! போகரின் எண்ணம் எல்லாம் உன் நினைவில் வந்திடுவதும் போன ஜென்மத் தொடர்பினால் தான்.

போகர் தான் பெற்ற பயனால் இன்றும் உள்ளார்… என்றும் இருப்பார் முருகனாகவே…! பெரும் முருகர் ஸ்தலமைத்தாய்…! முதல் ஜென்மத்தில் விட்ட சிறு குறையினால் வந்ததப்பா இந்த ஜென்மம்.

விட்ட குறையை இந்த ஜென்ம நிலையில் ஸ்தாபிதம் செய்து விடப்பா…! போகரின் நிலையில் வந்திடவே ஸ்தாபிதம் செய்திடப்பா…! செய்த பலனினால் தான் உன் துடிப்பும் ஆர்வமும் அதிவேகமும் போகரும் பகர்ந்திடுவார் அவசரக்காரன் என்று.

நான் சொன்ன நிலையைப் பார்த்தாயா…! உன் நிலையை எண்ணிப்பார்… உன் துடிப்பும் வேகமும் தான் உன் நிலையை உயர்த்தி விட்டது.

விட்ட குறையை முடித்திடப்பா…!
1.உன் துடிப்பினாலும் துரிதத்தினாலும் எந்நிலையிலும் துரிதமுள்ள நீ…
2.என் வழியில் உன் நிலை அமைதியில் வருகின்றதப்பா (தியான நிலை).
3.அந்நிலையிலேயே தொடரட்டும் ஜெப நிலை. வடிகால் அமைத்து விட்டேன்… பாய்ந்திடட்டும்… பரிபக்குவமாக வளர்ந்திடுவாய்.

பங்குனி உத்திரத்தில் பகர்ந்துரைத்தேன் உத்திரத்தின் தன்மை எல்லாம் ஒரு நிலையில் உள்ள மனிதர்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ந்திடவே உத்திர நாட்கள் அமைந்ததப்பா.

அன்புடனே அன்னதானம் பகிர்ந்துண்டு ஆண்டவனை நினைத்திடத் தான் “பண்டிகை நாட்கள்” எல்லாம் பாரினில் வந்ததப்பா…!

இன்றுள்ள நிலை எல்லாம் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து வருடம் முழுவதும் வேண்டும் வேண்டுதலை… தன் நிலை உயர்த்திட எடுக்கின்றார்கள் காவடியை. வெறும் களியாட்டம் நடக்கின்றது.

காவடியில்…. “தெய்வ அருள் வந்திடும்… அந்நாளில் பகர்ந்திடும் சொற்கள்” எல்லாம் பாமரர்களுக்கு நல்ல உணர்வுகளை அளித்திடுவார்கள் அச்சித்தர்கள்.

அருள் வரும் தன்மை எல்லாம் இன்றைய நிலையில் யார் வருகிறார்களப்பா…? (தன் நிலையைக் கேட்பதற்கு ஆவி நிலையை அழைக்கின்றார்கள்).
1.அவர்கள் உடலில் முருகனும் விநாயகரும் வருவதல்ல அருள் நிலையில்.
2.ஆவி உலகத் தன்மை தான் சிலரின் உடலில் வந்து ஆடுகிறது… சில அம்மன் கோவில்களில் வருவதெல்லாம் ஆவி நிலைகள் தான்.

சித்தர்களின் நிலை எல்லாம் சில அபூர்வத் தன்மைகளிலே தான் தோன்றிவிடும்.
1.சித்தர் நிலை வருவதெல்லாம் சீருடனும் சிறப்புடனும் சொல் ஆற்றலுடனும் மிக அவசியமான நிலையில் வந்திடுமப்பா.
2.ஒரு நொடி தான் பகர்ந்திடுவர் பரிபக்குவ நிலையில்…!
3.உலக ஆசைகள் உள்ள சித்தர்கள் தான் வருவார்கள் (அதுவும் என்னைப் போல்).

ஆவியின் தன்மை வைத்துத் தான் அழைக்கின்றார்கள் பெரும் ஜாதகக்காரர்களும் சாமியார்களும் சில வைத்தியர்களும் கூட…! தன் நிலையில் ஆவியின் நிலையை நிறுத்திக் கொண்டு அவ்வாவிகளின் உதவியுடன் செய்கின்றார்கள் இந்நிலையெல்லாம்.

செய்யட்டும் செய்யட்டும்… நன்மைகளை செய்யட்டும்… ஆண்டவர் ரூபத்தில் வந்தாலும் ஆவிகள் செய்தாலும் நன்மைக்கே செய்யட்டும்…!

ஆவியின் தன்மையை வைத்து ஆண்டவனையே இழுக்கின்றார்கள் பெரும் ஆணவக்காரர்கள். குட்டிச்சாத்தானை வைத்துக்கொண்டு குடிகளைக் கெடுக்கிறார்கள்

ஆவியின் பசிக்கு அளிக்கின்றான் பல உணவுகளை. ஆண்டவனின் பெயரால் ஆண்டவனின் பெயரையே சக்கி மாதாவின் ஜோதியையே மாற்றி விட்டார்கள் குட்டிச்சாத்தான்கள்.

உலக நிலையையே மாற்றுகின்றது இந்தக் குட்டிச்சாத்தான்கள். “ஒற்றன் வடிவிலும்” உள்ளான் இக்குட்டிச்சாத்தான். ஆட்சி நடத்துகின்ற பெரும் ஆணவக்காரனிடமும் உள்ளான் இக்குட்டிச்சாத்தான்… செய்யும் வேலையெல்லாம் அந்தக் குட்டிச்சாத்தானால் தான்…! குட்டிச்சாத்தானின் பசிக்கும் தான் தன் கழிவைத் தானே பருகுகின்றான்

உலக நிலையைப் பார்த்தாயா…!

குட்டிச்சாத்தானின் வேலைகளை எல்லாம்… அந்த ஆவிகளை அடக்க ஆண்டவன் இல்லையா…? என்றிடுவாய்.

ஆண்டவர் எங்கப்பா உள்ளார்…? அவனவன் மனமே தான் ஆண்டவன் என்று பகர்ந்திட்டேன்.
1.அவன் மனமே குட்டிச்சாத்தானிடம் சிக்கியுள்ள பொழுது
2.ஆண்டவன் எப்படிக் காப்பாற்றுவான்…?

பெரும் திருடனும் அழைக்கின்றான் ஆண்டவனை… அன்புடன் மழலையும் அழைக்கின்றது ஆண்டவனை…! எந்நிலைக்கும் அவன் ஜோதி நிலைதான்.

அவன் நிலையில் இருந்துதான்… அவன் ஆசி பெற்ற சித்தர்கள் ஆளுகின்றார்கள் மனிதர்களை…!
1.அவரவரின் மனநிலைக்கேற்ப அவர்கள் அழைக்கும் தன்மைக்கு
2.அவரவர் புரிந்திடும் நிலையிலும் சித்தர்கள் அருள்கின்றார்கள்.

முருகா என்று அழைத்திட்டவர்களுக்கு… அவன் அழைக்கும் நிலையில் அன்புடன் அழைப்பவர்களுக்கு அவன் கஷ்டத்தையும் அவன் நிலையையும் உணர்ந்து அருளுகின்றார்கள்… “போகரும் பல சித்தர்களும்…”

அவரவர்களின் இஷ்ட தெய்வத்தை அழைப்பவர்களுக்கும்… அழிவின் நிலையை நாடுகின்றவனுக்கும்… அழைக்கும் தன்மையில் அவ்வழுகிய அணுவின் வழியில் தான் வந்து அவனிடம் அண்டிக் கொள்கின்றது அவன் நிலையில் உள்ள ஆவிகள். ஆனால் இவன் நினைக்கின்றான் ஆண்டவனே இவனுக்குள் அருள் புரிந்தான் என்று.

நல் உணர்வில் நல் நிலையில் நல் நினைவில் உள்ளவர்களுக்கெல்லாம் நல்லோரின் ஆசி பூ மழையாகப் பொழிகின்றது.

தீய நினைவில் உள்ளவரின் நிலையில் எல்லாம் தீய நிலையில் உள்ள ஆவிகள் அண்டிக் கொள்கின்றன. இப்போது புரிகின்றதா ஆண்டவன் எங்குள்ளான்…? என்று.

ஆண்டவன் என்பவன் யாரப்பா…?

இயற்கையில் ஒன்றிட்ட…
1.இயற்கையே தான் ஆண்டவன் காற்றே தான் ஆண்டவன்
2.சூரியனே தான் (வெளிச்சம் ஒளி) ஆண்டவன்.
3.தண்ணீர் தான் ஆண்டவன்
4.ஒளியும் காற்றும் தண்ணீர் இந்த மூன்றும் தான் ஆண்டவன்.
5.இயற்கை அன்னை இயற்கை சக்தி என்பதெல்லாம் இந்த மூன்றும் தான்.

ஆண்டவன் என்பவன் எங்குள்ளான் என்ற நிலை புரிந்ததா…?

இப்பாட நிலையை எந்நிலையிலும் பகர்ந்திடவில்லை நானும். என் சிஷ்யனையும் வாயடக்கி விட்டேன் பல நாட்களாக. உன் நிலைக்குப் புரிய வைத்தேன் சில துளிகள்.

உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள். கலியுகம் மாறுகின்றது கல்கியுகம் வருகிறது என்பதெல்லாம் இக்கால நிலையைக் கொண்டுதான்.

ஆண்டவன் எங்குள்ளான் என்பவனைக் கேள்… ஆற்று வெள்ள வந்திடும் பொழுது அடித்துச் செல்கின்றானே அனைத்தையும்… “அவன் தானப்பா ஆண்டவன்…” ஒவ்வொரு வழியையும் பிரித்துச் சொல்ல வேண்டுமாப்பா…?

ஆண்டவன் எங்குள்ளான்…? என்பதை… “இந்தப் பாடத்தை” எந்த நூலிலும் படித்திருக்கின்றாயா…?

நாம் பழக வேண்டிய முக்கியமான பயிற்சி

நாம் பழக வேண்டிய முக்கியமான பயிற்சி

 

இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகிய அனைத்திலும் உள்ள நஞ்சினை அடக்கி ஆட்சி புரிந்து ஒளியாக இருக்கின்றது துருவ நட்சத்திரம். இதை உணர்த்துவதற்குத் தான் விநாயகர் அருகே “அரச மரத்தை” வைத்தார்கள் ஞானிகள்.
1.இந்த மனித வாழ்க்கையில் நாம் எதை வைத்து எப்படி உயர்ந்த சக்திகளை எடுக்க வேண்டும்…? என்பதை
2.அங்கே அரச மரத்தை வைத்துக் காட்டுகின்றார்கள்.

அதிகாலையில் நாம் குளித்து உடல் அழுக்கை நீக்கிய பின் விநாயகர் சிலையை உற்று நோக்கி… இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று நஞ்சினை ஒடுக்கி ஒளியின் கதிராக மாற்றி… ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உணர்வின் எண்ணங்களை தனக்குள் கவரும்படி செய்தார்கள் ஞானிகள். இது துவைதம்…!

பிறப்பின் உண்மையின் தன்மையை நமக்குள் தெளிவாக்குவதற்காகச் சிலையாக வடித்து வைத்தார்கள் ஞானிகள். நாம் பிறப்பில் மனிதனாக எப்படி வந்தோம் என்று அறிவதற்காக…!

அங்கே சிலையில் ஒன்றுமில்லை…!

கண் கொண்டு சிலையை உற்றுப் பார்க்கும்படி செய்து காவியத்தின் தன்மை கருத்துடன் நமக்குள் கூட்டப்பட்டு
1.அந்தக் கருத்தினை எண்ணித் “தன்னை அறிதல்” என்ற நிலையும்
2.எந்த உணர்வினை தனக்குள் அகஸ்தியன் எடுத்துத் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரம் ஆனானோ
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அப்போது பதிவாக்குதல் வேண்டும்.

பதிவான எண்ணம் கொண்டு தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் எடுக்க முடியும். அதன் வழியில் எண்ணும் பொழுது நம் கண்ணின் நினைவாற்றல் விண்ணுக்குச் செல்லுகின்றது.

1.அந்த உணர்வினைத் தனக்குள் பதிவாக்கி
2.இந்த எண்ணங்கள் கொண்டு மீண்டும் கண்ணுக்கே நினைவைச் செலுத்தி
3.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து விண்ணிலிருந்து வரும்
4.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம்மைப் பெறும்படி செய்திருக்கின்றார்கள் விநாயகர் தத்துவத்தில்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! அது எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி இந்த அலைகளை “உடலுக்குள் நாம் பரப்புதல் வேண்டும்…”

காலையிலிருந்து இரவு வரையிலும் சந்தர்ப்பவசத்தால் எத்தனையோ துன்பங்களைக் கேட்டறிந்துள்ளோம்… துயரப்படுபவரைப் பார்த்துள்ளோம். இந்த உணர்வுகள் அனைத்தும் ஆன்மாவிலே இருக்கின்றது.

அந்த உணர்வுகளைக் கவரப்படும் பொழுது ஆன்மாவாகச் சேமித்து வைக்கின்றது. சேமித்த உணர்வுக்கொப்ப
1.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் எந்த அளவிற்கு உந்துகின்றதோ அந்த அளவிற்கு நாம் சுவாசிக்கின்றோம்.
2.சுவாசிக்கும் போது உணர்வுக்குத் தக்க “அந்த எண்ணங்கள்” வரும்.

இன்று ஒரு மனிதன் ஒரே எண்ணத்தில் இருக்க வேண்டும் என்றால் முடியவே முடியாது.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் எந்தெந்தக் குணத்தால் அது உருவானதோ அதற்கு இரை தேட…
1.எந்த மனித உடலிலிருந்து வந்ததோ…
2.சூரியனின் காந்த சக்தி அதை அலையாக மாற்றி வைத்திருப்பதை நுகரப்படும் பொழுது
3.உயிரிலே மோதி உணர்ச்சிகள் தூண்டும்… அப்போது உணர்ச்சிக்கொப்ப அந்த அணுக்கள் அதை இரையாக எடுக்கின்றது
4.எடுத்து நமக்குள் உள் செல்லும் உணர்வினை அது உணவாக எடுத்து வளர்கின்றது.

ஆகவே அத்தகைய அணுக்கள் இப்படி உணவாக எடுக்கும் நிலையிலிருந்து… நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு
1.“எதை உணவாகக் கொடுக்க வேண்டும்…?” என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.
2.அந்த அருள் ஞானியால் கொடுக்கப்பட்ட விநாயகர் தத்துவத்தில்.

அதாவது… புறத்திலிருந்து ஆன்மாவாக எத்தனையோ நிலைகள் மாறி வருவதை… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி உயிருடன் ஒன்றி நினைவினை அடிக்கடி அடிக்கடி உடலுக்குள் பாய்ச்சுதல் வேண்டும்.

இந்த உணர்வுகள் வலுப்பெறும் போது
1.தீய அணுக்களுக்கு வரும் அந்த நிலை அது அடைபட்டு… இழுக்கும் சக்தி குறைகின்றது… தீமையான எண்ணங்கள் வராதபடி விலக்கி விடுகின்றது.
2.அவசியம் இந்தப் பயிற்சியை நாம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

சாதாரண பாமர மக்களும் இதை பழக்கப்படுத்துவதற்குத் தான் திரும்பும் பக்கமெல்லாம் விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

நாம் உணர்ந்து கொண்டோமா…?

ஆவி நிலையில் வாழ்வது எல்லாம் “பெரும் அல்லல் படும் நிலை தான்”

ஆவி நிலையில் வாழ்வது எல்லாம் “பெரும் அல்லல் படும் நிலை தான்”

 

“ஆவிகளைப் பற்றி” எல்லாமே தெரியும் தன்மை நாய்க்கு மட்டும் தான் உண்டு. அதற்காகத்தான் என்னுடன் நாயை நிறுத்திக் காட்சி தந்தேன்.

நாயாகப் பிறப்பவர்கள் எல்லாம் ஆவி உலகில் உள்ள பெரும் ஆத்திரக்கார ஆவிகள் என்றேனல்லவா முதல் பாடத்தில். உடலில் இருக்கும் பொழுது எந்த விரோதத்தில் அவர்களின் ஆவி பிரிந்து சென்றதோ
1.அவ்வாவி தான் முடிக்கும் காரியத்தை முடித்தவுடன் வருவது “நாயின் உடலில் தான்…”
2.மனித உடலை எடுக்கும் சந்தர்ப்பமும் பாக்கியமும் அந்த ஆவிகளுக்குக் கிட்டுவதில்லை.

இவ்வழியில் வந்த நாய்கள் எல்லாத் தன்மையையும் ஆவி உலகில் உள்ள ஆவிகள் எப்படி எந்நிலையும் தெரிந்திருக்கின்றனவோ… எந்நிலை என்பது மற்ற ஆவிகளின் நிலையும் முன் ஜென்ம விரோதத்தின் நிலையும் தெரிந்து வைத்திருக்கின்றதோ… அதே போலத்தான் நாயின் உடலிலும் இருக்கும்,.

நாய்க்கு எல்லா சக்திகளும் தெரிந்திடும். நாயின் தன்மையை ஊன்றிப் பார் நாயில் உள்ள வெறித்தன்மைதான் உணர்ந்திட்டாய். நாய்க்கும் ஜென்மத் தொடர் உண்டப்பா.

நாயின் நிலை எல்லாம் பெரும் பூகம்பத்தையும் அறிந்திடும்… வரும் வெள்ளத்தையும் அறிந்திடும்…! அதன் தன்மையில் சிறு அணுவும் ஆவி உலகத்தின் தன்மையும் ஆண்டவனின் தன்மையும் தெரிந்து விடும்.

ஆனால் ஆவியையும் ஆண்டவனையும் பிரித்துப் பார்க்கும் தன்மை அதற்கு இல்லை. அதன் வெறி உணர்விலே அத்தன்மை மறைந்து விடுகிறது.

நாய் கடித்து இறப்பவர்கள் எல்லாம் நாயுடன் முன் ஜென்மத்தில் தொடர்பு உடையவர்களே. முன் ஜென்மத்தில் விட்ட குறையை அந்த நாய் தீர்த்துக் கொள்கின்றது.

நாய் கடித்துத் தப்புபவர்கள் எல்லாம் அவர்கள் முன் ஜென்ம “பூஜா பலனினால்தான்…”

1.பூஜா பலன் என்பது கற்பூரம் காட்டி விடுவது மட்டுமல்ல…
2.அதன் பலனை அடைந்தவன் என்பது அவனின் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை வைத்துத்தான் பூஜா பலன் என்று சொல்கின்றேன்.

கடவுள் சிலைக்கு முன்னால் நிற்பவர் எல்லோருமே பூஜா பலன் எய்தியவனா…? இல்லை…!

கோயிலுக்குச் செல்லாதவனும்… கடவுளே இல்லை என்பவனும்… தன் நிலை உணர்ந்து நியாயத்தைக் கடைப்பிடித்து நல்லொழுக்கம் பெற்றவரும்… நாடு போற்றும் தன்மை உள்ள எல்லோருமே… பூஜை பலன் பெற்றவர்கள்.

ஆயிரம் தவறுகள் செய்தாலும் தான் தர்மம் செய்கின்றேன்… கோயில் கட்டி வழிபடுகின்றேன் என்பவன் எல்லாம் பூஜா பலன் பெறுகின்றானா…? இல்லை… பெரும் பூஜ்யம் தான் அவன் நிலை.

கோயில் என்பதையே தான் செய்யும் பாவத்தைக் கொட்டித்தான் பாவ மன்னிப்புக் கேட்கின்றான். அவன் நினைக்கின்றான்…
1.செய்த பாவத்தைச் செய்து விட்டுக் கோவில் கட்டி கும்பிட்டால்
2.கூப்பிட்ட குரலுக்கு “கும்பேஸ்வரன் வந்திடுவான்” என்ற எண்ணம் அவனுக்குள்ளே.

மறு ஜென்மம் என்பது உள்ளதப்பா அவனைப் பார்த்துக் கொள்ள…!

ஆவி உலகில் ஊடுருவி அதன் தன்மையில் பார்த்து விட்டால் உலக நிலை எல்லாமே உன்னுள்ளே தெரிந்திடும்.
1.மனித உடலில் உள்ளவரை தான் அமைதியும் சந்தோஷத்தையும் காண முடியும்.
2.ஆவி நிலை எல்லாம் பெரும் அல்லல் படும் நிலை தான்.

மனித உடலின் நிலையிலேயே மூன்றில் ஒரு பாகம் (1/3) அமைதியான ஆனந்தமான நித்திரை அருளியுள்ளான் அவ்வாண்டவன். எந்த நிலையிலும் அந்த ஆனந்தமான நித்திரை இல்லை அப்பா “ஆவிகளுக்கு…”

மனித உடலில் பெற்ற பேற்றை வழி வழியாகச் சொல்கின்றேன் இப்பேறு பெற்றதற்கு பல கோடித் தவம் வேண்டும். தவமிருந்து பெற்ற உடலைத் தான் தன்னிச்சையாக அழிக்கின்றார்கள் மானிடர்கள்.

1.மனித உடலின் தன்மை எல்லாம் பெரும் பேரின்ப நிலையப்பா
2.மனித உடலில் இருந்து கொண்டே வாழும் வாழ்க்கை அழகுடனும் அர்த்தமுடனும்… ஆனந்தத்திலும்… களித்திட வேண்டுமப்பா.

மனித உடலை எய்தியவன் எல்லாம் தன் நிலையை உணர்ந்திடாமல் பிறந்த உடனே ஆத்திரத்துடனும் பேராசையுடனும் பழிவாங்கும் நிலையிலும் கோப தாபத்துடன் வளர்க்கப்படுகின்றான். எப்படி அப்பா இருக்கும் வாழ்க்கை நிலை…?

பிறந்தவுடனே நல்லறிவை ஊட்டும் குடும்பத்தில் வளரும் குழந்தை நல்ல நிலைக்கு வந்து விடுவான். வளரும் தன்மையிலே வாழ்க்கை அமைகின்றது.

இப்பாடம் புரிவதற்கு புதியவனல்ல நீ…! எல்லா பாடத்தின் தன்மையும் தெரிந்திடவே புகுத்திட்டேன் இதை.

நம் உயிர் “தாயாக” இருக்கின்றது

நம் உயிர் “தாயாக” இருக்கின்றது

 

சந்தர்ப்பத்தில்… ஒருவர் கோபிக்கும் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி விட்டால்… உயிரியலின் மாற்றங்களில் அதை ஜீவ அணுவாக நம் உயிர் உடலுக்குள் மாற்றிவிடுகின்றது.

அதாவது…
1.எதனின் நினைவை எடுத்து உயிர் நமக்குள் அதை அணுவாக ஆக்கியதோ
2.எந்த நிலைகள் கொண்டு அந்த மனிதனின் உணர்வை சூரியனின் காந்த சக்தி கவந்து வைத்திருக்கின்றதோ
3.அதை உயிர்… அதனின் துடிப்பின் ஈர்ப்பு கொண்டு அந்த உணர்வைக் கிளர்ந்து எடுக்கப்படும் பொழுது
4.நுகர்ந்து தன் ஆன்மாவாக மாற்றி உயிரிலே படும் பொழுது மீண்டும் அந்த நினைவாற்றல் வரும்.

ஆக… கோபம் கொண்ட அணுவின் தன்மையாக நமக்குள் விளைந்திருந்தால்… அதற்கு இரை வேண்டும் போது அது கத்தும்… அதனின் உணர்ச்சியைத் தூண்டும்.

உதாரணமாக… காக்கைகளோ குருவிகளோ கொக்கோ… தன் குஞ்சுகளுக்கு அது இரை தேடிக் கொண்டு வந்து கொடுக்கின்றது. குஞ்சுகள் கத்தும் பொழுது மீனையோ வீட்டில் பூச்சிகளையோ மற்ற பூச்சிகளையோ உணவாகக் கொடுக்கின்றது.

இதைப் போன்று தான் எந்த குணத்தின் தன்மை நாம் நுகர்ந்தோமோ நமது உயிர் அந்த குணத்தின் உணர்வின் அணுவாக விளையச் செய்து விடுகின்றது.
1.அந்த அணுக்கள் தன் பசிக்காக ஏங்கும்போது அதை உருவாக்கிய தாயான உயிர்
2.அதற்கு வேண்டிய நிலைகளை நுகர்கின்றது… ஆன்மாவாக மாறுகின்றது… சுவாசித்த பின் நமக்குள் எண்ணம் ஆகின்றது
3.அந்த மனிதன் கோபித்திருந்தால் நமக்கும் அப்பொழுது கோபம் வரும்… அறியாமலே திடீரென்று கோபம் வரும்.

என்னவென்றே தெரியவில்லை திடீரென்று எனக்குக் கோபம் வந்துவிட்டது என்று சிலர் சொல்வார்கள்.

ஏனென்றால் அந்தக் கார உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்டால் அது பசிக்கு ஏங்கினால் போதும்.
1.உயிருடைய வேலை… எந்த மனித உடலிலிருந்து அந்தக் கார உணர்வு வந்ததோ
2.அதை எடுத்து ஆன்மாவாக மாற்றி சுவாசிக்கச் செய்து விளைந்த அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கும்.

அத்தகைய கோபம் வந்த பின்… வீட்டிலே மனைவியை அடித்து விடுவார், தன் நண்பனைப் பகைமை ஆக்கி விடுவார்… கடை வியாபாரம் இருந்தால் வியாபாரத்தில் வரும் வாடிக்கையாளரிடம் எதிர்த்துப் பேசி சண்டை வரும்.. சர் தான் போயா…! என்பார்.

அறியாமலே இத்தகைய செயல்கள் நடக்கும்…!

ஏனென்றால் உருவான அணுக்கள் அது தன் இனத்தின் தன்மையைப் பெருக்க… அதற்கு உயிர் இப்படி இரைகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும்

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் அடிக்கடி அடிக்கடி மகரிஷிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து
1.ஒளியான அணுக்களைத் தியானத்தின் மூலமாகவும் ஆத்ம சக்தி மூலமாகவும் உங்களுக்குள் பெருக்கும்படி செய்கிறோம்.
2.அதாவது தீமையின் விளைவுளை மாற்றி அமைக்கும் பயிற்சியாக உங்களுக்கு இதைக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

ஆகவே மகரிஷிகள் அருள் சக்திகளை அவ்வப்போது எடுத்து உங்களுக்குள் வலுவாகச் சேர்த்துக் கொண்டே வாருங்கள். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றுங்கள்.

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை அடையுங்கள் (ஞானகுரு).

சித்தர்கள் வெளிப்படும் காலம் இது…!

சித்தர்கள் வெளிப்படும் காலம் இது…!

 

ஏழு ஜென்மங்கள் என்றேன் அல்லவா… உலகம் தோன்றிய நாட்கள் எந்தக் கணக்கிலும் வரவில்லையப்பா. உலகம் தோன்றி நிலையில் வந்தவர்கள் எல்லாம் இன்றும் உள்ளார்கள் என்றால் எப்படி…? என்று எண்ணி இருப்பாய்…!
1.”மனித உடலில் உள்ள காலம்” ஆயிரத்தில் ஒரு மடங்கு இல்லை அப்பா இந்த ஏழு ஜென்மத்திலும்.
2.காலமெல்லாம் சுற்றுவதெல்லாம் அவ்வாவிகள் ஆவி உலகத்தினூடே தான்…!

என்னப்பா…? புரிகின்றதா பாட நிலை…!

இந்நிலையில் இருந்தெல்லாம் ஜெயிப்பவனுக்கு வருகிறது பெரும் சூட்சும உலகம். அவ்வுலகத்திற்குச் சென்றால் எவ்வுலகையும் காணலாம் என்று சொன்னேன். பெரும் பொக்கிஷம் பெற்றவர்கள் தான் அவ்வுலகத்திற்குச் சென்றவர்கள்.

இவ்வுடலில் உள்ள பொழுது சேர்க்கும் பணமும் சொத்துமல்ல பொக்கிஷம் ஞானப் பொக்கிஷத்தைப் பெற்றிடுங்கள் கல்கிக்குச் செல்வதற்கு…!

1.கல்கியில் வந்திடுவான் சித்தனெல்லாம் என்று பகர்ந்திட்டான் உன்னிடம் இச்சித்தன் (சாமி – ஞானகுரு).
2.எப்படி வந்திடுவான்…? என்று சொன்னானா…!

கல்கியில் வந்து பிறந்திடுவானா…?

இல்லையப்பா…!

கல்கியில் இன்று வாழும் நிலையில் இக்கலி யுகத்தில் கடைசியில் நல் நிலை பெற்றோர் உணர்வில் வந்துவிடும். பிறந்து விடும் பூக்களிலும்…! பூக்கள் என்பது பிறக்கும் மழலைகளைத்தான் சொல்கின்றேன். அந்நிலையில் வருகின்றார் ஒவ்வொரு சித்தனாக…!

சித்தன் வெளிப்படுவான் என்று சொன்ன சிததனைக் கேட்டாயா…! என்ன நிலையில் வெளிப்படுவார் என்று…?

எவ்வுடலையும் ஏற்றுக்கொள்வார் அச்சித்தனெல்லாம்.
1.எவ்வுடலையும் என்று சொல்வதெல்லாம்
2.பெரும் பூர்வ புண்ணியப் பலனடைந்த உடலைத்தான் அச்சித்தன் ஏற்றுக் கொள்கின்றான்.

பிறக்கும் மழலைகளைப் பரிந்துரைத்தேன். கலியியில் பார்த்திருப்பாய் சில மழலைகளின் சொல்லையும் செயலையும்..!

வந்திடுவார்… வந்திடுவார் பெரும் சித்தனும் யோகியும் எல்லாமே கல்கிக்கு வந்திடுவார்கள். வரும் நிலையைப் புகட்டி உள்ளேன்.

முதன் முதலில் இந்நிலையில் தான் என் சிஷ்யனுக்கே வாயடைத்தேன். பகர்ந்து விட்டேன் நான் உனக்கு.

பரிபக்குவமான நிலையில் மன அடக்கத்துடன் இருங்கள்…!

எண்ணிக் கொள் எண்ணிக்கொள்… எண்ணின் வடிவத்தில் எண்ணிக்கொள்… எண்ணத்தில் எண்ணிக்கொள்…! காலங்கள் குறுகியது… குறுகியது… என்று பகர்கின்றேன்.

2000 ஆண்டுகள் என்று சொல்கின்றார்கள். 2000வது ஆண்டில் இவ்வுலக மக்கள் எல்லோருக்கும் ஆரம்பமாகி விட்டது “அழிவின் நிலை எல்லாம்…”
1.அவன் செய்யும் அணுவும் அணு அணுவாக அழியும் தன்மை வந்து விட்டது
2.அவனே வியக்கும் வண்ணம் சக்தியைப் பார்த்திடுவான் சக்தியையே…!

சக்தி நிலையைத் தெரிந்து கொள்ளாமல் அணு ஆராய்ச்சி செய்கின்றானாம்…! சக்தி நிலையில் ஊதி விட்டால் அவன் செய்யும் அழிவின் தன்மை எல்லாம் என்னவாகும்…?

கொதிக்கும் நிலையில் உள்ளதப்பா இவ்வுலக நிலை…! எல்லாம் பார்த்திடுங்கள் பார்த்திடுங்கள்… நான் பகர்ந்ததையெல்லாம் பார்த்திடுங்கள் வெடிக்கும் நிலையையும் பார்த்திடுங்கள்.

என் நிலையில் நீ இருந்தால் உலகத் தன்மையையே பார்த்திடலாம். குறுகிய காலம் தான் உள்ளதப்பா…! கூட்டி விடு உன் நிலையினை சமமான நிலையைத் தெரிந்து கொண்டாய்…
1.படர விடு இந்தப் பாட நிலையை நிலை நிறுத்திப் படரவிடு ஒரு நிலையில்
2.கல்கி என்ற விடிவிளக்கின் ஆரம்பத்தில் வந்துள்ளாய்.