
“நமது பற்று” என்றுமே மகரிஷிகளின் பால் இருத்தல் வேண்டும்
எந்தச் சந்தர்ப்பத்தில் எத்தகைய தீமைகளைக் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
கஷ்டம் என்று கேட்டாலும் அல்லது பார்த்தாலும் அவர்களுக்கு மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்மை நடக்க வேண்டும் என்று இந்த உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்போது நமக்குள் தீமை விளைவிக்கும் அணுக்கள் வளர்ச்சி பெறாது தடுக்க முடிகின்றது
2.நமக்குள்ளும் அந்தக் கஷ்டங்களைக் குறைத்திட முடியும்.
அடிக்கடி அடிக்கடி துருவ நட்சத்திரத்தினை எண்ணி
1.அதைப் பற்றுடன் பற்றி
2.இந்த வாழ்க்கையில் வரும் மற்றதை எல்லாம் பற்றற்றதாக மாற்றிடும் ஒரு பழக்கம் வந்து விட்டால்
3.உடலை விட்டு அகலும் நமது உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்துவிடும்
4.மரணமில்லா பெரு வாழ்வு அடைய முடியும்.
அந்த நிலை பெற ஒவ்வொருவரும் மறவாது அவரவர் தாய் தந்தை உயிரைக் கடவுளாக மதித்தல் வேண்டும்… நம்மைக் காத்தருளிய தெய்வமாக மதிக்க வேண்டும்… நல் வழியினை நமக்கு முதலில் போதித்த குருவாகவும் மதித்தல் வேண்டும்.
மனிதனாகப் பிறந்த நாம் இதை மறந்து விடக்கூடாது.
நமது உயிரும் கடவுளாகின்றது நமது எண்ணங்களும் தெய்வமாகின்றது நமது நல்ல சொல்களும் குருவாகின்றது.
ஆனால் தீமை என்று சொன்னால் அது தீமை விளைவிக்கும் குருவாகவே மாறி விடுகின்றது. தீமையை எண்ணும் போது தீமை செய்யும் தெய்வமாக நமக்குள் உள் நின்றே இயக்கும்.
நாம் எண்ணியதை உருவாக்கும் நிலைபெற்றது நமது உயிர்
1.ஆகவே நாம் எண்ண வேண்டியது எது…?
2.நமக்குள் உருவாக்க வேண்டியது எது…? என்று
3.மனிதன் ஆன பின் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கார்ணம்… பல கோடிச் சரீரங்களில் துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துத் தன்னைக் காத்திடும் வலுக் கொண்ட உணர்வை… அந்த்த் தப்பித்துச் செல்லும் உணர்வை எடுக்கும் பொழுது அதனின் வலிமை பெற்றுத் தான் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்துள்ளோம்.
அப்படி நம்மை வளர்ச்சியின் பாதையில் கொண்டு வந்த “உயிரை” நாம் மதித்தல் வேண்டும். உயிரைக் கடவுளாக மதித்து அந்த உணர்வால் ரூபம் பெற்ற உடலையும் சிவமாக மதித்தல் வேண்டும்.
நாம் எண்ணிய குணங்கள் அனைத்தும் நன்மை பயக்கும் சக்தியாக தீமைகள் சேராத வண்ணம் தடுக்கும் அந்த ஆறாவது ஆறறிவின் தன்மையை நாம் போற்றித் துதித்தல் வேண்டும்.
இதை இழந்துவிட்டால் மனிதன் அல்லாத உருவாகத்தான் செல்ல வேண்டி வரும். ஆகவே நாம் ஆறாவது அறிவைப் போற்றிக் காத்தல் வேண்டும்.
1.ஆறாவது அறிவு எத்தகைய தீமைகளையும் அகற்றும் வல்லமை பெற்றது… நல்ல சிந்தனையும் ஞானமும் கொடுக்கின்றது.
2.நல் சிந்தனையும் ஞானத்தையும் வளர்த்துக் கொண்டால் உடலை விட்டுச் சென்றால் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுவோம்…
3.அடுத்து இன்னொரு பிறவிக்குச் செல்லாதபடி உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடும்
4.பேரின்ப பெருவாழ்வு என்று மரணம் இல்லாப் பெருவாழ்வு என்ற நிலை அடைய முடியும்.
ஆக இந்தப் பிரபஞ்சத்தில் உயிரணு தோன்றி மனிதனாக உருப்பெற்ற பின் நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் ஒளியைப் பெற்று அருள் ஞானம் பெற்று பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.
அகண்ட உலகில்… அகண்ட பேரண்டத்தில்… இன்று நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும்… அகண்ட பேரண்டத்தில் வரும் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற முடியும்.
மனிதனான பின் தான் இந்த நிலையைப் பெற முடியும்.
அருள் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வினை நமக்குள் வளர்த்துக் கொள்ளக் காலை துருவ தியானத்தில் அந்த அருள் சக்தியைப் பெறுவோம். அறியாது வரும் தீமைகளை அகற்றுவோம்.
நம்மைப் பார்க்கும் அனைத்துக் குடும்பங்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் படரச் செய்வோம் அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்பெறச் செய்வோம்.
ஆக… இந்த மனித வாழ்க்கையில்
1.அருள் ஒளி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நாம் வளர்த்துக் கொள்வதே நல்லது
2.அதை நாம் பற்றுடன் பற்றினால் இன்றைய செயல் நாளைய ஒளிச் சரீரமாக ஆகின்றோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.